- பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
- பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
- படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
- பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
- பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
- பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
- பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
- பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
- பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
- பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
- பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
- பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
- தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
- சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
- சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
- தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
- தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
- சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
- தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
- தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
- தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
- சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
- தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
- தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
- சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
- தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
- தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்
- சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
- தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
- தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
- சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம்
- மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
- மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
- மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
- வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
- வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
- வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
- மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
- மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்
- மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
- மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
- மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
- மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
- மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
- மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
- வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
- வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
- வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
- மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
- மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
- மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
- மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
- வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
- மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
- மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
- ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
- எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
- எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
- எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
- என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
- என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
- என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
- என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
- என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
- என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
- என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
- என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
- சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்
- சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந்
- வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
- வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை
- நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
- நெல்வாயி னின்றொளிரு நீளொளியே - செல்வாய்த்
- கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
- நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே - சொல்லுந்
- தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
- மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே - கயேந்திரனைக்
- காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
- வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய
- பாய்48க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ்
- சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச்
- உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
- புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் -கள்ளிருக்கும்
- நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
- நின்றியூர் மேவு நிலைமையனே - ஒன்றிக்
- கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
- திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே
- வாழ்விக் குடிகளடி மண்பூச லாலென்னும்
- வேழ்விக் குடியமர்ந்த வித்தகனே - சூழ்வுற்றோர்
- விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
- பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும்
- வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
- வீரட்ட மேவும் வியனிறைவே - ஓரட்ட
- காழ்கொ ளிருமனத்துக் காரிருத் தோர்மருவும்
- வாழ்கொளி புத்தூர்50 மணிச்சுடரே - தாழ்வகற்ற
- நண்ணிப் படிக்கரையர் நாடோறும் வாழ்த்துகின்ற
- மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை
- வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
- ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த
- வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
- கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும்
- உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
- கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில்
- அஞ்சனூர்51 செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
- கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே - அஞ்சுகங்கள்
- நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்
- கோடிக்கா மேவுங் குளிர்மதியே - ஓடிக்
- மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
- பனந்தாளிற் பாலுகந்த பாகே - தினந்தாளிற்
- சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
- வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள்
- வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
- சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும்
- மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
- வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல்
- மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
- கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன்
- என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
- இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு
- மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
- ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே - மாற்கருவின்
- கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
- எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில்
- வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
- வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
- வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
- உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே - பண்பகன்ற
- கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்
- பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம்
- நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
- வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்
- வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
- கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு
- தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
- மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம்
- மைஞ்ஞ“ல வாட்கண் மலராள் மருவுதிருப்
- பைஞ்ஞ“லி மேவும் பரம்பரமே - எஞ்ஞான்றும்
- தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
- ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது
- நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்
- வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி
- வாழும் பராய்த்துறைவான் மன்னவரு மன்னவருஞ்
- சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலே - கூழும்பல்
- அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
- சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி
- நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
- நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற்
- தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோர் சூழுந்
- திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு
- வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும்
- பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே - காந்தருவத்
- தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து
- கண்டியூர் வாழுங் களைகண்ணே - கொண்டியல்பின்
- வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
- சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத்
- வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
- தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய
- உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
- புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ்
- சோலைத் துறையிற் சுகஞ்சிவநு‘ல் வாசிக்கும்
- பாலைத் துறையிற் பரிமளமே - சீலத்தர்
- மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
- ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே - ஓவாது
- தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
- ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே - பாங்குபெற
- ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
- சார்ந்த வடதளிவாழ் தற்பரமே - சேர்ந்த
- மலஞ்சுழி கின்ற மனத்தர்க் கரிதாம்
- வலஞ்சுழி வாழ்பொன் மலையே - நிலஞ்சுழியா
- தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
- கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே - மாணுற்றோர்
- காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
- கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே - வாழ்க்கோட்டத்
- ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
- கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே - வீழும்பொய்
- வாயூரத் தேமா மலர்59 சொரிந்து வாழ்த்துகின்ற
- மாயூரத் தன்பர் மனோரதமே - தேயா
- வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்
- விளநகர்வா ழெங்கண் விருந்தே - இளமைச்
- செறியலூர் கூந்தல் திருவனையா ராடும்
- பறியலூர் வாழ்மெய்ப் பரமே - நெறிகொண்டே
- அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
- பொன்பள்ளி வாழ்ஞான போதமே - இன்புள்ளித்
- அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச்
- சங்காடு மேவுஞ் சயம்புவே - பொங்குமிருட்
- கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
- வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி
- நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
- தென்கடையூர்60 ஆனந்தத் தேறலே - வன்மையிலாச்
- வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
- வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற
- வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
- ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும்
- கரும புரத்திற் கலவா தருள்செய்
- தரும புரஞ்செய் தவமே - இருமையினும்
- எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
- நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தெள்ளாற்றின்
- கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
- திருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர்
- களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
- இளங்கோயின் ஞான இனிப்பே - வளங்கோ€
- மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
- வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம்
- சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
- முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக்
- ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
- தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந்
- தாஞ்சியத்தை62 வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
- வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா
- திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு
- நன்னிலத்து வாழ்ஞான நாடகனே - மன்னுமலர்
- வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங்
- கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே - கண்டீச
- வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
- தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை
- அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
- வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற
- ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
- தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல
- பாகைக்கா ரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
- நாகைக்கா ரோணம் நயந்தோனே - ஓகையற
- வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ்
- வேளூரிற் செங்கண் விடையோனே - நீளுவகைப்
- தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும்
- குடவாயில் அன்பர் குறிப்பே - மடவாட்கோர்
- நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
- வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த
- தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
- பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம்
- மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
- வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும்
- முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
- சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள்
- படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும்
- கடிக்குளத் தன்பர் களிப்பே - கடிக்குளத்தின்
- வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
- தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென
- கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ்
- கொள்ளம்பூ தூர்வான் குலமணியே - வெள்ளிடைவான்
- வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
- ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா
- ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
- தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை
- வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
- நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண்
- சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
- நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு
- காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
- வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத்
- நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை
- வாட்டுந் திருக்கோண மாமலையாய் - வேட்டுலகின்
- பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை
- ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக்
- ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
- வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன்
- தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
- ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில்
- நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
- உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர்
- நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும்
- ராமீசம்67 வாழ்சீவ ரத்தினமே - பூமீது
- நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு
- வாடானை மேவுகரு ணாகரமே - சேடான
- வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
- கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே
- கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர்
- தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே - பண்செழிப்பக்
- தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
- எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன்
- அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
- செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே - தங்குமன
- இன்ன லகற்ற இலங்குபவா னிக்கூடல்
- என்னு நணாவினிடை இன்னிசையே - துன்னியருள்
- நீடலை யாற்றூர் நிழன்மணிக்குன் றோங்குதிருக்
- கூடலை யாற்றூர்க் குணநிதியே - நாடியவான்
- னார்புரத்தை72 வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
- சோபுரத்தின்73 வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச்
- தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
- ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக்
- கடையாற்றி னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
- இடையாற்றின் வாழ்நல் இயல்பே - இடையாது
- காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
- மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற
- ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற
- சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே - சூர்ப்புடைத்த
- தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
- ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும்
- உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
- அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த
- காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
- மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப்
- ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோங்குபுகழ்
- ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன
- இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
- வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக்
- காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
- மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய்
- ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
- ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர்
- எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
- முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு
- வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
- மேவுகின்ற ஞான விதரணமே - தூவிமயில்
- என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
- மன்னுஞ் சிவானந்த வண்ணமே - நன்னெறியோர்
- துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
- முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில்
- பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்
- யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல்
- சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
- தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
- தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம்
- வாய்க்குங் கயிலை மலையானே - தூய்க்குமரன்
- ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
- விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண்
- வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன்
- சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை - புன்னெறிசேர்
- மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
- தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா
- வாரமுரை யாது வழக்கி னிடையோர
- வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா
- மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
- கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத
- சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
- எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த
- ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால்
- வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு - தாழ்த்தாமற்
- காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
- மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற
- கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
- கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால்
- தூய்மைநன்றா மென்கின்ற தொன்மையினார் வாய்க்கினிய
- வாய்மையென்றால் என்னுடைய வாய்குமட்டுங் - காய்மைதரும்
- நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநு‘ல்
- வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு
- செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால்
- சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் - நல்லநெறி
- வாம்பலன்கொண் டோர்கள் மறந்தும் பெறாக்கொடிய
- சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன்
- வாழ்வுரைக்கு நல்ல மனத்தர்தமை யெஞ்ஞான்றுந்
- தாழ்வுரைத்தல் என்னுடைய சாதகங்காண் - வேள்விசெயுந்
- தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு
- வாதாட என்றாலென் வாய்துடிக்குங் - கோதாடச்
- கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
- ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும்
- கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த
- மண்ணுங் கொடுக்கமனம் வாராது - அண்ணுறுமென்
- இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
- இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை
- மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
- தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி
- நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
- வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் - அஞ்சவரும்
- ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
- தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால்
- மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
- உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல்
- வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
- வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன
- தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று
- தாயாய் முலைப்பாலுந் தந்தனையே - வாயிசைக்குப்
- வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
- தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர
- மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
- சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன்
- வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
- கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல்
- ஆறடுத்த83 வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச்
- சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற
- அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
- அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன்
- ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
- ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள்
- வாழி யெனத்தான் வழுத்தினுமென் சொற்கடங்கா
- ஏழை மனத்தா லிளைக்கின்றேன் - வாழுமரக்
- காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
- ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை
- ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
- நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே
- கோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை
- மீட்பா ரிலாது விழிக்கின்றேன் - மீட்பாகும்
- பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த்
- தாகமது கொண்டே தவிக்கின்றேன் - மோகமதில்
- போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
- வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
- மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
- தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல்- சாலுலக
- வாதனைகொண் டோனென்று மற்றெவரா னாலும்வந்து
- போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் - நீதயவு
- சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க
- வாழ்ந்திடுக நின்தாள் மலர்.
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
- எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான
- உருவாய் உருவில் உருவாய் உருவுள்
- அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்
- ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
- நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்
- செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
- அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு
- போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
- நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா
- அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
- கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்
- ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
- அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்
- வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்
- தானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி
- பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
- நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி
- வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
- நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்
- வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
- ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
- நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
- மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத
- சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
- விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற
- அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
- கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்
- வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ
- டேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக்
- தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
- சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்
- தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
- வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற
- வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து
- சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து
- வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்
- தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது
- பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்
- சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின்
- உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்
- சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்
- ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
- சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்
- காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
- தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற
- வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
- செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை
- ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
- சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்
- மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு
- சிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்
- சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
- சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்
- அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
- கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக்
- நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
- தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்
- தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ
- நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்
- சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
- சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்
- தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
- சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்
- வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
- தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்
- ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று
- காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்
- பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட
- காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க
- வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்
- கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்
- நாவொன்றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்
- வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று
- தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
- மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
- நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
- செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த
- எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
- திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற
- டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
- கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்
- வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே
- அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும்
- நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்
- அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்8
- வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
- நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்
- வாடியழு தாலெம் வருத்தம் தரியாது
- நாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில்
- தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
- நான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்
- வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
- நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக
- வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்
- நெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப்
- விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
- கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற
- ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
- சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி
- நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்
- சேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண்
- ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
- தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்
- தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
- வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
- வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது
- கேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர்
- வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்று
- சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்
- ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்
- வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்
- செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்
- அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச்
- ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
- நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்
- மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
- வாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்
- கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை
- மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர்
- மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
- பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
- பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
- ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ
- சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்
- மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்
- கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
- கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை
- ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
- வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ
- வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்
- தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு
- சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்
- செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு
- மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்
- என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்
- எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
- கண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும்
- சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
- சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு
- கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு
- கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்
- வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
- டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை
- ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
- வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்
- மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
- புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 - திண்கட்டும்
- கண்ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
- வெண்ர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்ர்மைச்
- சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
- மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை10
- உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்
- கண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்
- ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
- பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்
- கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்
- தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது
- தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
- வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்
- ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
- வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி
- மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
- தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்
- வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
- தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்
- முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
- துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்
- தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை
- வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்
- உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்
- உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்
- மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
- மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை
- வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்
- நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த்
- தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
- போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்
- இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை
- நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 - மங்கையர்தம்
- ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்
- வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்
- ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
- கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்
- வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்
- ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்
- வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
- நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ
- சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால
- காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்
- கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
- வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று
- பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
- ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்
- ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்
- ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்
- வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்
- ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது
- நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
- தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக
- ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
- என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு
- பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
- ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்
- கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி
- எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும்
- பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
- தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்
- வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
- ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
- உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
- இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்
- இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்
- எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்
- பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
- இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்
- பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
- என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்
- மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்
- மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும்
- மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்
- எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
- திகழ்வாய் மையும்நீ தெளியாய்116 - இகழ்வாரை
- எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
- றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன
- வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
- இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
- ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்
- காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்
- தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்
- வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்
- மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
- கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த
- மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து
- கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்
- குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
- குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை
- மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது
- சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்
- சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு
- பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய
- கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்
- நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்
- பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
- கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த
- இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்
- நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி
- உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
- மறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்
- வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
- நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்
- ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
- சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு
- மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
- கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்
- காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
- கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்
- பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்
- அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்
- மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
- பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ
- பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி
- ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின்
- மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்
- அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்
- நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
- இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி
- நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்
- வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்
- உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
- மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை
- ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்
- வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்
- கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்
- வாடியழும் போது வருவாரோ - நீடியநீ
- எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
- வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்
- ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை
- வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண்
- உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
- என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்
- எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
- தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்
- கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
- கற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம்
- காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த
- மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை
- வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
- வீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்
- சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
- அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்
- தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
- வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்
- தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
- வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்
- காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்
- மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்
- பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்
- நீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா
- ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ
- வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்12
- தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
- வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய
- போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
- யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்
- வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
- ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
- சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
- நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய
- என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்
- நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே12
- ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
- வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்
- நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
- செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்
- தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
- நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்
- டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
- நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த
- ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
- என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்
- வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
- செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்
- வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை
- நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற
- ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்
- நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ
- மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
- முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்
- தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
- மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க
- மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
- றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த
- வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற
- மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்
- வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
- நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை
- வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
- சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
- கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம
- இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்
- வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க
- வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்
- பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே
- வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்
- பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
- வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச்
- அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய
- கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்
- மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
- பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்
- வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்
- கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற
- நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்
- தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல
- கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே
- ரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்
- கண்டிகையே பூணிற் கலவையே வெண்றாய்க்
- கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே
- வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்
- தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்
- தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்
- கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்
- இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்
- அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே
- தேனே அமுதே சிவமே சிவமேஎம்
- மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான
- மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு
- வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்
- நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
- சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த
- நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
- மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்
- நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
- ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்
- மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்
- தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்
- வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
- தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு
- தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
- வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய
- வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
- காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்
- வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
- ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்
- கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து
- கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய
- சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
- தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்
- தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
- செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்
- ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
- நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது
- வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்
- செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்
- சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
- சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்
- பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக
- எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்
- பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்
- வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து.
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
- நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
- முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
- புதல்வாநின் தாளென் புகல்.
- உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
- அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
- நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
- என்தாயே என்தந்தை யே.
- அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
- அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
- சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
- சோதிஉரு வாக்குந் துணை.
- பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
- யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
- வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
- ஒளியாகி நின்ற உனை.
- தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
- நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
- ஒண்பொரு உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
- வண்பொருளும் ஈதல் மறந்து.
- அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
- பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
- வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
- எம்பெருமான் நீவாழ் இடம்.
- பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
- பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
- மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொரு
- பொன்வடிவம் கொள்ளாத போது.
- இன்றோ பகலோ இரவோ வருநாளில்
- என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
- தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
- நாயனையேன் வாழ்கின்ற நாள்.
- தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
- சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
- நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
- வாடுமெனை ஆட்கொள்ளா வாறு.
- ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
- ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
- அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
- நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை.
- வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
- வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
- ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
- வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
- சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
- மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
- எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
- துண்ணுவார் உண்ணும் இடத்து.
- ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
- தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
- வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
- பாழ்மனையில் சென்றுண் பது.
- கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
- ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
- பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
- வேண்டாதார் வீழ்ந்து விரைந்து.
- பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
- தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
- கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
- ஓவுவா ராவ133 லுனை.
- யாதோ கனற்கண் யமதூதர் காய்ச்சுகருந்
- தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
- நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
- நாட்டாதார் வாய்க்கு நலம்.
- என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோய் நின்நினையார்
- தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் - வன்நெஞ்சில்
- சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல
- நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
- பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
- சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
- தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
- பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
- நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
- தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
- தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்.
- எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
- தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
- வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
- மாயப்பெயர் நீண்ட மால்.
- நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
- மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
- அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
- அம்மையார் போனடந்தார் ஆர்.
- வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
- நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
- மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
- வாசகர்க்கு நீஉரைத்த வாறு.
- ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
- பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
- நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
- வாய்க்கிங் கிஃதோர் வழக்கு.
- கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட
- வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட
- அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை
- இங்கோதி வாழ்த்தாத யான்.
- எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
- பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
- நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
- அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
- கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
- உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
- வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
- என்செய்வேன் நின்னருளின் றேல்.
- மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
- போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
- யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
- போனாலென் செய்வேன் புகல்.
- தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
- வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
- வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
- ஏணிற் பிறப்பித்த தில்.
- வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன்
- நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங்
- கரனே மழுக்கொள் கரனே அரனே
- வரனே சிதம்பரனே வந்து.
- தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
- வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
- ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
- பாங்கான செம்பொற் பதம்.
- தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
- தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
- நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
- எல்லோர்க்கும் ஐயுறவா மே.
- ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்
- பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்
- வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்
- அஞ்சிநின்னோ டாடும் அது.
- மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
- கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
- அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
- கண்டமங்கே நீலமுறாக் கால்.
- எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற
- அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை
- மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும்
- எக்களித்து வாழ்கின்றேன் யான்.
- ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
- பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
- நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
- என்போல்வார் என்சொல்லார் ஈங்கு.
- என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
- நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
- யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
- போதோ அருள்வாய் புகல்.
- எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம்
- வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே
- வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர்
- காண்டுமெனச் சூழ்வார் களித்து.
- பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
- கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
- கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
- எள்ளுவார் கண்டாய் எனை.
- கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர்
- ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ்
- செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்
- கெங்கே இடங்காண் இயம்பு.
- கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
- விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில்
- வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
- நானவரைச் சேராமல் நாட்டு.
- கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
- துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
- தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
- கண்ணுடையோய் சிதையா ஞானப்
- பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
- மலர்வாயோய் பொய்ய னேன்றன்
- மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
- கசிந்துருக்கும் வடிவத் தோயே.
- உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
- உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
- கலகநிலை அறியாத காட்சி யாகிக்
- கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
- இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
- இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
- அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
- தானந்த மயமாகி அமர்ந்த தேவே.
- வித்தாகி முளையாகி விளைவ தாகி
- விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
- கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
- குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
- சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
- சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
- முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
- முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.
- வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
- மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
- நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
- நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
- மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
- முதலாகி மனாதீத முத்தி யாகி
- வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
- மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
- தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்
- துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
- சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த
- சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
- ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்
- உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
- ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி
- எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா
- நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
- தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்
- தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
- சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்
- சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
- மன்மயமாய் வாசகா தீத மாகி
- மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே.
- அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
- அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
- களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
- கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
- உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
- ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
- பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
- பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.
- வாயாகி வாயிறந்த மவுன மாகி
- மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
- காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
- கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
- தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
- தானாகி நானாகிச் சகல மாகி
- ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
- ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.
- அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
- அளவாகி அளவாத அதீத மாகிப்
- பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
- பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
- பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
- பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
- கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
- கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.
- உருவாகி உருவினில்உள் உருவ மாகி
- உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
- அருவாகி அருவினில்உள் அருவ மாகி
- அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
- குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
- குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
- மருவாகி மலராகி வல்லி யாகி
- மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.
- சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
- சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
- அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
- அவையனைத்தும் அணுகாத அசல மாகி
- இகலுறாத் துணையாகித் தனிய தாகி
- எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
- உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
- ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.
- வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
- வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
- தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
- சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
- பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
- பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
- நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
- நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.
- சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்
- சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
- மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி
- வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
- இகமாகிப் பதமாகிச் சமய கோடி
- எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
- பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்
- பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே.
- விதியாகி அரியாகிக் கிரீச னாகி
- விளங்குமகேச் சுரனாகி விமல மான
- நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி
- நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
- பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்
- பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
- கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்
- கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே.
- மானாகி மோகினியாய் விந்து மாகி
- மற்றவையால் காணாத வான மாகி
- நானாகி நானல்ல னாகி நானே
- நானாகும் பதமாகி நான்றான் கண்ட
- தானாகித் தானல்ல னாகித் தானே
- தானாகும் பதமாகிச் சகச ஞான
- வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற
- மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே.
- மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி
- வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
- சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
- தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
- தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்
- தானாகித் தனதாகித் தானான் காட்டா
- அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
- அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.
- மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
- வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
- நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
- நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
- கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
- கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
- தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
- தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.
- பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
- பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
- கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
- கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
- சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
- தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
- நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
- நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.
- தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்
- திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
- மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ
- மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
- காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற
- காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
- தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்
- சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே.
- கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
- கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
- காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
- கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
- தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
- தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
- பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
- பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
- வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்
- வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
- தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்
- தாபரமே சங்கமமே சாற்று கின்ற
- ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்
- துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
- தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்
- தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே.
- விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
- வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
- கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
- கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
- தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
- தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
- பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
- பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
- தத்துவமே தத்துவா தீத மேசிற்
- சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
- சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்
- தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
- சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்
- தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
- சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த
- சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே.
- காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
- கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
- மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
- வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
- ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
- அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
- சூட்சியே140 சூட்சியெலாம் கடந்து நின்ற
- துரியமே துரியமுடிச் சோதித் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்
- குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
- வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்
- வானமுதே ஆனந்த மழையே மாயை
- வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான
- வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
- தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த
- செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை
- அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
- உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை
- ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
- களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்
- கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
- வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன
- வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே.
- சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
- தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
- ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
- கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
- விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
- விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
- வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
- மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
- சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
- சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
- அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
- ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
- நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
- நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
- கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
- கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.
- வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப
- வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
- சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
- சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
- பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
- பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
- திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
- தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.
- அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
- கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
- விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
- வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
- கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
- சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
- சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
- உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
- உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
- கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
- கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
- விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
- வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
- தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
- சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
- சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்
- தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
- பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற
- பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
- தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்
- ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
- சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற
- சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே.
- பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
- புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
- கங்குகரை காணாத கடலே எங்கும்
- கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
- தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
- தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
- செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
- செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
- வான்காணா மறைகாணா மலரோன் காணான்
- மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
- நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
- நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
- மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
- வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
- ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
- அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.
- பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
- பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
- பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
- பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
- உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
- ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
- கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
- கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்
- உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
- மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்
- மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
- சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்
- தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
- அலிவகையல் லாதவகை கடந்து நின்ற
- அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே.
- பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
- பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
- வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
- மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
- ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
- உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
- ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
- அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.
- கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
- கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
- பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
- புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
- நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
- நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
- சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
- திருவாளர் உட்கலந்த தேவ தேவே.
- மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
- மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
- கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
- கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
- விட்டகன்று கருமமல போதம் யாவும்
- விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
- சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
- சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.
- உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற
- உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
- ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்
- வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
- இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்
- எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
- கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்
- கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்
- அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
- கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்
- கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
- திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்
- திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
- பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்
- பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே.
- என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
- இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
- அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
- அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
- நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
- நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
- தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
- தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.
- தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
- தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
- வானாகி வளியனலாய் நீரு மாகி
- மலர் தலைய உலகாகி மற்று மாகித்
- தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
- தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
- நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
- நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
- ஆனேறும் பெருமானே அரசே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
- தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்
- செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
- ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்
- உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
- வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி
- மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே.
- செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற
- செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
- மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி
- வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
- அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்
- அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
- நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்
- நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே.
- மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
- மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
- பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
- பேயேறி நலிகின்ற பேதை யானேன்
- வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
- மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
- ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
- உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.
- மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்
- வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
- கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்
- கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
- பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்
- பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
- துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ
- இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.
- வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை
- வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண
- முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த
- மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
- பின்கொடுசென் றலைத்திழுக்கு142 தந்தோ நாயேன்
- பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன்
- என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்
- என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்
- ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
- கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ
- குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
- கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்
- கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
- செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்
- திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே.
- தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்
- சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
- ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்
- இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
- நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற
- நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
- ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்
- அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே.
- அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்
- ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
- இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ
- இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
- பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்
- பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
- கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்
- குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு
- பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
- உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை
- உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
- மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்
- வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
- கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்
- கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே.
- அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
- ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
- தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
- சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
- மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
- வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
- இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
- ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே.
- கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
- தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
- வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
- ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
- பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
- வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
- தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.
- சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
- துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
- குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
- இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.
- கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
- ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
- வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
- வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.
- வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
- தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
- ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
- நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.
- அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
- எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
- தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
- கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே.
- நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
- கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
- தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
- பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.
- தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
- வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
- ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
- நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.
- நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
- குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
- திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
- படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே.
- ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
- போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
- கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
- நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
- நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
- குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
- முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
- வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
- கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
- சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
- அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
- நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.
- ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
- வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
- சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
- போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.
- விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
- மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
- குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
- பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.
- சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
- பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
- கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
- மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.
- வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
- மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
- ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
- ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.
- உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
- தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
- பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
- அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.
- வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
- சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
- முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
- மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.
- சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
- கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
- அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
- நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.
- கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
- திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
- ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
- உருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.
- பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
- ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
- மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
- வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.
- வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
- நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
- தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
- தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.
- பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
- உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
- பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
- மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.
- வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
- பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
- சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
- தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.
- கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
- தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
- வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
- ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.
- சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
- மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
- இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
- அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.
- புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச்
- சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக்
- கல்லள152 வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர்
- நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே.
- மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
- நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
- பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
- கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே.
- படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
- மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
- அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
- பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.
- வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
- பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
- துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
- என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.
- நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
- சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
- கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
- றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.
- விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
- திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
- துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
- பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.
- எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
- நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
- வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
- மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.
- நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
- ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
- வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
- தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
- வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
- கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
- தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
- பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.
- அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
- இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
- என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
- வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.
- மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
- கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
- மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
- நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.
- வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
- மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
- காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
- பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.
- நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
- கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
- சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
- ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.
- வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
- இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
- உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
- களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.
- நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
- வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
- தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
- மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.
- பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
- வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
- ` தாம்பா யினும்156 ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
- தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.
- நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
- பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
- தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
- இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.
- ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
- தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
- வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
- தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
- மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
- காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
- சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
- நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே.
- அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோர்
- கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
- சொல்லுண்ட157 வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
- கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே.
- காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி
- யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு
- நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று
- சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
- புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
- விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
- தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.
- குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
- வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
- பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
- திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.
- வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள்
- தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த
- நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர்
- வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே.
- வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
- மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
- ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
- காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.
- மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
- நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
- போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
- ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.
- ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார்
- பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார்
- சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங்
- கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே.
- பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
- திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
- விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
- கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.
- மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
- காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
- கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
- பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
- நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
- சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
- இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
- சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.
- சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
- பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
- நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
- கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
- ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
- நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
- ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.
- பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
- கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
- மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
- தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே.
- கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை
- மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு
- நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர்
- சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே.
- வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
- தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
- கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
- ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே.
- கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
- அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
- துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
- துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.
- மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
- பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
- துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
- குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே.
- வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோய்வன்தொண்டர் விரும்புறச்செங்
- கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார்
- புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க
- வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே.
- எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
- உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
- தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
- வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.
- நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
- குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
- பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
- உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.
- விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
- கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
- தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
- மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.
- மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
- கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
- பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
- மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.
- மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
- பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
- கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
- திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.
- ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
- துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
- செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
- உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
- சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
- நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
- கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
- பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.
- வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
- தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
- ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
- மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே.
- சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
- வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
- புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
- மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
- சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
- காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
- பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
- போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.
- சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
- மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
- மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
- பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
- நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென்
- வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால்
- செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும்
- பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே.
- பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
- மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
- நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
- குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே.
- ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
- நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
- குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
- மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.
- தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
- வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
- ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
- பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.
- வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
- தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
- பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
- கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.
- மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
- சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
- கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
- விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.
- மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
- மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
- கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
- கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.
- மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
- பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
- கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
- பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.
- வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
- தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
- மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
- நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே.
- சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
- ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
- தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
- வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.
- களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
- றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
- வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
- இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.
- வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
- போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
- வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
- சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.
- இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
- என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
- அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
- தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.
- களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
- வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
- மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
- உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.
- காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
- தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
- சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
- பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
- என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
- என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
- என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.
- கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
- மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
- வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
- தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.
- இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
- மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
- வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
- புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.
- சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
- சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
- சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
- சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே.
- மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
- துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
- கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
- பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.
- இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
- விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
- கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
- புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே.
- உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
- கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
- தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
- மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.
- என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
- முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
- தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
- மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே.
- போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
- போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
- போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
- போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.
- நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
- வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
- தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
- ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.
- ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
- பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
- எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
- கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.
- மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
- நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
- செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
- தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.
- முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
- தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
- இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
- மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
- புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
- திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
- சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
- எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.
- கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
- மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
- சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
- பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.
- புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
- மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
- அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
- இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே.
- மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
- இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
- செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
- ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.
- மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
- துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
- பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
- கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.
- சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
- வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
- தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
- ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
- அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
- குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
- பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
- மணியேஎன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
- மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
- கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
- தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
- வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
- திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
- தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
- பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை
- மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
- உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
- பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
- அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
- மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
- கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
- விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
- பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
- மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஒற்றி வாழ்கனகச்
- சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
- அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே
- வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
- காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
- சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
- தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
- வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
- கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
- நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
- பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
- வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.
- கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய்
- நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
- தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
- மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
- தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
- வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
- எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
- மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
- பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
- முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர்
- கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
- மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
- செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
- கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
- மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
- தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய்
- நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
- மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கலைமக ளோநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
- அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய்
- தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
- மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி
- தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
- பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
- மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
- ஒருரு வாய்ஒற்றி யூர்அமர்ந் தார்நின் னுடையவர்பெண்
- சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
- நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
- வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
- சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
- கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
- தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல்சிறை செய்தனர்ஒண்
- வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
- நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
- பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும்
- தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்குமுத
- வாயேர் சவுந்தர35 மானே வடிவுடை மாணிக்கமே.
- முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
- ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
- எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
- மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
- மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
- பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
- பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
- மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
- நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
- தேய்க்குற்ற மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
- வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
- ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
- வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
- வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்
- றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
- காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும்
- வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
- வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
- லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
- யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
- மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
- முத்தேவர் விண்ணன்37 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
- எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
- செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
- மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியநாள்
- கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
- ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
- மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்பொன்
- பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
- காணார்நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
- மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஆசைஉள் ளார்அயன் மால்ஆதி தேவர்கள் யாரும்நின் தாள்
- பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
- தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
- மாசையுள் 38 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- ஓவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபடில்
- ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ
- காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
- வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
- வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
- குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர்உன்
- மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
- பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
- துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை
- இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
- மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
- மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
- தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
- வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
- எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
- தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
- செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே
- வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- ஏமமுய்ப் போர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
- சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
- தாமமைக் கார்மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
- வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ
- அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம்
- முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
- வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
- தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
- வாதுசெய் தாலும்நின் தாள்மறந் தாலும் மதியிலியேன்
- ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
- மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- மருந்தினின் றான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
- திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
- விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
- வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
- என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
- நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
- பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
- மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
- அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
- நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
- வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
- செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
- கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
- வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
- வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
- பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
- பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
- வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.
- எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
- சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
- சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
- மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
- கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
- தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
- வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
- சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
- நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
- வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
- நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ
- தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர்
- தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே
- வானேர் பொழில்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
- கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
- நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ
- வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
- மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
- கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
- அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
- மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
- பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
- சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
- நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
- மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
- பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
- பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
- காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர்
- மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
- மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
- காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
- வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
- களந்திரும் பாஇக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன்
- உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
- குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
- வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
- தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற்
- காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும்
- வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
- உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள
- நடையன்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
- படையன்ன நீள்விழி மின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே
- மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
- பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
- சொற்பத மாய்அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே
- மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
- நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ
- தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
- மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
- தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
- ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
- மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.
- ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல்
- ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
- சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
- மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில்
- துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
- கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
- வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- காதர வால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
- ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
- சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
- மாதர சேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
- தாயாகில் யான்உன் தனையனும் ஆகில்என் தன்உளத்தில்
- ஓயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
- வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
- வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
- வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
- வாழிஎன் உள்ளத்தில் நீயுநின் ஒற்றி மகிழ்நரும்நீ
- வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- கலைமகள் வாழ்த்து
- அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
- பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய
- வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
- காக்கக் கடனுனக்கே காண்.
- ஒருமா முகனை யொருமாவை யூர்வா கனமா யுறநோக்கித்
- திருமான் முதலோர் சிறுமையெலாந் தீர்த்தெம் மிருகண் மணியாகிக்
- கருமா லகற்றுங் கணபதியாங் கடவு ளடியுங் களித்தவர்பின்
- வருமா கருணைக் கடற்குமர வள்ள லடியும் வணங்குவாம்.
- திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ்
- மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா
- னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே
- லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
- னண்ணா லொற்றி யிருந்தவரே யைய ரேநீர் யாரென்றே
- னண்ணா ரிடத்து மம்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி
- யெண்ணா தருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மடையிற் கயல்பா யொற்றிநகர் வள்ள லாகு மிவர்தமைநா
- னடையிற் கனிவாற் பணியென்றே யருளீ ருரியீ ருடையென்றேன்
- கடையிற் படுமோர் பணியென்றே கருதி யுரைத்தே மென்றுரைத்தென்
- னிடையிற் கலையை யுரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்றன் மணக்கு மொற்றிநகர் வாண ராகு மிவர்தமைநா
- னின்றன் பொடுங்கை யேந்தனத்தை யேற்றோர் கலத்திற் கொளுமென்றே
- னன்றன் புடையா யெண்கலத்தி னாங்கொண் டிடுவே மென்றுசொலி
- யென்றன் முலையைத் தொடுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
- பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
- னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
- நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
- வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
- மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா
- மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட
- முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன
- மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
- வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
- கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
- யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை யுடையார் திருவொற்றி வாண ரிவர்தாம் பலியென்றா
- ருண்மை யறிவீர் பலியெண்மை யுணர்கி லீரென் னுழையென்றேன்
- பெண்மை சிறந்தாய் நின்மனையிற் பேசும் பலிக்கென் றடைந்ததுநா
- மெண்மை யுணர்ந்தே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
- வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
- தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
- லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
- னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
- ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
- லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடற்கச் சுயிரா மொற்றியுளீ ருமது திருப்பேர் யாதென்றேன்
- குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ண ராமென்றார்
- விடைக்குக் கருத்தா வாநீர்தாம் விளம்பன் மிகக்கற் றவரென்றே
- னிடக்குப் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மணங்கே தகைவான் செயுமொற்றி வள்ளலிவரை வல்விரைவேன்
- பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் பிணங்கா விடினு நென்னலென
- வணங்கே நினக்கொன் றினிற்பாதி யதிலோர் பாதி யாகுமிதற்
- கிணங்கேஞ் சிறிது மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒற்றி நகரா ரிவர்தமைநீ ருவந்தே றுவதிங்கி யாதென்றேன்
- மற்றுன் பருவத் தொருபங்கே மடவா யென்றார் மறைவிடையீ
- திற்றென் றறிதற் கரிதென்றே னெம்மை யறிவா ரன்றியஃ
- தெற்றென் றறிவா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்ணின் மொழியாய் நின்பாலோர் பறவைப் பெயர்வேண் டினம்படைத்தான்
- மண்ணின் மிசையோர் பறவையதா வாழ்வாயென்றா ரென்னென்றே
- னெண்ணி யறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் தேவ ரேயிங் கெதுவேண்டி
- வருத்த மலர்க்கா லுறநடந்து வந்தீ ரென்றேன் மாதேநீ
- யருத்தந் தெளிந்தே நிருவாண மாகவுன்ற னகத்தருட்க
- ணிருத்த வடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் வாய்திறவார்
- செயலார் விரல்கண் முடக்கியடி சேர்த்தீ ரிதழ்கள் விரிவித்தார்
- மயலா ருளத்தோ டென்னென்றேன் மறித்தோர் விரலா லென்னுடைய
- வியலார் வடிவிற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
- சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
- னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
- மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வலந்தங் கியசீ ரொற்றிநகர் வள்ள லிவர்தாம் மௌனமொடு
- கலந்திங் கிருந்த வண்டசத்தைக் காட்டி மூன்று விரனீட்டி
- நலந்தங் குறப்பின் னடுமுடக்கி நண்ணு மிந்த நகத்தொடுவா
- யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மானார் கரத்தோர் நகந்தெரித்து வாளா நின்றார் நீளார்வந்
- தானா ருளத்தோ டியாதென்றேன் றங்கைத் தலத்திற் றலையையடி
- யேனா டுறவே காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செச்சை யழகர் திருவொற்றித் தேவ ரிவர்வாய் திறவாராய்
- மெச்சு மொருகாற் கரந்தொட்டு மீண்டு மிடற்றக் கரம்வைத்தார்
- பிச்ச ரடிகேள் வேண்டுவது பேசீ ரென்றேன் றமைக்காட்டி
- யிச்சை யெனையுங் குறிக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்றார் நிலையார் திருவொற்றி வாண ரிவர்தா மௌனமொடு
- நின்றா ரிருகை யொலியிசைத்தார் நிமிர்ந்தார் தவிசி னிலைகுறைத்தார்
- நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் நடித்தா ரியாவு மையமென்றே
- னின்றா மரைக்கை யேந்துகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
- நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
- ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
- தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செங்கேழ் கங்கைச் சடையார்வாய் திறவா ராக வீண்டடைந்தா
- ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா ணெங்கள் பெருமா னென்றேனென்
- னங்கே ழருகி னகன்றுபோ யங்கே யிறைப்போ தமர்ந்தெழுந்தே
- யிங்கே நடந்து வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடையா ரொற்றி வாணரிவர் கூறா மௌன ராகிநின்றார்
- தொடையா ரிதழி மதிச்சடையென் துரையே விழைவே துமக்கென்றே
- னுடையார் துன்னற் கந்தைதனை யுற்று நோக்கி நகைசெய்தே
- யிடையாக் கழுமுட் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலார் சோலை யெழிலொற்றி வாண ராகு மிவர்தமைநான்
- செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் சிரத்து முரத்துந் திகழ்கரத்தும்
- வியலாய்க் கொண்ட தென்னென்றேன் விளங்கும் பிநாக மவைமூன்று
- மியலாற் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இட்டங் களித்த தொற்றியுளீ ரீண்டிவ் வேளை யெவனென்றேன்
- சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொலுமென்றேன்
- பட்டுண் மருங்குற் பாவாய்நீ பரித்த தன்றே பாரென்றே
- யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
- னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
- வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
- ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
- னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
- யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
- வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றா
- ரெண்கணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிவையதற்கென்
- றெண்சொன் மணிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
- னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
- யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான
- வொளி நா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
- களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே
- யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
- யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
- ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
- யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் விளங்கு மலரே விளம்புநெடு
- மாற்றா ரென்றே னிலைகாணெம் மாலை முடிமேற் பாரென்றார்
- சாற்றாச் சலமே யீதென்றேன் சடையின் முடிமே லன்றென்றே
- யேற்றா தரவான் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே
- யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரா மொற்றி யீராசை யுடையே னென்றே னெமக்கலது
- நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கே தென்றார் நீரெனக்குச்
- சேரா வணமீ தென்றேன்முன் சேர்த்தீ தெழுதித் தந்தவர்தாம்
- யாரார் மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
- றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
- யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
- மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
- னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே
- லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ
- தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நாம மியாதென்றேன்
- மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் வந்த விளைய நாமமென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கியலா ரயலா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
- றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றகன்றதென்றே
- யிடியா நயத்தி னகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானார் வணங்கு மொற்றியுளீர் மதிவாழ் சடையீர் மரபிடைநீர்
- தானா ரென்றே னனிப்பள்ளித் தலைவ ரெனவே சாற்றினர்கா
- ணானா லொற்றி யிருமென்றே னாண்டே யிருந்து வந்தனஞ்சே
- யீனா தவ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தெனது
- மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் மாநன் றிஃதுன் மானன்றே
- யூனங் கலிக்குந் தவர்விட்டா ருலக மறியுங் கேட்டறிந்தே
- யீனந் தவிர்ப்பா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞானம் படைத்த யோகியர்வாழ் நகரா மொற்றி நலத்தீர்மா
- லேனம் புடைத்தீ ரணையென்பீ ரென்னை யுவந்திப் பொழுதென்றே
- னூனந் தவிர்த்த மலர்வாயி னுள்ளே நகைசெய் திஃதுரைக்கே
- மீனம் புகன்றா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வண்மை தருவீ ரொற்றிநகர் வாழ்வீ ரென்னை மருவீரென்
- னுண்மை யறியீ ரென்றேன்யா முணர்ந்தே யகல நின்றதென்றார்
- கண்மை யிலரோ நீரென்றேன் களமை யுடையேங் கண்மையுற
- லெண்மை நீயே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாசங் கமழு மலர்ப்பூங்கா வனஞ்சூ ழொற்றி மாநகரீர்
- நேசங் குறிப்ப தென்னென்றே னீயோ நாமோ வுரையென்றார்
- தேசம் புகழ்வீர் யானென்றேன் றிகழ்தைத் திரிதித் திரியேயா
- மேசங் குறிப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கொடியா லெயில்சூ ழொற்றியிடங் கொண்டீ ரடிகள் குருவுருவாம்
- படியா லடியி லிருந்தமறைப் பண்பை யுரைப்பீ ரென்றேனின்
- மடியா லடியி லிருந்தமறை மாண்பை வகுத்தா யெனிலதுநா
- மிடியா துரைப்பே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ
- ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன்
- வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன்
- றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் விளங்குந் தாம மிகுவாசத்
- தண்ணார் மலர்வே தனையொழிக்கத் தருதல் வேண்டு மெனக்கென்றேன்
- பண்ணார் மொழியா யுபகாரம் பண்ணாப் பகைவ ரேனுமிதை
- யெண்ணா ரெண்ணா ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
- யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
- வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
- யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன்
- கைக்க ணிறைந்த தனத்தினுந்தந் கண்ணி னிறைந்த கணவனையே
- துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
- வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உள்ளத் தனையே போலன்ப ருவக்குந் திருவா ழொற்றியுளீர்
- கள்ளத் தவர்போ லிவணிற்குங் கரும மென்னீ ரின்றென்றேன்
- மெள்ளக் கரவு செயவோநாம் வேட மெடுத்தோ நின்சொனினை
- யெள்ளப் புரிந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நடவாழ் வொற்றி யுடையீர்நீர் நாக மணிந்த தழகென்றேன்
- மடவா யதுநீர் நாகமென மதியே லயன்மான் மனனடுங்க
- விடவா யுமிழும் படநாகம் வேண்டிற்காண்டி யென்றேயென்
- னிடவா யருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
- வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
- செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
- ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆட்டுத் தலைவர் நீரொற்றி யழகீ ரதனாற் சிறுவிதிக்கோ
- ராட்டுத் தலைதந் தீரென்றே னன்றா லறவோ ரறம்புகல
- வாட்டுத் தலைமுன் கொண்டதனா லஃதே பின்ன ரளித்தாமென்
- றீட்டுத் தரமீந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி
- யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன்
- வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு
- மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே
- யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோவென்றே
- னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி
- லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவ லுடையீ ரீங்கடைந்தீ
- ரிற்றைப் பகலே நன்றென்றே னிற்றை யிரவே நன்றெமக்குப்
- பொற்றைத் தனத்தாய் கையமுதம் பொழியா தலர்வாய்ப் புத்தமுத
- மிற்றைக் களித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
- வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
- மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்
- திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- காவா யொற்றிப் பதியுடையீர் கல்லா னைக்குக் கரும்பன்று
- தேவாய் மதுரை யிடத்தளித்த சித்த ரலவோ நீரென்றேன்
- பாவா யிருகல் லானைக்குப் பரிவிற் கரும்பிங் கிரண்டொருநீ
- யீவா யிதுசித் தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊட்டுந் திருவா ழொற்றியுளீ ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத்
- தாட்டுந் திறத்தீர் நீரென்றே னணங்கே யிருசெப் பிடையாட்டுந்
- தீட்டும் புகழன் றியுமுலகைச் சிறிதோர் செப்பி லாட்டுகின்றா
- யீட்டுந் திறத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆழி விடையீர் திருவொற்றி யமர்ந்தீ ரிருவர்க் ககமகிழ்வான்
- வீழி யதனிற் படிக்காசு வேண்டி யளித்தீ ராமென்றேன்
- வீழி யதனிற் படிக்காசு வேண்டா தளித்தா யளவொன்றை
- யேழி லகற்றி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக்
- கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ
- மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத
- லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- யான்செய் தவத்தின் பெரும்பயனே யென்னா ரமுதே யென்றுணையே
- வான்செ யரசே திருவொற்றி வள்ளால் வந்த தென்னென்றேன்
- மான்செய் விழிப்பெண் ணேநீயாண் வடிவா னதுகேட் டுள்ளம்வியந்
- தேன்கண் டிடவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
- நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
- வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
- வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாங்கும் விடைமே லழகீரென் றன்னைக் கலந்துந் திருவொற்றி
- யோங்குந் தளியி லொளித்தீர்நீ ரொளிப்பில் வல்ல ராமென்றேன்
- வாங்கு நுதலாய் நீயுமெனை மருவிக் கலந்து மலர்த்தளியி
- லீங்கின் றொளித்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று
- கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன்
- பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு
- மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய
- விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன்
- சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
- மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
- ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
- முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
- றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் சிறிதாம் பஞ்ச காலத்துங்
- கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் குறித்து வருவீ ரென்னென்றேன்
- காலம் போகும் வார்த்தைநிற்குங் கண்டா யிதுசொற் கடனாமோ
- வேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர்
- மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன்
- தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி
- யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
- முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
- றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
- யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் வாழும் பதியா தென்றேனின்
- குணங்கொண் மொழிகேட் டோரளவு குறைந்த குயிலாம் பதியென்றா
- ரணங்கின் மறையூ ராமென்றே னஃதன் றருளோத் தூரிஃது
- மிணங்க வுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓங்குஞ் சடையீர் நெல்வாயி லுடையே மென்றீ ருடையீரேற்
- றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
- னேங்கும் படிநும் மிடைச்சிறுமை யெய்திற் றலதீண் டெமக்கின்றா
- லீங்குங் காண்டி ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
- கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
- ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
- பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
- அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
- நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
- ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
- கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
- அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
- விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
- அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
- நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
- தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
- ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
- எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
- உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
- அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
- இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
- அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
- கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
- அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
- உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
- கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
- அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
- வாங்கு வில்நுதல் மங்கையர் விழியால்
- மயங்கி வஞ்சர்பால் வருந்திநாள் தோறும்
- ஏங்கு கின்றதில் என்பயன் கண்டாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தேங்கு லாவுசெங் கரும்பினும் இனிதாய்த்
- தித்தித் தன்பர்தம் சித்தத்துள் ஊறி
- ஓங்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- தவம தின்றிவன் மங்கையர் முயக்கால்
- தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால்
- இவகை யால்மிக வருந்துறில் என்னாம்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பவம தோட்டிநல் ஆனந்த உருவாம்
- பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார்
- உவகை ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பொன்றும் வாழ்க்கையை நிலைஎன நினைந்தே
- புலைய மங்கையர் புழுநெளி அளற்றில்
- என்றும் வீழ்ந்துழல் மடமையை விடுத்தே
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
- தொண்டர் தங்கள்நாச் சுவைபெற ஊறி
- ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வரைக்கு நேர்முலை மங்கையர் மயலால்
- மயங்கி வஞ்சரால் வருத்தமுற் றஞராம்
- இரைக்கும் மாக்கடல் இடைவிழுந் தயரேல்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
- கனிகொ லோஎனக் கனிவுடன் உயர்ந்தோர்
- உரைக்கும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- வாது செய்ம்மட வார்தமை விழைந்தாய்
- மறலி வந்துனை வாஎன அழைக்கில்
- ஏது செய்வையோ ஏழைநீ அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- போது வைகிய நான்முகன் மகவான்
- புணரி வைகிய பூமகள் கொழுநன்
- ஓதும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நண்ணும் மங்கையர் புழுமலக் குழியில்
- நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
- எண்ணும் என்மொழி குருமொழி ஆக
- எண்ணி ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பண்ணும் இன்சுவை அமுதினும் இனிதாய்ப்
- பத்தர் நாள்தொறும் சித்தமுள் ளூற
- உண்ணும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
- பசையில் நெஞ்சரால் பரிவுறு கின்றாய்
- எந்த வண்ணநீ உய்வணம் அந்தோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- சந்த மாம்புகழ் அடியரில் கூடிச்
- சனனம் என்னுமோர் சாகரம் நீந்தி
- உந்த ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
- மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய்
- எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- தட்டி லாதநல் தவத்தவர் வானோர்
- சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
- ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- நிலவும் ஒண்மதி முகத்தியர்க் குழன்றாய்
- நீச நெஞ்சர்தம் நெடுங்கடை தனிற்போய்
- இலவு காத்தனை என்னைநின் மதியோ
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பலவும் ஆய்ந்துநன் குண்மையை உணர்ந்த
- பத்தர் உள்ளகப் பதுமங்கள் தோறும்
- உலவும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- பழுது நேர்கின்ற வஞ்சகர் கடைவாய்ப்
- பற்றி நின்றதில் பயன்எது கண்டாய்
- பொழுது போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- பொழில்கொள் ஒற்றியம் புரிதனக் கேகித்
- தொழுது சண்முக சிவசிவ எனநம்
- தோன்ற லார்தமைத் துதித்தவர் திருமுன்
- பழுது சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடைவாய்
- நண்ணி நின்றதில் நலம்எது கண்டாய்
- காலம் செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- கருதும் ஒற்றியம் கடிநகர்க் கேகிக்
- கோலம் செய்அருள் சண்முக சிவஓம்
- குழக வோஎனக் கூவிநம் துயராம்
- ஆலம் சொல்லுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார்
- வாயல் காத்தின்னும் வருந்தில்என் பயனோ
- இருட்டிப் போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தெருட்டி றஞ்செயும் சண்முக சிவஓம்
- சிவந மாஎனச் செப்பிநம் துயராம்
- அரிட்டை ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- இல்லை என்பதே பொருள்எனக் கொண்டோர்
- ஈன வாயிலில் இடர்ப்படு கின்றாய்
- எல்லை செல்கின்ற தெழுதிஎன் நெஞ்சே
- எழில்கொள் ஒற்றியூர் எனும்தலத் தேகித்
- தொல்லை ஓம்சிவ சண்முக சிவஓம்
- தூய என்றடி தொழுதுநாம் உற்ற
- அல்லல் ஓதுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி
- இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும்
- சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே
- தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேகி
- வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம்
- வரசு யம்புசங் கரசம்பு எனவே
- ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல்
- ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே.
- சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
- சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
- கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
- கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
- செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
- தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
- நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- அட்ட மூர்த்தம தாகிய பொருளை
- அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை
- விட்ட வேட்கையர்க் கங்கையில் கனியை
- வேத மூலத்தை வித்தக விளைவை
- எட்ட ரும்பர மானந்த நிறைவை
- எங்கும் ஆகிநின் றிலங்கிய ஒளியை
- நட்டம் ஆடிய நடனநா யகத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உம்பர் வான்துயர் ஒழித்தருள் சிவத்தை
- உலகெ லாம்புகழ் உத்தமப் பொருளைத்
- தம்ப மாய்அகி லாண்டமும் தாங்கும்
- சம்பு வைச்சிவ தருமத்தின் பயனைப்
- பம்பு சீரருள் பொழிதரு முகிலைப்
- பரம ஞானத்தைப் பரமசிற் சுகத்தை
- நம்பி னோர்களை வாழ்விக்கும் நலத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- மாலின் உச்சிமேல் வதிந்தமா மணியை
- வழுத்தும் நாஅகம் மணக்கும்நன் மலரைப்
- பாலின் உள்இனித் தோங்கிய சுவையைப்
- பத்தர் தம்உளம் பரிசிக்கும் பழத்தை
- ஆலின் ஓங்கிய ஆனந்தக் கடலை
- அம்ப லத்தில்ஆம் அமுதைவே தங்கள்
- நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உண்ணி றைந்தெனை ஒளித்திடும் ஒளியை
- உண்ண உண்ணமேல் உவட்டுறா நறவைக்
- கண்ணி றைந்ததோர் காட்சியை யாவும்
- கடந்த மேலவர் கலந்திடும் உறவை
- எண்ணி றைந்தமால் அயன்முதல் தேவர்
- யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை
- நண்ணி ஒற்றியூர் அமர்ந்தருள் சிவத்தை
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- திக்கு மாறினும் எழுகடல் புவிமேல்
- சென்று மாறினும் சேண்விளங் கொளிகள்
- உக்கு மாறினும் பெயல்இன்றி உலகில்
- உணவு மாறினும் புவிகளோர் ஏழும்
- மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம்
- விழுந்து மாறினும் வேதங்கள் உணரா
- நக்கன் எம்பிரான் அருள்திருப் பெயராம்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
- பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
- உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
- உயிரை மேவிய உடல்மறந் தாலும்
- கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
- கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
- நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- உடைஉ டுத்திட இடைமறந் தாலும்
- உலகு ளோர்பசிக் குணமறந் தாலும்
- படையெ டுத்தவர் படைமறந் தாலும்
- பரவை தான்அலைப் பதுமறந் தாலும்
- புடைஅ டுத்தவர் தமைமறந் தாலும்
- பொன்னை வைத்தஅப் புதைமறந் தாலும்
- நடைஅ டுத்தவர் வழிமறந் தாலும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
- மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
- புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
- பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
- தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
- சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
- நன்மை என்பன யாவையும் அளிக்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- இன்னும் பற்பல நாளிருந் தாலும்
- இக்க ணந்தனி லேஇறந் தாலும்
- துன்னும் வான்கதிக் கேபுகுந் தாலும்
- சோர்ந்து மாநர கத்துழன் றாலும்
- என்ன மேலும்இங் கெனக்குவந் தாலும்
- எம்பி ரான்எனக்கு யாதுசெய் தாலும்
- நன்னர் நெஞ்சகம் நாடிநின் றோங்கும்
- நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்
- இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீ
- அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே
- அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்
- விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்
- விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா
- நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- காவின் மன்னவன் எதிர்க்கினும் காமன்
- கணைகன் ஏவினும் காலனே வரினும்
- பூவின் மன்னவன் சீறினும் திருமால்
- போர்க்கு நேரினும் பொருளல நெஞ்சே
- ஓவில் மாதுயர் எற்றினுக் கடைந்தாய்
- ஒன்றும் அஞ்சல்நீ உளவறிந் திலையோ
- நாவின் மன்னரைக் கரைதனில் சேர்த்த
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- நீட்டம் உற்றதோர் வஞ்சக மடவார்
- நெடுங்கண் வேல்பட நிலையது கலங்கி
- வாட்டம் உற்றனை ஆயினும் அஞ்சேல்
- வாழி நெஞ்சமே மலர்க்கணை தொடுப்பான்
- கோட்டம் உற்றதோர் நிலையொடு நின்ற
- கொடிய காமனைக் கொளுவிய நுதல்தீ
- நாட்டம் உற்றதோர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால்
- ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே
- அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும்
- ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய்ச்
- செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே
- சென்று சோறிரந் தளித்தருள் செய்தோன்
- நம்மை ஆளுடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
- ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
- வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
- வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
- வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
- மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
- நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
- மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
- கலங்கு றேல்அருள் திருவெண் றெனது
- கரத்தி ருந்தது கண்டிலை போலும்
- விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
- விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
- நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான்
- மற்றை வானவர் முற்றிலும் அழிவார்
- ஏலும் நற்றுணை யார்நமக் கென்றே
- எண்ணி நிற்றியோ ஏழைநீ நெஞ்சே
- கோலும் ஆயிரம் கோடிஅண் டங்கள்
- குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும்
- நாலு மாமறைப் பரம்பொருள் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தலங்கள் தோறும்சென் றவ்விடை அமர்ந்த
- தம்பி ரான்திருத் தாளினை வணங்கி
- வலங்கொ ளும்படி என்னையும் கூட
- வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே
- இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே
- என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு
- நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
- பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
- ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
- காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
- ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
- சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
- மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
- காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
- மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
- ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
- பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
- கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
- மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
- மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
- ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
- காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
- கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள்
- கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக
- அடவுள் மாசுதீர்த் தருள்திரு நீற்றை
- அணியும் தொண்டரை அன்புடன் காண்க
- தடவும் இன்னிசை வீணைகேட் டரக்கன்
- தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
- நடவும் மால்விடை ஒற்றியூர் உடைய
- நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
- தூய நீறிடாப் பேயர்கள் ஒன்று
- சொல்லு வாரெனில் புல்லென அடைக்க
- தாய நீறிடும் நேயர்ஒன் றுரைத்தால்
- தழுவி யேஅதை முழுவதும் கேட்க
- சேய நன்னெறி அணித்தது செவிகாள்
- சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
- ஆய பாணற்குப் பொன்பெற அருளும்
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- நல்ல நீறிடா நாய்களின் தேகம்
- நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப் படக்க
- வல்ல நீறிடும் வல்லவர் எழின்மெய்
- வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க
- சொல்ல ரும்பரி மளந்தரும் மூக்கே
- சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
- அல்லல் நீக்கிநல் அருட்கடல் ஆடி
- ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
- அருள்செய் நீறிடார் அமுதுனக் கிடினும்
- அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக
- தெருள்கொள் நீறிடும் செல்வர்கூழ் இடினும்
- சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமு துண்க
- இருள்செய் துன்பநீத் தென்னுடை நாவே
- இன்ப நல்அமு தினிதிருந் தருந்தி
- மருள்செய் யானையின் தோலுடுத் தென்னுள்
- வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
- சேர நெஞ்சமே
- தூரம் அன்றுகாண்
- வாரம் வைத்தியேல்
- சாரும் முத்தியே.
- சென்று வாழ்த்துதி
- நன்று நெஞ்சமே
- என்றும் நல்வளம்
- ஒன்றும் ஒற்றியே.-
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
- கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
- மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
- வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
- இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
- இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
- தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
- வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
- மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
- மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
- ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
- உள்ளம் எப்படி அப்படி அறியேன்
- திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- காயம் என்பதா காயம்என் றறியேன்
- கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
- சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
- தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
- தூய நின்அடி யவருடன் கூடித்
- தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
- தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- வானை நோக்கிமண் வழிநடப் பவன்போல்
- வயங்கும் நின்அருள் வழியிடை நடப்பான்
- ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன்
- உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய்
- மானை நோக்கிய நோக்குடை மலையாள்
- மகிழ மன்றிடை மாநடம் புரிவோய்
- தேனை நோக்கிய கொன்றையஞ் சடையோய்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வாயி லான்பெரு வழக்குரைப் பதுபோல்
- வள்ளல் உன்னடி மலர்களுக் கன்பாம்
- தூயி லாதுநின் அருள்பெற விழைந்தேன்
- துட்ட னேன்அருள் சுகம்பெற நினைவாய்
- கோயி லாகநல் அன்பர்தம் உளத்தைக்
- கொண்ட மர்ந்திடும் குணப்பெருங் குன்றே
- தேயி லாதபல் வளஞ்செறிந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வித்தை இன்றியே விளைத்திடு பவன்போல்
- மெய்ய நின்இரு மென்மலர்ப் பதத்தில்
- பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன்
- பாவி யேன்அருள் பண்புற நினைவாய்
- மித்தை இன்றியே விளங்கிய அடியார்
- விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய்
- சித்தி வேண்டிய முனிவரர் பரவித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கலம்இ லாதுவான் கடல்கடப் பவன்போல்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் வழுத்தும்
- நலம்இ லாதுநின் அருள்பெற விழைந்த
- நாயி னேன்செயும் நவைபொறுத் தருள்வாய்
- மலம்இ லாதநல் வழியிடை நடப்போர்
- மனத்துள் மேவிய மாமணிச் சுடரே
- சிலம்இ லாஞ்சம்ஆ தியதருப் பொழில்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
- புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
- சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
- சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
- கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
- குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
- தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- ஓட உன்னியே உறங்குகின் றவன்போல்
- ஓங்கும் உத்தம உன்அருட் கடலில்
- ஆட உன்னியே மங்கையர் மயலில்
- அழுந்து கின்றஎற் கருள்செய நினைவாய்
- நாட உன்னியே மால்அயன் ஏங்க
- நாயி னேன்உளம் நண்ணிய பொருளே
- தேட உன்னிய மாதவ முனிவர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- கல்லை உந்திவான் நதிகடப் பவர்போல்
- காமம் உந்திய நாமநெஞ் சகத்தால்
- எல்லை உந்திய பவக்கடல் கடப்பான்
- எண்ணு கின்றனன் எனக்கருள் வாயோ
- அல்லை உந்திய ஒண்சுடர்க் குன்றே
- அகில கோடிகட் கருள்செயும் ஒன்றே
- தில்லை நின்றொளிர் மன்றிடை அமுதே
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- நீர்சொ ரிந்தொளி விளக்கெரிப் பவன்போல்
- நித்தம் நின்னிடை நேசம்வைத் திடுவான்
- பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன்
- பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய்
- கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர்
- களித்த நெஞ்சிடை ஒளித்திருப் பவனே
- தேர்சொ ரிந்தமா மணித்திரு வீதித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன்
- துட்டனேன் தூய்மைஒன் றில்லா
- எச்சிலை அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- பச்சிலை இடுவார் பக்கமே மருவும்
- பரமனேஎம் பசு பதியே
- அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே
- ஐயனே ஒற்றியூர் அரைசே.
- தூங்கினேன் சோம்பற் குறைவிட மானேன்
- தோகையர் மயக்கிடை அழுந்தி
- ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- வாங்கிமே ருவினை வளைத்திடும் பவள
- மாமணிக் குன்றமே மருந்தே
- ஒங்கிவான் அளவும் பொழில்செறி ஒற்றி
- யூர்வரும் என்னுடை உயிரே.
- கரப்பவர்க் கெல்லாம் முற்படும் கொடிய
- கடையனேன் விடையமே உடையேன்
- இரப்பவர்க் கணுவும் ஈந்திலேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- திரப்படும் கருணைச் செல்வமே சிவமே
- தெய்வமே தெய்வநா யகமே
- உரப்படும் அன்பர் உள்ஒளி விளக்கே
- ஒற்றியூர் வாழும்என் உவப்பே.
- இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும்
- இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர்
- எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே
- கண்ணுதல் உடையசெங் கனியே
- தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே
- திருவொற்றி யூர்வரும் தேவே.
- முட்டியே மடவார் முலைத்தலை உழக்கும்
- மூடனேன் முழுப்புலை முறியேன்
- எட்டியே அனையேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- ஒட்டியே அன்பர் உளத்தெழும் களிப்பே
- ஒளிக்குளாம் சோதியே கரும்பின்
- கட்டியே தேனே சடையுடைக் கனியே
- காலமும் கடந்தவர் கருத்தே.
- கருதென அடியார் காட்டியும் தேறாக்
- கன்மனக் குரங்கனேன் உதவா
- எருதென நின்றேன் பாவியேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- மருதிடை நின்ற மாணிக்க மணியே
- வன்பவம் தீர்த்திடும் மருந்தே
- ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே
- ஒற்றியூர் மேவும்என் உறவே.
- தெவ்வண மடவார் சீக்குழி விழுந்தேன்
- தீயனேன் பேயனேன் சிறியேன்
- எவ்வணம் உய்வேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- எவ்வணப் பொருப்பே என்னிரு கண்ணே
- இடையிடர்ப் பசியசெம் பொன்னே
- செவ்வண மணியே திகழ்குணக் கடலே
- திருவொற்றி யூர்ச்செழுந் தேனே.
- வாதமே புரிவேன் கொடும்புலி அனையேன்
- வஞ்சக மனத்தினேன் பொல்லா
- ஏதமே உடையேன் என்செய்வேன் என்னை
- என்செய்தால் தீருமோ அறியேன்
- போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப்
- புனிதமே புதுமணப் பூவே
- பாதமே சரணம் சரணம்என் தன்னைப்
- பாதுகாத் தளிப்பதுன் பரமே.
- திருமுல்லைவாயில்
- தேன்என இனிக்கும் திருவருட் கடலே
- தெள்ளிய அமுதமே சிவமே
- வான்என நிற்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- ஊன்என நின்ற உணர்விலேன் எனினும்
- உன்திருக் கோயில்வந் தடைந்தால்
- ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா
- ஈதுநின் திருவருட் கியல்போ.
- பூங்கொடி இடையைப் புணர்ந்தசெந் தேனே
- புத்தமு தேமறைப் பொருளே
- வாங்கொடி விடைகொள் அண்ணலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- தீங்கொடி யாத வினையனேன் எனினும்
- செல்வநின் கோயில்வந் தடைந்தால்
- ஈங்கொடி யாத அருட்கணால் நோக்கி
- ஏன்எனா திருப்பதும் இயல்போ.
- துப்புநேர் இதழி மகிழ்ந்தகல் யாண
- சுந்தரா சுந்தரன் தூதா
- மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
- அறிவிலேன் எனினுநின் கோயிற்
- கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- கங்கைஅஞ் சடைகொண் டோங்குசெங் கனியே
- கண்கள்மூன் றோங்குசெங் கரும்பே
- மங்கல்இல் லாத வண்மையே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- எங்குவந் தாய்நீ யார்என வேனும்
- இயம்பிடா திருப்பதும் இயல்போ.
- நன்றுவந் தருளும் நம்பனே யார்க்கும்
- நல்லவ னேதிருத் தில்லை
- மன்றுவந் தாடும் வள்ளலே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- துன்றுநின் அடியைத் துதித்திடேன் எனினும்
- தொண்டனேன் கோயில்வந் தடைந்தால்
- என்றுவந் தாய்என் றொருசொலும் சொல்லா
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே
- பத்தர்கட் கருள்செயும் பரமே
- மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- பெண்ணினும் பேதை மதியினேன் எனினும்
- பெருமநின் அருள்பெற லாம்என்
- றெண்ணிவந் தடைந்தால் கேள்வியில் லாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே
- முக்கணா மூவர்க்கும் முதல்வா
- மன்னிய கருணை வாரியே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன்
- அருட்பெரும் கோயில்வந் தடைந்தால்
- என்இது சிவனே பகைவரைப் போல்பார்த்
- திருப்பதுன் திருவருட் கியல்போ.
- நல்லவர் பெறும்நற் செல்வமே மன்றுள்
- ஞானநா டகம்புரி நலமே
- வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புல்லவன் எனினும் அடியனேன் ஐயா
- பொய்யல உலகறிந் ததுநீ
- இல்லையென் றாலும் விடுவனோ சும்மா
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொதுவினின் றருளும் முதல்தனிப் பொருளே
- புண்ணியம் விளைகின்ற புலமே
- மதுவினின் றோங்கும் பொழில்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- புதுமையன் அல்லேன் தொன்றுதொட் டுனது
- பூங்கழற் கன்புபூண் டவன்காண்
- எதுநினைந் தடைந்தாய் என்றுகே ளாமல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப்
- புண்ணியா கண்ணுதல் கரும்பே
- மன்னனே மருந்தே வளர்திரு முல்லை
- வாயில்வாழ் மாசிலா மணியே
- உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன்
- உன்திரு அடித்துணை அறிய
- என்னைஈன் றவனே முகமறி யார்போல்
- இருப்பதுன் திருவருட் கியல்போ.
- தாயின் மேவிய தற்பர மேமுல்லை
- வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
- கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
- தேயின் மேவி இருந்தனன் என்னையே.
- தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
- முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
- தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
- எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
- வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
- குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
- உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
- களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
- மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
- விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
- குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
- தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
- சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
- ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
- தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
- ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
- சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
- பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
- மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
- கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
- வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
- அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
- கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
- நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
- மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
- கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
- எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
- பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
- தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
- கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
- வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
- ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
- தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
- மாசி லாமணி யேமருந் தேசற்றும்
- கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
- பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.
- சிந்தை நின்றசி வாநந்தச் செல்வமே
- எந்தை யேஎமை ஆட்கொண்ட தெய்வமே
- தந்தை யேவலி தாயத்த லைவநீ
- கந்தை சுற்றும்க ணக்கது என்கொலோ.
- பன்னு வார்க்கரு ளும்பர மேட்டியே
- மன்னும் மாமணி யேவல்லி கேசனே
- உன்ன நீஇங்கு டுத்திய கந்தையைத்
- துன்னு வார்இல்லை யோபரஞ் சோதியே.
- கடுத்த தும்பிய கண்டஅ கண்டனே
- மடுத்த நற்புகழ் வாழ்வல்லி கேசநீ
- தொடுத்த கந்தையை நீக்கித்து ணிந்தொன்றை
- உடுத்து வார்இலை யோஇவ்வு லகிலே.
- மாசில் சோதிம ணிவிளக் கேமறை
- வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர்
- தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர
- தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே.
- திரப்ப டும்திரு மால்அயன் வாழ்த்தத்
- தியாகர் என்னும்ஓர் திருப்பெயர் அடைந்தீர்
- வரப்ப டுந்திறத் தீர்உமை அடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இரப்ப வர்க்கொன்றும் ஈகிலீர் ஆனால்
- யாதுக் கையநீர் இப்பெயர் எடுத்தீர்
- உரப்ப டும்தவத் தோர்துதித் தோங்க
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கள்ள மற்றவாக் கரசும்புத் திரரும்
- களிக்க வேபடிக் காசளித் தருளும்
- வள்ளல் என்றுமை வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ள ரும்புகழ்த் தியாகர்என் றொருபேர்
- ஏன்கொண் டீர்இரப் போர்க்கிட அன்றோ
- உள்ளம் இங்கறி வீர்எனை ஆள்வீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- அண்மை யாகும்சுந் தரர்க்கன்று கச்சூர்
- ஆலக் கோயிலில் சோறிரந் தளித்த
- வண்மை கேட்டிங்கு வந்தடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- திண்மை சேர்திரு மால்விடை ஊர்வீர்
- தேவ ரீருக்குச் சிறுமையும் உண்டோ
- உண்மை யான்உமை அன்றிமற் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- சிந்தை நொந்துல கில்பிறர் தம்மைச்
- சேர்ந்தி டாதுநும் திருப்பெயர் கேட்டு
- வந்த டைந்தஎற் குண்டிலை எனவே
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இந்த வண்ணம்நீர் இருந்திடு வீரேல்
- என்சொ லார்உமை இவ்வுல கத்தார்
- உந்தி வந்தவ னோடரி ஏத்த
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- கல்லை யும்பசும் பொன்எனப் புரிந்த
- கருணை கேட்டுமைக் காதலித் திங்கு
- வல்லை வந்துநின் றேற்றிடில் சிறிதும்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- இல்லை நீர்பிச்சை எடுக்கின்றீ ரேனும்
- இரக்கின் றோர்களும் இட்டுண்பர் கண்டீர்
- ஒல்லை இங்கென துளங்கொண்ட தறிவீர்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம்
- தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி
- வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க
- அடிய னேன்அலை கின்றதும் அழகோ
- ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- குற்றம் எத்தனை அத்தனை எல்லாம்
- குணம்எ னக்கொளும் குணக்கடல் என்றே
- மற்றும் நான்நம்பி ஈங்குவந் தேற்றால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கற்ற நற்றவர்க் கேஅருள் வீரேல்
- கடைய னேன்எந்தக் கடைத்தலைச் செல்கேன்
- உற்ற நற்றுணை உமைஅன்றி அறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- பொய்யி லார்க்குமுன் பொற்கிழி அளித்த
- புலவர் ஏறெனப் புகழ்ந்திடக் கேட்டு
- மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- ஐய நும்அடி அன்றிஓர் துணையும்
- அறிந்தி லேன்இஃத றிந்தரு ளீரேல்
- உய்யும் வண்ணம்எவ் வண்ணம்என் செய்கேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன்
- தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன்
- வாயி லார்என இருக்கின்றீர் அல்லால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த
- குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ
- ஒயி லாதுநல் தொண்டருக் கருள்வான்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- மன்அமுதாம் உன்தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே
- இன்அமுதம் ஓர்பொழுதும் இட்டறியேன் ஆயிடினும்
- முன்அமுதா உண்டகளம் முன்னிமுன்னி வாடுகின்றேன்
- என்அமுதே இன்னும் இரக்கந்தான் தோன்றாதோ.
- தோன்றாத் துணையாகும் சோதியே நின்அடிக்கே
- ஆன்றார்த்த அன்போ டகங்குழையேன் ஆயிடினும்
- ஊன்றார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன்
- தேன்றார்ச் சடையாய்உன் சித்தம் இரங்காதோ.
- இலைவேட்ட மாதர்தம தீனநல மேவிழைந்து
- கொலைவேட் டுழலும் கொடியனேன் ஆயிடினும்
- நிலைவேட்ட நின்அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன்
- கலைவேட்ட வேணியனே கருணைசற்றும் கொண்டிலையே.
- கொண்டல்நிறத் தோனும் குணிக்கரிய நின்அடிக்கே
- தொண்டறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
- எண்டகநின் பொன்அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன்
- தண்டலைசூழ் ஒற்றியுளாய் தயவுசற்றும் சார்ந்திலையே.
- சாரா வறுஞ்சார்பில் சார்ந்தரைசே உன்னுடைய
- தாரார் மலரடியைத் தாழ்ந்தேத்தேன் ஆயிடினும்
- நேராய்நின் சந்நிதிக்கண் நின்றுநின்று வாடுகின்றேன்
- ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.
- தாய்க்கும்இனி தாகும்உன்தன் தாள்மலரை ஏத்தாது
- நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
- வாய்க்கும்உன்தன் சந்திதிக்கண் வந்துவந்து வாடுகின்றேன்
- தூய்க்குமரன் தந்தாய்என் சோர்வறிந்து தீராயோ.
- பார்நடையாம் கானில் பரிந்துழல்வ தல்லதுநின்
- சீர்நடையாம் நன்னெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
- நேர்நடையாம் நின்கோயில் நின்றுநின்று வாடுகின்றேன்
- வார்நடையார் காணா வளர்ஒற்றி மன்அமுதே.
- வாடனக் குறழும் வடுக்கணார்க் குருகும் வஞ்சனேன் பிழைதனைக் குறித்தே
- வேடன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- நீடயில் படைசேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா
- ஏடகத் தமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.
- நாணம்ஒன் றில்லா நாயினேன் பிழையை நாடிநின் திருவுளத் தடைத்தே
- வீணன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- காணநின் றடியார்க் கருள்தரும் பொருளே கடிமதில் ஒற்றியூர்க் கரசே
- பூணயில் கரத்தோர் புத்தமு தெழுந்த புண்ணியப் புனிதவா ரிதியே.
- சூழ்ந்தவஞ் சகனேன் பிழைதனைக் குறியேல் துன்பசா கரந்தனில் அழுந்தி
- வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- வாழ்ந்தமா தவர்கள் மனத்தொளிர் ஒளியே வள்ளலே மழவிடை யவனே
- போழ்ந்தவேல் படைகொள் புனிதனை அளித்த பூரணாஒற்றியூர்ப் பொருளே.
- துரும்பினேன் பிழையைத் திருவுளத் தடையேல் துய்யநின் அருட்கடல் ஆட
- விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கரும்பின்நேர் மொழியார் இருவரை மணக்கும் கனிதனை அளித்தகற் பகமே
- இரும்பின்நேர் நெஞ்சர் எனினும்என் போல்வார்க் கின்அருள் தரும்ஒற்றி இறையே.
- நாயினும் கடையேன் என்செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும்
- தாயினும் இனியாய் இன்னும்நீ வரவு தாழ்த்தனை என்கொலென் றறியேன்
- மாயினும் அல்லால் வாழினும் நினது மலரடி அன்றிஒன் றேத்தேன்
- காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே.
- காண்பது கருதி மாலொடு மலர்வாழ் கடவுளர் இருவரும் தங்கள்
- மாண்பது மாறி வேறுரு எடுத்தும் வள்ளல்நின் உருஅறிந் திலரே
- கோண்பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கைகொண் டறிகுவதையா
- பூண்பது பணியாய் பொதுவில்நின் றாடும் புனிதநின் அருளலா தின்றே.
- சுடர்கொளும் மணிப்பூண் முலைமட வியர்தம் தொடக்கினில் பட்டுழன் றோயா
- இடர்கொளும் எனைநீ ஆட்கொளும் நாள்தான் எந்தநாள் அந்தநாள் உரையாய்
- படர்கொளும் வானோர் அமுதுண நஞ்சைப் பரிந்துண்ட கருணைஅம் பரமே
- குடர்கொளும் சூலப் படைஉடை யவனே கோதையோர் கூறுடையவனே.
- பார்த்துநிற் கின்றாய் யாவையும் எளியேன் பரதவித் துறுகணால் நெஞ்சம்
- வேர்த்துநிற் கின்றேன் கண்டிலைகொல்லோ விடம்உண்டகண்டன்நீஅன்றோ
- ஆர்த்துநிற் கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கிலக் காவனோ தமியேன்
- ஓர்த்துநிற் கின்றார் பரவுநல் ஒற்றி யூரில்வாழ் என்உற வினனே.
- கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
- விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
- திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
- உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
- நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால்
- புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன்
- சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக்
- கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே.
- நிறைய வாழ்தொண்டர் நீடுற வன்பவம்
- பறைய நின்றப டம்பக்க நாதரே
- உறைய மாணிக்கு யிர் அளித் திட்டநீர்
- குறையி லாஒற்றிக் கோயிற்கண் உள்ளிரோ.
- வணங்கொள் நாகம ணித்தலை ஐந்துடைப்
- பணங்கொள் செல்வப்ப டம்பக்க நாதரே
- கணங்கொள் காமனைக் காய்ந்துயிர் ஈந்தநீர்
- வணங்கு வார்க்கென்கொல் வாய்திற வாததே.
- நாட நல்இசை நல்கிய மூவர்தம்
- பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
- வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
- ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.
- மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
- கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
- இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
- எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நில்லா உடம்பை நிலைஎன்றே நேசிக்கும்
- பொல்லாத நெஞ்சப் புலையனேன் இவ்வுலகில்
- சொல்லா மனநோயால் சோர்வுற் றலையும்அல்லல்
- எல்லாம் அறிவாய் எழுத்தறியும் பெருமானே.
- தீதறிவேன் நன்கணுவும் செய்யேன்வீண் நாள்போக்கும்
- வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
- சூதறிவேன் மால்அயனும் சொல்லறிய நின்பெருமை
- யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
- வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
- கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
- என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
- வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
- கன்றின் அயர்ந்தழும்என் கண்ர் துடைத்தருள
- என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
- மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
- தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
- சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
- என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
- துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
- நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
- இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
- ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
- சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
- நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
- யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.
- நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
- ஊக்கமிலா நெஞ்சத்தின் ஓட்டகலச் செய்வாயேல்
- தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
- ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
- நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
- உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வௌர்க்கும்
- எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
- மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
- இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
- எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
- பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
- மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
- துக்க மியாவையும் தூர ஓடுமே.
- இல்லை உண்டென எய்தி ஐயுறும்
- கல்லை யொத்தஎன் கன்ம நெஞ்சமே
- ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல்
- நல்லை நல்லைநீ நட்பின் மேலையே.
- மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
- ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
- பாலை சேர்படம் பக்க நாதர்தம்
- காலை நாடிநற் கதியின் நிற்பையே.
- கண்ண னோடயன் காண்பரும் சுடரே
- கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
- எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
- இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
- அண்ண லேதிரு ஆலங்காட் டுறையும்
- அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
- திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஏல வார்குழ லாள் இடத் தவனே
- என்னை ஆண்டவ னேஎன தரசே
- கோல மாகமால் உருக்கொண்டும் காணாக்
- குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே
- ஞால மீதில்எம் போல்பவர் பிழையை
- நாடி டாதருள் நற்குணக் குன்றே
- சீல மேவிய தவத்தினர் போற்றத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
- அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
- ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
- எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
- வீறு கொன்றையம் சடையுடைக் கனியே
- வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
- தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- கண்ணுதலே நின்அடியார் தமையும் நோக்கேன்
- கண்மணிமா லைக்கெனினும் கனிந்து நில்லேன்
- பண்ணுதல்சேர் திருநீற்றுக் கோலம் தன்னைப்
- பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயனி லாமே
- நண்ணுதல்சேர் உடம்பெல்லாம் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்கொடிய நாவை அந்தோ
- எண்ணுதல்சேர் கொடுந்தீயால் சுடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- வஞ்சமிலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண்
- மாமணியே உனைநினையேன் வாளா நாளைக்
- கஞ்சமலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும்
- களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடைய னேனை
- நஞ்சமுணக் கொடுத்துமடித் திடினும் வாளால்
- நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால்
- எஞ்சலுறச் சுடினும்அன்றி அந்தோ இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண்
- பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ
- கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக்
- கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை
- ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி
- உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க
- இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும்
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை
- அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத்
- துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத்
- தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன்
- வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ
- மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை
- இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அணிவேல் படைகொள் மகனா ரொடும்எம் அம்மை யொடுந்தான் அமர்கின்ற
- தணியாக் கோலம்கண்டு களிக்கத் தகையா தெமக்கொன் றருளானேல்
- மணிசேர் கண்டன் எண்தோள் உடையான் வடபால் கனக மலைவில்லான்
- பிணிபோக் கிடுவான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
- மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
- கற்றைச் சடையான் கண்மூன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
- பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வரமன் றலினார் குழலா ளொடும்வேல் மகனா ரொடும்தான் அமர்கின்ற
- திரமன் றவுநின் றெழில்கண் டிடுவான் சிறக்க எமக்கொன் றருளானேல்
- பரமன் தனிமால் விடைஒன் றுடையான் பணியே பணியாப் பரிவுற்றான்
- பிரமன் தலையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
- செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
- வந்து நின்னடிக் காட்செய என்றால்
- வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
- எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
- இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
- அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
- வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
- தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
- திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
- காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
- கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
- ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஓடல் எங்கணும் நமக்கென்ன குறைகாண்
- உற்ற நற்றுணை ஒன்றும்இல் லார்போல்
- வாடல் நெஞ்சமே வருதிஎன் னுடனே
- மகிழ்ந்து நாம்இரு வரும்சென்று மகிழ்வாய்க்
- கூடல் நேர்திரு ஒற்றியூர் அகத்துக்
- கோயில் மேவிநம் குடிமுழு தாளத்
- தாள்த லந்தரும் நமதருள் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- ஏங்கி நோகின்ற தெற்றினுக் கோநீ
- எண்ணி வேண்டிய தியாவையும் உனக்கு
- வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல்
- மகிழ்ந்து நெஞ்சமே வருதிஎன் னுடனே
- ஓங்கி வாழ்ஒற்றி யூர்இடை அரவும்
- ஒளிகொள் திங்களும் கங்கையும் சடைமேல்
- தாங்கி வாழும்நம் தாணுவாம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே
- காம ஐம்புலக் கள்வரை வீட்டி
- வயம்அ ளிக்குவன் காண்டிஎன் மொழியை
- மறுத்தி டேல்இன்று வருதிஎன் னுடனே
- உயவ ளிக்குநல் ஒற்றியூர் அமர்ந்தங்
- குற்று வாழ்த்திநின் றுன்னுகின் றவர்க்குத்
- தயவ ளிக்குநம் தனிமுதல் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
- தாயி லார்எனத் தயங்குகின் றாயே
- மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
- உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
- தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
- வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
- மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
- வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
- இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
- ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்
- தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- பொருந்தி ஈனருள் புகுந்துவீண் காலம்
- போக்கி நின்றனை போனது போக
- வருந்தி இன்னும்இங் குழன்றிடேல் நெஞ்சே
- வாழ்க வாழ்கநீ வருதிஎன் னுடனே
- திருந்தி நின்றநம் மூவர்தம் பதிகச்
- செய்ய தீந்தமிழ்த் தேறல்உண் டருளைத்
- தருந்தென் ஒற்றியூர் வாழுநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
- நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
- வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
- கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
- தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- உடுக்க வேண்டிமுன் உடைஇழந் தார்போல்
- உள்ள வாகும்என் றுன்னிடா தின்பம்
- மடுக்க வேண்டிமுன் வாழ்விழந் தாயே
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- அடுக்க வேண்டிநின் றழுதழு தேத்தி
- அருந்த வத்தினர் அழிவுறாப் பவத்தைத்
- தடுக்க வேண்டிநல் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
- மூட வேடரை முதலற எறிந்து
- வாகை ஈகுவன் வருதிஎன் னுடனே
- வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
- போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
- போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
- சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள்
- எய்தும் வண்ணம்இங் கென்செய வல்லேன்
- கொச்சை நெஞ்சம்என் குறிப்பில்நில் லாது
- குதிப்பில் நின்றது மதிப்பின்இவ் வுலகில்
- பிச்சை உண்டெனிற் பிச்சரிற் சீறும்
- பேய ருண்மனை நாயென உழைத்தேன்
- செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
- அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
- வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
- வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
- வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
- வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
- செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- மடிகொள் நெஞ்சினால் வள்ளல்உன் மலர்த்தாள்
- மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன்
- துடிகொள் நேர்இடை மடவியர்க் குருகிச்
- சுழல்கின் றேன்அருள் சுகம்பெறு வேனோ
- வடிகொள் வேல்கரத் தண்ணலை ஈன்ற
- வள்ள லேஎன வாழ்த்துகின் றவர்தம்
- செடிகள் நீக்கிய ஒற்றியம் பரனே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- இருக்க வாவுற உலகெலாம் உய்ய
- எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
- உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
- ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
- தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
- தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
- திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
- எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
- நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
- நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
- வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
- வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
- திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம்
- பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம்
- தாதை நீஅவை எண்ணலை எளியேன்
- தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய்
- கோதை நீக்கிய முனிவர்கள் காணக்
- கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே
- தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வஞ்ச நெஞ்சர்தம் சேர்க்கையைத் துறந்து
- வள்ளல் உன்திரு மலரடி ஏத்தி
- விஞ்சு நெஞ்சர்தம் அடித்துணைக் கேவல்
- விரும்பி நிற்கும்அப் பெரும்பயன் பெறவே
- தஞ்சம் என்றருள் நின்திருக் கோயில்
- சார்ந்து நின்றனன் தருதல்மற் றின்றோ
- செஞ்சொல் ஓங்கிய ஒற்றிஎம் பெருமான்
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- புல்ல னேன்புவி நடையிடை அலையும்
- புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
- அல்லல் என்பதற் கெல்லைஒன் றறியேன்
- அருந்து கின்றனன் விருந்தினன் ஆகி
- ஒல்லை உன்திருக் கோயில்முன் அடுத்தேன்
- உத்த மாஉன்தன் உள்ளம்இங் கறியேன்
- செல்லல் நீக்கிய ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எளிய னேன்பிழை இயற்றிய எல்லாம்
- எண்ணி னுட்படா வேனும்மற் றவையை
- அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால்
- ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே
- களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக்
- கருணை ஈகுதல் கடன்உனக் கையா
- தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
- சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
- ஓதி யேதரும் ஒற்றியப் பாஇது
- நீதி யேஎனை நீமரு வாததே.
- வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
- காதம் ஓடும் கடியனை ஆள்வது
- நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
- ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.
- தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
- கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
- நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
- மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
- வைத்த நின்அருள் வாழிய வாழிய
- மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
- உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
- பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
- ஆவல் உடையார் உள்ளுடையார் அயன்மால் மகவான் ஆதியராம்
- தேவர் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருவடிவைக்
- காவம் பொழில்சூழ் ஒற்றியில்போய்க் கண்டேன் கண்ட காட்சிதனை
- யாவர் பெறுவார் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- மறப்பை அகன்ற மனத்துரவோர் வாழ்த்த அவர்க்கு வான்கதியின்
- சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாகப் பெருமான் திருநடத்தைப்
- பிறப்பை அகற்றும் ஒற்றியில்போய்ப் பேரா னந்தம் பெறக்கண்டேன்
- இறப்பைத் தவிர்த்தேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
- செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
- கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
- எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை
- ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய
- அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல
- சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே.
- நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால்
- அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத்
- தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச்
- சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று.
- சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
- நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
- ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
- மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
- வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
- ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
- போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
- ஆவான் திருவடிஅல் லால்.
- நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன்
- தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும்
- தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம்
- பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.
- திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
- புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
- ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
- வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
- வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
- தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
- ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
- சென்றுதொழு கண்டாய் தினம்.
- நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
- கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
- சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
- உத்தமனை நெஞ்சமே ஓது.
- பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ
- டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார்
- உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ்
- உள்ளத் தவரை உறும்.
- தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
- றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
- நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
- எந்தை அடிவணங்கா ரேல்.
- ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய
- ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல
- மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும்
- பணிகண்டாய் அன்னோன் பதம்.
- பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும்
- சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என்
- நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே
- தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான்.
- வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
- நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
- கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
- செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே.
- கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப்
- பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும்
- இல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும்
- செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
- வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
- உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
- திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
- அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
- நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
- சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
- கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
- பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
- செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
- கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
- அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
- செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
- சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
- பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
- தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்
- நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்
- மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற
- சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
- நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
- வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
- தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே.
- களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
- ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
- தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
- தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
- மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
- நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
- சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே.
- உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும்
- எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை
- அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ
- வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ.
- அடுத்தவர்க் கெல்லாம்அ ருள்புரி வானை
- அம்பலக் கூத்தனை எம்பெரு மானைத்
- தடுத்தெமை ஆண்டுகொண் டன்பளித் தானைச்
- சங்கரன் தன்னைஎன் தந்தையைத் தாயைக்
- கடுத்ததும் பும்மணி கண்டத்தி னானைக்
- கண்ணுத லானைஎம் கண்ணக லானை
- எடுத்தெனைத் துன்பம்விட் டேறவைத் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
- தூயனை யாவரும் சொல்லரி யானைப்
- பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
- பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
- மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
- வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
- எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அன்பர்கள் வேண்டும்அ வைஅளிப் பானை
- அம்பலத் தேநடம் ஆடுகின் றானை
- வன்பர்கள் நெஞ்சில்ம ருவல்இல் லானை
- வானவர் கோனைஎம் வாழ்முத லானைத்
- துன்பம் தவிர்த்துச்சு கங்கொடுப் பானைச்
- சோதியைச் சோதியுள் சோதியை நாளும்
- என்பணி கொண்டெனை ஏன்றுகொண் டானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- கண்ணுத லானைஎன் கண்ணமர்ந் தானைக்
- கருணாநி தியைக்க றைமிடற் றானை
- ஒண்ணுத லாள்உமை வாழ்இடத் தானை
- ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
- நண்ணுதல் யார்க்கும்அ ருமையி னானை
- நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
- எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை
- வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
- களங்கம்இ லாதக ருத்துடை யானைக்
- கற்பனை முற்றும்க டந்துநின் றானை
- உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை
- உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
- இளம்பிறை சூடிய செஞ்சடை யானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- குற்றமெல் லாம்குண மாகக்கொள் வானைக்
- கூத்துடை யானைப்பெண் கூறுடை யானை
- மற்றவர் யார்க்கும்அ ரியவன் தன்னை
- வந்திப்ப வர்க்குமி கஎளி யானைப்
- பெற்றம தேறும்பெ ரியபி ரானைப்
- பிறைமுடி யோனைப்பெம் மானைஎம் மானை
- எற்றிஎன் துன்பம்எ லாம்ஒழித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- செய்த நன்றிமேல் தீங்கிழைப் பாரில்
- திருப்பும் என்தனைக் திருப்புகின் றனைநீ
- பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும்
- பேதை யாதலில் பிறழ்ந்தனை உனைநான்
- வைத போதினும் வாழ்த்தென நினைத்து
- மறுத்து நீக்கிஅவ் வழிநடக் கின்றாய்
- கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய்
- கொடிய நெஞ்சமே மடியகிற் றிலையே.
- இலைஎ னாதணு வளவும்ஒன் றீய
- எண்ணு கின்றிலை என்பெறு வாயோ
- கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே
- கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய்
- தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான்
- தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில்
- புலையி னார்கள்பால் போதியோ வீணில்
- போகப் போகஇப் போக்கினில் அழிந்தே.
- அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
- ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
- கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
- கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
- மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
- முன்னு றாவகை என்னுறும் உன்னால்
- இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
- என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.
- தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத்
- தேனை மெய்அருள் திருவினை அடியர்
- ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை
- உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர்
- கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக்
- கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம்
- மானை அம்பல வாணனை நினையாய்
- வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.
- இன்னும் எங்ஙனம் ஏகுகின் றனையோ
- ஏழை நெஞ்சமே இங்குமங் குந்தான்
- முன்னை நாம்பிறந் துழன்றஅத் துயரை
- முன்னில் என்குலை முறுக்குகின் றனகாண்
- என்னை நீஎனக் குறுதுணை அந்தோ
- என்சொல் ஏற்றிலை எழில்கொளும் பொதுவில்
- மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால்
- மற்று நாம்பிற வாவகை வருமே.
- நன்று செய்வதற் குடன்படு வாயேல்
- நல்ல நெஞ்சமே வல்லஇவ் வண்ணம்
- இன்று செய்திநீ நாளைஎன் பாயேல்
- இன்றி ருந்தவர் நாளைநின் றிலரே
- ஒன்று கேண்மதி சுகர்முதல் முனிவோர்
- உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார்
- அன்று முன்னரே கடந்தனர் அன்றி
- அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.
- அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான்
- அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய்
- ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ
- உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர்
- முன்றில் காத்தனை அவ்வள வேனும்
- முயன்று காத்திலை முன்னவன் கோயில்
- துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு
- தொடங்கு வானவர் தூயமுன் றிலையே.
- தூய நெஞ்சமே சுகம்பெற வேண்டில்
- சொல்லு வாம்அது சொல்லள வன்றால்
- காய மாயமாம் கான்செறிந் துலவும்
- கள்வர் ஐவரைக் கைவிடுத் ததன்மேல்
- பாய ஆணவப் பகைகெட முருக்கிப்
- பகல்இ ராஇலாப் பாங்கரின் நின்றே
- ஆய வானந்தக் கூத்துடைப் பரமா
- காய சோதிகண் டமருதல் அணியே.
- கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார்
- கங்கை நாயகர் மங்கைபங் குடையார்
- பண்கள் நீடிய பாடலார் மன்றில்
- பாத நீடிய பங்கயப் பதத்தார்
- ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
- யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம்
- மண்கொண் மாலைபோம் வண்ணம்நல் தமிழ்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரிய மாலன்று கரியமா வாகிக்
- கலங்க நின்றபொன் கழல்புனை பதத்தார்
- பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும்
- பித்தர் என்னும்அப் பேர்தனை அகலார்
- உரிய சீர்கொளும் ஒற்றியூர் அமர்ந்தார்
- உம்பர் நாயகர் தம்புயம் புனைய
- வரிய கன்றநன் மலர்கொடு தெரிந்து
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- திருவின் நாயகன் கைப்படை பெறுவான்
- திருக்கண் சாத்திய திருமலர்ப் பதத்தார்
- கருவின் நின்றஎம் போல்பவர் தம்மைக்
- காத்த ளிப்பதே கடன்எனக் கொண்டார்
- உருவின் நின்றவர் அருஎன நின்றோர்
- ஒற்றி யூரிடை உற்றனர் அவர்க்கு
- மருவின் நின்றநன் மணங்கொளும் மலர்ப்பூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- கரும்பைந் நாகணைக் கடவுள்நான் முகன்வான்
- கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான்
- துரும்பை நாட்டிஓர் விஞ்சையன் போலத்
- தோன்றி நின்றவர் துரிசறுத் திட்டோன்
- தரும்பைம் பூம்பொழில் ஒற்றியூர் இடத்துத்
- தலங்கொண் டார்அவர் தமக்குநாம் மகிழ்ந்து
- வரும்பைஞ் சீர்த்தமிழ் மாலையோ டணிபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- வதன நான்குடை மலரவன் சிரத்தை
- வாங்கி ஓர்கையில் வைத்தநம் பெருமான்
- நிதன24 நெஞ்சகர்க் கருள்தரும் கருணா
- நிதிய மாகிய நின்மலப் பெருமான்
- சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித்
- தூய னால்அவர் துணைத்திருத் தோட்கு
- மதன இன்தமிழ் மாலையோ டணுபூ
- மாலை சூட்டுதும் வருதிஎன் மனனே.
- சூழு மாலயன் பெண்ணுரு எடுத்துத்
- தொழும்பு செய்திடத் தோன்றிநின் றவனைப்
- போழும் வண்ணமே வடுகனுக் கருளும்
- பூத நாதர்நற் பூரணா னந்தர்
- தாழும் தன்மையோர் உயர்வுறச் செய்யும்
- தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்தாம்
- வாழும் கோயிற்குத் திருவல கிடுவோம்
- மகிழ்வு கொண்டுடன் வருதிஎன் மனனே.
- விதியும் மாலுமுன் வேறுரு எடுத்து
- மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர்
- நதியும் கொன்றையும் நாகமும் பிறையும்
- நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார்
- பதியு நாமங்கள் அனந்தமுற் றுடையார்
- பணைகொள் ஒற்றியூர்ப் பரமர்கா ணவர்தாம்
- வதியும் கோயிற்குத் திருவிளக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- குளங்கொள் கண்ணினார் குற்றமே செயினும்
- குணமென் றேஅதைக் கொண்டருள் புரிவோர்
- உளங்கொள் அன்பர்தம் உள்ளகத் திருப்போர்
- ஒற்றி யூரிடம் பற்றிய புனிதர்
- களங்கொள் கண்டரெண் தோளர்கங் காளர்
- கல்லை வில்எனக் கண்டவர் அவர்தம்
- வளங்கொள் கோயிற்குத் திருமெழுக் கிடுவோம்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- பணிகொள் மார்பினர் பாகன மொழியாள்
- பாகர் காலனைப் பாற்றிய பதத்தார்
- திணிகொள் வன்மத மலைஉரி போர்த்தோர்
- தேவர் நாயகர் திங்களம் சடையார்
- அணிகொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர்
- அழகர் அங்கவர் அமைந்துவீற்றிருக்கும்
- மணிகொள் கோயிற்குத் திருப்பணி செய்தும்
- வாழ்க நீஉடன் வருதிஎன் மனனே.
- சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று
- திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே
- ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி
- ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு
- மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து
- வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி
- நன்று வேண்டிய யாவையும் வாங்கி
- நல்கு வேன்எனை நம்புதி மிகவே.
- தீது வேண்டிய சிறியர்தம் மனையில்
- சென்று நின்றுநீ திகைத்திடல் நெஞ்சே
- யாது வேண்டுதி வருதிஎன் னுடனே
- யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து
- மாது வேண்டிய நடனநா யகனார்
- வள்ள லார்அங்கு வாழ்கின்றார் கண்டாய்
- ஈது வேண்டிய தென்னுமுன் அளிப்பார்
- ஏற்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே.
- கல்லின் நெஞ்சர்பால் கலங்கல்என் நெஞ்சே
- கருதி வேண்டிய தியாதது கேண்மோ
- சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான்
- சோலைசூழ் ஒற்றித் தொன்னகர்ப் பெருமான்
- அல்லின் ஓங்கிய கண்டத்தெம் பெருமான்
- அயனும் மாலும்நின் றறிவரும் பெருமான்
- வல்லை ஈகுவான் ஈகுவ தெல்லாம்
- வாங்கி ஈகுவேன் வருதிஎன் னுடனே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- மன்னு ருத்திரர் வாழ்வைவேண் டினையோ
- மால வன்பெறும் வாழ்வுவேண் டினையோ
- அன்ன ஊர்திபோல் ஆகவேண் டினையோ
- அமையும் இந்திரன் ஆகவேண் டினையோ
- என்ன வேண்டினும் தடையிலை நெஞ்சே
- இன்று வாங்கிநான் ஈகுவன் உனக்கே
- வன்னி அஞ்சடை எம்பிரான் ஒற்றி
- வளங்கொள் ஊரிடை வருதிஎன் னுடனே.
- மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும்
- வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும்
- இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும்
- யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே
- பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான்
- பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே
- வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து
- வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே.
- காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
- காலன் வந்திடில் காரியம் இலைகாண்
- நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
- நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
- ஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்
- இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
- நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.
- சென்று நீபுகும் வழியெலாம் உன்னைத்
- தேட என்வசம் அல்லஎன் நெஞ்சே
- இன்ற ரைக்கணம் எங்கும்நேர்ந் தோடா
- தியல்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- அன்று வானவர் உயிர்பெற நஞ்சம்
- அருந்தி நின்றஎம் அண்ணலார் இடத்தே
- நின்று வேண்டிய யாவையும் உனக்கு
- நிகழ வாங்கிநான் ஈகுவன் அன்றே.
- கெடுக்கும் வண்ணமே பலர்உனக் குறுதி
- கிளத்து வார்அவர் கெடுமொழி கேளேல்
- அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனைநீ
- அம்மை இம்மையும் அகன்றிடா மையினால்
- தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித்
- தலத்தி னுக்கின்றென் றன்னுடன் வருதி
- மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம்
- வாங்கி ஈகுவன் வாழ்திஎன் நெஞ்சே.
- என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்த
- இன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்
- மன்னும் மும்மல மடஞ்செறி மனனே
- வாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்
- உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்
- உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றே
- இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- துன்ப வாழ்வினைச் சுகம்என மனனே
- சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்துநிற் கின்றாய்
- வன்ப தாகிய நீயும்என் னுடனே
- வருதி யோஅன்றி நிற்றியோ அறியேன்
- ஒன்ப தாகிய உருவுடைப் பெருமான்
- ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க் கின்றே
- இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள்
- ஆடு கின்றசே வடிமலர் நினையாய்
- வாட்டு கின்றனை வல்வினை மனனே
- வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய்
- கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில்
- குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம்
- ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே
- வாரிக் கொண்டிங்கு வாழ்ந்திரு மனனே
- நஞ்சம் ஆயினும் உண்குவை நீதான்
- நானும் அங்கதை நயப்பது நன்றோ
- தஞ்சம் என்றவர்க் கருள்தரும் பெருமான்
- தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக் கின்றே
- எஞ்சல் இன்றிநான் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
- சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
- ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
- ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
- நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
- நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
- ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
- தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
- ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
- இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
- சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
- சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
- ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
- வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
- சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
- தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
- இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
- யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
- குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அமைவ றிந்திடா ஆணவப் பயலே
- அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
- எமைந டத்துவோன் ஈதுண ராமல்
- இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
- கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
- கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
- உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கருமை யாம்அகங் காரமர்க் கடவா
- கடைய னேஉனைக் கலந்தத னாலே
- அருமை யாகநாம் பாடினோம் கல்வி
- அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
- இருமை இன்பமும் பெற்றனம் என்றே
- எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
- ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்
- ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா
- வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக்
- கோணரைமுருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய
- தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப்
- பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர்
- கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக்
- கம்பனை ஒற்றிக் கங்கைவே ணியனைக் கருத்தனைக் கருதிநின் றேத்தா
- வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக்
- கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச்
- சுத்தனை ஒற்றித் தலம்வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்துநின் றேத்தா
- மத்தரைச் சமண வாதரைத் தேர வறியரை முறியரை வைண
- நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.
- விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
- மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
- அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
- படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
- படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை
- விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
- கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி
- அடுவேன் அல்லேன் திருஒற்றி யப்பா உன்றன் அருள்உண்டே.
- தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா
- யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல்
- தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந்தவத்தோர்
- ஓவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றியூர் அமர்ந் தருள்செயும் ஒன்றே.
- ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
- வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
- இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
- துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
- துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
- இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
- அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
- பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
- பரிந்துநின் றுலக வாழ்க்கையில் உழலும் பரிசொழிந் தென்மலக் கங்குல்
- இரிந்திட நினது திருவருள் புரியா திருத்தியேல் என்செய்வேன் எளியேன்
- எரிந்திட எயில்மூன் றழற்றிய நுதற்கண் எந்தையே எனக்குறுந் துணையே
- விரிந்தபூம் பொழில்சூழ் ஒற்றியம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.
- வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்
- தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண் எனத் தாழேன்
- சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
- ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.
- செய்வதுன் கடன்காண் சிவபெரு மானே திருவொற்றி யூர்வருந் தேனே
- உய்வதென் கடன்காண் அன்றிஒன் றில்லை உலகெலாம் உடையநா யகனே
- நைவதென் நெஞ்சம் என்செய்கேன் நினது நல்அருள் பெறாவிடில் என்னை
- வைவதுன் அடியர் அன்றிஇவ் வுலக வாழ்க்கையில் வரும்பொலாஅணங்கே.
- இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
- என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
- சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
- மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
- பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
- கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
- வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
- பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
- காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
- வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
- கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்
- வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
- பெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
- மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.
- கன்னியர் அளகக் காட்டி€டை உழன்ற கல்மனக் குரங்கினேன் த€னைநீ
- அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
- என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
- மன்னிய வன்னி மலர்ச்ச€டை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- பசிக்குண வுழன்றுன் பாததா ம€ரை€யைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
- நசிக்கும்இவ்வுட€லை நம்பினேன் என்€னை நமன்தமர் வருத்தில்என்செய்கேன்
- விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
- வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
- கான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்€தையே விரும்பும்
- நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
- சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
- மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்€னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.
- மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
- நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
- படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
- வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
- பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
- இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
- மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
- கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
- குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
- பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
- வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
- மண்ணை மனத்துப் பாவியன்யான் மடவார் உள்ளே வதிந்தளிந்த
- புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே
- எண்ண இனிய நின்புகழை ஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்
- தண்நல் அமுதே நீஎன்னைத் தடுத்திங் காளத் தக்கதுவே.
- தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
- துக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
- மிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்
- செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.
- துனியே பிறத்தற் கேதுஎனும் துட்ட மடவார் உள்ததும்பும்
- பனிஏய் மலம்சூழ் முடைநாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்திளைத்தேன்
- இனிஏ துறுமோ என்செய்கேன் எளியேன் தனைநீ ஏன்றுகொளாய்
- கனியே கருணைக் கடலேஎன் கண்ணே ஒற்றிக் காவலனே.
- வலமே உடையார் நின்கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன்
- மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும் உவர்ச்
- சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன்
- நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ.
- மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்தம்
- தனமே என்னும் மலைஏறிப் பார்த்தேன் இருண்ட சலதிஒன்று
- முனமே தோன்ற மதிமயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன்
- இனமே என்னை நீஅன்றி எடுப்பார் இல்லை என்அரசே.
- எற்றுக் கடியர் நின்றதுநின் இணைத்தாள் மலரை ஏத்தஅன்றோ
- மற்றிக் கொடியேன் அஃதின்றி மடவார் இடைவாய் மணிப்பாம்பின்
- புற்றுக் குழன்றேன் என்னேஎன் புந்தி எவர்க்குப் புகல்வேனே
- கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றிக் கண்ணார்ந் தோங்கும் கற்பகமே.
- ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்
- தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத்
- தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன்
- வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே.
- துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக்
- கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன்
- உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ னந்த உததிபோல் கண்கள்நீர் உகுப்பார்
- அள்ளிவாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.
- ஒற்றியூர் அமரும் ஒளிகெழு மணியே உன்அடி உள்கிநின் றேத்தேன்
- முற்றியூர் மலினக் குழிஇருள் மடவார் முலைஎனும் மலநிறைக் குவையைச்
- சுற்றிஊர் நாயின் சுழன்றனன் வறிதே சுகம்எனச் சூழ்ந்தழி உடலைப்
- பற்றியூர் நகைக்கத் திரிதரு கின்றேன் பாவியேன் உய்திறம் அரிதே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- இனியநின் திருத்தாள் இணைமலர் ஏத்தேன் இளமுலை மங்கையர்க் குள்ளம்
- கனியஅக் கொடியார்க் கேவல்செய் துழன்றேன் கடையனேன் விடயவாழ் வுடையேன்
- துனியஇவ் வுடற்கண் உயிர்பிரிந் திடுங்கால்துணைநினை அன்றி ஒன் றறியேன்
- தனியமெய்ப் போத வேதநா யகனே தடம்பொழில் ஒற்றியூர் இறையே.
- நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
- பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே பொறுப்பதும் அன்றிஇவ் வுலக
- வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன் விரைமலர் அடித்துணை ஏத்தும்
- அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள்ளறுத் தவனே.
- நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
- கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
- உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
- மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
- தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
- உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
- மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
- பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
- சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
- ஊணாக உள்ளுவந்த ஒற்றியப்பா மால்அயனும்
- காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
- கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
- துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
- உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
- மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
- குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
- ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றியப்பா என்னுடைய
- வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
- நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
- உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
- முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
- வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
- நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
- உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.
- இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
- துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
- உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
- தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
- கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
- எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
- ஒல்லார் புரமெரித்த ஒற்றியப்பா உன்அடிக்கே
- சொல்லால் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ.
- பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
- வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலானேன்
- உய்என் றருள்ஈயும் ஒற்றியப்பா உன்னுடைய
- மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.
- வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
- போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
- ஓதுமறை யோர்குலவும் ஒற்றியப்பா ஊரனுக்காத்
- தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ.
- பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
- வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
- ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
- நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.
- வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
- கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
- உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
- மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
- புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
- ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்
- கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ.
- கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
- வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
- ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
- ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
- மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
- பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
- உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
- தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
- சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
- காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
- ஓலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
- நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ.
- கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
- தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
- ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
- தில்லைப் பொதுவில் திருநடனம் காணேனோ.
- வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
- பேதை எனவீழ்ந்தே பிணிஉழந்த பேயடியேன்
- ஓதை கடற்கரைவாய் ஒற்றியப்பா வாழ்த்துகின்றோர்
- தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.
- அழுது நெஞ்சயர்ந் துமைநினைக் கின்றேன்
- ஐய நீர்அறி யாததும் அன்றே
- கழுது துன்றிய காட்டகத் தாடும்
- கதியி லீர்எனக் கழறினன் அல்லால்
- பழுது பேசின தொன்றிலை ஒற்றிப்
- பதியில் வாழ்படம் பக்கநா யகரே
- பொழுது போகின்ற தென்செய்கேன் எனைநீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- முன்னை மாதவ முயற்சிஒன் றில்லா
- மூட னேன்தனை முன்வர வழைத்துப்
- பிள்னை ஒன்றும்வாய்ப் பேச்சிலீ ரானால்
- பித்தர் என்றுமைப் பேசிட லாமே
- என்னை நான்பழித் திடுகின்ற தல்லால்
- இகழ்கி லேன்உமை எழில்ஒற்றி உடையீர்
- புன்னை அஞ்சடை யீர்எனை உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- உறங்கு கின்றதும் விழிப்பதும் மகிழ்வாய்
- உண்ணு கின்றதும் உடுப்பதும் மயக்குள்
- இறங்கு கின்றதும் ஏறுகின் றதுமாய்
- எய்க்கின் றேன்மனம் என்னினும் அடியேன்
- அறங்கொள் நும்அடி அரண்என அடைந்தேன்
- அயர்வு தீர்த்தெனை ஆட்கொள நினையீர்
- புறங்கொள் காட்டகத் தீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால்
- கயவர் ஆயினும் கசக்கும்என் றுரையார்
- அரும்பின் கட்டிள முலைஉமை மகிழும்
- ஐய நீர்உம தருள்எனக் களிக்க
- இரும்பின் கட்டிநேர் நெஞ்சினேன் எனினும்
- ஏற்று வாங்கிடா திருந்ததுண் டேயோ
- பொரும்பின் கட்டுரி யீர்ஒற்றி உடையீர்
- பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ.
- நல்லன் அல்லனான் ஆயினும் சிறியேன்
- நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
- சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
- தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
- வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
- மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
- செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
- தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
- எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
- தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
- செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
- போது போகின்ற தன்றிஎன் மாயப்
- புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
- சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
- ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக்
- காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
- காள முண்டஅக் கருணையை உலகில்
- நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
- நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
- தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
- ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
- செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
- செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
- மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
- மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
- செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- வாடு கின்றனன் என்றனை இன்னும்
- வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப்
- பாடு கின்றனன் பாவியேன் என்னைப்
- பாது காப்பதுன் பரம்அது கண்டாய்
- தேடு கின்றமால் நான்முகன் முதலாம்
- தேவர் யாவரும் தெரிவரும் பொருளே
- சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே
- திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
- இன்று நின்றவர் நாளைநின் றிலரே
- என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
- சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிவனே
- நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
- நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
- பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
- அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
- தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஒல்லை இங்குவா என்றருள் புரியா
- தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
- புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
- நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
- சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
- இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
- போல என்றுரை யாஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
- களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
- அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
- தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
- சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
- கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும்
- மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந்
- தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே.
- கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
- மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
- உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
- நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
- வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
- தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
- திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
- பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
- பற்று நோக்கிய பாவியேன் தனக்குப்
- பரிந்து நீஅருட் பதம்அளித் திலையே
- மற்று நோக்கிய வல்வினை அதனால்
- வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின்
- அற்று நோக்கிய நோய்களின் மூப்பின்
- அலைதந் திவ்வுல கம்படும் பாட்டை
- உற்று நோக்கினால் உருகுதென் உள்ளம்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில்
- வருந்தி மாய்வதும் மற்றிவை எல்லாம்
- கண்ணின் நேர்நிதங் கண்டும்இவ் வாழ்வில்
- காதல் நீங்கிலாக் கல்மனக் கொடியேன்
- எண்ணி நின்றஓர் எண்ணமும் முடியா
- தென்செய் கேன்வரும் இருவினைக் கயிற்றால்
- உண்ணி ரம்பநின் றாட்டுகின் றனைநீ
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- யாதும் உன்செய லாம்என அறிந்தும்
- ஐய வையமேல் அவர்இவர் ஒழியாத்
- தீது செய்தனர் நன்மைசெய் தனர்நாம்
- தெரிந்து செய்வதே திறம்என நினைத்துக்
- கோது செய்மலக் கோட்டையைக் காவல்
- கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனிநீ
- ஓது செய்வதொன் றென்னுயிர்த் துணையே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
- ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
- ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
- அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
- வான மேவிய அமரரும் அயனும்
- மாலும் என்முனம் வலியிலர் அன்றே
- ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- அளிய நெஞ்சம்ஓர் அறிவுரு வாகும்
- அன்பர் தம்புடை அணுகிய அருள்போல்
- எளிய நெஞ்சினேற் கெய்திடா தேனும்
- எள்ளில் பாதிமட் டீந்தருள் வாயேல்
- களிய மாமயல் காடற எறிந்தாங்
- கார வேரினைக் களைந்துமெய்ப் போத
- ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம்வைத் தோம்புறும் பொருட்டாய்ப்
- பொற்பது தவிரும் புலையர்தம் மனைவாய்ப் புந்திநொந் தயர்ந்தழு திளைத்தேன்
- சொற்பதங் கடந்த நின்திரு வடிக்குத் தொண்டுசெய் நாளும்ஒன் றுளதோ
- கற்பது கற்றோர் புகழ்திரு வொற்றிக் காவல்கொள் கருணையங் கடலே.
- முன்னைவல் வினையால் வஞ்சக மடவார் முழுப்புலைக் குழிவிழுந் திளைத்தேன்
- என்னையோ கொடியேன் நின்திரு வருள்தான் எய்தில னேல்உயி‘க் குறுதிப்
- பின்னைஎவ் வணந்தான் எய்துவ தறியேன் பேதையில் பேதைநான் அன்றோ
- கன்னலே தேனே ஒற்றிஎம் அமுதே கடவுளே கருணையங் கடலே.
- ஞானம்என் பதிலோர் அணுத்துணை யேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன்
- ஈனம்என் பதனுக் கிறைஎனல் ஆனேன் எவ்வணம் உய்குவ தறியேன்
- வானநா டவரும் பெறற்கரு நினது மலரடித் தொழும்புசெய் வேனோ
- கானவேட் டுருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- ஞாலவாழ் வனைத்தும் கானல்நீர் எனவே நன்கறிந் துன்திரு அருளாம்
- சீலவாழ் வடையும் செல்வம்இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவ தேயோ
- நீலமா மிடற்றுப் பவளமா மலையே நின்மல ஆனந்த நிலையே
- காலன்நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணையங் கடலே.
- சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் தந்தலை வாயிலுள் குரைக்கும்
- வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை
- அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் கடிமைசெய் தொழுகுவ னேயோ
- கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணையங்கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த
- ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க்
- காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- மாணு றக்களங் கறுத்தசெம் மணியே
- வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே
- சேணு றத்தரும் ஒற்றிநா யகமே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- நின்ன டிக்கண்ஓர் கணப்பொழு தேனும்
- நிற்ப தின்றியே நீசமங் கையர்தம்
- கன்ன வில்தனம் விழைந்தது மனம்காண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- அன்ன ஊர்தியும் மாலும்நின் றலற
- அடியர் தங்களுள் அமர்ந்தருள் அமுதே
- தென்இ சைப்பொழில் ஒற்றிஎம் வாழ்வே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
- சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
- கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
- இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
- சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- ஒழுக்கம் இல்லவன் ஓர் இடத் தடிமைக்
- குதவு வான்கொல்என் றுன்னுகிற் பீரேல்
- புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம்
- போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள்
- பழுக்க நின்றிடும் குணத்தரு வாவேன்
- பார்த்த பேரும்அப் பரிசினர் ஆவர்
- தொழுக்கன் என்னையாள் வீர்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பிச்சை ஏற்றுணும் பித்தர்என் றும்மைப்
- பேசு கின்றவர் பேச்சினைக் கேட்டும்
- இச்சை நிற்கின்ற தும்மடிக் கேவல்
- இயற்று வான்அந்த இச்சையை முடிப்பீர்
- செச்சை மேனியீர் திருவுளம் அறியேன்
- சிறிய னேன்மிகத் தியங்குகின் றனன்காண்
- துச்சை நீக்கினோர்க் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
- கமுது வேண்டிமா லக்கடல் கடைய
- ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
- உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
- சாலம் செய்வது தகைஅன்று தருமத்
- தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
- சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- மடுக்கும் நீர்உடைப் பாழ்ங்கிண றதனுள்
- வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம்
- எடுக்கின் றோர்என இடையிற்கை விடுதல்
- இரக்க முள்ளவர்க் கியல்பன்று கண்டீர்
- தடுக்கி லாதெனைச் சஞ்சல வாழ்வில்
- தாழ்த்து கின்றது தருமம்அன் றுமக்கு
- நடுக்கி லார்தொழும் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
- விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
- உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
- உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
- கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
- கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
- நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- குற்ற மேபல இயற்றினும் எனைநீர்
- கொடியன் என்பது குறிப்பல உமது
- பொற்றை நேர்புயத் தொளிர்திரு நீற்றைப்
- பூசு கின்றனன் புனிதநும் அடிக்கண்
- உற்ற தோர்சிறி தன்பும்இவ் வகையால்
- உறுதி ஈவதிங் குமக்கொரு கடன்காண்
- நற்ற வத்தர்வாழ் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர்
- உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன்
- கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக்
- காம வேட்கையில் கடலினும் பெரியேன்
- வள்ள லேஉம தருள்பெறச் சிறிது
- வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர்
- நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார்
- வண்கை உள்ளவர் மற்றதுபோலக்
- கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில்
- கலங்கி ஐயநுங் கருணையாம் அமுதை
- மலிய உண்டிட வருகின்றேன் வருமுன்
- மாற்று கிற்பிரேல் வள்ளல்நீர் அன்றோ
- நலியல் நீக்கிடும் ஒற்றியம் பதியீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச்
- சமைவர் என்பது சற்றும்இன் றுலகில்
- எந்தை நீர்எனை வஞ்சக வாழ்வில்
- இருத்து வீர்எனில் யார்க்கிது புகல்வேன்
- பந்த மேலிட என்பரி தாபம்
- பார்ப்பி ரோஅருட் பங்கய விழியீர்
- நந்த வொண்பணை ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- கண்ணப்பா என்றருளும் காளத்தி யப்பாமுன்
- வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
- உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா வந்தருள
- எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ.
- வாங்கிமலை வில்லாக்கும் மன்னவனே என்அரசே
- ஓங்கி வளந்தழுவும் ஒற்றியூர் உத்தமனே
- தூங்கிய துன்பச் சுமைசுமக்க மாட்டாது
- ஏங்கிஅழு கின்றஇந்த ஏழைமுகம் பாராயோ.
- நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம்
- பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே
- மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே
- இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ.
- மால்அயர்ந்தும் காணா மலரடியாய் வஞ்சவினைக்
- கால்அயர்ந்து வாடஅருட் கண்ணுடையாய் விண்ணுடையாய்
- சேல்அயர்ந்த கண்ணார் தியக்கத்தி னால்உன்அருட்
- பால்அயர்ந்து வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய்யடியர்
- சந்தமுறும் நெஞ்சத் தலத்தமர்ந்த தத்துவனே
- நந்தவனஞ் சூழ்ஒற்றி நாயகனே வாழ்க்கைஎனும்
- பந்தமதில் வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- தில்லையிடை மேவும்எங்கள் செல்வப் பெருவாழ்வே
- ஒல்லைஅடி யார்க்கருளும் ஒற்றியூர் உத்தமனே
- அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசைதனக்
- கெல்லைஅறி யாதஇந்த ஏழைமுகம் பாராயோ.
- விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
- மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
- நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
- பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- யாது செய்குவன் போதுபோ கின்ற
- தண்ண லேஉம தன்பருக் கடியேன்
- கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
- கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
- வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
- வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
- மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ
- என்னை வஞ்சகர் யாவருங் கூடிக்
- கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக்
- கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன்
- தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல்
- தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண்
- மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந்
- திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன்
- தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே
- சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல்
- வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன்
- வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண்
- மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காமம் என்னும்ஓர் காவலில் உழன்றே
- கலுழ்கின் றேன்ஒரு களைகணும் அறியேன்
- சேம நல்லருட் பதம்பெறுந் தொண்டர்
- சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன்
- ஏமம் உற்றிடும் எனைவிடு விப்பார்
- இல்லை என்செய்வன் யாரினும் சிறியேன்
- வாம மாதராள் மருவொற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- ஊழ்வி னைப்படி எப்படி அறியேன்
- உஞற்று கின்றனன் உமதருள் பெறவே
- தாழ்வி னைத்தரும் காமமோ எனைக்கீழ்த்
- தள்ளு கின்றதே உள்ளுகின் றதுகாண்
- பாழ்வி னைக்கொளும் பாவியேன் செய்யும்
- பாங்க றிந்திலேன் ஏங்குகின் றனனால்
- வாழ்வி னைத்தரும் ஒற்றியூர் உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- காவல னேஅன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டவிழ்த்த
- பாவல னேதொழும் பாணன் பரிசுறப் பாட்டளித்த
- நாவல னேதில்லை நாயக னேகடல் நஞ்சைஉண்ட
- மாவல னேமுக்கண் வானவ னேஒற்றி மன்னவனே.
- புண்ணிய னேஎமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள்அளிக்கும்
- திண்ணிய னேநற் சிவஞான நெஞ்சில் தெளிந்தஅருள்
- அண்ணிய னேகங்கை ஆறமர் வேணியில் ஆர்ந்தமதிக்
- கண்ணிய னேபற் பலவாகும் அண்டங்கள் கண்டவனே.
- பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
- பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
- கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
- கண்ர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
- எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
- என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
- அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சால்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
- ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
- வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
- விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
- இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
- எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
- அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இன்புடையார் நின்அன்பர் எல்லாம் நின்சீர்
- இசைக்கின்றார் நான்ஒருவன் ஏழை இங்கே
- வன்புடையார் தமைக்கூடி அவமே நச்சு
- மாமரம்போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத்
- துன்புடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன்
- தூய்மைஎன்ப தறிந்திலேன் சூழ்ந்தோர்க் கெல்லாம்
- அன்புடையாய் எனைஉடையாய் விடையாய் வீணே
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- வாரமுளார் நின்அடியார் எல்லாம் நின்னை
- வாழ்த்துகின்றார் தலைகுளிர வணங்கு கின்றார்
- தீரமிலேன் நானொருவன் பாவி வஞ்சச்
- செயல்விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
- சாரமிலேன் ஆசார மில்லேன் சித்த
- சாந்தமிலேன் இரக்கமிலேன் தகவும் இல்லேன்
- ஆரமுதே முக்கணுடை அரசே வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உம்பர்தமக் கரிதாம்உன் பதத்தை அன்றி
- ஒன்றுமறி யார்உன்னை உற்றோர் எல்லாம்
- இம்பர்வினை யுடையேன்நான் ஒருவன் பாவி
- எட்டுணையும் நினைந்தறியேன் என்றும் எங்கும்
- வம்பவிழ்பூங் குழல்மடவார் மையல் ஒன்றே
- மனம்உடையேன் உழைத்திளைத்த மாடு போல்வேன்
- அம்பலத்தெம் அரசேஇவ் வாழ்க்கைத் துன்பில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- இருளார் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத
- மருளார் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன்
- அருளார் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ
- தெருளார் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ.
- காமக் கடலில் படிந்தஞராம் கடலில் விழுந்தேன் கரைகாணேன்
- ஏமக் கொடுங்கூற் றெனும்மகரம் யாது செயுமோ என்செய்கேன்
- நாமக் கவலை ஒழித்துன்றாள் நண்ணும் அவர்பால் நண்ணுவித்தே
- தாமக் கடிப்பூஞ் சடையாய்உன் தன்சீர் பாடத் தருவாயே.
- வஞ்ச மடவார் மயலொருபால் மணியே நின்னை வழுத்தாத
- நஞ்சம் அனையார் சார்பொருபால் நலியும் வாழ்க்கைத் துயர்ஒருபால்
- விஞ்சும் நினது திருவருளை மேவா துழலும் மிடிஒருபால்
- எஞ்சல் இலவாய் அலைக்கின்ற தென்செய் கேன்இவ் எளியேனே.
- மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால்
- புண்ணேயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன்
- பண்ணேயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
- கண்ணேஉன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே.
- நண்ணும் வினையால் நலிகின்ற நாயடியேன்
- எண்ணும் சுகாதீத இன்பமே அன்புடையோர்
- கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே
- பெண்ஒருபால் வாழும்உருப் பெற்றிதனைக் கண்டிலனே.
- தெவ்வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன்
- இவ்வண்ணம் என்றறிதற் கெட்டாத வான்பொருளே
- அவ்வண்ண மான அரசே அமுதேநின்
- செவ்வண்ண மேனித் திறங்காணப் பெற்றிலனே.
- பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன்
- கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத
- முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு
- வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே.
- நீதியிலார் வாயிலிடை நின்றலைந்த நெஞ்சகனேன்
- சோதிஎலாம் சூழ்ந்தபரஞ் சோதியே செஞ்சடைமேல்
- பாதிநிலா ஓங்கும் பரமேநீ ஒற்றிநகர்
- வீதிஉலா வந்தஎழில் மெய்குளிரக் கண்டிலனே.
- உள்ளும் திருத்தொண்டர் உள்ளத் தெழுங்களிப்பே
- கொள்ளும் சிவானந்தக் கூத்தாஉன் சேவடியை
- நள்ளும் புகழுடைய நல்லோர்கள் எல்லாரும்
- எள்ளும் புலையேன் இழிவொழித்தால் ஆகாதோ.
- கோதைஓர் கூறுடைய குன்றமே மன்றமர்ந்த
- தாதையே ஒற்றித் தலத்தமர்ந்த சங்கரனே
- தீதையே நாள்தோறும் செய்தலைந்து வாடுமிந்தப்
- பேதையேன் செய்த பிழைபொறுத்தால் ஆகாதோ.
- வஞ்சமிலார் உள்ளம் மருவுகின்ற வான்சுடரே
- கஞ்சமுளான் போற்றும் கருணைப் பெருங்கடலே
- நஞ்சமுதாக் கொண்டருளும் நல்லவனே நின்அலதோர்
- தஞ்சமிலேன் துன்பச் சழக்கொழித்தால் ஆகாதோ.
- சேய்பிழையைத் தாய்அறிந்தும் சீறாள் பொறுப்பாள்இந்
- நாய்பிழையை நீபொறுக்க ஞாயமும்உண் டையாவே
- தேய்மதிபோல் நெஞ்சம் தியக்கம்உறச் சஞ்சலத்தால்
- வாய்அலறி வாடும்எனை வாஎன்றால் ஆகாதோ.
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
- மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
- சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
- ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
- நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
- மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
- கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
- ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
- அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
- களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
- வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
- மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம்
- சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே
- வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே
- நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே.
- மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
- நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
- கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
- வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
- வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால்
- வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள்
- தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய்
- சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே.
- பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
- இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
- மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
- அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.
- கணத்தில் என்னைவிட் டேகுகின் றவன்போல்
- காட்டு கின்றனன் மீட்டும்வந் தடுத்துப்
- பணத்தும் மண்ணினும் பாவைய ரிடத்தும்
- பரவ நெஞ்சினை விரவுகின் றனன்காண்
- குணத்தி னில்கொடுந் தாமதன் எனும்இக்
- கொடிய வஞ்சகன் ஒடியமெய்ப் போதம்
- உணர்த்து வார்இலை என்செய்கேன் எளியேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கோடி நாவினும் கூறிட அடங்காக்
- கொடிய மாயையின் நெடியவாழ்க் கையினை
- நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனையோர்
- நாளும் எண்ணிலேன் நன்கடை வேனே
- வாடி னேன்பிழை மனங்கொளல் அழியா
- வாழ்வை ஏழையேன் வசஞ்செயல் வேண்டும்
- ஊடி னாலும்மெய் அடியரை இகவா
- ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.
- அன்ப தென்பதைக் கனவினும் காணேன்
- ஆடு கின்றனன் அன்பரைப் போல
- வன்ப வத்தையும் மாய்த்திட நினைத்தேன்
- வஞ்ச நெஞ்சினை வசப்படுக் கில்லேன்
- துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத்
- தொழுது வாழ்த்திநல் சுகம்பெறு வேனே
- ஒன்ப தாகிய உருவுடைப் பெரியோய்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
- உண்மை அன்றென உணர்த்தியும் எனது
- பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
- பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
- வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
- வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
- ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- நையு மாறெனைக் காமமா திகள்தாம்
- நணுகி வஞ்சகம் நாட்டுகின் றதுநான்
- செய்யு மாறிதற் கறிந்திலன் எந்தாய்
- திகைக்கின் றேன் அருள் திறம்பெறு வேனே
- வையு மாறிலா வண்கையர் உளத்தின்
- மன்னி வாழ்கின்ற மாமணிக் குன்றே
- உய்யு மாறருள் அம்பலத் தமுதே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும்
- யாவும் நீஎன எண்ணிய நாயேன்
- மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின்
- மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன்
- சான்று கொண்டது கண்டனை யேனும்
- தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை
- ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தாய ராதியர் சலிப்புறு கிற்பார்
- தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார்
- நேய ராதியர் நேயம்விட் டகல்வார்
- நின்னை நம்பிஎன் நெஞ்சுவக் கின்றேன்
- தீய ராதியில் தீயன்என் றெனைநின்
- திருவு ளத்திடைச் சேர்த்திடா தொழித்தால்
- ஏயர் கோனுக்கன் றருளும்எம் பெருமான்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- முன்னை நான்செய்த வல்வினைச் சிமிழ்ப்பான்
- மோக வாரியின் மூழ்கின னேனும்
- அன்னை போலும்என் ஆருயிர்த் துணையாம்
- அப்ப நின்அருள் அம்பியை நம்பி
- தன்னை நேர்சிவ ஞானமென் கரையைச்
- சார்கு வேம்எனும் தருக்குடன் உழன்றேன்
- இன்னும் நின்அருள் ஈந்திலை அந்தோ
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- உண்ணு கின்றதும் உறங்குகின் றதும்மேல்
- உடுத்து கின்றதும் உலவுகின் றதும்மால்
- நண்ணு கின்றதும் நங்கையர் வாழ்க்கை
- நாடு கின்றதும் நவையுடைத் தொழில்கள்
- பண்ணு கின்றதும் ஆனபின் உடலைப்
- பாடை மேலுறப் படுத்துகின் றதும்என்
- றெண்ணு கின்றதோ றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
- இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
- இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
- அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
- அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
- எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- மெச்சு கின்றவர் வேண்டிய எல்லாம்
- விழிஇ மைக்குமுன் மேவல்கண் டுனைநான்
- நச்சு கின்றனன் நச்சினும் கொடியேன்
- நன்மை எய்தவோ வன்மையுற் றிடவோ
- இச்சை நன்றறி வாய்அருள் செய்யா
- திருக்கின் றாய் உனக் கியான்செய்த தென்னே
- செச்சை மேனிஎம் சிவபரஞ் சுடர்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- நாடுந் தாயினும் நல்லவன் நமது
- நாதன் என்றுனை நாடும்அப் பொழுதே
- வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை
- வைகற் போதெலாம் வாடுகின் றனன்காண்
- பாடுந் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப்
- பண்பென் மட்டும்நின் பால்இலை போலும்
- தேடும் பத்தர்தம் உளத்தமர் வோய்நின்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- வானும் வையமும் அளிக்கினும் உன்பால்
- மனம்வைத் தோங்குவர் வள்ளல்நின் அடியார்
- நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில்
- நாடி நின்னருள் நலம்பெற விழைதல்
- கூனும் ஓர்முடக் கண்ணிலி வானில்
- குலவும் ஒண்சுடர் குறித்திடல் போலும்
- தேனும் கைக்கும்நின் அருளுண்டேல் உண்டுன்
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
- ஏன்றுகொள் பவரிலை அந்தோ
- அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
- அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
- புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
- பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
- திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
- செல்வமே சிவபரம் பொருளே.
- ஆண்டநின் கருணைக் கடலிடை ஒருசிற்
- றணுத்துணைத் திவலையே எனினும்
- ஈண்டஎன் றன்மேல் தெறித்தியேல் உய்வேன்
- இல்லையேல் என்செய்கேன் எளியேன்
- நீண்டவன் அயன்மற் றேனைவா னவர்கள்
- நினைப்பரும் நிலைமையை அன்பர்
- வேண்டினும் வேண்டா விடினும்ஆங் களிக்கும்
- விமலனே விடைப்பெரு மானே.
- விளைத்தனன் பவநோய்க் கேதுவாம் விடய
- விருப்பினை நெருப்புறழ் துன்பின்
- இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால்
- என்செய்கேன் என்பிழை பொறுத்துத்
- தளைத்தவன் துயர்நீத் தாளவல் லவர்நின்
- தனைஅன்றி அறிந்திலன் தமியேன்
- கிளைத்தவான் கங்கை நதிச்சடை யவனே
- கிளர்தரும் சிற்பர சிவனே.
- என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள்
- என்றுநின் உருவுகண் டிடும்நாள்
- என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள்
- என்றென தகத்துயர் அறும்நாள்
- மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே
- வானவர் கனவினும் தோன்றா
- தொன்றுறும் ஒன்றே அருண்மய மான
- உத்தம வித்தக மணியே.
- அருள்பவன் நின்னை அல்லதை இங்கும்
- அங்கும்மற் றெங்கும்இன் றதுபோல்
- மருள்பவன் என்னை அல்லதை மண்ணும்
- வானமும் தேடினும் இன்றே
- இருள்பவம் உடையேன் என்செய்கேன் நின்தாள்
- இணைதுணை எனநினைந் துற்றேன்
- மருள்பவத் தொடும்என் துயர்அறுத் தாள்வாய்
- வாழிய அருட்பெருந் துறையே.
- அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
- துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
- இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
- செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
- தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
- தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
- கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
- யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
- முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
- கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
- வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
- றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
- நன்றி ஒன்றிய நின்னடி யவர்க்கே
- நானும் இங்கொரு நாயடி யவன்காண்
- குன்றின் ஒன்றிய இடர்மிக உடையேன்
- குற்றம் நீக்கும்நல் குணமிலேன் எனினும்
- என்றின் ஒன்றிய சிவபரஞ் சுடரே
- இன்ப வாரியே என்னுயிர்த் துணையே
- ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மையல் வாழ்க்கையில் நாள்தொறும் அடியேன்
- வருந்தி நெஞ்சகம் மாழ்குவ தெல்லாம்
- ஐய ஐயவோ கண்டிடா தவர்போல்
- அடம்பி டிப்பதுன் அருளினுக் கழகோ
- செய்ய மேல்ஒன்றும் அறிந்திலன் சிவனே
- தில்லை மன்றிடைத் தென்முக நோக்கி
- உய்ய வைத்ததாள் நம்பிநிற் கின்றேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மண்ண கச்சிறு வாழ்க்கையின் பொருட்டால்
- வருந்தி மற்றதன் வன்மைகள் எல்லாம்
- எண்ண எண்ணஎன் நெஞ்சகம் பதைப்புற்
- றேங்கி ஏங்கிநான் இளைப்புறு கின்றேன்
- அண்ணல் நின்திரு அருட்டுணை அடைந்தால்
- அமைந்து வாழ்குவன் அடைவகை அறியேன்
- உண்ண நல்அமு தனையஎம் பெருமான்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- அன்னை அப்பனும் நீஎன மகிழ்ந்தே
- அகங்கு ளிர்ந்துநான் ஆதரித் திருந்தேன்
- என்னை இப்படி இடர்கொள விடுத்தால்
- என்செய் கேன் இதை யாரொடு புகல்கேன்
- பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப்
- போற்று வார்க்குநீ புரிகுவ திதுவோ
- உன்னை எப்படி ஆயினும் மறவேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- நீலம் இட்டகண் மடவியர் மயக்கால்
- நெஞ்சம் ஓர்வழி நான்ஒரு வழியாய்
- ஞாலம் இட்ட இவ் வாழ்க்கையில் அடியேன்
- நடுங்கி உள்ளகம் நலியும்என் தன்மை
- ஆலம் இட்டருள் களத்தநீ அறிந்தும்
- அருள்அ ளித்திலை ஆகமற் றிதனை
- ஓலம் இட்டழு தரற்றிஎங் குரைப்பேன்
- உனைஅ லால்எனை உடையவர் எவரே.
- மறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்
- இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்
- பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
- அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே.
- தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
- ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
- பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
- நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே.
- கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
- அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
- இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
- பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே.
- ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே
- தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே
- வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்
- தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே.
- வைய நாயக வானவர் நாயக
- தையல் நாயகி சார்ந்திடும் நாயக
- உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
- வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
- நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
- சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
- ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
- வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
- ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே
- சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன்
- மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல்
- ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே.
- அருளார் அமுதப் பெருங்கட லேதில்லை அம்பலத்தில்
- பொருளார் நடம்புரி புண்ணிய னேநினைப் போற்றுகிலேன்
- இருளார் மனத்தின் இடர்உழந் தேன்இனி யாதுசெய்கேன்
- மருளார் மலக்குடில் மாய்ந்திடில் உன்அருள் வாய்ப்பதற்கே.
- வாயார நின்பொன் மலர்த்தாள் துணையே வழுத்துகிலேன்
- ஓயா இடர்உழந் துள்நலி கின்றனன் ஓகெடுவேன்
- பேயாய்ப் பிறந்திலன் பேயும்ஒவ் வேன்புலைப் பேறுவக்கும்
- நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான்இங்ஙனே.
- நான்செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்துநின் நல்லருள்நீ
- தான்செய் தனைஎனில் ஐயாமுக் கட்பெருஞ் சாமிஅவற்
- கேன்செய் தனைஎன நிற்றடுப் பார்இலை என்அரசே
- வான்செய்த நன்றியை யார்தடுத் தார்இந்த வையகத்தே.
- விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
- பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
- அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
- புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
- துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
- பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
- தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
- என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.
- கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
- வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
- வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
- ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
- கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
- நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
- அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
- எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.
- விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றுன்அடியின்
- இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
- நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
- உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.
- கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
- நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
- வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
- எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
- என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
- உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
- மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
- தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.
- கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
- வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
- உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
- கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.
- பற்று நெஞ்சகப் பாதக னேன்செயும்
- குற்றம் யாவும்கு ணம்எனக் கொண்டருள்
- உற்ற எள்துணை யேனும்உ தவுவாய்
- கற்ற நற்றவர் ஏத்தும்முக் கண்ணனே.
- மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
- பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
- கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
- வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
- பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
- நாட வேறும னையிடை நண்ணிநான்
- வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.
- குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
- படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
- பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
- கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான்
- வாய்க்கும் ஒதிபோல் பொய்உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன்எனை
- ஆய்க்கும் இனிய அப்பாஉன் ஒற்றி யூரை அடைந்திருளைக்
- காய்க்கும் வண்ணம் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- குருதி நிறைந்த குறுங்குடத்தைக் கொண்டோன் வழியில் சென்றிடவா
- யெருதின் மனத்தேன் சுமந்துநலம் இழந்து திரியும் எய்ப்பொழிய
- வருதி எனவே வழிஅருளி ஒற்றி யூர்க்கு வந்துன்னைக்
- கருதி வணங்கச் செய்ததற்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- ஊணத் துணர்ந்த பழுமரம்போல் ஒதிபோல் துன்பைத் தாங்குகின்ற
- தூணத் தலம்போல் சோரிமிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை
- மாணப் பரிவால் அருட்சிந்தா மணியே உன்றன் ஒற்றிநகர்
- காணப் பணித்த அருளினுக்கோர் கைம்மா றறியேன் கடையேனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- கூர்கொண்ட வாள்கொண்டு கொலைகொண்ட வேட்டுவக்
- குடிகொண்ட சேரிநடுவில்
- குவைகொண்ட ஒருசெல்வன் அருமைகொண் டீன்றிடு
- குலங்கொண்ட சிறுவன்ஒருவன்
- நேர்கொண்டு சென்றவர்கள் கைகொண் டுறக்கண்கள்
- நீர்கொண்டு வாடல்எனவே
- நிலைகொண்ட நீஅருட் கலைகொண் டளித்தயான்
- நெறிகொண்ட குறிதவறியே
- போர்கொண்ட பொறிமுதல் புலைகொண்ட தத்துவப்
- புரைகொண்ட மறவர்குடியாம்
- பொய்கொண்ட மெய்என்னும் மைகொண்ட சேரியில்
- போந்துநின் றவர்அலைக்கக்
- கார்கொண்ட இடிஒலிக் கண்கொண்ட பார்ப்பில்
- கலங்கினேன் அருள்புரிகுவாய்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும்
- எய்துகபி றப்பில்இனிநான்
- எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும்
- இன்பம்எய் தினும்எய்துக
- வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு
- வாழ்வுவந் திடினும்வருக
- வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ
- மதிவரினும் வருகஉயர்வோ
- டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல
- தெதுபோ கினும்போகநின்
- இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம்
- எனக்கடைதல் வேண்டும்அரசே
- கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும்
- கதிமருந் துதவுநிதியே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- நான்முகனும் மாலும்அடி முடியும்அறி வரியபர
- நாதமிசை ஓங்குமலையே
- ஞானமய மானஒரு வானநடு ஆனந்த
- நடனமிடு கின்றஒளியே
- மான்முகம்வி டாதுழலும் எனையும்உயர் நெறிமருவ
- வைத்தவண்வ ளர்த்தபதியே
- மறைமுடிவில் நிறைபரப் பிரமமே ஆகம
- மதிக்கும்முடி வுற்றசிவமே
- ஊண்முகச் செயல்விடுத் துண்முகப் பார்வையின்
- உறுந்தவர்பெ றுஞ்செல்வமே
- ஒழியாத உவகையே அழியாத இன்பமே
- ஒன்றிரண் டற்றநிலையே
- கான்முகக் கடகளிற் றுரிகொண்ட கடவுளே
- கண்கொண்ட நுதல்அண்ணலே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- மணிமிடற் றமுதே போற்றிஎன் தன்னை
- வாழ்விக்க வேண்டுவல் போற்றி
- அணிமதி முடியோய் போற்றிஇவ் வேழைக்
- கருளமு தருளுக போற்றி
- பணிஅணி புயத்தோய் போற்றிநின் சீரே
- பாடுதல் வேண்டும்நான் போற்றி
- தணிவில்பே ரொளியே போற்றிஎன் தன்னைத்
- தாங்குக போற்றிநின் பதமே.
- நிதிதரு நிறைவே போற்றிஎன் உயிர்க்கோர்
- நெறிதரு நிமலமே போற்றி
- மதிமுடிக் கனியே போற்றிஎன் தன்னை
- வாழ்வித்த வள்ளலே போற்றி
- விதிமுதற் கிறையே போற்றிமெய்ஞ் ஞான
- வியன்நெறி விளக்கமே போற்றி
- பதிபசு பதியே போற்றி நின்பாதம்
- பாடஎற் கருளுக போற்றி.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- போதஆ னந்த போகமே என்னைப்
- புறம்பிட நினைத்திடேல் போற்றி
- சீதவான் பிறைசேர் செஞ்சடை யாய்என்
- சிறுமைதீர்த் தருளுக போற்றி
- பேதம்ஒன் றில்லா அருட்கட லேஎன்
- பிழைஎலாம் பொறுத்தருள் போற்றி
- வேதமெய்ப் பொருளே போற்றிநின் அல்லால்
- வேறெனக் கிலைஅருள் போற்றி.
- போற்றுவார் உள்ளம் புகுந்தொளிர் ஒளியே
- போற்றிநின் பூம்பதம் போற்றி
- ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி
- அமலநின் அடிமலர் போற்றி
- ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி
- இறைவநின் இருங்கழல் போற்றி
- சாற்றுமா றரிய பெருமையே போற்றி
- தலைவநின் தாட்டுணை போற்றி.
- நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து
- நலந்தரல் வேண்டுவன் போற்றி
- ஏன்செய்தாய் என்பார் இல்லைமற் றெனக்குன்
- இன்னருள் நோக்கஞ்செய் போற்றி
- ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன்
- ஓதநீ உவந்தருள் போற்றி
- மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள்
- வள்ளலே போற்றிநின் அருளே.
- தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
- பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
- துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ தூயஅருள்
- புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே.
- எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
- வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
- செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
- இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே.
- இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
- பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
- திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
- விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே.
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
- மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
- அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
- என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
- வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
- கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
- ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
- வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
- மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
- இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
- மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
- பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
- எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
- தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
- மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
- இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும் நாடில் தவத்தால் நல்கியநல்
- தாய்க்கும் கோபம் உறும்என்னில் யாரே யென்பால் சலியாதார்
- வாய்க்கும் கருணைக் கடல்உடையாய் உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
- பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே.
- பேதைப் பருவத் தெனைவலியப் பிடித்தாட் கொண்ட பெருமானே
- போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
- வாதைப் படும்என் உயிரைஉன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
- ஓதைக் கடல்சூழ் உலகத்தே பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.
- செய்வேன் தீமை நலம்ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
- வைவேன் அன்றி வாழ்த்தேன்என் வண்ணம் இந்த வண்ணம்எனில்
- உய்வேன் என்ப தெவ்வாறென் உடையாய் உய்வேன் உய்வித்தால்
- நைவேன் அலதிங் கென்செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே.
- பரியும் மனத்தால் கருணைநடம் பரவுந் தொண்டர் பதப்பணியே
- புரியும் இனத்தா ரொடுங்கூடிப் புனித னாக வேண்டும்எனத்
- திரியும் அடிமைச் சிறியேனுக் கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
- எரியுங் கொடுவாய் நரகத்துக் கென்செய் வேன்என் செய்வேனே.
- என்செய் திடுவேன் புலைநாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
- பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல்
- புன்செய் விளவிப் பயனிலியாய்ப் புறத்திற் கிடத்தி எனஅடியார்
- வன்செய் உரையில் சிரிப்பார்மற் றதுகண் டெங்ஙன் வாழ்வேனே.
- வாழா மனத்தின் வழிசென்று வாளா நாளைக் கழிக்கின்ற
- பாழாம் உலகச் சிறுநடையில் பாவி யேனைப் பதிவித்தாய்
- ஊழாம் எனில்எம் பெருமானே இன்னும் வினையால் ஒதிஅனையேன்
- ஏழாம் நரகுக் காளாவேன் அல்லால் புகல்என் எளியேற்கே.
- சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
- எறியேம் எனக்கொண் டிரங்குதியோ இவ்வா றவ்வா றெனஒன்றும்
- அறியேன் அவலக் கடல்அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
- பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின் துணையும் காணேன் பெருமானே.
- சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து
- வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ
- தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே
- வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே.
- புலையே புரியும் மனம்போன போக்கே அல்லால் புண்ணியநல்
- நிலையே அறியேன் சிறியேனுக் கருளல் அழகோ நிறைந்தகுண
- மலையே மணியே மருந்தேஎன் வாழ்வே எல்லாம் வல்லோனே
- கலையே கருதும் கழலுடையாய் அருளா மையும்நின் கடன்அன்றே.
- நின்பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடுவினையேன்
- வன்பால் மனப்பேய் தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன்
- தென்பால் நோக்கி இன்பநடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா
- முன்பால் அமுதக் கடல்அளித்த முதல்வா என்னை முன்னுதியே.
- தீதொன்று மேகண் டறிந்ததல் லால்பலன் சேரநலம்
- யாதொன்றும் நான்கண் டறியேன் அறிந்தவன் என்னஇங்கே
- போதொன்று போக்குகின் றேன்பிழை யாவும் பொறுத்தருள்வாய்
- மாதொன்று பாகத் துணைஅன்றி நற்றுணை மற்றிலையே.
- எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
- பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
- கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
- பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
- மண்ணுடை யாரிடை வாளா மனஞ்செல வைத்ததலால்
- எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
- புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
- கண்ணுடை யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே.
- தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனிஅடியேன்
- வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
- ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
- வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
- ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
- நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
- ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
- வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.
- ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
- தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
- ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
- வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.
- ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
- இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
- கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
- துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.
- ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
- தேவாஎன் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
- வாவா எனஅழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
- நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
- சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
- மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
- புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
- அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.
- ஆள்வினையால் பயன்உறுவார் அசதி யாட
- அந்தோ இப் புலைநாயேன் அன்பால் நின்பால்
- வேள்விசெயும் பெருந்தவர்க்கே வேள்வி செய்ய
- வேண்டும்இதற் கெம்பெருமான் கருணை செய்யும்
- நாள்விளைவில் சின்னாளே இதுதான் உண்மை
- நம்பும்என நவின்றுனையே நம்பி நின்றேன்
- கேள்வியிலாத் துரைத்தனமோ அலது நாயேன்
- கிளக்குமுறை கிளக்கிலனோ கேட்டி லாயே.
- வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
- வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
- தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
- சுடர்க்கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
- ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட
- அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
- ஈண்டாவ எனச்சிறிய அடியேன் உள்ளத்
- தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
- என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
- இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
- நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
- நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற
- மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
- மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
- உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
- உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
- உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
- உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
- கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
- கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
- எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன்
- எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
- வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
- மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே.
- வகைஅறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
- மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
- தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
- தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
- மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
- மிகஅறிவேன் எனினும்எனை விடுதி யாயில்
- பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
- பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.
- இட்டவகை வாழ்கின்றேன் எந்தாய் நானே
- எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என்செய் வேன்நின்
- மட்டலர்சே வடிஆணை நினைத்த வண்ணம்
- வாழ்விக்க வேண்டும்இந்த வண்ணம் அல்லால்
- துட்டன்என விடத்துணிதி யாயில் அந்தோ
- சூறையுறு துரும்பெனவும் சுழன்று வானில்
- விட்டசிலை எனப்பவத்தில் விழுவேன் அன்றி
- வேறெதுசெய் வேன்இந்த விழல னேனே.
- பிறவா நெறியது பேசா நிலையது பேசில்என்றும்
- இறவா உருவதுள் ஏற்றால் வருவ திருள்அகன்றோர்
- மறவா துடையது மாதோர் புடையது வாழ்த்துகின்றோர்
- உறவாய் இருப்பதொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே.
- மதிவார் சடைமா மணியே அருள்வள் ளலேநன்
- நிதியே திருஅம் பலத்தா டல்செய்நித் தனேநின்
- துதியேன் எனினும் உனைஅன் றித்துணையி லேன்என்
- பதியே எனதெண் ணம்ப லிக்கும்படிக் கருளே.
- புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
- அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
- கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
- எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே.
- செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
- நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
- உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
- வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே.
- மறவா துனைவாழ்த் துமெய்அன் பரைமாநி லத்தே
- இறவா வகைஆட் கொண்டரு ளியஈச னேமெய்
- உறவா கியநின் பதம்அன் றிஒன் றோர்கி லேன்நான்
- பிறவா நெறிதந் தருள்என் பதென் பேசி டாயே.
- நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள்நல்கி லாய்நீ
- வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
- தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
- மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே.
- மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
- மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
- பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
- நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே.
- ஆனே றிவந்தன் பரைஆட் கொளும்ஐய னேஎம்
- மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
- தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
- தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.
- சீர்தரு வார்புகழ்ப் பேர்தரு வார்அருள் தேன்தருவார்
- ஊர்தரு வார்மதி யுந்தரு வார்கதி யுந்தருவார்
- ஏர்தரு வார்தரு வார்ஒற்றி யூர்எம் இறைவர்அன்றி
- யார்தரு வார்நெஞ்ச மேஇங்கும் அங்கும் இயம்புகவே.
- வாடக்கற் றாய்இஃ தென்னைநெஞ் சேயிசை வாய்ந்தசிந்து
- பாடக்கற் றாய்இலை பொய்வேடம் கட்டிப் படிமிசைக்கூத்
- தாடக்கற் றாய்இலை அந்தோ பொருள்உனக் கார்தருவார்
- நீடக்கற் றார்புகழ் ஒற்றிஎம் மானை நினைஇனியே.
- சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
- பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
- வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
- நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே.
- நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில்கண்டும்
- பாரா தவர்என நிற்பார் உடுத்தது பட்டெனிலோ
- வாரா திருப்பதென் வாரும்என் பார்இந்த வஞ்சகர்பால்
- சேராது நன்னெஞ்ச மேஒற்றி யூரனைச் சேர்விரைந்தே.
- வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த
- தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற
- மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே
- ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே.
- காயார் சரிகைக் கலிங்கம்உண் டேல்இக் கலிங்கங்கண்டால்
- நீயார்நின் பேர்எது நின்ஊர் எதுநின் நிலையெதுநின்
- தாயார்நின் தந்தை எவன்குலம் ஏதென்பர் சாற்றும்அவ்வல்
- வாயார் இடஞ்செலல் நெஞ்சே விடைதர வல்லைஅன்றே.
- எண்சீர்க்20 கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- பெரியபொருள் எவைக்கும்முதற் பெரும்பொருளாம் அரும்பொருளைப் பேசற்கொண்ணாத்
- துரியநிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்குமுள்ள தொன்மை தன்னை
- அரியபரம் பரமான சிதம்பரத்தே நடம்புரியும் அமுதை அந்தோ
- உரியபர கதிஅடைதற் குன்னினையேன் மனனேநீ உய்கு வாயே.
- சொன்னிலைக்கும் பொருணிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர்
- தன்னிலைக்கும் சென்னிலைக்கும் அண்மையதாய் அருள்பழுக்கும் தருவாய் என்றும்
- முன்னிலைக்கும் நின்னிலைக்கும் காண்பதரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த
- நன்னிலைக்கும் நிலையாய பசுபதியை மனனேநீ நவின்றி டாயே.
- மண்முகத்தில் பல்விடய வாதனையால் மனனேநீ வருந்தி அந்தோ
- புண்முகத்தில் சுவைவிரும்பும் எறும்பெனவா ளாநாளைப் போக்கு கின்றாய்
- சண்முகத்தெம் பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பி ரானை
- உண்முகத்தில் கருதிஅநு பவமயமாய் இருக்கிலைநின் உணர்ச்சி என்னே.
- மால்எடுத்துக் கொண்டுகரு மால்ஆகித் திரிந்தும்உளம் மாலாய்ப் பின்னும்
- வால்எடுத்துக் கொண்டுநடந் தணிவிடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீஅக்
- கால்எடுத்துக் கொண்டுசுமந் திடவிரும்பு கிலைஅந்தோ கருதும் வேதம்
- நால்எடுத்துக் கொண்டுமுடி சுமப்பதையும் அறிகிலைநின் நலந்தான் என்னே.
- ஆசிரியத் துறை
- உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
- இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
- திலக வாணுத லார்க்கு ழன்றனை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
- கலக மேகனிந்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே.
- சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
- பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
- வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
- காய்நின்று சந்துரைத்த தார்.
- நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
- கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
- அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
- சந்தோட மோநின் றனக்கு.
- ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
- பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
- வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
- தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
- உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
- பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
- விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
- கொடாதே எனைஏன்று கொள்.
- அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
- என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
- உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
- கடையேன் படுந்துயரைக் கண்டு.
- தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
- தாதாதா என்றுலகில் தான்அலைந்தோம் - போதாதா
- நந்தா மணியே நமச்சிவா யப்பொருளே
- எந்தாய் எனப்புகழ வே.1
- கால்வாங் கியஉட் கதவம் கொளும்அகத்தின்
- பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
- கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
- பெரிதார ஓர்மொழியைப் பேசு.
- 173. இதன் பொருள்: பகுதி, தகுதி, விகுதி என்னும் மூன்று சொற்களின் இடையெழுத்தைஇரட்டித்து அருச்சித்தால் அவற்றின் கடையெழுத்துகள் சேர்ந்த முன்னெழுத்துகள்கிடைக்கும். மூன்று சொற்களிலும் இடையெழுத்து கு. 3கு x 2 = 6கு, அறுகு (அறுகம்புல்).முதலெழுத்துகள் சேரின்: ப, த, வி - பதவி. கடையெழுத்துகள் சேரின்: தி, தி, தி - மூன்றுதி, முக்தி. சிற்சபையானை அறுகால் அருச்சித்தால் முத்திப் பதவி பெறலாம்.
- 174. 'தா தா தா தா தா தா தாக்குறை' என்பதில் தா என்னும் எழுத்து எழுமுறைஅடுக்கி வந்தது. அதனை எழுதாக்குறை என்று படிக்க. ஏழு தா எழுதா. எழுதாக்குறைக்குஎன் செய்குதும் - எமது தலையில் எழுதாத குறைக்கு என்ன செய்வோம்.இரண்டாவது அடியில் 'தா தா தா' என மும்முறை அடுக்கி வந்ததை தாதா, தாஎனப் பிரித்துப் பொருள் கொள்க. தாதா - வள்ளலே, தா - கொடு.
- 568 ஆம் பாடல் காண்க. முதல் அடியில் எழுதாக்குறை. இரண்டாவது அடியில் 'ததிதி' -ஒலிக்குறிப்பு. மூன்றாம் அடியில் 'திதிதி' - முத்தி.இங்கிதமாலையிலும் இவ்வாறு ஒருபாடல் உண்டு. பாடல்1930.குகுகுகுகுகு அணிவேணி - அறுகு அணிந்த சடை .குகுகுகுகுகுகுகு: குகு - அமாவாசை, குகு நான்குமுறை அடுக்கி வந்தது. நாலு குகு என்றுகொண்டு தொடங்கும் இருண்ட கூந்தல் எனப் பொருள் கொள்ளவேண்டும். விரிக்கிற்பெருகும்.
- ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
- ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
- பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
- சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
- சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
- காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
- ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
- நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
- சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
- சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
- தாவி நான்பெரும் பாவி ஆயினன்
- ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
- வல்லி ஆனந்த வல்லி சேர்மண
- வாள னேஅரு ளாள னேமலை
- வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
- புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
- பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
- இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.
- திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
- செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
- மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
- எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
- அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
- துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
- வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
- இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
- ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
- பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
- அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
- இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
- கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
- மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
- பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
- இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.
- செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
- தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
- கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
- கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
- அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
- அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
- படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- வீழாக ஞான்றசெவ் வேணிப் பிரான்என் வினைஇரண்டும்
- கீழாக நான்அதன் மேலாக நெஞ்சக் கிலேசமெல்லாம்
- பாழாக இன்பம் பயிராக வாய்க்கில்அப் பாற்பிறவி
- ஏழாக அன்றிமற் றெட்டாக இங்கென்னை என்செயுமே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- நீடுகின்ற மாமறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை
- நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேடஅருள் நாட்டங் கொண்டு
- பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி ஆநந்தப் படிவ மாகி
- ஆடுகின்ற மாமணியை ஆரமுதை நினைந்துநினைந் தன்பு செய்வாம்.
- நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந் தழுகேனோ நிமலா னந்தக்
- கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந் தழுகேனோ கண்போல் வாய்ந்த
- பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந் தழுகேனோ படிற்று நெஞ்சச்
- சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித் தழுகேன்இத் தமிய னேனே.
- எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
- இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
- விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
- விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான்
- பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
- பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
- கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
- கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
- மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம் உறவுமுதல் மற்றும் நீயே
- பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன் றியான்அறிந்த பின்பொய்யான
- மின்உடற்குத் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ விரும்பி னேனோ
- என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும் அறியேன்நான் இரங்கி டாயே.
- இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில் சிலர்தங்கட் கென்று வாய்த்த
- அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி சிறுதெய்வ மரபென் றோதும்
- கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா திருக்கின்றார் கடைய னேற்கே
- தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ கிடைத்தும்உனைத் தழுவி லேனே.
- வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
- பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
- வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
- தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே.
- பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்தழுந்திப்
- பல்லார் நகைக்கப் பாவிபடும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
- கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
- எல்லாம் உடையீர் மால்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
- தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
- தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
- ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
- அருளார் அமுதே அரசேநின் அடியேன் கொடியேன் முறையேயோ
- இருள்சேர் மனனோ டிடர்உழந்தேன் எந்தாய் இதுதான் முறையேயோ
- மருள்சேர் மடவார் மயலாலே மாழ்கின் றேன்நான் முறையேயோ
- தெருளோர் சிறிதும் அறியாதே திகையா நின்றேன் முறையேயோ.
- ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ
- அழியாக் கருணைக் கடலேஎன் அரசே முறையோ முறையேயோ
- பொழியாப் புயலே அனையார்பால் புகுவித் தனையே முறையேயோ
- இழியாத் திரிதந் துழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ.
- மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே
- நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
- பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன்
- கதிஒளிர் நினது திருவருட் செல்வக் களிப்பையே கருதுகின் றனனே.
- பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
- வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
- நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
- காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே.
- வன்மானங் கரத்தேந்தும் மாமணியே மணிகண்ட மணியே அன்பர்
- நன்மானங் காத்தருளும் அருட்கடலே ஆனந்த நடஞ்செய் வாழ்வே
- பொன்மானம் பினைப்பொருந்தும் அம்பினைவைத் தாண்டருளும் பொருளேநீ இங்
- கென்மானங் காத்தருள வேண்டுதியோ வேண்டாயேல் என்செய்வேனே.
- கலிநிலைத் துறை
- வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
- செய்வம் என்றெழு கின்றமெய்த் திருவருட் செயலும்
- சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
- தெய்வ மென்பதும் என்னள வில்லைஎன் செய்வேன்.
- ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
- அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
- பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
- விழியாய் விழியாய் வினைதூள் படவே.
- வெண்துறை
- உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள் உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
- இலகு வானொளி யாம்மணி மன்றிடை என்றும்நின்றே
- அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும் அம்பொற் சேவடிக் கபயம் என்னையும்
- திலக நீவிழை வாய்நட ராசசி காமணியே.
- இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய் எங்குரு நாதன்எம் பெருமான்
- அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித்
- தெருளுற அருமைத் திருக்கையால் தடவித் திருமணி வாய்மலர்ந் தருகில்
- பொருளுற இருந்தோர் வாக்களித்தென்னுள்புகுந்தனன் புதுமைஈதந்தோ.
- நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
- பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
- ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
- நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே.
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
- புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
- பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
- பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
- மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
- மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
- கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
- கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.
- கட்டளைக் கலிப்பா
- 176. இதன் பொருள் : ஆவி - ஆன்மவக்கரமென்னும், ஈரைந்து - பத்தாகிய யகரத்தை, ஐ - சிவத்திற்கு, அபரத்தே - பின்னாக, வைத்து - பொருத்தி, ஓதில் - செபிக்கில், ஆவியீ ரைந்தை - ஆ என்னும் ஆபத்துகளையும் வி என்னும் விபத்துகளையும், அகற்றலாம் - நீக்கிக் கொள்ளலாம். ஆவி - ஆன்மவியற்கையை, ஈர் - கெடுக்கும், ஐந்து - பஞ்சமலங்களையும், அறலாம் - களைந்து விடலாம், ஆவி - ஆன்மாவுக் குறுதியாய், ஈரைந்து - பத்தியை, உறலாம் - பொருந்தலாம், ஆய்ந்து - சேர்க்கும் வகை தெரிந்து, ஆவி - பிராணனது கலைகள், ஈரைந்து - பத்துடன், ஓர் - ஒரு, இரண்டோடு - இரண்டையுங் கழியாமல், இடலாம் - சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம்.
- - ஆறாம் திருமுறை முதற் பதிப்பு
- இப்பதிகத்துள் கலித்துறைகளும் விரவி நிற்கவும், விருத்தமெனக் குறியிட்டாளப் பட்டமைக் கீண்டு விதியெழுதப் புகின் மிகப் பெருகுமாதலின் விடுக்கப்பட்டது. சைவம் பன்னிரண்டு திருமுறைகளுள் ஆளுடைய வரசாகிய அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருமுறையில் "குலம்பலம்பாவரும்" என்றற் றொடக்கத் திலக்கியங்களாற் கண்டுகொள்க. - தொ. வே.
- next page
- மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
- உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவ னேனும்
- கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
- குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே.
- 185. கருங்குழியில் பெருமான் திருவறையில் தண்ரால் விளக்கெரிந்த அற்புதத்தைக்குறிக்கும் இப்பாடல் பெருமான் சென்னை நண்பர்களுக்கு எழுதிய திருமுகமொன்றன்பாற்பட்டது போலும். பெருமான் கையெழுத்திலுள்ள ஏட்டுச் சுவடியொன்றிலும்காணப்படுவதாக ஆ. பா. குறிக்கிறார். தொ. வே. இதனையும் ' மருவாணைப்பெண்ணாக்கி' என்னும் பாடலையும் இரண்டாந் திருமுறையில் சேர்த்துப்பதிப்பித்துள்ளார்.
- பனகஅணைத் திருநெடுமால் அயன்போற்றப் புலவரெலாம் பரவ ஓங்கும்
- கனகமணி அம்பலத்தே பெரியமருந் தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
- அனகநடத் ததுசச்சி தானந்த வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
- தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- திருநெடுமால் அயன்தேடத் துரியநடு ஒளித்ததெனத் தெளிந்தோர்சொல்லும்
- ஒருகருணை மருந்துதிரு அம்பலத்தே இருந்திடக்கண் டுவந்தேன் அந்தோ
- அருவுருவங் கடந்ததுபே ரானந்த வடிவதுநல் லருள்வாய்ந் துள்ள
- திருமையும்நன் களிப்பதெல்லாம் வல்லதுபேர் நடராசன் என்ப தம்மா.
- ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில்
- அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
- நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின்
- நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
- வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து
- விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
- தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத்
- தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
- பேத மாயதோர் போத வாதமும்
- சுத்த முந்தெறா வித்த முந்தரும்
- சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
- நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
- நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
- சித்த முஞ்செலாப் பரம ராசியம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக்
- கரிசற உணர்ந்து கேட்டுக்
- காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து
- கருநெறி அகன்ற பெரியோர்
- பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு
- புரிபவை எலாம்பு ரிந்துன்
- புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும்
- போதவை எலாம்அ ருளுவாய்
- நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய
- நிறைபவை எலாஞ்செய் நிலையே
- நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும்
- நித்தியா னந்த வடிவே
- அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- இக்கணம்இ ருந்தஇம் மெய்யென்ற பொய்க்கூரை
- இனிவரு கணப்போ திலே
- இடியாதி ருக்குமோ இடியுமோ என்செய்கோம்
- என்செய்கோம் இடியும் எனில்யாம்
- தெக்கணம் நடக்கவரும் அக்கணம் பொல்லாத
- தீக்கணம் இருப்ப தென்றே
- சிந்தைநைந் தயராத வண்ணம்நல் அருள்தந்த
- திகழ் பரம சிவசத்தியே
- எக்கணமும் ஏத்தும்ஒரு முக்கணி பரம்பரை
- இமாசல குமாரி விமலை
- இறைவிபை ரவிஅமலை எனமறைகள் ஏத்திட
- இருந்த ருள்தருந் தேவியே
- அக்கணுதல் எம்பிரான் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
- போகாத நாளும் விடயம்
- புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
- புந்திதள ராத நிலையும்
- எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
- என்றும்மற வாத நெறியும்
- இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
- ஏழையேற் கருள்செய் கண்டாய்
- கொய்யாது குவியாது குமையாது மணம்வீசு
- கோமளத் தெய்வ மலரே
- கோவாத முத்தமே குறையாத மதியமே
- கோடாத மணிவி ளக்கே
- ஐயான னம்கொண்ட தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- சூரிட்ட நடையில்என் போரிட்ட மனதைநான்
- சொல்லிட்ட முடன்அ ணைத்துத்
- துன்றிட்ட மோனம்எனும் நன்றிட்ட அமுதுண்டு
- சும்மா இருத்தி என்றால்
- காரிட்டி தற்குமுன் யாரிட்ட சாபமோ
- கண்டிலேன் அம்மம் மஓர்
- கணமேனும் நில்லாது பொல்லாது புவியில்
- கறங்கெ னச்சுழல் கின்றதே
- தாரிட்ட நீஅருள் சீரிட்டி டாய்எனில்
- தாழ்பிறவி தன்னில் அதுதான்
- தன்னைவீழ்த் துவதன்றி என்னையும் வீழ்த்தும்இத்
- தமிய னேன்என் செய்குவேன்
- ஆறிட்ட சடையாளர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- மாயைஎனும் இரவில்என் மனையகத் தேவிடய
- வாதனைஎ னுங்கள் வர்தாம்
- வந்துமன அடிமையை எழுப்பிஅவ னைத்தமது
- வசமாக உளவு கண்டு
- மேயமதி எனும்ஒரு விளக்கினை அவித்தெனது
- மெய்ந்நிலைச் சாளி கைஎலாம்
- வேறுற உடைத்துள்ள பொருள்எலாம் கொள்ளைகொள
- மிகநடுக் குற்று நினையே
- நேயம்உற ஓவாது கூவுகின் றேன்சற்றும்
- நின்செவிக் கேற இலையோ
- நீதிஇலை யோதரும நெறியும்இலை யோஅருளின்
- நிறைவும்இலை யோஎன் செய்கேன்
- ஆயமறை முடிநின்ற தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
- உற்றிடில் சிறுது ரும்பும்
- உலகம் படைத்தல்முதல் முத்தொழில் இயற்றும்என
- உயர்மறைகள் ஓர்அ னந்தம்
- தெளிவுறமு ழக்கஅது கேட்டுநின் திருவடித்
- தியானம் இல்லா மல்அவமே
- சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
- சேராமை எற்க ருளுவாய்
- களிமருவும் இமயவரை அரையன்மகள் எனவரு
- கருணைதரு கலாப மயிலே
- கருதும்அடி யவர்இதய கமலமலர் மிசைஅருட்
- கலைகி ளரவளர் அன்னமே
- அளிநறைகொள் இதழிவனை தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நீறணிந் தொளிர்அக்க மணிதரித் துயர்சைவ
- நெறிநின்று னக்கு ரியஓர்
- நிமலமுறும் ஐந்தெழுத் துள்நிலையு றக்கொண்டு
- நின்னடிப் பூசை செய்து
- வீறணிந் தென்றும்ஒரு தன்மைபெறு சிவஞான
- வித்தகர்ப தம்பர வும்ஓர்
- மெய்ச்செல்வ வாழ்க்கையில் விருப்பமுடை யேன்இது
- விரைந்தருள வேண்டும் அமுதே
- பேறணிந் தயன்மாலும் இந்திரனும் அறிவரிய
- பெருமையை அணிந்த அமுதே
- பிரசமலர் மகள்கலைசொல் மகள்விசய மகள்முதல்
- பெண்கள்சிரம் மேவும் மணியே
- ஆறணிந் திடுசடையர் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
- நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
- தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
- சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.
- அருள்வடி வான மருந்து - நம்முள்
- அற்புத மாக அமர்ந்த மருந்து
- இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
- கின்புரு வாக இருந்த மருந்து. - நல்ல
- வித்தக மான மருந்து - சதுர்
- வேத முடிவில் விளங்கு மருந்து
- தத்துவா தீத மருந்து - என்னைத்
- தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. - நல்ல
- நானது வாகு மருந்து - பர
- ஞான வெளியில் நடிக்கு மருந்து
- மோந வடிவா மருந்து - சீவன்
- முத்த ருளத்தே முடிக்கு மருந்து. - நல்ல
- கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
- கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
- மாதொரு பாக மருந்து - என்னை
- வாழ்வித்த என்கண் மணியா மருந்து. - நல்ல
- ஏக வுருவா மருந்து - மிக்க
- ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
- சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
- சோதியென் றன்பர் துதிக்கு மருந்து. - நல்ல
- கோமளங் கூடு மருந்து - நலங்
- கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
- நாமள வாத மருந்து - நம்மை
- நாமறி யும்படி நண்ணு மருந்து. - நல்ல
- வாய்பிடி யாத மருந்து - மத
- வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
- நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
- நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து. - நல்ல
- பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
- பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
- மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
- வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. - நல்ல
- மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை
- மறவா தவருள் வழங்கு மருந்து
- இறந்தா லெழுப்பு மருந்து - எனக்
- கென்றுந் துணையா யிருக்கு மருந்து. - நல்ல
- ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக
- ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே.
- இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
- மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.
- உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப
- உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே.
- ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில்
- உத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே.
- கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன்
- கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமா ரே.
- கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
- கைவிடவுந் துணிவாரோ பாங்கிமா ரே.
- கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று
- கைநழுவ விடுவாரோ பாங்கிமா ரே.
- காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன்
- காதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே.
- காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு
- காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே.
- குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
- கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே.
- இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
- இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
- ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
- ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
- அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
- ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
- நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
- ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
- வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
- வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
- அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
- ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
- நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
- நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
- பாடிக் கொம்மிய டியுங்க டி. - கொம்மி
- காம மகற்றிய தூய னடி - சிவ
- காம சவுந்தரி நேய னடி
- மாமறை யோதுசெவ் வாய னடி - மணி
- மன்றெனு ஞானவா காய னடி. - கொம்மி
- ஆனந்தத் தாண்டவ ராஜ னடி - நமை
- ஆட்கொண் டருளிய தேஜ னடி
- வானந்த மாமலை மங்கை மகிழ் - வடி
- வாளன டிமண வாள னடி. - கொம்மி
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
- கற்பூர வாசம்வீசும் பொற்பாந்தி ருமுகத்தே
- கனிந்தபுன் னகையாடக் கருணைக்க டைக்கணாட
- அற்பார்பொன் னம்பலத்தே ஆனந்தத் தாண்டவம்
- ஆடிக்கொண் டேயென்னை ஆட்டங்கண் டாருக்கு தெண்ட
- இழிந்தாலு நம்மையிங்கே யேற்றுவா ரென்றடைந்தால்
- ஏற்றுவார் போலேபின்னு மிழியவைப் பாருக்குப்
- பழந்தான் நழுவிமெல்லப் பாலில் விழுந்ததென்னப்
- பசப்பிப் பசப்பியன்பர் பண்டம் பறிப்பவர்க்குதெண்ட
- சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
- தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
- பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
- பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடருக்கு தெண்ட
- வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய் பவருக்கு
- மாசுபறித் தவர்கையிற் காசுபறிக் கின்றவர்க்குத்
- தாழ்ந்தாரை யடிக்கடி தாழக்காண் பவருக்குத்
- தானாகி நானாகித் தனியேநின் றவருக்குதெண்ட
- ஆதியந்த நடுவில்லா ஆனந்த நாடருக்கு
- அண்டருயிர் காத்தமணி கண்டசசி கண்டருக்குச்
- சோதிமய மாய்விளங்குந் தூயவடி வாளருக்குத்
- தொண்டர்குடி கெடுக்கவே துஜங்கட்டிக் கொண்டவர்க்கு தெண்ட
- பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ப்
- பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
- வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
- வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு தெண்ட
- தாய்வறிற்றிற் பிறவாது தானே முளைத்தவர்க்குச்
- சாதிகுல மறியாது தாண்டவஞ்செய் கின்றவர்க்கு
- ஏய தொழிலருளு மென்பிராண நாயகர்க்கு
- ஏமாந்த வரையெல்லாம் ஏமாத்து மீசருக்கு
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி - சு வாமிக்குநான்
- தெண்டனிட்டே னென்று சொல்ல டி.
- கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்
- குருவே - குருவே - குருவேயென் றலறவும்
- ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
- ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
- மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
- நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
- அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
- திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.
- திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
- மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
- இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
- வெருவிஉட் குழைவாள் விழிகர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே.
- ஓடுவாள் தில்லைத் திருச்சிற்றம் பலம்என் றுருகுவாள் உணர்விலள் ஆகித்
- தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
- பாடுவாள்பதைப்பாள் பதறுவாள்நான்பெண்பாவிகாண்பாவிகாண்என்பாள்
- வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்வினை யேன்பெற்ற மகளே.
- உலகெலாந் தழைப்பப்பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என்கின்றாள்
- இலகுபே ரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள்
- அலகிலாக் கருணை அமுதன்என் கின்றாள் அன்பர்கட்கன்பன்என் கின்றாள்
- திலகவா ணுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே.
- திருத்தகு தில்லைத் திருச்சிற்றம்பலத்தே தெய்வம்ஒன் றுண்டெமக்கென்பாள்
- பெருத்தகுங் குமப்பொற் கலசவாண் முலையார் பேசுக பலபல என்பாள்
- மருத்தகு குழலாள் மனமொழி உடலம் மற்றவும் அவன்கழற் கென்பாள்
- குருத்தகு குவளைக் கண்ணின்நீர் கொழிப்பாள் குதுகுலிப் பாள்பசுங் கொடியே.
- அம்பலத் தாடும் அழகனைக் காணா தருந்தவும் பொருந்துமோ என்பாள்
- கம்பமுற் றிடுவாள் கண்கள்நீர் உகுப்பாள் கைகுவிப் பாள்உளங் கனிவாள்
- வம்பணி முலைகள் இரண்டும்நோக் கிடுவாள் வள்ளலைப்பரிகிலீர் என்பாள்
- உம்பரன் தவஞ்செய் திடுமினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே.
- சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
- வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
- மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
- அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- சீத்தமணி அம்பலத்தான் என்பிராண நாதன்
- சிவபெருமான் எம்பெருமான் செல்வநட ராஜன்
- வாய்த்தஎன்னை அறியாத இளம்பருவந் தனிலே
- மகிழ்ந்துவந்து மாலையிட்டான் மறித்தும்முகம் பாரான்
- ஆய்த்தகலை கற்றுணர்ந்த அணங்கனையார் தமக்குள்
- ஆர்செய்த போதனையோ ஆனாலும் இதுகேள்
- காய்த்தமரம் வளையாத கணக்கும்உண்டோ அவன்றன்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று
- திருநடஞ்செய் பெருங்ருணைச் செல்வநட ராஜன்
- என்மயம்நான் அறியாத இளம்பருவந் தனிலே
- என்னைமணம் புரிந்தனன்ஈ தெல்லாரும் அறிவார்
- இன்மயம்இல் லாதவர்போல் இன்றுமணந் தருளான்
- இறைஅளவும் பிழைபுரிந்தேன் இல்லைஅவன் இதயம்
- கன்மயமோ அன்றுசுவைக் கனிமயமே என்னும்
- கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- பொய்யாத புகழுடையான் பொதுவில்நடம் புரிவான்
- புண்ணியர்பால் நண்ணியநற் புனிதநட ராஜன்
- கொய்யாத அரும்பனைய இளம்பருவந் தனிலே
- குறித்துமணம் புரிந்தனன்நான் மறித்தும்வரக் காணேன்
- செய்யாத செய்கைஒன்றும் செய்தறியேன் சிறிதும்
- திருவுளமே அறியும்மற்றென் ஒருஉளத்தின் செயல்கள்
- நையாத என்றன்உயிர் நாதன்அருட் பெருமை
- நானறிந்தும் விடுவேனோ நவிலாய்என் தோழீ.
- கண்ணனையான் என்னுயிரில் கலந்துநின்ற கணவன்
- கணக்கறிவான் பிணக்கறியான் கருணைநட ராஜன்
- தண்ணனையாம் இளம்பருவந் தன்னில்எனைத் தனித்துத்
- தானேவந் தருள்புரிந்து தனிமாலை புனைந்தான்
- பெண்ணனையார் கண்டபடி பேசவும்நான் கூசாப்
- பெருமையொடும் இருந்தேன்என் அருமைஎலாம் அறிந்தான்
- உண்ணனையா வகைவரவு தாழ்த்தனன்இன் றவன்றன்
- உளம்அறிந்தும் விடுவேனோ உரையாய்என் தோழீ.
- தனித்தபர நாதமுடித் தலத்தின்மிசைத் தலத்தே
- தலைவரெலாம் வணங்கநின்ற தலைவன்நட ராசன்
- இனித்தசுகம் அறிந்துகொளா இளம்பருவந் தனிலே
- என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை
- அனித்தம்இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ
- அவன்அறிவான் நான்அறிவேன் அயலறிவார் உளரோ
- துனித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில்
- சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழீ.
- 183. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு 26-11-1866 இல் வரைந்த திருமுகத்தில் 'விண்படைத்த பொழிற்றில்லை அம்பலத்தான் எவர்க்கு மேலானா னன்பருள மேவு நடராஜன் எனல் வேண்டும் ' என வள்ளற்பெருமான் திருத்தமொன்றை அருளியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, ஊரன் அடிகள் பதிப்பு பக்கம், 399 காண்க. எனினும் 1867 தொ. வே. முதற் பதிப்பில் ' விண்படைத்த புகழ்த்தில்லை ' என்றே அச்சாகியுள்ளது. பின்வந்த பதிப்புகளிலும் அவ்வாறே. ஆ. பா. மட்டும் பெருமானின் திருத்தத்தைப் பின்பற்றி ' விண் படைத்த பொழிற்றில்லை ' எனப் பதிப்பித்துள்ளார்.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- மிகுத்துரைத்தேன் பிழைகளெலாம் சகித்தருளல் வேண்டும்
- மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய்
- தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத்
- துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே
- பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும்
- பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
- வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே.
- முன்னவனே சிறியேன்நான் சிறிதும்அறி யாதே
- முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்
- என்னவனே என்துணையே என்உறவே என்னை
- ஈன்றவனே என்தாயே என்குருவே எனது
- மன்னவனே என்னுடைய வாழ்முதலே என்கண்
- மாமணியே மணிமிடற்றோர் மாணிக்க மலையே
- அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே
- ஆறணிந்த சடையாய்யான் வேறுதுணை இலனே.
- ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ
- உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
- வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்
- மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
- கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே
- குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
- நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே
- நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே.
- என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன்
- என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே
- பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ
- பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன்
- அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய்
- அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய்
- மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை
- மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே.
- எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே
- என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே
- மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது
- மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே
- கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது
- கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல்
- குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர்
- கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே.
- சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை
- ஊரா ருடன்சென் றெனதுநெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண்
- வாரார் முலைகண் மலைகளென வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
- ஏரார் குழலாய் என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத்
- தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
- வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சேர்ந்ததுடன்
- ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே.
- வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
- நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
- நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
- மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
- தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
- ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
- ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
- தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
- பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
- ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
- வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
- நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
- கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
- முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
- நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
- பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
- சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
- தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
- தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
- ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.
- நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார்
- மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட
- அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன்
- குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
- வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
- ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
- கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வானும் புவியும் புகழ்ஒற்றி வாணர் மலர்க்கை மழுவினொடு
- மானும் உடையார் என்றனக்கு மாலை யிட்ட தொன்றல்லால்
- நானும் அவருங் கூடியொரு நாளும் கலந்த தில்லையடி
- கோனுந் தியவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை
- வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது
- மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்
- குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
- தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
- என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
- கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
- பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
- வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
- கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
- சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
- கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி
- கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும்
- எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
- உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார்
- கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- இறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர்
- மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
- பொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி
- குறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார்
- மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக்
- கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர்
- கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- எருதில் வருவார் ஒற்றியுளார் என்நா யகனார் எனக்கினியார்
- வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
- கருதி அவர்தங் கட்டளையைக் கடந்து நடந்தேன் அல்லவடி
- குருகுண் கரத்தாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
- வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
- ஆவென் றலறிக் கண்ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
- கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நாட்டும் புகழார் திருஒற்றி நகர்வாழ் சிவனார் நன்மையெலாம்
- காட்டும் படிக்கு மாலையிட்ட கணவர் எனஓர் காசளவில்
- கேட்டும் அறியேன் தந்தறியார் கேட்டால் என்ன விளையுமடி
- கோட்டு மணிப்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வாடா திருந்தேன் மழைபொழியும் மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார்
- ஏடார் அணிபூ மாலைஎனக் கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
- தேடா திருந்தேன் அல்லடியான் தேடி அருகிற் சேர்ந்தும்எனைக்
- கூடா திருந்தார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
- வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
- நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
- குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர்
- வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து
- சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
- கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- சால மாலும் மேலும்இடந் தாலும் அறியாத் தழல்உருவார்
- சேலும் புனலும் சூழ்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- பாலுந் தேனுங் கலந்ததெனப் பவனி வந்தார் என்றனர்யான்
- மேலுங் கேட்கு முன்னமனம் விட்டங் கவர்முன் சென்றதுவே.
- பின்தாழ் சடையார் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார்
- மன்றார் நடத்தார் ஒற்றிதனில் வந்தார் பவனி என்றார்நான்
- நன்றாத் துகிலைத் திருத்துமுனம் நலஞ்சேர் கொன்றை நளிர்ப்பூவின்
- மென்தார் வாங்க மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- ஈமப் புறங்காட் டெரியாடும் எழிலார் தில்லை இனிதமர்வார்
- சேமப் புலவர் தொழும்ஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாமப் பாவை யொடும்பவனி வந்தார் என்றார் அதுகாண்பான்
- காமப் பறவை போல்என்மனம் கடுகி அவர்முன் சென்றதுவே.
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- கச்சை யிடுவார் படவரவைக் கண்மூன் றுடையார் வாமத்திற்
- பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் பரிந்தென் மனையிற் பலிக்குற்றார்
- இச்சை யிடுவா ருண்டியென்றா ருண்டே னென்றே னெனக்கின்று
- பிச்சை யிடுவா யென்றார்நான் பிச்சை யடுவே னென்றேனே.
- கருதற் கரியார் கரியார்முன் காணக் கிடையாக் கழலடியார்
- மருதத் துறைவார் திருவொற்றி வாண ரின்றென் மனைக்குற்றார்
- தருதற் கென்பா லின்றுவந்தீ ரென்றே னதுநீ தானென்றார்
- வருதற் குரியீர் வாருமென்றேன் வந்தே னென்று மறைந்தாரே.
- கல்லை வளைக்கும் பெருமானார் கழிசூ ழொற்றிக் கடிநகரார்
- எல்லை வளைக்குந் தில்லையுள்ளா ரென்றன் மனைக்குப் பலிக்குற்றார்
- அல்லை வளைக்குங் குழலன்ன மன்பி னுதவா விடிலோபம்
- இல்லை வளைக்கு மென்றார்நா னில்லை வளைக்கு மென்றேனே.
- விண்டங் கமரர் துயர்தவிர்க்கும் வேற்கை மகனை விரும்பிநின்றோர்
- வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி வதிவா ரென்றன் மனையடைந்தார்
- தண்டங் கழற்கு நிகரானீர் தண்டங் கழற்கென் றேன்மொழியாற்
- கண்டங் கறுத்தா யென்றார்நீர் கண்டங் கறுத்தீ ரென்றேனே.
- விற்கண் டாத நுதன்மடவாள் வேட்ட நடன வித்தகனார்
- சொற்கண் டாத புகழொற்றித் தூய ரின்றென் மனைபுகுந்தார்
- நிற்கண் டார்கண் மயலடைவா ரென்றார் நீர்தா நிகழ்த்தியசொற்
- கற்கண் டாமென் றுரைத்தேனான் கற்கண் டாமென் றுரைத்தாரே.
- சொல்லா லியன்ற தொடைபுனைவார் தூயா ரொற்றித் தொன்னகரார்
- அல்லா லியன்ற மனத்தார்பா லணுகா ரென்றென் மனைபுகுந்தார்
- வல்லா லியன்ற முலையென்றார் வல்லார் நீரென் றேனுன்சொற்
- கல்லா லியன்ற தென்றார்முன் கல்லா லியன்ற தென்றேனே.
- இருந்தார் திருவா ரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில்
- பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்கண்
- விருந்தார் திருந்தார் புரமுன்தீ விளைத்தார் ஒற்றி நகர்கிளைத்தார்
- தருந்தார் காம மருந்தார்இத் தரணி இடத்தே தருவாரே.
- தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார்
- மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார்
- திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார்
- வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே.
- இலமே செறித்தார் தாயர்இனி என்செய் குவதென் றிருந்தேற்கு
- நலமே தருவார் போல்வந்தென் நலமே கொண்டு நழுவினர்காண்
- உலமே அனைய திருத்தோளார் ஒற்றித் தியாகப் பெருமானார்
- வலமே வலம்என்அ வலம்அவலம் மாதே இனிஎன் வழுத்துவதே.
- பாரா திருந்தார் தமதுமுகம் பார்த்து வருந்தும் பாவைதனைச்
- சேரா திருந்தார் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார்
- வாரா திருந்தார் இன்னும்இவள் வருத்தங் கேட்டும் மாலைதனைத்
- தாரா திருந்தார் சலமகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.
- வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் வளஞ்சேர் ஒற்றி மன்னவனார்
- தருந்தேன் அமுதம் உண்டென்றும் சலிய வாழ்வில் தருக்கிமகிழ்ந்
- திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் என்றும் புணர்ச்சிக் கேதுவிதாம்
- மருந்தேன் மையற் பெருநோயை மறந்தேன் அவரை மறந்திலனே.
- பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார் பேயோ டாடிப் பவுரிகொண்டார்
- பத்தர் தமக்குப் பணிசெய்வார் பணியே பணியாப் பரிவுற்றார்
- சித்தர் திருவாழ் ஒற்றியினார் தியாகர் என்றுன் கலைகவர்ந்த
- எத்தர் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- உரப்பார் மிசையில் பூச்சூட ஒட்டார் சடைமேல் ஒருபெண்ணைக்
- கரப்பார் மலர்தூ வியமதனைக் கண்ணால் சுட்டார் கல்எறிந்தோன்
- வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க வைத்தார் பலிக்கு மனைதொறும்போய்
- இரப்பார் அன்றோ மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் உறவொன் றில்லார் பகைஇல்லார்
- பேரும் இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சில்லார்
- நேரும் இல்லார் தாய்தந்தை நேயர் தம்மோ டுடன்பிறந்தோர்
- யாரும் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தங்கு மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார்புனைவார்
- துங்கும் அருட்கார் முகில்அனையார் சொல்லும் நமது சொற்கேட்டே
- இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எல்லாம் இயல்பில் தாம்உணர்ந்தே
- எங்கும் இருப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- துத்திப் படத்தார் சடைத்தலையார் தொலையாப் பலிதேர் தொன்மையினார்
- முத்திக் குடையார் மண்எடுப்பார் மொத்துண் டுழல்வார் மொய்கழற்காம்
- புத்திக் குரிய பத்தர்கள்தம் பொருளை உடலை யாவையுமே
- எத்திப் பறிப்பார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும்
- வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை
- கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ
- டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- தேனார் கமலத் தடஞ்சூழும் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி
- தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது
- கானார் அலங்கற் பெண்ணேநான் கண்கள் உறக்கங் கொள்ளேனே.
- சேவார் கொடியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- பூவார் கொன்றைப் புயங்கள்மனம் புணரப் புணர வரும்பவனி
- ஓவாக் களிப்போ டகங்குளிர உடலங் குளிரக் கண்டலது
- பாவார் குதலைப் பெண்ணேநான் பரிந்து நீரும் பருகேனே.
- சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- உற்றங் குவந்தோர் வினைகளெலாம் ஓட நாடி வரும்பவனி
- சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின்அலது
- முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் முடிக்கோர் மலரும் முடியேனே.
- சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழுஞ் செல்வத் தியாகர்அவர்
- சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி
- முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது
- கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்ர் ஒழியக் காணேனே.
- தென்னஞ் சோலை வளர்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் பிறங்கா நிற்க வரும்பவனி
- மன்னுங் கரங்கள் தலைகுவித்து வணங்கி வாழ்த்திக் கண்டலது
- துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் சோறெள் ளளவும் உண்ணேனே.
- சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி யூர்வாழ் செல்வத் தியாகர்அவர்
- வந்தார் கண்டார் அவர்மனத்தை வாங்கிப் போக வரும்பவனி
- நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டலது
- பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் பாடல் ஆடல் பயிலேனே.
- செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் சேருஞ் செல்வத் தியாகர்அவர்
- மிக்கற் புதவாண் முகத்தினகை விளங்க விரும்பி வரும்பவனி
- மக்கட் பிறவி எடுத்தபயன் வசிக்க வணங்கிக் கண்டலது
- நக்கற் கியைந்த பெண்ணேநான் ஞாலத் தெவையும் நயவேனே.
- மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
- வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
- நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
- கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
- மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
- கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
- குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
- மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
- வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
- கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
- மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
- பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
- கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
- கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
- வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
- கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
- வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
- கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
- கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
- சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
- காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
- கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார்
- வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே
- எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித்
- தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பொய்யர் உளத்துப் புகுந்தறியார் போத னொடுமால் காண்பரிதாம்
- ஐயர் திருவாழ் ஒற்றிநகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே
- வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
- செய்ய முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- என்ஆ ருயிர்க்கோர் துணையானார் என்ஆண் டவனார் என்னுடையார்
- பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே
- ஒன்னார் எனவே தாயும்எனை ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன்
- தென்னார் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாணி உயிர்காத் தந்தகனை மறுத்தார் ஒற்றி மாநகரார்
- காணி உடையார் உலகுடையார் கனிவாய் இன்னுங் கலந்திலரே
- பேணி வாழாப் பெண்எனவே பெண்க ளெல்லாம் பேசுகின்றார்
- சேணின் றிழிந்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ
- இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே
- புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன்
- தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- எட்டிக் கனியும் மாங்கனிபோல் இனிக்க உரைக்கும் இன்சொலினார்
- தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே
- மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் வழியே பழிசெல் வழிஅன்றோ
- தெட்டிற் பொலியும் விழியாய்நான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- மாலும் அறியான் அயன்அறியான் மறையும் அறியா வானவர்எக்
- காலும் அறியார் ஒற்றிநிற்குங் கள்வர் அவரைக் கண்டிலனே
- கோலும் மகளிர் அலர்ஒன்றோ கோடா கோடி என்பதல்லால்
- சேலுண் விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உந்து மருத்தோ டைம்பூதம் ஆனார் ஒற்றி யூர்அமர்ந்தார்
- இந்து மிருத்தும் சடைத்தலையார் என்பால் இன்னும் எய்திலரே
- சந்து பொறுத்து வார்அறியேன் தமிய ளாகத் தளர்கின்றேன்
- சிந்துற் பவத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயா றுடையார் அன்பர்களோ(டு)
- ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே
- வாடல் எனவே எனைத்தேற்று வாரை அறியேன் வாய்ந்தவரைத்
- தேடல் அறியேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் பவமும் அறுப்பார் அவம்அறுப்பார்
- கோவம் அறுப்பார் ஒற்றியில்என் கொழுநர் இன்னும் கூடிலரே
- தூவ மதன்ஐங் கணைமாதர் தூறு தூவத் துயர்கின்றேன்
- தேவ மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
- செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
- செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத் துறைகின்றோர்
- கானம் உடையார் நாடுடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
- மானம் உடையார் எம்முறவோர் வாழா மைக்கே வருந்துகின்றார்
- தீனம் அடையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வாக்குக் கடங்காப் புகழுடையார் வல்லார் ஒற்றி மாநகரார்
- நோக்குக் கடங்கா அழகுடையார் நோக்கி என்னை அணைந்திலரே
- ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் உயிர்மேல் மாறேற் றுரப்பொலிகாண்
- தேக்கங் குழலாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால்
- வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே
- கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல்
- திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய்
- உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- எற்றென் றுரைப்பேன் செவிலி அவள் ஏறாமட்டும் ஏறுகின்றாள்
- செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- போக முடையார் பெரும்பற்றப் புலியூர் உடையார் போதசிவ
- யோக முடையார் வளர்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில்ஒழியா
- தேகம் அயர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார்
- ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே
- காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார்
- சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங் காட்டார் அரசிலியார்
- ஊரூர் புகழும் திருஒற்றி யூரார் இன்னும் உற்றிலரே
- வாரூர் முலைகள் இடைவருத்த மனநொந் தயர்வ தன்றிஇனிச்
- சீரூர் அணங்கே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- சங்கக் குழையார் சடைமுடியார் சதுரர் மறையின் தலைநடிப்பார்
- செங்கட் பணியார் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- மங்கைப் பருவம் மணமில்லா மலர்போல் ஒழிய வாடுகின்றேன்
- திங்கள் முகத்தாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார்
- அந்தி நிறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ
- புந்தி இலள்என் றணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன்
- சிந்தை மகிழக் குறமடவாய் தெரிந்தோர் குறிதான் செப்புவையே.
- தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார்
- ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ
- மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ
- கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே.
- ஆழி விடையார் அருளுடையார் அளவிட் டறியா அழகுடையார்
- ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம்வாழ் உத்தமனார்
- வாழி என்பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ
- தோழி அனைய குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- அணியார் அடியார்க் கயன்முதலாம் அமரர்க் கெல்லாம் அரியர்என்பாம்
- பணியார் ஒற்றிப் பதிஉடையார் பரிந்தென் முகந்தான் பார்ப்பாரோ
- தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ
- குணியா எழில்சேர் குறமடவாய் குறிதான் ஒன்றும் கூறுவையே.
- பொன்னார் புயத்துப் போர்விடையார் புல்லர் மனத்துட் போகாதார்
- ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் ஒற்றி எனும்ஓர் ஊர்அமர்ந்தார்
- என்னா யகனார் எனைமருவல் இன்றோ நாளை யோஅறியேன்
- மின்னார் மருங்குல் குறமடவாய் விரைந்தோர் குறிநீ விளம்புவையே.
- பாலிற் றெளிந்த திருநீற்றர் பாவ நாசர் பண்டரங்கர்
- ஆலிற் றெளிய நால்வர்களுக் கருளுந் தெருளர் ஒற்றியினார்
- மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ
- சேலிற் றெளிகட் குறப்பாவாய் தெரிந்தோர் குறிநீ செப்புகவே.
- நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீலகண்டர்
- ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என்கணவர்
- பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ
- வருத்தந் தவிரக் குறப்பாவாய் மகிழ்ந்தோர் குறிதான் வழுத்துவையே.
- கமலன் திருமால் ஆதியர்கள் கனவி னிடத்துங் காண்பரியார்
- விமலர் திருவாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார்
- அமலர் அவர்தாம் என்மனைக்கின் றணைகு வாரோ அணையாரோ
- தமல மகன்ற குறப்பாவாய் தனித்தோர் குறிதான் சாற்றுவையே.
- வன்னி இதழி மலர்ச்சடையார் வன்னி எனஓர் வடிவுடையார்
- உன்னி உருகும் அவர்க்கெளியார் ஒற்றி நகர்வாழ் உத்தமனார்
- கன்னி அழித்தார் தமைநானுங் கலப்பேன் கொல்லோ கலவேனோ
- துன்னி மலைவாழ் குறமடவாய் துணிந்தோர் குறிநீ சொல்லுவையே.
- கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார்
- பொற்றைப் பெருவிற் படைஉடையார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ
- சுற்றுங் கருங்கட் குறமடவாய் சூழ்ந்தோர் குறிநீ சொல்லுவையே.
- அரவக் கழலார் கருங்களத்தார் அஞ்சைக் களத்தார் அரிபிரமர்
- பரவப் படுவார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர்
- இரவு வருமுன் வருவாரோ என்னை அணைதற் கிசைவாரோ
- குரவ மணக்குங் குறமடவாய் குறிநீ ஒன்று கூறுவையே.
- பூணா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம்
- ஊணா உவந்தார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உண்மைசொலி
- நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே
- காணா தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- ஓட்டில் இரந்துண் டொற்றியிடை உற்றார் உலகத் துயிரைஎலாம்
- ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளிய ளாம்எனவே
- ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என்முன்உருக்
- காட்டி மறைத்தார் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி
- வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை
- உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக்
- கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார்
- சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர்
- பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன்
- கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே.
- மந்தா கினிவான் மதிமத்தம் மருவும் சடையார் மாசடையார்
- நுந்தா விளக்கின் சுடர்அனையார் நோவ நுதலார் கண்நுதலார்
- உந்தா ஒலிக்கும் ஓதமலி ஒற்றி யூரில் உற்றெனக்குத்
- தந்தார் மையல் என்னோஎன் சகியே இனிநான் சகியேனே.
- பூமேல் அவனும் மால்அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார்
- சேமேல் வருவார் திருஒற்றித் தியாகர் அவர்தம் திருப்புயத்தைத்
- தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன்கைத்
- தாமேல் அழற்பூத் தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- கருணைக் கொருநேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழலடியார்
- அருணைப் பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவா வடுதுறையார்
- இருணச் சியமா மணிகண்டர் எழிலார் ஒற்றி இறைவர்இந்தத்
- தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே.
- எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை எற்றிவைத்தோர்
- திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திருவாழ் ஒற்றியினார்
- அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் அணைத்தார் அல்லர் எனைமடவார்
- தங்கள் அலரோ தாழாதென் சகியே இனிநான் சகியேனே.
- மலஞ்சா திக்கும் மக்கள்தமை மருவார் மருவார் மதில்அழித்தார்
- வலஞ்சா திக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்ப்பதத்தார்
- நிலஞ்சா திக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல்
- சலஞ்சா தித்தார் என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே.
- தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திருக்கூத்தர்
- தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் செய்வார் ஒற்றித் தியாகர்அவர்
- சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத் தேடி வரும்அத் தீமதியம்
- சார்ந்தால் அதுதான் என்செயுமோ சகியே இனிநான் சகியேனே.
- பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
- மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
- இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
- வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
- இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
- வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
- எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
- மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
- என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
- மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- கல்லும் மரமும் ஆனந்தக் கண்ர் கொண்டு கண்டதெனில்
- எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
- ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
- யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
- வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி
- இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
- வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
- நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
- எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- மாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
- வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்
- யாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
- ஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
- பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார்
- முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர்
- இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ
- உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார்
- புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம்
- தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த
- ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
- தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார்
- களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ
- ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார்
- பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ
- உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார்
- மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில்
- வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ
- உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச்
- சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும்
- பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ
- ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
- வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
- கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
- உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
- அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
- உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
- இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார்
- திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில்
- பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ
- இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ
- கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ
- இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர்
- தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால்
- படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ
- இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே.
- திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர்
- எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால்
- உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ
- இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர்
- மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே
- ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே
- ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர்
- யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே
- ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண்
- ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும்
- உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித்
- தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ
- எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும்
- ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ
- நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ
- ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
- வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
- கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
- எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும்
- ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும்
- நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும்
- கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும்
- தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும்
- ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும்
- காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும்
- ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும்
- வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும்
- கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும்
- ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
- தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும்
- கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும்
- சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும்
- மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும்
- காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்
- அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
- படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும்
- கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே.
- ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால்
- மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான்
- நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல்
- ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார்
- போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல்
- சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி
- ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என்
- கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர்
- நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள
- எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
- வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
- சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
- யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார்
- சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான்
- தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல்
- ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ்
- தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால்
- ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும்
- இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய்
- மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என்
- அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல்
- இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே
- நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான்
- இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும்
- இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ.
- மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார்
- சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர்
- பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற்
- கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும்
- ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என்
- பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே
- ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத்
- துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே
- பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண
- நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து
- பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக்
- கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு
- பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண
- அடையா மகிழ்வி னொடும்வந்தால் அம்மா நமது விடயமெலாம்
- படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம்
- உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.
- ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
- ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
- மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
- வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
- நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
- நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
- வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
- விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
- திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
- செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
- கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
- கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
- பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
- பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
- வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
- மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.
- குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
- குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
- என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
- எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
- பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
- பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
- அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
- ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
- இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
- வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
- மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
- தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
- தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
- ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
- உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
- ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
- செஞ்சொலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
- திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
- எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
- இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
- துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
- துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
- நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
- நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
- தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
- தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
- தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
- சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
- வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
- மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
- அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
- காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
- கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
- பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
- போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
- நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
- நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
- இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
- எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
- உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
- உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
- மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
- வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
- குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
- கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.
- சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
- தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
- புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
- புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
- பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
- பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
- தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
- தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
- ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
- தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
- மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
- விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
- பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
- புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
- துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
- சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
- அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
- தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
- செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
- மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
- மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
- இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
- என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
- அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கவந் திறப்பித்
- தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
- மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
- வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
- ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
- இன்றதுதான் அனுபவித்துக் கிசைந்ததுநா யடியேன்
- என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே.
- இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
- தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
- சுரவிடைநெஞ் சயர்ந்திளைத்துக் கலங்காதே இதனைக்
- களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
- உரவிடைஇங் குறைமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
- உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
- அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
- ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
- இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக்
- கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
- கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து
- மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
- மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
- புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன்
- பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே.
- ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
- உற்றஇடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
- மருநாள மலரடிஒன்றுள்ளகத்தே பெயர்த்து
- வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
- தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
- தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
- வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
- மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
- நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
- நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
- தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
- தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
- கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
- கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
- கொடுமாலை விடுத்துமகிர் எனத்திருவாய் மலர்ந்தாய்
- குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.
- அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
- அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
- வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
- மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
- துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
- தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
- என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
- என்உயிருக் குயிராகி இலங்கிசற் குருவே.
- ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
- நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
- காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
- கலங்காதே என்றெனது கையில்ஒன்று கொடுத்துச்
- சிலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
- சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
- ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
- அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
- கன்மயமுங் கனிவிக்குந் திருவடிகள் வருந்தக்
- கடைப்புலையேன் இருக்குமிடந் தனைத்தேடி நடந்து
- தொன்மயமாம் இரவினிடைக் கதவுதிறப் பித்துத்
- துணிந்தழைத்தென் கைதனிலே தூயஒன்றை யளித்து
- வன்மயமில் லாமனத்தால் வாழ்கஎன உரைத்த
- மாமணிநின் திருவருளின் வண்மையைஎன் என்பேன்
- தன்மயமே சின்மயப்பொன் அம்பலத்தே இன்பத்
- தனிநடஞ்செய் தருளுகின்ற தத்துவப்பே ரொளியே.
- பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
- பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
- கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
- கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
- சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
- தாங்குஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
- மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
- மன்றுடையாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
- ஒங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- உபயவடி வாகியநின் அபயபதம் வருந்த
- ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
- பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
- ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
- அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.
- அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
- அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
- கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
- உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
- உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
- பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
- நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
- நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
- ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
- அணிக்கதவந் திறப்பித்துள் என்பொடெனை அழைத்து
- வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
- வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
- கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
- கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
- சத்தஒரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
- தனிநடஞ்செய் தருளும்அடித் தாமரைகள் வருந்த
- சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
- மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
- மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
- சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
- சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.
- பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
- பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
- சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
- தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
- அலகோடி வருந்தேல்இங் கமர்கஎனத் திருவாய்
- அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
- விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
- விரைந்தோடச் செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
- விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
- விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
- துளங்குசிறி யேன்இருக்கும் இடந்தேடி நடந்து
- தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
- களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
- களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
- குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
- குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
- மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
- வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
- ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
- தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
- தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
- தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
- கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
- கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
- மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்
- மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
- சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்
- செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
- மாதானத் தவர்சூ‘ வாழ்கஎன உரைத்தாய்
- மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
- ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே
- ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே.
- ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில்
- ஒளிநடஞ்செய் தருளுகின்ற உபயபதம் வருந்த
- அருமையிலே நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்தே
- அணிக்கதவந் திறப்பித்தென் அங்கையில்ஒன் றளித்துப்
- பெருமையிலே பிறங்குகநீ எனத்திருவாய் மலர்ந்த
- பெருங்கருணைக் கடலேநின் பெற்றியைஎன் என்பேன்
- கருமையிலே நெடுங்காலங் கலந்துகலக் குற்ற
- கலக்கமெலாந் தவிர்த்தெம்மைக் காத்தருளும் பதியே.
- மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்
- முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
- யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே
- எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
- தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
- பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்
- புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே.
- கற்றவர்தம் கருத்தினின்முக் கனிரசம்போல் இனிக்கும்
- கழலடிகள் வருந்தியிடக் கடிதுநடந் திரவில்
- மற்றவர்கா ணாதெளியேன் இருக்கும்இடத் தடைந்து
- மனைக்கதவு திறப்பித்து வலிந்தெனைஅங் கழைத்து
- நற்றவர்க்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே
- நல்கியநின் பெருங்கருணை நட்பினைஎன் என்பேன்
- அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடஞ்செய்
- அருட்குருவே சச்சிதா னந்தபரம் பொருளே.
- கருணைவடி வாய்அடியார் உள்ளகத்தே அமர்ந்த
- கழலடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து
- மருணிறையுஞ் சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தழைத்து மகனே
- பொருணிறையும் இதனைஇங்கே வாங்கெனஎன் கரத்தே
- பொருந்தஅளித் தருளியநின் பொன்னருள்என் என்பேன்
- அருணிறையும் பெருங்கடலே அம்பலத்தில் பரமா
- னந்தவுரு வாகிநடம் ஆடுகின்ற அரசே.
- அருளுருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள்
- அசைந்துவருந் திடஇரவில் யானிருக்கும் இடத்தே
- தெருளுருவின் நடந்துதெருக் கதவுதிறப் பித்துச்
- சிறியேனை அழைத்தெனது செங்கையில்ஒன் றளித்து
- மருளுருவின் மற்றவர்போல் மயங்கேல்என் மகனே
- மகிழ்ந்துதிரு அருள்வழியே வார்கஎன உரைத்தாய்
- இருளுருவின் மனக்கொடியேன் யாதுதவம் புரிந்தேன்
- எல்லாம்வல் லவனாகி இருந்தபசு பதியே.
- முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி
- முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
- கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்
- கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
- பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே
- பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
- தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்
- தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே .
- ஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே
- உற்றஅனு பவமயமாய் ஒளிர்அடிகள் வருந்த
- அன்றார நடந்திரவில் யானுறையும் இடத்தே
- அடைந்துகத வந்திறப்பித் தன்பொடெனை அழைத்து
- நன்றார எனதுகரத் தொன்றருளி இங்கே
- நண்ணநீ எண்ணியவா நடத்துகஎன் றரைத்தாய்
- இன்றார வந்ததனை உணர்த்தினைநின் அருளை
- என்புகல்வேன் மணிமன்றில் இலங்கிசற் குருவே .
- எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி
- என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த
- பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே
- போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே
- தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய்
- இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில்
- இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே .
- சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்
- சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
- மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்
- வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
- அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்
- அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
- முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்
- முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே .
- அறிவுடையார் உள்ளகப்போ தலருகின்ற தருணத்
- தருள்மணத்தே னாகிஉற்ற அடிஇணைகள் வருந்தப்
- பிறிவுடையேன் இருக்குமிடந் தேடிநடந் தடைந்து
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்துச்
- செறிவுடையாய் இதுவாங்கென் றுதவவும்நான் மறுப்பத்
- திரும்பவும்என் கைதனிலே சேரஅளித் தனையே
- பொறிவறியேன் அளவினில்உன் கருணையைஎன் என்பேன்
- பொற்பொதுவில் நடம்புரியும் பூரணவான் பொருளே.
- அருள்விளங்கும் உள்ளகத்தே அதுஅதுவாய் விளங்கும்
- அணிமலர்ச்சே வடிவருத்தம் அடையநடந் தருளிப்
- பொருள்விளங்கா நடுஇரவில் நானுறையும் இடத்தே
- போந்துதெருக் காப்பவிழ்க்கப் புரிந்தெனைஅங் கழைத்துத்
- தெருள்விளங்கும் ஒருபொருள்என் செங்கைதனில் அளித்தாய்
- சிவபெருமான் பெருங்கருணைத் திறத்தினைஎன் என்பேன்
- மருள்விளங்கி உணர்ச்சியுறத் திருமணிமன் றிடத்தே
- மன்னுயிர்க் கின்பருள வயங்குநடத் தரசே.
- என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி
- என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித்
- தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத்
- தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி
- முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த
- முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன்
- மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப
- வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே.
- பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத
- பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த
- வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே
- வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது
- செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன்
- உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில்
- உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
- சொன்னிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித்
- துரியநடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து
- கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம்
- கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து
- என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி
- என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய்
- தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன்
- தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
- காட்டுகின்ற ஒளிதனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
- பூணுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- பொருந்துமிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- கோணுகின்ற மனத்தாலே நாணுவதேன் மகனே
- குறைவறவாழ் கெனமகிழ்ந்து கொடுத்தனைஒன் றெனக்கு
- மாணுகின்ற நின்னருளின் பெருமையைஎன் என்பேன்
- மணிமன்றில் ஆனந்த மாநடஞ்செய் அரசே.
- ஆதியிலே கலப்பொழிய ஆன்மசுத்தி அளித்தாங்
- கதுஅதுஆக் குவதொன்றாம் அதுஅதுவாய் ஆக்கும்
- சோதியிலே தானாகிச் சூழ்வதொன்றாம் என்று
- சூழ்ச்சிஅறிந் தோர்புகலும் துணையடிகள் வருந்த
- வீதியிலே நடந்தடியேன் இருக்கும்இடந் தேடி
- விரும்பிஅடைந் தெனைக்கூவி விளைவொன்று கொடுத்தாய்
- பாதியிலே ஒன்றான பசுபதிநின் கருணைப்
- பண்மைபஅறிந் தேன்ஒழியா நண்பைஅடைந் தேனே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- அருளுதிக்குந் தருணத்தே அமுதவடி வாகி
- ஆனந்த மயமாகி அமர்ந்ததிரு வடிகள்
- இருளுதிக்கும் இரவினிடை வருந்தநடந் தருளி
- யானிருக்கும் மனைக்கதவந் திறப்பித்தங் கடைந்து
- மருளுதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி
- மகிழ்ந்தெனது கரத்தொன்று வழங்கியசற் குருவே
- தெருளுதிக்கும் மணிமன்றில் திருநடஞ்செய் அரசே
- சிவபெருமான் நின்கருணைத் திறத்தைவியக் கேனே .
- நான்கண்ட போதுசுயஞ் சோதிமய மாகி
- நான்பிடித்த போதுமதி நளினவண்ண மாகித்
- தேன்கொண்ட பாலெனநான் சிந்திக்குந் தோறுந்
- தித்திப்ப தாகிஎன்றன் சென்னிமிசை மகிழ்ந்து
- தான்கொண்டு வைத்தஅந்நாள் சில்லென்றென் உடம்பும்
- தகஉயிருங் குளிர்வித்த தாண்மலர்கள் வருந்த
- வான்கொண்டு நடந்திங்கு வந்தெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- யோகாந்த மிசைஇருப்ப தொன்றுகலாந் தத்தே
- உவந்திருப்ப தொன்றெனமெய் யுணர்வுடையோர் உணர்வால்
- ஏகாந்தத் திருந்துணரும் இணையடிகள் வருந்த
- என்பொருட்டாய் யானிருக்கும் இடந்தேடி நடந்து
- வாகாந்தச் சணிக்கதவந் திறப்பித்தங் கென்னை
- வரவழைத்தென் கைதனிலே மகிழ்ந்தொன்று கொடுத்தாய்
- மோகாந்த காரம்அறுத் தவர்ஏத்தப் பொதுவில்
- முயங்கிநடம் புரிகின்ற முக்கனுடை அரசே.
- இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
- எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
- உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
- உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
- திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
- தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
- குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
- குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
- உம்பருக்குங் கிடைப்பரிநாம் மணிமன்றில் பூத
- உருவடிவங் கடந்தாடுந் திருவடிக ளிடத்தே
- செம்பருக்கைக் கல்லுறத்தத் தெருவில்நடந் திரவில்
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்து
- வம்பருக்குப் பெறலரிதாம் ஒருபொருள்என் கரத்தே
- மகிழ்ந்தளித்துத் துயர்தீர்ந்து வாழ்கஎன உரைத்தாய்
- இம்பருக்கோ அம்பருக்கும் இதுவியப்பாம் எங்கள்
- இறைவநின் தருட்பெருமை இசைப்பதெவன் அணிந்தே.
- உருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்
- உருஅருஒன் றாகிஇவை ஒன்பானுங் கடந்து
- துருவமுடி யாப்பரம துரியநடு விருந்த
- சொருபஅனு பவமயமாந் துணையடிகள் வருந்தத்
- தெருவமிசை நடந்துசிறு செம்பரற்கல் உறுத்தச்
- சிறியேன்பால் அடைந்தெனது செங்கையில்ஒன் றளித்தாய்
- மருவஇனி யாய்மன்றில் நடம்புரிவாய் கருணை
- மாகடலே நின்பெருமை வழுத்தமுடி யாதே.
- பக்குவத்தால் உயர்வாழைப் பழங்கனிந்தாற் போலும்
- பரங்கருணை யாற்கனிந்த பத்தர்சித்தந் தனிலே
- பொக்கமில்அப் பழந்தனிலே தெள்ளமுதங் கலந்தாற்
- போற்கலந்து தித்திக்கும் பொன்னடிகள் வருந்த
- மிக்கஇருள் இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்
- வியன்மனையில் அடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- ஒக்கஎனை அழைத்தொன்று கொடுத்திங்கே இருஎன்
- றுரைத்தனைஎம் பெருமான்நின் உயர்கருணை வியப்பே.
- உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
- உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
- அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
- அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
- களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
- விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
- விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
- மானினொடு மோகினியும் மாமாயை யுடனே
- வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்தசைய அசைத்தே
- ஊனினொடும் உயிருணர்வுங் கலந்துகலப் புறுமா
- றுறுவித்துப் பின்கரும ஒப்புவருந் தருணம்
- தேனினொடு கலந்தஅமு தெனருசிக்க இருந்த
- திருவடிகள் வருந்தநடந் தடியேன்பால் அடைந்து
- வானினொடு விளங்குபொருள் ஒன்றெனக்கும் அளித்தாய்
- மன்றில்நடத் தரசேநின் மாகருணை வியப்பே.
- பசுபாச பந்தம்அறும் பாங்குதனைக் காட்டிப்
- பரமாகி உள்•ருந்து பற்றவும் புரிந்தே
- அசமான மானசிவா ளந்தஅனு பவமும்
- அடைவித்தவ் வனுபவந்தாம் ஆகியசே வடிகள்
- வசுமீது வருந்தியிட நடந்தடியேன் இருக்கும்
- மனையைஅடைந் தணிக்கவந் திறப்பித்து நின்று
- விசுவாச முறஎனைஅங் கழைத்தொன்று கொடுத்தாய்
- விடையவநின் அருட்பெருமை என்புகல்வேன் வியந்தே.
- ஆதியுமாய் அந்தமுமாய் நடுவாகி ஆதி
- அந்தநடு வில்லாத மந்தணவான் பொருளாய்ச்
- சோதியுமாய்ச் சோதியெலாந் தோன்றுபர மாகித்
- துரியமுமாய் விளங்குகின்ற துணையடிகள் வருந்த
- பாதியிர விடைநடந்து நான்இருக்கும் இடத்தே
- படர்ந்துதெருக் கதவங்காப் பவிழ்த்திடவும் புரிந்து
- ஓதியிலங் கெனையழைத்தென் கரத்தொன்று கொடுத்தாய்
- உடையவநின் அருட்பெருமை என்னுரைப்பேன் உவந்தே.
- பாடுகின்ற மறைகளெலாம் ஒருபுறஞ்சூழ்ந் தாடப்
- பத்தரொடு முத்தரெலாம் பாத்தாடப் பொதுவில்
- ஆடுகின்ற திருவடிகள் வருந்தநடந் தடியேன்
- அடையும்இடத் தடைந்திரவிற் காப்பவிழ்க்கப் புரிந்து
- நாடுகின்ற சிறியேனை அழைத்தருளி நோக்கி
- நகைமுகஞ்செய் தென்கரத்தே நல்கினைஒன் றிதனால்
- வாடுகின்ற வாட்டமெலாந் தவிர்ந்துமகிழ் கின்றேன்
- மன்னவநின் பொன்னருளை என்னெனவாழ்த் துவனே.
- வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்
- வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
- தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்
- தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
- மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து
- மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
- ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்
- அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே.
- தஞ்சமுறும் உயிர்க்குணர்வாய் இன்பமுமாய் நிறைந்த
- தம்பெருமை தாமறியாத் தன்மைவாய் ஒருநாள்
- வஞ்சகனேன் புன்றலையில் வைத்திடவுஞ் சிவந்து
- வருந்தியசே வடிபின்னும் வருந்தநடத் தருளி
- எஞ்சிலா இரவினிடை யானிருக்கும் இடஞ்சேர்ந்
- தெழிற்கதவந் திறப்பித்தங் கெனைஅழைத்தொன் றளித்தாய்
- விஞ்சுபரா னந்தநடம் வியன்பொதுவிற் புரியும்
- மேலவநின் அருட்பெருமை விளம்பலெவன் வியந்தே.
- எழுத்தினொடு பதமாகி மந்திரமாய் புவனம்
- எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
- வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்
- வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
- அழுத்துறமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்
- ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
- இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்
- எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே.
- மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்
- வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
- பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து
- போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
- தாவிநடந் திரவின்மனைக் கதவுதிப் பித்தே
- தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
- நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்
- நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- உலகியலோ டருளியலும் ஒருங்கறியச் சிறியேன்
- உணர்விலிருந் துணர்த்திஎன துயிர்க்குயிராய் விளங்கித்
- திலகமெனத் திகழ்ந்தெனது சென்னிமிசை அமர்ந்த
- திருவடிகள் வருந்தநடை செய்தருளி அடியேன்
- இலகுமனைக் கதவிரவில் திறப்பித்தங் கென்னை
- இனிதழைத்தொன் றளித்துமகிழ்ந் தின்னும்நெடுங் காலம்
- புலவர்தொழ வாழ்கஎன்றாய் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து
- திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத்
- தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும்
- தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப
- மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு
- மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய்
- குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும்
- குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே
- அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார்
- கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு
- களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து
- குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக்
- கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே
- மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி
- மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்
- சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
- உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்
- உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
- கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்
- கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- மாடையேன் பிழைஅனைத்தும் பொறுத்தவர மளித்தாள்
- மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள்
- தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள்
- சிவகாம வல்லிபெருந் தேþவிஉளங் களிப்பக்
- காசுடைய பவக்கோடைக் கொருதிநிழலாம் பொதுவில்
- கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி
- ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன்
- அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே.
- பொய்யாத வரம்எனக்குப் புரிந்தபரம் பரைவான்
- பூதமுதற் கருவியெலாம் பூட்டுவிக்குந் திறத்தாள்
- செய்யாளுங் கலையவளும் உருத்திரையும் வணங்கும்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக்
- கையாத இன்பநடங் கனகமணிப் பொதுவில்
- களித்தியற்றுந் துரையேநின் கருணையைநான் கருதி
- நையாத வண்ணமெலாம் பாடுகின்றேன் பருவம்
- நண்ணியபுண் ணியரெல்லாம் நயந்துமகிழ்ந் திடவே.
- அறங்கனிந்த அருட்கொடிஎன் அம்மைஅமு தளித்தாள்
- அகிலாண்ட வல்லிசிவா னந்திசௌந் தரிசீர்த்
- திறங்கலந்த நாதமணிச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- மறங்கனிந்தார் மயக்கமெலாந் தெளியமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் துரையேநின் வண்மைதனை அடியேன்
- புறங்கவியப் பாடுகின்றேன் அகங்கவியப் பாடும்
- புண்ணியரெல் லாம்இவன்ஓர் புதியன்எனக் கொளவே.
- பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி
- பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னனாள்
- தேரணியும் நெடுவிதித் தில்லைநக ருடையாள்
- சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப
- ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி
- இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே
- தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என்
- தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே.
- ஆளுடையாய் சிறியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாளுடையேன்188 தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- நீளுடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- நிகழ்கின்ற தாயினும்என் நெஞ்சம்உரு கிலதே
- ஏளுடைய மலையும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- ஆரமுதே அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வாரமுற எனையழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- மகிழ்ந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- சீருடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- தெரிகின்ற தாயினும்என் சிந்தைஉரு கிலதே
- ஈரமிலா மரமும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- 188. வாள் - ஒளி, பட்டயம். ச.மு.க.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்
- இறைவியொடும் அம்பலத்தே இலங்கிநின் வடிவை
- வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்
- மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
- அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்
- ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் எங்கெவர்கள் புகல்வார்
- துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்
- தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே.
- தென்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள்
- சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில்
- வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன்
- மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை
- நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம்
- நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார்
- நு‘ன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான
- நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே.
- சிற்றிடைஎம் பெருமாட்டி தேவர்தொழும் பதத்தாள்
- சிவகாம வல்லியொடு சிறந்தமணிப் பொதுவில்
- உற்றிடைநின் றிலங்குகின்ற நின்வடிவைக் கொடியேன்
- உன்னுந்தொறும் உளம்இளகித் தளதளஎன் றுருகி
- மற்றிடையில் வலியாமல் ஆடுகின்ற தென்றால்
- வழியடியர் விழிகளினால் மகிழ்ந்துகண்ட காலம்
- பற்றிடையா தாங்கவர்கட் கிருந்தவண்ணந் தனையார்
- பகர்வாரே பகர்வாரேல் பகவன்நிகர் வாரே.
- என்பிழையா வையும்பொறுத்தான் என்னைமுன்னே அளித்தாய்ள
- இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
- இன்படி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
- இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
- அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
- அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
- என்புருக மனஞான மயமாகும் என்றால்
- எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
- கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
- கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
- விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
- வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
- இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
- இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
- அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
- யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.
- அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
- எம்மாயென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
- மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
- வங்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ் தெனக்கும்
- தம்மான முறவியந்து சம்மான மளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
- ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
- உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
- தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
- சிவயாநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
- சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
- இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
- உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
- உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன்
- கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
- கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச்
- சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
- உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
- பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
- பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே
- கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
- குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
- தாகோத ரங்குளிர்ந்த தன்மைஒன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- கலைக்கடைநன் கறியாதே கனஅருளோ டூடிக்
- கரிகபுகன் றேன்கவலைக் கடற்புணைஎன் றுணரேன்
- புலைக்கடையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- போற்றிசிவ போற்றிசிவ போற்றிசிவ போற்றி
- தலைக்கடைவாய் அன்றிரவில் தாள்மலரொன் றமர்த்தித்
- தனிப்பொருள்என் க€யிலளித்த தயவுடைய பெருமான்
- கொலைக்கடையார்க் கெய்தரிய குணமலையே பொதுவில்
- கூத்தாடிக் கொண்டுலகைக் காத்தாளுங் குருவே.
- பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
- பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
- புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
- கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
- கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
- விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.
- திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
- தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
- புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
- உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
- உண்மையறி வானந்த உருவுடைய குருவே
- சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
- திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
- உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
- செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
- பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
- பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
- தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
- றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
- உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
- நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
- விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
- றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
- அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ அருட்சிவ மதற்கெனப் பலகால்
- படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம் பார்த்தரு ளால்எழுந் தருளி
- மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய்
- வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே.
- 189. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத்திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்விலகுறுங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா வண்ணம்அலகிலா உணர்ச்சி அளித்தனை உன்றன் அருட்கடற் பெருமைஎன் புகல்வேன்திலகநற் காழி ஞாநசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.பெருமானின் கையெழுத்து மூலத்தில் இவ்விருத்தம் இவ்வாறு ஐந்து அடிகளுடன்காணப்பெறுவதாக ஆ.பா.கூறி இங்ஙனமே பதிப்பித்துள்ளார். தொ. வே.முதற்பதிப்பிலும் பின் பதிப்புகளிலும் `அலகிலா உணர்ச்சி அளித்தனை' என்னும்நான்காம் அடி இல்லை. `திலகநற்காழி' என்பதனை நான்காம் அடியாக அவர்கள் கொண்டனர். ஆசிரியவிருத்தம் நான்கடியின் மிக்கு வராது. பெருமானதுகையெழுத்து மூலங்களில் அடித்தல் திருத்தல்கள் உண்டு. பாடும் வேகத்தில் ஐந்தடியாக அமைந்த இதனைப் பெருமான் திருத்தியமைக்காதுவிட்டார்கள் போலும்.
- 190. இஃதோர் தனிப்பாடல். இதனை இவ்விடத்தில் சேர்த்துத் தொ.வே. பதிப்பித்துள்ளார்.
- திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும்
- சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை
- உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ
- ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப்
- பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட
- புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன்
- கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக்
- கடலேநின் கழல்கருதக் கருது வாயே.
- வாய்மையிலாச் சமணாதர் பலகாற் செய்த
- வஞ்சமெலாம் திருவருட்பேர் வலத்தால் நீந்தித்
- தூய்மைபெறும் சிவநெறியே விளங்க ஓங்கும்
- சோதிமணி விளக்கேஎன் துணையே எம்மைச்
- சேம்மைவிடா தணிமைவிடத் தாள வந்த
- செல்வமே எல்லையிலாச் சிறப்பு வாய்ந்துள்
- ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ
- அணியேசொல் லரசெனும்பேர் அமைந்த தேவே.
- விதிவிலக்கீ தென்றறியும் விளைவொன் றில்லா
- வினையினேன் எனினும்என்னை விரும்பி என்னுள்
- மதிவிளக்கை ஏற்றிஅருள் மனையின் ஞான
- வாழ்வடையச் செயல்வேண்டும் வள்ள லேநற்
- பதிமலர்த்தாள் நிழலடைந்த தவத்தோர்க் கெல்லாம்
- பதியேசொல் லரசெனும்பேர் படைத்த தேவே
- கதிதருகற் பகமேமுக் கனியே ஞானக்
- கடலேஎன் கருத்தேஎன் கண்ணு ளானே.
- கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
- கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
- பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
- பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
- விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
- விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
- ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
- உத்தமனே191 சித்தமகிழ்ந் துதவு வோனே.
- ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
- ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
- ஆங்காரப் பெருமதமால் யானை போல
- அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
- பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
- பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
- தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
- செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.
- செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
- சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
- பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்
- பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
- உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே
- உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
- மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்
- வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே.
- விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
- மேவியமெய்ப் பொருளை உள்ளே விரும்பி வைத்துக்
- களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
- கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
- துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
- துணையேநந் துரையேநற் சுகமே என்றும்
- வளங்கெழும்ஆ கநநெறியை வளர்க்க வந்த
- வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
- அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
- அவதரித்த மணியெசொல் லரசே ஞானத்
- தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
- செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
- இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
- இன்னருள்தந் தாண்டருள்வாய் இன்றேல் அந்தோ
- மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
- வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
- 191. எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோஎம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்கண்ணிலேன் மற்றோர்களைகண் இல்லேன்கழலடியே கைதொழுது காணின்அல்லால்ஒண்ணுளே ஒன்பது வாசல்வைத்தாய்ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்பூம்புகலூர் மேவிய புண்ணியனே.- 7215 (6-99-1) திருநாவுக்கரசர். திருப்புகலூர்த் திருத்தாண்டகம்.
- இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
- தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
- கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
- மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
- வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
- தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
- கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
- நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
- பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
- ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
- தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
- ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
- 192. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடையதோனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகிமாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லாஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.- 7751 (7-51-10) சுந்தரர், திருவாரூர்பப்திகம்.
- 193. திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு.
- தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
- வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
- மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
- ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
- கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
- பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
- குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
- உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
- மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
- என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்‘ரும் ஏமாக்க
- அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
- இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
- உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
- திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
- குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
- இருஎன்ற தனிஅகவல்194 எண்ணம்எனக் கியம்புதியே.
- தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
- ஆடுகின்ற சேவடிகக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
- நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
- வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
- நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
- ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
- வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
- ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
- தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
- குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.
- வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
- கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
- வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
- நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.
- 194 `இருஎன்ற தனிஅகவல்' என்றது திருவாசகம், திருவண்டப்பகுதியில் `என்னையும் இருப்பதாக்கினன்' என்ற வாசகத்தை.வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழைகுரம்பை தோறும் நாயுட லகத்தேகுரம்புகொண்டு இன்தேன் பாய்த்தினன் நிரம்பியஅற்புத மான அமுத தாரைகள்எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவதுஉள்ளம் கொண்டுஓர் உருச்செய்தாங்கு எனக்குஅள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளியகன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறைஎன்னையும் இருப்ப தாக்கினன் என்னில்கருணை வான்தேன் கலக்கஅருளொடு பராவமுது ஆக்கினன்பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே.- திருவாசகம். 3. திருவண்டப் பகுதி 170-182.
- அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
- அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
- வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
- டஞ்சரையான் கண்கள் அவை.
- வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
- நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
- வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்
- இனங்காத் தருளாய் எனை.
- உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
- இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
- திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
- விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
- பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
- ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
- வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
- பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
- அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
- மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
- சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
- சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
- வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
- ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
- பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
- மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
- ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
- ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
- வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
- பெருநெடு மேனி தனிற்படப்165 பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
- கருநெடுங் கடலைக் கடத்து166 நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
- வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே.
- நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
- களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
- அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
- வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே.
- சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
- பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
- ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
- வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே.
- நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
- சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
- தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
- வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே.
- கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
- செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
- நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
- வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே.
- அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
- இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
- பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
- வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே.
- பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
- திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
- மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
- வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
- டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
- தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
- வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம் மலையி லேமுக மாயத்தி லேஅவர்
- தோளி லே இடைச் சூழலி லேஉந்திச் சுழியி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின்
- தாளி லேநின்த னித்தபு கழிலே தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ
- வேளி லேஅழ கானசெவ் வேளின்முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- நாவி னால்உனை நாள்தொறும் பாடுவார் நாடு வார் தமை நண்ணிப்பு கழவும்
- ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஓடவும்மகிழ் ஓங்கவும் செய்குவாய்
- காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவுளேநற்க ருங்குழி என்னும்ஊர்
- மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
- மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
- ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
- கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி.
- திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
- இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
- குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
- வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே.
- கண்மூன் றுறுசெங் கரும்பின்முத் தேபதம் கண்டிடுவான்
- மண்மூன் றுலகும் வழுத்தும் பவள மணிக்குன்றமே
- திண்மூன்று நான்கு புயங்கொண் டொளிர்வச் சிரமணியே
- வண்மூன் றலர்மலை வாழ்மயில் ஏறிய மாணிக்கமே.
- மணியே தினைப்புன வல்லியை வேண்டி வளர்மறைவான்
- கணியே எனநின்ற கண்ணே என்உள்ளக் களிநறவே
- பணியேன் எனினும் எனைவலிந் தாண்டுன் பதந்தரவே
- நணியே தணிகைக்கு வாஎன ஓர்மொழி நல்குவையே.
- நல்காத ஈனர்தம் பாற்சென் றிரந்து நவைப்படுதல்
- மல்காத வண்ணம் அருள்செய்கண் டாய்மயில் வாகனனே
- பல்காதல் நீக்கிய நல்லோர்க் கருளும் பரஞ்சுடரே
- அல்காத வண்மைத் தணிகா சலத்தில் அமர்ந்தவனே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- உனக்கே விழைவுகொண் டோலமிட் டோங்கி உலறுகின்றேன்
- எனக்கே அருள்இத் தமியேன் பிழைஉளத் தெண்ணியிடேல்
- புனக்கேழ் மணிவல்லி யைப்புணர்ந் தாண்டருள் புண்ணியனே
- மனக்கேத மாற்றும் தணிகா சலத்தமர் வானவனே.
- வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே
- நானோர்எளியன்என் துன்பறுத் தாள்என நண்ணிநின்றேன்
- ஏனோநின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந்
- தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.
- செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
- வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
- அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
- மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
- கேளாது போல்இருக் கின்றனை ஏழைஇக் கீழ்நடையில்
- வாளா இடர்கொண் டலறிடும் ஓலத்தை மாமருந்தே
- தோளா மணிச்சுட ரேதணி காசலத் து‘ய்ப்பொருளே
- நாளாயின் என்செய்கு வேன்இறப் பாய நவைவருமே.
- நவையே தருவஞ்ச நெஞ்சகம் மாயவும் நான்உன்அன்பர்
- அவையே அணுகவும் ஆனந்த வாரியில் ஆடிடவும்
- சுவையே அமுதன்ன நின்திரு நாமம் துதிக்கவும்ஆம்
- இவையேஎன் எண்ணம் தணிகா சலத்துள் இருப்பவனே.
- இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன்
- பொருப்பாய கன்மப் புதுவாழ்வில் ஆழ்ந்தது போதும்இன்றே
- கருப்பாழ் செயும்உன் சுழல்அடிக் கேஇக் கடையவனைத்
- திருப்பாய் எனில்என்செய் கேன்தணி காசலத் தெள்ளமுதே.
- தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா
- சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்
- வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்
- திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.
- என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல்
- வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க
- மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத்
- தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே.
- சாரும் தணிகையில் சார்ந்தோய்நின் தாமரைத் தாள்துணையைச்
- சேரும் தொழும்பா திருப்பதம் அன்றிஇச் சிற்றடியேன்
- ஊரும் தனமும் உறவும் புகழும் உரைமடவார்
- வாருந் தணிமுலைப் போகமும் வேண்டிலன் மண்விண்ணிலே.
- மண்நீர் அனல்வளி வான்ஆகி நின்றருள் வத்துஎன்றே
- தெண்நீர்மை யால்புகழ் மால்அய னேமுதல் தேவர்கள்தம்
- கண்நீர் துடைத்தருள் கற்பக மேஉனைக் கண்டுகொண்டேன்
- தண்நீர் பொழிற்கண் மதிவந் துலாவும் தணிகையிலே.
- பொன்ஆர் புயத்தனும் பூஉடை யோனும் புகழ்மணியே
- என்ஆவி யின்துணை யேதணி காசலத் தேஅமர்ந்த
- மன்னாநின் பொன்அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன்
- இன்னா இயற்றும் இயமன்வந் தால்அவற் கென்சொல்வனே.
- சேல்பி டித்தவன் தந்தைஆ தியர்தொழும் தெய்வமே சிவப்பேறே
- மால்பி டித்தவர் அறியொணாத் தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே
- வேல்பி டித்தருள் வள்ளலே யான்சதுர் வேதமும் காணாநின்
- கால்பி டிக்கவும் கருணைநீ செய்யவும் கண்டுகண் களிப்பேனோ.
- இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக்
- கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன்
- விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே
- தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே.
- குன்று நேர்பிணித் துயரினால் வருந்திநின் குரைகழல் கருதாத
- துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர்அறுத் தருள்செய்வான்
- இன்று மாமயில் மீதினில் ஏறிஇவ் வேழைமுன் வருவாயேல்
- நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ் நாதநின் அடியாரே.
- யாரை யுந்துணை கொண்டிலேன் நின்அடி இணைதுணை அல்லால்நின்
- பேரை உன்னிவாழ்ந் திடும்படி செய்வையோ பேதுறச் செய்வாயோ
- பாரை யும்உயிர்ப் பரப்பையும் படைத்தருள் பகவனே உலகேத்தும்
- சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே.
- உளங்கொள் வஞ்சக நெஞ்சர்தம் இடம்இடர் உழந்தகம் உலைவுற்றேன்
- வளங்கொள் நின்பத மலர்களை நாள்தொறும் வாழ்த்திலேன் என்செய்கேன்
- குளங்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்கரும் பெருவாழ்வே
- தளங்கொள் பொய்கைசூழ் தணிகைஅம் பதியில்வாழ் தனிப்பெரும் புகழ்த்தேவே.
- தேவர் நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே
- மூவர் நாயகன் எனமறை வாழ்த்திடும் முத்தியின் வித்தேஇங்
- கேவ ராயினும் நின்திருத் தணிகைசென் றிறைஞ்சிடில் அவரேஎன்
- பாவ நாசம்செய் தென்றனை ஆட்கொளும் பரஞ்சுடர் கண்டாயே.
- கண்ட னேகவா னவர்தொழும் நின்திருக் கழல்இணை தனக்காசை
- கொண்ட னேகமாய்த் தெண்டன்இட் டானந்தக் கூத்தினை உகந்தாடித்
- தொண்ட னேனும்நின் அடியரில் செறிவனோ துயர்உழந் தலைவேனோ
- அண்ட னேதிருத் தணிகைவாழ் அண்ணலே அணிகொள்வேல் கரத்தோனே
- பாரும் விசும்பும் அறியஎனைப் பயந்த தாயும் தந்தையும்நீ
- ஒரும் போதிங் கெனில்எளியேன் ஒயாத் துயருற் றிடல்நன்றோ
- யாரும் காண உனைவாதுக் கிழுப்பேன் அன்றி என்செய்கேன்
- சேரும் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- வளைத்தே வருத்தும் பெருந்துயரால் வாடிச் சவலை மகவாகி
- இளைத்தேன் தேற்றும் துணைகாணேன் என்செய் துய்கேன் எந்தாயே
- விளைத்தேன் ஒழுகும் மலர்த்தருவே விண்ணே விழிக்கு விருந்தேசீர்
- திளைத்தோர் பரவும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன்
- எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன்
- கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன்
- செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே.
- வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க
- மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம்
- நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ
- சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில்
- கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ
- தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண்
- செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே.
- சீர்பூத்த அருட்கடலே கரும்பே தேனே
- செம்பாகே எனதுகுலத் தெய்வ மேநல்
- கூர்பூத்த வேல்மலர்க்கை அரசே சாந்த
- குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானப்
- பேர்பூத்த நின்புகழைக் கருதி ஏழை
- பிழைக்கஅருள் செய்வாயோ பிழையை நோக்கிப்
- பார்பூத்த பவத்தில்உற விடில்என் செய்கேன்
- பாவியேன் அந்தோவன் பயம்தீ ரேனே.
- தீராத துயர்க்கடலில் அழுந்தி நாளும்
- தியங்கிஅழு தேங்கும்இந்தச் சேய்க்கு நீகண்
- பாராத செயல்என்னே எந்தாய் எந்தாய்
- பாவிஎன விட்டனையோ பன்னா ளாக
- ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்
- திருந்தேனே என்செய்கேன் யாரும் இல்லேன்
- சீராருந் தணிகைவரை அமுதே ஆதி
- தெய்வமே நின்கருத்தைத் தெளிந்தி லேனே.
- உண்டாய உலகுயிர்கள் தம்மைக் காக்க
- ஒளித்திருந்தவ் வுயிர்வினைகள் ஒருங்கே நாளும்
- கண்டாயே இவ்வேழை கலங்கும் தன்மை
- காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
- தண்டாத நின்அருட்குத் தகுமோ விட்டால்
- தருமமோ தணிகைவரைத் தலத்தின் வாழ்வே
- விண்டாதி தேவர்தொழும் முதலே முத்தி
- வித்தேசொற் பதம்கடந்த வேற்கை யானே.
- கையாத அன்புடையார் அங்கை மேவும்
- கனியேஎன் உயிரேஎன் கண்ணே என்றும்
- பொய்யாத பூரணமே தணிகை ஞானப்
- பொருளேநின் பொன்அருள்இப் போதியான் பெற்றால்
- உய்யாத குறைஉண்டோ துயர்சொல் லாமல்
- ஓடுமே யமன்பாசம் ஓய்ந்து போம்என்
- ஐயாநின் அடியரொடு வாழ்கு வேன்இங்
- கார்உனைஅல் லால்எனக்கின் றருள்செய் வாயே.
- வாய்க்கும்உன தருள்என்றே அந்தோ நாளும்
- வழிபார்த்திங் கிளைக்கின்றேன் வருத்தும் பொல்லா
- நோய்க்கும்உறு துயர்க்கும்இலக் கானேன் மாழ்கி
- நொந்தேன்நின் அருள்காணேன் நுவலும் பாசத்
- தேய்க்கும்அவன் வரில்அவனுக் கியாது சொல்வேன்
- என்செய்கேன் துணைஅறியா ஏழை யேனே
- து‘ய்க்குமர குருவேதென் தணிகை மேவும்
- சோதியே இரங்காயோ தொழும்பா ளர்க்கே.
- ஆளாயோ துயர்அளக்கர் வீழ்ந்து மாழ்கி
- ஐயாவோ எனும்முறையை அந்தோ சற்றும்
- கேளாயோ என்செய்கேன் எந்தாய் அன்பர்
- கிளத்தும்உன தருள்எனக்குக் கிடையா தாகில்
- நாளாய்ஓர் நடுவன்வரில் என்செய் வானோ
- நாயினேன் என்சொல்வேன் நாணு வேனோ
- தோளாஓர் மணியேதென் தணிகை மேவும்
- சுடரேஎன் அறிவேசிற் சுகங்கொள் வாழ்வே.
- வாழ்வேநற் பொருளேநல் மருந்தே ஞான
- வாரிதியே தணிகைமலை வள்ள லேயான்
- பாழ்வேலை எனுங்கொடிய துயருள் மாழ்கிப்
- பதைத்தையா முறையோநின் பதத்துக் கென்றே
- தாழ்வேன்ஈ தறிந்திலையே நாயேன் மட்டும்
- தயவிலையோ நான்பாவி தானோ பார்க்குள்
- ஆழ்வேன்என் றயல்விட்டால் நீதி யேயோ
- அச்சோஇங் கென்செய்கேன் அண்ணால் அண்ணால்.
- அண்ணாவே நின்அடியை அன்றி வேறோர்
- ஆதரவிங் கறியேன்நெஞ் சழிந்து துன்பால்
- புண்ணாவேன் தன்னைஇன்னும் வஞ்சர் பாற்போய்ப்
- புலந்துமுக வாட்டம்உடன் புலம்பி நிற்கப்
- பண்ணாதே யாவன்இவன் பாவிக் குள்ளும்
- படுபாவி என்றென்னைப் பரிந்து தள்ள
- எண்ணாதே யான்மிகவும் ஏழை கண்டாய்
- இசைக்கரிய தணிகையில்வீற் றிருக்கும் கோவே.
- கோவேநல் தணிகைவரை அமர்ந்த ஞான
- குலமணியே குகனேசற் குருவே யார்க்கும்
- தேவேஎன் விண்ணப்பம் ஒன்று கேண்மோ
- சிந்தைதனில் நினைக்கஅருள் செய்வாய் நாளும்
- பூவேயும் அயன்திருமால் புலவர் முற்றும்
- போற்றும்எழில் புரந்தரன்எப் புவியும் ஓங்கச்
- சேவேறும் பெருமான்இங் கிவர்கள் வாழ்த்தல்
- செய்துவக்கும் நின்இரண்டு திருத்தாள் சீரே.
- பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
- பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
- கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
- காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
- விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
- விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
- தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பண்டுமன துவந்துகுணம் சிறிதும் இல்லாப்
- பாவியேன் தனைஆண்டாய் பரிவால் இன்று
- கொண்டுகுலம் பேசுதல்போல் எளியேன் குற்றம்
- குறித்துவிடில் என்செய்கேன் கொடிய னேனைக்
- கண்டுதிருத் தொண்டர்நகை செய்வார் எந்தாய்
- கைவிடேல் உன்ஆணை காண்முக் காலும்
- தண்துளவன் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- புன்புலைய வஞ்சகர்பால் சென்று வீணே
- புகழ்ந்துமனம் அயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
- வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
- மருந்தாய நின்அடியை மறந்தேன் அந்தோ
- இன்புலைய உயிர்கொள்வான் வரில்என் பால்அவ்
- வியமனுக்கிங் கென்சொல்கேன் என்செய் கேனே
- தன்புகழ்காண் அருந்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப்
- பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக்
- கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல்
- என்சொலார்4 அடியர்அதற் கெந்தாய் எந்தாய்
- கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண்
- கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம்
- தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்அளவாம் நெஞ்சம்என வஞ்ச மாதர்
- கண்மாயம் எனும்கயிற்றால் கட்டு வித்துச்
- சொல்அளவாத் துன்பம்எனும் கடலில் வீழ்த்தச்
- சோர்கின்றேன் அந்தோநல் துணைஓன் றில்லேன்
- மல்அளவாய்ப் பவம்மாய்க்கும் மருந்தாம் உன்றன்
- மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கேன் எந்தாய்
- சல்லம்5 உலாத் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- அன்னைமுத லாம்பந்தத் தழுங்கி நாளும்
- அலைந்துவயி றோம்பிமனம் அயர்ந்து நாயேன்
- முன்னைவினை யாற்படும்பா டெல்லாம் சொல்லி
- முடியேன்செய் பிழைகருதி முனியேல் ஐயா
- பொன்னைநிகர் அருட்குன்றே ஒன்றே முக்கட்
- பூமணமே நறவேநற் புலவர் போற்றத்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னரும்வன் துயரால்நெஞ் சழிந்து நாளும்
- பதைத்துருகி நின்அருட்பால் பருகக் கிட்டா
- துன்னரும்பொய் வாழ்க்கைஎனும் கானத் திந்த
- ஊர்நகைக்கப் பாவிஅழல் உணர்ந்தி லாயோ
- என்னருமை அப்பாஎன் ஐயா என்றன்
- இன்னுயிர்க்குத் தலைவாஇங் கெவர்க்கும் தேவா
- தன்னியல்சீர் வளர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கோவேநின் பதம்துதியா வஞ்ச நெஞ்சக்
- கொடியோர்பால் மனவருத்தம் கொண்டாழ் கின்றேன்
- சாவேனும் அல்லன்நின்பொன் அருளைக் காணேன்
- தமியேனை உய்யும்வண்ணம் தருவ தென்றோ
- சேவேறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற
- செல்வமே அருள்ஞானத் தேனே அன்பர்
- தாவேதம் தெறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஓயாது வரும்மிடியான் வஞ்சர் பால்சென்
- றுளங்கலங்கி நாணிஇரந் துழன்றெந் நாளும்
- மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ
- மருந்தாய நின்அடியை மறந்திட் டேனே
- தாயாகித் தந்தையாய்த் தமராய் ஞான
- சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே
- சாயாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வன்சொலினார் இடைஅடைந்து மாழ்கும் இந்த
- மாபாவி யேன்குறையை வகுத்து நாளும்
- என்சொலினும் இரங்காமல் அந்தோ வாளா
- இருக்கின்றாய் என்னேநின் இரக்கம் எந்தாய்
- இன்செல்அடி யவர்மகிழும் இன்ப மேஉள்
- இருள்அகற்றும் செழுஞ்சுடரே எவர்க்கும் கோவே
- தன்சொல்வளர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மீளாத வன்துயர்கொண் டீனர் தம்மால்
- மெலிந்துநினை அழைத்தலறி விம்மா நின்றேன்
- கேளாத கேள்விஎலாம் கேட்பிப் பாய்நீ
- கேட்கிலையோ என்அளவில் கேள்வி இன்றோ
- மாளாத தெண்டர்அக இருளை நேக்கும்
- மதியேசிற் சுகஞான மழைபெய் விண்ணே
- தாளாளர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ
- வருந்திமனம் மயங்கிமிக வாடி நின்றேன்
- புண்ணியா நின்அருளை இன்னும் காணேன்
- பொறுத்துமுடி யேன்துயரம் புகல்வ தென்னே
- எண்ணினால் அளப்பரிய பெரிய மோன
- இன்பமே அன்பர்தம திதயத் தோங்கும்
- தண்ணினால் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாழாத வண்ணம்எனைக் கெடுக்கும் பொல்லா
- வஞ்சகநெஞ் சால்உலகில் மாழாந் தந்தோ
- பாழான மடந்தையர்பால் சிந்தை வைக்கும்
- பாவியேன் முகம்பார்க்கப் படுவ தேயோ
- ஏழாய வன்பவத்தை நீக்கும் ஞான
- இன்பமே என்அரசே இறையே சற்றும்
- தாழாத புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
- றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
- இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
- ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
- வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
- மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
- தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கல்லாத வஞ்சகர்பால் சென்று வீணாள்
- கழித்து நிற்கும் கடையன்இவன் கருணை இல்லாப்
- பொல்லாத பாவிஎன எண்ணி என்னைப்
- புறம்போக்கில் ஐயாயான் புரிவ தென்னே
- எல்லாம்செய் வல்லவனே தேவர் யார்க்கும்
- இறைவனே மயில்ஏறும் எம்பி ரானே
- சல்லாப வளத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னேய நெஞ்சகர்மாட் டணுகி ஐயோ
- கரைந்துருகி எந்தாய்நின் கருணை காணா
- தென்னேஎன் றேங்கிஅழும் பாவி யேனுக்
- கிருக்கஇடம் இலையோநின் இதயங் கல்லோ
- பொன்னேஎன் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான
- பூரணமே புண்ணியமே புனித வைப்பே
- தன்னேரில் தென்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பாவவினைக் கோர்இடமாம் மடவார் தங்கள்
- பாழ்ங்குழிக்கண் வீழமனம் பற்றி அந்தோ
- மாவல்வினை யுடன்மெலிந்திங் குழல்கின் றேன்நின்
- மலர்அடியைப் போற்றேன்என் மதிதான் என்னே
- தேவர்தொழும் பொருளேஎன் குலத்துக் கெல்லாம்
- தெய்வமே அடியர்உளம் செழிக்கும் தேனே
- தாவகன்றோர் புகழ்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- கன்னியர்தம் மார்பிடங்கொண் டலைக்கும் புன்சீழ்க்
- கட்டிகளைக் கருதிமனம் கலங்கி வீணே
- அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி
- அடிமைகொளல் ஆகாதோ அருட்பொற் குன்றே
- சென்னிமிசைக் கங்கைவைத்தோன் அரிதில் பெற்ற
- செல்வமே என்புருக்கும் தேனே எங்கும்
- தன்னியல்கொண் டுறும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன்
- உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார்
- கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய்
- கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய்
- தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத்
- தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே
- தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
- வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
- எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்
- என்மனம்போல் நின்மனமும் இருந்த தேயோ
- கந்தாஎன் றுரைப்பவர்தம் கருத்துள் ஊறும்
- கனிரசமே கரும்பேகற் கண்டே நற்சீர்
- தந்தாளும் திருத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண்
- டோய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன்
- பார்ஆதி அண்டம்எலாம் கணத்தில் காண்போய்
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ
- சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன்
- சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம்
- சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வாஎன்பார் இன்றிஉன தன்பர் என்னை
- வஞ்சகன்என் றேமறுத்து வன்க ணாநீ
- போஎன்பார் ஆகில்எங்குப் போவேன் அந்தோ
- பொய்யனேன் துணைஇன்றிப் புலம்பு வேனே
- கோஎன்பார்க் கருள்தருமக் குன்றே ஒன்றே
- குணங்குறிஅற் றிடஅருளும் குருவே வாழ்க்கைத்
- தாஎன்பார் புகழ்த்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மாயைநெறி யாம்உலக வாழ்க்கை தன்னில்
- வருந்திநினை அழைத்தலறி மாழ்கா நின்றேன்
- தாயைஅறி யாதுவரும் சூல்உண் டோஎன்
- சாமிநீ அறியாயோ தயைஇல் லாயோ
- பேயைநிகர் பாவிஎன நினைந்து விட்டால்
- பேதையேன் என்செய்கேன் பெருஞ்சீர்க் குன்றே
- சாயைகடல் செறிதணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- மின்னைநிகர்ந் தழிவாழ்க்கைத் துயரால் நெஞ்சம்
- மெலிந்துநின தருள்பருக வேட்டுநின்றேன்
- என்னைஇவன் பெரும்பாவி என்றே தள்ளில்
- என்செய்கேன் தான்பெறும்சேய் இயற்றும் குற்றம்
- அன்னைபொறுத் திடல்நீதி அல்ல வோஎன்
- ஐயாவே நீபொறுக்கல் ஆகா தோதான்
- தன்னைநிகர் தரும்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- முந்தைவினை யால்நினது வழியில் செல்லா
- மூடனேன் தனைஅன்பர் முனிந்து பெற்ற
- தந்தைவழி நில்லாத பாவி என்றே
- தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்கு வேனே
- எந்தைநின தருள்சற்றே அளித்தால் வேறோர்
- எண்ணமிலேன் ஏகாந்தத் திருந்து வாழ்வேன்
- சந்தனவான் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- பன்னகநொந் துறுவஞ்ச உலகில் நின்று
- பரதவித்துன் அருட்கெதிர்போய்ப் பார்க்கின் றேன்நின்
- பொன்னருளைப் புணர்ந்துமன மகிழ்ந்து வாழப்
- புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ
- பின்னைஒரு துணைஅறியேன் தனியே விட்டால்
- பெருமநினக் கழகேயோ பேதை யாம்என்
- தன்னைஅளித் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- 4. சொல்வார். தொ.வே. முதற்பதிப்பு.
- விண்அ றாதுவாழ் வேந்தன் ஆதியர்
- வேண்டி ஏங்கவும் விட்டென் நெஞ்சகக்
- கண்அ றாதுநீ கலந்து நிற்பதைக்
- கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
- எண்அ றாத்துயர்க் கடலுள் மூழ்கியே
- இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன்
- தண்அ ற்‘ப்பொழில் குலவும் போரி6 வாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- வாட்கண் ஏழையர் மயலில் பட்டகம்
- மயங்கி மால்அயன் வழுத்தும் நின்திருத்
- தாட்கண் நேயம்அற் றுலக வாழ்க்கையில்
- சஞ்ச ரித்துழல் வஞ்ச னேன்இடம்
- ஆட்க ணேசுழல் அந்த கன்வரில்
- அஞ்சு வேன்அலால் யாது செய்குவேன்
- நாட்க ணேர்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- நாய காதிருத் தணிகை நாதனே.
- எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ
- இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே
- கண்ணின் உண்மணி யாய நின்தனைக்
- கருதி டாதுழல் கபட னேற்கருள்
- நண்ணி வந்திவன் ஏழை யாம்என
- நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய்
- தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- கூவி ஏழையர் குறைகள் தீரஆட்
- கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில்
- பாவி யேன்படும் பாட னைத்தையும்
- பார்த்தி ருந்தும்நீ பரிந்து வந்திலாய்
- சேவி யேன் எனில் தள்ளல் நீதியோ
- திருவ ருட்கொரு சிந்து வல்லையோ
- தாவி ஏர்வளைப் பயில்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- சந்தை நேர்நடை தன்னில் ஏங்குவேன்
- சாமி நின்திருத் தாளுக் கன்பிலேன்
- எந்தை நீமகிழ்ந் தென்னை ஆள்வையேல்
- என்னை அன்பர்கள் என்சொல் வார்களோ
- நிந்தை ஏற்பினும் கருணை செய்திடல்
- நித்த நின்அருள் நீதி ஆகுமால்
- தந்தை தாய்என வந்து சீர்தரும்
- தலைவ னேதிருத் தணிகை நாதனே.
- செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
- செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
- கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
- கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
- சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
- தோற்ற மேசுக சொருப வள்ளலே
- சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- ஏது செய்குவ னேனும் என்றனை
- ஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை
- ஈது செய்தவன் என்றிவ் வேழையை
- எந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய்
- வாது செய்வன்இப் போது வள்ளலே
- வறிய னேன்என மதித்து நின்றிடேல்
- தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- பொய்யர் தம்மனம் புகுதல் இன்றெனப்
- புனித நு‘லெலாம் புகல்வ தாதலால்
- ஐய நின்திரு அருட்கி ரப்பஇங்
- கஞ்சி நின்றென்இவ் விஞ்சு வஞ்சனேன்
- மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே
- வித்தி லாதவான் விளைந்த இன்பமே
- தைய லார்இரு வோரும் மேவுதோள்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
- மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
- பாலின் நீர்என நின்அ டிக்கணே
- பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
- சேலின் வாட்கணார் தீய மாயையில்
- தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
- சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
- சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.
- நாளை ஏகியே வணங்குதும் எனத்தினம் நாளையே கழிக்கின்றோம்
- ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன்
- தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர்உடல் தணந்திடல் தனைஇந்த
- வேளை என்றறி வுற்றிலம் என்செய்வோம் விளம்பரும் விடையோமே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
- ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
- அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
- தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே.
- மலையும் வேற்கணார் மையலில் அழுந்தியே வள்ளல்நின் பதம்போற்றா
- தலையும் இப்பெருங் குறையினை ஐயகோ யாவரோ டுரைசெய்கேன்
- நிலைகொள் ஆனந்த நிருத்தனுக் கொருபொருள் நிகழ்த்திய பெருவாழ்வே
- தலைமை மேவிய சற்குரு நாதனே தணிகையம் பதியானே.
- பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய
- கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே
- விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே
- வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே.
- வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம் வழுத்திடா துலகத்தே
- தாழும் வஞ்சர்பால் தாழும்என் தன்மைஎன் தன்மைவன் பிறப்பாய
- ஏழும் என்னதே ஆகிய தையனே எவர்எனைப் பொருகின்றோர்
- ஊழும் நீக்குறும் தணிகைஎம் அண்ணலே உயர்திரு வருள்தேனே.
- தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும்நின் திருவருள் தேன்உண்டே
- யானும் நீயுமாய்க் கலந்துற வாடும்நாள் எந்தநாள் அறியேனே
- வானும் பூமியும் வழுத்திடும் தணிகைமா மலைஅமர்ந் திடுதேவே
- கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமாரசற் குணக்குன்றே.
- குன்று பொய்உடல் வாழ்வினை மெய்எனக் குறித்திவண் அலைகின்றேன்
- இன்று நின்திரு வருள்அடைந் துய்வனோ இல்லைஇவ் வுலகத்தே
- என்றும் இப்படிப் பிறந்திறந் துழல்வனோ யாதும்இங் கறிகில்லேன்
- நன்று நின்திருச் சித்தம்என் பாக்கியம் நல்தணி கையில்தேவே.
- வேலன் மாதவன் வேதன் ஏத்திடும்
- மேலன் மாமயில் மேலன் அன்பர்உள்
- சால நின்றவன் தணிகை நாயகன்
- வால நற்பதம் வைப்பென் நெஞ்சமே.
- நெஞ்ச மேஇஃ தென்னை நின்மதி
- வஞ்ச வாழ்வினில் மயங்கு கின்றனை
- தஞ்சம் என்றருள் தணிகை சார்த்தியேல்
- கஞ்ச மாமலர்க் கழல்கி டைக்குமே.
- முற்று மோமனம் முன்னி நின்பதம்
- பற்று மோவினைப் பகுதி என்பவை
- வற்று மோசுக வாழ்வு வாய்க்குமோ
- சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.
- ஏதி லார்என எண்ணிக் கைவிடில்
- நீதி யோஎனை நிலைக்க வைத்தவா
- சாதி வான்பொழில் தணிகை நாதனே
- ஈதி நின்அருள் என்னும் பிச்சையே.
- பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
- இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
- பச்சை மாமயில் பரம நாதனே
- கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
- பிச்சை ஏற்றவன் பிள்ளை நீஎனில்
- இச்சை ஏற்றவர்க் கியாது செய்குவாய்
- பச்சை மாமயில் பரம நாதனே
- கச்சி நேர்தணி கைக்க டம்பனே.
- தேவ நேசனே சிறக்கும் ஈசனே
- பாவ நாசனே பரம தேசனே
- சாவ காசனே தணிகை வாசனே
- கோவ பாசனே குறிக்கொள் என்னையே.
- குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
- வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
- முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
- நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.
- மன்னும் நின்அருள் வாய்ப்ப தின்றியே
- இன்னும் இத்துயர் ஏய்க்கில் என்செய்கேன்
- பொன்னின் அம்புயன் போற்றும் பாதனே
- தன்னில் நின்றிடும் தணிகை மேலனே.
- மேலை வானவர் வேண்டும் நின்திருக்
- காலை என்சிரம் களிக்க வைப்பையோ
- சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
- வேலை ஏந்துகை விமல நாதனே.
- நேயம் நின்புடை நின்றி டாதஎன்
- மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
- பேய னேன்பெரும் பிழைபொ றுத்திடத்
- தாய நின்கடன் தணிகை வாணனே.
- வாணு தல்பெரு மாட்டி மாரொடு
- காணு தற்குனைக் காதல் கொண்டனன்
- ஏணு தற்கென தெண்ணம் முற்றுமோ
- மாணு தற்புகழ்த் தணிகை வண்ணனே.
- சொல்லும் பொருளு மாய்நிறைந்த சுகமே அன்பர் துதிதுணையே
- புல்லும் புகழ்சேர் நல்தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே
- அல்லும் பகலும் நின்நாமம் அந்தோ நினைந்துன் ஆளாகேன்
- கல்லும் பொருவா வன்மனத்தால் கலங்கா நின்றேன் கடையேனே.
- தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்பால் சார்வேன் தனக்குன் அருள்தந்தால்
- வாழ்வேன் இலையேல் என்செய்கேன் வருத்தம் பொறுக்க மாட்டேனே
- ஏழ்வே தனையும் கடந்தவர்தம் இன்பப் பெருக்கே என்உயிரே
- போழ்வேல் கரங்கொள் புண்ணியனே புகழ்சேர் தணிகைப் பொருப்பரசே.
- அரைசே அடியர்க் கருள்குகனே அண்ணா தணிகை ஐயாவே
- விரைசேர் கடம்ப மலர்ப்புயனே வேலா யுதக்கை மேலோனே
- புரைசேர் மனத்தால் வருந்திஉன்றன் பூம்பொற் பதத்தைப் புகழ்கில்லேன்
- தரைசேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.
- தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங்
- கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ
- கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே
- துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே.
- குன்றே மகிழ்ந்த குணக்குன்றே கோவே தணிகைக் குருபரனே
- நன்றே தெய்வ நாயகமே நவிலற் கரிய நல்உறவே
- என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன்
- இன்றே காணப் பெறில்எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.
- இருப்பேன் துயர்வாழ் வினில்எனினும் எந்தாய் நினது பதங்காணும்
- விருப்பேன் அயன்மால் முதலோரை வேண்டேன் அருள வேண்டாயோ
- திருப்பேர் ஒளியே அருட்கடலே தெள்ளார் அமுதே திருத்தணிகைப்
- பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.
- எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
- களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
- அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
- துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே.
- மெய்யர்உள் ளகத்தின் விளங்கும்நின் பதமாம்
- விரைமலர்த் துணைதமை விரும்பாப்
- பொய்யர் தம் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி
- அளித்திடும் தெள்ளிய அமுதே
- தையலார் மயக்கற் றவர்க்கருள் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நன்மைய எல்லாம் அளித்திடும் உனது
- நளினமா மலர்அடி வழுத்தாப்
- புன்மையர் இடத்திவ் வடியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- சின்மயப் பொருள்நின் தொண்டர்பால் நாயேன்
- சேர்ந்திடத் திருவருள் புரியாய்
- தன்மயக் கற்றோர்க் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- மருள்இலா தவர்கள் வழுத்தும்நின் அடியை
- மனமுற நினைந்தகத் தன்பாம்
- பொருள்இலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அருள்எலாம் திரண்ட ஆனந்த உருவே
- அன்பர்பால் இருந்திட அருளாய்
- தரளவான் மழைபெய் திடும்திருப் பொழில்சூழ்
- தணிகைவாழ் சரவண பவனே.
- நிலைஅருள் நினது மலர்அடிக் கன்பு
- நிகழ்ந்திட நாள்தொறும் நினையாப்
- புலையர்தம் இடம்இப் புன்மையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- மலைஅர சளித்த மரகதக் கொம்பர்
- வருந்திஈன் றெடுத்தமா மணியே
- தலைஅர சளிக்க இந்திரன் புகழும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- வல்இருள் பவம்தீர் மருந்தெனும் நினது
- மலர்அடி மனம்உற வழுத்தாப்
- புல்லர்தம் இடம்இப் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஒல்லையின் எனைமீட் டுன்அடி யவர்பால்
- உற்றுவாழ்ந் திடச்செயின் உய்வேன்
- சல்லமற் றவர்கட் கருள்தரும் பொருளே
- தணிகைவாழ் சரவண பவனே.
- கற்பிலார் எனினும் நினைந்திடில் அருள்நின்
- கருணைஅம் கழல்அடிக் கன்பாம்
- பொற்பிலா தவர்பால் ஏழையேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- அற்பிலேன் எனினும் என்பிழை பொறுத்துன்
- அடியர்பால் சேர்த்திடில் உய்வேன்
- தற்பரா பரமே சற்குண மலையே
- தணிகைவாழ் சரவண பவனே.
- பத்திகொண் டவருள் பரவிய ஒளியாம்
- பரஞ்சுடர் நின்அடி பணியும்
- புத்திகொள் ளலர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- நித்திய அடியர் தம்முடன் கூட்ட
- நினைந்திடில் உய்குவன் அரசே
- சத்திசெங் கரத்தில் தரித்திடும் அமுதே
- தணிகைவாழ் சரவண பவனே.
- நீற்றணி விளங்கும் அவர்க்கருள் புரியும்
- நின்அடிக் கமலங்கள் நினைந்தே
- போற்றிடா தவர்பால் பொய்யனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- ஆற்றல்கொள் நின்பொன் அடியருக் கடியன்
- ஆச்செயில் உய்குவன் அமுதே
- சாற்றிடும் பெருமைக் களவிலா தோங்கும்
- தணிகைவாழ் சரவண பவனே.
- பரிந்திடும் மனத்தோர்க் கருள்செயும் நினது
- பாததா மரைகளுக் கன்பு
- புரிந்திடா தவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- தெரிந்திடும் அன்பர் இடம்உறில் உய்வேன்
- திருவுளம் அறிகிலன் தேனே
- சரிந்திடும் கருத்தோர்க் கரியநற் புகழ்கொள்
- தணிகைவாழ் சரவண பவனே.
- எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை
- ஏத்திடா தழிதரும் செல்வப்
- புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல்
- பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
- கண்உறு மணியாம் நின்அடி யவர்பால்
- கலந்திடில் உய்குவன் கரும்பே
- தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே.
- தணிகைவாழ் சரவண பவனே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- வருவாய் என்று நாள்தோறும் வழிபார்த் திரங்கி மனந்தளர்ந்தேன்
- கருவாய் பவன்என் றெனைத்தள்ளக் கருது வாயோ அன்றிஅருள்
- உருவாய் வந்து தருவாயோ தணிகா சலத்துள் உற்றமர்ந்த
- ஒருவர் உன்றன் திருவுளத்தை உணரேன் என்செய் துய்கேனே.
- எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
- அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
- ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
- வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே.
- எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
- செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
- உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
- அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
- உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
- சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
- வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
- ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
- பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பிலாப் பிழைநோக்கித்
- தேவ ரீர்மன திரக்கமுற் றேஅருள் செய்திடா திருப்பீரேல்
- காவ லாகிய கடும்பிணித் துயரம்இக் கடையனேன் தனக்கின்னும்
- யாவ தாகுமோ என்செய்கோ என்செய்கோ இயலும்வேல் கரத்தீரே.
- சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
- பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
- ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
- பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
- துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
- அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
- வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
- இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
- என்செய் கேன்இனும் திருவருள் காண்கிலேன் எடுக்கரும் துயர்உண்டேன்
- கன்செய் பேய்மனக் கடையனேன் என்னினும் காப்பதுன் கடன்அன்றோ
- பொன்செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள்வைப்பே
- மன்செய் மாணிக்க விளக்கமே தணிகைவாழ் வள்ளலே மயிலோனே.
- வாழ்வில் ஆம்சிறு களிப்பினால் உன்றனை மறந்திறு மாக்கின்றேன்
- தாழ்வி லேசிறி தெண்ணிநொந் தயர்வன்என் தன்மைநன் றருளாளா
- கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்தருள் பெருவாழ்வே
- வேழ்வி8 ஓங்கிய தணிகைமா மலைதனில் விளங்கிவீற் றிருப்போனே.
- என்றும் மாதர்மேல் இச்சைவைத் துன்றனை எண்ணுவேன் துயருற்றால்
- கன்று நெஞ்சகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில்சால
- நன்று நன்றெனக் கெவ்வணம் பொன்அருள் நல்குவை அறிகில்லேன்
- துன்று மாதவர் போற்றிடும் தணிகைவாழ் சோதியே சுகவாழ்வே.
- 8. கேழ்வி வேழ்வி என்பன எதுகை நோக்கித் திரித்தவாறு. தொ.வே.
- நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலைஅதனை நண்ணி என்றன்
- கண்ணேநீ அமர்ந்தஎழில் கண்குளிரக் காணேனோ கண்டு வாரி
- உண்ணேனோ ஆனந்தக் கண்ர்கொண் டாடிஉனக் குகப்பாத் தொண்டு
- பண்ணேனோ நின்புகழைப் பாடேனோ வாயாரப் பாவி யேனே.
- பாவியேன் படுந்துயருக் கிரங்கிஅருள் தணிகையில்என் பால்வா என்று
- கூவிநீ ஆட்கொளஓர் கனவேனும் காணேனோ குணப்பொற் குன்றே
- ஆவியே அறிவேஎன் அன்பேஎன் அரசேநின் அடியைச் சற்றும்
- சேவியேன் எனினும்எனைக் கைவிடேல் அன்பர்பழி செப்பு வாரே.
- வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
- பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
- தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
- சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
- தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக்
- கனியேநின் சேவடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ
- துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில்
- இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே.
- முன்னேனோ திருத்தணிகை அடைந்திடநின் சந்நிதியின் முன்னே நின்று
- மன்னேனோ அடியருடன் வாழேனோ நின்அடியை வாழ்த்தி டேனோ
- உன்னேனோ நன்னிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும்
- என்னேனோ நின்பெயரை யார்கூறி னாலும்அவர்க் கிதங்கூ றேனோ.
- வாவா என்ன அருள்தணிகை மருந்தை என்கண் மாமணியைப்
- பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல்
- மூவா முதலின் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
- ஆவா நெஞ்சே எனைக்கெடுத்தாய் அந்தோ நீதான் ஆவாயோ.
- வாயாத் துரிசற் றிடும்புலவோர் வழுத்தும் தணிகை மலைஅமுதைக்
- காயாக் கனியை மறந்தவநாள் கழிக்கின் றதுவும் போதாமல்
- ஈயாக் கொடியர் தமக்கின்றி ஏலா நினைவும் இன்றெண்ணி
- மாயா என்றன் வாழ்வழித்தாய் மனமே நீதான் வாழ்வாயோ.
- வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்
- சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்
- வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று
- தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.
- காயோம் எனநின் றவர்க்கினிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப்
- போய்ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலங்கெட்டாய்
- பேயோ எங்கும் திரிந்தோடிப் பேணா என்பைப் பேணுகின்ற
- நாயோ மனமே நீஉனைநான் நம்பி வாளா நலிந்தேனே.
- தேனும் கடமும் திகழ்தணிகைத் தேவை நினையாய் தீநரகம்
- மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால்
- நானும் இழந்தேன் பெருவாழ்வை நாய்போல் அலைந்திங் கவமே9நீ
- தானும் இழந்தாய் என்னேஉன் தன்மை இழிவாம் தன்மையதே.
- இலதை நினைப்பாய் பித்தர்கள்போல் ஏங்கா நிற்பாய் தணிகையில்என்
- குலதெய் வமுமாய்க் கோவாய்சற் குருவாய் நின்ற குகன்அருளே
- நலதென் றறியாய் யான்செய்த நன்றி மறந்தாய் நாணாதென்
- வலதை அழித்தாய் வலதொடுநீ வாழ்வாய் கொல்லோ வல்நெஞ்சே.
- நெஞ்சே உகந்த துணைஎனக்கு நீஎன் றறிந்தே நேசித்தேன்
- மஞ்சேர் தணிகை மலைஅமுதை வாரிக் கொளும்போ தென்னுள்ளே
- நஞ்சே கலந்தாய் உன்உறவு நன்றே இனிஉன் நட்பகன்றால்
- உய்ஞ்சேன் இலையேல் வன்னரகத் துள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.
- கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
- தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்
- கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
- எள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.
- இருந்தாய் இங்கு கண்டவிடத் தேகா நின்றாய் அவ்விடத்தும்
- பொருந்தாய் மீண்டும் புகுவாய்பின் போவாய் வருவாய் புகழ்த்தணிகை
- மருந்தாய் நின்ற குகன்அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய்
- திருந்தாய் நெஞ்சே நின்செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.
- மஞ்சட் பூச்சின் மினுக்கில்இ ளைஞர்கள்
- மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
- கெஞ்சிக் கொஞ்சி நிறைஅழிந் துன்அருட்
- கிச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன்
- மஞ்சுற் றோங்கும் பொழில்தணி காசல
- வள்ளல் என்வினை மாற்றுதல் நீதியே
- தஞ்சத் தால்வந் தடைந்திடும் அன்பர்கள்
- தம்மைக் காக்கும் தனிஅருட் குன்றமே.
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- பாவம் ஓர்உரு வாகிய பாவையர்
- பன்னு கண்வலைப் பட்டும யங்கியே
- கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின்
- குரைக ழற்கன்பு கொண்டிலன் ஆயினேன்
- மேவு வார்வினை நீக்கிஅ ளித்திடும்
- வேல னேதணி காசல மேலனே
- தேவர் தேடரும் சீர்அருட் செல்வனே
- தெய்வ யானை திருமண வாளனே.
- கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே
- கடைய னேன்உயிர் வாட்டிய கன்னியர்
- உரத்தைக் காட்டி மயக்கம யங்கினேன்
- உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன்
- புரத்தைக் காட்டு நகையின்எ ரித்ததோர்
- புண்ணி யற்குப் புகல்குரு நாதனே
- வரத்தைக் காட்டும் மலைத்தணி கேசனே
- வஞ்ச னேற்கருள் வாழ்வுகி டைக்குமோ.
- காசம் மேகம் கடும்பிணி சூலைமோ
- காதி யால்தந்து கண்கலக் கம்செயும்
- மோச மேநிசம் என்றுபெண் பேய்களை
- முன்னி னேன்நினை முன்னிலன் ஆயினேன்
- பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல்எனைப்
- பாது காக்கும் பரம்உனக் கையனே
- தேசம் யாவும் புகழ்தணி காசலச்
- செல்வ மேஅருட் சிற்சுக வாரியே.
- ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும்
- ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல்
- குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன்
- கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன்
- மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ்
- வள்ள லேவள்ளி நாயக னேபுவிச்
- சைய றும்பர ஞானிகள் போற்றிடும்
- சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே.
- கச்சுக் கட்டி மணங்கட்டிக் காமுகர்
- கண்ணைக் கட்டி மனங்கட்டி வஞ்சகம்
- வச்சுக் கட்டிய வன்கழற் கட்டியும்
- மண்ணின் கட்டியும் மானும்மு லைக்கட்டிக்
- கிச்சைக் கட்டிஇ டும்பைஎ னும்சுமை
- ஏறக் கட்டிய எற்கருள் வாய்கொலோ
- பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே
- பெருமை கட்டும் பெருந்தணி கேசனே.
- தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
- கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
- கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
- வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
- கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
- தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
- மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
- சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
- பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
- வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
- அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
- குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
- மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
- சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
- வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
- மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
- நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
- சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
- வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
- உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
- அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
- வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
- ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
- தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
- வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
- நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ
- கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள்நீர் உண்ணேனோ
- சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ
- காட்டும் அவர்தாள் கண்ணேனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.
- மணியே கலாப மலைமேல் அமர்ந்த மதியே நினைச்சொல் மலரால்
- அணியேன் நல்அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடிக்கண் மகிழ்வாய்ப்
- பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்த படியே
- எணியே நினைக்கில் அவமாம்இவ் வேழை எதுபற்றி உய்வ தரசே.
- உய்வண்ணம் இன்றி உலகா தரத்தில் உழல்கின்ற மாய மடவார்
- பொய்வண்ணம் ஒன்றின் மனமாழ்கி அன்மை புரிதந்து நின்ற புலையேன்
- மெய்வண்ணம் ஒன்று தணிகா சலத்து மிளிர்கின்ற தேவ விறல்வேல்
- கைவண்ண உன்றன் அருள்வண்ணம் ஆன கழல்வண்ணம் நண்ணல் உளதோ.
- முதுவோர் வணங்கு தணிகா சலத்து முதலேஇவ் வேழை முறியேன்
- மதுவால் மயங்கும் அளிபோல் மயங்கி மதியாது நின்ற பிழையால்
- விதுவாகி அன்பர் உளம்மேவும் நீகை விடில்ஏழை எங்கு மெலிவேன்
- இதுநீதி அல்ல எனஉன் றனக்கும் எவர்சொல்ல வல்லர் அரசே.
- திரப்படுவேன் மையல்புரி மாய வாழ்வில்
- தியங்குவேன் சிறிதேனும் தெளிவொன் றில்லேன்
- மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே
- மங்கையர்தம் கண்கள்எனும் வலைக்குள் வீழ்வேன்
- கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன்
- கண்அனையாய் நின்தணிகை மலையைக் காணேன்
- இரப்பவர்க்கோர் அணுவளவும் ஈயேன் பேயேன்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- சீர்கொண்டார் புகழ்தணிகை மலையிற் சேரேன்
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநின்
- பேர்கொண்டார் தமைவணங்கி மகிழேன் பித்தேன்
- பெற்றதே அமையும்எனப் பிறங்கேன் மாதர்
- வார்கொண்டார் முலைமலைவீழ்ந் துருள்வேன் நாளும்
- வஞ்சமே செய்திடுவேன் மதிஒன் றில்லேன்
- ஏர்கொண்டார் இகழ்ந்திடஇங் கேழை யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
- நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
- வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
- வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
- சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
- செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
- என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அல்லார்க்கும் குழலார்மேல் ஆசை வைப்பேன்
- ஐயாநின் திருத்தாள்மேல் அன்பு வையேன்
- செல்லார்க்கும் பொழில்தணிகை எங்கே என்று
- தேடிடேன் நின்புகழைச் சிந்தை செய்யேன்
- கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்க ணேன்புன்
- கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்
- எல்லார்க்கும் பொல்லாத பாவி யேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
- அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
- திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
- திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
- கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
- காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
- இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- வரங்கொள் அடியர் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே
- திரங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே
- தரங்கொள் உலக மயல்அகலத் தாழ்ந்துள் உருக அழுதழுது
- கரங்கொள் சிரத்தோ டியான்உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வல்லி ஒருபால் வானவர்தம் மகளாண் டொருபால் வரமயில்மேல்
- எல்லின் இலங்கு நெட்டிலைவேல் ஏந்தி வரும்என் இறையவனே
- சொல்லி அடங்காத் துயர்இயற்றும் துகள்சேர் சன்னப் பெருவேரைக்
- கல்லி எறிந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- உருத்துள் இகலும் சூர்முதலை ஒழித்து வானத் தொண்பதியைத்
- திருத்தும் அரைசே தென்தணிகைத் தெய்வ மணியே சிவஞானம்
- அருத்தும் நினது திருவருள்கொண் டாடிப் பாடி அன்பதனால்
- கருத்துள் உருகி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வீட்டைப் பெறுவோர் உள்அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்தம்
- நாட்டை நலஞ்செய் திருத்தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே
- கேட்டைத் தருவஞ் சகஉலகில் கிடைத்த மாய வாழ்க்கைஎனும்
- காட்டைக் கடந்து நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- இலக்கம் அறியா இருவினையால் இம்மா னிடம்ஒன் றெடுத்தடியேன்
- விலக்கம் அடையா வஞ்சகர்பால் வீணாட் போக்கி மேவிமனத்
- தலக்கண் இயற்றும் பொய்வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசேஅக்
- கலக்கம் அகன்று நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- விரைவாய் கடப்பந் தார்அணிந்து விளங்கும் புயனே வேலோனே
- தரைவாய் தவத்தால் தணிகைஅமர் தருமக் கடலே தனிஅடியேன்
- திரைவாய் சனனக் கடற்படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக்
- கரைவாய் ஏறி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
- நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
- வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
- தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
- வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
- மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
- தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
- தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
- கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
- ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
- தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
- மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.
- வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
- பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
- மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
- செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
- பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
- வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
- மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
- கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.
- வான்பிறந்தார் புகழ்தணிகை மலையைக் கண்டு
- வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன்
- தேன்பிறந்த மலர்க்குழலார்க் காளா வாளா
- திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும்
- ஊன்பிறந்த உடல்ஓம்பி அவமே வாழ்நாள்
- ஒழிக்கின்றேன் பழிக்காளாய் உற்றேன் அந்தோ
- ஏன்பிறந்தேன் ஏன்பிறந்தேன் பாவி யேன்யான்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மெய்யாவோ நற்றணிகை மலையைச் சார்ந்து
- மேன்மையுறும் நின்புகழை விரும்பி ஏத்தேன்
- உய்யாவோ வல்நெறியேன் பயன்ப டாத
- ஓதிஅனையேன் எட்டிதனை ஒத்தேன் அன்பர்
- பொய்யாஓ டெனமடவார் போகம் வேட்டேன்
- புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன்
- ஐயாவோ நாணாமல் பாவி யேன்யான்
- யார்க்கெடுத்தென் குறைதன்னை அறைகு வேனே.
- வாட்செல்லா நெடுங்கண்ணார் மயலில் வீழ்ந்து
- மனம்போன வழிசென்று வருந்தா நின்றேன்
- சேட்செல்லார் வரைத்தணிகைத் தேவ தேவே
- சிவபெருமான் பெற்றபெருஞ் செல்வ மேநான்
- நாட்செல்லா நின்றதினி என்செய் கேனோ
- நாயினேன் பிழைதன்னை நாடி நின்பால்
- கோட்சொல்லா நிற்பர்எனில் என்னா மோஎன்
- குறையைஎடுத் தெவர்க்கெளியேன் கூறு கேனே.
- பொல்லாத மங்கையர்தம் மயற்குள் ஆகும்
- புலையமனத் தால்வாடிப் புலம்பு கின்றேன்
- கல்லாத பாவிஎன்று கைவிட் டாயோ
- கருணைஉரு வாகியசெங் கரும்மே மேரு
- வில்லான்தன் செல்வமே தணிகை மேவும்
- மெய்ஞ்ஞான ஒளியேஇவ் வினையேன் துன்பம்
- எல்லாம்நீ அறிவாயே அறிந்தும் வாரா
- திருந்தால்என் குறையைஎவர்க் கியம்பு கேனே.
- முன்அறியேன் பின்அறியேன் மாதர் பால்என்
- மூடமனம் இழுத்தோடப் பின்சென் றெய்த்தேன்
- புன்னெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன்
- புனிதஅருட் கடலாடேன் புளகம் மூடேன்
- பொன்அரையன் தொழும்சடிலப் புனிதன் ஈன்ற
- புண்ணியமே தணிகைவளர் போத வாழ்வே
- என்அரைசே என்அமுதே நின்பால் அன்றி
- எவர்க்கெடுத்தென் குறைதன்னை இயம்பு கேனே.
- விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
- வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
- தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
- சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
- படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
- பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
- இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- முலைஒருபால் முகம்ஒருபால் காட்டும் பொல்லா
- மூடமட வார்கள்தமை முயங்கி நின்றேன்
- இலைஒருபால் அனம்ஒருபால் மலஞ்சேர்த் துண்ணும்
- ஏழைமதி யேன்தணிகை ஏந்த லேபொன்
- மலைஒருபால் வாங்கியசெவ் வண்ண மேனி
- வள்ளல்தரு மருந்தேநின் மலர்த்தாள் ஏத்தேன்
- புலைஒருவா வஞ்சகநெஞ் சுடையேன் என்றன்
- புன்மைதனை எவர்க்கெடுத்துப் புகலு வேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வஞ்சமட மாதரார் போகம் என்னும்
- மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன்
- கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக்
- காணாத செங்கனியில் கனிந்த தேனே
- தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல்
- தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன்
- எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- அன்பின் உனது திருஅடிக்கே ஆளாய்த் தொண்டொன் றாற்றாதே
- துன்பின் உடையோர் பால்அணுகிச் சோர்ந்தேன் இனிஓர் துணைகாணேன்
- என்பில் மலிந்த மாலைபுனை எம்மான் தந்த பெம்மானே
- முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.
- அருகா மலத்தின் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
- உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
- பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
- முருகா முகம்மூ விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ.
- வேதா நந்த னொடுபோற்றி மேவப் படும்நின் பதம்மறந்தே
- ஈதா னம்தந் திடுவீர்என் றீன ரிடம்போய் இரந்தலைந்தேன்
- போதா னந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே.
- மூதா னந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.
- வடியாக் கருணை வாரிதியாம் வள்ளல் உன்தாள் மலர்மறந்தே
- கொடியா ரிடம்போய்க்குறையிரந்தேன் கொடியேன் இனிஓர் துணைகாணேன்
- அடியார்க் கெளிய முக்கணுடை அம்மான் அளித்த அருமருந்தே
- முடியா முதன்மைப் பெரும்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
- மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
- பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
- புண்ணி யாஅருட் போதக நாதா
- துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
- து‘ய னேபசுந் தோகைவா கனனே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
- கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
- பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
- வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
- புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
- பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
- அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
- அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
- பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
- மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
- வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
- வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.
- காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
- வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
- தூய்நின்றே தாளைத்தொழுதாடித் துன்பம்எலாம்
- போய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.
- வன்நோயும் வஞ்சகர்தம் வன்சார்பும் வன்துயரும்
- என்னோயுங் கொண்டதனை எண்ணி இடிவேனோ
- அன்னோ முறைபோகி ஐயா முறையேயோ
- மன்னோ முறைதணிகை வாழ்வே முறையேயோ.
- தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக்
- காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
- மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல்
- நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.
- கடைப்பட் டேங்கும்இந் நாயினுக் கருள்தரக் கடவுள்நீ வருவாயேல்
- மடைப்பட் டோங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்துனைத் தடுப்பாரேல்
- தடைப்பட் டாய்எனில் என்செய்வேன் என்செய்வேன் தளர்வது தவிரேனே
- அடைப்பட் டோங்கிய வயல்திருத் தணிகையம் பதிஅமர்ந் திடுதேவே.
- தேவ ரேமுதல் உலகங்கள் யாவையும் சிருட்டிஆ தியசெய்யும்
- மூவ ரேஎதிர் வருகினும் மதித்திடேன் முருகநின் பெயர்சொல்வோர்
- யாவ ரேனும்என் குடிமுழு தாண்டெனை அளித்தவர் அவரேகாண்
- தாவ நாடொணாத் தணிகையம் பதியில்வாழ் சண்முகப் பெருமானே.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
- நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
- பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
- மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
- மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப்பெறு வார்காண்
- சீலாசிவ லீலாபர தேவாஉமை யவள்தன்
- பாலாகதிர் வேலாஎனப் பதிநீறணிந் திடிலே.
- அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
- மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
- சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
- முகமாறுடை முதல்வாஎன முதிர்நீறணிந் திடிலே.
- சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமும்ஓர்
- நந்தாஎழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
- இந்தாஎனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
- கந்தாசிவன் மைந்தாஎனக் கனநீறணிந் திடிலே.
- என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
- நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.
- போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
- புண்ணிய நின்திரு அடிக்கே
- யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
- யாதுநின் திருஉளம் அறியேன்
- தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
- செய்திடா திருப்பையோ சிறியோன்
- ஏதிவன் செயல்ஒன் றிலைஎனக் கருதி
- ஈவையோ தணிகைவாழ் இறையே.
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
- வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
- கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
- தாளாகும் நீழல் அதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
- நாளாகும் நாள்எந்த நாள்அறி யேன்தணி காசலனே.
- என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயில் ஏறிவரும்
- மன்னே எனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
- தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தைஅருள்
- பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
- பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயுலக
- வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யும்மயங்கேல்
- போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த
- தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.
- இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும்
- இலைநெடு வேற்கணார் அளகச்
- சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன்
- திருவடிக் காக்கும்நாள் உளதோ
- மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
- வள்ளலே உள்ளகப் பொருளே
- அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
- அணிதிருத் தணிகைவாழ் அரைசே.
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
- அலர்முலை அணங்கனார் அல்குல்
- புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
- பாலனே வேலுடை யவனே
- விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
- வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
- விளக்குறழ் மணிப்பூண் மேல்அணிந் தோங்கி
- விம்முறும் இளமுலை மடவார்
- களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
- கழல்அடிக் காக்கும்நாள் உளதோ
- அளக்கருங் கருணை வாரியே ஞான
- அமுதமே ஆனந்தப் பெருக்கே
- கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பில்
- கிளர்ந்தருள் புரியும்என் கிளையே.
- கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
- கீழுறும் அல்குல்என் குழிவீழ்ந்
- திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
- இணைஅடிக் காக்கும்நாள் உளதோ
- விளைக்கும்ஆ னந்த வியன்தனி வித்தே
- மெய்அடி யவர்உள விருப்பே
- திளைக்கும்மா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
- தெய்வமே அருட்செழுந் தேனே.
- தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
- திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
- கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
- கழல்வழி நடத்தும்நாள் உளதோ
- மான்வழி வரும்என் அம்மையை வேண்டி
- வண்புனத் தடைந்திட்ட மணியே
- வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை
- மாமலை அமர்ந்தருள் மருந்தே.
- மருந்தென மயக்கும் குதலைஅந் தீஞ்சொல்
- வாணுதல் மங்கையர் இடத்தில்
- பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
- ஆனந்தத் தேறலே அமுதே
- இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
- இனிதமர்ந் தருளிய இன்பே.
- இன்பமற் றுறுகண் விளைவிழி நிலமாம்
- ஏந்திழை யவர்புழுக் குழியில்
- துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
- துணையடிக் காக்கும்நாள் உளதோ
- அன்பர்முற் றுணர அருள்செயும் தேவே
- அரிஅயன் பணிபெரி யவனே
- வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
- மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.
- வாழும்இவ் வுலக வாழ்க்கையை மிகவும்
- வலித்திடும் மங்கையர் தம்பால்
- தாழும்என் கொடிய மனத்தினை மீட்டுன்
- தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
- சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் ஒளியே
- தோற்றம்ஈ றற்றசிற் சுகமே
- ஊழும்உற் பவம்ஓர் ஏழும்விட் டகல
- உதவுசீர் அருட்பெருங் குன்றே.
- மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
- முறியனேன் தனக்குநின் அடியாம்
- ஏடவிழ் கமலத் திருநற வருந்த
- என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
- ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
- ஐயருக் கொருதவப் பேறே
- கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே
- ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
- நாயினும் கடையஇந் நாய்க்குன்
- சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
- தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
- ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
- அருள்பழுத் தளிந்தசெங் கனியே
- கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
- றலைந்திடும் பாவியேன் இயற்றும்
- பழிதரும் பிழையை எண்ணுறேல் இன்று
- பாதுகாத் தளிப்பதுன் பரமே
- மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
- முத்தமே முக்தியின் முதலே
- கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
- பதகர்பால் நாள்தொறும் சென்றே
- வாடிநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
- வாட்டம்இங் கறிந்திலை என்னே
- ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
- அகம்மகிழ் அரும்பெறல் மருந்தே
- கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- சகம்ஆ றுடையார் அடையா நெறியார்
- சடையார் விடையார் தனிஆனார்
- உகமா ருடையார் உமைஓர் புடையார்
- உதவும் உரிமைத் திருமகனார்
- முகம்ஆ றுடையார் முகம்மா றுடையார்
- எனவே எனது முன்வந்தார்
- அகமா ருடையேன் பதியா தென்றேன்
- அலைவாய் என்றார் அஃதென்னே.
- விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
- விதிமால் அறியா விமலனார்
- மதுவாழ் குழலாள் புடைவாழ் உடையார்
- மகனார் குகனார் மயில்ஊர்வார்
- முதுவாழ் வடையா தவமே அலைவேன்
- முன்வந் திடயான் அறியாதே
- புதுவாழ் வுடையார் எனவே மதிபோய்
- நின்றேன் அந்தோ பொல்லேனே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- பொன்னார் புயனார் புகழும் புகழார்
- புலியின் அதளார் புயம்நாலார்
- தென்னார் சடையார் கொடிமேல் விடையார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- என்நா யகனார் என்னுயிர் போல்வார்
- எழின்மா மயிலார் இமையோர்கள்
- தந்நா யகனார் தணிகா சலனார்
- தனிவந் திவண்மால் தந்தாரே.
- காரூர் சடையார் கனலார் மழுவார்
- கலவார் புரமூன் றெரிசெய்தார்
- ஆரூர் உடையார் பலிதேர்ந் திடும்எம்
- அரனார் அருமைத் திருமகனார்
- போரூர் உறைவார் தணிகா சலனார்
- புதியார் எனஎன் முனம்வந்தார்
- ஏரூர் எமதூ ரினில்வா என்றார்
- எளியேன் ஏமாந் திருந்தேனே.
- கண்ணார் நுதலார் விடமார் களனார்
- கரமார் மழுவார் களைகண்ணார்
- பெண்ணார் புயனார் அயன்மாற் கரியார்
- பெரியார் கைலைப் பெருமானார்
- தண்ணார் சடையார் தருமா மகனார்
- தணிகா சலனார் தனிவேலார்
- எண்ணார் எளியாள் இவள்என் றெனையான்
- என்செய் கேனோ இடர்கொண்டே.
- மழுவார் தருகைப் பெருமான் மகனார்
- மயில்வா கனனார் அயில்வேலார்
- தழுவார் வினையைத் தணியார் அணியார்
- தணிகா சலனார் தம்பாதம்
- தொழுவார் அழுவார் விழுவார் எழுவார்
- துதியா நிற்பார் அவர்நிற்கப்
- புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந்
- தருள்தந் தருளிப் போனாரே.
- நிருத்தம் பயின்றார் கடல்நஞ் சயின்றார்
- நினைவார் தங்கள் நெறிக்கேற்க
- அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர்
- அறுமா முகனார் அயில்வேலார்
- திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத்
- திருமா மலையார் ஒருமாதின்
- வருத்தம் பாரார் வளையும் தாரார்
- வாரார் அவர்தம் மனம்என்னே.
- பிரமன் தலையில் பலிகொண் டெருதில்
- பெயரும் பிச்சைப் பெருமானார்
- திரமன் றினிலே நடனம் புரிவார்
- சிவனார் மகனார் திறல்வேலார்
- தரமன் றலைவான் பொழில்சார் எழில்சேர்
- தணிகா சலனார் தமியேன்முன்
- வரமன் றவும்மால் கொளநின் றனனால்
- மடவார் அலரால் மனநொந்தே.
- பரங்கிரி அமருங் கற்பகத் தருவைப்
- பராபரஞ் சுடரினை எளியேற்
- கிரங்கிவந் தருளும் ஏரகத் திறையை
- எண்ணுதற் கரியபேர் இன்பை
- உரங்கிளர் வானோர்க் கொருதனி முதலை
- ஒப்பிலா தோங்கிய ஒன்றைத்
- தரங்கிளர் அருண கிரிக்கருள் பவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- மாரனை எரித்தோன் மகிழ்திரு மகனை
- வாகையம் புயத்தனை வடிவேல்
- தீரனை அழியாச் சீரனை ஞானச்
- செல்வனை வல்வினை நெஞ்சச்
- சூரனைத் தடிந்த வீரனை அழியாச்
- சுகத்தனைத் தேன்துளி கடப்பந்
- தாரனைக் குகன்என் பேருடை யவனைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- குழகனை அழியாக் குமரனை அட்ட
- குணத்தனைக் குறித்திடல் அறிதாம்
- அழகனைச் செந்தில் அப்பனை மலைதோ
- றாடல்வாழ் அண்ணலைத் தேவர்
- கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
- காலனை வேலனை மனதில்
- சழகிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- ஈறி லாதநின் அருள்பெற எனக்கினும் எத்தனை நாட்செல்லும்
- மாறி லாதவர் மனத்தொளிர் சோதியே மயில்மிசை வரும்வாழ்வே
- து‘றி லாவளச் சோலைசூழ் தணிகைவாழ் சுத்தசின் மயத்தேவே
- ஊறி லாப்பெரு நிலையஆ னந்தமே ஒப்பிலான் அருட்பேறே.
- கூழை மாமுகில் அனையவர் முலைத்தலைக் குளித்துழன் றலைகின்ற
- ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள்செல்லும் இடர்க்கடல் விடுத்தேற
- மாழை மேனியன் வழுத்துமா ணிக்கமே வாழ்த்துவா ரவர்பொல்லா
- ஊழை நீக்கிநல் அருள்தருந் தெய்வமே உத்தமச் சுகவாழ்வே.
- பாவி யேன் இன்னும் எத்தனை நாள்செலும் பருவரல் விடுத்துய்யக்
- கூவி யேஅன்பர்க் கருள்தரும் வள்ளலே குணப்பெருங் குன்றேஎன்
- ஆவி யேஎனை ஆள்குரு வடிவமே ஆனந்தப் பெருவாழ்வே
- வாவி ஏர்தரும் தணிகைமா மலைமிசை மன்னிய அருள்தேனே.
- தொண்ட னேன்இன்னும் எத்தனை நாள்செலும் துயர்க்கடல் விடுத்தேற
- அண்ட னேஅண்டர்க் கருள்தரும் பரசிவன் அருளிய பெருவாழ்வே
- கண்ட னேகர்வந் தனைசெய அசுரனைக் களைந்தருள் களைகண்ணே
- விண்ட னேர்புகுஞ் சிகரிசூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.
- வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீந்தக்
- காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
- தூண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
- ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.
- கடைய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் கடுந்துயர்க் கடல்நீந்த
- விடையின் ஏறிய சிவபிரான் பெற்றருள் வியன்திரு மகப்பேறே
- உடைய நாயகிக் கொருபெருஞ் செல்வமே உலகெலாம் அளிப்போனே
- அடைய நின்றவர்க் கருள்செயுந் தணிகைவாழ் ஆனந்தத் தெளிதேனே.
- பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த
- மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச்
- சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந்
- தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே.
- கல்லை ஒத்தஎன் நெஞ்சினை உருக்கேன்
- கடவுள் நின்அடி கண்டிட விழையேன்
- அல்லை ஒத்தகோ தையர்க்குளங் குழைவேன்
- அன்பி லாரொடும் அமர்ந்தவம் உழல்வேன்
- தில்லை அப்பன்என் றுலகெடுத் தேத்தும்
- சிவபி ரான்தருஞ் செல்வநின் தணிகை
- எல்லை உற்றுனை ஏத்திநின் றாடேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
- மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
- ஐய நின்திரு அடித்துணை மறவா
- அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
- உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
- உடைய நாயகன் உதவிய பேறே
- எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- புலைய மாதர்தம் போகத்தை விழைந்தேன்
- புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
- நிலைய மாம்திருத் தணிகையை அடையேன்
- நிருத்தன் ஈன்றருள் நின்மலக் கொழுந்தே
- விலையி லாதநின் திருவருள் விழையேன்
- வீணர் தங்களை விரும்பிநின் றலைந்தேன்
- இலைஎ னாதணு வளவும் ஒன்றீயேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மருட்டு மங்கையர் புழுக்குழி ஆழ்ந்து
- வருந்தி நாள்தொறும் மனம்இளைக் கின்றேன்
- தெருட்டும் நின்திருத் தணிகையை அடையேன்
- சிவபி ரான்பெற்ற செல்வமே நினது
- அருட்டி றத்தினை நினைந்துநெக் குருகி
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திட நில்லேன்
- இருட்டு வாழ்க்கையில் இடறிவீழ் கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- நச்சி லேபழ கியகருங் கண்ணார்
- நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன்
- பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன்
- பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன்
- சச்சி12 லேசிவன் அளித்திடும் மணியே
- தங்கமே உன்றன் தணிகையை விழையேன்
- எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
- வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
- புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
- பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
- அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
- அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
- என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பட்டி மாடெனத் திரிதரும் மடவார்
- பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன்
- தட்டி லார்புகழ் தணிகையை அடையேன்
- சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே
- ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன்
- உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன்
- எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- ஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்
- உவர்ப்புக் கேணியில் உழைத்தகம் இளைத்தேன்
- வீங்கி நீண்டதோர் ஓதிஎன நின்றேன்
- விழலுக் கேஇறைத் தலைந்தனன் வீணே
- தாங்கி னேன்உடற் சுமைதனைச் சிவனார்
- தனய நின்திருத் தணிகையை அடையேன்
- ஏங்கி னேன்சுழற் படுதுரும் பெனவே
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பண்அ ளாவிய மொழியினால் மயக்கும்
- படிற்று மங்கையர் பால்விழை வுற்றேன்
- தண்அ ளாவிய சோலைசூழ் தணிகைத்
- தடத்த ளாவிய தருமநல் தேவே
- பெண்அ ளாவிய புடையுடைப் பெருமான்
- பெற்ற செல்வமே அற்றவர்க் கமுதே
- எண்அ ளாவிய வஞ்சக நெஞ்சோ
- டென்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- கான்அ றாஅள கத்தியர் அளக்கர்
- காமத் தாழ்ந்தகங் கலங்குற நின்றேன்
- வான மேவுறும் பொழில்திருத் தணிகை
- மலையை நாடிநின் மலர்ப்பதம் புகழேன்
- ஞான நாயகி ஒருபுடை அமர்ந்த
- நம்ப னார்க்கொரு நல்தவப் பேறே
- ஈனன் ஆகிஇங் கிடர்ப்படு கின்றேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- வாரார்முலை உமையாள்திரு மணவாளர்தம் மகனார்
- ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார்
- நேரார்பணி மயிலின்மிசை நின்றார்அது கண்டேன்
- நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே.
- ஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்
- என்றோடிகல் எழிலார்மயில் ஏறிஅங் குற்றார்
- நன்றோடினன் மகிழ்கூர்ந்தவர் நகைமாமுகங் கண்டேன்
- கன்றோடின பசுவாடின கலைஊடின அன்றே.
- மலைவாங்குவில் அரனார்திரு மகனார்பசு மயிலின்
- நிலைதாங்குற நின்றார்அவர் நிற்கும்நிலை கண்டேன்
- அலைதீங்கின குழல்தூங்கின அகம்ஏங்கின அரைமேல்
- கலைநீங்கின முலைவீங்கின களிஓங்கின அன்றே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கண்ணிமதி புனைந்தசடைக் கனியே முக்கட்
- கரும்பேஎன் கண்ணேமெய்க் கருணை வாழ்வே
- புண்ணியநல் நிலைஉடையோர் உளத்தில் வாய்க்கும்
- புத்தமுதே ஆனந்த போக மேஉள்
- எண்ணியமெய்த் தவர்க்கெல்லாம் எளிதில் ஈந்த
- என்அரசே ஆறுமுகத் திறையாம் வித்தே
- திண்ணியஎன் மனம்உருக்கிக் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ.
- நின்னிருதாள் துணைபிடித்தே வாழ்கின் றேன்நான்
- நின்னைஅலால் பின்னைஒரு நேயம் காணேன்
- என்னைஇனித் திருவுளத்தில் நினைதி யோநான்
- ஏழையினும் ஏழைகண்டாய் எந்தாய் எந்தாய்
- பொன்னைஅன்றி விரும்பாத புல்லர் தம்பால்
- போகல்ஒழிந் துன்பதமே போற்றும் வண்ணம்
- சின்னம்அளித் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கல்விஎலாம் கற்பித்தாய் நின்பால் நேயம்
- காணவைத்தாய் இவ்வுலகம் கானல் என்றே
- ஒல்லும்வகை அறிவித்தாய் உள்ளே நின்றென்
- உடையானே நின்அருளும் உதவு கின்றாய்
- இல்லைஎனப் பிறர்பால்சென் றிரவா வண்ணம்
- ஏற்றம்அளித் தாய்இரக்கம் என்னே என்னே
- செல்வஅருட் குருவாகி நாயி னேனைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே
- என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே
- மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும்
- மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான்
- இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான்
- எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால்
- சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- மாறாத பெருஞ்செல்வ யோகர் போற்றும்
- மாமணியே ஆறுமுக மணியே நின்சீர்
- கூறாத புலைவாய்மை உடையார் தம்மைக்
- கூடாத வண்ணம்அருட் குருவாய் வந்து
- தேறாத நிலைஎல்லாம் தேற்றி ஓங்கும்
- சிவஞானச் சிறப்படைந்து திகைப்பு நீங்கிச்
- சீறாத வாழ்விடைநான் வாழ என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்றறிந்த மெய்உணர்ச்சி உடையோர் உள்ளக்
- கமலத்தே ஓங்குபெருங் கடவு ளேநின்
- பொற்றகைமா மலரடிச்சீர் வழுத்து கின்ற
- புண்ணியர்தங் குழுவில்எனைப் புகுத்தி என்றும்
- உற்றவருள் சிந்தனைதந் தின்ப மேவி
- உடையாய்உன் அடியவன்என் றோங்கும் வண்ணம்
- சிறறறிவை அகற்றிஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- ஞாலம்எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண்
- நாயகனே வடிவேற்கை நாத னேநான்
- கோலம்எலாம் கொயேன்நற் குணம்ஒன் றில்லேன்
- குற்றமே விழைந்தேன்இக் கோது ளேனைச்
- சாலம்எலாம் செயும்மடவார் மயக்கின் நீக்கிச்
- சன்மார்க்கம் அடையஅருள் தருவாய் ஞானச்
- சீலம்எலாம் உடையஅருட் குருவாய் வந்து
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- கற்பனையே எனும்உலகச் சழக்கில் அந்தோ
- கால்ஊன்றி மயங்குகின்ற கடைய னேனைச்
- சொற்பனம்இவ் வுலகியற்கை என்று நெஞ்சம்
- துணிவுகொளச் செய்வித்துன் துணைப்பொற் றாளை
- அற்பகலும் நினைந்துகனிந் துருகி ஞான
- ஆனந்த போகம்உற அருளல் வேண்டும்
- சிற்பரசற் குருவாய்வந் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- பன்னிருகண் மலர்மலர்ந்த கடலே ஞானப்
- பரஞ்சுடரே ஆறுமுகம் படைத்த கோவே
- என்னிருகண் மணியேஎந் தாயே என்னை
- ஈன்றானே என்அரசே என்றன் வாழ்வே
- மின்னிருவர் புடைவிளங்க மயில்மீ தேறி
- விரும்பும்அடி யார்காண மேவுந் தேவே
- சென்னியில்நின் அடிமலர்வைத் தென்னை முன்னே
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
- கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
- திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
- இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே.
- புகுவா னவர்தம் இடர்முழுதும் போக்கும் கதிர்வேல் புண்ணியனே
- மிகுவான் முதலாம் பூதம்எலாம் விதித்தே நடத்தும் விளைவனைத்தும்
- தகுவான் பொருளாம் உனதருளே என்றால் அடியேன் தனைஇங்கே
- நகுவான் வருவித் திருள்நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.
- அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம்மேவும்
- குழகா குமரா எனைஆண்ட கோவே நின்சீர் குறியாரைப்
- பழகா வண்ணம் எனக்கருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்
- கழகா தரவாம் பணிபுரிவார் அடியார்க் கடிமை ஆக்குகவே.
- புரிவேன் விரதம் தவந்தானம் புரியா தொழிவேன் புண்ணியமே
- பரிவேன் பாவம் பரிவேன்இப் பரிசால் ஒன்றும் பயன்காணேன்
- திரிவேன் நினது புகழ்பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல்
- எரிவேன் எரிவாய் நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.
- வலத்தால் வடிவேல் கரத்தேந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற
- நலத்தால்உயர்ந்த பெருந்தவர்பால் நண்ணும் பரிசு நல்கினையேல்
- தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற் கிணையோ சடமான
- மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.
- இன்பப் பெருக்கே அருட்கடலே இறையே அழியா இரும்பொருளே
- அன்பர்க் கருளும் பெருங்கருணை அரசே உணர்வால் ஆம்பயனே
- வன்பர்க் கரிதாம் பரஞ்சோதி வடிவேல் மணியே அணியேஎன்
- துன்பத் திடரைப் பொடியாக்கிச் சுகந்தந் தருளத் துணியாயே.
- ஆறு முகமும் திணிதோள்ஈ ராறும் கருணை அடித்துணையும்
- வீறு மயிலும் தனிக்கடவுள் வேலும் துணைஉண் டெமக்கிங்கே
- சீறும் பிணியும் கொடுங்கோளும் தீய வினையும் செறியாவே
- நாறும் பகட்டான் அதிகாரம் நடவா துலகம் பரவுறுமே.
- அடியார்க் கெளியர் எனும்முக்கன் ஐயர் தமக்கும் உலகீன்ற
- அம்மை தனக்கும் திருவாய்முத் தளித்துக் களிக்கும் அருமருந்தே
- கடியார் கடப்ப மலர்மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே
- கண்ணுள் மணியே அன்பர்மனக் கமலம் விரிக்கும் கதிரொளியே
- படியார் வளிவான் தீமுதல்ஐம் பகுதி யாய பரம்பொருளே
- பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படைமுழுதும்
- தடிவாய் என்னச் சுரர்வேண்டத் தடிந்த வேற்கைத் தனிமுதலே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான் தனக்கருமைப்
- பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக் களிக்கும் பெருவாழ்வே
- மத்தப் பெருமால் நீக்கும்ஒரு மருந்தே எல்லாம் வல்லோனே
- வஞ்சச் சமண வல்இருளை மாய்க்கும் ஞான மணிச்சுடரே
- அத்தக் கமலத் தயிற்படைகொள் அரசே மூவர்க் கருள்செய்தே
- ஆக்கல் அளித்தல் அழித்தல்எனும் அம்முத் தொழிலும் தருவோனே
- சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் அகற்றும் என்அரசே என்ஆ ருயிரே என்அறிவே
- என்கண் ஒளியே என்பொருளே என்சற் குருவே என்தாயே
- காத மணக்கும் மலர்கடப்பங் கண்ணிப் புயனே காங்கெயனே
- கருணைக் கடலே பன்னிருகண் கரும்பே இருவர் காதலனே
- சீத மதியை முடித்தசடைச் சிவனார் செல்வத் திருமகனே
- திருமா லுடன்நான் முகன்மகவான் தேடிப் பணியும் சீமானே
- சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம் புயனே சத்தியனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மாலும் அயனும் உருத்திரனும் வானத் தவரும் மானிடரும்
- மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும்
- ஆலும் கதியும் சதகோடி அண்டப் பரப்புந் தானாக
- அன்றோர் வடிவம் மேருவிற்கொண் டருளுந் தூய அற்புதமே
- வேலும் மயிலும் கொண்டுருவாய் விளையாட் டியற்றும் வித்தகமே
- வேதப் பொருளே மதிச்சடைசேர் விமலன் தனக்கோர் மெய்ப்பொருளே
- சாலும் சுகுணத் திருமலையே தவத்தோர் புகழும் தற்பரனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- முருகா எனநின் றேத்தாத மூட ரிடம்போய் மதிமயங்கி
- முன்னும் மடவார் முலைமுகட்டின் முயங்கி அலைந்தே நினைமறந்தேன்
- உருகா வஞ்ச மனத்தேனை உருத்தீர்த் தியமன் ஒருபாசத்
- துடலும் நடுங்க விசிக்கில்அவர்க் குரைப்ப தறியேன் உத்தமனே
- பருகா துள்ளத் தினித்திருக்கும் பாலே தேனே பகர்அருட்செம்
- பாகே தோகை மயில்நடத்தும் பரமே யாவும் படைத்தோனே
- தருகா தலித்தோன் முடிகொடுத்த தரும துரையே தற்பரனே
- தணிகா சலமாந் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே
- இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே
- தெருளுறு நீற்றினைச் சிவஎன் றுட்கொளில்
- அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.
- வல்வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்தம்
- கொல்வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே
- இல்வினைச் சண்முக என்று நீறிடில்
- நல்வினை பழுக்கும்ஓர் நாடு வாய்க்குமே.
- அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில்
- என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே
- இன்பறாச் சண்முக என்று நீறிடில்
- துன்புறாத் தனிக்கதிச் சூழல் வாய்க்குமே.
- செறிவிலா வஞ்சகச் செல்வர் வாயிலில்
- அறிவிலா துழலும்என் அவல நெஞ்சமே
- எறிவிலாச் சண்முக என்று நீறிடில்
- மறிவிலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.
- மறிக்கும் வேற்கணார் மலக்குழி ஆழ்ந்துழல் வன்தசை அறும்என்பைக்
- கறிக்கும் நாயினும் கடையநாய்க் குன்திருக் கருணையும் உண்டேயோ
- குறிக்கும் வேய்மணி களைக்கதிர் இரதவான் குதிரையைப் புடைத்தெங்கும்
- தெறிக்கும் நல்வளம் செறிதிருத் தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- சீர்வளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம்
- பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
- ஏர்வளர் மயில்மேல் ஊர்வளர் நியமத் திடைவந்தால்
- வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயல்அம்மா.
- நதியும் மதியும் பொதியும் சடையார் நவின்மாலும்
- விதியுந் துதிஐம் முகனார் மகனார் மிகுசீரும்
- நிதியும் பதியும் கதியும் தருவார் நெடுவேலார்
- வதியும் மயின்மேல் வருவார் மலரே வரும்ஆறே.
- சந்தார் வரையுள் சிந்தா மணிநேர் தணிகேசர்
- மந்தா நிலம்மே வுந்தார் மறுகில் மயிலேறி
- வந்தார் நிலவோர் செந்தா மரையின் மலர்வாசக்
- கொந்தார் குழல்என் நிலையுங் கலையுங் கொண்டாரே.
- தந்தே நயமாம் மாதவர் புகழும் தணிகேசர்
- சந்தே னொழிவாய் அந்தேன் மொழியாய் தனிஇன்று
- வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி
- நொந்தேன் முலைமீ தவ்வுரை என்றார் நுவல்என்னே.
- தண்தணி காந்தள்ஒர்14 சண்பக மலரின் தளர்வெய்தத்
- தெண்டணி நீலம்ஒர்14 செங்குவ ளையினிற் றிகழ்வேன்பால்
- வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
- தொண்டணி வீர்ஒரு சோதிட மேனும் சொல்லீரே.
- காமலர் நறவுக் கேமலர் மூவிரு காலேநீ
- தேமலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல்
- ஆமல ருடையாட் கென்பெயர் பலவாம் அவையுள்ளே
- ஓமலர் அடிகேள் ஒன்றினை ஒன்றென் றுரையாயே.
- பொன்னை இருத்தும் பொன்மலர் எகினப் புள்ளேநீ
- அன்னை இகழ்ந்தே அங்கலர் செய்வான் அனுராகம்
- தன்னை அளிக்குந் தண்டணி கேசர் தம்பாற்போய்
- என்னை இகழ்ந்தாள் என்செயல் கொண்டாள் என்பாயே.
- வதியும் தணிகையில் வாழ்வுறும் என்கண் மணி அன்னார்
- மதியுந் தழல்கெட மாமயின் மீதிவண் வருவாரேல்
- திதியும் புவிபுகல் நின்பெயர் நெறியைத் தெரிவிப்பான்
- நதியுந் துணவுத வுவனங் கொடிநீ நடவாயே.
- சேதன நந்தார் சென்று வணங்குந் திறல்வேலார்
- தாதன வண்ணத் துள்ளொளிர் கின்ற தணிகேசர்
- மாதன முந்தா வந்தென வந்தே வாதாதா
- ஆதன மென்றா ரென்னடி யம்மா வவர்சூதே.
- பனிப்பற அருளும் முக்கட் பரஞ்சுடர் ஒளியே போற்றி
- இனிப்புறு கருணை வான்தேன் எனக்கருள் புரிந்தாய் போற்றி
- துனிப்பெரும் பவந்தீர்த் தென்னைச் சுகம்பெற வைத்தோய் போற்றி
- தனிப்பெருந் தவமே போற்றி சண்முகத் தரசே போற்றி.
- மணப்புது மலரே தெய்வ வான்சுவைக் கனியே போற்றி
- தணப்பற அடியர்க் கின்பம் தரும்ஒரு தருவே போற்றி
- கணப்பெருந் தலைவர் ஏத்தும் கழற்பதத் தரசே போற்றி
- குணப்பெருங் குன்றே போற்றி குமரசற் குருவே போற்றி.
- மூவடி வாகி நின்ற முழுமுதற் பரமே போற்றி
- மாவடி அமர்ந்த முக்கண் மலைதரு மணியே போற்றி
- சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமைதீர்த் தருள்வோய் போற்றி
- தூவடி வேல்கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி
- மறைஎலாம் பரவ நின்ற மாணிக்க மலையே போற்றி
- சிறைஎலாம் தவிர்ந்து வானோர் திருவுறச் செய்தோய் போற்றி
- குறைஎலாம் அறுத்தே இன்பம் கொடுத்தஎன் குருவே போற்றி
- துறைஎலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.
- சிங்கமா முகனைக் கொன்ற திறலுடைச் சிம்புள் போற்றி
- துங்கவா ரணத்தோன் கொண்ட துயர்தவிர்த் தளித்தாய் போற்றி
- செங்கண்மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி
- எங்கள்ஆர் அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி.
- தெருளுடை யோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி
- பொருளுடை மறையோர் உள்ளம் புகுந்தபுண் ணியமே போற்றி
- மருளுடை மனத்தி னேனை வாழ்வித்த வாழ்வே போற்றி
- அருளுடை அரசே எங்கள் அறுமுகத் தமுதே போற்றி.
- முருகநின் பாதம் போற்றி முளரியங் கண்ணற் கன்பாம்
- மருகநின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி
- பெருகருள் வாரி போற்றி பெருங்குணப் பொருப்பே போற்றி
- தருகநின் கருணை போற்றி சாமிநின் அடிகள் போற்றி.
- முருகா சரணம் சரணம்என் றுன்பதம் முன்னிஉள்ளம்
- உருகாத நாயனை யேற்குநின் தண்ணருள் உண்டுகொலோ
- அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்றன்
- மருகாமுக் கண்ணவன் மைந்தா எழில்மயில் வாகனனே.
- உலகம் பரவும் ஒருமுதல்வா தெய்வத்
- திலகம் திகழிடத்துத் தேவே-இலகுதிருப்
- புள்ளிருக்கு வேளுர்ப் புனிதா அடியேன்றன்
- உள்ளிருக்கும் துன்பை ஒழி.
- திருமாலைப் பணிகொண்டு திகிரிகொண்ட தாருகனைச் செறித்து வாகைப்
- பெருமாலை அணிதிணிதோள் பெருமானே ஒருமான்றன் பெண்மேற் காமர்
- வருமாலை உடையவர்போல் மணமாலை புனைந்தமுழு மணியே முக்கட்
- குருமாலைப் பொருள்உரைத்த குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தோடேந்து கடப்பமலர்த் தொடையொடு செங்குவளை மலர்த்தொடையும் வேய்ந்து
- பாடேந்தும் அறிஞர்தமிழ்ப் பாவொடுநா யடியேன்சொற் பாவும் ஏற்றுப்
- பீடேந்தும் இருமடவார் பெட்பொடும்ஆங் கவர்கண்முலைப் பெரிய யானைக்
- கோடேந்தும் அணிநெடுந்தோட் குமாரகுரு வேபரம குருவே போற்றி.
- தேனே அமுதே சிவமே தவமே தெளிவேஎங்
- கோனே குருவே குலமே குணமே குகனேயோ
- வானே வளியே அனலே புனலே மலையேஎன்
- ஊனே உயிரே உணர்வே எனதுள் உறைவானே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- கறிபிடித்த ஊன்கடையில் கண்டவர்தம் கால்பிடித்துக் கவ்வும் பொல்லா
- வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தைபயிற் றிடலாகும் வேண்டி வேண்டி
- மறிபிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனமறுகி வருந்தத் தங்கள்
- குறிபிடித்துக் காட்டுவோர்க் கியாவர்படிப் பிக்கவலார் குமர வேளே.
- ஓரிரண்டா நற்றணிகை உத்தமன்றன் ஓங்கற்றோள்
- தாரிரண்டார் போனின்ற தையன்மீர்-வாரிரண்டாத்
- தொய்யி லழிக்குந் துணைமுலையா ளுள்ளகத்தா
- மைய லழிக்கு மருந்து.
- திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
- திறலோங்கு செல்வம்ஓங்கச்
- செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
- திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
- மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
- வளர்கருணை மயம்ஓங்கிஓர்
- வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த
- வடிவாகி ஓங்கிஞான
- உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
- ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
- உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
- உய்கின்ற நாள்எந்தநாள்
- தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பரம்ஏது வினைசெயும் பயன்ஏது பதிஏது
- பசுஏது பாசம்ஏது
- பத்திஏ தடைகின்ற முத்திர தருள்ஏது
- பாவபுண் யங்கள்ஏது
- வரம்ஏது தவம்ஏது விரதம்ஏ தொன்றும்இலை
- மனம்விரும் புணவுண்டுநல்
- வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடிநறு
- மலர்சூடி விளையாடிமேல்
- கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
- கலந்துமகிழ் கின்றசுகமே
- கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்
- கயவரைக் கூடாதருள்
- தரமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்
- துணைஎனும் பிணையல்அளகம்
- சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்
- சுழிஎன்ன மொழிசெய்உந்தி
- வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என
- மங்கையர்தம் அங்கம்உற்றே
- மனம்என்னும் ஒருபாவி மயல்என்னும் அதுமேவி
- மாழ்கநான் வாழ்கஇந்தப்
- படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல்இப்
- படிஎன்ன அறியாதுநின்
- படிஎன்ன என்மொழிப் படிஇன்ன வித்தைநீ
- படிஎன்னும் என்செய்குவேன்
- தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பதிபூசை முதலநற் கிரியையால் மனம்எனும்
- பசுகரணம் ஈங்கசுத்த
- பாவனை அறச்சுத்த பாவனையில் நிற்கும்மெய்ப்
- பதியோக நிலைமைஅதனான்
- மதிபாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே
- மலைவில்மெய்ஞ் ஞானமயமாய்
- வரவுபோக் கற்றநிலை கூடும்என எனதுளே
- வந்துணர்வு தந்தகுருவே
- துதிவாய்மை பெறுசாந்த பதம்மேவு மதியமே
- துரிசறு சுயஞ்சோதியே
- தோகைவா கனமீ திலங்கவரு தோன்றலே
- சொல்லரிய நல்லதுணையே
- ததிபெறும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்
- தலமோங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
- நிகழ்சாந்த மாம்புதல்வனும்
- நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
- நீக்கும்அறி வாம்துணைவனும்
- மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
- மனம்என்னும் நல்ஏவலும்
- வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
- வாழ்கின்ற வாழ்வருளுவாய்
- அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
- அமுதமே குமுதமலர்வாய்
- அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
- தழகுபெற வருபொன்மலையே
- தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
- உத்தமர்தம் உறவுவேண்டும்
- உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
- உறவுகல வாமைவேண்டும்
- பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
- பேசா திருக்க்வேண்டும்
- பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
- பிடியா திருக்கவேண்டும்
- மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
- மறவா திருக்கவேண்டும்
- மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
- வாழ்வில்நான் வாழவேண்டும்
- தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத
- இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
- திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்
- இடுகின்ற திறமும்இறையாம்
- நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள
- நினைவிடா நெறியும்அயலார்
- நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று
- நெகிழாத திடமும்உலகில்
- சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்
- தீங்குசொல் லாததெளிவும்
- திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்
- திருவடிக் காளாக்குவாய்
- தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
- கதறுவார் கள்ளுண்டதீக்
- கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
- கடும்பொய்இரு காதம்நாற
- வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
- மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
- மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
- வழக்குநல் வழக்கெனினும்நான்
- உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
- ரோடுறவு பெறஅருளுவாய்
- உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
- உவப்புறு குணக்குன்றமே
- தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை
- நன்மைதீ மைகளும் இல்லை
- நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற
- நடுநின்ற தென்றுவீணாள்
- போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே
- போதிப்பர் சாதிப்பர்தாம்
- புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று
- போந்திடில் போகவிடுவார்
- சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு
- தாம்புபாம் பெனும்அறிவுகாண்
- சத்துவ அகண்டபரிபுரண காரஉப
- சாந்தசிவ சிற்பிரம நீ
- தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள்
- அழுதுண் டுவந்ததிருவாய்
- அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி
- அணிந்தோங்கி வாழுந்தலை
- மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
- மிக்கஒளி மேவுகண்கள்
- வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி
- விழாச்சுபம் கேட்கும்செவி
- துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச்
- சுகரூப மானநெஞ்சம்
- தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோ‘ர்கைகன்
- சுவர்ன்னமிடு கின்றகைகள்
- சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வானம்எங் கேஅமுத பானம்எங்கே அமரர்
- வாழ்க்கைஅபி மானம்எங்கே
- மாட்சிஎங் கேஅவர்கள் சூழ்ச்சிஎங் கேதேவ
- மன்னன்அர சாட்சிஎங்கே
- ஞானம்எங் கேமுனிவர் மோனம்எங் கேஅந்த
- நான்முகன் செய்கைஎங்கே
- நாரணன் காத்தலை நடத்தல்எங் கேமறை
- நவின்றிடும் ஒழுக்கம்எங்கே
- ஈனம்அங் கேசெய்த தாருகனை ஆயிர
- இலக்கம்உறு சிங்கமுகனை
- எண்அரிய திறல்பெற்ற சூரனை மறக்கருணை
- ஈந்துபணி கொண்டிலைஎனில்
- தானமிங் கேர்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
- மதித்திடான் நின் அடிச்சீர்
- மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
- மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
- சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
- சிறுகுகையி னூடுபுகுவான்
- செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
- செய்குன்றில் ஏறிவிழுவான்
- இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
- இறங்குவான் சிறிதும்அந்தோ
- என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
- கேழையேன் என்செய்குவேன்
- தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
- வள்ளல்உன் சேவடிக்கண்
- மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
- வாய்ந்துழலும் எனதுமனது
- பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
- பித்துண்ட வன்குரங்கோ
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
- பேதைவிளை யாடுபந்தோ
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
- காற்றினாற் சுழல்கறங்கோ
- காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
- கர்மவடி வோஅறிகிலேன்
- தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி
- கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்
- கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்
- கருதிலேன் நல்லன்அல்லேன்
- குற்றமே செய்வதென் குணமாகும் அப்பெருங்
- குற்றம்எல் லாம்குணம்எனக்
- கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்
- குறைதவிர்த் தருள்புரிகுவாய்
- பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்
- பெற்றெழுந் தோங்குசுடரே
- பிரணவா காராரின் மயவிமல சொரூபமே
- பேதமில் பரப்பிரமமே
- தற்றகைய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பாய்ப்பட்ட புலிஅன்ன நாய்ப்பட்ட கயவர்தம்
- பாழ்பட்ட மனையில்நெடுநாள்
- பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன்னமுது
- பட்டபா டாகும்அன்றிப்
- போய்ப்பட்ட புல்லுமணி பூப்பட்ட பாடும்நற்
- பூண்பட்ட பாடுதவிடும்
- புன்பட்ட உமியும்உயர் பொன்பட்ட பாடவர்கள்
- போகம்ஒரு போகமாமோ
- ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின்அடிக்
- காட்பட்ட பெருவாழ்விலே
- அருள்பட்ட நெறியும்மெய்ப் பொருள்பட்ட நிலையும்உற
- அமர்போக மேபோகமாம்
- தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
- என்உயிர்க் குயிராகும்ஓர்
- ஏகமே ஆனந்த போகமே யோகமே
- என்பெருஞ் செல்வமேநன்
- முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
- மூர்த்தியே முடிவிலாத
- முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
- முத்தாடும் அருமைமகனே
- பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
- பற்றருளி என்னைஇந்தப்
- படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
- பண்ணாமல் ஆண்டருளுவாய்
- சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை
- நாடாமை ஆகும்இந்த
- நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட
- நாய்வந்து கவ்விஅந்தோ
- தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன்
- தளராமை என்னும்ஒருகைத்
- தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்
- தன்முகம் பார்த்தருளுவாய்
- வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை
- மழையே மழைக்கொண்டலே
- வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே
- மயில்ஏறு மாணிக்கமே
- தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- அருளார் அமுதே சரணம் சரணம்
- அழகா அமலா சரணம் சரணம்
- பொருளா எனைஆள் புனிதா சரணம்
- பொன்னே மணியே சரணம் சரணம்
- மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
- மயில்வா கனனே சரணம் சரணம்
- கருணா லயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- கோலக் குறமான் கணவா சரணம்
- குலமா மணியே சரணம் சரணம்
- சீலத் தவருக் கருள்வோய்சரணம்
- சிவனார் புதல்வா சரணம் சரணம்
- ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
- நடுவா கியநல் ஒளியே சரணம்
- காலன் தெறுவோய் சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- நங்கட் கிளியாய் சரணம் சரணம்
- நந்தா உயர்சம் பந்தா சரணம்
- திங்கட் சடையான் மகனே சரணம்
- சிவைதந் தருளும் புதல்வா சரணம்
- துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம்
- சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம்
- கங்கைக் கொருமா மதலாய் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- மன்னே எனைஆள் வரதா சரணம்
- மதியே அடியேன் வாழ்வே சரணம்
- பொன்னே புனிதா சரணம் சரணம்
- புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
- அன்னே வடிவேல் அரசே சரணம்
- அறுமா முகனே சரணம் சரணம்
- கன்னேர் புயனே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
- அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
- செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
- வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
- அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
- கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
- திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
- குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே.
- மாமயில் ஏறி வருவாண்டி - அன்பர்
- வாழ்த்த வரங்கள் தருவாண்டி
- தீமையி லாத புகழாண்டி - அவன்
- சீர்த்தியைப் பாடி அடியுங்கடி.
- தத்துவத் துள்ளே அடங்காண்டி - பர
- தத்துவம் அன்றித் துடங்காண்டி
- சத்துவ ஞான வடிவாண்டி - சிவ
- சண்முக நாதனைப் பாடுங்கடி.
- சச்சிதா னந்த உருவாண்டி - பர
- தற்பர போகந் தருவாண்டி
- உச்சிதாழ் அன்பர்க் குறவாண்டி - அந்த
- உத்தம தேவனைப் பாடுங்கடி.
- வாசி நடத்தித் தருவாண்டி - ஒரு
- வாசியில் இங்கே வருவாண்டி
- ஆசில் கருணை உருவாண்டி - அவன்
- அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி.
- ஒன்றிரண் டான உளவாண்டி - அந்த
- ஒன்றிரண் டாகா அளவாண்டி
- மின்திரண் டன்ன வடிவாண்டி - அந்த
- மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.
- வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
- வள்ளி மணாளரே வாரும்
- புள்ளி மயிலோரே வாரும்.
- சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
- சண்முக நாதரே வாரும்
- உண்மை வினோதரே வாரும்.
- பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
- பொன்னான வேலரே வாரும்
- மின்னார்முந் நூலரே வாரும்.
- காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
- கண்ணுதல் சேயரே வாரும்
- ஒண்ணுதல் நேயரே வாரும்.
- செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
- செங்கல்வ ராயரே வாரும்
- எங்குரு நாதரே வாரும்.
- அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
- ஆறுமுகத் தோரே வாரும்
- மாறில்அகத் தோரே வாரும்.
- சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
- சூரசங் காரரே வாரும்
- வீரசிங் காரரே வாரும் .
- வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
- வேலாயுதத் தோரே வாரும்
- காலாயுதத் தோரே வாரும்.
- சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
- தேவர்கள் தேவரே வாரும்
- மூவர் முதல்வரே வாரும்.
- பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
- பன்னிரு தோளரே வாரும்
- பொன்மலர்த் தாளரே வாரும்.
- மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
- மாமயில் வீரரே வாரும்
- தீமையில் தீரரே வாரும்.
- தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
- சுப்பிர மணியரே வாரும்
- வைப்பின் அணியரே வாரும்.
- வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப் பேனும்தம் வாய்க்கொள்ளியால்
- என்மூட்டைத் தேகம் சுறுக்கிட வேசுட் டிராமுழுதும்
- தொன்மூட் டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றதோர்
- பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன் அருள்முக்கட் புண்ணியனே.
- மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
- கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர்
- ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
- சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
- மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
- மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
- ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
- ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
- இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
- இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
- என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
- எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
- மருகா வொற்றி வாணர்பலி வாங்க வகையுண் டேயென்றேன்
- ஒருகா லெடுத்தேன் காணென்றா ரொருகா லெடுத்துக் காட்டுமென்றேன்
- வருகா விரிப்பொன் னம்பலத்துள் வந்தாற் காட்டு வேமென்றார்
- அருகா வியப்பா மென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் வேளை யருள நின்றதென்றேன்
- சுட்டுஞ் சுதனே யென்றார்நான் சுட்டி யறியச் சொல்லுமென்றேன்
- பட்டுண் மருங்கே நீகுழந்தைப் பருவ மதனின் முடித்ததென்றார்
- அட்டுண் டறியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- உயிரு ளுறைவீர் திருவொற்றி யுள்ளீர் நீரென் மேற்பிடித்த
- வயிர மதனை விடுமென்றேன் மாற்றா ளலநீ மாதேயாஞ்
- செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் தேவ னலவே டெளியென்றார்
- அயிர மொழியா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒற்றி நகரீர் மனவாசி யுடையார்க் கருள்வீர் நீரென்றேன்
- பற்றி யிறுதி தொடங்கியது பயிலு மவர்க்கே யருள்வதென்றார்
- மற்றி துணர்கி லேனென்றேன் வருந்தே லுணரும் வகைநான்கும்
- அற்றி டென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
- ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
- ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒண்கை மழுவோ டனலுடையீ ரொற்றி நகர்வா ழுத்தமர்நீர்
- வண்கை யொருமை நாதரென்றேன் வண்கைப் பன்மை நாதரென்றார்
- எண்க ணடங்கா வதிசயங்கா ணென்றேன் பொருளன் றிதற்கென்றார்
- அண்கொ ளணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டேயென்றேன்
- இருவ ரொருபே ருடையவர்காண் என்றா ரென்னென் றேனென்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றார்
- அருவு மிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைத்து வாழ்வீர் தனிஞான
- வொளிநா வரைசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன்
- களிநா வலனை யீரெழுத்தாற் கடலில் வீழ்த்தி னேமென்றார்
- அளிநாண் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
- ஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றார்
- என்னி லிதுதா னையமென்றே னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
- அன்னி லோதி யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே .
- வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
- உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
- அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன்
- திண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார்
- வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார்
- அண்ணஞ் சுகமே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- துய்ய வதன்மேற் றலைவைத்துச் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
- உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே னுலகி லெவர்க்கு மாமென்றார்
- ஐய விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
- ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
- ஆவென் றுரைத்தா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வயலா ரொற்றி மேவுபிடி வாதர் நும்பே ரியாதென்றேன்
- இயலா யிட்ட நாமமதற் கிளைய நாம மேயென்றார்
- செயலார் கால மறிந்தென்னைச் சேர்வீ ரென்றேன் சிரித்துனக்கிங்
- கயலா ரென்றா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாத் தோலோடு வியாளத் தோலு முண்டென்றார்
- ஆலார் களத்த ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் முடிமே லிருந்த தென்னென்றேன்
- கடியா வுள்ளங் கையின்முதலைக் கடிந்த தென்றார் கமலமென
- வடிவார் கரத்தி லென்னென்றேன் வரைந்த வதனீ றற்றதென்றார்
- அடியார்க் கெளியா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வானங் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீ ரன்று வந்தீரென்
- மானங் கெடுத்தீ ரென்றேன்முன் வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
- ஊனந் தடுக்கு மிறையென்றே னுலவா தடுக்கு மென்றார்மால்
- ஏனம் புடைத்தீ ரணையென்பீ ரென்றே னகலா ரென்றாரே.
- கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணையீர்
- மலையா ளுமது மனைவியென்றேன் மலைவா ளுனைநான் மருவினென்றார்
- அலையாண் மற்றை யவளென்றே னலைவா ளவளு மறியென்றார்
- நிலையாண் மையினீ ராவென்றே னீயா வென்று நின்றாரே.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
- ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
- சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
- மைய லழகீ ரூரொற்றி வைத்தீ ருளவோ மனையென்றேன்
- கையி னிறைந்த தனத்தினுந்தங் கண்ணி னிறைந்த கணவனையே
- மெய்யின் விழைவா ரொருமனையோ விளம்பின் மனையும் மிகப்பலவாம்
- எய்யி லிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடி.
- காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்
- சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
- தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்
- நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.
- கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங்
- கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
- மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
- மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
- தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
- தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
- நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
- நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.
- மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன்
- மற்றவர்போல் பற்றடைந்து மாள வேண்டேன்
- விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன்
- வித்தகநின் திருவருளே வேண்டி நின்றேன்
- புண்ணாளா நின்றமன முடையேன் செய்த
- பொய்அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
- கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக்
- கைவிடில்என் செய்வேனே கடைய னேனே.
- வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல
- மணிவண்ணக் கொழுஞ்சுடரே மருந்தே வானத்
- தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத்
- தெய்வமே நின்புகழைத் தெளிந்தே ஓதா
- ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங்
- குழைக்கின்றேன் செய்வகைஒன் றுணரேன் அந்தோ
- கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக்
- காட்டினையே என்னேநின் கருணை ஈதோ.
- பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
- போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
- என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
- என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்நான்
- பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
- பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
- உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
- ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.
- அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
- நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
- நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
- மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
- வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
- திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
- திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- * கொந்தமூர் ஸ்ரீநிவாச வரதாசாரிய சுவாமிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அருளிச் செய்தது.வீரராகவர் போற்றிப் பஞ்சகம்
- தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
- வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
- அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
- விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.
- பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
- நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
- தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
- வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
- கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
- ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
- வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.
- இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே
- களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி
- துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி
- விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
- பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
- வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
- வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
- பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் பத்தியும் எனக்கருள் பரிந்தே
- வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் மணிவளர் அணிமலர் முகத்தாய்
- ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
- திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும்
- வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே
- இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
- நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய்
- விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய்
- எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்
- சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
- அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
- இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம்
- பழுத்தபழ மோபூசுணைப்
- பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது
- பாழாகு கின்றார்களோர்
- பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு
- பெண்ணைஎனி னுங்கொள்கிலார்
- பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும்
- பித்தேற்ற தோஅறிகிலேன்
- செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம்
- தெரிந்திடக் காட்டிநகைதான்
- செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல்
- செம்மாப்பர் அவர்வாய்மதம்
- மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில்
- தியங்குவீர் அழியாச்சுகம்
- சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி
- சேரவா ருங்கள்என்றால்
- இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும்
- இடம்வேண்டும் இவைகள் எல்லாம்
- இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல்
- இறுகப்பி டித்தணைக்கப்
- பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய
- பெண்ணகப் படுமாகிலோ
- பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும்
- பிறகிதோ வருவம்என்பார்
- வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண்
- பேச்சிவை எலாம்வேதனாம்
- பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய
- பெரும்புரட் டாகும்அல்லால்
- ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல்
- ஒருசிறிதும் இல்லைஇல்லை
- உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல்
- உலர்ந்தீர்கள் இனியாகினும்
- மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர்
- விரைமலர்த் தொடைஆதியா
- வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு
- விளையாடு வீர்கள்என்பார்
- வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை
- எண்ணிநல் லோர்கள்ஒருபால்
- இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ர்
- இறைப்பஅது கண்டுநின்று
- ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர்
- நம்உலகில் ஒருவர்அலவே
- ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன
- நகைப்பர்சும் மாஅழுகிலோ
- ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில்
- உயர்பெண்டு சாக்கொடுத்த
- ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென
- உளறுவார் வாய்அடங்க
- மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்
- இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்
- ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல்
- இலங்குமர மியஅணையுமாய்த்
- தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல்
- தழைத்திடு நிலாக்காலமாய்த்
- தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை
- தன்னிசைப் பாடல்இடமாய்
- களவேக லந்தகற் புடையமட வரல்புடை
- கலந்தநய வார்த்தைஉடனாய்க்
- களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக்
- கழல்நிழற் சுகநிகருமே
- வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
- உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
- திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே
- தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
- மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்
- வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
- சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்
- தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே.
- வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
- தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
- ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
- ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே.
- இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை
- வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத்
- திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங்
- கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே.
- நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
- அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
- சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
- வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே.
- ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
- ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
- ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
- தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
- பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
- பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
- பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த
- சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
- தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்
- சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
- ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்
- அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
- பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
- துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
- பிரிய நாயகி பேரருள் நாயகி
- பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம்.
- திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
- அதீதநிலை என்றநன்றே
- அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை
- அவாவிஇடல் என்றமணியே
- என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
- என்அருட் குருவடிவமே
- கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
- களித்துமெய்ப் போதம்உண்டு
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே
- நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
- அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி
- அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
- இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே
- இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
- தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- கண்மூன் றுடையான் எவன்அவனே கடவுள் அவன்தன் கருணைஒன்றே
- கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக்கருத்தை
- மண்மூன் றறக்கொண் டிருந்தவரே வானோர் வணங்கும் அருந்தவராம்
- ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
- திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
- கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
- உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
- கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.
- பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
- நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
- மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
- பொய்யகலப் போற்றுவம்இப் போது.
- சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
- ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
- வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
- தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
- புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
- தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
- தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
- மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
- தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
- தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
- மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
- தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
- தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
- நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
- ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
- தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
- * இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது:"இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம்சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர்களாலியற்றியது." * 6 - 5 - 1864 - ஆ. பா.
- அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
- பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
- தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
- மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்.
- பரசிவா னந்தபரி பூரண சதானந்த
- பாவனா தீதமுக்த
- பரமகை வல்யசை தன்யநிஷ் களபூத
- பௌதிகா தாரயுக்த
- சர்வமங் களசச்சி தானந்த சௌபாக்ய
- சாம்பவ விநாசரகித
- சாஸ்வத புராதர நிராதர அபேதவா
- சாமகோ சரநிரூபா
- துருவகரு ணாகர நிரந்தர துரந்தர
- சுகோதய பதித்வநிமல
- சுத்தநித் தியபரோ க்ஷாநுபவ அபரோக்ஷ
- சோமசே கரசொரூபா
- அரஹர சிவாயநம என்றுமறை ஓலமிட்
- டணுவளவும் அறிகிலாத
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண்
- போக்கிநன் னாளைமடவார்
- போகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின்
- பொன்னடிக் கானபணியைச்
- செய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில்
- செய்வதறி யேன்ஏழையேன்
- சேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல
- சிந்தைதனில் எண்ணிடாயோ
- மெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள
- வேண்டுமறை யாகமத்தின்
- மேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- மேதையர்கள் பரவிவாழ்த்தும்
- ஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர
- வம்புலியு மாடமுடிமேல்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- போதாரு நான்முகப் புத்தேளி னாற்பெரிய
- பூமியிடை வந்துநமனாற்
- போகுமுயிர் கள்வினையை ஒழிமின்என் றேகுரவர்
- போதிக்கும் உண்மைமொழியைக்
- காதார வேபல தரங்கேட்டும் நூற்களிற்
- கற்றும்அறி வற்றிரண்டு
- கண்கெட்ட குண்டையென வீணே யலைந்திடும்
- கடையனேன் உய்வதெந்நாள்
- மாதாவு மாய்ஞான வுருவுமாய் அருள்செயும்
- வள்ளலே உள்ளமுதலே
- மாலாதி தேவர்முனி வோர்பரவி யேதொழுது
- வாழ்த்திமுடி தாழ்த்துமுன்றன்
- ஆதார மானஅம் போருகத் தைக்காட்டி
- யாண்டருள வேண்டும்அணிசீர்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பண்ணாரு மூவர்சொற் பாவேறு கேள்வியிற்
- பண்படா ஏழையின்சொற்
- பாவையும் இகழ்ந்திடா தேற்றுமறை முடிவான
- பரமார்த்த ஞானநிலையை
- கண்ணார நெல்லியங் கனியெனக் காட்டிநற்
- கருணைசெய் தாளாவிடில்
- கடையனேன் ஈடேறும் வகைஎந்த நாள்அருட்
- கடவுளே கருணைசெய்வாய்
- தண்ணா ரிளம்பிறை தங்குமுடி மேன்மேனி
- தந்தஒரு சுந்தரியையும்
- தக்கவா மத்தினிடை பச்சைமயி லாம்அரிய
- சத்தியையும் வைத்துமகிழ்என்
- அண்ணாஎன் அப்பாஎன் அறிவேஎன் அன்பேஎன்
- றன்பர் (எப் பொழுதும்) வாழ்த்தும்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- பவமான எழுவகைப் பரப்பான வேலையிற்
- பசுவான பாவிஇன்னும்
- பற்றான குற்றமதை உற்றலை துரும்பெனப்
- படராது மறையனைத்தும்
- உவமான முரைசெய்ய அரிதான சிவநிலையை
- உற்றதனை யொன்றிவாழும்
- உளவான வழியீ தெனக்காட்டி அருள்செய்யில்
- உய்குவேன் முடிவானநல்
- தவமான நெறிபற்றி ரண்டற்ற சுகவாரி
- தன்னில்நினை நாடியெல்லாம்
- தானான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த
- தற்பரர்க ளகநிறைந்தே
- அவமான கருணைப்பிர காசநின் னருள்தனை
- அடியனுக் கருள்செய்குவாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு
- சாமிசிவ காமியிடமார்
- சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான
- சத்யமொழி தன்னைநம்பி
- எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை
- ஏத்திவினை தனைமாற்றியே
- இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை
- ஏழையேன் ஒருவன்அந்தோ
- சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென்
- செப்புவாய் வேதனாதி
- தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர்
- சித்தர்களும் ஏவல்புரிய
- அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங்
- கருண்முக விலாசத்துடன்
- அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட
- குருவாய் விளங்கு மணிமன்ற வாணனைக் கூடிஇன்ப
- உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம்
- திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே.
- உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
- சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
- நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
- தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
- இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னை உடையீர் அம்பலத்தீர்
- இரண்டே காற்கை முகந்தந்தீர் என்னை இதுதான் என்றுரைத்தேன்
- இரண்டே காற்கை முகங்கொண்டிங் கிருந்த நீயும் எனைக்கண்டே
- இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் தோழி இவர்வாழி.
- ஆடுங் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடந்தான் யாதென்றேன்
- பாடுந் திருவுஞ் சவுந்தரமும் பழமுங் காட்டும் இடமென்றார்
- நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
- ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி.
- 179. பதவுரை : இன்பம் - பேரின்பம் தருவதாகிய, நடஞ்செய் - திருநடனத்தைப் புரியா நின்ற, பெருமானீர் - பெருமானாகிய நீர், இரண்டே - இரண்டேயாகிய, காற்கு - பாதங்களையுடைய எனக்கு, ஐ - அழகிய, முகம் - முகம் ஒன்றினை, தந்தீர் - கொடுத்தீர், இங்ஙனம் இருக்க, இரண்டே காற்கு - இரண்டு பாதாம்புயங்களுக்கு, ஐமுகம் - பஞ்சமுகங்களை, கொண்டீர் - கொண்ட நீராக இருக்கின்றீர், என்னே - யாதுபற்றி, அடிகள் - அடிகளே, என்றுரைத்தேன் - எனப் புகன்றேன். அதற்கு மன்றில் நின்றார் - அம்பலத்தின் கண்ணின்ற இவர் அடியாளைக் கண்ணுற்று, இரண்டே கால் - இரண்டு காலாகப் பெற்ற நீ, கைமுகம் புடைக்க விருந்தாய் - கைத்த முகம் பெருக்கக் காட்டினை, எனைக்கென்று - யாதுபற்றி என வினவி, இங்கே நீ - இப்போது இவ்விடத்து, இரண்டே காற்கு - இரு காலாகிய அரை ( அல்குலுக்கு இன்பம் பெருக்க எண்ணி ) ஐமுகம் கொண்டாய் என்றார் - சுமுகங் கொண்டனை எனப் புகல்கின்றனர். ஏ! தோழி ! இஃது என் ? என வினவியது. - ச.மு.க.
- 180. பதவுரை : இரண்டேகாற்கு - இருவினை வழி செல்லாதவர்களுக்கு, ஐமுகம் - ஆசாரிய முகத்தினை, கொண்டனை - கொண்ட நீராயிருக்கின்றீர். என்னை - அடியாளை, உடையீர் - உடையவரே, அம்பலத்தீர் - திருவம்பலத்தில் நடிக்கின்றவரே, இரண்டேகாற்கு - சூரியகலை சந்திரகலையாகிய வாசியனுபவத்திற்கு, ஐ - அழகிய, முகந்தந்நீர் - முகத்தினைத் தந்தவரே, என்னை இது தானென்று - இஃது என்ன விஷயத்திற்கு என்று, உரைத்தேன் - செப்பினேன். அதற்கு அன்னார், இரண்டே கால், கை, முகங் கொண்டிருந்த நீயும் - இரண்டு காலும், இருகையும், முகமும் அடையப் பெற்றிரா நின்ற நீயும், எனைக் கண்டே - நம்மைத் தரிசித்த தக்ஷணம் நீ முன் உரைத்த வண்ணமே, இரண்டேகாற்கு - வாசிக்கு, ஐமுகங்கொண்டாய் - அழகிய முகத்தினை அனுபவ இடமாகக் கொண்டு விட்டனை என்கின்றனர் தோழி, இன்னார் நீடுழி வாழ்க எனத் தலைவி வாழ்த்தியதாகக் கொள்க.இரண்டேகாற்கை - தமிழில் எழுதினால் இரண்டு (உ), கால் (வ), கை : உவகை.இரண்டேகாற் கைமுகந் தந்தீர் என்றதற்கு, விநாயகருக்கு கை - துதிக்கையுடைய முகத்தினைத் தந்தீர் எனப் பொருள் கூறுவாரும் உளர். தலைவி தலைவருக்குள் நடந்த அலங்கார விவகாரத்துள் விநாயகரைப் பற்றிக் கூறுதல் அவ்வளவு விசேட மன்றெனக் கொள்க.
- 181. குறிப்பு : ஆடுமிடம் - நடனஞ் செய்யுமிடம், பாடும் - வேதாகமங்களால் புகழப்படும், திருவும் - பொன் என்னுஞ் சொல்லும், சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாய அம் என்னும் சொல்லும், பழமும் - ( பழம் = பலம் வடமொழி ) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால், பொன்னம்பலம் ஆகிறது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம், பல் நடு வுளது - பல் என்னுஞ் சொல் நடுவுளது. அம்+பல்+அம் - அம்பலம், - ச. மு. க.
- வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
- ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- ஓவாக் கொடியே னுரைத்த பிழைகளெலாம்
- ஆவா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- கொதிக்கின்ற வன்மொழியாற் கூறியதை யையோ
- மதிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சினங்கொண்ட போதெல்லாஞ் செப்பிய வன்சொல்லை
- மனங்கொள்ளுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- செய்தநன்றி யெண்ணாச் சிறியவனே னின்னருளை
- வைத்தெண்ணுந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொய்த்த மனத்தேன் புகன்றகொடுஞ் சொற்களெலாம்
- வைத்துநினைக் குந்தோறும் வாளிட் டறுக்குதடா.
- பொங்குகின்ற தீமை புகன்றதெலா மெண்ணியெண்ணி
- மங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- ஊடுகின்ற சொல்லா லுரைத்ததனை யெண்ணியெண்ணி
- வாடுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- உயங்குகின்றேன் வன்சொல் லுரைத்ததனை யெண்ணி
- மயங்குகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- சொல்விளைவு நோக்காதே சொன்னதெலா மெண்ணுதொறும்
- வல்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- மேல்விளைவு நோக்காதே வேறுசொன்ன தெண்ணுதொறும்
- மால்வினையே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- விஞ்சகத்தா லந்தோ விளம்பியதை யெண்ணுதொறும்
- வஞ்சகத்தே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- விலங்குகின்ற நெஞ்ச விளைவையெண் ணுந்தோறும்
- மலங்குகின்றே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
- வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி
- வலிக்கின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- நீட்டுகின்ற வஞ்ச நெடுஞ்சொலெலா நெஞ்சகத்தே
- மாட்டுகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- பொருந்துகின்ற வஞ்சப் புதுமையெண்ணி யையோ
- வருந்துகின்ற தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
- வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
- நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
- சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
- வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
- என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
- நன்கறியேன் வாளா நவின்ற நவையனைத்தும்
- என்குருவே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
- மின்னிடையாள் காண விளங்குமன்றி லாடுகின்றாய்
- என்னுடையா யுன்ற னிணையடிதான் நோவாதா.
- வன்னமுதே யின்ப மலியமன்றி லாடுகின்றாய்
- என்னமுதே யுன்ற னிணையடிதான் நோவாதா.
- நண்ணியமெய் யன்பர் நயக்கமன்றி லாடுகின்றாய்
- புண்ணியனே யுன்றனது பொன்னடிதான் நோவாதா.
- அன்பரின்பங் கொள்ளநட மம்பலத்தே யாடுகின்றாய்
- இன்புருவா முன்ற னிணையடிதான் நோவாதா.
- நூலுணர்வா நுண்ணுணர்வி னோக்கநட மாடுகின்றாய்
- மாலறியா வுன்றன் மலர்ப்பாதம் நோவாதா.
- எள்ளலற வம்பலத்தே யின்பநட மாடுகின்றாய்
- வள்ளலே யுன்றன் மலரடிதான் நோவாதா.
- சைவ நிலைத்துத் தழைத்தோங்க வாடுகின்றாய்
- தெய்வ மணியே திருவடிதான் நோவாதா.
- எல்லாரு மின்புற் றிருக்கநட மாடுகின்றாய்
- வல்லாரின் வல்லாய் மலர்ப்பாதம் நோவாதா.
- அவமே கழிந்தின்ப மன்பர்கொள வாடுகின்றாய்
- சிவமே நினது திருவடிதான் நோவாதா.
- தற்பரமா மன்றிற் றனிநடன மாடுகின்றாய்
- சிற்பரமே யுன்றன் திருமேனி நோவாதா.
- வில்வவேர் மாலை மிளிர்ந்தசைய வாடுகின்றாய்
- செல்வமே யுன்றன் திருமேனி நோவாதா.
- வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்
- ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.
- ஈனமறுத் தென்றும் இறவாமை நல்குமென்றே
- ஞானமணி மன்றிடத்தே நண்புவைத்தேன் ஐயாவே.
- பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
- ஈசர் எமதுநட ராஜற்கு - மங்களம்.
- பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற
- வாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம்.
- பூணி லங்குந்தன வாணி பரம்பர
- வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம்.
- திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
- சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
- தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
- திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
- உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
- உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
- மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
- வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
- அன்பெனும் குடில்புகும் அரசே
- அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
- அன்பெனும் கரத்தமர் அமுதே
- அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
- அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
- அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
- அன்புரு வாம்பர சிவமே.
- அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
- அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
- தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
- அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
- வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- வாரமு மழியா வரமுந் தருந்திரு
- வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
- வாடுத னீக்கிய மணிமன் றிடையே
- ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
- ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
- வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
- னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
- உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
- அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
- உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
- அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
- என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
- தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
- படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
- அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
- மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
- அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
- இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
- அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
- மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
- வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
- வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
- பொதுவது சிறப்பது புதியது பழயதென்
- றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
- வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
- ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
- சாவா நிலையிது தந்தன முனக்கே
- ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
- வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
- ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி
- இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
- யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
- வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
- ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
- மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
- யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
- மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
- அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
- வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
- வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
- அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
- அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புற நடுவா லணிபுற நடுவை
- அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- புகலரு மகண்ட பூரண நடுவால்
- அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
- அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
- ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
- வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
- அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
- அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வித்திய லொன்றா விளைவியல் பலவா
- அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
- புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
- அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
- அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
- அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
- தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
- அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
- அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
- ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
- ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
- வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
- அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
- அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
- எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
- அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
- எழுநிலை மிசையே யின்புரு வாகி
- வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
- திரையோ தசநிலை சிவவெளி நடுவே
- வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
- மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
- அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
- அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
- பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
- அருவினு ளருவா யருவரு வருவாய்
- உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
- அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
- உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
- அவனோ டவளா யதுவா யலவாய்
- நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
- அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
- தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
- அருளே நம்மிய லருளே நம்முரு
- அருளே நம்வடி வாமென்ற சிவமே
- அருளே நம்மடி யருளே நம்முடி
- அருளே நம்நடு வாமென்ற சிவமே
- அருளே நம்பொரு ளருளே நம்மொளி
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளே நங்குல மருளே நம்மினம்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
- அருளே நாமறி வாயென்ற சிவமே
- அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
- அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
- சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
- ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
- பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
- பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
- பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
- வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
- இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
- தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
- தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
- என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
- மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
- இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
- துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
- பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
- இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
- தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
- நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
- வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
- மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
- எனக்குற வாகிய என்னுயி ருறவே
- துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
- தென்னுற வாகிய வென்னுயி ருறவே
- என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
- என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
- துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
- உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
- என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
- என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
- சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
- இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
- தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
- இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
- படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
- இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
- மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
- ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
- உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
- இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
- அறிவவை பலவா யறிவன பலவாய்
- எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
- நினைவவை பலவாய் நினைவன பலவாய்
- இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே
- காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
- ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
- செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
- எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
- இதுவது வென்னா வியலுடை யதுவாய்
- எதிரற நிறைந்த வென்றனி யின்பே
- அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
- எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
- உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
- வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
- கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
- நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
- பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
- ஆரண முடியுட னாகம முடியுங்
- கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
- நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
- பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
- கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
- தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
- வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
- வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
- நான்பெற வளித்த நாதமந் திரமே
- அகரமு முகரமு மழியாச் சிகரமும்
- வகரமு மாகிய வாய்மைமந் திரமே
- ஐந்தென வெட்டென வாறென நான்கென
- முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
- வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
- ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
- மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
- கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
- இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
- தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
- மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
- ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்
- காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
- ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
- உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
- வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
- புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
- வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
- ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி
- வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே
- இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
- குதவினு முலவா தோங்குநன் னிதியே
- கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
- மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
- களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
- இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே
- தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
- தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
- கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
- இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
- புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
- கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
- என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே
- என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே
- வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
- கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
- துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
- யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
- அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
- இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
- மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
- இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
- தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
- வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
- வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
- ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
- ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
- சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
- குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
- கோடிகோ டிகளும்ஆங் காங்கே
- நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
- நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
- விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
- மெய்யறி வானந்தம் விளங்க
- அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
- கருவினால் பகுதியின் கருவால்
- எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
- இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
- விண்முதல் பரையால் பராபர அறிவால்
- விளங்குவ தரிதென உணர்ந்தோர்
- அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
- தத்துவா தீதமேல் நிலையில்
- சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
- சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
- ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
- ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
- றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
- அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
- மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
- மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
- துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
- துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
- உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
- பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
- ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
- இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
- நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
- நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
- ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
- அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
- பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
- பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
- டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
- இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
- ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
- வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
- புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
- புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
- மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
- விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
- உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
- ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
- செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
- திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
- வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
- மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
- உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
- உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
- அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
- ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
- என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
- யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
- ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் நெருக்கிலும்பெருக்கிய நினைப்பேன்
- புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கிவீண் போதுபோக் குறுவேன்
- நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினுங் கடையனேன் நவையேன்
- குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன்
- கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
- ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
- கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் கறிக்குழல் நாயினும் கடையேன்
- விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப்
- புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
- கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
- ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
- சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
- செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
- மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
- வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
- வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
- இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
- பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
- புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
- நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
- நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
- கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
- காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
- களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
- நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
- நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
- ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
- அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
- கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
- சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
- ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
- இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
- வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
- வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
- ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண்ட ருளே.
- வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
- வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
- பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
- பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
- கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
- கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
- பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
- புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
- காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
- மான மேலிடச் சாதியே மதமே
- வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
- ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
- இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
- ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
- நாய காஎனை நயந்துகொண் டருளே.
- மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
- மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
- திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
- செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
- இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
- எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
- இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
- தரம்அறியேன் போகாத தண்ரை அறியேன்
- ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
- அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
- மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
- மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
- ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
- யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
- அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
- வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம்
- நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ
- கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே.
- பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள்
- ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே
- மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன்
- நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே.
- பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான்
- ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ
- மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும்
- ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே.
- மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று
- பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
- கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே
- இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே.
- அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ
- இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்
- செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன்
- எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே.
- அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
- வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
- தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
- எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
- தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து
- வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்
- சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
- ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.
- நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும்
- ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய
- தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல்
- மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே.
- கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
- வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
- பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
- ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
- விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
- வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணைஎனமதித்துக்
- கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் கொக்கனேன் செக்கினைப் பலகால்
- இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
- தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
- சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
- ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
- காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
- பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
- சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
- தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
- வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
- மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
- சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
- இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
- குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
- பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
- உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
- கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
- துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
- அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
- தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
- பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
- முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
- உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
- அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
- தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
- கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.
- அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன்
- அச்சமும் அவலமும் உடையேன்
- செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது
- திருவுளத் தெனைநினை யாயேல்
- எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன்
- என்செய்வேன் யார்துணை என்பேன்
- பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என்
- பிழைபொறுத் தருள்வதுன் கடனே.
- ஞானமும் அதனால் அடைஅனு பவமும்
- நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
- ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள்
- இந்தநாள் அடியனேன் இங்கே
- ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி
- உழைக்கின்றேன் ஒருசிறி தெனினும்
- ஏனென வினவா திருத்தலும் அழகோ
- இறையும்நான் தரிக்கலன் இனியே.
- தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
- சாமியும் பூமியும் பொருளும்
- சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
- சுற்றமும் முற்றும்நீ என்றே
- சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
- திருவுளம் தெரிந்ததே எந்தாய்
- நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
- நீதியோ நின்அருட் கழகோ.
- அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின்
- அருளர செனஅறிந் தனன்பின்
- உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை
- உளம்எலாம் இடங்கொண்ட தெந்தாய்
- வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி
- வழிகின்ற தென்வசங் கடந்தே
- இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை
- ஈந்தருள் இற்றைஇப் போதே.
- போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த
- புழுத்தலைப் புலையர்கள் புணர்க்கும்
- சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும்
- தூயர்கள் மனம்அது துளங்கித்
- தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ
- தனிஅருட் சோதியால் அந்த
- வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம்
- வழங்குவித் தருளுக விரைந்தே.
- விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
- விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
- கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
- கரைஎலாம் கடந்தது கண்டாய்
- வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
- வல்லவா அம்பல வாணா
- திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
- திகழ்வித்த சித்தனே சிவனே.
- தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
- தனிநெறி உலகெலாம் தழைப்பக்
- கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
- கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
- பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
- புண்ணியம் பொற்புற வயங்க
- அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
- துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
- வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
- உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
- தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
- அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
- வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
- நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
- தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
- காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
- வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
- ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
- தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.
- கரண வாதனை யால்மிக மயங்கிக்
- கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
- மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
- இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
- சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச்
- சுகம்வி ழைந்திலேன் எனினும்பொய் உலக
- மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க
- எந்தை நின்மலர் இணைஅடி அல்லால்
- தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
- சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா
- வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ
- கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்
- தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
- கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
- மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
- வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
- உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
- உயிர் தரித்திடா துன்அடி ஆணை
- தயவு செய்தருள் வாய்வடல் அரசே
- சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.
- போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
- புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
- யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
- யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
- தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
- திருவுளத் தடைத்திடு வாயேல்
- ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
- என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
- யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்
- என்பிழை பொறுப்பவர் யாரே
- பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே
- பாவியேன் பிழைபொறுத் திலையேல்
- ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி
- உடம்பைவைத் துலாவவும் படுமோ
- சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம்
- தெய்வத்துக் கடாதவன் என்றே.
- அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
- அப்பநீ அடியனேன் தன்னை
- விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
- விடுதியோ விட்டிடு வாயேல்
- உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
- உன்னருள் அடையநான் இங்கே
- படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
- பாடெலாம் நீஅறி யாயோ.
- களித்தென துடம்பில் புகுந்தனை எனது
- கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
- தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்
- சிறப்பினால் கலந்தனை உள்ளம்
- தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்
- தடைபடாச் சித்திகள் எல்லாம்
- அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை
- அடியன்மேல் வைத்தவா றென்னே.
- சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது
- தூயநல் உடம்பினில் புகுந்தேம்
- இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே
- இன்புறக் கலந்தனம் அழியாப்
- பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்
- பரிசுபெற் றிடுகபொற் சபையும்
- சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
- தெய்வமே வாழ்கநின் சீரே.
- இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் கொடுத்தேன்மற் றெனக்கென் றிங்கே
- எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை அருட்சோதி இயற்கை என்னும்
- துப்பாய உடலாதி தருவாயோ இன்னும்எனைச் சோதிப் பாயோ
- அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் வடியேனால் ஆவ தென்னே.
- என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் திலன்என்றே ஏங்கி ஏங்கி
- மன்னேஎன் மணியேகண் மணியேஎன் வாழ்வேநல் வரத்தாற் பெற்ற
- பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் புகலேமெய்ப் போத மேஎன்
- அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி அடியேனால் ஆவ தென்னே.
- பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி எடுத்தரையில் புனைவேன் சில்லோர்
- தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி ஓடுவனித் தரத்தேன் இங்கே
- முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அருள்இலதேல் முன்னே வைத்த
- அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் னவும்நாணம் உறுவ தெந்தாய்
- தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பிறப்புத் தன்னை நீக்கி
- எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு பவஉருவாய் என்னுள் ஓங்கி
- அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- இசைத்திடவும்நினைத்திடவும்பெரிதரிதாம் தனித்தலைமைஇறைவா உன்றன்
- நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி ஐந்தொழில்செய் நாத ராலும்
- தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள்சுதந் தரத்தால்இங்கே
- அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
- உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
- ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
- கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
- கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
- செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
- மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
- கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே
- கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
- தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
- தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
- திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
- இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
- புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
- பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
- பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
- பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
- திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
- பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
- மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
- விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாட்டே
- பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
- பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
- செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
- கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
- நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
- நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
- ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
- இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
- தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்
- விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
- ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
- உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
- ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்
- எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே
- தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
- கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக
- மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்
- வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே
- உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே
- உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே
- சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
- மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
- கொற்றவ ஓர்எண்குணத்தவ நீ தான் குறிக்கொண்டகொடியனேன்குணங்கள்
- முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என்றனைநீ முனிவதென்முனிவுதீர்ந்தருளே.
- முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
- பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் புணர்ப்பலால்என்புணர்ப்பலவே
- என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே எந்தைவே றியம்புவதென்னோ
- சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் துரும்பெனக் காண்கின்றேன் தனித்தே.
- சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்
- நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றே
- சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்
- தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய்.
- உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
- இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
- விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
- அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
- திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில்
- உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி
- மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும்
- கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய்.
- கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
- தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
- ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
- மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.
- தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
- வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
- ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
- ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
- என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
- என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
- என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
- என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
- மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
- குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
- பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
- தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
- விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
- தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
- கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
- கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
- பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
- தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
- சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
- என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
- நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
- அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
- இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
- ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
- மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
- காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
- ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
- உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
- தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
- இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
- தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
- வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
- தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
- காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
- பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
- சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
- மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
- வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
- வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
- சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
- கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும்211 ஆடவர் மடவார்
- ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
- நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
- உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
- பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
- நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
- மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
- இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
- தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
- பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
- வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
- மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
- நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
- மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
- களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
- நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
- அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
- ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
- பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
- உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
- மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
- அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
- பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
- வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
- கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
- சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
- பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
- தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
- காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
- நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
- சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
- ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
- கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
- வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
- நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
- பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
- புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
- என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
- வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
- என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
- இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
- வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
- சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
- நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
- ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
- மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
- விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
- அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
- பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
- மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
- இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
- பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
- மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
- வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
- ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
- தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
- நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
- உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
- பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
- சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
- நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
- பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
- மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
- உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
- ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
- கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
- திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
- பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
- எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
- நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
- கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
- வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
- சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
- பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும்
- கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
- துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
- வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
- அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
- நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
- எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
- செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
- இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
- துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
- உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
- மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
- எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
- கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
- வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
- உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
- தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
- சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
- பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
- ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
- மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227 வள்ளலே நின்னைஅன் பாலும்
- வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
- உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் உன்அருள் அறியநான் வேறு
- செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ.
- ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
- காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
- நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
- தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
- பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
- ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
- சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
- வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
- ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
- தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
- சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
- பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
- சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
- சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
- சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
- பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
- பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
- நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
- பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
- நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே நடத்தும்ஓர் ஞானநா யகனே
- தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன்நான் பயத்தினால் துயரால்
- அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.
- கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
- நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
- மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
- தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
- பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச்
- சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
- சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
- மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித்
- தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
- ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
- நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.
- என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
- மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம்
- பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
- இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங்கிலையே.
- தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
- சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
- எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
- தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
- வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
- கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
- விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
- எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
- குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள்
- புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே
- உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.
- போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே
- வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா
- ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன்
- தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
- தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
- வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
- என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
- நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.
- ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
- தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
- வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
- தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
- வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
- ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
- தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
- கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
- பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
- கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
- வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
- உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
- நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
- வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
- வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
- என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
- உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
- நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
- மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
- பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
- தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
- புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
- வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 வள்ளலே சிற்சபை வாழ்வே.
- ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
- பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
- புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
- எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
- இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
- நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
- நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
- அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
- துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
- படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
- படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
- ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
- ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
- அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
- செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
- சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
- பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
- பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
- அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
- மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
- மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
- இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
- திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
- பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
- புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
- உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி
- உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
- கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள்
- கற்றதும் கரைந்ததும் காதல்
- கொண்டதும் நின்னோ டன்றிநான் தனித்தென்
- குறிப்பினில் குறித்ததொன் றிலையே
- ஒண்தகும் உனது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திலகவாள் நுதலார் தமைக்கன விடத்தும்
- சிறிதும்நான் விழைந்திலேன் இந்த
- உலகவாழ் வதில்ஓர் அணுத்துணை எனினும்
- உவப்பிலேன் உலகுறு மாயைக்
- கலகவா தனைதீர் காலம்என் றுறுமோ
- கடவுளே எனத்துயர்ந் திருந்தேன்
- அலகிலாத் திறலோய் நீஅறிந் ததுநான்
- அடிக்கடி உரைப்பதென் நினக்கே.
- சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
- சாத்திரக் குப்பையும் தணந்தேன்
- நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
- நித்திய வாழ்க்கையும் சுகமும்
- ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
- அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
- ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- ஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ
- ஊழிதோ றுழிசென் றிடினும்
- என்றும்இங் கிறவா இயற்கைஎன் றுறுமோ
- இயல்அருட் சித்திகள் எனைவந்
- தொன்றல்என் றுறுமோ அனைத்தும்என் வசத்தே
- உறுதல்என் றோஎனத் துயர்ந்தேன்
- உன்திரு வுளமே அறிந்ததிவ் வனைத்தும்
- உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- கள்ளாவா தனையைக் களைந்தருள் நெறியைக்
- காதலித் தொருமையில் கலந்தே
- உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
- றோங்குதல் என்றுவந் துறுமோ
- வள்ளலே அதுகண் டடியனேன் உள்ளம்
- மகிழ்தல்என் றோஎனத் துயர்ந்தேன்
- ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்த
- துரைப்பதென் அடிக்கடி உனக்கே.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
- தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
- நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
- நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
- அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
- ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
- வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
- மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
- துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
- சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
- பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
- பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
- கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
- கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
- அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
- அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
- மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
- மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
- இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
- என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
- சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
- சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
- பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
- பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
- மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
- தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
- தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
- நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
- நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
- ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
- என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
- கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
- சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
- திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
- விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
- விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
- தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
- சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.
- காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
- கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
- கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
- கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
- சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
- சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
- பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
- பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
- சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
- செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
- இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
- கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
- சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
- சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
- நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
- நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
- உடையாய் திருஅம் பலத்தாடல் ஒருவா ஒருவா உலவாத
- கொடையாய் எனநான் நின்றனையே கூவிக் கூவி அயர்கின்றேன்
- தடையா யினதீர்த் தருளாதே தாழ்க்கில் அழகோ புலைநாயிற்
- கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் மதமோ கருணைக் கருத்தினுக்கே.
- அருளே வடிவாம் அரசேநீ அருளா விடில்இவ் வடியேனுக்
- கிருளே தொலைய அருளளிப்பார் எவரே எல்லாம் வல்லோய்நின்
- பொருளேய் வடிவிற் கலைஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்தெங்குந்
- தெருளே யுறஎத் தலைவருக்குஞ் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.
- திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
- புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய்உரைத்தே
- இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கிங் கிசைத்திலைநீ
- அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.
- எல்லாம் வகுத்தாய் எனக்கருளில் யாரே தடுப்பார் எல்லாஞ்செய்
- வல்லான் வகுத்த வண்ணம்என மகிழ்வார் என்கண் மணியேஎன்
- சொல்லா னவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திருப்பொதுவில்
- நல்லாய் கருணை நடத்தரசே தருணம் இதுநீ நயந்தருளே.
- நயந்த கருணை நடத்தரசே ஞான அமுதே நல்லோர்கள்
- வியந்த மணியே மெய்யறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
- கயந்த மனத்தேன் எனினும்மிகக் கலங்கி நரகக் கடுங்கடையில்
- பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்தருளே.
- தாயே எனைத்தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
- பேயேன் செய்த பெருங்குற்றம் பொறுத்தாட் கொண்ட பெரியோனே
- நீயே இந்நாள் முகமறியார் நிலையில் இருந்தால் நீடுலகில்
- நாயே அனையேன் எவர்துணைஎன் றெங்கே புகுவேன் நவிலாயே.
- கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
- தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
- இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
- தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
- வருவாய் என்கண் மணிநீஎன் மனத்திற் குறித்த வண்ணமெலாம்
- தருவாய் தருணம் இதுவேமெய்த் தலைவா ஞான சபாபதியே
- உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடைவாய்
- இருவாய் அலநின் திருவடிப்பாட் டிசைக்கும் ஒருவாய் இசைத்தேனே.
- தேனே திருச்சிற் றம்பலத்தில் தெள்ளா ரமுதே சிவஞான
- வானே ஞான சித்தசிகா மணியே என்கண் மணியேஎன்
- ஊனே புகுந்தென் உளங்கலந்த உடையாய் அடியேன் உவந்திடநீ
- தானே மகிழ்ந்து தந்தாய்இத் தருணம் கைம்மா றறியேனே.
- அறியேன் சிறியேன் செய்தபிழை அனைத்தும் பொறுத்தாய் அருட்சோதிக்
- குறியே குணமே பெறஎன்னைக் குறிக்கொண் டளித்தாய் சன்மார்க்க
- நெறியே விளங்க எனைக்கலந்து நிறைந்தாய் நின்னை ஒருகணமும்
- பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெருஞ்சுகமே.
- சுகமே நிரம்பப் பெருங்கருணைத் தொட்டில் இடத்தே எனைஅமர்த்தி
- அகமே விளங்கத் திருஅருளா ரமுதம் அளித்தே அணைத்தருளி
- முகமே மலர்த்திச் சித்திநிலை முழுதும் கொடுத்து மூவாமல்
- சகமேல்240 இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.
- தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலுந் தனித்தலைமை
- எந்தாய் நினது பெருங்கருணை என்என் றுரைப்பேன் இவ்வுலகில்
- சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் சிறிதே கூவு முன்என்பால்
- வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான்பொழுதே.
- 235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு.
- 236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.
- 238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா.
- 239. ஒருவா - ச. மு. க.
- 240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க.
- இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
- எண்ணினும் ஐயவோ மயங்கிப்
- பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
- பரதவிப் பதைஅறிந் திலையோ
- தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
- தனிநடம் புரிதனித் தலைவா
- கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
- பேசினும் நெய்விடுந் தீப்போல்
- எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ
- எங்கணும் கண்ணுடை எந்தாய்
- புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும்
- புண்ணியா என்னுயிர்த் துணைவா
- கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- தனித்துணை எனும்என் தந்தையே தாயே
- தலைவனே சிற்சபை தனிலே
- இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணுள்மா மணியே
- அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- கனித்துணை தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே
- சோதியுட் சோதியே அழியா
- இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை
- ஈன்றநல் தந்தையே தாயே
- அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
- அண்ணலே இனிப்பிரி வாற்றேன்
- பொன்பதந் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத்
- தென்னைஆட் கொண்டெனை உவந்தே
- ஓதும்இன் மொழியால் பாடவே பணிந்த
- ஒருவனே என்னுயிர்த் துணைவா
- வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
- விளங்கிய விமலனே ஞான
- போதகம் தருதற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
- கற்பகத் தீஞ்சுவைக் கனியே
- வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
- விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
- ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
- ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
- புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
- நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
- நீலியோ தன்புடை ஆடும்
- தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
- தனித்தனி அவர்அவர் எடுத்தே
- கத்தவெம் பயமே காட்டினர் நானும்
- கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
- வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
- மகள்கையில் கொடுத்தனன் எனைத்தான்
- ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ
- என்செய்வேன் என்னையே உணர்ந்து
- தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
- தொட்டிலும் ஆட்டிடு கின்றாள்
- ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை
- ஈன்றவர் அறிவரே எந்தாய்.
- தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
- சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
- கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
- காதுறக் கேட்டிருக் கின்றாள்
- செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
- சிரித்திருக் கின்றனர் அந்தோ
- இம்மியே எனினும் ஈந்திடார் போல
- இருப்பதோ நீயும்எந் தாயே.
- ஞானஆ னந்த வல்லியாம் பிரியா
- நாயகி யுடன்எழுந் தருளி
- ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே
- இன்னமு தனைத்தையும் அருத்தி
- ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில்
- உறப்புரிந் தெனைப்பிரி யாமல்
- வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க
- மாமணி மன்றில்எந் தாயே.
- ஆடக மணிப்பொற் குன்றமே என்னை
- ஆண்டுகொண் டருளி பொருளே
- வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின்
- மெய்யொளிக் குள்ளொளி வியப்பே
- வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம்
- தவிர்த்தருள் வழங்கிய மன்றில்
- நாடகக் கருணை நாதனே உன்னை
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வட்டவான் சுடரே வளரொளி விளக்கே
- வயங்குசிற் சோதியே அடியேன்
- இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த
- இன்பமே என்பெரும் பொருளே
- கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த
- கடவுளே கனகமன் றகத்தே
- நட்டமே புரியும் பேரரு ளரசே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புல்லவா மனத்தேன் என்னினும் சமயம்
- புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்
- சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்
- சொப்பனத் தாயினும் நினையேன்
- கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன்
- கனகமா மன்றிலே நடிக்கும்
- நல்லவா எல்லாம் வல்லவா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம்
- புகுந்தெனைக் கலக்கிய போதும்
- கண்ணிலே எனது கருத்திலே கலந்த
- கருத்தனே நின்றனை அல்லால்
- மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை
- மதித்திலேன் மதிக்கின்றார் தமையும்
- நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்
- ஊக்கமும் உண்மையும் என்னைத்
- தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
- தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
- வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்
- மக்களும் மனைவியும் உறவும்
- நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென்
- வடிவமும் வண்ணமும் உயிரும்
- தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத்
- தேகமும் உருவும்மெய்ச் சிவமும்
- ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே
- ரின்பமும் அன்பும்மெய்ஞ் ஞான
- நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான்
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஆயகால் இருந்தும் நடந்திட வலியில்
- லாமையால் அழுங்குவார் எனஉண்
- மேயகால் இருந்தும் திருவருள் உறஓர்
- விருப்பிலா மையின்மிக மெலிந்தேன்
- தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய்
- சித்தனே சத்திய சபைக்கு
- நாயகா உயிர்க்கு நயகா உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
- கடியனேன் காமமே கலந்து
- வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
- வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
- மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
- மக்களை ஒக்கலை மதித்தே
- நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில்
- ஊர்தொறும் உண்டியே உடையே
- தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து
- தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
- வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன்
- வஞ்சமே பொருளென மதித்து
- நாடினேன் எனினும் பாடினேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார்
- தலத்திலே வந்தபோ தவரைப்
- பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப்
- பாதகப் பூனைபோல் இருந்தேன்
- பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து
- பேசினேன் வஞ்சரிற் பெரியேன்
- நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல்
- வாதிபோல் வார்த்தைகள் வழங்கி
- அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை
- அடிக்கடி வாங்கிய கொடியேன்
- இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை
- எனைவிடக் கொடியருக் கீந்தேன்
- நன்மையுற் றறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக்
- காட்டிடா தம்பெலாம் அடங்கும்
- தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச்
- சுகத்தினால் சோம்பினேன் உதவா
- ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும்
- ஈந்திலேன் ஈந்தவன் எனவே
- நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
- எட்டியே எனமிகத் தழைத்தேன்
- பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப்
- பிதற்றொடும் ஊர்தொறும் பெயர்ந்தேன்
- காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன்
- கல்லெனக் கிடந்தனன் குரைக்கும்
- நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
- ஊத்தையேன் நாத்தழும் புறவே
- வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
- வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
- பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
- பகடெனத் திரிகின்ற படிறேன்
- நன்றியே அறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும்
- தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே
- வருணப் படிக மணிமாலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
- பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே.
- திண்ணமும் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி
- வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே
- தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன்
- எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே.
- நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள்
- ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன்
- பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல்
- வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே.
- வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப்
- பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான்
- சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்
- ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே.
- பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின்
- கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
- மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா
- மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே.
- அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
- அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
- இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
- எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
- தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
- தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
- துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
- சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே.
- ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
- அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
- கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
- குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
- ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
- உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
- மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
- மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.
- படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே
- பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்
- உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்
- உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்
- வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்
- மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே
- நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான
- நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.
- வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
- மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
- ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
- இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
- மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
- மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
- கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
- உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
- என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
- என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
- அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
- அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
- இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
- இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.
- நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
- நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
- வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
- மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
- ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
- உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
- பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
- பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
- பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
- பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
- துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
- துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
- அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
- அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
- உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
- உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே.
- கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே
- கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே
- சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்
- தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்
- தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து
- தானாகி நானாடத் தருணம்இது தானே
- குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்
- குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.
- படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
- பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
- கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
- கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
- செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
- திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
- அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
- அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
- பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
- பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
- எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
- இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
- அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
- அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
- வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
- மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
- கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
- காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
- மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
- விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
- செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
- தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
- மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
- பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
- கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
- கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழி யாத
- மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
- மேல்ஏறி னேன்இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
- மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
- மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
- மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
- விளங்கும்உம திணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
- முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
- முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
- என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
- என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
- பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
- பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம்
- இனித்தடைஒன் றிலைகண்டாய் என்மனனே நீதான்
- மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி
- வாடாதே மலங்காதே மலர்ந்துமகிழ்ந் திருப்பாய்
- குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது
- குருவாணை நமதுபெருங் குலதெய்வத் தாணை
- பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள்
- புணர்ந்துரைத்த திருவார்த்தை பொன்வார்த்தை இதுவே.
- தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
- செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
- போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
- போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
- ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
- இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
- ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
- சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
- தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
- தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
- வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
- வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
- ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
- வகைஇது துறைஇது வழிஇது எனவே
- இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
- என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
- பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
- புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
- அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
- மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
- வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
- தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருளான வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
- இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
- மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
- வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
- தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
- சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
- அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
- வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய்
- ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும்
- கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளுமாறே.
- பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனித்தோங்கி
- மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய்
- சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும்
- இன்ன என்னுடைத் தேகம்நல் லொளிபெறும் இயலருக் கொளுமாறே.
- சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற
- அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த
- மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும்
- பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறுமாறே.
- வாய்ந்த பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம்
- ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல்
- சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும்
- ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறுமாறே.
- தீட்டு பொன்னணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம்
- காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே
- நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும்
- வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடுமாறே.
- சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
- தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
- மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
- வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
- போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
- புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
- நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
- மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
- போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
- பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
- பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
- பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
- நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
- நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
- பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
- பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
- ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
- அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
- வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
- மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
- சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
- திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
- கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
- எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
- என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
- பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
- பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
- விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
- வேண்டுமென்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
- பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
- புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
- சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
- தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
- எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
- இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
- இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
- என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
- அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
- அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
- முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
- முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
- செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
- சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
- இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
- என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
- கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
- மன்னே அயனும் திருமா லவனும்
- மதித்தற் கரிய பெரிய பொருளே
- அன்னே அப்பா ஐயா அரசே
- அன்பே அறிவே அமுதே அழியாப்
- பொன்னே மணியே பொருளே அருளே
- பொதுவாழ் புனிதா அபயம் அபயம்.
- கருணா நிதியே அபயம் அபயம்
- கனகா கரனே அபயம் அபயம்
- அருணா டகனே அபயம் அபயம்
- அழகா அமலா அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்
- தனிநா யகனே அபயம் அபயம்
- தெருணா டுறுவாய் அபயம் அபயம்
- திருவம் பலவா அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- இனிஓர் இறையும் தரியேன் அபயம்
- இதுநின் அருளே அறியும் அபயம்
- கனியேன் எனநீ நினையேல் அபயம்
- கனியே241 கருணைக் கடலே அபயம்
- தனியேன் துணைவே றறியேன் அபயம்
- தகுமோ தகுமோ தலைவா அபயம்
- துனியே அறவந் தருள்வாய் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- அடியார் இதயாம் புயனே அபயம்
- அரசே அமுதே அபயம் அபயம்
- முடியா தினிநான் தரியேன் அபயம்
- முறையோ முறையோ முதல்வா அபயம்
- கடியேன் அலன்நான் அபயம் அபயம்
- கருணா கரனே அபயம் அபயம்
- தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
- தருணா தவனே அபயம் அபயம்.
- மலவா தனைநீர் கலவா அபயம்
- வலவா திருஅம் பலவா அபயம்
- உலவா நெறிநீ சொலவா அபயம்
- உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
- பலஆ குலம்நான் தரியேன் அபயம்
- பலவா பகவா பனவா அபயம்
- நலவா அடியேன் அலவா அபயம்
- நடநா யகனே அபயம் அபயம்.
- கொடியேன் பிழைநீ குறியேல் அபயம்
- கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
- முடியேன் பிறவேன் எனநின் அடியே
- முயல்வேன் செயல்வே றறியேன் அபயம்
- படியே அறியும் படியே வருவாய்
- பதியே கதியே பரமே அபயம்
- அடியேன் இனிஓர் இறையும் தரியேன்
- அரசே அருள்வாய் அபயம் அபயம்.
- இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
- இனிநான் தரியேன் தரியேன் அபயம்
- விடர்போல் எனைநீ நினையேல் அபயம்
- விடுவேன் அலன்நான் அபயம் அபயம்
- உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங்
- குனவே எனவே அலவே அபயம்
- சுடர்மா மணியே அபயம் அபயம்
- சுகநா டகனே அபயம் அபயம்.
- குற்றம் பலஆ யினும்நீ குறியேல்
- குணமே கொளும்என் குருவே அபயம்
- பற்றம் பலமே அலதோர் நெறியும்
- பதியே அறியேன் அடியேன் அபயம்
- சுற்றம் பலவும் உனவே எனவோ
- துணைவே றிலைநின் துணையே அபயம்
- சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
- சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.
- பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன்
- பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன்
- உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன்
- உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன்
- மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
- ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
- இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
- என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
- வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
- வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
- அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான
- சித்தி புரம்எனச் சத்தியம் கண்டேன்
- இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள்
- இன்புற அன்றுவந் தெழில்உருக் காட்டி
- வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே
- வள்ளலே இன்றுநும் வரவுகண் டல்லால்
- அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர்
- கருணைக் கடற்குக் கரைக்கணஞ் செய்யீர்
- உரைக்கண வாத உயர்வுடை யீர்என்
- உரைக்கண விப்பல உதவிசெய் கின்றீர்
- வரைக்கண எண்குண மாநிதி ஆனீர்
- வாய்மையில் குறித்தநும் வரவுகண் டல்லால்
- அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
- இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
- என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
- மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
- மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
- தெருள்அளித்த திருவாளா ஞானஉரு வாளா
- தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே.
- கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
- குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
- ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
- உகந்ததண் ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
- மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
- மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
- ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- மனம்இளைத்து வாடியபோ தென்எதிரே கிடைத்து
- வாட்டமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த நிதியே
- சினமுகத்தார் தமைக்கண்டு திகைத்தபொழு தவரைச்
- சிரித்தமுகத் தவராக்கி எனக்களித்த சிவமே
- அனம்உகைத்தான் அரிமுதலோர் துருவிநிற்க எனக்கே
- அடிமுடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
- இனம்எனப்பே ரன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே
- என்னுடைய சொன்மாலை யாவும்அணிந் தருளே.
- கங்குலிலே வருந்தியஎன் வருத்தமெலாம் தவிர்த்தே
- காலையிலே என்உளத்தே கிடைத்தபெருங் களிப்பே
- செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை
- சேர்த்தணிந்தென் தனைமணந்த தெய்வமண வாளா
- எங்கும்ஒளி மயமாகி நின்றநிலை காட்டி
- என்அகத்தும் புறத்தும்நிறைந் திலங்கியமெய்ப் பொருளே
- துங்கமுறத் திருப்பொதுவில் திருநடஞ்செய் அரசே
- சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
- கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
- கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
- விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
- மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
- திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
- திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
- வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
- மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே.
- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
- விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
- தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
- தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
- தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
- நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
- நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
- அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
- அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
- என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
- யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே.
- நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
- நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
- பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
- பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
- கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
- கோவேஎன் கணவாஎன் குரவாஎன்281 குணவா
- நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
- நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே.
- கைக்கிசைந்த பொருளேஎன் கருத்திசைந்த கனிவே
- கண்ணேஎன் கண்களுக்கே கலந்திசைந்த கணவா
- மெய்க்கிசைந்த அணியேபொன் மேடையில்என் னுடனே
- மெய்கலந்த தருணத்தே விளைந்தபெருஞ் சுகமே
- நெய்க்கிசைந்த உணவேஎன் நெறிக்கிசைந்த நிலையே
- நித்தியமே எல்லாமாஞ் சத்தியமே உலகில்
- பொய்க்கிசைந்தார் காணாதே பொதுநடஞ்செய் அரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- மலைவறியாப் பெருஞ்சோதி வச்சிரமா மலையே
- மாணிக்க மணிப்பொருப்பே மரகதப்பேர் வரையே
- விலைஅறியா உயர்ஆணிப் பெருமுத்துத் திரளே
- விண்ணவரும் நண்ணரும்ஓர் மெய்ப்பொருளின் விளைவே
- கொலைஅறியாக் குணத்தோர்தங் கூட்டுறவே அருட்செங்
- கோல்நடத்து கின்றதனிக் கோவேமெய் அறிவால்
- நிலைஅறிந்தோர் போற்றுமணி மன்றில்நடத் தரசே
- நின்னடிப்பொன் மலர்களுக்கென் நெடுஞ்சொல்அணிந் தருளே.
- கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
- கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
- பண்களிக்கப் பாடுகின்ற பாட்டில்விளை சுகமே
- பத்தருளே தித்திக்கப் பழுத்ததனிப் பழமே
- மண்களிக்க வான்களிக்க மணந்தசிவ காம
- வல்லிஎன மறைகளெலாம் வாழ்த்துகின்ற வாமப்
- பெண்களிக்கப் பொதுநடஞ்செய் நடத்தரசே நினது
- பெரும்புகழ்ச்சே வடிகளுக்கென் அரும்பும்அணிந் தருளே.
- நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில்
- ஞானவடி வாய்விளங்கும் வானநடு நிலையே
- ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும்
- ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே
- தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும்
- தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே
- வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
- தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
- ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
- ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
- ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
- ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
- சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
- தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- அடிக்கடிஎன் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி
- அருள்உருவாய்த் திரிந்துதிரிந் தருள்கின்ற பொருளே
- படிக்களவின் மறைமுடிமேல் ஆகமத்தின் முடிமேல்
- பதிந்தபதம் என்முடிமேல் பதித்ததனிப் பதியே
- பொடிக்கனகத் திருமேனித் திருமணங்கற் பூரப்
- பொடிமணத்தோ டகம்புறமும் புதுமணஞ்செய் அமுதே
- அடிக்கனக அம்பலத்தே திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
- பக்கம்நின்று கேட்டாலும் பரிந்துள்உணர்ந் தாலும்
- ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும்
- இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே
- வேர்த்தாவி மயங்காது கனிந்தநறுங் கனியே
- மெய்ம்மைஅறி வானந்தம் விளக்கும்அருள் அமுதே
- தீர்த்தாஎன் றன்பர்எலாம் தொழப்பொதுவில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- வாதுறும்இந் தியகரண பரங்கள்முதல் நான்கும்
- வகுத்திடுநந் நான்கும்அகம் புறமேல்கீழ் நடுப்பால்
- ஓதுறும்மற் றெல்லாந்தன் மயமாகக் கலந்தே
- ஓங்கவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
- சூதுறுமிந் தியகரண லோகாண்டம் அனைத்தும்
- சுடர்பரப்பி விளங்குகின்ற சுயஞ்சோதிச் சுடரே
- போதுறுவார் பலர்நின்று போற்றநடம் பொதுவில்
- புரியும்நடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- மாமாயைப் பரமாதி நான்கும்அவற் றுள்ளே
- வயங்கியநந் நான்குந்தன் மயத்தாலே விளக்கி
- ஆமாறம் மாமாயைக் கப்புறத்தும் நிறைந்தே
- அறிவொன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே
- தாமாயா புவனங்கள் மாமாயை அண்டம்
- தழைத்துவிளங் கிடக்கதிர்செய் தனித்தபெருஞ் சுடரே
- தேமாலும் பிரமனும்நின் றேத்தமன்றில் நடிக்கும்
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சுத்தபர முதல்நான்கும் அவற்றுறுநந் நான்கும்
- தூயஒளி வடிவாகத் துலங்கும்ஒளி அளித்தே
- நித்தபரம் பரநடுவாய் முதலாய்அந் தமதாய்
- நீடியஓர் பெருநிலைமேல் ஆடியபே ரொளியே
- வித்தமுறும் சுத்தபர லோகாண்டம் அனைத்தும்
- விளக்கமுறச் சுடர்பரப்பி விளங்குகின்ற சுடரே
- சத்தியஞா னானந்தச் சித்தர்புகழ் பொதுவில்
- தனித்தநடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- மன்னுகின்ற அபரசத்திப் பரமாதி அவற்றுள்
- வகுத்தநிலை யாதிஎலாம் வயங்கவயின் எல்லாம்
- பன்னுகின்ற பற்பலவாம் விசித்திரசித் திரங்கள்
- பரவிவிளங் கிடவிளங்கிப் பதிந்தருளும் ஒளியே
- துன்அபர சத்திஉல கபரசத்தி அண்டம்
- சுகம்பெறவே கதிர்பரப்பித் துலங்குகின்ற சுடரே
- உன்னும்அன்பர் உளங்களிக்கத் திருச்சிற்றம் பலத்தே
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க்
- கையும்மெய்யும் பரிசிக்கச் சுகபரிசத் ததுவாய்ச்
- சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தஞ்செய் குவதாய்த்
- தூயசெவிக் கினியதொரு சுகநாதத் ததுவாய்
- மாட்சியுற வாய்க்கினிய பெருஞ்சுவைஈ குவதாய்
- மறைமுடிமேல் பழுத்தெனக்கு வாய்த்தபெரும் பழமே
- ஆட்சியுற அருள்ஒளியால் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்புரி அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- இருள்இரவில் ஒருமூலைத் திண்ணையில்நான் பசித்தே
- இளைப்புடனே படுத்திருக்க எனைத்தேடி வந்தே
- பொருள்உணவு கொடுத்துண்ணச் செய்வித்தே பசியைப்
- போக்கிஅருள் புரிந்தஎன்றன் புண்ணியநற் றுணையே
- மருள்இரவு நீக்கிஎல்லா வாழ்வும்எனக் கருளி
- மணிமேடை நடுஇருக்க வைத்தஒரு மணியே
- அருள்உணவும் அளித்தென்னை ஆட்கொண்ட சிவமே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- எண்ணாத மந்திரமே எழுதாத மறையே
- ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே
- பண்ணாத பூசையிலே படியாத படிப்பே
- பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
- நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே
- நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
- அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- என்உயிரும் என்உடலும் என்பொருளும் யானே
- இசைந்துகொடுத் திடவாங்கி இட்டதன்பின் மகிழ்ந்தே
- தன்உயிரும் தன்உடலும் தன்பொருளும் எனக்கே
- தந்துகலந் தெனைப்புணர்ந்த தனித்தபெருஞ் சுடரே
- மன்உயிருக் குயிராகி இன்பமுமாய் நிறைந்த
- மணியேஎன் கண்ணேஎன் வாழ்முதலே மருந்தே
- மின்னியபொன் மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
- வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
- பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
- பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
- உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
- ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
- மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
- மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே
- எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித்
- தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத்
- தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே
- அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே
- ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே
- பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே
- புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே.
- தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
- தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
- முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
- முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
- என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
- இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே
- என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
- இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- கொலைபுரிவார் தவிரமற்றை எல்லாரும் நினது
- குலத்தாரே நீஎனது குலத்துமுதல் மகனே
- மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்
- வளரவளர்ந் திருக்கஎன வாழ்த்தியஎன் குருவே
- நிலைவிழைவார் தமைக்காக்கும் நித்தியனே எல்லா
- நிலையும்விளங் குறஅருளில் நிறுத்தியசிற் குணனே
- புலையறியாப் பெருந்தவர்கள் போற்றமணிப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்
- குறித்திடும்ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
- படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்
- பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே
- நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே
- நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
- அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம்
- அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
- தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச்
- செழித்திடுக வாழ்கஎனச் செப்பியசற் குருவே
- பொருளுடைய பெருங்கருணைப் பூரணமெய்ச் சிவமே
- போதாந்த முதல்ஆறும் நிறைந்தொளிரும் ஒளியே
- மருளுடையார் தமக்குமருள் நீக்கமணிப் பொதுவில்
- வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- ஆணவமாம் இருட்டறையில் கிடந்தசிறி யேனை
- அணிமாயை விளக்கறையில் அமர்த்திஅறி வளித்து
- நீணவமாம் தத்துவப்பொன் மாடமிசை ஏற்றி
- நிறைந்தஅருள் அமுதளித்து நித்தமுற வளர்த்து
- மாணுறஎல் லாநலமும் கொடுத்துலகம் அறிய
- மணிமுடியும் சூட்டியஎன் வாழ்முதலாம் பதியே
- ஏணுறுசிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும்
- விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும்
- எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக
- எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே
- அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா
- ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
- பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும்
- பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- பொறிகரண முதற்பலவாம் தத்துவமும் அவற்றைப்
- புரிந்தியக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
- செறியும்உப காரிகளாம் சத்திகளும் அவரைச்
- செலுத்துகின்ற சத்தர்களும் தன்ஒளியால் விளங்க
- அறிவறிவாய் அவ்வறிவுக் கறிவாய்எவ் விடத்தும்
- ஆனதுவாய்த் தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
- நெறிவழங்கப் பொதுவில்அருள் திருநடஞ்செய் அரசே
- நின்அடியேன் சொன்மாலை நிலைக்கஅணிந் தருளே.
- கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
- கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
- கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
- காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
- பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
- பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
- தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
- நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
- மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ
- விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே
- கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே
- காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே
- மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற
- வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.
- தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
- சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
- ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
- உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்
- ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே
- ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே
- ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
- நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
- வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
- வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
- தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
- சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
- தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
- சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
- இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
- எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
- தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
- தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
- சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- ஆதியிலே எனையாண்டென் அறிவகத்தே அமர்ந்த
- அப்பாஎன் அன்பேஎன் ஆருயிரே அமுதே
- வீதியிலே விளையாடித் திரிந்தபிள்ளைப் பருவம்
- மிகப்பெரிய பருவம்என வியந்தருளி அருளாம்
- சோதியிலே விழைவுறச்செய் தினியமொழி மாலை
- தொடுத்திடச்செய் தணிந்துகொண்ட துரையேசிற் பொதுவாம்
- நீதியிலே நிறைந்தநடத் தரசேஇன் றடியேன்
- நிகழ்த்தியசொன் மாலையும்நீ திகழ்த்திஅணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி
- அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து
- கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்
- கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே
- வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே
- மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே
- படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்
- ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே
- மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து
- வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து
- சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்
- துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்
- சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே
- சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக்
- கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து
- மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து
- மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித்
- தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும்
- தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே
- அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத்
- தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே
- மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி
- வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து
- நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய்
- நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி
- அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி
- ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பொன்புனை புயனும் அயனும்மற் றவரும்
- புகலரும் பெரியஓர் நிலையில்
- இன்புரு வாகி அருளொடும் விளங்கி
- இயற்றலே ஆதிஐந் தொழிலும்
- தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத்
- தனிஅர சியற்றும்ஓர் தலைவன்
- அன்பெனும் குடிசை நுழைந்தன னானால்
- அவன்தனை மறுப்பவர் யாரே.
- தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித்
- தனித்தனி மறைகள்ஆ கமங்கள்
- உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா
- ஒருதனிப் பெரும்பதி உவந்தே
- புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள்
- பொறுத்தருட் பூரண வடிவாய்
- என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ
- எந்தையைத் தடுப்பவர் யாரே.
- வரம்பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா
- வருபர உணர்ச்சியும் மாட்டாப்
- பரம்பர உணர்ச்சி தானும்நின் றறியாப்
- பராபர உணர்ச்சியும் பற்றா
- உரம்பெற உணர்வார் யார்எனப் பெரியர்
- உரைத்திட ஓங்கும்ஓர் தலைவன்
- கரம்பெறு கனிபோல் என்னுளம் புகுந்தான்
- கடவுளைத் தடுப்பவர் யாரே.
- உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில்
- உளவுயிர் முழுவதும் ஒருங்கே
- கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும்
- குறைபடாப் பெருங்கொடைத் தலைவன்
- கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக்
- கருத்தெலாம் இனிதுதந் தருளித்
- தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான்
- தந்தையைத் தடுப்பவர் யாரே.
- அறிந்தன அறிந்தாங் கறிந்தறிந் தறியா
- தையகோ ஐயகோ அறிவின்
- மறிந்தன மயர்ந்தேம் எனமறை அனந்தம்
- வாய்குழைந் துரைத்துரைத் துரையும்
- முறிந்திட வாளா இருந்தஎன் றறிஞர்
- மொழியும்ஓர் தனிப்பெருந் தலைவன்
- செறிந்தென துளத்தில் சேர்ந்தனன் அவன்றன்
- திருவுளம் தடுப்பவர் யாரே.
- கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்
- கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்
- குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த
- கொள்கையாய்க் கொள்கையோ டளவா
- அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்
- அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்
- மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்
- வண்மையைத் தடுப்பவர் யாரே.
- வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே
- தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையி னூடே
- திருவடிசேர்த் தருள்கஎனச் செப்பிவருந் திடவும்
- நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே
- நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என்
- ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன்
- உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- இறையளவும் துரிசிலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
- இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும்முத லிடமாய்
- மறைமுடியோ டாகமத்தின் மணிமுடிமேல் முடியாய்
- மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணிமேடை அமர்ந்த
- நிறையருட்சீ ரடிமலர்கள் சிவந்திடவந் தடியேன்
- நினைத்தஎலாம் கொடுத்தருளி நிலைபெறச்செய் தனையே
- குறைவிலதிப் பெருவரந்தான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே
- நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி
- தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத்
- துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
- ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள்
- உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
- எட்டானை என்னளவில் எட்டி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- புயலானை மழையானை அதிர்ப்பி னானைப்
- போற்றியமின் ஒளியானைப் புனித ஞானச்
- செயலானைச் செயலெல்லாந் திகழ்வித் தானைத்
- திருச்சிற்றம் பலத்தானைத் தெளியார் உள்ளே
- அயலானை உறவானை அன்பு ளானை
- அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
- இயலானை எழிலானைப் பொழிலா னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தாயானைத் தந்தைஎனக் காயி னானைச்
- சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே
- மேயானைக் கண்காண விளங்கி னானை
- மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன
- வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை
- வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி
- ஏயானைத் துரியநடு விருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உடையானை அருட்ஜோதி உருவி னானை
- ஓவானை மூவானை உலவா இன்பக்
- கொடையானை என்குறைதீர்த் தென்னை ஆண்டு
- கொண்டானைக் கொல்லாமை குறித்தி டாரை
- அடையானைத் திருசிற்றம் பலத்தி னானை
- அடியேனுக் கருளமுதம் அளிக்க வேபின்
- இடையானை என்னாசை எல்லாந் தந்த
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அறிந்தானை அறிவறிவுக் கறிவா னானை
- அருட்பெருஞ்சோ தியினானை அடியேன் அன்பில்
- செறிந்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தாய்ச்
- சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார் தம்மைப்
- பிறிந்தானை என்னுளத்தில் கலந்து கொண்ட
- பிரியமுள பெருமானைப் பிறவி தன்னை
- எறிந்தானை எனைஎறியா தெடுத்தாண் டானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
- உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
- கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
- கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
- தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
- தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
- எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உறவானை என்னுயிர்க்குள் உயிரா னானை
- உறுபிழைகள் செயினும்அவை உன்னி என்னை
- மறவானை அறவாழி வழங்கி னானை
- வஞ்சகர்க்குத் திருக்கோயில் வழிக்க பாடந்
- திறவானை என்னளவில் திறந்து காட்டிச்
- சிற்சபையும் பொற்சபையும் சேர்வித் தானை
- இறவானைப் பிறவானை இயற்கை யானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அகத்தானைப் புறத்தானை அணுவா னானை
- அணுவினுக்குள் அணுவானை அதனுள் ளானை
- மகத்தானை மகத்தினும்ஓர் மகத்தா னானை
- மாமகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
- சகத்தானை அண்டமெலாம் தானா னானைத்
- தனிஅருளாம் பெருங்கருணைத் தாயா னானை
- இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும்
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
- திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
- மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
- வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
- கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
- கையானை என்னைஎன்றும் கையா தானை
- எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
- ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- மருந்தானை மணியானை வழுத்தா நின்ற
- மந்திரங்க ளானானை வான நாட்டு
- விருந்தானை உறவானை நண்பி னானை
- மேலானைக் கீழானை மேல்கீழ் என்னப்
- பொருந்தானை என்னுயிரில் பொருந்தி னானைப்
- பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
- இருந்தானை இருப்பானை இருக்கின் றானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- ஆன்றானை அறிவானை அழிவி லானை
- அருட்பெருஞ்ஜோ தியினானை அலர்ந்த ஜோதி
- மூன்றானை இரண்டானை ஒன்றானானை
- முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
- தோன்றானைத் தூயருளே தோன்றி னானைச்
- சுத்தசிவ சன்மார்க்கந் துலங்க என்னை
- ஈன்றானை எல்லாமாய் அல்லா தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால்
- சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை
- வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை
- வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை
- வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை
- மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
- ஈய்ந்தானை268 ஆய்ந்தவர்தம் இதயத் தானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன்
- அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத்
- தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
- மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த
- வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக்
- கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- மருள்நெறிசேர் மலஉடம்பை அழியாத விமல
- வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்
- தருணமது தெரிந்தெனக்குத் தானேவந் தளித்த
- தயாநிதியை எனைஈன்ற தந்தையைஎன் தாயைப்
- பொருள்நிறைசிற் றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்
- புகல்அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்
- கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளைஎன் கண்ணால்
- கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.
- அருளெலாம் அளித்த அம்பலத் தமுதை
- அருட்பெருஞ் ஜோதியை அரசே
- மருளெலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை
- வள்ளலை மாணிக்க மணியைப்
- பொருளெலாம் கொடுத்தென் புந்தியில் கலந்த
- புண்ணிய நிதியைமெய்ப் பொருளைத்
- தெருளெலாம் வல்ல சித்தைமெய்ஞ் ஞான
- தீபத்தைக் கண்டுகொண் டேனே.
- சிதத்திலே271 ஊறித் தெளிந்ததெள் ளமுதைச்
- சித்தெலாம் வல்லமெய்ச் சிவத்தைப்
- பதத்திலே பழுத்த தனிப்பெரும் பழத்தைப்
- பரம்பர வாழ்வைஎம் பதியை
- மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த
- மருந்தைமா மந்திரந் தன்னை
- இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- புல்லிய நெறிநீத் தெனைஎடுத் தாண்ட
- பொற்சபை அப்பனை வேதம்
- சொல்லிய படிஎன் சொல்எலாம் கொண்ட
- ஜோதியைச் சோதியா தென்னை
- மல்லிகை மாலை அணிந்துளே கலந்து
- மன்னிய பதியைஎன் வாழ்வை
- எல்லியும் இரவும் என்னைவிட் டகலா
- இறைவனைக் கண்டுகொண் டேனே.
- பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும்
- பிறங்கிய பொதுமையைப் பெரிய
- தண்மையை எல்லாம் வல்லஓர் சித்த
- சாமியைத் தயாநிதி தன்னை
- வண்மையை அழியா வரத்தினை ஞான
- வாழ்வைஎன் மதியிலே விளங்கும்
- உண்மையை என்றன் உயிரைஎன் உயிருள்
- ஒருவனைக் கண்டுகொண் டேனே.
- என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
- என்னைவாழ் விக்கின்ற பதியைப்
- பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
- பொருந்திய மருந்தையென் பொருளை
- வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
- வைத்தசன் மார்க்கசற் குருவைக்
- கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
- கோயிலில் கண்டுகொண் டேனே.
- துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
- சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
- அன்புளே கலந்த தந்தையை என்றன்
- ஆவியைப் பாவியேன் உளத்தை
- இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
- இனிதமர்ந் தருளிய இறையை
- வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- களங்கொளுங் கடையேன் களங்கெலாங் தவிர்த்துக்
- களிப்பெலாம் அளித்தசர்க் கரையை
- உளங்கொளுந் தேனை உணவுணத் தெவிட்டா
- துள்ளகத் தூறும்இன் னமுதை
- வளங்கொளும் பெரிய வாழ்வைஎன் கண்ணுள்
- மணியைஎன் வாழ்க்கைமா நிதியைக்
- குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்
- குருவையான் கண்டுகொண் டேனே.
- சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
- சிதம்பர நடம்புரி சிவத்தைப்
- பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
- பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
- இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
- யாவுமாய் அல்லவாம் பொருளைச்
- சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
- சாமியைக் கண்டுகொண் டேனே.
- சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
- சுத்தசித் தாந்தரா சியத்தைத்
- தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
- சமரச சத்தியப் பொருளைச்
- சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
- தெளிந்தபே ரானந்தத் தெளிவை
- வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
- மெய்மையைக் கண்டுகொண் டேனே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- கலைநிறை மதியைக் கனலைச்செங் கதிரைக்
- ககனத்தைக் காற்றினை அமுதை
- நிலைநிறை அடியை அடிமுடி தோற்றா
- நின்மல நிற்குண நிறைவை
- மலைவறும் உளத்தே வயங்குமெய் வாழ்வை
- வரவுபோக் கற்றசின் மயத்தை
- அலையறு கருணைத் தனிப்பெருங் கடலை
- அன்பினிற் கண்டுகொண் டேனே.
- புலைகொலை தவிர்த்த நெறியிலே என்னைப்
- புணர்த்திய புனிதனை எல்லா
- நிலைகளும் காட்டி அருட்பெரு நிலையில்
- நிறுத்திய நிமலனை எனக்கு
- மலைவறத் தெளிந்த அமுதளித் தழியா
- வாழ்க்கையில் வாழவைத் தவனைத்
- தலைவனை ஈன்ற தாயைஎன் உரிமைத்
- தந்தையைக் கண்டுகொண் டேனே.
- உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
- உவப்பிலா அண்டத்தின் பகுதி
- அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
- அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
- விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
- றிருந்தென விருந்தன மிடைந்தே
- இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
- தென்பர்வான் திருவடி நிலையே.
- அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
- அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
- படர்தரு விந்து பிரணவப் பிரமம்
- பரைபரம் பரன்எனும் இவர்கள்
- சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
- துணையடிப் பாதுகைப் புறத்தே
- இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
- ஏத்துவன் திருவடி நிலையே.
- இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
- பிரமன்ஈ சானனே முதலாம்
- மகத்துழல் சமய வானவர் மன்றின்
- மலரடிப் பாதுகைப் புறத்தும்
- புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
- புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
- செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
- தெரிந்தனன் திருவடி நிலையே.
- பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
- போந்தவான் முடியதாங் கதன்மேல்
- மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
- வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
- என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
- தத்திலே இலங்கிய ததன்மேல்
- தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
- தழுவினன் திருவடி நிலையே.
- மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
- மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
- அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
- அமைந்தன சத்திகள் அவற்றின்
- கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
- கருதுரு முதலிய விளங்க
- நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
- நவின்றனர் திருவடி நிலையே.
- கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
- பெருங்கருணைக் கடலை வேதத்
- திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
- தெள்ளமுதத் தெளிவை வானில்
- ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
- உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
- அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
- இதயத்தே விளங்கு கின்ற
- துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
- தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
- செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
- ஒன்றான தெய்வந் தன்னை
- அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
- விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
- செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
- சிவகதியைச் சிவபோ கத்தைத்
- துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
- துணிந்தளித்த துணையை என்றன்
- அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
- பெரும்பொருளைப் புனிதந் தன்னை
- என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
- பெருங்கருணை இயற்கை தன்னை
- இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
- பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
- அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
- அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
- பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
- போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
- இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
- எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
- தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
- என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
- நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
- நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
- கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
- காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
- செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
- வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
- மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
- காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
- கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
- சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
- சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
- என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
- என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
- பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
- பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
- அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
- அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
- சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
- எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
- நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
- நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
- பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
- பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
- திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
- சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
- மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
- மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
- ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
- எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
- தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே
- நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே
- நண்புகொண் டருளிய நண்பே
- வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து
- வயங்கிய தனிநிலை வாழ்வே
- பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
- அம்பலத் தெம்பிரான் என்கோ
- நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
- நீடும்என் நேயனே என்கோ
- பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
- பெரியரிற் பெரியனே என்கோ
- இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
- அன்பிலே நிறைஅமு தென்கோ
- சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
- மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
- மன்னும்என் வாழ்முதல் என்கோ
- இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- என்உளம் பிரியாப் பேரொளி என்கோ
- என்உயிர்த் தந்தையே என்கோ
- என்உயிர்த் தாயே இன்பமே என்கோ
- என்உயிர்த் தலைவனே என்கோ
- என்உயிர் வளர்க்கும் தனிஅமு தென்கோ
- என்னுடை நண்பனே என்கோ
- என்ஒரு275 வாழ்வின் தனிமுதல் என்கோ
- என்னைஆண் டருளிய நினையே.
- கருணைமா நிதியே என்னிரு கண்ணே
- கடவுளே கடவுளே என்கோ
- தருணவான் அமுதே என்பெருந் தாயே
- தந்தையே தந்தையே என்கோ
- தெருள்நிறை மதியே என்குரு பதியே
- தெய்வமே தெய்வமே என்கோ
- அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ நின்றனை அறிந்தே.
- யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
- ஓங்கிய காட்சியே என்கோ
- ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
- இசைந்தபே ரின்பமே என்கோ
- சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
- சார்ந்தசற் குருமணி என்கோ
- மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
- மன்றிலே நடிக்கின்றோய் நினையே.
- இரவிலா தியம்பும் பகலிலா திருந்த
- இயற்கையுள் இயற்கையே என்கோ
- வரவிலா வுரைக்கும் போக்கிலா நிலையில்
- வயங்கிய வான்பொருள் என்கோ
- திரையிலா தெல்லாம் வல்லசித் தெனக்கே
- செய்ததோர் சித்தனே என்கோ
- கரவிலா தெனக்குப் பேரருட் சோதி
- களித்தளித் தருளிய நினையே.
- எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
- இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
- ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
- உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
- வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
- மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
- சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
- அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
- முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
- முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
- சகவடிவில் தானாகி நானாகி நானும்
- தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
- சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
- அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
- போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
- பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
- ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
- இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
- தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
- படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
- அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
- அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
- தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
- தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
- துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
- தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
- ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பே ரன்பே
- உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
- நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
- நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே
- ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
- கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
- பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
- படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
- சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
- சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
- ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
- உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
- ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
- ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
- சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
- சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
- அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
- சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
- உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
- உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
- இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
- எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
- அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
- துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
- இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
- என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
- என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
- இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- மனந்தருவா தனைதவிர்த்தோர்321 அறிவினில்ஓர் அறிவாய்
- வயங்குகின்ற குருவேஎன் வாட்டமெலாம் தவிர்த்தே
- இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
- எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
- சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
- சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
- அலப்பற விளங்கும் அருட்பெரு விளக்கே
- அரும்பெருஞ் சோதியே சுடரே
- மலப்பிணி அறுத்த வாய்மைஎம் மருந்தே
- மருந்தெலாம் பொருந்திய மணியே
- உலப்பறு கருணைச் செல்வமே எல்லா
- உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
- புலப்பகை தவிர்க்கும் பூரண வரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம்
- தரவல்ல சம்புவே சமயப்
- புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த
- புண்ணியர் நண்ணிய புகலே
- வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா
- வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே
- பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சத்திய பதியே சத்திய நிதியே
- சத்திய ஞானமே வேத
- நித்திய நிலையே நித்திய நிறைவே
- நித்திய வாழ்வருள் நெறியே
- சித்திஇன் புருவே சித்தியின் கருவே
- சித்தியிற் சித்தியே எனது
- புத்தியின் தெளிவே புத்தமு தளித்துப்
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியே
- சிவபத அனுபவச் சிவமே
- மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
- மதிநிறை அமுதநல் வாய்ப்பே
- சதத்திரு நெறியே தனிநெறித் துணையே
- சாமியே தந்தையே தாயே
- புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கலைவளர் கலையே கலையினுட் கலையே
- கலைஎலாம் தரும்ஒரு கருவே
- நிலைவளர் கருவுட் கருஎன வயங்கும்
- நித்திய வானமே ஞான
- மலைவளர் மருந்தே மருந்துறு பலனே
- மாபலம் தருகின்ற வாழ்வே
- புலைதவிர்த் தெனையும் பொருளெனக் கொண்டு
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அன்பனே அப்பா அம்மையே அரசே
- அருட்பெருஞ் சோதியே அடியேன்
- துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
- சுகத்திலே தோற்றிய சுகமே
- இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
- என்னுளே இலங்கிய பொருளே
- வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
- பெருக்கமே என்பெரும் பேறே
- உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
- உண்மைவான் அமுதமே என்பால்
- கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
- கருணையங் கடவுளே விரைந்து
- வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
- என்னிரு கண்ணினுள் மணியே
- இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
- இணையிலா என்னுடை அன்பே
- சொந்தநல் உறவே அம்பலத் தரசே
- சோதியே சோதியே விரைந்து
- வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- கோஎன எனது குருஎன ஞான
- குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
- பூஎன அதிலே மணம்என வணத்தின்
- பொலிவென வயங்கிய பொற்பே
- தேவெனத் தேவ தேவென ஒருமைச்
- சிவம்என விளங்கிய பதியே
- வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
- ஒருவனே உலகெலாம் அறியத்
- தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
- சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
- கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
- கடவுளே கனகஅம் பலத்தென்
- வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- நல்லவா அளித்த நல்லவா எனையும்
- நயந்தவா நாயினேன் நவின்ற
- சொல்லவா எனக்குத் துணையவா ஞான
- சுகத்தவா சோதிஅம் பலவா
- அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
- ஆண்டவா தாண்டவா எல்லாம்
- வல்லவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- திண்மையே முதலைங் குணக்கரு வாய
- செல்வமே நல்வழி காட்டும்
- கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
- கண்ணுற இயைந்தநற் கருத்தே
- உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
- ஒருதனித் தெய்வமே உலவா
- வண்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
- கற்பகத் தனிப்பெருந் தருவே
- தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
- சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
- சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
- சித்தியே சுத்தசன் மார்க்க
- வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
- ஈன்றவா என்னவா வேதம்
- சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
- துதியவா அம்பலத் தமுதம்
- அன்னவா அறிவால் அறியரி வறிவா
- ஆனந்த நாடகம் புரியும்
- மன்னவா என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
- விளக்கினால் என்னுளம் விளக்கி
- இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
- கென்கருத் தனைத்தையும் புரிந்தே
- சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
- சத்தியைத் தயவினால் தருக
- வரதனே என்றேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- 322. அறியறி வறிவா - பி. இரா., ச. மு. க.
- துப்பார் செஞ்சடை யாய் - அருட் - சோதிச் சுகக்கட லே
- செப்பா மேனிலைக் கே - சிறி - யேனைச் செலுத்திய வா
- எப்பா லும்புக ழும் - பொது - இன்ப நடம்புரி யும்
- அப்பா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே
- மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே
- பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே
- அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
- தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
- பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
- அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே
- இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே
- பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ்
- அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
- சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
- தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
- லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம்
- தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே
- வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய்
- ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
- நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
- மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
- ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
- அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
- எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
- உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
- பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
- என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
- உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
- கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
- அருள்நன் னிலையில்318 அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
- அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
- வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
- வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
- தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
- தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
- கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
- கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
- உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
- உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
- சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
- மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
- வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
- தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
- தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
- ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
- உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
- வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே
- வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
- நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
- நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
- கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
- கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
- தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
- சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
- புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
- பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
- நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
- நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
- ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
- எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
- ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
- ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
- ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
- இந்நாட்புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
- தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
- தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
- ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
- உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
- சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
- சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
- ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
- ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
- தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
- சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
- இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
- திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
- பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
- படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
- விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
- வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
- கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
- கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
- ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
- உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
- நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
- நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
- ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
- அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
- பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
- பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- 318. நிலையின் - பி. இரா. பதிப்பு.
- 319. வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
- கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
- தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
- எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
- வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
- கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
- முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
- புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
- நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
- முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
- சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
- கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
- வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
- நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
- ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
- மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
- பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
- ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர்
- மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
- நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
- கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான்
- நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை
- வினைவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே.
- உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
- புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த
- வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத்
- தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே.
- முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
- பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
- சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
- மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
- விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த
- நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும்
- கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன்
- உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே.
- வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த
- புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த
- நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம்
- பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே.
- உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்
- புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்
- குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
- தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.
- தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
- சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா
- சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே
- ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே.
- மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய்
- பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே
- நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம்
- சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே.
- மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும்
- ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா
- ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும்
- மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே.
- பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
- தங்குமோர் சோதித்தனி ப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா
- துங்கமுற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
- சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே.
- இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும்
- கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட
- மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத்
- தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே.
- கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
- சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
- மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
- யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
- எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
- சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
- அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
- வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
- வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
- ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
- சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
- தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
- கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
- சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
- பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
- வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
- எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
- நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
- கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
- பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
- அருளே பழுத்த சிவதருவில் அளிந்த பழந்தந் தடியேனைத்
- தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- மருளே முதலாம் தடைஎல்லாம் தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
- பொருளே இனிநின் தனைப்பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.
- ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
- திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே.
- அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளா ரமுதம் மிகப்புகட்டிச்
- சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
- நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
- செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
- நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
- தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
- நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.
- இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
- தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
- தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
- சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
- திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.
- ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
- தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
- தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.
- ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
- சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
- தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே.
- பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
- சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
- திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
- அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளகவே.2
- இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் இலங்கும் கருணை எங்கோவே
- தப்பா யினதீர்த் தென்னையும்முன் தடுத்தாட் கொண்ட தயாநிதியே
- எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் இறைவா எல்லாம் வல்லோனே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொய்யா தென்றும் எனதுளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
- கையார்ந் திலங்கு மணியேசெங் கரும்பே கனியே கடையேற்குச்
- செய்யா உதவி செய்தபெருந் தேவே மூவாத் தெள்ளமுதே
- ஐயா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- துப்பார் கனகப் பொதுவில்நடத் தொழிலால் உலகத் துயர்ஒழிக்கும்
- வைப்பாம் இறைவா சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
- ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
- பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
- தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
- சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
- முழுதும்ஆ னான்என ஆகம வேத
- முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
- எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
- என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
- தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
- சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
- சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
- நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
- நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
- எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
- கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
- பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
- பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
- நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
- நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
- எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
- என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
- புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
- பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
- சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
- சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
- மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
- வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
- என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
- ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
- ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
- பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
- பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
- அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
- அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
- இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
- சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
- சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
- நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
- நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
- முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
- முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
- எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
- என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
- வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
- கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
- கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
- பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
- பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
- இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
- மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
- வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
- அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
- அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
- தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
- சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
- இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
- என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
- அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
- அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
- வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
- வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
- விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
- விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
- இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
- எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
- இரவு விடிந்தது இணையடி வாய்த்த
- பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
- பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
- தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
- தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
- ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
- வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
- லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
- புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
- தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
- இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
- முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
- சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
- அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
- கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
- நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
- ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
- இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
- மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
- தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
- அருளைக்கொடுத்தென் தனைஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
- ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
- ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
- நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
- நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
- கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
- கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
- ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
- சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
- செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
- தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
- இப்படி வான்முதல் எங்கணும் அறிய
- என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
- எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
- தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
- கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
- கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
- வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
- வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
- இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
- மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
- தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
- சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்
- ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
- அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
- ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
- வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
- முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
- மூவகை யாம்உடல் ஆதியை நுமது
- பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
- பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
- என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
- சேர்கதி பலபல செப்புகின் றாரும்
- பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
- பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
- மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
- மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
- எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
- எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
- நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகீதப்
- பாட்டுக் கொடியே இறைவர்வலப் பாகக் கொடியே353 பரநாத
- நாட்டுக் கொடியே எனைஈன்ற ஞானக் கொடியே என்னுறவாம்
- கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே .
- மாலக் கொடியேன் குற்றமெலாம் மன்னித் தருளி மரணமெனும்
- சாலக் கொடியை ஒடித்தெனக்குட் சார்ந்து விளங்கும் தவக்கொடியே
- காலக் கருவைக் கடந்தொளிர்வான் கருவும் கடந்து வயங்குகின்ற
- கோலக் கொடியே சிவஞானக் கொடியே அடியேற் கருளுகவே.
- நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப்
- பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே
- தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த
- கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே.
- மணங்கொள் கொடிப்பூ முதல்நான்கு வகைப்பூ வடிவுள் வயங்குகின்ற
- வணங்கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான்கொடியே
- கணங்கொள் யோக சித்திஎலாம் காட்டுங் கொடியே கலங்காத
- குணங்கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற் கருளுகவே.
- ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
- உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
- வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
- மன்றினை மறந்ததிங் குண்டோ
- ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
- ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
- பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
- பரிந்தருள் புரிவதுன் கடனே.
- எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
- இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
- சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
- தனித்துவே றெண்ணிய துண்டோ
- செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
- சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
- இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
- தியற்றுவ துன்கடன் எந்தாய்.
- கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
- வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
- காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
- வாணா நினக்கடிமை வாய்த்து.
- பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப்புளகம்
- போர்த்தேன்என் உள்ளமெலாம் பூரித்தேன் - ஆர்த்தேநின்
- றாடுகின்றேன் பாடுகின்றேன் அன்புருவா னேன்அருளை
- நாடுகின்றேன் சிற்சபையை நான்.
- கொண்டான் அடிமை குறியான் பிழைஒன்றும்
- கண்டான்265 களித்தான் கலந்திருந்தான் - பண்டாய
- நான்மறையும் ஆகமமும் நாடுந் திருப்பொதுவில்
- வான்மயத்தான் என்னை மகிழ்ந்து.
- தாதையாம் என்னுடைய தாயாம்என் சற்குருவாம்
- மேதையாம் இன்ப விளைவுமாம் - ஓது
- குணவாளன் தில்லைஅருட் கூத்தன் உமையாள்
- மணவாளன் பாத மலர்.
- திருவாம்என் தெய்வமாம் தெள்ளமுத ஞானக்
- குருவாம் எனைக்காக்கும் கோவாம் - பருவரையின்
- தேப்பிள்ளை யாம்எம் சிவகாம வல்லிமகிழ்
- மாப்பிள்ளை பாத மலர்.
- என்அறிவாம் என்அறிவின் இன்பமாம் என்னறிவின்
- தன்அறிவாம் உண்மைத் தனிநிலையாம் - மன்னுகொடிச்
- சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
- மாலைஇட்டான் பாதமலர்.
- மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
- வாழ்விலே வரவிலே மலஞ்சார்
- தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
- தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
- காலிலே ஆசை வைத்தனன் நீயும்
- கனவினும் நனவினும் எனைநின்
- பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- மதத்திலே சமய வழக்கிலே மாயை
- மருட்டிலே இருட்டிலே மறவாக்
- கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
- கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
- பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
- பரிந்தெனை அழிவிலா நல்ல
- பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
- கொழுநரும் மகளிரும் நாண
- நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
- நீங்கிடா திருந்துநீ என்னோ
- டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
- றறிவுரு வாகிநான் உனையே
- பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
- நாதனை என்உளே கண்டு
- கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
- கூடிடக் குலவிஇன் புருவாய்
- ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
- அம்பலம் தன்னையே குறித்துப்
- பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
- சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
- விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
- விழித்திருந் திடவும்நோ வாமே
- மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
- மன்றிலே வயங்கிய தலைமைப்
- பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
- புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
- கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
- கருத்தொடு வாழவும் கருத்தில்
- துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
- துலங்கவும் திருவருட் சோதிப்
- பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம்
- ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ.
- பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர்
- ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
- பொதுவாகிப் பொதுவில்நடம் புரிகின்ற பேரின்பப் பொருள்தான் யாதோ
- அதுநானாய் நான்அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.
- மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத
- அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன் அந்தோ அந்தோ.
- ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
- நன்றே ஒருமையுற்று நண்ணியே - மன்றே
- நடம்புரியும் பாத நளினமலர்க் குள்ளம்
- இடம்புரிக வாழ்க இசைந்து.
- சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
- நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
- போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
- நாற்றிசையும் வாழ்க நயந்து.
- கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
- அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
- நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
- தெல்லோரும் வாழ்க இசைந்து.
- புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
- நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில்
- செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
- ஒத்தாராய் வாழ்க உவந்து.
- நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
- சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் - தேவாநின்
- பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
- யார்உளர்நீ சற்றே அறை.
- வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
- சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
- எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
- விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
- வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
- புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
- திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
- நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே.
- தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
- தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
- வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
- தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
- தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
- இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
- அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
- சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.
- கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
- உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
- பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
- பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
- வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும்
- மேவும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- நாதாந்தத் திருவீதி நடப்பாயோ தோழி
- நடவாமல் என்மொழி கடப்பாயோ தோழி.
- தொம்பத உருவொடு தத்பத வெளியில்
- தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
- எம்பதமாகி இசைவாயோ தோழி
- இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
- நவநிலை மேற்பர நாதத் தலத்தே
- ஞானத் திருநடம் நான்காணல் வேண்டும்
- மவுனத் திருவீதி வருவாயோ தோழி
- வாராமல் வீண்பழி தருவாயோ தோழி.
- ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
- அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
- ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
- ஏறி இழிந்திங் கிறப்பாயோ289 தோழி.
- வகார வெளியில் சிகார உருவாய்
- மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
- விகார உலகை வெறுப்பாயோ தோழி
- வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.
- நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
- நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
- துட்டநெறியில் கெடுவாயோ தோழி.
- அறிவில் அறிவை அறியும் பொதுவில்
- ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
- செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
- செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- தடுத்திடல் வல்லார் இல்லைநின் அருளைத்
- தருகநற் றருணம்ஈ தென்றாள்
- கொடுத்திடில் ஐயோ நின்னருட் பெருமை
- குறையுமோ குறைந்திடா தென்றாள்
- நடுத்தய விலர்போன் றிருத்தலுன் றனக்கு
- ஞாயமோ நண்பனே என்றாள்
- வடுத்தினும் வாயேன் அல்லன்நான் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
- பொங்கிய தாசைமேல் என்றாள்
- என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
- என்னள வன்றுகாண் என்றாள்
- கொன்செயும் உலகர் என்னையும் உனது
- குறிப்பையும் குறித்திலார் என்றாள்
- வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு
- மேவிலை என்னையோ என்றாள்
- நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல்
- நல்லவர்க் கடுப்பதோ என்றாள்
- மலிந்த இவ்வுலகர் வாய்ப்பதர் தூற்ற
- வைத்தல்உன் மரபல என்றாள்
- வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- ஆடிய பாதத் தழகன்என் றனைத்தான்
- அன்பினால் கூடினன் என்றாள்
- கோடிமா தவங்கள் புரியினும் பிறர்க்குக்
- கூடுதல் கூடுமோ என்றாள்
- பாடிய படிஎன் கருத்தெலாம் நிரப்பிப்
- பரிசெலாம் புரிந்தனன் என்றாள்
- வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- அங்கலிட்ட285 களத்தழகர் அம்பலவர் திருத்தோள்
- ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே
- பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார்
- பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள்
- எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி
- இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே
- தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும்
- பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள்
- இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால்
- எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம்
- மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள்
- மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள்
- தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார்
- புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார்
- கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால்
- கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும்
- நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை
- நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ
- வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும்
- தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார்
- எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாரான்
- இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே
- ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே
- ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
- சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே.
- அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர்
- அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே
- என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள்
- இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை
- முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால்
- முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல்
- மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும்
- வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை
- உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது
- பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும்
- பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ
- நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள்
- நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில்
- நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும்
- நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே.
- என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
- இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
- தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
- தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
- அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
- அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
- மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
- அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
- தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
- சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
- எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
- இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
- செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
- சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
- அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே
- அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர்
- உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி
- உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது
- புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே
- பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால்
- இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார்
- சத்தியர் உத்தமர் நித்தம ணாளர்
- ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின்
- உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன்
- அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே
- அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல்
- இப்போதே என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர்
- பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார்
- வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே
- மன்றகம் பாடி மகிழ்கின்ற போது
- ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே
- எம்முடம் புன்னை366 இணைந்திங் கெமக்கே
- ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல்
- மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர்
- சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான்
- சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது
- புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே
- புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே
- இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும்
- அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர்
- தேறறி வாகிச் சிவானு பவத்தே
- சின்மய மாய்நான் திளைக்கின்ற போது
- மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே
- வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே
- ஏறினை என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
- அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
- எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
- வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
- நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
- நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.
- கண்ணுறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
- கனவன்றி இலைஎன்றேன் அதனாலோ அன்றி
- எண்ணுறங்கா நிலவில்அவர் இருக்குமிடம் புகுவேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பெண்ணடங்காள் எனத்தோழி பேசிமுகங் கடுத்தாள்
- பெருந்தயவால் வளர்த்தவளும் வருந்தயலாள் ஆனாள்
- மண்ணடங்காப் பழிகூறி மற்றவர்கள் இருந்தார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்கணவர் என்றால்
- எனக்கும்ஒன்று நினக்கும்ஒன்றா என்றஅத னாலோ
- இல்லாமை எனக்கில்லை எல்லார்க்குந் தருவேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- கல்லார்போல் என்னைமுகம் கடுத்துநின்றாள் பாங்கி
- களித்தெடுத்து வளர்த்தவளும் கலந்தனள்அங் குடனே
- செல்லாமை சிலபுகன்று சிரிக்கின்றார் மடவார்
- சித்தர்நட ராயர்திருச் சித்தமறிந் திலனே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
- எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
- நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
- அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
- அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கண்கலந்த கள்வர்என்னைக் கைகலந்த தருணம்
- கரணம்அறிந் திலன்என்றேன் அதனாலோ அன்றி
- எண்கலந்த போகமெலாம் சிவபோகந் தனிலே
- இருந்ததென்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- விண்கலந்த மதிமுகந்தான் வேறுபட்டாள் பாங்கி
- வியந்தெடுத்து வளர்த்தவளும் வேறுசில புகன்றாள்
- பண்கலந்த மொழிமடவார் பழிகூற லானார்
- பத்தர்புகழ் நடராயர் சித்தம்அறிந் திலனே.
- மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
- வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
- இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
- மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
- அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
- அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- காரிகையீர் எல்லீரும் காணவம்மின் எனது
- கணவர்அழ கினைஎன்றேன் அதனாலோ அன்றி
- ஏரிகவாத் திருவுருவை எழுதமுடி யாதே
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- காரிகவாக் குழல்சோரக் கடுத்தெழுந்தாள் பாங்கி
- கண்பொறுத்து வளர்த்தவளும் புண்பொறுத்தாள் உளத்தே
- நேரிகவாப் பெண்கள்மொழிப் போர்இகவா தெடுத்தார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கற்பூரம் கொணர்ந்துவம்மின் என்கணவர் வந்தால்
- கண்ணெச்சில் கழிக்கஎன்றேன் அதனாலோ அன்றி
- எற்பூத நிலையவர்தம் திருவடித்தா மரைக்கீழ்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- வற்பூத வனம்போன்றாள் பாங்கியவள் தனைமுன்
- மகிழ்ந்துபெற்றிங் கெனைவளர்த்தாள் வினைவளர்த்தாள் ஆனாள்
- விற்பூஒள் நுதல்மடவார் சொற்போர்செய் கின்றார்
- விண்ணிலவு நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மனைஅணைந்த மலரணைமேல் எனைஅணைந்த போது
- வடிவுசுக வடிவானேன் என்றஅத னாலோ
- இனைவறியேன் முன்புரிந்த பெருந்தவம்என் புகல்வேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- புனைமுகம்ஓர் கரிமுகமாய்ப் பொங்கிநின்றாள் பாங்கி
- புழுங்குமனத் தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
- பனையுலர்ந்த ஓலைஎனப் பெண்கள்ஒலிக் கின்றார்
- பண்ணவர்என் நடராயர் எண்ணம்அறிந் திலனே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவீர்
- மறைந்திருமின் நீவிர்என்றேன் அதனாலோ அன்றி
- எணமேது நுமக்கெனைத்தான் யார்தடுக்கக் கூடும்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- குணநீடு பாங்கிஅவள் எம்மிறையை நினையார்
- குணங்கொண்டாள் வளர்த்தவளும் பணம்விண்டாள் ஆனாள்
- மணநீடு குழன்மடவார் குணநீடு கின்றார்
- வள்ளல்நட ராயர்திரு வுள்ளம்அறிந் திலனே.
- பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்
- பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ
- எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்
- மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்
- துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்
- சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்
- கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ
- ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்
- நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்
- தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்
- திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- சத்திய ஞான சபாபதி எனக்கே
- தனிப்பதி ஆயினான் என்றாள்
- நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப
- நிலைதனில் நிறைந்தனன் என்றாள்
- பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப்
- பேறெலாம் என்வசத் தென்றாள்
- எத்திசை யீரும் ஒத்திவண் வருக
- என்றனள் எனதுமெல் லியலே.
- வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு
- மாலைவந் தணிந்தனன் என்றாள்
- ஊழிதோ றூழி உலவினும் அழியா
- உடம்பெனக் களித்தனன் என்றாள்
- ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும்
- அளிக்கஎன் றருளினான் என்றாள்
- ஏழியன் மாட மிசையுற வைத்தான்
- என்றனள் எனதுமெல் லியலே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ
- சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோரோ
- மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ
- முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர்
- யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல
- அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
- ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார்
- அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம்
- திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகி
- உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
- துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
- பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
- பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- ஏய்ப்பந்தி வண்ணர்என்றும் படிகவண்ணர் என்றும்
- இணையில்ஒளி உருவர்என்றும் இயல்அருவர் என்றும்
- வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்
- மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே
- காய்ப்பந்த மரம்என்று கண்டுசொல்வ தன்றிக்
- காய்த்தவண்ணம் பூத்தவண்ணம் கண்டுகொள மாட்டாத்
- தாய்ப்பந்த உணர்வுடையேன் யானோசிற் சபையில்
- தனிமுதல்வர் திருவண்ணம் சாற்றவல்லேன் தோழி.
- கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
- கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
- தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
- ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
- நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
- நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
- மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
- வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
- காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
- வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
- விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
- தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
- துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
- மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
- வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
- தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
- சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
- தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
- ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
- இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால்
- ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
- பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
- புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
- பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
- மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
- மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
- அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
- அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
- நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
- நாரணர்கள் மற்றவரின்361 நாடின்மிகப் பெரியர்
- வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
- மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
- மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
- மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
- ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
- ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி.
- மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
- வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
- எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
- எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
- விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
- விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
- அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
- அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
- மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
- வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
- கண்ணென்னும் உணர்ச்சிசெலாக் காட்சியவாய்க் நிற்பக்
- கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
- நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
- நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம்
- அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
- அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை
- வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம்
- விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக
- விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான
- எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே
- இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும்
- தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல்
- சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி.
- பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம்
- பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை
- உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை
- உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில்
- துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில்
- தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால்
- அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர்
- அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- வாயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம்
- பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை363 ஒருகோடி
- பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம்
- எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம்
- எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே
- விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது
- விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி.
- விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ
- விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்
- கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே
- கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும்
- பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்
- பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்
- நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்
- நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.
- வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல்
- மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள்
- நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும்
- நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில்
- பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும்
- பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில்
- கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல்
- காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி.
- உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
- உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
- நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
- நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
- குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
- குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
- மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
- வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம்
- சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே
- தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத்
- தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம்
- வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து
- மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி
- ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும்
- அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி.
- பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை
- பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில்
- வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி
- வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி
- தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி
- சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள்
- திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும்
- திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி.
- சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச்
- சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி
- ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி
- உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி
- ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய்
- அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை
- வேதியனும் திருமாலும் உருத்திரளும் அறியார்
- விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி.
- பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம்
- பூஇருபத் தைஐம்பூவாய்ப் பூத்துமலர்ந் திடவும்
- நான்ஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
- நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
- மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
- வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
- பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
- பகர்ந்திடவல் லுநள் அல்லேன் பாராய்என் தோழி.
- கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக்
- கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும்
- நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய்
- நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி
- ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும்
- உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும்
- நடுங்குடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே.
- மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு
- மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க
- இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால்
- எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி
- மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும்
- வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும்
- அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
- ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே.
- அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை
- அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள்
- உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல்
- உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும்
- மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால்
- மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்
- இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்
- இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.
- சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே
- தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன்
- தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர்
- தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர்
- இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை
- இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி
- நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம்
- நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என்
- றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ
- துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ
- சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ
- விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த
- மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி
- வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால்
- மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
- அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தாகிஉள் அண்ணிக்கின்ற
- அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
- உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
- வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
- குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
- மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
- கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
- கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
- தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
- உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
- தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
- சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
- நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
- இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
- நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
- மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
- குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
- தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
- நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
- பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
- கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
- மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
- வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
- ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
- டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
- வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
- மன்னிய நின்அரு ளாரமு தம்தந்து வாழ்வித்துநான்
- உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
- தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
- துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.
- தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
- தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
- நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
- வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
- நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
- வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
- தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
- அம்பலவன் தன்அருளி னால்.
- அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
- மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
- பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
- தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
- ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு
- மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு
- வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல்
- செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே.
- எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல
- சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த
- தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும்
- செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே.
- காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
- வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
- கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
- சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
- நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
- தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
- பாக்கியவான் ஆனேன் பதிந்து.
- நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
- ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
- மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
- காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
- வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
- வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம்
- வாழி அருட்சோதி வாழிநட ராயன்
- வாழி சிவஞான வழி.
- அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
- தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
- யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
- ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
- நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
- போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
- ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
- மன்றொன்று வானை மகிழ்ந்து.
- கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
- எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
- அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
- பொதுவாய் நடிக்கின்ற போது.
- 286. அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,ச. மு. க.
- 287. பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம்(பூமி - பார், பொருந்து - வதி).
- மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
- உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
- திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
- குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
- விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
- பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
- கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
- வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
- அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
- கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்
- தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்
- காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்
- சாலையிலே வாஎன்றான் தான்.
- என்னே அதிசயம்ஈ திவ்வுலகீர் என்னுரையைப்
- பொன்னே எனமேற் புனைந்துகொண்டான் - தன்னேரில்
- நல்ஆ ரணங்கள்எலாம் நாணியவே எல்லாஞ்செய்
- வல்லான் திருக்கருணை வாய்ப்பு.
- பின்முன்அறி யேன்நான் பிதற்றியசொன் மாலைஎலாம்
- தன்முன்அரங் கேற்றெனவே தான்உரைத்தான் - என்முன்
- இருந்தான்என் னுள்ளே இருக்கின்றான் ஞான
- மருந்தான்சிற் றம்பலத்தான் வாய்ந்து.
- நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்
- ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்
- புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்
- எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.
- ஆக்கி அளித்தல்முத லாந்தொழில்ஓர் ஐந்தினையும்
- தேக்கி அமுதொருநீ செய்என்றான் - தூக்கி
- எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
- கொடுத்தான்சிற் றம்பலத்தென் கோ.
- துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்
- கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
- தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
- இனிநான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே.
- அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இதுஎன்றே
- இருளே தொலைந்த திடர்அனைத்தும் எனைவிட் டகன்றே ஒழிந்தனவால்
- தெருளே சிற்றம் பலத்தாடும் சிவமே எல்லாம் செய்யவல்ல
- பொருளே இனிநான் வீண்போது போக்க மாட்டேன் கண்டாயே.
- கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இதுஎன் றருள்உணர்த்தக்
- கொண்டே அறிந்து கொண்டேன்நல் குறிகள் பலவுங் கூடுகின்ற
- தொண்டே புரிவார்க் கருளும்அருட் சோதிக் கருணைப் பெருமனே
- உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.
- தேனே கன்னல் செழும்பாகே என்ன மிகவும் தித்தித்தென்
- ஊனே புகுந்தென் உளத்தில்அமர்ந் துயிரில் கலந்த ஒருபொருளை
- வானே நிறைந்த பெருங்கருணை வாழ்வை மணிமன் றுடையானை
- நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.
- நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
- வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
- குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
- நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
- பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன்எனை
- உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்
- எற்றே அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார் இன்னமுதம்
- துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.
- வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன்
- கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
- தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
- ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
- நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
- வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
- ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
- கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
- எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
- தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
- வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
- தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
- சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
- குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
- வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
- நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
- ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
- நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
- இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
- மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
- உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே
- உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன்
- இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன்
- இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன்
- விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே
- விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின்
- அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே
- அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே.
- மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது
- வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே
- போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட
- பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே
- தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்
- செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே
- பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே
- புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே.
- அளந்திடுவே தாகமத்தின் அடியும்நடு முடியும்
- அப்புறமும் அப்பாலும் அதன்மேலும் விளங்கி
- வளர்ந்திடுசிற் றம்பலத்தே வயங்கியபே ரொளியே
- மாற்றறியாப் பொன்னேஎன் மன்னேகண் மணியே
- தளர்ந்தஎனை அக்கணத்தே தளர்வொழித்தா னந்தம்
- தந்தபெருந் தகையேஎன் தனித்ததனித் துணைவா
- உளந்தருசம் மதமான பணிஇட்டாய் எனக்கே
- உன்பணியே பணியல்லால் என்பணிவே றிலையே.
- நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது
- நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா
- எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை
- யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய்
- பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில்
- பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே
- தண்புடைநன் மொழித்திரளும்354 சுவைப்பொருளும் அவைக்கே
- தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- வாக்கொழிந்து மனம்ஒழிந்து மதிஒழிந்து மதியின்
- வாதனையும் ஒழிந்தறிவாய் வயங்கிநின்ற இடத்தும்
- போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாய் அதுவும்
- போனபொழு துள்ளபடி புகலுவதெப் படியோ
- நீக்கொழிந்த நிறைவேமெய்ந் நிலையேஎன் னுடைய
- நேயமே ஆனந்த நிருத்தமிடும் பதியே
- ஏக்கொழிந்தார் உளத்திருக்கும் இறையேஎன் குருவே
- எல்லாமாய் அல்லதுமாய் இலங்கியமெய்ப் பொருளே.
- மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
- பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
- நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
- சிவனே கதவைத் திற.
- அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
- மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
- தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
- சிவனே கதவைத் திற.
- வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
- ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
- திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
- சிறப்பா கதவைத் திற.
- எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
- நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
- நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
- செல்வா கதவைத் திற.
- ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
- வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
- ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
- தேவா கதவைத் திற.
- திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
- வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
- வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
- தேனே கதவைத் திற.
- சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
- மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
- ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
- தேகா கதவைத் திற.
- சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே
- நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன்
- தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே
- பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே.
- விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான்
- விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே
- உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே.
- விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே
- எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான்
- அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே
- துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே.
- ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே
- தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின்
- பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே
- ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே.
- இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே
- துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன்
- புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனை இஞ்ஞான்றே
- அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே.
- சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே
- துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான்
- மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே
- பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே.
- வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே
- மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங்
- கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே
- தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே.
- தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே
- காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான்
- நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே
- பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
- தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே
- கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான்
- இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே
- புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே.
- கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே
- மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான்
- ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே
- செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே.
- நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி
- மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய்
- இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம்
- ஒன்றே எனினும் பொறேன்அரு ளாணை உரைத்தனனே.
- வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச்
- சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம்
- போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும்
- சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே.
- செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே
- இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய்
- எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை
- வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே.
- வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும்
- வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள்
- வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு
- வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே.
- ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
- சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
- பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
- தாடிக் களிக்க அருள்.
- உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
- வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
- கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
- பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
- ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
- ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
- பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
- அருட்பெருஞ் சோதி அது.
- ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
- தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
- கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
- ஈசனத்தன் அம்பலவ னே.
- ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
- சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
- ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
- வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
- துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
- அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
- தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
- ஓங்கினேன் உண்மை உரை.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
- மேன்மேற் கலந்துபொங்க
- விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
- விளங்கஅறி வறிவதாகி
- உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
- துவட்டாதுள் ஊறிஊறி
- ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
- உள்ளபடி உள்ளஅமுதே
- கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
- கண்ணே கலாந்தநடுவே
- கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
- கணிப்பருங் கருணைநிறைவே
- துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட்
- சுகபோக யோகஉருவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே
- இடையிலே கடையிலேமேல்
- ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
- டெய்துவடி வந்தன்னிலே
- கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
- கருவிலே தன்மைதனிலே
- கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
- கலந்தோங்கு கின்றபொருளே
- தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
- சேர்ந்தனு பவித்தசுகமே
- சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
- திருமாளி கைத்தீபமே
- துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
- சுதந்தரித் தொளிசெய்ஒளியே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
- அம்மண்ட லந்தன்னிலே
- அகலத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
- கானவடி வாதிதனிலே
- விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
- விளக்கும்அவை அவையாகியே
- மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
- மெய்ந்நிலையும் ஆனபொருளே
- தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
- தலத்திலுற வைத்தஅரசே
- சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
- தானாய்இ ருந்தபரமே
- தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
- சுகமும்ஒன் றானசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
- ஒளியிலே சுடரிலேமேல்
- ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
- உறும்ஆதி அந்தத்திலே
- தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
- செயவல்ல செய்கைதனிலே
- சித்தாய் விளங்கிஉப சித்தாய சத்திகள்
- சிறக்கவளர் கின்றஒளியே
- வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
- வானமே ஞானமயமே
- மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
- வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
- துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
- சுகம்எனக் கீந்ததுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
- ஆதிநடு அந்தத்திலே
- ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
- ஆடும்அதன் ஆட்டத்திலே
- உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
- உற்றபல பெற்றிதனிலே
- ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
- குபகரித் தருளும்ஒளியே
- குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
- கோடிகிர ணங்கள்வீசிக்
- குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
- குலாவும்ஒரு தண்மதியமே
- துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட
- சொருபமே துரியபதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
- வத்திலே வான்இயலிலே
- வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
- வண்ணத்தி லேகலையிலே
- மானிலே நித்திய வலத்திலே பூரண
- வரத்திலே மற்றையதிலே
- வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
- வைத்தஅருள் உற்றஒளியே
- தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
- திரளிலே தித்திக்கும்ஓர்
- தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
- செப்பிடாத் தெள்ளமுதமே
- தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
- சொருபமே சொருபசுகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
- அவ்வுருவின் உருவத்திலே
- அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
- அவ்வொளியின் ஒளிதன்னிலே
- பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
- பக்கநடு அடிமுடியிலே
- பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
- பலித்தபர மானந்தமே
- மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
- வாழ்வே நிறைந்தமகிழ்வே
- மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
- வரமே வயங்குபரமே
- துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
- துரியமே பெரியபொருளே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
- உற்றகரு வாகிமுதலாய்
- உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
- உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
- பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
- பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
- பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
- பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
- தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
- சிவமாய் விளங்குபொருளே
- சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
- தேற்றிஅருள் செய்தகுருவே
- மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
- வாழ்வேஎன் வாழ்வின்வரமே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
- நண்ணுறு கலாந்தம்உடனே
- நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
- ஞானமெய்க் கொடிநாட்டியே
- மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
- முன்னிப் படைத்தல்முதலாம்
- முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
- மூர்த்திகளும் ஏவல்கேட்ப
- வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
- வாய்ந்துபணி செய்யஇன்ப
- மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
- வளத்தொடு செலுத்துமரசே
- சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
- துரியநடு நின்றசிவமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- வரவுசெல வற்றபரி பூரணா காரசுக
- வாழ்க்கைமுத லாஎனக்கு
- வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
- வயங்கிஒளிர் கின்றஒளியே
- இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபே
- ரின்பமே அன்பின்விளைவே
- என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
- என்னாசை யேஎன் அறிவே
- கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
- கருணைஅமு தேகரும்பே
- கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
- கடவுளே கலைகள்எல்லாம்
- விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
- மெய்ம்மையே சன்மார்க்கமா
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
- துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
- ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
- குவப்பொடு கிடைத்தநிதியே
- வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
- வரந்தந்த வள்ளலேஎன்
- மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
- மதிஅமுதின் உற்றசுகமே
- ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
- தென்னைஎன் றதிசயிப்ப
- இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
- இன்புறச் செய்தகுருவே
- ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
- யாடென் றுரைத்தஅரசே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிஒளிர்
- அபயநட ராஜபதியே.
- பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
- புகல்வழிப் பணிகள்கேட்பப்
- பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
- பொருள்கண்ட சத்தர்பலரும்
- ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
- கிசைந்தெடுத் துதவஎன்றும்
- இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
- றிருக்கஎனை வைத்தகுருவே
- நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
- நலம்பெறச் சன்மார்க்கமாம்
- ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
- நடத்திவரு நல்லஅரசே
- வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
- மாமதியின் அமுதநிறைவே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
- மனமிக மயங்கிஒருநாள்
- மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
- மறந்துதுயில் கின்றபோது
- நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
- நன்றுற எழுப்பிமகனே
- நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
- நலிதல்அழ கோஎழுந்தே
- ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
- டின்புறுக என்றகுருவே
- என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
- ரின்பமே என்செல்வமே
- வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
- வித்தையில் விளைந்தசுகமே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
- நின்வார்த்தை யாவும்நமது
- நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
- நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
- ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
- அழியாத நிலையின்நின்றே
- அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
- ஆடிவாழ் கென்றகுருவே
- நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
- நான்இளங் காலைஅடைய
- நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
- நண்பனே துணைவனேஎன்
- ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
- ஒருவனே அருவனேஉள்
- ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
- ஓங்குநட ராஜபதியே.
- அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக்
- கன்புடன் உரைத்தபடியே
- அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
- அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
- இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
- இயற்றிவிளை யாடிமகிழ்க
- என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
- இயல்சுத்த மாதிமூன்றும்
- எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
- எய்திநின் னுட்கலந்தேம்
- இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
- தெம்மாணை என்றகுருவே
- மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
- வரமாகி நின்றசிவமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே
- அதுஅது வாய்ஒளிர் பொதுவுறு நிதியே
- கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே
- கூறிஎன் உள்ளத்தில் குலவிய களிப்பே
- பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே
- பெருநெறிக் கேற்றிய ஒருபெரும் பொருளே
- சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- தத்துவ மசிநிலை இதுஇது தானே
- சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே
- எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே
- ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால்
- சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச்
- செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே
- சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய்
- இதுவழி எனஎனக் கியல்புற உரைத்தே
- விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே
- மேனிலைக் கேற்றிய மெய்நிலைச் சுடரே
- பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே
- புரையறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
- சதுமறை முடிகளின் முடியுறு சிவமே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம்
- இருநிலை களும்ஒரு நிலைஎன அறிவாய்
- முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம்
- முன்னிலை பின்னிலை முழுநிலை உளவாம்
- இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே
- இயனிலை அடைகஎன் றியம்பிய பரமே
- தன்னிலை ஆகிய நன்னிலை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
- காரண காரியக் கருவிது பலவாய்
- ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
- அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
- பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
- பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
- தாரணி தனில்என்ற தயவுடை அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
- பவநெறி இதுவரை பரவிய திதனால்
- செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
- செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
- புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
- புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
- தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல்
- அடிநடு முடியிலா ததுஇது மகனே
- படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே
- பதிஅடி முடியிலாப் பரிசையும் அறிவாய்
- செடியற உலகினில் அருள்நெறி இதுவே
- செயலுற முயலுக என்றசிற் பரமே
- தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
- அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
- கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
- காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
- எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
- எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
- சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே
- அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
- செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே
- திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
- பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே
- பிறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே
- தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
- உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
- ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
- பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
- பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியரெலாம் அறிவார்
- இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
- ஈங்குமது துள்ளலெலாம் ஏதும்நட வாதே.
- பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
- பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
- கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
- குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
- என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
- இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
- பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
- பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
- விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
- விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
- புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
- புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
- தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
- சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
- பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
- பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
- பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
- பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
- சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
- தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே
- ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
- அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
- பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
- பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
- மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
- வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
- உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
- உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
- வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
- மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
- இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
- கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
- நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
- நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
- அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
- அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
- அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
- ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
- அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
- அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
- செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
- திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
- இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
- இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
- சுகங்காண நின்றனைநீ அறியாயோ நான்தான்
- சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
- மாமாயை எனும்பெரிய வஞ்சகிநீ இதுகேள்
- வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
- போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
- போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
- சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
- சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
- ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
- அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
- கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
- கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
- நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
- நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
- என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
- இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
- இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
- எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
- பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
- பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
- வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
- வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
- ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
- திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
- மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
- வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
- தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
- துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
- தாக்கு332 பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
- தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
- ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
- இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
- போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
- பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
- பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
- பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
- தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
- தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
- செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
- தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
- அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
- அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
- மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
- வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
- பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
- பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
- இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
- என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
- அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
- அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
- 331. எனவே - சாலையிலுள்ள மூலம். முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 332. 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில் இது'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு.பொ. சு., பி. இரா. ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது.மிகத் தெளிவாகவும் காணப்படுகிறது.
- மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
- வரையுள தாதலால் மகனே
- எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
- தெழில்உறு மங்கலம் புனைந்தே
- குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
- கோலத்தால் காட்டுக எனவே
- வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
- வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
- எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
- இரண்டரைக் கடிகையில் உனக்கே
- அம்புவி வானம் அறியமெய் அருளாம்
- அனங்கனை333 தனைமணம் புரிவித்
- தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
- உண்மைஈ தாதலால் உலகில்
- வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
- மெய்ப்பொது நடத்திறை யவரே.
- விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
- மெய்யருள் திருவினை நினக்கே
- வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
- வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
- இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
- எல்லையுள் எழில்மணக் கோலம்
- நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
- நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
- அருள்ஒளித் திருவைநின் தனக்கே
- மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
- விரைந்திரண் டரைக்கடி கையிலே
- கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
- களிப்பொடு மங்கலக் கோலம்
- வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
- என்றனர் மன்றிறை யவரே.
- மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
- மணம்புரி விக்கின்றாம் இதுவே
- வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
- மங்கலக் கோலமே விளங்க
- இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
- எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
- சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
- தந்தையார் சிற்சபை யவரே.
- அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
- பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
- மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
- தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
- வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
- ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
- வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
- ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
- நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
- பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
- வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
- வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
- வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
- ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
- ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
- ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.
- அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
- பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
- மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
- தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.
- அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
- அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
- கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
- எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
- இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
- எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே
- செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
- செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
- எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
- எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
- நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
- நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
- பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
- பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
- எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
- இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
- கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
- கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
- தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
- சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
- திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
- திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
- வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
- வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
- மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
- வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
- மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
- விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
- நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
- நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
- தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
- தூயதிரு நாள்வருநாள் தொடாங்கிஒழி யாவே.
- மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
- வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
- நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
- நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
- கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
- குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
- சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
- தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
- ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
- இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
- ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
- உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
- தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
- திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
- ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
- எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
- தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும்
- தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்
- எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்
- என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே
- வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே
- மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்
- சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார்
- நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி
- என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே
- இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர்
- முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை
- முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ
- தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை
- உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக்
- கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது
- கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய்
- நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத்
- தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னுடைய தனிக்கணவர் அருட்ஜோதி உண்மை
- யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார்
- உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார்
- உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத்
- துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே
- தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில்
- தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார்
- எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை
- இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே
- இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம்
- மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து
- மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல்
- தன்நிகர்தா னாம்பொதுவில் நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக்
- கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர்
- அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர்
- அறிவாரோ அவர்உரைகொண் டையமுறேல் இங்கே
- இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப
- இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய்
- தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஆர்அறிவார் எல்லாம்செய் வல்லவர்என் உள்ளே
- அறிவித்த உண்மையைமால் அயன்முதலோர் அறியார்
- பார்அறியா தயல்வேறு பகர்வதுகேட் டொருநீ
- பையுளொடும் ஐயமுறேல் காலைஇது கண்டாய்
- நேர்உறநீ விரைந்துவிரைந் தணிபெறமா ளிகையை
- நீடஅலங் கரிப்பாய்உள் நேயமொடு களித்தே
- தாரகமிங் கெனக்கான நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- ஐயர்எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை
- யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்
- பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே
- புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்
- மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்
- மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே
- தையல்ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- உடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை
- உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே
- இடைபுகல்கின் றார்அதுகேட் டையமுறேல் இங்கே
- இரவுவிடிந் ததுகாலை எய்தியதால் இனியே
- அடைவுறநம் தனித்தலைவர் தடையறவந் தருள்வர்
- அணிபெறமா ளிகையைவிரைந் தலங்கரித்து மகிழ்க
- சடையசையப் பொதுநடஞ்செய் இறைவர்திரு வார்த்தை
- சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.
- கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
- கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
- பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
- பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
- கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
- குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
- எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆறாமல் அவியாமல் அடைந்தகோ பத்தீர்
- அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
- மாறாமல் மனஞ்சென்ற வழிசென்று திகைப்பீர்
- வழிதுறை காண்கிலீர் பழிபடும் படிக்கே
- நாறாத மலர்போலும் வாழ்கின்றீர் மூப்பு
- நரைதிரை மரணத்துக் கென்செயக் கடவீர்
- ஏறாமல் வீணிலே இறங்குகின் றீரே
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- ஆயாமை யாலேநீர் ஆதிஅ னாதி
- ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
- மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
- மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
- காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
- கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்
- கீயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- சாமாந்தர் ஆகாத் தரஞ்சிறி துணரீர்
- தத்துவ ஞானத்தை இற்றெனத் தெரியீர்
- மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர்
- வாழ்க்கையி லேஅற்ப மகிழ்ச்சியும் பெற்றீர்
- காமாந்த காரத்தில் கண்மூடித் திரிவீர்
- கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதா
- தேமாந்து தூங்குகின் றீர்விழிக் கின்றீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்
- அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்
- பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்
- பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்
- பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்
- பின்படு தீமையின் முன்படு கின்றீர்
- இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
- வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
- பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
- பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்
- பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
- பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்
- எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- வன்சொல்லின் அல்லது வாய்திறப் பறியீர்
- வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர்
- முன்சொல்லும் ஆறொன்று பின்சொல்வ தொன்றாய்
- மூட்டுகின் றீர்வினை மூட்டையைக் கட்டி
- மன்சொல்லும் மார்க்கத்தை மறந்துதுன் மார்க்க
- வழிநடக் கின்றீர்அம் மரணத்தீர்ப் புக்கே
- என்சொல்ல இருக்கின்றீர் பின்சொல்வ தறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
- தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
- சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
- பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
- பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
- என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- பொய்கட்டிக் கொண்டுநீர் வாழ்கின்றீர் இங்கே
- புலைகட்டிக் கொண்டஇப் பொய்யுடல் வீழ்ந்தால்
- செய்கட்டி வாழ்கின்ற செருக்கற்று நரகில்
- சிறுபுழு ஆகித் திகைத்திடல் அறியீர்
- கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே
- கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணைஒன் றில்லீர்
- எய்கட்டி இடைமொய்க்கும் ஈயினும் சிறியீர்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
- பகராத வன்மொழி பகருகின் றீரே
- நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
- நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
- கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
- கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
- எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
- எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
- உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்
- உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
- மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
- வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்
- இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
- எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே
- நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்
- நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.
- வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
- வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
- மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
- வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
- மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
- மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
- செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
- சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
- வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
- அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
- இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
- துன்பமெலாம் போன தொலைந்து.
- வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான
- நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்
- ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்
- பாடுகநீ என்றான் பரன்.
- தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்
- ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்
- செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்
- எய்தற் கரியசுகம் ஏய்ந்து.
- சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
- நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்
- ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
- தானவிளை யாட்டியற்றத் தான்.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி
- நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்
- நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்
- ஊன்நாடி நில்லா உழி.
- துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ
- சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்
- நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்
- மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.
- சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
- நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
- பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
- வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
- வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
- சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
- என்ன பயனோ இவை.
- பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்
- மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்
- சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்
- இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.
- வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்
- தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த
- மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
- இங்குநடஞ் செய்வான் இனி.
- சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்
- சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்
- ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே
- வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.
- இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
- நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்
- சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
- நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.
- யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை
- ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த
- அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த
- கம்பலத்தால் ஆகும் களித்து.
- ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
- நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
- கென்மார்க்க மும்ஒன்றா மே.
- மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது
- தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்
- சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்
- நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.
- இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற
- நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்
- அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்
- அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.
- போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்
- நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்
- அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்
- றிப்புவியில் இத்தருணம் இங்கு.
- நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
- நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
- நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
- நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
- வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
- புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
- பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
- கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
- கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
- உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
- உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
- விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
- மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
- எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
- இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
- இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
- எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
- அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்
- அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
- பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
- பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
- வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
- மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
- தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
- சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
- ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
- அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோ தியைஓர்
- ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
- ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
- நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்
- நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே.
- நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
- நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
- சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்
- தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
- சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
- சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
- ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
- உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.
- களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
- களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
- தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
- செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
- ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
- ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
- அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
- ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே.
- ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
- அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
- ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
- எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
- தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்
- திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
- மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்
- முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.
- உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
- உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
- எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
- என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
- தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
- சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
- கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
- கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.
- தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
- தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
- வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
- வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
- தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
- சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்
- ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
- உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே.
- சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம்
- தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
- நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
- நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
- அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
- ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
- சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
- சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
- சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
- சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
- இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ
- தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
- அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான
- அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
- முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
- முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
- திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
- ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
- உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
- வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
- மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
- சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
- தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
- செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
- திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
- மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
- மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்
- வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
- மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
- பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
- புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.
- பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
- புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே
- மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
- மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
- பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
- பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
- அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
- அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.
- இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
- இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
- மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
- மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
- சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
- சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
- பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
- பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- ஆய்உரைத்த அருட்ஜோதி வருகின்ற
- தருணம்இதே அறிமின் என்றே
- வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
- கின்றார்இம் மனிதர்அந்தோ
- தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
- உளங்கலந்த தலைவா இங்கே
- நீஉரைத்த திருவார்த்தை எனஅறியார்
- இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.
- இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற
- தருணம்இதே என்று வாய்மை
- அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என்
- வார்த்தைகள்என் றறைகின் றாரால்
- மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ
- எல்லாஞ்செய் வல்லோய் உன்றன்
- சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம்
- மனிதர்மதித் திறமை என்னே.
- சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
- படுவாரைத் துணிந்து கொல்லக்
- கூற்றாசைப் படும்எனநான் கூறுகின்ற
- துண்மையினில் கொண்டு நீவீர்
- நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
- போலும்அன்றி நினைத்த வாங்கே
- பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
- பதிப்புகழைப் பேசு வீரே.
- குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
- டால்அதுதான் கொலையாம் என்றே
- வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
- சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
- பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
- சம்மதிக்கும் பேய ரேநீர்
- எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
- கஞ்சுவரே இழுதை யீரே.
- பாம்பெலாம் ஓடின பறவையுட் சார்ந்தன
- தீம்பலா வாழைமாத் தென்னை சிறந்தன
- ஆம்பலன் மென்மேலும் ஆயின என்னுளத்
- தோம்பல்என் அருட்பெருஞ் சோதியார் ஓங்கவே.
- மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
- வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
- பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
- நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- இடம்பெற்ற உயிர்எலாம் விடம்அற்று வாழ்ந்தன
- மடம்பெற்ற மனிதர்கள் மதிபெற்று வாழ்கின்றார்
- திடம்பெற்றே எழுகின்றார் செத்தவர் தினந்தினம்
- நடம்பெற்ற அருட்பெருஞ் சோதியார் நண்ணவே.
- குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன
- மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின
- பிணங்கள் எலாம்உயிர் பெற்றெழுந் தோங்கின
- இணங்க அருட்பெருஞ் சோதியார் எய்தவே.
- ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை
- ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன்
- ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள்
- வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே.
- எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப
- கரிக்கின்றார் யாவர் அந்தச்
- செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின்
- செயல்எனவே தெரிந்தேன் இங்கே
- கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர்
- தமக்கேவல் களிப்பால் செய்ய
- ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன்
- வாய்மிகவும் ஊர்வ தாலோ.
- எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
- தம்உயிர்போல் எண்ணி உள்ளே
- ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
- யாவர்அவர் உளந்தான் சுத்த
- சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
- இடம்எனநான் தெரிந்தேன் அந்த
- வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
- சிந்தைமிக விழைந்த தாலோ.
- கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும்
- தம்உயிர்போல் கண்டு ஞானத்
- தெருள்நெறியில் சுத்தசிவ சன்மார்க்கப்
- பெருநீதி செலுத்தா நின்ற
- பொருள்நெறிசற் குணசாந்தப் புண்ணியர்தம்
- திருவாயால் புகன்ற வார்த்தை
- அருள்நெறிவே தாகமத்தின் அடிமுடிசொல்
- வார்த்தைகள்என் றறைவ ராலோ.
- மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன்
- தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும்
- முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத
- பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே.
- ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
- திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
- வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
- கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
- அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
- பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
- மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
- இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.
- போற்று கின்றஎன் புன்மை யாவையும்
- பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன்
- ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக்
- கறிவு தந்தபே ரறிவ போற்றிவான்
- காற்று நீடழல் ஆதி ஐந்துநான்
- காணக் காட்டிய கருத்த போற்றிவன்
- கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக்
- கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே.
- அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன்
- அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன்
- உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன்
- ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன்
- நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை
- நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப்
- பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- தேன்பாடல் அன்புடையார் செயப்பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
- கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா நல்ல
- வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
- யான்பாட நீதிருத்த என்னதவஞ் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
- பொருட்பெருந் தனிமெய்ப் போகமே என்னைப்
- புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
- தெருட்பெருஞ் சிவமே சுத்தசன் மார்க்கச்
- செல்வமே நான்பெற்ற சிறப்பே
- மருட்பெருங் கடலைக் கடத்திஎன் தன்னை
- வாழ்வித்த என்பெரு வாழ்வே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- துணைவா அபயம் துயர்அகல என்பால்
- அணைவா அபயம் அபயம் - பணைவாய்
- வடலா அபயம் வரதா அபயம்
- நடநாய காஅபயம் நான்.
- நானாகித் தானாய் நடித்தருள்கின் றாய்அபயம்
- தேனாய் இனிக்கும் சிவஅபயம் - வானாடு
- மெய்யா அபயம் விமலா அபயமென்றன்
- ஐயா அபயமப யம்.
- கடுகாட்டுக் கறிக்கிடுக தாளிக்க எனக்கழறிக் களிக்கா நின்ற
- சுடுகாட்டுப் பிணங்காள்இச் சுகமனைத்தும் கணச்சுகமேசொல்லக் கேண்மின்
- முடுகாட்டுக் கூற்றுவரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
- இடுகாட்டுப்பிணங்கண்டால் ஏத்துமினோ எமையும்இவ்வா றிடுகஎன்றே.
- சிரிப்பிலே பொழுது கழிக்கும்இவ் வாழ்க்கைச்
- சிறியவர் சிந்தைமாத் திரமோ
- பொருப்பிலே தவஞ்செய் பெரியர்தம் மனமும்
- புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
- கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய
- கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
- எரிப்பிலே புகுவ தன்றிஎள் அளவும்
- இனிப்பிலே புகுகின்ற திலையே.
- பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர்
- ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி
- தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
- ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- நாதரருட் பெருஞ்சோதி நாயகர்என் தனையே
- நயந்துகொண்ட தனித்தலைவர் ஞானசபா பதியார்
- வாதநடம் புரிகருணை மாநிதியார் வரதர்
- வள்ளல்எலாம் வல்லவர்மா நல்லவர்என் இடத்தே
- காதலுடன் வருகின்றார் என்றுபர நாதம்
- களிப்புறவே தொனிக்கின்ற தந்தரதுந் துபிதான்
- ஏதமற முழங்குகின்ற தென்றுசொல்லிக் கொண்டே
- எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
- தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித் தெனைஆண்ட துரையே என்னை
- நீங்காதே என்னுயிரில் கலந்துகொண்ட பதியேகால் நீட்டிப் பின்னே
- வாங்காதே விரைந்திவண்நீ வரல்வேண்டும் தாழ்த்திடில்என் மனந்தான் சற்றும்
- தாங்காதே இதுநினது தனித்ததிரு வுளமறிந்த சரிதம் தானே.
- கன்றுடைய பசுப்போலே கசிந்துருகும் அன்பரெலாம் காணக் காட்டும்
- என்றுடைய நாயகனே எல்லாஞ்செய் வல்லவனே இலங்குஞ் சோதி
- மன்றுடைய மணவாளா மன்னவனே என்னிருகண் மணியே நின்னை
- அன்றுடையேன் இன்றுவிடேன் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணை ஐயா.
- திருநி லைத்துநல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க
- உருநி லைத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் அருள்செய்வாய்
- இருநி லத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில்
- குருநி லைத்தசற் குருஎனும் இறைவநின் குரைகழற் பதம்போற்றி.
- குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே
- சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது
- தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர்தீர்த்தே
- இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.
- கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள்
- இலக்கம் உற்றறிந் திடஅருள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண்
- துலக்க முற்றசிற் றம்பலத் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே
- அலக்கண் அற்றிடத் திருவருள் புரியும்என் அப்பனே அடியேற்கே.
- பண்டு நின்திருப் பாதம லரையே
- பாடி யாடிய பத்திமை யோரைப்போல்
- தொண்டு கொண்டெனை ஆண்டனை இன்றுதான்
- துட்டன் என்றுது ரத்திடல் நன்றுகொல்
- குண்டு நீர்க்கடல் சூழுல கத்துளோர்
- குற்றம் ஆயிரங் கோடிசெய் தாலும்முன்
- கொண்டு பின்குலம் பேசுவ ரோஎனைக்
- குறிக்கொள் வாய்எண் குணந்திகழ் வள்ளலே.
- வான்வேண்டு சிற்றம் பலத்தே வயங்கி வளரமுதத்
- தேன்வேண்டி னேன்இத் தருணத் தருள்செய்க செய்திலையேல்
- ஊன்வேண்டும் என்னுயிர் நீத்துநின் மேற்பழி யோவிளைப்பேன்
- நான்வேண்டு மோபழி தான்வேண்டு மோசொல்க நாயகனே.
- அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும்
- அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண்
- டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை
- ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன்
- மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே
- மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர்
- செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய்
- திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே.
- என்னால்ஓர் துரும்பும்அசைத் தெடுக்கமுடி யாதே
- எல்லாஞ்செய் வல்லவன்என் றெல்லாரும் புகலும்
- நின்னால்இவ் வுலகிடைநான் வாழ்கின்றேன் அரசே
- நின்அருள்பெற் றழியாத நிலையைஅடைந் திடஎன்
- தன்னால்ஓர் சுதந்தரமும் இல்லைகண்டாய் நினது
- சகலசுதந் தரத்தைஎன்பால் தயவுசெயல் வேண்டும்
- பின்நாள்என் றிடில்சிறிதும் தரித்திருக்க மாட்டேன்
- பேராணை உரைத்தேன்என் பேராசை இதுவே.
- வருமுன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு
- வழக்கம் வள்ளல்நீ மகிழ்ந்தருட் சோதி
- தருமுன் தந்தனை என்றிருக் கின்றேன்
- தந்தை நீதரல் சத்தியம் என்றே
- குருமுன் பொய்யுரை கூறலேன் இனிஇக்
- குவலை யத்திடைக் கவலையைத் தரியேன்
- திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணை
- செய்க வாழ்கநின் திருவருட் புகழே.
- அணியே எனதுமெய் யறிவே பொதுவளர் அரசே திருவளர் அமுதே
- இனிதருள் வாய்இது தருணம் அமுதரு ளாய்இது தருணம்
- மணியே எனதுகண் மணியே பொதுவளர் மதியே திருவருண் மதியே
- அருள்புரி வாய்இது தருணம் அருள்புரி வாய்இது தருணம்.
- ஆதி யேதிரு அம்பலத் தாடல்செய் அரசே
- நீதி யேஎலாம் வல்லவா நல்லவா நினைந்தே
- ஓதி யேஉணர் தற்கரி தாகிய ஒருவான்
- சோதி யேஎனைச் சோதியேல் சோதியேல் இனியே.
- போதோ விடிந்த தருளரசேஎன் பொருட்டுவந்தென்
- தாதோர் எழுமையும் நன்மையுற் றோங்கத் தருவதுதான்
- மாதோட நீக்கும் கனிரச மோவந்த வான்கனியின்
- கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே.
- ஆர்ந்தஅருட் பெருஞ்சோதி அப்பாநான் அடுத்தவர்தம்
- சோர்ந்தமுகம் பார்க்கஇனித் துணியேன் நின்அருள்ஆணை
- நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்துரைக்கும் வார்த்தைகளும்
- ஓர்ந்துசெவி புகத்துணியேன் உன்ஆணை உன்ஆணை.
- அழியா நிலையாதது மேவிநின் அன்பினோடும்
- ஒழியா துனைப்பாடி நின்றாடி உலகினூடே
- வழியாம் உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல்வேண்டும்
- இழியா தருள்வாய் பொதுமேவிய எந்தைநீயே.
- மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று
- பதிக்களவா நலந்தருவல் என்றுநினை ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
- விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
- பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.
- ஆடியகால் மலர்களுக்கே அன்புடையார் யாவரிங்கே அவர்க்கே இன்பம்
- கூடியதென் றாரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும்வார்த்தை
- ஓடியதோ நெஞ்சேநீ உன்னுவதென் பற்பலவாய் உன்னேல் இன்னே
- பாடிஅவன் திருப்பாட்டைப் படிகண்டாய் இன்புகலப் படிகண் டாயே.
- ஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த
- வுவைக்குமேற் றனைஅருள் ஒளியால்
- நன்றுகண் டாங்கே அருட்பெருஞ் சோதி
- நாதனைக் கண்டவன் நடிக்கும்
- மன்றுகண் டதனில் சித்தெலாம் வல்ல
- மருந்துகண் டுற்றது வடிவாய்
- நின்றுகொண் டாடுந் தருணம்இங் கிதுவே
- நெஞ்சமே அஞ்சலை நீயே.
- வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
- வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
- கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
- கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
- பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
- பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
- விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
- வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- உண்மைஉரைத் தருள்என் றோதினேன் எந்தைபிரான்
- வண்மையுடன் என்அறிவில் வாய்ந்துரைத்தான் - திண்மையுறு
- சித்திநிலை எல்லாம் தெரிவித் தருள்கின்றேம்
- இத்தருணம் சத்தியமே என்று.
- தனித்துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண் டென்றன்
- மனித்த உடம்பழியா வாறே - கனித்துணையாம்
- இன்னமுதம் தந்தெனக்கே எல்லாமும் வல்லசித்தி
- தன்னையுந்தந் துட்கலந்தான் றான்.
- உன்னைவிட மாட்டேன்நான் உன்ஆணை எம்பெருமான்
- என்னைவிட மாட்டாய் இருவருமாய் - மன்னிஎன்றும்
- வண்மை எலாம்வல்ல வாய்மைஅரு ளால்உலகுக்
- குண்மைஇன்பம் செய்தும் உவந்து.
- நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே
- பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே
- மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா
- பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே.
- அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
- துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
- வெப்பூறு நீக்கிய வெண்று பூத்தபொன் மேனியனே
- உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
- நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
- வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
- ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
- கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.
- அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்
- அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால்
- அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர்
- அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே.
- ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும்
- சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம்
- மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி
- மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே.
- வானாகி வானடுவே மன்னும்ஒளி யாகிஅதில்
- தானாடு வானாகிச் சன்மார்க்கர் உள்ளினிக்கும்
- தேனாகித் தெள்ளமுதாய்த் தித்திக்கும் தேவேநீ
- யானாகி என்னுள் இருக்கின்றாய் என்னேயோ.
- ஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
- தூங்கிய என்தன்னை எழுப்பிஅருள் தூயபொருள்
- வாங்குகஎன் றென்பால் வலியக் கொடுத்தமுதும்
- பாங்குறநின் றூட்டினையே எந்தாய்நின் பண்பிதுவே.
- நான்ஆனான் தான்ஆனான் நானும்தா னும்ஆனான்
- தேன்ஆனான் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்றான்
- வான்ஆனான் ஞான மணிமன்றில் ஆடுகின்றான்
- கோன்ஆனான் என்னுட் குலாவுகின்ற கோமானே.
- முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
- இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
- றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
- என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
- தாழைப் பழம்பிழி பாலொடு சர்க்கரைச் சாறளிந்த
- வாழைப் பழம்பசு நெய்நறுந் தேனும் மருவச்செய்து
- மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்தளவி
- ஏழைக் களித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே.
- கருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே
- தருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை
- அருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்
- பொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே.
- வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
- மலத்திலே கிடந்துழைத் திட்ட
- நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
- நன்றுறச் சூட்டினை அந்தோ
- தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
- சோதியே நின்பெருந் தயவைத்
- தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
- தயவும்உன் தனிப்பெருந் தயவே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- படித்தஎன் படிப்பும் கேள்வியும் இவற்றின்
- பயனதாம் உணர்ச்சியும் அடியேன்
- பிடித்தநல் நிலையும் உயிரும்மெய் இன்பும்
- பெருமையும் சிறப்பும்நான் உண்ணும்
- வடித்ததெள் ளமுதும் வயங்குமெய் வாழ்வும்
- வாழ்க்கைநன் முதலும்மன் றகத்தே
- நடித்தபொன் னடியும் திருச்சிற்றம் பலத்தே
- நண்ணிய பொருளும்என் றறிந்தேன்.
- யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ
- என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ
- ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி
- ஒளிஉருக் காட்டிய தலைவா
- ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன்
- என்றசொல் ஒலிஅடங் குதன்முன்
- ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
- வாரியைக் கண்டனம் மனமே
- அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
- ஆடலாம் அடிக்கடி வியந்தே
- உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
- ஓங்கலாம் உதவலாம் உறலாம்
- கள்எலாம் உண்டவண்டென இன்பம்
- காணலாம் களிக்கலாம் இனியே.
- அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
- ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
- உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
- ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
- எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
- என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
- செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
- சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே.
- கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன்
- கனக அம்பலம் கனிந்தசெங் கனியே
- துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே
- தூய சோதியே சுகப்பெரு வாழ்வே
- விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே
- வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே
- அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே
- அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- தந்தை தன்மையே தனையன்தன் தன்மை
- என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
- எந்தை எம்பிரான் ஐந்தொழில் புரியும்
- இறைவன் மன்றுளே இயல்நடம் புரிவான்
- மைந்தன் என்றெனை ஆண்டவன் எல்லாம்
- வல்ல நாயகன் நல்லசீர் உடையான்
- அந்த ணாளன்மெய் அறிவுடை யவன்என்
- அப்பன் தன்மைஎன் தன்மைஎன் றறிமின்.
- ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை
- அருள்ஒளி தருகின்றாம்
- கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே
- குறிக்கொள்வர் நினக்கேஎம்
- ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்
- வாழ்கநீ மகனேஎன்
- றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்
- இணைமலர்ப் பதம்போற்றி.
- நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
- நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
- வாய்க்கு வந்த படிபல பேசவே
- மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
- தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
- தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
- சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
- திகழக் கட்டினை என்னைநின் செய்கையே.
- கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
- கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்
- அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
- அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
- உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
- உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
- இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே
- இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.
- வாது பேசிய மனிதர் காள்ஒரு
- வார்த்தை கேண்மீன்கள் வந்துநும்
- போது போவதன் முன்ன ரேஅருட்
- பொதுவி லேநடம் போற்றுவீர்
- தீது பேசினீர் என்றி டாதுமைத்
- திருவு ளங்கொளும் காண்மினோ
- சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்
- சுற்றம் என்பது பற்றியே.
- தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்
- தொலைந்தன தொலைந்தன எனைவிட்
- டேக்கமும் வினையும் மாயையும் இருளும்
- இரிந்தன ஒழிந்தன முழுதும்
- ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும்
- அழிவுறா உடம்பும்மெய் இன்ப
- ஊக்கமும் எனையே உற்றன உலகீர்
- உண்மைஇவ் வாசகம் உணர்மின்.
- 346. இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள 161 பாக்களும் தனிப்பாடல்கள்.ஆறாந் திருமுறைக் காலத்தில் பல சமயங்களிற் பாடப் பெற்றவை. முன் பதிப்புகளில்இவை தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில்உள்ளன. ஆ. பா. இவற்றைத் தனித்திருஅலங்கல், தனித்திருத் தொடை,தனித்திரு மாலை என மூன்று கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை,முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளனர். இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள்வரிசையில் முன் பின்னாக அமைக்கப்பெற்று இவண் வைக்கப்பட்டுள்ளன.
- 347. இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை.
- 348. பிரட்டறிவீர் - பொ. சு. பதிப்பு.
- 349. குழைக்கறியே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
- 350. வலப்பால் - முதற்பதிப்பு., பொ. சு. ச. மு. க.
- 351. தாழைப்பழம் - தேங்காய்.
- வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
- நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
- நல்லநாள் எண்ணிய நாள்.
- கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
- பையுள்292 உனக்கென்னை யோ - நெஞ்சே
- பையுள் உனக்கென்னை யோ.
- நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
- ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
- ஏன்பற்று வாயென்ப தார்.
- தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
- தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
- தத்துவ முன்னுவ தேன்.
- அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லை யே
- அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லை யே
- எப்பா லவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லை யே
- எனக்கும் நின்மே லன்றி உலகில் இச்சை இல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- தனிஎன்338 மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே
- தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே
- வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே
- மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- உன்பே ரருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே
- உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே
- அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே
- அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- உன்னை மறக்கில் எந்தாய் உயிர்என் உடம்பில் வாழு மோ
- உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழு மோ
- என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்ன கருதி யோ
- எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் இன்று வருதி யோ.
- எனக்கும் உனக்கும்
- தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கி னேனை யே
- தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்கு தூனை யே
- புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்க வே
- புகுவித் தாயை என்வாய் துடிப்ப தேத்தித் துதிக்க வே.
- எனக்கும் உனக்கும்
- அருளார் சோதி என்னுள் விளங்க அளித்த காலத் தே
- அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்த திந்த ஞாலத் தே
- பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னை யோ
- பொன்னென் றைய மதிப்ப துதவாத் துரும்பு தன்னை யோ.
- எனக்கும் உனக்கும்
- அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே
- அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே
- செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே
- செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே.
- எனக்கும் உனக்கும்
- வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய்ம ணக்கு தே
- வஞ்ச வினைகள் எனைவிட் டோடித் தலைவ ணக்கு தே
- எள்ளா துனது புகழைக் கேட்கச் செவிந யக்கு தே
- எந்தாய் தயவை எண்ணுந் தோறும் உளம்வி யக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- இறைவா நின்னைக் கனவி லேனும் யான்ம றப்ப னோ
- எந்தாய் உலகத் தவர்கள் போல்நான் இனி இறப்ப னோ
- மறைவா சகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியி லே
- வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியி லே.
- எனக்கும் உனக்கும்
- தலைவா எனக்குக் கருணை அமுதம் தரஇத் தலத்தி லே
- தவம்செய் தேன்அத் தவமும் உன்றன் அருள்வ லத்தி லே
- அலைவா ரிதியில் துரும்பு போல அயனும் மாலு மே
- அலைய எனக்கே அளிக்கின் றாய்நீ மேலும் மேலு மே.
- எனக்கும் உனக்கும்
- மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
- மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
- உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
- உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே
- ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே
- வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே
- மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே.
- எனக்கும் உனக்கும்
- இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மை யே
- என்பால் செய்ய வைத்தாய் இதுநின் அருளின் தன்மை யே
- அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கி யே
- அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமை யாக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
- பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
- ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
- இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவ ரே
- ஆறா றகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவ ரே
- இப்பா ராதி பூதம் அடங்குங் காலும் நின்னை யே
- ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐய மென்னை யே.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- அடியன்ஆக்கிப் பிள்ளைஆக்கி நேயன்ஆக்கி யே
- அடிகள்ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
- படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
- பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
- எனக்கும் உனக்கும்
- ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே
- எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே
- ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே
- இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே.
- எனக்கும் உனக்கும்
- பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாய ரே
- பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேய ரே
- நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயி லோ
- நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயி லோ.
- எனக்கும் உனக்கும்
- அச்சம் தீர்த்திங் கென்னை ஆட்கொண் டருளும் அமுத னே
- அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்துள் அமர்ந்த அமுத னே
- இச்சை யாவும் முடித்துக் கொடுத்துள் இலங்கும் குரவ னே
- என்றும் இறவாக் கல்வி அடியேற் கீய்ந்த குரவ னே.
- எனக்கும் உனக்கும்
- வாழ்வே நினது நடங்கண் டவரைச் சுத்தர் என்ப னோ
- மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்ப னோ
- ஏழ்வே தனையும் நீக்கி வாழும் நித்தர் என்ப னோ
- எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்ப னோ.
- எனக்கும் உனக்கும்
- சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மை யே
- தேவர் கண்டு கொண்டு வணங்கு கின்றார் இம்மை யே
- தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்த ரே
- தகும்ஐந் தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்த ரே.
- எனக்கும் உனக்கும்
- ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே
- ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே
- பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே
- பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே.
- எனக்கும் உனக்கும்
- சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே
- துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
- சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
- துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த சிவசன் மார்க்க நீதிச் சோதி போற்றி யே
- சுகவாழ் வளித்த சிற்றம் பலத்துச் சோதி போற்றி யே
- சுத்த சுடர்ப்பொற் சபையில் ஆடும் சோதி போற்றி யே
- சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றி யே.
- வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
- வல்லி மணாளரே வாரீர்
- மணிமன்ற வாணரே வாரீர்.
- அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
- அம்பல வாணரே வாரீர்
- அன்புடை யாளரே வாரீர். வாரீர்
- அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய
- அந்தண ரேஇங்கு வாரீர்
- அம்பலத் தையரே வாரீர். வாரீர்
- அன்புரு வானவர் இன்புற உள்ளே
- அறிவுரு வாயினீர் வாரீர்
- அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
- அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
- அரும்பெருஞ் சித்தரே வாரீர்
- அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
- அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன்
- அன்பனு மாயினீர் வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய
- அம்பல வாணரே வாரீர்
- அங்கண ரேஇங்கு வாரீர். வாரீர்
- அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய்
- அன்பருக் கன்பரே வாரீர்
- இன்பம் தரஇங்கு வாரீர். வாரீர்
- அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும்
- அடிக்கம லத்தீரே வாரீர்
- நடிக்கவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில்
- அளித்திட வல்லீரே வாரீர்
- களித்தென்னை ஆண்டீரே வாரீர். வாரீர்
- அம்பர மானசி தம்பர நாடகம்
- ஆடவல் லீர்இங்கு வாரீர்
- பாடல்உ வந்தீரே298 வாரீர். வாரீர்
- ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
- அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- ஆனந்த நாடரே வாரீர். வாரீர்
- ஆகம வேதம் அனேக முகங்கொண்
- டருச்சிக்கும் பாதரே வாரீர்
- ஆருயிர் நாதரே வாரீர். வாரீர்
- ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல்
- ஆரிய ரேஇங்கு வாரீர்
- ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
- ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல்
- ஆரிய ரேஇங்கு வாரீர்
- ஆனந்தக் கூத்தரே வாரீர். வாரீர்
- ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற
- ஆனந்த ரேஇங்கு வாரீர்
- ஆடல்வல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆதர வாய்என் அறிவைத் தெளிவித்
- தமுதம் அளித்தீரே வாரீர்
- ஆடிய பாதரே வாரீர். வாரீர்
- ஆதார மீதானத் தப்பாலும் காண்டற்
- கரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
- கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
- ஜோதிய ரேஇங்கு வாரீர்
- வேதிய ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன்
- பாடல்கொண் டீர்இங்கு வாரீர்
- கூடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர்
- தாண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன்
- ஆணவம் போக்கினீர் வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என்
- இறையவ ரேஇங்கு வாரீர்
- காணவந் தேன்இங்கு வாரீர். வாரீர்
- இச்சையின் வண்ணம் எனக்கருள் செய்ய
- இதுதரு ணம்இங்கு வாரீர்
- இன்னமு தாயினீர் வாரீர். வாரீர்
- இன்பம் கொடுத்தேஎன் துன்பம் கெடுத்துள்
- இருக்கின்ற நாதரே வாரீர்
- இருக்கின் பொருளானீர் வாரீர். வாரீர்
- இரவும் பகலும் இதயத்தி லூறி
- இனிக்கும் அமுதரே வாரீர்
- இனித்தரி யேன்இங்கு வாரீர். வாரீர்
- இன்னும்தாழ்த் தங்கே இருப்ப தழகன்று
- இதுதரு ணம்இங்கு வாரீர்
- இருமையும் ஆயினீர் வாரீர். வாரீர்
- இடர்தவிர்த் தின்பம் எனக்களித் தாளற்
- கிதுதரு ணம்இங்கு வாரீர்
- இனியவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- இறையும் பொறுப்பரி தென்னுயிர் நாதரே
- இத்தரு ணம்இங்கு வாரீர்
- இதநடஞ் செய்கின்றீர் வாரீர். வாரீர்
- இம்மையி லேஎனக் கம்மையின் இன்பம்
- இதுஎன் றளித்தீரே வாரீர்
- இதயத் திருந்தீரே வாரீர். வாரீர்
- இங்கங்கென் னாமலே எள்ளுக்குள் எண்ணெய்போல்
- எங்கும் நிறைந்தீரே வாரீர்
- இந்தெழில் வண்ணரே வாரீர். வாரீர்
- இணைஒன்றும் இல்லா இணையடி என்தலை
- ஏறவைத் தீர்இங்கு வாரீர்
- இறுதியி லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈன்றாளும் எந்தையும் என்குரு வும்எனக்
- கின்பமும் ஆயினீர் வாரீர்
- அன்பருக் கன்பரே வாரீர். வாரீர்
- ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென்
- இதயத்தில் ஏற்றினீர் வாரீர்
- உதயச் சுடரினீர் வாரீர். வாரீர்
- ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை
- இன்புறச் செய்கின்றீர் வாரீர்
- வன்பர்க் கரியீரே வாரீர். வாரீர்
- ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற்
- கெட்டா திருந்தீரே வாரீர்
- நட்டார்க் கெளியீரே வாரீர். வாரீர்
- ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந
- டேசரே நீர்இங்கு வாரீர்
- நேசரே நீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈசர் பலிக்குழல்299 நேசர்என் றன்பர்கள்
- ஏசநின் றீர்இங்கு வாரீர்
- நாசமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈறறி யாமறை யோன்என் றறிஞர்
- இயம்பநின் றீர்இங்கு வாரீர்
- வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்
- ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக்
- கீதல்செய் வீர்இங்கு வாரீர்
- ஓதரி யீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற்
- றீடணை யீர்இங்கு வாரீர்
- ஆடவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள்
- ஈண்டுகின் றீர்இங்கு வாரீர்
- ஆண்டவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
- குள்ள துரைசெய்தீர் வாரீர்
- வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
- உருவாய் அருவாய் உருவரு வாய்அவை
- ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்
- என்றும்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உறவும் பகையும் உடைய நடையில்
- உறவும்எண் ணேன்இங்கு வாரீர்
- பிறவுநண் ணேன்இங்கு வாரீர். வாரீர்
- உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென்
- உள்ளத் திருந்தீரே வாரீர்
- விள்ளற் கரியீரே வாரீர். வாரீர்
- உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும்
- உய்யவல் லேன்இங்கு வாரீர்
- செய்யவல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- உடையவ ரார்இக் கடையவ னேனுக்
- குடையவ ரேஇங்கு வாரீர்
- சடையவ ரே300 இங்கு வாரீர். வாரீர்
- உறங்கி இறங்கும் உலகவர் போலநான்
- உறங்கமாட் டேன்இங்கு வாரீர்
- இறங்கமாட் டேன்இங்கு வாரீர். வாரீர்
- உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு
- துண்டி விரும்பினேன் வாரீர்
- உண்டி தரஇங்கு வாரீர். வாரீர்
- உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற
- உத்தம ரேஇங்கு வாரீர்
- உற்ற துணையானீர் வாரீர். வாரீர்
- உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக்
- குற்றவர் மற்றிலை வாரீர்
- உற்றறிந் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு
- மோன நடேசரே வாரீர்
- ஞான நடேசரே வாரீர். வாரீர்
- ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி
- வோருமில் லீர்இங்கு வாரீர்
- யாருமில் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற
- வீறுடை யீர்இங்கு வாரீர்
- நீறுடை யீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன்
- ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர்
- ஆன்றவ ரேஇங்கு வாரீர். வாரீர்
- ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென
- ஏற்றம் அருள்செய்வீர் வாரீர்
- தேற்றம் அருள்செய்வீர் வாரீர். வாரீர்
- ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள்
- பாடல்சொல் வீர்இங்கு வாரீர்
- ஆடல்நல் லீர்இங்கு வாரீர். வாரீர்
- ஊக்கம் கொடுத்தென்றன் ஏக்கம் கெடுத்தருள்
- ஆக்க மடுத்தீரே வாரீர்
- தூக்கம் தவிர்த்தீரே வாரீர். வாரீர்
- ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்துண்டென்
- றோமை அறிவித்தீர் வாரீர்
- சேமஞ் செறிவித்தீர் வாரீர். வாரீர்
- ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
- யோகம் கொடுத்தீரே வாரீர்
- போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்
- ஊதியம் தந்தநல் வேதிய ரேஉண்மை
- ஓதிய நாதரே வாரீர்
- ஆதிஅ னாதியீர் வாரீர். வாரீர்
- என்குறை தீர்த்தென்னுள் நன்குறை வீர்இனி
- என்குறை என்முன்னீர் வாரீர்
- தன்குறை இல்லீரே வாரீர். வாரீர்
- என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
- இன்னுயிர் ஆயினீர் வாரீர்
- என்னுயிர் நாதரே வாரீர். வாரீர்
- என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
- என்கண் ணனையீரே வாரீர்
- என்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
- எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும்
- எல்லாம்வல் லீர்இங்கு வாரீர்
- சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
- எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல்
- எட்டும் படிசெய்தீர் வாரீர்
- எட்டுரு வாயினீர் வாரீர்.301 வாரீர்
- என்று கண்டாய்இது302 நன்றுகொண் டாளுக
- என்றுதந் தீர்இங்கு வாரீர்
- அன்றுவந் தீர்இன்று வாரீர். வாரீர்
- எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்
- இச்சம யம்இங்கு வாரீர்
- மெய்ச்சம யந்தந்தீர் வாரீர். வாரீர்
- என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
- இன்பால் பெறுகின்றீர் வாரீர்
- தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்
- எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம
- திச்சைகண் டீர்இங்கு வாரீர்
- அச்சம்த விர்த்தீரே வாரீர். வாரீர்
- எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர்
- எண்ணம் எனக்கில்லை வாரீர்
- வண்ணம் அளிக்கின்றீர் வாரீர். வாரீர்
- ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும்
- பாராய ணம்செய்வீர் வாரீர்
- ஊராயம் ஆயினீர் வாரீர். வாரீர்
- ஏம மிகுந்திரு வாம சுகந்தரும்
- ஏம சபேசரே வாரீர்
- சோம சிகாமணி வாரீர். வாரீர்
- ஏத மிலாப்பர நாத முடிப்பொருள்
- ஏதது சொல்லுவீர் வாரீர்
- ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
- ஏக பராபர யோக வெளிக்கப்பால்
- ஏக வெளிநின்றீர் வாரீர்
- ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
- ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல்
- ஏறவைத் தீர்இங்கு வாரீர்
- தேறவைத் தீர்இங்கு வாரீர். வாரீர்
- ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
- றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
- தேகாந்தம் இல்லீரே வாரீர். வாரீர்
- ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்
- றேகாத லாற்சொன்னீர் வாரீர்
- வேகாத காலினீர் வாரீர். வாரீர்
- ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே
- ஏடாஎன் றீர்இங்கு வாரீர்
- ஈடாவார் இல்லீரே வாரீர். வாரீர்
- ஏசாத தந்திரம் பேசாத மந்திரம்
- ஈசான மேலென்றீர் வாரீர்
- ஆசாதி இல்லீரே வாரீர். வாரீர்
- ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின்
- றேன்என்பால் ஏனென்பீர் வாரீர்
- ஆனின்பால் ஆடுவீர் வாரீர். வாரீர்
- ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
- தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
- இந்து சிகாமணி வாரீர். வாரீர்
- ஐயமுற் றேனைஇவ் வையங் கரியாக
- ஐயம் தவிர்த்தீரே வாரீர்
- மெய்யம் பலத்தீரே வாரீர். வாரீர்
- ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந்
- தையர் தொழநின்றீர் வாரீர்
- துய்யர் உளநின்றீர் வாரீர். வாரீர்
- ஐவணங் காட்டுநும் மெய்வணம் வேட்டுநின்
- றைவணர் ஏத்துவீர் வாரீர்
- பொய்வணம் போக்குவீர் வாரீர். வாரீர்
- ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்
- ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர்
- நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
- ஒப்பாரி அல்லகாண் வாரீர்
- முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்
- ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர்
- ஒத்த இடங்காட்ட வாரீர்
- சித்த சிகாமணி வாரீர். வாரீர்
- ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன்
- ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர்
- எட்டுக் குணத்தீரே வாரீர். வாரீர்
- ஒருமை நிலையில் இருமையும் தந்த
- ஒருமையி னீர்இங்கு வாரீர்
- பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
- ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர்
- உண்மைசொன் னேன்இங்கு வாரீர்
- பெண்மை304 இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
- ஓங்கார நாடகம் பாங்காகச்305 செய்கின்ற
- ஓங்கார நாடரே வாரீர்
- ஆங்கார நீக்கினீர் வாரீர். வாரீர்
- ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
- ஓங்கு நடேசரே வாரீர்
- பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
- ஓசையின் உள்ளேஓர் ஆசை306 உதிக்கமெல்
- ஓசைசெய் வித்தீரே வாரீர்
- பாசம் அறுத்தீரே வாரீர். வாரீர்
- ஓரா துலகினைப் பாரா திருநினக்
- கோரா வகைஎன்றீர் வாரீர்
- பேரா நிலைதந்தீர் வாரீர். வாரீர்
- ஓடாது மாயையை நாடாது நன்னெறி
- ஊடா திருஎன்றீர் வாரீர்
- வாடா திருஎன்றீர் வாரீர். வாரீர்
- ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள்
- ஓலக்கங் காட்டினீர் வாரீர்
- காலக் கணக்கில்லீர் வாரீர். வாரீர்
- ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய்
- யூடத்தைக் காட்டினீர் வாரீர்
- வேடத்தைப் பூட்டினீர் வாரீர். வாரீர்
- ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை
- ஓமத்தன்308 ஆக்கினீர் வாரீர்
- சாமத்த309 நீக்கினீர் வாரீர். வாரீர்
- ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன்
- ஊமென்று310 காட்டினீர் வாரீர்
- நாமென்று நாட்டினீர் வாரீர். வாரீர்
- ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
- செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
- ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
- கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை
- கடல்பொங்கு கின்றது வாரீர்
- உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
- கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென்
- கண்மணி யீர்இங்கு வாரீர்
- உண்மணி யீர்இங்கு வாரீர். வாரீர்
- கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும்
- காரண ரேஇங்கு வாரீர்
- பூரண ரேஇங்கு வாரீர். வாரீர்
- வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
- வல்லி மணாளரே வாரீர்
- மணிமன்ற வாணரே வாரீர்.
- 298. பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
- 299. ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா,
- 300. தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 301. எட்டும் இரண்டும் - பத்து (ய). ய - ஆன்மா. எட்டுரு - அஷ்டமூர்த்தம்எட்டுஉரு - (எட்டு தமிழில் எழுத 'அ' ஆகும்) அகரவடிவம். எட்டுரு - அரு. ச. மு. க.
- 302. கண்டாமிது - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
- 303. 'ஒத்த இடத்தில் நித்திரை செய்' என்பது ஔவையார் அருளிய கொன்றை வேந்தன்.'ஒத்த இடம் - மேடுபள்ளமில்லாத இடம், மனம் ஒத்த இடம், நினைப்பு மறப்பு அற்றஇடம், தனித்த இடம், தத்துவாதீதநிலை,N' என்பது ச. மு. க. குறிப்பு.இருவினையும் ஒத்த இடம், இருவினைஒப்புநிலை என்பதே பொருத்தமாம்.
- 304. வண்மை - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.,
- 305. பாங்காரச் - பி. இரா.
- 306. ஓசை - பிரதிபேதம். ஆ. பா. 307. மேல் - முதற்பதிப்பு., பொ. சு. பி. இரா.
- 308. ஓமத்தன் - உருவருவ வடிவம்., பிரணவதேகம். ச. மு. க.
- 309. சாமத்தை - பொ. சு., ச. மு. க; சாமத்தை - சாகுந்தன்மையை., ச. மு. க.
- 310. ஓம் - ஆம் - ஊம் - ஓம் ஹாம் ஹும். பீஜாக்கரங்கள்.
- அணையவா ரீர் என்னை அணையவா ரீர்
- அணிவளர்311 சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
- இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
- இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
- எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
- இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
- இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
- இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர்
- உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர்
- கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர்
- கண்ணனைய காதலரே அணையவா ரீர்
- அலகறியாப் பெருமையரே அணையவா ரீர்
- அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர்
- இலகுசபா பதியவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர்
- மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர்
- மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர்
- விதுவின்அமு தானவரே அணையவா ரீர்
- மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர்
- இதுதருணம் இறையவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- வினைமாலை நீத்தவரே அணையவா ரீர்
- வேதமுடிப் பொருளவரே அணையவா ரீர்
- அனைமாலைக் காத்தவரே அணையவா ரீர்
- அருட்பெருஞ்சோ திப்பதியீர் அணையவா ரீர்
- புனைமாலை வேய்ந்தவரே அணையவா ரீர்
- பொதுவில்நிறை பூரணரே அணையவா ரீர்
- எனைமாலை யிட்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சிறுவயதில் எனைவிழைந்தீர் அணையவா ரீர்
- சித்தசிகா மணியேநீர் அணையவா ரீர்
- உறுவயதிங் கிதுதருணம் அணையவா ரீர்
- உண்மைசொன்ன உத்தமரே அணையவா ரீர்
- பொறுமைமிக உடையவரே அணையவா ரீர்
- பொய்யாத வாசகரே அணையவா ரீர்
- இறுதிதவிர்த் தாண்டவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
- ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்
- ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்
- ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்
- உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்
- ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர்
- அருட்சோதி வடிவினரே அணையவா ரீர்
- துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர்
- துரியநிறை பெரியவரே அணையவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர்
- பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர்
- என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- அரைக்கணமும் தரியேன்நான் அணையவா ரீர்
- ஆணைஉம்மேல் ஆணைஎன்னை அணையவா ரீர்
- புரைக்கணங்கண் டறியேன்நான் அணையவா ரீர்
- பொன்மேனிப் புண்ணியரே அணையவா ரீர்
- வரைக்கணஞ்செய் வித்தவரே அணையவா ரீர்
- மன்றில்நடிக் கின்றவரே அணையவா ரீர்
- இரைக்கணவு தருணமிதே அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
- கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
- அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
- அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
- தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
- சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
- இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- சேரஉம்மேல் ஆசைகொண்டேன் அணையவா ரீர்
- திருவுளமே அறிந்ததெல்லாம் அணையவா ரீர்
- ஆரெனக்கிங் கும்மையல்லால் அணையவா ரீர்
- அயலறியேன் ஆணைஉம்மேல் அணையவா ரீர்
- ஈரகத்தேன் அல்லஇங்கே அணையவா ரீர்
- என்னாசை பொங்குகின்ற தணையவா ரீர்
- ஏரகத்தே அமர்ந்தருள்வீர் அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
- கலந்துகொள வேண்டுகின்றேன் அணையவா ரீர்
- காதல்பொங்கு கின்றதென்னை அணையவா ரீர்
- புலந்தறியேன் விரைகின்றேன் அணையவா ரீர்
- புணர்வதற்குத் தருணமிதே அணையவா ரீர்
- அலந்தவிடத் தருள்கின்றீர் அணையவா ரீர்
- அரைக்கணமும் இனித்தரியேன் அணையவா ரீர்
- இலந்தைநறுங் கனியனையீர்அணையவா ரீர்
- என்னுடைய நாயகரே அணையவா ரீர்.
- அணையவா ரீர்என்னை அணையவா ரீர்
- அணிவளர்312 சிற் றம்பலத்தீர் அணையவா ரீர்.
- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
- அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
- தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர்
- வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர்
- தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர்
- துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர்
- இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர்.
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்
- திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர்
- திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர்
- பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர்
- பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர்
- உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர்
- உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர்
- இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- இல்லாமை நீக்கிநின்றீர் ஆடவா ரீர்
- என்னைமண மாலையிட்டீர் ஆடவா ரீர்
- கொல்லாமை நெறிஎன்றீர் ஆடவா ரீர்
- குற்றமெலாங் குணங்கொண்டீர் ஆடவா ரீர்
- நல்லார்சொல் நல்லவரே ஆடவா ரீர்
- நற்றாயில் இனியவரே ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- சன்மார்க்க நெறிவைத்தீர் ஆடவா ரீர்
- சாகாத வரந்தந்தீர் ஆடவா ரீர்
- கன்மார்க்க மனங்கரைத்தீர் ஆடவா ரீர்
- கண்ணிசைந்த கணவரேநீர் ஆடவா ரீர்
- சொன்மார்க்கப் பொருளானீர் ஆடவா ரீர்
- சுத்தஅருட் சோதியரே ஆடவா ரீர்
- என்மார்க்கம் உளத்துகந்தீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- அண்டமெலாம் கண்டவரே ஆடவா ரீர்
- அகண்டபரி பூரணரே ஆடவா ரீர்
- பண்டமெலாம் படைத்தவரே ஆடவா ரீர்
- பற்றொடுவீ டில்லவரே ஆடவா ரீர்
- கொண்டெனைவந் தாண்டவரே ஆடவா ரீர்
- கூத்தாட வல்லவரே ஆடவா ரீர்
- எண்தகுபொற் சபையுடையீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர்
- பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர்
- ஓதஉல வாதவரே ஆடவா ரீர்
- உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர்
- ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- கள்ளமொன்றும் அறியேன்நான் ஆடவா ரீர்
- கைகலந்து கொண்டீர்என்னோ டாடவா ரீர்
- உள்ளபடி உரைக்கின்றேன் ஆடவா ரீர்
- உம்மாசை பொங்குகின்ற தாடவா ரீர்
- தள்ளரியேன் என்னோடிங்கே ஆடவா ரீர்
- தாழ்க்கில்இறை யும்தரியேன் ஆடவா ரீர்
- எள்ளல்அறுத் தாண்டுகொண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர்
- நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர்
- விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர்
- வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர்
- எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர்
- எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர்.
- இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- என்உயிருக் குயிரானீர் ஆடவா ரீர்
- என்அறிவுக் கறிவானீர் ஆடவா ரீர்
- என்னுடைஎன் பிற்கலந்தீர் ஆடவா ரீர்
- என்னுடையஉள் ளத்திருந்தீர் ஆடவா ரீர்
- என்உரிமைத் தாயனையீர் ஆடவா ரீர்
- எனதுதனித் தந்தையரே ஆடவா ரீர்
- என்ஒருமைச் சற்குருவே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர்.
- ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர்
- அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்.
- வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
- மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
- சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
- தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
- ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
- உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
- ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இசையாமல் போனவர் எல்லாரும் நாண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
- வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
- நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
- நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
- அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
- இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
- தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
- திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
- துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
- சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
- அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
- தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
- எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
- என்தோழி வாழிநீ என்னொடு கூடி
- துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
- சோதிஎன் றோதிய வீதியை விட்டே
- அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
- செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
- உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
- ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
- தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
- தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
- அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
- சூழலில் உண்டது சொல்லள வன்றே
- எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
- இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
- விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
- வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
- அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
- என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
- காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
- கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
- ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
- ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
- ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
- சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
- பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
- பாரிடை வானிடைப் பற்பல காலம்
- விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
- மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
- அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- ஆடேடி பந்து ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
- பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
- பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
- சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
- சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.
- எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
- என்றும் விடாமல் இனிக்கு மருந்து
- சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
- ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. ஞான
- காணாது காட்டு மருந்து - என்றன்
- கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து
- ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது
- வாகி மணிமன்றில் ஆடு மருந்து. ஞான
- சுத்தசன் மார்க்க மருந்து - அருட்
- சோதி மலையில் துலங்கு மருந்து
- சித்துரு வான மருந்து - என்னைச்
- சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து. ஞான
- ஆறந்தத் தோங்கு மருந்து - அதற்
- கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து
- ஊறந்த மில்லா மருந்து - எனக்
- குள்ளே கலந்த உறவா மருந்து. ஞான
- என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
- என்னறி வாகி இலங்கு மருந்து
- என்னறி வின்ப மருந்து - என்னுள்
- என்னறி வுக்கறி வென்னு மருந்து. ஞான
- என்குரு வான மருந்து - என்றும்
- என்தெய்வ மாகி இருக்கு மருந்து
- என்அன்னை யென்னு மருந்து - என்றும்
- என்தந்தை யாகிய இன்ப மருந்து. ஞான
- என்பெரு வாழ்வா மருந்து - என்றும்
- என்செல்வ மாகி இருக்கு மருந்து
- என்னுயிர் நட்பா மருந்து - எனக்
- கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து. ஞான
- என்னிறை யான மருந்து - மகிழ்ந்
- தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து
- தன்னறி வாகு மருந்து - என்னைத்
- தந்த மருந்தென்றன் சொந்த மருந்து. ஞான
- உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன்
- உயிருக் கனாதி உறவா மருந்து
- தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச்
- சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து. ஞான
- வானடு வான மருந்து - என்னை
- மாமணி மேடைமேல் வைத்த மருந்து
- ஊனம் தவிர்த்த மருந்து - கலந்
- துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து. ஞான
- மலையிலக் கான மருந்து - என்றன்
- மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து
- கலைநலம் காட்டு மருந்து - எங்கும்
- கண்ணாகிக் காணும் கனத்த மருந்து. ஞான
- மலமைந்து நீக்கு மருந்து - புவி
- வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து
- நலமிக் கருளு மருந்து - தானே
- நானாகித் தானாளு நாட்டு மருந்து. ஞான
- சித்துரு வாம்சுயஞ் ஜோதி - எல்லாம்
- செய்திட வல்ல சிதம்பர ஜோதி
- அத்துவி தானந்த ஜோதி - என்னை
- ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஜோதி. சிவசிவ
- மனமாதி எல்லாமாம் ஜோதி - அவை
- வாழ அகம்புறம் வாழ்கின்ற ஜோதி
- இனமான உள்ளக ஜோதி - சற்றும்
- ஏறா திறங்கா தியக்குமோர் ஜோதி. சிவசிவ
- பகுதிமூன் றாகிய ஜோதி - மூலப்
- பகுதிகள் மூன்றும் படைத்தருள் ஜோதி
- விகுதி பலவாக்கும் ஜோதி - சற்றும்
- விகுதிஒன் றின்றி விளக்கிய ஜோதி. சிவசிவ
- கால முதற்காட்டும் ஜோதி - கால
- காரணத் தப்பால் கடந்தொளிர் ஜோதி
- கோலம் பலவாகும் ஜோதி - ஒன்றும்
- குறிக்கப் படாச்சிற் குணப்பெருஞ் சோதி. சிவசிவ
- பேரருட் ஜோதியுள் ஜோதி - அண்ட
- பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி
- வாரமுற் றோங்கிய ஜோதி - மன
- வாக்குக் கெட்டாததோர் மாமணி316 ஜோதி. சிவசிவ
- மெய்யேமெய் யாகிய ஜோதி - சுத்த
- வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி
- துய்ய சிவானந்த ஜோதி - குரு
- துரியத் தலத்தே துலங்கிய ஜோதி. சிவசிவ
- தான்அன்றி ஒன்றிலா ஜோதி - என்னைத்
- தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி
- நான்இன்று கண்டதோர் ஜோதி - தானே
- நானாகி வாழ்ந்திட நல்கிய ஜோதி. சிவசிவ
- காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக்
- காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
- ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள்
- நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ
- தற்பர மேவடி வாகி - அது
- தன்னைக் கடந்து தனிஉரு வாகிச்
- சிற்பரத் துள்ளது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நீடு சிவாகமங் கோடி - அருள்
- நேருறப் பாடியும் ஆடியும் ஓடித்
- தேட இருந்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
- சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
- திருநெறிக் கேசென்று பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
- தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
- தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பிறந்து பிறந்துழன் றேனை - என்றும்
- பிறவா திறவாப் பெருமைதந் தூனைச்
- சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பாரிடம் வானிட மற்றும் - இடம்
- பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும்
- சேரிட மாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான்
- எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத்
- திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
- தம்மை யினோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
- செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
- அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
- பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார்
- பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில்
- ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை
- அணையவந்தார் வந்தார்என்றே இணையில்நாதம் சொல்கின்றதே. என்ன
- எந்தரமுட் கொண்டஞான சுந்தரர்என் மணவாளர்
- எல்லாம்செய் வல்லசித்தர் நல்லோர் உளத்தமர்ந்தார்
- மந்திரமா மன்றில்இன்பம் தந்தநட ராஜர்உன்னை
- மருவவந்தார் வந்தார்என்று தெருவில்நாதம் சொல்கின்றதே. என்ன
- பாகார்மொழி யாள்சிவ மாகாம வல்லிநாளும்
- பார்த்தாட மணிமன்றில் கூத்தாடு கின்றசித்தர்
- வாகாஉனக்கே என்றும் சாகா வரங்கொடுக்க
- வலியவந்தார் வந்தார்என்றே வலியநாதம் சொல்கின்றதே.
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங்குஞ் சிதபாதர்
- சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர் வருவார்
- சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
- தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
- இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
- இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
- இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
- இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
- ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்என்னால்
- உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை313 என்றுசொன்னால் வருவார்
- மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து
- விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து
- எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
- இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது
- வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
- வந்தாற் பெறலாம்நல்ல வரமே.
- சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
- சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
- என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
- இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. இவர்க்கும்
- தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
- தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
- வாரா வரவாகி வந்தபொற் பாதம்
- வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய
- எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
- இறவா நிலையில் இருத்திய பாதம்
- புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
- பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய
- ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
- ஆதி அனாதியும் ஆகிய பாதம்
- மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
- மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
- உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச்
- சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே296 அபயம்
- வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
- றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்
- மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
- பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்
- உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
- சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்
- செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
- சிவநெறி ஒன்றே எங்கும்தலை எடுத்தது
- இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
- இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது அற்புதம்
- ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
- அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
- ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
- என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது அற்புதம்
- வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
- வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
- தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
- சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
- புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
- பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
- மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
- வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர் அற்புதம்
- கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
- கூசாது சென்றன டி - அம்மா
- கூசாது சென்றன டி. ஆணி
- கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
- கோடிபல் கோடிய டி - அம்மா
- கோடிபல் கோடிய டி. ஆணி
- அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
- ஐவர் இருந்தார டி - அம்மா
- ஐவர் இருந்தார டி. ஆணி
- மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
- மணிவாயில் உற்றேன டி - அம்மா
- மணிவாயில் உற்றேன டி. ஆணி
- எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
- இருவர் இருந்தார டி - அம்மா
- இருவர் இருந்தார டி. ஆணி
- அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
- அன்பொடு கண்டேன டி - அம்மா
- அன்பொடு கண்டேன டி. ஆணி
- அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
- அம்மை இருந்தாள டி - அம்மா
- அம்மை இருந்தாள டி. ஆணி
- சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
- சாமி அறிவார டி - அம்மா
- சாமி அறிவார டி.
- வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
- மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
- மயில்குயில் ஆச்சுத டி.
- அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
- அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
- இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
- இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.
- என்னறி வானான்என்று ஊதூது சங்கே
- எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
- செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
- சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
- இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
- எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
- திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
- தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
- தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
- பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
- பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.
- சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
- செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
- இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
- இதுவே தருணம்என்று சின்னம் பிடி.
- சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
- தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
- இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு
- ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு
- எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
- என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
- துரியமலைமேல்உளதோர் சோதிவள நாடு
- தோன்றும்அதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
- தெரியும்அது கண்டவர்கள் காணில்உயி ரோடு
- செத்தவர் எழுவார்என்று கைத்தாளம் போடு.
- சொல்லால் அளப்பரிய சோதிவரை மீது
- தூயதுரி யப்பதியில் நேயமறை ஓது
- எல்லாம்செய் வல்லசித்தர் தம்மைஉறும் போது
- இறந்தார்எழுவாரென்றுபுறந்தாரைஊது.
- வலதுசொன்ன பேர்களுக்கு வந்ததுவாய்த் தாழ்வு
- மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்ததலைத் தாழ்வு
- வலதுபுஜம் ஆடநம்பால் வந்ததருள் வாழ்வு
- மற்றுநமைச் சூழ்ந்தவர்க்கும் வந்ததுநல் வாழ்வு.
- நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு
- நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு
- சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
- செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு.
- சகல கலாண்ட சராசர காரண
- சகுண சிவாண்ட பராபர பூரண.
- அம்பல வாசிவ மாதே வா
- வம்பல வாவிங்கு வாவா வா.
- சங்கர மும்சிவ மாதே வா
- எங்களை ஆட்கொள வாவா வா.
- அரகர சிவசிவ மாதே வா
- அருளமு தம்தர வாவா வா.
- அம்பல வாணணை நாடின னே
- அவனடி யாரொடும் கூடின னே.
- சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளை யே
- திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளை யே.
- இறவா வரம்தரு நற்சபை யே
- எனமறை புகழ்வது சிற்சபை யே.
- என்இரு கண்ணுள் இருந்தவ னே
- இறவா தருளும் மருந்தவ னே.
- அம்பல வாணர்தம் அடியவ ரே
- அருளர சாள்மணி முடியவ ரே.
- போதாந்த புரேச சிவாகம
- நாதாந்த நடேச நமோநம.
- சகல லோகபர காரக வாரக
- சபள யோகசர பூரக தாரக.
- ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
- வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.
- நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
- தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.
- ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
- தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
- ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
- சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
- சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
- ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
- பாசநாச பாபநாச பாததேச ஈசனே
- வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
- மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
- வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
- களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
- களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.
- சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா
- சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.
- வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா
- வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.
- உமைக்கொருபாதி கொடுத்தருள்நீதி உவப்புறுவேதி நவப்பெருவாதி
- அமைத்திடுபூதி அகத்திடும்ஆதி அருட்சிவஜோதி அருட்சிவஜோதி.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- வானசிற்கன மந்திரதந்திர வாதசிற்குண மந்தணவந்தண
- வாரசற்சன வந்திதசிந்தித வாமஅற்புத மங்கலைமங்கல
- ஞானசிற்சுக சங்கரகங்கர ஞாயசற்குண வங்கணஅங்கண
- நாதசிற்பர வம்பரநம்பர நாததற்பர விம்பசிதம்பர.
- விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
- விகிர்தா விபவா விமலா அமலா
- வெஞ்சேர்343 பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
- தவயோக பலமே சிவஞான நிலமே
- தலையேறும் அணியே விலையேறு மணியே
- நவவார நடமே சுவகார புடமே
- நடராஜ பரமே நடராஜ பரமே.
- வயமான வரமே வியமான பரமே
- மனமோன நிலையே கனஞான மலையே
- நயமான உரையே நடுவான வரையே
- நடராஜ துரையே நடராஜ துரையே.
- சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
- தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
- சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
- தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
- எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
- எண்ணிய வாறே நண்ணிய பேறே
- புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
- புண்ணிய வானே புண்ணிய வானே.
- தொத்திய சீரே பொத்திய பேரே
- துத்திய பாவே பத்திய நாவே
- சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
- சத்திய வானே சத்திய வானே.
- தூய சதாகதியே நேய சதாசிவமே
- சோம சிகாமணியே வாம உமாபதியே
- ஞாய பராகரமே காய புராதரமே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- ஆதர வேதியனே ஆடக ஜோதியனே
- ஆரணி பாதியனே ஆதர வாதியனே
- நாத விபூதியனே நாம வனாதியனே
- ஞான சபாபதியே ஞான சபாபதியே.
- எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- எவ்வுலகில் யார்எனக்கிங் கீடுரைநீ தோழீ
- நல்லாய்மீக் கோளுடையார் இந்திரர்மா முனிவர்
- நான்முகர்நா ரணர்எல்லாம் வான்முகராய் நின்றே
- பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை நம்மால்
- பகர்வரிதென் கின்றார்சிற் பதியில்நடம் புரியும்
- வல்லானை மணந்திடவும் பெற்றனள்இங் கிவளே
- வல்லாள்என் றுரைக்கின்றார் நல்லார்கள் பலரே.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலைமகிழ்ந் தணிந்தேன்
- மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத் துரைக்கும்
- எஞ்சலுறா வாழ்வனைத்தும் என்னுடைய வாழ்வே
- எற்றோநான் புரிந்ததவம் சற்றேநீ உரையாய்
- அஞ்சுமுகம் காட்டியஎன் தாயர்எலாம் எனக்கே
- ஆறுமுகம் காட்டிமிக வீறுபடைக் கின்றார்
- பஞ்சடிப்பா வையர்எல்லாம் விஞ்சடிப்பால் இருந்தே
- பரவுகின்றார் தோழிஎன்றன் உறவுமிக விழைந்தே.
- அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்
- அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்
- உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்
- ஒருதலைமைப் பெருந்தலைவ ருடையஅருட் புகழாம்
- இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்
- இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்
- கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே
- களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.
- பொதுநடஞ்செய் துரைமுகத்தே தளதளஎன் றொளிரும்
- புன்னகையே ஒருகோடிப் பொன்பெறும்என் றுரைப்பார்
- இதுவரையோ பலகோடி என்னினும்ஓர் அளவோ
- எண்இறந்த அண்டவகை எத்தனைகோ டிகளும்
- சதுமறைசொல் அண்டவகை தனித்தனியே நடத்தும்
- சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ
- துதிபெறும்அத் திருவாளர் புன்னகையை நினைக்குந்
- தோறும்மனம் ஊறுகின்ற சுகஅமுதம் பெறுமே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது
- மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே
- ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம்
- என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன்
- தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும்
- தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே
- ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா
- தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே.
- கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்
- கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
- இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
- இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
- பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
- புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
- நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
- நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.
- மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும்
- மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன்
- என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி
- என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே
- மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி
- விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே
- அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த
- அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ.
- கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே
- கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான்
- எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே
- என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர்
- உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே
- உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய்
- அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால்
- அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே.
- காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
- கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
- ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
- இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
- பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
- பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
- பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
- பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான
- சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான்
- வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே
- மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும்
- சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி
- துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால்
- ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங்
- கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே.
- தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி
- தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி
- இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும்
- இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே
- மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ
- மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும்
- தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித்
- தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே.
- மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய்
- மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக
- குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே
- குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன்
- தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ
- சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
- அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக
- அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழீ
- பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக
- அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே
- அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே
- கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ
- களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே
- புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக
- புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.
- கூடியஎன் தனிக்கணவர் நல்வரத்தை நானே
- குறிக்கின்ற தோறும்ஒளி எறிக்கின்ற மனந்தான்
- நீடியபொன் மலைமுடிமேல் வாழ்வடைந்த தேவர்
- நீள்முடிமேல் இருக்கின்ற தென்றுரைக்கோ அன்றி
- ஆடியபொற் சபைநடுவே சிற்சபையின் நடுவே
- ஆடுகின்ற அடிநிழற்கீழ் இருக்கின்ற தென்கோ
- ஏடவிழ்பூங் குழலாய்என் இறைவரைக்கண் ணுற்றால்
- என்மனத்தின் சரிதம்அதை யார்புகல்வார் அந்தோ.
- என்னிருகண் மணிஅனையார் என்னுயிர்நா யகனார்
- என்உயிருக் கமுதானார் எல்லாஞ்செய் வல்லார்
- பொன்அணிபொற் சபையாளர் சிற்சபையார் என்னைப்
- புறம்புணர்ந்தார் அகம்புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார்
- அன்னியர்அல் லடிஅவரே எனதுகுல தெய்வம்
- அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ
- மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே
- மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே.
- தந்தைஎன்றாய் மகன்என்றாய் மணவாளன் என்றாய்
- தகுமோஇங் கிதுஎன்ன வினவுதியோ மடவாய்
- சிந்தைசெய்து காணடிநீ சிற்சபையில் நடிக்கும்
- திருவாளர் எனைப்புணர்ந்த திருக்கணவர் அவர்தம்
- அந்தநடு முதலில்லா அரும்பெருஞ்சோ தியதே
- அண்டசரா சரங்கள்எலாம் கண்டதுவே றிலையே
- எந்தவகை பொய்புகல்வேன் மற்றையர்போல் அம்மா
- வீறுமவர்369 திருமேனி நானும்என அறியே.
- வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும்
- மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ
- நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில்
- நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன்
- கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட
- கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர்
- தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன்
- தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- இவ்வுலகில் எனைப்போல்வார் ஓர்அனந்தம் கோடி
- என்னில்உயர்ந் திருக்கின்றார் எத்தனையோ கோடி
- அவ்வுலகில் சிறந்துநின்றார் அளவிறந்த கோடி
- அத்தனைபேர் களும்அந்தோ நித்தம்வருந் திடவும்
- எவ்வுலகும் உணர்வரிய திருச்சிற்றம் பலத்தே
- இனிதமர்ந்த தலைவர்இங்கே என்னைமணம் புரிந்தார்
- நவ்விவிழி மடமாதே கீழ்மேல்என் பதுதான்
- நாதர்திரு அருட்சோதி நாடுவதொன் றிலையே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- அருளாளர் பொற்பொதுவில் ஆனந்த நடஞ்செய்
- ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் நான்தான்
- தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
- திருவாளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
- மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
- மருண்டனவேல் என்னடிநம் மனவாக்கின் அளவோ
- இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பாம்
- என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
- திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத்
- திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய்
- அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
- அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப்
- பரிச்சிக்கும்369 அவ்வமுதின் நிறைந்தசுவை யாகிப்
- பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே
- உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம்
- ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே
- கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான்
- பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம்
- படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும்
- அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும்
- அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால்
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ
- என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே.
- என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன்
- இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய்
- பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர்
- பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும்
- உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும்
- உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே
- மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண்
- மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே.
- பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும்
- பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற
- சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது
- திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே
- ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார்
- ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம்
- ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும்
- உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே
- ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகி ரண்டத்
- திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும்
- பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின்
- பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே
- வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே
- வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே.
- கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய்
- படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட
- பகிரண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம்
- அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம்
- ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள்
- கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக்
- கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே.
- இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
- எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
- அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
- அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
- என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
- சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
- துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
- சுகவடிவந் தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
- பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
- பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
- இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
- என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
- உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
- ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே.
- தாழ்குழல்நீ ஆண்மகன்போல் நாணம்அச்சம் விடுத்தே
- சபைக்கேறு கின்றாய்என் றுரைக்கின்றாய் தோழி
- வாழ்வகைஎன் கணவர்தமைப் புறத்தணைந்தாள் ஒருத்தி
- மால்எனும்பேர் உடையாள்ஓர் வளைஆழிப் படையாள்
- ஆழ்கடலில் துயில்கின்றாள் மாமணிமண் டபத்தே
- ஆள்கின்றாள் ஆண்மகனாய் அறிந்திலையோ அவரைக்
- கேழ்வகையில் அகம்புணர்ந்தேன் அவர்கருணை அமுதம்
- கிடைத்ததுநான் ஆண்மகனா கின்றததி சயமோ.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர்
- மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்
- விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது
- கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்
- களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்
- மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண
- மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.
- பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்
- பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்
- திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்
- தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே
- வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா
- வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்
- கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது
- கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.
- தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச்
- சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர்
- இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண
- இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர
- எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும்
- என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன்
- சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச்
- சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி.
- மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத
- மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்
- மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி
- வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி
- போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி
- புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே
- ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால்
- ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.
- பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள்
- பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர்
- ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க
- எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன்
- சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத்
- திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப்
- பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்
- பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.
- என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி
- இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
- அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும்
- ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன்
- இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும்
- இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித்
- தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பே ரந்தத்
- தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே.
- மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார்
- வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி
- துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்
- துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால்
- இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால்
- இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே
- ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது
- வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும்
- சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும்
- தாற்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில்
- பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ
- புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே
- உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல்
- வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே
- காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய்
- கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி
- ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி
- உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச்
- சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே.
- இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
- இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
- கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
- கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
- துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
- சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
- உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே
- உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி.
- நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி
- நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்
- வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்
- வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்
- தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்
- திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே
- தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த
- சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான்
- ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி
- இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி
- யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ
- செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே
- தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும்
- பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே
- படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே.
- தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும்
- துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே
- அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே
- அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே
- கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம்
- குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ
- எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ்
- இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே.
- நான்தொடுக்கும் மாலைஇது பூமாலை எனவே
- நாட்டார்கள் முடிமேலே நாட்டார்கள் கண்டாய்
- வான்தொடுக்கும் மறைதொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும்
- மற்றவையை அணிவார்கள் மதத்துரிமை யாலே
- தான்தொடுத்த மாலைஎலாம் பரத்தையர்தோள் மாலை
- தனித்திடும்என் மாலைஅருட் சபைநடுவே நடிக்கும்
- ஊன்றெடுத்த மலர்கள்அன்றி வேறுகுறி யாதே
- ஓங்குவதா தலில்அவைக்கே உரித்தாகும் தோழி.
- வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும்
- வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே
- தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத்
- தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ
- தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே
- திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம்
- யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி
- என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே.
- என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும்
- இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம்
- நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே
- நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன்
- புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா
- பொய்புகுந்தாற் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே
- வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ
- மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே.
- மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்
- மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ
- சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே
- சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ
- பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்
- பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய்
- சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று
- தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே.
- எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
- இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
- கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
- கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
- நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
- ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
- செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
- சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.
- சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
- சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
- பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
- பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
- அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
- அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
- சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
- திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில்
- கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன்
- கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்
- குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன்
- நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி
- நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே
- மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன்
- வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி.
- சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
- தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
- உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
- ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
- அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
- ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
- பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
- பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி
- நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே
- ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய
- உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார்
- வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும்
- மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம்
- தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன்
- சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம்371 உரைப் பதுவே.
- துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம
- சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன்
- குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம்
- குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன்
- குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம்
- கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர்
- மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து
- வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி.
- தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
- தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
- கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
- கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
- செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
- சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
- இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
- இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி.
- அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
- அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
- இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
- எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
- மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
- மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
- தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
- திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
- புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
- புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
- சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
- செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
- பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
- பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
- மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
- மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
- தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த
- தனித்தலைவர் நான்செய்தபெருந் தவத்தாலே கிடைத்தார்
- வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும்
- மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார்
- ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை
- அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம்
- தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன்
- சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ.
- அறியாத பருவத்தே என்னைவலிந் தழைத்தே
- ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார்
- செறியாத மனச்சிறியேன் செய்தபிழை எல்லாம்
- திருவிளையாட் டெனக்கொண்டே திருமாலை அணிந்தார்
- பிறியாமல் என்னுயிரில் கலந்துகலந் தினிக்கும்
- பெருந்தலைவர் நடராயர் எனைப்புணர்ந்தார் அருளாம்
- அறிவாளர் புறப்புணர்ச்சி எனைஅழியா தோங்க
- அருளியதீண் டகப்புணர்ச்சி அளவுரைக்க லாமே.
- சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
- நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
- தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
- எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
- தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
- இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
- இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
- மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
- மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
- கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
- களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.
- சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
- சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
- இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
- இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
- சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
- தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
- செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
- திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.
- 374. இத்திருப்பாட்டின் கீழ் "சத்திய அறிவிப்பு, சத்திய வார்த்தை" என அடிகளால்எழுதப்பெற்றுள்ளது.
- 375. இத்திருப்பாட்டின் கீழ் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துளேன்"என அடிகளால் எழுதப்பெற்றுள்ளது.
- வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
- மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
- ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
- ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
- ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
- வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.