- உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை
 - செய்வ தறியேன் திகைக்கின்றேன் - சைவநெறி
 - உய்குவித்து143 மெய்யடியார் தம்மை எல்லாம்
 - உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
 - மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து
 - வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
 - கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்
 - கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ
 - செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ
 - திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே.
 - உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
 - வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
 - செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
 - யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
 - உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
 - வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
 - செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
 - மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
 - உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
 - செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
 - பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
 - எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
 - உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
 - ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
 - செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
 - செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
 - மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
 - மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
 - செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
 - திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
 - உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
 - உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
 - செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
 - செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
 - பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
 - பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
 - பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
 - போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
 - உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
 - செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
 - வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
 - செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
 - உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
 - செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
 - பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
 - பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
 - உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்
 - பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
 - எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
 - செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
 - உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
 - பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
 - மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
 - கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
 - உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
 - வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
 - செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
 - அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
 - உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
 - சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
 - நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
 - தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
 - உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
 - மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
 - உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
 - அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 - உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
 - அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 - உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
 - அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 - உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
 - அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 - உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
 - அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 - உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
 - அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 - உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
 - செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
 - உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
 - உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
 - உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
 - இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
 - உய்தர வமுத முதவியென் னுளத்தே
 - செய்தவம் பலித்த திருவளர் மதியே
 - உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
 - வயங்கிய கருணை மழைபொழி மழையே
 - உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
 - உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
 - பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
 - பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
 - நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
 - நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
 - மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
 - மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
 - உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
 - வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
 - நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
 - நாட்டமும் கற்பகோ டியினும்
 - வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
 - வழங்கிடப் பெற்றனன் மரண
 - பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
 - பண்ணிய தவம்பலித் ததுவே.
 - உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
 - ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
 - செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
 - சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
 - மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
 - மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
 - பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
 - பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
 - உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
 - உய்யவல் லேன்இங்கு வாரீர்
 - செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
 - உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
 - உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
 - செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
 - சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
 - உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
 - ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
 - செயிரறு பதியே சிவநிறை நிதியே
 - திருநட மணியே திருநட மணியே.