- சிந்து
- பல்லவி
- திருச்சிற்றம்பலம்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
- பல்லவி எடுப்பு
- தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
- கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட
- கண்ணிகள்
- கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
- கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
- அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
- ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
- இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
- ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
- பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
- பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்குதெண்ட
- சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
- தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
- பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
- பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட
- வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
- மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
- தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
- தானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட
- ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
- அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
- சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
- தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட
- பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
- பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
- வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
- வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட
- தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
- சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
- ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
- ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி.