- அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
 - கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்
 - அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்
 - சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்
 - அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
 - முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
 - இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
 - மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
 - அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
 - அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
 - ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
 - ஓதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
 - இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
 - எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
 - சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
 - தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
 - அத்த னேதணி காச லத்தருள்
 - வித்த னேமயில் மேற்கொள் வேலனே
 - பித்த னேன்பெரும் பிழைபொ றுத்திடில்
 - சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.
 - அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
 - அதீதநிலை என்றநன்றே
 - அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
 - அடைந்திடா தென்றஇறையே
 - அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
 - பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
 - அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
 - விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
 - மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
 - பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
 - அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
 - பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச்
 - சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
 - சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
 - அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
 - அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
 - செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
 - திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
 - ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
 - ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
 - எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
 - எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
 - அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
 - ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
 - நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
 - நீலியோ தன்புடை ஆடும்
 - தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
 - தனித்தனி அவர்அவர் எடுத்தே
 - கத்தவெம் பயமே காட்டினர் நானும்
 - கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
 - அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
 - அன்பிலே நிறைஅமு தென்கோ
 - சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
 - திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
 - மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
 - மன்னும்என் வாழ்முதல் என்கோ
 - இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
 - என்னைஆண் டருளிய நினையே.
 - அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
 - அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
 - விதுபா வகமுகத் தோழியும் நானும்
 - மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
 - பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
 - பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
 - இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
 - என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
 - அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
 - அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
 - நலமே வதிலேநின் னாவூர் திருவம்
 - பலமேவக் காட்டும் பரிசு.
 - அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
 - அம்மை இருந்தாள டி - அம்மா
 - அம்மை இருந்தாள டி. ஆணி
 - அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
 - சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.