- பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
- பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
- படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
- பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
- பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
- பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
- பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
- பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
- பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
- பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
- பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
- பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம்
- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
- தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
- தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
- தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
- தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
- தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
- சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
- தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
- தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
- தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
- சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
- தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
- சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
- தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
- தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
- சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம்
- மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
- மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
- மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
- வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
- மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
- மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
- மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
- மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
- மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
- மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
- மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
- மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
- மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
- மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
- வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
- வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
- வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
- மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
- மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
- மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
- வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
- மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
- மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம்
- ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
- எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
- எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
- எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
- என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
- என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
- என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
- என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
- என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
- என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
- எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
- எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
- அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
- எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
- கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
- தொன்றதுநம் முள்ள முறைந்து.
- தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
- கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும்
- வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
- வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை
- காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
- கோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின்
- மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
- காவளரு மின்பக் கனசுகமே - தாவுமயல்
- வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
- ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த
- சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
- வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள்
- என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
- இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு
- மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
- ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே - மாற்கருவின்
- காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோறும்
- ஏத்துங் குரங்காட்டின்52 என்னட்பே - மாத்தழைத்த
- தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
- மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம்
- தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
- ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல்
- தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
- ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது
- உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
- புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
- மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
- ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே - ஓவாது
- தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
- கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே - மாணுற்றோர்
- நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
- மாடக்கோ யிற்குண் மதுரமே - பாடச்சீர்
- வாயூரத் தேமா மலர்59 சொரிந்து வாழ்த்துகின்ற
- மாயூரத் தன்பர் மனோரதமே - தேயா
- கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
- வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி
- வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
- ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும்
- மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற
- மாகாளாத் தன்பர் மனோலயமே - யோகாளக்
- காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
- மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக்
- துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
- மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
- மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
- வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம்
- காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்
- பேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா
- காலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி
- ஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே - மாலுங்கொள்
- வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
- செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன்
- வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங்
- கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே - கண்டீச
- அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
- வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற
- விண்மருவி னோனை விடநீக்க நல்லருள்செய்
- வண்மருகல் மாணிக்க வண்ணனே - திண்மைகொண்ட
- மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத
- சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் - தூத்தகைய
- தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
- ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த
- மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை
- உண்மண் டலி63 எம் உடைமையே - திண்மைக்
- வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
- பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை
- தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
- பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
- மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
- வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
- வல்லலிடும் பாவநத்த மட்டொளிசெய் கின்றதிரு
- மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே - தொல்லைப்
- வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
- தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென
- போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
- ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
- வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
- ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா
- நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை
- வாட்டுந் திருக்கோண மாமலையாய் - வேட்டுலகின்
- காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
- ஆப்பனூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர்
- அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
- செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே - தங்குமன
- வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
- வெஞ்சமாக் கூடல் விரிசுடரே - துஞ்சலெனும்
- வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
- பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய
- வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத்
- தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே - நீங்காது
- ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
- தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன்
- சென்னதிகை யோங்கித்74 திலதவதி யார்பரவும்
- மன்னதிகை வீரட்ட மாதவமே - பன்னரிதாம்
- ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
- நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம்
- நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
- கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா
- மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
- பேசுந் துறையூர்ப் பிறைசூடீ - நேசமுற
- காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
- மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற
- தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
- ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
- யோகறலி77 லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு
- மாகறலில் அன்பரபி மானமே - ஓகையிலா
- வீத்தூர78 மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு
- ஓத்தூரில் வேதாந்த உண்மையே - பூத்தவிசின்
- காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
- மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்
- ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
- ஊற லழியா உவகையே - மாறுபடு
- மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
- பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன்
- ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
- கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு
- எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
- நண்ணுஞ் சிவயோக நாட்டமே - மண்ணகத்துள்
- கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட
- மாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப்
- எண்டோ ளுடையாய் எனையுடையாய் மார்பகத்தில்
- வண்டோ லிடுங்கொன்றை மாலையாய் - தொண்டர்விழி
- உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங்
- கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் - மண்ணுலகில்
- ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில்
- சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே - சார்ந்துலகில்
- ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
- விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண்
- நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய
- வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட
- பண்ர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
- கண்ர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ர்போல்
- மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும்
- வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு - துய்யர்தமை
- என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று
- முன்னொன்று மாக மொழிந்ததுண்டு - மன்னுகின்ற
- மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
- தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா
- மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
- கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத
- பூணா வெலும்பணியாய்ப் பூண்டோய்நின் பொன்வடிவங்
- காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத
- காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
- மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற
- எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங்
- கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு - நள்ளுலகில்
- வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
- ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான
- ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
- ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத
- வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
- சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை
- நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
- சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான்
- ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
- மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன்
- இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல்
- சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் - நல்லையெமக்
- வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
- ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த
- மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
- சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன்
- இற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த
- குற்றங் குணமாகக் கொண்டனையே - பற்றுலகில்
- மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக்
- கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க - பாற்றவள
- உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
- கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென்
- மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம்
- ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் - ஞாலமிசைக்
- போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
- வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
- மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
- மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல
- மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
- தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல்- சாலுலக
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
- இலகும் சிவமாய் இறையாய் - விலகும்
- நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
- சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்
- ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
- நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்
- வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர
- நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும்
- செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
- அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு
- காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்
- சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்
- போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
- நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா
- ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
- சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்
- ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
- ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான
- சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
- சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்
- அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
- கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்
- அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்
- எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும்
- நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்
- அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப்
- பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
- தரமாய்ப் பரப்பிரமம் தானாய்-வரமாய
- ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
- அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்
- அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
- சகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை
- ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
- எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்
- வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
- நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்
- கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்
- நிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய
- யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
- போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்
- கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
- கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்
- காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
- சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்
- ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
- சார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்
- எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
- அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்
- தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
- சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
- தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
- வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
- நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்
- நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்
- அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்
- திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு
- வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்
- செய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல்
- அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
- செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே
- பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
- சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக
- ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
- சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
- வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
- திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா
- காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
- தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற
- ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
- சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்
- முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
- சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்
- பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்
- சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள்
- அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்
- சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்
- சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
- செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற
- மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்
- கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு
- மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
- காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற
- நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்
- தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற
- மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்
- சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்
- தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
- சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்
- மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
- ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்
- மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
- நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்
- ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்
- காண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு
- தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
- ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்
- காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை
- மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்
- சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
- மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்
- தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
- மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
- ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
- ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே
- காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய
- ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா
- வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை
- நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்
- ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்
- கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்
- இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்
- டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ
- இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்
- துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்
- தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்
- தூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில்
- புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு
- நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்
- தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்
- கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற
- விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
- கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
- உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே
- கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்
- நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
- தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து
- சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்
- நீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி
- தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
- மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்
- பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
- மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்
- மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய
- செல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த
- ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
- நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்
- மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்
- பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின்
- மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
- வாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்
- மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
- பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்
- மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
- பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
- தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்
- பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர்
- செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா
- தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற
- அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
- நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்
- தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
- ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
- வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்
- கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்
- வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
- ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
- என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த
- பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ
- ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
- வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ
- வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
- தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய
- மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்
- நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்
- மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்
- தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில்
- காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்
- பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்
- ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை
- ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான
- வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
- வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
- சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
- சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு
- பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
- பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்
- கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
- பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்
- மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி
- ஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி
- ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
- வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்
- மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்
- கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்
- போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
- மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்
- காகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்
- காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்
- செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்
- பைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது
- வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்
- புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்
- வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
- நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ
- பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
- மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்
- பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
- ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்
- வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
- ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
- மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்
- மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட
- வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
- இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
- மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே
- நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்
- ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக
- மாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது
- மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது
- சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்
- கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்
- நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்
- பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
- கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த
- புலனைந்தும்என்றருளும் பொன்மொழியை மாயா
- மலமொன்றி அந்தோ மறந்தாய்119 - நிலனொன்றி
- காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
- கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்
- மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
- சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை
- மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
- பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ
- மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
- பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற
- துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
- நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற
- வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
- இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்
- பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
- சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு
- தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட
- நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின்
- எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்
- இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்
- தூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா
- காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்
- காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த
- மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை
- இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
- முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்
- கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்
- றுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய்
- இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
- கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்
- கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
- பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
- வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
- வீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்
- தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
- வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்
- காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்
- மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்
- சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்
- அங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற
- சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்
- நூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ
- தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
- வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய
- இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்
- துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய
- ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
- வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
- தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
- நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
- டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
- நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த
- தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
- மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க
- மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
- றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த
- வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
- நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை
- சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
- சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்
- சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
- கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு
- மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக
- யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்
- வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்
- கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற
- வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்
- தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்
- தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
- கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்
- அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
- புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்
- தேனே அமுதே சிவமே சிவமேஎம்
- மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
- மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்
- அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்
- மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு
- வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்
- நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
- சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த
- நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
- மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்
- அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
- அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே
- விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்
- செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்
- பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை
- நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை
- நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
- ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
- தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
- நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு
- மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்
- தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்
- வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
- தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு
- வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
- காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்
- தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்
- ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர்
- வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
- ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்
- தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்
- பாரா இருந்த படியிருந்து - பேராது
- தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
- யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்
- ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
- நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது
- தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
- பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்
- தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
- ஏறா திழியா திருப்போரும் - மாறாது
- மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர
- மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
- நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
- எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
- உண்டோ இலையோ உரை.
- அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
- அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
- சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
- சோதிஉரு வாக்குந் துணை.
- அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
- பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
- வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
- எம்பெருமான் நீவாழ் இடம்.
- ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
- காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
- தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
- கண்டே வலம்செய்யாக் கால்.
- ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
- காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
- விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
- கண்டுஞ் சிரங்குவியாக் கை.
- வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
- வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
- ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
- வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
- தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
- நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
- கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
- மூளாது பாழ்த்த முகம்.
- மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
- மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
- மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
- தலக்கூடல் தாழாத் தலை.
- சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
- கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
- தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
- சும்மா அடைக்கின்ற சோறு.
- சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
- மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
- எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
- துண்ணுவார் உண்ணும் இடத்து.
- எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
- அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
- தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
- நாள்வருந்த வேண்டுகின்றேன் நான்.
- எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
- தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
- வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
- மாயப்பெயர் நீண்ட மால்.
- வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
- நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
- மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
- வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
- ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
- பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
- நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
- வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
- ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
- கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்
- விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
- கொள்ளாக் குறையே குறை.
- என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்
- தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ
- யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை
- ஓர்பால் கொளநின்றோய் ஓது.
- எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
- பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
- நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
- அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
- கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
- உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
- வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
- என்செய்வேன் நின்னருளின் றேல்.
- மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
- போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
- யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
- போனாலென் செய்வேன் புகல்.
- என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
- உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
- தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை
- யார்க்கும் புகலுன் அருள்.
- தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
- வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
- ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
- பாங்கான செம்பொற் பதம்.
- ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
- தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
- கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
- கெல்லா நலமுமுள தே.
- மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
- கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
- அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
- கண்டமங்கே நீலமுறாக் கால்.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
- எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
- குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
- அற்றமிலா தாள்கின் றவர்.
- சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
- நவமே தவமே நலமே நவமாம்
- வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
- படிவுற்ற என்னுட் பயன்.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
- உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
- உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
- கலகநிலை அறியாத காட்சி யாகிக்
- கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
- இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
- இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
- அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
- தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
- உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
- யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
- கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
- களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
- விலகலுறா நிபிடஆ னந்த மாகி
- மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
- இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
- இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
- வித்தாகி முளையாகி விளைவ தாகி
- விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
- கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
- குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
- சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
- சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
- முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
- முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
- வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
- மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
- நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
- நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
- மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
- முதலாகி மனாதீத முத்தி யாகி
- வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
- மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
- தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
- துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
- சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
- சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
- ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
- உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
- ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
- எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி
- இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
- பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
- பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
- வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி
- மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
- அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்
- அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.
- நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
- நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
- தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
- தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
- சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
- சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
- மன்மயமாய் வாசகா தீத மாகி
- மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.
- வாயாகி வாயிறந்த மவுன மாகி
- மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
- காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
- கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
- தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
- தானாகி நானாகிச் சகல மாகி
- ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
- ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
- அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
- அளவாகி அளவாத அதீத மாகிப்
- பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
- பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
- பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
- பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
- கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
- கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
- பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
- புறமாகி அகமாகிப் புனித மாகி
- மன்னாகி மலையாகிக் கடலு மாகி
- மதியாகி ரவியாகி மற்று மாகி
- முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
- முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
- மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
- வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- உருவாகி உருவினில்உள் உருவ மாகி
- உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
- அருவாகி அருவினில்உள் அருவ மாகி
- அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
- குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
- குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
- மருவாகி மலராகி வல்லி யாகி
- மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
- சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
- சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
- அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
- அவையனைத்தும் அணுகாத அசல மாகி
- இகலுறாத் துணையாகித் தனிய தாகி
- எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
- உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
- ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
- வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
- வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
- தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
- சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
- பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
- பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
- நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
- நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.
- சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
- சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
- மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
- வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
- இகமாகிப் பதமாகிச் சமய கோடி
- எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
- பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
- பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.
- விதியாகி அரியாகிக் கிரீச னாகி
- விளங்குமகேச் சுரனாகி விமல மான
- நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
- நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
- பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
- பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
- கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
- கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
- மானாகி மோகினியாய் விந்து மாகி
- மற்றவையால் காணாத வான மாகி
- நானாகி நானல்ல னாகி நானே
- நானாகும் பதமாகி நான்றான் கண்ட
- தானாகித் தானல்ல னாகித் தானே
- தானாகும் பதமாகிச் சகச ஞான
- வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற
- மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே.
- மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி
- வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
- சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
- தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
- தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்
- தானாகித் தனதாகித் தானான் காட்டா
- அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
- அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.
- பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
- பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
- கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
- கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
- சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
- தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
- நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
- நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
- நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
- காலமே காலமெலாம் கடந்த ஞானக்
- கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
- கோலமே குணமேஉட் குறியே கோலங்
- குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
- சீலமே மாலறியா மனத்திற் கண்ட
- செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
- குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
- வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
- வானமுதே ஆனந்த மழையே மாயை
- வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
- வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
- தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
- செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
- மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
- என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்
- இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
- அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்
- ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
- இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி
- எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.
- அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
- கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
- விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
- வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
- கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
- சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
- சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- வான்காணா மறைகாணா மலரோன் காணான்
- மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
- நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
- நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
- மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
- வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
- ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
- அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
- பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
- வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
- மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
- ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
- உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
- ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
- அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
- வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
- இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
- கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
- கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
- காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
- பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
- பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
- பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
- பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
- மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
- வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
- இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
- இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
- விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
- விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
- தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
- வானாகி வளியனலாய் நீரு மாகி
- மலர் தலைய உலகாகி மற்று மாகித்
- தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
- தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
- நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
- நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற
- செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
- மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி
- வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
- அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்
- அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
- நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்
- நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே.
- படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே
- படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
- ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
- உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
- பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
- பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
- நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே
- நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்
- ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
- கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ
- குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
- கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்
- கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
- செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்
- திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே.
- எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்
- ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
- செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்
- சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
- கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்
- கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
- வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்
- மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
- புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
- நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
- நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
- மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
- வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
- கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்
- கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.
- அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட
- அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
- கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே
- கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ
- நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்
- நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
- ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்
- எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே.
- கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்
- கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
- உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்
- ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
- மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ
- மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
- வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே
- மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே.
- நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோம் இந்த
- நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
- பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்
- பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
- உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே
- உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
- பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்
- பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.
- எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்
- எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
- நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி
- நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
- தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
- தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
- புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
- பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.
- புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
- பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
- உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை
- உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
- மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்
- வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
- கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்
- கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
- இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
- மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
- பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே.
- கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
- தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
- வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
- ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
- நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
- தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
- கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
- ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
- பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
- வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
- துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே.
- பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
- கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
- பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
- மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
- தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
- ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
- நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
- நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
- தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
- நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
- சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.
- மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
- பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
- எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
- விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.
- கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
- சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
- அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
- நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.
- ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
- வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
- சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
- போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
- சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
- பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
- கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
- மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.
- ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
- வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
- கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
- திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
- வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
- மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
- ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
- ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
- மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
- தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
- ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
- நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே.
- மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர்
- திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே
- விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை
- கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே.
- பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
- ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
- மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
- வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
- பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
- கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
- மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
- குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
- மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
- அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
- பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.
- பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
- ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
- வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
- அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.
- விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
- திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
- துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
- பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.
- அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
- பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
- இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
- தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே.
- பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
- சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
- அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
- கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.
- நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
- ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
- வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
- தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
- வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
- கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
- தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
- பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
- மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
- கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
- மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
- நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
- வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
- மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
- காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
- பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
- மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
- இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
- குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
- முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.
- வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
- இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
- உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
- களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
- அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
- சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
- பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
- வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.
- நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
- வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
- தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
- மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.
- எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
- மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
- விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
- வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.
- கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
- நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
- கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
- கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.
- அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
- சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
- இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
- எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.
- மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
- காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
- சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
- நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே.
- வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
- புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
- விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
- தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.
- குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
- வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
- பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
- திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
- ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
- மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
- காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
- சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.
- கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
- பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
- புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
- ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
- நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
- போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
- ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
- மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
- காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
- கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
- பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
- சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
- கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
- நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
- இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
- கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
- பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
- ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.
- வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
- தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
- கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
- ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே.
- வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
- மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
- ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
- பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே.
- தெண்ர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
- கண்ர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
- புண்ர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
- மண்ர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே.
- கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
- அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
- துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
- துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.
- துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
- அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
- படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
- குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
- வேல்கொண்ட கையுமுந் நு‘ல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
- கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
- மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
- மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.
- பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
- திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
- கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
- மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.
- தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
- அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
- உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
- சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
- மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
- பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
- கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
- திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.
- ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
- பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
- ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
- மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.
- கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
- சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
- போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
- பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.
- வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
- தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
- ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
- மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே.
- சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
- வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
- புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
- மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
- சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
- மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
- மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
- பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
- பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
- மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
- நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
- குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே.
- மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
- காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
- போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
- பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
- வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
- ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
- பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
- மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
- சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
- கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
- விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.
- மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
- மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
- கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
- கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.
- மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
- பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
- கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
- பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
- வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
- தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
- மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
- நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே.
- கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
- குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
- உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
- மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.
- மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
- காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
- தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
- நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.
- ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
- காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
- ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
- சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
- வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
- மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
- உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
- காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
- தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
- சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
- பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
- எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
- தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
- செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
- பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
- திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
- கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
- நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே.
- கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
- மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
- வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
- தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
- வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
- தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
- ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
- இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
- கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
- கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
- வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
- இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
- முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
- வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
- உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
- நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
- புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
- விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.
- முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
- தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
- இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
- மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
- மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
- கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
- தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
- நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.
- மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
- இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
- செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
- ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
- மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
- துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
- பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
- கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
- 145. ஓர்பிள்ளைப்பேர் - மதலை - சரக்கொன்றை. ச. மூ. க.
- 146. மயங்குகின்றேன், மயங்கின்றேன் என விகாரமாயிற்று. தொ. வே.
- 147. கொண்டிடேல் என முன்னிலை எதிர்மறை ஏவன்முற்றாகக் கொள்க. தொ. வே.
- 148. செல் - மேகம். தொ. வே.
- 149. உரும் - இடி. தொ. வே.
- 150. மாழை - பொன். தொ. வே.
- 151. பொன்கின்று பூத்த சடை - கொன்றை பூத்த சடை. தொ. வே.
- 152. கல் - மலை. தொ. வே.
- 153. வேணி - நதி. தொ. வே.
- 154. பாணிக்குமோ - தாமதிக்குமோ. ச. மு. க.
- 155. பாணி - கை, நீர். ச. மு. க.
- 156. கடா, தாம், பாயினும் - பாய்ந்தாலும் ; தாம்பு - கயிறு. ச. மு. க.
- 157. சொல் - நெல், தொ. வே.
- 158. கனல் - அக்கினி. இனன் - சூரியன். இந்து - சந்திரன். ச. மு. க.
- சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
- வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
- தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
- ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
- கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
- உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
- அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
- மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
- அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
- குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
- பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
- மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
- மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
- கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
- தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
- வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
- பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
- அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
- தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
- மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
- திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
- தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
- பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
- மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
- பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
- அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
- மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
- சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
- தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
- வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
- நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
- பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
- வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
- நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
- போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
- பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
- மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
- கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
- நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
- தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
- மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
- சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
- வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
- தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
- மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
- தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
- வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
- எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
- மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
- பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
- முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
- கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
- மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
- செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
- கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
- மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
- தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
- நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
- மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
- அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
- தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
- மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
- தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
- பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
- மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
- காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி
- யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
- நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
- மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
- ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
- ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே
- மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
- விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
- நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
- மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
- தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
- தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
- மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
- ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
- சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
- நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
- வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
- சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
- கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
- தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
- வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
- நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
- பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
- தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
- வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
- பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
- பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
- மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
- நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
- தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
- வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
- சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
- துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
- மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
- சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
- ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
- வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
- வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
- துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
- என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
- மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
- றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
- காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
- வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
- வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
- லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
- யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
- மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
- எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
- செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
- மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
- கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
- ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
- மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
- பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
- காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
- மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
- வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
- ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
- மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
- ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
- பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
- தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
- மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
- பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
- கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
- வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
- அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
- முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
- கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
- வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
- ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
- ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
- காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
- வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
- ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
- எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
- மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
- விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
- வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
- குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
- மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
- பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
- துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
- இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
- மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
- எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
- இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
- மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
- எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
- தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
- செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
- வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
- தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்
- தருட்பால் அளிக்கும் தனத்தன மேஎம் அகங்கலந்த
- இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தைஉள்ளம்
- மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
- கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
- குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
- மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
- செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான்
- மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால்அன்பு மேவுகின்றோர்
- கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
- வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
- தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங்
- கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
- இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
- வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
- சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
- பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
- மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
- மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
- சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
- தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
- வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
- அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
- முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
- வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே
- குணமொன்றி லேன்எது செய்கேன்நின் உள்ளக் குறிப்பறியேன்
- பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில்தெய்வ
- மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
- குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்
- திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த
- மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள்
- பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
- புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
- மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
- தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
- வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
- ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
- மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
- திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
- விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
- வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
- என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
- நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
- பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
- மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
- இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்க்
- கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
- வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- சற்றே யெனினும்என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
- பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
- சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
- மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.
- சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
- அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
- நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
- வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
- செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
- கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
- வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
- நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
- எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
- வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
- கற்பே விகற்பம் கடியும்ஒன் றேஎங்கள் கண்நிறைந்த
- பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட் போதஇன்பே
- சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
- மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
- தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
- சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
- மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
- வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
- பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
- பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
- வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
- மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
- நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
- கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
- வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
- ஆறாத் துயரத் தழுந்துகின் றேனைஇங் கஞ்சல்என்றே
- கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன்
- தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
- மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
- எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
- சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
- சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
- மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
- கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
- தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
- வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
- சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
- நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
- வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
- தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
- தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
- வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
- நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
- வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
- மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
- கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
- அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
- மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
- பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
- சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
- நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
- மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
- பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
- காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
- மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
- தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
- காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
- வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
- திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
- வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம்
- கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
- மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.
- உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
- நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
- படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
- மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
- பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
- சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே
- மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
- என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
- முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
- ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
- நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
- நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
- தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
- மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
- முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
- இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
- மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
- கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
- தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
- ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
- மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
- ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
- ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
- சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
- மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
- துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
- கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
- வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
- ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
- சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
- மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
- என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
- மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
- மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
- பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
- கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
- மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
- மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
- நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
- தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
- ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
- வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
- வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
- வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
- வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- 35. சௌந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று. தொ.வே.
- 36. கரம்-விடம். தொ.வே.
- 37. விண்ணன் -இந்திரன். தொ.வே.
- 38. மாசை -பொன் தொ.வே.
- 39. கையிலேந்து எனற்பாலது சயிலேந்து எனப் போலியாயிற்று. தொ.வே.
- ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
- திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
- கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
- வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
- கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்
- கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத
- மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
- தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை
- யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
- னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
- செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
- வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
- வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
- கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
- யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
- னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
- ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
- விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடங்கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமா னீரன்றோ
- திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் தீரென் றேனின் னடுநோக்காக்
- குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் குடம்யா தென்றே னஃதறிதற்
- கிடங்கர் நடுநீக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
- னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
- கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
- யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
- வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
- யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
- ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
- குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
- களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
- திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
- தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
- யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பாற்றக் கணத்தா ரிவர்காட்டு ப் பள்ளித் தலைவ ரொற்றியினின்
- றாற்றப் பசித்து வந்தாரா மன்ன மிடுமி னென்றுரைத்தேன்
- சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் சொல்லுக் கிளையேங் கீழ்ப்பள்ளி
- யேற்றுக் கிடந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
- மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
- வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
- யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே
- யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
- மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
- மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
- யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
- னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
- யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
- யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே
- யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
- றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக்
- கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன்
- மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
- திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
- மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
- யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
- யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா
- லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே
- னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
- மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
- தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும்
- பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே
- னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
- நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
- தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
- மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேசுங் கமலப் பெண்புகழும் பெண்மை யுடைய பெண்களெலாங்
- கூசும் படியிப் படியொற்றிக் கோவே வந்த தென்னென்றேன்
- மாசுந் தரிநீ யிப்படிக்கு மயங்கும் படிக்கு மாதருனை
- யேசும் படிக்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம்
- படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின்
- மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா
- மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் வல்லீ ரொற்றி மாநகரீர்
- பொறிசே ருமது புகழ்பலவிற் பொருந்துங் குணமே வேண்டுமென்றேன்
- குறிநே ரெமது விற்குணத்தின் குணத்தா யதனால் வேண்டுற்றா
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
- மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
- னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
- றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளியா ரொற்றி யுடையாருக் கன்ன நிரம்ப விடுமென்றே
- னளியார் குழலாய் பிடியன்ன மளித்தாற் போது மாங்கதுநின்
- னொளியார் சிலம்பு சூழ்கமலத் துளதாற் கடகஞ் சூழ்கமலத்
- தெளியார்க் கிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம்
- பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே
- னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள்
- ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன்
- மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க
- விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென்
- னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நலமா மொற்றி யுடையீர்நீர் நல்ல வழக ரானாலுங்
- குலமே துமக்கு மாலையிடக் கூடா தென்றே னின்குலம்போ
- லுலகோ துறுநங் குலமொன்றோ வோரா யிரத்தெட் டுயர்குலமிங்
- கிலகா நின்ற தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர்
- புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
- மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள்
- ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப்
- பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே
- னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண்
- டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாணப் புகழ்சே ரொற்றியுளீர் மன்றார் தகர வித்தைதனைக்
- காணற் கினிநான் செயலென்னே கருதி யுரைத்தல் வேண்டுமென்றேன்
- வேணச் சுறுமெல் லியலேயாம் விளம்பு மொழியவ் வித்தையுனக்
- கேணப் புகலு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
- கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
- பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
- தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
- நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
- முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
- விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் வளஞ்சே ரொற்றி மாநகரீர்
- குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் கொண்டீர் கொள்கை யென்னென்றே
- னணங்கே யொருபா லன்றிநின்போ லைம்பா லிருள்கொண் டிடச்சற்று
- மிணங்கே மிணங்கே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
- மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
- வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
- திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
- நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
- ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
- தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
- ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
- பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
- எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
- சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
- உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- அட்ட மூர்த்தம தாகிய பொருளை
- அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
- விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
- வேத மூலத்தை வித்தக விளைவை
- எட்ட ரும்பர மானந்த நிறைவை
- எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
- நட்டம் ஆடிய நடனநா யகத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
- உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
- தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
- சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
- பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
- பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
- நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
- சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
- உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
- உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
- மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
- விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
- நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- இன்னும் பற்பல நாளிருந் தாலும்
- இக்க ணந்தனி லேஇறந் தாலும்
- துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
- சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
- என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
- எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
- நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
- இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
- அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
- அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
- விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
- விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
- நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
- கணைகன் ஏவினும் காலனே வரினும்
- பூவின் மன்னவன் சீறினும் திருமால்
- போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
- ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
- ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
- நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
- ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
- அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
- ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
- செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
- சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
- நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
- ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
- வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
- வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
- வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
- மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
- நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
- மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
- கலங்கு றேல்அருள் திருவெண் றெனது
- கரத்தி ருந்தது கண்டிலை போலும்
- விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
- விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
- நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
- மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
- ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
- எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
- கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
- குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
- நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
- மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
- ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
- காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
- வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
- திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
- உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
- கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
- செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
- வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
- வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
- கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
- ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
- சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
- மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
- காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
- மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
- ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
- பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
- கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- 17. இரக்கமில்லீர் எம்பிரான் என நாவுக்கரசர் பாடியதாவதுஅரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோசரக்க விக்கத வந்திறப் பிம்மினே.
- கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
- கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
- அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
- அணியும் தொண்டரை அன்புடன் காண்க
- தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
- தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
- நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
- நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
- தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
- சீறு பாம்புகண் டெனஒளித் தேக
- சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
- சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
- செய்ப வன்செய லும்அவை உடனே
- செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
- உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
- ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
- தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
- சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
- தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
- தழுவி யேஅதை முழுவதும் கேட்க
- சேய நன்னெறி அணித்தது செவிகாள்
- சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
- ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
- கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
- இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
- எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
- இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
- ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
- கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
- இடங்கொண் டெம்முளே இசைகுதற் பொருட்டே.
- நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
- நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
- கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
- கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
- மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
- மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
- அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
- அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
- முத்தி வேண்டுமேல்
- பத்தி வேண்டுமால்
- சத்தி யம்இது
- புத்தி நெஞ்சமே.
- என்ப தேற்றவன்
- அன்ப தேற்றுநீ
- வன்பு மாற்றுதி
- இன்பம் ஊற்றவே.-
- ஊற்றம் உற்றுவெண்
- நீற்றன் ஒற்றியூர்
- போற்ற நீங்குமால்
- ஆற்ற நோய்களே.-
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
- கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
- மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
- வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
- இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
- இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
- தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
- அன்னை என்பர்கள் அழவலி இல்லாக்
- கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
- குற்றம் அன்றது மற்றவள் செயலே
- தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
- துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம்
- செழுது மாதவி மலர்திசை மணக்கத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
- வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
- மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
- மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
- ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
- உள்ளம் எப்படி அப்படி அறியேன்
- திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- காயம் என்பதா காயம்என் றறியேன்
- கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
- சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
- தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
- தூய நின்அடி யவருடன் கூடித்
- தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
- தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நெய்யி னால்சுடு நெருப்பவிப் பவன்போல்
- நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த
- பொய்யி னால்பவம் போக்கிட நினைத்தேன்
- புல்ல னேனுக்குன் நல்அருள் வருமோ
- கையி னால்தொழும் அன்பர்தம் உள்ளக்
- கமலம் மேவிய விமலவித் தகனே
- செய்யி னால்பொலிந் தோங்கிநல் வளங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
- தோகையர் மயக்கிடை அழுந்தி
- ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
- மாமணிக் குன்றமே மருந்தே
- ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
- யூர்வரும் என்னுடை உயிரே.
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை
- வஞ்சனேன் நின்னடி யவர்பால்
- எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர்
- கோலநெஞ் சொளிர் குணக் குன்றே
- உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி
- யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே.
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
- கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
- மங்கல்இல் லாத வண்மையே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- எங்குவந் தாய்நீ யார்என வேனும்
- இயம்பிடா திருப்பதும் இயல்போ.
- நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
- நல்லவ னேதிருத் தில்லை
- மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
- புண்ணியம் விளைகின்ற புலமே
- மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
- பூங்கழற் கன்புபூண் டவன்காண்
- எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
- கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
- எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
- பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
- தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
- மாசி லாமணி யேமருந் தேசற்றும்
- கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
- பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.
- வேலை கொண்ட விடம்உண்ட கண்டனே
- மாலை கொண்ட வளர்வல்லி கேசனே
- பாலை கொண்ட பராபர நீபழஞ்
- சேலை கொண்ட திறம்இது என்கொலோ.
- பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
- மன்னும் மாமணி யேவல்லி கேசனே
- உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
- துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
- ஆல்அ டுத்தஅ ரும்பொரு ளேதிரு
- மால்அ டுத்தும கிழ்வல்லி கேசநீ
- பால்உ டுத்தப ழங்கந்தை யைவிடத்
- தோல்உ டுப்பது வேமிகத் தூய்மையே.
- துன்னும் மாமருந் தேசுட ரேஅருள்
- மன்னும் மாணிக்க மேவல்லி கேசரே
- துன்னு கந்தையைச் சுற்றிநிற் பீர்எனில்
- என்ன நீர்எமக் கீயும்ப ரிசதே.
- மாசில் சோதிம ணிவிளக் கேமறை
- வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
- தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
- தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
- திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
- தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
- வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
- யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
- உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
- ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
- வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
- தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
- உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
- கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
- நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
- கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
- கழல்கொள்உன் அருமைத் திருவடி மலரைக் கருதிடாப் பிழைதனைக் குறித்தே
- விழலன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- அழல்அயில் கரத்தெம் ஐயனை ஈன்ற அப்பனே அயனுமால் அறியாத்
- தழல்நிறப் பவளக் குன்றமே ஒற்றித் தனிநகர் அமர்ந்தருள் தகையே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
- வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
- அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.
- சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
- வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
- போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.
- நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும்
- தாயினும் இனியாய் இன்னும்நீ வரவு தாழ்த்தனை என்கொலென் றறியேன்
- மாயினும் அல்லால் வாழினும் நினது மலரடி அன்றிஒன் றேத்தேன்
- காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே.
- காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள்
- மாண்பது மாறி வேறுரு எடுத்தும் வள்ளல்நின் உருஅறிந் திலரே
- கோண்பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கைகொண் டறிகுவதையா
- பூண்பது பணியாய் பொதுவில்நின் றாடும் புனிதநின் அருளலா தின்றே.
- என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி
- அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே
- உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே
- நன்னர்செய் கின்றோய் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே.
- போகம் கொண்ட புணர்முலை மாதொரு
- பாகம் கொண்ட படம்பக்க நாதரே
- மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
- மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.
- நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
- பறைய நின்றப டம்பக்க நாதரே
- உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
- குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
- நாட நல்இசை நல்கிய மூவர்தம்
- பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
- வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
- ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.
- சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
- பலவு மாகும்ப டம்பக்க நாதரே
- நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
- குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.
- அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
- படிவ மாகும்ப டம்பக்க நாதரே
- நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
- மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
- பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
- முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
- எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
- நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
- சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
- முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
- கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
- கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
- இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
- எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
- பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
- சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
- எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
- தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
- வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
- சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
- யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
- கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
- ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
- ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
- புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
- கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
- எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
- வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
- கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
- என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
- கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
- பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
- எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
- வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
- கன்றின் அயர்ந்தழும்என் கண்ர் துடைத்தருள
- என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
- தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
- காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
- ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
- துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
- புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
- என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.
- வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
- தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
- பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
- ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.
- பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
- துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
- நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
- இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
- கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
- புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
- ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
- எல்லை அறியேன் எழுத்தறியும் பெருமானே.
- பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
- கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
- இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
- என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.
- மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
- ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
- கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
- ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
- சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
- நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
- யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
- ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
- தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
- ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
- ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
- பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
- ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
- ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
- பீழைமனம் நம்மைப் பெறாதம் மனங்கொடிய
- தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
- ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
- கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
- தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
- எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
- கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
- உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
- றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
- வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
- கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
- இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
- ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
- அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
- சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
- இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
- மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
- இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
- எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- நம்பு நெஞ்சமே நன்மை எய்துமால்
- அம்பு யன்புகழ் அண்ணல் ஒற்றியூர்ப்
- பம்பு சீர்ப்படம் பக்கன் ஒன்னலார்
- தம்பு ரஞ்சுடும் தம்பி ரானையே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
- அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
- சிற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
- பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கண்ண னோடயன் காண்பரும் சுடரே
- கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
- எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
- இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
- அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
- அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
- திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- விடங்க லந்தருள் மிடறுடை யவனே
- வேதன் மால்புகழ் விடையுடை யவனே
- கடங்க லந்தமா உரியுடை யவனே
- கந்த னைத்தரும் கனிவுடை யவனே
- இடங்க லந்தபெண் கூறுடை யவனே
- எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
- திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
- காமன் வெந்திடக் கண்விழித் தவனே
- தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
- சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
- நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
- நாத னேசிவ ஞானிகட் கரசே
- செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
- மயிலின் மேல்வரு மகவுடை யவனே
- ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
- அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
- காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
- கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
- சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
- மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
- கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
- களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
- நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
- நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
- எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை
- அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்
- துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்
- தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்
- வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ
- மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை
- இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- காரார் குழலாள் உமையோ டயில்வேல் காளையொ டுந்தான் அமர்கின்ற
- ஏரார் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கொன் றருளானேல்
- நீரார் சடைமேல் பிறையொன் றுடையான் நிதிக்கோன் தோழன் எனநின்றான்
- பேரார் ஒற்றி யூரான் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- தண்ணார் நீபத் தாரா னொடும்எம் தாயோ டும்தான் அமர்கின்ற
- கண்ணார் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
- பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு படிக்கா சளித்த பரமன்ஓர்
- பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல் பாலனொ டும்தான் அமர்கின்ற
- நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கொன் றருளானேல்
- சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான்
- பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- மன்னும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
- துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
- மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
- பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
- தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
- மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
- பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சூத மெறிவேல் தோன்ற லொடும்தன் துணைவி யொடும்தான் அமர்கின்ற
- காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கொன் றருளானேல்
- ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன்மாற் கிறையானான்
- பேதம் இல்லான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
- மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
- கற்றைச் சடையான் கண்மூன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
- பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வரமன் றலினார் குழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற
- திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல்
- பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
- பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- அறங்கொள் உமையோ டயிலேந் தியஎம் ஐய னொடுந்தான் அமர்கின்ற
- திறங்கொள் கோலம் கண்டுக ளிப்பான் சிறக்க எமக்கொன் றருளானேல்
- மறங்கொள் எயில்மூன் றெரித்தான் கனக மலையான் அடியார் மயல்தீர்ப்பான்
- பிறங்கும் சடையான்ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- தேசார் அயில்வேல் மகனா ரொடும்தன் தேவி யொடும்தான் அமர்கோலம்
- ஈசா எனநின் றேத்திக் காண எண்ணும் எமக்கொன் றருளானேல்
- காசார் அரவக் கச்சேர் இடையான் கண்ணார் நுதலான் கனிவுற்றுப்
- பேசார்க்கருளான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
- வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
- தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
- திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
- காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
- கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
- ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
- கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
- விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
- வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
- மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
- மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
- அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
- தாயி லார்எனத் தயங்குகின் றாயே
- மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
- உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
- தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
- மூட வேடரை முதலற எறிந்து
- வாகை ஈகுவன் வருதிஎன் னுடனே
- வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
- போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
- போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
- சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்
- பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ
- வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா
- மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- நிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற
- நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்
- சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
- அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
- வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
- வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
- வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
- வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
- செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
- பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
- தாதை நீஅவை எண்ணலை எளியேன்
- தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
- கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
- கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
- தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
- வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
- விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
- விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
- தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
- சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
- செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- புல்ல னேன்புவி நடையிடை அலையும்
- புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
- அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
- அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
- ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
- உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
- செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
- காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
- மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
- ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
- தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
- கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
- நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
- மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
- மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
- ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
- ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
- கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
- வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
- செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைக்
- கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
- இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து
- தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்
- ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆர்க்கும் கடற்கண் அன்றெழுந்த ஆல காலம் அத்தனையும்
- சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைக்
- கார்க்கண் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே
- யார்க்கென் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
- சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
- பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
- இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
- செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
- கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
- எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- ஒல்லை எயில்மூன் றெரிகொளுவ உற்று நகைத்தோன் ஒற்றியுளான்
- தில்லை நகரான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- கல்லை அளியும் கனியாக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கோர்
- எல்லை அறியேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- துன்னும் சோம சுந்தரனார் தூய மதுரை நகர்அளித்த
- தென்னர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகைப்
- பன்னும் ஒற்றி நகர்தன்னில் பார்த்தேன் வினைபோம் வழிபார்த்த
- என்னை மறந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
- சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
- கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
- என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
- ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
- போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
- ஆவான் திருவடிஅல் லால்.
- பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
- எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
- விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
- புடையானை நெஞ்சமே போற்று.
- போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
- ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
- அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
- செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
- தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
- விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக்
- கண்ணானை மாலயனும் காணப் படாதானை
- எண்ணாரை எண்ணாதே என்று.
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள்
- அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி
- நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச்
- சீர்கொண்டு நெஞ்சே திகழ்.
- கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
- ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
- உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
- நள்ளவனை நெஞ்சமே நாடு.
- நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
- கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
- சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
- உத்தமனை நெஞ்சமே ஓது.
- பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ
- டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார்
- உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ்
- உள்ளத் தவரை உறும்.
- தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
- றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
- நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
- எந்தை அடிவணங்கா ரேல்.
- தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
- அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
- நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
- சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
- கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
- பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
- செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
- திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
- அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
- புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.
- அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
- அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
- தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
- சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
- கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
- கண்ணுத லானைஎம் கண்ணக லானை
- எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- மாலயன் தேடியும் காணாம லையை
- வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
- ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
- ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
- காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
- கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
- ஏலம ணிகுழ லாள்இடத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
- வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
- களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
- கற்பனை முற்றும்க டந்துநின் றானை
- உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
- உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
- இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
- கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
- மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
- வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
- பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
- பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
- எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.
- கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
- கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
- பண்கள் நீடிய பாடலார் மன்றில்
- பாத நீடிய பங்கயப் பதத்தார்
- ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
- யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
- மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரிய மாலன்று கரியமா வாகிக்
- கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
- பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
- பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
- உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
- உம்பர் நாயகர் தம்புயம் புனைய
- வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
- கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
- துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
- தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
- தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
- தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
- வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- வதன நான்குடை மலரவன் சிரத்தை
- வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
- நிதன24 நெஞ்சகர்க் கருள்தரும் கருணா
- நிதிய மாகிய நின்மலப் பெருமான்
- சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
- தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
- மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து
- மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
- நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
- நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
- பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
- பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
- வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
- பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
- திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
- தேவர் நாயகர் திங்களம் சடையார்
- அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
- அழகர் அங்கவர் அமைந்துவீற்றிருக்கும்
- மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
- கருதி வேண்டிய தியாதது கேண்மோ
- சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
- சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
- அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
- அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
- வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
- வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
- வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
- இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
- யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
- பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
- பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
- வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
- வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.
- 23. ஈண்டு மேற்கொண்ட குறட்பா.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054 (106 - இரவு - 4)
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
- ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
- வாட்டு கின்றனை வல்வினை மனனே
- வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
- கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
- குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
- ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- நீடும் ஐம்பொறி நெறிநடந் துலக
- நெறியில் கூடிநீ நினைப்பொடு மறப்பும்
- நாடும் மாயையில் கிடந்துழைக் கின்றாய்
- நன்று நின்செயல் நின்றிடு மனனே
- ஆடும் அம்பலக் கூத்தன்எம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயத் தின்றே
- ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- கூறும் ஓர்கணத் தெண்ணுறும் நினைவு
- கோடி கோடியாய்க் கொண்டதை மறந்து
- மாறு மாயையால் மயங்கிய மனனே
- வருதி அன்றெனில் நிற்றிஇவ் வளவில்
- ஆறு மேவிய வேணிஎம் பெருமான்
- அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்பால்
- ஈறில் இன்புறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- யாது கண்டனை அதனிடத் தெல்லாம்
- அணைகின் றாய்அவ மாகநிற் கீந்த
- போது போக்கினை யேஇனி மனனே
- போதி போதிநீ போம்வழி எல்லாம்
- கோது நீக்கிநல் அருள்தரும் பெருமான்
- குலவும் ஒற்றியூர்க் கோயிலுக் கின்றே
- ஏதம் ஓடநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- விச்சை வேண்டினை வினையுடை மனனே
- மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
- துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
- சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
- பிச்சை எம்பெரு மான்என நினையேல்
- பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
- இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
- தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
- ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
- இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
- சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
- சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
- ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
- ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
- வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்
- கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்
- கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா
- வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்
- கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- தாமனை மழுமான் தரித்தசெங் கரனைத் தகையனைச் சங்கரன் தன்னைச்
- சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்துநின் றேத்தா
- ஊமரைநீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகைகொள்
- நாமரை நரக நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
- யாவர் அறியார் திருஒற்றி யப்பா அடியேன் யாதறிவேன்
- மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
- காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.
- அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
- இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
- நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
- ஒன்றும் நெறிஏ தொற்றியப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.
- ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
- வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
- இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
- விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
- விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
- மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
- அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
- படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
- நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
- ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
- கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
- தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே
- மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
- பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன்அருள் செயாதிருப் பாயோ
- கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே.
- செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
- உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
- நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
- வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
- கான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்€தையே விரும்பும்
- நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
- சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
- மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்€னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.
- கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
- குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
- பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
- வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- கரும்பே ஒற்றி யூர்அமர்ந்த கனியே உன்தன் கழல்அடியை
- விரும்பேன் அடியார் அடித்தொண்டில் மேவேன் பொல்லா விடமனைய
- பெரும்பேய் மாதர் பிணக்குழியில் பேதை மனம்போந் திடச்சூறைத்
- துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணையொன் றறியேன் துனியேனே.
- வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
- மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
- சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
- நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- அன்றுநீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்டஆ ரூரனார் உன்னைச்
- சென்றுதூ தருள்என் றிரங்குதல் நோக்கிச் சென்றநின் கருணையைக் கருதி
- ஒன்றுதோ றுள்ளம் உருகுகின் றனன்காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்
- தென்றுமால் உழந்தேன் எனினும்நின் அடியேன் என்தனைக் கைவிடேல் இனியே.
- நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
- கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
- உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
- மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
- மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
- உய்வைத்த உத்தமனே ஒற்றியப்பா உன்னுடைய
- தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
- பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
- தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
- ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
- ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.
- பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
- சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
- ஊணாக உள்ளுவந்த ஒற்றியப்பா மால்அயனும்
- காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
- கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
- துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
- உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
- மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
- குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
- ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றியப்பா என்னுடைய
- வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
- நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
- உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
- முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
- மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
- ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
- ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
- சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
- யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
- ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா உன்இதழித்
- தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.
- ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
- நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
- ஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்
- மாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.
- சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்
- தந்தை ஆதலின் சார்ந்தநல் நெறியில்
- பழக்கி வைப்பது தேவரீர்க் குரிய
- பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்
- வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்
- வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்
- புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- விருப்பு நின்றதும் பதமலர் மிசைஅவ்
- விருப்பை மாற்றுதல் விரகுமற் றன்றால்
- கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும்
- கடமை நீங்குறார் உடமையின் றேனும்
- நெருப்பு நும்உரு ஆயினும் அருகில்
- நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால்
- பொருப்பு வில்லுடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- பிழைபு ரிந்தனன் ஆகிலும் உமது
- பெருமை நோக்கில்அப் பிழைசிறி தன்றோ
- மழைபு ரிந்திடும் வண்கையை மாற்ற
- மதிக்கின் றோர்எவர் மற்றிலை அதுபோல்
- உழைபு ரிந்தருள் வீர்எனில் தடுப்பார்
- உம்பர் இம்பரில் ஒருவரும் இலைகாண்
- புழைபு ரிந்தகை உலவொற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப் பதகனேன் படிற்றுரு வகனேன்
- வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத்தொழல் மறந்து
- நசைஇலா மலம்உண் டோடுறும் கொடிய நாய்என உணவுகொண் டுற்றேன்
- தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே
- உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால்
- நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத்
- தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல கண்டம்என் றுன்திரு முன்னர்
- சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
- செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா தேவஓம் அரகர எனும்சொல்
- சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- நீல னேன்கொடும் பொய்யல துரையா
- நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
- சால ஆயினும் நின்கழல் அடிக்கே
- சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
- ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
- அகில கோடியும் அழிந்திடும் அன்றே
- சீல மேவிய ஒற்றியம் பரனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- கண்ணுன் மாமணி யேஅருட் கரும்பே
- கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
- எண்ணுள் உட்படா இன்பமே என்றென்
- றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
- மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன்
- மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே
- திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
- எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
- தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
- செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
- போது போகின்ற தன்றிஎன் மாயப்
- புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
- சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
- சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
- நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
- நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
- ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
- தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
- தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
- ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
- நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
- சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
- சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
- கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும்
- மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந்
- தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
- பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
- மற்று நோக்கிய வல்வினை அதனால்
- வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
- அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
- அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
- உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
- கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
- சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
- சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
- ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
- ஏட நீகடை என்றிடில் அவர்முன்
- ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
- தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் சந்நிதி முன்னர்நிற் கின்றேன்
- எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
- கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே கதிதரும் கருணையங் கடலே.
- ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம்
- சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ
- நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே
- காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- மாலொடு நான்கு வதனனும் காணா மலரடிக் கடிமைசெய் தினிப்பாம்
- பாலொடு கலந்த தேன்என உன்சீர் பாடும்நாள் எந்தநாள் அறியேன்
- வேலொடு மயிலும் கொண்டிடுஞ் சுடரை விளைவித்த வித்தக விளக்கே
- காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
- ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
- காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
- வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
- சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- யாது சொல்லினும் கேட்பதின் றந்தோ
- யான்செய் தேன்என தென்னும்இவ் இருளில்
- காது கின்றதென் வஞ்சக நெஞ்சம்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- ஓது மாமறை உபநிட தத்தின்
- உச்சி மேவிய வச்சிர மணியே
- தீது நீக்கிய ஒற்றியந் தேனே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான்
- மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே
- ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம்
- உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
- வேலை ஒன்றல மிகப்பல எனினும்
- வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
- சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
- புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
- பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
- பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
- ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
- என்று கொள்விரேல் எனக்கது சாலும்
- சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன்
- உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர்
- செப்பி டாமுனம் தலையினால் நடந்து
- செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள்
- தப்பி டாததில் தப்பிருந் தென்னைத்
- தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன்
- துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- கூலி என்பதோர் அணுத்துணை யேனும்
- குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன்
- மாலி னோடயன் முதலியர்க் கேவல்
- மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே
- ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண்
- அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர்
- சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத்
- தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன்
- ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர்
- ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள்
- ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல்
- உய்கி லேன்இஃ தும்பதம் காண்க
- சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர்
- பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப்
- பதிய வைத்தனன் ஆயினும் அந்தப்
- பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே
- முதியன் அல்லன்யான் எப்பணி விடையும்
- முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
- துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக்
- குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
- புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
- போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
- பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
- பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
- தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப்
- பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும்
- இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல்
- இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர்
- செச்சை மேனியீர் திருவுளம் அறியேன்
- சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண்
- துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
- கமுது வேண்டிமா லக்கடல் கடைய
- ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
- உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
- சாலம் செய்வது தகைஅன்று தருமத்
- தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
- சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
- முந்து றேன்அவர் முற்பட வரினும்
- சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
- தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
- புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
- பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
- துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- என்ன நான்அடி யேன்பல பலகால்
- இயம்பி நிற்பதிங் கெம்பெரு மானீர்
- இன்னும் என்னைஓர் தொண்டன்என் றுளத்தில்
- ஏன்று கொள்ளிரேல் இருங்கடற் புவியோர்
- பன்ன என்உயிர் நும்பொருட் டாகப்
- பாற்றி நும்மிசைப் பழிசுமத் துவல்காண்
- துன்னு மாதவர் புகழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- பிறவிக் கண்ணிலான் கைக்கொளும் கோலைப்
- பிடுங்கி வீசுதல் பெரியவர்க் கறமோ
- மறவிக் கையறை மனத்தினேன் உம்மேல்
- வைக்கும் அன்பைநீர் மாற்றுதல் அழகோ
- உறஇக் கொள்கையை உள்ளிரேல் இதனை
- ஓதிக் கொள்ளிடம் ஒன்றிலை கண்டீர்
- நறவிக் கோங்கிய ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
- வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
- கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
- கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
- மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
- மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
- நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- மண்ணில் நல்லவன் நல்லவர் இடத்தோர்
- வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
- எண்ணி நம்புடை இருஎன உரைப்பர்
- ஏன்வ ணங்கினை என்றுரைப் பாரோ
- கண்ணின் நல்லநும் கழல்தொழ இசைந்தால்
- கலக்கம் காண்பது கடன்அன்று கண்டீர்
- நண்ணி மாதவன் தொழும்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
- நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
- தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
- பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
- ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
- தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
- ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
- மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
- கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்ணுடையாய்
- சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட்
- பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- யாது செய்குவன் போதுபோ கின்ற
- தண்ண லேஉம தன்பருக் கடியேன்
- கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
- கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
- வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
- வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
- மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
- திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
- தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
- சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்
- வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
- வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
- மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
- கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
- சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
- சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
- ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
- இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
- வாம மாதராள் மருவொற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
- மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
- விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
- கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
- காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
- பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
- நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
- மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
- மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு
- முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
- சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
- என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
- சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
- நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
- தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
- பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
- இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
- வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
- மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
- துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
- தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
- அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
- ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
- இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
- எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
- வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
- மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
- அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
- மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
- அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
- தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
- எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
- தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
- கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
- வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.
- பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
- மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
- நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
- மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
- மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
- புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
- பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
- கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- பற்றும் செழுந்தமிழால் பாடுகின்றோர் செய்தபெருங்
- குற்றம் குணமாகக் கொள்ளும் குணக்கடலே
- மற்றங்கும் எண்தோள் மலையே மரகதமே
- பெற்றிங் கடியேன் பிணிகெடுத்தால் ஆகாதோ.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- மறியேர் விழியார் மயக்கினிடை மாழாந்த
- சிறியேன் அடியேன் தியங்கவந்த வல்நோயைச்
- செறிவே பெறுந்தொண்டர் சிந்தை தனில்ஓங்கும்
- அறிவேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
- நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
- மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
- கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
- ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
- அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
- களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
- வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
- மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால்
- ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு
- நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன்
- நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.
- நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
- சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
- விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
- மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
- மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
- நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
- கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
- வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
- பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
- இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
- மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
- அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.
- கோடி நாவினும் கூறிட அடங்காக்
- கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
- நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்
- நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
- வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
- வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
- ஊடி னாலும்மெய் அடியரை இகவா
- ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஊழை யேமிக நொந்திடு வேனோ
- உளத்தை நோவனோ உலகிடை மயக்கும்
- பாழை யேபலன் தருவதென் றெண்ணிப்
- பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன்
- மாழை யேர்திரு மேனிஎம் பெருமான்
- மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந்
- தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
- யாவும் நீஎன எண்ணிய நாயேன்
- மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
- மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
- சான்று கொண்டது கண்டனை யேனும்
- தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
- ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
- சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
- இட்ட நல்வழி அல்வழி எனவே
- எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
- விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
- வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
- சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
- வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
- கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
- குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
- ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
- இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
- தேறு கின்றனன் என்செய்கேன் நினது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
- என்றுநின் உருவுகண் டிடும்நாள்
- என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
- என்றென தகத்துயர் அறும்நாள்
- மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
- வானவர் கனவினும் தோன்றா
- தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
- உத்தம வித்தக மணியே.
- சென்ற நாளினும் செல்கின்ற நாளில்
- சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன்
- மன்ற நான்இவண் இவ்வகை ஆனால்
- வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ
- என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன்
- எண்ணம் எப்படி அப்படி இசைக
- உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
- வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
- எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
- றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
- அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
- அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
- உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- கொடிய பாவியேன் படும்பரி தாபம்
- குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
- நெடிய காலமும் தாழ்த்தனை நினது
- நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
- அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
- ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
- ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன்
- இறைவ நின்றனை இறைப்பொழு தேனும்
- உன்என் றால்என துரைமறுத் தெதிராய்
- உலக மாயையில் திலகமென் றுரைக்கும்
- மின்என் றால்இடை மடவியர் மயக்கில்
- வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால்
- உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
- குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
- தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
- உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே.
- பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி
- ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும்
- கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்றுநல் லோர்கள்
- சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- மறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்
- இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்
- பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
- அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே.
- தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
- ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
- பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
- நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே.
- உலகுயிர் தொறும்நின் று‘ட்டுவித் தாட்டும் ஒருவனே உத்தம னேநின்
- இலகுமுக் கண்ணும் காளகண் டமும்மெய் இலங்குவெண்ணீற்றணி எழிலும்
- திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள் சேரிடப் பாலுங்கண் டடியேன்
- கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- மாலும் நான்குவ தனனும் மாமறை
- நாலும் நாடரு நம்பர னேஎவ
- ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின்
- ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
- நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
- சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
- ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
- வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
- ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
- சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
- மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
- ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- வையகத் தேஇடர் மாக்கடல் மூழ்கி வருந்துகின்ற
- பொய்யகத் தேனைப் புரந்தரு ளாமல் புறம்பொழித்தால்
- நையகத் தேன்எது செய்வேன்அந் தோஉள் நலிகுவன்காண்
- மெய்யகத் தேநின் றொளிர்தரும் ஞான விரிசுடரே.
- விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
- பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
- அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
- புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
- வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
- தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
- மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
- ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
- மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
- சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
- ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
- துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
- அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
- கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
- என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
- குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
- உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
- நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
- கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
- வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
- எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
- நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
- தஞ்சம் என்றுன் சரண்தந்து காக்கவே.
- குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
- படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
- பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
- கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- சாதல் பிறத்தல் எனும்கடலில் தாழ்ந்து கரைகா ணாதழுந்தி
- ஈதல் இரக்கம் எள்அளவும் இல்லா தலையும் என்றனைநீ
- ஓதல் அறிவித் துணர்வறிவித் தொற்றி யூர்ச்சென் றுனைப்பாடக்
- காதல் அறிவித் தாண்டதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- அற்ப அளவும் நிச்சயிக்கல் ஆகா உடம்பை அருமைசெய்து
- நிற்ப தலதுன் பொன் அடியை நினையாக் கொடிய நீலன்எனைச்
- சற்ப அணியாய் நின்றன்ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின்புகழைக்
- கற்ப அருள்செய் தனைஅதற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- உண்டு வறிய ஒதிபோல உடம்பை வளர்த்தூன் ஊதியமே
- கொண்டு காக்கைக் கிரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை
- விண்டு அறியா நின்புகழை விரும்பி ஒற்றி யூரில்நினைக்
- கண்டு வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
- வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
- ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
- காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோன் வழியில் சென்றிடவா
- யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
- வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
- கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
- கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
- தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
- காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- பொள்ளற் குடத்தின் புலால்உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே
- துள்ளற் கெழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை
- உள்ளற் கறிவு தந்துன்றன் ஒற்றி யூர்க்கு வந்துவினைக்
- கள்ளப் பகைநீக் கிடச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- கூட்டும் எலும்பால் தசையதனால் கோலும் பொல்லாக் கூரைதனை
- நாட்டும் பரம வீடெனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை
- ஊட்டுந் தாய்போல் உவந்துன்றன் ஒற்றி யூர்வந் துறநினைவு
- காட்டுங் கருணை செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- ஊணத் துணர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
- தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
- மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
- காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
- நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
- உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
- கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம்
- பாம்பாட்டி யாகமாயைப்
- பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம்
- படர்ந்தபிர பஞ்சமாகத்
- திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
- சிறுவன்யா னாகநின்றேன்
- தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
- திறத்தன்நீ ஆகல்வேண்டும்
- விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
- விஞ்ஞான மாம்அகண்ட
- வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
- விராட்டுருவ வேதார்த்தனே
- கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
- கடவுளே சடைகொள்அரசே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
- நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
- நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
- நெற்றியங் கண்கொளும் நிறைவே
- நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
- நெடியமால் புகழ்தனி நிலையே
- நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
- நெடுஞ்சடை முடித்தயா நிதியே.
- போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
- போற்றிநின் பூம்பதம் போற்றி
- ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
- அமலநின் அடிமலர் போற்றி
- ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
- இறைவநின் இருங்கழல் போற்றி
- சாற்றுமா றரிய பெருமையே போற்றி
- தலைவநின் தாட்டுணை போற்றி.
- துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
- துணைவநின் துணையடி போற்றி
- புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
- புனிதநின் பொன்னடி போற்றி
- இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
- இறைவநின் இணையடி போற்றி
- கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
- கண்ணநின் கழலடி போற்றி.
- நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
- நலந்தரல் வேண்டுவன் போற்றி
- ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
- இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
- ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
- ஓதநீ உவந்தருள் போற்றி
- மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
- வள்ளலே போற்றிநின் அருளே.
- மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
- அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
- தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
- திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
- பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
- மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
- மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
- நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே.
- கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
- அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
- வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
- தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே.
- தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
- வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
- கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
- ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
- வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
- முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
- என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
- வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
- மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
- இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே
- அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன்
- எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
- எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
- பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
- மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
- என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- உலகம் பரவும் பொருளேஎன் உறவே என்றன் உயிர்க்குயிரே
- இலகம் பரத்தே பரம்பரமாய் இன்ப நடஞ்செய் எம்இறையே
- கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட் டிடநீ கருதுதியோ
- திலகம் பரவும் நுதற்பாகன் என்ப தருளின் திறத்தன்றே.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
- பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
- ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
- ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே.
- சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
- எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
- அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
- பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.
- சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
- வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
- தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
- வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.
- அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
- படியார் பலரும் பலபேசிச் சிரியா நின்றார் பரந்திரவும்
- விடியா நின்ற தென்புரிவேன் இன்னுங் கருணை விளைத்திலையே
- கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்றே.
- என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
- தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
- இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
- நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே.
- தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
- யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
- போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
- மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
- இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
- கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
- துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
- பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
- உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
- கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
- அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
- இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல்
- என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம்
- தொன்று மொழிந்த தூமொழிதான் சூது மொழியோ சொல்லாயே.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
- மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
- தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
- தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
- மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
- மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
- பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
- பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
- நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
- தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
- பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
- ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
- கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
- தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
- ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
- இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
- மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
- உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
- நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
- துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
- பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
- வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
- தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
- மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே.
- மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
- மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
- பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
- நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே.
- மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
- ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
- தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
- பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ் சேயிசை வாய்ந்தசிந்து
- பாடக்கற் றாய்இலை பொய்வேடம் கட்டிப் படிமிசைக்கூத்
- தாடக்கற் றாய்இலை அந்தோ பொருள்உனக் கார்தருவார்
- நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம் மானை நினைஇனியே.
- வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
- தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
- மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
- ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே.
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
- வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
- கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
- நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.
- ஆசிரியத் துறை
- உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
- இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
- திலக வாணுத லார்க்கு ழன்றனை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
- கலக மேகனிந்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.
- வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
- சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
- வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
- நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்.
- நான்சிறியேன் என்னினும்இந் நானிலத்தில் நான்செய்பிழை
- தான்சிறிதோ அன்றுலகில் தான்பெரிதே - மான்கரத்தோய்
- அங்ஙனமே னும்உன் அருட்பெருமைக் கிப்பெருமை
- எங்ஙனம்என் றுள்ளம் எழும்.
- கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
- பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
- கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
- பெரிதார ஓர்மொழியைப் பேசு.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
- திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
- செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
- மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
- எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
- அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
- துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
- வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
- இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
- மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
- பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
- இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
- அருண்மருந் தொளிர்குணக் குன்றே
- அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
- அருட்கிர ணங்கொளும் சுடரே
- அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
- அருட்சுவை கனிந்தசெம் பாகே
- அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
- அருண்மய மாம்பர சிவமே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
- நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
- பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
- ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
- மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
- கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
- பிறைமுடிச் சடைகொண் டோங்கும் பேரருட் குன்றே போற்றி
- சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி.
- செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன் கண்ணேகண் மணியே யார்க்குந்
- தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதி யேநீ
- போற்றரிய சிறியேனைப் புறம்விடினும் வேற்றவர்பாற் போகேன் வேதம்
- தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன் நின்ஆணைச் சிறிய னேனே.
- இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
- அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
- கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
- தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.
- கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
- அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
- எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
- வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே.
- அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
- படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
- திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
- தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே.
- பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
- பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
- கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
- எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
- நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
- பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
- கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே.
- கலிநிலைத் துறை
- எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
- புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன் புன்மையேன்புலைத்தொழிற்கடையேன்
- வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
- குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கலி விருத்தம்
- தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
- ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
- பாயும் மால்விடை ஏறும் பரமனே
- நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
- வேறு
- உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
- இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
- அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
- திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே.
- என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
- முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
- நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
- பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
- சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
- காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
- ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
- பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
- இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
- அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
- தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
- பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
- பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
- மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
- என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
- முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி.
- வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
- நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
- அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
- கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
- துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
- ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
- டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
- தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
- தயவு தான்நினக் கில்லை உயிரையும்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
- இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
- அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
- பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
- விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.
- கலி விருத்தம்
- சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
- பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
- மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
- உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
- இம்மை யறையனைய வேசூர மாதருமா
- இம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்
- மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
- மாமாமா மாமாமா மா.
- ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில்
- ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர்
- ஐந்துறலா மாவியீ ரைந்தறலா மாவியீ
- ரைந்திடலா மோரிரண்டோ டாய்ந்து.1
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- 184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில்பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார்.
- 185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ரால் விளக்கெரிந்த அற்புதத்தைக்குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும்காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப்பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப்பதிப்பித்துள்ளார்.
- பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
- கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
- அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
- தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
- ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
- அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
- திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
- றுலவு கின்றபே ருலகம் என்பதும்
- கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
- கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
- இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
- இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
- திலகம் என்றநங் குருசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
- மனம டங்குசிற் கனந டந்தரும்
- உரமு றும்பதம் பெறவ ழங்குபே
- ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
- பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
- பரம மாகியே பரவு மாமறைச்
- சிரமு றும்பரம் பரசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
- குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
- பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
- கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.
- அருள்வடி வான மருந்து - நம்முள்
- அற்புத மாக அமர்ந்த மருந்து
- இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
- கின்புரு வாக இருந்த மருந்து. - நல்ல
- சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
- தானோதா னாகித் தழைக்கும் மருந்து
- அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
- தானந்த மாக அமர்ந்த மருந்து. - நல்ல
- வித்தக மான மருந்து - சதுர்
- வேத முடிவில் விளங்கு மருந்து
- தத்துவா தீத மருந்து - என்னைத்
- தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. - நல்ல
- மாலயன் தேடு மருந்து - முன்ன
- மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
- காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
- காணுங் கனவினுங் காணா மருந்து. - நல்ல
- அம்பலத் தாடு மருந்து - பர
- மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
- எம்பல மாகு மருந்து - வேளூர்
- என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. - நல்ல
- ஆர்க்கு மரிதா மருந்து - தானே
- ஆதி யநாதியு மான மருந்து
- சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
- தேடுவோர் தங்களை நாடு மருந்து. - நல்ல
- புண்ணியர்க் கான மருந்து - பரி
- பூரண மாகப் பொருந்து மருந்து
- எண்ணிய வின்ப மருந்து - எம
- தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து. - நல்ல
- பால்வண்ண மாகு மருந்து - அதில்
- பச்சை நிறமும் படர்ந்த மருந்து
- நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
- நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து. - நல்ல
- கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
- கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
- மாதொரு பாக மருந்து - என்னை
- வாழ்வித்த என்கண் மணியா மருந்து. - நல்ல
- வாய்பிடி யாத மருந்து - மத
- வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
- நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
- நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து. - நல்ல
- காயாம்பூ வண்ண மருந்து - ஒரு
- கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
- தாயாங் கருணை மருந்து - சிற்
- சதாசிவ மானமெஞ் ஞாந மருந்து. - நல்ல
- தன்மய மாகு மருந்து - சிவ
- சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
- சின்மய ஜோதி மருந்து - அட்ட
- சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து. - நல்ல
- மூவர்க் கரிய மருந்து - செல்வ
- முத்துக் குமாரனை யீன்ற மருந்து
- நாவிற் கினிய மருந்து - தையல்
- நாயகி கண்டு தழுவு மருந்து.
- அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர்
- ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே.
- ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
- ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.
- இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
- மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.
- ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
- னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமா ரே.
- உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
- உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே.
- ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
- உத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே.
- கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்
- கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமா ரே.
- கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று
- கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமா ரே.
- கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங்
- கரையாரென் னளவிலே பாங்கிமா ரே.
- கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
- கைவிடவுந் துணிவாரோ பாங்கிமா ரே.
- கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று
- கைநழுவ விடுவாரோ பாங்கிமா ரே.
- கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன்
- கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமா ரே.
- காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்
- காதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே.
- காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்
- கைகலந்த கள்ளரவர் பாங்கிமா ரே.
- காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
- காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே.
- கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
- கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே.
- கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
- கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமா ரே.
- கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
- கேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே.
- கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது
- கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமா ரே.
- கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக்
- கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமா ரே.
- கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக்
- கேயடிமை கொண்டாரன்று பாங்கிமா ரே.
- குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங்
- கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமா ரே.
- குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
- கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே.
- குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள
- குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமா ரே.
- கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
- குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமா ரே.
- கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி
- கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமா ரே.
- கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது
- கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமா ரே.
- தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
- சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
- ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
- ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
- ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
- நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
- காம மகற்றிய தூய னடி - சிவ
- காம சவுந்தரி நேய னடி
- மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
- மன்றெனு ஞானவா காய னடி. - கொம்மி
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
- ஆட்கொண் டருளிய தேஜ னடி
- வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
- வாளன டிமண வாள னடி. - கொம்மி
- தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
- சேர்ந்து கலந்தவ ராரே டி
- தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
- தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
- சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
- தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
- பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
- பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட
- வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
- மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
- தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
- தானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட
- ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
- அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
- சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
- தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட
- தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
- சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
- ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
- ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
- ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
- ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
- மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
- நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
- அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
- திருநட இன்பம்என் றறியாயோ மகளே.
- அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
- திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.
- திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
- மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
- இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
- வெருவிஉட் குழைவாள் விழிகர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே.
- சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
- வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
- மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
- அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- விண்படைத்த பொழிற்றில்லை183 அம்பலத்தான் எவர்க்கும்
- மேலானான் அன்பருளம் மேவுநட ராஜன்
- பண்படைத்த எனைஅறியா இளம்பருவந் தனிலே
- பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும்
- பெண்படைத்த பெண்களெல்லாம் அவமதித்தே வலது
- பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன்
- கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
- கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
- தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
- தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
- பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
- பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
- உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
- உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
- உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
- வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
- மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
- கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
- குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
- நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
- நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
- என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
- மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
- மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
- கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
- கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
- குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
- கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
- மனம்பிடியா மையினாலோ மாட்டாமை யாலோ
- மறதியினா லோஎனது வருத்தமத னாலோ
- தினம்பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர்மேல்
- சினத்தாலோ எதனாலோ சிலபுகன்றேன் இதனைச்
- சினம்பிடியாத் தேவர்திரு வுளம்பிடியா தெனவே
- சிந்தைகளித் திருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
- இனம்பிடியா மையும்உண்டோ உண்டெனில்அன் புடையார்
- ஏசல்புகழ் பேசல்என இயம்புதல்என் உலகே.
- சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
- ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
- வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
- ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண் பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
- தார்த்தேன் குழலும் சரிந்தனகாண் தானை இடையிற் பிரிந்தனகாண்
- ஈர்த்தேன் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீதப் புனல்சூழ் வயல்ஒற்றித் தியாகப் பெருமான் திருமாட
- வீதிப் பவனி வரக்கண்டேன் மென்பூந் துகில்வீழ்ந் ததுகாணேன்
- போதிற் றெனவும் உணர்ந்திலேன் பொன்ன னார்பின் போதுகிலேன்
- ஈதற் புதமே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சீலக் குணத்தோர் புகழ்ஒற்றித் தியாகப் பெருமான் பவனிஇராக்
- காலத் தடைந்து கண்டேன்என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
- ஞாலத் தவர்கள் அலர்தூற்ற நற்று‘ சிடையில் நழுவிவிழ
- ஏலக் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- சேயை அருளுந் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில்
- தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
- தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
- ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திங்கள் உலவும் பொழில்ஒற்றித் தியாகப் பெருமான் திருவீதி
- அங்கண் களிக்கப் பவனிவந்தான் அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
- தங்கள் குலத்துக் கடாதென்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
- எங்கண் அனையாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரக்
- கூசா தோடிக் கண்டரையில் கூறை இழந்தேன் கைவளைகள்
- வீசா நின்றேன் தாயரெலாம் வீட்டுக் கடங்காப் பெண்எனவே
- ஏசா நிற்க என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
- தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
- வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
- ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
- பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
- இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.
- மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
- தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
- ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார்
- மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட
- அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன்
- குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
- நகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன்
- குகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோடார் குழையார் ஒற்றியினார் தூயர்க் கலது சுகம்அருள
- நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- சூடா மலர்போல் இருந்ததல்லால் சுகமோர் அணுவுந் துய்த்தறியேன்
- கோடா ஒல்குங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றி யார்நீல
- கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பண்டம் அறியேன் பலன்அறியேன் பரிவோ டணையப் பார்த்தறியேன்
- கொண்டன் மணக்குங் கோதாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
- வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
- ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
- கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வானும் புவியும் புகழ்ஒற்றி வாணர் மலர்க்கை மழுவினொடு
- மானும் உடையார் என்றனக்கு மாலை யிட்ட தொன்றல்லால்
- நானும் அவருங் கூடியொரு நாளும் கலந்த தில்லையடி
- கோனுந் தியவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை
- வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது
- மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்
- குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
- தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
- என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
- கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
- தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
- படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
- கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு
- மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
- பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண்
- குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
- பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
- வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
- கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண்மூன் றுடையார் கனவினிலும்
- வஞ்சம் அறியார் என்றனக்கு மாலைஇட்ட தொன்றல்லால்
- மஞ்சம் அதனில் என்னோடு மருவி இருக்க நான்அறியேன்
- கொஞ்சம் மதிநேர் நுதலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
- கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி
- கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும்
- எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
- உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார்
- கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
- யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
- ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
- கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- இறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர்
- மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
- பொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி
- குறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார்
- மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக்
- கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர்
- கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- எருதில் வருவார் ஒற்றியுளார் என்நா யகனார் எனக்கினியார்
- வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
- கருதி அவர்தங் கட்டளையைக் கடந்து நடந்தேன் அல்லவடி
- குருகுண் கரத்தாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
- வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
- ஆவென் றலறிக் கண்ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
- கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நாட்டும் புகழார் திருஒற்றி நகர்வாழ் சிவனார் நன்மையெலாம்
- காட்டும் படிக்கு மாலையிட்ட கணவர் எனஓர் காசளவில்
- கேட்டும் அறியேன் தந்தறியார் கேட்டால் என்ன விளையுமடி
- கோட்டு மணிப்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
- கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
- சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
- கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- என்ன கொடுத்தும் கிடைப்பரியார் எழிலார் ஒற்றி நாதர்எனைச்
- சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன்அல்லால்
- இன்னும் மருவ வந்திலர்காண் யாதோ அவர்தம் எண்ணமது
- கொன்னுண் வடிவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்
- இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது
- திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
- குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தார்அவர்
- மாது மகிழ்தி எனஎன்னை மாலை யிட்டார் மாலையிட்ட
- போது கண்ட திருமுகத்தைப் போற்றி மறித்தும் கண்டறியேன்
- கோது கண்டேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
- சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
- அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
- குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
- மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண்
- கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக்
- கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வாடா திருந்தேன் மழைபொழியும் மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார்
- ஏடார் அணிபூ மாலைஎனக் கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
- தேடா திருந்தேன் அல்லடியான் தேடி அருகிற் சேர்ந்தும்எனைக்
- கூடா திருந்தார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
- வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
- நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
- குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர்
- வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து
- சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
- கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
- ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
- மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
- நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
- நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
- மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- கண்ணார் நுதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார்
- பெண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான்
- நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே.
- ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
- சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
- காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
- சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
- சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
- சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- கல்லை வளைக்கும் பெருமானார் கழிசூ ழொற்றிக் கடிநகரார்
- எல்லை வளைக்குந் தில்லையுள்ளா ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
- அல்லை வளைக்குங் குழலன்ன மன்பி னுதவா விடிலோபம்
- இல்லை வளைக்கு மென்றார்நா னில்லை வளைக்கு மென்றேனே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- விடையார் கொடிமே லுயர்த்தருளும் வேத கீதப் பெருமானார்
- உடையா ரொற்றி யூரமர்ந்தா ருவந்தென் மனையி லின்றடைந்தார்
- இடையா வைய மென்றார்நா னிடைதா னைய மென்றேனாற்
- கடையா ரளியா ரென்றார்கட் கடையா ரளியா ரென்றேனே.
- நாடொன் றியசீர்த் திருவொற்றி நகரத் தமர்ந்த நாயகனார்
- ஈடொன் றில்லா ரென்மனையுற் றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
- மாடொன் றெங்கே யென்றேனுன் மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
- காடொன் றுடையீ ரென்றேன்செங் காடொன் றுடையே னென்றாரே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- வழுத்தார் புரத்தை எரித்தார்நல் வலத்தார் நடன மலரடியார்
- செழுத்தார் மார்பர் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- கழுத்தார் விடத்தார் தமதழகைக் கண்டு கனிந்து பெருங்காமம்
- பழுத்தார் தம்மைக் கலந்திடநற் பதத்தார் என்றும் பார்த்திலரே.
- பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச்
- சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத்
- தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
- மாடொன் றுடையார் உணவின்றி மண்ணுன் டதுகாண் மலரோன்றன்
- ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார் ஊரை மகிழ்வோ டுவந்தாலங்
- காடொன் றுடையார் கண்டமட்டுங் கறுத்தார் பூத கணத்தோடும்
- ஈடொன் றுடையார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும்
- வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை
- கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ
- டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- திருமால் வணங்கும் ஒற்றிநகர் செழிக்கும் செல்வத் தியாகர்அவர்
- கருமால் அகற்றுந் தொண்டர்குழாம் கண்டு களிக்க வரும்பவனி
- மருமாண் புடைய மனமகிழ்ந்து மலர்க்கை கூப்பிக் கண்டலது
- பெருமான் வடுக்கண் பெண்ணேநான் பெற்றா ளோடும் பேசேனே.
- மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
- வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
- நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
- கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
- மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
- கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
- குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
- மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
- வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
- கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
- சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
- காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
- கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மாலே றுடைத்தாங் கொடிஉடையார் வளஞ்சேர் ஒற்றி மாநகரார்
- பாலே றணிநீற் றழகர்அவர் பாவி யேனைப் பரிந்திலரே
- கோலே றுண்ட மதன்கரும்பைக் குனித்தான் அம்புங் கோத்தனன்காண்
- சேலே றுண்கண் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
- ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
- வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
- செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- நந்திப் பரியார் திருஒற்றி நாதர் அயன்மால் நாடுகினும்
- சந்திப் பரியார் என்அருமைத் தலைவர் இன்னுஞ் சார்ந்திலரே
- அந்திப் பொழுதோ வந்ததினி அந்தோ மதியம் அனல்சொரியும்
- சிந்திப் புடையேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
- காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
- பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
- சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
- தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
- மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
- தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்
- சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே
- மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
- சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உலகம் உடையார் என்னுடைய உள்ளம் உடையார் ஒற்றியினார்
- அலகில் புகழார் என்தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
- கலகம் உடையார் மாதர்எலாம் கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
- திலக முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாலும் அறியான் அயன்அறியான் மறையும் அறியா வானவர்எக்
- காலும் அறியார் ஒற்றிநிற்குங் கள்வர் அவரைக் கண்டிலனே
- கோலும் மகளிர் அலர்ஒன்றோ கோடா கோடி என்பதல்லால்
- சேலுண் விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
- அழுது வணங்கும் அவர்க்குமிக அருள்ஒற் றியினார் அணைந்திலரே
- பொழுது வணங்கும் இருண்மாலைப் பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
- செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
- கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
- தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
- தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
- கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
- மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
- தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மலையை வளைத்தார் மால்விடைமேல் வந்தார் வந்தென் வளையினொடு
- கலையை வளைத்தார் ஒற்றியில்என் கணவர் என்னைக் கலந்திலரே
- சிலையை வளைத்தான் மதன்அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான்
- திலக நுதலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார்
- உரமன் னியசீர் ஒற்றிநகர் உள்ளார் இன்னும் உற்றிலரே
- அரமன் னியவேற் படையன்றோ அம்மா அயலார் அலர்மொழிதான்
- திரமன் னுகிலேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
- வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
- கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
- திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
- உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
- செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலங் கடந்தார் மால்அயன்தன் கருத்துங் கடந்தார் கதிகடந்தார்
- ஞாலங் கடந்த திருஒற்றி நாதர் இன்னும் நண்ணிலரே
- சாலங் கடந்த மனந்துணையாய்த் தனியே நின்று வருந்தல்அல்லால்
- சீலங் கடந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
- ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
- மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
- சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
- கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
- விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
- அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
- தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
- தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
- வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை
- உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
- கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- அடியர் வருந்த உடன்வருந்தும் ஆண்டை அவர்தாம் அன்றயனும்
- நெடிய மாலுங் காணாத நிமல உருவோ டென்எதிரே
- வடியல் அறியா அருள்காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கைநல்லார்
- கடிய அயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
- நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
- உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
- தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
- அருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்
- இருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
- தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.
- துதிசெய் அடியர் தம்பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர்ஒரு
- நதிசெய் சடையார் திருஒற்றி நண்ணும் எனது நாயகனார்
- மதிசெய் துயரும் மதன்வலியும் மாற்ற இன்னும் வந்திலரே
- சதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
- மலஞ்சா திக்கும் மக்கள்தமை மருவார் மருவார் மதில்அழித்தார்
- வலஞ்சா திக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்ப்பதத்தார்
- நிலஞ்சா திக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல்
- சலஞ்சா தித்தார் என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
- பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
- மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
- இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
- வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
- இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
- ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
- யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- மாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
- வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்
- யாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
- ஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
- புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
- தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
- ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
- தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
- களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
- ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார்
- வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார்
- தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம்
- உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
- மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
- வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
- உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
- அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
- உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
- இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
- தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
- படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
- இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
- ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
- ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
- தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
- ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
- காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
- ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
- வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
- கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
- சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
- மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
- காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
- மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
- நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
- ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
- மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
- அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
- இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
- சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
- பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
- கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
- ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
- பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
- ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை
- மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து
- பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
- அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
- படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
- செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
- உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
- உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
- இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
- சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
- துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
- கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
- கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
- விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
- விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
- பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
- பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
- எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
- என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
- பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
- காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
- கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
- மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
- மனமுருகி இருகண்ர் வடிக்கின்றேன் கண்டாய்
- ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
- எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.
- பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
- பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
- சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
- மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
- வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
- கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
- காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.
- பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
- பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
- நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
- நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
- நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
- நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
- கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
- குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
- நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
- தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
- தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
- தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
- சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
- வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
- மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
- காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
- கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
- பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
- போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
- நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
- நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
- சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
- தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
- புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
- புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
- பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
- பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
- தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
- தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
- ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
- தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
- மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
- விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
- பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
- புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
- துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
- சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
- தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
- தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
- அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
- ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
- என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.
- திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
- தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
- வருமாலை மண்ணுறத்தப் பெயர்த்துநடந் தருளி
- வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித்
- தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
- செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
- குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
- குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
- நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
- தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
- தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
- கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
- கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
- குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
- ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
- நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
- காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
- கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
- சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
- சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
- ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
- அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
- விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
- துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
- தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
- களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
- களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
- குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
- குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
- பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
- நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
- நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
- இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
- இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
- தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
- மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
- சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
- செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
- மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
- மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
- ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
- ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
- நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்
- நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
- அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்
- அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
- சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்
- சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
- பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்
- பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
- கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
- மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
- பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
- பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
- அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
- னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
- மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
- பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
- நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
- நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
- நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
- நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே .
- தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
- தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
- எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
- தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
- பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
- சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
- சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
- கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
- கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
- வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
- விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
- அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
- நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
- நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
- ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
- உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
- அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
- அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
- நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
- நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
- இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
- என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
- எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
- என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
- பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
- போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
- தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
- இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
- சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
- தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
- பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
- பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
- புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
- பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
- உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
- என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
- தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
- தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
- முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
- முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
- மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
- வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
- காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
- பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
- குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
- மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
- மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
- நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
- தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
- தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
- தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
- தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
- வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- மகமதிக்கு மறையும்மறை யான்மதிக்கும் அயனும்
- மகிழ்ந்தயனான் மதிக்கும்நெடு மாலும்நெடு மாலான்
- மிகமதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும்
- மேலவனும் அவன்மதிக்க விளங்குசதா சிவனும்
- தகமதிக்குந் தோறும்அவர் அவர்உளத்தின் மேலும்
- தலைமேலும் மறைந்துறையுந் தாள்மலர்கள் வருந்த
- அகமதிக்க நடந்தென்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- அம்பலத்தில் ஆடுகின்றாய் அருட்பெருமை வியப்பே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
- உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
- அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
- அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
- களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
- விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
- விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
- இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
- தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
- சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
- இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
- எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
- அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
- அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
- மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
- வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
- ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
- றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
- தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
- திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
- வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- எம்மதத்தில் எவரெவர்க்கும் இயைந்தஅனு பவமாய்
- எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே
- அம்மதப்பொன் னம்பலத்தில் ஆனந்த நடஞ்செய்
- அரும்பெருஞ்சே வடியிணைகள் அசைந்துமிக வருந்த
- இம்மதத்தில் என்பொருட்டாய் இரவில்நடந் தருளி
- எழிற்கதவந் திறப்பித்தங் கொனைஅழைத்தென் கரத்தே
- சம்மபதத்தால் ஒன்றளித்த தயவினைஎன் புகல்வேன்
- தம்மைஅறிந் தவர்அறிவின் மன்னும்ஒளி மணியே.
- பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
- போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
- வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
- வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
- நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
- நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
- ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
- என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
- பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
- இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
- இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
- மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
- மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
- பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
- புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
- எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
- வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
- வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
- அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
- ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
- இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
- மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
- வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
- பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
- போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
- தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
- தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
- நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்
- நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
- தொடுங்கவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்
- துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
- கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்
- கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
- இடுங்கிடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்
- ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- 185. கம்மடியர் - தொ.வே. - அடிகளார் எழுத்து இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது. பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை
- தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி
- சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து
- வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை
- உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள்
- உடையானே நின்னருளின் அ€டாளம் இதுவே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
- சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
- நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
- நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
- பவயோக இந்தியமும் இன்பமய மான
- படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
- தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
- இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
- இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
- இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
- அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
- அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
- என்புருக மனஞான மயமாகும் என்றால்
- எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
- கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
- கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
- விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
- வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
- இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
- இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
- அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
- யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
- உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
- உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
- கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
- கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
- சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
- புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
- தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
- தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
- கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
- கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
- நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
- நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
- புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூரணசிற் சிவனேமெய்ப் பொருள்அருளும் புனிதா
- என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
- என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
- அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
- ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.
- துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
- துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
- புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
- மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
- வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
- கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
- கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
- றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
- திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
- நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
- நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
- பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
- பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
- மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
- வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.
- ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
- ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
- ஆங்காரப் பெருமதமால் யானை போல
- அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
- பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
- பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
- தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
- செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.
- அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
- அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
- தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
- செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
- இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
- இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
- மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
- வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
- 191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோஎம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்கண்ணிலேன் மற்றோர்களைகண் இல்லேன்கழலடியே கைதொழுது காணின்அல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணியனே.- 7215 (6-99-1) திருநாவுக்கரசர். திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
- மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
- துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
- விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
- வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.
- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
- ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
- தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
- தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
- வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
- தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
- கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
- நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
- இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
- உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
- றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
- அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
- பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
- உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
- வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
- தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
- 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
- என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
- அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
- இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
- தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
- நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
- ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
- வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
- ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
- தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
- குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
- பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
- எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
- மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
- புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே .
- வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
- கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
- வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
- நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
- அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
- வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
- டஞ்சரையான் கண்கள் அவை.
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
- நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
- பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
- வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
- ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
- ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
- வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
- பெருநெடு மேனி தனிற்படப்165 பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
- கருநெடுங் கடலைக் கடத்து166 நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
- வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.
- நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
- களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
- அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
- வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
- சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
- பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
- ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
- வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
- விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
- கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
- தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
- வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே.
- நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
- சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
- தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
- வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
- செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
- நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
- வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
- அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
- இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
- பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
- வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
- முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
- இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
- என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
- மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
- துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
- விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
- நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
- மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே.
- தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
- இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
- விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
- மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
- பாதம் நாடொறும் பற்றறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்
- நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும்மெய்ஞ் ஞான நாடக நாயக நான்கெனும்
- வேதம் நாடிய மெய்பொரு ளேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
- எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
- உண்ணி லாவிய நின்திரு வுள்ளமும் உவகை167 யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
- வெண்ணி லாமுடிப் புண்ணியமூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
- காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்
- ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
- வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம் மலையி லேமுக மாயத்தி லேஅவர்
- தோளி லே இடைச் சூழலி லேஉந்திச் சுழியி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின்
- தாளி லேநின்த னித்தபு கழிலே தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ
- வேளி லேஅழ கானசெவ் வேளின்முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
- இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
- குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
- வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.
- கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
- மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
- திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
- வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
- மாணித்த ஞான மருந்தேஎன் கண்ணின்உள் மாமணியே
- ஆணிப்பொன் னேஎன தாருயி ரேதணி காசலனே
- தாணிற்கி லேன்நினைத் தாழாத வஞ்சர் தமதிடம்போய்ப்
- பேணித் திரிந்தனன் அந்தோஎன் செய்வன்இப் பேதையனே.
- அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன்
- என்னேஇவ் வேழைக் கிரங்காது நீட்டித் திருத்தல்எந்தாய்
- பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த
- மன்னே கலப மயில்மேல் அழகிய மாமணியே.
- குருவே அயன்அரி ஆதியர் போற்றக் குறைதவிர்ப்பான்
- வருவேல் பிடித்து மகிழ்வள்ள லேகுண மாமலையே
- தருவே தணிகைத் தயாநிதி யேதுன்பச் சாகரமாம்
- கருவேர் அறுத்திக் கடையனைக் காக்கக் கடன்உனக்கே.
- உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்
- எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
- புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
- மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.
- கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
- வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
- தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
- நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
- நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
- அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
- சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
- இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
- சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
- வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
- திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
- பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
- தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
- துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
- சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
- மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
- வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
- கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
- மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
- செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
- அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
- கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
- இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
- கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
- விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
- தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.
- குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் குரைகழல் கருதாத
- துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
- இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
- நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.
- கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
- கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
- தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
- அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே
- ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
- வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
- காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
- சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
- வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
- தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
- செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- மின்நேர் உலக நடைஅதனால் மேவும் துயருக் காளாகிக்
- கல்நேர் மனத்தேன் நினைமறந்தென் கண்டேன் கண்டாய் கற்பகமே
- பொன்னே கடவுள் மாமணியே போதப் பொருளே பூரணமே
- தென்னேர் தணிகை மலைஅரசே தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
- எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
- கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
- செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
- மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
- நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
- சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அன்னே அப்பா எனநின்தாட்3 கார்வம் கூர்ந்திங் கலைகின்றேன்
- என்னே சற்றும் இரங்கிலைநீ என்நெஞ் சோநின் நல்நெஞ்சம்
- மன்னே ஒளிகொள் மாணிக்க மணியே குணப்பொன் மலையேநல்
- தென்னேர் பொழில்சூழ் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
- வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
- பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
- பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
- தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
- தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
- ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
- அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.
- கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
- கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
- சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
- சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
- மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
- மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்தாய்
- சல்லம்5 உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
- றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
- மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
- மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
- தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
- சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
- சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
- மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
- என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
- இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
- இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
- இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
- தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
- மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
- கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
- கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
- மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
- மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
- தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
- கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
- தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
- கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
- பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
- பூரணமே புண்ணியமே புனித வைப்பே
- தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
- வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
- தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோஎன்
- சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
- பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
- பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
- சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
- வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
- கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
- கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
- எண்அ றாத்துயர்க் கடலுள் மூழ்கியே
- இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
- தண்அ ற்‘ப்பொழில் குலவும் போரி6 வாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
- மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
- தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
- சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
- ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
- அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
- நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- நாய காதிருத் தணிகை நாதனே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
- சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
- எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
- என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
- நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
- நித்த நின்அருள் நீதி ஆகுமால்
- தந்தை தாய்என வந்து சீர்தரும்
- தலைவ னேதிருத் தணிகை நாதனே.
- பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப்
- பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
- தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
- தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
- நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
- நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
- சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
- மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
- பாலின் நீர்என நின்அ டிக்கணே
- பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
- சேலின் வாட்கணார் தீய மாயையில்
- தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
- சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
- சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
- கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
- விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
- வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
- நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
- தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
- மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.
- வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
- மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
- சால நின்றவன் தணிகை நாயகன்
- வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
- நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
- வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
- தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
- கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.
- கிடைக்குள் மாழ்கியே கிலம்செய் அந்தகன்
- படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன்
- தடைக்குள் பட்டிடாத் தணிகை யான்பதத்
- தடைக்க லம்புகுந் தருள்செ ழிப்பனே.
- என்னை என்னைஈ தென்றன் மாதவம்
- முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
- பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
- அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.
- வெற்ப னேதிருத் தணிகை வேலனே
- பொற்ப னேதிருப் போரி நாதனே
- கற்ப மேல்பல காலம் செல்லுமால்
- அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
- சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
- ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
- டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
- ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
- பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
- இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
- பச்சை மாமயில் பரம நாதனே
- கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
- இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
- பச்சை மாமயில் பரம நாதனே
- கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
- கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே
- தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே
- இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள்
- தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ.
- வேத மாமுடி விளங்கும் நின்திருப்
- பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
- கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
- சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.
- நேயம் நின்புடை நின்றி டாதஎன்
- மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
- பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
- தாய நின்கடன் தணிகை வாணனே.
- வாணு தல்பெரு மாட்டி மாரொடு
- காணு தற்குனைக் காதல் கொண்டனன்
- ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
- மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
- கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
- சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
- மால்ப கைப்பிணி மாறி ஓடவே
- மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
- நளினமா மலர்அடி வழுத்தாப்
- புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
- சேர்ந்திடத் திருவருள் புரியாய்
- தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
- நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
- புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
- வருந்திஈன் றெடுத்தமா மணியே
- தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- பார்க்கின் றிலையே பன்னிருகண் படைத்தும் எளியேன் பாடனைத்தும்
- தீர்க்கின் றிலையே என்னேயான் செய்வேன் சிறியேன் சீமானே
- போர்க்குன் றொடுசூர் புயக்குன்றும் பொடிசெய் வேற்கைப் புண்ணியனே
- சீர்க்குன் றெனும்நல் வளத்தணிகைத் தேவே மயில்ஊர் சேவகனே.
- தெரியேன் உனது திருப்புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே
- பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த்
- தரியேன் தணிகை தனைக்காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே
- உரியேன் அந்தோ எதுகொண்டிங் குய்கேன் யாதுசெய்கேனே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
- அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
- உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
- துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
- அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
- வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
- இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
- என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
- கன்செய் பேய்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
- பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
- மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.
- மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே
- கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ
- இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே
- நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
- கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
- நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
- துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
- பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
- மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
- ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
- வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
- காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
- ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
- மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
- குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
- நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
- வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
- மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
- மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
- கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
- கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
- மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
- வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
- தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
- தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
- வஞ்ச மேகுடி கொண்டு விளங்கிய
- மங்கை யர்க்கு மயல்உழந் தேஅவர்
- நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய
- நாயி னேன்உனை நாடுவ தென்றுகாண்
- கஞ்சம் மேவும் அயன்புகழ் சோதியே
- கடப்ப மாமலர்க் கந்தசு கந்தனே
- தஞ்ச மேஎன வந்தவர் தம்மைஆள்
- தணிகை மாமலைச் சற்குரு நாதனே.
- ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
- ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
- குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
- கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
- மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
- வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
- சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
- சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
- கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
- கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
- மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
- மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
- பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
- பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
- விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
- வேல னேஉமை யாள்அருள் பாலனே.
- படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
- பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
- குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
- கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
- கடிம லக்குழி ஆகும் கருக்குழிக்
- கள்ள மாதரைக் கண்டும யங்கினேன்
- ஒடிவில் சீர்த்தணி காசல நின்புகழ்
- ஓதி லேன்எனக் குண்டுகொல் உண்மையே.
- கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
- கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
- வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
- மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
- கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
- ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
- பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
- பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
- சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
- வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
- மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
- நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
- சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
- வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
- உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
- அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
- வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- செய்கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ
- கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ
- மெய்கொள் புளகம் மூடேனோ மெய்அன் பர்கள்பால் கூடேனோ
- பொய்கொள் உலகோ டூடேனோ புவிமீ திருகால் மாடேனே.
- காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த்தார் கொடுப்பாரோ
- ஏமத் தனத்தைக் கடுப்பாரோ என்மேல் அன்பை விடுப்பாரோ
- மாமற் றொருவீ டடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ
- தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை தனில்வேல் எடுப்பாரே.
- காவி மலைக்கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ
- பாவி மயலை மிதியேனோ பரமானந்தத் துதியயேனோ
- ஓவில் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
- தாவில் சுகத்தை மதியேனோ சற்றும் பயனில் ஓதியேனே.
- மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
- அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
- பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
- எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை எதுபற்றி உய்வ தரசே.
- உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
- பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
- மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
- கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
- எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
- நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
- தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
- வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்ந்த அமுதே.
- அடுத்திலேன் நின்அடியர் அவைக்குட் சற்றும்
- அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம்
- தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத்
- தரிசனம்செய் தேமதுரத் தமிழ்ச்சொல் மாலை
- தொடுத்திலேன் அழுதுநின் தருளை வேண்டித்
- தொழுதுதொழு தானந்தத் தூய்நீர் ஆடேன்
- எடுத்திலேன் நல்லன்எனும் பெயரை அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
- தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
- மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
- மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
- கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
- கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
- இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- செய்திலேன் நின்தொண்டர் அடிக்குற் றேவல்
- திருத்தணிகை மலையைவலஞ் செய்து கண்ர்ப்
- பெய்திலேன் புலன்ஐந்தும் ஒடுக்கி வீதல்
- பிறத்தல்எனும் கடல்நீந்தேன் பெண்கள் தம்மை
- வைதிலேன் மலர்கொய்யேன் மாலை சூட்டேன்
- மணியேநின் திருப்புகழை வழுத்தேன் நின்பால்
- எய்திலேன் இவ்வுடல்கொண் டேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- காமாந்த காரியாய் மாதர் அல்குல்
- கடல்வீழ்ந்தேன் மதிதாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன்
- நாமாந்த கனைஉதைத்த நாதன் ஈன்ற
- நாயகமா மணியேநல் நலமே உன்றன்
- பூமாந்தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும்
- பொழில்கொள்தணி காசலத்தைப் புகழ்ந்து பாடேன்
- ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
- நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
- வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
- வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
- சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
- செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
- என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- போதல் இருத்தல் எனநினையாப் புனிதர் சனனப் போரோடு
- சாதல் அகற்றும் திருத்தணிகைச் சைவக் கனியே தற்பரமே
- ஓதல் அறியா வஞ்சகர்பால் உழன்றே மாதர்க் குள்ளுருகும்
- காதல் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச்
- சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே
- எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக்
- கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- அடலை அணிந்தோர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்தருளும்
- விடலை எனமூ வரும்புகழும் வேலோய் தணிகை மேலோயே
- நடலை உலக நடைஅளற்றை நண்ணா தோங்கும் ஆனந்தக்
- கடலை அடுத்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
- மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
- தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
- தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
- கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
- ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
- தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
- மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.
- செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
- பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ
- வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
- பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
- வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
- தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
- சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
- படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
- பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
- இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வஞ்சமட மாதரார் போகம் என்னும்
- மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
- கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
- காணாத செங்கனியில் கனிந்த தேனே
- தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
- தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
- எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
- கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
- மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
- முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
- கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
- மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
- மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
- மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
- பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
- கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
- அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
- அண்ண லேதணி காசலத் தரசே
- மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
- மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
- பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
- புண்ணி யாஅருட் போதக நாதா
- துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
- து‘ய னேபசுந் தோகைவா கனனே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
- தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
- பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
- சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
- ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
- உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.
- கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
- கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
- பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
- வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
- புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
- பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
- மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
- மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
- பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பித்த நாயகன் அருள்திருப் பேறே
- பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
- தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
- சலத்தின் மேவிய தற்பர ஒளியே.
- அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
- அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
- பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
- மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
- வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
- வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.
- தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
- காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
- மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
- நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
- கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
- குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
- மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
- தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
- எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
- குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
- மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
- சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
- முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
- எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
- நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
- பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
- கண்ணாஎம தண்ணாஎனக் கனநீறணிந் திடிலே.
- போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
- புண்ணிய நின்திரு அடிக்கே
- யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
- யாதுநின் திருஉளம் அறியேன்
- தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
- செய்திடா திருப்பையோ சிறியோன்
- ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
- ஈவையோ தணிகைவாழ் இறையே.
- கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
- திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டன்இட்ட
- விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
- தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே.
- எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
- அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
- வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
- திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.
- வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
- கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
- தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
- நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே.
- ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
- மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே
- தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை
- நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே.
- என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
- மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
- தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
- பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
- மணிக்குழை அடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
- வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
- கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
- கழலடிக் காக்கும்நாள் உளதோ
- குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
- குறிகுணங் கடந்ததோர் நெறியே
- எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
- எந்தையே தணிகைஎம் இறையே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
- திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
- கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
- கழல்வழி நடத்தும்நாள் உளதோ
- மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
- வண்புனத் தடைந்திட்ட மணியே
- வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
- மாமலை அமர்ந்தருள் மருந்தே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- பொன்னார் புயனார் புகழும் புகழார்
- புலியின் அதளார் புயம்நாலார்
- தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- என்நா யகனார் என்னுயிர் போல்வார்
- எழின்மா மயிலார் இமையோர்கள்
- தந்நா யகனார் தணிகா சலனார்
- தனிவந் திவண்மால் தந்தாரே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- கண்ணார் நுதலார் விடமார் களனார்
- கரமார் மழுவார் களைகண்ணார்
- பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
- பெரியார் கைலைப் பெருமானார்
- தண்ணார் சடையார் தருமா மகனார்
- தணிகா சலனார் தனிவேலார்
- எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
- என்செய் கேனோ இடர்கொண்டே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
- நினைவார் தங்கள் நெறிக்கேற்க
- அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
- அறுமா முகனார் அயில்வேலார்
- திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
- திருமா மலையார் ஒருமாதின்
- வருத்தம் பாரார் வளையும் தாரார்
- வாரார் அவர்தம் மனம்என்னே.
- பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
- பெயரும் பிச்சைப் பெருமானார்
- திரமன் றினிலே நடனம் புரிவார்
- சிவனார் மகனார் திறல்வேலார்
- தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
- தணிகா சலனார் தமியேன்முன்
- வரமன் றவும்மால் கொளநின் றனனால்
- மடவார் அலரால் மனநொந்தே.
- வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
- மெய்யனை ஐயனை உலக
- மால்கொளும் மனத்தர் அறிவரும் மருந்தை
- மாணிக்க மணியினை மயில்மேல்
- கால்கொளும் குகனை எந்தையை எனது
- கருத்தனை அயன்அரி அறியாச்
- சால்கொளும் கடவுள் தனிஅருள் மகனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
- அன்பினுக் கெளிவரும் அரசை
- விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
- விளக்கினை அளக்கரும் பொருளைக்
- கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
- முனிந்திடா தருள்அருட் கடலைத்
- தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
- வாகையம் புயத்தனை வடிவேல்
- தீரனை அழியாச் சீரனை ஞானச்
- செல்வனை வல்வினை நெஞ்சச்
- சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
- சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
- தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய்
- விமலனை அமலனை அற்பர்
- போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம்
- பூதனை மாதவர் புகழும்
- பாதனை உமையாள் பாலனை எங்கள்
- பரமனை மகிழ்விக்கும் பரனைத்
- தாதனை உயிர்க்குள் உயிரனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன் இடர்க்கடல் விடுத்தேற
- மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே
- துன்னும் நற்றணி காசலத் தமர்ந்தருள் தோன்றலே மயில்ஏறி
- மன்னும் உத்தம வள்ளலே நின்திரு மனக்கருத் தறியேனே.
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
- மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
- சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
- தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.
- மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
- மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
- ஐய நின்திரு அடித்துணை மறவா
- அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
- உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
- உடைய நாயகன் உதவிய பேறே
- எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
- புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
- நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
- நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
- விலையி லாதநின் திருவருள் விழையேன்
- வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
- இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
- பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
- தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
- சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
- ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
- உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
- எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
- படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
- தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
- தடத்த ளாவிய தருமநல் தேவே
- பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
- பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
- எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
- டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
- பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
- தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
- நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
- ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
- என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
- நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
- கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
- மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல்
- நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே
- மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார்
- ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே.
- தண்தேன்பொழி இதழிப்பொலி சடையார்தரு மகனார்
- பண்தேன்புரி தொடையார்தமைப் பசுமாமயில் மீதில்
- கண்டேன்வளை காணேன்கலை காணேன்மிகு காமம்
- கொண்டேன்துயில் விண்டேன்ஒன்றும் கூறேன்வரு மாறே.
- மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல்
- நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே
- பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே
- நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்குந் தொழிலால் அடக்கிப்பின்
- காக்கும் தொழிலால் அருள்புரிந்த கருணைக் கடலே கடைநோக்கால்
- நோக்கும் தொழில்ஓர் சிறிதுன்பால் உளதேல் மாயா நொடிப்பெல்லாம்
- போக்கும் தொழில்என் பால்உண்டாம் இதற்கென் புரிவேன் புண்ணியனே.
- வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
- நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
- தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
- மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
- என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
- காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
- கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
- சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
- திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
- சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
- அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
- இலகுசிற் பரகுக என்று நீறிடில்
- கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
- காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
- மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
- நேயமாம் சண்முக என்று நீறிடில்
- தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
- விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
- நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
- வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
- தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
- சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
- வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
- நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
- வதியும் தணிகையில் வாழ்வுறும் என்கண் மணி அன்னார்
- மதியுந் தழல்கெட மாமயின் மீதிவண் வருவாரேல்
- திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
- நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
- மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
- சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
- தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
- மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
- சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
- குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
- துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.
- தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
- வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
- ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
- போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- என்னிரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி
- பன்னிரு படைகொண் டோங்கும் பன்னிரு கரத்தோய் போற்றி
- மின்னிரு நங்கை மாருள் மேவிய மணாள போற்றி
- நின்னிரு பாதம் போற்றி நீள்வடி வேல போற்றி.
- செக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்
- அக்கட் பரிதிபுரத் தார்ந்தோங்கும்-முக்கண்
- குழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேஎன்
- பிழைக்கிரங்கி ஆளுதியோ பேசு.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்
- தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
- பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
- கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
- நன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
- நின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு
- பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- ஏலுந் தயங்கென்னு மேவற் கெதிர்மறைதான்
- ஆலுந் தொழிற்கேவ லாகுமோ-மாலுந்தி
- மாற்றுந் தணிகையர்க்கு மாமயின்மேல் நாடோறுந்
- தோற்றுந் தணிகையன்பொற் றோள்.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
- பார்முகம் பார்த்திரங்கும்
- பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
- பதியும்நல் நிதியும்உணர்வும்
- சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
- தீமைஒரு சற்றும்அணுகாத்
- திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
- செப்புகின் றோர்அடைவர்காண்
- கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
- þக்‘ழியங் கொடியும்விண்ணோர்
- கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
- கொண்டநின் கோலமறவேன்
- தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
- மதித்திடான் நின் அடிச்சீர்
- மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
- மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
- சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
- சிறுகுகையி னூடுபுகுவான்
- செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
- செய்குன்றில் ஏறிவிழுவான்
- இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
- இறங்குவான் சிறிதும்அந்தோ
- என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
- கேழையேன் என்செய்குவேன்
- தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நடவும் தனிமா மயிலோய் சரணம்
- நல்லார் புகழும் வல்லோய் சரணம்
- திடமும் திருவும் தருவோய் சரணம்
- தேவர்க் கரியாய் சரணம் சரணம்
- தடவண் புயனே சரணம் சரணம்
- தனிமா முதலே சரணம் சரணம்
- கடவுள் மணியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- கோலக் குறமான் கணவா சரணம்
- குலமா மணியே சரணம் சரணம்
- சீலத் தவருக் கருள்வோய்சரணம்
- சிவனார் புதல்வா சரணம் சரணம்
- ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
- நடுவா கியநல் ஒளியே சரணம்
- காலன் தெறுவோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- நங்கட் கிளியாய் சரணம் சரணம்
- நந்தா உயர்சம் பந்தா சரணம்
- திங்கட் சடையான் மகனே சரணம்
- சிவைதந் தருளும் புதல்வா சரணம்
- துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
- சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
- கங்கைக் கொருமா மதலாய் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- மன்னே எனைஆள் வரதா சரணம்
- மதியே அடியேன் வாழ்வே சரணம்
- பொன்னே புனிதா சரணம் சரணம்
- புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
- அன்னே வடிவேல் அரசே சரணம்
- அறுமா முகனே சரணம் சரணம்
- கன்னேர் புயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வேதப் பொருளே சரணம் சரணம்
- விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
- போதத் திறனே சரணம் சரணம்
- புனைமா மயிலோய் சரணம் சரணம்
- நாதத் தொலியே சரணம் சரணம்
- நவைஇல் லவனே சரணம் சரணம்
- காதுக் கினிதாம் புகழோய் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
- கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
- திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
- குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே.
- குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்தக்
- கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
- துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
- தோற்றத்தைப் பாடி அடியுங்கடி.
- மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
- வாழ்த்த வரங்கள் தருவாண்டி
- தீமையி லாத புகழாண்டி - அவன்
- சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
- வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
- வேடர் தமைஎலாம் வென்றாண்டி
- தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
- தீரனைப் பாடி அடியுங்கடி.
- சீர்திகழ் தோகை மயில்மேலே - இளஞ்
- செஞ்சுடர் தோன்றுந் திறம்போலே
- கூர்வடி வேல்கொண்டு நம்பெருமான் - வருங்
- கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.
- ஆனந்த மான அமுதனடி - பர
- மானந்த நாட்டுக் கரசனடி
- தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
- சண்முகன் நங்குரு சாமியடி.
- அற்புத மான அழகனடி - துதி
- அன்பர்க் கருள்செய் குழகனடி
- சிற்பர யோகத் திறத்தனடி-அந்தச்
- சேவகன் சீர்த்தியைப் பாடுங்கடி.
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
- மாமயில் வீரரே வாரும்
- தீமையில் தீரரே வாரும்.
- மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
- கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
- ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
- சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
- சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே
- பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.
- படியே அளந்த மாலவனும் பழைய மறைசொற் பண்ணவனும்
- முடியீ றறியா முதற்பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கிறையே
- அடியார் களுக்கே இரங்கிமுனம் அடுத்த சுரநோய் தடுத்ததுபோல்
- படிமீ தடியேற் குறுபிணிபோம் படிநீ கடைக்கண் பார்த்தருளே.
- மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
- மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
- ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
- ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
- இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
- இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
- என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
- எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
- சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவர் நீரணியும்
- மாலை யாதென் றேனயன்மால் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுத்ததென்றார்
- ஆலு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
- அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன்னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவில் லன்றென்றார்
- அண்கார்க் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- அலங்கும் புனற்செய் யொற்றியுளீ ரயன்மா லாதி யாவர்கட்கும்
- இலங்கு மைகாணீரென்றே னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார்
- துலங்கு மதுதா னென்னென்றேன் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன்
- அலங்கற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
- எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
- உட்டா வகற்று மந்தணர்க ளுறையூர் மாதே யுணரென்றார்
- அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன்
- இருவ ரொருபே ருடையவர்காண் என்றா ரென்னென் றேனென்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றார்
- அருவு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
- உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
- அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார்
- ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றார்
- அகஞ்சேர் விழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- துய்ய வதன்மேற் றலைவைத்துச் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
- உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே னுலகி லெவர்க்கு மாமென்றார்
- ஐய விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாத் தோலோடு வியாளத் தோலு முண்டென்றார்
- ஆலார் களத்த ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- கானார் சடையீ ரென்னிருக்கைக் கன்றும் பசுப்போற் கற்றதென்றேன்
- மானார் விழியாய் கற்றதுநின் மருங்குற் கலையு மென்றார் நீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்நான்
- ஆனா லொற்றி யிருமென்றே னங்கு மிருந்தே னென்றாரே.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென்
- மானங் கெடுத்தீ ரென்றேன்முன் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
- ஊனந் தடுக்கு மிறையென்றே னுலவா தடுக்கு மென்றார்மால்
- ஏனம் புடைத்தீ ரணையென்பீ ரென்றே னகலா ரென்றாரே.
- கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
- தனிமா னேந்தி யென்றேனென் றலைமே லொருமா னேந்தியென்றார்
- துனிமாற் றுகிலீ ரென்றேனற் றுகில்கோ வணங்கா ணென்றாரென்
- பனிமால் வரையீ ரென்றேனென் பனிமால் வரைகா ணென்றாரே.
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
- நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
- தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
- வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
- களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
- துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
- விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
- பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
- வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
- வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக்
- காண்பதே அருமைஅருமை
- கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக்
- கருணையால் அவர்வலியவந்
- திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி
- தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்
- கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல்
- ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
- பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற்
- புல்லாதி உணும்உயிர்களும்
- போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
- புறச்சுவர் எனப்புகலலாம்
- வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
- கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
- அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
- குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே.
- தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம்
- குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக்
- கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
- பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே.
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை
- இருந்துகாண் என்றதவமே
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
- நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
- மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
- பொய்யகலப் போற்றுவம்இப் போது.
- உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
- தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
- நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
- திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
- வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
- கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
- செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
- மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
- தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
- தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
- புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
- என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
- தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
- கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
- மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
- திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
- ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
- நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
- தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- * இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது:"இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம்சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர்களாலியற்றியது." * 6 - 5 - 1864 - ஆ. பா.
- திருமால் அறியாச் சேவடி யாலென்
- கருமால் அறுக்குங் கணபதி சரணம்.
- மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
- ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
- தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
- சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி.
- பரசிவா னந்தபரி பூரண சதானந்த
- பாவனா தீதமுக்த
- பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
- பௌதிகா தாரயுக்த
- சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
- சாம்பவ விநாசரகித
- சாஸ்வத புராதர நிராதர அபேதவா
- சாமகோ சரநிரூபா
- துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
- சுகோதய பதித்வநிமல
- சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
- சோமசே கரசொரூபா
- அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
- டணுவளவும் அறிகிலாத
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
- சுத்தமணியே அரியநல்
- துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
- துலங்குமணி யேஉயர்ந்த
- ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
- தானந்த மானமணியே
- சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
- சமரச சுபாவமணியே
- நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
- நினைவிலமர் கடவுண்மணியே
- நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
- நித்யஆ னந்தமணியே
- ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
- கன்புதவும் இன்பமணியே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
- சாமிசிவ காமியிடமார்
- சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
- சத்யமொழி தன்னைநம்பி
- எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
- ஏத்திவினை தனைமாற்றியே
- இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
- ஏழையேன் ஒருவன்அந்தோ
- சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
- செப்புவாய் வேதனாதி
- தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
- சித்தர்களும் ஏவல்புரிய
- அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
- கருண்முக விலாசத்துடன்
- அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- தனத்தால் இயன்ற தனிச்சபையில் நடிக்கும் பெருமான் தனக்கன்றே
- இனத்தால் உயர்ந்த மணமாலை இட்டுக் களித்த துரைப்பெண்ணே
- மனத்தான் விளங்கும் சிவகாம வல்லிக் கனியே மாலொடும்ஓர்
- அனத்தான் புகழும் அம்மேஇவ் வடியேன் உனக்கே அடைக்கலமே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
- இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
- கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
- பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.
- உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
- சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
- நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
- தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
- இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
- அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
- மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
- மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- குற்ற நினைத்த கொடுஞ்சொலெலா மென்னுளத்தே
- பற்ற நினைக்கிற் பயமா யிருக்குதடா.
- நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
- மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா.
- எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
- வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
- எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
- வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா.
- தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
- சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.
- வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
- செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.
- மாசறுநின் பொன்னருளா மாமணிபெற் றாடவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்
- எங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.
- இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
- றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
- வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
- சும்மா இருக்கும் சுகம்.
- ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
- ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
- ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
- ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
- அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
- சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
- அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
- அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
- ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
- அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
- ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
- தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
- தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
- அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
- எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
- அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
- அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
- காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
- ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
- அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
- சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
- அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- உபரச வேதியி னுபயமும் பரமும்
- அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
- ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
- சத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்
- கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
- சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
- யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
- மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
- யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
- ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
- மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
- ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி
- உருவமு மருவமு முபயமு மாகிய
- அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
- அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
- புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
- அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
- வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
- ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
- அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
- அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
- அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
- கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
- அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
- கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
- அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
- னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
- அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
- நவநிலை மிசையே நடுவுறு நடுவே
- சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
- ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
- பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
- எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
- எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
- அவனோ டவளா யதுவா யலவாய்
- நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
- சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
- சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
- அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
- அருளுற முயல்கவென் றருளிய சிவமே
- அருளே நம்மறி வருளே நம்மனம்
- அருளே நங்குண மாமென்ற சிவமே
- அருளே நம்பதி யருளே நம்பதம்
- அருளே நம்மிட மாமென்ற சிவமே
- சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
- சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
- கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
- வையமேல் வைத்த மாசிவ பதியே
- காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
- மாண்பத மளித்து வயங்குசற் குருவே
- சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
- மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
- ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
- ஈன்றமு தளித்த வினியநற் றாயே
- ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
- ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
- தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
- என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
- செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
- குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
- அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
- இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
- முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
- எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
- எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
- எல்லா வின்புமா மென்றனி யின்பே
- சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
- மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
- அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
- உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
- விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
- கண்பெற நடத்துங் ககனமா மணியே
- நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
- சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
- அகரமு முகரமு மழியாச் சிகரமும்
- வகரமு மாகிய வாய்மைமந் திரமே
- வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
- ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
- சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
- தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
- என்றே யென்னினு மிளமையோ டிருக்க
- நன்றே தருமொரு ஞானமா மருந்தே
- சிற்சபை நடுவே திருநடம் புரியும்
- அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
- இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
- தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
- மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
- ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்
- காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
- ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
- எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
- அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
- அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
- கற்பனை கடந்த கருணைமா நிதியே
- பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
- வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
- உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
- துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
- கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
- இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
- நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
- சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே
- நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
- எம்பல மாகிய வம்பலப் பாட்டே
- மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
- கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
- அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
- சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட
- அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
- பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
- தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
- என்வசங் கடந்த என்னுடை யன்பே
- வேதமு மாகம விரிவும் பரம்பர
- நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
- வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
- நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
- என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
- அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
- சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
- உத்தம னாகுக வோங்குக வென்றனை
- நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
- நண்ணியும் கண்ணுறா தந்தோ
- திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
- திரும்பின எனில்அதன் இயலை
- இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
- இசைத்திடு வேம்என நாவை
- அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
- அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
- பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
- பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
- இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
- எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
- சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
- தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
- நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
- நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
- பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
- பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
- சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
- இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
- பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
- பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
- விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
- விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
- உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
- அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
- பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
- பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
- டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
- இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
- ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
- ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
- செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
- திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
- வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
- மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
- உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
- புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன்புன்மையேன் புலைத்தொழிற்கடையேன்
- வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
- குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்
- எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் எட்டியேஅனையேன்
- மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்
- குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
- அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
- குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
- கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
- செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
- சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
- எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
- இதயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.
- ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
- ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
- சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
- செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
- மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
- வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
- வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித்
- தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
- கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
- கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
- ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
- ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
- சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
- தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
- காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
- மான மேலிடச் சாதியே மதமே
- வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
- ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
- இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
- ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
- நாய காஎனை நயந்துகொண் டருளே.
- கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
- கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
- நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
- நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
- சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
- இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
- கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
- கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
- கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
- மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
- சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
- அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
- அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
- சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
- தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
- எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
- வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
- நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
- கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
- வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
- பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
- நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
- துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
- நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
- ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
- தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
- மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
- கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
- கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
- அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட
- நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.
- அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்அசடனேன் அறிவிலேன்உலகில்
- குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் குழியிலே குளித்தவெங் கொடியேன்
- வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன் மாயைக்
- களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்தருள் எனையே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
- சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
- தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
- வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
- செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின்
- திருவுளக் குறிப்பையும் தெரியேன்
- உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
- உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
- மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
- வினையனேன் என்செய விரைகேன்
- பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன்
- புலையனேன் புகல்அறி யேனே.
- அழகனே ஞான அமுதனே என்றன்
- அப்பனே அம்பலத் தரசே
- குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
- கொழுநனே சுத்தசன் மார்க்கக்
- கழகநேர் நின்ற கருணைமா நிதியே
- கடவுளே கடவுளே எனநான்
- பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
- பழங்கணால் அழுங்குதல் அழகோ.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
- தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
- நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
- நன்மையும் நரைதிரை முதலாம்
- துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
- சுகவடி வம்பெறும் பேறும்
- தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
- தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வந்தருள் புரிக விரைந்திது தருணம்
- மாமணி மன்றிலே ஞான
- சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
- சுத்தசன் மார்க்கசற் குருவே
- தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
- தனிஅருட் சோதியை எனது
- சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
- செய்வித் தருள்கசெய் வகையே.
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
- சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
- மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
- எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
- தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
- திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
- உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
- அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
- வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
- கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
- குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
- துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
- ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
- அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந்த ததுதான்
- கானந்த மதத்தாலே காரமறை படுமோ
- கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
- ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
- உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
- நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
- நல்லதிரு வுளம்எதுவோ வல்லதறிந் திலனே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
- நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
- ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
- உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
- ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
- இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
- ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
- ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
- இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
- விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
- அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
- தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
- துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
- அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
- கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
- தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
- ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
- மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.
- மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
- கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
- எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
- நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
- ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
- ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
- தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
- நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
- அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
- ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
- சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
- பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
- தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
- காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
- நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
- சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
- ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
- உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
- கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
- புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
- தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
- கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
- படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
- விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
- தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
- கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
- புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
- கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
- இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
- துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
- உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
- மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
- தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
- வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
- இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
- ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
- சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
- வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
- சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
- தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
- ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
- பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
- சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
- பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
- நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
- பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித்
- தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
- ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
- நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.
- கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
- மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
- இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
- தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
- கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
- இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
- மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
- அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
- வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
- ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
- தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
- கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
- கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
- மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
- பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
- தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
- கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
- வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
- உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
- எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
- எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
- செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
- திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
- தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
- தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
- அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
- கண்ணார நினைஎங்கும் கண்வத்தல் வேண்டும்
- காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
- பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
- பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
- உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
- உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
- அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
- துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
- படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
- படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
- ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
- எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
- எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
- இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
- எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
- உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
- உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
- எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
- எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
- கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
- காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
- விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
- விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே.
- திருஎலாம் தரும்ஓர் தெய்வமாம் ஒருவன்
- திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான்
- உருஎலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி
- உளஎலாம் ஆங்கவன் தனக்கே
- தெருஎலாம் அறியக் கொடுத்தனன் வேறு
- செயலிலேன் எனநினைத் திருந்தேன்
- அருஎலாம் உடையாய் நீஅறிந் ததுவே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
- சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
- உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
- உவப்பிலேன் உலகுறு மாயைக்
- கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
- கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
- அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
- பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
- சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன் மார்க்க
- சங்கம்என் றோங்குமோ தலைமைச்
- சித்தெலாம் வல்ல சித்தன்என் றுறுமோ
- தெரிந்திலேன் எனத்துயர்ந் திருந்தேன்
- ஒத்தெலாம் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
- மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
- தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
- தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
- நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
- நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
- ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
- என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே
- அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன்
- பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும்
- உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
- திகைப்பார் திகைக்க நான்சிறிதும் திகையேன் எனநின் திருவடிக்கே
- வகைப்பா மாலை சூட்டுகின்றேன் மற்றொன் றறியேன் சிறியேற்குத்
- தகைப்பா ரிடைஇத் தருணத்தே தாராய் எனிலோ பிறரெல்லாம்
- நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் திருத்தல் அழகோ நாயகனே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
- மெய்யனே ஐயனே எனக்கு
- மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
- வல்லனே நல்லனே அருட்செங்
- கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
- குணத்தனே இனிச்சகிப் பறியேன்
- காலையே தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
- அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
- செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
- தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
- இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
- இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
- மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
- கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
- நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
- நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
- உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
- உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
- வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர்
- தாய்கையில் கொடுத்தனை அவளோ
- வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
- மாயமே புரிந்திருக் கின்றாள்
- கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும்
- கேட்பதற் கடைந்திலன் அந்தோ
- உளந்தரு கருணைத் தந்தையே நீயும்
- உற்றிலை பெற்றவர்க் கழகோ.
- காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
- கனிவிலாள் காமமா திகளாம்
- பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
- பயம்புரி வித்தனள் பலகால்
- தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத்
- திருமதி எனநினைந் தறியாள்
- சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத்
- தந்தது சாலும்எந் தாயே.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
- புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
- சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
- சொப்பனத் தாயினும் நினையேன்
- கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
- கனகமா மன்றிலே நடிக்கும்
- நல்லவா எல்லாம் வல்லவா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம்
- வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன்
- ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான்
- சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன்கண்டாயே.
- செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
- சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
- புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
- தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
- வருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
- பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
- நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
- ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
- பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
- வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
- மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
- ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
- இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
- மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
- மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
- கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
- நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
- வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
- மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
- ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
- உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
- பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
- பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
- கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
- சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
- தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
- தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
- தானாகி நானாடத் தருணம்இது தானே
- குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
- குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
- படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
- பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
- கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
- கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
- செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
- திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
- அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
- அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
- என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
- சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
- தந்தெனை யாவரும் வந்தனை செயவே
- நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
- நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
- அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
- வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
- ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
- கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளுமாறே.
- பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
- மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
- சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.
- விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி
- எஞ்சு றாதபே ரின்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி
- அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும்
- துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளுமாறே.
- ஓங்கு பொன்னணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்
- பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத்
- தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே.
- இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம்
- துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல்
- கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
- அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறுமாறே.
- சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
- அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
- மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
- பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
- விளங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை
- உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை
- களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும்
- துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறுமாறே.
- வாய்ந்த பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
- ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
- சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறுமாறே.
- மாற்றி லாதபொன் னம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற
- பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை
- சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறுமாறே.
- தீட்டு பொன்னணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
- காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
- நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
- வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடுமாறே.
- படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
- பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
- விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
- கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
- கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
- நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
- நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
- கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
- மன்னே அயனும் திருமா லவனும்
- மதித்தற் கரிய பெரிய பொருளே
- அன்னே அப்பா ஐயா அரசே
- அன்பே அறிவே அமுதே அழியாப்
- பொன்னே மணியே பொருளே அருளே
- பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
- தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
- பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
- பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
- இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
- இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
- அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
- கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
- உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
- உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
- வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
- வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
- அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
- காலைஈ தென்றே கருத்துள் அறிந்தேன்
- நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
- நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
- செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
- சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
- அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே
- உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே
- பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே
- பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே
- நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே
- நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே
- கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
- விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
- தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
- நல்லாசொல் யோகாந்தப் பதிகள்பல கோடி
- நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி
- வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி
- வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி
- இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி
- இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி
- எல்லாம்பே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே.
- நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
- ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
- ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
- சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
- சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
- நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
- எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
- சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
- சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
- மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
- மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
- தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
- அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
- காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
- செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
- விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
- தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
- தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
- மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
- விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
- துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
- நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
- இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
- குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
- பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
- வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
- பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
- சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
- நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
- எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
- என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர்
- உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது
- பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்
- பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே
- திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச்
- செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே
- கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில்
- காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
- இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
- தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
- தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
- எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
- இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
- முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
- முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
- எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
- ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
- பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
- பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
- நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
- நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
- அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
- தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
- நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
- நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
- சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
- சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
- புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
- மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
- முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
- மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
- எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
- எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
- மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
- உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
- பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
- பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
- நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
- நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
- மயர்ப்பறுமெய்த்284 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
- நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
- ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
- அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
- நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
- மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
- களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
- மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
- மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
- சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
- சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
- மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
- மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
- அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
- கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
- கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
- வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
- மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
- படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
- பரம்பர ஒளிஎலாம் அணுவில்
- கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
- கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
- அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
- அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
- கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
- அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
- பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
- பேசநின் றோங்கிய பெரியோன்
- களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
- கருணையா ரமுதளித் துளமாம்
- வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
- பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
- அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
- மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
- குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
- கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
- காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
- தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
- தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
- கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
- குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
- எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
- ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- விரித்தானைக் கருவிஎலாம் விரிய வேதம்
- விதித்தானை மெய்ந்நெறியை மெய்யே எற்குத்
- தெரித்தானை நடம்பொதுவில் செய்கின் றானைச்
- சிறியேனுக் கருள்ஒளியால் சிறந்த பட்டம்
- தரித்தானைத் தானேநா னாகி என்றும்
- தழைத்தானை எனைத்தடுத்த தடைகள் எல்லாம்
- எரித்தானை என்உயிருக் கின்பா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
- நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
- தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
- துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
- ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
- உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
- எட்டானை என்னளவில் எட்டி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
- துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
- காற்றானை வெளியானைக் கனலா னானைக்
- கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
- தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
- சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
- ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- சேர்த்தானை என்றனைத்தன் அன்ப ரோடு
- செறியாத மனஞ்செறியச் செம்பொற் றாளில்
- ஆர்த்தானை அம்பலத்தில் ஆடா நின்ற
- ஆனந்த நடத்தானை அருட்கண் நோக்கம்
- பார்த்தானைப் பாராரைப் பாரா தானைப்
- பார்ப்பறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
- ஈர்த்தானை ஐந்தொழில்நீ இயற்றென் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
- போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
- செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
- திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
- அயலானை உறவானை அன்பு ளானை
- அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
- இயலானை எழிலானைப் பொழிலா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
- சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
- மேயானைக் கண்காண விளங்கி னானை
- மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
- வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
- வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
- ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
- தானேதா னானானைத் தமிய னேனைக்
- குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
- குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
- அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
- அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
- இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
- அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
- செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
- சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
- பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
- பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
- எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
- பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
- காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
- கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
- மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
- மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
- ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
- உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
- கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
- கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
- தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
- தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
- எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
- உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
- மறவானை அறவாழி வழங்கி னானை
- வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
- திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
- சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
- இறவானைப் பிறவானை இயற்கை யானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
- அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
- மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
- மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
- சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
- தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
- இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
- மந்திரங்க ளானானை வான நாட்டு
- விருந்தானை உறவானை நண்பி னானை
- மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
- பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
- பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
- இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- ஆன்றானை அறிவானை அழிவி லானை
- அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
- மூன்றானை இரண்டானை ஒன்றானானை
- முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
- தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
- சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
- ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
- சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
- வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
- வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
- வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
- மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
- ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை
- நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி
- நின்றானைப் பொன்றாத நிலையி னானை
- நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம்
- ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை
- ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல்
- என்றானை என்றும்உள இயற்கை யானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- பாட்டுவந்து பரிசளித்த பதியைஅருட் பதியைப்
- பசுபதியைக் கனகசபா பதியைஉமா பதியைத்
- தேட்டமிகும் பெரும்பதியைச் சிவபதியை எல்லாம்
- செய்யவல்ல தனிப்பதியைத் திகழ்தெய்வப் பதியை
- ஆட்டியல்செய் தருள்பரம பதியைநவ பதியை
- ஆனந்த நாட்டினுக்கோர் அதிபதியை ஆசை
- காட்டிஎனை மணம்புரிந்தென் கைபிடித்த பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
- வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
- துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
- சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
- விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
- விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
- கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மாற்றைஅளந் தறிந்திலம்என் றருமறைஆ கமங்கள்
- வழுத்தமணி மன்றோங்கி வயங்கும்அருட் பொன்னை
- ஆற்றல்மிகு பெரும்பொன்னை ஐந்தொழிலும் புரியும்
- அரும்பொன்னை என்தன்னை ஆண்டசெழும் பொன்னைத்
- தேற்றமிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான
- சிதம்பரத்தே விளங்கிவளர் சிவமயமாம் பொன்னைக்
- காற்றனல்ஆ காயம்எலாம் கலந்தவண்ணப் பொன்னைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அரசே
- மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
- வள்ளலை மாணிக்க மணியைப்
- பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
- புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
- தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
- தீபத்தைக் கண்டுகொண் டேனே.
- துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
- துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
- என்பொலா மணியை என்சிகா மணியை
- என்னிரு கண்ணுள்மா மணியை
- அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
- என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
- எந்தையைக் கண்டுகொண் டேனே.
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
- பொற்சபை அப்பனை வேதம்
- சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
- ஜோதியைச் சோதியா தென்னை
- மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
- மன்னிய பதியைஎன் வாழ்வை
- எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
- பதியுமாம் ஒருபசு பதியை
- நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
- நல்கிய கருணைநா யகனை
- எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
- இறைவனை மறைமுடி இலங்கும்
- தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
- அறிவித்த அறிவைஎன் அன்பைச்
- சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
- சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
- நீதியை எல்லா நிலைகளும் கடந்த
- நிலையிலே நிறைந்தமா நிதியை
- ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
- என்னைவாழ் விக்கின்ற பதியைப்
- பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
- பொருந்திய மருந்தையென் பொருளை
- வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
- வைத்தசன் மார்க்கசற் குருவைக்
- கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
- சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
- அன்புளே கலந்த தந்தையை என்றன்
- ஆவியைப் பாவியேன் உளத்தை
- இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
- இனிதமர்ந் தருளிய இறையை
- வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
- சிதம்பர நடம்புரி சிவத்தைப்
- பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
- பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
- இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
- யாவுமாய் அல்லவாம் பொருளைச்
- சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
- சாமியைக் கண்டுகொண் டேனே.
- ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
- ஆகம முடிஅமர் பரத்தைக்
- காரண வரத்தைக் காரிய தரத்தைக்
- காரிய காரணக் கருவைத்
- தாரண நிலையைத் தத்துவ பதியைச்
- சத்திய நித்திய தலத்தைப்
- பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
- பொருளினைக் கண்டுகொண் டேனே.
- சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
- சுத்தசித் தாந்தரா சியத்தைத்
- தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
- சமரச சத்தியப் பொருளைச்
- சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
- தெளிந்தபே ரானந்தத் தெளிவை
- வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
- மெய்மையைக் கண்டுகொண் டேனே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- உத்தர ஞான சித்திமா புரத்தின்
- ஓங்கிய ஒருபெரும் பதியை
- உத்தர ஞான சிதம்பர ஒளியை
- உண்மையை ஒருதனி உணர்வை
- உத்தர ஞான நடம்புரி கின்ற
- ஒருவனை உலகெலாம் வழுத்தும்
- உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
- ஓதியைக் கண்டுகொண் டேனே.
- தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
- யேச்சுரன் சதாசிவன் விந்து
- நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
- நவில்பர சிவம்எனும் இவர்கள்
- இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
- இடதுகாற் கடைவிரல் நகத்தின்
- கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
- கண்டனன் திருவடி நிலையே.
- அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
- அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
- படர்தரு விந்து பிரணவப் பிரமம்
- பரைபரம் பரன்எனும் இவர்கள்
- சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
- துணையடிப் பாதுகைப் புறத்தே
- இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
- ஏத்துவன் திருவடி நிலையே.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
- போந்தவான் முடியதாங் கதன்மேல்
- மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
- வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
- என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
- தத்திலே இலங்கிய ததன்மேல்
- தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
- தழுவினன் திருவடி நிலையே.
- மன்றஓங் கியமா மாயையின் பேத
- வகைதொகை விரிஎன மலிந்த
- ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
- உற்றன மற்றவை எல்லாம்
- நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
- நின்றசத் திகளொடு சத்தர்
- சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
- என்பரால் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
- பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
- செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
- பெருங்களிப்புச் செய்தான் தன்னை
- முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
- கொடுத்தெனக்கு முன்னின் றானை
- அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
- பெரும்பொருளைப் புனிதந் தன்னை
- என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
- பெருங்கருணை இயற்கை தன்னை
- இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
- பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
- அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
- விடுவித்தென் தன்னை ஞான
- நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
- நிலைதனிலே நிறுத்தி னானைப்
- பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
- பராபரனைப் பதிஅ னாதி
- ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
- என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
- நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
- நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
- கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
- காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
- செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
- சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
- நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
- நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
- பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
- பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
- சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
- சர்க்கரைக் கட்டியே என்கோ
- அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
- அம்பலத் தாணிப்பொன் என்கோ
- உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
- உள்ளொளிக் குள்ளொளி என்கோ
- இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
- என்னைஆண் டருளிய நினையே.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
- ஆனந்தத் தனிமலர் என்கோ
- கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
- கடையனேன் உடையநெஞ் சகமாம்
- இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
- இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
- துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
- சோதியுட் சோதிநின் றனையே.
- தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
- தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
- சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
- தனில்உறும் அனுபவம் என்கோ
- ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
- ஓங்கிய ஒருமையே என்கோ
- சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலத்தவ நினையே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
- ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
- பாங்காக ஏற்றி320 எந்தப் பதத்தலைவ ராலும்
- படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
- தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
- சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
- ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
- என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
- பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
- பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
- காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
- கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
- அறிவென அறிகின்ற அறிவே
- சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
- துரியநல் நிலத்திலே துலங்கும்
- சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
- செல்வமே சித்தெலாம் புரியும்
- பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தத்துவ பதியே தத்துவம் கடந்த
- தனித்ததோர் சத்திய பதியே
- சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
- தமக்குளே சார்ந்தநற் சார்பே
- பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
- பெறல்அரி தாகிய260 பேறே
- புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பரம்பர நிறைவே பராபர வெளியே
- பரமசிற் சுகந்தரும் பதியே
- வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
- வயங்கிய பெருஞ்சுடர் மணியே
- கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
- கருதிய கருத்துறு களிப்பே
- புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
- தரவல்ல சம்புவே சமயப்
- புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
- புண்ணியர் நண்ணிய புகலே
- வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
- வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
- பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- என்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்
- இதயத்தில் இருக்கின்ற குருவே
- அன்புடை அரசே அப்பனே என்றன்
- அம்மையே அருட்பெருஞ் சோதி
- இன்புறு நிலையில் ஏற்றிய துணையே
- என்னுயிர் நாதனே என்னைப்
- பொன்புனை மாலை புனைந்தஓர் பதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைவளர் கலையே கலையினுட் கலையே
- கலைஎலாம் தரும்ஒரு கருவே
- நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
- நித்திய வானமே ஞான
- மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
- மாபலம் தருகின்ற வாழ்வே
- புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அன்பனே அப்பா அம்மையே அரசே
- அருட்பெருஞ் சோதியே அடியேன்
- துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
- சுகத்திலே தோற்றிய சுகமே
- இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
- என்னுளே இலங்கிய பொருளே
- வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணினுள் மணியே
- இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
- இணையிலா என்னுடை அன்பே
- சொந்தநல் உறவே அம்பலத் தரசே
- சோதியே சோதியே விரைந்து
- வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- கோஎன எனது குருஎன ஞான
- குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
- பூஎன அதிலே மணம்என வணத்தின்
- பொலிவென வயங்கிய பொற்பே
- தேவெனத் தேவ தேவென ஒருமைச்
- சிவம்என விளங்கிய பதியே
- வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- நல்லவா அளித்த நல்லவா எனையும்
- நயந்தவா நாயினேன் நவின்ற
- சொல்லவா எனக்குத் துணையவா ஞான
- சுகத்தவா சோதிஅம் பலவா
- அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
- ஆண்டவா தாண்டவா எல்லாம்
- வல்லவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
- கற்பகத் தனிப்பெருந் தருவே
- தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
- சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
- சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
- சித்தியே சுத்தசன் மார்க்க
- வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
- ஈன்றவா என்னவா வேதம்
- சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
- துதியவா அம்பலத் தமுதம்
- அன்னவா அறிவால் அறியரி வறிவா
- ஆனந்த நாடகம் புரியும்
- மன்னவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
- விளக்கினால் என்னுளம் விளக்கி
- இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
- கென்கருத் தனைத்தையும் புரிந்தே
- சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
- சத்தியைத் தயவினால் தருக
- வரதனே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
- தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
- வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
- ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
- நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
- மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
- ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
- கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
- தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
- சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
- புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
- பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
- நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
- நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
- டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
- பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
- இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
- போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
- தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ
- ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான
- மாதுதான் இடங்கொண் டோங்க வயங்குமா மன்று ளானே.
- சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
- குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
- பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
- கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
- துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
- பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய்
- அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற
- கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் னென்பேன் அந்தோ.
- நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
- கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
- நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
- வினைவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
- உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
- புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
- குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
- தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
- பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
- நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
- சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
- சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
- மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
- யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- பரமான சிதம்பர ஞான சபாபதியே
- வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
- தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
- உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
- செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
- நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
- சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
- 278. 4067, 4068. இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில் இருப்பதாகக்கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார். பொருளமைதிகருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன.
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
- கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
- உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
- அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
- தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
- எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
- அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- இத்தா ரணியில் என்பிழைகள் எல்லாம் பொறுத்த என்குருவே
- நித்தா சிற்றம் பலத்தாடும் நிருத்தா எல்லாஞ் செயவல்ல
- சித்தா சித்தி புரத்தமர்ந்த தேவே சித்த சிகாமணியே
- அத்தா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- எம்மே தகவும் உடையவர்தம் இதயத் தமர்ந்த இறையவனே
- இம்மே தினியில் எனைவருவித் திட்ட கருணை எம்மானே
- நம்மே லவர்க்கும் அறிவரிய நாதா என்னை நயந்தீன்ற
- அம்மே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்துதெளிந்
- திப்பா ரிடைநின் புகழ்பாடு கின்ற பெரிய ரின்மொழிப்பாட்
- டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் டெல்லாம் உவந்த உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
- வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
- ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
- நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
- அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
- அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
- புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
- போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
- இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
- புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
- பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
- சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
- சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
- மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
- வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
- என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
- நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
- எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
- அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
- புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
- சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
- தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
- தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
- என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதிஉருப்
- பாதிக் கொடியே சோதிவலப் பாகக் கொடியே352 எனைஈன்ற
- ஆதிக் கொடியே உலகுகட்டி ஆளுங் கொடியே சன்மார்க்க
- நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
- பொருணற் கொடியே மாற்றுயர்ந்த பொன்னங் கொடியே போதாந்த
- வருணக் கொடியே எல்லாஞ்செய் வல்லார் இடஞ்சேர் மணிக்கொடியே
- தருணக் கொடியே என்தன்னைக் தாங்கி ஓங்குந் தனிக்கொடியே
- கருணைக் கொடியே ஞானசிவ காமக் கொடியே அருளுகவே.
- நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
- பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே353 பரநாத
- நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
- கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே .
- மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
- சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
- காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
- கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- புலங்கொள் கொடிய மனம்போன போக்கில் போகா தெனைமீட்டு
- நலங்கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நற்கொடியே
- வலங்கொள் ஞான சித்திஎலாம் வயங்க விளங்கு மணிமன்றில்
- குலங்கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த
- பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே
- தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும்சுத்த சன்மார்க்கக்
- கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- மாயையாற் கலங்கி வருந்திய போதும்
- வள்ளல்உன் தன்னையே மதித்துன்
- சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால்
- தலைவவே245 றெண்ணிய துண்டோ
- தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
- துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
- நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
- நன்றருள் புரிவதுன் கடனே.
- காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
- சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் - ஞாலமிசைச்
- சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்
- ஏகா நினக்கடிமை ஏற்று.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
- மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
- குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
- மணவாளன் பாத மலர்.
- திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
- குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
- தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
- மாப்பிள்ளை பாத மலர்.
- என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
- தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
- சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
- மாலைஇட்டான் பாதமலர்.
- மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
- வாழ்விலே வரவிலே மலஞ்சார்
- தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
- தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
- காலிலே ஆசை வைத்தனன் நீயும்
- கனவினும் நனவினும் எனைநின்
- பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- குலத்திலே சமயக் குழியிலே நரகக்
- குழியிலே குமைந்துவீண் பொழுது
- நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
- நிற்கின்றார் நிற்கநான் உவந்து
- வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
- மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
- பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
- அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
- அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
- அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன் அந்தோ அந்தோ.
- கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
- நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
- தெல்லோரும் வாழ்க இசைந்து.
- செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
- இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
- சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
- துன்மார்க்கம் போக தொலைந்து.
- செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
- சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
- சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
- என்மார்க்கம் நின்மார்க்க மே.
- வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
- பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
- போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
- நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.
- வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
- சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
- எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
- விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
- மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
- நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
- சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
- தொம்பத உருவொடு தத்பத வெளியில்
- தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
- எம்பதமாகி இசைவாயோ தோழி
- இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
- சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
- திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- என்மய மாகி இருப்பாயோ தோழி
- இச்சை மயமாய் இருப்பாயோ288 தோழி.
- ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
- அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
- ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
- ஏறி இழிந்திங் கிறப்பாயோ289 தோழி.
- 288. மயமாய்ப் பெருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
- 289. இருப்பாயோ - முதற்பதிப்பு.
- 290. பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,N
- காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ
- கண்டுகொள் கணவனே என்றாள்
- ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்
- உவந்திலேன் உண்மையீ தென்றாள்
- பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த
- பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்
- மாதய வுடைய வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப்
- புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
- காமிஎன் றெனைநீ கைவிடேல் காமக்
- கருத்தெனக் கில்லைகாண் என்றாள்
- சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ
- சற்றுநான் தரித்திடேன் என்றாள்
- மாமிகு கருணை வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
- உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
- பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
- பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
- நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
- நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
- நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
- நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- அன்னப்பார்ப் பால்365அழ காம்நிலை யூடே
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
- சூதாடு கின்றஅச் சூழலில் வந்தே
- உன்னைப்பார்த் துன்னுள்ளே என்னைப்பா ராதே
- ஊரைப்பார்த் தோடி உழல்கின்ற பெண்ணே
- என்னைப்பார் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- விதுபா வகமுகத் தோழியும் நானும்
- மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
- பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
- பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
- இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர்
- வித்தகர் அம்பலம் மேவும் அழகர்
- இக்குல மாதரும் யானும்என் நாதர்
- இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது
- பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே
- பூரண நோக்கம் பொருந்தினை நீதான்
- எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
- பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
- வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
- மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
- ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
- எம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே
- ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
- மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
- சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
- சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
- புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
- புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
- இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
- பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
- இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
- என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
- சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
- தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
- நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
- வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
- இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
- மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
- அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
- அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தாழ்குழலீர் எனைச்சற்றே தனிக்கவிட்டால் எனது
- தலைவரைக்காண் குவல்என்றேன் அதனாலோ அன்றி
- ஏழ்கடலிற் பெரிதன்றோ நான்பெற்ற இன்பம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கூழ்கொதிப்ப தெனக்கொதித்தாள் பாங்கிஎனை வளர்த்த
- கோதைமருண் டாடுகின்ற பேதைஎனல் ஆனாள்
- சூழ்மடந்தை மார்களெலாம் தூற்றிநகைக் கின்றார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என்
- உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
- அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை
- அதிசயம் அதிசயம் என்றாள்
- துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை
- தொட்டனன் பிடித்தனன் என்றாள்
- புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
- பொங்கினாள் நான்பெற்ற பொன்னே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- கனகமா மன்றில் நடம்புரி பதங்கள்
- கண்டனன் கண்டனன் என்றாள்
- அனகசிற் சபையில் ஒருபெரும் பதிஎன்
- அன்பிலே கலந்தனன் என்றாள்
- தினகர சோமாக் கினிஎலாம் எனக்கே
- செயல்செயத் தந்தனன் என்றாள்
- தனகரத் தெனைத்தான் தழுவினான் என்றாள்
- தவத்தினால் பெற்றநம் தனியே.
- கொடிப்பெரு மணிப்பொற் கோயில்என் உளமாக்
- கொண்டுவந் தமர்ந்தனன் என்றாள்
- கடிப்புது மலர்ப்பூங் கண்ணிவேய்ந் தெனைத்தான்
- கடிமணம் புரிந்தனன் என்றாள்
- ஒடிப்பற எல்லாம் வல்லதோர் சித்தாம்
- ஒளிஎனக் களித்தனன் என்றாள்
- இடிப்பொடு நொடித்தீர் காண்மினோ என்றாள்
- என்தவத் தியன்றமெல் லியலே.
- வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
- மாலைவந் தணிந்தனன் என்றாள்
- ஊழிதோ றூழி உலவினும் அழியா
- உடம்பெனக் களித்தனன் என்றாள்
- ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
- அளிக்கஎன் றருளினான் என்றாள்
- ஏழியன் மாட மிசையுற வைத்தான்
- என்றனள் எனதுமெல் லியலே.
- ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
- என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
- பாலும்இன் சுவையும் போன்றென தாவி
- பற்றினன் கலந்தனன் என்றாள்
- சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
- சத்தியை அளித்தனன் என்றாள்
- மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள்
- மிகுகளிப் புற்றனள் வியந்தே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
- இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
- வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
- மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
- காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
- காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
- தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
- தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
- கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
- கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
- தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
- ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
- நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
- நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
- மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
- வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
- சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
- ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
- அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
- ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
- கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
- ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
- ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.
- படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
- பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
- புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
- பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
- மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
- மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
- அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
- அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம்
- புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக்
- கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா
- றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே
- விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த
- வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச்
- சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி.
- விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
- விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
- வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
- மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
- தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- காணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
- கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
- மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
- மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
- பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
- பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
- ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
- எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- வளம்பெறுவின் அணுக்குள்ளேஒரு மதிஇரவி அழலாய்
- வயங்கியதா ரகையாய்இவ் வகைஅனைத்தும் தோற்றும்
- தளம்பெறுசிற் சொலிதபரா சத்திமயம் ஆகித்
- தனித்தசத்தி மான்ஆகித் தத்துவம்எல் லாம்போய்
- உளம்புகுத மணிமன்றில் திருநடம்செய் தருளும்
- ஒருதலைவன் சேவடிச்சிர் உரைப்பவர்எவ் வுலகில்
- அளந்தறியும் எனமறைகள் அரற்றும்எனில் சிறிய
- அடிச்சியுரைத் திடப்படுமோ அறியாய்என் தோழி.
- பரவியஐங் கருவினிலே பருவசத்தி வயத்தே
- பரைஅதிட்டித் திடநாத விந்துமயக் கத்தே
- விரவியதத் துவஅணுக்கள் ஒன்றோடொன் றாய்ஒன்றி
- விளங்கஅவற் றடிநடுவீ றிவற்றினில்மூ விதமாய்
- உரவியலுற் றுயிர்இயக்கி அறிவைஅறி வித்தே
- ஓங்குதிரு அம்பலத்தில் ஒளிநடனம் புரியும்
- தரவியலிற் றிதுஎனயார் தெரிந்துரைப்பார் சிறிய
- தமியள்உரைத் திடுந்தரமோ சாற்றாய்என் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும்
- வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி
- வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத
- வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
- அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
- உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
- உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
- மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
- மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
- இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
- இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
- பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம்
- பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே
- பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே
- பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்
- உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால்
- உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே
- தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம்
- தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
- சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
- இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
- கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
- நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
- மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
- தாயைமகிழ் அம்பலவன் தான்.
- தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
- தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
- நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
- வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
- மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
- தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
- தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
- தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
- இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
- துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
- அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்
- திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே.
- உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
- இலகஎ லாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
- கலகமி லாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
- திலகமெ னாநின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
- தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
- உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
- சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- கொல்லா நெறியது கோடா நிலையது கோபமிலார்
- சொல்லால் உவந்தது சுத்தசன் மார்க்கந் துணிந்ததுல
- கெல்லாம் அளிப்ப திறந்தால் எழுப்புவ தேதம்ஒன்றும்
- செல்லா வளத்தின துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
- தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
- யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
- ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
- ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
- ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
- அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
- என்றே எனக்குநினக் கும்.
- பூமி பொருந்து புரத்தே287 நமதுசிவ
- காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
- அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
- களித்தான் அவன்றான் களித்து.
- கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதா தென்னுட் கலந்துகொண்டு
- தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
- புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
- கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
- படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
- தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
- கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
- உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
- திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
- குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- சேட்டித் துலகச் சிறுநடையில் பல்கால் புகுந்து திரிந்துமயல்
- நீட்டித் தலைந்த மனத்தைஒரு நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக்
- கோட்டிக் கியன்ற குணங்களெலாம் கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
- காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
- வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
- கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
- காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
- தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
- ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
- காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
- வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
- அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
- கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
- வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
- நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
- கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா
- நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
- மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
- கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
- திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
- தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
- கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
- பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
- விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
- கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
- இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
- முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
- கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
- புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
- தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
- கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
- சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
- ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
- காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
- பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
- வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
- மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
- கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
- நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
- சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
- காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- நான்புனைந்த சொன்மாலை நன்மாலை என்றருளித்
- தான்புனைந்தான் ஞான சபைத்தலைவன் - தேன்புனைந்த
- சொல்லாள் சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
- நல்லான்தன் தாட்கே நயந்து.
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்.
- முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
- அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
- பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
- தாரா வரங்களெலாம் தந்து.
- பொன்னொப்ப தாம்ஒருநீ போற்றியசொன் மாலைஎன்றே
- என்னப்பன் என்சொல் இசைந்தணிந்தான் - தன்ஒப்பில்
- வல்லான் இசைந்ததுவே மாமாலை அற்புதம்ஈ
- தெல்லாம் திருவருட்சீ ரே.
- பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
- தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
- இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
- மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
- நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
- தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
- நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
- சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
- கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
- தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளும் பொருளும் யான்பெறவே அடுத்த தருணம் இதுஎன்றே
- தெருளும் படிநின் அருள்உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பொழிந்தேன்
- மருளும் மனந்தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால்
- இருளும் தொலைந்த தினிச்சிறிதும் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
- வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
- குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
- நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
- அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
- சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
- இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
- உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
- மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க்
- காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே
- மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர்
- பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
- நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
- ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
- இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
- பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
- பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
- கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
- குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
- பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
- நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
- சிவனே கதவைத் திற.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
- நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
- தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
- பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
- விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
- விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
- உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
- விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
- அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
- துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
- துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
- புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
- அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
- சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
- துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
- மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
- பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
- வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
- மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
- கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
- தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
- தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
- காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
- நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
- பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
- தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
- கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
- இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
- புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
- கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
- மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
- ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
- செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
- தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
- எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
- இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம்
- தன்னே ரிலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக்
- கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும்
- பொன்னேர் வடிவும் அளித்தென் னுயிரில் புணர்ந்தனனே.
- வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
- வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
- வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
- வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
- ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
- செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
- விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
- நிரந்தொன்றாய்330 நின்றான் நிலத்து.
- சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான
- நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக்
- கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம்
- விடவுளே நின்று விளங்கு.
- தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
- நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
- தாங்கினேன் சத்தியமாத் தான்.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
- நிலையிலே நுண்மைதனிலே
- நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
- நெகிழிலே தண்மைதனிலே
- ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
- ஒண்சுவையி லேதிரையிலே
- உற்றநீர்க் கீழிலே மேலிலே நடுவிலே
- உற்றியல் உறுத்தும்ஒளியே
- காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
- கருணைமழை பொழிமேகமே
- கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
- கண்ணோங்கும் ஒருதெய்வமே
- தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
- சுகசொருப மானதருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
- மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
- கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
- கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
- வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
- விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
- சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
- பவநெறி இதுவரை பரவிய திதனால்
- செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
- செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
- புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
- புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
- தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
- அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
- துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
- சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
- விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
- விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
- தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
- வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
- ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
- ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
- கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
- கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
- ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
- இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
- கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
- தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
- தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
- தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
- சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
- சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
- தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
- அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
- தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
- அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
- துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
- வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
- வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
- கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
- குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
- நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
- நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
- மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
- வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
- மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
- விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
- நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
- நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
- தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
- தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
- சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
- கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
- கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
- இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
- இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
- பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
- பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
- நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
- என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
- இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
- முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
- தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
- அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
- மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்
- வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
- நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
- நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
- ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
- ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
- மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
- மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
- காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
- கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
- கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
- வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
- முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
- மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
- மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
- வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
- என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
- தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
- சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
- பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
- பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
- என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
- சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
- ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
- அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
- நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
- நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
- வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
- மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
- நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
- நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
- வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
- வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
- புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
- புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
- உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
- கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
- களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
- சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
- செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
- தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
- திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
- மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
- வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
- எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
- எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
- நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
- ஒன்றாகி நின்றான் உவந்து.
- சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
- நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
- தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
- சந்தோட மாய்இருமின் சார்ந்து.
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
- அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
- இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
- துன்பமெலாம் போன தொலைந்து.
- அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி
- அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே
- மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்
- சாமா றிலைஎனக்குத் தான்.
- துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
- சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
- நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
- மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
- பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே
- சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்
- தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
- கொல்லா நெறிஅருளைக் கொண்டு.
- சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்
- வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்
- நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய
- தாயே அனையான் தனித்து.
- கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்
- சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்
- ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்
- மாகா தலனா மகிழ்ந்து.
- நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்
- ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற
- பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே
- நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.
- நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
- நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
- அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
- இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.
- எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண
- இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்
- சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே
- என்மார்க்கம் காண்பேன் இனி.
- சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
- நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்
- சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே
- உற்றிங் கறிந்தேன் உவந்து.
- வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
- தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
- மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
- இங்குநடஞ் செய்வான் இனி.
- இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
- நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
- சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
- நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
- தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
- நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
- ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்
- சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த
- காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்
- நீரத்தைச் சேர்வீர் நிஜம்.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
- சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
- வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
- வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
- பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
- பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
- கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
- கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
- உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
- உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
- எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
- என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
- தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
- சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
- கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
- கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
- திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
- ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
- உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
- வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
- மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
- சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
- தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
- உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
- கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
- கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
- சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
- தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
- இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
- என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
- ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
- சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
- பற்பலரும் சித்த சாமி
- உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
- தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
- வரனளிக்கப் புதைத்தநிலை காரோ
- கண்கெட்ட மாட்டி னீரே.
- புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
- கருங்கடலில் போக விட்டீர்
- கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
- சுடுகின்ற கொடுமை நோக்கிக்
- கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
- கலக்கம்எலாம் கடவுள்நீக்கித்
- தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
- புரிகுவதித் தருணம் தானே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
- வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
- நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
- மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
- என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
- மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
- தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
- தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
- தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
- முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
- பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
- வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
- சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
- மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
- சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
- மாயை நீக்கம்
- அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
- பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
- மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
- இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- மாணவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
- தாணவ நடஞ்செய் கின்ற தனிப்பெருந் தலைவ னேஎன்
- கோணவ மாயை எல்லாம் குலைந்தன வினைக ளோடே
- ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்த தன்றே.
- தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
- சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
- வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
- இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
- புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
- தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
- செல்வமே நான்பெற்ற சிறப்பே
- மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
- வாழ்வித்த என்பெரு வாழ்வே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
- புகன்றபோ தாந்த நாதாந்தம்
- தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
- தத்தினும் தித்திக்கும் தேனே
- மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
- மாபெருங் கருணையா ரமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- இணக்கறியீர் இதம்அறியீர் இருந்தநிலை அறியீர்
- இடம்அறியீர் தடம்அறியீர் இவ்வுடம்பை எடுத்த
- கணக்கறியீர் வழக்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கலக்கம்அற நடிக்கின்ற துலக்கம்அறி வீரோ
- பிணக்கறிவீர் புரட்டறிவீர்348 பிழைசெயவே அறிவீர்
- பேருணவைப் பெருவயிற்றுப் பிலத்தில்இட அறிவீர்
- மணக்கறியே பிணக்கறியே வறுப்பேபேர்ப் பொரிப்பே
- வடைக்குழம்பே சாறேஎன் றடைக்க அறிவீரே.
- உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
- ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
- கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
- வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
- வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
- குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
- குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
- மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடிஊண் வழங்கில் இங்கே
- உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் கவற்றைஎலாம் ஓகோ பேயின்
- விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
- இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர் என்னே என்னே.
- சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
- சிறியவர் சிந்தைமாத் திரமோ
- பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
- புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
- கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
- கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
- எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
- இனிப்பிலே புகுகின்ற திலையே.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
- நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
- வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
- வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
- காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
- களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
- ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
- எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
- அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
- மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
- தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
- கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
- போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
- தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
- கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
- தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
- பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
- தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
- கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
- கருணைமா மழைபொழி முகிலே
- விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
- மேவிய மெய்ம்மையே மன்றுள்
- எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
- இன்றுநீ ஏழையேன் மனத்துப்
- புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
- புகுந்தென துளங்கலந் தருளே.
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
- தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
- மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
- கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே.
- மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில்
- யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன்
- போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற
- சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே.
- கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
- றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
- அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
- துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற
- தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்
- காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
- நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- சிற்சபைக் கண்ணும் பொற்சபைக் கண்ணும்
- திருநடம் புரியும் திருநட ராஜ
- எனக்கருள் புரிந்த நினக்கடி யேன்கைம்
- மாற்றை அறிந்திலன் போற்றிநின் அருளே.
- உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
- இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என
- நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
- தானே எனக்குத் தனித்து.
- உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
- என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
- வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
- குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
- சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
- மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
- மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
- பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான்
- சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
- நித்திய மாகியே நிகழும் என்பது
- சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே.
- வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
- தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
- தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
- யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
- என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
- நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
- பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
- தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
- எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே
- எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான்
- எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
- எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே.
- நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
- தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
- வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
- கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
- கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
- கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
- துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
- விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
- கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே
- பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்
- விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
- தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
- ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
- சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
- இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- புல்லிய நெறிக்கே இழுத்தெனை அலைத்த
- பொய்ம்மன மாயையைக் கணத்தே
- மெல்லிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- வல்லிநின் அம்மை மகிழமன் றோங்கும்
- வள்ளலே மறைகள்ஆ கமங்கள்
- சொல்லிய பதியே மிகுதயா நிதியே
- தொண்டனேன் உயிர்க்குமெய்த் துணையே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
- என்உயிர்க் கமுதமே என்தன்
- அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
- அருள்நடம் புரியும்என் அரசே
- வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
- மடிந்தன விடிந்ததால் இரவும்
- துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
- சூழலில் துலங்குகின் றேனே.
- உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
- ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
- செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
- சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
- மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
- மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
- பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
- பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
- கலையனே எல்லாம் வல்லஓர் தலைமைக்
- கடவுளே என்இரு கண்ணே
- நிலையனே ஞான நீதிமன் றிடத்தே
- நிருத்தஞ்செய் கருணைமா நிதியே
- புலையனேன் பொருட்டுன் திருவடி அவனி
- பொருந்திய புதுமைஎன் புகல்வேன்
- சிலையைநேர் மனத்தேன் செய்தவம் பெரிதோ
- திருவருட் பெருந்திறல் பெரிதே.
- தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
- தனிமுதல் பேரருட் சோதிப்
- பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
- பராபர நிராமய நிமல
- உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
- உளத்ததி சயித்திட எனக்கே
- வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
- மாகடற் கெல்லைகண் டிலனே.
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
- வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
- வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
- இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
- இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
- என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
- எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
- ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்
- மாளாத ஆக்கை பெற்றேன்
- கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
- நடுவிருந்து குலாவு கின்றேன்
- பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை
- அன்பினொடும் பாடிப் பாடி
- நீடுகின்றேன் இன்பக்கூத் தாடுகின்றேன்
- எண்ணமெலாம் நிரம்பி னேனே.
- ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
- அருள்ஒளி தருகின்றாம்
- கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
- குறிக்கொள்வர் நினக்கேஎம்
- ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
- வாழ்கநீ மகனேஎன்
- றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
- இணைமலர்ப் பதம்போற்றி.
- நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
- நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
- வாய்க்கு வந்த படிபல பேசவே
- மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
- தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
- தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
- சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
- திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.
- தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
- தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
- பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
- புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
- என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
- இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
- நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
- நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.
- சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
- தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
- என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
- எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
- புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
- புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
- தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
- தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- நீதியில் கலந்து நிறைந்தது நானும்
- நித்தியன் ஆயினேன் உலகீர்
- சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
- சத்தியச் சுத்தசன் மார்க்க
- வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
- விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
- தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
- தொலைந்தன தொலைந்தன எனைவிட்
- டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
- இரிந்தன ஒழிந்தன முழுதும்
- ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
- அழிவுறா உடம்பும்மெய் இன்ப
- ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
- உண்மைஇவ் வாசகம் உணர்மின்.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
- ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
- சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
- சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே
- எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே
- சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே
- தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
- ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
- வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
- மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
- எனக்கும் உனக்கும்
- அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
- அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
- ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
- ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
- எனக்கும் உனக்கும்
- ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே
- அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே
- மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே
- வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே.
- எனக்கும் உனக்கும்
- உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே
- உயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே
- மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே
- மன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
- புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே.
- எனக்கும் உனக்கும்
- அருளும் பொருளும் பெற்றேன் அடிய னாகி நானு மே
- அஞ்சேன் மாயை வினைகட் கொருசிற் றளவ தேனு மே
- இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள்சிற் சோதி யே
- என்றன் அகத்தும் புறத்தும் விளங்கு கின்ற தாதி யே.
- எனக்கும் உனக்கும்
- தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
- சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
- ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
- எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
- ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே
- மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
- மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
- வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
- குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
- கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
- செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
- தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
- திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயி னேன்
- பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயி னேன்
- தழுவற் கரிய பெரிய துரியத் தம்பத் தேறி னேன்
- தனித்தப் பாலோர் தவள மாடத் திருந்து தேறி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
- அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
- எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
- எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
- துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
- துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
- ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
- இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
- எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
- கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
- களித்தென் தனையும் சன்மார்க் கத்தில் நாட்டும் துணைவ னே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
- சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
- சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
- சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
- அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
- அன்பனு மாயினீர் வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அம்பர மானசி தம்பர நாடகம்
- ஆடவல் லீர்இங்கு வாரீர்
- பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
- உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
- உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
- இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
- உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
- துண்டி விரும்பினேன் வாரீர்
- உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
- உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
- குற்றவர் மற்றிலை வாரீர்
- உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
- ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
- தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
- ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
- ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
- நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
- ஓடாது மாயையை நாடாது நன்னெறி
- ஊடா திருஎன்றீர் வாரீர்
- வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
- ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
- யூடத்தைக் காட்டினீர் வாரீர்
- வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
- ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
- செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
- ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
- இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
- எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
- இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
- இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
- இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
- வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
- அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
- அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
- புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
- பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
- எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
- என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
- கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
- குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
- நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
- நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
- சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
- கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
- கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
- சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
- சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
- என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
- கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
- உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
- உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
- தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
- எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
- நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
- விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
- வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
- எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
- இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
- திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
- துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
- சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
- அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்
- சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
- விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
- வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
- பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
- பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
- அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
- சூழலில் உண்டது சொல்லள வன்றே
- எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
- இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
- விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
- வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
- அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
- சோதி மலையில் துலங்கு மருந்து
- சித்துரு வான மருந்து - என்னைச்
- சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான
- ஆதி அனாதி மருந்து - திரு
- அம்பலத் தேநட மாடு மருந்து
- ஜோதி மயமா மருந்து - என்னைச்
- சோதியா தாண்ட துரிய மருந்து. ஞான
- என்குரு வான மருந்து - என்றும்
- என்தெய்வ மாகி இருக்கு மருந்து
- என்அன்னை யென்னு மருந்து - என்றும்
- என்தந்தை யாகிய இன்ப மருந்து. ஞான
- என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
- என்செல்வ மாகி இருக்கு மருந்து
- என்னுயிர் நட்பா மருந்து - எனக்
- கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. ஞான
- உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
- உயிருக் கனாதி உறவா மருந்து
- தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
- சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. ஞான
- மேலை வெளியா மருந்து - நான்
- வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
- சாலை விளக்கு மருந்து - சுத்த
- சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
- ஆணவம் தீர்க்கு மருந்து - பர
- மானந்தத் தாண்டவ மாடும் மருந்து
- மாணவ வண்ண மருந்து - என்னை
- வலிய அழைத்து வளர்க்கு மருந்து. ஞான
- வானடு வான மருந்து - என்னை
- மாமணி மேடைமேல் வைத்த மருந்து
- ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
- துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. ஞான
- ஆரணத் தோங்கு மருந்து - அருள்
- ஆகம மாகிஅண் ணிக்கு மருந்து
- காரணம் காட்டு மருந்து - எல்லாம்
- கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து. ஞான
- சிற்பர மாம்பரஞ் ஜோதி - அருட்
- சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி
- தற்பர தத்துவ ஜோதி - என்னைத்
- தானாக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி. சிவசிவ
- சின்மய மாம்பெருஞ் ஜோதி - அருட்
- செல்வ மளிக்கும் சிதம்பர ஜோதி
- தன்மய மாய்நிறை ஜோதி - என்னைத்
- தந்தமெய் ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
- மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
- வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
- துன்னிய வச்சிர ஜோதி - முத்து
- ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. சிவசிவ
- பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
- பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
- ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
- குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
- தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
- பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
- பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ
- மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
- வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
- இனமான உள்ளக ஜோதி - சற்றும்
- ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. சிவசிவ
- முக்குணமு மூன்றாம் ஜோதி - அவை
- முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
- எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
- எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. சிவசிவ
- தத்துவம் எல்லாமாம் ஜோதி - அந்தத்
- தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
- அத்துவி தப்பெருஞ் ஜோதி - எல்லாம்
- அருளில் விளங்க அமர்த்திய ஜோதி. சிவசிவ
- சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
- சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
- முத்தர் அனுபவ ஜோதி - பர
- முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. சிவசிவ
- பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
- பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
- வாரமுற் றோங்கிய ஜோதி - மன
- வாக்குக் கெட்டாததோர் மாமணி316 ஜோதி. சிவசிவ
- சிவமய மாம்சுத்த ஜோதி - சுத்த
- சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஜோதி
- உவமையில் லாப்பெருஞ் சோதி - என
- துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
- செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
- புத்தமு தாகிய ஜோதி - சுக
- பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ
- சுகமய மாகிய ஜோதி - எல்லா
- ஜோதியு மான சொரூபஉட் ஜோதி
- அகமிதந் தீர்த்தருள் ஜோதி - சச்சி
- தானந்த ஜோதி சதானந்த ஜோதி. சிவசிவ
- கண்ணிற் கலந்தருள் ஜோதி - உளக்
- கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஜோதி
- எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான்
- எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி. சிவசிவ
- தன்னிகர் இல்லதோர் ஜோதி - சுத்த
- சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி
- என்னுள் நிறைந்தமெய் ஜோதி - என்னை
- ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஜோதி. சிவசிவ
- அச்சம் தவிர்த்தமெய் ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளிய அம்பல ஜோதி
- இச்சை எலாம்தந்த ஜோதி - உயிர்க்
- கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஜோதி. சிவசிவ
- காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
- காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
- ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
- நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ
- ஏகாந்த மாகிய ஜோதி - என்னுள்
- என்றும் பிரியா திருக்கின்ற ஜோதி
- சாகாத வரந்தந்த ஜோதி - என்னைத்
- தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஜோதி. சிவசிவ
- சுத்த சிவமய ஜோதி - என்னை
- ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
- சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
- தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ
- 316. மாணிக்க - ச. மு. க. பதிப்பு.
- சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
- சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
- சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
- சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
- செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மெய்யொன்று சன்மார்க்க மேதான் - என்றும்
- விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீதான்
- செய்யென்று தந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
- பிரம வெளியினில் பேரரு ளாலே
- சித்தாடு கின்றது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
- சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
- திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே
- எல்லா உலகும் இயம்புதல் சும்மா
- செத்தாரை மீட்பது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வருவித்த வண்ணமும் நானே - இந்த
- மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
- தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாரிடம் வானிட மற்றும் - இடம்
- பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
- சேரிட மாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
- அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
- வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
- கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
- கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
- குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
- குதித்த314 மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
- வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
- விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
- என்ன புண்ணியம் செய்தே னோ.
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
- பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
- வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
- வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
- என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான்
- என்ன புண்ணியம் செய்தே னோ.
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
- இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
- அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
- அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
- இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
- இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
- பாடிய வேதங்கள் தேடிய பாதம்
- பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
- நாடிய மாதவர்294 நேடிய பாதம்
- நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய
- எச்சம யத்தும் இலங்கிய பாதம்
- எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
- ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய
- துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
- சுகமய மாகிய சுந்தரப் பாதம்
- பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
- பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
- தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
- தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
- ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
- உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
- ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
- ஆதி அனாதியும் ஆகிய பாதம்
- மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
- மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
- அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
- அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
- பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
- பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
- 294. மாதவன் - ஆ. பா. பாதிப்பு.
- 295. ஐயர் - ச. மு. க. பதிப்பு.
- தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும்
- சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்
- வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
- றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம்
- அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்
- வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
- அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
- ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
- அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
- ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
- என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
- சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
- சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
- நித்திய ஞான நிறையமு துண்டனன்
- நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
- வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
- வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
- தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
- சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
- வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
- வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
- செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
- சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
- சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
- சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
- மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
- மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
- வீதிஉண் டாச்சுத டி - அம்மா
- வீதிஉண் டாச்சுத டி. ஆணி
- வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
- மேடை இருந்தத டி - அம்மா
- மேடை இருந்தத டி. ஆணி
- மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
- கூடம் இருந்தத டி - அம்மா
- கூடம் இருந்தத டி. ஆணி
- கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
- மாடம் இருந்தத டி - அம்மா
- மாடம் இருந்தத டி. ஆணி
- ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
- என்னென்று சொல்வன டி - அம்மா
- என்னென்று சொல்வன டி. ஆணி
- ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
- சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
- சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
- பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
- பவளம தாச்சுத டி - அம்மா
- பவளம தாச்சுத டி. ஆணி
- மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
- மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
- மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி
- பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
- பேர்மணி ஆச்சுத டி - அம்மா
- பேர்மணி ஆச்சுத டி. ஆணி
- வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
- வெண்மணி ஆச்சுத டி - அம்மா
- வெண்மணி ஆச்சுத டி. ஆணி
- புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
- பொன்மணி ஆச்சுத டி - அம்மா
- பொன்மணி ஆச்சுத டி. ஆணி
- பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
- படிகம தாச்சுத டி - அம்மா
- படிகம தாச்சுத டி. ஆணி
- ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
- இசைந்தபொற் றம்பம டி - அம்மா
- இசைந்தபொற் றம்பம டி. ஆணி
- பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
- புதுமைஎன் சொல்வன டி - அம்மா
- புதுமைஎன் சொல்வன டி. ஆணி
- ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
- என்னள வல்லவ டி - அம்மா
- என்னள வல்லவ டி. ஆணி
- ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
- ஆகவந் தார்கள டி - அம்மா
- ஆகவந் தார்கள டி. ஆணி
- வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
- வல்லபம் பெற்றன டி - அம்மா
- வல்லபம் பெற்றன டி. ஆணி
- வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
- மணிமுடி கண்டேன டி - அம்மா
- மணிமுடி கண்டேன டி. ஆணி
- மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
- மற்றது கண்டேன டி - அம்மா
- மற்றது கண்டேன டி. ஆணி
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
- கூசாது சென்றன டி - அம்மா
- கூசாது சென்றன டி. ஆணி
- கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
- கோடிபல் கோடிய டி - அம்மா
- கோடிபல் கோடிய டி. ஆணி
- ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
- ஐவண்ணம் ஆகும டி - அம்மா
- ஐவண்ணம் ஆகும டி. ஆணி
- அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
- அப்பாலே சென்றன டி - அம்மா
- அப்பாலே சென்றன டி. ஆணி
- அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
- ஐவர் இருந்தார டி - அம்மா
- ஐவர் இருந்தார டி. ஆணி
- மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
- மணிவாயில் உற்றேன டி - அம்மா
- மணிவாயில் உற்றேன டி. ஆணி
- எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
- இருவர் இருந்தார டி - அம்மா
- இருவர் இருந்தார டி. ஆணி
- அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
- அன்பொடு கண்டேன டி - அம்மா
- அன்பொடு கண்டேன டி. ஆணி
- அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
- அம்மை இருந்தாள டி - அம்மா
- அம்மை இருந்தாள டி. ஆணி
- அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
- அமுதமும் உண்டேன டி - அம்மா
- அமுதமும் உண்டேன டி. ஆணி
- தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
- சந்நிதி கண்டேன டி - அம்மா
- சந்நிதி கண்டேன டி. ஆணி
- சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
- சாமி அறிவார டி - அம்மா
- சாமி அறிவார டி.
- ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
- அற்புதக் காட்சிய டி - அம்மா
- அற்புதக் காட்சிய டி.
- கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
- கனக சபையான்என்று ஊதூது சங்கே
- பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
- பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.
- சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
- நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
- நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
- பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
- பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
- சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
- சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
- ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
- ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
- தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
- தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
- நாமாவளி
- ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
- அற்புதத் தேனே மலைமா னே.
- அரிபிர மாதியர் தேடிய நாதா
- அரகர சிவசிவ ஆடிய பாதா.
- அம்பல வாசிவ மாதே வா
- வம்பல வாவிங்கு வாவா வா.
- ஆனந்த நாடகம் கண்டோ மே - பர
- மானந்த போனகம் கொண்டோ மே.
- சங்கர மும்சிவ மாதே வா
- எங்களை ஆட்கொள வாவா வா.
- அரகர சிவசிவ மாதே வா
- அருளமு தம்தர வாவா வா.
- நடனசி காமணி நவமணி யே
- திடனக மாமணி சிவமணி யே.
- நடராஜ மாணிக்கம் ஒன்றது வே
- நண்ணுதல் ஆணிப்பொன் மன்றது வே.
- நடராஜ பலமது நம்பல மே
- நடமாடு வதுதிரு அம்பல மே.
- தம்பத மாம்புகழ் பாடின னே
- தந்தன என்றுகூத் தாடின னே.
- இனித்துயர் படமாட்டேன் விட்டே னே
- என்குரு மேல்ஆணை இட்டே னே.
- இனிப்பாடு படமாட்டேன் விட்டே னே
- என்னப்பன் மேல்ஆணை இட்டே னே.
- சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்
- சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.
- சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
- திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
- இருட்பெரு மாயையை விண்டே னே
- எல்லாம்செய் சித்தியைக் கொண்டே னே.
- கருணா நிதியே குணநிதி யே
- கதிமா நிதியே கலாநிதி யே.
- தருணா பதியே சிவபதி யே
- தனிமா பதியே சபாபதி யே.
- கருணா நிதியே சபாபதி யே
- கதிமா நிதியே பசுபதி யே.
- கனக சபாபதி பசுபதி நவபதி
- அனக உமாபதி அதிபதி சிவபதி.
- பரமமந் திரசக ளாகன கரணா
- படனதந் திரநிக மாகம சரணா.
- ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
- தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே.
- நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
- நடராஜ நடராஜ நடராஜ நிதியே.
- நடுநாடி யொடுகூடி நடமாடும் உருவே
- நடராஜ நடராஜ நடராஜ குருவே.
- நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
- நடராஜ நடராஜ நடராஜ பலமே.
- 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
- 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
- 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- சிவஞான நிலையே சிவயோக நிறைவே
- சிவபோக உருவே சிவமான உணர்வே
- நவநீத மதியே நவநாத கதியே
- நடராஜ பதியே நடராஜ பதியே.
- வயமான வரமே வியமான பரமே
- மனமோன நிலையே கனஞான மலையே
- நயமான உரையே நடுவான வரையே
- நடராஜ துரையே நடராஜ துரையே.
- சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
- தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
- கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
- குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
- வேத சிகாமணியே போத சுகோதயமே
- மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
- நாத பராபரமே சூத பராவமுதே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- தூய சதாகதியே நேய சதாசிவமே
- சோம சிகாமணியே வாம உமாபதியே
- ஞாய பராகரமே காய புராதரமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே
- தீன சகாநிதியே சேகர மாநிதியே
- நாவல ரோர்பதியே நாரி உமாபதியே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
- எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
- இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
- மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
- மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
- பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
- பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
- நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
- நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
- பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
- பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
- வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
- வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
- கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
- ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
- இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
- பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
- பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
- பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
- பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
- தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
- இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
- இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
- மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
- மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
- தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
- தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
- மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
- குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
- குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
- தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
- சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
- அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
- அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
- ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
- தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
- திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
- இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
- என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
- மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
- மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
- இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
- நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
- நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
- என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
- செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
- சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.
- வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
- நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
- நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
- கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
- கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
- தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
- தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- தெய்வமர கதத்திரளோ செழுநீலப் பொருப்போ
- பம்புமணி ஒளியோநற் பசும்பொன்னின் சுடரோ
- படிகவண்ணப் பெருங்காட்சி தானோஎன் றுணர்ந்தே
- எம்பரமன் றெம்பெருமான் புறவண்ணம் யாதோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரமென் றென்னைஅன்று மணம்புரிந்தார் ஞான
- சபைத்தலைவர் அவர்வண்ணம் சாற்றுவதென் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
- சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
- பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
- பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
- இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
- ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
- என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
- காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
- கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
- தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
- தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
- மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
- வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
- பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
- மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
- விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
- கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
- களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
- மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
- மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
- ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
- அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
- மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
- மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
- மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
- விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
- கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும்
- கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன்
- ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள்
- அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன
- தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள்
- தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத்
- தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே
- திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
- இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
- அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
- ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
- இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
- இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
- தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
- தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல்
- எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார்
- தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம்
- தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய்
- பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல்
- பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து
- மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய
- மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே.
- இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
- எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
- எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
- எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
- கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
- கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
- செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
- சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- நாடுகின்ற பலகோடி அண்டபகி ரண்ட
- நாட்டார்கள் யாவரும்அந் நாட்டாண்மை வேண்டி
- நீடுகின்ற தேவர்என்றும் மூர்த்திகள்தாம் என்றும்
- நித்தியர்கள் என்றும்அங்கே நிலைத்ததெலாம் மன்றில்
- ஆடுகின்ற திருவடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்
- கானவகை சொல்மாலை அணிந்ததனால் அன்றோ
- பாடுகின்ற என்னுடைய பாட்டெல்லாம் பொன்னம்
- பலப்பாட்டே திருச்சிற்றம் பலப்பாட்டே தோழி.
- தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
- துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
- அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
- அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
- கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
- குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
- எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
- இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
- சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே
- ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
- அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
- ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
- உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
- சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
- சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
- தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
- தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
- கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
- கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
- செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
- சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
- இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
- இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
- 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
- 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
- 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
- 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
- மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
- ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
- ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.