- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- நீடிய வேதம் தேடிய பாதம்
- நேடிய கீதம் பாடிய பாதம்
- ஆடிய போதம் கூடிய பாதம்
- ஆடிய பாதம் ஆடிய பாதம்.
- சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
- தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
- சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
- தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
- ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
- ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
- ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
- ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
- சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
- தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
- கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
- குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
- எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
- எண்ணிய வாறே நண்ணிய பேறே
- புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
- புண்ணிய வானே புண்ணிய வானே.
- தொத்திய சீரே பொத்திய பேரே
- துத்திய பாவே பத்திய நாவே
- சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
- சத்திய வானே சத்திய வானே.
- எம்புலப் பகையே எம்புலத் துறவே
- எம்குலத் தவமே எம்குலச் சிவமே
- அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
- அம்பலத் தரசே அம்பலத் தரசே.
- இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
- எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
- அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
- அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.