- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
- தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
- தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
- தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
- சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
- சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
- சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
- தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
- மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
- மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
- மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
- மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
- எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
- எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
- எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
- எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
- ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
- எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
- ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.
- கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்
- சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட்
- கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
- திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே
- தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
- நாரையூர் மேவு நடுநிலையே - பாரில்
- கருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்
- திருமங்க லக்குடியில் தேனே - தரும
- வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
- சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும்
- சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
- தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே - ஓவில்
- நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
- வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்
- கோலந் துறை55 கொண்ட கோவையருள் கோவைமகிழ்
- ஆலந் துறை56யின் அணிமுத்தே - நீலங்கொள்
- தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
- மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம்
- தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
- ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
- தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழுந்
- திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு
- அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
- கருகாவூர் இன்பக் கதியே - முருகார்ந்த
- தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
- கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே - மாணுற்றோர்
- தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக்
- காரோண மட்டுங் கமழ்மலரே - சீரோங்கும்
- தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
- போக்கும் இடைமருதிற் பூரணமே - நீக்கமிலா
- நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
- மாடக்கோ யிற்குண் மதுரமே - பாடச்சீர்
- ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
- கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே - வீழும்பொய்
- வாயூரத் தேமா மலர்59 சொரிந்து வாழ்த்துகின்ற
- மாயூரத் தன்பர் மனோரதமே - தேயா
- வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்
- விளநகர்வா ழெங்கண் விருந்தே - இளமைச்
- நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
- தென்கடையூர்60 ஆனந்தத் தேறலே - வன்மையிலாச்
- வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
- வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற
- சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
- முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக்
- வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
- தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை
- பாவூ ரிசையிற் பயன்சுவையிற் பாங்குடைய
- தேவூர் வளர்தேவ தேவனே - பூவினிடை
- தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
- ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த
- தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
- பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
- மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
- வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
- வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
- தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென
- மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத்
- தென்கோட்டூர் தேவ சிகாமணியே - தென்கூட்டிப்
- ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
- தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை
- சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
- நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு
- காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
- வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத்
- தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும்
- ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே - நாடுமெனை
- நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
- தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர்
- ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
- வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன்
- தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
- ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில்
- வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத்
- தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே - நீங்காது
- ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
- நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம்
- நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
- நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம்
- தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
- ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக்
- மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
- பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன்
- சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
- சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
- எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
- முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு
- அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
- தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும்
- சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
- நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள்
- பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
- தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம்
- சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
- தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
- செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும்
- அஞ்சடையா வண்ணம் அளிப்போனே - விஞ்சுலகில்
- எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்
- அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான
- வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
- திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
- இன்னடிக்கு நுண்ணிடையார்க் கேவல்புரிந் தேனலதுன்
- பொன்னடிக்குத் தொண்டு புரிந்ததிலை - பன்னுகின்ற
- செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது
- முக்குற்றந் தன்னை முறித்ததிலை - துக்கமிகுந்
- தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்
- கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை - பூவுலகில்
- வாரமுரை யாது வழக்கி னிடையோர
- வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா
- போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
- ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல்
- சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
- எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு - தொல்லைவினை
- நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத
- கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் - நீளநினை
- புல்லென்றால் தேகம் புளகிக்கும் அன்றிவிட்டு
- நில்லென்றால் என்கண்ணி னீரரும்பும் - புல்லரென்ற
- ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
- ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
- இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
- இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
- மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
- தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி
- காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
- ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை
- ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
- சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற்
- போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
- வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
- சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்
- பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
- நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி
- தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
- சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
- நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து
- சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை
- வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்
- தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்
- வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
- செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
- தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
- தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்
- காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
- தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற
- சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
- செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற
- சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்
- கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்
- யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்
- தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும்
- இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்
- செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்
- சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
- சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்
- ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
- சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்
- தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
- சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்
- கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
- ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று
- வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
- தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்
- தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
- மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
- ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று
- காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்
- தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
- ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
- நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
- தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்
- முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
- செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது
- தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
- சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது
- நித்தம் தெரியா நிலைமே வியநமது
- சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென
- யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்
- தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி
- செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது
- நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென
- நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
- நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்
- காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
- ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு
- ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்
- கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்
- நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
- தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து
- சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
- ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்
- நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
- போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி
- நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
- நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற
- தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
- வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
- கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்
- தேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி
- சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
- தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து
- மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
- வாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்
- மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
- பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
- ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு
- தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற
- செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்
- சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத
- கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
- கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை
- வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்
- கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்
- கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்
- ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்
- ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்
- பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்
- கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது
- கொண்டோரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும்
- பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
- மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி
- வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
- ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
- வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
- மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி
- வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்
- றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ
- வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்
- தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு
- பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
- நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்
- மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
- உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா
- கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
- செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்
- அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
- செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்
- தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
- நீராழி யென்பவர்க்கென் நேருதியே106 - ஆராப்புன்
- ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
- வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி
- மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
- தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்
- ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
- தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த
- வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு
- செய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி
- மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ
- செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்
- மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து
- துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்
- தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்
- தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர்
- தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
- போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
- கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
- செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல்
- நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
- சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை
- கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
- சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்
- திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
- எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற
- ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்
- தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்
- ஓரா வெகுளி யுடையான் தவமடையான்
- தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்
- வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
- இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
- எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற
- கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத
- நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
- தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை
- தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
- மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
- நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
- சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது
- நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று
- சாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்
- ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
- சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
- மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
- கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்
- இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்
- முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு
- எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
- வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்
- எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
- தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்
- தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
- மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்
- கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
- பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
- தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
- வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்
- தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
- வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய
- ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்
- தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்
- ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
- வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
- நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
- செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்
- இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்
- என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத்
- தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
- நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
- தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
- போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்
- தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை
- நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல்
- பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்
- தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி
- தேனே அமுதே சிவமே சிவமேஎம்
- மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
- பண்ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
- கண்ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ரில்
- மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
- இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்
- சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
- தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி
- தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
- ஏறா திழியா திருப்போரும் - மாறாது
- நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்
- ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- வந்தித்தேன்131 பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
- சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
- சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
- வந்துசிந்திப் பித்தல் மறந்து.
- தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
- நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
- ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
- வண்பொருளும் ஈதல் மறந்து.
- பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
- சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
- சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
- கால்விரற்பால் நின்றொடுங்குங் கால்.
- தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
- சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
- நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
- வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
- ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
- ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
- அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
- நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
- உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
- என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
- தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
- எந்தாயிங் கொன்றுமறி யேன்.
- ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
- காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
- தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
- கண்டே வலம்செய்யாக் கால்.
- மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
- மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
- மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
- தலக்கூடல் தாழாத் தலை.
- ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
- தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
- வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
- பாழ்மனையில் சென்றுண் பது.
- அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
- வங்கணமே132 வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
- நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
- றார்போ லழிக தளர்ந்து.
- பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
- தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
- கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
- ஓவுவா ராவ133 லுனை.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
- உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
- வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
- என்செய்வேன் நின்னருளின் றேல்.
- மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
- போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
- யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
- போனாலென் செய்வேன் புகல்.
- கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
- என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
- நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
- என்பால் செயலொன் றிலை.
- அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
- இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
- பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
- மெய்யுடையேன் என்கோ விரைந்து.
- ஆயிரமன்றேநூறும் அன்றேஈ ரைந்தன்றே
- ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
- எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
- செல்லுமனம் என்செய்கேன் செப்பு.
- ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
- தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
- கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
- கெல்லா நலமுமுள தே.
- தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
- தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
- நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
- எல்லோர்க்கும் ஐயுறவா மே.
- ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்
- பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்
- வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்
- அஞ்சிநின்னோ டாடும் அது.
- என்னமுதே முக்கண் இறையே நிறைஞான
- இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே
- காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கரு
- காதலுற்றுச் செய்தல் கடன்.
- ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
- பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
- நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
- என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
- எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
- குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
- அற்றமிலா தாள்கின் றவர்.
- கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
- அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
- கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
- இருகூ றளித்தேன் இடர்க்கு.
- சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
- நவமே தவமே நலமே நவமாம்
- வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
- படிவுற்ற என்னுட் பயன்.
- பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
- பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
- அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
- பிடித்தேனுன் பொற்பாதப் பேறு.
- துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
- நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
- கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
- வேற்றுரைத்தே னில்லை விரித்து.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
- உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
- உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
- கலகநிலை அறியாத காட்சி யாகிக்
- கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
- இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
- இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
- அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
- தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
- உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
- யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
- கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
- களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
- விலகலுறா நிபிடஆ னந்த மாகி
- மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
- இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
- இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
- வித்தாகி முளையாகி விளைவ தாகி
- விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
- கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
- குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
- சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
- சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
- முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
- முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
- வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
- மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
- நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
- நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
- மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
- முதலாகி மனாதீத முத்தி யாகி
- வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
- மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
- தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
- துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
- சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
- சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
- ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
- உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
- ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
- எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி
- இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
- பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
- பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
- வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி
- மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
- அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்
- அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.
- நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
- நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
- தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
- தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
- சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
- சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
- மன்மயமாய் வாசகா தீத மாகி
- மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- வாயாகி வாயிறந்த மவுன மாகி
- மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
- காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
- கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
- தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
- தானாகி நானாகிச் சகல மாகி
- ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
- ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
- அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
- அளவாகி அளவாத அதீத மாகிப்
- பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
- பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
- பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
- பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
- கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
- கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
- பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
- புறமாகி அகமாகிப் புனித மாகி
- மன்னாகி மலையாகிக் கடலு மாகி
- மதியாகி ரவியாகி மற்று மாகி
- முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
- முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
- மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
- வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- உருவாகி உருவினில்உள் உருவ மாகி
- உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
- அருவாகி அருவினில்உள் அருவ மாகி
- அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
- குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
- குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
- மருவாகி மலராகி வல்லி யாகி
- மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
- சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
- சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
- அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
- அவையனைத்தும் அணுகாத அசல மாகி
- இகலுறாத் துணையாகித் தனிய தாகி
- எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
- உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
- ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
- வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
- வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
- தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
- சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
- பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
- பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
- நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
- நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.
- சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
- சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
- மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
- வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
- இகமாகிப் பதமாகிச் சமய கோடி
- எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
- பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
- பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.
- விதியாகி அரியாகிக் கிரீச னாகி
- விளங்குமகேச் சுரனாகி விமல மான
- நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
- நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
- பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
- பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
- கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
- கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
- மானாகி மோகினியாய் விந்து மாகி
- மற்றவையால் காணாத வான மாகி
- நானாகி நானல்ல னாகி நானே
- நானாகும் பதமாகி நான்றான் கண்ட
- தானாகித் தானல்ல னாகித் தானே
- தானாகும் பதமாகிச் சகச ஞான
- வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற
- மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே.
- மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி
- வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
- சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
- தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
- தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்
- தானாகித் தனதாகித் தானான் காட்டா
- அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
- அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.
- மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
- வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
- நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
- நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
- கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
- கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
- தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
- தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
- பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
- பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
- கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
- கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
- சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
- தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
- நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
- நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
- வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
- தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
- தாபரமே சங்கமமே சாற்று கின்ற
- ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
- துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
- தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
- தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
- விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
- வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
- கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
- கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
- தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
- தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
- பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
- பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
- புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
- வேதமே வேதத்தின் விளைவே வேத
- வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
- நாதமே நாதாந்த நடமே அந்த
- நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
- போதமே போதமெலாம் கடந்து நின்ற
- பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
- ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
- நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
- காலமே காலமெலாம் கடந்த ஞானக்
- கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
- கோலமே குணமேஉட் குறியே கோலங்
- குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
- சீலமே மாலறியா மனத்திற் கண்ட
- செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.
- தத்துவமே தத்துவா தீத மேசிற்
- சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
- சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
- தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
- சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
- தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
- சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
- சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
- யோகமே யோகத்தின் பயனே யோகத்
- தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
- போகமே போகத்தின் பொலிவே போகம்
- புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
- யாகமே யாகத்தின் விளைவே யாகத்
- திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
- மோகமே மோகமெலாம் அழித்து வீறு
- மோனமே மோனத்தின் முளைத்த தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
- குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
- வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
- வானமுதே ஆனந்த மழையே மாயை
- வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
- வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
- தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
- செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
- அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
- உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை
- ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
- களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்
- கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
- வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன
- வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே.
- வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
- மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
- என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்
- இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
- அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்
- ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
- இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
- எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.
- தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்
- தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
- எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்
- இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
- பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்
- பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக்
- கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்
- கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.
- சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
- தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
- ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
- கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
- விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
- விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
- வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
- மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
- அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
- நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
- நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
- தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
- தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
- மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
- வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே.
- வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப
- வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
- சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
- சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
- பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
- பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
- திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
- தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.
- அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
- கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
- விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
- வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
- கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
- சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
- சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
- உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
- கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
- கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
- விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
- வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
- தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
- சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
- கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
- கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
- கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
- காணாமற் காண்கின்ற காட்சியே உள்
- அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
- அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
- உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
- உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
- புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
- கங்குகரை காணாத கடலே எங்கும்
- கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
- தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
- தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
- செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
- செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
- வான்காணா மறைகாணா மலரோன் காணான்
- மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
- நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
- நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
- மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
- வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
- ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
- அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
- மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
- மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
- அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
- அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
- கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
- கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
- எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
- என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
- பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
- வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
- மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
- ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
- உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
- ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
- அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
- அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
- உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
- உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
- எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
- எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
- முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
- முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
- தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
- சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்
- ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்
- அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்
- ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்
- இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
- சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற
- தன்மயமே சின்மயமே சகசத் தேவே.
- பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
- பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
- எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
- எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
- தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
- சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
- தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
- தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.
- மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
- வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
- இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
- கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
- கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
- காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
- பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
- பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
- பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
- பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
- மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
- வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
- இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
- இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
- விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
- விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
- இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
- அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
- அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
- நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
- நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
- தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
- தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
- தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
- தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
- வானாகி வளியனலாய் நீரு மாகி
- மலர் தலைய உலகாகி மற்று மாகித்
- தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
- தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
- நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
- நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற
- செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
- மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி
- வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
- அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்
- அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
- நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்
- நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே
- படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
- ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
- உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
- பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
- பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
- நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே
- நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.
- மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
- மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
- பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
- பேயேறி நலிகின்ற பேதை யானேன்
- வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
- மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
- ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
- உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்
- தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
- இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த
- இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும்
- மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்
- வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
- புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்
- புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்
- குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
- தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
- தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
- ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்
- உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
- தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்
- தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே.
- எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
- என்னரசே என்குருவே இறையே இன்று
- மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
- மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
- தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
- தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
- அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
- அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.
- தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்
- சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
- ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்
- இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
- நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற
- நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
- ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்
- அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே.
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்
- காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
- தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு
- சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
- பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்
- பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
- புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ
- புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
- புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
- நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
- நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
- மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
- வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
- கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்
- கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட
- அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
- கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே
- கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ
- நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்
- நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
- ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்
- எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே.
- கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
- கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
- உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
- ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
- மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
- மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
- வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே
- மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
- நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த
- நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
- பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்
- பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
- உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே
- உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
- பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்
- பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
- இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
- அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
- சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.
- பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
- ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
- கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
- மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
- பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
- தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
- நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.
- என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
- பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
- துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
- முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.
- பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
- கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
- பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
- மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
- கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
- மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
- தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
- கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
- தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
- பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.
- தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
- வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
- ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
- நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.
- சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
- வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
- பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
- பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.
- தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
- மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ
- வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
- இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே.
- நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
- குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
- முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
- வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
- கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
- சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
- அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
- நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.
- ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
- வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
- சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
- போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
- பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்145முடித்த
- நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
- மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
- குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.
- முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
- அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
- கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
- என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
- வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
- மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
- ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
- ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
- உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
- தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
- பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
- அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
- மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர்
- திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே
- விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை
- கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே.
- வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
- நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
- தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
- தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.
- பொன்கின்று151 பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம்
- நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத்
- தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார்
- என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே.
- கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
- தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
- வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
- ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.
- நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
- பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
- கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
- குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே.
- கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
- பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
- எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
- புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
- கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
- துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
- தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.
- தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
- ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
- கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
- வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.
- வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
- பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
- துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
- என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.
- நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
- சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
- கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
- றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
- எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
- நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
- வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
- மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.
- வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
- தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
- சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
- இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.
- நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
- ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
- வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
- தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
- அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
- இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
- என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
- வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.
- மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
- கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
- மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
- நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
- வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
- மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
- காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
- பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
- பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
- வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
- ` தாம்பா யினும்156 ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
- தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.
- தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான்
- இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ
- அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய்
- வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே.
- கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை
- எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்
- உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்
- நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே.
- அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
- சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
- இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
- எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.
- ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
- தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
- வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
- தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
- மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
- காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
- சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
- நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே.
- அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோர்
- கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
- சொல்லுண்ட157 வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
- கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே.
- குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
- வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
- பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
- திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
- வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள்
- தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த
- நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர்
- வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே.
- காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
- நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
- பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
- ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
- திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
- விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
- கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.
- நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
- சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
- இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
- சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
- செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
- திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
- எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே.
- கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
- ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
- சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
- வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
- அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
- படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
- குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
- தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருத்
- துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
- எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
- பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.
- தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
- அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
- உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
- சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
- ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
- துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
- செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
- உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
- கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
- சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
- போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
- பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.
- இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்
- கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
- புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
- துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
- மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
- நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
- குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
- ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
- தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
- வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.
- ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
- காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
- ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
- சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
- தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
- சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
- பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.
- வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
- எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
- தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
- செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
- கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
- மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
- வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
- தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
- மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
- வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
- புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
- உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
- கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
- தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
- மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
- வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
- தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
- ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
- தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
- இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
- முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
- வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
- இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
- மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
- கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
- நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.
- அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
- அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
- அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
- அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.
- நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
- தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
- அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
- விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
- மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
- கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
- வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
- பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.
- முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
- தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
- இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
- மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
- புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
- திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
- சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
- எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
- மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
- கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
- தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
- நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.
- மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
- தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
- போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
- பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே.
- கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
- மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
- சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
- பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.
- புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
- மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
- அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
- இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே.
- மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
- இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
- செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
- ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
- மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
- துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
- பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
- கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
- இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்
- புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக்
- கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே
- திரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே.
- கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
- உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
- அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
- மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
- மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
- கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
- தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
- வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
- திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
- தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
- பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
- மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
- தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
- தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
- மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
- சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
- கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
- தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
- வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
- நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
- தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
- வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
- சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
- துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
- மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
- லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
- யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
- மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
- எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
- செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
- மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
- கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
- ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
- மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
- பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
- தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
- மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
- கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
- குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
- மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
- செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
- மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
- கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
- வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
- சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
- பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
- மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
- மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
- சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
- தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
- வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
- குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
- பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
- மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
- பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
- புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
- மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
- மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
- திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
- விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
- வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
- மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
- தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
- சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
- மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
- ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
- கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
- தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
- மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
- எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
- சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
- சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
- மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
- கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
- தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
- வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
- தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
- தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
- வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
- பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
- காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
- மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
- வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம்
- கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
- மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
- அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
- முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
- இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
- மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
- கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
- தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
- ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
- மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
- காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
- ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
- சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
- மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
- கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
- மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
- மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
- மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
- னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
- லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
- றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
- மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
- யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
- னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
- கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
- னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
- பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
- னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
- மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
- முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
- மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
- ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
- பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
- மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
- வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
- தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
- லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
- னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
- ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
- விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
- மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
- கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
- மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
- மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
- திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
- தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
- னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
- கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
- யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
- வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
- றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
- யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
- வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
- யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
- ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
- தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
- யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
- பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி
- யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
- நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
- ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
- தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
- தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
- னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
- யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
- னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
- னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
- யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பாற்றக் கணத்தா ரிவர்காட்டு ப் பள்ளித் தலைவ ரொற்றியினின்
- றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
- சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
- யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
- னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
- வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
- ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
- மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
- வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
- யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
- மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
- மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
- யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே
- னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக
- வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
- கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரீர் மனவசிதா னுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
- பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
- மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுள்ள வன்மையெலா
- மெற்றி லுணர்தி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
- யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
- மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
- யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
- யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே மயக்குகின்ற
- வசியர் மிகநீ ரென்றேனெம் மகன்கா ணென்றார் வளர்காமப்
- பசிய தொடையுற் றேனென்றேன் பட்ட மவிழ்த்துக் காட்டுதியே
- லிசையக் காண்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
- னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
- கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
- லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
- ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
- சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
- யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
- நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
- தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
- மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் லெழிலா ரொற்றி யிடையிருந்தீ
- ரென்னே யடிகள் பலியேற்ற லேழ்மை யுடையீர் போலுமென்றே
- னின்னே கடலி னிடைநீபத் தேழ்மை யுடையாய் போலுமென
- வின்னே யங்கொண் டுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
- ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
- வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
- றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
- யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
- வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
- யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி
- வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
- கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
- மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்
- வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்
- பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே
- மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப்
- பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே
- னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
- டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ ரகில மறிய மன்றகத்தே
- மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் வனப்பா மென்றே னுலகறியத்
- தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ தானுந் தகரத் தலைகொண்டா
- யினஞ்சூ ழழகா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
- ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
- வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
- றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
- கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
- பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
- தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
- நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
- முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
- விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று
- தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்
- பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
- யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந்
- தாக முடையா ரிவர்தமக்குத் தண்ர் தரநின் றனையழைத்தேன்
- போக முடையாய் புறத்தண்ர் புரிந்து விரும்பா மகத்தண்
- ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊற்றார் சடையீ ரொற்றியுளீ ரூரூ ரிரக்கத் துணிவுற்றீர்
- நீற்றால் விளங்குந் திருமேனி நேர்ந்திங் கிளைத்தீர் நீரென்றேன்
- சோற்றா லிளைத்தே மன்றுமது சொல்லா லிளைத்தே மின்றினிநா
- மேற்றா லிகழ்வே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நீரை விழுங்குஞ் சடையுடையீ ருளது நுமக்கு நீரூருந்
- தேரை விழுங்கும் பசுவென்றேன் செறிநின் கலைக்கு ளொன்றுளது
- காரை விழுங்கு மெமதுபசுக் கன்றின் றேரை நீர்த்தேரை
- யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக்
- கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே
- னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட
- திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
- முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
- றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
- யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் தேவர் தமைநா னீரிருத்த
- லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே யேழூர் நாலூ ரென்றார்பின்
- னவ்வூர்த் தொகையி னிருத்தலரி தாமென் றேன்மற் றதிலொவ்வூ
- ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
- கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
- ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
- கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
- அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
- இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
- அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
- மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
- ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
- தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
- ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
- புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
- என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
- தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
- ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
- சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
- கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
- கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
- செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
- தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
- நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
- ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
- பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
- கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
- தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
- சீறு பாம்புகண் டெனஒளித் தேக
- சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
- சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
- செய்ப வன்செய லும்அவை உடனே
- செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
- உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
- ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
- நல்ல நீறிடா நாய்களின் தேகம்
- நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
- வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
- வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
- சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
- சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
- அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- நெஞ்ச மேஇது
- வஞ்ச மேஅல
- பிஞ்ச கன்பதம்
- தஞ்சம் என்பதே.
- என்ப தேற்றவன்
- அன்ப தேற்றுநீ
- வன்பு மாற்றுதி
- இன்பம் ஊற்றவே.-
- இல்லை இல்லைகாண்
- ஒல்லை ஒற்றியூர்
- எல்லை சேரவே
- அல்லல் என்பதே.-
- அல்லல் என்பதேன்
- தொல்லை நெஞ்சமே
- மல்லல் ஒற்றியூர்
- எல்லை சென்றுமே.-
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- காயம் என்பதா காயம்என் றறியேன்
- கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
- சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
- தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
- தூய நின்அடி யவருடன் கூடித்
- தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
- தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
- வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
- தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
- கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
- கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
- தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல்
- மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில்
- பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்
- பாவி யேன்அருள் பண்புற நினைவாய்
- மித்தை இன்றியே விளங்கிய அடியார்
- விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
- சித்தி வேண்டிய முனிவரர் பரவித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
- காமம் உந்திய நாமநெஞ் சகத்தால்
- எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
- எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
- அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
- அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
- தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
- நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
- பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
- புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
- கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
- கமலம் மேவிய விமலவித் தகனே
- செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
- துட்டனேன் தூய்மைஒன் றில்லா
- எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
- பரமனேஎம் பசு பதியே
- அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
- ஐயனே ஒற்றியூர் அரைசே.
- தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
- தோகையர் மயக்கிடை அழுந்தி
- ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
- மாமணிக் குன்றமே மருந்தே
- ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
- யூர்வரும் என்னுடை உயிரே.
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டுன்
- மலரடி வழுத்திடச் சிறிதும்
- எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே
- விடையில்வந் தருள்விழி விருந்தே
- கண்ணிலே விளங்கும் அரும்பெறல் மணியே
- காட்சியே ஒற்றியங் கரும்பே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
- தீயனேன் பேயனேன் சிறியேன்
- எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
- இடையிடர்ப் பசியசெம் பொன்னே
- செவ்வண மணியே திகழ்குணக் கடலே
- திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
- முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
- தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
- எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
- வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
- குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
- உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
- களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
- மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
- விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
- குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
- தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
- மாசி லாமணி யேமருந் தேசற்றும்
- கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
- பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.
- துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
- மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
- துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
- என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
- மாசில் சோதிம ணிவிளக் கேமறை
- வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
- தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
- தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
- தேரும் நற்றவர் சிந்தைஎ னுந்தலம்
- சாரும் நற்பொரு ளாம்வலி தாயநீர்
- பாரும் மற்றிப்ப ழங்கந்தை சாத்தினீர்
- யாரும் அற்றவ ரோசொலும் ஐயரே.
- மெல்லி தாயவி ரைமலர்ப் பாதனே
- வல்லி தாயம ருவிய நாதனே
- புல்லி தாயஇக் கந்தையைப் போர்த்தினால்
- கல்லி தாயநெஞ் சம்கரை கின்றதே.
- கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
- களிக்க வேபடிக் காசளித் தருளும்
- வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
- ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
- உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
- ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
- வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
- தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
- உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
- தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
- வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
- அடிய னேன்அலை கின்றதும் அழகோ
- ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
- குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
- மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
- கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
- உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
- தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
- வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
- குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
- ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
- இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
- முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
- என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
- தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
- ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
- ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
- தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
- காதார் கடுவிழியார் காமவலைக் குள்ளாகி
- ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
- போதார் நினதுகழல் பொன்அடியே போற்றுகின்றேன்
- நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.
- சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
- தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
- நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
- ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
- ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின்
- சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும்
- கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன்
- ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ.
- பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
- சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
- நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
- வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.
- தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
- மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
- சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.
- கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
- விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
- தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.
- வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும் வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே
- வேடன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- நீடயில் படைசேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
- ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.
- நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
- வீணன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே கடிமதில் ஒற்றியூர்க் கரசே
- பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த புண்ணியப் புனிதவா ரிதியே.
- நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
- வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
- அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.
- நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும்
- தாயினும் இனியாய் இன்னும்நீ வரவு தாழ்த்தனை என்கொலென் றறியேன்
- மாயினும் அல்லால் வாழினும் நினது மலரடி அன்றிஒன் றேத்தேன்
- காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே.
- உடைமைவைத் தெனக்கின் றருள்செயா விடினும் ஒப்பிலாய் நின்னடிக் கெனையே
- அடைமைவைத் தேனும் நின்அருட் பொருள்இங் களித்திட வேண்டும் இன்றெவைக்கும்
- கடைமையேன் வேறோர் தேவரை அறியேன் கடவுள்நின் திருவடி அறிக
- படைமைசேர் கரத்தெம் பசுபதி நீயே என்உளம் பார்த்துநின் றாயே.
- கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
- விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
- திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
- உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
- நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
- புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
- சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
- கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.
- வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
- பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
- கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
- வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
- கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
- ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
- ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
- தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
- காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
- ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
- துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
- புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
- என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
- கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
- இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
- என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
- மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
- கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
- தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
- எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
- நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
- பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
- நாடு நாடிடில் நாடு நம்மதே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
- மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
- கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
- களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
- நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
- நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
- எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- விருப்பாகும் மதிச்சடையாய் விடையாய் என்றே
- மெய்யன்போ டுனைத்துதியேன் விரைந்து வஞ்சக்
- கருப்பாயும் விலங்கெனவே வளர்ந்தே நாளைக்
- கழிக்கின்றேன் கருநெஞ்சக் கள்வ னேனைப்
- பொருப்பாய யானையின் கால் இடினும் பொல்லாப்
- புழுத்தலையில் சோரிபுறம் பொழிய நீண்ட
- இருப்பாணி ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்
- ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்
- மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்
- வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்
- செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ
- திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து
- எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை
- அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்
- துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்
- தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்
- வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ
- மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை
- இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்
- தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன்
- கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்
- குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ
- நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்
- நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க்
- கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
- ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
- காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
- பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
- செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
- வந்து நின்னடிக் காட்செய என்றால்
- வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
- எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
- இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
- அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
- வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
- தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
- திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
- காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
- கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
- ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
- உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
- என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
- இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
- முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
- மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
- அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
- தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
- உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
- ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
- இன்ன தென்றறி யாமல இருளில்
- இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
- அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
- பாவை யார்மயல் படிந்துழைப் பதனால்
- சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
- செய்கை நின்னதே செப்பலென் சிவனே
- காவி நேர்விழி மலைமகள் காணக்
- கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்
- ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
- கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
- விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
- வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
- மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
- மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
- அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
- வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
- இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
- எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்
- உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
- றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
- அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
- போக்கி நின்றனை போனது போக
- வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
- வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
- திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
- செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
- தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
- உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
- மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
- அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
- தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
- எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
- கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
- குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
- பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
- பேய ருண்மனை நாயென உழைத்தேன்
- செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
- அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
- வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
- வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
- வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
- வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
- செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
- மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
- துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
- சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
- வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
- வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
- செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- இருக்க வாவுற உலகெலாம் உய்ய
- எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
- உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
- ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
- தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
- தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
- திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
- எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
- நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
- நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
- வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
- வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
- திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
- பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
- தாதை நீஅவை எண்ணலை எளியேன்
- தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
- கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
- கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
- தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
- வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
- விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
- விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
- தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
- சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
- செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- புல்ல னேன்புவி நடையிடை அலையும்
- புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
- அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
- அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
- ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
- உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
- செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஒற்றி மேவிய உத்தம னேமணித்
- தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
- நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
- பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
- ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
- சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
- ஓதி யேதரும் ஒற்றியப் பாஇது
- நீதி யேஎனை நீமரு வாததே.
- தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
- கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
- நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
- மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
- எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
- தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
- முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
- சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
- போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
- சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
- தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
- ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
- வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
- செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக்
- கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
- இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து
- தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்
- ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
- சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
- கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
- யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
- சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
- பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
- இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
- செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
- கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
- எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
- தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
- எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
- தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
- பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
- என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
- சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
- கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
- என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால்
- அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத்
- தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச்
- சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று.
- கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்
- மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்
- என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே
- என்அருமை அப்பாவே என்று.
- என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர்
- ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும்
- ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப்
- பற்றிநிற்பை யாகில் பரிந்து.
- தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
- விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக்
- கண்ணானை மாலயனும் காணப் படாதானை
- எண்ணாரை எண்ணாதே என்று.
- பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
- தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
- உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப்
- பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
- விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள்
- அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி
- நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச்
- சீர்கொண்டு நெஞ்சே திகழ்.
- வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
- தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
- ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
- சென்றுதொழு கண்டாய் தினம்.
- கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
- ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
- உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
- நள்ளவனை நெஞ்சமே நாடு.
- தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
- றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
- நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
- எந்தை அடிவணங்கா ரேல்.
- ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய
- ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல
- மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும்
- பணிகண்டாய் அன்னோன் பதம்.
- நானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாண்மலர்த்தாள்
- தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே
- கோனே கரும்பின் சுவையேசெம் பாலொடு கூட்டுநறுந்
- தேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
- நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
- வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
- தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
- அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
- தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
- செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
- மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
- முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
- ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- மாலயன் தேடியும் காணாம லையை
- வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
- ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
- ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
- காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
- கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
- ஏலம ணிகுழ லாள்இடத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
- அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
- வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
- வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
- துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
- சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
- என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
- கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
- மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
- வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
- பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
- பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
- எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
- பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
- இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
- இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
- மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
- மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
- துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
- சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
- பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
- திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
- தேவர் நாயகர் திங்களம் சடையார்
- அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
- அழகர் அங்கவர் அமைந்துவீற்றிருக்கும்
- மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
- தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
- இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
- தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
- அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
- நின்று வேண்டிய யாவையும் உனக்கு
- நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.
- 23. ஈண்டு மேற்கொண்ட குறட்பா.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 (106 - இரவு - 4)
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
- ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
- வாட்டு கின்றனை வல்வினை மனனே
- வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
- கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
- குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
- ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
- நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
- நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
- நன்று நின்செயல் நின்றிடு மனனே
- ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
- ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- விச்சை வேண்டினை வினையுடை மனனே
- மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
- துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
- சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
- பிச்சை எம்பெரு மான்என நினையேல்
- பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
- இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
- சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
- ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
- ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
- நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
- நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
- ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
- தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
- பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
- கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
- சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
- ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
- நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத்
- தேசனைத் தலைமைத் தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா
- நீசரை நாண்இல் நெட்டரை நரக நேயரைத் தீயரைத் தரும
- நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
- சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
- மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
- நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
- யாவர் அறியார் திருஒற்றி யப்பா அடியேன் யாதறிவேன்
- மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
- காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.
- புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
- இகழேன் எனைநான் ஒற்றியப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
- திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
- அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே.
- ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
- வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
- இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
- விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
- விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
- மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
- அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
- படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
- உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி யப்பா உன்னுடைய
- திண்டோள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
- எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
- கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே.
- அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
- சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
- வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
- நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
- கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
- உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
- விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
- அடன்ஏர் விடையாய் திருஒற்றி யப்பா உனைநான் அயர்ந்திலனே.
- நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
- ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
- கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
- தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.
- அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
- சுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் உண் டாங்கொலோ அறியேன்
- கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
- உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே
- மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
- பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன்அருள் செயாதிருப் பாயோ
- கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே.
- செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
- உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
- நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
- வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
- இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
- என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
- சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
- மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- கன்னியர் அளகக் காட்டி€டை உழன்ற கல்மனக் குரங்கினேன் த€னைநீ
- அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
- என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
- மன்னிய வன்னி மலர்ச்ச€டை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
- பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
- இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
- மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
- புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
- எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
- தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
- தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
- துக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
- மிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்
- செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.
- துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
- பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
- இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
- கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.
- வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
- மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
- சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
- நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
- நாளை வருவ தறியேன்நான் நஞ்சம் அனைய நங்கையர்தம்
- ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
- கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
- வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.
- முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
- பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
- எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
- தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
- மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
- தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
- முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
- இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.
- என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
- தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
- பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
- இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.
- ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
- தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
- தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
- வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே.
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- ஒற்றியூர் அமரும் ஒளிகெழு மணியே உன்அடி உள்கிநின் றேத்தேன்
- முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
- சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
- பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே.
- அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
- பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
- சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
- பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
- சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
- ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
- தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
- இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
- கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
- துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்துணைநினை அன்றி ஒன் றறியேன்
- தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே.
- இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
- குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
- பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
- நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.
- நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
- கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
- உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
- மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
- தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
- உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
- மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
- பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
- தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
- ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
- ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.
- செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
- எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
- உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றியப்பா உன்வடிவம்
- இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
- நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
- உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
- முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
- இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
- துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
- உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
- தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
- ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
- ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
- பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
- மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
- உன்னாசை கொண்டேஎன் ஒற்றியப்பா நான்மகிழ்ந்துன்
- மின்னாரும் பொன்மேனி வெண்ற்றைப் பாரேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
- கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
- உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
- மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
- பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
- உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
- தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
- சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
- யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
- ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா உன்இதழித்
- தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.
- கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
- நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணையேன் துன்பொழிய
- உடையவனே உலகேத்தும் ஒற்றியப்பா நின்பால்வந்
- தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.
- வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
- பேதை எனவீழ்ந்தே பிணிஉழந்த பேயடியேன்
- ஓதை கடற்கரைவாய் ஒற்றியப்பா வாழ்த்துகின்றோர்
- தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.
- பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
- வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
- உய்யற் கருள்செய்யும் ஒற்றியப்பா உன்அடிசேர்
- மெய்யர்க் கடிமை செய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.
- சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
- தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
- பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
- பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
- வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
- வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
- புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால்
- அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
- சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
- தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அருமருந் தனையாய் நின்திரு முன்போந் தரகர எனத்தொழல் மறந்தே
- இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
- கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் கருத்தர்போல் திருத்தம தாகத்
- தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே
- உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால்
- நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத்
- தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல கண்டம்என் றுன்திரு முன்னர்
- சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
- செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா தேவஓம் அரகர எனும்சொல்
- சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ
- இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன்
- பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்
- பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ
- கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்
- காள கண்டனே கங்கைநா யகனே
- திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத்
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
- எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
- தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
- செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
- போது போகின்ற தன்றிஎன் மாயப்
- புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
- சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
- உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
- செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
- பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
- பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
- றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில்
- தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக்
- கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே
- பூறு வங்கொளும் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
- சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
- சித்தம் என்னள வன்றது சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
- நித்த னேஅது நீஅறி யாயோ
- புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
- களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
- அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
- தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
- உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன்
- கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே
- விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ
- அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே.
- தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார்
- வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ
- உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன்
- எனையலா துனக்கிங் காளிலை யோஉண்டென்னினும் ஏன்றுகொண் டருளே.
- ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
- ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
- நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
- சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
- கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
- மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
- உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
- நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
- சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
- விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
- அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- யாதும் உன்செய லாம்என அறிந்தும்
- ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
- தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
- தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
- கோது செய்மலக் கோட்டையைக் காவல்
- கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- பந்த மட்டின்ஆம் பாவிநெஞ் சகத்தால்
- பவப்பெ ருங்கடல் படிந்துழன் றயர்ந்தேன்
- இந்த மட்டில்நான் உழன்றதே அமையும்
- ஏற வேண்டும்உன் எண்ணமே தறியேன்
- அந்த மட்டினில் இருத்தியோ அன்றி
- அடிமை வேண்டிநின் அருட்பெரும் புணையை
- உந்த மட்டினால் தருதியோ உரையாய்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
- தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் சந்நிதி முன்னர்நிற் கின்றேன்
- எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
- கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே கதிதரும் கருணையங் கடலே.
- நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
- பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
- சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
- கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
- என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயி‘க் குறுதிப்
- பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ
- கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே.
- அளவிலா உலகத் தனந்தகோ டிகளாம் ஆருயிர்த் தொகைக்குளும் எனைப்போல்
- இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டுகொல் இலைகாண்
- தளர்விலா துனது திருவடி எனும்பொற் றாமரைக் கணியனா குவனோ
- களவிலார்க் கினிய ஒற்றிஎம் மருந்தே கனந்தரும் கருணையங் கடலே.
- ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம்
- சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ
- நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே
- காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- மாலொடு நான்கு வதனனும் காணா மலரடிக் கடிமைசெய் தினிப்பாம்
- பாலொடு கலந்த தேன்என உன்சீர் பாடும்நாள் எந்தநாள் அறியேன்
- வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை விளைவித்த வித்தக விளக்கே
- காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
- ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
- காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
- வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
- சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
- யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
- காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- ஓது மாமறை உபநிட தத்தின்
- உச்சி மேவிய வச்சிர மணியே
- தீது நீக்கிய ஒற்றியந் தேனே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- சொல்லும் சொல்லள வன்றுகாண் நெஞ்சத்
- துடுக்க னைத்தும்இங் கொடுக்குவ தெவனோ
- கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அல்லும் எல்லும்நின் றகங்குழைந் தேத்தும்
- அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே
- செல்லு லாம்பொழில் ஒற்றியங் கரும்பே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- இம்மை இன்பமே வீடெனக் கருதி
- ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
- கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மும்மை யாகிய தேவர்தம் தேவே
- முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
- செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
- சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
- கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
- இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
- சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- கூலி என்பதோர் அணுத்துணை யேனும்
- குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன்
- மாலி னோடயன் முதலியர்க் கேவல்
- மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே
- ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண்
- அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர்
- சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
- முந்து றேன்அவர் முற்பட வரினும்
- சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
- தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
- புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
- பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
- துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- கல்வி வேண்டிய மகன்தனைப் பெற்றோர்
- கடுத்தல் ஓர்சிறு கதையிலும் இலைகாண்
- செல்வம் வேண்டிலேன் திருவருள் விழைந்தேன்
- சிறிய னேனைநீர் தியக்குதல் அழகோ
- பல்வி தங்களால் பணிசெயும் உரிமைப்
- பாங்கு நல்கும்அப் பரம்உமக் கன்றே
- நல்வி தத்தினர் புகழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
- அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
- நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
- எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
- நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
- நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
- தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
- பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
- கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
- சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
- சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
- ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
- இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
- வாம மாதராள் மருவொற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இன்பம் என்பது விழைந்திடர் உழந்தேன்
- என்னை ஒத்தஓர் ஏழைஇங் கறியேன்
- துன்பம் என்பது பெருஞ்சுமை ஆகச்
- சுமக்கின் றேன்அருள் துணைசிறி தில்லேன்
- அன்பர் உள்ளகத் தமர்ந்திடுந் தேவர்
- அடிக்குற் றேவலுக் காட்படு வேனோ
- வன்பர் நாடுறா ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
- உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
- தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
- தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
- பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
- பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
- வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை
- எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும்
- மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம்
- வழிம றித்ததை மயக்குகின் றதுகாண்
- குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும்
- குறைத்தும் அங்கது குறைகில தந்தோ
- வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
- பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
- என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
- மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே.
- தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றாள்
- சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
- மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
- மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
- இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
- கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
- அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
- வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
- தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
- செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
- சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
- சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
- ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
- வந்தனைசெய் தானந்த வயத்தே நின்றார்
- பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
- பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
- ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
- தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
- அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
- மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
- அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
- தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
- எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
- களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
- ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
- அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
- காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
- ஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்
- நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
- தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.
- பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
- மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
- நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
- மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
- பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான்
- ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ
- கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே
- மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே.
- வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
- அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
- மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
- பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
- கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
- முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
- வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
- ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என்
- அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும்
- தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற
- இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ.
- எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம்
- பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச்
- செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி யப்பாநீ
- அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ.
- எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
- தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
- சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
- நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
- கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
- மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
- ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
- அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
- களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
- வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
- மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால்
- ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு
- நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன்
- நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.
- குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
- சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
- நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
- ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
- இமைக்கும் அவ்வள வேனும்நெஞ் சொடுங்கி
- இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின்
- சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும்
- துயர்கின் றேன்அயர் கின்றஎன் துயரைக்
- குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும்
- கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே
- உமைக்கு நல்வரம் உதவிய தேவே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும்
- சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய்
- நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண்
- நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே
- என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம்
- எந்தை யேஎனை எழுமையும் காத்த
- உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஆண்ட துண்டுநீ என்றனை அடியேன்
- ஆக்கை ஒன்றுமே அசைமடற் பனைபோல்
- நீண்ட துண்டுமற் றுன்னடிக் கன்பே
- நீண்ட தில்லைவல் நெறிசெலும் ஒழுக்கம்
- பூண்ட துண்டுநின் புனிதநல் ஒழுக்கே
- பூண்ட தில்லைஎன் புன்மையை நோக்கி
- ஈண்ட வந்தரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
- யாவும் நீஎன எண்ணிய நாயேன்
- மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
- மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
- சான்று கொண்டது கண்டனை யேனும்
- தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
- ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அம்மை அப்பன்என் ஆருயிர்த் துணைவன்
- அரசன் தேசிகன் அன்புடைத் தேவன்
- இம்மை யிற்பயன் அம்மையிற் பயன்மற்
- றியாவு நீஎன எண்ணிநிற் கின்றேன்
- செம்மை யிற்பெறும் அன்பருள் ளகஞ்சேர்
- செல்வ மேஎனைச் சேர்த்தரு ளாயேல்
- எம்மை யிற்பெறு வேன்சிறு நாயேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
- இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
- இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
- அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
- அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
- எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
- அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
- புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
- போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
- உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
- உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
- இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர்
- தாழ்வுண் டோஎனத் தருக்கொடும் இருந்தேன்
- எம்பி ரான்நினக் கேழையேன் அளவில்
- இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும்
- நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன்
- நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்
- செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
- கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
- எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
- இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
- உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
- உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- நாடுந் தாயினும் நல்லவன் நமது
- நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
- வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
- வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
- பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
- பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
- தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
- வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
- கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
- குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
- ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
- இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
- தேறு கின்றனன் என்செய்கேன் நினது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
- தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
- நாயி னும்கடை யேன்படும் இடரை
- நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
- ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
- அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
- தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
- மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
- நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
- நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
- கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
- குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
- தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- சிற்பர சிவனே தேவர்தம் தலைமைத்
- தேவனே தில்லைஅம் பலத்தே
- தற்பர நடஞ்செய் தாணுவே அகில
- சராசர காரணப் பொருளே
- அற்பர்தம் இடஞ்செல் பற்பல துயரால்
- அலைதரு கின்றனன் எளியேன்
- கற்பகம் அனையநின் திருவருட் கடலில்
- களிப்புடன் ஆடுவ தென்றோ.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
- நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
- வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
- ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
- பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
- பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
- பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே.
- பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
- செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
- எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
- அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே.
- ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
- பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
- வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
- கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
- குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
- தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
- உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே.
- அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
- பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
- துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
- டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- மறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்
- இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்
- பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
- அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே.
- தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
- ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
- பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
- நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே.
- ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே
- தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே
- வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்
- தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
- துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
- வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
- இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
- ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
- சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
- மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
- ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
- நிலத்தே சிறுவர்செய் குற்றங்கள் யாவும் நினைத்தறவோர்
- சலத்தே உளத்தை விடார்என்பர் ஆதலின் தாதையென்றே
- குலத்தேவர் போற்றும் குணக்குன்ற மேஎங் குலதெய்வமே
- புலத்தே இழிதகை யேன்பிழை யாவும் பொறுத்தருளே.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
- தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
- கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
- வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.
- வையகத் தேஇடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற
- பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
- நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
- மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.
- வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
- தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
- மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
- ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
- தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
- மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
- சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
- ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
- தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
- சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
- கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
- தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே.
- துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
- அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
- கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
- என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
- கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
- வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
- வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
- ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- கற்றே அறியாக் கடைப்புலையேன் ஆனாலும்
- உற்றேநின் தன்னைநினைந் தோதுகின்றேன் அல்லாமே
- மற்றேதும் தேறேன்என் வன்துயர்தீர்ந் துள்குளிரச்
- சற்றே இரங்கித் தயவுசெய்தால் ஆகாதோ.
- சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னைஅன்றி
- ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
- கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
- ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.
- பேய்அனையா ரோடும் பிழைபுரிந்தேன் ஆனாலும்
- நாய்அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன்
- தீஅனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
- தாய்அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே.
- என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
- உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
- மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
- தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
- அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
- நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
- பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
- வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.
- குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோன் வழியில் சென்றிடவா
- யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
- வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
- கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
- கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
- தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
- காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
- துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
- உள்ளற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
- கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
- நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
- உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
- கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
- வாழ்விக்க வேண்டுவல் போற்றி
- அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
- கருளமு தருளுக போற்றி
- பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
- பாடுதல் வேண்டும்நான் போற்றி
- தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
- தாங்குக போற்றிநின் பதமே.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
- அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
- தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
- திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
- கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
- அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
- வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
- தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.
- உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
- வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
- கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
- தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
- எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
- வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
- செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
- இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே.
- இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
- பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
- திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
- விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
- மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
- அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
- என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
- வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
- மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
- இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
- மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
- பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
- எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
- பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
- மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
- என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை
- உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
- மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
- என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
- இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
- கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
- திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே.
- நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
- தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
- வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
- பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- உரைத்தார் சிலர்சின் னாள்கழிய உறுவேம் என்ன உரைத்தவரே
- நரைத்தார் இறந்தார் அவர்தம்மை நான்கண் டிருந்தும் நாணாமே
- விரைத்தாள் மலரைப் பெறலாம்என் றெண்ணி வீணே இளைக்கின்றேன்
- திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே செய்தேன் என்ன செய்வேனே.
- செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
- வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
- உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
- நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.
- என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
- பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
- புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
- வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே.
- சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
- எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
- அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
- பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.
- புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
- நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
- மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
- கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே.
- குன்றா நிலைநின் றருள்அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன்நான்
- நன்றாம் நெறிசென் றறியாதே மனஞ்செல் வழியே நடக்கின்றேன்
- பொன்றா மணியே அவர்க்கருளி என்னை விடுத்தல் புகழன்றே
- என்றால் எனக்கே நகைதோன்றும் எந்தாய் உளத்துக் கென்னாமே.
- செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
- அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
- குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
- முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
- தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
- வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
- ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
- வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
- பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
- தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
- அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
- அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
- தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
- மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
- பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
- புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான்
- மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்ப்படினும்
- துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ
- நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே.
- சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
- விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
- தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
- தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
- கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
- ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
- எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
- சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
- சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
- நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
- நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும்.
- வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
- வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
- தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
- சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
- ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
- அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
- ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
- தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
- என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
- இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
- நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
- நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
- மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
- மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
- உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
- உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
- உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
- உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
- கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
- கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
- எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
- எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
- வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
- மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
- தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
- பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
- ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
- கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
- தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
- ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
- சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
- ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
- ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
- பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
- கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
- ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
- இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
- மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
- உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
- முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
- பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
- அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே.
- மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
- ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
- தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
- பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு வார்அருள் தேன்தருவார்
- ஊர்தரு வார்மதி யுந்தரு வார்கதி யுந்தருவார்
- ஏர்தரு வார்தரு வார்ஒற்றி யூர்எம் இறைவர்அன்றி
- யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும் அங்கும் இயம்புகவே.
- சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
- பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
- வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
- நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே.
- நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
- பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
- வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
- சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
- இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
- திலக வாணுத லார்க்கு ழன்றனை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
- கலக மேகனிந்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.
- நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
- தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
- அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
- எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
- ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
- பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
- வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
- தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
- உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
- பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
- விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
- கொடாதே எனைஏன்று கொள்.
- பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
- இகலில் இடையை இரட்டித் - தகவின்
- அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
- திருச்சிற் சபையானைத் தேர்ந்து.
- இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
- அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
- சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
- கென்னால் உறவே தினி.
- ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
- நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
- சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
- சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
- தாவி நான்பெரும் பாவி ஆயினன்
- ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
- வல்லி ஆனந்த வல்லி சேர்மண
- வாள னேஅரு ளாள னேமலை
- வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
- புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
- பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
- இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.
- திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
- செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
- மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
- எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
- அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
- துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
- வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
- இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
- மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
- பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
- இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.
- செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
- தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
- கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
- கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
- அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
- அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
- படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
- சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
- பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
- கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
- நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
- பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
- ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
- செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
- முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
- வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
- உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
- பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
- மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
- என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
- மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
- தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
- போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
- தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே.
- உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
- நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
- வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
- தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே.
- கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன் அலன்நின்னைக் கனவி லேனும்
- மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே எனத்துதியேன் வஞ்ச மில்லா
- நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ
- உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
- பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
- வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
- தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே.
- ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
- நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
- ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
- தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
- நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
- தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
- தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
- ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
- நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
- ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
- தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
- ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
- நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
- பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
- கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே.
- ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
- மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
- மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
- பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே.
- வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
- நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
- பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
- கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே.
- கலிநிலைத் துறை
- எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
- புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
- வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
- குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கலி விருத்தம்
- என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
- முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
- நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
- பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
- சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
- காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
- ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
- பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
- இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
- அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
- தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
- பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
- வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
- நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
- அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
- கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே.
- நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
- பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
- ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
- நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே.
- ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
- ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
- ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
- ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து.1
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
- உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
- கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
- குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.
- பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
- கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
- அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
- தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
- ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
- அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
- திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
- நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
- தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
- சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.
- நானது வாகு மருந்து - பர
- ஞான வெளியில் நடிக்கு மருந்து
- மோந வடிவா மருந்து - சீவன்
- முத்த ருளத்தே முடிக்கு மருந்து. - நல்ல
- புத்தமு தாகு மருந்து - பார்த்த
- போதே பிணிகளைப் போக்கு மருந்து
- பத்த ரருந்து மருந்து - அநு
- பானமுந் தானாம் பரம மருந்து. - நல்ல
- மாலயன் தேடு மருந்து - முன்ன
- மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
- காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
- காணுங் கனவினுங் காணா மருந்து. - நல்ல
- தற்பர யோக மருந்து - உப
- சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
- சிற்பர யோக மருந்து - உயர்
- தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. - நல்ல
- சேதப்ப டாத மருந்து - உண்டால்
- தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
- பேதப்ப டாத மருந்து - மலைப்
- பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. - நல்ல
- ஆர்க்கு மரிதா மருந்து - தானே
- ஆதி யநாதியு மான மருந்து
- சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
- தேடுவோர் தங்களை நாடு மருந்து. - நல்ல
- கரும்பி லினிக்கு மருந்து - கடுங்
- கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
- இரும்பைக் குழைக்கு மருந்து - பே
- ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து. - நல்ல
- இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
- மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.
- உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
- உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே.
- ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
- உத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே.
- கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்
- கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமா ரே.
- காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
- காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே.
- கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
- கேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே.
- கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி
- கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமா ரே.
- கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது
- கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமா ரே.
- இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
- இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
- தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
- சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
- அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
- ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
- ஆட்கொண் டருளிய தேஜ னடி
- வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
- வாளன டிமண வாள னடி. - கொம்மி
- கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
- கங்கைக் கருளிய கர்த்த னடி
- தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
- சிங்கம டியுயர் தங்க மடி. - கொம்மி
- தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
- சேர்ந்து கலந்தவ ராரே டி
- தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
- தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
- அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
- அன்பிற் புணர்ந்தவ ராரே டி
- துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
- தூய திருநட ராய ரடி.
- காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
- கற்பை யழித்தவ ராரே டி
- பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
- பித்தர் பரானந்த நித்த ரடி.
- தண்டலை விளங்குந் தில்லைத் தலத்திற்பொன் னம்பலத்தே
- கண்டவர் மயங்கவேடங் கட்டியாடு கின்றவர்க்கு தெண்ட
- கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
- கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
- அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
- ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
- பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
- மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
- குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
- சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
- வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
- மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
- அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
- என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
- பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
- பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
- வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
- வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
- வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
- விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.
- கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
- கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
- தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
- தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
- பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
- பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
- உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
- உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
- தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
- இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
- என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
- அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
- அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
- துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
- சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
- மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
- தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
- துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
- பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
- பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
- வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
- உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
- வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
- மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
- கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
- குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
- நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
- நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
- என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
- மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
- மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
- கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
- கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
- குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
- கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
- மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
- மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
- தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
- சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
- சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
- சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
- இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
- ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
- நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
- நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
- மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
- வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
- தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
- சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
- தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
- தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
- சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
- தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
- ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
- தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
- தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
- ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
- கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
- வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
- ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
- தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
- வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
- ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
- துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
- பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை
- வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது
- மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்
- குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
- தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
- என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
- கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
- தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
- படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
- கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு
- மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
- பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண்
- குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
- பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
- வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
- கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார்
- மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக்
- கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர்
- கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- எருதில் வருவார் ஒற்றியுளார் என்நா யகனார் எனக்கினியார்
- வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
- கருதி அவர்தங் கட்டளையைக் கடந்து நடந்தேன் அல்லவடி
- குருகுண் கரத்தாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்
- இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது
- திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
- குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தார்அவர்
- மாது மகிழ்தி எனஎன்னை மாலை யிட்டார் மாலையிட்ட
- போது கண்ட திருமுகத்தைப் போற்றி மறித்தும் கண்டறியேன்
- கோது கண்டேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
- மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண்
- கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக்
- கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வாடா திருந்தேன் மழைபொழியும் மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார்
- ஏடார் அணிபூ மாலைஎனக் கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
- தேடா திருந்தேன் அல்லடியான் தேடி அருகிற் சேர்ந்தும்எனைக்
- கூடா திருந்தார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர்
- வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து
- சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
- கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
- தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
- இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
- முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
- செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
- எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
- அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- கருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார்
- மருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார்
- தருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார்
- வருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- விற்கண் டாத நுதன்மடவாள் வேட்ட நடன வித்தகனார்
- சொற்கண் டாத புகழொற்றித் தூய ரின்றென் மனைபுகுந்தார்
- நிற்கண் டார்கண் மயலடைவா ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
- கற்கண் டாமென் றுரைத்தேனான் கற்கண் டாமென் றுரைத்தாரே.
- இருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
- பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
- விருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
- தருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- சடையில் தரித்தார் ஒருத்திதனைத் தழுவி மகிழ்மற் றொருபெண்ணைப்
- புடையில் தரித்தார் மகளேநீ போனால் எங்கே தரிப்பாரோ
- கடையில் தரித்த விடம்அதனைக் களத்தில் தரித்தார் கரித்தோலை
- இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என்னுளத்தே.
- உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
- களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
- இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே
- வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
- வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
- தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
- திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
- மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.
- கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
- உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
- தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
- எடுத்தார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்
- துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே
- இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
- எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
- நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
- பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
- வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
- எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
- தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
- பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
- ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
- தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
- ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
- வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
- தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
- கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
- தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
- தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
- செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
- செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என்
- கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
- குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார்
- திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
- வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
- கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
- திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
- ஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
- சாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால்
- சீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
- செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
- திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
- ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
- மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
- சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
- நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர்
- ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர்
- பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ
- வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
- பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
- ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
- நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
- காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
- ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
- ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
- காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும்
- நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே
- வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
- கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- சலங்கா தலிக்கும் தாழ்சடையார் தாமே தமக்குத் தாதையனார்
- நிலங்கா தலிக்கும் திருஒற்றி நியமத் தெதிரே நின்றனர்காண்
- விலங்கா தவரைத் தரிசித்தேன் மீட்டுங் காணேன் மெய்மறந்தேன்
- கலங்கா நின்றேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
- சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
- கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
- தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
- சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத் தேடி வரும்அத் தீமதியம்
- சார்ந்தால் அதுதான் என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
- பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
- மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
- இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்
- துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை
- எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
- வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
- இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
- மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
- என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
- ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
- யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
- வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி
- இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
- வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
- எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- மாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
- வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்
- யாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
- ஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
- இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
- உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
- தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
- களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
- ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
- மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
- வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
- உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
- சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
- பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
- ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
- திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
- பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
- இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
- எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
- உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
- இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
- சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
- மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
- காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
- மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
- நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
- ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
- சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
- தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
- ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
- நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
- இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
- இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
- சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
- பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
- கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை
- மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து
- படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்
- துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
- பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
- மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
- பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
- நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
- பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண
- நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து
- பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண
- இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து
- பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
- கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
- பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை
- விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து
- படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக்
- கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி
- பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
- அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
- படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆகின்ற அரசே
- ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
- கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
- வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
- வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
- பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
- பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
- கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
- விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
- விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
- பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
- பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
- எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
- என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
- பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
- காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
- கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
- மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
- மனமுருகி இருகண்ர் வடிக்கின்றேன் கண்டாய்
- ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
- எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.
- அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
- இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
- இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
- சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
- சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
- வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
- மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
- வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
- மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
- என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
- டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
- முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
- முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
- என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
- என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
- அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
- தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
- நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
- நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
- இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
- என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
- பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
- பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
- நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
- நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
- நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
- நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
- கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
- குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- சுற்றதுமற் றவ்வழியா சூததுஎன் றெண்ணாத்
- தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
- எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
- கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
- கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
- பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
- பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
- ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
- செஞ்சொலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
- திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
- எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
- இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
- துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
- துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
- நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
- நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
- தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
- தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
- தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
- சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
- வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
- மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
- எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
- உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
- உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
- மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
- வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
- குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
- கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.
- சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
- தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
- புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
- புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
- பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
- பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
- தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
- தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
- ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை
- எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
- ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
- உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
- தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
- திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
- போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
- போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
- முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
- முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
- பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
- பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
- தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
- தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
- இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
- எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
- தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
- தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
- அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
- ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
- என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
- திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
- இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
- என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
- அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
- ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
- எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
- உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
- இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
- இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
- கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
- ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
- திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
- தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
- வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
- வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
- தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
- செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
- குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
- குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
- அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
- தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
- மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
- வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
- ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
- இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
- என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
- இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
- தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
- சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
- களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
- உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
- உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
- அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
- ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
- கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
- கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
- மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
- மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
- புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
- பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
- நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
- தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
- தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
- கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
- கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
- குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
- அன்றகத்தே அடிவருத் நடந்தென்னை அழைத்திங்
- கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
- துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே
- சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
- இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
- தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
- மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
- வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.
- ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
- நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
- காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
- கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
- சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
- சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
- ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
- அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
- மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
- தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
- திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
- அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
- பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
- கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
- கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
- சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
- தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
- மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
- மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
- ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
- பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
- ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
- அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
- கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
- ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
- உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
- ஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்
- யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
- பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
- பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
- நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
- ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
- அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
- வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
- வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
- கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
- கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
- சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
- தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
- சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
- மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
- மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
- சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
- சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
- பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
- பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
- சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
- அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
- அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
- விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
- விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
- செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
- திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
- துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
- உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
- மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
- மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
- ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
- அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
- உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
- உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
- நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
- நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
- எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
- என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
- அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிறர்ந் தாட
- அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
- விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
- விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
- துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
- தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
- களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
- களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
- குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
- குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
- முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
- அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
- என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
- டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
- வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
- மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
- மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
- சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
- செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
- மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
- மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
- ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
- ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
- ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
- ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
- அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
- அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
- பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
- பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
- கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
- கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
- நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
- நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
- அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
- அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
- சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
- சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
- பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
- பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே.
- மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
- முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
- யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
- எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
- தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
- பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
- புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
- கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
- கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
- மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
- நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
- அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
- அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
- கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
- கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
- மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
- பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
- பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
- அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
- னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
- அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
- அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
- தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
- சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
- மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
- மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
- இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
- எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
- தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
- தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
- எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
- தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
- பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
- சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
- சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
- கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
- கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
- வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
- விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
- அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
- நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
- நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
- ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
- உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
- அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
- அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
- நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
- நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
- இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
- என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
- எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
- என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
- பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
- போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
- தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
- இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
- சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
- தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
- பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
- பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
- புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
- பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
- உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
- உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
- உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
- கள்ளமனத் தேனிருக்கும் இந்தேடி அடைந்து
- கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
- நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
- நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
- தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
- செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே .
- தன்னுருவங் காட்டாத மலஇரவு விடியுந்
- தருணத்தே உதயஞ்செய் தாள்மலர்கள் வருந்தப்
- பொன்னுருவத் திருமேனி கொண்டுநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தன்னுருவம் போன்றதொன்றங் கெனை அழைத்தென் கரத்தே
- தந்தருளி மகிழ்ந்திங்கே தங்குகஎன் றுரைத்தாய்
- என்னுருவம் எனக்குணர்த்தி அருளியநின் பெருமை
- என்னுரைப்பேன் மணிமன்றில் இன்பநடத் தரசே.
- அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
- கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
- கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
- துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
- உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
- தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
- பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
- செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
- திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
- பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
- பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
- நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்
- நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
- ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி
- யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்
- கறிவிலயேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
- ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
- என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
- தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
- தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
- முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
- முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
- மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
- வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
- பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
- பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
- வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
- வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
- செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
- உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
- முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
- பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
- படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
- சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
- திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
- சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
- தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
- இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
- தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
- தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
- கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
- உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
- மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
- யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
- உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
- போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
- புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
- நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
- நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
- காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
- காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
- பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
- குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
- மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
- மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
- ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
- அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
- வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
- விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
- பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
- பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
- சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
- சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
- கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
- காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
- ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
- றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
- துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
- துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
- வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
- வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
- ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
- கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
- சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
- சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
- வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
- விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
- பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
- பண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
- இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்
- எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே
- பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப்
- பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து
- மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து
- வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன்
- அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில்
- ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
- அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
- தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
- திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
- கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
- தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
- நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
- தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
- தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
- தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
- தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
- வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
- உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
- ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
- என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
- வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
- வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
- மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
- முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
- இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
- எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
- உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
- உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
- திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
- தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
- குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
- குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
- தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே
- சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே
- எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த
- இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- கம்மடியா185க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே.
- உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
- உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
- செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
- வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
- மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
- இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
- இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
- உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
- அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
- அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
- களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
- விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
- விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
- இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
- தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
- சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
- இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
- எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
- அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
- அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
- மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
- வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
- ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
- றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
- தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
- திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
- வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
- பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
- ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
- நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
- வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
- மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
- எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
- எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
- அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
- அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
- இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
- எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
- சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
- தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
- பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
- போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
- வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
- வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
- நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
- நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
- ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
- என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
- பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
- இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
- இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
- மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
- மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
- பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
- புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
- எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
- வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
- வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
- அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
- ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
- இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
- மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
- வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
- பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
- போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
- தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
- தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
- நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்
- நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
- தொடுங்கவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்
- துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
- கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
- கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
- இடுங்கிடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
- ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
- சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
- செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
- பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
- பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
- பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- அடிநாளில் அடியேனை அறிவுகுறிக் கொள்ளா
- தாட்கொண்டேன் சென்னிமிசை அமர்ந்தபதம் வருந்தப்
- படிநாளில் நடந்திரவில் அடைந்தருளித் தெருவில்
- படர்கதவந் திறப்பித்துப் பரிந்தெனைஅங் கழைத்துப்
- பிடிநாளு மகிழ்ந்துனது மனங்கொண்ட படியே
- பேரறஞ்செய் துறுகஎனப் பேசிஒன்று கொடுத்தாய்
- பொடிநாளும் அணிந்துமணிப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
- உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
- திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
- திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
- இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
- இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
- புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
- அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
- கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
- களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
- குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
- கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
- மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
- மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
- பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
- பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
- மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
- வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
- விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
- விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
- குழைஅசையக் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
- கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- திருவருடுந் திருவடிப்பொற் சிலம்பசைய நடந்தென்
- சிந்தையிலே புகுந்துநின்பாற் சேர்ந்துகலந் திருந்தாள்
- தெருமரலற் றுயர்ந்தமறைச் சிரத்தமர்ந்த புனிதை
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பொருவருமெய் யன்புடையார் இருவருங்கண் டுவந்து
- போற்றமணிப் பொதுவில்நடம் புரிகின்ற துரையே
- பருவரல்அற் றடிச்சிறியேன் பெருவரம்பெற் றுனையே
- பாடுகின்றேன் பெரியஅருட் பருவமடைந் தனனே.
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
- பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
- செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
- களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
- நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
- நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- பார்பூத்த பசுங்கொடிபொற் பாலைவயர்கள் அரசி
- பரம்பரைசிற் பரைபரா பரைநிமலை யாதி
- சீர்பூத்த தெய்வமறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏர்பூத்த மணிமன்றில் இன்பநடம் புரியும்
- என்னருமைத் துரையேநின் இன்னருளை நினைந்து
- கார்பூத்த கனைமழைபோல் கண்களின்நீர் சொரிந்து
- கனிந்துமிகப் பாடுகின்ற களிப்பைஅடைந் தனனே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
- தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
- சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
- வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
- உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
- உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.
- அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
- என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
- ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
- அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
- வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
- இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
- காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
- ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
- இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- இனிதனித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
- துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
- எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
- சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
- நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
- நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
- பவயோக இந்தியமும் இன்பமய மான
- படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
- தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- தெய்வமெலாம் வணங்குகின்ற தேவிஎனை அளித்தாள்
- சிவகாம வல்லியொடு திருமலிஅம் பலத்தே
- சைவமெலாந் தரவிளங்கு நின்வடிவைக் கொடியேன்
- தான்நினைத்த போதெனையே நான்நினைத்த நிலையேல்
- ஐவகைஇந் தியங்கடந்தார் கண்டவிடத் திருந்த
- அனுபவத்தின் வண்ணமதை யார்புகல வல்லார்
- உய்வகைஅந் நாள் உரைத்த தன்றியும்இந் நாளில்
- உந்திரவில் வந்துணர்வு தந்தசிவ குருவே.
- தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
- சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
- வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
- மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
- நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
- நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
- நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
- நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
- இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
- இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
- இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
- அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
- அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
- என்புருக மனஞான மயமாகும் என்றால்
- எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
- அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து
- மிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால்
- மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து
- இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்
- எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
- தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
- ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
- ஓதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
- இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
- சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
- வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
- எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
- எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
- இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
- எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
- தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
- பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்
- புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
- செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்
- செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
- சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
- மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
- வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
- பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
- புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
- சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
- உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
- பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
- பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
- கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
- குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
- தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
- பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
- மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
- மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
- ஐவகைய கடவுளரும் அந்தனரும் பரவ
- ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.
- நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
- நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
- புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
- கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
- கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
- தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
- தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
- கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
- புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
- தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
- தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
- கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
- கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
- நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
- நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
- புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
- என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
- என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
- அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
- ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.
- துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
- துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
- புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
- மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
- வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
- கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
- கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.
- பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
- பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
- புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
- கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
- கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
- விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
- கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
- பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
- ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
- அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
- மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
- வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
- செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
- பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
- பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
- தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
- றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில்
- எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும்
- இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே
- தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.
- முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால்
- அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே
- என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
- இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
- வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
- தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
- சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
- சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
- செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
- ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
- அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
- தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
- திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
- நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
- நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
- பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
- பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
- மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
- வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.
- விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
- வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
- மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
- வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
- பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
- பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
- கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
- கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.
- செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
- சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
- பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்
- பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
- உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே
- உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
- மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்
- வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே.
- அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
- அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
- தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
- செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
- இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
- இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
- மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
- வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
- தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
- செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை
- சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
- தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
- கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
- குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
- தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
- செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
- 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
- நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
- ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
- வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
- ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
- தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
- குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
- ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
- ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
- வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
- களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
- அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
- வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
- நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
- சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
- தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
- வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
- இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
- பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
- வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
- தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
- இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
- விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
- மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல் இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின்
- தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்என்னைத் தாங்கிக் கொள்ளும்சரன்பிறி தில்லைகாண்
- அன்னைவேண்டிஅ ழும்மகப் போல்கின்றேன் அறிகி லேன்நின்தி ருவுளம் ஐயனே
- மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
- மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
- ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
- கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
- சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
- தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
- கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
- கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
- கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
- மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
- திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
- வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
- மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
- ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
- தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
- பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- சிற்பகல் மேவும்இத் தேகத்தை ஒம்பித் திருஅனையார்
- தற்பக மேவிலைந் தாழ்ந்தேன் தணிகை தனில்அமர்ந்த
- கற்பக மேநின் கழல்கரு தேன்இக் கடைப்படும்என்
- பொற்பகம் மேவிய நின்அருள் என்என்று போற்றுவதே.
- போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
- சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
- ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
- மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
- வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
- நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
- ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
- தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.
- கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
- வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
- தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
- நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே
- கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே
- என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும்
- துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- அடையாத வஞ்சகர் பால்சென் றிரந்திங் கலைந்தலைந்தே
- கடையான நாய்க்குள் கருணைஉண் டோதணி கைக்குள்நின்றே
- உடையாத நல்நெஞ்சர்க் குண்மையைக் காண்பிக்கும் உத்தமனே
- படையாத தேவர் சிறைமீட் டளித்தருள் பண்ணவனே.
- பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
- என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
- மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
- இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.
- சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
- வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
- எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
- செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.
- அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
- பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
- தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
- துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
- களித்து நின்திருக் கழலிணை ஏழையேன் காண்பனோ அலதன்பை
- ஒளித்து வன்துயர் உழப்பனோ இன்னதென் றுணர்ந்திலேன் அருட்போதம்
- தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணிதேவே
- தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்சிவ தாருவே மயிலோனே.
- மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
- செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
- அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
- கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
- உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இடர் உழந்தகம் உலைவுற்றேன்
- வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
- குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
- தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.
- தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
- மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
- கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
- பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
- ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
- வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
- காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
- சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
- ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
- யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
- சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
- வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
- தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
- செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
- கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
- பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
- தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
- இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
- விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
- திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
- எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
- கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
- செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
- கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
- கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
- திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
- மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
- நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
- சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- கல்லா நாயேன் எனினும்எனைக் காக்கும் தாய்நீ என்றுலகம்
- எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளா திருத்திஎனில்
- பொல்லாப் பழிவந் தடையும்உனக் கரசே இனியான் புகல்வதென்னே
- செல்லார் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
- என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
- மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
- தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
- கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
- தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
- செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
- செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
- கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
- குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
- பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
- பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
- பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
- பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- தெளிக்குமறைப் பொருளேஎன் அன்பே என்றன்
- செல்வமே திருத்தணிகைத் தேவே அன்பர்
- களிக்கும்மறைக் கருத்தேமெய்ஞ் ஞான நீதிக்
- கடவுளே நின்அருளைக் காணேன் இன்னும்
- சுளிக்கும்மிடித் துயரும்யமன் கயிறும் ஈனத்
- தொடர்பும்மலத் தடர்பும்மனச் சோர்வும் அந்தோ
- அளிக்கும்எனை என்செயுமோ அறியேன் நின்றன்
- அடித்துணையே உறுதுணைமற் றன்றி உண்டோ.
- உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
- ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
- கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
- காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
- தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
- தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
- விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
- வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
- வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
- பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
- பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
- தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
- தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
- ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
- அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.
- பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
- பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
- கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
- காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
- விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
- விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
- தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
- புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
- வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
- மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
- இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
- வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
- தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
- பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
- கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
- என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
- கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
- கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
- தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
- பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
- துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
- ஊர்நகைக்கப் பாவிஅழல் உணர்ந்தி லாயோ
- என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
- இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
- தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
- றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
- மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
- மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
- தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
- சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
- சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
- கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
- பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
- புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
- எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
- இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
- சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
- தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
- ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
- ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
- இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
- என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
- நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.
- தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
- மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
- ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
- தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
- சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
- செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
- மங்க லம்பெற வைத்த வள்ளலே
- தங்க ருள்திருத் தணிகை ஐயனே.
- செழிக்கும் சீர்திருத் தணிகைத் தேவநின்
- கொழிக்கும் நல்லருள் கொள்ளை கொள்ளவே
- தழிக்கொண் டன்பரைச் சார்ந்தி லேன்இவண்
- பழிக்குள் ஆகும்என் பான்மை என்னையோ.
- அப்பன் என்னுடை அன்னை தேசிகன்
- செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன்
- துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர்
- தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- என்சொல் கேன்இதை எண்ணில் அற்புதம்
- வன்சொ லேன்பிழை மதித்தி டாதுவந்
- தின்சொ லால்இவண் இருத்தி என்றனன்
- தன்சொல் செப்பரும் தணிகைத் தேவனே.
- தேவ நேசனே சிறக்கும் ஈசனே
- பாவ நாசனே பரம தேசனே
- சாவ காசனே தணிகை வாசனே
- கோவ பாசனே குறிக்கொள் என்னையே.
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
- அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
- பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
- தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
- பரஞ்சுடர் நின்அடி பணியும்
- புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- நித்திய அடியர் தம்முடன் கூட்ட
- நினைந்திடில் உய்குவன் அரசே
- சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
- பாததா மரைகளுக் கன்பு
- புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
- திருவுளம் அறிகிலன் தேனே
- சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
- தணிகைவாழ் சரவண பவனே.
- மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலைமருந்தே
- அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே
- பொன்னே ஞானப் பொங்கொளியே புனித அருளே பூரணமே
- என்னே எளியேன் துயர்உழத்தல் எண்ணி இரங்கா திருப்பதுவே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
- கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்
- உருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த
- ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்
- தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே
- போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
- சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.
- சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
- காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
- மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
- தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
- தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
- பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
- தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
- உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
- செய்வ துனது திருவடிக்காம் திறனே சிந்தை நின்பாலே
- வைவ துன்னை நினையாத வஞ்ச கரையே வழுத்திநிதம்
- உய்வ துனது திருநாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால்
- எய்வ தறியேன் திருத்தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.
- எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
- அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
- ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
- வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
- செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
- உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
- அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
- உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
- யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
- ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
- அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
- கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
- ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.
- பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
- கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
- உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
- தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
- ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.
- கற்கி லேன்உன தருட்பெயர் ஆம்குக கந்தஎன் பவைநாளும்
- நிற்கி லேன்உன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ
- சொற்கி லேசமில் அடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே
- அற்கி லேர்தரும் தணிகைஆர் அழுதமே ஆனந்த அருட்குன்றே.
- பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
- தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
- காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
- யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே.
- சைவ நாயக சம்பந்தன் ஆகிய தமிழ்அருட் குன்றேஎன்
- தெய்வ மேநினை அன்றிஓர் துணையிலேன் திருவருள் அறியாதோ
- வைவ தேகொளும் வஞ்சகர் தம்இடை வருந்திநெஞ் சழிகின்றேன்
- செய்வ தோர்கிலேன் கைவிடில் என்செய்கேன் தெளிவிலாச் சிறியேனே.
- கொள்ளேனோ நீஅமர்ந்த தணிகைமலைக் குறஎண்ணம் கோவே வந்தே
- அள்ளேனோ நின்அருளை அள்ளிஉண்டே ஆனந்தத் தழுந்தி ஆடித்
- துள்ளேனோ நின்தாளைத் துதியேனோ துதித்துலகத் தொடர்பை எல்லாம்
- தள்ளேனோ நின்அடிக்கீழ்ச் சாரேனோ துணைஇல்லாத் தனிய னேனே.
- இவ்வேளை அருள்தணிகை அமர்ந்தருளும் தேவைஎன திருகண் ஆய
- செவ்வேளை மனங்களிப்பச் சென்றுபுகழ்ந் தானந்தத் தெளிதேன்உண்டே
- எவ்வேளை யும்பரவி ஏத்தேனோ அவன்பணிகள் இயற்றி டேனோ
- தெவ்வேளை அடர்க்கவகை தெரியாமல் உழல்தருமிச் சிறிய னேனே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
- தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
- ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
- ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.
- தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே
- நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக்
- கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று
- பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ.
- வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
- சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
- வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
- தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
- காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
- போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
- பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
- நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல்
- பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே
- உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச்
- சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.
- நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
- கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
- முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே
- அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
- பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
- மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
- திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
- சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
- வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
- மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
- இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
- பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
- செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
- தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சிதம்மேவி நின்ற சிவமே
- கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே
- தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா சலத்தெம் அரசே
- நானே ழைஇங்கு மனம்நொந்து நொந்து நலிகின்ற செய்கை நலமோ.
- நலமேவு தொண்டர் அயன்ஆதி தேவர் நவைஏக நல்கு தணிகா
- சலமேவி உன்றன் இருதாள் புகழ்ந்து தரிசிப்ப தென்று புகலாய்
- நிலமேவு கின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே
- வலமேவு வேல்கை ஒளிர்சேர் கலாப மயில்ஏறி நின்ற மணியே.
- உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
- பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
- மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
- கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
- எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
- நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
- தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
- வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்ந்த அமுதே.
- அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
- அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
- தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
- தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
- தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
- தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
- எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
- தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
- மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
- மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
- கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
- கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
- இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
- திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ர்ப்
- பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
- பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
- வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
- மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
- எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- காமாந்த காரியாய் மாதர் அல்குல்
- கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
- நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
- நாயகமா மணியேநல் நலமே உன்றன்
- பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
- பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
- ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
- நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
- வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
- வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
- சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
- செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
- என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
- ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
- செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
- தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
- கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
- கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
- எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
- அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
- திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
- திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
- கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
- காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
- இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
- அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
- செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
- திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
- நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
- நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
- எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
- பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
- கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
- கைகுவியேன் மெய்குளிரேன் கண்ர் பாயேன்
- உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
- உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
- எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
- தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
- திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
- கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
- வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
- உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
- கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
- மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
- தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
- தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
- வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
- பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
- மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
- செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
- வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
- வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
- தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
- திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
- ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
- ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
- ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
- மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
- இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
- ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
- மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
- வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
- புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
- புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வஞ்சமட மாதரார் போகம் என்னும்
- மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
- கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
- காணாத செங்கனியில் கனிந்த தேனே
- தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
- தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
- எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
- நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
- மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
- முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுத்தாக் கொடிய மரம்அனையேன்
- துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துணைகாணேன்
- செக்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
- முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ முறையேயோ.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
- உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
- பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
- முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
- பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
- கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
- மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
- முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
- கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
- மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
- மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
- வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
- ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
- போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.
- மூதா னந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
- மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
- பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
- கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
- அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
- அண்ண லேதணி காசலத் தரசே
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
- கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
- பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தாயும் தந்தையும் சாமியும் எனது
- சார்பும் ஆகிய தணிகையங் குகனே
- ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
- ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.
- தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
- தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
- பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
- சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
- ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
- உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.
- மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
- மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
- பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பித்த நாயகன் அருள்திருப் பேறே
- பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
- தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
- சலத்தின் மேவிய தற்பர ஒளியே.
- அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
- அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
- பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
- மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
- வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
- வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.
- கடைப்பட் டேங்கும்இந் நாயினுக் கருள்தரக் கடவுள்நீ வருவாயேல்
- மடைப்பட் டோங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்
- தடைப்பட் டாய்எனில் என்செய்வேன் என்செய்வேன் தளர்வது தவிரேனே
- அடைப்பட் டோங்கிய வயல்திருத் தணிகையம் பதிஅமர்ந் திடுதேவே.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
- கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
- சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
- பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
- ஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.
- கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
- அருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே
- திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
- ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.
- பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
- கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
- வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
- பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.
- எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
- ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
- செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
- நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
- ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
- மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
- தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
- நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
- திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
- கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
- கழல்வழி நடத்தும்நாள் உளதோ
- மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
- வண்புனத் தடைந்திட்ட மணியே
- வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
- மாமலை அமர்ந்தருள் மருந்தே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
- முறியனேன் தனக்குநின் அடியாம்
- ஏடவிழ் கமலத் திருநற வருந்த
- என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
- ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
- ஐயருக் கொருதவப் பேறே
- கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே
- ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
- நாயினும் கடையஇந் நாய்க்குன்
- சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
- தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
- ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
- அருள்பழுத் தளிந்தசெங் கனியே
- கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
- பாவியேன் தன்முகம் பார்த்திங்
- கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
- இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
- சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
- தெள்ளிய அமுதமே தேனே
- குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
- பதகர்பால் நாள்தொறும் சென்றே
- வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
- வாட்டம்இங் கறிந்திலை என்னே
- ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
- அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
- கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
- வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
- துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
- துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
- அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
- அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
- கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
- பெயரும் பிச்சைப் பெருமானார்
- திரமன் றினிலே நடனம் புரிவார்
- சிவனார் மகனார் திறல்வேலார்
- தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
- தணிகா சலனார் தமியேன்முன்
- வரமன் றவும்மால் கொளநின் றனனால்
- மடவார் அலரால் மனநொந்தே.
- என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
- என்னுடைப் பொருளினை எளியேன்
- மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
- மணியினை அணியினை வரத்தை
- மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
- மிளிர்அருள் தருவினை அடியேன்
- தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
- வாகையம் புயத்தனை வடிவேல்
- தீரனை அழியாச் சீரனை ஞானச்
- செல்வனை வல்வினை நெஞ்சச்
- சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
- சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
- தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- குழகனை அழியாக் குமரனை அட்ட
- குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
- அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
- றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
- கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
- காலனை வேலனை மனதில்
- சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
- மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
- துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
- மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
- அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பெருவாழ்வே
- கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
- விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.
- வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீந்தக்
- காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
- தூண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
- ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- கல்லை ஒத்தஎன் நெஞ்சினை உருக்கேன்
- கடவுள் நின்அடி கண்டிட விழையேன்
- அல்லை ஒத்தகோ தையர்க்குளங் குழைவேன்
- அன்பி லாரொடும் அமர்ந்தவம் உழல்வேன்
- தில்லை அப்பன்என் றுலகெடுத் தேத்தும்
- சிவபி ரான்தருஞ் செல்வநின் தணிகை
- எல்லை உற்றுனை ஏத்திநின் றாடேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
- மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
- ஐய நின்திரு அடித்துணை மறவா
- அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
- உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
- உடைய நாயகன் உதவிய பேறே
- எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
- புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
- நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
- நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
- விலையி லாதநின் திருவருள் விழையேன்
- வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
- இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
- வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
- தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
- சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
- அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
- இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- நச்சி லேபழ கியகருங் கண்ணார்
- நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
- பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
- பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
- சச்சி12 லேசிவன் அளித்திடும் மணியே
- தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
- எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
- வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
- புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
- பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
- அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
- அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
- என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
- பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
- தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
- சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
- ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
- உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
- எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
- உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்
- வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்
- விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே
- தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்
- தனய நின்திருத் தணிகையை அடையேன்
- ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
- படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
- தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
- தடத்த ளாவிய தருமநல் தேவே
- பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
- பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
- எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
- டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
- காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
- வான மேவுறும் பொழில்திருத் தணிகை
- மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
- ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
- நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
- ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்
- மன்றார்நடம் உடையார்தரு மகனார்பசு மயில்மேல்
- நின்றார்அது கண்டேன்கலை நில்லாது கழன்ற
- தென்றாரொடு சொல்வேன்எனை யானேமறந் தேனே.
- செங்கண்விடை தனில்ஏறிய சிவனார்திரு மகனார்
- எங்கண்மணி அனையார்மயி லின்மீதுவந் திட்டார்
- அங்கண்மிக மகிழ்வோடுசென் றவர்நின்றது கண்டேன்
- இங்கண்வளை இழந்தேன்மயல் உழந்தேன்கலை எனவே.
- தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
- பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்
- கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
- கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
- காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
- ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
- உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
- இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
- ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
- செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
- மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
- தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
- நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
- ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
- காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
- நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
- போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
- புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
- பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
- திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
- எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.
- விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம்
- திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால்
- இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன்
- வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.
- வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
- நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
- தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
- மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
- என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
- காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
- கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
- சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
- திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
- சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
- தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
- காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
- தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
- கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
- தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
- சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
- வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
- நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
- காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
- தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
- ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
- ஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.
- தேடுங் கிளிநீ நின்னை விளம்பித் திருஅன்னார்
- அடுந் தணிகையில் என்உயிர் அன்னார் அருகேபோய்க்
- கூடும் தனமிசை என்பெயர் வைத்தக் கோதைக்கே
- ஈடும் கெடஇன் றென்னையும் ஈந்தருள் என்பாயே.
- பொன்னை இருத்தும் பொன்மலர் எகினப் புள்ளேநீ
- அன்னை இகழ்ந்தே அங்கலர் செய்வான் அனுராகம்
- தன்னை அளிக்குந் தண்டணி கேசர் தம்பாற்போய்
- என்னை இகழ்ந்தாள் என்செயல் கொண்டாள் என்பாயே.
- மன்றேர் தணிகையி னின்றீர் கதிதர வந்தீரோ
- என்றே னசைதரு மின்றேன் மொழியாய் யானுன்பால்
- இன்றே சுரருல கெய்திட வந்தே னென்றார்காண்
- குன்றேர் முலையா யென்னடி யவர்சொற் குறிதானே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
- கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
- பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
- எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.
- மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
- சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
- குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
- துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
- சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
- சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
- பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
- உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
- அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
- மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.
- உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
- திலகம் திகழிடத்துத் தேவே-இலகுதிருப்
- புள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்
- உள்ளிருக்கும் துன்பை ஒழி.
- செக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்
- அக்கட் பரிதிபுரத் தார்ந்தோங்கும்-முக்கண்
- குழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேஎன்
- பிழைக்கிரங்கி ஆளுதியோ பேசு.
- பெண்குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க்குணங்கொள்
- நாயேன்றன் பிழைகள் எல்லாம்
- எண்குணப்பொற் குன்றேநின் திருஉளத்தில்
- சிறிதேனும் எண்ணேல் கண்டாய்
- பண்குணத்தில் சிறந்திடும்நின் பத்தர்தமைப்
- புரப்பதுபோல் பாவி யேனை
- வண்குணத்தில் புரத்தியிலை யேனும்எனைக்
- கைவிடேல் வடிவே லோனே.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- பண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு
- கண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்
- திண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு
- மண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.
- வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
- நன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
- நின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு
- பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- கூழுக் கழுவேனோ கோத்தணிகைக் கோவேஎன்
- ஊழுக் கழுவேனோ ஓயாத் துயர்ப்பிறவி
- ஏழுக் கழுவேனோ என்செய்கேன் என்செய்கேன்
- பாழுக் கிறைத்தேன்ஈ துன்செயலோ பார்க்கும்இடம்
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதுமியாம்
- ஓதா தவமே யுழனெஞ்சே-மீதாத்
- ததிதி யெனமயிலிற் றானாடி நாளுந்
- திதிதி தருந்தணிகைத் தே.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
- நிலன்உண்டு பலனும்உண்டு
- நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
- நெறிஉண்டு நிலையும் உண்டு
- ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
- உடைஉண்டு கொடையும்உண்டு
- உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
- உளம்உண்டு வளமும்உண்டு
- தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
- செல்வங்கள் யாவும்உண்டு
- தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
- தியானமுண் டாயில்அரசே
- தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
- ஒல்லைவிட் டிடவுமில்லை
- உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
- உனைஅன்றி வேறும்இல்லை
- இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
- இசைக்கின்ற பேரும்இல்லை
- ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
- றியம்புகின் றோரும்இல்லை
- வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
- மற்றொரு வழக்கும்இல்லை
- வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
- வன்மனத் தவனும்அல்லை
- தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- அருளார் அமுதே சரணம் சரணம்
- அழகா அமலா சரணம் சரணம்
- பொருளா எனைஆள் புனிதா சரணம்
- பொன்னே மணியே சரணம் சரணம்
- மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
- மயில்வா கனனே சரணம் சரணம்
- கருணா லயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- பூவே மணமே சரணம் சரணம்
- பொருளே அருளே சரணம் சரணம்
- கோவே குகனே சரணம் சரணம்
- குருவே திருவே சரணம் சரணம்
- தேவே தெளிவே சரணம் சரணம்
- சிவசண் முகனே சரணம் சரணம்
- காவேர் தருவே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- நடவும் தனிமா மயிலோய் சரணம்
- நல்லார் புகழும் வல்லோய் சரணம்
- திடமும் திருவும் தருவோய் சரணம்
- தேவர்க் கரியாய் சரணம் சரணம்
- தடவண் புயனே சரணம் சரணம்
- தனிமா முதலே சரணம் சரணம்
- கடவுள் மணியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
- ஒன்றே பலவே சரணம் சரணம்
- தெளியும் தெருளே சரணம் சரணம்
- சிவமே தவமே சரணம் சரணம்
- அளியும் கனியே சரணம் சரணம்
- அமுதே அறிவே சரணம் சரணம்
- களியொன் றருள்வோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
- அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
- செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
- வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
- அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
- கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
- திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
- குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே.
- சச்சிதா னந்த உருவாண்டி - பர
- தற்பர போகந் தருவாண்டி
- உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
- உத்தம தேவனைப் பாடுங்கடி.
- செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
- செங்கல்வ ராயரே வாரும்
- எங்குரு நாதரே வாரும்.
- சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
- தேவர்கள் தேவரே வாரும்
- மூவர் முதல்வரே வாரும்.
- வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால்
- என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும்
- தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர்
- பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே.
- மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
- கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
- ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
- சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன்
- இதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதான்
- எதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
- அதுவின் றணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மருகா வொற்றி வாணர்பலி வாங்க வகையுண் டேயென்றேன்
- ஒருகா லெடுத்தேன் காணென்றா ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன்
- வருகா விரிப்பொன் னம்பலத்துள் வந்தாற் காட்டு வேமென்றார்
- அருகா வியப்பா மென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவர் நீரணியும்
- மாலை யாதென் றேனயன்மால் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுத்ததென்றார்
- ஆலு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
- அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
- எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
- உட்டா வகற்று மந்தணர்க ளுறையூர் மாதே யுணரென்றார்
- அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒற்றி நகரீர் மனவாசி யுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
- பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
- மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுணரும் வகைநான்கும்
- அற்றி டென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
- ஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
- உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
- அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
- என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
- துன்றும் விசும்பே யென்றனர்நான் சூதா முமது சொல்லென்றேன்
- குன்றுங் குடமு மிடையுனது கொங்கை யெனவே கூறினரே.
- கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
- மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
- ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
- ஒசிய விடுகு மிடையாரை யொற்றி யிருந்தே வுருக்குகின்ற
- வசியர் மிகநீ ரென்றேனென் மகனே யென்றார் வளர்காமப்
- பசிய துடையே னென்றேனுட் பணியல் குலுமப் படியென்றார்
- நிசிய மிடற்றீ ராமென்றேன் நீகண் டதுவே யென்றாரே.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
- ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
- சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
- ஞால ராதி வணங்குமொற்றி நாதர் நீரே நாட்டமுறும்
- பால ராமென் றுரைத்தேனாம் பால ரலநீ பாரென்றார்
- மேல ராவந் திடுமென்றேன் விளம்பேல் மகவு மறியுமென்றார்
- கோல ராமென் றுரைத்தேன்யாங் கொண்டோ முக்க ணென்றாரே.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ருவப்புடனே
- யென்னா குலத்தை யோட்டுமென்றே னிடைய ரலநா மென்றுரைத்தார்
- பொன்னாற் சடையீ ரென்றேனென் புதிய தேவி மனைவியென்றார்
- சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் சுத்த வியப்பொன் றென்றாரே.
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
- கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
- மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
- மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
- தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
- தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
- நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
- நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
- மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
- தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
- தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
- ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
- குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
- கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
- காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
- கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
- ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
- வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
- இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
- களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
- துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
- விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
- பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே
- வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய்
- ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
- தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
- ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
- ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
- தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம்
- குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக்
- கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
- பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே.
- இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை
- வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத்
- திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங்
- கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே.
- துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்
- கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
- பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
- கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்160 எங்கே அங்கே கண்டேனே.
- நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
- அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
- சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
- வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
- ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
- பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
- ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
- மின்திரண்டு நின்றசடை மேல்.
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
- அறிவித்த சுத்தஅறிவே
- அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை
- அவாவிஇடல் என்றமணியே
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே
- நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
- அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
- அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
- இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே
- இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
- தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- கண்மூன் றுடையான் எவன்அவனே கடவுள் அவன்தன் கருணைஒன்றே
- கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக்கருத்தை
- மண்மூன் றறக்கொண் டிருந்தவரே வானோர் வணங்கும் அருந்தவராம்
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
- திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
- கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
- உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
- கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.
- சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
- ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
- வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
- தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
- தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
- நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
- திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
- வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
- கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
- செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
- மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
- தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
- தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
- மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
- தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
- தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
- ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
- நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
- தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- அற்புதக் கணபதி அமல போற்றியே
- தற்பர சண்முக சாமி போற்றியே
- சிற்பர சிவமகா தேவ போற்றியே
- பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
- சாமிசிவ காமியிடமார்
- சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
- சத்யமொழி தன்னைநம்பி
- எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
- ஏத்திவினை தனைமாற்றியே
- இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
- ஏழையேன் ஒருவன்அந்தோ
- சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
- செப்புவாய் வேதனாதி
- தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
- சித்தர்களும் ஏவல்புரிய
- அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
- கருண்முக விலாசத்துடன்
- அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
- இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- எள்ளேத நின்னிடத்தே எண்ணுகின்ற தோறுமதை
- உள்ளே நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம்
- ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- இத்தா ரணிக்குளெங்கு மில்லாத தீமைசெய்தேன்
- அத்தா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- பொய்யால் விரிந்த புலைமனத்தேன் செய்பிழையை
- ஐயா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- இப்பாவி நெஞ்சா லிழுக்குரைத்தே னாங்கதனை
- அப்பாநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- எண்ணாக் கொடுமையெலா மெண்ணியுரைத் தேனதனை
- அண்ணா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- எச்சோடு மில்லா திழிந்தேன் பிழைகளெலாம்
- அச்சோநி னைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்
- வைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா.
- சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
- வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
- மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
- வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
- மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
- வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
- மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
- பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா.
- எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
- விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா.
- வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
- என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.
- அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
- இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
- எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
- வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
- கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்
- அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.
- ஈடணைகள் நீக்கிநமக் கின்பளிக்கு மென்றுமன்றில்
- ஆடுந் திருவடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே.
- நானந்த மெய்தா நலம்பெறவே யெண்ணிமன்றில்
- ஆனந்த நாடகத்துக் கன்புவைத்தேன் ஐயாவே.
- வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
- ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.
- பொற்புறவே பொன்றாப் பொருளளிக்கு மென்றுமன்றில்
- அற்புதப்பொற் சேவடிக்கே அன்புவைத்தேன் ஐயாவே.
- ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
- ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.
- தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
- எல்லாம்வல் லான்தனையே ஏத்து197.
- திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
- அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
- பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
- அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
- எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
- அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
- செடியறுத் தேதிட தேகமும் போகமும்
- அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
- தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
- தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
- ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
- அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
- கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
- அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
- அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
- அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
- பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
- அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
- நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
- ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
- அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி
- விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
- அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
- உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
- அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
- அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
- அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
- அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
- தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
- அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
- உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
- உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
- இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
- உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
- கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
- வையமேல் வைத்த மாசிவ பதியே
- பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
- தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
- பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
- வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
- சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
- தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
- சீருற வருளாந் தேசுற வழியாப்
- பேருற வென்னைப் பெற்றநற் றாயே
- அருளமு தேமுத லைவகை யமுதமும்
- தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
- இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
- உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
- கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
- அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே
- சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
- சித்தியை யளித்த தெய்வநற் றாயே
- அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
- பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
- என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
- என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
- அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
- இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
- பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
- இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
- ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
- ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
- சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
- இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே
- துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
- உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
- அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
- என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
- என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
- என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
- சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
- இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
- தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
- இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
- படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
- இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
- மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
- ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
- உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
- இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
- அறிவவை பலவா யறிவன பலவாய்
- எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
- நினைவவை பலவாய் நினைவன பலவாய்
- இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே
- காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
- ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
- செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
- எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
- அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
- எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
- எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
- எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே
- கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
- நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
- சத்திய வமுதே தனித்திரு வமுதே
- நித்திய வமுதே நிறைசிவ வமுதே
- சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
- மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
- ஆனந்த வமுதே யருளொளி யமுதே
- தானந்த மில்லாத் தத்துவ வமுதே
- நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
- சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
- பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
- கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
- அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
- உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
- பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
- தனிமுத லாய சிதம்பர வமுதே
- உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
- அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
- அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
- கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
- மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
- தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
- உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
- மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
- சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
- தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
- இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
- சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
- மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
- கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
- நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
- உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
- என்றே யென்னினு மிளமையோ டிருக்க
- நன்றே தருமொரு ஞானமா மருந்தே
- மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
- நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
- சிற்சபை நடுவே திருநடம் புரியும்
- அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
- உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
- கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
- என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
- என்பெருந் தயவே யென்பெருங் கதியே
- தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
- என்னுளே நிறைந்த என்றனி யன்பே
- அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
- இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
- துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
- லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
- மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
- இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
- தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
- ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
- தண்ணிய வமுதே தந்தென துளத்தே
- புண்ணியம் பலித்த பூரண மதியே
- உய்தர வமுத முதவியென் னுளத்தே
- செய்தவம் பலித்த திருவளர் மதியே
- மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
- அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
- என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
- அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
- மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
- யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
- ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
- கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
- கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
- கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
- கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
- ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
- இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
- பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
- பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
- விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
- விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
- உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
- புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
- வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
- குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் கலகர்தம் உறவினிற் களித்தேன்
- உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியற் போகமே உவந்தேன்
- செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
- குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினுங் கடையேன்
- இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் இயலுறு நாசியுட் கிளைத்த
- சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
- குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
- பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
- செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
- கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
- குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
- மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
- வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
- நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
- நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
- நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
- விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
- விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
- அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
- அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
- கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
- கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
- களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
- கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
- அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
- அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
- குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
- கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
- செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
- சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
- எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
- இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.
- இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
- இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
- அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
- அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
- பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
- பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
- தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
- தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
- ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
- ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
- சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
- செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
- மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
- வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
- வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
- அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ
- டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
- புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
- புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
- பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்
- பசைஅறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்
- விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
- வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
- தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
- பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
- பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
- அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
- ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
- நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- நல்லதிரு வுளம்அறியேன் ஞானநடத் திறையே.
- இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
- இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
- பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
- புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
- நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
- நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
- கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித்
- தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
- கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
- கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
- ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
- ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
- சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
- தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
- சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
- ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
- இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
- வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
- வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
- ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
- காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
- மான மேலிடச் சாதியே மதமே
- வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
- ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
- இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
- ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
- நாய காஎனை நயந்துகொண் டருளே.
- இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
- இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன்
- மருளை யேதரு மனக்குரங் கோடும்
- வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன்
- பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன்
- பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன்
- அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
- மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
- திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
- செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
- இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
- எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
- இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
- கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
- நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
- நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
- சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
- இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
- சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
- யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
- உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
- ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
- அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
- ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
- சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
- அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
- அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
- சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
- தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
- எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
- பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
- கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
- இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
- முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
- உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
- மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
- கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
- அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
- வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
- தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
- எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
- தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
- வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
- சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
- ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
- பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
- கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
- திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
- எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
- வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
- பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
- நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
- துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
- கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
- அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
- கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
- சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.
- நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
- ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
- தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
- மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
- நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
- உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே
- வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற
- பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே.
- இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
- வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
- அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
- துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
- எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
- அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
- சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
- முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
- எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ
- அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை
- இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்
- பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203.
- கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
- வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
- பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
- ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
- போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
- ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
- காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
- மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
- விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
- வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணைஎனமதித்துக்
- கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் கொக்கனேன் செக்கினைப் பலகால்
- இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
- புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
- தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
- உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
- இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் என்னினும் காத்தருள் எனையே.
- நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
- போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
- ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
- ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
- தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
- கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதிய கருத்தேன்
- பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
- எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
- சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
- தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
- வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
- உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால்
- கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த
- தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்
- திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
- சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
- இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
- குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
- வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்
- உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே
- துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப்
- பொறுத்தலேஅறியேன் மலப்புலைக்கூட்டைப்பொறுத்தனன்என்செய்வேன்எந்தாய்.
- பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
- உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
- கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
- துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
- தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
- பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
- முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
- உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
- அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
- தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
- கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
- செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையும் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
- உடல்பொருள் ஆவியும் உனக்கே
- பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
- பின்னும்நான் தளருதல் அழகோ
- என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
- முறிதல்ஓர் கணம்தரி யேனே.
- தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
- தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
- தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
- தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
- எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
- எய்துகேன் யார்துணை என்பேன்
- திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
- திருவுளம் தெரிந்தது தானே.
- தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே
- சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
- தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததெந் தாயே
- ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும்
- அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில்
- நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே
- நடம்புரி ஞானநா டகனே.
- இனியநற் றாயின் இனியஎன் அரசே
- என்னிரு கண்ணினுண் மணியே
- கனிஎன இனிக்கும் கருணையா ரமுதே
- கனகஅம் பலத்துறும் களிப்பே
- துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
- சோர்வுறு முகமும்கொண் டடியேன்
- தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
- தந்தநற் றந்தைநீ அலையோ.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
- இயற்கையின் நிறைந்தபே ரின்பே
- அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
- அம்பலத் தாடல்செய் அமுதே
- வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
- வழங்குக நின்அருள் வழங்கல்
- நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
- நான்உயிர் தரிக்கலன் அரசே.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- வந்தருள் புரிக விரைந்திது தருணம்
- மாமணி மன்றிலே ஞான
- சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
- சுத்தசன் மார்க்கசற் குருவே
- தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
- தனிஅருட் சோதியை எனது
- சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
- செய்வித் தருள்கசெய் வகையே.
- சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
- திகழ்தனித் தந்தையே நின்பால்
- சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
- செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
- யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- போரிட முடியா தினித்துய ரொடுநான்
- பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
- போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
- புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
- யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
- திருவுளத் தடைத்திடு வாயேல்
- ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
- என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
- அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
- அப்பநீ அடியனேன் தன்னை
- விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
- விடுதியோ விட்டிடு வாயேல்
- உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
- உன்னருள் அடையநான் இங்கே
- படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
- பாடெலாம் நீஅறி யாயோ.
- அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே
- அழைத்தனன் அப்பனே என்னை
- எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய்
- எடுத்தணைத் தஞ்சிடேல் மகனே
- பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில்
- பெருந்திறல் சித்திகள் எல்லாம்
- சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன்
- சென்னிதொட் டுரைத்தனை களித்தே.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
- எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
- துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
- அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
- பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
- தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
- முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
- அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணை யாலே
- பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தத் தருட்பதமும் பாலிக் கின்றோய்
- எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே ஆடல்இடு கின்றோய் நின்னால்
- அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
- அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
- கானந்த மதத்தாலே காரமறை படுமோ
- கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
- ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
- உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
- நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
- நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
- தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
- செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
- காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
- கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
- மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
- விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
- ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
- எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
- பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
- மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
- விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
- பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
- பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
- செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
- திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
- கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
- கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
- உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
- தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
- திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
- சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
- இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
- செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
- நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே
- கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
- செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
- முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
- பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
- என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
- சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
- இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன்
- தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப்
- பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால்
- மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
- அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
- பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே
- செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன்
- எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
- இன்சுவை உணவு பலபல எனக்கிங் கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
- நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் நீ தரு வித்திடில் அதுநின்
- தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் சம்மதம் இல்லைநான் தானே
- என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடிய தும்இலை ஈண்டே.
- செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்தநாள் அன்றி
- அறிவதில் லாத சிறுபரு வத்தும் அடுத்தவர் கொடுத்தகா சவர்மேல்
- எறிவதும் மேட்டில் எறிந்தும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந் ததுவே
- பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவ தென்னே.
- பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் படைத்தஅப் பணங்களைப்பலகால்
- கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
- குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
- கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் கண்டனன் இனிச்சொல்வ தென்னே.
- சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
- புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
- பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
- உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
- உருமலி உலகில் உன்னைநான் கலந்தே ஊழிதோ றூழியும் பிரியா
- தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் உன்னையே பாடி நின்றாடி
- இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக்கிடுக்கணுற் றால்அவை தவிர்த்தே
- திருமணிப் பொதுவில் அன்புடையவராச் செய்யவும் இச்சைகாண்எந்தாய்.
- தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
- கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
- இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
- இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
- திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
- பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
- பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
- உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
- தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
- வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
- ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
- ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
- என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
- என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
- என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
- என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
- என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
- என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
- என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
- இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
- விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
- கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
- அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
- மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
- குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
- பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
- தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
- நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
- ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
- ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
- தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
- கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
- பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
- மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
- உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
- என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
- நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
- அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
- இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
- உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
- தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
- இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
- வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
- தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
- காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
- எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
- பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
- ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
- இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
- சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
- மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
- வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
- காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
- தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
- வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
- ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
- நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
- உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
- பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
- நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
- வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
- மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
- நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
- மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
- களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
- நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
- அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
- ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
- அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
- விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
- எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்
- சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்
- வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
- மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.
- ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
- அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
- பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
- வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
- கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
- வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
- நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
- பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
- ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
- மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
- விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
- தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
- நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
- உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
- பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
- சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
- நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
- பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
- மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
- உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
- ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
- கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
- திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
- பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
- எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
- நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
- கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
- மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
- வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
- பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
- உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
- கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
- புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
- தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
- தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
- நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
- காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
- ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
- என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
- துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
- வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
- அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
- அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
- பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
- முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
- கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
- மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
- எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம்223 அறியும்.
- ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
- தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
- நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
- தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
- பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
- நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே
- நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
- தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
- கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
- புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
- கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
- இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
- நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
- எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
- செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
- தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
- கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
- இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
- உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
- கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ
- மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது
- பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
- செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
- பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
- மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
- துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
- தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
- சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
- பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
- ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
- ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
- தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
- சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
- பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
- சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
- தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
- ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
- பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
- எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
- நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே நடத்தும்ஓர் ஞானநா யகனே
- தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன்நான் பயத்தினால் துயரால்
- அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
- உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன228 மற்றென தலவே
- தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
- மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
- கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
- இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
- மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
- அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
- இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால்
- விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே
- அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன்
- துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.
- வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
- வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
- உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
- ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.
- ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
- காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
- போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
- ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
- அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
- வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
- இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
- வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
- வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
- கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
- விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
- எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
- குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள்
- புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே
- உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.
- தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
- சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
- என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
- பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
- போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே
- வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா
- ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன்
- தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
- குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
- பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
- மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
- எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச்
- சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
- அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில்
- முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.
- தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
- வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
- என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
- நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.
- இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே
- சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும்
- அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும்
- சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
- பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன்
- நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
- கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
- செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.
- திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
- உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
- கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
- மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
- நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
- பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
- சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
- ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
- தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
- வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
- தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
- வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
- ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
- தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
- கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
- வெய்யதீ மூட்டிவிடுதல்232 ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்
- வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
- உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
- நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
- வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
- வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
- என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
- உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
- நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
- மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
- துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
- படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
- படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
- ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
- எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
- எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
- இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
- எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
- உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
- உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
- மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
- மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
- இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
- திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
- பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
- புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
- அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
- எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
- எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
- கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
- காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
- விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
- விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
- திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
- திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
- உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
- உளஎலாம் ஆங்கவன் தனக்கே
- தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
- செயலிலேன் எனநினைத் திருந்தேன்
- அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- நினைத்தபோ தெல்லாம் நின்னையே நினைத்தேன்
- நினைப்பற நின்றபோ தெல்லாம்
- எனைத்தனி ஆக்கி நின்கணே நின்றேன்
- என்செயல் என்னஓர் செயலும்
- தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம்
- சிவன்செய லாம்எனப் புரிந்தேன்
- அனைத்தும்என் அரசே நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- களித்தபோ தெல்லாம் நின்இயல் உணர்ந்தே
- களித்தனன் கண்கள்நீர் ததும்பித்
- துளித்தபோ தெல்லாம் நின்அருள் நினைத்தே
- துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
- தெளித்தபோ தெல்லாம் நின்திறம் புகன்றே
- தெளித்தனன் செய்கைவே றறியேன்
- ஒளித்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
- சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
- உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
- உவப்பிலேன் உலகுறு மாயைக்
- கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
- கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
- அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
- பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
- சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
- சங்கம்என் றோங்குமோ தலைமைச்
- சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
- தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
- ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
- ஊழிதோ றுழிசென் றிடினும்
- என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
- இயல்அருட் சித்திகள் எனைவந்
- தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
- உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
- உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- கள்ளாவா தனையைக் களைந்தருள் நெறியைக்
- காதலித் தொருமையில் கலந்தே
- உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
- றோங்குதல் என்றுவந் துறுமோ
- வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
- மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
- ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
- தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
- நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
- நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
- அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
- ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
- வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
- மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
- துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
- சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
- பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
- பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
- கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
- கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
- அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
- அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
- மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
- மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
- தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
- தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
- நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
- நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
- ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
- என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
- கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
- சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
- திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
- விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
- விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
- தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
- சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.
- காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
- கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
- கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
- கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
- சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
- சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
- பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
- பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
- சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
- செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
- இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
- கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
- சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
- சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
- நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத
- கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்
- தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
- கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே.
- கருணைக் கருத்து மலர்ந்தெனது கலக்க மனைத்துந் தவிர்த்தேஇத்
- தருணத் தருளா விடில்அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வதுதான்
- அருணச் சுடரே நின்னருளுக் கழகோ அழகென் றிருப்பாயேல்
- தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 சிரிப்பார் நானும் திகைப்பேனே.
- திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே
- வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத்
- தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம்
- நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே.
- திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
- புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
- இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
- அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
- நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
- வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
- கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
- பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
- வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம்
- தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே
- உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
- இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
- அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
- முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
- சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
- தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
- எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
- சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
- வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.
- பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
- பண்பனே திருச்சிற்றம் பலத்தே
- தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
- தூயனே நேயனே பிரமன்
- விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
- விளங்குறக் காட்டிய விமலா
- கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
- சோதியுட் சோதியே அழியா
- இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
- ஈன்றநல் தந்தையே தாயே
- அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
- திசைந்தபே ரின்பமே யான்தான்
- பண்ணிய தவமே தவத்துறும் பலனே
- பலத்தினால் கிடைத்தஎன் பதியே
- தண்ணிய மதியே மதிமுடி அரசே
- தனித்தசிற் சபைநடத் தமுதே
- புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே
- மந்திர மேஒளிர் மணியே
- நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த
- நேயனே தாயனை யவனே
- பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய்
- பரமனே பரமசிற் சுகந்தான்
- புலப்படத் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
- கற்பகத் தீஞ்சுவைக் கனியே
- வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
- விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
- ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
- ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
- புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
- அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
- செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
- தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
- இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
- இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
- மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
- ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
- சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
- தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
- அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
- ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
- மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
- வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
- நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
- நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
- அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
- அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
- வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
- அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
- கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
- குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
- படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
- படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
- மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம்
- செவிலிபாற் சேர்த்தனை அவளோ
- எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
- என்செய்வேன் இன்னும்என் னிடைப்பால்
- மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும்
- வந்தெனைப் பார்த்திலை அந்தோ
- தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
- தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
- அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
- நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
- நீலியோ தன்புடை ஆடும்
- தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
- தனித்தனி அவர்அவர் எடுத்தே
- கத்தவெம் பயமே காட்டினர் நானும்
- கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
- தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
- சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
- கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
- காதுறக் கேட்டிருக் கின்றாள்
- செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
- சிரித்திருக் கின்றனர் அந்தோ
- இம்மியே எனினும் ஈந்திடார் போல
- இருப்பதோ நீயும்எந் தாயே.
- காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
- கனிவிலாள் காமமா திகளாம்
- பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
- பயம்புரி வித்தனள் பலகால்
- தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
- திருமதி எனநினைந் தறியாள்
- சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
- தந்தது சாலும்எந் தாயே.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
- ஆண்டுகொண் டருளி பொருளே
- வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
- மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
- வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
- தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
- நாடகக் கருணை நாதனே உன்னை
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
- வயங்குசிற் சோதியே அடியேன்
- இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
- இன்பமே என்பெரும் பொருளே
- கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
- கடவுளே கனகமன் றகத்தே
- நட்டமே புரியும் பேரரு ளரசே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
- புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
- சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
- சொப்பனத் தாயினும் நினையேன்
- கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
- கனகமா மன்றிலே நடிக்கும்
- நல்லவா எல்லாம் வல்லவா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புண்படா உடம்பும் புரைபடா மனமும்
- பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
- கண்படா திரவும் பகலும்நின் தனையே
- கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
- உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
- உலகரை நம்பிலேன் எனது
- நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
- வடிவமும் வண்ணமும் உயிரும்
- தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
- தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
- ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
- ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
- நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
- ஆடிய சிறுபரு வத்தே
- குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
- குணப்பெருங் குன்றமே குருவே
- செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
- சிந்தையில் இனிக்கின்ற தேனே
- நற்றக வுடைய நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய
- பாவியிற் பாவியேன் தீமைக்
- கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன்
- என்னினும் துணைஎந்த விதத்தும்
- திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே
- சிந்தனை செய்திருக் கின்றேன்
- நடம்புரி கருணை நாயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
- கடியனேன் காமமே கலந்து
- வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
- வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
- மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
- மக்களை ஒக்கலை மதித்தே
- நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
- ஊர்தொறும் உண்டியே உடையே
- தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
- தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
- வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
- வஞ்சமே பொருளென மதித்து
- நாடினேன் எனினும் பாடினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
- வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
- அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
- அடிக்கடி வாங்கிய கொடியேன்
- இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
- எனைவிடக் கொடியருக் கீந்தேன்
- நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே
- காசிலே ஆசையில் லவன்போல்
- பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன்
- பகல்எலாம் தவசிபோல் இருந்தேன்
- இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே
- இழுதையிற் றூங்கினேன் களித்து
- நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
- காட்டிடா தம்பெலாம் அடங்கும்
- தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
- சுகத்தினால் சோம்பினேன் உதவா
- ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
- ஈந்திலேன் ஈந்தவன் எனவே
- நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்
- அடிக்கடி பொய்களே புனைந்தே
- எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன்
- றிகழ்ந்தனன் அகங்கரித் திருந்தேன்
- கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன்
- கொடாதவர் தமைஇகழ்ந் துரைத்தேன்
- நடுத்தய வறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்
- கோடுறு குரங்கினிற் குதித்தே
- அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்
- அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்
- மலைவுறு சமய வலைஅகப் பட்டே
- மயங்கிய மதியினேன் நல்லோர்
- நலையல எனவே திரிந்தனன் எனினும்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
- எட்டியே எனமிகத் தழைத்தேன்
- பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
- பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
- காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
- கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
- நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
- கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
- சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
- துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
- இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
- இந்தநாள் இறைவநின் அருளால்
- நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
- வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
- ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
- சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.
- செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
- சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
- புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- திண்ணமும் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
- வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
- தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
- எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
- வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
- பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
- சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
- ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
- பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
- கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
- மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
- மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
- சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
- காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
- நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
- ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
- பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
- சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
- நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
- ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
- அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
- அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
- இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
- எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
- தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
- தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
- துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
- சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
- மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
- ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
- இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
- மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
- மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
- கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
- நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
- வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
- மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
- ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
- உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
- பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
- பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
- பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
- கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
- கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
- செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
- திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
- அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
- அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
- காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
- மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
- விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
- செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
- தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
- மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
- வகைஇது துறைஇது வழிஇது எனவே
- இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
- என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
- பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
- புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
- அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
- பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
- நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
- நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
- திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
- சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
- அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
- மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
- சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.
- ஓங்கு பொன்னணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
- பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
- தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே.
- சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
- அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
- மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
- பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
- தீட்டு பொன்னணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
- காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
- நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
- வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடுமாறே.
- படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
- பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
- விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
- கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
- கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
- நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
- நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
- வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
- மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
- போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
- பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
- பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
- பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
- நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
- புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
- சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
- தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
- எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
- இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
- இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
- என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
- கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
- கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
- துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
- துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
- விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
- விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
- பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
- பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
- அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
- அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
- முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
- முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
- செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
- சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
- இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
- என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
- என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
- கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
- மன்னே அயனும் திருமா லவனும்
- மதித்தற் கரிய பெரிய பொருளே
- அன்னே அப்பா ஐயா அரசே
- அன்பே அறிவே அமுதே அழியாப்
- பொன்னே மணியே பொருளே அருளே
- பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
- அடியார் இதயாம் புயனே அபயம்
- அரசே அமுதே அபயம் அபயம்
- முடியா தினிநான் தரியேன் அபயம்
- முறையோ முறையோ முதல்வா அபயம்
- கடியேன் அலன்நான் அபயம் அபயம்
- கருணா கரனே அபயம் அபயம்
- தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்.
- தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
- தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
- பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
- பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
- இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
- இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
- அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
- கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
- உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
- உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
- வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
- வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
- அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
- காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
- நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
- நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
- செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
- சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
- அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
- ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
- ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
- சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
- சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
- நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
- நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
- பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
- பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
- கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- கோவேஎன் கணவாஎன் குரவாஎன்281 குணவா
- நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
- நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
- சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
- தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
- தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
- இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
- எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
- அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
- அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
- கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
- கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
- பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
- பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
- மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
- வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
- பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
- பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
- எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
- சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
- சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
- மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
- மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
- தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
- அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
- துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
- தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
- மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
- மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
- இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
- பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
- இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
- மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
- வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
- பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
- சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
- கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
- சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
- தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
- பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
- படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
- ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
- ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
- தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
- பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
- பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
- இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
- இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
- கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
- கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
- நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
- கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
- படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
- பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
- கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
- ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
- நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்283 மலர்க்கால்
- தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
- தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
- ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
- எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
- தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
- இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
- தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
- தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
- எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
- இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
- முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
- முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
- ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
- பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
- பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
- நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
- நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
- அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
- தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
- நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
- நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
- சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
- சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
- புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
- அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
- கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
- கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
- வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
- மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
- படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
- தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
- மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
- வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
- நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
- நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
- அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
- மன்னுருத் திரர்களே முதலா
- ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
- குறுபெருந் தொழில்பல இயற்றி
- இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
- இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
- அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
- தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
- உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
- ஒருதனிப் பெரும்பதி உவந்தே
- புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
- பொறுத்தருட் பூரண வடிவாய்
- என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
- எந்தையைத் தடுப்பவர் யாரே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
- தையகோ ஐயகோ அறிவின்
- மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
- வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
- முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
- மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
- செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
- திருவுளம் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
- பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
- அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
- மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
- குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
- கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
- காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
- தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
- தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
- கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
- குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
- எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
- ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
- பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
- காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
- கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
- மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
- மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
- ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
- சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
- வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
- வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
- வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
- மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
- ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
- நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
- நின்றானைப் பொன்றாத நிலையி னானை
- நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
- ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
- ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
- என்றானை என்றும்உள இயற்கை யானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
- திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
- ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
- உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
- நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
- நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
- கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
- வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
- துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
- சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
- விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
- விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
- கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
- வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
- ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
- அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
- தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
- சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
- காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
- சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
- அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
- அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
- பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
- பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
- கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
- கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
- ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
- உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
- தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
- தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
- காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
- நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
- ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
- ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
- வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
- வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
- காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
- வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
- தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
- தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
- பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
- புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
- கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
- என்னைவாழ் விக்கின்ற பதியைப்
- பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
- பொருந்திய மருந்தையென் பொருளை
- வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
- வைத்தசன் மார்க்கசற் குருவைக்
- கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
- ககனத்தைக் காற்றினை அமுதை
- நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
- நின்மல நிற்குண நிறைவை
- மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
- வரவுபோக் கற்றசின் மயத்தை
- அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
- அன்பினிற் கண்டுகொண் டேனே.
- உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
- உவப்பிலா அண்டத்தின் பகுதி
- அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
- அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
- விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
- றிருந்தென விருந்தன மிடைந்தே
- இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
- தென்பர்வான் திருவடி நிலையே.
- அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
- அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
- படர்தரு விந்து பிரணவப் பிரமம்
- பரைபரம் பரன்எனும் இவர்கள்
- சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
- துணையடிப் பாதுகைப் புறத்தே
- இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
- ஏத்துவன் திருவடி நிலையே.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
- இதயத்தே விளங்கு கின்ற
- துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
- தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
- செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
- ஒன்றான தெய்வந் தன்னை
- அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
- பெரும்பொருளைப் புனிதந் தன்னை
- என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
- பெருங்கருணை இயற்கை தன்னை
- இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
- பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
- அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- 323. சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
- 324. தருகின்றாம் - பி. இரா. பதிப்பு.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
- என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
- நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
- நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
- கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
- காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
- செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
- என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
- பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
- பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
- அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
- அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
- சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
- இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
- எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
- பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
- பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
- செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
- எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
- அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
- அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
- ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
- ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
- செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
- சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
- நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
- நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
- பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
- பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
- சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- உரைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- ஒள்ளிய தெள்ளிய ஒளியே
- வரைவளர் மருந்தே மவுனமந் திரமே
- மந்திரத் தாற்பெற்ற மணியே
- நிரைதரு சுத்த நிலைக்குமேல் நிலையில்
- நிறைந்தர சாள்கின்ற நிதியே
- பரையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- இன்பமே என்னுடை அன்பே
- திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
- திகழுறத் திகழ்கின்ற சிவமே
- மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
- வெளிஅர சாள்கின்ற பதியே
- பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
- அறிவிலே அறிவறி வென்கோ
- இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
- என்னுயிர்த் துணைப்பதி என்கோ
- வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
- மன்னும்அம் பலத்தர சென்கோ
- என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
- பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
- நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
- நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
- கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
- கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
- துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
- அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
- முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
- முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
- சகவடிவில் தானாகி நானாகி நானும்
- தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
- சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
- பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
- தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
- சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
- மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
- வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
- துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
- கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
- பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
- படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
- சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
- சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
- சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
- உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
- உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
- இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
- எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- நடுக்கியஎன் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா
- ஞானஅமு தளித்துலகில் நாட்டியபே ரறிவே
- இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
- கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
- முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
- முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
- ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
- ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
- பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
- படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
- தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
- சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- தண்ணிய மதியே தனித்தசெஞ் சுடரே
- சத்திய சாத்தியக் கனலே
- ஒண்ணிய ஒளியே ஒளிக்குள்ஓர் ஒளியே
- உலகெலாந் தழைக்கமெய் உளத்தே
- நண்ணிய விளக்கே எண்ணிய படிக்கே
- நல்கிய ஞானபோ னகமே
- புண்ணிய நிதியே கண்ணிய நிலையே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
- அறிவென அறிகின்ற அறிவே
- சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
- துரியநல் நிலத்திலே துலங்கும்
- சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
- செல்வமே சித்தெலாம் புரியும்
- பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைவளர் கலையே கலையினுட் கலையே
- கலைஎலாம் தரும்ஒரு கருவே
- நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
- நித்திய வானமே ஞான
- மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
- மாபலம் தருகின்ற வாழ்வே
- புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணினுள் மணியே
- இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
- இணையிலா என்னுடை அன்பே
- சொந்தநல் உறவே அம்பலத் தரசே
- சோதியே சோதியே விரைந்து
- வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- கோஎன எனது குருஎன ஞான
- குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
- பூஎன அதிலே மணம்என வணத்தின்
- பொலிவென வயங்கிய பொற்பே
- தேவெனத் தேவ தேவென ஒருமைச்
- சிவம்என விளங்கிய பதியே
- வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
- விளக்கினால் என்னுளம் விளக்கி
- இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
- கென்கருத் தனைத்தையும் புரிந்தே
- சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
- சத்தியைத் தயவினால் தருக
- வரதனே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
- கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
- பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
- அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
- தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
- கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
- அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
- மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
- பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
- அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
- வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
- தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
- அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
- தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
- பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
- அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
- தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
- வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
- ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
- விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
- தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
- உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
- அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
- ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
- அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
- கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
- உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
- பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
- என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
- உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
- கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
- அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
- அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
- வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
- வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
- தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
- தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
- காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
- எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
- ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
- இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
- இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ராய்
- அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
- அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
- கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
- தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
- எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
- வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
- கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
- முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
- கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
- வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
- நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
- ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
- தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
- நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
- திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால்
- கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம்
- உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே.
- நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
- கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
- நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
- வினைவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
- பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
- நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
- சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
- கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
- மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
- தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
- கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
- தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
- பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
- தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
- கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
- சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
- மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
- யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
- ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
- சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
- தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
- பரமான சிதம்பர ஞான சபாபதியே
- வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
- தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
- உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
- பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
- மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
- எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
- நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
- அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
- தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
- சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
- நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
- சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
- ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
- தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
- தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
- தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
- பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
- சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
- அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே
- நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல
- சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே
- அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- இரவு விடிந்தது இணையடி வாய்த்த
- பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
- பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
- தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
- தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
- ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
- இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
- எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
- சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
- தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
- சிந்தை களித்தேன்என்று உந்தீபற
- சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
- புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
- தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
- தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
- கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
- அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
- திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
- எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
- என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
- சித்திக்கு மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
- திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
- இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
- என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
- விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக
- விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
- நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
- நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
- எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
- பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
- தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
- கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
- பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
- தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
- கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- தேடிய துண்டு நினதுரு வுண்மை
- தெளிந்திடச் சிறிதுநின் னுடனே
- ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே
- உரைத்ததும் உவந்ததும் உண்டோ
- ஆடிய பாதம் அறியநான் அறியேன்
- அம்பலத் தரும்பெருஞ் சோதி
- கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்
- கூறவுங் கூசும்என் நாவே.
- நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
- நின்றதே அன்றிநின் அளவில்
- நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
- நோக்கிய திறையும் இங்குண்டோ
- தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
- துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
- தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
- என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
- ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
- அன்றிவே றெண்ணிய துண்டோ
- ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் காற்றலேன் சிறிதும்
- தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
- நன்றருள் புரிவதுன் கடனே.
- மாயையாற் கலங்கி வருந்திய போதும்
- வள்ளல்உன் தன்னையே மதித்துன்
- சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
- தலைவவே245 றெண்ணிய துண்டோ
- தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
- துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
- நன்றருள் புரிவதுன் கடனே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
- ஒருசிவ மயமென உணர்ந்தேன்
- கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
- கருத்தயல் கருதிய துண்டோ
- வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
- மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
- தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
- அடுத்திடும் புறப்புறம் நான்கில்
- இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
- இறையும்இங் கெண்ணிய துண்டோ
- உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் கினிச்சிறி துந்தான்
- இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
- கென்னைஆண் டருள்வ துன்கடனே.
- கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
- வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
- காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
- வாணா நினக்கடிமை வாய்த்து.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
- அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
- அழியாச்சிற் றம்பலத்தே யான்.
- பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
- போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
- றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
- நாடுகின்றேன் சிற்சபையை நான்.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
- சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
- குற்றம் பலபொறுத்துக் கொண்டு.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
- எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
- தனைஉவந்து கொண்டான் தனை.
- திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
- குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
- தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
- மாப்பிள்ளை பாத மலர்.
- கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
- கொழுநரும் மகளிரும் நாண
- நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
- நீங்கிடா திருந்துநீ என்னோ
- டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
- றறிவுரு வாகிநான் உனையே
- பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
- வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
- நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
- நாட்டமும் கற்பகோ டியினும்
- வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
- வழங்கிடப் பெற்றனன் மரண
- பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
- கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
- சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
- சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
- சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
- செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
- பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
- அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு
- அக்கரைசேர்த் தருளெனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ315.
- சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
- சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
- உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
- துள்ளல் ஒழிக தொலைந்து.
- அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
- விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
- ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
- நீதிக் கொடிவிளங்க நீண்டு.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.
- வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
- சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
- எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
- விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
- வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
- புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
- திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
- நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
- நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
- சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
- சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
- தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
- மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
- நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
- சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
- நவநிலை மேற்பர நாதத் தலத்தே
- ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
- மவுனத் திருவீதி வருவாயோ தோழி
- வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
- பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
- இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
- எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
- மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
- மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
- தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
- தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
- எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாரான்
- இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
- ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
- ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
- சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
- சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
- உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
- ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
- என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
- மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
- சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
- சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
- புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
- புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
- இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
- இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
- எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
- மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
- கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
- இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
- சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
- துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- கள்ளுண்டாள் எனப்புகன்றீர் கனகசபை நடுவே
- கண்டதலால் உண்டதிலை என்றஅத னாலோ
- எள்ளுண்ட மற்றவர்போல் என்னைநினை யாதீர்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- உள்ளுண்ட மகிழ்ச்சிஎலாம் உவட்டிநின்றாள் பாங்கி
- உவந்துவளர்த் தவளும்என்பால் சிவந்தகண்ணள் ஆனாள்
- துள்ளுண்ட பெண்களெலாம் சூழ்ந்துநொடிக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
- கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
- எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
- நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
- பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
- பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
- தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
- இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
- பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
- கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
- கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- அரும்பொன்அனை யார்எனது துரைவரும்ஓர் சமயம்
- அகலநின்மின் அணங்கனையீர் என்றஅத னாலோ
- இரும்புமணம் ஆனாலும் இளகிவிடுங் கண்டால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கரும்பனையாள் பாங்கியும்நாய்க் கடுகனையாள் ஆனாள்
- களித்தென்னை வளர்த்தவளும் புளித்தின்றாள் ஒத்தாள்
- விரும்புகின்ற பெண்களெலாம் அரும்புகின்றார் அலர்தான்
- வித்தகர்என் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
- மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
- எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
- குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
- மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- தனிப்பெரும் பதியே என்பதி ஆகத்
- தவம்எது புரிந்ததோ என்றாள்
- அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான்
- அதிசயம் அதிசயம் என்றாள்
- இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள்
- எனக்கிணை யார்கொலோ என்றாள்
- சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத்
- ததும்பினாள் நான்பெற்ற தனியே.
- திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
- சிந்தையில் கலந்தனன் என்றாள்
- பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
- பேசுதல் அரிதரி தென்றாள்
- இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
- யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
- மருமலர் முகத்தே இளநகை துளும்ப
- வயங்கினாள் நான்பெற்ற மகளே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
- என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
- பாலும்இன் சுவையும் போன்றென தாவி
- பற்றினன் கலந்தனன் என்றாள்
- சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
- சத்தியை அளித்தனன் என்றாள்
- மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
- மிகுகளிப் புற்றனள் வியந்தே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
- ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
- இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
- இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
- பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
- பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
- அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
- அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
- படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
- பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
- புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
- பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
- மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
- மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
- அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
- அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- வாயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
- பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை363 ஒருகோடி
- பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
- எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
- எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
- விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
- விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
- கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
- கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
- பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
- பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
- நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
- நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
- உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
- நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
- நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
- குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
- குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
- மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
- வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
- பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
- வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
- வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
- தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
- சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
- திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
- பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
- விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
- விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
- உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
- ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
- தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
- தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
- வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம்
- விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள்
- மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
- வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
- வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
- வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
- கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
- நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
- நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
- ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
- உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
- நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
- ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
- வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
- விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
- உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
- உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
- தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
- தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
- ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம்
- என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில்
- சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல்
- சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத்
- தேற்றமிகு தண்ரைச் சீவர்கள்பற் பலரைச்
- செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும்
- ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ
- உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
- சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
- இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
- கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
- கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
- கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
- தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
- உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
- றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
- செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
- சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண்
- பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
- துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான்
- இன்பமெலாம் தந்தான் இசைந்து.
- மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
- தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
- தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
- தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
- புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
- சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
- நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
- நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
- வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
- தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
- அம்பலவன் தன்அருளி னால்.
- அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
- மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
- பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
- தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
- உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
- இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
- கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
- திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
- மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
- வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
- செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
- சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
- கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
- செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
- நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
- தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
- பாக்கியவான் ஆனேன் பதிந்து.
- என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
- முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
- படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
- எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
- சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
- தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
- எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
- எடுத்தாய் தயவைவிய வேன்.
- நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
- ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
- மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
- காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
- புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
- பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
- தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
- ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
- அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
- பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
- தந்தாய்என் நான்செய் தவம்.
- நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
- தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
- ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
- அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
- நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
- போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
- ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
- மன்றொன்று வானை மகிழ்ந்து.
- பூமி பொருந்து புரத்தே287 நமதுசிவ
- காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
- அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
- களித்தான் அவன்றான் களித்து.
- கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
- படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
- தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
- கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
- வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
- அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
- கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
- திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
- தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
- கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
- பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
- விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
- கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
- சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
- ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
- காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
- பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
- வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
- மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
- கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
- தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
- சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
- நல்லான்தன் தாட்கே நயந்து.
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்.
- ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
- தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
- எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
- கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
- நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
- மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
- பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
- தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
- தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
- நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
- சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
- அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
- மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
- திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
- கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
- தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
- கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
- தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
- உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
- ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம் ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
- கழித்தேன் மரணக் களைப்பற்றேன் களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
- பழித்தேன் சிற்றம் பலம்என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
- விழித்தேன் கருத்தின் படிஎல்லாம் விளையா டுதற்கு விரைந்தேனே.
- விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
- கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
- வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
- திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
- வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
- குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
- நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
- அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
- சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
- இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
- உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
- அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
- இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
- தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில்
- வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.
- விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே
- பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும்
- உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே
- கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன்
- கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
- தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
- ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
- தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
- வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
- தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
- சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
- குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
- வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
- நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
- ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
- நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
- இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
- மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
- நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
- ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
- இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
- பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
- பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
- கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
- குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- விதிப்பவர்கள் பலகோடி திதிப்பவர்பல் கோடி
- மேலவர்கள் ஒருகோடி விரைந்துவிரைந் துனையே
- மதிப்பவர்கள் ஆகிஅவர் மதியாலே பலகால்
- மதித்துமதித் தவர்மதிபெண் மதியாகி அலந்தே
- துதிப்பதுவே நலம்எனக்கொண் டிற்றைவரை ஏற்ற
- சொற்பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால்
- குதிப்பொழியா மனச்சிறிய குரங்கொடுழல் கின்றேன்
- குறித்துரைப்பேன் என்னஉளம் கூசுகின்ற தரசே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
- நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
- கோவே எனது குருவே எனையாண்ட
- தேவே கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
- மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
- ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
- தேகா கதவைத் திற.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
- தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
- கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
- ஈசனத்தன் அம்பலவ னே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
- மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
- கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
- கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
- வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
- விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
- சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
- கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
- சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
- துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
- சிற்கரை திரையறு திருவருட் கடலே
- தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
- சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
- என்அறி வேஎன தறிவினுக் கறிவே
- அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
- அற்புத மேபத மேஎன தன்பே
- பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
- பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
- தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சாகாத தலைஇது வேகாத காலாம்
- தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே
- போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே
- பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
- ஆகாத பேர்களுக் காகாத நினைவே
- ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே
- தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
- இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
- விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
- மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
- பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
- புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
- சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
- அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
- ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
- உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
- சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
- சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
- சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
- கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
- அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
- அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
- பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
- பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
- தற்பர பரம்பர சிதம்பர நிதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
- விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
- புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
- புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
- தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
- சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
- பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
- பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
- கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
- நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
- நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
- அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
- அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
- அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
- ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
- இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
- இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
- இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
- பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
- பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
- சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
- சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
- பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
- தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
- தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
- செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
- தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
- அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
- அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
- பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
- படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
- வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
- வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
- நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
- நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
- கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
- கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- அன்புடை மகனே மெய்யருள் திருவை
- அண்டர்கள் வியப்புற நினக்கே
- இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
- இரண்டரைக் கடிகையில் விரைந்தே
- துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
- தூய்மைசேர் நன்மணக் கோலம்
- பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
- பொதுநடம் புரிகின்றார் தாமே.
- விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
- மெய்யருள் திருவினை நினக்கே
- வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
- வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
- இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
- எல்லையுள் எழில்மணக் கோலம்
- நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
- நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
- தூயநீர் ஆடுக துணிந்தே
- பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
- பண்பொடு புனைந்துகொள் கடிகை
- ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
- எழில்உற மணம்புரி விப்பாம்
- ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
- இயன்மணி மன்றிறை யவரே.
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
- சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
- நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
- வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
- நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
- பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
- வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
- வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
- வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
- தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
- வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
- கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
- மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
- கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
- கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
- பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
- விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
- எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
- நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
- நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
- முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
- மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
- பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
- பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
- என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
- எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
- தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
- சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
- மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
- வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
- உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
- உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
- எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
- எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
- நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
- நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
- பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
- பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
- எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
- இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
- உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
- துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
- வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
- வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
- கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
- குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
- நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
- நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
- இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
- ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
- உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
- தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
- திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
- ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
- எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
- தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
- சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
- கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
- கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
- இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
- இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
- பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
- பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
- நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
- என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
- இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
- முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
- தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
- பகராத வன்மொழி பகருகின் றீரே
- நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
- நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
- கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
- கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
- எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
- எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
- கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
- கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
- ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
- அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
- உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.
- உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
- உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
- மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
- வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
- இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
- எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
- நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
- நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
- நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
- வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
- வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
- புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
- புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
- உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
- கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
- களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
- சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
- செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
- தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
- திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
- மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
- வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
- வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
- வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
- மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
- வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
- மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
- மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
- செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
- சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
- கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
- எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
- கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
- கலந்தான் கருணை கலந்து.
- சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
- நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
- தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
- சந்தோட மாய்இருமின் சார்ந்து.
- அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
- அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
- செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
- அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
- சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
- உடையான் உளத்தே உவந்து.
- தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
- தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
- ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
- மேகத்திற் குண்டோ விளம்பு.
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
- தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே
- புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
- புகுந்தான் கருணை புரிந்து.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
- நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்
- சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
- பத்திஎலாம் பெற்ற பலன்.
- தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே
- ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்
- தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க
- வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.
- தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
- ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
- செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
- எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
- சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
- வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
- நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
- தாயே அனையான் தனித்து.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்
- சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்
- றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்
- நண்ணுமின்பத் தேன்என்று நான்.
- நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
- நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
- அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
- இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
- எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
- இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
- சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
- என்மார்க்கம் காண்பேன் இனி.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
- தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
- மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
- இங்குநடஞ் செய்வான் இனி.
- சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
- சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
- ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
- வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.
- என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்
- தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே
- தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
- வந்தான்வந் தான்உள் மகிழ்ந்து.
- செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
- கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
- அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
- தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
- என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
- அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே
- திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்
- குருவம் பலத்தேஎன் றுன்.
- மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
- தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
- நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
- ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
- நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள
- நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
- அனையான் வருகின்றான் ஆய்ந்து.
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
- புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
- உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
- உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
- மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
- மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
- தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
- சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
- மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
- திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
- செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
- வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
- வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்
- கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
- கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
- சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
- வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
- வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
- பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
- பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
- கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
- கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
- உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
- உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
- எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
- என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
- தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
- சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
- கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
- கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
- தருணம்இதே என்று வாய்மை
- அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
- வார்த்தைகள்என் றறைகின் றாரால்
- மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
- எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
- சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
- மனிதர்மதித் திறமை என்னே.
- தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
- உலகாளச் சூழ்ந்த காமப்
- பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
- நும்முயிரைப் பிடிக்க நாளைச்
- சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
- ஞானசபைத் தலைவன் உம்மைக்
- கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
- இவ்வுலகில் குலாவு வீரே.
- பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
- ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
- சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
- பற்பலரும் சித்த சாமி
- உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
- தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
- வரனளிக்கப் புதைத்தநிலை காரோ
- கண்கெட்ட மாட்டி னீரே.
- இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
- மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
- தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
- தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
- எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
- கரிக்கின்றார் யாவர் அந்தச்
- செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
- செயல்எனவே தெரிந்தேன் இங்கே
- கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
- தமக்கேவல் களிப்பால் செய்ய
- ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
- வாய்மிகவும் ஊர்வ தாலோ.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
- தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
- முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
- பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
- தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
- சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
- வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
- இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
- ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
- பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
- தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
- கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
- வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
- ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
- பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
- புகன்றபோ தாந்த நாதாந்தம்
- தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
- தத்தினும் தித்திக்கும் தேனே
- மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
- மாபெருங் கருணையா ரமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
- தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
- மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
- ஐயா அபயமப யம்.
- அபயம் பதியே அபயம் பரமே
- அபயம் சிவமே அபயம் - உபய
- பதத்திற் கபயம் பரிந்தென்உளத் தேநல்
- விதத்தில் கருணை விளை.
- இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
- இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
- கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
- பிணக்கறிவீர் புரட்டறிவீர்348 பிழைசெயவே அறிவீர்
- பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
- மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
- வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
- உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
- ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
- கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
- வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
- வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
- குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
- குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
- மதிப்பாலை அருட்பாலை ஆனந்தப் பாலைஉண்ண மறந்தார் சில்லோர்
- விதிப்பாலை அறியேம்தாய்ப் பாலைஉண்டு கிடந்தழுது விளைவிற் கேற்பக்
- கொதிப்பாலை உணர்வழிக்கும் குடிப்பாலை மடிப்பாலைக் குடிப்பார்அந்தோ
- துதிப்பாலை அருள்தருநம் தேவசிகா மணித்தேவைத் துதியார் அன்றே.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
- நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
- வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
- வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
- காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
- களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
- ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
- எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
- இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
- உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
- உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
- என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
- அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
- முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
- தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
- நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
- வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
- தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.
- இயங்காளி புலிகரடி எனப்பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்
- சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
- பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை
- வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப் பிள்ளைஎன மதித்தி டாயே.
- சிறுசெயலைச் செயும்உலகச் சிறுநடையோர் பலபுகலத் தினந்தோ றுந்தான்
- உறுசெயலை அறியாஇச் சிறுபயலைப் பிடித்தலைத்தல் உவப்போ கண்டாய்
- தெறுசெயலைத் தவிர்த்தெல்லாச் சித்தியும்பெற் றிடஅழியாத் தேகன் ஆகப்
- பெறுசெயலை எனக்களித்தே மறுசெயலைப் புரிகஎனைப் பெற்ற தேவே.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
- பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
- தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
- இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
- மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு
- தந்திரம் அறியேன் எந்தத் தகவுகொண் டடைவேன் எந்தாய்
- இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
- சந்திரன் ஆட இன்பத் தனிநடம் புரியும் தேவே.
- கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
- தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
- பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
- தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
- கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
- கருணைமா மழைபொழி முகிலே
- விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
- மேவிய மெய்ம்மையே மன்றுள்
- எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
- இன்றுநீ ஏழையேன் மனத்துப்
- புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
- புகுந்தென துளங்கலந் தருளே.
- அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும்
- அன்றுவந் தாண்டனை அதனால்
- துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச்
- சொல்லினேன் சொல்லிய நானே
- இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ
- எனைஉல கவமதித் திடில்என்
- என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே
- எய்துக விரைந்தென திடத்தே.
- வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
- தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
- ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
- நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
- செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
- தேவரும் முனிவரும் பிறரும்
- இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
- எந்தைநின் திருவருள் திறத்தை
- எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
- என்தரத் தியலுவ தேயோ
- ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
- உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.
- உணர்ந்துணர்ந் தாங்கே உணர்ந்துணர்ந் துணரா
- உணர்ந்தவர் உணர்ச்சியான் நுழைந்தே
- திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும்
- சிவபதத் தலைவநின் இயலைப்
- புணர்ந்தநின் அருளே அறியும்நான் அறிந்து
- புகன்றிடும் தரஞ்சிறி துளனோ
- கொணர்ந்தொரு பொருள்என் கரங்கொளக் கொடுத்த
- குருஎனக் கூறல்என் குறிப்பே.
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- கொழுந்தேனும் செழும்பாகும் குலவுபசும் பாலும்
- கூட்டிஉண்டாற் போல்இனிக்குங் குணங்கொள்சடைக் கனியே
- தொழுந்தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில்
- தோன்றவிடம் கழுத்தினுளே தோன்றநின்ற சுடரே
- எழுந்தேறும் அன்பருளத் தேற்றுதிரு விளக்கே
- என்உயிர்க்குத் துணையேஎன் இருகண்ணுள் மணியே
- அழுந்தேற அறியாதென் அவலநெஞ்சம் அந்தோ
- அபயம்உனக் கபயம்எனை ஆண்டருள்க விரைந்தே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
- இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
- அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
- அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
- விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
- மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
- பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
- படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.
- அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
- இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
- மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
- அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம்.
- ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
- நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
- ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
- சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.
- அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
- அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
- அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
- அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
- மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
- யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
- போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
- சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே.
- கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
- றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
- அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
- துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
- ஐவகைத் தொழிலும் என்பால் அளித்தனை அதுகொண் டிந்நாள்
- செய்வகை தெரிவித் தென்னைச் சேர்ந்தொன்றாய் இருத்தல் வேண்டும்
- பொய்வகை அறியேன் வேறு புகலிலேன் பொதுவே நின்று
- மெய்வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
- சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
- தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
- காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
- நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
- வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
- வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
- கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
- கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
- பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
- பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
- விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
- வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
- இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
- நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
- தானே எனக்குத் தனித்து.
- சர்க்கரைஒத் தான்எனக்கே தந்தான் அருளென்மனக்
- கற்கரையச் செய்தே களிப்பித்தான் - கற்க
- இனியான் அருட்சோதி எந்தைஎன்னுள் உற்றான்
- இனியான் மயங்கேன் இருந்து.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
- பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
- டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
- தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
- நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.
- வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
- தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
- தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
- யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
- ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
- ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
- தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
- நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
- எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
- எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
- எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
- எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.
- நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
- தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
- வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
- கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
- எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
- வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி
- நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன்
- கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.
- கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
- கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
- துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
- விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
- வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
- அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
- என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
- ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
- சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
- இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
- கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
- தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
- அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
- பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
- முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
- முன்னர்நீ தோன்றினை அந்தோ
- அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
- அப்பனே அய்யனே அரசே
- இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
- என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
- எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
- கெய்துதற் குரியமெய்த் தவமே.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
- பொய்ம்மன மாயையைக் கணத்தே
- மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
- வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
- சொல்லிய பதியே மிகுதயா நிதியே
- தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
- ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
- செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
- சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
- மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
- மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
- பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
- பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
- படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
- பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
- பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
- பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
- வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
- வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
- நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
- நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
- கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்
- கடவுளே என்இரு கண்ணே
- நிலையனே ஞான நீதிமன் றிடத்தே
- நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
- புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி
- பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
- சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ
- திருவருட் பெருந்திறல் பெரிதே.
- தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
- தனிமுதல் பேரருட் சோதிப்
- பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
- பராபர நிராமய நிமல
- உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
- உளத்ததி சயித்திட எனக்கே
- வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
- மாகடற் கெல்லைகண் டிலனே.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- பனிப்பறுத் தெல்லாம் வல்லசித் தாக்கிப்
- பரம்பரம் தருகின்ற தென்றோர்
- தனிப்பழம் எனக்கே தந்தைதான் தந்தான்
- தமியனேன் உண்டனன் அதன்தன்
- இனிப்பைநான் என்என் றியம்புவேன் அந்தோ
- என்னுயிர் இனித்ததென் கரணம்
- சனிப்பற இனித்த தத்துவம் எல்லாம்
- தனித்தனி இனித்தன தழைத்தே.
- விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
- விளைந்தது விளைந்தது மனனே
- கண்ணெலாம் களிக்கக் காணலாம்
- பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
- எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
- ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
- உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
- ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
- வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
- வாரியைக் கண்டனம் மனமே
- அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
- ஆடலாம் அடிக்கடி வியந்தே
- உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
- ஓங்கலாம் உதவலாம் உறலாம்
- கள்எலாம் உண்டவண்டென இன்பம்
- காணலாம் களிக்கலாம் இனியே.
- உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
- பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
- புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
- திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும்
- அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
- துடிவிளங்கக் கரத்தேந்தும் சோதிமலை மருந்தே
- சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
- பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப்
- போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
- படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன்
- பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி
- சயந்தன்னை எம்ம னோர்காள்
- பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம்
- புரிகின்ற புனிதன் என்னுள்
- மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல்
- விளங்குகின்றான் மெய்ம்மை யான
- தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய்
- தருள்கின்றான் சகத்தின் மீதே.
- ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
- மாளாத ஆக்கை பெற்றேன்
- கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
- நடுவிருந்து குலாவு கின்றேன்
- பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
- அன்பினொடும் பாடிப் பாடி
- நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
- எண்ணமெலாம் நிரம்பி னேனே.
- நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
- நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
- வாய்க்கு வந்த படிபல பேசவே
- மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
- தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
- தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
- சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
- திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
- காற்றாலே புவியாலே ககனமத னாலே
- கனலாலே புனலாலே கதிராதி யாலே
- கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
- கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
- வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
- மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
- ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
- எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- நீதியில் கலந்து நிறைந்தது நானும்
- நித்தியன் ஆயினேன் உலகீர்
- சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
- சத்தியச் சுத்தசன் மார்க்க
- வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
- விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
- பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
- இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
- அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
- நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
- காலங் கருதுவ தேன் - நெஞ்சே
- காலங் கருதுவ தேன்.
- ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
- காலங் கருதுவ தேன் - நெஞ்சே
- காலங் கருதுவ தேன்.
- தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
- தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
- தத்துவ முன்னுவ தேன்.
- தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
- தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
- கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
- கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
- எனக்கும் உனக்கும்
- மேலைப் பாற்சிவ கங்கை என்னுமோர் தீர்த்தம் தன்னை யே
- மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னை யே
- ஏலத் துகிலும் உடம்பும் நனையா தெடுத்த தேஒன் றோ
- எடுத்தென் கரத்தில் பொற்பூண் அணிந்த இறைவன் நீயன் றோ.
- எனக்கும் உனக்கும்
- என்ன துடலும் உயிரும்336 பொருளும் நின்ன தல்ல வோ
- எந்தாய் இதனைப் பெறுக எனநான் இன்று சொல்ல வோ
- சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்கு தே
- சிந்தை நினைக்கக் கண்ர் பெருக்கி337 உடம்பை நனைக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே
- அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே
- விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே
- மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே.
- எனக்கும் உனக்கும்
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
- நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
- எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
- எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
- ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
- சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
- சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
- எனக்கும் உனக்கும்
- தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
- தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
- புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
- புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
- எனக்கும் உனக்கும்
- அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே
- அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே
- பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே
- பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே.
- எனக்கும் உனக்கும்
- கருணா நிதிநின் தன்னைக் காணக் கண்கள் துடிக்கு தே
- காண்போம் என்று நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- அருள்நா டகஞ்செய் பதங்கள் பாடி ஆட விரைவ தே
- ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவ தே.
- எனக்கும் உனக்கும்
- அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
- அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
- பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
- பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
- இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
- தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
- சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
- எனக்கும் உனக்கும்
- கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்த தே
- கனித்த பெரிய தனித்த கனிஎன் கருத்துள் இனித்த தே
- தருணத் துண்டு மகிழ்வுற் றேன்அம் மகிழ்ச்சி சொல்ல வே
- தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்த தல்ல வே.
- எனக்கும் உனக்கும்
- என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
- என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
- பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
- புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
- எனக்கும் உனக்கும்
- என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
- என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
- புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
- பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
- வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
- எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
- எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
- மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
- உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
- உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
- எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
- சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
- தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
- துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
- ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
- ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
- எனக்கும் உனக்கும்
- பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
- பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
- ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
- இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
- ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
- இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
- ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
- பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
- பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
- எனக்கும் உனக்கும்
- அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே
- அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
- படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
- பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
- வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
- நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
- நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே
- நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே
- ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே
- உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே.
- எனக்கும் உனக்கும்
- பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
- பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
- என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
- எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
- எனக்கும் உனக்கும்
- மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே
- மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே
- அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே
- அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே.
- எனக்கும் உனக்கும்
- சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
- தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
- தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
- தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
- எனக்கும் உனக்கும்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
- பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
- கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
- ஆணவம் போக்கினீர் வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
- இறையவ ரேஇங்கு வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
- இருக்கின்ற நாதரே வாரீர்
- இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
- ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
- டேசரே நீர்இங்கு வாரீர்
- நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
- உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
- குள்ள துரைசெய்தீர் வாரீர்
- வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
- ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
- ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
- தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
- ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
- யோகம் கொடுத்தீரே வாரீர்
- போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
- ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
- ஏறவைத் தீர்இங்கு வாரீர்
- தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
- றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
- தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
- ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
- ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
- எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
- அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
- துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
- துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
- பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
- என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
- திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
- ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
- அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
- ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
- என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
- ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
- காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
- புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
- புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
- அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
- அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
- இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
- நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
- விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
- வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
- எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
- இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
- விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
- எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
- என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
- இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
- ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
- அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
- பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
- சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
- சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.
- ஆதி அனாதி மருந்து - திரு
- அம்பலத் தேநட மாடு மருந்து
- ஜோதி மயமா மருந்து - என்னைச்
- சோதியா தாண்ட துரிய மருந்து. ஞான
- முக்குணமு மூன்றாம் ஜோதி - அவை
- முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
- எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
- எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. சிவசிவ
- ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
- கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
- வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
- வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ
- மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
- வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
- துய்ய சிவானந்த ஜோதி - குரு
- துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சிவசிவ
- சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
- சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
- சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில்
- விளைவு பலபல வேறென்று காட்டிச்
- சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு
- சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும்
- செல்வம் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
- சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
- செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும்
- அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே
- தீபத்தை வைத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
- விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
- செய்யென்று தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- என்பால் வருபவர்க் கின்றே - அருள்
- ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
- தென்பால் இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- துரியத் தலமூன்றின் மேலே - சுத்த
- துரியப் பதியில் அதுஅத னாலே
- தெரியத் தெரிவது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பரைதூக்கிக் காட்டிய காலே - ஆதி
- பரைஇவர்க் கப்பால்அப் பால்என்று மேலே
- திரைதூக்கிக் காட்டுதல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தற்பர மேவடி வாகி - அது
- தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
- சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நவவெளி நால்வகை யாதி - ஒரு
- நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
- சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மேருவெற் புச்சியின் பாலே - நின்று
- விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
- சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- ஆரண வீதிக் கடையும் - சுத்த
- ஆகம வீதிகள் அந்தக் கடையும்
- சேர நடுக்கடை பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாடல் மறைகளோர் கோடி - அருட்
- பாத உருவ சொரூபங்கள் பாடி
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நீடு சிவாகமங் கோடி - அருள்
- நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பத்தி நெறியில் செழித்தே - அன்பில்
- பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே
- தித்தித் திருப்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
- பிரம வெளியினில் பேரரு ளாலே
- சித்தாடு கின்றது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
- சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
- திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
- எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
- செம்பொருள் என்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- சைவ முதலாக நாட்டும் - பல
- சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
- தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
- தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
- தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
- எல்லா உலகும் இயம்புதல் சும்மா
- செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
- பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
- சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வருவித்த வண்ணமும் நானே - இந்த
- மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
- தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாரிடம் வானிட மற்றும் - இடம்
- பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
- சேரிட மாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உய்பிள்ளை பற்பலர் ஆவல் - கொண்டே
- உலகத் திருப்பஇங் கென்னைத்தன் ஏவல்
- செய்பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
- உளமும் எனக்கே உதவிய தன்றித்
- திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
- எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
- திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பேருல கெல்லாம் மதிக்கத் - தன்
- பிள்ளைஎன் றென்னைப் பெயரிட் டழைத்தே
- சீருறச் செய்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
- அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
- வஞ்சமி லார்நாம்293 வருந்திடில் அப்போதே
- அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
- அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
- அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- இப்புவி யில்நம்மை ஏன்றுகொண் டாண்டநம்
- அப்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- சித்தர் எலாம்வல்ல தேவர் நமையாண்ட
- அத்தர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
- ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
- ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- வன்பர் மனத்தை மதியா தவர்நம
- தன்பர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- தெருளுடை யார்எலாஞ் செய்யவல் லார்திரு
- அருளுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
- தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்
- அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
- தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- காதரிப் பார்கட்குக் காட்டிக் கொடார்நம்மை
- ஆதரிப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
- ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
- ரன்புடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
- அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
- ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
- அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
- அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- செடிகள் தவிர்த்தருட் செல்வ மளிக்கின்ற
- அடிகள் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
- அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
- அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
- அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
- அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
- என்ன புண்ணியம் செய்தே னோ.
- மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச்
- சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே. என்ன
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார்
- ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார்
- ஆதியந்தம் காண்பரிய ஜோதிசுயஞ் ஜோதிஉன்னோ
- டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே. என்ன
- அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
- அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
- சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
- சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன
- ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
- ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
- காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
- காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
- பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
- பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
- வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
- வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
- என்ன புண்ணியம் செய்தே னோ.
- திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
- சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
- எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
- இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
- அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
- அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
- இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
- இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
- பாடிய வேதங்கள் தேடிய பாதம்
- பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
- நாடிய மாதவர்294 நேடிய பாதம்
- நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய
- ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
- அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
- நாரா யணன்விழி நண்ணிய பாதம்
- நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய
- தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
- தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
- மூவரும் காணா முழுமுதற் பாதம்
- முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
- சாகா வரந்தந்த தாரகப் பாதம்
- சச்சிதா னந்த சதோதய பாதம்
- தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
- திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய
- தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
- சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்
- செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
- நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்
- மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
- பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
- சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
- சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
- கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
- கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது அற்புதம்
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
- மணிமுடி கண்டேன டி - அம்மா
- மணிமுடி கண்டேன டி. ஆணி
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
- தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
- இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
- ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
- தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
- தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
- நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
- நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
- சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
- செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
- அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
- அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
- மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
- மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
- அம்பலத் தரசே அருமருந் தே
- ஆனந்தத் தேனே அருள்விருந் தே.
- மலைதரு மகளே மடமயி லே
- மதிமுக அமுதே இளங்குயி லே.
- ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
- அற்புதத் தேனே மலைமா னே.
- சிவசிவ சிவசிவ சின்மய தேஜா
- சிவசுந் தரகுஞ் சிதநட ராஜா.
- அரிபிர மாதியர் தேடிய நாதா
- அரகர சிவசிவ ஆடிய பாதா.
- என்னுயிர் உடம்பொடு சித்தம தே
- இனிப்பது நடராஜ புத்தமு தே.
- அம்பல வாசிவ மாதே வா
- வம்பல வாவிங்கு வாவா வா.
- சங்கர மும்சிவ மாதே வா
- எங்களை ஆட்கொள வாவா வா.
- அரகர சிவசிவ மாதே வா
- அருளமு தம்தர வாவா வா.
- உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
- தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
- சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
- சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
- ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
- தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.
- 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
- 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
- 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
- என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
- ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
- சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
- ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
- பாசநாச பாபநாச பாததேச ஈசனே
- வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
- என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
- சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- அரைசே குருவே அமுதே சிவமே
- அணியே மணியே அருளே பொருளே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
- பசியாத அமுதே பகையாத பதியே
- பகராத நிலையே பறையாத சுகமே
- நசியாத பொருளே நலியாத உறவே
- நடராஜ மணியே நடராஜ மணியே.
- பதியுறு பொருளே பொருளுறு பயனே
- பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
- மதியுறும் அமுதே அமுதுறு சுவையே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- கலைநிறை மதியே மதிநிறை அமுதே
- கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
- சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே
- திருநட மணியே திருநட மணியே.
- நீடிய வேதம் தேடிய பாதம்
- நேடிய கீதம் பாடிய பாதம்
- ஆடிய போதம் கூடிய பாதம்
- ஆடிய பாதம் ஆடிய பாதம்.
- சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
- தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
- சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
- தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
- இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
- எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
- அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
- அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.
- வேத சிகாமணியே போத சுகோதயமே
- மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
- நாத பராபரமே சூத பராவமுதே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
- தீன சகாநிதியே சேகர மாநிதியே
- நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
- எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
- இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
- மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
- மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
- பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
- பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
- எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
- எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
- பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
- பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
- விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
- விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
- இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
- எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
- சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
- சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
- துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
- தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
- கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
- ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
- இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
- பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
- பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
- பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
- பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
- சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
- வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
- மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
- சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
- துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
- ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
- கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
- தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
- இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
- இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
- மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
- மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
- தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
- தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்
- மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி
- நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்
- நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி
- இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி
- எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி
- இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்
- என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
- நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
- நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
- கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
- கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
- தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
- தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
- படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
- பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
- அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
- ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
- கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
- கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
- அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
- மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
- மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
- மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
- விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
- கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
- கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
- ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
- அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
- தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
- தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
- தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
- திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
- துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
- ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
- ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
- என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
- ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக்
- கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ
- வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ
- விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில்
- சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே
- ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
- இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
- கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
- கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
- துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
- சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
- உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
- உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
- என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
- எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
- தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
- தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
- பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
- பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
- மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
- மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.
- நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
- நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
- வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
- வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
- தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
- திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
- தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
- சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
- இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
- எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
- எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
- எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
- கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
- கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
- செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
- சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- நாடுகின்ற பலகோடி அண்டபகி ரண்ட
- நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
- நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
- நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
- ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
- கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
- பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
- பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
- பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
- அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
- யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
- பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
- பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
- துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
- சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
- சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
- சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
- பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
- பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
- அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
- அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
- சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
- திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
- தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
- தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
- கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
- கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
- செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
- சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
- இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
- இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
- ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
- மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
- விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
- துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
- சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
- வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
- மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.