- நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுந்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
- தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
- தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
- தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
- மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
- மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
- மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
- மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
- என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
- என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
- என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
- என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
- எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
- ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
- எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
- ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.
- அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
- எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
- கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
- தொன்றதுநம் முள்ள முறைந்து.
- சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
- சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
- தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங்
- கழிப்பாலை யின்பக் களிப்பே - விழிப்பாலன்
- சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
- பல்லவ னீச்சரத்தெம் பாவனமே - நல்லவர்கள்
- சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
- தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே - ஓவில்
- வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
- வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
- வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
- உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே - பண்பகன்ற
- அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
- சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி
- வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
- தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய
- முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
- பட்டீச் சரத்தெம் பராபரமே - துட்டமயல்
- தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
- கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே - மாணுற்றோர்
- தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
- போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
- நன்குரங் காணு நடையோ ரடைகின்ற
- தென்குரங் காடுதுறைச் செம்மலே - புன்குரம்பை
- தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
- சீரா வடுதுறையெஞ் செல்வமே - பேராக்
- தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
- பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய்
- நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
- தென்கடையூர்60 ஆனந்தத் தேறலே - வன்மையிலாச்
- வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
- ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும்
- எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
- நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தெள்ளாற்றின்
- பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
- அரிசிற் கரைப்புத்தூ61 ரானே - தரிசனத்தெக்
- வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
- தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை
- பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
- இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும்
- மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத்
- தென்கோட்டூர் தேவ சிகாமணியே - தென்கூட்டிப்
- சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
- நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு
- நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
- தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர்
- நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
- உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
- கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர்
- தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே - பண்செழிப்பக்
- தீங்கார் பிறதெய்வத் தீங்குழியில்70 வீழ்ந்தவரைத்
- தாங்கா வரத்துறையில் தாணுவே - பூங்குழலார்
- பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
- முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார்
- நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி
- ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென்
- வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
- ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
- பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
- தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம்
- துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்
- கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி
- வாம்பலன்கொண் டோர்கள் மறந்தும் பெறாக்கொடிய
- சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன்
- எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
- உற்றோ ரையுமுடன்விட் டோடுங்காண் - சற்றேனும்
- தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ்
- சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை - கொண்டஎழு
- சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
- நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை
- ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
- ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
- இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
- இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
- வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை
- மோசஞ் செயநான் முதற்பாதம் - பாசமுளோர்
- ஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில்
- சூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் - ஓதுகின்ற
- மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
- பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற
- ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
- தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்
- உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
- கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென்
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
- நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா
- வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
- ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
- யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
- போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்
- தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
- ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா
- வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்
- சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே
- நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்
- சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி
- சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
- சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்
- உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
- அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்
- மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
- நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்
- நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்
- செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும்
- நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
- தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்
- நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
- செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த
- எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
- திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற
- நித்தம் தெரியா நிலைமே வியநமது
- சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென
- யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்
- தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி
- சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்
- தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்
- எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
- தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்
- சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க
- வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்
- நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்
- கற்றுணை92யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ
- பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
- ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ
- வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்
- அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே
- நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை
- யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்
- அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
- நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்
- குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
- ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்
- ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
- வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ
- அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
- எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே
- மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
- புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 - திண்கட்டும்
- மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
- சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு
- சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம
- சாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்
- தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை
- வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்
- தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
- போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
- கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
- வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று
- நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
- தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக
- பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
- ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்
- பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
- தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்
- பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
- என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்
- என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்
- இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்
- செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
- இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 - மல்லல்பெறத்
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
- திகழ்வாய் மையும்நீ தெளியாய்116 - இகழ்வாரை
- எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
- றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன
- தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்
- வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்
- மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
- கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த
- கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர
- கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல்
- தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
- மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
- நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
- மருவும் குறட்பா மறந்தாய்118 - தெருவில்
- ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
- சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
- றொடுதிங்கள் ஐயைந்தில்120 ஒவ்வொன்றில் அந்தோ
- கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந்
- கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
- ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ
- காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்
- ஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்
- உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
- மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை
- இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ
- சீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர்
- நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
- இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்
- உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
- என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்
- கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
- பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
- வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
- வீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்
- விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
- உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்
- கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
- நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்
- வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
- கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
- ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
- ஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்
- சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
- சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ
- தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்
- கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்
- செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்
- நைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ்
- தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
- போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்
- வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
- செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்
- விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ
- இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த
- சைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான
- தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே
- எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து
- கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று
- மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்
- றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள்
- ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை
- நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்
- அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
- அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே
- தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
- செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்
- தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
- யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற
- உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
- அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
- நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
- என்தாயே என்தந்தை யே.
- வந்தித்தேன்131 பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
- சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
- சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
- வந்துசிந்திப் பித்தல் மறந்து.
- தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
- நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
- ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
- வண்பொருளும் ஈதல் மறந்து.
- ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
- ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
- அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
- நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
- மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
- மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
- மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
- தலக்கூடல் தாழாத் தலை.
- சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
- கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
- தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
- சும்மா அடைக்கின்ற சோறு.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
- பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
- சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
- தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
- செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
- நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
- அஞ்சினேன் அன்பின்மை யால்.
- தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
- வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
- ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
- பாங்கான செம்பொற் பதம்.
- இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
- அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
- தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
- இவ்வண்ணம் என்றறிகி லேன்.
- துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்
- சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
- காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
- காப்பாய் இஃதென் கருத்து.
- நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
- பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
- வைவமே என்னும் வறியேன் அறியேனென்
- தெய்வமே நின்றன் செயல்.
- என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
- நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
- யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
- போதோ அருள்வாய் புகல்.
- பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
- கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
- கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
- எள்ளுவார் கண்டாய் எனை.
- திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத
- வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில்
- இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம்
- எத்தனையும் போதாமை என்று.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
- கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
- துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
- தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
- கண்ணுடையோய் சிதையா ஞானப்
- பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
- மலர்வாயோய் பொய்ய னேன்றன்
- மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
- கசிந்துருக்கும் வடிவத் தோயே.
- வித்தாகி முளையாகி விளைவ தாகி
- விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
- கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
- குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
- சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
- சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
- முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
- முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
- வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
- மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
- நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
- நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
- மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
- முதலாகி மனாதீத முத்தி யாகி
- வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
- மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
- தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
- துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
- சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
- சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
- ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
- உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
- ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
- எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
- சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
- அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
- அவையனைத்தும் அணுகாத அசல மாகி
- இகலுறாத் துணையாகித் தனிய தாகி
- எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
- உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
- ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- தத்துவமே தத்துவா தீத மேசிற்
- சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
- சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
- தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
- சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
- தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
- சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
- சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்
- தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
- எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்
- இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
- பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்
- பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக்
- கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்
- கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
- மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
- அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
- அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
- கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
- கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
- எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
- என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
- பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
- பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
- வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
- மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
- ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
- உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
- ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
- அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
- பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
- எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
- எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
- தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
- சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
- தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
- தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்
- வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
- கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்
- கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
- பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்
- பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
- துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ
- இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்
- கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
- எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்
- இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
- பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்
- பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
- இற்றவளைக்144 கேள்விடல்போல் விடுதி யேல்யான்
- என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே.
- பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
- புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
- நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
- நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
- மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
- வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
- கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்
- கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த
- நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
- பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்
- பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
- உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே
- உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
- பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்
- பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
- இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
- அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
- சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
- தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
- ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
- கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
- கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
- மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
- தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
- சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
- துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
- குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
- இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
- வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
- தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
- ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
- நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
- ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
- போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
- கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
- நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
- நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
- தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
- நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
- சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
- தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
- மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ
- வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
- இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே.
- மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
- பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
- எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
- விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.
- பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்145முடித்த
- நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
- மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
- குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.
- நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
- திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
- விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
- இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.
- விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
- மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
- குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
- பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
- முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
- அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
- கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
- என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
- உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
- தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
- பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
- அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
- சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
- கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
- அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
- நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
- கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
- திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
- ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
- உருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.
- பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
- உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
- பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
- மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.
- பொன்கின்று151 பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம்
- நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத்
- தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார்
- என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே.
- வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
- பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
- சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
- தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
- பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
- கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
- மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
- குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
- கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
- துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
- தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.
- பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
- ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
- வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
- அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.
- வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
- தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
- சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
- இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.
- மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
- கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
- மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
- நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
- முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
- பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
- நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
- பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
- வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
- இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
- உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
- களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
- அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
- சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
- பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
- வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.
- நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
- வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
- தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
- மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.
- நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
- பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
- தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
- இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.
- கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
- நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
- கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
- கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.
- தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான்
- இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ
- அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய்
- வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே.
- ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
- தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
- வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
- தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
- குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
- வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
- பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
- திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
- பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
- விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
- கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
- திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே.
- அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர்
- கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம்
- இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத்
- தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
- சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
- தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
- நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
- கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
- பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
- ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.
- பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
- கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
- மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
- தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே.
- தெண்ர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
- கண்ர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
- புண்ர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
- மண்ர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே.
- மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
- பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
- துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
- குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே.
- வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோய்வன்தொண்டர் விரும்புறச்செங்
- கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார்
- புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க
- வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே.
- கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
- ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
- சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
- வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
- அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
- படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
- குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
- வேல்கொண்ட கையுமுந் நு‘ல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
- கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
- மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
- மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.
- விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
- கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
- தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
- மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
- பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
- திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
- கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
- மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.
- தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
- அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
- உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
- சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
- அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச்
- சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா
- திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங்
- கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே.
- இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்
- கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
- புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
- துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.
- சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
- தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
- தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
- கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.
- மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
- காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
- போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
- பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
- தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
- பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
- கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.
- மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
- சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
- கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
- விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.
- உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
- விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
- தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
- கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே.
- களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
- றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
- வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
- இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
- என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
- அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
- தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.
- களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
- வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
- மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
- உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
- என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
- என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
- என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
- என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
- மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
- துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
- கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
- பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
- கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
- கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
- அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
- இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே.
- இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
- கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
- கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
- வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
- பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
- எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
- கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
- நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
- தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
- அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
- விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
- புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
- திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
- சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
- எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
- மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
- கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
- தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
- நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.
- அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
- குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
- பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
- மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
- பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
- அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
- தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
- மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
- உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
- பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
- அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
- மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
- வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
- தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
- மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
- தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
- வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
- எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
- மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
- பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
- முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
- கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
- மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
- தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
- பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
- மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
- ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
- சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
- நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
- வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
- முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
- கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
- வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
- துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
- இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
- மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
- தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
- இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
- மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
- குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
- பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
- மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
- இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
- கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
- வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
- செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
- கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
- வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
- சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
- சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
- மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
- கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
- தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
- வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
- தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
- தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
- வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
- என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
- முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
- ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
- நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
- நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
- தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
- மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
- என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
- மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
- மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
- ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
- திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
- கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
- வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
- பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
- றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
- மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
- யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
- னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
- கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
- னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
- னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
- செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
- வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
- பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
- னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
- வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
- னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
- லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
- னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
- ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
- லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
- னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
- ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
- விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
- திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
- குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
- கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
- மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
- கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
- மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
- பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
- நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
- தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
- குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
- விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
- னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
- மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
- திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
- தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
- வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
- றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
- யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
- வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
- யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
- ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
- குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
- களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
- திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
- தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
- யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
- நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
- ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
- தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
- செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
- வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
- மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
- னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
- னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
- யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
- மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
- வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே
- யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
- வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
- தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென
- வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரீர் மனவசிதா னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
- பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
- மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுள்ள வன்மையெலா
- மெற்றி லுணர்தி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
- னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
- யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே
- னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே
- னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி
- யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
- னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
- யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான
- வொளி நா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
- களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே
- யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
- ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
- யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
- யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
- யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
- யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
- மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
- யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக்
- கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன்
- மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
- திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
- மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
- யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
- யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா
- லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே
- னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
- மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணைவீர்
- மலையா ளுமது மனையென்றேன் மருவின் மலையா ளல்லளென்றா
- ரலையாண் மற்றை யவளென்றே னறியி னலையா ளல்லளுனை
- யிலையா மணைவ தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
- னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
- கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
- லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
- ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
- சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
- யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
- நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
- தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
- மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங்
- கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன்
- மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை
- யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்
- பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
- குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
- வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
- னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
- யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
- கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
- மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
- யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே
- னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின்
- னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்
- தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயல்சூ ழொற்றி யுடையீரென் புடையென் குறித்தோ போந்ததென்றேன்
- கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் காண லிரப்போ ரெதற்கென்றார்
- மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் மறையா தெதிர்வைத் திலையென்ற
- லியல்சூ ழறமன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
- குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
- லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
- கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
- வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
- செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
- ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
- கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
- பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
- தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று
- தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்
- பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
- யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ்
- வருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
- தருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற
- னிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- காவிக் களங்கொள் கனியேயென் கண்ணுண் மணியே யணியேயென்
- னாவித் துணையே திருவொற்றி யரசே யடைந்த தென்னென்றேன்
- பூவிற் பொலியுங் குழலாய்நீ பொன்னி னுயர்ந்தா யெனக்கேட்டுன்
- னீவைக் கருதி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
- கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
- பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
- மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே
- னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன்
- மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு
- மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
- னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
- நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
- யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் தேவர் தமைநா னீரிருத்த
- லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே யேழூர் நாலூ ரென்றார்பின்
- னவ்வூர்த் தொகையி னிருத்தலரி தாமென் றேன்மற் றதிலொவ்வூ
- ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின்
- குணங்கொண் மொழிகேட் டோரளவு குறைந்த குயிலாம் பதியென்றா
- ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது
- மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
- சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
- றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
- வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற்
- றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
- னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா
- லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
- இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
- அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
- அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
- விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
- விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
- நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தலங்கள் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
- தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
- வலங்கொ ளும்படி என்னையும் கூட
- வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
- இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
- என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
- நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
- திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
- உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
- கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
- செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
- வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
- வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
- கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
- போற்றி நீறிடாப் புலையரைக் கண்டால்
- போக போகநீர் புலமிழந் தவமே
- நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
- நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க
- சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்
- தமனி யப்பெரும் தனுஎடுத் தெயிலைக்
- காற்றி நின்றநம் கண்நுதற் கரும்பைக்
- கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
- தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
- சீறு பாம்புகண் டெனஒளித் தேக
- சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
- சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
- செய்ப வன்செய லும்அவை உடனே
- செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
- உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
- ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
- அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
- அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
- தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
- சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
- இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
- இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
- மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
- வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
- நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
- நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
- கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
- கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
- மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
- மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
- அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
- அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
- கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
- கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
- மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
- வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
- இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
- இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
- தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- காயம் என்பதா காயம்என் றறியேன்
- கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
- சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
- தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
- தூய நின்அடி யவருடன் கூடித்
- தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
- தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
- புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
- சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
- சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
- கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
- குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
- தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
- கடையனேன் விடையமே உடையேன்
- இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
- தெய்வமே தெய்வநா யகமே
- உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
- ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
- தீயனேன் பேயனேன் சிறியேன்
- எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
- இடையிடர்ப் பசியசெம் பொன்னே
- செவ்வண மணியே திகழ்குணக் கடலே
- திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
- ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
- தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
- ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
- திரைப டாதசெ ழுங்கட லேசற்றும்
- உரைப டாமல்ஒ ளிசெய்பொன் னேபுகழ்
- வரைப டாதுவ ளர்வல்லி கேசநீ
- தரைப டாக்கந்தை சாத்திய தென்கொலோ.
- சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
- எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
- தந்தை யேவலி தாயத்த லைவநீ
- கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
- தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
- மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
- சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.
- உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
- வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
- மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
- கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
- விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
- தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.
- நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
- வீணன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே கடிமதில் ஒற்றியூர்க் கரசே
- பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த புண்ணியப் புனிதவா ரிதியே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- இன்றுவந் தெனைநீ அடிமைகொள் ளாயேல் எவ்வுல கத்தரும் தூற்ற
- நன்றுநின் றன்மேல் பழிவரும் என்மேல் பழியிலை நவின்றனன் ஐயா
- அன்றுவந் தொருசேய்க் கருள்புரிந் தாண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே
- நின்றுசிற் சபைக்குள் நடம்செயும் கருணா நிலயமே நின்மலச் சுடரே.
- உடைமைவைத் தெனக்கின் றருள்செயா விடினும் ஒப்பிலாய் நின்னடிக் கெனையே
- அடைமைவைத் தேனும் நின்அருட் பொருள்இங் களித்திட வேண்டும் இன்றெவைக்கும்
- கடைமையேன் வேறோர் தேவரை அறியேன் கடவுள்நின் திருவடி அறிக
- படைமைசேர் கரத்தெம் பசுபதி நீயே என்உளம் பார்த்துநின் றாயே.
- உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
- மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
- நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
- அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.
- நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
- புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
- சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
- கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.
- என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி
- அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே
- உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே
- நன்னர்செய் கின்றோய் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
- அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
- சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
- பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல் பாலனொ டும்தான் அமர்கின்ற
- நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கொன் றருளானேல்
- சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
- பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
- தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
- மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
- பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
- உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
- என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
- இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
- முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
- மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
- அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
- தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
- உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
- ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
- இன்ன தென்றறி யாமல இருளில்
- இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
- அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
- வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
- இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
- எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்
- உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
- றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
- அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
- எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
- வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
- மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
- ஓங்கி வாழ்ஒற்றி யூர்இடை அரவும்
- ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
- தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
- போக்கி நின்றனை போனது போக
- வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
- வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
- திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
- செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
- தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஒற்றி மேவிய உத்தம னேமணித்
- தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
- நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
- பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
- மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
- ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
- ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
- கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
- உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
- செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
- பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
- எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
- போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
- சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
- தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
- ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
- தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
- பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
- என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
- நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
- ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
- மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
- கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்
- மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்
- என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே
- என்அருமை அப்பாவே என்று.
- பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
- எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
- விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
- புடையானை நெஞ்சமே போற்று.
- போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
- ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
- அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
- செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
- தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
- விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக்
- கண்ணானை மாலயனும் காணப் படாதானை
- எண்ணாரை எண்ணாதே என்று.
- பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
- தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
- உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப்
- பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
- திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
- புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
- ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
- வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
- ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
- தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
- ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
- பாதம் பிடிக்கும் பயன்.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
- ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
- தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
- தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- மெய்மையே அறிகிலா வீண னேன்இவன்
- உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக்
- கைமையே அனையர்தம் கடையில் செல்லவும்
- பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ.
- ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
- அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
- தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
- செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
- மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
- முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
- ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
- அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
- தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
- சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
- கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
- கண்ணுத லானைஎம் கண்ணக லானை
- எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
- கருணாநி தியைக்க றைமிடற் றானை
- ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
- ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
- நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
- நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
- எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- கரிய மாலன்று கரியமா வாகிக்
- கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
- பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
- பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
- உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
- உம்பர் நாயகர் தம்புயம் புனைய
- வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
- கருதி வேண்டிய தியாதது கேண்மோ
- சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
- சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
- அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
- அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
- வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
- வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
- சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
- ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
- ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
- நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
- நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
- ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
- சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
- வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
- நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
- நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
- ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
- கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
- தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
- வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
- இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
- துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
- பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
- இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
- எரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
- விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.
- செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
- உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
- நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
- வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
- தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
- பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
- கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
- வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- கான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்€தையே விரும்பும்
- நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
- சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
- மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்€னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.
- மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
- நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
- படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
- வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
- குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
- பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
- வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
- பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
- எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
- தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
- எற்றுக் கடியர் நின்றதுநின் இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
- மற்றிக் கொடியேன் அஃதின்றி மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
- புற்றுக் குழன்றேன் என்னேஎன் புந்தி எவர்க்குப் புகல்வேனே
- கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றிக் கண்ணார்ந் தோங்கும் கற்பகமே.
- அருள்வதுன் இயற்கை உலகெலாம் அறியும் ஐயவோ நான்அதை அறிந்தும்
- மருள்வதென் இயற்கை என்செய்வேன் இதனை மனங்கொளா தருள்அரு ளாயேல்
- தெருள்வதொன் றின்றி மங்கையர் கொங்கைத் திடர்மலைச் சிகரத்தில் ஏறி
- உருள்வதும் அல்குல் படுகுழி விழுந்தங் குலைவதும் அன்றிஒன் றுண்டோ.
- அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
- சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
- ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
- தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
- சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
- மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
- உய்வைத்த உத்தமனே ஒற்றியப்பா உன்னுடைய
- தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
- கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
- துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
- உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
- செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
- எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
- உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றியப்பா உன்வடிவம்
- இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
- இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
- துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
- உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
- தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
- பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
- உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
- தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
- சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
- தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
- பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
- பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
- வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
- வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
- புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன்
- ஐய நீர்அறி யாததும் அன்றே
- கழுது துன்றிய காட்டகத் தாடும்
- கதியி லீர்எனக் கழறினன் அல்லால்
- பழுது பேசின தொன்றிலை ஒற்றிப்
- பதியில் வாழ்படம் பக்கநா யகரே
- பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
- வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ
- இன்மை யாளர்போல் வலியவந் திடினும்
- ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால்
- தன்மை அன்றது தருமமும் அன்றால்
- தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே
- பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- அன்னைபோன் றடியர்க் கருத்தியில் அருத்தும் அப்பநின் அடியினை காணா
- தென்னையோ மலம்உண் டுழன்றிடும் பன்றி என்னஉண் டுற்றனன் அதனால்
- புன்னைஅம் சடைஎம் புண்ணிய ஒளியே பூதநா யகஎன்றன் உடலம்
- தன்னைநீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ
- இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன்
- பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்
- பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ
- கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்
- காள கண்டனே கங்கைநா யகனே
- திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத்
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
- எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
- தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
- செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
- போது போகின்ற தன்றிஎன் மாயப்
- புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
- சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இன்று நின்றவர் நாளைநின் றிலரே
- என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
- சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிவனே
- நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
- நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
- பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
- உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
- செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
- பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
- பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
- மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம்
- செல்லு கின்றன ஐயவோ சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
- தூர நின்றனை ஈரமில் லார்போல்
- புல்லு கின்றசீர் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
- றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில்
- தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக்
- கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே
- பூறு வங்கொளும் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
- அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
- தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஒல்லை இங்குவா என்றருள் புரியா
- தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
- புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
- நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
- சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
- இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
- போல என்றுரை யாஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
- சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
- சித்தம் என்னள வன்றது சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
- நித்த னேஅது நீஅறி யாயோ
- புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- தத்து மத்திடைத் தயிரென வினையால்
- தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே
- செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
- துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன்
- புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார்
- வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ
- உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன்
- எனையலா துனக்கிங் காளிலை யோஉண்டென்னினும் ஏன்றுகொண் டருளே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
- பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
- மற்று நோக்கிய வல்வினை அதனால்
- வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
- அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
- அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
- உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- யாதும் உன்செய லாம்என அறிந்தும்
- ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
- தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
- தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
- கோது செய்மலக் கோட்டையைக் காவல்
- கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்துல குயிர்தொறும் ஒளித்த
- இறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் என்னினும் ஏழையேன் தனக்கு
- நிறைதரும் நினது திருவருள் அளிக்க நினைத்தலே நின்கடன் கண்டாய்
- கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
- யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
- காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- ஓது மாமறை உபநிட தத்தின்
- உச்சி மேவிய வச்சிர மணியே
- தீது நீக்கிய ஒற்றியந் தேனே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான்
- மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே
- ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம்
- உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
- வேலை ஒன்றல மிகப்பல எனினும்
- வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
- சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
- புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
- பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
- பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
- ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
- என்று கொள்விரேல் எனக்கது சாலும்
- சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன்
- உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர்
- செப்பி டாமுனம் தலையினால் நடந்து
- செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள்
- தப்பி டாததில் தப்பிருந் தென்னைத்
- தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன்
- துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
- வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
- எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
- இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
- தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
- தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
- நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
- அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
- நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
- எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
- இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை
- எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்
- மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்
- வழிம றித்ததை மயக்குகின் றதுகாண்
- குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்
- குறைத்தும் அங்கது குறைகில தந்தோ
- வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
- காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
- சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
- துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
- அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
- அருட்கணீர்எனை ஆளலும் தகுங்காண்
- மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
- பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
- என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
- மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
- புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
- திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
- அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
- கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
- தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
- சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
- மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
- மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
- இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
- கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
- அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
- ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
- இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
- எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
- வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
- மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
- அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
- மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
- அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
- தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
- எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
- தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
- கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
- வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.
- பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
- மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
- நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
- மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
- கண்ணார் நுதலோய் பெருங்கருணைக் கடலோய் கங்கை மதிச்சடையோய்
- பெண்ணார் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும்
- அண்ணா எனநின் றேத்தெடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடிமலரை
- எண்ணா துழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.
- வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
- நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
- விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
- எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே.
- மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
- இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
- தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
- அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
- கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
- நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
- எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
- ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
- அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
- களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
- வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
- மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால்
- ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு
- நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன்
- நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.
- மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம்
- சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே
- வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே
- நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே.
- நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால்
- ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன்
- ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த
- தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
- நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
- சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
- விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
- மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
- மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
- நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
- கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
- வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
- குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
- சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
- நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
- ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
- துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்
- கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்
- இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே
- பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.
- பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
- இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
- மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
- அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.
- இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
- இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
- சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
- துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
- குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
- கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
- உமைக்கு நல்வரம் உதவிய தேவே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
- கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
- பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
- பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
- உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
- சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
- இட்ட நல்வழி அல்வழி எனவே
- எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
- விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
- வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
- சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
- கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
- எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
- இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
- உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
- உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
- விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
- நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
- நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
- இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
- திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
- செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- நாடுந் தாயினும் நல்லவன் நமது
- நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
- வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
- வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
- பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
- பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
- தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
- வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
- அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
- அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
- பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
- பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
- தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
- வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
- கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
- குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
- ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
- இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
- தேறு கின்றனன் என்செய்கேன் நினது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
- சுயம்பிர காசமே அமுதில்
- கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
- கடவுளே கண்ணுதற் கரும்பே
- குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
- கொடுந்துய ரால்அலைந் தையா
- முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
- மூடன்என் றிகழ்வது முறையோ.
- இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
- ஏன்றுகொள் பவரிலை அந்தோ
- அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
- அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
- புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
- பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
- திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
- செல்வமே சிவபரம் பொருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
- தேவனே தில்லைஅம் பலத்தே
- தற்பர நடஞ்செய் தாணுவே அகில
- சராசர காரணப் பொருளே
- அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
- அலைதரு கின்றனன் எளியேன்
- கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
- களிப்புடன் ஆடுவ தென்றோ.
- கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
- நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
- வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
- ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே.
- அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
- துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
- இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
- செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
- பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
- பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
- பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே.
- உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
- என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
- நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
- முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே.
- ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
- பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
- ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
- கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
- தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன்
- தீய னேன்கொடுந் தீக்குண இயல்பே
- ஏது செய்தன னேனும்என் தன்னை
- ஏன்று கொள்வதெம் இறைவநின் இயல்பே
- ஈது செய்தனை என்னைவிட் டுலகில்
- இடர்கொண் டேங்கென இயம்பிடில் அடியேன்
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
- பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
- துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
- டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
- தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
- மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
- இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
- தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
- உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
- நைவ தற்குந ணுகுவ நோய்களே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
- தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
- மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
- ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
- நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
- வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
- எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
- என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
- உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
- மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
- தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
- கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
- வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
- உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
- கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.
- வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
- எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
- நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
- தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே.
- மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
- பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
- கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
- வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே.
- உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
- பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
- மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
- என்னை நாடிஎ னக்கருள் செய்கவே.
- மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
- பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
- நாட வேறும னையிடை நண்ணிநான்
- வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பற்றுவது பந்தம்அப் பற்றறுதல் வீடிஃது
- பரமவே தார்த்தம்எனவே
- பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும்என்
- பாவிமனம் விடயநடையே
- எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும்
- இறங்குவதும் ஏறுவதும்வீண்
- எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
- யாவினும் சென்றுசென்றே
- சுற்றுவதும் ஆகிஓர் சற்றுமறி வில்லாது
- சுழல்கின்ற தென்செய்குவேன்
- தூயநின் திருவருளின் அன்றிஇவ் வேழைஅச்
- சுழல்மனம்அ டக்கவருமோ
- கற்றுவழு வற்றவர் கருத்தமர் கருத்தனே
- கண்ணுதற் கடவுள்மணியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே
- அடியனேன் மனத்தகத் தெழுந்த
- இருள்கெடல் வேண்டும் போற்றிஎந் தாயே
- ஏழையேன் நின்றனைப் பாடும்
- தெருள்உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே
- சிந்தைநைந் துலகிடை மயங்கும்
- மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே
- மதிநதி வளர்சடை மணியே.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
- நலந்தரல் வேண்டுவன் போற்றி
- ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
- இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
- ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
- ஓதநீ உவந்தருள் போற்றி
- மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
- வள்ளலே போற்றிநின் அருளே.
- மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
- அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
- தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
- திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
- தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
- பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
- துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
- புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே
- அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன்
- எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
- எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
- தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
- வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
- பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
- வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
- உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
- நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.
- எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
- களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
- அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
- தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே.
- வினையே பெருக்கிக் கடைநாயேன் விடயச் செருக்கால் மிகநீண்ட
- பனையே எனநின் றுலர்கின்றேன் பாவி யேனுக் கருளுதியோ
- நினையே நினையாப் பிழைகருதி நெகிழ விடவே நினைதியோ
- அனையே அனையாய் திருக்குறிப்பை அறியேன் ஈதென் றடியேனே.
- அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
- கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
- செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
- பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே.
- அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
- படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
- விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
- கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே.
- என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
- தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
- இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
- நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே.
- நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
- வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
- தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
- முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே.
- செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
- அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
- குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
- முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
- எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
- பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
- கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
- பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
- ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
- இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
- கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
- துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
- மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
- நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
- திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
- தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
- பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
- தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
- அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
- அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
- தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
- மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
- பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
- நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
- கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
- தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
- சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
- சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
- விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
- தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
- தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
- வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
- வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
- தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
- சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
- ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
- அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
- ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
- தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- விழற்கிறைத்து மெலிகின்ற வீண னேன்இவ்
- வியன்உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம்
- அழற்கிறைத்த பஞ்செனவே ஆக்கி நீயே
- ஆட்கொண்டால் தடுப்பவரிங் காரே ஐயா
- கழற்கடிமை எனஉலகம் அறிய ஒன்றும்
- கருதறியாச் சிறுபருவத்தென்னை ஆண்டு
- நிழற்கருணை அளித்தாயே இந்நாள் நீகை
- நெகிழவிட்டால் என்செய்வேன் நிலையி லேனே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
- சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
- ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
- ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
- நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
- துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
- பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- ஆண்டாய் எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
- தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
- வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
- ஆண்டான் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ் சேயிசை வாய்ந்தசிந்து
- பாடக்கற் றாய்இலை பொய்வேடம் கட்டிப் படிமிசைக்கூத்
- தாடக்கற் றாய்இலை அந்தோ பொருள்உனக் கார்தருவார்
- நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம் மானை நினைஇனியே.
- நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
- பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
- வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
- சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.
- வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
- தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
- மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
- ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே.
- காயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால்
- நீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின்
- தாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல்
- வாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.
- எண்சீர்க்20 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
- பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
- வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
- தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
- என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
- சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
- துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
- அன்பர்க் கருள்வோய் அருள்.
- விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
- விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
- நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
- நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
- எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
- இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
- பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
- தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
- கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
- கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
- அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
- அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
- படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
- கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
- பிறைமுடிச் சடைகொண் டோங்கும் பேரருட் குன்றே போற்றி
- சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி.
- செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
- விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
- பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
- புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
- தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
- சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
- என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
- இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே.
- கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
- முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
- வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
- உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
- பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
- மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
- என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
- உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
- நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
- வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
- தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே.
- கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
- மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
- நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
- உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
- அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
- கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
- தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.
- அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
- படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
- திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
- தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே.
- நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
- ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
- தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
- ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
- நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
- பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
- கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே.
- பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
- வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
- நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
- காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே.
- வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
- செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்
- சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
- தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன்.
- தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
- ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
- பாயும் மால்விடை ஏறும் பரமனே
- நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
- வேறு
- இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
- அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
- தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
- பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
- வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
- நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
- அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
- கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே.
- நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
- பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
- ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
- நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
- அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
- பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
- விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.
- கலி விருத்தம்
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
- கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
- அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
- தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
- ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
- அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
- திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
- துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
- திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
- தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.
- தற்பர யோக மருந்து - உப
- சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
- சிற்பர யோக மருந்து - உயர்
- தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. - நல்ல
- சேதப்ப டாத மருந்து - உண்டால்
- தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
- பேதப்ப டாத மருந்து - மலைப்
- பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. - நல்ல
- புண்ணியர்க் கான மருந்து - பரி
- பூரண மாகப் பொருந்து மருந்து
- எண்ணிய வின்ப மருந்து - எம
- தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து. - நல்ல
- பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
- பாராத வர்களைச் சேரா மருந்து
- கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
- கூல மருந்தென்று கொண்ட மருந்து. - நல்ல
- பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
- பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
- மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
- வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. - நல்ல
- அணிமணி கண்ட மருந்து - அருள்
- ஆநந்த சுத்த வகண்ட மருந்து
- பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
- பேசா மருந்தென்று பேசு மருந்து. - நல்ல
- கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
- குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமா ரே.
- ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
- ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
- முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
- மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
- ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
- ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
- ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.
- அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
- ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
- செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
- செங்கை பிடித்தவ ராரே டி
- அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
- தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
- கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட
- கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
- கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
- அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
- ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
- இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
- ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
- பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
- பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்குதெண்ட
- சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
- தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
- பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
- பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட
- வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
- மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
- தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
- தானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட
- ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
- அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
- சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
- தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட
- பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
- பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
- வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
- வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
- பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த
- பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந்
- அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
- திருநட இன்பம்என் றறியாயோ மகளே.
- அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
- திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.
- திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
- மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
- இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
- வெருவிஉட் குழைவாள் விழிகர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே.
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
- இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
- அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
- திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே.
- திருஎலாம்அளிக்கும்தெய்வம்என் கின்றாள் திருச்சிற்றம்பலவன்என்கின்றாள்
- உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
- கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
- மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே.
- மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
- பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
- என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
- துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே.
- திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
- பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
- மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
- குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
- செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
- அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
- அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
- மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
- மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
- இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
- இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
- மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
- தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
- துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
- பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
- பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
- வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
- மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
- தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
- சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
- சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
- சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
- இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
- ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
- துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
- பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
- வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
- நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
- முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை
- வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது
- மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்
- குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
- தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
- என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
- கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்
- இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது
- திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
- குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
- மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண்
- கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக்
- கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
- தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
- இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
- முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
- செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
- எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
- அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- கச்சை யிடுவார் படவரவைக் கண்மூன் றுடையார் வாமத்திற்
- பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
- இச்சை யிடுவா ருண்டியென்றா ருண்டே னென்றே னெனக்கின்று
- பிச்சை யிடுவா யென்றார்நான் பிச்சை யடுவே னென்றேனே.
- விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
- உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
- இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
- கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
- சொல்லா லியன்ற தொடைபுனைவார் தூயா ரொற்றித் தொன்னகரார்
- அல்லா லியன்ற மனத்தார்பா லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
- வல்லா லியன்ற முலையென்றார் வல்லார் நீரென் றேனுன்சொற்
- கல்லா லியன்ற தென்றார்முன் கல்லா லியன்ற தென்றேனே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- செல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
- வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி
- சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது
- அல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே.
- தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
- மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
- துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
- செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- மிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி
- மக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது
- நக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.
- என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
- பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
- தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
- மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
- வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
- கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
- வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
- பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
- வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
- எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
- தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாலே றுடைத்தாங் கொடிஉடையார் வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
- பாலே றணிநீற் றழகர்அவர் பாவி யேனைப் பரிந்திலரே
- கோலே றுண்ட மதன்கரும்பைக் குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
- சேலே றுண்கண் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
- ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
- வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
- செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- நந்திப் பரியார் திருஒற்றி நாதர் அயன்மால் நாடுகினும்
- சந்திப் பரியார் என்அருமைத் தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
- அந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல்சொரியும்
- சிந்திப் புடையேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
- பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
- ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
- தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
- காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
- பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
- சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ
- இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே
- புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
- தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
- தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
- மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
- தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்
- சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே
- மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
- சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உலகம் உடையார் என்னுடைய உள்ளம் உடையார் ஒற்றியினார்
- அலகில் புகழார் என்தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
- கலகம் உடையார் மாதர்எலாம் கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
- திலக முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாலும் அறியான் அயன்அறியான் மறையும் அறியா வானவர்எக்
- காலும் அறியார் ஒற்றிநிற்குங் கள்வர் அவரைக் கண்டிலனே
- கோலும் மகளிர் அலர்ஒன்றோ கோடா கோடி என்பதல்லால்
- சேலுண் விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
- இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே
- சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன்
- சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
- ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
- வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
- தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
- அழுது வணங்கும் அவர்க்குமிக அருள்ஒற் றியினார் அணைந்திலரே
- பொழுது வணங்கும் இருண்மாலைப் பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
- செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
- கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
- தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
- தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
- செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
- செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
- கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
- மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
- தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மலையை வளைத்தார் மால்விடைமேல் வந்தார் வந்தென் வளையினொடு
- கலையை வளைத்தார் ஒற்றியில்என் கணவர் என்னைக் கலந்திலரே
- சிலையை வளைத்தான் மதன்அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
- திலக நுதலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
- உரமன் னியசீர் ஒற்றிநகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
- அரமன் னியவேற் படையன்றோ அம்மா அயலார் அலர்மொழிதான்
- திரமன் னுகிலேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பவள நிறத்தார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
- தவள நிறநீற் றணிஅழகர் தமியேன் தன்னைச் சார்ந்திலரே
- துவளும் இடைதான் இறமுலைகள் துள்ளா நின்ற தென்னளவோ
- திவளும் இழையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வண்டார் கொன்றை வளர்சடையார் மதிக்க எழுந்த வல்விடத்தை
- உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் உடையார் என்பால் உற்றிலரே
- கண்டார் கண்ட படிபேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
- செண்டார் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என்
- கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
- குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார்
- திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
- வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
- கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
- திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
- உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
- செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
- ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார்
- சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
- ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
- வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
- சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
- ஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
- சாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால்
- சீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
- செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
- திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்
- அந்தி நிறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ
- புந்தி இலள்என் றணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
- சிந்தை மகிழக் குறமடவாய் தெரிந்தோர் குறிதான் செப்புவையே.
- தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார்
- ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ
- மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ
- கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே.
- அணியார் அடியார்க் கயன்முதலாம் அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
- பணியார் ஒற்றிப் பதிஉடையார் பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
- தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
- குணியா எழில்சேர் குறமடவாய் குறிதான் ஒன்றும் கூறுவையே.
- பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
- ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
- மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
- சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
- ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர்
- ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம்
- ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன்
- காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவீ றாகிநின்றார்
- நீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக்
- கோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும்
- காலம் அறியேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- சலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார்
- நிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண்
- விலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
- கலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- ஆரா அமுதாய் அன்புடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
- தீரா வினையும் தீர்த்தருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
- பாரார் புகழும் திருஒற்றிப் பரமர் தமது தோள் அணையத்
- தாரார் இன்னும் என்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
- எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை எற்றிவைத்தோர்
- திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திருவாழ் ஒற்றியினார்
- அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் அணைத்தார் அல்லர் எனைமடவார்
- தங்கள் அலரோ தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- நாக அணியார் நக்கர்எனும் நாமம்உடையார் நாரணன்ஓர்
- பாகம் உடையார் மலைமகள்ஓர் பாங்கர் உடையார் பசுபதியார்
- யோகம் உடையார் ஒற்றியுளார் உற்றார் அல்லர் உறுமோக
- தாகம் ஒழியா தென்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
- அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்
- துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை
- எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
- புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
- தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
- ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
- தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
- களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
- ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
- கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
- இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
- வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
- சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
- யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
- சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
- தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
- ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
- பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
- சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
- மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
- வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
- கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
- காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.
- என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
- என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
- அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
- தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
- நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
- நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
- இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
- என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
- காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
- கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
- பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
- போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
- நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
- நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
- ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
- தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
- மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
- விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
- பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
- புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
- துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
- சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
- உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
- இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
- இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
- கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
- ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
- ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
- உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
- அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
- அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
- கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
- தௌவிண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
- தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
- திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
- தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
- வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
- வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
- தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
- செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
- குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
- குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
- அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
- தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
- மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
- வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
- ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
- இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
- என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
- இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
- தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
- சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
- களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
- உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
- உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
- அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
- ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
- கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
- கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
- மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
- மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
- புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
- பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
- நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
- தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
- தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
- கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
- கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
- குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
- அன்றகத்தே அடிவருத் நடந்தென்னை அழைத்திங்
- கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
- துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
- சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
- இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
- தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
- மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
- வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.
- அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
- அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
- வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
- மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
- துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
- தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
- என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
- என்உயிருக் குயிராகி இலங்கிசற் குருவே.
- இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
- மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
- தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
- திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
- அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
- ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
- பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
- ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
- அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
- கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
- ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
- உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
- ஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்
- யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
- பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
- பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
- தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
- சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
- மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
- மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
- சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
- சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
- பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
- பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
- சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
- அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
- அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
- விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
- விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
- செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
- திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
- துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
- உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
- மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
- மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
- ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
- அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
- பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
- நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
- நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
- இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
- இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
- தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
- முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
- அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
- என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
- டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
- வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
- ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
- ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
- அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
- அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
- பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
- பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
- கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
- கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
- கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
- மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
- நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
- அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
- அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
- அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
- அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
- தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
- சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
- மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
- மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
- இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
- எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
- தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
- எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
- தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
- பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
- சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
- சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
- சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
- சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
- மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
- வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
- அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
- அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
- முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
- முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
- சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
- தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
- பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
- பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
- புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
- பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
- உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
- உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
- உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
- கள்ளமனத் தேனிருக்கும் இந்தேடி அடைந்து
- கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
- நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
- நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
- தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
- செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே .
- தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
- தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
- பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
- தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
- என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
- என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
- அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
- கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
- கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
- துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
- உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
- விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
- கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
- இடையின்அது நான்மறுப்பு மறுக்கேல்என் மகனே
- என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
- உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.
- நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
- நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
- ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
- யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
- கறிவிலயேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
- ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
- என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
- தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
- தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
- முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
- முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
- மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
- வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
- பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
- பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
- வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
- வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
- செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
- உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
- முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
- பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
- படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
- சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
- திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
- சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
- தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
- இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
- தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
- தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
- கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
- உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
- இம்மையினோ டம்மையினும் எய்துகின்ற இன்பம்
- எனைத்தொன்றும் வேண்டாத இயற்கைவருந் தருணம்
- எம்மையினும் நிறைசொருப சுத்தசுகா ரம்பம்
- இயற்சொருப சுத்தசுக அனுபவம்என் றிரண்டாய்ச்
- செம்மையிலே விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- உம்மையிலே யான்செய்தவம் யாதெனவும் அறியேன்
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
- அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
- வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
- விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
- பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
- பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
- சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
- சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
- கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
- காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
- ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
- றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
- துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
- துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
- வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
- வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
- ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
- கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
- சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
- சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
- வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
- விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
- பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
- பண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
- அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
- தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
- திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
- கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
- தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
- நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
- தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
- தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
- தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
- தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
- வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
- உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
- ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
- என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
- வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
- வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
- மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
- முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
- மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
- மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
- மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
- மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
- தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
- தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
- அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
- இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
- எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
- உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
- உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
- திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
- தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
- குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
- குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
- தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
- சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
- எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
- இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- கம்மடியா185க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
- உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
- உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
- செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
- வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
- மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
- இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
- இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
- இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
- தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
- சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
- இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
- எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
- அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
- அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
- மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
- வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
- ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
- றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
- தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
- திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
- வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
- பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
- ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
- நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
- வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
- மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
- எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
- எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
- அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
- அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
- இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
- எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
- சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
- தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
- பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
- போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
- வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
- வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
- நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
- நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
- ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
- என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
- பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
- இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
- இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
- மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
- மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
- பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
- புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்
- நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
- தொடுங்கவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்
- துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
- கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
- கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
- இடுங்கிடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
- ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.
- சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
- சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
- செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
- பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
- பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
- பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
- தாட்கொண்டேன் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
- படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்
- படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
- பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே
- பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
- பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
- உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
- திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
- திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
- இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
- இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
- புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
- சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
- தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
- போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
- பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
- பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
- பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
- சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
- கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
- கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
- அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
- அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
- வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
- இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
- சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
- சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
- தான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்
- ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
- அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
- உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
- உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.
- தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
- சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
- வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
- மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
- நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
- நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
- நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
- நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
- கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
- விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
- வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
- இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
- இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
- அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
- யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.
- அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
- இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
- எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
- தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
- உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
- உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
- கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
- கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
- சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
- பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
- மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
- மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
- ஐவகைய கடவுளரும் அந்தனரும் பரவ
- ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் உற்றிலாச் சிறியஓர் பருவத்
- திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்
- விலகுறங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
- திலகநன் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில்
- எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும்
- இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே
- தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
- வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
- மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
- வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
- பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
- பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
- கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
- கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.
- அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
- அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
- தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
- செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
- இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
- இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
- மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
- வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
- தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
- செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
- சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
- தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
- கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
- குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
- தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
- செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
- நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
- சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
- ஏற்றலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
- ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
- நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
- ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
- பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
- ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
- வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
- சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
- சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
- வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
- இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
- பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
- வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
- கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
- பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
- அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
- சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
- தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
- கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
- கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்
- எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
- புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
- மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.
- வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
- நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
- ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
- தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.
- செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
- வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
- அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
- மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
- கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
- என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
- துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
- பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
- தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
- துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
- சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
- மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
- வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
- கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
- களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
- ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
- தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
- தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.
- மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
- செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
- அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
- கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
- தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
- மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
- கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
- பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
- கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
- கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
- தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
- அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே
- மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
- கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
- பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
- தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
- எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
- கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
- செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
- எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
- பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
- செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
- என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
- மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
- தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
- செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
- கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
- குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
- பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
- பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
- பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
- பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
- செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
- களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
- கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
- சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
- தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
- அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
- அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
- றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
- மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
- மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
- தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
- சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
- சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
- மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
- கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
- கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
- மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
- மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
- தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
- வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
- புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
- பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
- எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
- இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
- தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
- கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
- பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
- புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
- எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
- இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
- சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
- கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
- தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
- கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
- பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
- பூரணமே புண்ணியமே புனித வைப்பே
- தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
- சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
- எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
- என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
- நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
- நித்த நின்அருள் நீதி ஆகுமால்
- தந்தை தாய்என வந்து சீர்தரும்
- தலைவ னேதிருத் தணிகை நாதனே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
- கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
- விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
- வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
- வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
- தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
- கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.
- என்னை என்னைஈ தென்றன் மாதவம்
- முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
- பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
- அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.
- அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
- செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
- துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
- தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- செய்வ தன்றவன் சிறிய னேன்றனை
- வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன்
- உய்வ தெவ்வணம் உரைசெய் அத்தனே
- சைவ நாதனே தணிகை மன்னனே.
- வாணு தல்பெரு மாட்டி மாரொடு
- காணு தற்குனைக் காதல் கொண்டனன்
- ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
- மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
- மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
- அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
- பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
- தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.
- குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
- நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
- என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
- இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
- மலர்அடி மனம்உற வழுத்தாப்
- புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
- உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
- சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
- பாததா மரைகளுக் கன்பு
- புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
- திருவுளம் அறிகிலன் தேனே
- சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
- தணிகைவாழ் சரவண பவனே.
- உய்யும் பொருட்டுன் திருப்புகழை உரையேன் அந்தோ உரைக்கடங்காப்
- பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை
- எய்யும் படிவந் தடர்ந்தியமன் இழுத்துப் பறிக்கில் என்னேயான்
- செய்யும் வகைஒன் றறியேனே தென்பால் தணிகைச் செஞ்சுடரே.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
- காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
- மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
- தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
- தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
- பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
- தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
- உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
- சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
- தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
- வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
- செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
- பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
- தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
- சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
- தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
- கனியேநின் சேவடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
- துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
- இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.
- இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
- செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
- எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்பணிகள் இயற்றி டேனோ
- தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
- குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
- நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
- வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
- தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்
- கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
- எள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
- கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
- மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
- மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
- பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
- பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
- விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
- வேல னேஉமை யாள்அருள் பாலனே.
- தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
- சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
- வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
- மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
- ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
- தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
- வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
- எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
- அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
- களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
- தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே.
- வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
- முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
- கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
- சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
- வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
- இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
- பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
- செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
- தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
- கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
- தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
- நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
- நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
- சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
- நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
- வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
- இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கி இழுதென்ன நெஞ்சம் இளகேன்
- மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட் டலங்கல் அணியேன்
- குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ
- நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே.
- திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
- தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
- மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
- மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
- கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
- கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
- இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுத்தாக் கொடிய மரம்அனையேன்
- துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துணைகாணேன்
- செக்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
- முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ முறையேயோ.
- தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
- காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
- மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
- நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
- கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
- சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
- பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
- ஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.
- பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
- கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
- வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
- பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.
- கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
- திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
- விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
- தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.
- குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
- கோதையர் பால்விரைந் தோடிச்
- சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- என்தனி உயிரே என்னுடைப் பொருளே
- என்உளத் திணிதெழும் இன்பே
- மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
- வந்தமர்ந் தருள்செயும் மணியே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
- கடையனேன் முடிமிசை அமர்த்தி
- உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
- உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
- நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
- நல்அருட் சோதியே நவைதீர்
- கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
- பாவியேன் தன்முகம் பார்த்திங்
- கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
- இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
- சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
- தெள்ளிய அமுதமே தேனே
- குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
- முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
- நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
- நீழல்வந் தடையும்நாள் என்றோ
- மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
- மணிமகிழ் கண்ணினுள் மணியே
- கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- பொன்னார் புயனார் புகழும் புகழார்
- புலியின் அதளார் புயம்நாலார்
- தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- என்நா யகனார் என்னுயிர் போல்வார்
- எழின்மா மயிலார் இமையோர்கள்
- தந்நா யகனார் தணிகா சலனார்
- தனிவந் திவண்மால் தந்தாரே.
- குழகனை அழியாக் குமரனை அட்ட
- குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
- அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
- றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
- கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
- காலனை வேலனை மனதில்
- சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
- மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
- சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
- தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.
- மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
- வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
- தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
- சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
- அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
- இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
- மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
- நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
- தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
- இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
- தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
- அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
- மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
- கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
- தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- தண்தணி காந்தள்ஒர்14 சண்பக மலரின் தளர்வெய்தத்
- தெண்டணி நீலம்ஒர்14 செங்குவ ளையினிற் றிகழ்வேன்பால்
- வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
- தொண்டணி வீர்ஒரு சோதிட மேனும் சொல்லீரே.
- வதியும் தணிகையில் வாழ்வுறும் என்கண் மணி அன்னார்
- மதியுந் தழல்கெட மாமயின் மீதிவண் வருவாரேல்
- திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
- நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
- அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
- பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
- சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
- தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
- கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
- குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.
- விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
- கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
- பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
- எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
- திலகம் திகழிடத்துத் தேவே-இலகுதிருப்
- புள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்
- உள்ளிருக்கும் துன்பை ஒழி.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- சிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்
- தெரிதற் கென்னும் திருத்தணி கேசனே
- உந்தைக் கும்வழி இல்லைஎன் றால்இந்த
- உலகில் யாவர் உனைஅன்றி நீர்மொள்ள
- மொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு
- முண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்
- கந்தைக் கும்வழி இல்லை அரகர
- கஞ்சிக் கும்வழி இல்லைஇங் கையனே.
- திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
- திறலோங்கு செல்வம்ஓங்கச்
- செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
- திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
- மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
- வளர்கருணை மயம்ஓங்கிஓர்
- வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
- வடிவாகி ஓங்கிஞான
- உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
- ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
- உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
- உய்கின்ற நாள்எந்தநாள்
- தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
- இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
- திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
- இடுகின்ற திறமும்இறையாம்
- நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
- நினைவிடா நெறியும்அயலார்
- நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
- நெகிழாத திடமும்உலகில்
- சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
- தீங்குசொல் லாததெளிவும்
- திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
- திருவடிக் காளாக்குவாய்
- தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
- பார்முகம் பார்த்திரங்கும்
- பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
- பதியும்நல் நிதியும்உணர்வும்
- சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
- தீமைஒரு சற்றும்அணுகாத்
- திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
- செப்புகின் றோர்அடைவர்காண்
- கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
- þக்‘ழியங் கொடியும்விண்ணோர்
- கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
- கொண்டநின் கோலமறவேன்
- தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
- மதித்திடான் நின் அடிச்சீர்
- மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
- மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
- சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
- சிறுகுகையி னூடுபுகுவான்
- செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
- செய்குன்றில் ஏறிவிழுவான்
- இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
- இறங்குவான் சிறிதும்அந்தோ
- என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
- கேழையேன் என்செய்குவேன்
- தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
- வள்ளல்உன் சேவடிக்கண்
- மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
- வாய்ந்துழலும் எனதுமனது
- பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
- பித்துண்ட வன்குரங்கோ
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
- பேதைவிளை யாடுபந்தோ
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
- காற்றினாற் சுழல்கறங்கோ
- காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
- கர்மவடி வோஅறிகிலேன்
- தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
- பெய்சிறையில் இன்னும்ஒருகால்
- பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
- பெறுந்துயர் மறந்துவிடுமோ
- இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
- இறப்பிக்க எண்ணம்உறுமோ
- எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
- இருந்தவடு எண்ணுறானோ
- கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
- காசுக்கும் மதியேன்எலாம்
- கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
- கலந்திடப் பெற்றுநின்றேன்
- தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
- நிலன்உண்டு பலனும்உண்டு
- நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
- நெறிஉண்டு நிலையும் உண்டு
- ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
- உடைஉண்டு கொடையும்உண்டு
- உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
- உளம்உண்டு வளமும்உண்டு
- தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
- செல்வங்கள் யாவும்உண்டு
- தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
- தியானமுண் டாயில்அரசே
- தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
- ஒல்லைவிட் டிடவுமில்லை
- உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
- உனைஅன்றி வேறும்இல்லை
- இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
- இசைக்கின்ற பேரும்இல்லை
- ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
- றியம்புகின் றோரும்இல்லை
- வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
- மற்றொரு வழக்கும்இல்லை
- வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
- வன்மனத் தவனும்அல்லை
- தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பூவே மணமே சரணம் சரணம்
- பொருளே அருளே சரணம் சரணம்
- கோவே குகனே சரணம் சரணம்
- குருவே திருவே சரணம் சரணம்
- தேவே தெளிவே சரணம் சரணம்
- சிவசண் முகனே சரணம் சரணம்
- காவேர் தருவே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- கோலக் குறமான் கணவா சரணம்
- குலமா மணியே சரணம் சரணம்
- சீலத் தவருக் கருள்வோய்சரணம்
- சிவனார் புதல்வா சரணம் சரணம்
- ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
- நடுவா கியநல் ஒளியே சரணம்
- காலன் தெறுவோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
- ஒன்றே பலவே சரணம் சரணம்
- தெளியும் தெருளே சரணம் சரணம்
- சிவமே தவமே சரணம் சரணம்
- அளியும் கனியே சரணம் சரணம்
- அமுதே அறிவே சரணம் சரணம்
- களியொன் றருள்வோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
- வள்ளி மணாளரே வாரும்
- புள்ளி மயிலோரே வாரும்.
- சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே
- பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.
- மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
- மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
- ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
- ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
- இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
- இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
- என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
- எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
- சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன்
- இதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதான்
- எதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
- அதுவின் றணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் வேளை யருள நின்றதென்றேன்
- சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொல்லுமென்றேன்
- பட்டுண் மருங்கே நீகுழந்தைப் பருவ மதனின் முடித்ததென்றார்
- அட்டுண் டறியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவர் நீரணியும்
- மாலை யாதென் றேனயன்மால் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுத்ததென்றார்
- ஆலு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன்னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவில் லன்றென்றார்
- அண்கார்க் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- அலங்கும் புனற்செய் யொற்றியுளீ ரயன்மா லாதி யாவர்கட்கும்
- இலங்கு மைகாணீரென்றே னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார்
- துலங்கு மதுதா னென்னென்றேன் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன்
- அலங்கற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
- வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
- தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன் றோகாய் நாமே தொண்டரென்றார்
- அண்டர்க் கரியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒற்றி நகரீர் மனவாசி யுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
- பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
- மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுணரும் வகைநான்கும்
- அற்றி டென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
- ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
- ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றேன்
- ஈது நமக்குந் தெரியுமென்றா ரிறையா மோவிங் கிதுவென்றேன்
- ஓது மடியர் மனக்கங்கு லோட்டு மியாமே யுணரென்றார்
- ஆது தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன்
- இருவ ரொருபே ருடையவர்காண் என்றா ரென்னென் றேனென்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றார்
- அருவு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைத்து வாழ்வீர் தனிஞான
- வொளிநா வரைசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
- களிநா வலனை யீரெழுத்தாற் கடலில் வீழ்த்தி னேமென்றார்
- அளிநாண் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றார்
- என்னி லிதுதா னையமென்றே னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
- அன்னி லோதி யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே .
- வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார்
- ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுடனென்றார்
- அயப்பா லிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- திண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
- அண்ணஞ் சுகமே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- ஆரா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வருத்தந் தவரீ ரொற்றியுளீர் மனத்த காத முண்டென்றேன்
- நிருத்தந் தருநம் மடியாரை நினைக்கின் றோரைக் கண்டதுதன்
- றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ் சேருந் தூர மோடுமென்றார்
- அருத்தந் தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நும்பே ரியாதென்றேன்
- இயலா யிட்ட நாமமதற் கிளைய நாம மேயென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கயலா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைய நினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யறியென்றார்
- மின்மேற் சடையீ ரீதெல்லாம் விளையாட் டென்றே னன்றென்றார்
- அன்மேற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றற்றதென்றார்
- அடியார்க் கெளியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
- மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
- ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
- வண்மை தருவீ ரொற்றிநின்று வருவீ ரென்னை மருவீர்நீர்
- உண்மை யுடையீ ரென்றேனா முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
- கண்மை யுடையீ ரென்றேனீ களமை யுடையேம் யாமென்றார்
- தண்மை யருளீ ரென்றேனாந் தகையே யருள்வ தென்றாரே.
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
- சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
- வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
- வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
- இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
- கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
- செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
- திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.
- வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
- மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
- தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
- தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
- ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
- குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
- கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
- காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
- குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
- ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
- அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
- ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
- ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
- சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
- திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.
- அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
- பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
- வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
- வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
- தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
- ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
- ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
- என்னார் உயிரிற் கலந்துகலந் தினிக்கும் கரும்பின் கட்டிதனைப்
- பொன்னார் வேணிக் கொழுங்கனியைப் புனிதர்உளத்தில் புகுங் களிப்பைக்
- கன்னார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத்தெளிவைப்
- பன்னா கப்பூண் அணிமலையைப் பழைய மலையிற் கண்டேனே.
- நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
- அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
- சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
- வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
- ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
- ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
- பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
- சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.
- ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
- ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
- ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
- தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
- பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
- பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
- பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
- உள்உணர உள்ளுமதியே
- அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
- தகந்தெளிய அருள்செய்தெருளே
- அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
- அடைந்திடா தென்றஇறையே
- யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
- இருத்திஎன உரைசெய்அரைசே
- என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
- எடுத்ததா யேஎன்உறவே
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே
- நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
- அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
- அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
- இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே
- இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
- தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
- கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
- உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
- கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.
- சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
- ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
- வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
- தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
- தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
- நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
- திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
- வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
- கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
- செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
- புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
- தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
- தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
- மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
- தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
- தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
- மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
- தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
- தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
- நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
- ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
- தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
- புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
- என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
- தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
- கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
- மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
- திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
- ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
- நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
- தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
- பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
- தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
- மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
- சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
- நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
- தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
- ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
- பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
- நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
- ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.
- பற்று நினைத்தெழுமிப் பாவிமனத் தீமையெலாம்
- உற்று நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
- ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
- உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
- உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.
- வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
- அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
- மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
- வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
- மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
- வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
- மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
- நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா.
- சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
- தெய்வ மணியே திருவடிதான் நோவாதா.
- கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
- அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.
- ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
- ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.
- எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
- அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
- தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- நாசமிலா நின்னருளாம் ஞானமருந் துண்ணவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
- ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
- ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
- எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
- வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
- கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
- இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
- அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
- எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
- அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
- எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
- அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி
- பொதுவது சிறப்பது புதியது பழயதென்
- றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
- ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
- காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி
- எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
- கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
- பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
- ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
- சத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்
- கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
- தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
- ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
- அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
- ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
- அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
- தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
- ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
- தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
- ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
- எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
- யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி
- கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
- டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
- எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
- அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
- யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
- உருவமு மருவமு முபயமு மாகிய
- அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
- அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி
- தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள
- அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- பரம்பர வெளியைப் பராபர வெளியில்
- அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
- அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
- அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
- அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
- அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
- அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
- அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
- அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
- தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
- அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
- அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
- மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
- தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
- புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
- சிரமுற நாட்டிய சிவமே சிவமே
- அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
- தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
- சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
- சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
- பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
- செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
- அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
- இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
- அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
- தெருளிது வெனவே செப்பிய சிவமே
- அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
- பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
- உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
- வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
- நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
- தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
- கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
- வையமேல் வைத்த மாசிவ பதியே
- பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
- மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
- மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
- றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
- கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
- குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
- பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
- மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
- பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
- வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
- சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
- நவநிலை காட்டிய ஞானசற் குருவே
- சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
- அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
- அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
- பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
- கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
- வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
- காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
- மாண்பத மளித்து வயங்குசற் குருவே
- செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
- உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
- உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
- பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
- சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
- மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
- எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
- வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
- தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
- உளந்தெளி வித்த வொருமைநற் றாயே
- அருளமு தேமுத லைவகை யமுதமும்
- தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
- கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
- அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே
- துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
- கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
- சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
- சத்தியை யளித்த தயவுடைத் தாயே
- சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
- வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
- சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
- சித்தியை யளித்த தெய்வநற் றாயே
- எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
- கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
- இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
- தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
- தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
- தரியா தணைத்த தயவுடைத் தாயே
- சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
- கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
- எல்லா நன்மையு மென்றனக் களித்த
- எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
- எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
- பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
- தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
- செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
- பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
- சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
- அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
- இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே
- நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
- வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
- குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
- அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
- பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
- கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே
- சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்
- கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
- களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
- கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
- மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
- எனக்குற வாகிய என்னுயி ருறவே
- துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
- தென்னுற வாகிய வென்னுயி ருறவே
- அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
- இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
- எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
- எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே
- எல்லா மினிப்ப வியலுறு சுவையளித்
- தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
- கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
- நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
- நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
- சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
- ஐந்தென வெட்டென வாறென நான்கென
- முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
- சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
- தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
- சிற்சபை நடுவே திருநடம் புரியும்
- அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
- எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
- தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
- இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
- குதவினு முலவா தோங்குநன் னிதியே
- தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
- தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
- நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
- சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே
- உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
- மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
- என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
- என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
- பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
- என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
- துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
- யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
- தண்ணிய வமுதே தந்தென துளத்தே
- புண்ணியம் பலித்த பூரண மதியே
- நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
- வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
- சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
- அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
- அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
- இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
- சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
- சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
- கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
- கருவினால் பகுதியின் கருவால்
- எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
- இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
- விண்முதல் பரையால் பராபர அறிவால்
- விளங்குவ தரிதென உணர்ந்தோர்
- அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
- நண்ணியும் கண்ணுறா தந்தோ
- திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
- திரும்பின எனில்அதன் இயலை
- இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
- இசைத்திடு வேம்என நாவை
- அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
- அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
- பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
- பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
- இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
- எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
- சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
- தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
- நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
- நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
- பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
- பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
- சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
- உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
- செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
- குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
- டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
- புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
- புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
- பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
- பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
- விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
- சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
- ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
- இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
- வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
- வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
- ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
- அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
- அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
- நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
- நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
- மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
- ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
- மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
- நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
- அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
- வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
- தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
- எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
- தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
- வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
- சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
- ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
- தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
- கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதிய கருத்தேன்
- பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
- எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
- வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
- சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைத்த
- பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய்
- எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே.
- உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும்
- கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் குணம்பெரி துடையநல் லோரை
- அடுத்திலேன் அடுத்தற்காசையும் இல்லேன் அவனிமேல் நல்லவன் எனப்பேர்
- எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.
- கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
- நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
- ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
- பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
- செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையும் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
- அச்சமும் அவலமும் உடையேன்
- செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
- திருவுளத் தெனைநினை யாயேல்
- எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
- பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
- தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
- தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
- தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
- தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
- எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
- எய்துகேன் யார்துணை என்பேன்
- திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
- திருவுளம் தெரிந்தது தானே.
- தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
- சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
- தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததெந் தாயே
- ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
- அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
- நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
- நடம்புரி ஞானநா டகனே.
- ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
- நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
- ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
- இந்தநாள் அடியனேன் இங்கே
- ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
- உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
- ஏனென வினவா திருத்தலும் அழகோ
- இறையும்நான் தரிக்கலன் இனியே.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
- விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
- கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
- கரைஎலாம் கடந்தது கண்டாய்
- வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
- வல்லவா அம்பல வாணா
- திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
- திகழ்வித்த சித்தனே சிவனே.
- சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
- தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
- நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
- நன்மையும் நரைதிரை முதலாம்
- துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
- சுகவடி வம்பெறும் பேறும்
- தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
- தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வந்தருள் புரிக விரைந்திது தருணம்
- மாமணி மன்றிலே ஞான
- சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
- சுத்தசன் மார்க்கசற் குருவே
- தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
- தனிஅருட் சோதியை எனது
- சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
- செய்வித் தருள்கசெய் வகையே.
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
- திகழ்தனித் தந்தையே நின்பால்
- சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
- செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
- யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- போரிட முடியா தினித்துய ரொடுநான்
- பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
- போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
- புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
- யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
- திருவுளத் தடைத்திடு வாயேல்
- ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
- என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
- யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
- என்பிழை பொறுப்பவர் யாரே
- பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
- பாவியேன் பிழைபொறுத் திலையேல்
- ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
- உடம்பைவைத் துலாவவும் படுமோ
- சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
- தெய்வத்துக் கடாதவன் என்றே.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
- எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
- துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
- அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
- தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
- முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
- அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
- கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
- ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
- ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் னவும்நாணம் உறுவ தெந்தாய்
- தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
- எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு பவஉருவாய் என்னுள் ஓங்கி
- அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி
- நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த நோவை நீக்கி
- ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே
- ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணை யாலே
- பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தத் தருட்பதமும் பாலிக் கின்றோய்
- எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே ஆடல்இடு கின்றோய் நின்னால்
- அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
- திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
- உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
- அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
- துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ
- என்பேதை மனமடங்கி இருப்பதன்றி எல்லாங்கண் டிருக்கும் என்றன்
- அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
- வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
- கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
- குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
- துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
- ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
- சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
- கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
- காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
- விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
- விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
- தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
- தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
- திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
- கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
- கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
- உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
- தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
- திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
- மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
- கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்டகொடியனேன்குணங்கள்
- முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென்முனிவுதீர்ந்தருளே.
- அப்பணி முடி204 என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
- இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே
- எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
- செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
- முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
- பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
- என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
- சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
- இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன்
- தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப்
- பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால்
- மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
- அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
- பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே
- செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன்
- எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
- செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி
- அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
- எறிவதும் மேட்டில் எறிந்தும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே
- பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே.
- பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்
- கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
- குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
- கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
- சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
- நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
- சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
- தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.
- மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
- கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
- எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
- நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
- திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
- பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
- பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
- உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
- தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
- வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
- ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
- ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
- என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
- என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
- என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
- என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
- விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
- கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
- அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
- விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
- தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
- கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
- கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
- பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
- தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
- சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
- உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
- விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
- ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
- கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
- காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
- மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
- ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
- பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
- கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
- உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
- துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
- உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
- தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
- இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
- வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
- தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
- காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
- எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
- பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
- ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
- இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
- இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
- தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
- பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
- வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
- மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
- நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
- மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
- அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
- விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
- எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
- நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
- சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
- ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
- கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
- வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
- நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
- பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
- இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
- வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
- சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
- நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
- ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
- மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
- விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
- அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
- பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
- மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
- இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
- பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
- மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
- வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
- ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
- தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
- நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
- உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
- பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
- சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
- நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
- பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
- மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
- நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
- பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
- வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
- அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
- வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
- சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
- பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும்
- கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
- கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
- விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
- உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
- மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
- கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
- நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
- தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
- என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
- துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
- வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
- அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
- அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
- பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
- முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
- கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
- மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
- எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.
- நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
- கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
- படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
- விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
- ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
- தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
- நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
- தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
- கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
- புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
- கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
- இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
- நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
- எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
- செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
- தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
- கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
- இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
- உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
- கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ
- மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது
- பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
- செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
- பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
- மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
- துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
- தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
- சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
- பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
- ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
- பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
- செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
- நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
- குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
- பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில்
- புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
- விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே
- தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.
- உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால்
- குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
- இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
- மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.
- குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
- உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
- தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
- மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
- கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
- மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
- இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
- தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
- கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
- இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
- மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
- அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
- இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால்
- விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே
- அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன்
- துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.
- ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
- காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
- போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
- ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
- தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
- சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
- எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
- தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
- இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே
- சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும்
- அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும்
- சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
- பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன்
- நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
- கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
- செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.
- பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே
- கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே
- தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன்
- மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
- நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
- பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
- சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
- கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம்
- மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள்
- உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
- எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.
- கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
- மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
- பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
- தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
- தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
- அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
- சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
- உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும்
- என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
- மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.
- பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
- நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
- வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
- வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
- என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
- உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
- நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
- மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
- திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
- உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
- உளஎலாம் ஆங்கவன் தனக்கே
- தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
- செயலிலேன் எனநினைத் திருந்தேன்
- அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
- நினைப்பற நின்றபோ தெல்லாம்
- எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
- என்செயல் என்னஓர் செயலும்
- தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
- சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
- அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
- களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
- துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
- துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
- தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
- தெளித்தனன் செய்கைவே றறியேன்
- ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
- உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
- கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
- கற்றதும் கரைந்ததும் காதல்
- கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
- குறிப்பினில் குறித்ததொன் றிலையே
- ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- களவிலே களித்த காலத்தும் நீயே
- களித்தனை நான்களித் தறியேன்
- உளவிலே உவந்த போதும்நீ தானே
- உவந்தனை நான்உவந் தறியேன்
- கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
- குறித்தனை கொண்டனை நீயே
- அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
- சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
- உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
- உவப்பிலேன் உலகுறு மாயைக்
- கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
- கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
- அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
- பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
- சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
- சங்கம்என் றோங்குமோ தலைமைச்
- சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
- தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
- ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
- ஊழிதோ றுழிசென் றிடினும்
- என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
- இயல்அருட் சித்திகள் எனைவந்
- தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
- உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
- உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- கள்ளாவா தனையைக் களைந்தருள் நெறியைக்
- காதலித் தொருமையில் கலந்தே
- உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
- றோங்குதல் என்றுவந் துறுமோ
- வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
- மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
- ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
- விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
- மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
- முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
- செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
- சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
- பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
- பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- கருணைக் கருத்து மலர்ந்தெனது கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
- தருணத் தருளா விடில்அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
- அருணச் சுடரே நின்னருளுக் கழகோ அழகென் றிருப்பாயேல்
- தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 சிரிப்பார் நானும் திகைப்பேனே.
- நாயிற் கடையேன் கலக்கமெலாம் தவிர்த்து நினது நல்லருளை
- ஈயிற் கருணைப் பெருங்கடலே என்னே கெடுவ தியற்கையிலே
- தாயிற் பெரிதும்237 தயவுடையான் குற்றம் புரிந்தோன் தன்னையும்ஓர்
- சேயிற் கருதி அணைத்தான்என் றுரைப்பா ருனைத்தான் தெரிந்தோரே.
- தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் சிறப்பென் றுரைத்த தெய்வமறை
- திரிந்த சிறியர்க் கருள்புரிதல் சிறப்பிற் சிறப்பென் றுரைத்தனவே
- புரிந்தம் மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
- விரிந்த மனத்துச் சிறியேனுக் கிரங்கி அருளல் வேண்டாவோ.
- அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
- கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
- பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
- தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
- திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
- புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
- இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
- அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
- பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர்
- தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
- சேர்த்தார்238 உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
- ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
- தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
- இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
- தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
- அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
- செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
- தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
- இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
- இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
- மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
- செவிலிபாற் சேர்த்தனை அவளோ
- எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
- என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
- மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
- வந்தெனைப் பார்த்திலை அந்தோ
- தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
- தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
- வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
- மக்கள்பால் காட்டிவிட் டிருந்தாள்
- மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும்
- வந்தெனை எடுத்திலார் அவரும்
- இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான்
- என்செய்வேன் என்னுடை அருமை
- நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
- நீயும்இங் கறிந்திலை யேயோ.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
- புகுந்தெனைக் கலக்கிய போதும்
- கண்ணிலே எனது கருத்திலே கலந்த
- கருத்தனே நின்றனை அல்லால்
- மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
- மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
- நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
- ஊக்கமும் உண்மையும் என்னைத்
- தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
- தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
- வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
- மக்களும் மனைவியும் உறவும்
- நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
- வடிவமும் வண்ணமும் உயிரும்
- தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
- தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
- ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
- ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
- நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
- அடிக்கடி பொய்களே புனைந்தே
- எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
- றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
- கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
- கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
- நடுத்தய வறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
- கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
- சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
- துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
- இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
- இந்தநாள் இறைவநின் அருளால்
- நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
- பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
- சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
- ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
- பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
- சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
- நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
- ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
- அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
- அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
- இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
- எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
- தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
- தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
- துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
- சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
- உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
- என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
- என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
- அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
- அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
- இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
- இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
- என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
- சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
- தந்தெனை யாவரும் வந்தனை செயவே
- நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
- நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
- அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
- வகைஇது துறைஇது வழிஇது எனவே
- இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
- என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
- பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
- புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
- அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
- மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
- போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
- பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
- பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
- பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
- நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
- அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
- ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
- இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
- பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
- பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
- நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- கருணா நிதியே அபயம் அபயம்
- கனகா கரனே அபயம் அபயம்
- அருணா டகனே அபயம் அபயம்
- அழகா அமலா அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்
- தனிநா யகனே அபயம் அபயம்
- தெருணா டுறுவாய் அபயம் அபயம்
- திருவம் பலவா அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
- தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
- பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
- பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
- இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
- இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
- அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
- காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
- நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
- நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
- செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
- சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
- அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
- சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
- தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
- தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
- இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
- எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
- அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
- அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
- பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
- இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
- மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- ஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே
- உயர்ந்தஓட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்
- தூங்கிமிகப் புரண்டுவிழத் தரையில்விழா தெனையே
- தூக்கிஎடுத் தணைத்துக்கீழ்க் கிடத்தியமெய்த் துணையே
- தாங்கியஎன் உயிர்க்கின்பம் தந்தபெருந் தகையே
- சற்குருவே நான்செய்பெருந் தவப்பயனாம் பொருளே
- ஏங்கியஎன் ஏக்கமெலாம் தவிர்த்தருளிப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
- நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
- கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
- படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
- பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
- கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
- ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
- நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்283 மலர்க்கால்
- தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
- தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
- ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
- எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
- தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
- மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
- முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
- மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
- எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
- எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
- மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
- நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
- ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
- அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
- பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
- பேசநின் றோங்கிய பெரியோன்
- களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
- கருணையா ரமுதளித் துளமாம்
- வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
- தையகோ ஐயகோ அறிவின்
- மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
- வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
- முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
- மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
- செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
- திருவுளம் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
- பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
- அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
- மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
- குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
- கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
- காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
- தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
- தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
- கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
- குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
- எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
- ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
- விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
- தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
- சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
- தரித்தானைத் தானேநா னாகி என்றும்
- தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
- எரித்தானை என்உயிருக் கின்பா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
- போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
- செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
- திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
- அயலானை உறவானை அன்பு ளானை
- அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
- இயலானை எழிலானைப் பொழிலா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
- அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
- செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
- சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
- பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
- பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
- எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
- வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
- தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
- தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
- பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
- புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
- கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அரசே
- மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
- வள்ளலை மாணிக்க மணியைப்
- பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
- புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
- தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
- தீபத்தைக் கண்டுகொண் டேனே.
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- உணர்ந்தவர் உளம்போன் றென்னுளத் தமர்ந்த
- ஒருபெரும் பதியைஎன் உவப்பைப்
- புணர்ந்தெனைக் கலந்த போகத்தை எனது
- பொருளைஎன் புண்ணியப் பயனைக்
- கொணர்ந்தொரு பொருள்என் கரத்திலே கொடுத்த
- குருவைஎண் குணப்பெருங் குன்றை
- மணந்தசெங் குவளை மலர்எனக் களித்த
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
- பொற்சபை அப்பனை வேதம்
- சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
- ஜோதியைச் சோதியா தென்னை
- மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
- மன்னிய பதியைஎன் வாழ்வை
- எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
- அறிவித்த அறிவைஎன் அன்பைச்
- சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
- சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
- நீதியை எல்லா நிலைகளும் கடந்த
- நிலையிலே நிறைந்தமா நிதியை
- ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
- போந்தருள் அளித்தசற் குருவைக்
- கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
- கருணையங் கடவுளைத் தனது
- சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
- தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
- தன்னிக ரில்லாத் தலைவனை எனது
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- ஏங்கலை மகனே தூங்கலை எனவந்
- தெடுத்தெனை அணைத்தஎன் தாயை
- ஓங்கிய எனது தந்தையை எல்லாம்
- உடையஎன் ஒருபெரும் பதியைப்
- பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப்
- பரிசும்இங் களித்ததற் பரத்தைத்
- தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத்
- தலைவனைக் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
- சுத்தசித் தாந்தரா சியத்தைத்
- தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
- சமரச சத்தியப் பொருளைச்
- சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
- தெளிந்தபே ரானந்தத் தெளிவை
- வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
- மெய்மையைக் கண்டுகொண் டேனே.
- அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதியை உலகக்
- களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
- காட்சியைக் கருணையங் கடலை
- உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
- ஒளியையும் உதவிய ஒளியைக்
- குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- கருத்தனை எனது கண்அனை யவனைக்
- கருணையா ரமுதெனக் களித்த
- ஒருத்தனை என்னை உடையநா யகனை
- உண்மைவே தாகம முடியின்
- அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
- றம்பலத் தருள்நடம் புரியும்
- நிருத்தனை எனது நேயனை ஞான
- நிலையனைக் கண்டுகொண் டேனே.
- வித்தெலாம் அளித்த விமலனை எல்லா
- விளைவையும் விளைக்கவல் லவனை
- அத்தெலாங்272 காட்டும் அரும்பெறல் மணியை
- ஆனந்தக் கூத்தனை அரசைச்
- சத்தெலாம் ஆன சயம்புவை ஞான
- சபைத்தனித் தலைவனைத் தவனைச்
- சித்தெலாம் வல்ல சித்தனை ஒன்றாந்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
- புணர்த்திய புனிதனை எல்லா
- நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
- நிறுத்திய நிமலனை எனக்கு
- மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
- வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
- தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
- பரமனை என்னுளே பழுத்த
- கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
- கடவுளைக் கண்ணினுள் மணியைப்
- புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
- பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
- தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
- உவப்பிலா அண்டத்தின் பகுதி
- அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
- அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
- விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
- றிருந்தென விருந்தன மிடைந்தே
- இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
- தென்பர்வான் திருவடி நிலையே.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
- பெருங்கருணைக் கடலை வேதத்
- திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
- தெள்ளமுதத் தெளிவை வானில்
- ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
- உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
- அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
- இதயத்தே விளங்கு கின்ற
- துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
- தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
- செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
- ஒன்றான தெய்வந் தன்னை
- அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
- விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
- செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
- சிவகதியைச் சிவபோ கத்தைத்
- துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
- துணிந்தளித்த துணையை என்றன்
- அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
- பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
- செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
- பெருங்களிப்புச் செய்தான் தன்னை
- முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
- கொடுத்தெனக்கு முன்னின் றானை
- அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
- பெரும்பொருளைப் புனிதந் தன்னை
- என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
- பெருங்கருணை இயற்கை தன்னை
- இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
- பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
- அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
- உடையானை எல்லாம் வல்ல
- சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
- விரித்தடக்கும் தெய்வந் தன்னை
- எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
- பெருந்தாயை என்னை ஈன்ற
- அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
- இடங்கொண்ட இறைவன் தன்னை
- இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
- தந்தானை எல்லாம் வல்ல
- செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
- தெள்ளமுதத் திரளை என்றன்
- அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
- தான்கொண்டிங் கென்பால் அன்பால்
- தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
- களித்தளித்த தலைவன் தன்னை
- முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
- இருந்தமுழு முதல்வன் தன்னை
- அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
- தருகின்றோம்324 இன்னே என்றென்
- கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
- திருக்கின்ற கருத்தன் தன்னைப்
- புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
- மெய்இன்பப் பொருளை என்றன்
- அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
- விடுவித்தென் தன்னை ஞான
- நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
- நிலைதனிலே நிறுத்தி னானைப்
- பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
- பராபரனைப் பதிஅ னாதி
- ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
- என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
- நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
- நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
- கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
- காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
- செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
- என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
- பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
- பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
- அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
- அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
- சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
- இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
- எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
- பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
- பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
- செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
- எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
- அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
- அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
- ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
- ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
- செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
- சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
- நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
- நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
- பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
- பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
- சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
- உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
- ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
- உவந்தர சளிக்கின்ற அரசே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அம்பலத் தாடும் அமுதமே என்கோ
- அடியனேன் ஆருயிர் என்கோ
- எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
- என்னிரு கண்மணி என்கோ
- நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
- நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
- இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அம்மையே என்கோ அப்பனே என்கோ
- அருட்பெருஞ் சோதியே என்கோ
- செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
- திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
- தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
- தமியனேன் தனித்துணை என்கோ
- இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
- அம்பலத் தெம்பிரான் என்கோ
- நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
- நீடும்என் நேயனே என்கோ
- பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
- பெரியரிற் பெரியனே என்கோ
- இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
- அன்பிலே நிறைஅமு தென்கோ
- சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
- மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
- மன்னும்என் வாழ்முதல் என்கோ
- இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
- மயக்கநீத் தருள்மருந் தென்கோ
- பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
- பதச்சுவை அனுபவம் என்கோ
- சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
- திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
- இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
- சர்க்கரைக் கட்டியே என்கோ
- அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
- அம்பலத் தாணிப்பொன் என்கோ
- உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
- உள்ளொளிக் குள்ளொளி என்கோ
- இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
- என்னைஆண் டருளிய நினையே.
- மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
- மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
- குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
- குணப்பெருங் குன்றமே என்கோ
- பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
- பெரியஅம் பலத்தர சென்கோ
- இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
- என்உயிர்த் தந்தையே என்கோ
- என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
- என்உயிர்த் தலைவனே என்கோ
- என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
- என்னுடை நண்பனே என்கோ
- என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
- என்னைஆண் டருளிய நினையே.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
- அம்மையே அப்பனே என்கோ
- இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
- என்உயிர்க் கின்னமு தென்கோ
- என்பொலா மணியே என்கணே என்கோ
- என்னுயிர் நாதநின் றனையே.
- தாயனே எனது தாதையே ஒருமைத்
- தலைவனே தலைவனே என்கோ
- பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
- பெருந்தகைப் பெரும்பதி என்கோ
- சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
- சித்தெலாம் வல்லசித் தென்கோ
- தூயனே எனது நேயனே என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
- தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
- சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
- தனில்உறும் அனுபவம் என்கோ
- ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
- ஓங்கிய ஒருமையே என்கோ
- சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலத்தவ நினையே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
- இயற்கையுள் இயற்கையே என்கோ
- வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
- வயங்கிய வான்பொருள் என்கோ
- திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
- செய்ததோர் சித்தனே என்கோ
- கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
- களித்தளித் தருளிய நினையே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
- அளித்தெனை வளர்த்திட அருளாம்
- தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
- தெய்வமே சத்தியச் சிவமே
- இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
- ஏற்றிய இன்பமே எல்லாப்
- பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சித்தெலாம் வல்ல சித்தனே ஞான
- சிதம்பர ஜோதியே சிறியேன்
- கத்தெலாம் தவிர்த்துக் கருத்தெலாம் அளித்த
- கடவுளே கருணையங் கடலே
- சத்தெலாம் ஒன்றே சத்தியம் எனஎன்
- தனக்கறி வித்ததோர் தயையே
- புத்தெலாம் நீக்கிப் பொருளெலாம் காட்டும்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
- அறிவென அறிகின்ற அறிவே
- சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
- துரியநல் நிலத்திலே துலங்கும்
- சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
- செல்வமே சித்தெலாம் புரியும்
- பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தத்துவ பதியே தத்துவம் கடந்த
- தனித்ததோர் சத்திய பதியே
- சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
- தமக்குளே சார்ந்தநற் சார்பே
- பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
- பெறல்அரி தாகிய260 பேறே
- புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
- இதயத்தில் இருக்கின்ற குருவே
- அன்புடை அரசே அப்பனே என்றன்
- அம்மையே அருட்பெருஞ் சோதி
- இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
- என்னுயிர் நாதனே என்னைப்
- பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சத்திய பதியே சத்திய நிதியே
- சத்திய ஞானமே வேத
- நித்திய நிலையே நித்திய நிறைவே
- நித்திய வாழ்வருள் நெறியே
- சித்திஇன் புருவே சித்தியின் கருவே
- சித்தியிற் சித்தியே எனது
- புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைவளர் கலையே கலையினுட் கலையே
- கலைஎலாம் தரும்ஒரு கருவே
- நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
- நித்திய வானமே ஞான
- மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
- மாபலம் தருகின்ற வாழ்வே
- புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
- விளக்கினால் என்னுளம் விளக்கி
- இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
- கென்கருத் தனைத்தையும் புரிந்தே
- சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
- சத்தியைத் தயவினால் தருக
- வரதனே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
- தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
- பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
- அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
- கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
- தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
- சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
- புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
- பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
- நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
- நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
- டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
- பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
- இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
- இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும்
- மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
- பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ
- உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே.
- வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
- திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
- கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
- உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
- உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
- புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
- குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
- தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
- கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
- மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
- தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
- கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
- தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
- பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
- தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
- தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
- கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
- ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
- ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
- பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
- மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
- எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
- நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
- அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
- தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
- பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
- செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
- நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
- தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
- தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
- தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
- தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
- சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
- தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
- மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
- தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
- திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
- டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
- கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
- பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
- பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
- நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
- நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
- எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
- என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
- வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
- கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
- கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
- பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
- பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
- இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
- அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
- வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
- வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
- விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
- விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
- இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
- எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
- இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
- எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
- ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
- தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
- சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
- உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
- தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
- தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
- தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
- சிந்தை களித்தேன்என்று உந்தீபற
- சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
- புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
- தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
- இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
- முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
- சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
- அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
- வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
- பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
- ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
- திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
- எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
- என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
- சித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
- திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
- இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
- புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
- சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
- தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
- தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
- என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
- என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
- விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக
- விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
- நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
- நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
- எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
- சேர்கதி பலபல செப்புகின் றாரும்
- பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
- பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
- மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
- மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
- எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
- சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
- காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
- கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
- பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
- தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
- கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
- புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
- நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
- வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
- குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
- அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
- எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
- கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
- பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
- தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
- கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
- நின்றதே அன்றிநின் அளவில்
- நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
- நோக்கிய திறையும் இங்குண்டோ
- தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
- துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
- தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
- மன்னிய உண்மை ஒன்றென்றே
- எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
- திறையும்வே றெண்ணிய துண்டோ
- அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
- அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
- தெளிவித்துக் காப்பதுன் கடனே.
- உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
- ஒருசிவ மயமென உணர்ந்தேன்
- கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
- கருத்தயல் கருதிய துண்டோ
- வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
- மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
- தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
- குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
- தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
- மாப்பிள்ளை பாத மலர்.
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
- ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
- கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
- நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
- தெல்லோரும் வாழ்க இசைந்து.
- வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
- சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
- எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
- விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
- சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
- சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
- நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
- பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
- வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
- புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
- திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
- நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
- கண்டுகொள் கணவனே என்றாள்
- ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
- உவந்திலேன் உண்மையீ தென்றாள்
- பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
- பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
- மாதய வுடைய வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
- மறப்பனோ கனவினும் என்றாள்
- உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
- உயிர்தரி யாதெனக் கென்றாள்
- கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
- கடலமு தளித்தருள் என்றாள்
- வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
- புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
- காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
- கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
- சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
- சற்றுநான் தரித்திடேன் என்றாள்
- மாமிகு கருணை வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
- தருகநற் றருணம்ஈ தென்றாள்
- கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
- குறையுமோ குறைந்திடா தென்றாள்
- நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
- ஞாயமோ நண்பனே என்றாள்
- வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
- சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
- உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
- ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
- என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
- மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
- சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
- சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
- புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
- புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
- இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
- பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
- இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
- என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
- சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
- தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
- நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
- எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
- களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
- செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
- சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
- இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
- எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
- மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
- கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
- கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
- எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
- இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
- வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
- பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
- பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
- கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
- இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
- சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
- துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
- அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
- இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
- களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
- விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
- வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
- உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
- அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
- அதிசயம் அதிசயம் என்றாள்
- துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
- தொட்டனன் பிடித்தனன் என்றாள்
- புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
- பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
- தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
- தவம்எது புரிந்ததோ என்றாள்
- அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
- அதிசயம் அதிசயம் என்றாள்
- இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
- எனக்கிணை யார்கொலோ என்றாள்
- சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
- ததும்பினாள் நான்பெற்ற தனியே.
- புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
- புண்ணியம் புகல்அரி தென்றாள்
- தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
- தயவைநான் மறப்பனோ என்றாள்
- எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
- என்னையோ என்னையோ என்றாள்
- அண்ணிய பேரா னந்தமே வடிவம்
- ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
- சத்திய ஞான சபாபதி எனக்கே
- தனிப்பதி ஆயினான் என்றாள்
- நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
- நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
- பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
- பேறெலாம் என்வசத் தென்றாள்
- எத்திசை யீரும் ஒத்திவண் வருக
- என்றனள் எனதுமெல் லியலே.
- திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
- சிந்தையில் கலந்தனன் என்றாள்
- பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
- பேசுதல் அரிதரி தென்றாள்
- இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
- யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
- மருமலர் முகத்தே இளநகை துளும்ப
- வயங்கினாள் நான்பெற்ற மகளே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
- கண்டனன் கண்டனன் என்றாள்
- அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
- அன்பிலே கலந்தனன் என்றாள்
- தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
- செயல்செயத் தந்தனன் என்றாள்
- தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
- தவத்தினால் பெற்றநம் தனியே.
- கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
- கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
- கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
- கடிமணம் புரிந்தனன் என்றாள்
- ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
- ஒளிஎனக் களித்தனன் என்றாள்
- இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
- என்தவத் தியன்றமெல் லியலே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
- பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
- விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
- விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
- உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
- ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
- தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
- தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
- வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
- விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
- மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
- வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
- வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
- வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
- கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
- நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
- நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
- ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
- உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
- நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
- விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
- றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
- இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
- பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
- எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
- அச்சோ எனக்கவன்போல் ஆர்.
- தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
- தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
- நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
- வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
- நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
- தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
- சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.
- தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
- புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
- சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
- நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
- நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
- வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
- தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
- அம்பலவன் தன்அருளி னால்.
- அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
- மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
- பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
- தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
- இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
- துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
- அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
- திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
- உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
- இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
- கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
- திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
- சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
- தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
- செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
- நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
- தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
- பாக்கியவான் ஆனேன் பதிந்து.
- சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
- தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
- எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
- எடுத்தாய் தயவைவிய வேன்.
- உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
- தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
- தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
- ஆக்கமுற வைத்தாய் அது.
- புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
- பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
- தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
- ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
- அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
- தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
- யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
- ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
- நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
- போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
- ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
- மன்றொன்று வானை மகிழ்ந்து.
- நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
- அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
- பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
- பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
- நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
- அடிப்பாவை யும்286 வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
- நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
- இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
- கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதா தென்னுட் கலந்துகொண்டு
- தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
- புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
- கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
- படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
- தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
- கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
- உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
- திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
- குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
- தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
- ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
- காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா
- நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
- மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
- கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
- திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
- தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
- கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
- பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
- விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
- கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
- நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
- சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
- காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்.
- முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
- அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
- பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
- தாரா வரங்களெலாம் தந்து.
- பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
- என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
- வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
- தெல்லாம் திருவருட்சீ ரே.
- எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
- நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
- உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
- தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
- ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
- தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
- எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
- கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
- சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
- பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
- தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
- தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
- உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
- கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
- திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்
- கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்
- சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்
- தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
- புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
- சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
- சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
- சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
- கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
- செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
- அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
- மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
- திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
- தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
- வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
- தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
- சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
- குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
- வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
- நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
- ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
- நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
- இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
- மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
- நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
- நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
- செல்வா கதவைத் திற.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
- தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
- எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
- இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
- இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
- எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
- வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
- ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
- வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
- ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
- ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
- என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
- தன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
- கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
- பொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.
- அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான்
- எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம்
- மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை
- இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே.
- ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
- சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
- பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
- தாடிக் களிக்க அருள்.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
- சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
- ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
- வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
- ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
- செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
- விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
- நிரந்தொன்றாய்330 நின்றான் நிலத்து.
- துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
- அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
- அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
- பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
- நிலையிலே நுண்மைதனிலே
- நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
- நெகிழிலே தண்மைதனிலே
- ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
- ஒண்சுவையி லேதிரையிலே
- உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
- உற்றியல் உறுத்தும்ஒளியே
- காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
- கருணைமழை பொழிமேகமே
- கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
- கண்ணோங்கும் ஒருதெய்வமே
- தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
- சுகசொருப மானதருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
- கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
- சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
- துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
- சிற்கரை திரையறு திருவருட் கடலே
- தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
- சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- தத்துவ மசிநிலை இதுஇது தானே
- சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
- எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
- ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
- சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
- செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
- சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
- அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
- ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
- உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
- சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
- சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
- சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
- விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
- புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
- புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
- தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
- சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
- பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
- பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
- மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
- வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
- உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
- உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
- வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
- மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
- இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
- வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
- ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
- ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
- கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
- கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
- ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
- இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
- பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
- தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
- தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
- செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
- தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
- அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
- அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
- பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
- படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
- வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
- வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
- நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
- நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
- கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
- கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
- இரண்டரைக் கடிகையில் நினக்கே
- ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
- உண்மைஈ தாதலால் இனிவீண்
- போதுபோக் காமல் மங்கலக் கோலம்
- புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
- தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
- தெருட்டிய சிற்சபை யவரே.
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
- அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
- தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
- அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
- கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
- மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
- கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
- எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
- நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
- நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
- முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
- மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
- பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
- பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
- என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
- எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
- தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
- சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
- மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
- வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
- உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
- உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
- துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
- வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
- வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
- கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
- குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
- நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
- நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
- கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
- கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
- பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
- பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
- கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
- குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
- எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
- அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
- பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
- பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
- பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
- பின்படு தீமையின் முன்படு கின்றீர்
- இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
- பகராத வன்மொழி பகருகின் றீரே
- நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
- நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
- கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
- கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
- எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
- எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
- கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
- கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
- ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
- அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
- உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
- தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
- வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
- அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
- மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
- சாமா றிலைஎனக்குத் தான்.
- நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
- தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
- புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
- புகுந்தான் கருணை புரிந்து.
- சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
- நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
- ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
- தானவிளை யாட்டியற்றத் தான்.
- பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
- சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
- தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
- கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
- கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
- அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
- தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
- வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
- நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
- தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
- உள்ளியநாள் ஈதறிமின் உற்று.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
- மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
- திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
- செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
- வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
- வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
- கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
- கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
- உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
- கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
- கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
- சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
- தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
- இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
- என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
- தருணம்இதே என்று வாய்மை
- அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
- வார்த்தைகள்என் றறைகின் றாரால்
- மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
- எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
- சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
- மனிதர்மதித் திறமை என்னே.
- கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
- பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
- பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
- சுடுகின்றீர் புதைக்க நேரீர்
- சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
- துடியாதென் சொல்லீர் நும்மைத்
- தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
- கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
- மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
- என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
- கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
- பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
- எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
- முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
- சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
- சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
- இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
- மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
- தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
- தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
- எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
- கரிக்கின்றார் யாவர் அந்தச்
- செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
- செயல்எனவே தெரிந்தேன் இங்கே
- கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
- தமக்கேவல் களிப்பால் செய்ய
- ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
- வாய்மிகவும் ஊர்வ தாலோ.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
- செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
- திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
- சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
- சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
- முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
- தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
- மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
- ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
- பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
- புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
- தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
- செல்வமே நான்பெற்ற சிறப்பே
- மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
- வாழ்வித்த என்பெரு வாழ்வே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
- புகன்றபோ தாந்த நாதாந்தம்
- தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
- தத்தினும் தித்திக்கும் தேனே
- மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
- மாபெருங் கருணையா ரமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- அபயம் பதியே அபயம் பரமே
- அபயம் சிவமே அபயம் - உபய
- பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
- விதத்தில் கருணை விளை.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
- நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
- வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
- வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
- காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
- களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
- ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
- எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
- தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
- நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
- வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
- தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
- அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
- மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
- தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
- கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
- போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
- தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
- கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
- பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
- தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
- இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
- கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
- தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
- பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
- தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
- கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
- கருணைமா மழைபொழி முகிலே
- விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
- மேவிய மெய்ம்மையே மன்றுள்
- எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
- இன்றுநீ ஏழையேன் மனத்துப்
- புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
- புகுந்தென துளங்கலந் தருளே.
- அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
- அன்றுவந் தாண்டனை அதனால்
- துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
- சொல்லினேன் சொல்லிய நானே
- இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
- எனைஉல கவமதித் திடில்என்
- என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
- எய்துக விரைந்தென திடத்தே.
- கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
- கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
- தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
- தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
- எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
- என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
- அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
- அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
- மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
- எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
- தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
- செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
- நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
- தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
- மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
- கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே.
- மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
- யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
- போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
- சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே.
- ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
- கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
- ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
- பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.
- ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
- வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
- நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
- நாதனைக் கண்டவன் நடிக்கும்
- மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
- மருந்துகண் டுற்றது வடிவாய்
- நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
- நெஞ்சமே அஞ்சலை நீயே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- மன்றுள்நின் றாடும் வள்ளலே எனது
- வள்ளல்என் றெனக்குளே தெரிந்த
- அன்றுதான் தொடங்கி அம்மையே அப்பா
- ஐயனே அன்பனே அரசே
- என்றுநின் தனையே நினைத்திருக் கின்றேன்
- எட்டுணை எனினும்வே றிடத்தில்
- சென்றுநின் றறியேன் தெய்வமே இதுநின்
- திருவுளம் தெரிந்தது தானே.
- உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
- உறுபசி உழந்துவெந் துயரால்
- வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
- மற்றிதை நினைத்திடுந் தோறும்
- எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
- எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
- கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
- குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.
- ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள்
- செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
- பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று
- மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
- உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்
- ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றி
- இருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும் இயலும்ஐ வர்கள்என்றும்
- எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
- வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
- சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
- இத்தருணம் சத்தியமே என்று.
- தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
- மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
- இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
- தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
- மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
- இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
- தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
- வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
- தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
- தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
- யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
- நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
- தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
- வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
- கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
- கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே
- பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
- விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
- தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
- வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
- அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
- என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
- பெருமநின் தன்னைஎன் றனக்கே
- சாருறு தாயே என்றுரைப் பேனோ
- தந்தையே என்றுரைப் பேனோ
- சீருறு குருவே என்றுரைப் பேனோ
- தெய்வமே என்றுரைப் பேனோ
- யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
- யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
- பொய்ம்மன மாயையைக் கணத்தே
- மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
- வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
- சொல்லிய பதியே மிகுதயா நிதியே
- தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
- ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
- செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
- சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
- மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
- மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
- பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
- பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
- படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
- பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
- பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
- பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
- வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
- வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
- நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
- நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்
- பரம்பரம் தருகின்ற தென்றோர்
- தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்
- தமியனேன் உண்டனன் அதன்தன்
- இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ
- என்னுயிர் இனித்ததென் கரணம்
- சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்
- தனித்தனி இனித்தன தழைத்தே.
- விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
- விளைந்தது விளைந்தது மனனே
- கண்ணெலாம் களிக்கக் காணலாம்
- பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
- எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
- ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
- உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
- ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
- தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
- பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
- புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
- என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
- இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
- நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
- நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
- எல்லா உலகமும் என்வசம் ஆயின
- எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
- எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
- எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
- எல்லா போகமும் என்போகம் ஆயின
- எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
- எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
- எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
- சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
- தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
- என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
- எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
- புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
- புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
- தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
- தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
- என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
- உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
- உன்னுவ தென்னைகண் டாய்.
- இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
- ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
- அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
- அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
- மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
- ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
- எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
- எனக்கும் உனக்கும்
- உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
- உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
- என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
- எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ.
- எனக்கும் உனக்கும்
- நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
- நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
- நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
- நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
- எனக்கும் உனக்கும்
- தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
- தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
- புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
- புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
- எனக்கும் உனக்கும்
- தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
- தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
- நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
- நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
- அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
- பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
- பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
- எனக்கும் உனக்கும்
- எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
- இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
- தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
- சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
- எனக்கும் உனக்கும்
- என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
- என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
- புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
- பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
- அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
- செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
- செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
- எனக்கும் உனக்கும்
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
- ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
- பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
- பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே
- உடம்பு பூரிக் கின்ற தொளிர்பொன் மலைய தென்ன வே
- தடையா தினிஉள் மூல மலத்தின் தடையும் போயிற் றே
- சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம தாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
- கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
- உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
- உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
- ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
- வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
- மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
- எனக்கும் உனக்கும்
- பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
- பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
- ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
- இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே
- எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே
- துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே
- தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே
- சாற்றப் புகினும் சாலார்அருளின் பெருமை உன்ன வே
- அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே
- அனந்தத் தொன்றென் றுரைத்துஞ் சாலா நின்பொன் னடியி லே.
- எனக்கும் உனக்கும்
- கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
- புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே.
- எனக்கும் உனக்கும்
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே
- உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே
- என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே
- யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
- செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
- தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
- திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே
- கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே
- உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே
- உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே.
- எனக்கும் உனக்கும்
- சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
- சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
- என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
- எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
- எனக்கும் உனக்கும்
- உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
- ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
- தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
- செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே.
- எனக்கும் உனக்கும்
- இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
- எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
- கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
- களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
- எனக்கும் உனக்கும்
- சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே
- தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே
- முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே
- முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே.
- எனக்கும் உனக்கும்
- என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
- இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே
- பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே
- புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
- சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
- குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே
- கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
- துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
- சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
- சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- நீயே வலிந்திங் கென்னை ஆண்ட நீதிச் சோதி யே
- நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதி யே
- தாயே எனவந் தென்னைக் காத்த தருமச் சோதி யே
- தன்மை பிறரால் அறிதற் கரிய தலைமைச் சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
- தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
- ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
- எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
- அந்தண ரேஇங்கு வாரீர்
- அம்பலத் தையரே வாரீர். வாரீர்
- அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
- அம்பல வாணரே வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
- அளித்திட வல்லீரே வாரீர்
- களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
- ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
- தமுதம் அளித்தீரே வாரீர்
- ஆடிய பாதரே வாரீர். வாரீர்
- ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர்
- தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
- இத்தரு ணம்இங்கு வாரீர்
- இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்
- இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
- எங்கும் நிறைந்தீரே வாரீர்
- இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
- உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
- உள்ளத் திருந்தீரே வாரீர்
- விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
- ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
- ஆக்க மடுத்தீரே வாரீர்
- தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
- என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
- என்குறை என்முன்னீர் வாரீர்
- தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
- என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
- என்கண் ணனையீரே வாரீர்
- என்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
- என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
- இன்பால் பெறுகின்றீர் வாரீர்
- தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
- எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
- எண்ணம் எனக்கில்லை வாரீர்
- வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
- றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
- தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
- கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
- கண்மணி யீர்இங்கு வாரீர்
- உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
- கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
- கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
- அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
- அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
- தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
- சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
- இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
- திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
- ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
- அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
- ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
- என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
- ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
- காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
- புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
- புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
- அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
- அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
- இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
- தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
- வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
- தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
- துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
- இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
- திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
- துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
- சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
- அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
- சோதி மலையில் துலங்கு மருந்து
- சித்துரு வான மருந்து - என்னைச்
- சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான
- என்னுயிர்க் கன்பா மருந்து - கலந்
- தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து
- என்னுயிர் காக்கு மருந்து - என்றும்
- என்னுயி ராகிய இன்ப மருந்து. ஞான
- என்குரு வான மருந்து - என்றும்
- என்தெய்வ மாகி இருக்கு மருந்து
- என்அன்னை யென்னு மருந்து - என்றும்
- என்தந்தை யாகிய இன்ப மருந்து. ஞான
- என்னிறை யான மருந்து - மகிழ்ந்
- தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
- தன்னறி வாகு மருந்து - என்னைத்
- தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. ஞான
- உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
- உயிருக் கனாதி உறவா மருந்து
- தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
- சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. ஞான
- ஆரணத் தோங்கு மருந்து - அருள்
- ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
- காரணம் காட்டு மருந்து - எல்லாம்
- கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. ஞான
- சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
- சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
- தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
- தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. சிவசிவ
- சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
- செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
- புத்தமு தாகிய ஜோதி - சுக
- பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ
- வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
- விளைவு பலபல வேறென்று காட்டிச்
- சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- என்பால் வருபவர்க் கின்றே - அருள்
- ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
- தென்பால் இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
- துரியப் பதியில் அதுஅத னாலே
- தெரியத் தெரிவது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சைவ முதலாக நாட்டும் - பல
- சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
- தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
- தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
- தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வருவித்த வண்ணமும் நானே - இந்த
- மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
- தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
- எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
- திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
- அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
- சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
- சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
- தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
- இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
- இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
- தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
- வாரா வரவாகி வந்தபொற் பாதம்
- வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய
- எச்சம யத்தும் இலங்கிய பாதம்
- எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
- ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய
- தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
- தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
- மூவரும் காணா முழுமுதற் பாதம்
- முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
- எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
- புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
- கனக சபையான்என்று ஊதூது சங்கே
- பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
- பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.
- என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
- இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
- பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
- பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
- தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
- சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
- உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
- உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.
- இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
- எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
- திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
- கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
- கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
- இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
- எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.
- அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
- செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
- சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
- அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
- செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
- சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.
- தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
- சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
- ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
- ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
- வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
- வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
- சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
- சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
- கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு
- கண்டுகளி கொண்டுதிறந் துண்டுநடு நாட்டு
- ஐயர்மிக உய்யும்வகை அப்பர்விளை யாட்டு
- ஆடுவதென் றேமறைகள் பாடுவது பாட்டு.
- சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
- தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
- இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
- ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
- எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
- ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
- தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
- தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
- சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
- இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
- தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
- சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
- ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு.
- சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
- சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
- அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
- ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
- அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
- வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
- என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
- ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
- நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
- நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
- தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- எனதென்பதும் நினதென்பதும் இதுஎன்றுணர் தருணம்
- இனம்ஒன்றது பிறிதன்றென இசைகின்றது பரமம்
- தனதென்பது மனதென்பது ஜகமென்றனை சரணம்
- சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
- அருளுறு வெளியே வெளியுறு பொருளே
- அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
- மருளறு தெருளே தெருளுறு மொளியே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
- நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
- நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
- பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
- பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
- வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
- வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
- எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
- எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
- பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
- பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
- விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
- விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது
- கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம்
- எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண்
- பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால்
- பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ
- இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால்
- எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
- மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
- நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
- நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
- இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
- எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
- இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
- என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
- என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
- பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
- புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
- அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
- அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
- மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
- மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
- அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
- மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
- மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
- மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
- விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
- கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- நாடுகின்ற பலகோடி அண்டபகி ரண்ட
- நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
- நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
- நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
- ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
- கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
- பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
- பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
- சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
- பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
- பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
- அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
- அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
- சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
- திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.