- மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
 - மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல
 - மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்
 - கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற
 - மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
 - பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
 - பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
 - மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
 - மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
 - மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
 - சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
 - செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
 - மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
 - மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
 - ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
 - ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
 - மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
 - மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
 - கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
 - கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
 - மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
 - மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
 - தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
 - சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
 - மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
 - வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
 - வேதாக மம்கடந்து சின்னம் பிடி
 - வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.