- பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
- பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
- படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
- பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
- பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
- பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
- பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
- பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
- பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
- பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
- பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
- பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
- தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
- சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
- சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
- தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
- சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
- சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
- தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
- தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
- தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
- சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
- தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
- தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
- தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
- சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
- தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
- தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
- சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
- தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
- தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்
- மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
- மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
- மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
- வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
- வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
- வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
- மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
- மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்
- மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
- மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
- மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
- மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
- மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
- மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
- வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
- வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
- வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
- மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
- மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
- மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்
- எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
- ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
- ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்
- ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
- எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
- எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
- எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
- இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
- இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
- எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
- இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்
- என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
- என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
- எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
- எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
- எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
- ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
- எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
- ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.
- அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
- எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
- கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
- தொன்றதுநம் முள்ள முறைந்து.
- வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
- வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை
- காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
- வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய
- பாய்48க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ்
- சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச்
- காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
- கோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின்
- இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
- கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா
- வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
- கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும்
- சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
- தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே - ஓவில்
- மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
- கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன்
- என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
- இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு
- வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
- வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
- பொன்னுங்53 கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்தருளை
- மன்னு மழபாடி வச்சிரமே - துன்னுகின்ற
- வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
- கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு
- கோலந் துறை55 கொண்ட கோவையருள் கோவைமகிழ்
- ஆலந் துறை56யின் அணிமுத்தே - நீலங்கொள்
- பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச்
- சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே - மற்செய்
- அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
- கருகாவூர் இன்பக் கதியே - முருகார்ந்த
- சொல்லூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
- நல்லூ ரமர்ந்தநடு நாயகமே - மல்லார்ந்த
- சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
- சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே - பத்தியுற்றோர்
- முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
- பட்டீச் சரத்தெம் பராபரமே - துட்டமயல்
- வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
- வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற
- துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
- மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும்
- சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
- முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக்
- வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
- செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன்
- காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த
- ராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண்
- மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத
- சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் - தூத்தகைய
- இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி
- முக்கூடன் மேவியமர் முன்னவனே - தக்கநெடுந்
- தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
- பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
- ஈங்கும்பா தாளமுத லெவ்வுலகு மெஞ்ஞான்றுந்
- தாங்கும்பா தாளேச் சரத்தமர்ந்தோய் - ஓங்குபுத்தி
- மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
- வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
- முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
- சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள்
- எங்குமுசாத் தான மிருங்கழக மன்றமுதல்
- தங்குமுசாத் தானத் தனிமுதலே - பொங்குபவ
- போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
- ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
- வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
- துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன
- காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
- வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத்
- மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
- கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் - ஓதுகின்றோர்
- நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
- உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
- வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
- கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே
- பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
- பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில்
- தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
- எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன்
- வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
- பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய
- மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
- குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே - அன்றகத்தின்
- தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
- ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக்
- மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
- பேசுந் துறையூர்ப் பிறைசூடீ - நேசமுற
- பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
- ஏர்ப்பா75 திரிப்புலியூர் ஏந்தலே - சீர்ப்பொலியப்
- பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
- முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார்
- உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
- அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த
- மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
- கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும்
- ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
- ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
- காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
- மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்
- சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
- சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர்
- எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
- முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு
- வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
- நூற்காட் டுயர்வேத நுட்பமே - பாற்காட்டும்
- துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
- முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்
- அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
- தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும்
- பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
- யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல்
- சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
- தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
- எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்
- அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான
- வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
- திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
- ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
- விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண்
- நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய
- வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட
- செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது
- முக்குற்றந் தன்னை முறித்ததிலை - துக்கமிகுந்
- வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன்
- சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை - புன்னெறிசேர்
- கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
- என்று முகமலர்ச்சி யேற்றதிலை - நன்றுபெறு
- என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று
- முன்னொன்று மாக மொழிந்ததுண்டு - மன்னுகின்ற
- வாரமுரை யாது வழக்கி னிடையோர
- வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா
- தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
- நேயமுமில் லாதொதி82 போல் நின்றதுண்டு - தீயவினை
- வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
- ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான
- போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
- யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன்
- எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
- உற்றோ ரையுமுடன்விட் டோடுங்காண் - சற்றேனும்
- சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
- நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை
- ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
- மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன்
- தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங்
- கோப மதுநான் கொடுக்கிலுண்டு - ஆபத்தில்
- வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை
- மோசஞ் செயநான் முதற்பாதம் - பாசமுளோர்
- வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
- ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த
- வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும்
- மூடருக்குள் யானே முதல்வன்காண் - வீடடுத்த
- மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
- பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற
- பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த
- நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே - ஆயினுமுன்
- மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
- உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல்
- வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
- பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே - நாம்பெரியர்
- தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று
- தாயாய் முலைப்பாலுந் தந்தனையே - வாயிசைக்குப்
- பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை
- வேண்டி விறகெடுத்து விற்றனையே - ஆண்டொருநாள்
- வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
- தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர
- வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
- செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே - சொல்லகலின்
- அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
- அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன்
- ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
- ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன்
- நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப்
- பந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி
- உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
- கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென்
- ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
- நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே
- கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற்
- கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் - முன்செய்வினை
- ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
- தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி
- ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
- சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற்
- பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த்
- தாகமது கொண்டே தவிக்கின்றேன் - மோகமதில்
- வீற்று முலக விகாரப் பிரளயத்தில்
- தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் - ஆற்றவுநான்
- மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
- தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல்- சாலுலக
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
- பேர்சான்ற இன்பம் பெரிது.
- ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
- பேறு மிகத்தான் பெரிது.
- இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
- எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்
- உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
- இலகும் சிவமாய் இறையாய் - விலகும்
- நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
- சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்
- ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
- எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்
- முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
- எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்
- ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
- சார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்
- ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
- சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய
- ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
- பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்
- அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
- மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி
- தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
- வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
- சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்
- விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற
- அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
- செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே
- ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே
- சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற
- நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்
- சீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக்
- அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
- செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா
- ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
- சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்
- முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
- சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்
- தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்
- கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்
- சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்
- கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்
- மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
- காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற
- மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்
- சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்
- நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
- தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்
- முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
- தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்
- சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
- சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென
- கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
- ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று
- உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
- அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்
- தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
- மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
- முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
- தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்
- வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்
- ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர்
- அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
- கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்
- ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
- தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக
- சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த
- சம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில்
- முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
- முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு
- தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது
- மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில்
- சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
- மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்
- நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
- தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்
- எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
- திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற
- முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
- செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது
- எள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்னமுதம்
- அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்
- டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
- கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்
- கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
- ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா
- முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்
- அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்
- மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
- நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
- நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
- நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்
- தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
- நான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்
- இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்
- டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ
- ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
- நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென
- வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
- நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக
- ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை
- நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்
- பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்
- நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்
- விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
- கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
- ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
- சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி
- நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
- தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து
- நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
- நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற
- முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
- எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத்
- சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்
- தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்
- எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
- தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்
- தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
- மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்
- ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
- காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே
- சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
- பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்
- கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
- கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து
- பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
- உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்
- ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
- நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்
- மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
- புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி
- சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க
- வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்
- பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்
- போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்
- சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்
- புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்
- பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு
- ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர்
- பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
- ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ
- நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை
- யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்
- பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்
- அத்தோ93உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்
- இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
- செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்
- அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
- நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்
- வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
- ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
- நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா
- நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்
- வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்
- றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ
- போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய
- பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்
- கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்
- முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற
- ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை
- ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான
- வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
- வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
- முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்
- ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு
- அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
- எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே
- செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது
- துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்10
- சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு
- வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை
- மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
- புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 - திண்கட்டும்
- நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்
- சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்
- ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
- வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி
- முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
- துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்
- ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
- கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்
- கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்110கல்லணைத்துக்
- கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்
- மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து
- துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்
- மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
- மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை
- தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்
- தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர்
- ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது
- காத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்
- வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்
- காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச்
- வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
- நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ
- உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
- இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்
- இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்
- இட்டமதை விட்டற்113 கிசைந்திலையே - முட்டகற்றப்
- நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
- வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்
- என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்
- இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்
- மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்
- எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்
- பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
- கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்
- எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற
- கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத
- ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்
- பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்
- குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
- குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை
- தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
- மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்
- முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய
- எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்
- வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
- நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்
- நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு
- நாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன்
- மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
- கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்
- நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
- பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே
- பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
- காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து
- மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
- சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை
- இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்
- முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு
- துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
- நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற
- வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
- இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்
- ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்
- வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்
- நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
- இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்
- ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை
- வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண்
- இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
- முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்
- தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
- மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்
- கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
- பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்
- கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
- நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்
- வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
- கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
- கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
- கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க
- காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
- காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்
- போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்
- யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்
- தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்
- கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்
- மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
- ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல
- வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
- ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
- அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்
- பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த
- தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்
- அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்
- இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்
- சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்
- தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
- நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
- அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
- நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்
- தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
- தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்
- மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
- முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்
- தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
- மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க
- எல்லா நலமும் இதனால் எனமறைகள்
- எல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும்
- வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற
- மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்
- வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
- சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
- போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
- வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ
- வீழ்முகத்த ராகிநிதம் வெண் றணிந்தறியாப்
- பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்
- எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து
- கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று
- மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
- பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்
- கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
- புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்
- இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்
- அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே
- அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
- புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்
- தேனே அமுதே சிவமே சிவமேஎம்
- மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
- தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
- வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்
- நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
- மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்
- பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை
- நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை
- நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
- ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
- தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
- நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு
- தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
- வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய
- வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
- ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்
- மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்
- தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்
- சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
- தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்
- தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
- யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்
- கூறும் குறியும் குணமும் குலமுமடி
- ஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற
- தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
- செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்
- மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர
- மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்
- தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
- யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
- சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே
- சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
- தற்பரனே நின்தாள் சரண்.
- வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
- நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
- முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
- புதல்வாநின் தாளென் புகல்.
- இன்றோ பகலோ இரவோ வருநாளில்
- என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
- தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
- நாயனையேன் வாழ்கின்ற நாள்.
- தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
- சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
- நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
- வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
- ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
- தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
- அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
- அடியார்குற் றேவலடி யன்.
- எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
- சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
- சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
- எவருண் டெனைப்போல் இயம்பு.
- தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
- நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
- கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
- மூளாது பாழ்த்த முகம்.
- மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
- மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
- மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
- தலக்கூடல் தாழாத் தலை.
- வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
- பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
- நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
- ஆங்கவரோ டுண்ணு மது.
- கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
- ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
- பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
- வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
- நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
- மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
- வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
- ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
- பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
- நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
- வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
- முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
- என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
- ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
- இன்றும் ஒருமணஞ்செய் வேன்.
- எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
- பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
- நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
- அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
- கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
- என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
- நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
- என்பால் செயலொன் றிலை.
- தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
- வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
- வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
- ஏணிற் பிறப்பித்த தில்.
- அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
- இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
- பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
- மெய்யுடையேன் என்கோ விரைந்து.
- என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
- உன்னார் உயிர்க்குறுதி உண்டோதான் - பொன்னாகத்
- தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த138வர்க்குமற்றை
- யார்க்கும் புகலுன் அருள்.
- ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
- தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
- கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
- கெல்லா நலமுமுள தே.
- குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
- சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
- பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
- கைவிட்டால் என்செய்கேன் காண்.
- மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
- கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
- அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
- கண்டமங்கே நீலமுறாக் கால்.
- துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்
- சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
- காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
- காப்பாய் இஃதென் கருத்து.
- என்னமுதே முக்கண் இறையே நிறைஞான
- இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே
- காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கரு
- காதலுற்றுச் செய்தல் கடன்.
- ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
- பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
- நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
- என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
- எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
- குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
- அற்றமிலா தாள்கின் றவர்.
- கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
- அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
- கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
- இருகூ றளித்தேன் இடர்க்கு.
- 130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
- 131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன்என்பது இனிமை. தொ.வே.
- 132. வங்கணம் - நட்பு. தொ.வே.
- 133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
- 134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
- 135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
- 136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
- 137. வித்தம் - அறிவு. தொ.வே.
- 138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
- 139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
- கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
- துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
- தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
- கண்ணுடையோய் சிதையா ஞானப்
- பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
- மலர்வாயோய் பொய்ய னேன்றன்
- மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
- கசிந்துருக்கும் வடிவத் தோயே.
- உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
- உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
- கலகநிலை அறியாத காட்சி யாகிக்
- கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
- இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
- இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
- அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
- தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
- உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி
- யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
- கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்
- களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
- விலகலுறா நிபிடஆ னந்த மாகி
- மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
- இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்
- இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே.
- வித்தாகி முளையாகி விளைவ தாகி
- விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
- கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
- குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
- சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
- சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
- முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
- முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
- வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
- மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
- நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
- நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
- மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
- முதலாகி மனாதீத முத்தி யாகி
- வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
- மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
- தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
- துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
- சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
- சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
- ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
- உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
- ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
- எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
- இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி
- இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
- பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்
- பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
- வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி
- மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
- அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்
- அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
- புறமாகி அகமாகிப் புனித மாகி
- மன்னாகி மலையாகிக் கடலு மாகி
- மதியாகி ரவியாகி மற்று மாகி
- முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
- முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
- மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
- வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.
- வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
- வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
- தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
- சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
- பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
- பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
- நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
- நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.
- சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
- சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
- மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
- வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
- இகமாகிப் பதமாகிச் சமய கோடி
- எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
- பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
- பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.
- பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
- பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
- கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
- கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
- சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
- தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
- நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
- நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
- வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
- தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
- தாபரமே சங்கமமே சாற்று கின்ற
- ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
- துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
- தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
- தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
- விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
- வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
- கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
- கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
- தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
- தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
- பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
- பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
- மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா
- மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
- பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்
- புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
- ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்
- அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
- தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்
- சொரூபானந் தக்கடலே சோதித் தேவே.
- பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்
- புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
- வேதமே வேதத்தின் விளைவே வேத
- வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
- நாதமே நாதாந்த நடமே அந்த
- நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
- போதமே போதமெலாம் கடந்து நின்ற
- பூரணமே யோகியருள் பொலிந்த தேவே.
- ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
- நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
- காலமே காலமெலாம் கடந்த ஞானக்
- கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
- கோலமே குணமேஉட் குறியே கோலங்
- குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
- சீலமே மாலறியா மனத்திற் கண்ட
- செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.
- தத்துவமே தத்துவா தீத மேசிற்
- சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
- சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
- தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
- சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
- தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
- சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
- சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
- யோகமே யோகத்தின் பயனே யோகத்
- தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
- போகமே போகத்தின் பொலிவே போகம்
- புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
- யாகமே யாகத்தின் விளைவே யாகத்
- திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
- மோகமே மோகமெலாம் அழித்து வீறு
- மோனமே மோனத்தின் முளைத்த தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
- குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
- வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
- வானமுதே ஆனந்த மழையே மாயை
- வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
- வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
- தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
- செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்
- தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
- எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்
- இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
- பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்
- பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோடக்
- கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்
- கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே.
- அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
- அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
- நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
- நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
- தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
- தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
- மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
- வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே.
- பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்
- பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
- சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்
- சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
- ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்
- டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
- சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்
- செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே.
- உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
- உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
- கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
- கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
- விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
- வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
- தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
- சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
- கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று
- கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
- கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே
- காணாமற் காண்கின்ற காட்சியே உள்
- அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்
- அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
- உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்
- உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
- புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
- கங்குகரை காணாத கடலே எங்கும்
- கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
- தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
- தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
- செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
- செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்
- அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
- உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்
- உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
- எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ
- எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
- முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற
- முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே.
- தோன்றுபர சாக்கிரமும் கண்டோம் அந்தச்
- சொப்பனமும் கண்டோம்மேல் சுழுத்தி கண்டோம்
- ஆன்றபர துரியநிலை கண்டோம் அப்பால்
- அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்
- ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்
- இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
- சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற
- தன்மயமே சின்மயமே சகசத் தேவே.
- பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
- பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
- எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
- எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
- தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
- சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
- தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
- தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.
- மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல
- வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
- இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்
- கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
- கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ
- காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
- பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற
- பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
- ஆரமுதே என்னுறவே அரசே இந்த
- மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
- வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
- பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
- போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
- என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
- என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.
- மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்
- வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
- கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்
- கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
- பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்
- பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
- துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ
- இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை
- வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண
- முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த
- மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
- பின்கொடுசென் றலைத்திழுக்கு142 தந்தோ நாயேன்
- பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன்
- என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்
- என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே.
- அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்
- ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
- கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ
- குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
- கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்
- கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
- செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்
- திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே.
- எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
- என்னரசே என்குருவே இறையே இன்று
- மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
- மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
- தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
- தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
- அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
- அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.
- எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்
- ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
- செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்
- சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
- கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்
- கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
- வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்
- மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.
- பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப்
- பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக்
- கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு
- கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச
- மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ
- வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்
- என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே
- எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே.
- பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்
- புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
- நென்மலையோ நிதிமலையோ என்று தேடி
- நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
- மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று
- வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
- கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்
- கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ.
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட
- அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
- கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே
- கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ
- நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்
- நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
- ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்
- எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே.
- எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்
- எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
- நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி
- நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
- தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
- தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
- புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
- பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- 140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
- 141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
- 142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார்கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியேதெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலியபிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
- 143. உய்குவித்துஎன்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே
- 144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.
- என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
- இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
- மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
- பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே.
- பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண்
- ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால்
- பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச்
- செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே.
- வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
- என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
- நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
- டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
- கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
- பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
- வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
- துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே.
- வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள்
- காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும்
- பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
- நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே.
- நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
- தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
- ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
- கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே.
- என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
- பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
- துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
- முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.
- பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
- கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
- பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
- மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.
- சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
- பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
- தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
- போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
- துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
- குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
- இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
- கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
- ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
- வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
- வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.
- சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
- போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
- வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
- காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.
- நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
- கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
- தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
- பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.
- நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
- குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
- முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
- வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
- கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
- சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
- அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
- நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.
- பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்145முடித்த
- நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
- மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
- குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.
- நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
- திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
- விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
- இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.
- விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
- மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
- குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
- பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
- ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
- வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
- கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
- திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.
- முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
- அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
- கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
- என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.
- நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
- நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
- பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
- தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.
- வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
- சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
- முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
- மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.
- கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
- திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
- ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
- உருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.
- பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
- ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
- மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
- வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
- வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
- நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
- தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
- தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.
- மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
- உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
- அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
- கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே.
- எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
- முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
- வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
- உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
- வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
- பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
- சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
- தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
- விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப்
- படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட்
- கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய்
- புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே.
- பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
- கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
- மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
- குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.
- கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
- பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
- எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
- புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.
- அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
- தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
- பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
- இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.
- அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
- கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
- துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
- தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.
- போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப்
- பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா
- வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச்
- சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே.
- தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர்
- பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய்
- எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது
- வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே.
- சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
- மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
- கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
- பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.
- நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
- சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
- கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
- றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
- கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
- துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
- பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
- குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.
- வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
- தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
- சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
- இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.
- நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
- ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
- வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
- தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
- வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
- கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
- தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
- பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
- மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
- கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
- மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
- நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
- வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
- மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
- காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
- பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
- மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
- இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
- குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
- முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.
- முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
- பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
- நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
- பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
- நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
- கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
- சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
- ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
- நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
- பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
- தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
- இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.
- எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
- மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
- விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
- வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.
- கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
- நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
- கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
- கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.
- கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை
- எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்
- உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்
- நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே.
- அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
- சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
- இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
- எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.
- ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
- தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
- வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
- தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
- ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
- கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
- நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
- ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.
- அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோர்
- கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
- சொல்லுண்ட157 வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
- கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே.
- வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
- புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
- விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
- தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.
- அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர்
- கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம்
- இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத்
- தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே.
- கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
- பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
- புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
- ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
- சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
- தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
- நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.
- நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
- சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
- இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
- சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
- சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
- கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
- நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
- இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
- ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
- நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
- ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.
- பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
- கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
- மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
- தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே.
- கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை
- மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு
- நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர்
- சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே.
- தெண்ர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
- கண்ர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
- புண்ர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
- மண்ர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே.
- பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
- செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
- திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
- எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே.
- கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
- ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
- சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
- வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
- ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
- உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
- தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
- நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
- குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
- பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
- உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
- துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
- அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
- படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
- குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.
- ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
- பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
- மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
- திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.
- வேல்கொண்ட கையுமுந் நு‘ல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
- கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
- மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
- மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.
- விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
- கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
- தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
- மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
- தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருத்
- துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
- எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
- பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.
- பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
- திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
- கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
- மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.
- மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
- கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
- பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
- மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.
- தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
- அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
- உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
- சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.
- ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
- துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
- செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
- உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
- கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
- சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
- போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
- பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.
- சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
- வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
- புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
- மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
- சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
- காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
- பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
- போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
- இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்
- கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
- புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
- துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.
- நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
- புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
- கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
- முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.
- எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
- நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
- சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
- கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே.
- மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
- காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
- போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
- பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
- பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
- கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
- பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
- வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
- தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
- மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
- நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே.
- ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்
- நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி
- மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த
- ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே.
- தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
- சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
- பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
- ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.
- களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
- வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
- மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
- உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
- சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
- வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
- நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
- ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.
- பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
- திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
- கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
- நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே.
- என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
- என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
- என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
- என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
- கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
- மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
- வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
- தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
- மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
- வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
- புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
- மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
- துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
- கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
- பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
- என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
- முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
- தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
- மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே.
- கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
- நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
- நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
- பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.
- நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
- வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
- தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
- ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
- தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
- இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
- முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
- வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.
- மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
- நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
- செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
- தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.
- இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
- மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
- கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
- நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.
- அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
- அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
- அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
- அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.
- நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
- தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
- அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
- விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.
- மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
- கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
- வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
- பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.
- முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
- தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
- இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
- மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
- புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
- திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
- சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
- எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
- மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
- தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
- போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
- பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே.
- கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச்
- சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண்
- நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே
- அல்லென்று வெல்களங் கொண்டோய்என் செய்வ தறிந்திலனே.
- 145. ஓர்பிள்ளைப்பேர் - மதலை - சரக்கொன்றை. ச. மூ. க.
- 146. மயங்குகின்றேன், மயங்கின்றேன் என விகாரமாயிற்று. தொ. வே.
- 147. கொண்டிடேல் என முன்னிலை எதிர்மறை ஏவன்முற்றாகக் கொள்க. தொ. வே.
- 148. செல் - மேகம். தொ. வே.
- 149. உரும் - இடி. தொ. வே.
- 150. மாழை - பொன். தொ. வே.
- 151. பொன்கின்று பூத்த சடை - கொன்றை பூத்த சடை. தொ. வே.
- 152. கல் - மலை. தொ. வே.
- 153. வேணி - நதி. தொ. வே.
- 154. பாணிக்குமோ - தாமதிக்குமோ. ச. மு. க.
- 155. பாணி - கை, நீர். ச. மு. க.
- 156. கடா, தாம், பாயினும் - பாய்ந்தாலும் ; தாம்பு - கயிறு. ச. மு. க.
- 157. சொல் - நெல், தொ. வே.
- 158. கனல் - அக்கினி. இனன் - சூரியன். இந்து - சந்திரன். ச. மு. க.
- கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
- உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
- அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
- மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
- பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
- அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும்
- தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
- மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.
- திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
- தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
- பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
- மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
- போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
- பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
- மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
- சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின்
- வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
- தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
- மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.
- பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
- முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
- கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
- மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
- தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
- பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
- மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
- பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
- விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
- நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
- மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
- தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
- தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
- மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
- நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
- பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
- தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
- வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
- சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
- துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
- மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
- சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
- ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
- வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
- வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
- புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
- கரநோக்கி36 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
- தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
- வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
- துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
- என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
- மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
- றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
- காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
- வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
- முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
- எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
- செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
- மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
- வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
- ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார்இடத்தில் இலங்கும்உயர்
- மாற்றொளி ரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
- அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
- முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
- கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால்
- வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
- ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
- ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
- காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
- வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றும்
- எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
- கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச கத்தமர்ந்த
- மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
- விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
- வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
- குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
- மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
- எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
- இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
- மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
- அயிலேந்தும் பிள்ளைநற் றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
- கயிலேந்39 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
- குயிலே குயின்மென் குழற்பிடி யேமலைக் கோன்பயந்த
- மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
- சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
- பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
- மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
- மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
- சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
- தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
- வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
- அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
- முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
- வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
- குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும்அந்தத்
- திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத் தந்த
- மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
- தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
- வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
- ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
- மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
- திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
- விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
- வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
- சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
- அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
- நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
- வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள்
- தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
- சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற
- மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
- மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
- நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
- கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
- வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
- சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
- கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
- அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
- மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
- நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
- படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
- மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
- என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
- முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
- ம்ன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
- நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
- நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
- தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
- மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
- முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
- இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
- மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
- பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
- துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
- கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
- வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
- என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே
- மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
- மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
- நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
- தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
- ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
- வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
- திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
- கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
- வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
- திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
- மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
- னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
- லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் பிச்சைத் தேவ ரிவர்தமைநான்
- றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன்
- மட்டி னொருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி
- யெட்டி முலையைப் பிடிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா
- னின்றன் பொடுங்கை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
- னன்றன் புடையா யெண்கலத்தி னாங்கொண் டிடுவே மென்றுசொலி
- யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
- நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
- வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
- மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
- வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
- னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
- லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
- மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
- முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
- மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
- வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
- கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
- யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
- வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
- தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
- லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
- கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
- யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
- திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் தேவர் நீரெங் கிருந்ததென்றே
- னெமைக்கண் டளவின் மாதேநீ யிருந்த தெனயா மிருந்ததென்றா
- ரமைக்கு மொழியிங் கிதமென்றே னாமுன் மொழியிங் கிதமன்றோ
- விமைக்கு மிழையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சங்க மருவு மொற்றியுளீர் சடைமே லிருந்த தென்னென்றேன்
- மங்கை நினது முன்பருவ மருவு முதனீத் திருந்ததென்றார்
- கங்கை யிருந்த தேயென்றேன் கமலை யனையாய் கழுக்கடையு
- மெங்கை யிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துதிசே ரொற்றி வளர்தரும துரையே நீர்முன் னாடலுறும்
- பதியா தென்றே னம்பெயர்முற் பகரீ ரெழுத்தைப் பறித்ததென்றார்
- நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது நிகழ்த்து மென்றே னீயிட்ட
- தெதுவோ வதுகா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
- குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
- விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
- னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
- னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
- கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
- யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
- கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
- தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
- லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருகை முகத்தோர்க் கையரெனு மொற்றித் தேவ ரிவர்தமைநான்
- வருகை யுவந்தீ ரென்றனைநீர் மருவி யணைதல் வேண்டுமென்றேன்
- றருகை யுடனே யகங்காரந் தனையெம் மடியார் தமைமயக்கை
- யிருகை வளைசிந் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி மாணிக்க வண்ண ராகு மிவர்தமைநான்
- குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் கோலச் சடையீ ரழகிதென்றேன்
- களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் காண வோரைந் துனக்கழகீ
- திளஞ்சேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே
- னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா ருண்டோ நீண்டமலையென்றேன்
- வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென்
- றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார்
- செயலார் விரல்கண் முடக்கியடி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
- மயலா ருளத்தோ டென்னென்றேன் மறித்தோர் விரலா லென்னுடைய
- வியலார் வடிவிற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு
- கலந்திங் கிருந்த வண்டசத்தைக் காட்டி மூன்று விரனீட்டி
- நலந்தங் குறப்பின் னடுமுடக்கி நண்ணு மிந்த நகத்தொடுவா
- யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு
- நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
- நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே
- னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
- தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
- னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
- யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய புனித ரிவரூ ரொற்றியதா
- முன்னைத் தவத்தா லியாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து
- மின்னிற் பொலியுஞ் சடையீரென் வேண்டு மென்றே னுணச்செய்யா
- ளின்னச் சினங்கா ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
- செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
- வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
- மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
- மாலை யாதென் றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
- சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
- வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுடையீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் வயிரி யலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலையிடங்கொள் செல்வ னலகாண் டெளியென்றே
- யியல்கொண் முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன் னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே
- யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் திருமான் முதன்முத் தேவர்கட்கு
- மைகாணீரென் றேனிதன்மே லணங்கே நீயே ழடைதி யென்றார்
- மெய்கா ணதுதா னென்னென்றேன் விளங்குஞ் சுட்டுப் பெயரென்றே
- யெய்கா ணுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேரா ரொற்றி யீரும்பைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென்
- னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென்
- றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
- யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
- ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
- யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
- யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
- யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றே
- யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே
- னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது
- வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன்
- றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
- றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
- யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
- றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
- யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருடையீர் யார்க்கு முணர்வரியீ
- ரென்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றேன்யான்
- றுன்றும் விசும்பே காணென்றார் சூதா முமது சொல்லென்றே
- னின்றுன் முலைதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பற்று முடித்தோர் புகழொற்றிப் பதியீர் நுமது பசுவினிடைக்
- கற்று முடித்த தென்னிருகைக் கன்று முழுதுங் காணென்றேன்
- மற்று முடித்த மாலையொடுன் மருங்குற் கலையுங் கற்றுமுடிந்
- திற்று முடித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருமை யளவும் பொழிலொற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கமறப்
- பெருமை நடத்தி னீரென்றேன் பிள்ளை நடத்தி னானென்றார்
- தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்பா
- லிருமை விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா
- ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல்
- லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞால நிகழும் புகழொற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
- பால ரலவோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற்
- சால மயல்கொண் டிடவருமோர் தனிமைப் பால ரியாமென்றே
- யேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
- னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
- கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
- லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
- பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
- னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
- ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் காதலர்நீர்
- தனிமா னேந்தி யாமென்றேன் றடங்கண் மடந்தாய் நின்முகமும்
- பனிமா னேந்தி யாமென்றார் பரைமான் மருவி னீரென்றே
- னினிமான் மருவி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி
- வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன்
- விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
- யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
- ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
- வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
- றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே
- னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ
- பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
- வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
- மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
- பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
- லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
- யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
- வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
- யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆறு முகத்தார் தமையீன்ற வைந்து முகத்தா ரிவர்தமைநான்
- மாறு முகத்தார் போலொற்றி வைத்தீர் பதியை யென்னென்றே
- னாறு மலர்ப்பூங் குழனீயோ நாமோ வைத்த துன்மொழிமன்
- றேறு மொழியன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
- வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
- னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
- யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி
- வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
- கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
- மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் வியந்தீர் வியப்பென் னிவணென்றேன்
- கஞ்ச மிரண்டு நமையங்கே கண்டு குவிந்த விரிந்திங்கே
- வஞ்ச விருதா மரைமுகையை மறைக்கின் றனநின் பால்வியந்தா
- மெஞ்ச லறநா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விச்சைப் பெருமா னெனுமொற்றி விடங்கப் பெருமா னீர்முன்னம்
- பிச்சைப் பெருமா னின்றுமணப் பிள்ளைப் பெருமா னாமென்றே
- னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ணாகி யிடையி லையங்கொள்
- ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கோடா வொற்றி யுடையீர்நுங் குலந்தான் யாதோ கூறுமென்றேன்
- வீடார் பிரம குலந்தேவர் வேந்தர் குலநல் வினைவசியப்
- பாடார் குலமோர் சக்கரத்தான் பள்ளிக் குலமெல் லாமுடையே
- மேடார் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
- வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
- செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
- ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
- ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
- வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
- றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா ரூரில் வியப்பொன் றுண்டிரவிற்
- கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் குளத்தே குமுதங் குவிந்ததென்றேன்
- பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் புரத்தே மதியந் தேய்கின்ற
- தெற்றைத் தினத்து மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ ரென்ன சாதி யினரென்றேன்
- தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் சாதி நீபெண் சாதியென்றார்
- விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் வியப்பா மென்றே னயப்பானின்
- னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்னா ருயிர்க்குப் பெருந்துணையா மெங்கள் பெருமா னீரிருக்கு
- நன்னா டொற்றி யன்றோதா னவில வேண்டு மென்றுரைத்தேன்
- முன்னா ளொற்றி யெனினுமது மொழித லழகோ தாழ்தலுயர்
- விந்நா னிலத்துண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ
- ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப்
- பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத
- மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
- வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
- மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்
- திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
- முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
- முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
- யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊட்டுந் திருவா ழொற்றியுளீ ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
- தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
- தீட்டும் புகழன் றியுமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
- யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கருணைக் கடலே யென்னிரண்டு கண்ணே முக்கட் கரும்பேசெவ்
- வருணப் பொருப்பே வளரொற்றி வள்ளன் மணியே மகிழ்ந்தணையத்
- தருணப் பருவ மிஃதென்றேன் றவிரன் றெனக்காட் டியதுன்ற
- னிருணச் சளக மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
- நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
- வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
- வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கரும்பி லினியீ ரென்னிரண்டு கண்க ளனையீர் கறைமிடற்றீர்
- பெரும்பை யணியீர் திருவொற்றிப் பெரியீ ரெதுநும் பெயரென்றே
- னரும்பண் முலையாய் பிறர்கேட்க வறைந்தா லளிப்பீ ரெனச்சூழ்வ
- ரிரும்பொ னிலையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நிலையைத் தவறார் தொழுமொற்றி நிமலப் பெருமானீர்முன்ன
- மலையைச் சிலையாக் கொண்டீர்நும் மாவல் லபமற் புதமென்றேன்
- வலையத் தறியாச் சிறுவர்களு மலையைச் சிலையாக் கொள்வர்களீ
- திலையற் புதந்தா னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யோக முடையார் புகழொற்றி யூரிற் பரம யோகியராந்
- தாக முடையா ரிவர்தமக்குத் தண்ர் தரநின் றனையழைத்தேன்
- போக முடையாய் புறத்தண்ர் புரிந்து விரும்பா மகத்தண்
- ரீக மகிழ்வி னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
- ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
- முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
- றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அடையார் புரஞ்செற் றம்பலத்தே யாடு மழகீ ரெண்பதிற்றுக்
- கடையா முடலின் றலைகொண்டீர் கரமொன் றினிலற் புதமென்றே
- னுடையாத் தலைமேற் றலையாக வுன்கை யீரைஞ் ஞாறுகொண்ட
- திடையா வளைக்கே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற் கஞ்சுவல்யா
- னொன்றப் பெருங்கோ ளென்மீது முரைப்பா ருண்டென் றுணர்ந்தென்றேன்
- நன்றப் படியேற் கோளிலியா நகரு முடையே நங்காய்நீ
- யின்றச் சுறலென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
- முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
- றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
- யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
- விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
- அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
- இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
- அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
- மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
- ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
- தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
- ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
- தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
- இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
- பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
- உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
- புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
- என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
- தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
- ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
- மறலி வந்துனை வாஎன அழைக்கில்
- ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- போது வைகிய நான்முகன் மகவான்
- புணரி வைகிய பூமகள் கொழுநன்
- ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
- பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
- எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
- சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
- உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
- மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
- எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
- சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
- ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச்
- சுற்றி நின்றதில் சுகம்எது கண்டாய்
- போது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகி
- ஓது சண்முக சிவசிவ எனவே
- உன்னி நெக்குவிட் டுருகிநம் துயராம்
- ஆது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கரவு நெஞ்சினர் கடைத்தலைக் குழன்றாய்
- கலங்கி இன்னும்நீ கலுழ்ந்திடில் கடிதே
- இரவு போந்திடும் எழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகிப்
- பரவு சண்முக சிவசிவ சிவஓம்
- பரசு யம்புசங் கரசம்பு நமஓம்
- அரஎன் றேத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஈர்ந்த நெஞ்சினர் இடந்தனில் இருந்தே
- இடர்கொண் டாய்இனி இச்சிறு பொழுதும்
- பேர்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பிறங்கும் ஒற்றியம் பெருநகர்க் கேகி
- ஒர்ந்து சண்முக சரவண பவஓம்
- ஓம்சு யம்புசங் கரசம்பு எனவே
- ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக்
- காத்தி ருக்கலை கடுகிஇப் பொழுதும்
- இமைப்பில் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகி
- எமைப்பு ரந்தசண் முகசிவ சிவஓம்
- இறைவ சங்கர அரகர எனவே
- அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உறைந்து வஞ்சர்பால் குறையிரந் தவமே
- உழல்கின் றாய்இனி உரைக்கும்இப் பொழுதும்
- குறைந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- குலவும் ஒற்றியம் கோநகர்க் கேகி
- நிறைந்த சண்முக குருநம சிவஓம்
- நிமல சிற்பர அரகர எனவே
- அறைந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
- உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
- தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
- சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
- பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
- பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
- நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
- இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
- அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
- அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
- விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
- விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
- நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
- மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
- ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
- எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
- கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
- குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
- நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
- கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
- வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
- காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
- நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
- பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
- ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
- காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
- ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
- சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
- மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
- காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
- எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
- வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
- பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
- கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- தெய்வ நீறிடாச் சிறியரைக் கண்டால்
- சீறு பாம்புகண் டெனஒளித் தேக
- சைவ நீறிடும் தலைவரைக் கண்காள்
- சார்ந்து நின்றுநீர் தனிவிருந் துண்க
- செய்ப வன்செய லும்அவை உடனே
- செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
- உய்வ தேதரக் கூத்துகந் தாடும்
- ஒருவன் நம்முளம் உற்றிடற் பொருட்டே.
- தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
- சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
- தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
- தழுவி யேஅதை முழுவதும் கேட்க
- சேய நன்னெறி அணித்தது செவிகாள்
- சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
- ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- நல்ல நீறிடா நாய்களின் தேகம்
- நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
- வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
- வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
- சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
- சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
- அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
- அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
- தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
- சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
- இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
- இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
- மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
- வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
- முத்தி நீறிடார் முன்கையால் தொடினும்
- முள்ளு றுத்தல்போல் முனிவுடன் நடுங்க
- பத்தி நீறிடும் பத்தர்கள் காலால்
- பாய்ந்து தைக்கினும் பரிந்ததை மகிழ்க
- புத்தி ஈதுகாண் என்னுடை உடம்பே
- போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
- சத்தி வேற்கரத் தனயனை மகிழ்வோன்
- தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
- இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க்
- கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக
- இனிய நீறிடும் சிவனடி யவர்கள்
- எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக
- இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள்
- ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்
- கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன்
- இடங்கொண் டெம்முளே இசைகுதற் பொருட்டே.
- நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
- நரக இல்லிடை நடப்பதை ஒழிக
- ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
- உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
- கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
- குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
- ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
- அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
- நிலைகொள் நீறிடாப் புலையரை மறந்தும்
- நினைப்ப தென்பதை நெஞ்சமே ஒழிக
- கலைகொள் நீறிடும் கருத்தரை நாளும்
- கருதி நின்றுளே கனிந்துநெக் குருக
- மலைகொள் வில்லினான் மால்விடை உடையான்
- மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
- அலைகொள் நஞ்சமு தாக்கிய மிடற்றான்
- அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
- சேர நெஞ்சமே
- தூரம் அன்றுகாண்
- வாரம் வைத்தியேல்
- சாரும் முத்தியே.
- முத்தி வேண்டுமேல்
- பத்தி வேண்டுமால்
- சத்தி யம்இது
- புத்தி நெஞ்சமே.
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
- கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
- மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
- வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
- இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
- இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
- தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல்
- மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில்
- பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்
- பாவி யேன்அருள் பண்புற நினைவாய்
- மித்தை இன்றியே விளங்கிய அடியார்
- விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
- சித்தி வேண்டிய முனிவரர் பரவித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- முதல்இ லாமல்ஊ தியம்பெற விழையும்
- மூடன் என்னநின் மொய்கழல் பதமேத்
- துதல்இ லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருட் சுகம்பெறு வேனோ
- நுதலில் ஆர்அழல் கண்ணுடை யவனே
- நோக்கும் அன்பர்கள் தேக்கும்இன் அமுதே
- சிதல்இ லாவளம் ஓங்கிஎந் நாளும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
- காமம் உந்திய நாமநெஞ் சகத்தால்
- எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
- எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
- அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
- அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
- தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
- துட்டனேன் தூய்மைஒன் றில்லா
- எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
- பரமனேஎம் பசு பதியே
- அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
- ஐயனே ஒற்றியூர் அரைசே.
- கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
- கடையனேன் விடையமே உடையேன்
- இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
- தெய்வமே தெய்வநா யகமே
- உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
- ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- திருமுல்லைவாயில்
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
- கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
- மங்கல்இல் லாத வண்மையே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- எங்குவந் தாய்நீ யார்என வேனும்
- இயம்பிடா திருப்பதும் இயல்போ.
- நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
- நல்லவ னேதிருத் தில்லை
- மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
- புண்ணியம் விளைகின்ற புலமே
- மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
- பூங்கழற் கன்புபூண் டவன்காண்
- எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
- முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
- தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
- எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
- வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
- குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
- உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
- களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
- மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
- விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
- குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
- தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
- சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
- ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
- தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
- ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
- சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
- பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
- மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
- கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
- கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
- எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
- பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
- தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
- கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
- வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
- ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
- தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
- மாசி லாமணி யேமருந் தேசற்றும்
- கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
- பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.
- பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
- புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
- மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
- அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
- உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
- இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
- முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
- என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
- பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
- சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
- நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
- வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.
- தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம்
- மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெங் கரும்பே
- சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே.
- நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
- வீணன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே கடிமதில் ஒற்றியூர்க் கரசே
- பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த புண்ணியப் புனிதவா ரிதியே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
- வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
- அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.
- சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம் தொடக்கினில் பட்டுழன் றோயா
- இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான் எந்தநாள் அந்தநாள் உரையாய்
- படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணைஅம் பரமே
- குடர்கொளும் சூலப் படைஉடை யவனே கோதையோர் கூறுடையவனே.
- கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
- விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
- திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
- உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
- நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
- புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
- சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
- கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.
- போகம் கொண்ட புணர்முலை மாதொரு
- பாகம் கொண்ட படம்பக்க நாதரே
- மாகம் கொண்ட வளம்பொழில் ஒற்றியின்
- மோகம் கொண்டஎம் முன்நின் றருளிரோ.
- சீல மேவித் திகழ்அனல் கண்ஒன்று
- பால மேவும் படம்பக்க நாதரே
- ஞால மேவும் நவையைஅ கற்றமுன்
- ஆலம் உண்டவர் அல்லிர்கொல் ஐயரே.
- சுலவு காற்றனல் தூயமண் விண்புனல்
- பலவு மாகும்ப டம்பக்க நாதரே
- நிலவு தண்மதி நீள்முடி வைத்தநீர்
- குலவும் என்றன்கு றைதவிர்க் கீர்கொலோ.
- சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
- முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
- நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
- எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
- பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
- முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
- எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
- நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
- சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
- முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
- கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
- கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
- பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
- எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
- கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
- தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
- எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
- கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
- உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
- றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பித்தளைக்கும் காமப் பெரும்பேய் மயக்குமயல்
- வித்தனைத்தாம் ஆணவம்பொய் வீறும்அழுக் காறுசினம்
- கொத்தனைத்தாம் வஞ்சம் கொலைமுதலாம் பாவங்கள்
- இத்தனைக்கும் நான்காண் எழுத்தறியும் பெருமானே.
- ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
- அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
- சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
- இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- தம்ப லம்பெறும் தைய லார்கணால்
- வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
- அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
- செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
- மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
- ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
- பாலை சேர்படம் பக்க நாதர்தம்
- காலை நாடிநற் கதியின் நிற்பையே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- அம்ப லத்துள்நின் றாடவல் லானே
- ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
- சம்பு சங்கர சிவசிவ என்போர்
- தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
- தும்பை வன்னியம் சடைமுடி யவனே
- தூய னேபரஞ் சோதியே எங்கள்
- செம்பொ னேசெழும் பவளமா மலையே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
- மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
- கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
- களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
- நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
- நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
- எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அக்கநுதல் பிறைச்சடையாய் நின்தாள் ஏத்தேன்
- ஆண்பனைபோல் மிகநீண்டேன் அறிவொன் றில்லேன்
- மிக்கஒதி போல்பருத்தேன் கருங்க டாப்போல்
- வீண்கருமத் துழல்கின்றேன் விழல னேனைச்
- செக்கிடைவைத் துடல்குழம்பிச் சிதைய அந்தோ
- திருப்பிடினும் இருப்பறைமுட் சேரச் சேர்த்து
- எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- 15. கலித்துறை - தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு. எழுசீர்.ச.மு.க. ஆ.பா
- சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
- செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
- வந்து நின்னடிக் காட்செய என்றால்
- வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
- எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
- இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
- அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
- வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
- தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
- திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
- காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
- கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
- ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
- உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
- என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
- இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
- முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
- மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
- அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
- தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
- உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
- ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
- இன்ன தென்றறி யாமல இருளில்
- இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
- அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
- பாவை யார்மயல் படிந்துழைப் பதனால்
- சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
- செய்கை நின்னதே செப்பலென் சிவனே
- காவி நேர்விழி மலைமகள் காணக்
- கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்
- ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
- கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
- விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
- வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
- மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
- மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
- அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
- வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
- இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
- எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்
- உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
- றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
- அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
- உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
- வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
- கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
- கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
- தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
- காம ஐம்புலக் கள்வரை வீட்டி
- வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
- மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
- உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
- குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
- தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
- உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
- மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
- அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
- தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
- மூட வேடரை முதலற எறிந்து
- வாகை ஈகுவன் வருதிஎன் னுடனே
- வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
- போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
- போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
- சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பசிஎ டுக்குமுன் அமுதுசே கரிப்பார்
- பாரி னோர்கள்அப் பண்பறிந் திலையோ
- வசிஎ டுக்குமுன் பிறப்பதை மாற்றா
- மதியில் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- நிசிஎ டுக்கும்நல் சங்கவை ஈன்ற
- நித்தி லக்குவை நெறிப்பட ஓங்கிச்
- சசிஎ டுக்குநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- 16. எழுசீர்- தொ.வே.முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பு. எண்சீர்.ச.மு.க. ஆ.பா.
- ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
- அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
- வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
- வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
- வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
- வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
- செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
- எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
- நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
- நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
- வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
- வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
- திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
- பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
- தாதை நீஅவை எண்ணலை எளியேன்
- தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
- கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
- கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
- தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- புல்ல னேன்புவி நடையிடை அலையும்
- புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
- அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
- அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
- ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
- உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
- செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
- செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
- பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
- எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
- எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
- தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
- முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
- சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
- 30. வஞ்சி விருத்தம். தொ. வே. 1.ச.மு.க. கலி விருத்தம். தொ.வே. 2. ஆ.பா.
- கூடும் படிமுன் திருமாலும் கோல மாகிப் புவி இடந்து
- தேடும் திருத்தாள் சிவபெருமான் தியாகப் பெருமான் திருப்பவனி
- நாடும் புகழ்சேர் ஒற்றிநகர் நாடிப் புகுந்து கண்டேனால்
- ஈடும் அகன்றேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- உள்ளும் புறமும் நிறைந்தடியார் உள்ளம் மதுரித் தூறுகின்ற
- தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாகப் பெருமான் திருமுகத்தைக்
- கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில்போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே
- எள்ளல் இகந்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடுபொன்
- சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடியைக்
- கன்னின் றுருகா நெஞ்சுருகக் கண்டேன் கண்ட காட்சிதனை
- என்என் றுரைப்பேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக்
- கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த
- விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
- கண்மணியை நெஞ்சே கருது.
- நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன்
- தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும்
- தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம்
- பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.
- வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
- தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
- ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
- சென்றுதொழு கண்டாய் தினம்.
- போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
- ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
- கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
- கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
- பொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன்
- மெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்
- பையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ
- செய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
- வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
- கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
- தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
- அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
- நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
- சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
- கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
- பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
- செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
- சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
- பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
- தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- அறத்தாயை ஓர்புடை கொண்டோர் புடைமண் அளந்தமுகில்
- நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
- புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
- திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
- ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
- தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
- தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப்
- புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ
- கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள்
- மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே.
- நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர்
- திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன்
- அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப்
- புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.
- ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை
- அற்புதத் தேனைஎம் ஆதிப்பி ரானைத்
- தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச்
- செங்கண்வி டையனை எங்கண்ம ணியை
- மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை
- முத்தனை முத்தியின் வித்தனை முத்தை
- ஈனந்தக் காதெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- மாலயன் தேடியும் காணாம லையை
- வந்தனை செய்பவர் கண்டம ருந்தை
- ஆலம்அ முதின்அ ருந்தல்செய் தானை
- ஆதியை ஆதியோ டந்தமி லானைக்
- காலன்வ ருந்திவி ழவுதைத் தானைக்
- கருணைக்க டலைஎன் கண்ணனை யானை
- ஏலம ணிகுழ லாள்இடத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
- தூயனை யாவரும் சொல்லரி யானைப்
- பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
- பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
- மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
- வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
- எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
- அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
- வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
- வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
- துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
- சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
- என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
- வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
- கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
- கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
- உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
- உலகுடை யானைஎன் உற்றது ணையை
- எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- பெண்ணமர் பாகனைப் பேரரு ளோனைப்
- பெரியவர்க் கெல்லாம்பெ ரியவன் தன்னைக்
- கண்ணமர் நெற்றிக் கடவுள்பி ரானைக்
- கண்ணனை ஆண்டமுக் கண்ணனை எங்கள்
- பண்ணமர் பாடல்ப ரிசளித் தானைப்
- பார்முதல் அண்டம்ப டைத்தளிப் பானை
- எண்அம ராதஎ ழிலுடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
- வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
- களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
- கற்பனை முற்றும்க டந்துநின் றானை
- உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
- உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
- இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
- கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
- மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
- வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
- பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
- பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
- எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
- ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
- முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
- முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
- என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
- என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
- மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
- மற்று நாம்பிற வாவகை வருமே.
- பிறந்து முன்னர்இவ் வுலகினாம் பெண்டு
- பிள்ளை ஆதிய பெருந்தொடக் குழந்தே
- இறந்து வீழ்கதி இடைவிழுந் துழன்றே
- இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம்
- மறந்து விட்டனை நெஞ்சமே நீதான்
- மதியி லாய்அது மறந்திலன் எளியேன்
- துறந்து நாம்பெறும் சுகத்தினை அடையச்
- சொல்லும் வண்ணம்நீ தொடங்கிடில் நன்றே.
- நன்று செய்வதற் குடன்படு வாயேல்
- நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
- இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
- இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
- ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
- உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
- அன்று முன்னரே கடந்தனர் அன்றி
- அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.
- கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
- கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
- துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
- தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
- தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
- தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
- வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கஞ்சன் அங்கொரு விஞ்சனம் ஆகிக்
- காலில் போந்துமுன் காணரு முடியார்
- அஞ்ச னம்கொளும் நெடுங்கணாள் எங்கள்
- அம்மை காணநின் றாடிய பதத்தார்
- செஞ்சொன் மாதவர் புகழ்திரு வொற்றித்
- தேவர் காண்அவர் திருமுடிக் காட்ட
- மஞ்ச னங்கொடு வருதும்என் மொழியை
- மறாது நீஉடன் வருதிஎன் மனனே.
- விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து
- மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
- நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
- நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
- பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
- பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
- வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- 24. நிதன - உருகுகின்ற ச.மு.க.பற்றின் திறம் பகர்தல்
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கருமை யாம்அகங் காரமர்க் கடவா
- கடைய னேஉனைக் கலந்தத னாலே
- அருமை யாகநாம் பாடினோம் கல்வி
- அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
- இருமை இன்பமும் பெற்றனம் என்றே
- எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
- ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
- ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
- வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்
- கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
- தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
- பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
- கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
- சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
- மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
- நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
- யாவர் அறியார் திருஒற்றி யப்பா அடியேன் யாதறிவேன்
- மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
- காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.
- கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
- உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
- விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
- அடன்ஏர் விடையாய் திருஒற்றி யப்பா உனைநான் அயர்ந்திலனே.
- நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
- ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
- கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
- தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.
- அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
- சுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் உண் டாங்கொலோ அறியேன்
- கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
- உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- ஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்றதின்னும்
- நன்றுநின் தன்மை நான் அறிந் தேத்தல் நாயர சாளல்போல் அன்றோ
- சென்றுநின் றடியர் உள்ளகத் தூறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
- மன்றுள்நின் றாடும் மாணிக்க மலையே வளங்கொளும் ஒற்றியூர் மணியே.
- ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே
- மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப்
- பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன்அருள் செயாதிருப் பாயோ
- கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே.
- நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
- பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
- காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
- வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
- கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்
- வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
- பெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
- மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.
- அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
- பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
- இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
- மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
- புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
- எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
- தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
- தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
- துக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
- மிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்
- செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.
- துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
- பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
- இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
- கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.
- நாளை வருவ தறியேன்நான் நஞ்சம் அனைய நங்கையர்தம்
- ஆளை அழுத்தும் நீர்க்குழியில் அழுந்தி அழுந்தி எழுந்தலைந்தேன்
- கோளை அகற்றி நின்அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ
- வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.
- முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
- பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
- எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
- தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
- மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
- தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
- முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
- இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.
- என்னைக் கொடுத்தேன் பெண்பேய்கட் கின்பம் எனவே எனக்கவர்நோய்
- தன்னைக் கொடுத்தார் நான்அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லதுசெம்
- பொன்னைக் கொடுத்தும் பெறஅரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன்
- இன்னல் கொடுத்த பவமுடையேன் எற்றுக் கிவண்நிற் கின்றேனே.
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- ஒற்றியூர் அமரும் ஒளிகெழு மணியே உன்அடி உள்கிநின் றேத்தேன்
- முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
- சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
- பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே.
- அரியது நினது திருவருள் ஒன்றே அவ்வருள் அடைதலே எவைக்கும்
- பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம்கூட்டிச்
- சரிஎனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப்
- பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப் பெருமநின் அருளெனக் குண்டே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
- கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
- துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்துணைநினை அன்றி ஒன் றறியேன்
- தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே.
- அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
- தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
- உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
- மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
- நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
- உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
- முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
- இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
- துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
- உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
- தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
- கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்றவர்முன்
- அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
- உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ.
- தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
- சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
- உந்தைஎன்போர் இல்லாத ஒற்றியப்பா உன்அடிக்கீழ்
- முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.
- தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
- ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
- ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா நின்அடிக்கீழ்
- நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
- எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
- உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடியில் கொள்ளேனோ.
- மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
- புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
- ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்
- கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ.
- கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
- வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
- ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
- ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
- ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
- நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
- ஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்
- மாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய்
- வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ
- இன்மை யாளர்போல் வலியவந் திடினும்
- ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால்
- தன்மை அன்றது தருமமும் அன்றால்
- தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே
- பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
- கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்
- அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
- ஐய நீர்உம தருள்எனக் களிக்க
- இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
- ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ
- பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கொடிய நஞ்சமு தாக்கிய உமக்கிக்
- கொடிய னேனைஆட் கொள்ளுதல் அரிதோ
- அடியர் தம்பொருட் டடிபடு வீர்எம்
- ஐய நும்மடிக் காட்பட விரைந்தேன்
- நெடிய மால்அயன் காண்கில ரேனும்
- நின்று காண்குவல் என்றுளம் துணிந்தேன்
- பொடிய நீறணி வீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- நின்முனம் நீல கண்டம்என் றோதும் நெறிமறந் துணவுகொண் டந்தோ
- பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று
- மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே விரிகடல் தானைசூழ் உலகம்
- தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
- செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால்
- விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம்
- தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக் கடன்கழித் திட்டனன் அல்லால்
- அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
- சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே
- தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- அருமருந் தனையாய் நின்திரு முன்போந் தரகர எனத்தொழல் மறந்தே
- இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால்
- கருமருந் தனைய அஞ்செழுத் தோதும் கருத்தர்போல் திருத்தம தாகத்
- தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கண்நுதல் கரும்பே நின்முனம் நீல கண்டம்என் றோதுதல் மறந்தே
- உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல் உன்முனம் நின்றனன் அதனால்
- நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்தம்உள்ளத்
- தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- கற்றவர்க் கினிதாம் கதியருள் நீல கண்டம்என் றுன்திரு முன்னர்
- சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால்
- செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா தேவஓம் அரகர எனும்சொல்
- சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- முறைப்படி நினது முன்புநின் றேத்தி முன்னிய பின்னர்உண் ணாமல்
- சிறைப்படி வயிற்றில் பொறைப்பட ஒதிபோல் சென்றுநின் முன்னர்உற் றதனால்
- கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகுசீர்
- தறைப்படர்ந் தோங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
- ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்
- காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
- காள முண்டஅக் கருணையை உலகில்
- நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
- நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
- தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்
- முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்
- மருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
- வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.
- உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன்
- கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே
- விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ
- அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே.
- ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
- ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
- நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
- சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
- கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன்
- கோடி கோடியாம் குணப்பழு துடையேன்
- கடிய வஞ்சகக் கள்வனேன் தனக்குன்
- கருணை ஈந்திடா திருந்திடில் கடையேன்
- அடியன் ஆகுவ தெவ்வணம் என்றே
- ஐய ஐயநான் அலறிடு கின்றேன்
- ஒடிய மும்மலம் ஒருங்கறுத் தவர்சேர்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- காமம் என்பதோர் உருக்கொடிவ் வுலகில்
- கலங்கு கின்றஇக் கடையனேன் தனக்குச்
- சேமம் என்பதாம் நின்அருள் கிடையாச்
- சிறுமை யேஇன்னும் செறிந்திடு மானால்
- ஏம நெஞ்சினர் என்றனை நோக்கி
- ஏட நீகடை என்றிடில் அவர்முன்
- ஊமன் ஆகுவ தன்றிஎன் செய்வேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
- தஞ்சம்என் றடைந்தே நின்திருக் கோயில் சந்நிதி முன்னர்நிற் கின்றேன்
- எஞ்சலில் அடங்காப் பாவிஎன் றெனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே
- கஞ்சன்மால் புகழும் ஒற்றியங் கரும்பே கதிதரும் கருணையங் கடலே.
- முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
- என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயி‘க் குறுதிப்
- பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ
- கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே.
- சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் தந்தலை வாயிலுள் குரைக்கும்
- வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை
- அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் கடிமைசெய் தொழுகுவ னேயோ
- கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணையங்கடலே.
- எண்ணி லாநினைப் புற்றதின் வழியே
- இன்ப துன்பங்கள் எய்திஎன் நெஞ்சம்
- கண்ணி லாக்குரங் கெனஉழன் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- பெண்நி லாவிய பாகத்தெம் அமுதே
- பிரமன் ஆதியர் பேசரும் திறனே
- தெண்நி லாமுடி ஒற்றியங் கனியே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- இம்மை இன்பமே வீடெனக் கருதி
- ஈனர் இல்லிடை இடர்மிக உழந்தே
- கைம்மை நெஞ்சம்என் றனைவலிப் பதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மும்மை யாகிய தேவர்தம் தேவே
- முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே
- செம்மை மேனிஎம் ஒற்றியூர் அரசே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- புலைய மங்கையர் புணர்முலைக் குவட்டில்
- போந்து ருண்டெனைப் புலன்வழிப் படுத்திக்
- கலைய நின்றதிக் கல்லுறழ் மனந்தான்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- விலையி லாஉயர் மாணிக்க மணியே
- வேத உச்சியில் விளங்கொளி விளக்கே
- சிலைவி லாக்கொளும் ஒற்றிஎம் மருந்தே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன்
- உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர்
- செப்பி டாமுனம் தலையினால் நடந்து
- செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள்
- தப்பி டாததில் தப்பிருந் தென்னைத்
- தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன்
- துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- கூலி என்பதோர் அணுத்துணை யேனும்
- குறித்தி லேன்அது கொடுக்கினும் கொள்ளேன்
- மாலி னோடயன் முதலியர்க் கேவல்
- மறந்தும் செய்திடேன் மன்உயிர்ப் பயிர்க்கே
- ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண்
- அருளை வேண்டினேன் அடிமைகொள் கிற்பீர்
- சூலி ஓர்புடை மகிழ்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- புதியன் என்றெனைப் போக்குதி ரோநீர்
- பூரு வத்தினும் பொன்னடிக் கடிமைப்
- பதிய வைத்தனன் ஆயினும் அந்தப்
- பழங்க ணக்கினைப் பார்ப்பதில் என்னே
- முதியன் அல்லன்யான் எப்பணி விடையும்
- முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன்
- துதிய தோங்கிய ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக்
- குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
- புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
- போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
- பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
- பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
- தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப்
- பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும்
- இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல்
- இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர்
- செச்சை மேனியீர் திருவுளம் அறியேன்
- சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண்
- துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
- கமுது வேண்டிமா லக்கடல் கடைய
- ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
- உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
- சாலம் செய்வது தகைஅன்று தருமத்
- தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
- சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- முத்தி நேர்கிலாத் தேவர்கள் தமைநான்
- முந்து றேன்அவர் முற்பட வரினும்
- சுத்தி யாகிய சொல்லுடை அணுக்கத்
- தொண்டர் தம்முடன் சூழ்த்திடீர் எனினும்
- புத்தி சேர்புறத் தொண்டர்தம் முடனே
- பொருந்த வைக்கினும் போதும்மற் றதுவே
- துத்தி யார்பணி யீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
- வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
- எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
- இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
- தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
- தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
- நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
- வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
- கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
- கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
- மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
- மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
- நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கண்ணப்பா என்றருளும் காளத்தி யப்பாமுன்
- வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
- உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா வந்தருள
- எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
- மஞ்சுபடும் செஞ்சடில வள்ளலே உள்ளுகின்றோர்
- உஞ்சுபடும் வண்ணம்அருள் ஒற்றியூர் உத்தமனே
- நஞ்சுபடும் கண்டம்உடை நம்பரனே வன்துயரால்
- பஞ்சுபடும் பாடுபடும் பாவிமுகம் பாராயோ.
- கண்ணார் அமுதே கரும்பேஎன் கண்ணேஎன்
- அண்ணாஉன் பொன்னருள்தான் ஆர்ந்திடுமோ அல்லதென்றும்
- நண்ணாதோ யாது நணுகுமோ என்றுருகி
- எண்ணாதும் எண்ணும்இந்த எழைமுகம் பாராயோ.
- நாடியசீர் ஒற்றி நகர்உடையாய் நின்கோயில்
- நீடியநற் சந்நிதியில் நின்றுநின்று மால்அயனும்
- தேடிஅறி ஒண்ணாத் திருஉருவைக் கண்டுருகிப்
- பாடிஅழு தேங்கும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
- ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
- தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
- ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
- தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம்
- உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப்
- பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ.
- உட்டிகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே
- மட்டிலங்கும் உன்றன் மலரடியைப் போற்றாது
- தட்டிலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்துன் சந்நிதிக்கண்
- எட்டிநின்று பார்க்கும்இந்த ஏழைமுகம் பாராயோ.
- நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
- பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே
- மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே
- இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ.
- மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
- கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்ணுடையாய்
- சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட்
- பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்
- சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே
- நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும்
- பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
- ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
- கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
- விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
- மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
- நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
- பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்
- காசை வைத்தஎன் அறிவின்மை அளவைச்
- சொல்ல வோமுடி யாதெனை ஆளத்
- துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
- அல்ல வோஉம தியற்கைஆ யினும்நல்
- அருட்கணீர்எனை ஆளலும் தகுங்காண்
- மல்லல் ஓங்கிய ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
- நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
- ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
- பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
- காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
- பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
- நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
- மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
- மன்னவ னேகொன்றை மாலைய னேதிரு மாலயற்கு
- முன்னவ னேஅன்று நால்வர்க்கும் யோக முறைஅறந்தான்
- சொன்னவ னேசிவ னேஒற்றி மேவிய தூயவனே
- என்னவ னேஐயம் ஏற்பவ னேஎனை ஈன்றவனே.
- ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம்
- போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே
- ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற
- சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே.
- சின்மய னேஅனல் செங்கையில் ஏந்திய சேவகனே
- நன்மைய னேமறை நான்முகன் மாலுக்கு நாடரிதாம்
- தன்மைய னேசிவ சங்கர னேஎஞ் சதாசிவனே
- பொன்மய னேமுப் புராந்தக னேஒற்றிப் புண்ணியனே.
- எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
- ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
- வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
- விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
- இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
- எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
- அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- விஞ்சுடையாய் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- மெய்ப்புளகம் எழத்துதித்து விளங்கு கின்றார்
- நஞ்சுடையார் வஞ்சகர்தம் சார்பில் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நண்ணி மூட
- நெஞ்சுடையார் தமக்கெல்லாம் தலைமை பூண்டு
- நிற்கின்றேன் கருணைமுக நிமலக் கஞ்சம்
- அஞ்சுடையாய் ஆறுடைய சடையாய் வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- பொய்யாத நின்அடியார் எல்லாம் நல்ல
- புண்ணியமே செய்துநினைப் போற்று கின்றார்
- நையாநின் றுலைகின்ற மனத்தால் இங்கே
- நான்ஒருவன் பெரும்பாவி நாயேன் தீமை
- செய்யாநின் றுழைக்கின்றேன் சிறிதும் நின்னைச்
- சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன்
- ஐயாஎன் அப்பாஎன் அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
- வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
- தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
- செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
- சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
- சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
- ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
- மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
- அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
- தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
- எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
- களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
- ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
- அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
- எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
- தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
- கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
- வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.
- பாலே அமுதே பழமேசெம் பாகே எனும்நின் பதப்புகழை
- மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவ ரேமறைகள்
- நாலே அறியா தெனில்சிறியேன் நானோ அறிவேன் நாயகஎன்
- மேலே அருள்கூர்ந் தெனைநின்தாள் மேவு வோர்பால் சேர்த்தருளே.
- பொய்யோர் அணியா அணிந்துழலும் புலையேன் எனினும் புகல்இடந்தான்
- ஐயோ நினது பதம்அன்றி அறியேன் இதுநீ அறியாயோ
- கைஓர் அனல்வைத் தாடுகின்ற கருணா நிதியே கண்ணுதலே
- மெய்யோர் விரும்பும் அருமருந்தே வேத முடிவின் விழுப்பொருளே.
- இன்னே எளியேன் பொய்யுடையேன் எனினும் அடியன் அலவோநான்
- என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே
- அன்னே என்றன் அப்பாஎன் ஐயா என்றன் அரசேசெம்
- பொன்னே முக்கட் பொருளேநின் புணர்ப்பை அறியேன் புலையேனே.
- மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
- புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
- பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
- கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
- மருள்ஆர்ந்த வல்வினையால் வன்பிணியால் வன்துயரால்
- இருள்ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன்
- தெருள்ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமேநின்
- அருள்ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலனே.
- வல்லார் முலையார் மயல்உழந்த வஞ்சகனேன்
- பொல்லார் புரம்எரித்த புண்ணியனே பொய்மறுத்த
- நல்லார் தொழுந்தில்லை நாயகனே நன்றளித்த
- அல்லார் களத்தின் அழகுதனைக் கண்டிலனே.
- வன்னேர் முலையார் மயல்உழந்த வன்மனத்தேன்
- அன்னேஎன் அப்பாஎன் ஐயாஎன் ஆரமுதே
- மன்னே மணியே மலையாள் மகிழ்உனது
- பொன்னேர் இதழிப் புயங்காணப் பெற்றிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
- கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
- முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
- வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
- எந்தையே என்பவர்தம் இன்னமுதே என்உரிமைத்
- தந்தையே தாயே தமரேஎன் சற்குருவே
- சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயாஎன்
- நிந்தையே நீங்க நிழல்அளித்தால் ஆகாதோ.
- முத்திக்கு வித்தே முழுமணியே முத்தர்உளம்
- தித்திக்கும் தேனே சிவமே செழுஞ்சுடரே
- சத்திக்கும் நாதத் தலங்கடந்த தத்துவனே
- எத்திக்கும் இல்லேன் இளைப்பொழித்தால் ஆகாதோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை
- எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே
- உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற
- மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ.
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
- இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
- பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
- அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம்
- சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே
- வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே
- நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே.
- மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
- நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
- கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
- வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
- குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
- சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
- நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
- ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
- ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த
- அயன்முன் ஆகிய ஐவரை அளித்து
- நீக்கம் இன்றிஎவ் விடத்தினும் நிறைந்த
- நித்த நீஎனும் நிச்சயம் அதனைத்
- தாக்க எண்ணியே தாமதப் பாவி
- தலைப்பட் டான்அவன் தனைஅகற் றுதற்கே
- ஊக்கம் உற்றநின் திருவருள் வேண்டும்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கண்ணி லான்சுடர் காணிய விழைந்த
- கருத்தை ஒத்தஎன் கருத்தினை முடிப்பத்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன்
- பண்ணி லாவிய பாடலந் தொடைநின்
- பாத பங்கயம் பதிவுறப் புனைவோர்
- உண்ணி லாவிய ஆனந்தப் பெருக்கே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம்
- போக்கி நின்றதும் புலப்பகை வர்களால்
- இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல்
- ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில்
- தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத்
- தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும்
- எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
- அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
- புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
- போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
- உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
- உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
- இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- கண்ணி லான்சுடர் காணஉன் னுதல்போல்
- கருத்தி லேனும்நின் கருணையை விழைந்தேன்
- எண்ணி லாஇடை யூறடுத் ததனால்
- இளைக்கின் றேன்எனை ஏன்றுகொள் வதற்கென்
- உண்ணி லாவிய உயிர்க்குயிர் அனையாய்
- உன்னை ஒத்ததோர் முன்னவர் இலைகாண்
- தெண்ணி லாமுடிச் சிவபரம் பொருள்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
- விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
- நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
- நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
- இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
- திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
- செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மருள்அ ளித்தெனை மயக்கிஇவ் உலகில்
- வருத்து கின்றனை மற்றெனக் குன்றன்
- அருள்அ ளிக்கிலை ஆயினும் நினக்கே
- அடிமை யாக்கிலை ஆயினும் வேற்றுப்
- பொருள்அ ளிக்கிலை ஆயினும் ஒருநின்
- பொன்மு கத்தைஓர் போது கண் டிடவே
- தெருள்அ ளித்திடில் போதும் இங் குனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- மாறு கின்றனன் நெஞ்சகம் அஞ்சி
- வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல்
- கூறு கின்றதென் என்றயர் கின்றேன்
- குலவித் தேற்றும்அக் கொள்கையர் இன்றி
- ஏறு கின்றனன் இரக்கமுள் ளவன்நம்
- இறைவன் இன்றருள் ஈகுவன் என்றே
- தேறு கின்றனன் என்செய்கேன் நினது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- தாயி னும்பெருந் தயவுடை யவன்நந்
- தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன்
- நாயி னும்கடை யேன்படும் இடரை
- நாளும் கண்டனை நல்அருள் செய்யாய்
- ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும்
- அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம்
- தேயி னும்மிக நன்றெனக் கருள்உன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
- மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
- நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
- நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
- கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
- குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
- தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
- சுயம்பிர காசமே அமுதில்
- கறையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
- கடவுளே கண்ணுதற் கரும்பே
- குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
- கொடுந்துய ரால்அலைந் தையா
- முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
- மூடன்என் றிகழ்வது முறையோ.
- பொருள்எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே
- புத்தமு தேகுணப் பொருப்பே
- இருள்எலாம் அறுக்கும் பேரொளிப் பிழம்பே
- இன்பமே என்பெருந் துணையே
- அருள்எலாம் திரண்ட ஒருசிவ மூர்த்தி
- அண்ணலே நின்அடிக் கபயம்
- மருள்எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப
- மயக்கெலாம் மாற்றிஆண் டருளே.
- பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர்
- பெற்றதோர் பெருந்தனிப் பொருளே
- அருமையில் பிரமன் ஆதிய தேவர்
- அடைந்தநற் செல்வமே அமுதே
- இருமையிற் பயனும் நின்திரு அருளே
- என்றுநின் அடைக்கலம் ஆனேன்
- கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக்
- களைகளைந் தெனைவிளைத் தருளே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
- நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
- வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
- ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
- செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
- எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
- அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே.
- உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
- என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
- நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
- முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே.
- முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
- கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
- வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
- றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
- ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
- பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
- ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
- கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
- வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
- எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
- றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
- அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
- அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
- உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- கொடிய பாவியேன் படும்பரி தாபம்
- குறித்துக் கண்டும்என் குறைஅகற் றாது
- நெடிய காலமும் தாழ்த்தனை நினது
- நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்ததுண் டேயோ
- அடியர் தந்துயர் கண்டிடில் தரியார்
- ஐயர் என்பர்என் அளவஃ திலையோ
- ஒடிய மாதுயர் நீக்கிடாய் என்னில்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அடிய னேன்மிசை ஆண்டவ நினக்கோர்
- அன்பி ருந்ததென் றகங்கரித் திருந்தேன்
- கொடிய னேன்படும் இடர்முழு தறிந்தும்
- கூலி யாளனைப் போல்எனை நினைத்தே
- நெடிய இத்துணைப் போதும்ஓர் சிறிதும்
- நெஞ்சி ரங்கிலை சஞ்சலத் தறிவும்
- ஒடிய நின்றனன் என்செய்கேன் சிவனே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
- குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
- தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
- உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே.
- அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
- பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
- துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
- டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே.
- பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி
- ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும்
- கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்றுநல் லோர்கள்
- சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே.
- அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
- தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
- இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
- பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே.
- உலகுயிர் தொறும்நின் று‘ட்டுவித் தாட்டும் ஒருவனே உத்தம னேநின்
- இலகுமுக் கண்ணும் காளகண் டமும்மெய் இலங்குவெண்ணீற்றணி எழிலும்
- திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள் சேரிடப் பாலுங்கண் டடியேன்
- கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே.
- அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
- தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
- மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
- இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே
- தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே
- வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்
- தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
- சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
- ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
- வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
- சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
- தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
- உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
- நைவ தற்குந ணுகுவ நோய்களே.
- அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
- துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
- வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
- இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
- ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
- சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
- மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
- ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
- தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
- கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
- வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.
- வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
- தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
- மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
- ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
- பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
- உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
- அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
- என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
- தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
- சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
- கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
- தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே.
- கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
- வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
- வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
- ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
- உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
- மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
- தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
- பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
- செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
- அய்ய னேமுக்க ணாஇவ்அ டியனேற்
- குய்ய வேறுபு கல்இலை உண்மையே.
- கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
- வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
- உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
- கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.
- பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
- குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
- உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
- கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
- பிழைபொ றுப்பதுன் பேரருட் கேதகும்
- மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
- தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே.
- மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
- பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
- நாட வேறும னையிடை நண்ணிநான்
- வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.
- பாவம் எனும்ஓர் பெருஞ்சரக்குப் பையை எடுத்துப் பண்பறியாக்
- கோவம் எனும்ஓர் குரங்காட்டும் கொடியேன் தன்னைப் பொருட்படுத்தித்
- தேவர் அமுதே சிவனேநின் திருத்தாள் ஏத்த ஒற்றிஎனும்
- காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- புண்ணும் வழும்பும் புலால்நீரும் புழுவும் பொதிந்த பொதிபோல
- நண்ணுங் கொடிய நடைமனையை நான்என் றுளறும் நாயேனை
- உண்ணும் அமுதே நீஅமர்ந்த ஒற்றி யூர்கண் டென்மனமும்
- கண்ணுங் களிக்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக்
- குடிகொண்ட சேரிநடுவில்
- குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு
- குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
- நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள்
- நீர்கொண்டு வாடல்எனவே
- நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான்
- நெறிகொண்ட குறிதவறியே
- போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப்
- புரைகொண்ட மறவர்குடியாம்
- பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில்
- போந்துநின் றவர்அலைக்கக்
- கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில்
- கலங்கினேன் அருள்புரிகுவாய்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
- வாழ்விக்க வேண்டுவல் போற்றி
- அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
- கருளமு தருளுக போற்றி
- பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
- பாடுதல் வேண்டும்நான் போற்றி
- தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
- தாங்குக போற்றிநின் பதமே.
- நின்பதம் பாடல் வேண்டும்நான் போற்றி
- நீறுபூத் தொளிர்குளிர் நெருப்பே
- நின்புகழ் கேட்டல் வேண்டும்நான் போற்றி
- நெற்றியங் கண்கொளும் நிறைவே
- நின்வச மாதல் வேண்டும்நான் போற்றி
- நெடியமால் புகழ்தனி நிலையே
- நின்பணி புரிதல் வேண்டும்நான் போற்றி
- நெடுஞ்சடை முடித்தயா நிதியே.
- நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
- நெறிதரு நிமலமே போற்றி
- மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
- வாழ்வித்த வள்ளலே போற்றி
- விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
- வியன்நெறி விளக்கமே போற்றி
- பதிபசு பதியே போற்றி நின்பாதம்
- பாடஎற் கருளுக போற்றி.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- துணைமுலை மடந்தை எம்பெரு மாட்டி
- துணைவநின் துணையடி போற்றி
- புணைஎன இடரின் கடலினின் றேற்றும்
- புனிதநின் பொன்னடி போற்றி
- இணையில்பே ரின்ப அமுதருள் கருணை
- இறைவநின் இணையடி போற்றி
- கணைஎனக் கண்ணன் தனைக்கொளும் ஒருமுக்
- கண்ணநின் கழலடி போற்றி.
- மணியார் கண்டத் தெண்டோள்செவ் வண்ணப் பவள மாமலையே
- அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
- தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
- திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே.
- இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
- பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
- திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
- விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
- வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
- முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
- என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
- கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
- செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
- பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே.
- நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
- வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
- தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
- முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே.
- செறியாத நெஞ்சக வஞ்சக னேன்இச் சிறுதலத்தே
- அறியா தறிந்தவன் போற்சில செய்திடல் ஐயநின்தாள்
- குறியா தரித்தல தாணைமற் றில்லைஎங் கொற்றவனே
- முறியா தருள்செய்தி யோதெரி யேன்எந்தை முன்னியதே.
- மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
- எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
- புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
- கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே.
- தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
- வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
- ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
- வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
- தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
- பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
- தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
- அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
- கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
- ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
- எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன்நான்
- சேட்டியா விடினும்எனைச் சேட்டித் தீர்க்கும்
- சிறுமனத்தால் செய்பிழையைத் தேர்தி யாயில்
- நாட்டில்ஆர் காக்கவல்லார் என்னை எந்தாய்
- நாள்கழியா வண்ணம்இனி நல்கல்வேண்டும்.
- என்னைஅறியாப்பருவத் தாண்டுகொண்ட
- என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
- தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
- தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
- உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன் என்னை
- உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
- முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
- முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தென்னே.
- நிலைஅறியேன் நிலைஅறிந்து பெற்ற நல்லோர்
- நெறிஅறியேன் எனினும்உன்றன் நேச மன்றி
- இலைஅறியேன் மற்றவரைக் கனவி லேனும்
- எட்டுணைஓர் துணைஎனவும் எண்ணு றேன்நல்
- கலைஅறியேன் கருத்திலிருந் தறிவித் தாய்நான்
- கண்டறிந்தேன் எனினும்அவை காட்ட வேண்டும்
- அலைஅறியா அருட்கடலே அமுதே தேனே
- அம்பலத்தென் குருவேநான் அடிமை ஆளே.
- நீரார் சடையது நீண்மால் விடையது நேர்கொள்கொன்றைத்
- தாரார் முடியது சீரார் அடியது தாழ்வகற்றும்
- பேரா யிரத்தது பேரா வரத்தது பேருலகம
- ஒரா வளத்ததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால்
- கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும்
- தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால்
- ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பேதப் படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும்
- சேதப் படாதது நன்றிது தீதெனச் செய்கைகளால்
- ஏதப் படாததுள் எட்டப் படாததிங் கியாவர்கட்கும்
- ஓதப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- தண்ணார் அளியது விண்ணேர் ஒளியது சாற்றுமறைப்
- பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர்தீக்
- கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டுகொள்ள
- ஒண்ணா நிலையதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
- இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
- மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
- உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
- முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
- கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
- பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே.
- என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
- முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
- பொன்னேர் அணிஅம் பலத்தா டியபுண்ணி யாஎன்
- அன்னே அரசே அமுதே அருள்ஆண்ட வனே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
- தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
- முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த
- நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே.
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
- வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
- கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
- நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.
- ஆசிரியத் துறை
- 19. சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்தபாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது. தொ.வே 1,2, ச.மு.கபதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை. ஆ.பா.பதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது.
- 20. அறுசீர். தொ.வே 1,2. எண்சீர். ச.மு.க. ஆ. பா. 21. எழுசீர். தொ.வே. 1,2 அறுசீர். ச.மு.க. ஆ.பா. 22. ஆசிரியத் தாழிசை. தொ.வே. 1,2. ச.மு.க.
- சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
- பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
- வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
- காய்நின்று சந்துரைத்த தார்.
- ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
- பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
- வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
- தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
- என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான்
- சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத்
- துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால்
- அன்பர்க் கருள்வோய் அருள்.
- பகுதி தகுதி விகுதிஎனும் பாட்டில்
- இகலில் இடையை இரட்டித் - தகவின்
- அருச்சித்தால் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
- திருச்சிற் சபையானைத் தேர்ந்து.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
- திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
- செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
- மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
- எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
- செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
- தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
- கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
- கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
- அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
- அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
- படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
- தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
- ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
- அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
- ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
- என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
- சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
- தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
- அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
- அருண்மருந் தொளிர்குணக் குன்றே
- அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
- அருட்கிர ணங்கொளும் சுடரே
- அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
- அருட்சுவை கனிந்தசெம் பாகே
- அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
- அருண்மய மாம்பர சிவமே.
- நீர்பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறைமதியின்
- சீர்பூத் தமுத இளநகை பூத்த திருமுகமும்
- பார்பூத்த பச்சைப் பசுங்கொடி பூத்தசெம் பாகமும்ஓர்
- கார்பூத்த கண்டமும் கண்பூத்த காலும்என் கண்விருந்தே.
- ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
- சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
- நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
- தாய்இரங் காள்என்ப துண்டோதன் பிள்ளை தளர்ச்சிகண்டே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
- நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
- பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
- ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
- மறைமுடி விளக்கே போற்றி மாணிக்க மலையே போற்றி
- கறைமணி கண்ட போற்றி கண்ணுதற் கரும்பே போற்றி
- பிறைமுடிச் சடைகொண் டோங்கும் பேரருட் குன்றே போற்றி
- சிறைதவிர்த் தெனையாட் கொண்ட சிவசிவ போற்றி போற்றி.
- எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
- இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
- விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
- விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
- பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
- பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
- கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
- கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
- மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
- விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
- பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
- புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
- தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
- சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
- என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
- இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே.
- கள்உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும் நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
- முள்உருகும் வலியபராய் முருடுருகும் உருகாத முறைசேர் கல்லும்
- வள்உருகும் மலைஉருகும் மண்உருகும் மரம்உருகும் மதியி லேன்றன்
- உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான் ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
- மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
- பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
- மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
- என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
- உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
- நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
- வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
- தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே.
- கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற
- அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன் அம்பலத்தில் ஆடு கின்ற
- எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே ஏழையினே னிடத்து நீயும்
- வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன் என்செய்வேன் மதியி லேனே.
- அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
- படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முகம் பார்த்திரங்காய்
- திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
- தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே.
- பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
- பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
- கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
- எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
- இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
- மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
- என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
- தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
- தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
- ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
- நேசனும்நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
- ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
- தேசுறுசீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
- ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.
- ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
- ஆற்றால் வருந்தும் வருத்தம்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
- ஆற்றா திருத்தல்நின் பேரருள் ஆற்றுக் கழகுகொலோ
- ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர்எனை ஆற்றுவரே.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
- அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
- பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
- இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ.
- மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
- நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
- பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
- கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே.
- ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
- மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
- மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
- பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே.
- நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
- பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
- சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
- ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே.
- ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள் நீர்என தாண்டவர் ஆகில்
- பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்புன்கணும்தவிர்த் தருளுதல்வேண்டும்
- தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச் சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
- மெய்ய ரேமிகு துய்யரே தரும விடைய ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.
- வேறு
- தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
- ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
- பாயும் மால்விடை ஏறும் பரமனே
- நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
- வேறு
- ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
- அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
- பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
- விழியாய் விழியாய் வினைதூள் படவே.
- வெண்துறை
- என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்
- முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்
- நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
- பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப் பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.
- சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால் உருத்திரன்அத் திரளோர் சற்றும்
- காணாத காட்சியைநான் கண்டேன்சிற் றம்பலத்தின் கண்ணே பன்னாள்
- ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என் புரிந்தேனோ அறிகி லேன்முன்
- பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப் பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
- இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
- அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
- தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
- பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
- பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித் திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
- மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர் சுடர்என்கோ வினையனேன்யான்
- என்என்கோ என்என்கோ எம்பெருமான் திருமேனி இருந்த வண்ணம்
- முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித் திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி.
- வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய் மறத்தொழிலே வலிக்கும்பாவி
- நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக் கொடியேனை நீச னேனை
- அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட அருட்கடலை அமுதைத்தெய்வக்
- கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப் பொதுவினில்யான் கண்டுய்ந் தேனே.
- கந்த நாண்மலர்க் கழலிணை உளத்துறக் கருதுகின் றவர்க்கெல்லாம்
- பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை பரம்பரை யுடன்ஆடும்
- அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர் அவர்எவர் எனில்இங்கே
- இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க் கிதம்செயும் அவர்அன்றே.
- தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
- துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
- ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
- டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
- தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
- தயவு தான்நினக் கில்லை உயிரையும்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
- இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த சொக்கேஈ தென்ன ஞாயம்
- அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க மாட்டாமல் அடிபட் டையோ
- பிறகெடுத்தீர் வளையல்விற்றீர் சொற்கேளாப்பிள்ளைகளைப் பெற்றதோஷம்
- விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான் யாவரையும் விடாது தானே.
- கலி விருத்தம்
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- 184. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகமொன்றின் தொடக்கத்தில்பெருமான் இப்பாடலை எழுதியருளியுள்ளார்.
- மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக் கில்லைஎன்றார் மேலோர் நானும்
- பொய்விளக்கே விளக்கெனஉட் பொங்கிவழி கின்றேன்ஓர் புதுமை அன்றே
- செய்விளக்கும் புகழுடைய சென்னநகர் நண்பர்களே செப்பக் கேளீர்
- நெய்விளக்கே போன்றொருதண்ணீர்விளக்கும் எரிந்ததுசந் நிதியின் முன்னே.
- 185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ரால் விளக்கெரிந்த அற்புதத்தைக்குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும்காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப்பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப்பதிப்பித்துள்ளார்.
- ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
- அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
- நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
- நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
- வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
- விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
- தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
- தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
- உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
- றுலவு கின்றபே ருலகம் என்பதும்
- கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
- கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
- இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
- இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
- திலகம் என்றநங் குருசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
- மனம டங்குசிற் கனந டந்தரும்
- உரமு றும்பதம் பெறவ ழங்குபே
- ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
- பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
- பரம மாகியே பரவு மாமறைச்
- சிரமு றும்பரம் பரசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- நித்தி யம்பரா பரநி ராதரம்
- நிர்க்கு ணஞ்சதா நிலய நிட்களம்
- சத்தி யம்கனா கனமி குந்ததோர்
- தற்ப ரம்சிவம் சமர சத்துவம்
- வித்தி யஞ்சுகோ தயநி கேதனம்
- விமலம் என்றுநால் வேத முந்தொழும்
- சித்தி யங்குசிற் கனசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
- கரிசற உணர்ந்து கேட்டுக்
- காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
- கருநெறி அகன்ற பெரியோர்
- பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
- புரிபவை எலாம்பு ரிந்துன்
- புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
- போதவை எலாம்அ ருளுவாய்
- நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
- நிறைபவை எலாஞ்செய் நிலையே
- நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
- நித்தியா னந்த வடிவே
- அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
- குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
- பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
- கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.
- சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
- துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
- திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
- தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.
- கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
- நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
- தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
- சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.
- அருள்வடி வான மருந்து - நம்முள்
- அற்புத மாக அமர்ந்த மருந்து
- இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
- கின்புரு வாக இருந்த மருந்து. - நல்ல
- வித்தக மான மருந்து - சதுர்
- வேத முடிவில் விளங்கு மருந்து
- தத்துவா தீத மருந்து - என்னைத்
- தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. - நல்ல
- நானது வாகு மருந்து - பர
- ஞான வெளியில் நடிக்கு மருந்து
- மோந வடிவா மருந்து - சீவன்
- முத்த ருளத்தே முடிக்கு மருந்து. - நல்ல
- புத்தமு தாகு மருந்து - பார்த்த
- போதே பிணிகளைப் போக்கு மருந்து
- பத்த ரருந்து மருந்து - அநு
- பானமுந் தானாம் பரம மருந்து. - நல்ல
- மாலயன் தேடு மருந்து - முன்ன
- மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
- காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
- காணுங் கனவினுங் காணா மருந்து. - நல்ல
- புண்ணியர்க் கான மருந்து - பரி
- பூரண மாகப் பொருந்து மருந்து
- எண்ணிய வின்ப மருந்து - எம
- தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து. - நல்ல
- பால்வண்ண மாகு மருந்து - அதில்
- பச்சை நிறமும் படர்ந்த மருந்து
- நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
- நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து. - நல்ல
- வாய்பிடி யாத மருந்து - மத
- வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
- நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
- நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து. - நல்ல
- தன்மய மாகு மருந்து - சிவ
- சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
- சின்மய ஜோதி மருந்து - அட்ட
- சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து. - நல்ல
- மூவர்க் கரிய மருந்து - செல்வ
- முத்துக் குமாரனை யீன்ற மருந்து
- நாவிற் கினிய மருந்து - தையல்
- நாயகி கண்டு தழுவு மருந்து.
- கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான்
- கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே.
- கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான்
- கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமா ரே.
- தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
- தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
- நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
- நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
- வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
- முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
- மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
- கல்லைக் கனிவிக்குஞ் சுத்த னடி - முடி
- கங்கைக் கருளிய கர்த்த னடி
- தில்லைச்சி தம்பர சித்த னடி - தேவ
- சிங்கம டியுயர் தங்க மடி. - கொம்மி
- அம்பலத் தாடல்செய் ஐய னடி - அன்பர்
- அன்புக் கெளிதரு மெய்ய னடி
- தும்பை முடிக்கணி தூய னடி - சுயஞ்
- சோதிய டிபரஞ் சோதி யடி. - கொம்மி
- தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
- தான்கொண்ட நாயக ராரே டி
- அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
- ஐய ரமுத ரழக ரடி.
- தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
- சேர்ந்து கலந்தவ ராரே டி
- தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
- தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
- அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
- அன்பிற் புணர்ந்தவ ராரே டி
- துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
- தூய திருநட ராய ரடி.
- கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
- கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
- அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
- ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
- பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
- பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
- வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
- வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட
- தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
- சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
- ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
- ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
- முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
- முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்
- ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
- ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
- மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
- நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
- உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
- இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
- அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
- திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே.
- திருஎலாம்அளிக்கும்தெய்வம்என் கின்றாள் திருச்சிற்றம்பலவன்என்கின்றாள்
- உருஎலாம் உடைய ஒருவன்என் கின்றாள் உச்சிமேல் கரங்குவிக் கின்றாள்
- கருஎலாங் கடந்தாங் கவன்திரு மேனி காண்பதெந் நாள்கொல்என் கின்றாள்
- மருஎலாம்மயங்கும் மலர்க்குழல் முடியாள் வருந்துகின்றாள்என்றன் மகளே.
- மின்இணைச் சடில விடங்கன்என் கின்றாள் விடைக்கொடி விமலன்என் கின்றாள்
- பொன்இணை மலர்த்தாள் புனிதன்என் கின்றாள் பொதுவிலே நடிப்பன்என் கின்றாள்
- என்இணை விழிகள் அவன்திரு அழகை என்றுகொல் காண்பதென் கின்றாள்
- துன்இணை முலைகள் விம்முற இடைபோல் துவள்கின்றாள் பசியபொற் றொடியே.
- மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரைஎன்கின்றாள்
- வன்துயர் நீக்கும் அவன்திரு வடிவை மறப்பனோ கணமும்என் கின்றாள்
- ஒன்றுமில் லவன்என் றுரைக்கினும் எல்லாம் உடையவன்ஆகும்என்கின்றாள்
- பொன்றுதல் பிறழ்தல் இனியுறேன் என்றேபொற்றொடிபொங்குகின்றாளே.
- திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
- பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
- மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
- குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
- அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
- கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
- வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
- உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
- என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
- தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
- தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
- பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
- பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
- கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்
- செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
- அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்
- அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
- மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்
- மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
- இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்
- இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ.
- ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன்
- உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன்
- பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப்
- பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான்
- தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன்
- தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ
- கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன்
- குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ.
- தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
- தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
- இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
- என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
- அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
- அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
- துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
- சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- சினந்துரைத்தேன் பிழைகளெலாம் மனம்பொறுத்தல் வேண்டும்
- தீனதயா நிதியேமெய்ஞ் ஞானசபா பதியே
- புனைந்துரைப்பார் அகத்தொன்றும் புறத்தொன்றும் நினைத்தே
- பொய்யுலகர் ஆங்கவர்போல் புனைந்துரைத்தேன் அலன்நான்
- இனந்திருந்தி எனையாட்கொண் டென்னுள்அமர்ந் தெனைத்தான்
- எவ்வுலகும் தொழநிலைமேல் ஏற்றியசற் குருவே
- கனந்தருசிற் சுகஅமுதம் களித்தளித்த நிறைவே
- கருணைநடத் தரசேஎன் கண்ணிலங்கு மணியே.
- ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
- உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
- வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
- மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
- கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
- குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
- நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
- நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
- ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
- வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
- ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தென்னார் சோலைத் திருஒற்றித் தியாகப் பெருமான் பவனிவரப்
- பொன்னார் வீதி தனிற்பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
- மின்னார் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில்வேட்டு
- என்னார் அணங்கே என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- திருமாற் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரப்
- பெருமான் மனமு நானும்முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
- பொருமா நின்றேன் தாயரெலாம் போஎன் றீர்க்கப் போதுகிலேன்
- இருண்மாண் குழலாய் என்னடிநான் இச்சைமயமாய் நின்றதுவே.
- கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்
- நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
- அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்
- உண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.
- மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
- துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
- பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
- தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
- ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
- ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
- நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
- அல்லார் குழலாள் கண்ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
- பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
- நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
- முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார்
- மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட
- அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன்
- குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
- நகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன்
- குகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தோடார் குழையார் ஒற்றியினார் தூயர்க் கலது சுகம்அருள
- நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
- சூடா மலர்போல் இருந்ததல்லால் சுகமோர் அணுவுந் துய்த்தறியேன்
- கோடா ஒல்குங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
- பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
- வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
- கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
- கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி
- கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
- யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
- ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
- கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- இறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர்
- மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
- பொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி
- குறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நாட்டும் புகழார் திருஒற்றி நகர்வாழ் சிவனார் நன்மையெலாம்
- காட்டும் படிக்கு மாலையிட்ட கணவர் எனஓர் காசளவில்
- கேட்டும் அறியேன் தந்தறியார் கேட்டால் என்ன விளையுமடி
- கோட்டு மணிப்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்
- இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது
- திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
- குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தார்அவர்
- மாது மகிழ்தி எனஎன்னை மாலை யிட்டார் மாலையிட்ட
- போது கண்ட திருமுகத்தைப் போற்றி மறித்தும் கண்டறியேன்
- கோது கண்டேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
- உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
- வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
- மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
- பொன்னேர் சடையார் கீள்உடையார் பூவை தனைஓர் புடைஉடையார்
- தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திருப்பவனி
- இன்னே வந்தார் என்றார்நான் எழுந்தேன் நான்அங் கெழுவதற்கு
- முன்னே மனம்என் தனைவிடுத்து முந்தி அவர்முன் சென்றதுவே.
- காண இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை
- ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார்
- மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன்நான்
- நாண எனைவிட் டென்மனந்தான் நயந்தங் கவர்முன் சென்றதுவே.
- செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
- கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார்நான்
- எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் கேகு முன்னர் எனைவிடுத்தே
- அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் தாடி அவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
- நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
- மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- கண்ணார் நுதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார்
- பெண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான்
- நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே.
- ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
- சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
- காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
- சூலப்படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்தம்
- சீலப் பதியார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- நீலக் களத்தார் திருப்பவனி நேர்ந்தார் என்றார் அதுகாண்பான்
- சாலப் பசித்தார் போல்மனந்தான் தாவி அவர்முன் சென்றதுவே.
- கருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார்
- மருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார்
- தருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார்
- வருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- சொல்லா லியன்ற தொடைபுனைவார் தூயா ரொற்றித் தொன்னகரார்
- அல்லா லியன்ற மனத்தார்பா லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
- வல்லா லியன்ற முலையென்றார் வல்லார் நீரென் றேனுன்சொற்
- கல்லா லியன்ற தென்றார்முன் கல்லா லியன்ற தென்றேனே.
- இருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
- பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
- விருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
- தருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும்
- தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார்
- சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார்
- பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே.
- பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச்
- சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத்
- தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
- உளத்தே இருந்தார் திருஒற்றி யூரில் இருந்தார் உவர்விடத்தைக்
- களத்தே வதிந்தார் அவர்என்றன் கண்ணுள் வதிந்தார் கடல்அமுதாம்
- இளத்தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பன்றே
- வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.
- வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
- தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
- திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
- மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.
- கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார்
- உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை ஒளித்தே தொண்ட னொடும்வழக்குத்
- தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில்
- எடுத்தார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்
- துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே
- இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
- எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் அழகு ததும்ப வரும்பவனி
- நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டலது
- பால்ஆர் குதலைப் பெண்ணேநான் பாயிற் படுக்கை பொருந்தேனே.
- செல்வந் துறழும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்அவர்
- வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி
- சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது
- அல்வந் தளகப் பெண்ணேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே.
- சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
- சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
- முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
- சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி
- முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது
- கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்ர் ஒழியக் காணேனே.
- செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- மிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி
- மக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது
- நக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.
- மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
- தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
- இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
- குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
- வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
- எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
- தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
- ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
- வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
- செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ
- இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே
- புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
- தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- காலை மலர்ந்த கமலம்போல் கவின்செய் முகத்தார் கண்நுதலார்
- சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகந் தீர்க்க வந்திலரே
- மாலை மலர்ந்த மையல்நோய் வசந்தம் அதனால் வளர்ந்ததையோ
- சேலை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உலகம் உடையார் என்னுடைய உள்ளம் உடையார் ஒற்றியினார்
- அலகில் புகழார் என்தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே
- கலகம் உடையார் மாதர்எலாம் கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
- திலக முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார்
- அழுது வணங்கும் அவர்க்குமிக அருள்ஒற் றியினார் அணைந்திலரே
- பொழுது வணங்கும் இருண்மாலைப் பொழுது முடுகிப் புகுந்ததுகாண்
- செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
- கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
- தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
- தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
- கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
- மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
- தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பவள நிறத்தார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார்
- தவள நிறநீற் றணிஅழகர் தமியேன் தன்னைச் சார்ந்திலரே
- துவளும் இடைதான் இறமுலைகள் துள்ளா நின்ற தென்னளவோ
- திவளும் இழையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வண்டார் கொன்றை வளர்சடையார் மதிக்க எழுந்த வல்விடத்தை
- உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் உடையார் என்பால் உற்றிலரே
- கண்டார் கண்ட படிபேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது
- செண்டார் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உணவை இழந்தும் தேவர்எலாம் உணரா ஒருவர் ஒற்றியில்என்
- கணவர் அடியேன் கண்அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே
- குணவர் எனினும் தாய்முதலோர் கூறா தெல்லாம் கூறுகின்றார்
- திணிகொள் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
- ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
- வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
- சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
- செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
- திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- அணியார் அடியார்க் கயன்முதலாம் அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
- பணியார் ஒற்றிப் பதிஉடையார் பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
- தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
- குணியா எழில்சேர் குறமடவாய் குறிதான் ஒன்றும் கூறுவையே.
- அரவக் கழலார் கருங்களத்தார் அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
- பரவப் படுவார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
- இரவு வருமுன் வருவாரோ என்னை அணைதற் கிசைவாரோ
- குரவ மணக்குங் குறமடவாய் குறிநீ ஒன்று கூறுவையே.
- பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
- ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
- நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
- காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
- ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
- ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
- காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- கொற்றம் உடையார் திருஒற்றிக் கோயில்உடையார் என்எதிரே
- பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக்
- குற்றம் அறியேன் மனநடுக்கங் கொண்டேன் உடலங் குழைகின்றேன்
- கற்றிண் முலையாய் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
- சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
- கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- ஆரா அமுதாய் அன்புடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார்
- தீரா வினையும் தீர்த்தருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார்
- பாரார் புகழும் திருஒற்றிப் பரமர் தமது தோள் அணையத்
- தாரார் இன்னும் என்செய்கேன் சகியே இனிநான் சகியேனே.
- ஆயும் படிவத் தந்தணனாய் ஆரூ ரன்தன் அணிமுடிமேல்
- தோயும் கமலத் திருவடிகள் சூட்டும் அதிகைத் தொன்னகரார்
- ஏயும் பெருமை ஒற்றியுளார் இன்னும் அணையார் எனைஅளித்த
- தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனிநான் சகியேனே.
- அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
- வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
- இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
- வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
- எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
- இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
- உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
- மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
- வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
- உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
- சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
- பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
- ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
- வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
- கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
- உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
- உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
- தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
- எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும்
- கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
- வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும்
- கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
- தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
- ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
- காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
- வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
- சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
- யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
- சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
- தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
- ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆகின்ற அரசே
- ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
- கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
- வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
- வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
- பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
- பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
- துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
- அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
- அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
- இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
- தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
- தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
- கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
- கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
- விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
- விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
- பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
- பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
- எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
- என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
- பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
- காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
- கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
- மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
- மனமுருகி இருகண்ர் வடிக்கின்றேன் கண்டாய்
- ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
- எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.
- அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
- இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
- இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
- சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
- சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
- வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
- மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
- வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
- மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
- என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
- டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
- முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
- முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
- நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
- தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
- தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
- தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
- சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
- வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
- மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
- காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
- கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
- பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
- போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
- நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
- நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
- இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
- எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
- உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
- உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
- மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
- வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
- குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
- கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.
- சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
- தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
- புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
- புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
- பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
- பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
- தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
- தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
- ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை
- எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
- ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
- உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
- தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
- திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
- போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
- போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
- முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
- முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
- பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
- பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
- தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
- தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
- இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
- எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
- ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
- தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
- மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
- விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
- பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
- புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
- துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
- சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
- போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
- வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
- வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
- போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
- பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
- ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
- எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
- செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
- திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
- இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
- என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
- அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
- ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
- எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
- உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
- அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
- அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
- கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
- தௌவிண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
- தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
- நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
- நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
- தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
- தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
- கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
- கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
- குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
- மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
- மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
- குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
- கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
- கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
- கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
- பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
- பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
- இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
- மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
- தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
- திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன்
- அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
- பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
- கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
- கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
- சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
- தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
- மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
- மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
- கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
- ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
- உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
- ஏரணவி உறைகமகிழ்த் தெனஉரைத்தாய் நின்சீர்
- யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
- பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
- பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
- நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
- ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
- அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
- வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
- வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
- கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
- கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
- சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
- தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
- சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
- மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
- மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
- சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
- சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
- பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
- பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
- சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
- அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
- அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
- விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
- விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
- செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
- திடுக்கெனஇங் கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
- துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
- உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும்அஞ்சேல் என்று
- மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
- மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
- ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
- அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
- வேதமுடி மேற்சுடராய் ஆகத்தின் முடிமேல்
- விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
- பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
- போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
- நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
- ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
- தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
- கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
- இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
- என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
- திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.
- படைப்பவனுங் காப்பவனும் பற்பலநாள் முயன்று
- பார்க்கவிரும் பினுங்கிடையாப் பாதமலர் வருந்த
- நடைப்புலையேன் பொருட்டாக நடத்திரவிற் கதவம்
- நன்குதிறப் பித்தொன்று நல்கியதும் அன்றி
- இடைப்படுநா ளினும்வந்தென் இதயமயக் கெல்லாம்
- இரிந்திடச்செய் தனைஉன்றன் இன்னருள்என் என்பேன்
- தடைப்படுமா றில்லாத பேரின்பப் பெருக்கே
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முன்னைமறை முடிமணியாம் அடிமலர்கள் வருந்த
- முழுதிரவில் நடந்தெளியேன் முயங்கமிடத் தடைந்து
- அன்னையினும் பரிந்தருளி அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தெனையும் அன்பினொடு நோக்கி
- என்னைஇனி மயங்காதே என்மகனே மகிழ்வோ
- டிருத்திஎன உரைத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- மின்னைநிகர் செஞ்சடைமேன் மதியம்அசைந் தாட
- வியன்பொதுவில் திருநடஞ்செய் விமலபரம் பொருளே.
- விந்துநிலை நாதநிலை இருநிலைக்கும் அரசாய்
- விளங்கியநின் சேவடிகள் மிகவருந்த நடந்து
- வந்துநிலை பெறச்சிறியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகனேஎன் றழைத்து
- இந்துநிலை முடிமுதராந் திருஉருவங் காட்டி
- என்கையில்ஒன் றளித்தின்பம் எய்துகஎன் றுரைத்தாய்
- முந்துநிலைச் சிறியேன்செய் தவமறியேன் பொதுவில்
- முத்தர்மனந் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
- முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
- யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
- எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
- தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
- பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
- புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
- கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
- கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
- மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
- நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
- அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
- அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
- சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
- மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
- வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
- அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
- அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
- முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
- முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
- சகலமொடு கேவலமுந் தாக்காத இடத்தே
- தற்பரமாய் விளங்குகின்ற தாள்மலர்கள் வருந்தப்
- பகலொழிய நடுவிரவில் நடந்தருளி அடியேன்
- பரியுமிடத் தடைந்துமணிக் கதவுதிறப் பித்துப்
- புகலுறுக வருகஎன அழைத்தெனது கரத்தே
- பொருந்தஒன்று கொடுத்தனைநின் பொன்னருள்என் என்பேன்
- உகல்ஒழியப் பெருந்தவர்கள் உற்றுமகிழ்ந் தேத்த
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே .
- உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும்
- உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக்
- கள்ளமனத் தேனிருக்கும் இந்தேடி அடைந்து
- கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து
- நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து
- நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய்
- தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும்
- செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே .
- அண்டவகை பிண்டவகை அனைத்தும்உதித் தொடுங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிக்
- கண்டவருங் காணாத நடுஇரவு தனில்யான்
- கருதுமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- தொண்டனென் எனையும்அழைத் தென்கையில்ஒன் றளித்தாய்
- துரையேநின் அருட்பெருமைத் தொண்மையைஎன் என்பேன்
- உண்டவர்கள் உணுந்தோறும் உவட்டாத அமுதே
- உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.
- பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும்
- பாலுநெய்யும் அளிந்தநறும் பழரசமும் போல
- மருவும்உளம் உயிர்உணர்வோ டெல்லாந்தித் திக்க
- வயங்கும்அடி யிணைகள்மிக வருந்தநடந் தருளித்
- தெருவடைந்து நானிருக்கு மனைக்காப்புத் திறக்கச்
- செய்தருளிப் பொருள்ஒன்றென் செங்கைதனில் அளித்தாய்
- திருமணிமன் றிடைநடிக்கும் பெருமான்நின் கருணைத்
- திறத்தினைஇச் சிறியேன்நான் செப்புதல்எங் ஙனமே.
- என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
- என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
- தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
- தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
- முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
- முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
- மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
- வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
- சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
- துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
- கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
- கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
- என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
- என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
- தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- முத்திஒன்று வியத்திஒன்று காண்மின்என்றா கமத்தின்
- முடிகள்முடித் துரைகின்ற அடிகள்மிக வருந்தப்
- பத்திஒன்றும் இல்லாத கடைப்புலையேன் பொருட்டாப்
- படிற்றுளத்தேன் இருக்கும்இடந் தனைத்தேடி நடந்து
- சித்திஒன்று திருமேனி காட்டிமனைக் கதவம்
- திறப்பித்தங் கெனைஅழைத்தென் செங்கையிலே மகிழ்ந்து
- சத்திஒன்று கொடுத்தாய்நின் தண்ணருள்என் என்பேன்
- தனிமன்றுள் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே
- இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
- தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்
- தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
- கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்
- உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே.
- அன்பளிப்பு தொன்றுபின்னர் இன்பளிப்ப தொன்றென்
- றறிஞரெலாம் மதிக்கின்ற அடிமலர்கள் வருந்த
- என்பளித்த உடல்கள்தொறும் உயிர்க்குயிராய் இருக்கும்
- எம்பெருமான் நடந்தருளிக் கதவுதிறப் பித்துத்
- துன்பளிக்கும் நெஞ்சகத்தென் றனைக்கூவி அழைத்துத்
- தூயஇள நகைமுகத்தே துளும்பஎனை நோக்கி
- முன்பளித்த தென்றனது கையில்ஒன்றை அளித்தாய்
- முன்னவநின் அருட்பெருமை முன்னஅறி யேனே.
- மோகஇருட் கடல்கடத்தும் புணைஒன்று நிறைந்த
- மோகனசுகம் அளிப்பிக்கும் துணைஒன்றென் றுரைக்கும்
- யோகமலர்த் திருவடிகள் வருந்தநடந் தருளி
- உணர்விலியேன் பொருட்டாக இருட்டிரவில் நடந்து
- போகமனைப் பெருங்கதவந் திறப்பித்துட் புகுந்து
- புலையேனை அழைத்தொன்று பொருந்தஎன்கை கொடுத்தாய்
- நாகமணிப் பணிமிளிர அம்பலத்தே நடஞ்செய்
- நாயகநின் பெருங்கருணை நவிற்றமுடி யாதே.
- ஆறறு தத்துவத்தின் சொரூபமுதல் அனைத்தும்
- அறிவிக்கும் ஒன்றவற்றின் அப்பாலே இருந்த
- வீறாய தற்சொருப முதலனைத்தும் அறிவில்
- விளக்குவிக்கும் ஒன்றென்று விளைவறிந்தோர் விளம்பும்
- பேறாய திருவடிகள் வருந்தநடந் திரவில்
- பேயடியேன் இருக்குமிடத் தடைந்தென்னை அழைத்துச்
- சோறாய பொருள்ஒன்றென் கரத்தளித்தாய் பொதுவில்
- சோதிநின தருட்பெருமை ஓதிமுடி யாதே.
- கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
- காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
- ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
- றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
- துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
- துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
- வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
- வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
- ஐவர்களுக் கைந்தொழிலும் அளித்திடுவ தொன்றாம்
- அத்தொழிற்கா ரணம்புரிந்து களித்திடுவ தொன்றாம்
- தெய்வநெறி என்றறிஞர் புகழ்ந்துபுகழ்ந் தேத்துந்
- திருவடிகள் மிகவருந்தத் தெருவினிடை நடந்து
- கைவரயான் இருக்கும்மணைக் கதவுதிறப் பித்துக்
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- சைவமணி மன்றிடத்தே தனிநடனம் புரியும்
- தற்பரநின் அருட்பெருமை சாற்றமுடி யாதே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
- உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
- ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
- என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
- வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
- வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
- மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
- முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
- உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
- அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
- அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
- களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
- விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
- விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எச்செயலும் தோன்றி
- இயங்கும்இட மாகிஎல்லாம் முயங்கும்இட மாகித்
- தெவ்வுலகும் நண்புலகுஞ் சமனாகக் கண்ட
- சித்தர்கள்தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள்
- இவ்வுலகில் வருந்தநடந் தென்பொருட்டால் இரவில்
- எழிற்கதவந் திறப்பித்தங் கென்கையில்ஒன் றளித்தாய்
- அவ்வுலக முதல்உலகம் அனைத்துமகிழ்ந் தேத்த
- அம்பலத்தே நடம்புரியும் செம்பவளக் குன்றே.
- மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
- வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
- ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
- றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
- தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
- திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
- வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
- பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
- ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
- நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
- வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
- மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- புன்றனை தலையெனநான் அறியாமல் ஒருநாள்
- பொருத்தியபோ தினிற்சிவந்து பொருந்தியபொன் னடிகள்
- இன்றலைவின் மிகச்சிவந்து வருந்தநடந் தெளியேன்
- இருக்குமிடத் தடைத்துகத வந்திறக்கப் புரிந்து
- மன்றலின்அங் கெனைஅழைத்தேன் கையில்ஒன்று கொடுத்தாய்
- மன்னவநின் பெருங்கருணை வண்மையைஎன் என்பேன்
- பொன்றவிலாச் சித்தர்முத்தர் போற்றமணி மன்றில்
- புயங்கநடம் புரிகின்ற வயங்கொளிமா மணியே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- மணப்போது வீற்றிருந்தான் மாலவன்மற் றவரும்
- மனஅழுக்கா றுறச்சிறியேன் வருந்தியநாள் அந்தோ
- கணப்போதுந் தரியாமற் கருணைஅடி வருந்தக்
- கங்குலிலே நடந்தென்னைக் கருதிஒன்று கொடுத்தாய்
- உணப்போது போக்கினன்முன் உளவறியா மையினால்
- உளவறிந்தேன் இந்நாள்என் உள்ளமகிழ் வுற்றேன்
- தணப்போது மறைகளெலாந் தனித்தனிநின் றேத்தத்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
- திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
- தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
- தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
- மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
- மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
- குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
- குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
- அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
- கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
- களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
- குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
- கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
- மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
- மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
- விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
- வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக்
- கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக்
- கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி
- அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன்
- அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
- மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.
- உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி
- உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு
- மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
- மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம்
- அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில்
- அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன்
- கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
- கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.
- பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த
- பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன்
- மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக
- வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
- விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில்
- விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய்
- குழைஅசையக் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே
- கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம்
- ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
- முன்னதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன்
- முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய்
- துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத்
- துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன்
- பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப்
- பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே.
- 187. இருவர் பெரியர் - பதஞ்சலி, வியாக்கிரபாதர். ச.மு.க.
- சண்பைமறைக் கொழுந்துமகிழ் தரஅமுதங் கொடுத்தாள்
- தயவுடையாள் எனையுடையாள் சர்வசத்தி யுடையாள்
- செண்பகப்பொன் மேனியினாள் செய்யமலர்ப் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பப்
- பண்பகர்பொன் அம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
- பரம்பரநின் திருவருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து
- எண்பகர்குற் றங்களெலாங் குணமாகக் கொள்ளும்
- எந்துரைஎன் றெண்ணுகின்ற எண்ணமத னாலே.
- அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல்
- அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி
- தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின்
- மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை
- இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம்
- எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
- பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
- செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
- களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
- நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
- நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை
- ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள்
- தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில்
- கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே
- எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால்
- இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- அருளுடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மருளுடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- தெருளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- இருளுடைய சிலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
- என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
- ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அற்புதநின் அருளருமை அறியேன்நான் சிறிதும்
- அறியாதே மறுத்தபிழை ஆயிரமும் பொறுத்து
- வற்புறுவேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- கற்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தென்னினும்என் கன்மனமோ உருகா
- இற்புடைய இரும்பும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆண்டவநின் அருளருமை அறியாதே திரிந்தேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வேண்டிஎனை அருகழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மிகஅளித்த அருள்வண்ணம் வினையுடையேன் மனமும்
- காண்தகைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- ஈண்டுருகாக் கரடும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அரசேநின் திருவருளின் அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- விரவும்அன்பில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- உரவுமலர்க் கண்களும்விட் டகலாதே இன்னும்
- ஒளிர்கின்ற தாயினும்என் உள்ளம்உரு கிலதே
- இரவுநிறத் தவரும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஐயாநின் அருட்பெருமை அருமைஒன்றும் அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- மெய்யாஅன் றெனைஅழைத்து வலியவுமென் கரத்தே
- வியந்தளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- கையாது கண்களும்விட் டகலாதே இன்னும்
- காண்கின்ற தாயினும்என் கருத்துருகக் காணேன்
- எய்யாவன் பரலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அப்பாநின் திருவருட்பேர் அமுதருமை அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே
- இனிதனித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும்
- துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா
- எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- 188. வாள் - ஒளி, பட்டயம். ச.மு.க.
- சிவயோக சந்திதரும் தேவிஉல குடையாள்
- சிவகாம வல்லியொடுஞ் செம்பொன்மணிப் பொதுவில்
- நவயோக உருமுடிக்கண் விளங்கியநின் வடிவை
- நாய்க்டையேன் நான்நினைத்த நாள்எனக்கே மனமும்
- பவயோக இந்தியமும் இன்பமய மான
- படிஎன்றால் மெய்யறிவிற் தவர்க்கிருந்த வண்ணம்
- தன்னைஇந்த வண்ணம்என என்னை உரைப்பதுவே.
- சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள்
- சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்
- முத்தியெலாந் தரவிளங்கும் முன்னவநின் வடிவை
- மூடமனச் சிறியேன்நான் நாடவரும் பொழுது
- புத்தியெலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்
- போலும்இருப் பதுஅதற்கு மேலும்இருப் பதுவேல்
- பத்திஎலாம் உடையவர்கள் காணுமிடத் திருக்கும்
- படிதான்எப் படியோஇப் படிஎன்ப தரிதே.
- தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
- சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
- வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
- மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
- நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
- நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
- நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
- நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
- ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
- ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
- பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
- பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
- சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
- சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
- ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
- உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.
- பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
- பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
- சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
- தூய்மையிலேன் நான்எண்ணுந் தோறும்மனம் இளகிச்
- சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
- தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
- நற்பதம்எத் தன்மையதோ உரைப்பரிது மிகவும்
- நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
- என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
- இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
- இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
- இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
- அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
- அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
- என்புருக மனஞான மயமாகும் என்றால்
- எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
- அக்கோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து
- மிக்கோல மிடவும்அவர்க் கருளாமல் இருளால்
- மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து
- இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்
- எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
- தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்ஈ புகல்வேன்
- அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து
- நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
- எச்சோடும் இழிவினுக்கொள் றில்லேன்நான் பொல்லேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
- தர்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
- ஒத்தோல மிடவும்அவர்க் கொருசிறிதும் அருளான்
- ஓதியனையேன் விதியறியேன்ஒருங்கேன்வன் குரங்கேன்
- இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
- சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
- வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்
- மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
- எந்தேஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
- எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
- இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
- எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
- தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
- கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
- கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
- எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
- எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
- தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
- என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப
- யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
- முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்
- முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
- தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே.
- ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
- மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
- வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
- பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
- புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
- சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- என்னேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இரவுபகல் அறியாமல் இருந்தஇடத் திருந்து
- முன்னேமெய்த் தவம்புரிந்தார் இன்னேயும் இருப்ப
- மூடர்களில் தலைநின்ற வேடமனக் கொடியேன்
- பொன்னேயம் மிகப்புரிந்த புலைக்கடையேன் இழிந்த
- புழுவினும்இங் கிழிந்திழிந்து புகுந்தஎனைக் கருதித்
- தன்னேய முறஎனக்கும் ஒன்றளித்துக் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
- உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
- பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
- பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
- கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
- குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
- தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
- நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
- புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
- கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்
- கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
- தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
- தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
- துலைக்கொடிநன் கறியோதே துணைஅருளோ டூடித்
- துரிசுபுகன் றேன்கருணைப் பரிசுபுகன் றறியேன்
- புலைக்கொடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பொங்குதிரைக் கங்கைமதி தங்கியசெஞ் சடையாய்
- மலைக்கொடிஎன் அம்மைஅருள் மாதுசிவ காம
- வல்லிமறை வல்லிதுதி சொல்லிநின்று காணக்
- கலைக்கொடிநன் குணர்முனிவர் கண்டுபுகழ்ந் தேத்தக்
- கனகசபை தனில்நடிக்குங் காரணசற் குருவே.
- கையடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- காசுபுகன் றேன்கருணைத் தேசறியாக் கடையேன்
- பொய்யடியேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புத்தமுதே சுத்தசுக பூரணசிற் சிவமே
- ஐயடிகள் காடவர்கோன் அகமகிழ்ந்து போற்றும்
- அம்பலத்தே அருள்நடஞ்செய் செம்பவள மலையே
- மெய்யடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே
- வேதமுடி மீதிருந்த மேதகுசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
- சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
- போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
- ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
- உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
- சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
- தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
- உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் உற்றிலாச் சிறியஓர் பருவத்
- திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்
- விலகுறங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
- திலகநன் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.
- உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
- நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
- விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
- றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
- பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும் பொருள்அரு ளனுபவம் அதற்குப்
- பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்றறப் பற்றுதி இதுவே
- சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
- முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின் முதலர சியற்றிய துரையே.
- அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ அருட்சிவ மதற்கெனப் பலகால்
- படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் பார்த்தரு ளால்எழுந் தருளி
- மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய்
- வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே.
- செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில்
- எவ்வகை நிலையும் தோற்றும்நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும்
- இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே
- தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.
- முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் றுளமயக் குறுங்கால்
- அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே
- என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
- இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.
- வருபகற் கற்பம் பலமுயன் றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே
- ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
- பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான
- உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே.
- சீரார் சண்பைக் கவுணியர்தம் தெய்வ மரபில் திகழ்விளக்கே
- தெவிட்டா துளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே
- காரார் மிடற்றுப் பவளமலைக் கண்ணின் முளைத்த கற்பகமே
- கரும்பே கனியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
- ஏரார் பருவம் மூன்றில்உமை இனிய முலைப்பால் எடுத்தூட்டும்
- இன்பக் குதலைமொழிக்குருந்தே என்ஆ ருயிருக் கொருதுணையே
- பேரார் ஞான சம்பந்தப் பெருமா னேநின் திருப்புகழைப்
- பேசு கின்றோர் மேன்மேலும் பெருஞ்செல் வத்தில் பிறங்குவரே.1
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
- சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
- உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
- ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
- பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
- புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
- கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
- கடலேநின் கழல்கருதக் கருது வாயே.
- வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
- வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
- தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
- சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
- சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
- செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
- ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
- அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
- தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத்
- திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற
- நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான
- நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம்
- பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும்
- பண்புடைய பெருமானே பணிந்து நின்பால்
- மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய
- வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே.
- விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
- வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
- மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
- வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
- பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
- பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
- கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
- கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.
- இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
- மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
- வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
- ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
- பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
- மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
- ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
- தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
- ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
- தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
- தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்193 தினந்தோறும்
- நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
- ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
- தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
- 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
- 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
- என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
- அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
- இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
- தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
- கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
- வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
- நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
- அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
- வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
- டஞ்சரையான் கண்கள் அவை.
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
- கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
- வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
- விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
- பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
- ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
- வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
- நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
- பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
- வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
- சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
- சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
- வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
- இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
- அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
- வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
- அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
- தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
- விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
- களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
- அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
- வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
- சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
- பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
- ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
- வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
- நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
- சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
- தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
- வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
- செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
- நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
- வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
- முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
- இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
- என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
- மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே.
- தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
- இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
- விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
- மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல் இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின்
- தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்என்னைத் தாங்கிக் கொள்ளும்சரன்பிறி தில்லைகாண்
- அன்னைவேண்டிஅ ழும்மகப் போல்கின்றேன் அறிகி லேன்நின்தி ருவுளம் ஐயனே
- மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
- எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
- உண்ணி லாவிய நின்திரு வுள்ளமும் உவகை167 யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
- வெண்ணி லாமுடிப் புண்ணியமூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம் மலையி லேமுக மாயத்தி லேஅவர்
- தோளி லே இடைச் சூழலி லேஉந்திச் சுழியி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின்
- தாளி லேநின்த னித்தபு கழிலே தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ
- வேளி லேஅழ கானசெவ் வேளின்முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
- மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
- ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
- கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
- அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
- கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
- பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
- அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே.
- கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
- நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
- விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
- அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே.
- திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
- இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
- குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
- வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.
- சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
- தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
- கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
- கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே
- கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
- மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
- திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
- வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- போற்றேன் எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம்
- சேற்றே விழுந்து தியங்குகின் றேனைச் சிறிதும்இனி
- ஆற்றேன் எனதர சேஅமு தேஎன் அருட்செல்வமே
- மேற்றேன் பெருகு பொழில்தணி காசல வேலவனே.
- வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில்
- மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
- கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும்
- கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.
- நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
- அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
- சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
- இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
- சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
- ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
- வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- தணியாத துன்பத் தட்ங்கடல் நீங்கநின் தன்மலர்த்தாள்
- பணியாத பாவிக் கருளும்உண் டோபசு பாசம்அற்றோர்க்
- கணியாக நின்ற அருட்செல்வ மேதணி காசலனே
- அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே.
- சொல்லார் மலர்புனை அன்பகத் தோர்க்கருள் சொல்லும்எல்லாம்
- வல்லாய்என் றேத்த அறிந்தேன் இனிஎன்றன் வல்வினைகள்
- எல்லாம் விடைகொண் டிரியும்என் மேல்இய மன்சினமும்
- செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரைசே.
- அணிகொள் வேல்உடை அண்ணலே நின்திரு அடிகளை அன்போடும்
- பணிகி லேன்அகம் உருகிநின் றாடிலேன் பாடிலேன் மனமாயைத்
- தணிகி லேன்திருத் தணிகையை நினைகிலேன் சாமிநின் வழிபோகத்
- துணிகி லேன்இருந் தென்செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.
- சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
- மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
- வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
- கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
- மயிலின் மீதுவந் தருள்தரும் நின்திரு வரவினுக் கெதிர்பார்க்கும்
- செயலி னேன்கருத் தெவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என்செய்கேன்
- அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே ஆறுமா முகத்தேவே
- கயிலை நேர்திருத் தணிகைஅம் பதிதனில் கந்தன்என் றிருப்போனே.
- இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
- கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
- விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
- தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.
- குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் குரைகழல் கருதாத
- துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
- இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
- நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.
- தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
- மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
- கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
- பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
- ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
- வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
- காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
- சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- கஞ்சன் துதிக்கும் பொருளேஎன் கண்ணே நின்னைக் கருதாத
- வஞ்சர் கொடிய முகம்பார்க்க மாட்டேன் இனிஎன் வருத்தம்அறுத்
- தஞ்சல் எனவந் தருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே
- செஞ்சந் தனம்சேர் தணிகைமலைத் தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- உண்டால் குறையும் எனப்பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தைஎதிர்
- கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத் திரந்து கழிக்கின்றேன்
- கொண்டார் அடியர் நின்அருளை யானோ ஒருவன் குறைபட்டேன்
- திண்டார் அணிவேல் தணிகைமலைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- 3. நின் அருட்கார்வம். தொ.வே.முதற்பதிப்பு, ச.மு.க.பதிப்பு.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
- ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
- கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
- காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
- தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
- தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
- விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
- வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
- வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
- பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
- பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
- தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
- தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
- ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
- அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.
- பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
- பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
- கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
- காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
- விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
- விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
- தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
- பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
- கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
- குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
- கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
- கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
- தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
- பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
- கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
- என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
- கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
- கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
- தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
- அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
- முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
- முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
- பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
- பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
- வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
- புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
- பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
- எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
- இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
- தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
- றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
- இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
- ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
- வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
- மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
- தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
- மூடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
- தந்தைவழி நில்லாத பாவி என்றே
- தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
- எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
- எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
- சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- 4. சொல்வார். தொ.வே. முதற்பதிப்பு.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
- மூவ ரும்பணி முதல்வநின் அடியில்என் முடிஉற வைப்பாயேல்
- ஏவ ரும்எனக் கெதிர்இலை முத்திவீ டென்னுடை யதுகண்டாய்
- தாவ ரும்பொழில் தணிகையம் கடவுளே சரவண பவகோவே.
- சங்க பாணியைச் சதுமு கத்தனைச்
- செங்கண் ஆயிரத் தேவர் நாதனை
- மங்க லம்பெற வைத்த வள்ளலே
- தங்க ருள்திருத் தணிகை ஐயனே.
- என்னை என்னைஈ தென்றன் மாதவம்
- முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
- பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
- அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே.
- சாறு சேர்திருத் தணிகை எந்தைநின்
- ஆறு மாமுகத் தழகை மொண்டுகொண்
- டூறில் கண்களால் உண்ண எண்ணினேன்
- ஈறில் என்னுடை எண்ணம் முற்றுமோ.
- முற்று மோமனம் முன்னி நின்பதம்
- பற்று மோவினைப் பகுதி என்பவை
- வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
- சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.
- குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
- வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
- முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
- நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.
- வேத மாமுடி விளங்கும் நின்திருப்
- பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
- கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
- சாதல் போக்கும்நல் தணிகை நேயனே.
- வாணு தல்பெரு மாட்டி மாரொடு
- காணு தற்குனைக் காதல் கொண்டனன்
- ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
- மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
- கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
- சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
- மால்ப கைப்பிணி மாறி ஓடவே
- மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.
- கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின் றேன்நின் திருக்கருணை
- அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவில்லேன்
- விடையே றீசன் புயம்படும்உன் விரைத்தாள் கமலம் பெறுவேனோ
- கொடைஏர் அருளைத் தருமுகிலே கோவே தணிகைக் குலமணியே.
- மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்தணியும்
- அணியே தணிகை அரசேதெள் அமுதே என்றன் ஆருயிரே
- பிணிஏய் துயரால் வருந்திமனப் பேயால் அலைந்து பிறழ்கின்றேன்
- தணியேன் தாகம் நின்அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
- மனமுற நினைந்தகத் தன்பாம்
- பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
- அன்பர்பால் இருந்திட அருளாய்
- தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
- தணிகைவாழ் சரவண பவனே.
- பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
- பரஞ்சுடர் நின்அடி பணியும்
- புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- நித்திய அடியர் தம்முடன் கூட்ட
- நினைந்திடில் உய்குவன் அரசே
- சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும்
- காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே
- மூவர்க் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல்
- தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியேனே.
- எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
- அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
- ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
- வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
- யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
- ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
- பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
- தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
- காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
- யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே.
- சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
- பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
- ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
- பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
- வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
- பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
- தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
- சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
- தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
- கனியேநின் சேவடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
- துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
- இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.
- சிறியேன்இப் போதேகித் திருத்தணிகை மலைஅமர்ந்த தேவின் பாதம்
- குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்தம் குழாத்துள் சென்றே
- அறியேனோ பொருள்நிலையை அறிந்தெனதென்பதைவிடுத்திவ்வகிலமாயை
- முறியேனோ உடல்புளகம் மூடேனோ நன்னெறியை முன்னி இன்றே.
- முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
- மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
- உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
- என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
- கூறேனோ திருத்தணிகைக் குற்றுன்அடிப் புகழதனைக் கூறி நெஞ்சம்
- தேறேனோ நின்அடியர் திருச்சமுகம் சேரேனோ தீராத் துன்பம்
- ஆறேனோ நின்அடியன் ஆகேனோ பவக்கடல்விட் டகன்றே அப்பால்
- ஏறேனோ அருட்கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.
- வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
- பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
- மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
- ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
- வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
- காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
- ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
- மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
- வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
- சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
- வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
- தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
- காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
- போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
- பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
- நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- நிலைக்கும் தணிகை என்அரசை நீயும் நினையாய் நினைப்பதையும்
- கலைக்கும் தொழில்கொண் டெனைக்கலக்கம் கண்டாய் பலன்என் கண்டாயே
- முலைக்கும் கலைக்கும் விழைந்தவமே முயங்கும் மூட முழுநெஞ்சே
- அலைக்கும் கொடிய விடம்நீஎன் றறிந்தேன் முன்னர் அறிந்திலனே.
- இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
- குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
- நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
- வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- 9. நலிந்திங்கவமே. தொ.வே.முதற்பதிப்பு, ச.மு.க.பதிப்பு
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- கண்ணைக் காட்டி இருமுலை காட்டிமோ
- கத்தைக் காட்டி அகத்தைக்கொண் டேஅழி
- மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார்
- மாலைப் போக்கிநின் காலைப் பணிவனோ
- பண்ணைக் காட்டி உருகும்அ டியர்தம்
- பத்திக் காட்டிமுத் திப்—‘ருள் ஈதென
- விண்ணைக் காட்டும் திருத்தணி காசல
- வேல னேஉமை யாள்அருள் பாலனே.
- கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
- கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
- வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
- மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
- கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
- ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
- பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
- பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
- சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
- பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
- வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
- அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
- குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
- மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
- சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
- வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
- மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
- நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
- சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
- வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
- உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
- அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
- வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
- ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
- தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
- வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
- வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
- முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
- கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
- சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
- வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னாரோ
- இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
- பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
- செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.
- எனையான் அறிந்துன் அடிசேர உன்னை இறையேனும் நெஞ்சி னிதமாய்
- நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம்என் றுழன்று துயர்வேன்
- தனையே நின்அன்பன் எனவோதி லியாவர் தகும்என் றுரைப்பர் அரசே
- வனைஏர் கொளுஞ்செய் தணிகா சலத்து மகிழ்வோ டமர்ந்த அமுதே.
- முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
- மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
- விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
- இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
- திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
- தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
- மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
- மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
- கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
- கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
- இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன்
- அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன்
- செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன்
- திருத்தணிகை யேநமது செல்வம் என்றே
- நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால்
- நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன்
- எம்பாத கத்தைஎடுத் தியார்க்குச் சொல்வேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பண்ணேன்நின் புகழ்சொல்வோர் தமக்குப் பூசை
- பாடேன்நின் திருச்சீரைப் பரமன் ஈன்ற
- கண்ணேநின் தணிகைதனைக் கண்டு போற்றேன்
- கைகுவியேன் மெய்குளிரேன் கண்ர் பாயேன்
- உண்ணேன்நல் ஆனந்த அமுதை அன்பர்
- உடன்ஆகேன் ஏகாந்தத் துறஓர் எண்ணம்
- எண்ணேன்வன் துயர்மண்ணேன் மனஞ்செம் புண்ணேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
- மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
- இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
- ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
- மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
- வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
- புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
- புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
- நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
- மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
- முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- மக்கட் பிறவி எடுத்தும்உனை வழுத்தாக் கொடிய மரம்அனையேன்
- துக்கக் கடலில் வீழ்ந்துமனம் சோர்கின் றேன்ஓர் துணைகாணேன்
- செக்கர்ப் பொருவு வடிவேற்கைத் தேவே தெவிட்டாத் தெள்ளமுதே
- முக்கட் கரும்பின் முழுமுத்தே முறையோ முறையோ முறையேயோ.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
- உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
- பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
- முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
- பொன்னின் றொளிரும் மார்பன்அயன் போற்றும் உன்தாள் புகழ்மறந்தே
- கன்னின் றணங்கும் மனத்தார்பால் கனிந்தேன் இனிஓர் துணைகாணேன்
- மின்னின் றிலங்கு சடைக்கனியுள் விளைந்த நறவே மெய்அடியார்
- முன்னின் றருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும்
- ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன்
- தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே
- மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ.
- தேவே எனநிற் போற்றாத சிறிய ரிடம்போய்த் தியங்கிஎன்றன்
- கோவே நின்றன் திருத்தாளைக் குறிக்க மறந்தேன் துணைகாணேன்
- மாவே ழத்தின் உரிபுனைந்த வள்ளற் கினிய மகப்பேறே
- மூவே தனையை அறுத்தருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.
- வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
- ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
- போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.
- மூதா னந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
- மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
- பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
- கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
- அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
- அண்ண லேதணி காசலத் தரசே
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
- என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
- அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
- மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப்பிணி தீரும்
- பவசங்கடம் அறும்இவ்விக பரமும்புகழ் பரவும்
- கவசங்கள்எ னச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
- நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
- பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
- துயில்ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
- கையில்ஏறிய பாசம்துணி கண்டேமுறித் திடுமால்
- குயில்ஏறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
- மயில்ஏறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே.
- தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
- மாறாப்பிணி மாயும்திரு மருவும்கரு ஒருவும்
- வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வரும்ஓர்
- ஆறாக்கரப்10 பொருளேஎன அருள்நீறணிந் திடிலே.
- அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
- தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
- எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
- குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
- அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
- மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
- சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
- முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
- சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
- நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
- இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
- கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
- என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
- நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.
- கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
- சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்அமுதே
- பேர்பூத்த ஒற்றியில் நின்முன்னர் ஏற்றிடப் பேதையனேன்
- ஏர்பூத்த ஒண்பளி தம்11 காண் கிலன்அதற் கென்செய்வனே.
- கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
- அருமருந் தேதணி காசலம் மேவும்என் ஆருயிரே
- திருமருங் கார்ஒற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
- ஒருமருங் கேற்றஎன் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.
- எய்யா தருள்தணி காசலம் மேவிய என்அருமை
- ஐயா நினது திருவடி ஏத்திஅன் றோஅயனும்
- செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
- நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.
- குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
- கோதையர் பால்விரைந் தோடிச்
- சென்றஇப் புலையேன் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- என்தனி உயிரே என்னுடைப் பொருளே
- என்உளத் திணிதெழும் இன்பே
- மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
- வந்தமர்ந் தருள்செயும் மணியே.
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
- அலர்முலை அணங்கனார் அல்குல்
- புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
- பாலனே வேலுடை யவனே
- விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
- வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
- முறியனேன் தனக்குநின் அடியாம்
- ஏடவிழ் கமலத் திருநற வருந்த
- என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
- ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
- ஐயருக் கொருதவப் பேறே
- கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே
- கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
- கடையனேன் முடிமிசை அமர்த்தி
- உற்றஇவ் வுலக மயக்கற மெய்மை
- உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
- நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
- நல்அருட் சோதியே நவைதீர்
- கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பவம்எனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
- பாவியேன் தன்முகம் பார்த்திங்
- கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
- இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
- சிவம்எனும் தருமக் கடல்அகத் தெழுந்த
- தெள்ளிய அமுதமே தேனே
- குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- முலைமுகங் காட்டி மயக்கிடும் கொடியார்
- முன்புழன் றேங்கும்இவ் எளியேன்
- நிலைமுகங் காட்டும் நின்திருப் பாத
- நீழல்வந் தடையும்நாள் என்றோ
- மலைமுகம் குழைய வளைத்திடும் தெய்வ
- மணிமகிழ் கண்ணினுள் மணியே
- கொலைமுகம் செல்லார்க் கருள்தருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வருபயன் அறியா துழன்றிடும் ஏழை
- மதியினேன் உய்ந்திடும் வண்ணம்
- ஒருவரும் நினது திருவடிப் புகழை
- உன்னும்நாள் எந்தநாள் அறியேன்
- அருவுரு ஆகும் சிவபிரான் அளித்த
- அரும்பெறல் செல்வமே அமுதே
- குருவுரு ஆகி அருள்தரும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
- றலைந்திடும் பாவியேன் இயற்றும்
- பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
- பாதுகாத் தளிப்பதுன் பரமே
- மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
- முத்தமே முக்தியின் முதலே
- கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
- வண்ணம்இன் றருள்செயாய் என்னில்
- துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
- துணைஅன்றித் துணைஒன்றும் காணேன்
- அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
- அகமகிழ்ந் தணைக்கும்ஆர் அமுதே
- கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- கல்லால் அடியார் கல்லடி உண்டார்
- கண்டார் உலகங் களைவேதம்
- செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- எல்லாம் உடையார் தணிகா சலனார்
- என்நா யகனார் இயல்வேலார்
- நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
- நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
- நினைவார் தங்கள் நெறிக்கேற்க
- அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
- அறுமா முகனார் அயில்வேலார்
- திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
- திருமா மலையார் ஒருமாதின்
- வருத்தம் பாரார் வளையும் தாரார்
- வாரார் அவர்தம் மனம்என்னே.
- பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
- பெயரும் பிச்சைப் பெருமானார்
- திரமன் றினிலே நடனம் புரிவார்
- சிவனார் மகனார் திறல்வேலார்
- தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
- தணிகா சலனார் தமியேன்முன்
- வரமன் றவும்மால் கொளநின் றனனால்
- மடவார் அலரால் மனநொந்தே.
- கண்ணனை அயனை விண்ணவர் கோனைக்
- காக்கவைத் திட்டவேற் கரனைப்
- பண்ணனை அடியர் பாடலுக் கருளும்
- பதியினை மதிகொள்தண் அருளாம்
- வண்ணனை எல்லா வண்ணமும் உடைய
- வரதன்ஈன் றெடுத்தருள் மகனைத்
- தண்ணனை எனது கண்ணனை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
- பராபரஞ் சுடரினை எளியேற்
- கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
- எண்ணுதற் கரியபேர் இன்பை
- உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
- ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
- தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- அரும்பெறல் மணியை அமுதினை அன்பர்
- அன்பினுக் கெளிவரும் அரசை
- விரும்புமா தவத்தோர் உள்ளகத் தொளிரும்
- விளக்கினை அளக்கரும் பொருளைக்
- கரும்பினை என்னுட் கனிந்திடும் கனியை
- முனிந்திடா தருள்அருட் கடலைத்
- தரும்பர சிவத்துள் கிளர்ந்தொளிர் ஒளியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- முத்தனை முத்திக் கொருதனி வித்தை
- முதல்வனை முருகனை முக்கண்
- பித்தனை அத்தன் எனக்கொளும் செல்வப்
- பிள்ளையைப் பெரியவர் உளஞ்சேர்
- சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத்
- துரியனைத் துரியமும் கடந்த
- சத்தனை நித்த நின்மலச் சுடரைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
- மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
- சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
- தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.
- மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
- மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
- ஐய நின்திரு அடித்துணை மறவா
- அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
- உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
- உடைய நாயகன் உதவிய பேறே
- எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
- வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
- புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
- பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
- அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
- அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
- என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
- பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
- தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
- சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
- ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
- உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
- எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
- படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
- தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
- தடத்த ளாவிய தருமநல் தேவே
- பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
- பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
- எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
- டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
- பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
- தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
- நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
- வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
- ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
- நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
- நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
- ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
- என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
- நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
- கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
- மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
- நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
- அலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்
- கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
- மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
- தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
- நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
- சுகமே அடியர் உளத்தோங்கும் சுடரே அழியாத் துணையேஎன்
- அகமே புகுந்த அருள்தேவே அருமா மணியே ஆரமுதே
- இகமே பரத்தும் உனக்கன்றி எத்தே வருக்கும் எமக்கருள
- முகமே திலைஎம் பெருமானே நினக்குண் டாறு முகமலரே.
- ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
- வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
- சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
- நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- காயா தளியக் கனிந்தன்பால் கல்லால் அடிநின் றருள்ஒழுகும்
- கனியுட் சுவையே அடியர்மனக் கவலை அகற்றும் கற்பகமே
- ஓயா துயிர்க்குள் ஒளித்தெவையும் உணர்த்தி அருளும் ஒன்றேஎன்
- உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க் கோர்உறவே
- தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்க்கடலே
- தெய்வப் பதியே முதற்கதியே திருச்செந் தூரில் திகழ்மதியே
- தாயாய் என்னைக் காக்கவரும் தனியே பரம சற்குருவே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- நாணும் அயன்மால் இந்திரன்பொன் நாட்டுப் புலவர் மணம்வேட்ட
- நங்கை மார்கள் மங்கலப்பொன் நாண்காத் தளித்த நாயகமே
- சேணும் புவியும் பாதலமும் தித்தித் தொழுகும் செந்தேனே
- செஞ்சொற் சுவையே பொருட்சுவையே சிவன்கைப் பொருளே செங்கழுநீர்ப்
- பூணும் தடந்தோட்பெருந் தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே
- போகங் கடந்த யோகியர்முப் போகம் விளைக்கும் பொற்புலமே
- தாணு என்ன உலகமெலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
- என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
- காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
- கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
- சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
- திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
- சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வன்பிற் பொதிந்த மனத்தினர்பால் வருந்தி உழல்வேன் அல்லால்உன்
- மலர்த்தாள் நினையேன் என்னேஇம் மதியி லேனும் உய்வேனோ
- அன்பிற் கிரங்கி விடமுண்டோன் அருமை மகனே ஆரமுதே
- அகிலம் படைத்தோன் காத்தோன்நின் றழித்தோன் ஏத்த அளித்தோனே
- துன்பிற் கிடனாம் வன்பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே
- தோகை மயில்மேல் தோன்றுபெருஞ்சுடரே இடராற் சோர்வுற்றே
- தன்பிற் படும்அச் சுரர்ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
- கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
- இல்வினைச் சண்முக என்று நீறிடில்
- நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.
- கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே
- விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே
- இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில்
- நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே.
- அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
- என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
- இன்பறாச் சண்முக என்று நீறிடில்
- துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
- செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
- அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
- எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
- மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
- மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
- வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
- நெறிசிவ சண்முக என்று நீறிடில்
- முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
- காயமாம் கானலைக் கருதி நாள்தொறும்
- மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே
- நேயமாம் சண்முக என்று நீறிடில்
- தோயமாம் பெரும்பிணித் துன்பம் நீங்குமே.
- சதிசெயும் மங்கையர் தமது கண்வலை
- மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே
- நிதிசிவ சண்முக என்று நீறிடில்
- வதிதரும் உலகில்உன் வருத்தம் தீருமே.
- பசையறு வஞ்சகர் பாற்சென் றேங்கியே
- வசைபெற நாள்தொறும் வருந்து நெஞ்சமே
- இசைசிவ சண்முக என்று நீறிடில்
- திசைபெற மதிப்பர்உன் சிறுமை நீங்குமே.
- யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
- தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
- காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
- தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- பிரியம் மேயவன் மடந்தையர் தங்களைப் பிடித்தலைத் திடுவஞ்சக்
- கரிய பேயினும் பெரியபேய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- அரிய மால்அயன் இந்திரன் முதலினோர் அமர்உல கறிந்தப்பால்
- தெரிய ஓங்கிய சிகரிசூழ் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
- விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
- நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
- வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
- தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
- சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
- வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
- நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
- மன்றேர் தணிகையி னின்றீர் கதிதர வந்தீரோ
- என்றே னசைதரு மின்றேன் மொழியாய் யானுன்பால்
- இன்றே சுரருல கெய்திட வந்தே னென்றார்காண்
- குன்றேர் முலையா யென்னடி யவர்சொற் குறிதானே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- 14.காந்தளோர்,நீலமோர். திகழ்வென்பால்.தொ.வே.முதற்பதிப்பு
- கங்கையஞ் சடைசேர் முக்கட் கரும்பருள் மணியே போற்றி
- அங்கையங் கனியே போற்றி அருட்பெருங் கடலே போற்றி
- பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ் சுடரே போற்றி
- சங்கைதீர்த் தருளும் தெய்வச் சரவண பவனே போற்றி.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி
- பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி
- நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி
- சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.
- மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
- மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
- சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
- தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
- விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி
- கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி
- பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி
- எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி
- சத்திவேற் கரத்த போற்றி சங்கரி புதல்வ போற்றி
- சித்திதந் தருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி
- பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
- மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
- பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
- தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
- கோதிலாக் குணத்தோய் போற்றி குகேசநின் பாதம் போற்றி
- தீதிலாச் சிந்தை மேவும் சிவபரஞ் சோதி போற்றி
- போதில்நான் முகனும் காணாப் பூரண வடிவ போற்றி
- ஆதிநின் தாள்கள் போற்றி அநாதிநின் அடிகள் போற்றி.
- வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி
- நாதமும் கடந்து நின்ற நாதநின் கருணை போற்றி
- போதமும் பொருளும் ஆகும் புனிதநின் பாதம் போற்றி
- ஆதரம் ஆகி என்னுள் அமர்ந்தஎன் அரசே போற்றி.
- மதிவளர் சடைமுடி மணிதரு சுரர்முடி மணிஎன்கோ
- பதிவளர் சரவண பவநவ சிவகுரு பதிஎன்கோ
- துதிவளர் துணைஅடி தொழும்அடி யவர்பெறு துணைஎன்கோ
- நிதிவளர் பரசுக நிலைபெறும் நெறிதரு நினையானே.
- முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
- உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
- அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
- மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.
- உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
- திலகம் திகழிடத்துத் தேவே-இலகுதிருப்
- புள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்
- உள்ளிருக்கும் துன்பை ஒழி.
- செக்கச் சிவந்தே திகழ்ஒருபால் பச்சையதாய்
- அக்கட் பரிதிபுரத் தார்ந்தோங்கும்-முக்கண்
- குழைக்கரும்பீன் முத்துக் குமார மணியேஎன்
- பிழைக்கிரங்கி ஆளுதியோ பேசு.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- நீர்வேய்ந்த சடைமுடித்துத் தோலுடுத்து நீறணிந்து நிலவுங் கொன்றைத்
- தார்வேய்ந்து விடங்கலந்த களங்காட்டி நுதலிடைஓர் தழற்கண் காட்டிப்
- பேர்வேய்ந்த மணிமன்றில் ஆடுகின்ற பெரும்பித்தப் பெருமான் ஈன்ற
- கூர்வேய்ந்த வேல்அணிதோள் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- சத்திவேல் கரத்தநின் சரணம் போற்றிமெய்ப்
- பத்தியோ டருச்சனை பயிலும் பண்பினால்
- முத்திசார் குவர்என மொழிதல் கேட்டுநல்
- புத்தியோ டுன்பதம் புகழ்வர் புண்ணியர்.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- ஆறுமு கங்கொண்ட ஐயாஎன் துன்பம் அனைத்தும்இன்னும்
- ஏறுமு கங்கொண்ட தல்லால் இறங்குமு கம்இலையால்
- வீறுமு கங்கொண்ட கைவேலின் வீரம் விளங்கஎன்னைச்
- சீறுமு கங்கொண்ட அத்துன்பம் ஓடச் செலுத்துகவே.
- பண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு
- கண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்
- திண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு
- மண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.
- வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
- நன்குலஞ் சேர்விண் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
- நின்குலஞ் சேர்த்தனை இன்றுவி டேல்உளம் நேர்ந்துகொண்டு
- பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- சிந்தைக் கும்வழி இல்லைஉன் தன்மையைத்
- தெரிதற் கென்னும் திருத்தணி கேசனே
- உந்தைக் கும்வழி இல்லைஎன் றால்இந்த
- உலகில் யாவர் உனைஅன்றி நீர்மொள்ள
- மொந்தைக் கும்வழி இல்லை வரத்திரு
- முண்டைக் கும்வழி இல்லை அரையில்சாண்
- கந்தைக் கும்வழி இல்லை அரகர
- கஞ்சிக் கும்வழி இல்லைஇங் கையனே.
- ஓரிரண்டா நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்
- தாரிரண்டார் போனின்ற தையன்மீர்-வாரிரண்டாத்
- தொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா
- மைய லழிக்கு மருந்து.
- திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
- திறலோங்கு செல்வம்ஓங்கச்
- செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
- திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
- மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
- வளர்கருணை மயம்ஓங்கிஓர்
- வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
- வடிவாகி ஓங்கிஞான
- உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
- ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
- உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
- உய்கின்ற நாள்எந்தநாள்
- தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
- இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
- திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
- இடுகின்ற திறமும்இறையாம்
- நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
- நினைவிடா நெறியும்அயலார்
- நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
- நெகிழாத திடமும்உலகில்
- சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
- தீங்குசொல் லாததெளிவும்
- திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
- திருவடிக் காளாக்குவாய்
- தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பார்கொண்ட நடையில்வன் பசிகொண்டு வந்திரப்
- பார்முகம் பார்த்திரங்கும்
- பண்பும்நின் திருவடிக் கன்பும்நிறை ஆயுளும்
- பதியும்நல் நிதியும்உணர்வும்
- சீர்கொண்ட நிறையும்உட் பொறையும்மெய்ப் புகழும்நோய்த்
- தீமைஒரு சற்றும்அணுகாத்
- திறமும்மெய்த் திடமும்நல் இடமும்நின் அடியர்புகழ்
- செப்புகின் றோர்அடைவர்காண்
- கூர்கொண்ட நெட்டிலைக் கதிர்வேலும் மயிலும்ஒரு
- þக்‘ழியங் கொடியும்விண்ணோர்
- கோமான்தன் மகளும்ஒரு மாமான்தன் மகளும்மால்
- கொண்டநின் கோலமறவேன்
- தார்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
- மதித்திடான் நின் அடிச்சீர்
- மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
- மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
- சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
- சிறுகுகையி னூடுபுகுவான்
- செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
- செய்குன்றில் ஏறிவிழுவான்
- இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
- இறங்குவான் சிறிதும்அந்தோ
- என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
- கேழையேன் என்செய்குவேன்
- தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
- வள்ளல்உன் சேவடிக்கண்
- மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
- வாய்ந்துழலும் எனதுமனது
- பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
- பித்துண்ட வன்குரங்கோ
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
- பேதைவிளை யாடுபந்தோ
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
- காற்றினாற் சுழல்கறங்கோ
- காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
- கர்மவடி வோஅறிகிலேன்
- தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
- பெய்சிறையில் இன்னும்ஒருகால்
- பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்
- பெறுந்துயர் மறந்துவிடுமோ
- இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்
- இறப்பிக்க எண்ணம்உறுமோ
- எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
- இருந்தவடு எண்ணுறானோ
- கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
- காசுக்கும் மதியேன்எலாம்
- கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்
- கலந்திடப் பெற்றுநின்றேன்
- தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற
- நிலன்உண்டு பலனும்உண்டு
- நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
- நெறிஉண்டு நிலையும் உண்டு
- ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு
- உடைஉண்டு கொடையும்உண்டு
- உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
- உளம்உண்டு வளமும்உண்டு
- தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
- செல்வங்கள் யாவும்உண்டு
- தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
- தியானமுண் டாயில்அரசே
- தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
- ஒல்லைவிட் டிடவுமில்லை
- உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
- உனைஅன்றி வேறும்இல்லை
- இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
- இசைக்கின்ற பேரும்இல்லை
- ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
- றியம்புகின் றோரும்இல்லை
- வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
- மற்றொரு வழக்கும்இல்லை
- வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
- வன்மனத் தவனும்அல்லை
- தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- அருளார் அமுதே சரணம் சரணம்
- அழகா அமலா சரணம் சரணம்
- பொருளா எனைஆள் புனிதா சரணம்
- பொன்னே மணியே சரணம் சரணம்
- மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
- மயில்வா கனனே சரணம் சரணம்
- கருணா லயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- முடியா முதலே சரணம் சரணம்
- முருகா குமரா சரணம் சரணம்
- வடிவேல் அரசே சரணம் சரணம்
- மயிலூர் மணியே சரணம் சரணம்
- அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
- அரியாய் பெரியாய் சரணம் சரணம்
- கடியாக் கதியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- பூவே மணமே சரணம் சரணம்
- பொருளே அருளே சரணம் சரணம்
- கோவே குகனே சரணம் சரணம்
- குருவே திருவே சரணம் சரணம்
- தேவே தெளிவே சரணம் சரணம்
- சிவசண் முகனே சரணம் சரணம்
- காவேர் தருவே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- நடவும் தனிமா மயிலோய் சரணம்
- நல்லார் புகழும் வல்லோய் சரணம்
- திடமும் திருவும் தருவோய் சரணம்
- தேவர்க் கரியாய் சரணம் சரணம்
- தடவண் புயனே சரணம் சரணம்
- தனிமா முதலே சரணம் சரணம்
- கடவுள் மணியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
- ஒன்றே பலவே சரணம் சரணம்
- தெளியும் தெருளே சரணம் சரணம்
- சிவமே தவமே சரணம் சரணம்
- அளியும் கனியே சரணம் சரணம்
- அமுதே அறிவே சரணம் சரணம்
- களியொன் றருள்வோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- மன்னே எனைஆள் வரதா சரணம்
- மதியே அடியேன் வாழ்வே சரணம்
- பொன்னே புனிதா சரணம் சரணம்
- புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
- அன்னே வடிவேல் அரசே சரணம்
- அறுமா முகனே சரணம் சரணம்
- கன்னேர் புயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
- டாறு புயந்திகழ் அற்புதமும்
- வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
- மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
- ஆனந்த மான அமுதனடி - பர
- மானந்த நாட்டுக் கரசனடி
- தானந்த மில்லாச் சதுரனடி - சிவ
- சண்முகன் நங்குரு சாமியடி.
- வேதமுடி சொல்லும் நாதனடி - சதுர்
- வேதமு டிதிகழ் பாதனடி
- நாத வடிவுகொள் நீதனடி - பர
- நாதங் கடந்த நலத்தனடி.
- தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
- தத்துவம் அன்றித் துடங்காண்டி
- சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
- சண்முக நாதனைப் பாடுங்கடி.
- வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
- வள்ளி மணாளரே வாரும்
- புள்ளி மயிலோரே வாரும்.
- சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
- சண்முக நாதரே வாரும்
- உண்மை வினோதரே வாரும்.
- பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
- பொன்னான வேலரே வாரும்
- மின்னார்முந் நூலரே வாரும்.
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
- வேலாயுதத் தோரே வாரும்
- காலாயுதத் தோரே வாரும்.
- சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
- தேவர்கள் தேவரே வாரும்
- மூவர் முதல்வரே வாரும்.
- வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால்
- என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும்
- தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர்
- பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே.
- மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
- கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
- ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
- சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
- படியே அளந்த மாலவனும் பழைய மறைசொற் பண்ணவனும்
- முடியீ றறியா முதற்பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கிறையே
- அடியார் களுக்கே இரங்கிமுனம் அடுத்த சுரநோய் தடுத்ததுபோல்
- படிமீ தடியேற் குறுபிணிபோம் படிநீ கடைக்கண் பார்த்தருளே.
- மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
- மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
- ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
- ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
- இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
- இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
- என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
- எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
- சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
- சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன்
- இதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதான்
- எதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
- அதுவின் றணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் வேளை யருள நின்றதென்றேன்
- சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொல்லுமென்றேன்
- பட்டுண் மருங்கே நீகுழந்தைப் பருவ மதனின் முடித்ததென்றார்
- அட்டுண் டறியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
- அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை
- யெண்கார் முகமாப் பொன்னென்றே னிடையிட் டறித லரிதென்றார்
- மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவில் லன்றென்றார்
- அண்கார்க் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- அலங்கும் புனற்செய் யொற்றியுளீ ரயன்மா லாதி யாவர்கட்கும்
- இலங்கு மைகாணீரென்றே னிதன்முன் னேழ்நீ கொண்டதென்றார்
- துலங்கு மதுதா னென்னென்றேன் சுட்டென் றுரைத்தா ராகெட்டேன்
- அலங்கற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம்
- ஏரார் பெயரின் முன்பினிரண் டிரண்ட கத்தா ரென்றாரென்
- நேரா வுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார்
- ஆரார் சடைய ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
- ஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றார்
- என்னி லிதுதா னையமென்றே னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
- அன்னி லோதி யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே .
- வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
- உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
- அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் விளங்கு மதனன் மென்மலரே
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் காணென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றார்
- ஆற்றா விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- திண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
- அண்ணஞ் சுகமே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உகஞ்சே ரொற்றி யூருடையீ ரொருமா தவரோ நீரென்றேன்
- முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் மும்மா தவர்நா மென்றுரைத்தார்
- சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன் றோகா யுனது மொழிக்கென்றார்
- அகஞ்சேர் விழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- ஆரா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வருத்தந் தவரீ ரொற்றியுளீர் மனத்த காத முண்டென்றேன்
- நிருத்தந் தருநம் மடியாரை நினைக்கின் றோரைக் கண்டதுதன்
- றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ் சேருந் தூர மோடுமென்றார்
- அருத்தந் தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாத் தோலோடு வியாளத் தோலு முண்டென்றார்
- ஆலார் களத்த ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றற்றதென்றார்
- அடியார்க் கெளியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ருள்ளா ருவந்தின் றுற்றனர்யான்
- என்றும் பெரியீர் நீர்வருதற் கென்ன நிமித்த மென்றுரைத்தேன்
- துன்றும் விசும்பே யென்றனர்நான் சூதா முமது சொல்லென்றேன்
- குன்றுங் குடமு மிடையுனது கொங்கை யெனவே கூறினரே.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென்
- மானங் கெடுத்தீ ரென்றேன்முன் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
- ஊனந் தடுக்கு மிறையென்றே னுலவா தடுக்கு மென்றார்மால்
- ஏனம் புடைத்தீ ரணையென்பீ ரென்றே னகலா ரென்றாரே.
- இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
- பெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார்
- தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார்
- கரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
- ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
- சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
- ஞால ராதி வணங்குமொற்றி நாதர் நீரே நாட்டமுறும்
- பால ராமென் றுரைத்தேனாம் பால ரலநீ பாரென்றார்
- மேல ராவந் திடுமென்றேன் விளம்பேல் மகவு மறியுமென்றார்
- கோல ராமென் றுரைத்தேன்யாங் கொண்டோ முக்க ணென்றாரே.
- வண்மை தருவீ ரொற்றிநின்று வருவீ ரென்னை மருவீர்நீர்
- உண்மை யுடையீ ரென்றேனா முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
- கண்மை யுடையீ ரென்றேனீ களமை யுடையேம் யாமென்றார்
- தண்மை யருளீ ரென்றேனாந் தகையே யருள்வ தென்றாரே.
- கனிமா னிதழி முலைச்சுவடு களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
- தனிமா னேந்தி யென்றேனென் றலைமே லொருமா னேந்தியென்றார்
- துனிமாற் றுகிலீ ரென்றேனற் றுகில்கோ வணங்கா ணென்றாரென்
- பனிமால் வரையீ ரென்றேனென் பனிமால் வரைகா ணென்றாரே.
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
- மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
- தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
- தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
- ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
- குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
- கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
- காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
- பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே
- வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய்
- ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
- நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
- விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
- எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
- விளம்பஎனில் இவ்வுலகிலோ
- மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
- மேவுமண் ணெனினும்உதவக்
- கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
- களவுகட் காமம்முதலாக்
- கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
- கனவிலும் கண்டறிகிலார்
- ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
- அங்கைதாங் கங்கைஎன்னும்
- ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
- வசுத்தநீங் காதுகண்டாய்
- மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
- கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
- அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
- குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே.
- வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
- தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
- ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
- ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
- மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை
- அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல்
- கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும்
- கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே.
- கருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்
- தருணச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை
- வருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால்
- பொருணச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே.
- நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
- அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
- சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
- வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
- ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
- ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
- பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
- சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே.
- ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
- ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
- ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
- தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
- பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
- பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
- பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க
- உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
- திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே
- சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
- வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன
- வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
- அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
- யோகநிலை அருளுமலையே
- அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
- தகந்தெளிய அருள்செய்தெருளே
- ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
- அறிதிஎன அருளுமுதலே
- கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட
- கருணையங் கடல்அமுதமே
- காழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்
- கருதுசம யாதிபர்களும்
- கண்டுபொழி அருள்முகில் சம்பந்த வள்ளலாங்
- கடவுளே ஓத்தூரினில்
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
- கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
- உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
- கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.
- பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
- நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
- மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
- பொய்யகலப் போற்றுவம்இப் போது.
- சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
- ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
- வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
- தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
- தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
- நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
- திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
- புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
- தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
- தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
- மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
- தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
- தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
- மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
- தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
- தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
- நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
- ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
- தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
- புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
- என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
- தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
- கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
- மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
- திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
- ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
- நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
- தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
- பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
- தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
- மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.
- அற்புதக் கணபதி அமல போற்றியே
- தற்பர சண்முக சாமி போற்றியே
- சிற்பர சிவமகா தேவ போற்றியே
- பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே.
- மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
- ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
- தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
- சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி.
- கலைநிறை கணபதி சரணஞ் சரணம்
- கஜமுக குணபதி சரணஞ் சரணம்
- தலைவநின் இணையடி சரணஞ் சரணம்
- சரவண பவகுக சரணஞ் சரணம்
- சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்
- சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
- உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்
- உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம்.
- பரசிவா னந்தபரி பூரண சதானந்த
- பாவனா தீதமுக்த
- பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
- பௌதிகா தாரயுக்த
- சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
- சாம்பவ விநாசரகித
- சாஸ்வத புராதர நிராதர அபேதவா
- சாமகோ சரநிரூபா
- துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
- சுகோதய பதித்வநிமல
- சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
- சோமசே கரசொரூபா
- அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
- டணுவளவும் அறிகிலாத
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- ஜோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய
- சுத்தமணியே அரியநல்
- துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால்
- துலங்குமணி யேஉயர்ந்த
- ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி
- தானந்த மானமணியே
- சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர்
- சமரச சுபாவமணியே
- நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர்
- நினைவிலமர் கடவுண்மணியே
- நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத
- நித்யஆ னந்தமணியே
- ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக்
- கன்புதவும் இன்பமணியே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
- சாமிசிவ காமியிடமார்
- சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
- சத்யமொழி தன்னைநம்பி
- எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
- ஏத்திவினை தனைமாற்றியே
- இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
- ஏழையேன் ஒருவன்அந்தோ
- சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
- செப்புவாய் வேதனாதி
- தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
- சித்தர்களும் ஏவல்புரிய
- அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
- கருண்முக விலாசத்துடன்
- அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- அரங்காய மனமாயை அளக்கர் ஆழம்
- அறியாமல் காலிட்டிங் கழுந்து கின்றேன்
- இரங்காயோ சிறிதும்உயிர் இரக்கம் இல்லா
- என்மனமோ நின்மனமும் இறைவி உன்றன்
- உரங்காணும் அரசியற்கோல் கொடுங்கோல் ஆனால்
- ஓடிஎங்கே புகுந்தெவருக் குரைப்ப தம்மா
- திரங்காணாப் பிள்ளைஎனத் தாய்வி டாளே
- சிவகாம வல்லிஎனும் தெய்வத் தாயே.
- அருளே அறிவே அன்பேதெள் ளமுதே மாதர் அரசேமெய்ப்
- பொருளே தெருளே மாற்றறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
- இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இவ்வடியேன்
- மருளே தவிர்த்த சிவகாம வல்லி நினக்கே வந்தனமே.
- உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
- இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
- கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
- பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.
- உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
- சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
- நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
- தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
- இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே.
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
- இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.
- ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
- பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
- நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
- ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- எண்ணினைப்ப தின்றிநினை யெள்ளி யுரைத்ததனை
- உண்ணினைக்குந் தோறுமெனக் குள்ள முருகுதடா.
- கடையவனேன் வைதகடுஞ் சொன்னினைக்குந் தோறும்
- உடையவனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- பித்தனெனத் தீமை பிதற்றியதெண் ணுந்தோறும்
- உத்தமனே யென்னுடைய வுள்ள முருகுதடா.
- மன்றுடையாய் நின்னருளை வைதகொடுஞ் சொற்பொருளில்
- ஒன்றை நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
- ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
- உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.
- ஈடில்பெருந் தாயி லினியாய்நின் றண்ணருட்பால்
- ஊடியசொல் லுன்னிலெனக் குள்ள முருகுதடா.
- புரைத்தமன வஞ்சப் புலையேன் றிருவருளை
- உரைத்தபிழை யெண்ணிலெனக் குள்ள முருகுதடா.
- நாடி நினையா நவையுடையேன் புன்சொலெலாம்
- ஓடி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
- ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
- மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
- மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
- வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
- மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
- வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
- மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
- வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
- மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
- வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
- வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
- விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா.
- வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
- என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.
- அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
- இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
- தேசுறுநின் றண்ணருளாந் தெள்ளமுதங் கொள்ளவுள்ளே
- ஆசைபொங்கு கின்றதெனக் கன்புடைய ஐயாவே.
- புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்
- எங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம்.
- போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற
- நீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம்.
- புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்
- செங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம்.
- புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்
- பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம்.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- 197. தாளைஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
- ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
- ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
- ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
- ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
- அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
- அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
- அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- வாரமு மழியா வரமுந் தருந்திரு
- வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
- அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமுங் காணா
- ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
- உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
- அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
- படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
- அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
- வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
- அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
- முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
- ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
- எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
- அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
- சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
- அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
- சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
- அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- உபரச வேதியி னுபயமும் பரமும்
- அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- செடியறுத் தேதிட தேகமும் போகமும்
- அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
- வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
- ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
- சாவா நிலையிது தந்தன முனக்கே
- ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
- சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
- ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
- எண்டர முடியா திலங்கிய பற்பல
- அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
- மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
- ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
- அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
- அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
- அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- படிமுடி கடந்தனை பாரிது பாரென
- அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
- ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
- அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
- ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
- மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
- பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
- தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
- சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
- அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
- கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
- டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
- உருவமு மருவமு முபயமு மாகிய
- அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
- இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
- அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
- ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
- அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
- புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
- அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
- அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
- அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
- அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
- அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறநடு வதனாற் புறப்புற நடுவை
- அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
- அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
- அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
- அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
- அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
- அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
- அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காலமே முதலிய கருவிகள் கலைவெளி
- ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
- ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
- ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
- அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
- அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்திடை முளையும் முளையிடை விளைவும்
- அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- முளையதின் முளையும் முளையினுண் முளையும்
- அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
- அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
- அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
- அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
- ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
- அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
- அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- முடியினுண் முடியும் முடியினின் முடியும்
- அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
- ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
- அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
- அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
- அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
- வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
- ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
- ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
- அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
- அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
- ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
- அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
- அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
- ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
- அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
- ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
- அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
- தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- அகப்புற வமுதளித் தைவரா திகளை
- அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- தருமக வமுதாற் சத்திசத் தர்களை
- அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
- ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
- ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
- விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
- அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
- அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
- கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
- அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
- மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
- ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
- எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
- அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
- மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
- ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
- புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
- சிரமுற நாட்டிய சிவமே சிவமே
- கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
- செல்வமு மளித்த சிவமே சிவமே
- அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
- தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
- உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
- உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
- அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
- அருளுற முயல்கவென் றருளிய சிவமே
- அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
- வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
- அருளே நம்மிய லருளே நம்முரு
- அருளே நம்வடி வாமென்ற சிவமே
- அருளே நம்மடி யருளே நம்முடி
- அருளே நம்நடு வாமென்ற சிவமே
- அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
- அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
- சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
- ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
- உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
- குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
- பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
- திரமுற வருளிய திருவருட் குருவே
- கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
- குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
- பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
- தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
- பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
- வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
- சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
- அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
- உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
- பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
- ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
- ஈன்றமு தளித்த வினியநற் றாயே
- பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
- வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
- அருளமு தேமுத லைவகை யமுதமும்
- தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
- இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
- உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
- நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
- பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
- மற்றுள வமுத வகையெலா மெனக்கே
- உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
- கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
- அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே
- சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
- வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
- இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
- தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
- சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
- கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
- தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
- ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
- தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
- என்சித் தாக்கிய என்றனித் தந்தையே
- உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
- யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
- துறையிது வழியிது துணிவிது நீசெயும்
- முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
- உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
- டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
- செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
- குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
- குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
- அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
- பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
- கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே
- சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்
- கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
- என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
- என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
- பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
- இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
- ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
- ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
- துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
- உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
- என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
- என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
- முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
- எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
- கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
- விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்
- உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
- வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
- கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
- நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
- உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்
- உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
- சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
- மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
- செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
- மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்
- பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
- ஆரண முடியுட னாகம முடியுங்
- கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
- நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
- சத்திய வமுதே தனித்திரு வமுதே
- நித்திய வமுதே நிறைசிவ வமுதே
- சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
- மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
- ஆனந்த வமுதே யருளொளி யமுதே
- தானந்த மில்லாத் தத்துவ வமுதே
- நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
- சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
- பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
- கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
- அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
- உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
- பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
- தனிமுத லாய சிதம்பர வமுதே
- உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
- அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
- அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
- பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
- பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
- பண்டமுங் காட்டிய பராபர மணியே
- விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
- கண்பெற நடத்துங் ககனமா மணியே
- பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
- சார்புற நடத்துஞ் சரவொளி மணியே
- மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
- தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
- நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
- சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
- அகரமு முகரமு மழியாச் சிகரமும்
- வகரமு மாகிய வாய்மைமந் திரமே
- ஐந்தென வெட்டென வாறென நான்கென
- முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
- வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
- ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
- உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
- மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
- இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
- சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
- மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
- ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்
- காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
- ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
- உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
- வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
- புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
- வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
- மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
- இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
- நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
- பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
- எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
- முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
- இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
- குதவினு முலவா தோங்குநன் னிதியே
- இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
- றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே
- புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்
- அற்புதக் கடலே யமுதத்தண் கடலே
- உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
- கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
- இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
- உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
- என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே
- என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே
- இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
- உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
- மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
- உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
- ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
- தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
- அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
- பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
- உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
- அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
- பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
- என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
- தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
- என்னுளே பொங்கிய என்றனி யன்பே
- தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
- ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
- ஆகம முடிமே லருளொளி விளங்கிட
- வேகம தறவே விளங்கொளி விளக்கே
- தண்ணிய வமுதே தந்தென துளத்தே
- புண்ணியம் பலித்த பூரண மதியே
- உய்தர வமுத முதவியென் னுளத்தே
- செய்தவம் பலித்த திருவளர் மதியே
- பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
- நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
- உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
- வயங்கிய கருணை மழைபொழி மழையே
- முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
- என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
- ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
- ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
- வேதமு மாகம விரிவும் பரம்பர
- நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
- வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
- நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
- மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
- அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
- உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
- அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
- சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
- சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
- அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
- அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
- மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
- யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
- கோடிகோ டிகளும்ஆங் காங்கே
- நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
- நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
- விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
- மெய்யறி வானந்தம் விளங்க
- அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
- கருவினால் பகுதியின் கருவால்
- எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
- இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
- விண்முதல் பரையால் பராபர அறிவால்
- விளங்குவ தரிதென உணர்ந்தோர்
- அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சுத்தவே தாந்த மவுனமோ அலது
- சுத்தசித் தாந்தரா சியமோ
- நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
- நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
- புத்தமு தனைய சமரசத் ததுவோ
- பொருள்இயல் அறிந்திலம் எனவே
- அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
- இதுஅது எனஉரைப் பரிதாய்த்
- தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
- தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
- பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
- புத்தமு தருத்திஎன் உளத்தே
- அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
- அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
- பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
- பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
- இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
- எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
- சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
- தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
- நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
- நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
- பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
- பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
- சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
- இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
- தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
- சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
- நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
- ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
- திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
- இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
- பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
- பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
- விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
- விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
- உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
- வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
- புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
- புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
- மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
- விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
- உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே
- முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே
- படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே
- தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே.
- சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
- தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
- வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
- பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.
- திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
- உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
- கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
- குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.
- நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
- பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
- துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
- மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.
- நடம்வளர் நலமே நலம்வளர் நடமே நடநலம் வளர்தரும் ஒளியே
- இடம்வளர் வலமே வலம்வளர் இடமே இடம்வலம் வளர்தரும் இசைவே
- திடம்வளர் உளமே உளம்வளர் திடமே திடவுளம் வளர்தரு திருவே
- கடம்வளர் உயிரே உயிர்வளர் கடமே கடமுயிர் வளர்சிவ பதியே.
- செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் செல்லினால்அரிப்புண்டசிறியேன்
- அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் அறிந்தவர் தங்களை அடையேன்
- படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்பணத்திலும் கொடியனேன் வஞ்கக்
- கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
- விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
- அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
- அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
- கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
- கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
- களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
- கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
- இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
- இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
- அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
- அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
- பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
- பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்
- தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
- தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
- இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
- இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
- பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
- புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
- நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
- நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
- கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
- தாவு மான்எனக் குதித்துக்கொண் டோடித்
- தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
- கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
- கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
- ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
- ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
- சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
- தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.
- போக மாதியை விழைந்தனன் வீணில்
- பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
- தேக மாதியைப் பெறமுயன் றறியேன்
- சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
- காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும்
- காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
- ஆக மாதிசொல் அறிவறி வேனோ
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- 199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு.
- கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
- கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
- நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
- நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
- சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
- திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
- இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
- சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
- யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
- உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
- ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
- அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
- ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
- மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
- நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
- நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
- போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
- பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
- ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
- கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
- கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
- கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
- மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
- மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
- திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
- தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
- உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
- ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
- இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- 200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு.
- அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
- வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
- நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
- கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
- பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
- ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
- மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
- நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
- மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
- பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
- கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
- இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
- முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய
- உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே
- மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக்
- கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ.
- அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
- இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
- செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
- எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
- அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
- வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
- தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
- எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
- இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார்
- வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன்
- அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத்
- துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே.
- எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ
- அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன்
- சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ
- முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.
- கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
- வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
- பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
- ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
- 201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு. பி. இரா. பாடம்.
- 202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு.
- 203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா.
- போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
- ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
- காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
- மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
- நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
- போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
- ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
- ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
- சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
- தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
- வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
- தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன்
- கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
- வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன்
- பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.
- வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்
- உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே
- துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப்
- பொறுத்தலேஅறியேன் மலப்புலைக்கூட்டைப்பொறுத்தனன்என்செய்வேன்எந்தாய்.
- அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
- தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
- பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
- முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
- அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
- அச்சமும் அவலமும் உடையேன்
- செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
- திருவுளத் தெனைநினை யாயேல்
- எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
- பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
- உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன்
- உடல்பொருள் ஆவியும் உனக்கே
- பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த
- பின்னும்நான் தளருதல் அழகோ
- என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி
- முறிதல்ஓர் கணம்தரி யேனே.
- தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது
- தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
- தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும்
- தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான்
- எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே
- எய்துகேன் யார்துணை என்பேன்
- திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும்
- திருவுளம் தெரிந்தது தானே.
- ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
- நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
- ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
- இந்தநாள் அடியனேன் இங்கே
- ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
- உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
- ஏனென வினவா திருத்தலும் அழகோ
- இறையும்நான் தரிக்கலன் இனியே.
- இனியநற் றாயின் இனியஎன் அரசே
- என்னிரு கண்ணினுண் மணியே
- கனிஎன இனிக்கும் கருணையா ரமுதே
- கனகஅம் பலத்துறும் களிப்பே
- துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும்
- சோர்வுறு முகமும்கொண் டடியேன்
- தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான்
- தந்தநற் றந்தைநீ அலையோ.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- அழகனே ஞான அமுதனே என்றன்
- அப்பனே அம்பலத் தரசே
- குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும்
- கொழுநனே சுத்தசன் மார்க்கக்
- கழகநேர் நின்ற கருணைமா நிதியே
- கடவுளே கடவுளே எனநான்
- பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில்
- பழங்கணால் அழுங்குதல் அழகோ.
- பழம்பிழி மதுரப் பாட்டல எனினும்
- பத்தரும் பித்தரும் பிதற்றும்
- கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக்
- கிளர்ச்சிஎன் றறிந்தநாள் முதலாய்
- வழங்குநின் புகழே பாடுறு கின்றேன்
- மற்றொரு பற்றும்இங் கறியேன்
- சழங்குடை உலகில் தளருதல் அழகோ
- தந்தையுந் தாயும்நீ அலையோ.
- தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான
- சபையிலே தனிநடம் புரியும்
- தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன்
- தூக்கமும் சோம்பலும் துயரும்
- மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும்
- வளைத்தெனைப் பிடித்திடல் வழக்கோ
- நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன்
- நல்அருட் சோதிதந் தருளே.
- இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர்
- இயற்கையின் நிறைந்தபே ரின்பே
- அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே
- அம்பலத் தாடல்செய் அமுதே
- வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து
- வழங்குக நின்அருள் வழங்கல்
- நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ
- நான்உயிர் தரிக்கலன் அரசே.
- சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
- தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
- நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
- நன்மையும் நரைதிரை முதலாம்
- துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
- சுகவடி வம்பெறும் பேறும்
- தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
- தந்தருள் தருணம்ஈ தெனக்கே.
- என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
- றிருள்இர வொழிந்தது முழுதும்
- மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
- மங்கல முழங்குகின் றனசீர்ப்
- பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
- பூவையர் புணர்ந்திடப் போந்தார்
- சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
- துலங்கவந் தருளுக விரைந்தே.
- சோறு வேண்டினும் துகில்அணி முதலாம்
- சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம்
- வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
- மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே
- மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- சாறு வேண்டிய பொழில்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
- திகழ்தனித் தந்தையே நின்பால்
- சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை
- செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
- யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- போரிட முடியா தினித்துய ரொடுநான்
- பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
- தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ
- தமியனேன் தளர்ந்துளங் கலங்கி
- எந்தையே குருவே இறைவனே முறையோ
- என்றுநின் றோலிடு கின்றேன்
- சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல்
- சிறியனேன் என்செய்கேன் ஐயோ
- சந்தையே புகுந்த நாயினில் கடையேன்
- தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரோ.
- என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல்
- ஏற்றினை யாவரும் வியப்பப்
- பொன்இயல் வடிவும் புரைபடா உளமும்
- பூரண ஞானமும் பொருளும்
- உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர்
- உவகையும் உதவினை எனக்கே
- தன்னிகர் இல்லாத் தலைவனே நினது
- தயவைஎன் என்றுசாற் றுவனே.
- பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
- தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
- முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
- அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணை யாலே
- பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தத் தருட்பதமும் பாலிக் கின்றோய்
- எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே ஆடல்இடு கின்றோய் நின்னால்
- அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
- ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
- போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
- புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
- வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
- வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
- பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
- பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
- சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
- சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
- பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
- பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
- நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
- நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
- மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
- வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.
- களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
- வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
- கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
- குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
- துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
- ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
- சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
- கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
- காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
- விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
- விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
- தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
- தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
- செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
- காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
- கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
- மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
- விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
- ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
- எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
- ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
- நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
- ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
- உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
- ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
- இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
- ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
- ஐயர்திரு வுளம்எதுவோ யாதுமறிந் திலனே.
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
- திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுதம் ஊட்டிக்
- கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
- கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
- உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
- தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
- திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
- மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
- கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்டகொடியனேன்குணங்கள்
- முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென்முனிவுதீர்ந்தருளே.
- பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் புல்முனை ஆயினும் பிறர்க்கு
- நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே
- கைபிழை யாமை கருதுகின் றேன்நின் கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
- செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.
- அப்பணி முடி204 என் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே
- இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே
- எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே
- செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.
- முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
- பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
- என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
- சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
- இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் எய்துவித் திடுதியேல் அதுவுன்
- தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் சம்மதம் அன்றுநான் இதனைப்
- பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் பால்உணும் காலையே உளதால்
- மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் மதிப்பெலாம் திருவடி மலர்க்கே.
- அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
- பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே
- செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன்
- எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
- கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
- திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
- தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
- இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
- இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
- எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
- அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
- கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே.
- சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
- புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
- பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
- உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.
- சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
- நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
- சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
- தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.
- மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
- கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
- எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
- நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
- 204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு.
- 205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க.
- தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
- வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
- ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
- ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
- கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
- வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
- தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
- தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
- இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
- விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
- கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
- அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
- மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
- குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
- பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
- தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
- விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
- தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
- கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
- கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
- விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
- ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
- கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
- நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
- ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
- ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
- தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
- என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
- நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
- அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
- இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
- மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
- உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
- தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
- இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
- சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
- மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
- வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
- நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
- உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
- பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
- நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
- மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
- இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
- தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
- பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
- உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
- பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
- உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
- மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
- ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
- அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
- பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
- வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
- புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
- என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
- வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
- என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
- எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
- நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
- கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
- மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
- வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
- பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
- வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
- சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
- பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும்
- கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
- தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
- நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
- காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
- ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
- என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
- துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
- வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
- அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
- அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
- பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
- முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
- தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
- நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
- தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
- கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
- புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
- கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
- இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
- நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
- எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
- செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
- கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ
- மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது
- பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
- செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே226 எல்லாம்.
- இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
- துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
- உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
- மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
- தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
- வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
- இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
- அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன்
- செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
- பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக்
- குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.
- பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
- செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
- நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
- குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
- பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில்
- புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
- விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே
- தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
- ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
- சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
- வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
- ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
- தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
- சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
- பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
- சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
- சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
- சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
- பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால்
- விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே
- அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன்
- துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.
- வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
- வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
- உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
- ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.
- தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும்
- மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால்
- இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே
- நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்.
- இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச்
- சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
- அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில்
- முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.
- இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே
- சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும்
- அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும்
- சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
- பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன்
- நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
- கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
- செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.
- அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான்
- உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான்
- என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும்
- மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே
- கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே
- தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன்
- மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- தன்னிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்குநற் றுணையே
- என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே என்னுடை எய்ப்பினில் வைப்பே
- உன்னுதற் கினிய வொருவனே எனநான் உன்னையே நினைத்திருக் கின்றேன்
- மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
- உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
- கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
- மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
- வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
- ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
- தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
- கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
- கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம்
- மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள்
- உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
- எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.
- கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
- மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
- பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
- தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
- தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
- அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
- சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
- அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
- நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
- படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
- செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
- இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
- பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
- மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
- எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
- என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய்
- உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ
- இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில்231 என்உயிர் தரியா
- தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே.
- பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
- கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
- வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
- உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
- நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
- வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
- வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
- என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
- உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
- நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
- மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
- பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
- தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
- புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
- வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 வள்ளலே சிற்சபை வாழ்வே.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
- எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
- எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
- செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
- திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
- தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
- தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
- ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
- பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
- புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
- எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
- இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
- நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
- நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
- அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
- வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
- மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
- புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
- பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
- உரைசேர்மெய்த் திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
- துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
- படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
- படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
- ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
- இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
- இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
- எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
- ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
- தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
- சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
- 279. எய்யாத - அறியாத. முதற்பதிப்பு.
- 280. கமை - பொறுமை. முதற்பதிப்பு.
- களவிலே களித்த காலத்தும் நீயே
- களித்தனை நான்களித் தறியேன்
- உளவிலே உவந்த போதும்நீ தானே
- உவந்தனை நான்உவந் தறியேன்
- கொளஇலே சமும்ஓர் குறிப்பிலேன் அனைத்தும்
- குறித்தனை கொண்டனை நீயே
- அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
- விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
- மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
- முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
- செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
- சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
- பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
- பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.
- மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
- மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
- தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
- தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
- நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
- நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
- ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
- என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- 254. திருநிலையில் - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா.
- பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே
- அழுது விழிகள் நீர்துளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன்
- பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும்
- உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
- வேண்டார் உளரோ நின்னருளை மேலோ ரன்றிக் கீழோரும்
- ஈண்டார் வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான்வேண்டல்
- தூண்டா விளக்கே திருப்பொதுவிற் சோதி மணியே ஆறொடுமூன்
- றாண்டா வதிலே முன்னென்னை ஆண்டாய் கருணை அளித்தருளே.
- நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
- வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
- கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
- பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
- தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
- பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
- நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
- நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
- ஆயேன் வேதா கமங்களைநன் கறியேன் சிறியேன் அவலமிகும்
- பேயேன் எனினும் வலிந்தென்னைப் பெற்ற கருணைப் பெருமானே
- நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன்நான்
- காயே எனினும் கனிஆகும் அன்றே நினது கருணைக்கே.
- கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
- தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
- இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
- தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
- அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
- முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
- சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
- தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
- எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
- சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
- வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.
- 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
- 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
- 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 239. ஒருவா - ச. மு. க.
- 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
- பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத
- பண்பனே திருச்சிற்றம் பலத்தே
- தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும்
- தூயனே நேயனே பிரமன்
- விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே
- விளங்குறக் காட்டிய விமலா
- கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத்
- திசைந்தபே ரின்பமே யான்தான்
- பண்ணிய தவமே தவத்துறும் பலனே
- பலத்தினால் கிடைத்தஎன் பதியே
- தண்ணிய மதியே மதிமுடி அரசே
- தனித்தசிற் சபைநடத் தமுதே
- புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- 255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
- இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
- ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
- சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
- தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
- அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
- ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
- மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- புண்படா உடம்பும் புரைபடா மனமும்
- பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
- கண்படா திரவும் பகலும்நின் தனையே
- கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்
- உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
- உலகரை நம்பிலேன் எனது
- நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
- ஊக்கமும் உண்மையும் என்னைத்
- தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
- தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
- வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
- மக்களும் மனைவியும் உறவும்
- நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
- வடிவமும் வண்ணமும் உயிரும்
- தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
- தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
- ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
- ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
- நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
- ஆடிய சிறுபரு வத்தே
- குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
- குணப்பெருங் குன்றமே குருவே
- செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
- சிந்தையில் இனிக்கின்ற தேனே
- நற்றக வுடைய நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள்
- சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி
- புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
- திண்ணமும் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
- வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
- தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
- எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
- சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல்
- காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய்
- நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன்
- ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே.
- பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்
- சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
- நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
- ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.
- 242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க.
- 243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க.,N
- அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
- அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
- இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
- எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
- தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
- தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
- துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
- சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
- மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
- ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
- இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
- மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
- மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
- கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
- முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு
- முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன்
- இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே
- எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ
- அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே
- ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய்
- என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே
- என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
- பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
- கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
- கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
- செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
- திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
- அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
- அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
- பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
- இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
- இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
- உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
- உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
- திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
- சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும்
- கொடையாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே
- அம்பலத்தே நடம்புரியும் அரும்பெருஞ்சோ தியனே
- தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே
- சந்தேகம் இல்லைஅந்தத் தனித்ததிரு வரவின்
- நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது
- நனவிடையா யினும்அன்றிக் கனவிடையா யினுமே.
- 252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு.
- 253. மிசையின் - ச. மு. க. பதிப்பு.
- காரண காரியக் கல்விகள் எல்லாம்
- கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
- நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
- நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
- பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
- புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
- ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
- தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
- பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
- பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
- தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
- சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
- அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
- வகைஇது துறைஇது வழிஇது எனவே
- இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
- என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
- பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
- புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
- அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
- பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
- நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
- நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
- திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
- சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
- அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
- அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
- மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
- பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
- 248. விளங்கு பொன்னணித் திருச்சிற் றம்பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
- 249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
- கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
- எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
- என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
- பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
- பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
- விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
- வேண்டுமென்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
- பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
- புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
- சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
- தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
- எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
- இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
- இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
- என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
- கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
- கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
- துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
- துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
- விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
- விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
- பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
- பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
- அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
- அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
- முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
- முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
- செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
- சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
- இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
- என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
- கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
- மன்னே அயனும் திருமா லவனும்
- மதித்தற் கரிய பெரிய பொருளே
- அன்னே அப்பா ஐயா அரசே
- அன்பே அறிவே அமுதே அழியாப்
- பொன்னே மணியே பொருளே அருளே
- பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- அடியார் இதயாம் புயனே அபயம்
- அரசே அமுதே அபயம் அபயம்
- முடியா தினிநான் தரியேன் அபயம்
- முறையோ முறையோ முதல்வா அபயம்
- கடியேன் அலன்நான் அபயம் அபயம்
- கருணா கரனே அபயம் அபயம்
- தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்.
- கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
- கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
- முடியேன் பிறவேன் எனநின் அடியே
- முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
- படியே அறியும் படியே வருவாய்
- பதியே கதியே பரமே அபயம்
- அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
- அரசே அருள்வாய் அபயம் அபயம்.
- கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும்
- காட்டிஎன் உள்ளம் கலந்தினிக் கின்றீர்
- விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன்
- மேல்விளை வறிகிலன் விச்சைஒன் றில்லேன்
- துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர்
- தூயநும் பேரருட் சோதிகண் டல்லால்
- அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- காசையும் பணத்தையும் கன்னியர் தமையும்
- காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
- நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால்
- நேசம்மற் றிலைஇது நீர்அறி யீரோ
- ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர்
- இறையவ ரேஉமை இன்றுகண் டல்லால்
- ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
- மாலையும் காலையும் மத்தியா னத்தும்
- கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
- காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
- எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர்
- இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
- அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- இன்புறநான் எய்ப்பிடத்தே பெற்றபெரு வைப்பே
- ஏங்கியபோ தென்றன்னைத் தாங்கியநல் துணையே
- அன்புறஎன் உட்கலந்தே அண்ணிக்கும் அமுதே
- அச்சமெலாம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட குருவே
- என்பருவம் குறியாதே எனைமணந்த பதியே
- இச்சையுற்ற படிஎல்லாம் எனக்கருளும் துரையே
- துன்பறமெய் அன்பருக்கே பொதுநடஞ்செய் அரசே
- தூயதிரு வடிகளுக்கென் சொல்லும்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில்
- கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே
- விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
- மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
- மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
- மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
- துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
- ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
- ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
- சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
- சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
- நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
- நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ
- டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும்
- தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே
- ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி
- எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி
- இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே
- புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
- சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
- தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலுந் தேங்கின்
- தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
- இனித்தநறு நெய்அளந்தே இளஞ்சூட்டின் இறக்கி
- எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
- அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே
- அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
- அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
- துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
- தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
- மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
- மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
- இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
- பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
- இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
- மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
- அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
- காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
- செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
- விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- பகுதிபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- பரவிஎலாம் தன்மயமாம் படிநிறைந்து விளங்கித்
- தகுதிபெறும் அப்பகுதிக் கப்புறமும் சென்றே
- தனிஒளிச்செங் கோல்நடத்தித் தழைக்கின்ற ஒளியே
- மிகுதிபெறு பகுதிஉல கம்பகுதி அண்டம்
- விளங்கஅருட் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- தொகுதிபெறு கடவுளர்கள் ஏத்தமன்றில் நடிக்கும்
- துரியநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- சாற்றுகின்ற கலைஐந்தில் பரமாதி நான்கும்
- தக்கஅவற் றூடிருந்த நந்நான்கும் நிறைந்தே
- ஊற்றுகின்ற அகம்புறமேல் நடுக்கீழ்மற் றனைத்தும்
- உற்றிடுந்தன் மயமாகி ஒளிர்கின்ற ஒளியே
- தோற்றுகின்ற கலைஉலகம் கலைஅண்ட முழுதும்
- துலங்குகின்ற சுடர்பரப்பிச் சூழ்கின்ற சுடரே
- போற்றுகின்ற மெய்அடியர் களிப்பநடித் தருளும்
- பொதுவில்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நாட்டியஓங் காரம்ஐந்தில் பரமுதல்ஓர் நான்கும்
- நந்நான்கு மாறிடத்தும் நயந்துநிறைந் தருளி
- ஈட்டியசெம் பொருள்நிலையோ டிலக்கியமும் விளங்க
- இனிதுநின்று விளங்குகின்ற இன்பமய ஒளியே
- கூட்டியஓங் காரஉல கோங்கார அண்டம்
- குடிவிளங்கக் கதிர்பரப்பிக் குலவுபெருஞ் சுடரே
- பாட்டியல்கொண் டன்பரெலாம் போற்றமன்றில் நடிக்கும்
- பரமநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
- திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே
- ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி
- உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே
- பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்
- பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே
- பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- தனிச்சிறியேன் சிறிதிங்கே வருந்தியபோ ததனைத்
- தன்வருத்தம் எனக்கொண்டு தரியாதக் கணத்தே
- பனிப்புறும்அவ் வருத்தமெலாம் தவிர்த்தருளி மகனே
- பயம்உனக்கென் என்றென்னைப் பரிந்தணைத்த குருவே
- இனிப்புறுநன் மொழிபுகன்றென் முடிமிசையே மலர்க்கால்
- இணைஅமர்த்தி எனையாண்ட என்னுயிர்நற் றுணையே
- கனித்தநறுங் கனியேஎன் கண்ணேசிற் சபையில்
- கலந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி
- நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே
- கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- கிளர்ந்தொளிகொண் டோங்கியமெய்க் கிளைஎனும்பே ரொளியே
- படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே
- பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே
- கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த
- ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- நீநினைத்த நன்மைஎலாம் யாம்அறிந்தோம் நினையே
- நேர்காண வந்தனம்என் றென்முடிமேல்283 மலர்க்கால்
- தான்நிலைக்க வைத்தருளிப் படுத்திடநான் செருக்கித்
- தாள்களெடுத் தப்புறத்தே வைத்திடத்தான் நகைத்தே
- ஏன்நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம்என் மகனே
- எனக்கிலையோ என்றருளி எனையாண்ட குருவே
- தேன்நிலைத்த தீம்பாகே சர்க்கரையே கனியே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே
- இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்
- தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்
- தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே
- எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே
- இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே
- முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்
- முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
- தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
- நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
- நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
- சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
- சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
- புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும்
- நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும்
- புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன்
- பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித்
- தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும்
- தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே
- இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- விழுக்குலத்தார் அருவருக்கும் புழுக்குலத்தில் கடையேன்
- மெய்யுரையேன் பொய்யுரையை வியந்துமகிழ்ந் தருளி
- முழுக்குலத்தோர் முடிசூட்டி ஐந்தொழில்செய் எனவே
- மொழிந்தருளி எனையாண்ட முதற்றனிப்பே ரொளியே
- எழுக்குலத்தில் புரிந்தமனக் கழுக்குலத்தார் தமக்கே
- எட்டாத நிலையேநான் எட்டியபொன் மலையே
- மழுக்குலத்தார் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி
- நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி
- நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே
- உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில்
- ஓங்கியபே ரன்பேஎன் அன்பிலுறும் ஒளியே
- மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில்
- மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
- அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
- நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
- மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
- என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
- செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
- திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
- அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
- அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
- ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
- இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
- மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
- மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக
- செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே
- திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
- அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- சிற்பதமும் தற்பதமும் பொற்பதத்தே காட்டும்
- சிவபதமே ஆனந்தத் தேம்பாகின் பதமே
- சொற்பதங்கள் கடந்ததன்றி முப்பதமும் கடந்தே
- துரியபத முங்கடந்த பெரியதனிப் பொருளே
- நற்பதம்என் முடிசூட்டிக் கற்பதெலாங் கணத்தே
- நான்அறிந்து தானாக நல்கியஎன் குருவே
- பற்பதத்துத் தலைவரெலாம் போற்றமணி மன்றில்
- பயிலும்நடத் தரசேஎன் பாடல்அணிந் தருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
- அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
- கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
- கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
- வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
- மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
- படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
- எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
- அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
- அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
- திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
- திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
- பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
- தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
- மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
- வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
- நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
- நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
- அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- 281. எண் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 282. தாய் முதலோரோடு சிறு பருவமதில் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு, க.
- 283. முடிமேல் - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க. மடிமேல் - பி. இரா., ஆ. பா.
- 284. மயர்ப்பு - சோர்வு. முதற்பதிப்பு.
- பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
- புகலரும் பெரியஓர் நிலையில்
- இன்புரு வாகி அருளொடும் விளங்கி
- இயற்றலே ஆதிஐந் தொழிலும்
- தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
- தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
- அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள்
- மன்னுருத் திரர்களே முதலா
- ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்
- குறுபெருந் தொழில்பல இயற்றி
- இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி
- இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்
- அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- பால்வகை ஆணோ பெண்கொலோ இருமைப்
- பாலதோ பால்உறா அதுவோ
- ஏல்வகை ஒன்றோ இரண்டதோ அனாதி
- இயற்கையோ ஆதியின் இயல்போ
- மேல்வகை யாதோ எனமறை முடிகள்
- விளம்பிட விளங்கும்ஓர் தலைவன்
- மால்வகை மனத்தேன் உளக்குடில் புகுந்தான்
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- படைத்திடல் முதல்ஐந் தொழில்புரிந் திலங்கும்
- பரம்பர ஒளிஎலாம் அணுவில்
- கிடைத்திடக் கீழ்மேல் நடுஎனக் காட்டாக்
- கிளர்ஒளி யாய்ஒளிக் கெல்லாம்
- அடைத்தகா ரணமாய்க் காரணங் கடந்த
- அருட்பெருஞ் ஜோதியாம் ஒருவன்
- கடைத்தனிச் சிறியேன் உளம்புகுந் தமர்ந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
- அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
- பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
- பேசநின் றோங்கிய பெரியோன்
- களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
- கருணையா ரமுதளித் துளமாம்
- வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
- தையகோ ஐயகோ அறிவின்
- மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
- வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
- முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
- மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
- செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
- திருவுளம் தடுப்பவர் யாரே.
- கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
- கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
- குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
- கொள்கையாய்க் கொள்கையோ டளவா
- அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
- அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
- மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
- வண்மையைத் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- படிசெய்பிர மன்முதலோர் பற்பலநாள் வருந்திப்
- பன்மணிகள் ஒளிவிளங்கப் பதித்தசிங்கா தனத்தே
- அடிசெய்தெழுந் தருளிஎமை ஆண்டருளல் வேண்டும்
- அரசேஎன் றவரவரும் ஆங்காங்கே வருந்த
- வடிசெய்மறை முடிநடுவே மன்றகத்தே நடிக்கும்
- மலரடிகள் சிவப்பஒரு வளமும்இலா அசுத்தக்
- குடிசைநுழைந் தனையேஎன் றேசுவரே அன்பர்
- கூசாமல் என்னுளமாம் குடிசைநுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- 273. உற்றிடுதற் - படிவேறுபாடு. ஆ. பா.
- 274. பிறங்கவைத்த - முதற்பதிப்பு. பொ. சு., ச. மு. க.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தழைத்தானைத் தன்னைஒப்பார் இல்லா தானைத்
- தானேதா னானானைத் தமிய னேனைக்
- குழைத்தானை என்கையிலோர் கொடைதந் தானைக்
- குறைகொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
- அழைத்தானை அருளமுதம் அளிக்கின் றானை
- அச்சமெலாம் தவிர்த்தானை அன்பே என்பால்
- இழைத்தானை என்னிதயத் திருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- 270. சோறு - முத்தி. முதற்பதிப்பு. ஈண்டு சோறு என்பது உண்ணும் சோறே.
- அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
- அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
- செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
- சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
- பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
- பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
- எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
- பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
- காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
- கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
- மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
- மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
- ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- ஆன்றானை அறிவானை அழிவி லானை
- அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
- மூன்றானை இரண்டானை ஒன்றானானை
- முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
- தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
- சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
- ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
- சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
- வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
- வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
- வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
- மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
- ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- 268. ஈந்தானை - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தகுவே தாந்தமொடு சித்தாந்த முதலாத்
- திகழ்கின்ற அந்தமெலாம் தேடியுங்கண் டறியா
- ஒருத்தனைஉள் ளொளியைஒளிர் உள்ளொளிக்குள் ஒளியை
- உள்ளபடி உள்ளவனை உடையபெருந் தகையை
- நிருத்தனைமெய்ப் பொருளான நின்மலனைச் சிவனை
- நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
- கருத்தனைச்சிற் சபையோங்கு கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மதித்திடுதல் அரியஒரு மாணிக்க மணியை
- வயங்கியபே ரொளியுடைய வச்சிரமா மணியைத்
- துதித்திடுவே தாகமத்தின் முடிமுடித்த மணியைச்
- சுயஞ்சோதித் திருமணியைச் சுத்தசிவ மணியை
- விதித்தல்முதல் தொழில்இயற்று வித்தகுரு மணியை
- விண்மணியை அம்மணிக்குள் விளங்கியமெய்ம் மணியைக்
- கதித்தசுக மயமணியைச் சித்தசிகா மணியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- ஆய்தருவே தாகமத்தின் அடிமுடிநின் றிலங்கும்
- அரியபெரும் பொருளைஅவைக் கனுபவமாம் பொருளை
- வேய்தருதத் துவப்பொருளைத் தத்துவங்கள் விளங்க
- விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
- தோய்தரல்இல் லாததனிச் சுயஞ்சோதிப் பொருளைச்
- சுத்தசிவ மயமான சுகாதீதப் பொருளைக்
- காய்தரல்இல் லாதென்னைக் காத்தஅருட் பொருளைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- திருத்தமிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச்
- சித்தர்களும் சிருட்டிசெயும் திறத்தர்களும் காக்கும்
- அருத்தமிகு தலைவர்களும் அடக்கிடல்வல் லவரும்
- அலைபுரிகின் றவர்களும்உள் அனுக்கிரகிப் பவரும்
- பொருத்துமற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம்
- பொருள்எதுவோ எனத்தேடிப் போகஅவர் அவர்தம்
- கருத்தில்ஒளித் திருக்கின்ற கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- கோணாத நிலையினராய்க் குறிகுணங்கண் டிடவும்
- கூடாத வண்ணம்மலைக் குகைமுதலாம் இடத்தில்
- ஊணாதி விடுத்துயிர்ப்பை அடக்கிமனம் அடக்கி
- உறுபொறிகள் அடக்கிவரும் உகங்கள்பல கோடித்
- தூணாக அசைதல்இன்றித் தூங்காது விழித்த
- தூயசதா நிட்டர்களும் துரியநிலை இடத்தும்
- காணாத வகைஒளித்த கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும்
- நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும்
- ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம்
- ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும்
- வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற
- வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
- காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அரசே
- மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
- வள்ளலை மாணிக்க மணியைப்
- பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
- புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
- தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
- தீபத்தைக் கண்டுகொண் டேனே.
- துன்பெலாம் தவிர்த்த துணையைஎன் உள்ளத்
- துரிசெலாந் தொலைத்தமெய்ச் சுகத்தை
- என்பொலா மணியை என்சிகா மணியை
- என்னிரு கண்ணுள்மா மணியை
- அன்பெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அடியேன்
- என்பெலாம் உருக்கி இன்பெலாம் அளித்த
- எந்தையைக் கண்டுகொண் டேனே.
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- பண்ணிய தவமும் பலமும்மெய்ப் பலஞ்செய்
- பதியுமாம் ஒருபசு பதியை
- நண்ணிஎன் உளத்தைத் தன்னுளம் ஆக்கி
- நல்கிய கருணைநா யகனை
- எண்ணிய படியே எனக்கருள் புரிந்த
- இறைவனை மறைமுடி இலங்கும்
- தண்ணிய விளக்கைத் தன்னிக ரில்லாத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- நனவிலும் எனது கனவிலும் எனக்கே
- நண்ணிய தண்ணிய அமுதை
- மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
- வழங்கிய பெருந்தயா நிதியைச்
- சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
- சிவகுரு பதியைஎன் சிறப்பை
- உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- கரும்பிலின் சாற்றைக் கனிந்தமுக் கனியைக்
- கருதுகோற் றேன்நறுஞ் சுவையை
- அரும்பெறல் அமுதை அறிவைஎன் அன்பை
- ஆவியை ஆவியுட் கலந்த
- பெருந்தனிப் பதியைப் பெருஞ்சுகக் களிப்பைப்
- பேசுதற் கரும்பெரும் பேற்றை
- விரும்பிஎன் உளத்தை இடங்கொண்டு விளங்கும்
- விளக்கினைக் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- ஆரண முடிமேல் அமர்பிர மத்தை
- ஆகம முடிஅமர் பரத்தைக்
- காரண வரத்தைக் காரிய தரத்தைக்
- காரிய காரணக் கருவைத்
- தாரண நிலையைத் தத்துவ பதியைச்
- சத்திய நித்திய தலத்தைப்
- பூரண சுகத்தைப் பூரண சிவமாம்
- பொருளினைக் கண்டுகொண் டேனே.
- சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
- சபைநடம் புரிகின்ற தனியைத்
- தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
- சத்துவ நித்தசற் குருவை
- அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
- ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
- நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
- நிதியைக் கண்டுகொண் டேனே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- அடிநடு முடியோர் அணுத்துணை யேனும்
- அறிந்திடப் படாதமெய் அறிவைப்
- படிமுதல் அண்டப் பரப்பெலாங் கடந்த
- பதியிலே விளங்குமெய்ப் பதியைக்
- கடியஎன் மனனாங் கல்லையும் கனியிற்
- கடைக்கணித் தருளிய கருணைக்
- கொடிவளர் இடத்துப் பெருந்தயா நிதியைக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
- பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
- நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
- நல்கிய நண்பைநன் னாத
- இயமுற வெனது குளநடு நடஞ்செய்
- எந்தையை என்னுயிர்க் குயிரைப்
- புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
- பொற்புறக் கண்டுகொண் டேனே.
- கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
- ககனத்தைக் காற்றினை அமுதை
- நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
- நின்மல நிற்குண நிறைவை
- மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
- வரவுபோக் கற்றசின் மயத்தை
- அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
- அன்பினிற் கண்டுகொண் டேனே.
- மும்மையை எல்லாம் உடையபே ரரசை
- முழுதொருங் குணர்த்திய உணர்வை
- வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
- வியப்புற அளித்தமெய் விளைவைச்
- செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
- சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
- அம்மையைக் கருணை அப்பனை என்பே
- ரன்பனைக் கண்டுகொண் டேனே.
- கருத்தனை எனது கண்அனை யவனைக்
- கருணையா ரமுதெனக் களித்த
- ஒருத்தனை என்னை உடையநா யகனை
- உண்மைவே தாகம முடியின்
- அருத்தனை வரனை அபயனைத் திருச்சிற்
- றம்பலத் தருள்நடம் புரியும்
- நிருத்தனை எனது நேயனை ஞான
- நிலையனைக் கண்டுகொண் டேனே.
- புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
- புணர்த்திய புனிதனை எல்லா
- நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
- நிறுத்திய நிமலனை எனக்கு
- மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
- வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
- தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- பனிஇடர் பயந்தீர்த் தெனக்கமு தளித்த
- பரமனை என்னுளே பழுத்த
- கனிஅனை யவனை அருட்பெருஞ் சோதிக்
- கடவுளைக் கண்ணினுள் மணியைப்
- புனிதனை எல்லாம் வல்லஓர் ஞானப்
- பொருள்எனக் களித்தமெய்ப் பொருளைத்
- தனியனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- 271. சிதம் - ஞானம்
- 272. அத்து - செந்நிறம். முதற்பதிப்பு.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
- போந்தவான் முடியதாங் கதன்மேல்
- மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
- வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
- என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
- தத்திலே இலங்கிய ததன்மேல்
- தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
- தழுவினன் திருவடி நிலையே.
- மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
- மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
- அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
- அமைந்தன சத்திகள் அவற்றின்
- கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
- கருதுரு முதலிய விளங்க
- நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
- நவின்றனர் திருவடி நிலையே.
- தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
- தொல்லையின் எல்லையும் அவற்றின்
- வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
- மன்னிஎங் கணும்இரு பாற்குத்
- தகையுறு முதலா வணங்கடை யாகத்
- தயங்கமற் றதுவது கருவிச்
- சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
- பெரியஓங் காரமே முதலா
- ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
- என்றவற் றவண்அவண் இசைந்த
- மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
- மன்அதி காரம்ஐந் தியற்றத்
- தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
- என்பரால் திருவடி நிலையே.
- பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
- பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
- உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
- வெறுவெளி எனஉல குணர்ந்த
- புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
- திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
- திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
- என்பரால் திருவடி நிலையே.
- கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
- பெருங்கருணைக் கடலை வேதத்
- திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
- தெள்ளமுதத் தெளிவை வானில்
- ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
- உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
- அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
- விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
- செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
- சிவகதியைச் சிவபோ கத்தைத்
- துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
- துணிந்தளித்த துணையை என்றன்
- அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
- பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
- செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
- பெருங்களிப்புச் செய்தான் தன்னை
- முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
- கொடுத்தெனக்கு முன்னின் றானை
- அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
- உடையானை எல்லாம் வல்ல
- சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
- விரித்தடக்கும் தெய்வந் தன்னை
- எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
- பெருந்தாயை என்னை ஈன்ற
- அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
- இடங்கொண்ட இறைவன் தன்னை
- இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
- தந்தானை எல்லாம் வல்ல
- செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
- தெள்ளமுதத் திரளை என்றன்
- அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
- தான்கொண்டிங் கென்பால் அன்பால்
- தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
- களித்தளித்த தலைவன் தன்னை
- முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
- இருந்தமுழு முதல்வன் தன்னை
- அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
- தருகின்றோம்324 இன்னே என்றென்
- கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
- திருக்கின்ற கருத்தன் தன்னைப்
- புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
- மெய்இன்பப் பொருளை என்றன்
- அண்ணலைசிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- 323. சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
- 324. தருகின்றாம் - பி. இரா. பதிப்பு.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
- இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
- எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
- பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
- பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
- செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- 267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.
- அணிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- ஆனந்த போகமே அமுதே
- மணிவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- மன்னும்என் ஆருயிர்த் துணையே
- துணிவுறு சித்தாந் தப்பெரும் பொருளே
- தூயவே தாந்தத்தின் பயனே
- பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அம்பலத் தாடும் அமுதமே என்கோ
- அடியனேன் ஆருயிர் என்கோ
- எம்பலத் தெல்லாம் வல்லசித் தென்கோ
- என்னிரு கண்மணி என்கோ
- நம்பிடில் அணைக்கும் நற்றுணை என்கோ
- நான்பெற்ற பெருஞ்செல்வம் என்கோ
- இம்பர்இப் பிறப்பே மெய்ப்பிறப் பாக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அம்மையே என்கோ அப்பனே என்கோ
- அருட்பெருஞ் சோதியே என்கோ
- செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ
- திருச்சிற்றம் பலத்தமு தென்கோ
- தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ
- தமியனேன் தனித்துணை என்கோ
- இம்மையே அழியாத் திருஉரு அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
- அன்பிலே நிறைஅமு தென்கோ
- சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
- மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
- மன்னும்என் வாழ்முதல் என்கோ
- இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- மறப்பெலாம் தவிர்த்த மதிஅமு தென்கோ
- மயக்கநீத் தருள்மருந் தென்கோ
- பறப்பெலாம் ஒழித்த பதிபதம் என்கோ
- பதச்சுவை அனுபவம் என்கோ
- சிறப்பெலாம் எனக்கே செய்ததாய் என்கோ
- திருச்சிற்றம் பலத்தந்தை என்கோ
- இறப்பிலா வடிவம் இம்மையே அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- தடையிலா தெடுத்த அருளமு தென்கோ
- சர்க்கரைக் கட்டியே என்கோ
- அடைவுறு வயிரக் கட்டியே என்கோ
- அம்பலத் தாணிப்பொன் என்கோ
- உடைய மாணிக்கப் பெருமலை என்கோ
- உள்ளொளிக் குள்ளொளி என்கோ
- இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே
- என்னைஆண் டருளிய நினையே.
- மறைமுடி விளங்கு பெரும்பொருள் என்கோ
- மன்னும்ஆ கமப்பொருள் என்கோ
- குறைமுடித் தருள்செய் தெய்வமே என்கோ
- குணப்பெருங் குன்றமே என்கோ
- பிறைமுடிக் கணிந்த பெருந்தகை என்கோ
- பெரியஅம் பலத்தர சென்கோ
- இறைமுடிப் பொருள்என் உளம்பெற அளித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
- என்உயிர்த் தந்தையே என்கோ
- என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
- என்உயிர்த் தலைவனே என்கோ
- என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
- என்னுடை நண்பனே என்கோ
- என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
- என்னைஆண் டருளிய நினையே.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ
- சோதியுட் சோதியே என்கோ
- அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ
- அம்மையே அப்பனே என்கோ
- இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ
- என்உயிர்க் கின்னமு தென்கோ
- என்பொலா மணியே என்கணே என்கோ
- என்னுயிர் நாதநின் றனையே.
- தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
- சர்க்கரை அமுதமே என்கோ
- மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
- முகநகைக் கணவனே என்கோ
- போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
- புணர்ந்தஓர் பூவையே என்கோ
- ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
- அம்பலத் தாடிநின் றனையே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- 276. கெட்டியே என்கோ கெட்டியில் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
- 277. நிலைக்கும் - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
- அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
- காரணமே காரியமே காரணகா ரியங்கள்
- கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
- பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
- புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
- தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
- ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
- அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
- அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
- புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
- பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
- துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
- அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
- முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
- முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
- சகவடிவில் தானாகி நானாகி நானும்
- தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
- சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
- உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
- படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
- பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
- அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
- அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
- தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- 328. தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
- கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
- பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
- படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
- சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
- சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
- சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
- உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
- உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
- இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
- எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- அடுக்கியபே ரண்டமெலாம் அணுக்கள்என விரித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- நடுக்கியஎன் அச்சமெலாம் தவிர்த்தருளி அழியா
- ஞானஅமு தளித்துலகில் நாட்டியபே ரறிவே
- இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
- கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
- முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
- முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- 320. ஏத்தி - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா, ச. மு. க.
- 321. தவிர்ந்தோர் - பி. இரா. பதிப்பு.
- அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்
- அளித்தெனை வளர்த்திட அருளாம்
- தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த
- தெய்வமே சத்தியச் சிவமே
- இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல்
- ஏற்றிய இன்பமே எல்லாப்
- பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைகளோர் அனந்தம் அனந்தமேல் நோக்கிக்
- கற்பங்கள் கணக்கில கடப்ப
- நிலைகளோர் அனந்தம் நேடியுங் காணா
- நித்திய நிற்குண258 நிறைவே
- அலைகளற் றுயிருக் கமுதளித் தருளும்
- அருட்பெருங் கடல்எனும் அரசே
- புலைகள வகற்றி எனக்குளே நிறைந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தத்துவ பதியே தத்துவம் கடந்த
- தனித்ததோர் சத்திய பதியே
- சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
- தமக்குளே சார்ந்தநற் சார்பே
- பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
- பெறல்அரி தாகிய260 பேறே
- புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
- தரவல்ல சம்புவே சமயப்
- புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
- புண்ணியர் நண்ணிய புகலே
- வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
- வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
- பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
- முடிபெலாம் கடந்ததோர் முதலே
- தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
- சத்தியத் தனிநடு நிலையே
- மேவிய நடுவில் விளங்கிய விளைவே
- விளைவெலாம் தருகின்ற வெளியே
- பூவியல் அளித்த புனிதசற் குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வேதமும் பொருளும் பயனும்ஓர் அடைவும்
- விளம்பிய அனுபவ விளைவும்
- போதமும் சுகமும் ஆகிஇங் கிவைகள்
- போனது மாய்ஒளிர் புலமே
- ஏதமுற் றிருந்த ஏழையேன் பொருட்டிவ்
- விருநிலத் தியல்அருள் ஒளியால்
- பூதநல் வடிவம் காட்டிஎன் உளத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சத்திய பதியே சத்திய நிதியே
- சத்திய ஞானமே வேத
- நித்திய நிலையே நித்திய நிறைவே
- நித்திய வாழ்வருள் நெறியே
- சித்திஇன் புருவே சித்தியின் கருவே
- சித்தியிற் சித்தியே எனது
- புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
- சிவபத அனுபவச் சிவமே
- மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
- மதிநிறை அமுதநல் வாய்ப்பே
- சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
- சாமியே தந்தையே தாயே
- புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- காரண அருவே காரிய உருவே
- காரண காரியம் காட்டி
- ஆரண முடியும் ஆகம முடியும்
- அமர்ந்தொளிர் அற்புதச் சுடரே
- நாரண தலமே263 நாரண வலமே
- நாரணா காரத்தின் ஞாங்கர்ப்
- பூரண ஒளிசெய் பூரண சிவமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- 258. நிர்க்குண - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 259. சற்புதர் - நல்லறிவுடையவர்.
- 260. பெரிதரிதாகிய - பொ. சு. பதிப்பு.
- 261. தண்கடலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 262. முடிந்தவோர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க., ஆ. பா.
- 263. தரமே - முதற்பதிப்பு. பொ. சு., ஆ. பா.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணினுள் மணியே
- இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
- இணையிலா என்னுடை அன்பே
- சொந்தநல் உறவே அம்பலத் தரசே
- சோதியே சோதியே விரைந்து
- வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
- ஈன்றவா என்னவா வேதம்
- சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
- துதியவா அம்பலத் தமுதம்
- அன்னவா அறிவால் அறியரி வறிவா
- ஆனந்த நாடகம் புரியும்
- மன்னவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
- விளக்கினால் என்னுளம் விளக்கி
- இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
- கென்கருத் தனைத்தையும் புரிந்தே
- சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
- சத்தியைத் தயவினால் தருக
- வரதனே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- 322. அறியறி வறிவா - பி. இரா., ச. மு. க.
- விரைசேர் பொன்மல ரே - அதில் - மேவிய செந்தே னே
- கரைசேர் முக்கனி யே - கனி - யிற்சுவை யின்பய னே
- பரைசேர் உள்ளொளி யே - பெரும் - பற்றம்ப லநடஞ் செய்
- அரைசே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
- தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
- கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
- அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
- செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
- எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
- அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
- கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
- செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
- ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே
- குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே
- செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பே
- ரறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே
- சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே
- பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே
- அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
- மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
- பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
- அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
- வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
- தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
- அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
- தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
- பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
- அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
- இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
- பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
- அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
- சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
- தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
- லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
- தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
- வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
- ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே
- செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே
- கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய்
- அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
- இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
- உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
- அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
- இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
- ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
- கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
- அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
- அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
- வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
- வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
- தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
- தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
- கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
- தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
- சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
- புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
- பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
- நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
- நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- 318. நிலையின் - பி. இரா. பதிப்பு.
- 319. வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
- டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
- பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
- இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
- எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
- வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
- கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
- முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
- இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
- கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
- தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
- முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே.
- புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
- நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
- முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
- ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருளா ரமுதம்
- தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
- நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.
- சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய்
- குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப்
- பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக்
- கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
- வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன்
- முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம்
- என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
- நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே.
- முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
- பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
- சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
- மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
- விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
- நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
- கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
- உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
- வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த
- புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த
- நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம்
- பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே.
- உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
- புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
- குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
- தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
- மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
- பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
- நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
- சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
- கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
- மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
- தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
- ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
- சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
- தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
- கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
- சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
- பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
- வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
- அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
- தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
- அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
- சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
- நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
- செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
- நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
- தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
- தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
- சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
- தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
- மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
- தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே.
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
- நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
- ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே.
- பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
- சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
- அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- புரைசேர் துயரப் புணரிமுற்றும் கடத்தி ஞான பூரணமாம்
- கரைசேர்த் தருளி இன்னமுதக் கடலைக் குடிப்பித் திடல்வேண்டும்
- உரைசேர் மறையின் முடிவிளங்கும் ஒளிமா மணியே உடையானே
- அரைசே அப்பா இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- கண்ணார் அமுதக் கடலேஎன் கண்ணே கண்ணுட் கருமணியே
- தண்ணார் மதியே கதிர்பரப்பித் தழைத்த சுடரே தனிக்கனலே
- எண்ணா டரிய பெரியஅண்டம் எல்லாம் நிறைந்த அருட்சோதி
- அண்ணா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
- அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
- வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
- வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
- விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
- விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
- இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
- எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- இரவு விடிந்தது இணையடி வாய்த்த
- பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
- தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
- ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
- இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
- உள்ளிருள் நீங்கிற்றுஎன் உள்ளொளி ஓங்கிற்றுத்
- தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
- தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
- முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
- சித்தியை உற்றேன்என்று உந்தீபற
- சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
- புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
- தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
- இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
- முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
- சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
- அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
- வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
- பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
- ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
- மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
- எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
- அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
- தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
- கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
- அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
- தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
- உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
- உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
- இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
- ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
- எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
- சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
- தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
- உகத்தென325 துடல்பொருள் ஆவியை நுமக்கே
- ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
- இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
- மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
- தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
- சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்
- ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
- அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
- ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
- புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
- சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
- தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
- தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
- என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
- என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
- விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக
- விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
- நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
- நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
- எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- 325. உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு.
- 326. சமுகம் - ச. மு. க. பதிப்பு.
- மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
- வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
- கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
- குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
- கடுத்த விடர்வன் பயம்கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே
- அடுத்த கொடியே அருளமுதம் அளித்தென் தனைமெய் அருட்கரத்தால்
- எடுத்த கொடியே சித்திஎலாம் இந்தா மகனே என்றெனக்கே
- கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
- என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
- ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
- அன்றிவே றெண்ணிய துண்டோ
- ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
- உறுகணிங் காற்றலேன் சிறிதும்
- தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
- நன்றருள் புரிவதுன் கடனே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
- ஒருசிவ மயமென உணர்ந்தேன்
- கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
- கருத்தயல் கருதிய துண்டோ
- வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
- மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
- தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
- தெளிவித்தல் நின்கடன் சிவனே.
- மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம்
- யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை
- நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந்
- தாய்க்குத் தனிஇயற்கை தான்.
- கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்
- பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்
- தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
- எந்தாய் கருணை இது.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் உயர்நிலைமேல் ஓங்குகின்றேன் - கொண்டேன்
- அழியாத் திருஉருவம் அச்சோஎஞ் ஞான்றும்
- அழியாச்சிற் றம்பலத்தே யான்.
- கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
- கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
- நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
- வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
- கண்டேன் களித்தேன் கருணைத் திருஅமுதம்
- உண்டேன் அழியா உரம்266 பெற்றேன் - பண்டே
- எனைஉவந்து கொண்டான் எழில்ஞான மன்றம்
- தனைஉவந்து கொண்டான் தனை.
- திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
- குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
- தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
- மாப்பிள்ளை பாத மலர்.
- 264. ஓங்குமறை - படிவேறுபாடு. ஆ. பா.
- 265. கண்டே - முதற்பதிப்பு. பி. இரா.
- 266. வரம் - படிவேறுபாடு. ஆ. பா.
- உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
- வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
- நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
- நாட்டமும் கற்பகோ டியினும்
- வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
- வழங்கிடப் பெற்றனன் மரண
- பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
- கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
- சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
- சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
- சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
- செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
- பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
- ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
- சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
- ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்
- கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.
- மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில்
- அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- பந்தமெலாம் தவிர்த்தருளிப் பதந்தருயோ காந்தமுதல் பகரா நின்ற
- அந்தமெலாம் கடந்திடச்செய் தருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- தினைத்தனையும் அறிவறியாச் சிறியனென நினையாமல் சித்தி யான
- அனைத்துமென்றன் வசமாக்கி அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ.
- வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
- பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
- போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
- நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.
- வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
- சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
- எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
- விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
- சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
- சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
- நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
- பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
- வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
- புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
- திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
- நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
- நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
- சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
- சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
- தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
- இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
- அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
- சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.
- தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
- மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
- நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
- சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
- கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
- உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
- பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
- பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
- தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
- சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
- காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
- தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
- 327. நண்ணினனே - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 288. மயமாய்ப் பெருப்பாயோ - ஆ. பா. பதிப்பு.
- 289. இருப்பாயோ - முதற்பதிப்பு.
- 290. பொய்ப்பணி - முதற்பதிப்பு. பொ. சு., பி. இரா.,N
- மயங்கினேன் எனினும் வள்ளலே உனைநான்
- மறப்பனோ கனவினும் என்றாள்
- உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ
- உயிர்தரி யாதெனக் கென்றாள்
- கயங்கினேன் கயங்கா வண்ணநின் கருணைக்
- கடலமு தளித்தருள் என்றாள்
- வயங்குசிற் சபையில் வரதனே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அஞ்சல்என் றெனைஇத் தருணநீ வந்தே
- அன்பினால் அணைத்தருள் என்றாள்
- பஞ்சுபோல் பறந்தேன் அய்யவோ துன்பம்
- படமுடி யாதெனக் கென்றாள்
- செஞ்செவே எனது கருத்தெலாம் உனது
- திருவுளம் அறியுமே என்றாள்
- வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
- ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
- பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
- பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
- எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
- இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
- தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- 285. அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப் பொருள்கொள்க - முதற்பதிப்பு.இருள் - நஞ்சு.
- அதுபா வகமுகத் தானந்த நாட்டில்
- அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
- விதுபா வகமுகத் தோழியும் நானும்
- மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து
- பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே
- பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ
- இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த
- அய்யர் அமுதர்என் அன்பர் அழகர்
- நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு
- நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது
- பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே
- பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள்
- இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
- பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
- வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
- மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
- ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
- எம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே
- ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- 365. அன்னைப்பார்ப்பால் - ஆ. பா. பதிப்பு.
- 366. எம்முடம் பும்மை - ஆ. பா. பதிப்பு.,N
- பருவமிலாக் குறையாலோ பகுதிவகை யாலோ
- பழக்கமிலா மையினாலோ படிற்றுவினை யாலோ
- இருவகைமா யையினாலோ ஆணவத்தி னாலோ
- என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
- சருவல்ஒழிந் தென்மனமாம் பாங்கிபகை யானாள்
- தனித்தபரை எனும்வளர்த்த தாயும்முகம் பாராள்
- நிருவமடப் பெண்களெலாம் வலதுகொழிக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
- எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
- களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
- செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
- சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்
- அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி
- என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்
- துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள்
- நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகைஎன் பொருள்என்றேன் அதனாலோ அன்றி
- இதுவரையும் வரக்காணேன் தடைசெய்தார் எவரோ
- எனப்புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புதுமுகங்கொண் டெனதுதனித் தோழிமனந் திரிந்தாள்
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் புதுமைசில புகன்றாள்
- மதுவுகந்து களித்தவர்போல் பெண்கள்நொடிக் கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளமறிந் திலனே.
- கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
- கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
- எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
- இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
- வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
- பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
- பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே மகிழ்ந்தேன்
- வள்ளலொடு நானென்றேன் அதனாலோ அன்றி
- ஈடறியாச் சுகம்புகல என்னாலே முடியா
- தென்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- ஏடவிழ்பூங் குழற்கோதைத் தோழுமுகம் புலர்ந்தாள்
- எனைஎடுத்து வளர்த்தவளும் இரக்கமிலாள் ஆனாள்
- நாடறியப் பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்
- நல்லநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
- கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
- இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
- சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
- துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கண்ணேறு படும்எனநான் அஞ்சுகின்றேன் எனது
- கணவர்வடி வதுகாணற் கென்றஅத னாலோ
- எண்ணாத மனத்தவர்கள் காணவிழை கின்றார்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நண்ணாரில் கடுத்தமுகம் தோழிபெற்றாள் அவளை
- நல்கிஎனை வளர்த்தவளும் மல்கியவன் படுத்தாள்
- பெண்ணாயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே
- பெரியநட ராயர்உள்ளப் பிரியம்அறிந் திலனே.
- கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
- கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
- எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
- மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
- விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
- விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது மடவீர்
- தனிக்கஎனை விடுமின்என்றேன் அதனாலோ அன்றி
- இனித்தசுவை எல்லாம்என் கணவர்அடிச் சுவையே
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பனித்தகுளிர் காலத்தே சனித்தசலம் போன்றாள்
- பாங்கிஎனை வளர்த்தவளும் தூங்குமுகங் கொண்டாள்
- கனித்தபழம் விடுத்துமின்னார் காய்தின்னு கின்றார்
- கருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய்
- புண்ணியம் புகல்அரி தென்றாள்
- தண்ணிய மதியின் அமுதெனக் களித்த
- தயவைநான் மறப்பனோ என்றாள்
- எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான்
- என்னையோ என்னையோ என்றாள்
- அண்ணிய பேரா னந்தமே வடிவம்
- ஆயினாள் நான்பெற்ற அணங்கே.
- திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன்
- சிந்தையில் கலந்தனன் என்றாள்
- பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப்
- பேசுதல் அரிதரி தென்றாள்
- இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார்
- யாண்டுளர் யாண்டுளர் என்றாள்
- மருமலர் முகத்தே இளநகை துளும்ப
- வயங்கினாள் நான்பெற்ற மகளே.
- வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான்
- மாலையோ காலையோ என்றாள்
- எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே
- ஏவல்செய் கின்றன என்றாள்
- தெள்ளமு தருந்தி அழிவிலா உடம்பும்
- சித்தியும் பெற்றனன் என்றாள்
- துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள்
- சோர்விலாள் நான்பெற்ற சுதையே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ
- செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ
- அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன்
- அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும்
- எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ
- என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார்
- தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக
- சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
- இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
- வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
- மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
- காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
- காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
- தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
- தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
- கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
- கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
- தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
- ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
- நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
- நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
- மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
- வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
- சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
- திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
- பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
- படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
- இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
- இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
- நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
- நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
- தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
- சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
- தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
- ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
- இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
- ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
- ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
- இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
- இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென் னாத
- பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
- பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
- அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
- அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.
- நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
- நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
- வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
- மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
- மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
- மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
- ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
- ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
- பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
- உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
- உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
- துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
- தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
- அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
- அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- ஏற்றமுறும் ஐங்கருவுக் காதார கரணம்
- எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே
- தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை
- துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான்
- ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம்
- அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச்
- சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- காணிகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும்
- கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின்
- மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில்
- மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின்
- பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும்
- பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி
- ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும்
- எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- வாயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
- பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை363 ஒருகோடி
- பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
- எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
- எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
- விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
- விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
- கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
- கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
- பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
- பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
- நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
- நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே
- பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து
- மாத்தகைய பெருஞ்ஜோதி மணிமன்றுள் விளங்கும்
- வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள்
- ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி
- இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன்
- தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில்
- துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- 360. பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு.
- 361. மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு.
- 362. இந்தவெளி - பி. இரா. பதிப்பு.
- 363. திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு.திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு.
- 364. திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும் பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.
- நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும்
- நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர்
- வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே
- மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
- வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும்
- மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும்
- பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.
- ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
- ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
- வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
- விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
- உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
- உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
- தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
- தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
- சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
- சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
- நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
- சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
- இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
- கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
- கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
- கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
- தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
- உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
- மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
- இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
- பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
- சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
- சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
- விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
- றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
- இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
- பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
- கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
- மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
- உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
- தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
- துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
- றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாவல்ல
- செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
- மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
- தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
- தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
- தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
- தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
- ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
- றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
- எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
- பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்
- தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே
- உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த
- சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
- மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
- வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
- செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
- சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
- தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
- செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- சொல்வந்த வேத முடிமுடி மீதில் துலங்குவது
- கல்வந்த நெஞ்சினர் காணற் கரியது காமமிலார்
- நல்வந் தனைசெய நண்ணிய பேறது நன்றெனக்கே
- செல்வந்தந் தாட்கொண்ட துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
- முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
- படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
- எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
- உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
- தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
- தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
- ஆக்கமுற வைத்தாய் அது.
- அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
- பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
- வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
- தந்தாய்என் நான்செய் தவம்.
- நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
- தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
- ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
- அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
- தில்லையும் பார்வதிபுரமும்
- கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
- எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
- அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
- பொதுவாய் நடிக்கின்ற போது.
- 286. அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,ச. மு. க.
- 287. பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம்(பூமி - பார், பொருந்து - வதி).
- கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதா தென்னுட் கலந்துகொண்டு
- தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
- புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
- கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே
- படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்
- தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்
- கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
- வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
- கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
- காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
- வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
- அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
- கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
- வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
- நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
- கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
- அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளா ரமுதம் அளித்திங்கே
- உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
- கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
- இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
- முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
- கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற
- புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
- தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
- கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
- எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
- திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
- கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
- தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
- விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
- கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
- சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
- ஆட்சி அடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
- காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே
- 329. விளங்கும் - முதற்பதிப்பு., பொ, சு., பி. இரா., ச. மு. க.
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்.
- முன்பின்அறி யாது மொழிந்தமொழி மாலைஎலாம்
- அன்பின் இசைந் தந்தோ அணிந்துகொண்டான் - என்பருவம்
- பாராது வந்தென் பருவரல்எல் லாம்தவிர்த்துத்
- தாரா வரங்களெலாம் தந்து.
- பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
- தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
- இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
- மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
- எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
- நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
- உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
- தெள்ளமுதோ அம்பலவன் சீர்.
- ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
- தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
- எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
- கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
- சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
- பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
- தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
- தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
- உடைத்தனிப்பே ரருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
- கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
- திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய்
- உயர்வுறுபே ரருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய்
- மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச்
- செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்
- கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்
- சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்
- தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
- புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
- சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
- சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
- வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
- எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
- செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
- மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
- பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
- தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
- தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
- நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
- சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
- சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
- கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
- செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
- அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
- மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
- திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
- கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
- தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
- கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
- தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
- உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
- விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்
- கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ர் பெருகக் கருத்தலர்ந்தே
- வரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்
- திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
- அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
- இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
- தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில்
- வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.
- விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே
- பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும்
- உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே
- கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.
- காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை
- ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து
- நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில்
- கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே.
- ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
- தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
- நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
- வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப
- நண்ணிஎனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்
- ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே
- இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ
- பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே
- பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்
- கோடுதவ றாதுனைநான் பாடுதற்கிங் கேற்ற
- குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்துமகிழ்ந் தருளே.
- நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
- நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
- எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
- யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
- பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
- பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
- தண்புடைநன் மொழித்திரளும்354 சுவைப்பொருளும் அவைக்கே
- தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
- என்இயலே யான்அறியேன் இவ்வுலகின் இயல்ஓர்
- எள்அளவும் தான்அறியேன் எல்லாமும் உடையோய்
- நின்இயலை அறிவேனோ அறிந்தவனே போல
- நிகழ்த்துகின்றேன் பிள்ளைஎன நிலைப்பெயர்பெற் றிருந்தேன்
- தன்இயலாம் தனிஞான சபைத்தலைமைப் பதியே
- சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம்
- பின்இயல்மா னிடப்பிள்ளை பேச்சினும்ஓர் பறவைப்
- பிறப்பின்உறும் கிளிப்பிள்ளைப் பேச்சுவக்கின் றதுவே.
- 354. மொழித்திறனும் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
- பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
- நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
- சிவனே கதவைத் திற.
- இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
- நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
- கோவே எனது குருவே எனையாண்ட
- தேவே கதவைத் திற.
- சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
- நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
- பவனே பரனே பராபரனே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
- மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
- தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
- நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
- நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
- செல்வா கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
- ஞான அமுதமது நானருந்த - ஞான
- உருவே உணர்வே ஒளியே வெளியே
- திருவே கதவைத் திற.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
- மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
- ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
- தேகா கதவைத் திற.
- விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
- அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
- துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும்
- கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த
- உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற
- வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.
- மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
- தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
- எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
- இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
- இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
- எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
- வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
- ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட
- வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ
- ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே
- ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே.
- வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
- வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
- வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
- வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
- ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
- சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
- பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
- தாடிக் களிக்க அருள்.
- இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
- சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
- தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
- பொன்னேர் பதத்தைப் புகழ்.
- ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
- ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
- போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
- போற்றும் படிப்பெற்ற போது.
- உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
- வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
- கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
- பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்
- நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்
- கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்
- உண்டுவியக் கின்றேன் உவந்து.
- ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
- தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
- கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
- ஈசனத்தன் அம்பலவ னே.
- ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்
- பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்
- தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்
- மொழிஆடு தற்கு முனம்.
- ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி
- அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில்
- வந்தான் இரவி வருதற்கு முன்கருணை
- தந்தானென் னுட்கலந்தான் தான்.
- 330. நிறைந்தொன்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.நிரைந்தொன்றாய் - பி. இரா. ' நிரந்தொன்றாய் ' என்பது அடிகள் எழுத்து.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
- இயல்உருவி லேஅருவிலே
- ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
- எறிஆத பத்திரளிலே
- ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
- ஒளிஒளியின் ஒளிநடுவிலே
- ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
- ஒளியேஎன் உற்றதுணையே
- அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
- அய்யனே அரசனேஎன்
- அறிவனே அமுதனே அன்பனே இன்பனே
- அப்பனே அருளாளனே
- துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
- தூயனே என்நேயனே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
- பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
- பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
- பேதமுற் றங்கும்இங்கும்
- போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
- போகாத படிவிரைந்தே
- புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
- பொருளினை உணர்த்திஎல்லாம்
- ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
- என்பிள்ளை ஆதலாலே
- இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
- றெண்ணற்க என்றகுருவே
- நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
- நிறைந்திருள் அகற்றும்ஒளியே
- நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
- நீதிநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
- நின்வார்த்தை யாவும்நமது
- நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
- நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
- ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
- அழியாத நிலையின்நின்றே
- அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
- ஆடிவாழ் கென்றகுருவே
- நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
- நான்இளங் காலைஅடைய
- நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
- நண்பனே துணைவனேஎன்
- ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
- ஒருவனே அருவனேஉள்
- ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
- ஓங்குநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
- கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
- சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
- துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
- சிற்கரை திரையறு திருவருட் கடலே
- தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
- சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே
- என்அறி வேஎன தறிவினுக் கறிவே
- அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே
- அற்புத மேபத மேஎன தன்பே
- பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப்
- பொருத்திய தயவுடைப் புண்ணியப் பொருளே
- தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே
- கலைகளுங் கருதரும் ஒருபெரும் பதியே
- தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே
- சித்தெலாம் வல்லதோர் சத்திய முதலே
- ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே
- அம்பலத் தாடல்செய் செம்பதத் தரசே
- தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- உருவமும் அருவமும் உபயமும் உளதாய்
- உளதில தாய்ஒளிர் ஒருதனி முதலே
- கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே
- கண்ணுடை யாய்பெருங் கடவுளர் பதியே
- திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே
- சிவகுரு துரியத்தில் தெளிஅனு பவமே
- தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
- இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
- விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
- மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
- பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
- புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
- சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
- பவநெறி இதுவரை பரவிய திதனால்
- செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
- செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
- புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
- புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
- தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
- அடிநடு முடியிலா ததுஇது மகனே
- படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
- பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
- செடியற உலகினில் அருள்நெறி இதுவே
- செயலுற முயலுக என்றசிற் பரமே
- தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நண்ணிய மதவெறி பலபல அவையே
- நன்றற நின்றன சென்றன சிலவே
- அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
- அலைதரு கின்றனர் அலைவற மகனே
- புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
- பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
- தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே
- அருட்பெருஞ் சோதியை அளித்தனம் உனக்கே
- துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே
- சூழ்ந்தசன் மார்க்கத்தில் செலுத்துக சுகமே
- விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே
- விஞ்சைகள் பலவுள விளக்குக என்றாய்
- தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே
- மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே
- நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே
- நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே
- ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே
- ஏற்றிய கருணைஎன் இன்னுயிர்த் துணையே
- தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
- அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
- ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
- உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
- சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
- சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
- சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே
- கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே
- அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா
- அருள்நிலை தனில்உற அருளிய அமுதே
- பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே
- பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே
- தற்பர பரம்பர சிதம்பர நிதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே
- எட்டாத நிலையேநான் எட்டிய மலையே
- ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி
- ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே
- ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே
- இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே
- சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- 246. சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா.
- 247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க.
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
- மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
- இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
- இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
- தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
- சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
- நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
- ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
- மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
- சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
- தலைமேலும் சுமந்துகொண்டோர் சந்துவழி பார்த்தே
- பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
- பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
- ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
- இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
- இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
- இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
- பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
- பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
- சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
- சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
- பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
- பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
- ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
- உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
- அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
- அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
- தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
- சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
- கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
- தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
- தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
- தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
- சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
- சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
- தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- அன்புடை மகனே மெய்யருள் திருவை
- அண்டர்கள் வியப்புற நினக்கே
- இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
- இரண்டரைக் கடிகையில் விரைந்தே
- துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
- தூய்மைசேர் நன்மணக் கோலம்
- பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
- பொதுநடம் புரிகின்றார் தாமே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
- அருள்ஒளித் திருவைநின் தனக்கே
- மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
- விரைந்திரண் டரைக்கடி கையிலே
- கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
- களிப்பொடு மங்கலக் கோலம்
- வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
- என்றனர் மன்றிறை யவரே.
- மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
- மணம்புரி விக்கின்றாம் இதுவே
- வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
- மங்கலக் கோலமே விளங்க
- இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
- எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
- சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
- தந்தையார் சிற்சபை யவரே.
- 333. அங்கனை - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா., ச. மு. க.
- வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
- ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
- வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
- ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
- ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
- சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
- நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
- வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
- அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
- தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
- அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
- 355. அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
- எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
- நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
- நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
- முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
- மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
- பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
- பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
- என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
- எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
- தன்னருள்தெள் ளமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
- சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
- மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
- வகுத்துரைத்துத் தெரித்திடுக வருநாள்உன் வசத்தால்
- உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
- உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
- இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
- ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
- உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
- தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
- திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
- ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
- எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
- நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
- நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
- என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
- இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
- முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
- தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர்
- மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக
- பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும்
- பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில்
- துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம்
- துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய்
- தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
- கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
- பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
- பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
- கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
- குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
- எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
- அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
- பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
- பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
- பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
- பின்படு தீமையின் முன்படு கின்றீர்
- இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
- வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
- முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
- மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
- மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
- வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
- என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
- தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
- சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
- பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
- பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
- என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்
- புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
- கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்ற
- களியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
- ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்
- அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
- மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
- மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.
- நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
- நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
- வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
- வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
- புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
- புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
- உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
- உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.
- கனமுடையேம் கட்டுடையேம் என்றுநினைத் திங்கே
- களித்திறுமாந் திருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
- சினமுடைய கூற்றுவரும் செய்திஅறி யீரோ
- செத்தநும தினத்தாரைச் சிறிதும்நினை யீரோ
- தினகரன்போல் சாகாத தேகமுடை யவரே
- திருவுடையார் எனஅறிந்தே சேர்ந்திடுமின் ஈண்டே
- மனமகிழ்ந்து கேட்கின்ற வரமெல்லாம் எனக்கே
- வழங்குதற்கென் தனித்தந்தை வருதருணம் இதுவே.
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
- 356. பாடுபட்டுப் - ச. மு. க. பதிப்பு.
- 357. எவ்வகைசார் - முதற்பதிப்பு., பொ. சு. பதிப்பு.
- 358. முதற்பதிப்பிலும், பொ. சு. பதிப்பிலும் 'கனமுடையேம்' என்பது ஒன்பதாம்பாடலாகவும் 'வையகத்தீர்' என்பது எட்டாம் பாடலாகவும் உள்ளன.
- எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
- எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
- நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
- ஒன்றாகி நின்றான் உவந்து.
- எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
- பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
- தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
- வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
- அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
- எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
- அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
- செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
- பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
- கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
- தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
- நிலையும் கொடுத்தான் நிறைந்து.
- ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற
- காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்
- கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்
- துண்டேன் அமுதம் உவந்து.
- சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
- நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
- பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
- வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
- சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்
- வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்
- தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை
- நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.
- செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்
- கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்
- அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்
- தெருட்பெருஞ் சத்தியம்ஈ தே.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை
- நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்
- தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட
- உள்ளியநாள் ஈதறிமின் உற்று.
- ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற
- நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள
- நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்
- அனையான் வருகின்றான் ஆய்ந்து.
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
- பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
- துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
- துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
- தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
- சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
- கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
- காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
- அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
- கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
- காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
- இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
- யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
- உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
- ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.
- திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
- சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
- வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
- வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
- பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
- பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
- கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
- கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
- நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை
- எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
- என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
- சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
- செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
- முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
- முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
- முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
- முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
- இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
- எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
- துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
- தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
- பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
- படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
- திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
- ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
- உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
- வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
- மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
- சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
- தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
- மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
- சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
- சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
- எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
- இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
- பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.
- உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
- உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
- கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
- கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
- சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
- தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
- இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
- என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
- சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
- தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
- நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
- நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
- புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
- பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
- அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
- அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
- 359. அகமறியீர் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க.
- தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
- உலகாளச் சூழ்ந்த காமப்
- பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
- நும்முயிரைப் பிடிக்க நாளைச்
- சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
- ஞானசபைத் தலைவன் உம்மைக்
- கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
- இவ்வுலகில் குலாவு வீரே.
- கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
- பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
- பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
- சுடுகின்றீர் புதைக்க நேரீர்
- சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
- துடியாதென் சொல்லீர் நும்மைத்
- தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
- கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
- முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
- மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின
- என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
- கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன
- பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில்
- எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- பத்தர்கள் பாடினர் பணிந்துநின் றாடினர்
- முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர்
- சித்தர்கள் ஆனந்தத் தெள்ளமு துண்டனர்
- சுத்த அருட்பெருஞ் சோதியார் தோன்றவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- இருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது
- மருட்பெரும் கன்மமும் மாயையும் நீங்கின
- தெருட்பெருஞ் சித்திகள் சேர்ந்தன என்னுளத்
- தருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்ததே.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
- தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
- முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
- பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
- அண்டஅப் பாபகி ரண்டஅப் பாநஞ் சணிந்தமணி
- கண்டஅப் பாமுற்றும் கண்டஅப் பாசிவ காமிஎனும்
- ஒண்தவப் பாவையைக் கொண்டஅப் பாசடை ஓங்குபிறைத்
- துண்டஅப் பாமறை விண்டஅப் பாஎனைச் சூழ்ந்தருளே.
- மெச்சிஅப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கியஎன்
- உச்சிஅப் பாஎன் னுடையஅப் பாஎன்னை உற்றுப்பெற்ற
- அச்சிஅப் பாமுக்கண் அப்பாஎன் ஆருயிர்க் கானஅப்பா
- கச்சிஅப் பாதங்கக் கட்டிஅப் பாஎன்னைக் கண்டுகொள்ளே.
- ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
- திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
- வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
- கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
- அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
- பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
- மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
- இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- சிற்றறி வுடையநான் செய்த தீமைகள்
- முற்றவும் பொறுத்தருள் முனிந்திடேல் இன்றே
- தெற்றென அருட்பெருஞ் சோதிச் செல்வமும்
- மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.
- மேவிஎன் உள்ளகத் திருந்து மேலும்என்
- ஆவியிற் கலந்திவன் அவன்என் றோதும்ஓர்
- பூவியற் பேதமும் போக்கி ஒன்றதாய்த்
- தேவியற் புரிந்தனன் சிதம்ப ரேசனே.
- போற்றி நின்அருள் போற்றி நின்பொது
- போற்றி நின்புகழ் போற்றி நின்உரு
- போற்றி நின்இயல் போற்றி நின்நிலை
- போற்றி நின்நெறி போற்றி நின்சுகம்
- போற்றி நின்உளம் போற்றி நின்மொழி
- போற்றி நின்செயல் போற்றி நின்குணம்
- போற்றி நின்முடி போற்றி நின்நடு
- போற்றி நின்அடி போற்றி போற்றியே.
- பாடமும் படிப்பும்
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- பாட்டும் திருத்தமும்
- ஆன்பாலும் நறுந்தேனும் சர்க்கரையும் கூட்டியதெள் ளமுதே என்றன்
- ஊன்பாலும் உளப்பாலும் உயிர்ப்பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
- பூம்பாடல் புனைந்தேத்த என்னுளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- பொருட்பெருஞ் சுடர்செய் கலாந்தயோ காந்தம்
- புகன்றபோ தாந்த நாதாந்தம்
- தெருட்பெரு வேதாந் தம்திகழ் சித்தாந்
- தத்தினும் தித்திக்கும் தேனே
- மருட்பெரு இருளைத் தீர்த்தெனை வளர்க்கும்
- மாபெருங் கருணையா ரமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- உழக்கறியீர் அளப்பதற்கோர் உளவறியீர் உலகீர்
- ஊர்அறியீர் பேர்அறியீர் உண்மைஒன்றும் அறியீர்
- கிழக்கறியீர் மேற்கறியீர் அம்பலத்தே மாயைக்
- கேதம்அற நடிக்கின்ற பாதம்அறி வீரோ
- வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர்
- வடிக்கும்முன்னே சோறெடுத்து வயிற்றடைக்க அறிவீர்
- குழக்கறியே349 பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியே
- குழம்பேசா றேஎனவும் கூறஅறி வீரே.
- மழவுக்கும் ஒருபிடிசோ றளிப்பதன்றி இருபிடிஊண் வழங்கில் இங்கே
- உழவுக்கு முதல்குறையும் எனவளர்த்தங் கவற்றைஎலாம் ஓகோ பேயின்
- விழவுக்கும் புலால்உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
- இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர் என்னே என்னே.
- கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்கா நின்ற
- சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் கணச்சுகமேசொல்லக் கேண்மின்
- முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
- இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ எமையும்இவ்வா றிடுகஎன்றே.
- சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
- சிறியவர் சிந்தைமாத் திரமோ
- பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
- புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
- கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
- கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
- எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
- இனிப்பிலே புகுகின்ற திலையே.
- நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
- நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
- வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
- வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
- காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
- களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
- ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
- எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அடிமேல் ஆணை
- என்பாடென் றிலைஎன்னால் துரும்பும் அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப்
- பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும்
- உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா.
- முன்பாடு பின்பயன்தந் திடும்எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
- இன்பாடும் இவ்வுலகில் என்னறிவில் இலைஅதனால் எல்லாம் வல்லோய்
- அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்றோய் அருட்சோதி அளித்துக் காத்தல்
- உன்பாடு நான்உரைத்தேன் எனக்கொருபா டுண்டோநீ உரைப்பாய் அப்பா.
- உன்ஆணை உன்னைவிட உற்றதுணை வேறிலைஎன் உடையாய் அந்தோ
- என்நாணைக் காத்தருளி இத்தினமே அருட்சோதி ஈதல் வேண்டும்
- அந்நாள்நை யாதபடி அருள்புரிந்த பெருங்கருணை அரசே என்னை
- முன்னாள்நின் அடியவன்என் றுலகறிந்த இந்நாள்என் மொழிந்தி டாதே.
- உடைய நாயகன் பிள்ளைநான் ஆகில்எவ் வுலகமும் ஒருங்கின்பம்
- அடைய நான்அருட் சோதிபெற் றழிவிலா யாக்கைகொண் டுலகெல்லாம்
- மிடைய அற்புதப் பெருஞ்செயல் நாடொறும் விளைத்தெங்கும் விளையாடத்
- தடைய தற்றநல் தருணம்இத் தருணமாத் தழைக்கஇத் தனியேற்கே.
- கோது கொடுத்த மனச்சிறியேன் குற்றம் குணமாக் கொண்டேஇப்
- போது கொடுத்த நின்அருளாம் பொருளை நினைக்கும் போதெல்லாம்
- தாது கொடுத்த பெருங்களிப்பும் சாலா தென்றால் சாமிநினக்
- கேது கொடுப்பேன் கேட்பதன்முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
- பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
- தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
- இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
- மந்திரம் அறியேன் மற்றை மணிமருந் தறியேன் வேறு
- தந்திரம் அறியேன் எந்தத் தகவுகொண் டடைவேன் எந்தாய்
- இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப்பொன் மன்றில் வேணிச்
- சந்திரன் ஆட இன்பத் தனிநடம் புரியும் தேவே.
- கருணைக் கடலே அதில்எழுந்த கருணை அமுதே கனியமுதில்
- தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
- பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
- தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.
- கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
- இலக்கம் உற்றறிந் திடஅருள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
- துலக்க முற்றசிற் றம்பலத் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
- அலக்கண் அற்றிடத் திருவருள் புரியும்என் அப்பனே அடியேற்கே.
- பண்டு நின்திருப் பாதம லரையே
- பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
- தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
- துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
- குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
- குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
- கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
- குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.
- கண்ணெலாம் நிரம்பப் பேரொளி காட்டிக்
- கருணைமா மழைபொழி முகிலே
- விண்ணெலாம் நிறைந்த விளக்கமே என்னுள்
- மேவிய மெய்ம்மையே மன்றுள்
- எண்ணெலாம் கடந்தே இலங்கிய பதியே
- இன்றுநீ ஏழையேன் மனத்துப்
- புண்ணெலாம் தவிர்த்துப் பொருளெலாம் கொடுத்துப்
- புகுந்தென துளங்கலந் தருளே.
- வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
- தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
- ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
- நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
- செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
- தேவரும் முனிவரும் பிறரும்
- இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
- எந்தைநின் திருவருள் திறத்தை
- எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
- என்தரத் தியலுவ தேயோ
- ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
- உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே.
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
- வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
- தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
- தந்தை நீதரல் சத்தியம் என்றே
- குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
- குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
- திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
- செய்க வாழ்கநின் திருவருட் புகழே.
- வினைத்தடைதீர்த் தெனைஆண்ட மெய்யன்மணிப் பொதுவில்
- மெய்ஞ்ஞான நடம்புரிந்து விளங்குகின்ற விமலன்
- எனைத்தனிவைத் தருளொளிஈந் தென்னுள்இருக் கின்றான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் இச்சையருட் சோதி
- தினைத்தனைபெற் றவரேனும் சாலுமுன்னே உலகில்
- செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று
- நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர்கண்டாய் எனது
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
- இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
- மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
- அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம்.
- அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல்
- அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள்
- அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை
- அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே.
- ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
- சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
- நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
- ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
- கரும்பசைக்கும் மொழிச்சிறியார் கல்மனத்தில் பயின்றுபயின்
- றிரும்பசைக்கும் மனம்பெற்றேன் யானோஇவ் வேழைகள்தம்
- அரும்பசிக்கு மருந்தளிப்பேன் அந்தோஇங் கென்னாலே
- துரும்பசைக்க முடியாதே சோதிநடப் பெருமானே.
- மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று
- பதிக்களவா நலந்தருவல் என்றுநினை ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
- விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
- பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.
- ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
- கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
- ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
- பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.
- ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
- வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
- நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
- நாதனைக் கண்டவன் நடிக்கும்
- மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
- மருந்துகண் டுற்றது வடிவாய்
- நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
- நெஞ்சமே அஞ்சலை நீயே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
- வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
- கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
- கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
- பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
- பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
- விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
- வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
- மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
- இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
- தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
- பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம் பலநடங்கண்
- டெண்ணிய எண்ணம் பலித்தன மெய்இன்பம் எய்தியதோர்
- தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியைநான்
- நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன்இந்த நானிலத்தே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின
- மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின
- இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன
- தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
- வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
- தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
- தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
- யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
- ஞானா கரச்சுடரே ஞான மணிவிளக்கே
- ஆனா அருட்பெருஞ்சிற் றம்பலத்தே ஆனந்தத்
- தேனார் அமுதாம் சிவமே சிவமேநீ
- நானாகி என்னுள் நடிக்கின்றாய் என்னேயோ.
- என்தரத்துக் கேலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
- முன்தரத்தின் எல்லாம் முடித்துக் கொடுக்கின்றாய்
- நின்தரத்தை என்புகல்வேன் நின்இடப்பால்350 மேவுபசும்
- பொன்தரத்தை என்உரைக்கேன் பொற்பொதுவில் நடிக்கின்றோய்.
- என்னுடைய விண்ணப்பம் இதுகேட்க எம்பெருமான்
- நின்னுடைய பெருங்கருணை நிதிஉடையேன் ஆதலினால்
- பொன்னுடையான் அயன்முதலாம் புங்கவரை வியவேன்என்
- தன்னுடைய செயலெல்லாம் தம்பிரான் செயலன்றே.
- ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
- தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
- வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
- பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.
- நாட்பாரில் அன்பரெலாம் நல்குகஎன் றேத்திநிற்ப
- ஆட்பாரில் அன்போர் அணுத்துணையும் இல்லேற்கே
- நீட்பாய் அருளமுதம் நீகொடுத்தாய் நின்னை இங்கே
- கேட்பார் இலைஎன்று கீழ்மேல தாக்கினையே.
- நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
- தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
- வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
- கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
- முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
- இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
- றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
- என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
- கண்டேன் சிற்றம்பலத் தானந்த நாடகம் கண்டுகளி
- கொண்டேன் எல்லாம்வல்ல சித்தனைக் கூடிக் குலவிஅமு
- துண்டேன் மெய்ஞ்ஞான உருஅடைந் தேன்பொய் உலகொழுக்கம்
- விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பிதுவே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- தென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு
- வின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி
- அன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி
- என்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்
- ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே
- சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
- இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.
- கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
- தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
- அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
- பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
- முந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எனஎன்
- முன்னர்நீ தோன்றினை அந்தோ
- அந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்
- அப்பனே அய்யனே அரசே
- இந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்
- என்னைவிட் டொழிந்திடப் புரிந்தாய்
- எந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்
- கெய்துதற் குரியமெய்த் தவமே.
- வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
- மலத்திலே கிடந்துழைத் திட்ட
- நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
- நன்றுறச் சூட்டினை அந்தோ
- தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
- சோதியே நின்பெருந் தயவைத்
- தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
- தயவும்உன் தனிப்பெருந் தயவே.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- இன்பிலே வயங்கும் சிவபரம் பொருளே
- என்உயிர்க் கமுதமே என்தன்
- அன்பிலே பழுத்த தனிப்பெரும் பழமே
- அருள்நடம் புரியும்என் அரசே
- வன்பிலே விளைந்த மாயையும் வினையும்
- மடிந்தன விடிந்ததால் இரவும்
- துன்பிலேன் இனிநான் அருட்பெருஞ் சோதிச்
- சூழலில் துலங்குகின் றேனே.
- படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
- பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
- பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
- பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
- வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
- வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
- நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
- நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
- தரம்பிறர் அறியாத் தலைவஓர் முக்கண்
- தனிமுதல் பேரருட் சோதிப்
- பரம்பர ஞான சிதம்பர நடஞ்செய்
- பராபர நிராமய நிமல
- உரம்பெறும் அயன்மால் முதற்பெருந் தேவர்
- உளத்ததி சயித்திட எனக்கே
- வரந்தரு கின்றாய் வள்ளல்நின் கருணை
- மாகடற் கெல்லைகண் டிலனே.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
- வாரியைக் கண்டனம் மனமே
- அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
- ஆடலாம் அடிக்கடி வியந்தே
- உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
- ஓங்கலாம் உதவலாம் உறலாம்
- கள்எலாம் உண்டவண்டென இன்பம்
- காணலாம் களிக்கலாம் இனியே.
- உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே
- பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே
- புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மைசேர்
- திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்றவி ழுந்ததே.
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- அன்புடை யவரேஎல் லாம்உடை யவரே
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேஎன்
- வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனது
- வசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே
- இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்
- இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே
- என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனை
- எண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
- நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
- வாய்க்கு வந்த படிபல பேசவே
- மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
- தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
- தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
- சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
- திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.
- தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்
- தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே
- பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே
- புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்
- என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்
- இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்
- நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்
- நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
- எல்லா உலகமும் என்வசம் ஆயின
- எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
- எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
- எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
- எல்லா போகமும் என்போகம் ஆயின
- எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
- எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
- எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- நீதியில் கலந்து நிறைந்தது நானும்
- நித்தியன் ஆயினேன் உலகீர்
- சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
- சத்தியச் சுத்தசன் மார்க்க
- வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
- விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
- வாது பேசிய மனிதர் காள்ஒரு
- வார்த்தை கேண்மீன்கள் வந்துநும்
- போது போவதன் முன்ன ரேஅருட்
- பொதுவி லேநடம் போற்றுவீர்
- தீது பேசினீர் என்றி டாதுமைத்
- திருவு ளங்கொளும் காண்மினோ
- சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்
- சுற்றம் என்பது பற்றியே.
- தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
- தொலைந்தன தொலைந்தன எனைவிட்
- டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
- இரிந்தன ஒழிந்தன முழுதும்
- ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
- அழிவுறா உடம்பும்மெய் இன்ப
- ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
- உண்மைஇவ் வாசகம் உணர்மின்.
- பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்
- இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
- அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
- நிச்சலும்பே ரானந்த நித்திரைசெய் கின்றேனே.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
- நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
- நல்லநாள் எண்ணிய நாள்.
- ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
- காலங் கருதுவ தேன் - நெஞ்சே
- காலங் கருதுவ தேன்.
- கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
- பையுள்292 உனக்கென்னை யோ - நெஞ்சே
- பையுள் உனக்கென்னை யோ.
- தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
- தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
- தத்துவ முன்னுவ தேன்.
- ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
- விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
- விக்கல் வராதுகண் டாய்.
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- நினைக்க நினைக்கத் தித்திப் பெனது நினைவில் கொடுக்கு தே
- நின்பால் அன்றிப் பிறர்பால் செல்ல நெஞ்சம் நடுக்கு தே
- எனைத்துன் பொழித்தாட் கொண்ட நின்னை அன்னை என்ப னோ
- எந்தாய் அன்பி லேன்நின் னடிக்கு முன்னை அன்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
- நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
- நடுநா டியநின் அருளுக் கென்மேல் என்ன நாட்ட மோ
- நாய்க்குத் தவிசிட் டனைநின் தனக்கிங் கிதுவோர் ஆட்ட மோ.
- எனக்கும் உனக்கும்
- நாகா திபனும் அயனும் மாலும் நறுமு றென்ன வே
- ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்ன வே
- சாகாக்கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவை யே
- சாற்றற் கரிது நினக்கென் கொடுப்ப தேதும் வியவை யே.
- எனக்கும் உனக்கும்
- தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
- தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
- நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
- நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே.
- எனக்கும் உனக்கும்
- ஏறா நிலையில் விரைந்து விரைந்திங் கென்னை ஏற்றி யே
- இறங்கா திறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றி யே
- மாறாக் கருணை என்மேல் வைக்க வந்த தென்னை யோ
- மதியி லேன்நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
- எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
- நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
- நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
- விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
- அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
- அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
- இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
- அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டி யே
- அன்பால் என்னை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
- என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
- பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
- புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே.
- எனக்கும் உனக்கும்
- என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
- என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
- புன்கண் ஒழித்துத் தெள்ளா ரமுதம் புகட்டி என்னை யே
- பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
- அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
- செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
- செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
- எனக்கும் உனக்கும்
- ஒருநா ழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலை யே
- யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலை யே
- திருநாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையு மே
- சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையு மே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன் றாக வே
- விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போக வே
- பூதா திகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்று மே
- பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்று மே.
- எனக்கும் உனக்கும்
- இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
- எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
- மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
- வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்று மே
- கருத்தில் உளது வேறோர் விடயம் காணேன் என்று மே
- உள்ள துரைக்கின் றேன்நின் அடிமேல் ஆணை முன்னை யே
- உள்ளே விளங்கிக் காண்கின் றாய்க்கிங் கொளிப்ப தென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ
- எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ
- முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே
- மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
- துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
- ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
- ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே.
- எனக்கும் உனக்கும்
- அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதி யே
- அரசே எனக்குள் விளங்கும் ஆதி யாம்அ னாதி யே
- ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணை யாள னே
- ஒன்றாய் ஒன்றில் உபய மாகி ஒளிரும் தாள னே.
- எனக்கும் உனக்கும்
- பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
- பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
- ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
- இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே
- இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே
- முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே
- முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- நாய்க்குத் தவிசிட் டொருபொன் முடியும் நன்று சூட்டி யே
- நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
- கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
- புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
- புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலையே.
- எனக்கும் உனக்கும்
- சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலை யே
- தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலை யே
- ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற் பாத மே
- உலக விடயக் காட்டில் செல்லா தெனது போத மே.
- எனக்கும் உனக்கும்
- தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம தாயிற் றே
- சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற் றே
- ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கி னேன்
- எந்தாய் கருணை அமுதுண் டின்பப் பொருப்பில் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயி னேன்
- வள்ளல் கருணை அமுதுண் டின்ப நாட்டான் ஆயி னேன்
- குலத்தில் குறியில் குணத்தில் பெருமை கொள்ளா நாயி னேன்
- கோதில் அமுதுண் டெல்லா நலமும் உள்ளான் ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
- கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
- விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன்
- விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார்
- அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார்
- மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே
- வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தில் நடங்கண் டவர்காற் பொடிகொள் புல்ல தே
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்ய வல்ல தே
- பற்றம் பலத்தில் வைத்தார் தம்மைப் பணியும் பத்த ரே
- பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்த ரே.
- எனக்கும் உனக்கும்
- சிருட்டி முதல்ஓர் ஐந்து தொழிலும் செய்யென் றென்னை யே
- செல்வப் பிள்ளை யாக்கி வளர்க்கின் றாய்இ தென்னை யே
- தெருட்டித் திருப்பொற் பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டி யே
- திகழ நடுவைத் தாய்சன் மார்க்க சங்கம்கூட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே
- அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே
- தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே
- தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
- வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
- நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
- நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
- எனக்கும் உனக்கும்
- அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே
- அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே
- எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே
- எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பனிரண் டாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையு மே
- துனியா தந்தப் பாடு முழுதும் சுகம தாயிற் றே
- துரையே நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
- ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
- இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வ மே
- சிறியேன் மயங்கும் தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வ மே
- என்னை அவத்தைக் கடல்நின் றிங்ஙன் எடுத்த தெய்வ மே
- எல்லா நலமும் தரும்இன் னமுதம் கொடுத்த தெய்வ மே.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
- அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
- இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
- என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
- எனக்கும் உனக்கும்
- உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னை யே
- ஓதா துணர உணரும் உணர்வை உதவும் அன்னை யே
- தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச் செய்த அப்ப னே
- செல்வப் பிள்ளை யாக்கி என்னுள் சேர்ந்த அப்ப னே.
- எனக்கும் உனக்கும்
- சற்றும் வருந்தப் பாரா தென்னைத் தாங்கும் நேய னே
- தான்நான் என்று பிரித்தற் கரிய தரத்து நேய னே
- முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேய னே
- முன்னே நான்செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேய னே.
- எனக்கும் உனக்கும்
- மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவ ரே
- மனிதர் கண்ணிற் பட்ட புல்லும் மரமும் தேவ ரே
- அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவ ரே
- அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவ ரே.
- எனக்கும் உனக்கும்
- வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
- மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
- ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
- எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- என்னைக் காட்டிஎன்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே
- இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டி யே
- பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடி யே
- புந்தி களிக்க வைத்தாய் அழியா தென்னை நாடி யே.
- எனக்கும் உனக்கும்
- அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே
- அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே
- பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே
- பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே.
- எனக்கும் உனக்கும்
- சிற்றம் பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டி யே
- சிறப்பாய் எல்லாம் வல்ல சித்தித் திறத்தைக் காட்டி யே
- குற்றம் பலவும் தீர்த்தென் தனக்கோர் முடியும் சூட்டி யே
- கோவே நீயும் என்னுள் கலந்து கொண்டாய் நாட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- சாகாக் கல்விஎனக்குப் பயிற்றித் தந்த சோதி யே
- தன்னேர் முடிஒன் றெனது முடியில் தரித்த சோதி யே
- ஏகாக் கரப்பொற் பீடத்தென்னை ஏற்று சோதி யே
- எல்லாம் வல்ல சித்திஆட்சி ஈய்ந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
- சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
- சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
- சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
- 336. உயிரும் உடலும் - ச. மு. க.
- 337. பெருகி - ச. மு. க.
- 338. தனியன் - பி. இரா., ச. மு. க.
- அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
- அன்பருக் கன்பரே வாரீர்
- இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்
- அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
- அடிக்கம லத்தீரே வாரீர்
- நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆகம வேதம் அனேக முகங்கொண்
- டருச்சிக்கும் பாதரே வாரீர்
- ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
- ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
- ஆனந்த ரேஇங்கு வாரீர்
- ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
- தமுதம் அளித்தீரே வாரீர்
- ஆடிய பாதரே வாரீர். வாரீர்
- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
- ஜோதிய ரேஇங்கு வாரீர்
- வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
- இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
- இதுதரு ணம்இங்கு வாரீர்
- இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்
- இரவும் பகலும் இதயத்தி லூறி
- இனிக்கும் அமுதரே வாரீர்
- இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்
- ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
- கின்பமும் ஆயினீர் வாரீர்
- அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
- உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
- துண்டி விரும்பினேன் வாரீர்
- உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
- என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
- என்குறை என்முன்னீர் வாரீர்
- தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
- என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
- இன்பால் பெறுகின்றீர் வாரீர்
- தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
- ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
- பாராய ணம்செய்வீர் வாரீர்
- ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
- ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
- ஏதது சொல்லுவீர் வாரீர்
- ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
- ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
- ஐயம் தவிர்த்தீரே வாரீர்
- மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
- ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
- ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
- நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
- ஒப்பாரி அல்லகாண் வாரீர்
- முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
- ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
- ஊமென்று310 காட்டினீர் வாரீர்
- நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
- மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
- மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
- விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
- மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
- இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
- வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
- அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
- அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
- புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
- பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
- எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
- காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
- புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
- புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
- அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
- அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
- இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
- 311. அணிகிளர் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 312. அணிகிளர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
- வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
- தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
- துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
- இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
- நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
- விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
- வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
- எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
- இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- 335. சதுர்மறை - பொ. சு., ச. மு. க.
- சுட்டப் படாத மருந்து - என்றன்
- தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து
- எட்டுதற் கொண்ணா மருந்து - நான்
- எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து. ஞான
- ஆதிஈ றில்லாமுற் ஜோதி - அரன்
- ஆதியர் தம்மை அளித்தபிற் ஜோதி
- ஓதி உணர்வரும் ஜோதி - எல்லா
- உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- மன்னிய பொன்வண்ண ஜோதி - சுக
- வண்ணத்த தாம்பெரு மாணிக்க ஜோதி
- துன்னிய வச்சிர ஜோதி - முத்து
- ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி. சிவசிவ
- பார்முதல் ஐந்துமாம் ஜோதி - ஐந்தில்
- பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
- ஓர்ஐம் பொறியுரு ஜோதி - பொறிக்
- குள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி. சிவசிவ
- ஐம்புல மும்தானாம் ஜோதி - புலத்
- தகத்தும் புறத்து மலர்ந்தொளிர் ஜோதி
- பொய்ம்மயல் போக்கும்உள் ஜோதி - மற்றைப்
- பொறிபுலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி. சிவசிவ
- முக்குணமு மூன்றாம் ஜோதி - அவை
- முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி
- எக்குணத் துள்ளுமாம் ஜோதி - குணம்
- எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி. சிவசிவ
- கால முதற்காட்டும் ஜோதி - கால
- காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
- கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
- குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. சிவசிவ
- சத்தர்கள் எல்லாமாம் ஜோதி - அவர்
- சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி
- முத்தர் அனுபவ ஜோதி - பர
- முத்தியாம் ஜோதிமெய்ச் சித்தியாம் ஜோதி. சிவசிவ
- பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
- பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
- வாரமுற் றோங்கிய ஜோதி - மன
- வாக்குக் கெட்டாததோர் மாமணி316 ஜோதி. சிவசிவ
- என்னைத்தா னாக்கிய ஜோதி - இங்கே
- இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஜோதி
- அன்னைக்கு மிக்கருட் ஜோதி - என்னை
- ஆண்டமு தம்தந்த ஆனந்த ஜோதி. சிவசிவ
- சித்தம் சிவமாக்கும் ஜோதி - நான்
- செய்த தவத்தால் தெரிந்தஉட் ஜோதி
- புத்தமு தாகிய ஜோதி - சுக
- பூரண மாய்ஒளிர் காரண ஜோதி. சிவசிவ
- நித்த பரானந்த ஜோதி - சுத்த
- நிரதிச யானந்த நித்திய ஜோதி
- அத்துவி தானந்த ஜோதி - எல்லா
- ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி. சிவசிவ
- காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
- காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
- ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
- நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ
- சுத்த சிவமய ஜோதி - என்னை
- ஜோதி மணிமுடி சூட்டிய ஜோதி
- சத்திய மாம்பெருஞ் ஜோதி - நானே
- தானாகி ஆளத் தயவுசெய் ஜோதி. சிவசிவ
- 316. மாணிக்க - ச. மு. க. பதிப்பு.
- சைவ முதலாக நாட்டும் - பல
- சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
- தெய்வம் இதுவந்து பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
- தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
- தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- வருவித்த வண்ணமும் நானே - இந்த
- மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
- தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாரிடம் வானிட மற்றும் - இடம்
- பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
- சேரிட மாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- உருவும் உணர்வும்செய் நன்றி - அறி
- உளமும் எனக்கே உதவிய தன்றித்
- திருவும் கொடுத்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- 317. ஈகின்றோம் ஈகின்றோம் ஈகின்றோம் என்றே - ச. மு. க.
- துய்யர் அருட்பெருஞ் ஜோதியார் நம்முடை
- அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
- அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
- ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- நமுதன் முதற்பல நன்மையு மாம்ஞான
- அமுதர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- 293. வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா. பதிப்பு.
- மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
- வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
- கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
- கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
- குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
- குதித்த314 மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
- வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
- விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
- கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
- கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
- தாபமும் சோபமும் தான்தானே சென்றது
- தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இதுநல்ல
- 314. கொதித்த - முதற்பதிப்பு., பொ சு, பி. இரா., ச. மு. க.
- பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும்
- போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய்
- அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை
- ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார்
- அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார்
- சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச்
- சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே. என்ன
- ஆரணர்நா ரணர்எல்லாம் பூரணர்என் றேத்துகின்ற
- ஐயர்திரு வம்பலவர் மெய்யர்எல்லாம் வல்லசித்தர்
- காரணமும் காரியமும் தாரணிநீ யாகஉன்னைக்
- காணவந்தார் வந்தார்என்றே வேணுநாதம் சொல்கின்றதே. என்ன
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- 313. உன்மேலாணை - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
- அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
- இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
- இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
- ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
- அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
- நாரா யணன்விழி நண்ணிய பாதம்
- நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய
- நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
- நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
- வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
- மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய
- தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
- தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
- மூவரும் காணா முழுமுதற் பாதம்
- முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
- சாகா வரந்தந்த தாரகப் பாதம்
- சச்சிதா னந்த சதோதய பாதம்
- தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
- திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய
- ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
- அபயர்295 எல்லார்க்கும் அமுதான பாதம்
- கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
- கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய
- ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
- ஆதி அனாதியும் ஆகிய பாதம்
- மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
- மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
- 294. மாதவன் - ஆ. பா. பாதிப்பு.
- 295. ஐயர் - ச. மு. க. பதிப்பு.
- நாரா யணனொடு நான்முக னாதியர்
- பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்
- அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத்
- தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்
- எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம்
- புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்
- நாத முடியில்297 நடம்புரிந் தன்பர்க்குப்
- போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்
- சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
- புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்
- 296. பாதத்திற்கே - பி. இரா., ஆ. பா.
- 297. முடிவில் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
- சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
- இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
- இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
- சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
- சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
- நித்திய ஞான நிறையமு துண்டனன்
- நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் அற்புதம்
- ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
- சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
- சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
- பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
- பேர்மணி ஆச்சுத டி - அம்மா
- பேர்மணி ஆச்சுத டி. ஆணி
- வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
- மணிமுடி கண்டேன டி - அம்மா
- மணிமுடி கண்டேன டி. ஆணி
- மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
- மற்றது கண்டேன டி - அம்மா
- மற்றது கண்டேன டி. ஆணி
- கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
- கோயில் இருந்தத டி - அம்மா
- கோயில் இருந்தத டி. ஆணி
- ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
- ஐவண்ணம் ஆகும டி - அம்மா
- ஐவண்ணம் ஆகும டி. ஆணி
- அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
- அமுதமும் உண்டேன டி - அம்மா
- அமுதமும் உண்டேன டி. ஆணி
- நாத முடியான்என்று ஊதூது சங்கே
- ஞானசபையான்என்று ஊதூது சங்கே
- பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
- பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.
- தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
- சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
- உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
- உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.
- எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
- எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
- கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
- கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
- அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
- அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.
- பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
- பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
- சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
- சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
- ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
- ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
- எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- சிற்பொதுவும் பொற்பொதுவும் நான்அறிய லாச்சு
- சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு
- இற்பகரும்345 இவ்வுலகில் என்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
- நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
- சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
- செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
- 345. இப்பெரிய விவ்வுலகில் - முதற்பதிப்பு., ச. மு. க. பதிப்பு.
- அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
- அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
- மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
- மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.
- சிவசிவ கஜமுக கணநா தா
- சிவகண வந்தித குணநீ தா.
- சிவசிவ சிவசிவ தத்துவ போதா
- சிவகுரு பரசிவ சண்முக நாதா.
- மலைதரு மகளே மடமயி லே
- மதிமுக அமுதே இளங்குயி லே.
- என்னுயிர் உடம்பொடு சித்தம தே
- இனிப்பது நடராஜ புத்தமு தே.
- சந்தத மும்சிவ சங்கர பஜனம்
- சங்கிதம் என்பது சற்சன வசனம்.
- சங்கர மும்சிவ மாதே வா
- எங்களை ஆட்கொள வாவா வா.
- அரகர சிவசிவ மாதே வா
- அருளமு தம்தர வாவா வா.
- உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே
- தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
- அம்பல வாணர்தம் அடியவ ரே
- அருளர சாள்மணி முடியவ ரே.
- அருட்பெருஞ்சோதியைக் கண்டே னே
- ஆனந்தத் தெள்ளமு துண்டே னே.
- 339. ஆ பா. பதிப்பைத் தவிர மற்றைப் பதிப்புகள் அனைத்திலும் "அம்பலத்தரசே" முதலாகநாமாவளி தொடங்குகிறது. ஆ. பா. பதிப்பில் மட்டும் இவ்விரண்டு நாமாவளிகளும்முன்வைக்கப் பெற்று "அம்பலத்தரசே" மூன்றாவதாக வைக்கப்பெற்றுள்ளது.இறுக்கம் இரத்தின முதலியார், வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார்இவ்விருவரின் படிகளில் மட்டுமே இவ்விரண்டு நாமாவளிகள் காணப்பெறுவதாயும்,கிடைத்த மற்றைப் படிகளில் இவை இல்லை என்றும், அவற்றில் "அம்பலத்தரசே"என்பதே தொடக்கம் என்றும் ஆ. பா. குறிக்கிறார். இப்பதிப்பில் இவ்விருநாமாவளிகளும் தனியாக எண்ணிடப் பெற்றுத் தனிப்படுத்திக் காட்டப் பெற்றுள்ளன.அம்பலத்தரசே எனத் தொடங்கும் நாமாவளிக்கு இவ்விரண்டையும் காப்பாகக்கொள்ளலாம்.
- 340. சவுதய - ஆ. பா. பதிப்பு.
- 341. அனுர்த - ச. மு. க. பதிப்பு.
- அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
- இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
- அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
- சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
- கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
- எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
- உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
- பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
- அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
- அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
- உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
- உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
- இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
- இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
- அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
- அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
- ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
- உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
- வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
- மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
- 342. இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
- ஏதமுயங் காதுகயங் காதுமயங் காது
- ஏறிஇறங் காதுஉறங் காதுகறங் காது
- சூதமிணங் காதுபிணங் காதுவணங் காது
- ஜோதிபரஞ் ஜோதிசுயஞ் ஜோதிபெருஞ் ஜோதி.
- அமலசபாபதி அபயசபாபதி அமுதசபாபதி அகிலசபாபதி
- நிமலசபாபதி நிபுணசபாபதி நிலயசபாபதி நிபிடசபாபதி.
- கலகந்தரும் அவலம்பன கதிநம்பல நிதமும்
- கனகந்தரு மணிமன்றுறு கதிதந்தருள் உடலஞ்
- சலசந்திரன் எனநின்றவர் தழுவும்பத சரணம்
- சரணம்பதி சரணம்சிவ சரணம்குரு சரணம்.
- அரைசே குருவே அமுதே சிவமே
- அணியே மணியே அருளே பொருளே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
- அருவே திருவே அறிவே செறிவே
- அதுவே இதுவே அடியே முடியே
- அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
- பசியாத அமுதே பகையாத பதியே
- பகராத நிலையே பறையாத சுகமே
- நசியாத பொருளே நலியாத உறவே
- நடராஜ மணியே நடராஜ மணியே.
- பதியுறு பொருளே பொருளுறு பயனே
- பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
- மதியுறும் அமுதே அமுதுறு சுவையே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- அருளுறு வெளியே வெளியுறு பொருளே
- அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
- மருளறு தெருளே தெருளுறு மொளியே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- கலைநிறை மதியே மதிநிறை அமுதே
- கதிநிறை கதிரே கதிர்நிறை சுடரே
- சிலைநிறை நிலையே நிலைநிறை சிவமே
- திருநட மணியே திருநட மணியே.
- மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே
- விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே
- திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே
- திருநட மணியே திருநட மணியே.
- இயல்கிளர் மறையே மறைகிளர் இசையே
- இசைகிளர் துதியே துதிகிளர் இறையே
- செயல்கிளர் அடியே அடிகிளர் முடியே
- திருநட மணியே திருநட மணியே.
- புரையறு புகழே புகழ்பெறு பொருளே
- பொருளது முடிபே முடிவுறு புணர்வே
- திரையறு கடலே கடலெழு சுதையே
- திருநட மணியே திருநட மணியே.
- இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
- எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
- அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
- அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.
- வேத சிகாமணியே போத சுகோதயமே
- மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
- நாத பராபரமே சூத பராவமுதே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆகம போதகமே யாதர வேதகமே
- ஆமய மோசனமே ஆரமு தாகரமே
- நாக நடோதயமே நாத புரோதயமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
- எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
- என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
- வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
- மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
- நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
- நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
- நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
- நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
- பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
- பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
- வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
- வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
- இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
- எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
- சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
- சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
- துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
- தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
- கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
- ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
- இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
- பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
- பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
- பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
- பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
- என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
- பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
- புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
- அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
- அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
- மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
- மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில்
- இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார்
- நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய
- நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால்
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன்
- என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா
- செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும்
- சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே.
- என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே
- எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி
- பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர்
- புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ
- புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல்
- புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா
- உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான்
- உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே.
- ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார்
- என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா
- ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே
- உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன்
- தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது
- செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா
- ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை
- இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- தேவர்களோ முனிவர்களோ சிறந்தமுத்தர் தாமோ
- தேர்ந்தசிவ யோகிகளோ செம்பொருள் கண்டோரோ
- மூவர்களோ ஐவர்களோ முதற்பரையோ பரமோ
- முன்னியஎன் தனித்தலைவர் தம்இயலை உணர்ந்தார்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து மொழிதற்
- கமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழச் சிற்சபையில் நடிப்பார்
- அவர்பெருமை அவர்அறிவர் அவரும்அறிந் திலரே.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர்
- பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை
- எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே
- இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய்
- பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தடுஞ் சபையைப்
- பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே
- அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல்
- ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
- எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
- ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
- என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
- ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
- அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
- கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
- கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.
- அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
- ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
- முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
- முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
- விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
- வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
- பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
- பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென்
- சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர்
- பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின்
- பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே
- இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான்
- எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின்
- படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம்
- பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே.
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
- அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது
- மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்
- மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன்
- மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ
- விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது
- கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
- உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
- பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
- பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்
- திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று
- தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ
- வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி
- மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
- இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
- அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
- ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
- இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
- இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
- தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
- தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
- தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது
- துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ
- ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி
- ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி
- என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே
- ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை
- எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள்
- எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர்
- எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக்
- கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா
- கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய்
- செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான்
- சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- 367. இப்பதிகத்தில் அடிகளார் எழுத்து 'கண்ணாறு' என்பதுபோல் காண்கிறது. ஓர் அன்பர்படியில் உள்ளதும் 'கண்ணாறு'. திருத்தணிகைப் பகுதி ஜீவசாட்சி மாலையில்அவர்கள் எழுதி உள்ளது 'கண்ணேறு' என்பது. முதல் அச்சும் 'கண்ணேறு'.- ஆ. பா.
- 368. இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" என்பதுபோல் காண்கிறது - ஆ. பா.
- 369. ஈங்கவர்தம் - முதற்பதிப்பு, பொ.சு., பி. இரா., ச. மு. க.
- 370. பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்.
- 371. கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 372. புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.புணர்ச்சியினோ ரேற்றம் - பி. இரா. பதிப்பு.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
- ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
- மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
- விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
- துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
- சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
- வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
- மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.