- நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுந்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கோலந் துறை55 கொண்ட கோவையருள் கோவைமகிழ்
- ஆலந் துறை56யின் அணிமுத்தே - நீலங்கொள்
- தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
- ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
- நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும்
- ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே - சீலநிறை
- வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
- சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத்
- மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
- ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே - ஓவாது
- ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
- சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - சேர்ந்த
- ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
- கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே - வீழும்பொய்
- நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
- தென்கடையூர்60 ஆனந்தத் தேறலே - வன்மையிலாச்
- வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
- ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும்
- நாடுந் திலத நயப்புலவர் நாடோறும்
- பாடுந் திலதைப் பதிநிதியே - ஆடுமயில்
- காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
- பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம்
- துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
- மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
- ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
- தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந்
- தாஞ்சியத்தை62 வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
- வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா
- ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
- தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல
- தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
- ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த
- காரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும்
- ஆரூ ரரனெறிவே ளாண்மையே - ஏரார்ந்த
- விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும்
- அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் - சரதத்தால்
- போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
- ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
- வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
- ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா
- ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
- தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை
- ஆளிலையென் றாரூர னார்துதிக்கத் தந்தருளும்
- கோளிலியின் அன்பர்குலங் கொள்ளுவப்பே - நீளுலகம்
- பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
- ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக்
- காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
- ஆப்பனூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர்
- வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
- கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே
- பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
- பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
- ஆன்று நிறைந்தோர்க் கருளளிக்கும் புக்கொளியூர்த்
- தோன்றுமவி நாசிச் சுயம்புவே - சான்றவர்கள்
- ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
- தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன்
- ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
- நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம்
- நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
- கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா
- வேற்றா வடுகூ ரிதயத்தி னார்க்கென்றுந்
- தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே - ஆற்றமயல்
- தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
- ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
- நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி
- ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென்
- காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
- மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப்
- ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
- ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
- ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன்
- பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே - பார்த்துலகில்
- பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
- விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில்
- ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
- ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர்
- கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்
- காளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா
- அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
- இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற
- ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
- கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு
- ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்
- நீடுங் கனதூய நேயமே - ஈடில்லை
- ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில்
- சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே - சார்ந்துலகில்
- போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
- ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல்
- ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால்
- வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு - தாழ்த்தாமற்
- வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
- ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான
- ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
- தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும்
- ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
- ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
- நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
- சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்
- காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண
- சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர்
- ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
- மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன்
- கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
- ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும்
- ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப்
- பூண்டாலு மென்கண் பொறுக்காது - நீண்டஎழு
- தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங்
- கோப மதுநான் கொடுக்கிலுண்டு - ஆபத்தில்
- வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
- ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த
- ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
- தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்
- பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த
- நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே - ஆயினுமுன்
- பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை
- வேண்டி விறகெடுத்து விற்றனையே - ஆண்டொருநாள்
- வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
- தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர
- நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
- ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே - கோளகல
- ஆறடுத்த83 வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச்
- சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற
- ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
- ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள்
- ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
- ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன்
- ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ
- தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - மேல்நோற்ற
- காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
- ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை
- ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
- நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே
- ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
- தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி
- மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம்
- ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் - ஞாலமிசைக்
- ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
- சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற்
- வீற்று முலக விகாரப் பிரளயத்தில்
- தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் - ஆற்றவுநான்
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
- பேறு மிகத்தான் பெரிது.
- ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
- சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்
- ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
- ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான
- அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
- கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்
- ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
- மன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர்
- ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
- எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்
- ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்
- ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது
- அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
- செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே
- வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
- செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
- ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
- திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்
- ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
- சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
- சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
- சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்
- மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
- காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற
- இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்
- செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்
- என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி
- அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று
- போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
- கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு
- தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
- ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
- அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
- கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்
- தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்
- தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு
- ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்
- தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய
- தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
- மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
- தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
- சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது
- ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
- ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே
- டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
- கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்
- காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய
- ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா
- கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
- ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா
- நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
- நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்
- வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
- நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்
- ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்
- சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால்
- ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
- நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென
- ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை
- நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்
- பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்
- நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்
- ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
- நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்
- ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
- தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்
- சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
- ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்
- ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
- காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே
- மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
- தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த
- ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
- நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்
- அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்
- செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச்
- ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு
- தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற
- தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
- ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
- ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே
- ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்
- கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்
- ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்
- வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
- ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
- போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்
- ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்
- நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை
- ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்
- ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்
- பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்
- பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
- எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு
- மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்
- நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்
- பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
- நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்
- பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
- பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்
- கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
- பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்
- ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
- வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்
- ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்
- தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நு‘லிடைதான்
- ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
- பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்
- தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
- நீராழி யென்பவர்க்கென் நேருதியே106 - ஆராப்புன்
- நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்
- சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்
- ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்
- வீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி
- வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
- தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்
- அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற
- அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை
- ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
- தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த
- ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்
- வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்
- வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்
- ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்
- பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த
- சேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம்
- பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
- ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்
- ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்
- ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்
- வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
- ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
- ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
- பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்
- நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா
- ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப்
- ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன்
- ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத
- மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே
- நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்
- நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
- தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை
- சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
- ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத
- என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்
- அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே
- காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்
- ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண
- மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
- சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை
- பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
- காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்
- கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு
- சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்
- அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்
- கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்
- தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
- என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்
- ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட
- நாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்
- ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்
- கானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி
- கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
- நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்
- ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
- ஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்
- வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல
- ஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில்
- ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ
- வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்12
- மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
- ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல
- ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்
- ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்
- ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்
- நோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக்
- காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
- ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்
- அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
- நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்
- தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
- தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்
- தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
- போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்
- மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
- முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்
- மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
- றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த
- வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
- நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை
- போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
- வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ
- நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை
- ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற
- அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய
- கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்
- ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை
- நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்
- பண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
- கண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ரில்
- மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
- இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்
- சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
- தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி
- நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
- ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
- தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
- வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய
- வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
- காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்
- ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
- நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது
- சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
- சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்
- நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்
- ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
- நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
- முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
- புதல்வாநின் தாளென் புகல்.
- தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
- சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
- நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
- வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
- ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
- ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
- அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
- நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
- ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
- தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
- அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
- அடியார்குற் றேவலடி யன்.
- சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான்
- என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய்
- அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை
- அஞ்சேன் சிறிதும் அறிந்து.
- வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
- மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
- சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
- நீர்சிந்தா வன்கண் நிலை.
- வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
- பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
- நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
- ஆங்கவரோ டுண்ணு மது.
- கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
- எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
- ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
- போமிடத்திற் போவேன் புலர்ந்து.
- எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
- அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
- தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
- நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
- பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
- நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
- வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
- ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
- கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்
- விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
- கொள்ளாக் குறையே குறை.
- நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற
- ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில்
- தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட்
- பாங்குடையாய் தண்டிப் பது.
- அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
- இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
- பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
- மெய்யுடையேன் என்கோ விரைந்து.
- ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே
- ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
- எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
- செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
- ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
- பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
- நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
- என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர்
- ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ்
- செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்
- கெங்கே இடங்காண் இயம்பு.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
- துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
- தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
- கண்ணுடையோய் சிதையா ஞானப்
- பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
- மலர்வாயோய் பொய்ய னேன்றன்
- மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
- கசிந்துருக்கும் வடிவத் தோயே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
- உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
- கலகநிலை அறியாத காட்சி யாகிக்
- கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
- இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
- இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
- அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
- தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
- உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
- யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
- கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
- களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
- விலகலுறா நிபிடஆ னந்த மாகி
- மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
- இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
- இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
- அளவாகி அளவாத அதீத மாகிப்
- பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
- பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
- பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
- பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
- கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
- கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
- பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
- கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
- கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
- சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
- தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
- நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
- நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
- குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
- வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
- வானமுதே ஆனந்த மழையே மாயை
- வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
- வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
- தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
- செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
- மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
- என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்
- இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
- அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்
- ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
- இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
- எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- வான்காணா மறைகாணா மலரோன் காணான்
- மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
- நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
- நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
- மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
- வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
- ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
- அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
- பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
- வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
- மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
- ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
- உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
- ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
- அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
- அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
- உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
- உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
- எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
- எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
- முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
- முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
- தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
- சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்
- ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்
- அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்
- ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்
- இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
- சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற
- தன்மயமே சின்மயமே சகசத் தேவே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்
- தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
- இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த
- இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும்
- மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்
- வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
- புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்
- புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ.
- உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம்
- உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
- மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
- வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
- கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
- கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
- செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்
- ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
- கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ
- குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
- கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்
- கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
- செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்
- திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே.
- கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்
- குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
- தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
- தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
- ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்
- உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
- தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்
- தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே.
- வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி
- விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
- கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்
- கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
- உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்
- உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
- பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்
- பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே.
- எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
- என்னரசே என்குருவே இறையே இன்று
- மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
- மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
- தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
- தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
- அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
- அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.
- தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்
- சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
- ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்
- இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
- நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற
- நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
- ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்
- அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே.
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்
- காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
- தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு
- சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
- பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்
- பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
- புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ
- புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட
- அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
- கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே
- கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ
- நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்
- நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
- ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்
- எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே.
- அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே
- அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
- வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து
- மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
- துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்
- துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
- இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ
- என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
- தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
- வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
- ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
- மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
- பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
- தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
- நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
- கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
- மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
- தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
- ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
- வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
- வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.
- வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
- தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
- ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
- நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
- நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
- தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
- நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
- சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
- பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
- அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
- கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
- மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
- மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
- பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
- எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
- விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.
- ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
- வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
- சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
- போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
- கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
- தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
- வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
- ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.
- கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
- பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
- எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
- புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
- தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
- ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
- கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
- வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.
- விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
- திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
- துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
- பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.
- நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
- கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
- சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
- ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
- காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
- சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
- தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
- சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.
- நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
- வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
- தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
- மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.
- ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
- கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
- நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
- ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.
- ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
- மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
- காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
- சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.
- காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
- நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
- பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
- ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
- ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
- நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
- ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.
- வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
- தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
- கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
- ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே.
- வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
- மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
- ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
- பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே.
- பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
- செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
- திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
- எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே.
- ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
- பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
- மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
- திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
- ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
- பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
- ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
- மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.
- சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
- நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
- கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
- பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.
- சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
- காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
- பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
- போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
- காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
- ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
- சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
- காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
- தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
- சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
- பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
- கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
- கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
- வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
- பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
- எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
- கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
- நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
- தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
- அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
- விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
- பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
- அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
- தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
- மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
- உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
- பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
- அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
- மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
- நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
- பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
- வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
- வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
- ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
- ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
- மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
- றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
- காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
- வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
- போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
- வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
- ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
- மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
- ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
- பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
- தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
- மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
- ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
- காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
- வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
- பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
- பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
- வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
- ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
- கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
- தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
- மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
- தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
- காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
- வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
- அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
- முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
- இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
- மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
- காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
- ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
- சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
- மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
- தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
- ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
- வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
- வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
- வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
- வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
- நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
- வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
- மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
- மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
- னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
- றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
- ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
- வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
- றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
- வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன்
- வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை
- யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
- சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
- றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
- வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
- கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
- ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
- நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
- ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
- கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
- அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
- விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
- அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
- நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
- தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
- ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
- இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
- அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
- கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
- அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
- தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
- இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
- பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
- உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அட்ட மூர்த்தம தாகிய பொருளை
- அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
- விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
- வேத மூலத்தை வித்தக விளைவை
- எட்ட ரும்பர மானந்த நிறைவை
- எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
- நட்டம் ஆடிய நடனநா யகத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
- நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
- வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
- வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
- கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
- கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
- நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
- ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
- அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
- ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
- செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
- சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
- நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
- மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
- ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
- எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
- கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
- குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
- நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
- பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
- ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
- காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
- மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
- ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
- பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
- கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
- போக போகநீர் புலமிழந் தவமே
- நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
- நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
- சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
- தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
- காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
- கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
- தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
- சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
- தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
- தழுவி யேஅதை முழுவதும் கேட்க
- சேய நன்னெறி அணித்தது செவிகாள்
- சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
- ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- நல்ல நீறிடா நாய்களின் தேகம்
- நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
- வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
- வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
- சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
- சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
- அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
- நரக இல்லிடை நடப்பதை ஒழிக
- ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
- உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
- கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
- குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
- ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
- அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
- ஊற்றம் உற்றுவெண்
- நீற்றன் ஒற்றியூர்
- போற்ற நீங்குமால்
- ஆற்ற நோய்களே.-
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- காயம் என்பதா காயம்என் றறியேன்
- கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
- சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
- தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
- தூய நின்அடி யவருடன் கூடித்
- தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
- தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
- எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
- தந்தை யேவலி தாயத்த லைவநீ
- கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
- ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
- மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
- பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
- தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
- தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
- வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
- யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
- உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
- கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
- களிக்க வேபடிக் காசளித் தருளும்
- வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
- ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
- உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
- ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
- வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
- தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
- உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
- இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
- முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
- என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
- தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
- ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
- ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
- தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
- காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
- ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
- போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
- நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
- இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
- கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
- நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
- கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
- கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
- தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
- எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
- தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.
- சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
- தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
- நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
- ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
- ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
- சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
- கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
- ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
- தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
- நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
- வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
- தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
- அறியாப் பருவத் தடியேனை ஆட்கொண்ட
- நெறியாம் கருணை நினைந்துருகேன் ஆயிடினும்
- குறியாப் பொருளேஉன் கோயிலிடை வந்துநின்றும்
- பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.
- பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
- சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
- நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
- வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
- வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
- மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
- துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
- விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
- இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம் தொடக்கினில் பட்டுழன் றோயா
- இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான் எந்தநாள் அந்தநாள் உரையாய்
- படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணைஅம் பரமே
- குடர்கொளும் சூலப் படைஉடை யவனே கோதையோர் கூறுடையவனே.
- பார்த்துநிற் கின்றாய் யாவையும் எளியேன் பரதவித் துறுகணால் நெஞ்சம்
- வேர்த்துநிற் கின்றேன் கண்டிலைகொல்லோ விடம்உண்டகண்டன்நீஅன்றோ
- ஆர்த்துநிற் கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கிலக் காவனோ தமியேன்
- ஓர்த்துநிற் கின்றார் பரவுநல் ஒற்றி யூரில்வாழ் என்உற வினனே.
- உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
- மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
- நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
- அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.
- என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி
- அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே
- உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே
- நன்னர்செய் கின்றோய் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே.
- சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
- பால மேவும் படம்பக்க நாதரே
- ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
- ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
- கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
- ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
- ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
- துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
- புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
- என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
- ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
- கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
- ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
- ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
- தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
- ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
- வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
- கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
- இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
- வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
- ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
- பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
- யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கண்ண னோடயன் காண்பரும் சுடரே
- கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
- எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
- இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
- அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
- அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
- திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
- காமன் வெந்திடக் கண்விழித் தவனே
- தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
- சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
- நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
- நாத னேசிவ ஞானிகட் கரசே
- செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- எண்சீர்க்34கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்
- ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்
- மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்
- வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்
- செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ
- திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து
- எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- எழுசீர்க்15 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- 15. கலித்துறை - தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு. எழுசீர்.ச.மு.க. ஆ.பா
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
- வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
- தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
- திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
- காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
- கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
- ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
- உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
- என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
- இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
- முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
- மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
- அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
- பாவை யார்மயல் படிந்துழைப் பதனால்
- சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
- செய்கை நின்னதே செப்பலென் சிவனே
- காவி நேர்விழி மலைமகள் காணக்
- கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்
- ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- எண்சீர்க்16 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- 16. எழுசீர்- தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு. எண்சீர்.ச.மு.க. ஆ.பா.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- புல்ல னேன்புவி நடையிடை அலையும்
- புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
- அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
- அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
- ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
- உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
- செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
- காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
- மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
- ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
- ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
- சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
- ஓதி யேதரும் ஒற்றியப் பாஇது
- நீதி யேஎனை நீமரு வாததே.
- வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
- காதம் ஓடும் கடியனை ஆள்வது
- நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
- ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.
- 30. வஞ்சி விருத்தம். தொ. வே. 1.ச.மு.க. கலி விருத்தம். தொ.வே. 2. ஆ.பா.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
- சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
- கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
- யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
- ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
- போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
- ஆவான் திருவடிஅல் லால்.
- அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக்
- கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த
- விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
- கண்மணியை நெஞ்சே கருது.
- நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன்
- தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும்
- தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம்
- பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
- ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
- கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
- கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
- கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
- ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
- உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
- நள்ளவனை நெஞ்சமே நாடு.
- ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
- வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
- கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
- தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
- சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
- பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
- தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
- வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
- மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
- சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
- அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன்
- சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள்
- மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால்
- கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
- அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
- தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
- செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
- மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
- முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
- ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
- அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
- தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
- சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
- கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
- கண்ணுத லானைஎம் கண்ணக லானை
- எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- மாலயன் தேடியும் காணாம லையை
- வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
- ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
- ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
- காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
- கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
- ஏலம ணிகுழ லாள்இடத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
- தூயனை யாவரும் சொல்லரி யானைப்
- பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
- பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
- மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
- வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
- எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
- அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
- வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
- வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
- துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
- சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
- என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
- பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
- கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
- கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
- பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
- பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
- எண்அம ராதஎ ழிலுடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
- பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
- இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
- இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
- மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
- மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
- துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
- சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
- கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
- துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
- தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
- தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
- தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
- வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
- ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
- வாட்டு கின்றனை வல்வினை மனனே
- வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
- கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
- குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
- ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
- நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
- நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
- நன்று நின்செயல் நின்றிடு மனனே
- ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
- ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
- சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
- ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
- ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
- நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
- நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
- ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அமைவ றிந்திடா ஆணவப் பயலே
- அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
- எமைந டத்துவோன் ஈதுண ராமல்
- இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
- கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
- கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
- உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
- ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
- கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
- தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
- வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
- இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
- துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
- துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
- இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
- அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
- பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
- வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்
- தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண் எனத் தாழேன்
- சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
- ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
- என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
- சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
- மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
- குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
- பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
- வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
- மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
- சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
- நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
- நாளை வருவ தறியேன்நான் நஞ்சம் அனைய நங்கையர்தம்
- ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
- கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
- வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
- பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
- சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
- பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
- அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
- சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
- ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
- தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
- அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
- தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
- உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
- மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
- ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
- சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
- ஊறெடுத்தோர் காணரிய ஒற்றியப்பா உன்னுடைய
- நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ.
- பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
- தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
- ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
- ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.
- தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
- ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
- ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா நின்அடிக்கீழ்
- நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.
- பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
- வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
- ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
- நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.
- கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
- வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
- ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
- ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
- ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
- நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
- ஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்
- மாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.
- கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
- நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணையேன் துன்பொழிய
- உடையவனே உலகேத்தும் ஒற்றியப்பா நின்பால்வந்
- தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
- தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
- பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
- பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
- வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
- வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
- புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
- கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்
- அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
- ஐய நீர்உம தருள்எனக் களிக்க
- இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
- ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ
- பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
- விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால்
- கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும்
- கடமை நீங்குறார் உடமையின் றேனும்
- நெருப்பு நும்உரு ஆயினும் அருகில்
- நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால்
- பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
- பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ
- மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
- மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல்
- உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
- உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண்
- புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நின்முனம் நீல கண்டம்என் றோதும் நெறிமறந் துணவுகொண் டந்தோ
- பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
- மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே விரிகடல் தானைசூழ் உலகம்
- தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால்
- அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
- சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
- தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
- நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
- சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
- தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
- வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
- மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
- செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
- ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்
- காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
- காள முண்டஅக் கருணையை உலகில்
- நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
- நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
- தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
- கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும்
- மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந்
- தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
- சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
- விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
- அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
- கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
- சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
- சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
- ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
- ஏட நீகடை என்றிடில் அவர்முன்
- ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
- பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
- இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
- ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
- அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
- அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
- உந்த மட்டினால் தருதியோ உரையாய்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நாக நாட்டதின் நலம்பெற வேண்டேன்
- நரகில் ஏகென நவிலினும் அமைவேன்
- ஆகம் நாட்டிடை விடுகெனில் விடுவேன்
- அல்லல் ஆம்பவம் அடைஎனில் அடைவேன்
- தாகம் நாட்டிய மயல்அற அருள்நீர்
- தருதல் இல்எனச் சாற்றிடில் தரியேன்
- ஓகை நாட்டிய யோகியர் பரவும்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல்
- இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டுகொல் இலைகாண்
- தளர்விலா துனது திருவடி எனும்பொற் றாமரைக் கணியனா குவனோ
- களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே கனந்தரும் கருணையங் கடலே.
- ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
- ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வணம் உய்குவ தறியேன்
- வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ
- கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம்
- சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ
- நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே
- காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும்ஓர்
- குரங்கிற் கென்உறு குறைபல உரைத்தும்
- கடிய தாதலின் கசிந்தில தினிஇக்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அடிய னேன்பிழை உளத்திடை நினையேல்
- அருளல் வேண்டும்என் ஆருயிர்த் துணையே
- செடிகள் நீக்கிய ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கூலி என்பதோர் அணுத்துணை யேனும்
- குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன்
- மாலி னோடயன் முதலியர்க் கேவல்
- மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே
- ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண்
- அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர்
- சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர்
- பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப்
- பதிய வைத்தனன் ஆயினும் அந்தப்
- பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே
- முதியன் அல்லன்யான் எப்பணி விடையும்
- முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
- துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக்
- குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
- புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
- போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
- பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
- பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
- தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
- கமுது வேண்டிமா லக்கடல் கடைய
- ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
- உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
- சாலம் செய்வது தகைஅன்று தருமத்
- தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
- சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப்
- புலையன் ஆண்டவன் புகழ்உரைப் பானேல்
- உய்ய வைப்பன்ஈ துண்மைஇவ் வுலகில்
- ஒதிய னேன்புகல் ஓரிடம் அறியேன்
- ஐய நும்மடிக் காட்செயல் உடையேன்
- ஆண்ட நீர்எனை அகற்றுதல் அழகோ
- நையல் அற்றிட அருள்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
- சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
- எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
- இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
- பந்த மேலிட என்பரி தாபம்
- பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
- நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்
- வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
- எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்
- ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ
- கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்
- கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர்
- நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
- அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
- நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
- எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
- தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
- ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
- கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ
- என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
- கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
- கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
- தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
- தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
- மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
- திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
- தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
- சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்
- வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
- வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
- மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
- என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
- துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
- சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
- அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
- அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
- வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
- காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
- சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
- துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
- அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
- அருட்கணீர்எனை ஆளலும் தகுங்காண்
- மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
- நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
- ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
- பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
- திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
- அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
- கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
- ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
- வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
- விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
- இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
- எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
- அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
- நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி மூட
- நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
- நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
- அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
- சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
- மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
- மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
- இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
- கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
- அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
- வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
- தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
- செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
- சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
- சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
- ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- கொலைஅறியாக் குணத்தோர்நின் அன்பர் எல்லாம்
- குணமேசெய் துன்னருள்தான் கூடு கின்றார்
- புலைஅறிவேன் நான்ஒருவன் பிழையே செய்து
- புலங்கெட்ட விலங்கேபோல் கலங்கு கின்றேன்
- நிலைஅறியேன் நெறியொன்றும் அறியேன் எங்கும்
- நினைஅன்றித் துணையொன்றும் அறியேன் சற்றும்
- அலைஅறியா அருட்கடல்நீ ஆள்க வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
- களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
- ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
- அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
- மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
- இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
- தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
- அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
- வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
- அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
- மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
- பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
- ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
- அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
- தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
- இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
- எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்
- பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
- செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி யப்பாநீ
- அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.
- பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
- குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
- மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
- பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
- எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
- தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
- சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
- நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
- உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
- கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
- நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
- எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
- கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
- தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
- தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
- பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
- இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
- பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
- அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
- வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
- எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
- அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
- மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
- சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
- ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
- கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
- மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
- ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத்
- தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை
- விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம்
- அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமி
- வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக்
- கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன்
- அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
- சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
- செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
- அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை
- வன்பேசெய் துள்ள மயக்கிநின்ற வன்நோயை
- இன்பே அருள்கின்ற என்ஆ ருயிரேஎன்
- அன்பேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
- நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
- மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
- கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
- நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால்
- ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன்
- ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த
- தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
- பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
- இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
- மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
- அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த
- அயன்முன் ஆகிய ஐவரை அளித்து
- நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த
- நித்த நீஎனும் நிச்சயம் அதனைத்
- தாக்க எண்ணியே தாமதப் பாவி
- தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே
- ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
- கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
- பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
- பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
- உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
- ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
- நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
- நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
- பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
- பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
- ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஊட்டு கின்றனை உண்ணுகின் றனன்மேல்
- உறக்கு கின்றனை உறங்குகின் றனன்பின்
- காட்டு கின்றனை காணுகின் றனன்நீ
- களிப்பிக் கின்றனை களிப்புறு கின்றேன்
- ஆட்டு கின்றனை ஆடுகின் றனன்இவ்
- அகில கோடியும் அவ்வகை யானால்
- தீட்டும் அன்பருக் கன்பநின் தனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
- வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
- அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
- அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
- பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
- பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
- தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
- தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
- நாயி னும்கடை யேன்படும் இடரை
- நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
- ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
- அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
- தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
- தேவனே தில்லைஅம் பலத்தே
- தற்பர நடஞ்செய் தாணுவே அகில
- சராசர காரணப் பொருளே
- அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
- அலைதரு கின்றனன் எளியேன்
- கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
- களிப்புடன் ஆடுவ தென்றோ.
- வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப
- விரிகடல் ஆழ்ந்தனன் அந்தோ
- அத்தக வேனை எடுப்பவர் நின்னை
- அன்றிஎங் கணும்இலை ஐயா
- மத்தகக் கரியின் உரிபுனை பவள
- வண்ணனே விண்ணவர் அரசே
- புத்தக நிறைவின் அடியவர் வேண்டும்
- பொருள்எலாம் புரிந்தருள் பவனே.
- எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
- அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
- பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
- கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே.
- முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
- கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
- வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
- றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
- ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
- பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
- ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
- கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
- ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
- பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
- வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
- கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சென்ற நாளினும் செல்கின்ற நாளில்
- சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன்
- மன்ற நான்இவண் இவ்வகை ஆனால்
- வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ
- என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன்
- எண்ணம் எப்படி அப்படி இசைக
- உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- நீலம் இட்டகண் மடவியர் மயக்கால்
- நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய்
- ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன்
- நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை
- ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும்
- அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை
- ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- மறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்
- இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்
- பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
- அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே.
- அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
- தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
- மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
- இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே.
- அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த
- விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே
- வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள்
- மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
- சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
- ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
- வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
- அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
- துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
- வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
- இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
- பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
- அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
- புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
- தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
- மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
- சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
- ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
- கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
- நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
- அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
- எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
- உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
- மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
- சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
- கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
- நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
- வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
- எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
- சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
- ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
- கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
- ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.
- பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
- நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
- தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
- தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.
- அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
- நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
- பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
- வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
- எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
- இந்து சேகர னேஉன்றன் இன்னருள்
- தந்து காப்பதுன் தன்கடன் ஆகுமே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்பை அருமைசெய்து
- நிற்ப தலதுன் பொன் அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
- சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
- கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
- வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
- ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
- காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம்
- பாம்பாட்டி யாகமாயைப்
- பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம்
- படர்ந்தபிர பஞ்சமாகத்
- திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
- சிறுவன்யா னாகநின்றேன்
- தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
- திறத்தன்நீ ஆகல்வேண்டும்
- விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
- விஞ்ஞான மாம்அகண்ட
- வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
- விராட்டுருவ வேதார்த்தனே
- கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
- கடவுளே சடைகொள்அரசே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது
- பரமவே தார்த்தம்எனவே
- பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என்
- பாவிமனம் விடயநடையே
- எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும்
- இறங்குவதும் ஏறுவதும்வீண்
- எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
- யாவினும் சென்றுசென்றே
- சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது
- சுழல்கின்ற தென்செய்குவேன்
- தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச்
- சுழல்மனம்அ டக்கவருமோ
- கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே
- கண்ணுதற் கடவுள்மணியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- போதஆ னந்த போகமே என்னைப்
- புறம்பிட நினைத்திடேல் போற்றி
- சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
- சிறுமைதீர்த் தருளுக போற்றி
- பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
- பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
- வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
- வேறெனக் கிலைஅருள் போற்றி.
- போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
- போற்றிநின் பூம்பதம் போற்றி
- ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
- அமலநின் அடிமலர் போற்றி
- ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
- இறைவநின் இருங்கழல் போற்றி
- சாற்றுமா றரிய பெருமையே போற்றி
- தலைவநின் தாட்டுணை போற்றி.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
- கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
- பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
- எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
- இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
- குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
- உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
- அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே.
- மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
- அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
- தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
- திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
- தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
- பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
- துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
- புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
- பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
- மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
- மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
- நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
- கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
- அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
- வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
- தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.
- இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
- அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
- பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
- என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே.
- உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
- வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
- கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
- தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
- எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
- வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
- செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
- இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே.
- இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
- பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
- திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
- விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
- மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
- அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
- என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
- இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ
- குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
- நன்றோ கருணைப் பெருங்கடலே ஆளாய் இந்த நாயினையே.
- நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
- தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
- வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
- பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.
- எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
- களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
- அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
- தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே.
- கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற் கடலில் அழுத்திக் கடுவினையேன்
- மடந்தாழ் மனத்தோ டுலைகின்றேன் கரைகண் டேறும் வகைஅறியேன்
- தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும் துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
- அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே.
- என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
- தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
- இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
- நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே.
- எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
- பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
- கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
- பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- பள்ளத்தி லேசெலும் நீர்போல்என் உள்ளம் பரப்பதலால்
- எள்ளத்தி லேசிறி தாயினும் நான்செல்வ தில்லைஎந்தாய்
- கள்ளத்தி லேசொல்லு கின்றேன் அலநின் கழலிணைஎன்
- உள்ளத்தி லேநின்ற ஆங்கவை காண்க உடையவனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
- மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
- நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
- திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
- நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
- கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
- தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
- சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
- அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
- பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
- உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
- கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
- கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
- ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
- எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
- சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
- சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
- நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
- நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும்.
- வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
- வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
- தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
- சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
- ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
- அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
- ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
- தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
- என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
- இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
- நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
- நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
- மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
- மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
- உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
- உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
- இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
- எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
- மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
- வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
- துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
- சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
- விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
- வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
- விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
- வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
- அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
- ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
- கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
- கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
- நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
- நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
- அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
- கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
- எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
- முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
- பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
- அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே.
- ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
- தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
- வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
- ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
- பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
- வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
- நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே.
- காயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால்
- நீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின்
- தாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல்
- வாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.
- எண்சீர்க்20 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
- இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
- நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
- பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே.
- அறுசீர்க்21 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
- தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
- முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த
- நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே.
- மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
- வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
- கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
- நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.
- ஆசிரியத் துறை
- 19. சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்தபாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது. தொ.வே 1,2, ச.மு.கபதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை. ஆ.பா.பதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது.
- 20. அறுசீர். தொ.வே 1,2. எண்சீர். ச.மு.க. ஆ. பா. 21. எழுசீர். தொ.வே. 1,2 அறுசீர். ச.மு.க. ஆ.பா. 22. ஆசிரியத் தாழிசை. தொ.வே. 1,2. ச.மு.க.
- ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
- பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
- வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
- தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
- அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
- என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
- உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
- கடையேன் படுந்துயரைக் கண்டு.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
- ஆசிரியத் துறை
- ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
- ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
- பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
- சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
- சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
- காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
- ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
- நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
- சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
- சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
- தாவி நான்பெரும் பாவி ஆயினன்
- ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
- அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை
- ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
- நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
- பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப்
- பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
- கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ.
- வல்லி ஆனந்த வல்லி சேர்மண
- வாள னேஅரு ளாள னேமலை
- வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
- புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
- பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
- இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
- சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
- பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
- கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே.
- ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
- சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
- நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
- தாய்இரங் காள்என்ப துண்டோதன் பிள்ளை தளர்ச்சிகண்டே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
- நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
- பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
- ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
- பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
- மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
- என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
- மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
- தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
- போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
- தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே.
- கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
- அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
- எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
- வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே.
- வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
- பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
- வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
- தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே.
- அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
- படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
- திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
- தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
- நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
- ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
- தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
- நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
- தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
- தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
- ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
- நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
- ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
- தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
- ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.
- ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
- ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
- ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
- ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
- மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
- மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
- பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே.
- நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
- பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
- சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
- ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
- நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
- பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
- கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே.
- கலிநிலைத் துறை
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
- பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
- தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
- மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.
- வேறு
- தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
- ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
- பாயும் மால்விடை ஏறும் பரமனே
- நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
- வேறு
- உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
- இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
- அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
- திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
- முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
- நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
- பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
- சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
- காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
- ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
- பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்
- பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்
- அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே
- இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
- புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
- பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
- பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
- மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
- மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
- கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
- கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.
- கட்டளைக் கலிப்பா
- தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
- துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
- ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
- டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
- தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
- தயவு தான்நினக் கில்லை உயிரையும்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
- ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
- ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
- ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து.1
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- 185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ரால் விளக்கெரிந்த அற்புதத்தைக்குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும்காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப்பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப்பதிப்பித்துள்ளார்.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
- அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
- நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
- நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
- வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
- விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
- தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
- தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆர்க்கு மரிதா மருந்து - தானே
- ஆதி யநாதியு மான மருந்து
- சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
- தேடுவோர் தங்களை நாடு மருந்து. - நல்ல
- அணிமணி கண்ட மருந்து - அருள்
- ஆநந்த சுத்த வகண்ட மருந்து
- பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
- பேசா மருந்தென்று பேசு மருந்து. - நல்ல
- அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
- ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே.
- ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
- ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.
- ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
- ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
- ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
- ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
- அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
- அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
- அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
- ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
- அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
- ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
- அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
- ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
- ஆட்கொண் டருளிய தேஜ னடி
- வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
- வாளன டிமண வாள னடி. - கொம்மி
- செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
- செங்கை பிடித்தவ ராரே டி
- அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.
- கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
- கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
- அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
- ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
- ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
- அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
- சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
- தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட
- ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
- ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
- மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
- நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்
- வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்
- ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்
- பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றேபொற்றொடிபொங்குகின்றாளே.
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
- உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
- வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
- மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
- கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
- குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
- நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
- நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
- நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
- மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
- வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
- தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
- சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
- தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
- தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
- காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
- ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
- ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
- நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
- அல்லார் குழலாள் கண்ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
- பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
- வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
- ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
- கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
- கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி
- கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
- யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
- ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
- கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
- வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
- ஆவென் றலறிக் கண்ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
- கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
- கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
- சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
- கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
- களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
- இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே
- வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆக்கம் இல்லார் வறுமையிலார் அருவம் இல்லார் உருவமிலார்
- தூக்கம் இல்லார் சுகம்இல்லார் துன்பம் இல்லார் தோன்றுமல
- வீக்கம் இல்லார் குடும்பமது விருத்தி யாக வேண்டுமெனும்
- ஏக்கம் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
- நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
- பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
- சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
- நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
- பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
- பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
- ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
- தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
- இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே
- சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன்
- சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
- ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
- வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
- தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
- ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
- வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
- சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆழி விடையார் அருளுடையார் அளவிட் டறியா அழகுடையார்
- ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
- வாழி என்பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
- தோழி அனைய குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
- ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
- மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
- சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
- கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
- விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
- அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
- தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
- ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
- ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
- காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர்
- ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம்
- ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
- காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
- வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை
- உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
- கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும்
- நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே
- வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
- கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவீ றாகிநின்றார்
- நீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக்
- கோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
- காலம் அறியேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
- சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
- கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டிநின்றார்
- தளித்தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டியுடன்
- ஒளித்தார் நானும் மனம்மயங்கி உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக்
- களித்தார் குழலாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
- அருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்
- இருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
- தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.
- ஆரா அமுதாய் அன்புடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
- தீரா வினையும் தீர்த்தருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
- பாரார் புகழும் திருஒற்றிப் பரமர் தமது தோள் அணையத்
- தாரார் இன்னும் என்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
- காவி மணந்த கருங்களத்தார் கருத்தர் எனது கண்அனையார்
- ஆவி அனையார் தாய்அனையார் அணிசேர் ஒற்றி ஆண்தகையார்
- பூவின் அலங்கல் புயத்தில்எனைப் புல்லார் அந்திப் பொழுதில்மதி
- தாவி வருமே என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
- ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
- தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
- ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
- தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்
- துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை
- எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
- ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
- யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
- தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
- களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
- ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
- வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
- வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
- உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
- சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
- பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
- ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
- வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
- கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
- உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
- ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
- ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
- வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
- கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
- எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
- அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
- திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
- கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும்
- அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும்
- ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
- கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
- கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
- வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
- கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும்
- அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும்
- துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும்
- கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்
- வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
- புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
- கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
- அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும்
- நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும்
- கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
- ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
- வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
- கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
- கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
- நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
- எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
- நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
- இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
- இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆகின்ற அரசே
- ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
- கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
- வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
- வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
- பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
- பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
- துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
- அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
- அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
- இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
- தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
- தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
- வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
- மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
- என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
- டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
- முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
- முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
- ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
- செஞ்சொலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
- திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
- எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
- இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
- துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
- துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
- காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
- கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
- பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
- போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
- நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
- நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
- தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
- தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
- அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
- ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
- என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
- திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
- இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
- என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
- அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
- ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
- எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
- உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
- இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
- இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
- கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
- ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
- இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
- தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
- சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
- களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
- உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
- உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
- அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
- ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
- நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
- காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
- கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
- சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
- சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
- ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
- அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
- மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
- தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
- திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
- அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
- ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
- ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
- பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
- ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
- அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
- நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
- நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
- ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
- அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
- வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
- வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
- கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
- கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
- செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
- திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
- துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
- உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
- மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
- மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
- ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
- அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
- உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
- உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
- நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
- நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
- எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
- என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
- அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிறர்ந் தாட
- அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
- பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
- நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
- நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
- இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
- இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
- தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
- கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
- மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
- பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
- பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
- அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
- னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
- சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
- சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
- கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
- கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
- காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
- ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே .
- சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
- சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
- மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
- வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
- அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
- அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
- முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
- முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
- நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
- நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
- ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
- யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
- கறிவிலயேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
- ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.
- சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
- துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
- கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
- கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
- என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
- என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
- தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
- முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
- பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
- படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
- சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
- திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
- சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
- தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
- காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
- பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
- குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
- மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
- மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
- ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
- அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
- வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
- விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
- பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
- பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
- சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
- சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
- ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
- கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
- சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
- சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
- வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
- விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
- பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
- பண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
- இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
- எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
- பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
- பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
- மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
- வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
- அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
- ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
- மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
- மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
- மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
- தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
- தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
- அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
- பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
- ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
- நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
- வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
- மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
- எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
- எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
- அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
- அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
- இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
- எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
- சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
- தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
- எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
- வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
- வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
- அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
- ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
- இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
- தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
- சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
- வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
- உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
- உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
- ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
- அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
- வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
- இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
- காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
- இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
- இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
- இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
- அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
- அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
- என்புருக மனஞான மயமாகும் என்றால்
- எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
- வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
- எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
- எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
- பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
- மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
- மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
- ஐவகைய கடவுளரும் அந்தனரும் பரவ
- ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.
- நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
- நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
- புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
- கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
- கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
- தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
- தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
- நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
- நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
- புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
- என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
- என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
- அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
- ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
- வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
- தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
- சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
- சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
- செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
- ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
- அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
- ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
- ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
- ஆங்காரப் பெருமதமால் யானை போல
- அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
- பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
- பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
- தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
- செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.
- விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
- மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
- களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
- கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
- துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
- துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
- வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
- வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
- மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
- துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
- விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
- வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.
- நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
- சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
- ஏற்றலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
- ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.
- ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
- தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
- தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
- 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
- என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
- அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
- இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
- தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
- அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
- தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
- விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
- பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
- ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
- வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
- விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
- கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
- தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
- வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
- அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
- இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
- பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
- வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
- எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
- உண்ணி லாவிய நின்திரு வுள்ளமும் உவகை167 யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
- வெண்ணி லாமுடிப் புண்ணியமூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
- காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
- ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
- வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- 167. ஆசை - தொ. வே. பதிப்பு
- 168. ஆளையா - தொ. வே.பதிப்பு
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
- கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
- வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
- கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
- சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
- தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
- கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
- கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
- மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
- ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
- தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
- பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
- போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
- சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
- ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
- மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
- வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
- மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
- கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
- கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.
- குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
- வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
- தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
- கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
- கையாத துன்பக் கடல்மூழ்கி நெஞ்சம் கலங்கிஎன்றன்
- ஐயாநின் பொன்அடிக் கோலமிட் டேன்என்னை ஆண்டுகொளாய்
- மையார் தடங்கண் மலைமகள் கண்டு மகிழ்செல்வமே.
- செய்யார் தணிகை மலைஅர சேஅயிற் செங்கையனே.
- நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
- அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
- சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
- இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
- கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
- என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
- துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.
- தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
- சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
- வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
- திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
- பணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்
- கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
- அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.
- பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
- என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
- மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
- இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
- மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
- வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
- கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
- மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
- செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
- அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
- கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
- தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
- மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
- கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
- பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
- வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
- தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
- செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
- எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
- பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
- செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
- வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
- பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
- பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
- தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
- தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
- ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
- அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
- பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
- கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
- குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
- கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
- கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
- தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
- வஞ்சகன்என் றேமறுத்து வன்க ணாநீ
- போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
- பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
- கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
- குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
- தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
- மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
- என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
- என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்றம்
- அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
- ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
- வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
- கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
- கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
- எண்அ றாத்துயர்க் கடலுள் மூழ்கியே
- இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
- தண்அ ற்‘ப்பொழில் குலவும் போரி6 வாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
- மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
- தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
- சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
- ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
- அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
- நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- நாய காதிருத் தணிகை நாதனே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
- கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
- பாவி யேன்படும் பாட னைத்தையும்
- பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
- சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
- திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
- தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
- சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
- எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
- என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
- நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
- நித்த நின்அருள் நீதி ஆகுமால்
- தந்தை தாய்என வந்து சீர்தரும்
- தலைவ னேதிருத் தணிகை நாதனே.
- பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப்
- பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
- தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
- தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
- நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
- நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
- சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
- தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
- நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
- தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
- வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
- தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
- ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
- ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.
- தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
- மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
- ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
- தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
- வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
- நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
- தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
- மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.
- சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
- செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
- மங்க லம்பெற வைத்த வள்ளலே
- தங்க ருள்திருத் தணிகை ஐயனே.
- செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
- கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
- தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
- பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.
- அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
- செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
- துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
- தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.
- சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
- ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
- டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
- ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
- உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
- நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
- தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
- வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
- அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
- பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
- தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.
- எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
- மனமுற நினைந்தகத் தன்பாம்
- பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
- அன்பர்பால் இருந்திட அருளாய்
- தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
- அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
- பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
- என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
- செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
- உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
- அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
- உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
- யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
- ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
- சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
- வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
- ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
- அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
- கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
- ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.
- பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
- கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
- உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
- தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
- ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
- நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
- சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
- அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
- சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
- பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
- ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
- பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
- சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
- தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
- வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
- செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
- கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
- உண்ணேனோ ஆனந்தக் கண்ர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
- பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.
- பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று
- கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
- ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும்
- சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே.
- கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
- அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
- துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
- தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.
- தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
- கனியேநின் சேவடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
- துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
- இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.
- இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
- செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
- எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்பணிகள் இயற்றி டேனோ
- தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
- தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
- ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
- ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.
- தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
- நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
- கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
- பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
- பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
- மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
- ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
- மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
- மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
- கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
- கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
- மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
- வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
- தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
- தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
- ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
- குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
- கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
- மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
- வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
- சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
- சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
- படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
- பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
- குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
- கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
- கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
- கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
- ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
- ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
- பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
- அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
- பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனே.
- செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
- கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
- மெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
- பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.
- மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ
- இன்னும் கோபம் ஓயாரோ என்தாய் தனக்குத் தாயாரோ
- துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
- பன்னும் வளங்கள் செறிந்தோங்கும் பணைகொள் தணிகைத் தூயாரே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
- சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
- நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
- வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
- உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
- பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
- மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
- கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
- இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்
- மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்
- குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
- நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.
- அவம்நாள் கழிக்க அறிவேன் அலாதுன் அடிபேணி நிற்க அறியேன்
- தவம்நாடும் அன்ப ரொடுசேர வந்து தணிகா சலத்தை அடையேன்
- எவன்நான் எனக்கும் அவண்நீ இருக்கும் இடம்ஈயில் உன்றன் அடியார்
- இவன்ஆர் இவன்றன் இயல்பென்ன என்னில் எவன்என் றுரைப்பை எனையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
- அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
- தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
- தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
- தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
- தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
- எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
- ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
- செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
- தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
- கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
- கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
- எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
- பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
- கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
- கைகுவியேன் மெய்குளிரேன் கண்ர் பாயேன்
- உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
- உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
- எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
- எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
- சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
- கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
- சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
- ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
- காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
- சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
- எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
- கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
- தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
- திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
- கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
- வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
- உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
- கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
- விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
- நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
- கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
- நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
- வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
- தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
- புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
- கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
- கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
- வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
- மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
- எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
- திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
- மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
- பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
- புண்ணி யாஅருட் போதக நாதா
- துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
- து‘ய னேபசுந் தோகைவா கனனே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
- கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
- பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தாயும் தந்தையும் சாமியும் எனது
- சார்பும் ஆகிய தணிகையங் குகனே
- ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
- ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.
- கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
- கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
- பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
- வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
- புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
- பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
- அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
- அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
- பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
- மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
- வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
- வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- 10. ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்.தொ.வே.
- மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
- நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.
- அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
- நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
- என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
- நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
- கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
- அருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே
- திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
- ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.
- எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
- ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
- செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
- நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
- மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
- வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
- கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
- கழலடிக் காக்கும்நாள் உளதோ
- குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
- குறிகுணங் கடந்ததோர் நெறியே
- எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
- எந்தையே தணிகைஎம் இறையே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
- முறியனேன் தனக்குநின் அடியாம்
- ஏடவிழ் கமலத் திருநற வருந்த
- என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
- ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
- ஐயருக் கொருதவப் பேறே
- கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே
- ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
- நாயினும் கடையஇந் நாய்க்குன்
- சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
- தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
- ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
- அருள்பழுத் தளிந்தசெங் கனியே
- கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
- பதகர்பால் நாள்தொறும் சென்றே
- வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
- வாட்டம்இங் கறிந்திலை என்னே
- ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
- அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
- கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
- வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
- துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
- துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
- அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
- அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
- கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
- வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
- கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
- கருத்தனைக் கருதும்ஆ னந்த
- வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
- விருப்புறு பொருப்பனை வினையைத்
- தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
- புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
- நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
- நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
- விலையி லாதநின் திருவருள் விழையேன்
- வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
- இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
- வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
- தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
- சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
- அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
- இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
- பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
- தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
- சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
- ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
- உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
- எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
- காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
- வான மேவுறும் பொழில்திருத் தணிகை
- மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
- ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
- நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
- ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
- ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
- நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
- நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
- காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
- ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
- உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
- இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
- ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
- செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
- குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
- பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
- கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே.
- ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
- காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
- நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
- போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
- இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
- அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
- வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
- துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
- வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
- சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
- நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
- என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
- காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
- கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
- சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
- திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
- சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
- தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
- காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
- தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
- கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
- தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
- விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
- நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
- வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
- காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
- தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
- ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
- ஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
- வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
- ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
- போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
- தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
- போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
- ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
- வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
- நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
- போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
- ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- செக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்
- அக்கட் பரிதிபுரத் தார்ந்தோங்கும்-முக்கண்
- குழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேஎன்
- பிழைக்கிரங்கி ஆளுதியோ பேசு.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்
- தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
- பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
- கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- ஆறுமு கங்கொண்ட ஐயாஎன் துன்பம் அனைத்தும்இன்னும்
- ஏறுமு கங்கொண்ட தல்லால் இறங்குமு கம்இலையால்
- வீறுமு கங்கொண்ட கைவேலின் வீரம் விளங்கஎன்னைச்
- சீறுமு கங்கொண்ட அத்துன்பம் ஓடச் செலுத்துகவே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஏலுந் தயங்கென்னு மேவற் கெதிர்மறைதான்
- ஆலுந் தொழிற்கேவ லாகுமோ-மாலுந்தி
- மாற்றுந் தணிகையர்க்கு மாமயின்மேல் நாடோறுந்
- தோற்றுந் தணிகையன்பொற் றோள்.
- பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
- திறலோங்கு செல்வம்ஓங்கச்
- செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
- திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
- மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
- வளர்கருணை மயம்ஓங்கிஓர்
- வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
- வடிவாகி ஓங்கிஞான
- உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
- ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
- உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
- உய்கின்ற நாள்எந்தநாள்
- தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
- பார்முகம் பார்த்திரங்கும்
- பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
- பதியும்நல் நிதியும்உணர்வும்
- சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
- தீமைஒரு சற்றும்அணுகாத்
- திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
- செப்புகின் றோர்அடைவர்காண்
- கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
- þக்‘ழியங் கொடியும்விண்ணோர்
- கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
- கொண்டநின் கோலமறவேன்
- தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருளார் அமுதே சரணம் சரணம்
- அழகா அமலா சரணம் சரணம்
- பொருளா எனைஆள் புனிதா சரணம்
- பொன்னே மணியே சரணம் சரணம்
- மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
- மயில்வா கனனே சரணம் சரணம்
- கருணா லயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- மன்னே எனைஆள் வரதா சரணம்
- மதியே அடியேன் வாழ்வே சரணம்
- பொன்னே புனிதா சரணம் சரணம்
- புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
- அன்னே வடிவேல் அரசே சரணம்
- அறுமா முகனே சரணம் சரணம்
- கன்னேர் புயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
- டாறு புயந்திகழ் அற்புதமும்
- வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
- மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
- ஆனந்த மான அமுதனடி - பர
- மானந்த நாட்டுக் கரசனடி
- தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
- சண்முகன் நங்குரு சாமியடி.
- வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
- வாசியில் இங்கே வருவாண்டி
- ஆசில் கருணை உருவாண்டி - அவன்
- அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
- காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
- கண்ணுதல் சேயரே வாரும்
- ஒண்ணுதல் நேயரே வாரும்.
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
- மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
- ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
- ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
- இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
- இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
- என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
- எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவர் நீரணியும்
- மாலை யாதென் றேனயன்மால் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுத்ததென்றார்
- ஆலு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
- ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
- ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றேன்
- ஈது நமக்குந் தெரியுமென்றா ரிறையா மோவிங் கிதுவென்றேன்
- ஓது மடியர் மனக்கங்கு லோட்டு மியாமே யுணரென்றார்
- ஆது தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- ஏரார் பெயரின் முன்பினிரண் டிரண்ட கத்தா ரென்றாரென்
- நேரா வுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார்
- ஆரார் சடைய ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
- ஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார்
- ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- ஆரா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
- ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
- ஆவென் றுரைத்தா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாத் தோலோடு வியாளத் தோலு முண்டென்றார்
- ஆலார் களத்த ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
- மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
- ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
- ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
- சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
- நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
- நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
- மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
- வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
- திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
- திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
- குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
- ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
- அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
- ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
- ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
- சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
- திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
- கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
- அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
- குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே.
- ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
- ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
- பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
- சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
- ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
- ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
- தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
- பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
- பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
- பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
- பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
- ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
- மின்திரண்டு நின்றசடை மேல்.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
- அதீதஅறி வென்றஒன்றே
- அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
- அதீதநிலை என்றநன்றே
- ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
- அறிதிஎன அருளுமுதலே
- ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
- அறிந்தடைதி என்றநலமே
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- 162. நான்காம் பாவின் பிற்பாதியும் 5,6,7,8 ஆம் பாக்களும் கிடைக்கவில்லை.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- * அடைப்புக்குள் உள்ளவை மூலத்தில் எழுத்து விளங்கா இடங்களில் ஆ. பா. ஊகித்து அமைத்தசொற்கள்.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
- நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
- ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
- தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
- ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
- நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
- தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- * இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது:"இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம்சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர்களாலியற்றியது." * 6 - 5 - 1864 - ஆ. பா.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பரசிவா னந்தபரி பூரண சதானந்த
- பாவனா தீதமுக்த
- பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
- பௌதிகா தாரயுக்த
- சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
- சாம்பவ விநாசரகித
- சாஸ்வத புராதர நிராதர அபேதவா
- சாமகோ சரநிரூபா
- துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
- சுகோதய பதித்வநிமல
- சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
- சோமசே கரசொரூபா
- அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
- டணுவளவும் அறிகிலாத
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
- சுத்தமணியே அரியநல்
- துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
- துலங்குமணி யேஉயர்ந்த
- ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
- தானந்த மானமணியே
- சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
- சமரச சுபாவமணியே
- நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
- நினைவிலமர் கடவுண்மணியே
- நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
- நித்யஆ னந்தமணியே
- ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
- கன்புதவும் இன்பமணியே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
- சாமிசிவ காமியிடமார்
- சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
- சத்யமொழி தன்னைநம்பி
- எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
- ஏத்திவினை தனைமாற்றியே
- இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
- ஏழையேன் ஒருவன்அந்தோ
- சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
- செப்புவாய் வேதனாதி
- தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
- சித்தர்களும் ஏவல்புரிய
- அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
- கருண்முக விலாசத்துடன்
- அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருவே திகழுங் கலைமகளே திருவே மலையான் திருமகளே
- உருவே இச்சை மயமேமெய் உணர்வின் வணமே உயர்இன்பக்
- குருவே ஆதித் தனித்தாயே குலவும் பரையாம் பெருந்தாயே
- மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே.
- உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
- இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
- கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
- பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.
- வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
- பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
- ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
- செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.
- உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
- சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
- நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
- தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
- பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
- நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
- ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
- ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- ஈண்டவனேன் வன்சொல் இயம்பியதை யென்னுடைய
- ஆண்டவனே யெண்ணிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- ஆவ தறியா தடியே னிகழ்ந்தகொடும்
- பாவ நினைக்கிற் பகீரென் றலைக்குதடா.
- ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
- ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே.
- நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
- ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே.
- வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
- ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.
- ஓர்துணைநின் பொன்னடியென் றுன்னுகின்றே னுன்னையன்றி
- ஆர்துணையும் வேண்டேனென் அன்புடைய ஐயாவே.
- பூசைசெய்து பெற்றவுன்றன் பொன்னடிமே லன்றியயல்
- ஆசையொன்று மில்லையெனக் கன்புடைய ஐயாவே.
- தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
- ஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.
- எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
- எல்லாம்வல் லான்தனையே ஏத்து197.
- எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நிலைமண்டில ஆசிரியப்பா
- ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
- ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
- ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
- ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
- ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
- ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
- தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
- ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
- ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
- ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- காரண காரியங் காட்டிடு வெளியெனும்
- ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
- ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
- ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
- ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
- ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
- ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- வாடுத னீக்கிய மணிமன் றிடையே
- ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமுங் காணா
- ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
- ஓதியோ தாம லுறவெனக் களித்த
- ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
- காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
- ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
- ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
- பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
- ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
- சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
- ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
- சாவா நிலையிது தந்தன முனக்கே
- ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
- ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
- தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
- ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
- ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
- கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
- ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
- மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
- ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
- ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
- ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
- ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
- ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
- ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
- ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி
- வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
- ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
- நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
- ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
- ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
- தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
- ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
- ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி
- காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
- ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
- ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
- ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
- ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
- ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
- ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
- ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
- ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
- ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
- ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
- ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
- ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
- ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
- ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
- ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
- ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினி லூறியல் காட்டுறு பலபல
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
- ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
- ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
- ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
- ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
- ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
- ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காலமே முதலிய கருவிகள் கலைவெளி
- ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
- ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
- ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
- ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
- ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
- ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கோடியி லனந்த கோடிபல் கோடி
- ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
- ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
- ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
- ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
- ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
- ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
- ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
- ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
- ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
- ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
- ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
- ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
- ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
- ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
- ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
- ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
- ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
- பேருறு நீலப் பெருந்திரை யதனால்
- ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
- ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
- கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
- கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
- ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
- வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
- ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
- ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
- ஈன்றமு தளித்த வினியநற் றாயே
- ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
- ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
- ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
- ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
- ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
- ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
- பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
- ஆரண முடியுட னாகம முடியுங்
- ஆனந்த வமுதே யருளொளி யமுதே
- தானந்த மில்லாத் தத்துவ வமுதே
- காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
- ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
- ஆகம முடிமே லருளொளி விளங்கிட
- வேகம தறவே விளங்கொளி விளக்கே
- ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
- காரியம் விளக்குமோர் காரண விளக்கே
- ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
- ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
- வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
- ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
- ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
- கோடிகோ டிகளும்ஆங் காங்கே
- நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
- நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
- விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
- மெய்யறி வானந்தம் விளங்க
- அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
- ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
- கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
- கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
- கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
- கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
- ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
- அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
- பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
- பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
- டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
- இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
- ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
- வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
- புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
- புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
- மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
- விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
- உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
- ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
- செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
- திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
- வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
- மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
- உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் செல்லினால்அரிப்புண்டசிறியேன்
- அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் அறிந்தவர் தங்களை அடையேன்
- படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்பணத்திலும் கொடியனேன் வஞ்கக்
- கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
- இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
- அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
- அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
- பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
- பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
- தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
- தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
- இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
- மருளை யேதரு மனக்குரங் கோடும்
- வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
- பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
- பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
- அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
- சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
- யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
- உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
- ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
- அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
- ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
- மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
- நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
- நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
- போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
- பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
- ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
- சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
- ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
- ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
- நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
- நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
- ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
- ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
- மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
- நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
- படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
- கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
- பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
- அடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.
- இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
- வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
- அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
- துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
- எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
- அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
- சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
- முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
- கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
- வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
- பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
- ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
- 201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு. பி. இரா. பாடம்.
- 202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
- 203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
- பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
- ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள்
- கூப்பினுங்கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
- ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
- போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
- சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த
- கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண்ணுதற் கமையேன்
- நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
- பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
- கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
- நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
- ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
- பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
- உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
- அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
- தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
- கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
- உடல்பொருள் ஆவியும் உனக்கே
- பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
- பின்னும்நான் தளருதல் அழகோ
- என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
- முறிதல்ஓர் கணம்தரி யேனே.
- தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
- சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
- தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததெந் தாயே
- ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
- அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
- நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
- நடம்புரி ஞானநா டகனே.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில்
- சூழ்உயிர் விடத்தொடங் குவன்நான்
- நீதியே நிறைநின் திருவருள் அறிய
- நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
- ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே
- உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- ஆதியே நடுவே அந்தமே ஆதி
- நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எஞ்சல் இன்றிய துயரினால் இடரால்
- இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி
- வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும்
- அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும்
- தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
- அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
- வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
- நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
- தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
- சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
- வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
- கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
- தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால்
- பத்தி ஒன்றிலேன் பரமநின் கருணை
- மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல்
- ஏழை யேன்உயிர் இழப்பன்உன் ஆணை
- சத்தி யம்புகன் றேன்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
- கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
- மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
- உயிர் தரித்திடா துன்அடி ஆணை
- தயவு செய்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- 250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம்.
- 251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சாற்றுவேன் எனது தந்தையே தாயே
- சற்குரு நாதனே என்றே
- போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்
- பூரணா எனஉல கெல்லாம்
- தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த
- தூயபேர் உதவிக்கு நான்என்
- ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்
- அப்பநின் சுதந்தரம் அன்றோ.
- 257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
- எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
- துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
- அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
- தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
- முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
- அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
- கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
- ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
- ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் னவும்நாணம் உறுவ தெந்தாய்
- தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
- எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு பவஉருவாய் என்னுள் ஓங்கி
- அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணை யாலே
- பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தத் தருட்பதமும் பாலிக் கின்றோய்
- எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே ஆடல்இடு கின்றோய் நின்னால்
- அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
- திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
- உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
- அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
- துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ
- என்பேதை மனமடங்கி இருப்பதன்றி எல்லாங்கண் டிருக்கும் என்றன்
- அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
- ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
- போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
- புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
- வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
- வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
- பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
- பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
- அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
- கானந்த மதத்தாலே காரமறை படுமோ
- கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
- ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
- உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
- நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
- நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
- ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
- நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
- ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
- உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
- ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
- இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
- ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
- ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
- பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
- மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
- விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
- பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
- பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
- செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
- திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
- கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
- கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
- உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
- தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
- திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
- பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
- பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை
- அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனிஆற்றேன்.
- பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
- நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே
- கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
- செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
- அப்பணி முடி204 என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
- இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே
- எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
- செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
- செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி
- அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
- எறிவதும் மேட்டில் எறிந்தும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே
- பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே.
- பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்
- கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
- குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
- கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
- கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
- திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
- தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
- இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
- இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
- எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
- அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
- கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே.
- சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
- புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
- பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
- உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
- இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான்
- பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
- சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன் றில்லை
- துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து தூங்கவும் ஆசைஒன் றிலையே.
- திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
- உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
- மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
- கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்.
- தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
- துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
- அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
- கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
- இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
- இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
- என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
- என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
- என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
- பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
- தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
- சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
- காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
- மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
- ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
- பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
- தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
- வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
- ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
- வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
- சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
- கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும்211 ஆடவர் மடவார்
- ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
- மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
- இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
- தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
- பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
- உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
- கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில்
- இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
- நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
- அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
- பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
- வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
- கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
- சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
- பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
- தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
- காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
- நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
- சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
- ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
- புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
- என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
- வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
- என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
- கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
- புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
- கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
- தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
- கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
- இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
- உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
- கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ
- மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது
- பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
- செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.
- இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
- துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
- உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
- மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
- தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
- வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
- இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
- அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன்
- செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
- பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக்
- குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.
- ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
- பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
- மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
- துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
- ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
- சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
- வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
- ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
- தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
- சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
- பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
- சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
- தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
- ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
- பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித்
- தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
- ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
- நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.
- கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
- இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
- மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
- அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
- ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
- காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
- போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
- ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
- என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
- மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம்
- பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
- இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங்கிலையே.
- உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
- சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்
- மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்
- சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
- வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
- இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
- வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
- வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
- கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
- விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
- எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
- சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
- என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
- பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
- போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே
- வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா
- ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன்
- தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
- குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
- பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
- மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
- எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச்
- சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
- அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில்
- முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.
- கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
- மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
- பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
- தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
- பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
- மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
- எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
- என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய்
- உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ
- இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில்231 என்உயிர் தரியா
- தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே.
- பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
- கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
- வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
- உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
- தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
- புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
- வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 வள்ளலே சிற்சபை வாழ்வே.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
- எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
- எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
- செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
- திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
- தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
- தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
- அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
- செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
- திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
- ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
- ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
- எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
- எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
- எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
- எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
- இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
- எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
- உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
- உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
- எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
- எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
- கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
- காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
- விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
- விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
- திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
- உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
- உளஎலாம் ஆங்கவன் தனக்கே
- தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
- செயலிலேன் எனநினைத் திருந்தேன்
- அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
- நினைப்பற நின்றபோ தெல்லாம்
- எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
- என்செயல் என்னஓர் செயலும்
- தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
- சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
- அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
- தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
- நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
- நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
- அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
- ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
- வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
- மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
- ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
- தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
- றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
- சோதியுட் சோதியே அழியா
- இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
- ஈன்றநல் தந்தையே தாயே
- அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
- அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
- செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
- தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
- இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
- இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
- மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
- ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
- சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
- தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
- அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
- ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
- மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
- நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
- கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
- கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
- பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
- பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
- மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
- வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
- நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
- நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
- அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
- அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
- வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
- வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
- கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
- கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
- நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
- நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
- வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
- அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
- கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
- குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
- படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
- படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
- மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
- நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
- நீலியோ தன்புடை ஆடும்
- தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
- தனித்தனி அவர்அவர் எடுத்தே
- கத்தவெம் பயமே காட்டினர் நானும்
- கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
- வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
- மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
- ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
- என்செய்வேன் என்னையே உணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
- தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
- ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
- ஈன்றவர் அறிவரே எந்தாய்.
- வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
- மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
- மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
- வந்தெனை எடுத்திலார் அவரும்
- இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
- என்செய்வேன் என்னுடை அருமை
- நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
- நீயும்இங் கறிந்திலை யேயோ.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
- ஆண்டுகொண் டருளி பொருளே
- வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
- மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
- வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
- தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
- நாடகக் கருணை நாதனே உன்னை
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
- ஆடிய சிறுபரு வத்தே
- குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
- குணப்பெருங் குன்றமே குருவே
- செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
- சிந்தையில் இனிக்கின்ற தேனே
- நற்றக வுடைய நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன்
- கைவழக் கத்தினால் ஒடிந்த
- ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன்
- உலுத்தனேன் ஒருசிறு துரும்பும்
- ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன்
- எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
- நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
- காசிலே ஆசையில் லவன்போல்
- பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
- பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
- இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
- இழுதையிற் றூங்கினேன் களித்து
- நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
- வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
- ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
- சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
- தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
- வருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
- பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
- நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
- ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
- பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
- வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
- உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
- என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
- என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
- அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
- அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
- இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
- இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
- கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
- சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
- தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
- தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
- தானாகி நானாடத் தருணம்இது தானே
- குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
- குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
- என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
- சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
- தந்தெனை யாவரும் வந்தனை செயவே
- நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
- நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
- அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
- வகைஇது துறைஇது வழிஇது எனவே
- இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
- என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
- பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
- புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
- அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
- பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
- நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
- நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
- திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
- சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
- அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- வாய்ந்த பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
- ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
- சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறுமாறே.
- மாற்றி லாதபொன் னம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
- பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
- சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறுமாறே.
- 248. விளங்கு பொன்னணித் திருச்சிற் றம்பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
- 249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
- பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
- விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
- கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
- கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
- நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
- நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
- ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
- அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
- ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
- இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
- பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
- பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
- நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
- புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
- சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
- தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
- எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
- இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
- இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
- என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
- கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
- கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
- துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
- துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
- விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
- விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
- பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
- பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
- அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
- அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
- முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
- முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
- செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
- சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
- இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
- என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மலவா தனைநீர் கலவா அபயம்
- வலவா திருஅம் பலவா அபயம்
- உலவா நெறிநீ சொலவா அபயம்
- உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
- பலஆ குலம்நான் தரியேன் அபயம்
- பலவா பகவா பனவா அபயம்
- நலவா அடியேன் அலவா அபயம்
- நடநா யகனே அபயம் அபயம்.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
- குணமே கொளும்என் குருவே அபயம்
- பற்றம் பலமே அலதோர் நெறியும்
- பதியே அறியேன் அடியேன் அபயம்
- சுற்றம் பலவும் உனவே எனவோ
- துணைவே றிலைநின் துணையே அபயம்
- சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
- சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
- 241. களியே - படிவேறுபாடு. ஆ. பா.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
- தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
- பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
- பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
- இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
- இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
- அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
- கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
- உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
- உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
- வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
- வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
- அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
- காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
- நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
- நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
- செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
- சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
- அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
- குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
- ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
- உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
- மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
- மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
- ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
- விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
- தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
- நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
- கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
- படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
- பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
- கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
- ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
- அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
- நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
- மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
- தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
- மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
- வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
- நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
- நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
- அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- 281. எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 282. தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
- 283. முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க. மடிமேல் - பி. இரா., ஆ. பா.
- 284. மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
- புகலரும் பெரியஓர் நிலையில்
- இன்புரு வாகி அருளொடும் விளங்கி
- இயற்றலே ஆதிஐந் தொழிலும்
- தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
- தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
- அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
- மன்னுருத் திரர்களே முதலா
- ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
- குறுபெருந் தொழில்பல இயற்றி
- இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
- இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
- அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
- தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
- உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
- ஒருதனிப் பெரும்பதி உவந்தே
- புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
- பொறுத்தருட் பூரண வடிவாய்
- என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
- எந்தையைத் தடுப்பவர் யாரே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
- பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
- அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
- மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
- குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
- கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- 273. உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
- 274. பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
- செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
- ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
- ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
- பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
- பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
- ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
- உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
- கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
- கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
- தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
- தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
- எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
- அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
- மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
- மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
- சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
- தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
- இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- ஆன்றானை அறிவானை அழிவி லானை
- அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
- மூன்றானை இரண்டானை ஒன்றானானை
- முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
- தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
- சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
- ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
- சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
- வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
- வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
- வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
- மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
- ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
- வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
- ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
- அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
- தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
- சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
- காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
- நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
- ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
- ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
- வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
- வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
- காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
- பதியுமாம் ஒருபசு பதியை
- நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
- நல்கிய கருணைநா யகனை
- எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
- இறைவனை மறைமுடி இலங்கும்
- தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
- பிறங்கிய பொதுமையைப் பெரிய
- தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
- சாமியைத் தயாநிதி தன்னை
- வண்மையை அழியா வரத்தினை ஞான
- வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
- உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
- ஒருவனைக் கண்டுகொண் டேனே.
- ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
- அறிவித்த அறிவைஎன் அன்பைச்
- சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
- சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
- நீதியை எல்லா நிலைகளும் கடந்த
- நிலையிலே நிறைந்தமா நிதியை
- ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
- என்னைவாழ் விக்கின்ற பதியைப்
- பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
- பொருந்திய மருந்தையென் பொருளை
- வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
- வைத்தசன் மார்க்கசற் குருவைக்
- கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
- சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
- அன்புளே கலந்த தந்தையை என்றன்
- ஆவியைப் பாவியேன் உளத்தை
- இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
- இனிதமர்ந் தருளிய இறையை
- வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- நனவிலும் எனது கனவிலும் எனக்கே
- நண்ணிய தண்ணிய அமுதை
- மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
- வழங்கிய பெருந்தயா நிதியைச்
- சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
- சிவகுரு பதியைஎன் சிறப்பை
- உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
- கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
- அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
- ஆவியை ஆவியுட் கலந்த
- பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
- பேசுதற் கரும்பெரும் பேற்றை
- விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
- விளக்கினைக் கண்டுகொண் டேனே.
- ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
- ஆகம முடிஅமர் பரத்தைக்
- காரண வரத்தைக் காரிய தரத்தைக்
- காரிய காரணக் கருவைத்
- தாரண நிலையைத் தத்துவ பதியைச்
- சத்திய நித்திய தலத்தைப்
- பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
- பொருளினைக் கண்டுகொண் டேனே.
- வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
- விளைவையும் விளைக்கவல் லவனை
- அத்தெலாங்272 காட்டும் அரும்பெறல் மணியை
- ஆனந்தக் கூத்தனை அரசைச்
- சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
- சபைத்தனித் தலைவனைத் தவனைச்
- சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
- தொல்லையின் எல்லையும் அவற்றின்
- வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
- மன்னிஎங் கணும்இரு பாற்குத்
- தகையுறு முதலா வணங்கடை யாகத்
- தயங்கமற் றதுவது கருவிச்
- சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
- பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
- உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
- வெறுவெளி எனஉல குணர்ந்த
- புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
- திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
- திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
- என்பரால் திருவடி நிலையே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
- தான்கொண்டிங் கென்பால் அன்பால்
- தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
- களித்தளித்த தலைவன் தன்னை
- முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
- இருந்தமுழு முதல்வன் தன்னை
- அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
- விடுவித்தென் தன்னை ஞான
- நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
- நிலைதனிலே நிறுத்தி னானைப்
- பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
- பராபரனைப் பதிஅ னாதி
- ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
- என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
- நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
- நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
- கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
- காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
- செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அம்பலத் தாடும் அமுதமே என்கோ
- அடியனேன் ஆருயிர் என்கோ
- எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
- என்னிரு கண்மணி என்கோ
- நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
- நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
- இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அம்மையே என்கோ அப்பனே என்கோ
- அருட்பெருஞ் சோதியே என்கோ
- செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
- திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
- தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
- தமியனேன் தனித்துணை என்கோ
- இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- எய்ப்பிலே கிடைத்த வைப்பது என்கோ
- என்னுயிர்க் கின்பமே என்கோ
- துய்ப்பிலே நிறைந்த பெருங்களிப் பென்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- தப்பெலாம் பொறுத்த தயாநிதி என்கோ
- தனிப்பெருந் தலைவனே என்கோ
- இப்பிறப் பதிலே மெய்ப்பயன் அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
- அம்பலத் தெம்பிரான் என்கோ
- நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
- நீடும்என் நேயனே என்கோ
- பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
- பெரியரிற் பெரியனே என்கோ
- இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
- அன்பிலே நிறைஅமு தென்கோ
- சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
- மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
- மன்னும்என் வாழ்முதல் என்கோ
- இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
- மயக்கநீத் தருள்மருந் தென்கோ
- பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
- பதச்சுவை அனுபவம் என்கோ
- சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
- திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
- இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
- அறிவிலே அறிவறி வென்கோ
- இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
- என்னுயிர்த் துணைப்பதி என்கோ
- வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
- மன்னும்அம் பலத்தர சென்கோ
- என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
- சர்க்கரைக் கட்டியே என்கோ
- அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
- அம்பலத் தாணிப்பொன் என்கோ
- உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
- உள்ளொளிக் குள்ளொளி என்கோ
- இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
- என்னைஆண் டருளிய நினையே.
- மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
- மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
- குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
- குணப்பெருங் குன்றமே என்கோ
- பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
- பெரியஅம் பலத்தர சென்கோ
- இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
- என்உயிர்த் தந்தையே என்கோ
- என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
- என்உயிர்த் தலைவனே என்கோ
- என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
- என்னுடை நண்பனே என்கோ
- என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
- என்னைஆண் டருளிய நினையே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
- ஆனந்தத் தனிமலர் என்கோ
- கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
- கடையனேன் உடையநெஞ் சகமாம்
- இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
- இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
- துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
- பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
- நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
- நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
- கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
- கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
- துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
- பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
- தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
- சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
- மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
- வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
- துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
- கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
- பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
- படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
- சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
- சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
- ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
- பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
- படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
- தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
- சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான
- விளக்கமே விளக்கத்தின் வியப்பே
- கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த
- கருணையே கரிசிலாக் களிப்பே
- ஐம்மையே அதற்குள் அதுஅது ஆகும்
- அற்புதக் காட்சியே எனது
- பொய்ம்மையே பொருத்துப் புகலளித் தருளிப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- காரண அருவே காரிய உருவே
- காரண காரியம் காட்டி
- ஆரண முடியும் ஆகம முடியும்
- அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
- நாரண தலமே263 நாரண வலமே
- நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
- பூரண ஒளிசெய் பூரண சிவமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- 258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 259. சற்புதர் - நல்லறிவுடையவர்.
- 260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
- 261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
- 263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- நல்லவா அளித்த நல்லவா எனையும்
- நயந்தவா நாயினேன் நவின்ற
- சொல்லவா எனக்குத் துணையவா ஞான
- சுகத்தவா சோதிஅம் பலவா
- அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
- ஆண்டவா தாண்டவா எல்லாம்
- வல்லவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
- ஈன்றவா என்னவா வேதம்
- சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
- துதியவா அம்பலத் தமுதம்
- அன்னவா அறிவால் அறியரி வறிவா
- ஆனந்த நாடகம் புரியும்
- மன்னவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
- தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
- வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
- ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
- அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
- எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
- உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
- பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
- என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
- உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
- காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
- எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
- ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
- இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
- இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
- அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
- அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
- வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
- நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
- ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
- தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
- நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
- குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
- பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
- கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
- பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை
- ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன்
- தாயினும் இனிய உன்றன் தண்ணருட் பெருமை தன்னை
- நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
- முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
- என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
- நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
- சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
- மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
- யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
- கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
- ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
- ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
- கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
- சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
- பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
- வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
- தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
- சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
- நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
- செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
- நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
- தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
- தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
- சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
- ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
- தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
- தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
- சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
- தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
- மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
- தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
- பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
- சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
- அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
- 278. 4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் இருப்பதாகக்கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். பொருளமைதிகருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
- கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
- உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
- அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
- தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
- எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
- அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே
- நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல
- சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே
- அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
- இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
- நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
- அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
- திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
- டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
- வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
- ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
- வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
- கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
- கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
- பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
- பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
- இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
- பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
- தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
- முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
- சித்தியை உற்றேன்என்று உந்தீபற
- சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
- வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
- பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
- ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
- மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
- தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
- சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்
- ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
- அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
- ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
- திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
- எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
- என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
- சித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
- திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
- இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
- புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
- சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
- தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
- தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
- என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
- என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
- விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக
- விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
- நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
- நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
- எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
- பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே352 எனைஈன்ற
- ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
- நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
- அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
- எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
- கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
- பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
- தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
- கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
- என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
- ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
- அன்றிவே றெண்ணிய துண்டோ
- ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் காற்றலேன் சிறிதும்
- தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
- நன்றருள் புரிவதுன் கடனே.
- வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
- மன்னிய உண்மை ஒன்றென்றே
- எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
- திறையும்வே றெண்ணிய துண்டோ
- அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
- அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
- தெளிவித்துக் காப்பதுன் கடனே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
- இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
- சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
- தனித்துவே றெண்ணிய துண்டோ
- செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
- சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
- இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
- தியற்றுவ துன்கடன் எந்தாய்.
- அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
- அடுத்திடும் புறப்புறம் நான்கில்
- இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
- இறையும்இங் கெண்ணிய துண்டோ
- உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் கினிச்சிறி துந்தான்
- இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
- கென்னைஆண் டருள்வ துன்கடனே.
- 244. சாயையாற் 245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா.
- பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
- போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
- றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
- நாடுகின்றேன் சிற்சபையை நான்.
- கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
- கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
- நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
- வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
- 264. ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
- 265. கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
- 266. வரம் - படிவேறுபாடு. ஆ. பா.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
- வாழ்விலே வரவிலே மலஞ்சார்
- தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
- தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
- காலிலே ஆசை வைத்தனன் நீயும்
- கனவினும் நனவினும் எனைநின்
- பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
- ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
- சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
- ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
- கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
- பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
- ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
- பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
- அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
- அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
- விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
- ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
- நீதிக் கொடிவிளங்க நீண்டு.
- கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
- நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
- தெல்லோரும் வாழ்க இசைந்து.
- ஆடஎடுத் தான்என் றறைகின்றீர் என்தலைமேல்
- சூடஎடுத் தான்என்று சொல்கின்றேன் - நாடறிய
- இவ்வழக்கை யார்பால் இசைத்தறுத்துக் கொள்கிற்பாம்
- கவ்வைஅற்ற அம்பலத்தான் கால்.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
- நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
- சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
- சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
- ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
- அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
- ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
- ஏறி இழிந்திங் கிறப்பாயோ289 தோழி.
- அறிவில் அறிவை அறியும் பொதுவில்
- ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
- செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
- செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
- 288. மயமாய்ப் பெருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
- 289. இருப்பாயோ - முதற்பதிப்பு.
- 290. பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,N
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
- ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
- பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
- பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
- எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
- இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
- தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
- உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
- பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
- பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
- நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
- நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
- நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
- நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- 365. அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு.
- 366. எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு.,N
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
- பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
- இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
- என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
- சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
- தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
- நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
- கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
- எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
- உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
- துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
- கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
- எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
- மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
- விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
- விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
- அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
- இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
- களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
- விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
- வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
- மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
- எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
- குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
- மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
- தவம்எது புரிந்ததோ என்றாள்
- அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
- அதிசயம் அதிசயம் என்றாள்
- இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
- எனக்கிணை யார்கொலோ என்றாள்
- சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
- ததும்பினாள் நான்பெற்ற தனியே.
- புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
- புண்ணியம் புகல்அரி தென்றாள்
- தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
- தயவைநான் மறப்பனோ என்றாள்
- எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
- என்னையோ என்னையோ என்றாள்
- அண்ணிய பேரா னந்தமே வடிவம்
- ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
- சத்திய ஞான சபாபதி எனக்கே
- தனிப்பதி ஆயினான் என்றாள்
- நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
- நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
- பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
- பேறெலாம் என்வசத் தென்றாள்
- எத்திசை யீரும் ஒத்திவண் வருக
- என்றனள் எனதுமெல் லியலே.
- வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
- மாலைவந் தணிந்தனன் என்றாள்
- ஊழிதோ றூழி உலவினும் அழியா
- உடம்பெனக் களித்தனன் என்றாள்
- ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
- அளிக்கஎன் றருளினான் என்றாள்
- ஏழியன் மாட மிசையுற வைத்தான்
- என்றனள் எனதுமெல் லியலே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
- கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
- தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
- ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
- நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
- நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
- மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
- வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
- தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
- சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
- தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
- ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
- இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
- ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
- சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
- ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
- அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
- ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
- கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
- ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
- ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
- நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
- நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
- வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
- மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
- மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
- மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
- ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
- ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- ஏற்றமுறும் ஐங்கருவுக் காதார கரணம்
- எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
- தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
- துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
- ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
- அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
- சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- காணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
- கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
- மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
- மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
- பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
- பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
- ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
- எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
- கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
- கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
- பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
- பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
- நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
- நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
- தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
- துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
- ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
- அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம்
- ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
- இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
- ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
- உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.
- சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
- சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
- தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
- தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
- வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
- மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
- ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
- அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
- பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
- பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
- வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
- வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
- தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
- சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
- திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
- வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
- தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
- தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
- உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
- ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
- அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
- அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
- பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
- பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
- பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
- உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
- உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
- தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
- தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
- விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
- றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
- இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
- உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
- தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
- துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.
- அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
- பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
- எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
- அச்சோ எனக்கவன்போல் ஆர்.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
- றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
- செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
- தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
- தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
- நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
- வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
- நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
- தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
- சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.
- எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
- சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
- தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
- செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
- நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
- தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
- பாக்கியவான் ஆனேன் பதிந்து.
- உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
- தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
- தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
- ஆக்கமுற வைத்தாய் அது.
- புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
- பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
- தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
- ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
- அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
- பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
- தந்தாய்என் நான்செய் தவம்.
- அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
- தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
- யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
- ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
- நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
- அடிப்பாவை யும்286 வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
- நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
- இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
- சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
- ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
- காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
- இன்னுரைஅன் றென்றுலகம் எல்லாம் அறிந்திடுக
- என்னுரையும் பொன்னுரைஎன் றேஅணிந்தான் - தன்னுரைக்கு
- நேர்என்றான் நீடுலகில் நின்போல் உரைக்கவல்லார்
- ஆர்என்றான் அம்பலவன் ஆய்ந்து.
- என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
- பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
- நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
- வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
- நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்
- ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
- புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
- எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
- ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
- தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
- எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
- கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
- இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
- தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில்
- வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.
- காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை
- ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து
- நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில்
- கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே.
- கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
- ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
- நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
- ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க்
- காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே
- மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர்
- பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.
- வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன்
- கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
- தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
- ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
- மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
- மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
- மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
- துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
- சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
- குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
- குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
- மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
- இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
- ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
- தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச்
- சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே
- நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த
- பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே.
- ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
- வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
- ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
- ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
- அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
- எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
- மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
- இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
- வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
- வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
- வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
- வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
- அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
- பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
- அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
- கொள்ளற் கபயங் கொடு.
- ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
- சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
- பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
- தாடிக் களிக்க அருள்.
- ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்
- பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்
- தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்
- மொழிஆடு தற்கு முனம்.
- தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
- நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
- தாங்கினேன் சத்தியமாத் தான்.
- பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
- நின்வார்த்தை யாவும்நமது
- நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
- நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
- ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
- அழியாத நிலையின்நின்றே
- அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
- ஆடிவாழ் கென்றகுருவே
- நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
- நான்இளங் காலைஅடைய
- நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
- நண்பனே துணைவனேஎன்
- ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
- ஒருவனே அருவனேஉள்
- ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
- ஓங்குநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
- அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
- கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
- கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
- பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
- பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
- சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- தத்துவ மசிநிலை இதுஇது தானே
- சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
- எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
- ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
- சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
- செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
- சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
- பவநெறி இதுவரை பரவிய திதனால்
- செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
- செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
- புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
- புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
- தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
- மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
- நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
- நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
- ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
- ஏற்றிய கருணைஎன் இன்னுயிர்த் துணையே
- தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
- அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
- ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
- உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
- சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
- சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
- சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- 246. சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
- 247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
- கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
- நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
- நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
- அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
- அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
- அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
- ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
- இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
- இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
- இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
- பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
- பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
- சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
- சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
- படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
- வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
- வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
- நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
- நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
- கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
- கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
- அருள்ஒளித் திருவைநின் தனக்கே
- மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
- விரைந்திரண் டரைக்கடி கையிலே
- கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
- களிப்பொடு மங்கலக் கோலம்
- வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
- என்றனர் மன்றிறை யவரே.
- தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
- தூயநீர் ஆடுக துணிந்தே
- பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
- பண்பொடு புனைந்துகொள் கடிகை
- ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
- எழில்உற மணம்புரி விப்பாம்
- ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
- இயன்மணி மன்றிறை யவரே.
- வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
- ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
- வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
- ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
- ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
- சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
- நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
- வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
- அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
- தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
- அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
- ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
- வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
- தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
- வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
- எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
- நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
- நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
- பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
- பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
- எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
- இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
- வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
- மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
- விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
- நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
- நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
- தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
- தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
- சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
- கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
- கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
- இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
- இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
- பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
- பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
- அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
- மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்
- வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
- நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
- நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
- ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
- ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
- மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
- மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
- காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
- கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
- கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
- அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
- பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
- பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
- பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
- பின்படு தீமையின் முன்படு கின்றீர்
- இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
- வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
- முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
- மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
- மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
- வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
- என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே
- புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால்
- செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில்
- சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர்
- கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே
- கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
- எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
- புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
- கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
- களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
- ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
- அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
- மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
- மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
- எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
- எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
- கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
- கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
- ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
- அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
- உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
- அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
- சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
- உடையான் உளத்தே உவந்து.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
- ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
- தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
- வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
- வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
- நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
- ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
- பாடுகநீ என்றான் பரன்.
- தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
- ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
- செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
- எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
- நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
- நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
- ஊன்நாடி நில்லா உழி.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
- கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
- துண்டேன் அமுதம் உவந்து.
- சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
- நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
- பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
- வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
- நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
- அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
- இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
- வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
- சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
- என்ன பயனோ இவை.
- யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
- ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
- அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
- கம்பலத்தால் ஆகும் களித்து.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
- சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
- காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
- நீரத்தைச் சேர்வீர் நிஜம்.
- போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
- நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
- அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
- றிப்புவியில் இத்தருணம் இங்கு.
- ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
- நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள
- நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
- அனையான் வருகின்றான் ஆய்ந்து.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
- உலகாளச் சூழ்ந்த காமப்
- பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
- நும்முயிரைப் பிடிக்க நாளைச்
- சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
- ஞானசபைத் தலைவன் உம்மைக்
- கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
- இவ்வுலகில் குலாவு வீரே.
- பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
- திடுகின்றீர் பேய ரேநீர்
- இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
- மதித்தீரோ இரவில் தூங்கி
- மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
- நும்மனத்தை வயிரம் ஆன
- சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
- ஏன்பிறந்து திரிகின் றீரே.
- இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின
- துன்பால் இறந்தவர் துன்பற்றுத் தோன்றினர்
- அன்பால் அடியவர் ஆடினர் பாடினர்
- என்பால் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
- வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
- நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
- முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
- சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
- சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- ஆன்மநேய ஒருமைப்பாடு
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆதிஅப் பாநம் அனாதியப் பாநங்கள் அம்மைஒரு
- பாதிஅப் பாநிரு பாதிஅப் பாசிவ பத்தர்அனு
- பூதிஅப் பாநல் விபூதிஅப் பாபொற் பொதுநடஞ்செய்
- சோதிஅப் பாசுயஞ் சோதிஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
- மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
- உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
- அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
- கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
- பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
- மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
- இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
- தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
- கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
- ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
- மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
- ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
- பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
- தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
- போற்று கின்றஎன் புன்மை யாவையும்
- பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
- ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
- கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
- காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
- காணக் காட்டிய கருத்த போற்றிவன்
- கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
- கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
- ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
- பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
- விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக்
- கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
- துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
- இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
- உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
- உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
- என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
- அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
- முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
- தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
- நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
- வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
- தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
- அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
- மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
- தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
- கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும்
- என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி
- மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை
- அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
- மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு
- தந்திரம் அறியேன் எந்தத் தகவுகொண் டடைவேன் எந்தாய்
- இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
- சந்திரன் ஆட இன்பத் தனிநடம் புரியும் தேவே.
- பண்டு நின்திருப் பாதம லரையே
- பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
- தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
- துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
- குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
- குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
- கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
- குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
- தேவரும் முனிவரும் பிறரும்
- இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
- எந்தைநின் திருவருள் திறத்தை
- எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
- என்தரத் தியலுவ தேயோ
- ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
- உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.
- உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
- உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
- திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
- சிவபதத் தலைவநின் இயலைப்
- புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
- புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
- கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
- குருஎனக் கூறல்என் குறிப்பே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
- கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
- தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
- தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
- எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
- என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
- அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
- அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
- இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
- இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
- அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
- அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
- விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
- மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
- பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
- படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.
- தருவகைஇத் தருணம்நல்ல தருணம்இதில் எனக்கே
- தனித்தஅருட் பெருஞ்சோதி தந்தருள்க இதுதான்
- ஒருவகைஈ திலைஎனில்வே றொருவகைஎன் னுடைய
- உடல்உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த
- இருவகையும் சம்மதமே திருவடிசாட் சியதாய்
- இயம்பினன்என் இதயம்உன்றன் இதயம்அறிந் ததுவே
- அருவகையோ உருவகையும் ஆகிஎன்னுள் அமர்ந்தாய்
- அம்மேஎன் அப்பாஎன் அய்யாஎன் அரசே.
- வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
- மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
- எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
- தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
- செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
- நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
- நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
- ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
- சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.
- அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
- அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
- அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
- அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
- ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
- சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
- நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
- ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
- கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
- ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
- பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- நிலைமண்டில ஆசிரியப்பா
- நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
- யாதிற் பெரியேன் தீதிற் பெரியேன்
- என்னைஆண் டருளினை என்னைஆண் டவனே
- அம்பலத் தாடல்செய் எம்பெரும் பொருளே.
- உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
- என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
- வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
- குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
- பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
- டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
- தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
- நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.
- ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
- ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
- தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
- நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
- என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
- நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
- பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
- தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
- நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
- ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
- நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
- கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
- நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
- தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
- வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
- கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
- எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
- வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
- நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
- கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
- பொய்ம்மன மாயையைக் கணத்தே
- மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
- வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
- சொல்லிய பதியே மிகுதயா நிதியே
- தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
- விளைந்தது விளைந்தது மனனே
- கண்ணெலாம் களிக்கக் காணலாம்
- பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
- எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
- ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
- உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
- ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
- வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
- வாரியைக் கண்டனம் மனமே
- அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
- ஆடலாம் அடிக்கடி வியந்தே
- உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
- ஓங்கலாம் உதவலாம் உறலாம்
- கள்எலாம் உண்டவண்டென இன்பம்
- காணலாம் களிக்கலாம் இனியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
- வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
- வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
- இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
- இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
- என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
- எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
- என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
- எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
- இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
- மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
- வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
- அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
- அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
- மாளாத ஆக்கை பெற்றேன்
- கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
- நடுவிருந்து குலாவு கின்றேன்
- பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
- அன்பினொடும் பாடிப் பாடி
- நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
- எண்ணமெலாம் நிரம்பி னேனே.
- ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
- அருள்ஒளி தருகின்றாம்
- கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
- குறிக்கொள்வர் நினக்கேஎம்
- ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
- வாழ்கநீ மகனேஎன்
- றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
- இணைமலர்ப் பதம்போற்றி.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எல்லா உலகமும் என்வசம் ஆயின
- எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
- எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
- எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
- எல்லா போகமும் என்போகம் ஆயின
- எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
- எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
- எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
- சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
- தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
- என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
- எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
- புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
- புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
- தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
- தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- நீதியில் கலந்து நிறைந்தது நானும்
- நித்தியன் ஆயினேன் உலகீர்
- சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
- சத்தியச் சுத்தசன் மார்க்க
- வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
- விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
- தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
- தொலைந்தன தொலைந்தன எனைவிட்
- டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
- இரிந்தன ஒழிந்தன முழுதும்
- ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
- அழிவுறா உடம்பும்மெய் இன்ப
- ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
- உண்மைஇவ் வாசகம் உணர்மின்.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
- காலங் கருதுவ தேன் - நெஞ்சே
- காலங் கருதுவ தேன்.
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- என்ன துடலும் உயிரும்336 பொருளும் நின்ன தல்ல வோ
- எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
- சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
- சிந்தை நினைக்கக் கண்ர் பெருக்கி337 உடம்பை நனைக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
- நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
- நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
- நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
- எனக்கும் உனக்கும்
- யாது கருதி என்னை ஆண்ட தைய ஐய வோ
- யானுன் அடிப்பொற் றுணைகட் குவந்து தொழும்பு செய்ய வோ
- ஓது கடவுட் கூட்டம் அனைத்தும் அடிமை அல்ல வோ
- உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்ல வோ.
- எனக்கும் உனக்கும்
- அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
- அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
- பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
- பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
- எனக்கும் உனக்கும்
- கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
- காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
- ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
- எனக்கும் உனக்கும்
- அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
- ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
- பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
- பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
- கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
- உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
- உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
- அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
- ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
- ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
- ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
- இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
- ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே
- நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
- வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
- குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
- கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
- கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
- விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன்
- விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே
- அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
- படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
- பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே
- பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே
- நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ
- நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
- அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
- இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
- என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
- எனக்கும் உனக்கும்
- பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
- பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
- என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
- எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
- எனக்கும் உனக்கும்
- ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
- ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
- பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
- பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- அன்றே என்னை அடியன்ஆக்கி ஆண்ட சோதி யே
- அதன்பின் பிள்ளை ஆக்கிஅருள்இங் களித்த சோதி யே
- நன்றே மீட்டும் நேயன் ஆக்கிநயந்த சோதி யே
- நானும் நீயும் ஒன்றென் றுரைத்துநல்கு சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே
- நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே
- தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே
- தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
- தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
- ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
- எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே
- துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
- சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
- துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
- சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
- சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
- சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
- அம்பல வாணரே வாரீர்
- அன்புடை யாளரே வாரீர். வாரீர்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
- அந்தண ரேஇங்கு வாரீர்
- அம்பலத் தையரே வாரீர். வாரீர்
- அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
- அளித்திட வல்லீரே வாரீர்
- களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
- அம்பர மானசி தம்பர நாடகம்
- ஆடவல் லீர்இங்கு வாரீர்
- பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
- ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
- அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
- ஆகம வேதம் அனேக முகங்கொண்
- டருச்சிக்கும் பாதரே வாரீர்
- ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
- ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
- ஆரிய ரேஇங்கு வாரீர்
- ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
- ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
- ஆரிய ரேஇங்கு வாரீர்
- ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
- ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
- ஆனந்த ரேஇங்கு வாரீர்
- ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
- தமுதம் அளித்தீரே வாரீர்
- ஆடிய பாதரே வாரீர். வாரீர்
- ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
- கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
- ஜோதிய ரேஇங்கு வாரீர்
- வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
- பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
- கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர்
- தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
- ஆணவம் போக்கினீர் வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
- இதுதரு ணம்இங்கு வாரீர்
- இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
- ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
- கின்பமும் ஆயினீர் வாரீர்
- அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
- ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
- றீடணை யீர்இங்கு வாரீர்
- ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
- ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
- ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
- ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
- பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
- ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
- ஆக்க மடுத்தீரே வாரீர்
- தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
- ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
- றோமை அறிவித்தீர் வாரீர்
- சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
- ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
- ஓதிய நாதரே வாரீர்
- ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
- என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
- இன்னுயிர் ஆயினீர் வாரீர்
- என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
- ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
- பாராய ணம்செய்வீர் வாரீர்
- ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
- ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
- ஈசான மேலென்றீர் வாரீர்
- ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
- ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
- றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
- ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
- ஓங்கார நாடகம் பாங்காகச்305 செய்கின்ற
- ஓங்கார நாடரே வாரீர்
- ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்
- ஓசையின் உள்ளேஓர் ஆசை306 உதிக்கமெல்
- ஓசைசெய் வித்தீரே வாரீர்
- பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
- ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
- ஓமத்தன்308 ஆக்கினீர் வாரீர்
- சாமத்த309 நீக்கினீர் வாரீர். வாரீர்
- ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
- ஊமென்று310 காட்டினீர் வாரீர்
- நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
- ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
- செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
- ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
- கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
- கடல்பொங்கு கின்றது வாரீர்
- உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
- ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
- ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
- ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
- உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
- ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
- திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
- ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
- அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
- ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
- என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
- ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
- அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
- தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
- வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
- தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
- துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
- இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
- திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
- திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
- பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
- பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
- உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
- உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
- இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
- என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
- கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
- குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
- நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
- நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
- சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
- கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
- கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
- சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
- சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
- என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
- அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
- பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
- பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
- கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
- கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
- எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
- கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
- உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
- உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
- தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
- எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
- நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
- விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
- வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
- எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
- இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
- என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
- என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
- என்னுடையஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
- என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
- எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
- என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
- அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- ஆடேடி பந்து ஆடேடி பந்து.
- வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
- மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
- சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
- தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
- ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
- உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
- ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
- திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
- துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
- சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
- அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
- சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
- விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
- வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
- பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
- பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
- அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
- விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
- எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
- என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
- இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
- ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
- அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
- சூழலில் உண்டது சொல்லள வன்றே
- எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
- இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
- விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
- வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
- அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- காணாது காட்டு மருந்து - என்றன்
- கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
- ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
- வாகி மணிமன்றில் ஆடு மருந்து. ஞான
- ஆதி அனாதி மருந்து - திரு
- அம்பலத் தேநட மாடு மருந்து
- ஜோதி மயமா மருந்து - என்னைச்
- சோதியா தாண்ட துரிய மருந்து. ஞான
- ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
- கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
- ஊறந்த மில்லா மருந்து - எனக்
- குள்ளே கலந்த உறவா மருந்து. ஞான
- ஆணவம் தீர்க்கு மருந்து - பர
- மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
- மாணவ வண்ண மருந்து - என்னை
- வலிய அழைத்து வளர்க்கு மருந்து. ஞான
- அற்புத ஜோதி மருந்து - எல்லாம்
- ஆகியன் றாகி அமர்ந்த மருந்து
- தற்பதம் தந்த மருந்து - எங்கும்
- தானேதா னாகித் தனித்த மருந்து. ஞான
- ஆறாறுக் கப்பால் மருந்து - அதற்
- கப்புறத் தீராறுக் கப்பால் மருந்து
- ஈறாதி இல்லா மருந்து - என்னை
- எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து. ஞான
- ஆரணத் தோங்கு மருந்து - அருள்
- ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
- காரணம் காட்டு மருந்து - எல்லாம்
- கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. ஞான
- சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
- செய்திட வல்ல சிதம்பர ஜோதி
- அத்துவி தானந்த ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. சிவசிவ
- ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
- ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
- ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
- உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
- கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
- வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
- வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ
- என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
- இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
- அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
- ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி. சிவசிவ
- நித்த பரானந்த ஜோதி - சுத்த
- நிரதிச யானந்த நித்திய ஜோதி
- அத்துவி தானந்த ஜோதி - எல்லா
- ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. சிவசிவ
- தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
- தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
- நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
- நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. சிவசிவ
- அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
- இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
- கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ
- சுத்த சிவமய ஜோதி - என்னை
- ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
- சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
- தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ
- சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
- சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
- செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
- அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
- தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
- பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
- திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஆரண வீதிக் கடையும் - சுத்த
- ஆகம வீதிகள் அந்தக் கடையும்
- சேர நடுக்கடை பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நீடு சிவாகமங் கோடி - அருள்
- நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
- எல்லா உலகும் இயம்புதல் சும்மா
- செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
- உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
- செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
- எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
- திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
- ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
- ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
- தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
- ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
- ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
- ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
- கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
- தாபமும் சோபமும் தான்தானே சென்றது
- தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
- ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
- ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
- டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
- ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
- ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
- காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
- காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- ஆடிய பாதமன் றாடிய பாதம்
- ஆடிய பாதநின் றாடிய பாதம்.
- பாடிய வேதங்கள் தேடிய பாதம்
- பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
- நாடிய மாதவர்294 நேடிய பாதம்
- நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய
- தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
- தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
- வாரா வரவாகி வந்தபொற் பாதம்
- வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய
- ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
- அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
- நாரா யணன்விழி நண்ணிய பாதம்
- நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய
- நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
- நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
- வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
- மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய
- எச்சம யத்தும் இலங்கிய பாதம்
- எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
- ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய
- தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
- தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
- மூவரும் காணா முழுமுதற் பாதம்
- முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
- துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
- சுகமய மாகிய சுந்தரப் பாதம்
- பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
- பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
- சாகா வரந்தந்த தாரகப் பாதம்
- சச்சிதா னந்த சதோதய பாதம்
- தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
- திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய
- ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
- ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
- தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
- துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய
- ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
- அபயர்295 எல்லார்க்கும் அமுதான பாதம்
- கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
- கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய
- ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
- அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
- சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
- சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய
- தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
- தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
- ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
- உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
- எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
- இறவா நிலையில் இருத்திய பாதம்
- புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
- பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய
- ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
- ஆதி அனாதியும் ஆகிய பாதம்
- மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
- மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
- அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
- அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
- பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
- பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
- நாரண னாதியர் நாடரும் பாதம்
- நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
- ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
- ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய
- ஆடிய பாதமன் றாடிய பாதம்
- ஆடிய பாதநின் றாடிய பாதம்.
- 294. மாதவன் - ஆ. பா. பாதிப்பு.
- 295. ஐயர் - ச. மு. க. பதிப்பு.
- அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
- தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்
- செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
- நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்
- 296. பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
- 297. முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
- அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
- ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
- என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
- புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
- பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
- மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
- வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
- வீதிஉண் டாச்சுத டி - அம்மா
- வீதிஉண் டாச்சுத டி. ஆணி
- வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
- மேடை இருந்தத டி - அம்மா
- மேடை இருந்தத டி. ஆணி
- மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
- கூடம் இருந்தத டி - அம்மா
- கூடம் இருந்தத டி. ஆணி
- கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
- மாடம் இருந்தத டி - அம்மா
- மாடம் இருந்தத டி. ஆணி
- ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
- என்னென்று சொல்வன டி - அம்மா
- என்னென்று சொல்வன டி. ஆணி
- ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
- சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
- சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
- பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
- பவளம தாச்சுத டி - அம்மா
- பவளம தாச்சுத டி. ஆணி
- மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
- மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
- மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி
- பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
- பேர்மணி ஆச்சுத டி - அம்மா
- பேர்மணி ஆச்சுத டி. ஆணி
- வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
- வெண்மணி ஆச்சுத டி - அம்மா
- வெண்மணி ஆச்சுத டி. ஆணி
- புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
- பொன்மணி ஆச்சுத டி - அம்மா
- பொன்மணி ஆச்சுத டி. ஆணி
- பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
- படிகம தாச்சுத டி - அம்மா
- படிகம தாச்சுத டி. ஆணி
- ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
- இசைந்தபொற் றம்பம டி - அம்மா
- இசைந்தபொற் றம்பம டி. ஆணி
- பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
- புதுமைஎன் சொல்வன டி - அம்மா
- புதுமைஎன் சொல்வன டி. ஆணி
- ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
- என்னள வல்லவ டி - அம்மா
- என்னள வல்லவ டி. ஆணி
- ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
- ஆகவந் தார்கள டி - அம்மா
- ஆகவந் தார்கள டி. ஆணி
- வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
- வல்லபம் பெற்றன டி - அம்மா
- வல்லபம் பெற்றன டி. ஆணி
- வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
- மணிமுடி கண்டேன டி - அம்மா
- மணிமுடி கண்டேன டி. ஆணி
- மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
- மற்றது கண்டேன டி - அம்மா
- மற்றது கண்டேன டி. ஆணி
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
- கூசாது சென்றன டி - அம்மா
- கூசாது சென்றன டி. ஆணி
- கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
- கோடிபல் கோடிய டி - அம்மா
- கோடிபல் கோடிய டி. ஆணி
- ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
- ஐவண்ணம் ஆகும டி - அம்மா
- ஐவண்ணம் ஆகும டி. ஆணி
- அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
- அப்பாலே சென்றன டி - அம்மா
- அப்பாலே சென்றன டி. ஆணி
- அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
- ஐவர் இருந்தார டி - அம்மா
- ஐவர் இருந்தார டி. ஆணி
- மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
- மணிவாயில் உற்றேன டி - அம்மா
- மணிவாயில் உற்றேன டி. ஆணி
- எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
- இருவர் இருந்தார டி - அம்மா
- இருவர் இருந்தார டி. ஆணி
- அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
- அன்பொடு கண்டேன டி - அம்மா
- அன்பொடு கண்டேன டி. ஆணி
- அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
- அம்மை இருந்தாள டி - அம்மா
- அம்மை இருந்தாள டி. ஆணி
- அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
- அமுதமும் உண்டேன டி - அம்மா
- அமுதமும் உண்டேன டி. ஆணி
- தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
- சந்நிதி கண்டேன டி - அம்மா
- சந்நிதி கண்டேன டி. ஆணி
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
- மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
- மயில்குயில் ஆச்சுத டி.
- சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
- நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
- நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
- எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
- எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
- ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
- அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
- தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
- தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.
- பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
- புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
- மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
- மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.
- ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
- நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
- ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
- அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.
- தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
- சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
- ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
- ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
- கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
- கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
- ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
- ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
- ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
- ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
- எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
- மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
- வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
- மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
- அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம்
- அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம்
- வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம்
- வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்.
- அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
- அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
- மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
- மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
- அம்பலத் தரசே அருமருந் தே
- ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
- ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
- அற்புதத் தேனே மலைமா னே.
- அரிபிர மாதியர் தேடிய நாதா
- அரகர சிவசிவ ஆடிய பாதா.
- ஐயர் திருச்சபை ஆடக மே
- ஆடுதல் ஆனந்த நாடக மே.
- ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
- மானந்த போனகம் கொண்டோ மே.
- சங்கர மும்சிவ மாதே வா
- எங்களை ஆட்கொள வாவா வா.
- அருட்பொது நடமிடு தாண்டவ னே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ னே.
- நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
- நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
- இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
- என்குரு மேல்ஆணை இட்டே னே.
- இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
- என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
- அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
- ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
- ஆதாம்பர ஆடக அதிசய
- பாதாம்புஜ நாடக ஜயஜய.
- 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
- 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
- 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
- ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
- சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
- அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
- துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.
- அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
- சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
- மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
- வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
- எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
- அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.
- நனந்தலைவீதி நடந்திடுசாதி நலம்கொளும்ஆதி நடம்புரிநீதி
- தினங்கலைஓதி சிவம்தரும்ஓதி சிதம்பரஜோதி சிதம்பரஜோதி.
- உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
- அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- 343. வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
- 344. உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.
- நீடிய வேதம் தேடிய பாதம்
- நேடிய கீதம் பாடிய பாதம்
- ஆடிய போதம் கூடிய பாதம்
- ஆடிய பாதம் ஆடிய பாதம்.
- சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
- தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
- சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
- தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
- ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
- ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
- ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
- ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
- எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
- எண்ணிய வாறே நண்ணிய பேறே
- புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
- புண்ணிய வானே புண்ணிய வானே.
- தொத்திய சீரே பொத்திய பேரே
- துத்திய பாவே பத்திய நாவே
- சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
- சத்திய வானே சத்திய வானே.
- ஆரண ஞாபகமே பூரண சோபனமே
- ஆதிஅ னாதியனே வேதிய னாதியனே
- நாரண னாதரமே காரண மேபரமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆகம போதகமே யாதர வேதகமே
- ஆமய மோசனமே ஆரமு தாகரமே
- நாக நடோதயமே நாத புரோதயமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆடக நீடொளியே நேடக நாடளியே
- ஆதி புராதனனே வேதி பராபரனே
- நாடக நாயகனே நானவ னானவனே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆரிய னேசிவனே ஆரண னேபவனே
- ஆலய னேஅரனே ஆதர னேசுரனே
- நாரிய னேவரனே நாடிய னேபரனே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
- ஆரணி பாதியனே ஆதர வாதியனே
- நாத விபூதியனே நாம வனாதியனே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆடிய நாடகனே ஆலமர் ஆதியனே
- ஆகம மேலவனே ஆரண நாலவனே
- நாடிய காரணனே நீடிய பூரணனே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
- கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
- ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
- இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
- பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
- பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
- பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
- பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
- தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
- இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
- இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
- மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
- மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
- தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
- தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
- மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
- குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
- குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
- தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
- சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
- அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
- அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
- படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
- பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
- அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
- ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
- கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
- கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
- ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
- எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
- ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
- என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
- ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
- அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
- கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
- கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
- கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
- ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
- அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
- தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
- தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
- தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
- திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
- இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
- அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
- ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
- இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
- இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
- தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
- தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
- நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
- வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
- வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
- தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
- திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
- தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
- சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- நாடுகின்ற பலகோடி அண்டபகி ரண்ட
- நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
- நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
- நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
- ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
- கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
- பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
- பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின்
- உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும்
- துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில்
- சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே
- பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர்
- பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி
- அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும்
- ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
- பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
- அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
- யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
- பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
- பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
- துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
- சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
- 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
- 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
- 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
- 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
- ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
- மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
- விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
- துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
- சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
- வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
- மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
- ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
- வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.