- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
- ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
- நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
- பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.
- சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
- கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.
- அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
- இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
- ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
- வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.
- நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
- தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.
- பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
- பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
- ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
- சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
- அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
- துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.
- அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
- சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
- அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
- வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
- தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே
- அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.
- கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
- எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
- என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
- ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
- எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
- அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.
- சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
- ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
- வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
- ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
- பாசநாச பாபநாச பாததேச ஈசனே
- வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
- உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
- பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
- அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
- அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.
- அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
- அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
- தகரககன நடனகடன சகளவகள சரணமே
- சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.
- அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
- அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.
- தனககனக சபையஅபய சரதவரத சரணமே
- சதுரசதர சகசசரித தருணசரண சரணமே.
- உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
- உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
- இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
- இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
- அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
- அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
- ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
- உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
- அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
- அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
- எறிவில்உலகில்342 உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
- எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
- நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
- நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
- வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
- மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
- நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
- நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.
- மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
- வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
- களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
- களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.
- தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
- தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே.
- எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
- அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.
- சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா
- சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.
- வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா
- வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.
- 342. இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.