- குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
 - ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்
 - குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
 - குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை
 - குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
 - சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
 - பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
 - கைவிட்டால் என்செய்கேன் காண்.
 - குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
 - வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
 - பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
 - திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
 - குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
 - னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
 - வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
 - ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
 - குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
 - குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
 - மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
 - வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
 - கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
 - கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
 - உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
 - ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
 - குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
 - கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
 - மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
 - வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
 - பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
 - பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
 - எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
 - இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
 - குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
 - குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
 - உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
 - ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
 - களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
 - கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
 - வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
 - வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
 - குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
 - நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
 - உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
 - முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
 - குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
 - செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால்
 - விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம்
 - தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
 - குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
 - கொடியன் என்பது குறிப்பல உமது
 - பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
 - பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
 - உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
 - உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
 - நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
 - ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
 - குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
 - சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
 - நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
 - ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
 - குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
 - உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
 - நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
 - கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
 - குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
 - படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
 - பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
 - கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
 - குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோன் வழியில் சென்றிடவா
 - யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
 - வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
 - கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
 - குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
 - நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
 - பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
 - என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே.
 - குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்
 - கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமா ரே.
 - குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
 - கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே.
 - குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
 - குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமா ரே.
 - குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
 - குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
 - குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
 - குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
 - சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
 - சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
 - பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
 - பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
 - இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
 - என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
 - குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
 - குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
 - என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
 - எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
 - பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
 - பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
 - அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
 - ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
 - கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
 - செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
 - நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
 - வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
 - குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
 - வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
 - தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
 - கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
 - குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் குரைகழல் கருதாத
 - துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
 - இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
 - நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.
 - குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
 - இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
 - என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
 - நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.
 - குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
 - வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
 - முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
 - நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.
 - குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
 - நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
 - என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
 - இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
 - குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
 - கோதையர் பால்விரைந் தோடிச்
 - சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
 - திருவடிக் காக்கும்நாள் உளதோ
 - என்தனி உயிரே என்னுடைப் பொருளே
 - என்உளத் திணிதெழும் இன்பே
 - மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
 - வந்தமர்ந் தருள்செயும் மணியே.
 - குழகனை அழியாக் குமரனை அட்ட
 - குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
 - அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
 - றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
 - கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
 - காலனை வேலனை மனதில்
 - சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
 - தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
 - குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
 - கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
 - துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
 - தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
 - குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
 - பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா.
 - குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
 - அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 - குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
 - அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
 - குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
 - மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
 - குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
 - கோடிகோ டிகளும்ஆங் காங்கே
 - நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
 - நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
 - விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
 - மெய்யறி வானந்தம் விளங்க
 - அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
 - அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
 - குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
 - குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
 - மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
 - வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
 - நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
 - நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
 - நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
 - நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
 - குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
 - உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
 - தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
 - மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
 - குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
 - பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
 - மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
 - எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
 - குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
 - குணமே கொளும்என் குருவே அபயம்
 - பற்றம் பலமே அலதோர் நெறியும்
 - பதியே அறியேன் அடியேன் அபயம்
 - சுற்றம் பலவும் உனவே எனவோ
 - துணைவே றிலைநின் துணையே அபயம்
 - சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
 - சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
 - குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
 - கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
 - மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
 - மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
 - தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
 - தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
 - அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
 - ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
 - குலத்திலே சமயக் குழியிலே நரகக்
 - குழியிலே குமைந்துவீண் பொழுது
 - நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
 - நிற்கின்றார் நிற்கநான் உவந்து
 - வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
 - மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
 - பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
 - பண்ணிய தவம்பலித் ததுவே.
 - குருநெறிக் கேஎன்னைக் கூட்டிக் கொடுத்தது கூறரிதாம்
 - பெருநெறிக் கேசென்ற பேர்க்குக் கிடைப்பது பேய்உலகக்
 - கருநெறிக் கேற்றவர் காணற் கரியது காட்டுகின்ற
 - திருநெறிக் கேற்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
 - குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
 - கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
 - வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
 - மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
 - பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
 - புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
 - செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
 - சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
 - குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
 - டால்அதுதான் கொலையாம் என்றே
 - வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
 - சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
 - பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
 - சம்மதிக்கும் பேய ரேநீர்
 - எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
 - கஞ்சுவரே இழுதை யீரே.
 - குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
 - மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
 - பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
 - இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
 - குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
 - சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
 - தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
 - இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
 - குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
 - குதித்த314 மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
 - வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
 - விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
 - குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
 - அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்
 - குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
 - கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
 - புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
 - புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
 - அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
 - அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
 - விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
 - மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.