- சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
- சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
- சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
- தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
- மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
- மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
- மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
- வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
- இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்
- எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
- ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
- ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்
- எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
- எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
- என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
- என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
- என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
- என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
- என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
- என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
- என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
- என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
- என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
- என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
- நேரிசை வெண்பா
- அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
- எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் - தெவ்வர்தமைக்
- கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
- தொன்றதுநம் முள்ள முறைந்து.
- கலிவெண்பா
- கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
- வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே - தண்காட்டிக்
- டுருகாவூ ரெல்லா மொளிநயக்க வோங்குங்
- குருகாவூர் வெள்ளடையெங் கோவே - அருகாத
- வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
- சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும்
- மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
- வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல்
- வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
- வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக்
- வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
- உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே - பண்பகன்ற
- வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
- ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி
- மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
- நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த
- நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
- பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே - நாற்றிசையுந்
- தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும்
- வேதிக் குடி58 யின்ப வெள்ளமே - கோதியலும்
- மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
- ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே - ஓவாது
- காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
- மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக்
- மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
- வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம்
- வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
- செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன்
- நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
- தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே
- வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
- பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை
- தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும்
- குடவாயில் அன்பர் குறிப்பே - மடவாட்கோர்
- போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
- ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட
- கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ்
- கொள்ளம்பூ தூர்வான் குலமணியே - வெள்ளிடைவான்
- வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
- நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண்
- வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
- துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன
- நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ
- அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே - நெஞ்சடக்கி
- வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
- வெஞ்சமாக் கூடல் விரிசுடரே - துஞ்சலெனும்
- வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
- நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின்
- னார்புரத்தை72 வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
- சோபுரத்தின்73 வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச்
- நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
- நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம்
- சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய்
- நல்லூ ரருட்டுறையின் நற்பயனே - மல்லார்ந்து
- கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த
- வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே - பண்பார்க்கு
- வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
- ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில்
- இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
- வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல்
- வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
- திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம்
- ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
- விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண்
- பொய்யுரைக்க வென்றாற் புடையெழுவேன் அன்றியொரு
- மெய்யுரைக்க வென்றும் விழைந்ததிலை - வையகத்தில்
- மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும்
- வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு - துய்யர்தமை
- பூணா வெலும்பணியாய்ப் பூண்டோய்நின் பொன்வடிவங்
- காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத
- சீராசை யெங்குஞ்சொற் சென்றிடவே வேண்டுமெனும்
- பேராசைப் பேய்தான் பிடித்ததுண்டு - தீராவென்
- கற்கு நிகராங் கடுஞ்சொலன்றி நன்மதுரச்
- சொற்கும் எனக்கும்வெகு தூரங்காண் - பொற்புமிக
- நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநு‘ல்
- வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு
- செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால்
- சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் - நல்லநெறி
- ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
- தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும்
- ஏறுடையாய் நீறணியா ஈனர்மனை யாயினும்வெண்
- சோறுகிடைத் தாலதுவே சொர்க்கங்காண் - வீறுகின்ற
- பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு
- நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை - சீர்க்கரையின்
- வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
- சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை
- ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
- மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன்
- வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும்
- மூடருக்குள் யானே முதல்வன்காண் - வீடடுத்த
- வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
- வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன
- வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
- செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே - சொல்லகலின்
- போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
- வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு
- மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண்ணீற்றுநெறி
- விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் - துட்டனென
- 47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
- 420 48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
- 49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
- 421 50. வானொளிப் புற்று‘ர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
- 51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.தொ.வே.
- 422 52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது.வேற்றுமைச்சந்தியாகலான்.தொ.வே.
- 53. பொன் - இலக்குமி, தொ.வே.
- 423 54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
- 55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
- 424 56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
- 57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
- 425 58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று; தொ.வே.
- 59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
- 426 60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
- 61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது: தொ.வே.
- 427 62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையெனநின்றது: தொ.வே.
- 63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
- 428 64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.தொ.வே.
- 65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்
- 429 66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
- 67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
- 430 68. இஃது மலைநாட்டுத் தலம்.
- 69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
- 431 70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது: தொ.வே.
- 71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
- 432 72. ஆசிடை யெதுகை: தொ.வே.
- 73. செந்தொடை: தொ.வே.
- 433 74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடுமுடிந்தன: தொ.வே.
- 75. ஆசிடை யெதுகை. தொ.வே.
- 434 76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
- 77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று: தொ.வே.
- 435 78. வீ - மரணம். தொ.வே.
- 79. இது துளுநாட்டுத்தலம்
- 436 80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்
- 81. சிங்குதல் - குறைதல், தொ.வே.
- 437 82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
- 83. ஆறு - வழி. தொ.வே.
- குறள்வெண்பா
- கலிவெண்பா
- செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற
- இவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ்
- வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
- ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி
- நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
- மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத
- ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
- சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய
- ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
- பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்
- தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
- ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா
- வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
- செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்
- வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
- திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா
- வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
- செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை
- கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்
- கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்
- தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்
- கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்
- வெண் றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
- கண்ர் அருவி கலந்தாடி- உண்ர்மை
- தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
- மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற
- தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
- மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே
- வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
- நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்
- வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்
- நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்
- வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
- நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்
- இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்
- துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்
- தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
- வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்
- வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்று
- சூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்
- பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
- மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்
- மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
- தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த
- மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
- பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்
- துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
- பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்
- சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
- போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற
- தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
- ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்
- இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
- செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்
- ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
- நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்
- வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
- ஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற
- வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
- மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி
- நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை
- ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்
- உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
- நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி
- வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
- தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய
- வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
- வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்
- ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
- வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்
- வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
- சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்
- மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
- உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா
- வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
- டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை
- தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு
- மூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும்
- கண்ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
- வெண்ர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்ர்மைச்
- தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
- வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்
- தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்
- வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா
- மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
- தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 - ஒன்றாச்சொல்
- வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
- தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்
- செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்
- வைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய்
- வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்
- பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு
- சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்
- சென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு
- பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்
- பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத்
- மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
- மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை
- வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்
- புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்
- வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
- நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ
- ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
- என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு
- வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
- ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்
- திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
- எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற
- பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
- கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்
- எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
- றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன
- ஓரா வெகுளி யுடையான் தவமடையான்
- தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்
- வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
- இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்
- ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்
- பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்
- கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்
- எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில்
- தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்
- விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல்
- காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
- கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்
- பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
- அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்
- பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
- காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்
- மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
- பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற
- மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்
- வெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட
- பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
- சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு
- எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
- வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்
- அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்
- கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்
- வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
- கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு
- கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
- கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க
- ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
- ஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்
- சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
- அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்
- தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
- வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்
- வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
- ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற
- சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
- நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய
- அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்
- பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த
- ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்
- ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்
- வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
- சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற
- வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
- சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்
- வீழ்முகத்த ராகிநிதம் வெண் றணிந்தறியாப்
- பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்
- சைவமெங்கே வெண்ற்றின் சார்பெங்கே மெய்யான
- தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே
- அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய
- கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்
- சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
- சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்
- சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
- கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு
- மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
- பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்
- கண்டிகையே பூணிற் கலவையே வெண்றாய்க்
- கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே
- தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
- வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்
- றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்
- டப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும்
- கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து
- கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய
- சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
- சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்
- 84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.
- 705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.
- 86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.
- 706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
- 88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
- 707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.
- 90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
- 708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
- 92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
- 709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
- 94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
- 710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
- 96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
- 711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
- 98. நொறில் - விரைவு. தொ.வே.
- 712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
- 100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
- 713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
- 102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
- 714 103. மேடு - வயிறு. தொ.வே.
- 104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
- 715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.
- 106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
- 716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.
- 108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
- 717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
- 110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
- 718 111. நொறில் - அடக்கம். தொ.வே.
- 112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
- 719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
- 114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
- 720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
- 116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
- 721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
- 118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
- 722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
- 120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
- 723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
- 122. தூரியம் - பறை. தொ.வே.
- 724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
- 124. ஊழி - கடல். தொ.வே.
- 725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
- 126. சிந்து - கடல். தொ.வே.
- 726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
- 128. தொன்று - பழமை. தொ.வே.
- 727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே
- நேரிசை வெண்பா
- வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
- நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
- முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
- புதல்வாநின் தாளென் புகல்.
- வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
- நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
- எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
- உண்டோ இலையோ உரை.
- பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
- யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
- வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
- ஒளியாகி நின்ற உனை.
- அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
- பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
- வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
- எம்பெருமான் நீவாழ் இடம்.
- மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
- பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
- விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
- பட்டால் வருமே பதம்.
- உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
- வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
- கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
- துண்ணப் பருக்கும் உடம்பு.
- வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
- மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
- சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
- நீர்சிந்தா வன்கண் நிலை.
- வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
- வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
- ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
- வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய்.
- வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
- பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
- நீங்கஅருள் செய்வோய்வெண்ணீறணியார் தீமனையில்
- ஆங்கவரோ டுண்ணு மது.
- பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
- தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
- கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
- ஓவுவா ராவ133 லுனை.
- வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
- உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
- நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
- என்னென்ப தையா இயம்பு.
- பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
- பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
- சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
- தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து.
- எம்பரவை134 யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
- தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
- வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
- மாயப்பெயர் நீண்ட மால்.
- எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
- பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
- நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
- அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து.
- உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
- வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
- அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
- எச்சங்கண் டாற்போல வே.
- வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
- பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
- பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
- வெறுத்தால் இனிஎன்செய் வேன்.
- குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
- சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
- பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
- கைவிட்டால் என்செய்கேன் காண்.
- மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
- கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
- அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
- கண்டமங்கே நீலமுறாக் கால்.
- வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
- மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
- முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
- நின்பொற் கழலே நிலை.
- ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
- வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
- செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
- நம்பாத நாயடியேன் நான்.
- வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
- மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
- நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
- நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
- மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
- முதலாகி மனாதீத முத்தி யாகி
- வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
- மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.
- பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
- பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
- சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
- சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
- திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
- சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
- அரமாகி ஆனந்த போத மாகி
- ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.
- பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
- புறமாகி அகமாகிப் புனித மாகி
- மன்னாகி மலையாகிக் கடலு மாகி
- மதியாகி ரவியாகி மற்று மாகி
- முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
- முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
- மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
- வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.
- அரிதாகி அரியதினும் அரிய தாகி
- அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
- பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
- பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
- கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
- கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
- தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
- செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.
- வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
- வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
- தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
- சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
- பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
- பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
- நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
- நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.
- விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
- வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
- கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
- கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
- தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
- தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
- பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
- பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.
- மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான
- வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
- குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்
- கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
- பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்
- பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
- இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற
- இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே.
- அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்
- ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
- பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்
- பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
- இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த
- ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
- தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு
- தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.
- சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
- தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
- ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
- கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
- விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
- விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
- வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
- மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.
- அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்
- அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
- நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு
- நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
- தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்
- தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
- மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி
- வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே.
- அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்
- கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
- விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன
- வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
- கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்
- கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
- சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்
- சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே.
- உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
- உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
- கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
- கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
- விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
- வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
- தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
- சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.
- மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
- வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
- பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
- புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
- கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்
- கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
- உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
- ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.
- பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்
- பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
- ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி
- இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
- வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு
- மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
- தேங்குபர மானந்த வெள்ள மேசச்
- சிதானந்த அருட்சிவமே தேவே தேவே.
- எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்
- தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
- பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்
- பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
- கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்
- கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
- விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன
- வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே.
- உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்
- உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
- மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை
- வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
- கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்
- களைவினவ மற்றவையுங் காணேம் என்று
- வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற
- வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.
- பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்
- பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
- ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்
- அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
- தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்
- திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
- தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்
- தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே.
- பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
- பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
- எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
- எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
- தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
- சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
- தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்
- தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே.
- பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
- பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
- மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
- வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
- இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
- இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
- விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
- விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.
- தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
- தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
- வானாகி வளியனலாய் நீரு மாகி
- மலர் தலைய உலகாகி மற்று மாகித்
- தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
- தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
- நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
- நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.
- என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற
- என்தாயே என்குருவே எளியேன் இங்கே
- தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற
- சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
- மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்
- வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
- கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே
- குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே.
- அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்
- றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
- மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ
- மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
- இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்
- எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
- உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்
- உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே.
- வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி
- விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
- கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்
- கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
- உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்
- உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
- பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்
- பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே.
- எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்
- ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
- செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்
- சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
- கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்
- கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
- வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்
- மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.
- கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்
- காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
- தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு
- சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
- பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்
- பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
- புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ
- புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே.
- வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
- மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
- அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
- கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
- இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
- இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
- ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
- உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே
- தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
- தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
- வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
- விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
- செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
- செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
- இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
- இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.
- அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே
- அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
- வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து
- மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
- துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்
- துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
- இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ
- என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே.
- விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
- கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
- பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
- பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே.
- தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
- தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
- நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
- வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.
- வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
- என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
- நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
- டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.
- ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
- போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
- கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
- நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.
- சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
- வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
- பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
- பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.
- தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
- மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ
- வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
- இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே.
- பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
- அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
- கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
- மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.
- நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
- குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
- முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
- வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.
- நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
- திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
- விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
- இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.
- சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
- பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
- கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
- மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.
- மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
- உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
- அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
- கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே.
- எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
- முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
- வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
- உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.
- மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
- நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
- பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
- கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே.
- பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
- ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
- வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
- அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.
- அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
- இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
- என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
- வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.
- முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
- பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
- நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
- பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.
- பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
- வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
- ` தாம்பா யினும்156 ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
- தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.
- எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
- மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
- விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
- வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.
- தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான்
- இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ
- அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய்
- வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே.
- ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
- தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
- வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
- தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.
- பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
- திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
- விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
- கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.
- மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
- காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
- கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
- பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.
- மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
- நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
- பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
- கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே.
- சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
- கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
- நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
- இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.
- திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
- வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
- ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
- கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.
- வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
- மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
- ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
- பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே.
- கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
- அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
- துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
- துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.
- வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
- ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
- உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
- தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.
- மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
- பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
- கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
- திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.
- ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
- துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
- செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
- உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.
- சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
- வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
- புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
- மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.
- சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
- மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
- மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
- பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.
- சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
- தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
- தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
- கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.
- மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
- மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
- கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
- கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.
- உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
- விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
- தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
- கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே.
- மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
- காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
- தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
- நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.
- வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
- போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
- வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
- சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.
- இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
- என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
- அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
- தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.
- கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
- பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
- இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
- சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.
- வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
- எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
- தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
- செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.
- சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
- வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
- நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
- ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.
- கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
- கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
- அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
- இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே.
- இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
- கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
- கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
- வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.
- இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
- மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
- கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
- நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.
- உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
- நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
- புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
- விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.
- முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
- தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
- இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
- மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.
- கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச்
- சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண்
- நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே
- அல்லென்று வெல்களங் கொண்டோய்என் செய்வ தறிந்திலனே.
- நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
- போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
- பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
- மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
- பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
- செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
- கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
- மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
- பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
- விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
- நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞ்சம்அஞ்சாய்
- மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
- சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
- ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
- வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
- வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
- வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
- உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
- தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத
- வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
- சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
- போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
- யாரறி வார்நின்னை நாயேன்அறிவ தழகுடைத்தே
- வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
- அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
- பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பதம்
- கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
- வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
- வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
- ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
- எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
- மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
- எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச்
- செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
- வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
- வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
- செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக்
- கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண்
- தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
- வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
- நேரிசை வெண்பா
- கோமாற் கருளுந் திருவொற்றிக் கோயி லுடையா ரிவரைமத
- மாமாற் றியநீ ரேகலவி மகிழ்ந்தின் றடியேன் மனையினிடைத்
- தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் றாவென் றார்தந் தாலென்னை
- யேமாற் றினையே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே
- னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார்
- செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற
- வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் கள்வ ரிவரூ ரொற்றியதாம்
- பண்க ளியன்ற திருவாயாற் பலிதா வென்றார் கொடுவந்தேன்
- பெண்க டரலீ தன்றென்றார் பேசப் பலியா தென்றேனின்
- னெண்கண் பலித்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஆரா மகிழ்வு தருமொருபே ரழக ரிவரூ ரொற்றியதா
- நேராய் விருந்துண் டோவென்றார் நீர்தான் வேறிங் கிலையென்றேன்
- வாரார் முலையாய் வாயமுது மலர்க்கை யமுது மனையமுது
- மேரா யுளவே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- இந்தா ரிதழி யிலங்குசடை யேந்த லிவரூ ரொற்றியதாம்
- வந்தார் பெண்ணே யமுதென்றார் வரையின் சுதையிங் குண்டென்றே
- னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் ணாசை விடுமோ வமுதின்றே
- லெந்தா ரந்தா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மாறா வழகோ டிங்குநிற்கும் வள்ள லிவரூ ரொற்றியதாம்
- வீறா முணவீ யென்றார்நீர் மேவா வுணவிங் குண்டென்றேன்
- கூறா மகிழ்வே கொடுவென்றார் கொடுத்தா லிதுதா னன்றென்றே
- யேறா வழக்குத் தொடுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- திருவை யளிக்குந் திருவொற்றித் தேவ ரீர்க்கென் விழைவென்றேன்
- வெருவ லுனது பெயரிடையோர் மெய்நீக் கியநின் முகமென்றார்
- தருவ லதனை வெளிப்படையாற் சாற்று மென்றேன் சாற்றுவனே
- லிருவை மடவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துன்ன லுடையா ரிவர்தமைநீர் துன்னும் பதிதான் யாதென்றே
- னென்ன லிரவி லெமைத்தெளிவா னின்ற நினது பெயரென்றா
- ருன்ன லுறுவீர் வெளிப்படவீ துரைப்பீ ரென்றே னுரைப்பேனே
- லின்ன லடைவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த
- கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத்
- தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில்
- லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் பதிவே றுண்டோ நுமக்கென்றே
- னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா ருண்டோ நீண்டமலையென்றேன்
- வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த மலைகா ணதனின் மம்முதல்சென்
- றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பேர்வா ழொற்றி வாணரிவர் பேசா மௌன யோகியராய்ச்
- சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றே
- னோர்வா ழடியுங் குழலணியு மொருநல் விரலாற் சுட்டியுந்தம்
- மேர்வா ழொருகை பார்க்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் பேசா மௌனம் பிடித்திங்கே
- விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு மேலு நோக்கி விரைந்தார்யான்
- வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை வகுக்க வென்றேன் மார்பிடைக்கா
- ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வாரா விருந்தாய் வள்ளலிவர் வந்தார் மௌன மொடுநின்றார்
- நீரா ரெங்கே யிருப்பதென்றே னீண்ட சடையைக் குறிப்பித்தா
- ரூரா வைத்த தெதுவென்றே னொண்கை யோடென் னிடத்தினில்வைத்
- தேரார் கரத்தாற் சுட்டுகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் விழியென்றே
- னிதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதா
- னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுசொலி
- யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- குருகா ரொற்றி வாணர்பலி கொள்ள வகையுண் டோவென்றே
- னொருகா லெடுத்தீண் டுரையென்றா ரொருகா லெடுத்துக்காட்டுமென்றேன்
- வருகா விரிப்பொன் னம்பலத்தே வந்தாற் காட்டு கின்றாம்வீ
- ழிருகா லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விண்டு வணங்கு மொற்றியுளீர் மென்பூ விருந்தும் வன்பூவில்
- வண்டு விழுந்த தென்றேனெம் மலர்க்கை வண்டும் விழுந்ததென்றார்
- தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் றோகாய் நாமே தொண்டனென
- வெண்டங் குறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றே
- னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா மிசைத்தே மென்றா ரெட்டாக
- வுட்டா வுறுமவ் வெழுத்தறிய வுரைப்பீ ரென்றே னந்தணரூர்க்
- கிட்டார் நாம மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றே
- னூன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருமது மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றே
- யேன்றோர் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றே
- னீது நமக்குத் தெரிந்ததென்றா ரிறையா மோவிங் கிதுவென்றே
- னோது மடியார் மனக்கங்கு லோட்டு நாமே யுணரன்றி
- யேது மிறையன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒருவ ரெனவா ழொற்றியுளீ ருமக்கம் மனையுண் டோவென்றே
- னிருவ ரொருபே ருடையவர்கா ணென்றா ரென்னென்றே னெம்பேர்
- மருவு மீறற் றயலகரம் வயங்கு மிகர மானதென்றே
- யிருவு மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் னகையென்றே
- யேமூன் றுறவே நகைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மன்னி விளங்கு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றா
- ரென்னி லிதுதா னையமென்றே னெமக்குந் தெரியு மெனத்திருவா
- யின்ன லமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளஞ்சே ரொற்றி யீரெனக்கு மாலை யணிவீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் கோலமனைக்க ணாமகிழ்வா
- லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் னுளத்தி லணிந்தே முணரென்றே
- யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைத்ததென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுரைத்துமென்றே
- யியற்பான் மொழிதந் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் மனத்தி லகாத முண்டென்றே
- னிருத்தந் தொழுநம் மடியவரை நினைக்கின் றோரைக் காணினது
- வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க முற்றே மற்ற வெல்லையகன்
- றிருத்த லறியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் செவ்வ னுரைத்தா லிருவாவென்
- றுய்ய வுரைப்பே மென்றார்நும் முரையென் னுரையென் றேனிங்கே
- யெய்யுன் னுரையை யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றருள்வீ ரென்றேனவ் வாவின் பின்னர் வருமெழுத்தை
- மேவென் றதனிற் சேர்த்ததிங்கே மேவி னன்றோ வாவென்பே
- னேவென் றிடுகண் ணென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைவா னினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யாங்கதன்மே
- லன்மேற் குழலாய் சேயதன்மே லலவ னதன்மேன் ஞாயிறஃ
- தின்மே லொன்றின் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்க லென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாப் புலித்தோலும் வேழத் தோலும் வல்லேமென்
- றேலா வமுத முகுக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மையிலோர்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றோன்று முலகுய்ந் திடவென்றா
- ராலங் களத்தீ ரென்றேனீ யாலம் வயிற்றா யன்றோநல்
- லேலங் குழலா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஞால நிகழும் புகழொற்றி நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
- பால ரலவோ வென்றேனைம் பாலர் பாலைப் பருவத்திற்
- சால மயல்கொண் டிடவருமோர் தனிமைப் பால ரியாமென்றே
- யேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- தவந்தங் கியசீ ரொற்றிநகர் தனைப்போ னினைத்தென் மனையடைந்தீ
- ருவந்தென் மீதிற் றேவர்திரு வுள்ளந் திரும்பிற் றோவென்றேன்
- சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் றிரும்பிற் றதனைத் தேர்ந்தன்றே
- யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ ரொற்றி யுடையீ ரும்முடைய
- பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீ ரென்னென்றே
- னின்னா ரளகத் தணங்கேநீ நெட்டி மிலைந்தா யிதிலதுகீ
- ழென்னா ருலக ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் செய்த தவமோ வீண்டடைந்தீ
- ரறியே னொற்றி யடிகேளிங் கடைந்த வாறென் னினைத்தென்றேன்
- பொறிநே ருனது பொற்கலையைப் பூவார் கலையாக் குறநினைத்தே
- யெறிவேல் விழியா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அளிக்குங் குணத்தீர் திருவொற்றி யழக ரேநீ ரணிவேணி
- வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளியா விளம்பத் திரமென்றேன்
- விளிக்கு மிளம்பத் திரமுமுடி மேலே மிலைந்தாம் விளங்கிழைநீ
- யெளிக்கொண் டுரையே லென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோவென்றே
- னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ
- பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக
- வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் வேதம் பிறவி யிலரென்றே
- மொழியு நுமைத்தான் வேயீன்ற முத்த ரெனலிங் கென்னென்றேன்
- பழியன் றணங்கே யவ்வேய்க்குப் படுமுத் தொருவித் தன்றதனா
- லிழியும் பிறப்போ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்பான் மொழியார் முன்னரெனைச் சேர்வீரென்கோ திருவொற்றி
- யம்பார் சடையீ ருமதாட லறியே னருளல் வேண்டுமென்றேன்
- வம்பார் முலையாய் காட்டுகின்றா மன்னும் பொன்னா ரம்பலத்தே
- யெம்பால் வாவென் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி வைத்தீ ருண்டோ மனையென்றேன்
- கைக்க ணிறைந்த தனத்தினுந்தந் கண்ணி னிறைந்த கணவனையே
- துய்க்கு மடவார் விழைவரெனச் சொல்லும் வழக்கீ தறிந்திலையோ
- வெய்க்கு மிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வள்ளன் மதியோர் புகழொற்றி வள்ளா லுமது மணிச்சடையின்
- வெள்ள மகண்மேற் பிள்ளைமதி விளங்க லழகீ தென்றேனின்
- னுள்ள முகத்தும் பிள்ளைமதி யொளிகொண் முகத்தும் பிள்ளைமதி
- யெள்ள லுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அச்சை யடுக்குந் திருவொற்றி யவர்க்கோர் பிச்சை கொடுமென்றேன்
- விச்சை யடுக்கும் படிநம்பான் மேவினோர்க்கிவ் வகில நடைப்
- பிச்சை யெடுப்பே மலதுன்போற் பிச்சை கொடுப்பே மலவென்றே
- யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அள்ளற் பழனத் திருவொற்றி யழக ரிவர்தம் முகநோக்கி
- வெள்ளச் சடையீ ருள்ளத்தே விருப்பே துரைத்தாற் றருவலென்றேன்
- கொள்ளக் கிடையா வலர்குமுதங் கொண்ட வமுதங் கொணர்ந்தின்னு
- மெள்ளத் தனைதா வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கூம்பா வொற்றி யூருடையீர் கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
- னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
- பாம்பா வதுவே கொடும்பாம்பெம் பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
- றேம்பா நிற்ப விசைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மதிலொற் றியினீர் நும்மனையாண் மலையின் குலநும் மைந்தருளோர்
- புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
- மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் கெதுவோ வென்றேன் மனைவியருள்
- ளிதுமற் றொருத்திக் கென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நல்லா ரொற்றி யுடையீர்யா னடக்கோ வெறும்பூ வணையணைய
- வல்லா லவணும் முடன்வருகோ வணையா தவலத் துயர்துய்க்கோ
- செல்லா வென்சொன் நடவாதோ திருக்கூத் தெதுவோ வெனவிடைக
- ளெல்லா நடவா தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் திகழாக் கரித்தோ லுடுத்தீரே
- யும்மை விழைந்த மடவார்க ளுடுக்கக் கலையுண் டோவென்றே
- னெம்மை யறியா யொருகலையோ விரண்டோ வனந்தங் கலைமெய்யி
- லிம்மை யுடையே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கற்றீ ரொற்றீர் முன்பொருவான் காட்டிற் கவர்ந்தோர் நாட்டில்வளை
- வீற்றீ ரின்றென் வளைகொண்டீர் விற்கத் துணிந்தீ ரோவென்றேன்
- மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் மனையின் வளையைக் கவர்ந்துகளத்
- திற்றீ தணிந்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உடுக்கும் புகழா ரொற்றியுளா ருடைதா வென்றார் திகையெட்டு
- முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ வுரைத்தீ ரென்றேன் றிகைமுழுது
- முடுக்கும் பெரிய வரைச்சிறிய வொருமுன் றானை யான்மூடி
- யெடுக்குந் திறங்கண் டென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் கண்மூன் றுடையீர் வியப்பென்றேன்
- வந்த வெமைத்தான் பிரிபோது மற்றை யவரைக் காண்போதுஞ்
- சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் தகுநான் கொன்றுந் தானடைந்தா
- யிந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- கண்ணும் மனமுங் களிக்குமெழிற் கண்மூன் றுடையீர் கலையுடையீர்
- நண்ணுந் திருவா ழொற்றியுளீர் நடஞ்செய் வல்லீர் நீரென்றேன்
- வண்ண முடையாய் நின்றனைப்போன் மலர்வாய் நடஞ்செய் வல்லோமோ
- வெண்ண வியப்பா மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- அம்மை யடுத்த திருமேனி யழகீ ரொற்றி யணிநகரீ
- ரும்மை யடுத்தோர் மிகவாட்ட முறுத லழகோ வென்றுரைத்தேன்
- நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் நம்போ லுறுவ ரன்றெனிலே
- தெம்மை யடுத்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- உதயச் சுடரே யனையீர்நல் லொற்றி யுடையீ ரென்னுடைய
- விதயத் தமர்ந்தீ ரென்னேயென் னெண்ண மறியீ ரோவென்றேன்
- சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ துறந்து வெளிப்பட் டெதிரடைந்தா
- மிதையுற் றறிநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் புனித ரேநீர் போர்க்களிற்றை
- யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ ருள்ளத் திரக்க மென்னென்றேன்
- கரக்கு மிடையாய் நீகளிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனைநின்
- னிரக்க மிதுவோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் பசுவி லேறும் பரிசதுதான்
- விதங்கூ றறத்தின் விதிதானோ விலக்கோ விளம்பல் வேண்டுமென்றே
- னிதங்கூ றிடுநற் பசுங் கன்றை நீயுமேறி யிடுகின்றா
- யிதங்கூ றிடுக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வளநீ ரொற்றி வாணரிவர் வந்தார் நின்றார் மாதேநா
- முளநீர்த் தாக மாற்றுறுநீ ருதவ வேண்டு மென்றார்நான்
- குளநீ ரொன்றே யுளதென்றேன் கொள்ளே மிடைமேற் கொளுமிந்த
- விளநீர் தருக வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் வெம்மை யுளநீர் வேண்டுமென்றா
- ரந்நீ ரிலைநீர் தண்ர்தா னருந்தி லாகா தோவென்றேன்
- முந்நீர் தனையை யனையீரிம் முதுநீ ருண்டு தலைக்கேறிற்
- றிந்நீர் காண்டி யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- நீரை விழுங்குஞ் சடையுடையீ ருளது நுமக்கு நீரூருந்
- தேரை விழுங்கும் பசுவென்றேன் செறிநின் கலைக்கு ளொன்றுளது
- காரை விழுங்கு மெமதுபசுக் கன்றின் றேரை நீர்த்தேரை
- யீர விழுங்கு மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் புரிந்த தெதுவெம் புடையென்றே
- னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் றாரென் னென்றே னியம்புதுமேன்
- மின்னே நினது நடைப்பகையா மிருகம் பறவை தமைக்குறிக்கு
- மென்னே யுரைப்ப தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் புலியூ ரெனிலெம் போல்வார்க்கு
- முரியும் புலித்தோ லுடையீர்போ லுறுதற் கியலு மோவென்றேன்
- றிரியும் புலியூ ரன்றுநின் போற் றெரிவை யரைக்கண் டிடிற்பயந்தே
- யிரியும் புலியூ ரென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ.
- வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
- துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
- ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
- செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
- மின்னும் நுண்ணிடைப் பெண்பெரும் பேய்கள்
- வெய்ய நீர்க்குழி விழுந்தது போக
- இன்னும் வீழ்கலை உனக்கொன்று சொல்வேன்
- எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து
- பொன்உ லாவிய புயம் உடை யானும்
- புகழ்உ லாவிய பூஉடை யானும்
- உன்னும் ஓம்சிவ சண்முக சிவஓம்
- ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே.
- ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
- ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
- வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
- வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
- வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
- மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
- நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- மலங்கும் மால்உடல் பிணிகளை நீக்க
- மருந்து வேண்டினை வாழிஎன் நெஞ்சே
- கலங்கு றேல்அருள் திருவெண் றெனது
- கரத்தி ருந்தது கண்டிலை போலும்
- விலங்கு றாப்பெரும் காமநோய் தவிர்க்க
- விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா
- நலங்கொள் செஞ்சடை நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- கந்த வண்ணமாம் கமலன்மால் முதலோர்
- கண்டி லார்எனில் கைலையம் பதியை
- எந்த வண்ணம்நாம் காண்குவ தென்றே
- எண்ணி எண்ணிநீ ஏங்கினை நெஞ்சே
- அந்த வண்ணவெள் ஆனைமேல் நம்பி
- அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும்
- நந்தம் வண்ணமாம் நாதன்தன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- வீர மாந்தரும் முனிவரும் சுரரும்
- மேவு தற்கொணா வெள்ளியங் கிரியைச்
- சேர நாம்சென்று வணங்கும்வா றெதுவோ
- செப்பென் றேஎனை நச்சிய நெஞ்சே
- ஊர னாருடன் சேரனார் துரங்கம்
- ஊர்ந்து சென்றஅவ் உளவறிந் திலையோ
- நார மார்மதிச் சடையவன் நாமம்
- நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே.
- தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
- மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
- ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
- காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
- செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
- வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
- வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
- கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
- ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
- கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
- வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
- காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
- நாட நீறிடா மூடர்கள் கிடக்கும்
- நரக இல்லிடை நடப்பதை ஒழிக
- ஊடல் நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
- உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க
- கூட நன்னெறி ஈதுகாண் கால்காள்
- குமரன் தந்தைஎம் குடிமுழு தாள்வோன்
- ஆட அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
- அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
- ஊற்றம் உற்றுவெண்
- நீற்றன் ஒற்றியூர்
- போற்ற நீங்குமால்
- ஆற்ற நோய்களே.-
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
- வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
- மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
- மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
- ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
- உள்ளம் எப்படி அப்படி அறியேன்
- திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- போர்க்கும் வெள்ளத்தில் பொன்புதைப் பவன்போல்
- புலைய நெஞ்சிடைப் புனிதநின் அடியைச்
- சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும்
- சிறிய னேனுக்குன் திருவருள் புரிவாய்
- கூர்க்கும் நெட்டிலை வேற்படைக் கரங்கொள்
- குமரன் தந்தையே கொடியதீ வினையைத்
- தீர்க்கும் தெய்வமே சைவவை திகங்கள்
- திகழும் ஒற்றியூர்த் தியாகநா யகனே.
- வெள்ளி மாமலை வீடென உடையீர்
- விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர்
- வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால்
- வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர்
- எள்ளில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர்
- ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ
- ஒள்ளி யீர்உமை அன்றிஒன் றறியேன்
- ஓங்கு சீர்ஒற்றி யூர்உடை யீரே.
- உய்யஒன் றறியா ஓதியனேன் பிழையை உன்திரு உள்ளத்தில் கொண்டே
- வெய்யன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- செய்யநெட் டிலைவேல் சேய்தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே
- மையலற் றவர்தம் மனத்தொளிர் விளக்கே வளம்பெறும் ஒற்றியூர் மணியே.
- அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஐயநின் திருவுளத் தெண்ணி
- வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட்கடலே
- சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே.
- நம்பினேன் நின்றன் திருவடி மலரை நாயினேன் பிழைதனைக் குறியேல்
- வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே
- தும்பிமா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே
- அம்பிகா பதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.
- உறவனே உன்னை உள்கிநெஞ் சழலின் உறும்இழு தெனக்கசிந் துருகா
- மறவனேன் தன்னை ஆட்கொளா விடில்யான் வருந்துவ தன்றிஎன் செய்கேன்
- நிறவனே வெள்ளை நீறணி பவனே நெற்றிமேல் கண்ணுடை யவனே
- அறவனே தில்லை அம்பலத் தாடும் அப்பனே ஒற்றியூர்க் கரைசே.
- கரைபடா வஞ்சப் பவக்கடல் உழக்கும் கடையனேன் நின்திரு வடிக்கு
- விரைபடா மலர்போல் இருந்துழல்கின்றேன்வெற்றனேன் என்செய விரைகேன்
- திரைபடாக் கருணைச் செல்வவா ரிதியே திருவொற்றி யூர்வளர் தேனே
- உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற் கினியநல் அமுதே.
- நாட நல்இசை நல்கிய மூவர்தம்
- பாடல் கேட்கும்ப டம்பக்க நாதரே
- வாடல் என்றொரு மாணிக் களித்தநீர்
- ஈடில் என்னள வெங்கொளித் திட்டிரோ.
- மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
- வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
- கன்றின் அயர்ந்தழும்என் கண்ர் துடைத்தருள
- என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
- மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
- தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
- பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
- என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
- பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
- துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
- நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
- இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
- வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
- அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
- இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
- எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
- ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
- பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
- மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
- துக்க மியாவையும் தூர ஓடுமே.
- தம்ப லம்பெறும் தைய லார்கணால்
- வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
- அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
- செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
- செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
- உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
- மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
- பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
- மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
- ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
- பாலை சேர்படம் பக்க நாதர்தம்
- காலை நாடிநற் கதியின் நிற்பையே.
- துங்க வெண்பொடி அணிந்துநின் கோயில்
- தொழும்பு செய்துநின் துணைப்பதம் ஏத்திச்
- செங்கண் மால்அயன் தேடியும் காணாச்
- செல்வ நின்அருள் சேர்குவ தென்றோ
- எங்கள் உள்ளுவந் தூறிய அமுதே
- இன்ப மேஇமை யான்மகட் கரசே
- திங்கள் தங்கிய சடையுடை மருந்தே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
- காமன் வெந்திடக் கண்விழித் தவனே
- தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
- சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
- நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
- நாத னேசிவ ஞானிகட் கரசே
- செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
- மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
- ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
- யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
- நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
- நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
- சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- நாட்டும் முப்புரம் நகைத்தெரித் தவனே
- நண்ணி அம்பலம் நடஞ்செயும் பதனே
- வேட்டு வெண்தலைத் தார்புனைந் தவனே
- வேடன் எச்சிலை விரும்பிஉண் டவனே
- கோட்டு மேருவைக் கோட்டிய புயனே
- குற்ற முங்குண மாக்குறிப் பவனே
- தீட்டும் மெய்ப்புகழ்த் திசைபரந் தோங்கத்
- திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
- உடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட
- ஒண்மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
- அடையாளம் என்னஒளிர் வெண்ற் றுக்கும்
- அன்பிலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ
- நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று
- நவில்கின்றேன் என்பாவி நாவைச் சற்றும்
- இடையாத கொடுந்தீயால் கடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- அருள்பழுக்கும் கற்பகமே அரசே முக்கண்
- ஆரமுதே நினைப்புகழேன் அந்தோ வஞ்ச
- மருள்பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை
- வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதியி லேனை
- வெருள்பழுக்கும் கடுங்காட்டில் விடினும் ஆற்று
- வெள்ளத்தில் அடித்தேக விடினும் பொல்லா
- இருள்பழுக்கும் பிலஞ்சேர விடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண்
- சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில்
- விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி
- வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை
- உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி
- உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல்
- எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி
- என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.
- மன்னும் கதிர்வேல் மகனா ரோடும் மலையா ளொடும்தான் வதிகின்ற
- துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கொன் றருளானேல்
- மின்னும் சூலப் படையான் விடையான் வெள்ளிமலையொன் றதுஉடையான்
- பின்னும் சடையான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- வெற்றிப் படைவேல் பிள்ளை யோடும் வெற்பா ளொடும்தான் அமர்கின்ற
- மற்றிக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கொன் றருளானேல்
- கற்றைச் சடையான் கண்மூன் றுடையான் கரியோன் அயனும் காணாதான்
- பெற்றத் திவர்வான் ஒற்றித் தியாகப் பெருமான் பிச்சைப் பெருமானே.
- சண்ட வெம்பவப் பிணியினால் தந்தை
- தாயி லார்எனத் தயங்குகின் றாயே
- மண்ட லத்துழல் நெஞ்சமே சுகமா
- வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
- ஒண்த லத்திரு ஒற்றியூர் இடத்தும்
- உன்னு கின்றவர் உள்ளகம் எனும்ஓர்
- தண்த லத்தினும் சார்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- விடங்கொள் கண்ணினார் அடிவிழுந் தையோ
- வெட்கி னாய்இந்த விதிஉனக் கேனோ
- மடங்கொள் நெஞ்சமே நினக்கின்று நல்ல
- வாழ்வு வந்தது வருதிஎன் னுடனே
- இடங்கொள் பாரிடை நமக்கினி ஒப்பா
- ரியார்கண் டாய்ஒன்றும் எண்ணலை கமலத்
- தடங்கொள் ஒற்றியூர் அமர்ந்தநம் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- மோக மாதியால் வெல்லும்ஐம் புலனாம்
- மூட வேடரை முதலற எறிந்து
- வாகை ஈகுவன் வருதிஎன் னுடனே
- வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
- போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
- போற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
- சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
- தந்தை யார்அடிச் சரண்புக லாமே.
- ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம்
- அழிவில் இன்பமுற் றருகிருக் கின்றார்
- வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய
- வீண னேன்இங்கு வீழ்கதிக் கிடமாய்
- வைய வாழ்க்கையின் மயங்குகின் றனன்மேல்
- வருவ தோர்ந்திலன் வாழ்வடை வேனோ
- செய்ய வண்ணனே ஒற்றியம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- இருக்க வாவுற உலகெலாம் உய்ய
- எடுத்த சேவடிக் கெள்ளள வேனும்
- உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன்
- ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே
- தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில்
- தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண்
- திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- எண்பெ றாவினைக் கேதுசெய் உடலை
- எடுத்த நாள்முதல் இந்தநாள் வரைக்கும்
- நண்பு றாப்பவம் இயற்றினன் அல்லால்
- நன்மை என்பதோர் நாளினும் அறியேன்
- வண்பெ றாவெனக் குன்திரு அருளாம்
- வாழ்வு நேர்ந்திடும் வகைஎந்த வகையோ
- திண்பெ றாநிற்க அருள்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர்
- விடுத்தி டார்அந்த வெறியது தீரும்
- நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே
- நீயும் அப்படி நீசனேன் தனக்குப்
- பொறிபி டித்தநல் போதகம் அருளிப்
- புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும்
- செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே
- தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.
- வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
- செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
- கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
- எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.
- நேரிசை வெண்பா
- பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
- அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
- தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
- மேலானை நெஞ்சே விரும்பு.
- திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
- புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
- ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
- வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
- ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
- வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
- கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
- தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
- வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
- உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
- திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே.
- பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா
- கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப்
- பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ
- பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே.
- பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே
- வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன்
- மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின்
- சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.
- இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே
- தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே
- வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத்
- தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.
- சுந்தரர்க் காகமுன் தூதுசென் றானைத்
- தூயனை யாவரும் சொல்லரி யானைப்
- பந்தம்அ றுக்கும்ப ராபரன் தன்னைப்
- பத்தர்உ ளங்கொள்ப ரஞ்சுட ரானை
- மந்தர வெற்பின்ம கிழ்ந்தமர்ந் தானை
- வானவர் எல்லாம்வ ணங்கநின் றானை
- எந்தமை ஆண்டுநல் இன்பளித் தானை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- வெள்விடை மேல்வரும் வீறுடை யானை
- வேதமு டிவினில் வீற்றிருந் தானைக்
- கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக்
- கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை
- உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை
- உலகுடை யானைஎன் உற்றது ணையை
- எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை
- இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
- அணிகொள் கோவணக் கந்தையே நமக்கிங்
- கடுத்த ஆடைஎன் றறிமட நெஞ்சே
- கணிகொள் மாமணிக் கலன்கள்நம் கடவுள்
- கண்ணுண் மாமணிக் கண்டிகை கண்டாய்
- பிணிகொள் வன்பவம் நீக்கும்வெண்ணீறே
- பெருமைச் சாந்தமாம் பிறங்கொளி மன்றில்
- திணிகொள் சங்கர சிவசிவ என்று
- சென்று வாழ்த்தலே செய்தொழி லாமே.
- இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய்
- என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே
- பலவு வாழைமாக் கனிகனிந் திழியும்
- பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- நிலவு வெண்மதிச் சடையுடை அழகர்
- நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர்
- குலவு கின்றனர் வேண்டிய எல்லாம்
- கொடுப்பர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே.
- காலம் செல்கின்ற தறிந்திலை போலும்
- காலன் வந்திடில் காரியம் இலைகாண்
- நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில்
- நிமிர்ந்த வெண்நெருப் பேந்திய நிமலர்
- ஏலம் செல்கின்ற குழலிஓர் புடையார்
- இருக்கும் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி
- ஞாலம் செல்கின்ற துயர்கெட வரங்கள்
- நல்கு வார்அவை நல்குவன் உனக்கே.
- உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
- உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
- வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
- வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
- தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
- சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
- எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
- இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
- தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
- ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
- இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
- சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
- சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
- ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
- வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
- சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
- தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
- இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
- யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
- குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அமைவ றிந்திடா ஆணவப் பயலே
- அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
- எமைந டத்துவோன் ஈதுண ராமல்
- இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
- கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
- கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
- உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கருமை யாம்அகங் காரமர்க் கடவா
- கடைய னேஉனைக் கலந்தத னாலே
- அருமை யாகநாம் பாடினோம் கல்வி
- அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
- இருமை இன்பமும் பெற்றனம் என்றே
- எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
- ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அண்டனை எண்தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல
- கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதிநின் றேத்தா
- மிண்டரைப் பின்றா வெளிற்றரைவலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக்
- குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.
- ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
- வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
- இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
- விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
- விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
- மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
- அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
- படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
- அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
- சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
- வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
- நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
- அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
- சுணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் உண் டாங்கொலோ அறியேன்
- கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
- உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.
- மணித்தலை நாகம் அனையவெங் கொடியார் வஞ்சக விழியினால்மயங்கிப்
- பிணித்தலைக் கொண்டு வருந்திநின் றுழலும்பேதையேற்குன்னருள் உளதோ
- கணித்தலை அறியாப் பேர்ஒளிக்குன்றே கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
- அணித்தலை அடியர்க் கருள்திரு வொற்றி அப்பனே செப்பரும்பொருளே.
- ஒப்பிலாய் உனது திருவருள் பெறுவான் உன்னிநை கின்றனன் மனமோ
- வெப்பில் ஆழ்ந்தெனது மொழிவழி அடையா வேதனைக் கிடங்கொடுத்துழன்ற
- இப்பரி சானால் என்செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள்கிடைக்கும்
- துப்புர வொழிந்தோர் உள்ளகத்தோங்கும் சோதியே ஒற்றியூர்த்துணையே.
- துணையிலேன் நினது திருவடி அல்லால் துட்டனேன் எனினும் என் தன்னை
- இணையிலாய் உனது தொண்டர்தம் தொண்டன் எனச்செயல் நின்அருள் இயல்பே
- அணையிலா தன்பர் உள்ளகத் தோங்கும் ஆனந்த வெள்ளமே அரசே
- பணையில்வா ளைகள்பாய் ஒற்றியம் பதியில் பரிந்தமர்ந் தருள்செயும் பரமே.
- வாழ்வது நின்றன் அடியரோ டன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன்
- தாழ்வது நினது தாட்கலான் மற்றைத் தாட்கெலாம் சரண் எனத் தாழேன்
- சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன் தன்னை
- ஆள்வது கருதின் அன்றிஎன் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.
- தக்க தறியேன் வெறியேன்நான் சண்ட மடவார் தம்முலைதோய்
- துக்கம் அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன்எனில்
- மிக்க அடியார் என்சொல்லார் விண்ணோர் மண்ணோர் என்புகலார்
- செக்கர் நிறத்துப் பொன்மேனித் திருநீற் றொளிசேர் செங்கரும்பே.
- முத்தி முதலே முக்கணுடை மூரிக் கரும்பே நின்பதத்தில்
- பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ
- எத்தி அழைக்கும் கருங்கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பதனில்
- தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்ற தென்மனமே.
- பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம்
- கருமவாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன்
- தருமவா ரிதியே தடம்பணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே
- துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே.
- இறையும்நின் திருத்தாள் கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக்
- குறையும்வெண் மதிபோல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறுங்குழி அளற்றில்
- பொறையும் நல் நிறையும் நீத்துழன் றலைந்தேன் பொய்யனேன் தனக்குவெண் சோதி
- நிறையும்வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.
- நெறியிலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும்
- பொறியிலேன் பிழையைப் பொறுப்பதுன் கடனே பொறுப்பதும் அன்றிஇவ் வுலக
- வெறியிலே இன்னும் மயங்கிடா துன்தன் விரைமலர் அடித்துணை ஏத்தும்
- அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள்ளறுத் தவனே.
- பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
- மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
- உன்னாசை கொண்டேஎன் ஒற்றியப்பா நான்மகிழ்ந்துன்
- மின்னாரும் பொன்மேனி வெண்ற்றைப் பாரேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
- கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
- உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
- நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
- கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
- ஒன்றுமனத் துள்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.
- பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
- வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
- உய்யற் கருள்செய்யும் ஒற்றியப்பா உன்அடிசேர்
- மெய்யர்க் கடிமை செய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.
- குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால்
- செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான் செப்புதல் மறந்தனன் அதனால்
- விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே மென்கரும் பீன்றவெண் முத்தம்
- தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் அன்றே.
- வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
- மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம்
- செல்லு கின்றன ஐயவோ சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
- தூர நின்றனை ஈரமில் லார்போல்
- புல்லு கின்றசீர் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
- பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
- உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
- என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
- கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
- சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
- விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
- அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.
- வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
- விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
- மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
- வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
- தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
- சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
- உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
- ஒற்றி மேவிய உலகுடை யோனே.
- சற்றும்நற் குணந்தான் சார்ந்திடாக் கொடியார் தந்தலை வாயிலுள் குரைக்கும்
- வெற்றுநாய் தனக்கும் வேறுநா யாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை
- அற்றுநின் றவர்க்கும் அரியநின் திருத்தாட் கடிமைசெய் தொழுகுவ னேயோ
- கற்றுமுற் றுணர்ந்தோர்க் கருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணையங்கடலே.
- உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம்
- ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே
- கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன்
- கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன்
- இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே
- இன்ப வெள்ளமே என்னுடை உயிரே
- திலக மேதிரு ஒற்றிஎம் உறவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- தந்தை தாய்மனை மக்கள்என் றுலகச்
- சழக்கி லேஇடர் உழக்கும்என் மனந்தான்
- கந்த வாதனை இயற்றுகின் றதுகாண்
- கடைய னேன்செயக் கடவதொன் றறியேன்
- எந்தை யேஎனை எழுமையும் தொடர்ந்த
- இன்ப வெள்ளமே என்உயிர்க் குயிரே
- சிந்தை ஓங்கிய ஒற்றிஎந் தேவே
- செல்வ மேபர சிவபரம் பொருளே.
- மாலை ஒன்றுதோள் சுந்தரப் பெருமான்
- மணத்தில் சென்றவண் வழக்கிட்ட தெனவே
- ஓலை ஒன்றுநீர் காட்டுதல் வேண்டாம்
- உவந்து தொண்டன்என் றுரைப்பிரேல் என்னை
- வேலை ஒன்றல மிகப்பல எனினும்
- வெறுப்பி லாதுளம் வியந்துசெய் குவன்காண்
- சோலை ஒன்றுசீர் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- பூதம் நும்படை எனினும்நான் அஞ்சேன்
- புதிய பாம்பின்பூண் பூட்டவும் வெருவேன்
- பேதம் இன்றிஅம் பலந்தனில் தூக்கும்
- பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன்
- ஏதம் எண்ணிடா தென்னையும் தொழும்பன்
- என்று கொள்விரேல் எனக்கது சாலும்
- சூத ஒண்பொழில் ஒற்றியூர் உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- உப்பி டாதகூழ் இடுகினும் உண்பேன்
- உவந்திவ் வேலையை உணர்ந்துசெய் எனநீர்
- செப்பி டாமுனம் தலையினால் நடந்து
- செய்ய வல்லன்யான் செய்யும்அப் பணிகள்
- தப்பி டாததில் தப்பிருந் தென்னைத்
- தண்டிப் பீர்எனில் சலித்துளம் வெருவேன்
- துப்பி டாஎனக் கருள்ஒற்றி உடையீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- ஆலம் உண்டநீர் இன்னும்அவ் வானோர்க்
- கமுது வேண்டிமா லக்கடல் கடைய
- ஓல வெவ்விடம் வரில்அதை நீயே
- உண்கென் றாலும்நும் உரைப்படி உண்கேன்
- சாலம் செய்வது தகைஅன்று தருமத்
- தனிப்பொற் குன்றனீர் சராசரம் நடத்தும்
- சூல பாணியீர் திருவொற்றி நகரீர்
- தூய மால்விடைத் துவசத்தி னீரே.
- வெண்மை நெஞ்சினேன் மெய்என்ப தறியேன்
- விமல நும்மிடை வேட்கையும் உடையேன்
- உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை
- உவரி வீழ்வனேல் உறுதிமற் றறியேன்
- கண்மை உள்ளவர் பாழ்ங்குழி வீழக்
- கண்டி ருப்பது கற்றவர்க் கழகோ
- நண்மை ஒற்றியீர் திருச்சிற்றம் பலத்துள்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர்
- ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும்
- பரந்த நீரிடை நின்றழு வானேல்
- பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ
- கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன்
- கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ
- நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர்
- ஞான நாடகம் நவிற்றுகின் றீரே.
- விதிஇழந்த வெண்தலைகொள் வித்தகனே வேதியனே
- மதிஇழந்தோர்க் கேலா வளர்ஒற்றி வானவனே
- நிதிஇழந்தோர் போல்அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப்
- பதிவிரும்பி வாடும்இந்தப் பாவிமுகம் பாராயோ.
- என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்
- என்செய் வேன்எனை என்செய நினைக்கேன்
- முன்பி றப்பிடை இருந்தசே டத்தால்
- மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே
- அன்பி றந்தவெங் காமவேட் டுவனால்
- அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன்
- வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர்
- வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே.
- வேதிய னேவெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே
- நீதிய னேமன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும்
- ஆதிய னேஎமை ஆண்டவ னேமலை யாள்மகிழும்
- பாதிய னேஎம் பராபர னேமுக்கட் பண்ணவனே.
- பண்ணவ னேபசு பாசத்தை நீக்கும் பரம்பரனே
- மண்ணவ னேனை மகிழ்ந்தவ னேமலம் மாற்றுகின்ற
- விண்ணவ னேவெள் விடையவ னேவெற்றி மேவுநெற்றிக்
- கண்ணவ னேஎனைக் காத்தவ னேஒற்றிக் காவலனே.
- எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி
- ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான்
- வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு
- விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல
- இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும்
- எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன்
- அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில்
- அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ.
- உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
- எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
- வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
- வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே.
- எளியேன் இழைத்த பெறும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
- களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
- ஒளியே முக்கட் செழுங்கரும்பே ஒன்றே அன்பர் உறவேநல்
- அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே.
- எண்ணா தெளியேன் செயும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கெனையாள்வ
- தண்ணா நினது கடன்கண்டாய் அடியேன் பலகால் அறைவதென்னே
- கண்ணார் நுதற்செங் கரும்பேமுக் கனியே கருணைக் கடலேசெவ்
- வண்ணா வெள்ளை மால்விடையாய் மன்றா டியமா மணிச்சுடரே.
- எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
- களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
- வெளியேன் வெறியேன்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
- அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- முன்னேசெய் வெவ்வினைதான் மூண்டதுவோ அல்லதுநான்
- இன்னே பிழைதான் இயற்றியதுண் டோஅறியேன்
- பொன்னேர் புரிசடைஎம் புண்ணியனே என்நோயை
- அன்னேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இப்பா ரிடைஉனையே ஏத்துகின்ற நாயேனை
- வெப்பார் உளத்தினர்போல் வெம்மைசெயும் வெம்பிணியை
- எப்பா லவர்க்கும் இறைவனாம் என்அருமை
- அப்பாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- ஓவா மயல்செய் உலகநடைக் குள்துயரம்
- மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய்ந்நோயைச்
- சேவார் கொடிஎம் சிவனே சிவனேயோ
- ஆவாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- பொய்யாம் மலஇருட்டுப் பொத்தரிடை வீழ்ந்துழலும்
- கையாம் நெறியேன் கலங்கவந்த வெம்பிணியை
- மையார் மிடற்றெம் மருந்தே மணியேஎன்
- ஐயாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இம்மா நிலத்தில் இடருழத்தல் போதாதே
- விம்மா அழுங்கஎன்றன் மெய்உடற்றும் வெம்பிணியைச்
- செம்மான் மழுக்கரங்கொள் செல்வச் சிவமேஎன்
- அம்மாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- புரைசேரும் நெஞ்சப் புலையனேன் வன்காமத்
- தரைசேரும் துன்பத் தடங்கடலேன் வெம்பிணியை
- விரைசேரும் கொன்றை விரிசடையாய் விண்ணவர்தம்
- அரைசேநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- இத்தா ரணியில் எளியோரைக் கண்டுமி
- வித்தாரம் பேசும் வெறியேன்தன் மெய்ப்பிணியைக்
- கொத்தார் குழலிஒரு கூறுடைய கோவேஎன்
- அத்தாநீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே.
- முன்னை நான்செய்த வல்வினை இரண்டின்
- முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில்
- என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி
- இந்த நாள்மட்டும் இருள் என்ப தல்லால்
- பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப்
- பேச என்னுளம் கூசுகின் றதுகாண்
- உன்னை நம்பினேன் நின்குறிப் புணரேன்
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
- உண்மை அன்றென உணர்த்தியும் எனது
- பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
- பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
- வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
- வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
- ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
- ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.
- கல்லை வெல்லவும் வல்லஎன் மனந்தான்
- கடவுள் நின்அடிக் கமலங்கள் நினைத்தல்
- இல்லை நல்லைநின் அருள்எனக் கதனால்
- இல்லை இல்லைநீ இரக்கம்இல் லாதான்
- அல்லை இல்லையால் அருள்தரா திருத்தல்
- அடிய னேன்அள வாயின்இங் கிடர்க்கே
- எல்லை இல்லைஎன் றுளம்பதைக் கின்றேன்
- என்செய் கேன்நர கிடைஇடும் போதே.
- தம்பி ரான்தய விருக்கஇங் கெனக்கோர்
- தாழ்வுண் டோஎனத் தருக்கொடும் இருந்தேன்
- எம்பி ரான்நினக் கேழையேன் அளவில்
- இரக்கம் ஒன்றிலை என்என்ப தின்னும்
- நம்பி ரான்என நம்பிநிற் கின்றேன்
- நம்பும் என்றனை வெம்பிடச் செயினும்
- செம்பி ரான்அருள் அளிக்கினும் உனது
- சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே.
- இகழ்ந்திடேல் எளியேன் தன்னைநீ அன்றி
- ஏன்றுகொள் பவரிலை அந்தோ
- அகழ்ந்தென துளத்தைச் சூறைகொண் டலைக்கும்
- அஞரெலாம் அறுத்தருள் புரிவாய்
- புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப்
- பொருப்பினும் பொதுவினும் நிறைந்து
- திகழ்ந்தருள் பழுக்கும் தெய்வதத் தருவே
- செல்வமே சிவபரம் பொருளே.
- ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
- பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
- வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
- கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.
- உலகுயிர் தொறும்நின் று‘ட்டுவித் தாட்டும் ஒருவனே உத்தம னேநின்
- இலகுமுக் கண்ணும் காளகண் டமும்மெய் இலங்குவெண்ணீற்றணி எழிலும்
- திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள் சேரிடப் பாலுங்கண் டடியேன்
- கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே.
- வைய நாயக வானவர் நாயக
- தையல் நாயகி சார்ந்திடும் நாயக
- உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
- வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
- கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர்
- எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே
- இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல்
- தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
- அப்பார் மலர்ச்சடை ஆரமு தேஎன் அருட்டுணையே
- துப்பார் பவள மணிக்குன்ற மேசிற் சுகக்கடலே
- வெப்பார் தருதுய ரால்மெலி கின்றனன் வெற்றடியேன்
- இப்பார் தனில்என்னை அப்பாஅஞ் சேல்என ஏன்றுகொள்ளே.
- விரிதுய ரால்தடு மாறுகின் றேன்இந்த வெவ்வினையேன்
- பெரிதுய ராநின்ற நல்லோர் அடையும்நின் பேரருள்தான்
- அரிதுகண் டாய்அடை வேன்எனல் ஆயினும் ஐயமணிப்
- புரிதுவர் வார்சடை யாய்நீ உவப்பில் புரியில்உண்டே.
- வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
- உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
- தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
- கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.
- அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
- நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
- பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
- வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.
- திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
- குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
- பொருவில் அன்னையும் போக்கறு தந்தையும்
- தரும வெள்விடைச் சாமிநின் நாமமே.
- நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
- வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
- பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
- ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
- குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற் கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்
- படிகொள் நடையில் பரதவிக்கும் பாவி யேனைப் பரிந்தருளிப்
- பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்த பொன்னே உன்னைப் போற்றிஒற்றிக்
- கடிகொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மா றறியேன் கடையேனே.
- திருவண்ண நதியும்வளை ஒருவண்ண மதியும்வளர்
- செவ்வண்ணம் நண்ணுசடையும்
- தெருள்வண்ண நுதல்விழியும் அருள்வண்ண வதனமும்
- திகழ்வண்ண வெண்ணகையும்ஓர்
- மருவண்ண மணிகுவளை மலர்வண்ண மிடறும்மலை
- மகள்வண்ண மருவும்இடமும்
- மன்வண்ண மிகுதுணைப் பொன்வண்ண அடிமலரும்
- மாணிக்க வண்ணவடிவும்
- இருவண்ண மாம்என்மன தொருவண்ணம் ஆகியே
- இடையறா தெண்ணும்வண்ணம்
- எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்றிவண்
- இயம்பல்உன் கருணைவண்ணம்
- கருவண்ணம் அறஉளம் பெருவண்ணம் உறநின்று
- கடல்வண்ணன் எண்ணும்அமுதே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எண்ணுறுவி ருப்பாதி வல்விலங் கினமெலாம்
- இடைவிடா துழலஒளிஓர்
- எள்அளவும் இன்றிஅஞ் ஞானஇருள் மூடிட
- இருண்டுயிர் மருண்டுமாழ்க
- நண்ணுமன மாயையாம் காட்டைக் கடந்துநின்
- ஞானஅருள் நாட்டைஅடையும்
- நாள்எந்த நாள்அந்த நாள்இந்த நாள்என்று
- நாயினேற் கருள்செய்கண்டாய்
- விண்ணுறுசு டர்க்கெலாம் சுடர்அளித் தொருபெரு
- வெளிக்குள்வளர் கின்றசுடரே
- வித்தொன்றும் இன்றியே விளைவெலாம் தருகின்ற
- விஞ்ஞான மழைசெய்முகிலே
- கண்ணுறுநு தற்பெருங் கடவுளே மன்றினில்
- கருணைநடம் இடுதெய்வமே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- பூதநெறி யாதிவரு நாதநெறி வரையுமாப்
- புகலுமூ வுலகுநீத்துப்
- புரையுற்ற மூடம்எனும் இருள்நிலம்அ கன்றுமேல்
- போய்அருள்ஒ ளித்துணையினால்
- வேதநெறி புகல்சகல கேவலம்இ லாதபர
- வெளிகண்டு கொண்டுகண்ட
- விளைவின்றி நான்இன்றி வெளிஇன்றி வெளியாய்
- விளங்குநாள் என்றருளுவாய்
- வாதநெறி நடவாத போதநெறி யாளர்நிறை
- மதிநெறிஉ லாவும்மதியே
- மணிமிடற் றரசேஎம் வாழ்வின்முத லேஅரு
- மருந்தேபெ ருந்தெய்வமே
- காதநெறி மணம்வீசு கனிதருபொ ழிற்குலவு
- கடிமதிற் றில்லைநகர்வாழ்
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- படமெடுத் தாடுமொரு பாம்பாக என்மனம்
- பாம்பாட்டி யாகமாயைப்
- பார்த்துக் களித்துதவு பரிசுடையர் விடயம்
- படர்ந்தபிர பஞ்சமாகத்
- திடமடுத் துறுபாம்பின் ஆட்டமது கண்டஞ்சு
- சிறுவன்யா னாகநின்றேன்
- தீரத்து ரந்தந்த அச்சந்த விர்த்திடு
- திறத்தன்நீ ஆகல்வேண்டும்
- விடமடுத் தணிகொண்ட மணிகண்ட னேவிமல
- விஞ்ஞான மாம்அகண்ட
- வீடளித் தருள்கருணை வெற்பனே அற்புத
- விராட்டுருவ வேதார்த்தனே
- கடமடுத் திடுகளிற் றுரிகொண்ட ணிந்தமெய்க்
- கடவுளே சடைகொள்அரசே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ
- எழுகடலி னும்பெரியவே
- என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா
- தெந்தைநினை ஏத்தஎன்றால்
- வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால்
- மயங்குகின் றேன்அடியனேன்
- மனம்எனது வசமாக நினதுவசம் நானாக
- வந்தறிவு தந்தருளுவாய்
- ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய
- உருவின்உரு வேஉருவினாம்
- உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின்
- உறவினுற வேஎம்இறையே
- களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள்
- கண்டஎண் தோள்கடவுளே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- சந்ததம்எ னக்குமகிழ் தந்தைநீ உண்டுநின்
- தன்னிடத் தேமவல்லி
- தாயுண்டு நின்அடியர் என்னும்நல் தமர்உண்டு
- சாந்தம்எனும் நேயர்உண்டு
- புந்திகொள்நி ராசையாம் மனைவிஉண் டறிவெனும்
- புதல்வன்உண் டிரவுபகலும்
- போனவிட முண்டருட் பொருளுமுண் டானந்த
- போகபோக் கியமும்உண்டு
- வந்தனைசெய் நீறெனும் கவசம்உண் டக்கமா
- மணியும்உண் டஞ்செழுத்தாம்
- மந்திரப் படைஉண்டு சிவகதிஎ னும்பெரிய
- வாழ்வுண்டு தாழ்வும்உண்டோ
- கந்தமிகு கொன்றையொடு கங்கைவளர் செஞ்சடைக்
- கடவுளே கருணைமலையே
- கனகஅம் பலநாத கருணையங் கணபோத
- கமலகுஞ் சிதபாதனே.
- போற்றிஎன் உயிர்க்கோர் இன்பமே அன்பர்
- புரிதவக் காட்சியே போற்றி
- போற்றிஎன் அன்பாம் தெய்வமே சைவம்
- புகல்சிவ போகமே போற்றி
- போற்றிஎன் பெரிதாஞ் செல்வமே கருணைப்
- பூரண வெள்ளமே போற்றி
- போற்றிஎன் வாழ்வுக் கொருபெரு முதலே
- போற்றிநின் சேவடிப் போதே.
- தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
- கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
- பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
- எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே.
- உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
- வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
- கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
- தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே.
- திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
- உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
- தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
- இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
- அடியேன் முடுகிச் செயும்பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோஇக்
- கொடியேன் நினக்குந்தொறும்உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன்
- செடியேன் மனமோ வினையோநின் செயலோ செய்கை தெரியேன்வெண்
- பொடியே திகழும் வடிவுடையாய் யாது புரிவேன் புலையேனே.
- ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
- நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
- ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
- வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.
- நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
- பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
- எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
- தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.
- சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
- விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
- தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
- தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
- சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காய் இலைநல்ல சோமன்இல்லை
- பாடில்லை கையிற் பணமில்லை தேகப் பருமன்இல்லை
- வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகமது
- நாடில்லை நீநெஞ்ச மேஎந்த ஆற்றினில் நண்ணினையே.
- நேரிசை வெண்பா
- சங்கரா முக்கட் சயம்புவே தாழ்சடைமேல்
- பொங்கராத் திங்கள் பொலிந்தோனே - வெங்கரா
- வாய்நின்று பிள்ளை வரப்பாடும் வன்தொண்டர்க்
- காய்நின்று சந்துரைத்த தார்.
- விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
- விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
- நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
- நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
- எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
- இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
- பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
- தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
- கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
- கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
- அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
- அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
- படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
- பரம ராசியப் பரம்பரப் பொருளே.
- திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
- சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
- கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
- கன்மனக் குரங்கனேன் அந்தோ
- வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
- விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
- மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
- வள்ளலே என்பெரு வாழ்வே.
- செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
- செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
- அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
- அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
- சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
- சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
- வம்பவிழ்மென் குழல்ஒருபால் விளங்க ஓங்கும்
- மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.
- மின்னைப் போல்இடை மெல்இய லார்என்றே
- விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
- பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
- புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
- தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
- சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
- என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
- இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே.
- உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த தெள்ளமுதே உடையாய் வஞ்ச
- நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
- வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ விடுதியேல் வேறென் செய்கேன்
- தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே.
- வேம்புக்கும் தண்ணிய நீர்விடு கின்றனர் வெவ்விடஞ்சேர்
- பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
- வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
- தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே.
- பொன்னை உடையார் மிகுங்கல்விப் பொருளை உடையார் இவர்முன்னே
- இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ் வேழை படும்பா டறிந்திருந்தும்
- மின்னை நிகரும் சடைமுடியீர் விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
- என்னை உடையீர் வெள்விடையீர் என்னே இரங்கி அருளீரே.
- வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும்
- பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர்
- உள்ளங்கொண் டோங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன்
- கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே.
- ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
- அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
- பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
- விழியாய் விழியாய் வினைதூள் படவே.
- வெண்துறை
- வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
- விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
- கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
- கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
- துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
- துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
- எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
- ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.
- உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
- உண்ண வோஉண வுக்கும் வழியிலை
- படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
- பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
- எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
- கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
- விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
- வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
- தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே.
- நேரிசை வெண்பா
- திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
- திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
- பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
- பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
- ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
- உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
- தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
- சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
- வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
- மனம டங்குசிற் கனந டந்தரும்
- உரமு றும்பதம் பெறவ ழங்குபே
- ரொளிந டந்தரும் வெளிவி டந்தரும்
- பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
- பரம மாகியே பரவு மாமறைச்
- சிரமு றும்பரம் பரசி தம்பரம்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- அருள்அ ளித்துமெய் யன்பர் தம்மைஉள்
- ளங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
- பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
- புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
- வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
- வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
- தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
- சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
- உலகின்உயிர் வகைஉவகை யுறஇனிய அருளமுதம்
- உதவும்ஆ னந்த சிவையே
- உவமைசொல அரியஒரு பெரியசிவ நெறிதனை
- உணர்த்துபே ரின்ப நிதியே
- இலகுபர அபரநிலை இசையும்அவ ரவர்பருவம்
- இயலுற உளங்கொள் பரையே
- இருமைநெறி ஒருமையுற அருமைபெறு பெருமைதனை
- ஈந்தெனை அளித்த அறிவே
- கலகமுறு சகசமல இருளகல வெளியான
- காட்சியே கருணை நிறைவே
- கடகரட விமலகய முகஅமுதும் அறுமுகக்
- கநஅமுதும் உதவு கடலே
- அலகில்வளம் நிறையும்ஒரு தில்லையம் பதிமேவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- பவமான எழுகடல் கடந்துமேற் கதியான
- பதிநிலை அணைந்து வாழப்
- பகலான சகலமுடன் இரவான கேவலப்
- பகையுந் தடாத படிஓர்
- தவமான கலனில்அருள் மீகாம னால்அலது
- தமியேன் நடத்த வருமோ
- தானா நடக்குமோ என்செய்கேன் நின்திருச்
- சரணமே சரணம் அருள்வாய்
- உவமான மற்றபர சிவமான சுத்தவெளி
- உறவான முத்தர் உறவே
- உருவான அருவான ஒருவான ஞானமே
- உயிரான ஒளியின் உணர்வே
- அவமான நீக்கிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- வெவ்வினைக் கீடான காயம்இது மாயம்என
- வேத முதல்ஆ கமம்எலாம்
- மிகுபறைஅ றைந்தும்இது வெயில்மஞ்சள் நிறம்எனும்
- விவேகர் சொற்கேட் டறிந்தும்
- கவ்வைபெறு கடலுலகில் வைரமலை ஒத்தவர்
- கணத்திடை இறத்தல் பலகால்
- கண்ணுறக் கண்டும்இப் புலைஉடலின் மானம்ஓர்
- கடுஅளவும் விடுவ தறியேன்
- எவ்வம்உறு சிறியனேன் ஏழைமதி என்னமதி
- இன்னமதி என்று ணர்கிலேன்
- இந்தமதி கொண்டுநான் எந்தவகை அழியாத
- இன்பநிலை கண்டு மகிழ்வேன்
- அவ்வியம்அ கற்றிஅருள் தில்லையம் பதிமருவும்
- அண்ணலார் மகிழும் மணியே
- அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி
- வானந்த வல்லி உமையே.
- நானது வாகு மருந்து - பர
- ஞான வெளியில் நடிக்கு மருந்து
- மோந வடிவா மருந்து - சீவன்
- முத்த ருளத்தே முடிக்கு மருந்து. - நல்ல
- அம்பலத் தாடு மருந்து - பர
- மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
- எம்பல மாகு மருந்து - வேளூர்
- என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. - நல்ல
- கரும்பி லினிக்கு மருந்து - கடுங்
- கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
- இரும்பைக் குழைக்கு மருந்து - பே
- ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து. - நல்ல
- தன்னையறிந் தின்பமுற வெண்ணிலா வே - ஒரு
- தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலா வே.
- நாதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - அங்கே
- நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலா வே - நானுந்
- தாழ்ந்துவிழ வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- இராப்பகலில் லாவிடத்தே வெண்ணிலா வே - நானும்
- இருக்கவெண்ணி வாடுகின்றேன் வெண்ணிலா வே.
- தேசுநிற மாய்நிறைந்த வெண்ணிலா வே - நானுஞ்
- சிவமயம தாய்விழைந்தேன் வெண்ணிலா வே.
- போதநடு வூடிருந்த வெண்ணிலா வே - மலப்
- போதமற வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- ஆருமறி யாமலிங்கே வெண்ணிலா வே - அரு
- ளாளர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
- அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
- ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
- வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
- வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.
- குண்டலிப்பால் நின்றிலங்கும் வெண்ணிலா வே - அந்தக்
- குண்டலிப்பால் வேண்டுகின்றேன் வெண்ணிலா வே.
- ஆதியந்த மென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
- ஆதியந்த மாவதென்ன வெண்ணிலா வே.
- வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான்
- விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே.
- முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த
- மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே.
- நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
- ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
- ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை
- நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
- வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த
- வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே.
- ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே.
- ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது
- ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே.
- அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
- அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர்
- ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே.
- அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும்
- ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே.
- அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர்
- ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே.
- அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை
- ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
- முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
- முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்
- தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே
- தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந்
- திருவருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள்
- மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள்
- இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள்
- வெருவிஉட் குழைவாள் விழிகர் துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்என்றன் மின்னே.
- சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
- வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
- மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
- அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- என்குணத்தான் எல்லார்க்கும் இறைவன்எல்லாம் வல்லான்
- என்அகத்தும் புறத்தும்உளான் இன்பநட ராஜன்
- பெண்குணத்தை அறியாத இளம்பருவந் தனிலே
- பிச்சேற்றி மணம்புரிந்தான் பெரிதுகளித் திருந்தேன்
- வண்குணத்தால் அனுபவம்நான் அறியநின்ற பொழுதில்
- வந்தறியான் இன்பம்ஒன்றும் தந்தறியான் அவனும்
- வெண்குணத்தான் அல்லன்மிகு நல்லன்எனப் பலகால்
- விழித்தறிந்தும் விடுவேனோ விளம்பாய்என் தோழீ.
- வெறுத்துரைத்தேன் பிழைகளெலாம் பொறுத்தருளல் வேண்டும்
- விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய்
- கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய
- கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே
- மறுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி
- மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன்
- செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று
- சிந்திப்ப தல்லாமல் செய்வகைஒன் றிலனே.
- நாயகரே உமதுவசம் நான்இருக்கின் றதுபோல்
- நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே
- மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த
- வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன்
- தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார்
- சூழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே
- தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால்
- தீமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே.
- குற்றம்ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர்
- குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும்
- சற்றுமனம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது
- சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன்
- பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே
- பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்
- இற்றைதொடுத் தென்அளவில் வேறுநினை யாதீர்
- என்னுடைய நாயகரே என்ஆசை இதுவே.
- வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்ற் றழகர் விண்ணளவும்
- சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
- மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
- காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
- துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்ற் றழகர்அவர்
- கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
- பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
- கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
- பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
- வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
- குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
- மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
- வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
- ஆவென் றலறிக் கண்ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
- கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
- கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
- சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
- கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
- வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
- சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
- அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
- குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
- வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம்
- உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர்
- வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை
- விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே.
- அந்தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரமூன் றவைஅனலின்
- உந்தா நின்ற வெண்ணகையார் ஒற்றித் தியாகர் பவனிஇங்கு
- வந்தார் என்றார் அந்தோநான் மகிழ்ந்து காண வருமுன்னம்
- மந்தா கினிபோல் மனம்என்னை வஞ்சித் தவர்முன் சென்றதுவே.
- காது நடந்த கண்மடவாள் கடிமா மனைக்குக் கால்வருந்தத்
- தூது நடந்த பெரியவர்சிற் சுகத்தா ரொற்றித் தொன்னகரார்
- வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வாவென்றார்
- போது நடந்த தென்றேனெப் போது நடந்த தென்றாரே.
- வெற்றி யிருந்த மழுப்படையார் விடையார் மேரு வில்லுடையார்
- பெற்றி யிருந்த மனத்தர்தமுட் பிறங்குந் தியாகப் பெருமானார்
- சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார்
- ஒற்றி யிருமென் றுரைத்தேனோ னொற்றி யிருந்தே னென்றாரே.
- நாடொன் றியசீர்த் திருவொற்றி நகரத் தமர்ந்த நாயகனார்
- ஈடொன் றில்லா ரென்மனையுற் றிருந்தார் பூவுண் டெழில்கொண்ட
- மாடொன் றெங்கே யென்றேனுன் மனத்தி லென்றார் மகிழ்ந்தமர்வெண்
- காடொன் றுடையீ ரென்றேன்செங் காடொன் றுடையே னென்றாரே.
- கருதும் அவரை வெளிக்கிழுப்பார் காணா தெல்லாங் காட்டிநிற்பார்
- மருதில் உறைவார் ஒற்றிதனில் வதிவார் புரத்தை மலைவில்லால்
- பொருது முடிப்பார் போல்நகைப்பார் பூவுண் டுறங்கும் புதுவெள்ளை
- எருதில் வருவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும்
- வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை
- கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ
- டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே.
- அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
- வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
- கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
- கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
- வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
- பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
- குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
- உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்றிலரைச்
- செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே
- வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் வேளம் பதனால் மெலிகின்றேன்
- செயற்கை மடவாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே.
- வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார்
- வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து
- வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ
- உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார்
- வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர்
- கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ
- உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே.
- விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால்
- அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம்
- உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ
- இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு
- வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும்
- கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ
- எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே.
- ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை
- வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்
- சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ
- யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ.
- அற்புதப்பொன் அம்பலத்தே ஆகின்ற அரசே
- ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
- கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
- கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
- வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
- வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
- பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
- பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
- நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
- நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
- கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
- கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
- பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
- பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
- குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
- குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
- துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
- துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
- அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
- அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
- இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
- இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
- தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
- தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
- என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
- என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
- அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
- தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
- நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
- நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
- இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
- என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
- சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
- தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
- கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
- கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
- மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
- மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
- பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
- பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
- தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
- தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
- இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
- இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
- பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
- பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
- ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
- உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
- அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
- ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
- செஞ்சொலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
- திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
- எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
- இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
- துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
- துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
- ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
- ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
- வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
- மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
- ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
- ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
- நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
- நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
- உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
- உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
- இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
- இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
- கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
- களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
- அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
- ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
- ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத
- உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள்
- அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன்
- அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து
- களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த
- கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன்
- தௌவிண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில்
- தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே.
- மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
- மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
- குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
- கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
- கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
- கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
- பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
- பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
- துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
- சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள் வருந்தப்
- பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
- பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
- உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
- உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தமநின் னருளைப்
- பெரியபொரு னெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
- பின்னர்அறிந் தேன்இதற்கு முன்னர்அறி யேனே.
- வேதாந்த சித்தாந்தம் என்னும்அந்தம் இரண்டும்
- விளங்கஅமர்ந் தருளியநின் மெல்லடிகள் வருந்த
- நாதாந்த வெளிதனிலே நடந்தருளும் அதுபோல்
- நடந்தருளிக் கடைநாயேன் நண்ணும்இடத் தடைந்து
- போதாந்த மிசைவிளக்குந் திருமேனி காட்டிப்
- புலையேன்கை யிடத்தொன்று பொருந்தவைத்த பொருளே
- சூதாந்த மனைத்தினுக்கும் அப்பாற்பட் டிருந்த
- துரியவெளிக் கேவிளங்கும் பெரியஅருட் குருவே.
- புண்ணியர்தம் மனக்கோயில் புகுந்தமர்ந்து விளங்கும்
- பொன்மலர்ச்சே வடிவருத்தம் பொருந்தநடந் தெளியேன்
- நண்ணியஓர் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
- நற்பொருள்ஒன் றென்கைதனில் நல்கியநின் பெருமை
- எண்ணியபோ தெல்லாம்என் மனமுருக்கும் என்றால்
- எம்ப—ருமான் நின்அருளை என்னெனயான் புகல்வேன்
- தண்ணியவெண் மதிஅணிந்த செஞ்சடைநின் றாடத்
- தனித்தமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே.
- மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்
- மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
- பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து
- பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
- நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்
- நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
- நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை
- நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே .
- சூரியசந் திரரெல்லாந் தோன்றாமை விளங்கும்
- சுயஞ்சோதி யாகும்அடித் துணைவருந்த நடந்து
- கூரியமெய் அறிவென்ப தொருசிறிதுங் குறியாக்
- கொடியேன்நான் இருக்குமிடங் குறித்திரவில் நடந்து
- காரியம்உண் டெனக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில் ஒன்றை அளித்தனைஉன் கருணையைஎன் என்பேன்
- ஆரியர்தம் அளவுகடந் தப்பாலுங் கடந்த
- ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே .
- தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும்
- தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி
- எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிட•போந்
- தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப்
- பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
- புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய்
- சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே
- சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே
- கற்பனைகள் எல்லாம்போய்க் கரைந்ததலந் தனிலே
- கரையாது நிறைந்திருக் கழலடிகள் வருந்த
- வெற்பனையும் இன்றிஒரு தனியாக நடந்து
- விரைந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
- அற்பனைஓர் பொருளாக அழைத்தருளி அடியேன்
- அங்கையில்ஒன் றளித்தனைநின் அருளினைஎன் புகல்வேன்
- நற்பனவர் துதிக்கமணி மன்றகத்தே இன்ப
- நடம்புரியும் பெருங்கருணை நாயகமா மணியே .
- விடையமொன்றுங் காணாத வெளிநடுவே ஒளியாய்
- விளங்குகின்ற சேவடிகள் மிகவருந்த நடந்து
- கடையனையுங் குறிக்கொண்டு கருதுமிடத் தடைந்து
- கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுக்க
- இடையின்அது நான்மறுப்பு மறுக்கேல்என் மகனே
- என்றுபின்னுங் கொடுத்தாய்நின் இன்னருள்என் என்பேன்
- உடையபரம் பொருளேஎன் உயிர்த்துணையே பொதுவில்
- உய்யும்வகை அருள்நடனஞ் செய்யும்ஒளி மணியே.
- கருவிகளை நம்முடனே கலந்துளத்தே இயக்கிக்
- காட்டுவதொன் றக்கருவி கரணங்கள் அனைத்தும்
- ஒருவிஅப்பாற் படுத்திநமை ஒருதனியாக் குவதொன்
- றுபயம்எனப் பெரியர்சொலும் அபயபதம் வருந்தத்
- துருவிஅடி யேன்இருக்கும் இடத்திரவில் அடைந்து
- துணிந்தெனது கையில்ஒன்று சோதியுறக் கொடுத்து
- வெருவியிடேல் இன்றுமுதல் மிகமகிழ்க என்றாய்
- வித்தகிநின் திருவருளை வியக்கமுடி யாதே.
- உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவதொன் றாகி
- உற்றஅதன் வெளிப்புறத்தே ஓங்குவதொன் றாகிச்
- சின்மயமாய் விளங்குகின்ற திருவடிகள் வருந்தச்
- சிறுநாயேன் பொருட்டாகத் தெருவில்நடந் தருளிப்
- பொன்மயமாந் திருமேனி விளங்கஎன்பால் அடைந்து
- பொருள்ஒன்றென் கைதனிலே பொருந்தஅளித் தனையே
- நின்மலனே நின்னருளை என்புகல்வேன் பொதுவில்
- நிறைந்தஇன்ப வடிவாகி நிருத்தம்இடும் பதியே.
- இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
- எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
- உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
- உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்
- திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத்
- தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக்
- குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே
- குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே.
- உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய்
- உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய்
- அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும்
- அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து
- களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக்
- கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன்
- விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில்
- விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே.
- பூதவெளி கரணவெளி பகுதிவெளி மாயா
- போகவெளி மாமாயா யோகவெளி புகலும்
- வேதவெளி அபரவிந்து வெளிஅபர நாத
- வெளிஏக வெளிபரம வெளிஞான வெளிமா
- நாதவெளி சுத்தவெறு வெளிவெட்ட வெளியா
- நலில்கின்ற வெளிகளலாம் நடிக்கும்அடி வருந்த
- ஏதஎளி யேன்பொருட்டா நடந்தென்பால் அடைந்தே
- என்கையின்ஒன் றளித்தனைநின் இரக்கம்எவர்க் குளதே.
- வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த
- மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத்
- துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும்
- துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன்
- உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே
- உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய்
- வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே.
- சிறயவனேன் சிறுமையெலாம் திருவுளங்கொள் ளாதென்
- சென்னிமிசை அமர்ந்தருளும் திருவடிகள் வருந்தச்
- செறியிரவில் நடந்தணைந்து நானிருக்கு மிடத்தே
- தெருக்கதவந் திறப்பித்துச் சிறப்பின்எனை அழைத்துப்
- பிறிவிலதிங் கிதுதணைநீ பெறுகவெனப் பரிந்து
- பேசிஒன்று கொடுத்தாய்நின் பெருமையைஎன் என்பேன்
- பொறியினற வோர்துதிக்கப் பொதுவில்நடம் புரியும்
- பொருளேநின் அருளேமெய்ப் பொருள்எனத்தேர்ந் தனனே.
- என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே
- என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித்
- தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத்
- தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து
- மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல்
- வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம்
- உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய்
- ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே.
- முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த
- முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி
- எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ
- என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன்
- சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும்
- தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில்
- அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய்
- ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
- கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக்
- கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து
- மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து
- வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப்
- பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப்
- பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப்
- பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே.
- அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன்
- அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே
- வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும்
- இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும்
- விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா
- என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- அம்மான்நின் அருட்சத்தி அருமைஒன்றும் அறியேன்
- அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து
- வெம்மாயை அகற்றிஎனை அருகழைத்தென் கரத்தே
- மிகஅளித்த பெருங்கருணை விளக்கம்என்றன் மனமும்
- மைம்மாழை விழிகளும்விட் டகலாதே இன்னும்
- வதிகின்ற தாயினும்என் வஞ்சநெஞ்சம் உருகா
- எம்மாய நெஞ்சும்இதற் குருகல்அரி தலவே
- இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே.
- சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி
- சிவகம வல்லியொடு சிவபோக வடிவாய்
- மேலோடு கீழ்நடுவுங் கடந்தோங்கு வெளியில்
- விளங்கியநின் திருஉருவை உளங்கொளும்போ தெல்லாம்
- பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும்
- பசுநெய்யுங் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால்
- மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த
- வண்ணம்இந்த வண்ணம்என எண்ணவும்ஒண் ணாதே.
- காமசத்தி யுடன்களிக்கும் காலையிலே அடியேன்
- கனஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள்
- வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
- வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
- ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
- அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
- ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
- இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.
- அப்பாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருந்தவர்கள் விரும்பிமிக வருந்திஉளம் முயன்று
- இப்பாரில் இருந்திடவும் அவர்க்கருளான் மருளால்
- இவ்வுலக நடைவிழைந்து வெவ்வினையே புரிந்து
- எப்பாலும் இழிந்துமனத் திச்சைபுரி கின்றேன்
- எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி அடைந்து
- தப்பாத ஒளிவண்ணந் தந்தென்னை அளித்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
- கண்ணர நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
- கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
- எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
- எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
- தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
- அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
- மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருந்திடவும்
- வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
- பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
- புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
- சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
- தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
- ஒல்லும்வகை அறியாதே உன்னருளோ டூடி
- ஊறுபுகன் றேன்துயரம் ஆறும்வகை உணரேன்
- புல்லியனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
- பூதியணிந் தொளிர்கின்ற பொன்மேனிப் பெருமான்
- சொல்லியலும் பொருளியலும் கடந்தபர நாதத்
- துரியவெளிப் பொருளான பெரியநிலைப் பதியே
- மெல்லியல்நற் சிவகாம வல்லிகண்டு மகிழ
- விரியுமறை ஏத்தநடம் புரியும்அருள் இறையே.
- தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
- றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
- தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
- பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
- உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
- நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
- விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
- றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே.
- கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
- பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
- குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்தனி
- உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
- சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
- மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
- காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
- ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.
- நேரிசை வெண்பா
- உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
- கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
- வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
- விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
- நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
- பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
- வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
- இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
- அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
- வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
- திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
- உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
- குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
- வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
- துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
- வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
- வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
- எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
- உண்ணி லாவிய நின்திரு வுள்ளமும் உவகை167 யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
- வெண்ணி லாமுடிப் புண்ணியமூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
- உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
- கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
- திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
- இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே.
- அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
- கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
- வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
- கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே.
- கொள்உண்ட வஞ்சர்தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டுமேல்
- துள்உண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வெனும்ஓர்
- கள்உண்ட நாய்க்குன் கருணைஉண் டோநற் கடல்அமுதத்
- தெள்உண்ட தேவர் புகழ்தணி காசலச் சிற்பரனே.
- செங்கைஅம் காந்தன் அனையமின் னார்தம் திறத்துழன்றே
- வெங்கயம் உண்ட விளவாயி னேன்விறல் வேலினைஓர்
- அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில்பெற்ற
- மங்கை மகிழும் தணிகேச னேஅருள் வந்தெனக்கே.
- மின்னாளும் இடைமடவார் அல்கு லாய
- வெங்குழியில் வீழ்ந்தாழ்ந்து மெலிந்தேன் அல்லால்
- எந்நாளும் உனைப்போற்றி அறியேன் என்னே
- ஏழைமதி கொண்டேன்இங் கென்செய் கேனே
- அன்னாய்என அப்பாஎன் றரற்றும் அன்பர்க்
- காரமுதே அருட்கடலே அமரர் கோவே
- தன்னார்வத் தமர்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- வஞ்சகராம் கானின்இடை அடைந்தே நெஞ்சம்
- வருந்திஉறு கண்வெயிலால் மாழாந் தந்தோ
- தஞ்சம்என்பார் இன்றிஒரு பாவி நானே
- தனித்தருள்நீர்த் தாகம்உற்றேன் தயைசெய் வாயோ
- செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
- தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
- சஞ்சலம்நீத் தருள்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென்
- றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில்
- இளந்தளிர்போல் நலிந்திரந்திங் குழலும் இந்த
- ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே
- வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி
- மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலூர் மன்னே
- தளந்தரும்பூம் பொழில்தணிகை மணியே ஜீவ
- சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
- செல்லும் வாழ்க்கையில் தியங்க விட்டுநின்
- செய்ய தாள்துதி செய்தி டாதுழல்
- கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டுசெய்
- கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ
- சொல்லும் இன்பவான் சோதி யேஅருள்
- தோற்ற மேசுக சொருப வள்ளலே
- சல்லி யங்கெட அருள்செய் போரிவாழ்
- சாமி யேதிருத் தணிகை நாதனே.
- விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரைமலர்ப் பதம்போற்றேன்
- கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே
- விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே
- தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே.
- வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த
- நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே
- தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய்
- மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே.
- ஐய னேநினை அன்றி எங்கணும்
- பொய்ய னேற்கொரு புகல்இ லாமையால்
- வெய்ய னேன்என வெறுத்து விட்டிடேல்
- மெய்ய னேதிருத் தணிகை வேலனே.
- வள்ளல் உன்அடி வணங்கிப் போற்றஎன்
- உள்ளம் என்வசத் துற்ற தில்லையால்
- எள்ளல் ஐயவோ ஏழைஎன் செய்கேன்
- தள்ள ரும்பொழில் தணிகை வெற்பனே.
- வெற்ப னேதிருத் தணிகை வேலனே
- பொற்ப னேதிருப் போரி நாதனே
- கற்ப மேல்பல காலம் செல்லுமால்
- அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே.
- குறிக்கொள் அன்பரைக் கூடு றாதஇவ்
- வெறிக்கொள் நாயினை வேண்டி ஐயநீ
- முறிக்கொள் வாய்கொலோ முனிகொள் வாய்கொலோ
- நெறிக்கொள் வோர்புகழ் தணிகை நித்தனே.
- உள்ளம் நெக்குவிட் டுருகும் அன்பர்தம்
- நள்அ கத்தினில் நடிக்கும் சோதியே
- தள்அ ருந்திறல் தணிகை ஆனந்த
- வெள்ள மேமனம் விள்ளச் செய்வையே.
- மேலை வானவர் வேண்டும் நின்திருக்
- காலை என்சிரம் களிக்க வைப்பையோ
- சாலை ஓங்கிய தணிகை வெற்பனே
- வேலை ஏந்துகை விமல நாதனே.
- கால்கு றித்தஎன் கருத்து முற்றியே
- சால்வ ளத்திருத் தணிகை சார்வன்என்
- மால்ப கைப்பிணி மாறி ஓடவே
- மேல்கு றிப்பனால் வெற்றிச் சங்கமே.
- இரங்கா நின்றிங் கலைதரும்இவ் வெளியேன் கனவின் இடத்தேனும்
- அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற் கரிதாய
- உரங்கா முறும்மா மயில்மேல்நின் உருவம் தரிசித் துவப்படையும்
- வரங்கா தலித்தேன் தணிகைமலை வாழ்வே இன்று வருவாயோ.
- செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள்ளமுதே
- விஞ்சைப் புலவர் புகழ்தணிகை விளக்கே துளக்கில் வேலோனே
- வெஞ்சொல் புகலும் வஞ்சகர்பால் மேவி நின்தாள் மலர்மறந்தே
- பஞ்சில் தமியேன் படும்பாட்டைப் பார்த்தும் அருட்கண் பார்த்திலையே.
- பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
- அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
- ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே.
- எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே
- செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை
- உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே.
- வாரா இருந்த அடியவர்தம் மனத்தில் ஒளிரும் மாமணியே
- ஆரா அமுதே தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஓரா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஏரார் செல்வப் பெருக்கிகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.
- இகவா அடியர் மனத்தூறும் இன்பச் சுவையே எம்மானே
- அகவா மயில்ஊர் திருத்தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
- உகவா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சுகவாழ் வின்பம் அதுதுன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.
- துன்னும் மறையின் முடிவில்ஒளிர் தூய விளக்கே சுகப்பெருக்கே
- அன்னை அனையாய் தணிகைமலை அண்ணா உன்றென் ஆறெழுத்தை
- உன்னி மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- சென்னி அணியாய் அடிசேரும் தீமை ஒன்றும் சேராதே.
- சேரும் முக்கண் கனிகனிந்த தேனே ஞானச் செழுமணியே
- யாரும் புகழும் தணிகைஎம தன்பே உன்றன் ஆறெழுத்தை
- ஓரும் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பாரும் விசும்பும் பதஞ்சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.
- சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே
- வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
- ஓர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஆர்ந்த ஞானம் உறும்அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.
- அழியாப் பொருளே என்உயிரே அயில்செங் கரங்கொள் ஐயாவே
- கழியாப் புகழ்சேர் தணிகைஅமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
- ஒழியா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- பழியா இன்பம் அதுபதியும் பனிமை ஒன்றும் பதியாதே.
- பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே
- கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
- உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- துதிஏர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.
- தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயஞ்சுடரே
- ஆன்றார் புகழும் தணிகைமலை அரசே உன்றன் ஆறெழுத்தை
- ஊன்றா மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண்ணீறிட்டால்
- ஈன்றாள் நிகரும் அருள்அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.
- சேவி யாதஎன் பிழைகளை என்னுளே சிறிதறி தரும்போதோ
- பாவி யேன்மனம் பகீலென வெதும்பியுள் பதைத்திடக் காண்கின்றேன்
- ஆவி யேஅருள் அமுதமே நின்திரு வருள்தனக் கென்னாமோ
- பூவில் நாயகன் போற்றிடும் தணிகையம் பொருப்பமர்ந் திடுவாழ்வே.
- துன்பி னால்அகம் வெதும்பிநைந் தயர்ந்துநின் துணைஅடி மலர்ஏத்தும்
- அன்பி லாதஇப் பாவியேன் செய்பிழை அனைத்தையும் பொறுப்பாயேல்
- வன்பி லாதநின் அடியவர் தம்திரு மனத்தினுக் கென்னாமோ
- இன்பி னால்சுரர் போற்றிடும் தணிகைவாழ் இறைவனே எம்மானே.
- வாரேனோ திருத்தணிகை வழிநோக்கி வந்தென்கண் மணியே நின்று
- பாரேனோ நின்அழகைப் பார்த்துலக வாழ்க்கைதனில் படும்இச் சோபம்
- தீரேனோ நின்அடியைச் சேவித்தா னந்தவெள்ளம் திளைத்தா டேனோ
- சாரேனோ நின்அடியர் சமுகம்அதைச் சார்ந்தவர்தாள் தலைக்கொள் ளேனோ.
- கொள்ளும் பொழில்சூழ் தணிகைமலைக் கோவை நினையா தெனைநரகில்
- தள்ளும் படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார் தம்மயலாம்
- கள்ளுண் டந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள்
- எள்ளும் படிவந் தலைக்கின்றாய் எனக்கென் றெங்கே இருந்தாயோ.
- முலையைக் காட்டி மயக்கிஎன் ஆருயிர்
- முற்றும் வாங்குறும் முண்டைகள் நன்மதி
- குலையக் காட்டும் கலவிக்கி சைந்துநின்
- கோலங் காணக் குறிப்பிலன் ஆயினேன்
- நிலையைக் காட்டும்நல் ஆனந்த வெள்ளமே
- நேச நெஞ்சகம் நின்றொளிர் தீபமே
- கலையைக் காட்டும் மதிதவழ் நற்றணி
- காச லத்தமர்ந் தோங்கதி காரனே.
- தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
- ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
- ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
- வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
- உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
- பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
- மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
- சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
- பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
- வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
- அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
- குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
- மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
- வந்தென் எதிரில் நில்லாரோ மகிழ ஒருசொல் சொல்லாரோ
- முந்தம் மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ
- கந்தன் எனும்பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
- சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம் வல்லாரே.
- நன்றறியேன் தீங்கனைத்தும் பறியேன் பொல்லா
- நங்கையர்தம் கண்மாய நவையைச் சற்றும்
- வென்றறியேன் கொன்றறிவார் தம்மைக் கூடும்
- வேடனேன் திருத்தணிகை வெற்பின் நின்பால்
- சென்றறியேன் இலையென்ப தறிவேன் ஒன்றும்
- செய்தறியேன் சிவதருமம் செய்வோர் நல்லோர்
- என்றறியேன் வெறியேன்இங் கந்தோ அந்தோ
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- அரும்பாய நகைமடவார்க் காளாய் வாளா
- அலைகின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால்
- திரும்பாத பாதகனேன் திருஒன் றில்லேன்
- திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன்
- கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக்
- காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா
- இரும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான்
- ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே.
- பள்ள உலகப் படுகுழியில் பரிந்தங் குழலா தானந்த
- வெள்ளத் தழுந்தும் அன்பர்விழி விருந்தே தணிகை வெற்பரசே
- உள்ளம் அகல அங்கும்இங்கும் ஓடி அலையும் வஞ்சநெஞ்சக்
- கள்ளம் அகற்றி நின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.
- வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
- நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
- வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
- தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
- விடுமாட்டில் திரிந்துமட மாத ரார்தம்
- வெய்யநீர்க் குழிவீழ்ந்து மீளா நெஞ்சத்
- தடுமாற்றத் தொடும்புலைய உடலை ஓம்பிச்
- சார்ந்தவர்க்கோர் அணுஅளவும் தான்ஈ யாது
- படுகாட்டில் பலன்உதவாப் பனைபோல் நின்றேன்
- பாவியேன் உடற்சுமையைப் பலரும் கூடி
- இடுகாட்டில் வைக்குங்கால் என்செய் வேனோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- மின்னைநேர் இடைமடவார் மயல்செய் கின்ற
- வெங்குழியில் வீழ்ந்தழுந்தி வெறுத்தேன் போலப்
- பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும்
- பேய்போல வீழ்ந்தாடி மயற்குள் மூழ்கிப்
- பொன்னையே ஒத்தஉன தருளை வேண்டிப்
- போற்றாது வீணேநாள் போக்கு கின்ற
- என்னையே யான்சிரிப்பேன் ஆகில் அந்தோ
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- வேய்ப்பால்மென் தோள்மடவார் மறைக்கும் மாய
- வெம்புழுச்சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன்
- தாய்ப்பாலை உண்ணாது நாய்ப்பால் உண்ணும்
- தகையனேன் திருத்தணிகை தன்னைச் சார்ந்து
- ஆய்ப்பாலை ஒருமருங்கான் ஈன்ற செல்வத்
- தாரமுதே நின்அருளை அடையேன் கண்டாய்
- ஏய்ப்பாலை நடுங்கருங்கல் போல்நின் றெய்த்தேன்
- என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே.
- பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத்தேன்
- நின்னைப் பொருள்என் றுணராத நீசன் இனிஓர் நிலைகாணேன்
- மின்னைப் பொருவும் சடைப்பவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே
- முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.
- வெதிர்உள் ளவரின் மொழிகேளா வீண ரிடம்போய் மிகமெலிந்தே
- அதிரும் கழற்சே வடிமறந்தேன் அந்தோ இனிஓர் துணைகாணேன்
- எதிரும் குயில்மேல் தவழ்தணிகை இறையே முக்கண் இயற்கனியின்
- முதிரும் சுவையே முதற்பொருளே முறையோ முறையோ முறையேயோ.
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
- கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
- பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தாயும் தந்தையும் சாமியும் எனது
- சார்பும் ஆகிய தணிகையங் குகனே
- ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
- ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.
- தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
- தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
- பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
- சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
- ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
- உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.
- கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
- கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
- பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
- வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
- புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
- பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
- மால்ஏந்திய குழலார்தரு மயல்போம்இடர் அயல்போம்
- கோல்ஏந்திய அரசாட்சியும் கூடும்புகழ் நீடும்
- மேல்ஏந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
- வேல்ஏந்திய முருகாஎன வெண்றணிந் திடிலே.
- தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
- நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும்
- பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
- சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே.
- அமராவதி இறையோடுநல் அயனுந்திரு மாலும்
- தமராகுவர் சிவஞானமுந் தழைக்குங்கதி சாரும்
- எமராஜனை வெல்லுந்திறல் எய்தும்புகழ் எய்தும்
- குமராசிவ குருவேஎனக் குளிர்நீறணிந் திடிலே.
- மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
- நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.
- அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
- நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
- என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
- நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
- இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
- நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.
- வாழ்வனோ நின்பொன் அடிநிழல் கிடைத்தே
- வயங்கும்ஆ னந்தவெள் ளத்துள்
- ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
- அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
- தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
- சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
- வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
- வெற்பினுள் ஒளிர்அருள் விளக்கே.
- பால்எடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடஓர்
- கால்எடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
- வேல்எடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
- பால்எடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதம்எற்கே.
- எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
- அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
- வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
- திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே.
- அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
- அலர்முலை அணங்கனார் அல்குல்
- புரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
- பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
- பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
- பாலனே வேலுடை யவனே
- விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
- வெற்பினில் ஒளிரும்மெய் விளக்கே.
- ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
- நாயினும் கடையஇந் நாய்க்குன்
- சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
- தேன்தரு நாளும்ஒன் றுண்டோ
- ஆலவாய் உகந்த ஒருசிவ தருவில்
- அருள்பழுத் தளிந்தசெங் கனியே
- கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
- குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
- காயோ டுடனாய் கனல்கை ஏந்திக்
- காடே இடமாக் கணங்கொண்ட
- பேயோ டாடிப் பலிதேர் தரும்ஓர்
- பித்தப் பெருமான் திருமகனார்
- தாயோ டுறழும் தணிகா சலனார்
- தகைசேர் மயிலார் தனிவேலார்
- வேயோ டுறழ்தோள் பாவையர் முன்என்
- வெள்வளை கொண்டார் வினவாமே.
- கல்லால் அடியார் கல்லடி உண்டார்
- கண்டார் உலகங் களைவேதம்
- செல்லா நெறியார் செல்லுறும் முடியார்
- சிவனார் அருமைத் திருமகனார்
- எல்லாம் உடையார் தணிகா சலனார்
- என்நா யகனார் இயல்வேலார்
- நல்லார் இடைஎன் வெள்வளை கொடுபின்
- நண்ணார் மயில்மேல் நடந்தாரே.
- என்னுடை உயிரை யான்பெறும் பேற்றை
- என்னுடைப் பொருளினை எளியேன்
- மன்னுடைக் குருவின் வடிவினை என்கண்
- மணியினை அணியினை வரத்தை
- மின்னுடைப் பவள வெற்பினில் உதித்த
- மிளிர்அருள் தருவினை அடியேன்
- தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- வள்அயில் கரங்கொள் வள்ளலை இரவில்
- வள்ளிநா யகிதனைக் கவர்ந்த
- கள்ளனை அடியர் உள்ளகத் தவனைக்
- கருத்தனைக் கருதும்ஆ னந்த
- வெள்ளம்நின் றாட அருள்குரு பரனை
- விருப்புறு பொருப்பனை வினையைத்
- தள்ளவந் தருள்செய் திடுந்தயா நிதியைத்
- தணிகையில் கண்டிறைஞ் சுவனே.
- ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
- துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
- வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
- செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே.
- எளிய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் இடர்க்கடல் விடுத்தேற
- ஒளிஅ னேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உருவில்லா
- வெளிய தாகிய வத்துவே முத்தியின் மெய்ப்பயன் தருவித்தே
- அளிய தாகிய நெஞ்சினர்க் கருள்தரும் ஆறுமா முகத்தேவே.
- வீண னேன்இன்னும் எத்தனை நாள்செல்லும் வெந்துயர்க் கடல்நீந்தக்
- காண வானவர்க் கரும்பெருந் தலைவனே கருணையங் கண்ணானே
- தூண நேர்புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க் கருள்ஈயும்
- ஏண னேஎனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.
- மையல் நெஞ்சினேன் மதிசிறி தில்லேன்
- மாத ரார்முலை மலைஇவர்ந் துருள்வேன்
- ஐய நின்திரு அடித்துணை மறவா
- அன்பர் தங்களை அடுத்துளம் மகிழேன்
- உய்ய நின்திருத் தணிகையை அடையேன்
- உடைய நாயகன் உதவிய பேறே
- எய்ய இவ்வெறும் வாழ்க்கையில் உழல்வேன்
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- மின்னை அன்னநுண் இடைஇள மடவார்
- வெய்ய நீர்க்குழி விழுந்திளைத் துழன்றேன்
- புன்னை யஞ்சடை முன்னவன் அளித்த
- பொன்னை அன்னநின் பூங்கழல் புகழேன்
- அன்னை என்னநல் அருள்தரும் தணிகை
- அடைந்து நின்றுநெஞ் சகம்மகிழ்ந் தாடேன்
- என்னை என்னைஇங் கென்செயல் அந்தோ
- என்செய் வான்பிறந் தேன்எளி யேனே.
- பூவுண்டவெள் விடைஏறிய புனிதன்தரு மகனார்
- பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
- தாவுண்டனர் எனதின்னலம் அறியார்என இருந்தால்
- நாவுண்டவர் திருமுன்பிது நலம் அன்றுமக் கெனவே.
- வெற்றார்புரம் எரித்தார்தரும் மேலார்மயில் மேலே
- உற்றார்அவர் எழில்மாமுகத் துள்ளேநகை கண்டேன்
- பொற்றார்புயங் கண்டேன்துயர் விண்டேன்எனைப் போல
- மற்றார்பெறு வாரோஇனி வாழ்வேன்மனம் மகிழ்ந்தே.
- ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ
- யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
- பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
- பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
- வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
- விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
- தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச்
- சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே.
- முன்னைப் பொருட்கு முதற்பொருளே முடியா தோங்கும் முதுமறையே
- முக்கட் கரும்பீன் றெடுத்தமுழு முத்தே முதிர்ந்த முக்கனியே
- பொன்னைப் புயங்கொண் டவன்போற்றும் பொன்னே புனித பூரணமே
- போத மணக்கும் புதுமலரே புலவர் எவரும் புகும்பதியே
- மின்னைப் பொருவும் உலகமயல் வெறுத்தோர் உள்ள விளக்கொளியே
- மேலும் கீழும் நடுவும்என விளங்கி நிறைந்த மெய்த்தேவே
- தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர் தம்பயனே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- ஏதம் நிறுத்தும் இவ்வுலகத் தியல்பின் வாழ்க்கை யிடத்தெளியேன்
- எண்ணி அடங்காப் பெருந்துயர்கொண் டெந்தாய் அந்தோ இளைக்கின்றேன்
- வேதம் நிறுத்தும் நின்கமல மென்தாள் துணையே துணைஅல்லால்
- வேறொன் றறியேன் அஃதறிந்திவ் வினையேற் கருள வேண்டாவோ
- போத நிறுத்தும் சற்குருவே புனித ஞானத் தறிவுருவே
- பொய்யர் அறியாப் பரவெளியே புரம்மூன் றெரித்தோன் தரும்ஒளியே
- சாதல் நிறுத்தும் அவருள்ளத் தலம்தாள் நிறுத்தும் தயாநிதியே
- தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவ மணியே சண்முகனே.
- உலகியற் கடுஞ்சுரத் துழன்று நாள்தொறும்
- அலகில்வெந் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
- இலகுசிற் பரகுக என்று நீறிடில்
- கலகமில் இன்பமாம் கதிகி டைக்குமே.
- மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண்
- வெறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே
- நெறிசிவ சண்முக என்று நீறிடில்
- முறிகொளீஇ நின்றஉன் மூடம் தீருமே.
- யாரை யுங்கடு விழியினால் மயக்குறும் ஏந்திழை அவர்வெந்நீர்த்
- தாரை தன்னையும் விரும்பிவீழ்த் தாழ்ந்தஎன் தனக்கருள் உண்டேயோ
- காரை முட்டிஅப் புறம்செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர்ஆழித்
- தேரை எட்டுறும் பொழில்செறி தணிகையில் தேவர்கள் தொழும்தேவே.
- தண்தணி காந்தள்ஒர்14 சண்பக மலரின் தளர்வெய்தத்
- தெண்டணி நீலம்ஒர்14 செங்குவ ளையினிற் றிகழ்வேன்பால்
- வண்டணி கேசரும் வந்தருள் வாரோ வாராரோ
- தொண்டணி வீர்ஒரு சோதிட மேனும் சொல்லீரே.
- 14.காந்தளோர்,நீலமோர். திகழ்வென்பால்.தொ.வே.முதற்பதிப்பு
- தாருகப் பதகன் தன்னைத் தடிந்தருள் செய்தோய் போற்றி
- வேருகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி
- ஆருகச் சமயக் காட்டை அழித்தவெங் கனலே போற்றி
- போருகத் தகரை ஊர்ந்த புண்ணிய மூர்த்தி போற்றி.
- வெண்பா
- பண்கொண்ட சண்முகத் தையா அருள்மிகும் பன்னிரண்டு
- கண்கொண்ட நீசற்றுங் கண்டிலை யோஎன் கவலைவெள்ளம்
- திண்கொண்ட எட்டுத் திசைகொண்டு நீள்சத்த தீவுங்கொண்டு
- மண்கொண்டு விண்கொண்டு பாதாளங் கொண்டு வளர்கின்றதே.
- திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும்ஓர் செவ்விய வேலோனே
- குருமா மணியே குணமணி யேசுரர் கோவே மேலோனே
- கருமா மலம்அறு வண்ணம் தண்அளி கண்டே கொண்டேனே
- கதியே பதியே கனநிதி யேகற் கண்டே தண்தேனே
- அருமா தவர்உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
- அரசே அமுதே அறிவுரு வேமுரு கையா மெய்யவனே
- உருவா கியபவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே
- ஒளியே வெளியே உலகமெ லாம் உடை யோனே வானவனே.
- கறிபிடித்த ஊன்கடையில் கண்டவர்தம் கால்பிடித்துக் கவ்வும் பொல்லா
- வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தைபயிற் றிடலாகும் வேண்டி வேண்டி
- மறிபிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனமறுகி வருந்தத் தங்கள்
- குறிபிடித்துக் காட்டுவோர்க் கியாவர்படிப் பிக்கவலார் குமர வேளே.
- நேரிசை வெண்பா
- வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை
- மதித்திடுவ தன்றிமற்றை
- வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்
- மாட்டினும் மறந்தும்மதியேன்
- கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு
- கடவுளர் பதத்தைஅவர்என்
- கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்
- கடுஎன வெறுத்துநிற்பேன்
- எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை
- என்னை ஆண் டருள்புரிகுவாய்
- என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே
- என்றன்அறி வேஎன்அன்பே
- தள்ளரிய சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்
- கனலோப முழுமூடனும்
- கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட
- கண்கெட்ட ஆங்காரியும்
- ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்
- றியம்புபா தகனுமாம்இவ்
- வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்
- எனைப்பற்றி டாமல்அருள்வாய்
- சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்
- திறன்அருளி மலயமுனிவன்
- சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ
- தேசிக சிகாரத்னமே
- தாமம்ஒளிர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகர் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ
- வானைஒரு மான்தாவுமோ
- வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய
- மலையைஓர் ஈச்சிறகினால்
- துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு
- துரும்பினால் துண்டமாமோ
- சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை
- தோயுமோ இல்லைஅதுபோல்
- அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்
- அடிமலர் முடிக்கணிந்தோர்க்
- கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்
- தற்பமும்வி கற்பம்உறுமோ
- தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்
- காண்உறு கயிற்றில் அறவும்
- கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்
- கதித்தபித் தளையின்இடையும்
- மானலில் கண்டுள மயங்கல்போல் கற்பனையை
- மாயையில் கண்டுவிணே
- மனைஎன்றும் மகவென்றும் உறவென்றும் நிதிஎன்றும்
- வாள்வென்றும் மானம்என்றும்
- ஊனலின் உடம்பென்றும் உயிரென்றும் உளம்என்றும்
- உள்என்றும் வெளிஎன்றும்வான்
- உலகென்றும் அளவுறுவி காரம்உற நின்றஎனை
- உண்மைஅறி வித்தகுருவே
- தானமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்
- கன்மவுட லில்பருவம்நேர்
- கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்
- கடல்நீர்கொ லோகபடமோ
- உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட
- ஒருவிலோ நீர்க்குமிழியோ
- உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துரத்தியோ
- உன்றும்அறி யேன் இதனைநான்
- பற்றுறுதி யாக்கொண்டு வனிதயைர்கண் வலையினில்
- பட்டுமதி கெட்டுழன்றே
- பாவமே பயில்கின்ற தல்லாது நின்அடிப்
- பற்றணுவும் உற்றறிகிலேன்
- சற்றைஅகல் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ்
- சஞ்சலா காரமாகிச்
- சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும்இத்
- தன்மைபெறு செல்வம்ந்தோ
- விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடை
- விரைந்துசெலும் வெள்ளம்ஆகி
- வேலைஅலை யாகிஆங் காரவலை யாகிமுதிர்
- வேனில்உறு மேகம்ஆகிக்
- கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்
- காலோடும் நீராகியே
- கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இது
- கருதாத வகைஅருளுவாய்
- தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
- உற்றசும் பொழுகும்உடலை
- உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
- உற்றிழியும் அருவிஎன்றும்
- வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
- மின்என்றும் வீசுகாற்றின்
- மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
- வெறுமாய வேடம்என்றும்
- கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
- கனவென்றும் நீரில்எழுதும்
- கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
- கைவிடேன் என்செய்குவேன்
- தப்பற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
- ஏக்கற்றி ருக்கும்வெறுவாய்
- எங்கள்பெரு மான்உனை வணங்காத மூடர்தலை
- இகழ்விற கெடுக்கும்தலை
- கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
- கலநீர் சொரிந்தஅழுகண்
- கடவுள்நின் புகழ்தனைக் கேளாத வீணர்செவி
- கைத்திழவு கேட்கும்செவி
- பந்தம்அற நினைஎணாப் பாவிகள் தம்நெஞ்சம்
- பகீர்என நடுங்கும்நெஞ்சம்
- பரமநின் திருமுன்னர் குவியாத வஞ்சர்கை
- பலிஏற்க நீள்கொடுங்கை
- சந்தமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளா•
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- உழல்உற்ற உழவுமுதல் உறுதொழில் இயற்றிமலம்
- ஒத்தபல பொருள்ஈட்டிவீண்
- உறுவயிறு நிறையவெண் சோறடைத் திவ்வுடலை
- ஒதிபோல் வளர்த்துநாளும்
- விழல்உற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐயஇவ்
- வெய்யஉடல் பொய்என்கிலேன்
- வெளிமயக் கோமாய விடமயக் கோஎனது
- விதிமயக் கோஅறிகிலேன்
- கழல்உற்ற நின்துணைக் கால்மலர் வணங்கிநின்
- கருணையை விழைந்துகொண்டெம்
- களைகணே ஈராறு கண்கொண்ட என்றன்இரு
- கண்ணேஎ னப்புகழ்கிலேன்
- தழைவுற்ற சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- மனமான ஒருசிறுவன் மதியான குருவையும்
- மதித்திடான் நின் அடிச்சீர்
- மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம
- மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
- சினமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம்
- சிறுகுகையி னூடுபுகுவான்
- செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும்
- செய்குன்றில் ஏறிவிழுவான்
- இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே
- இறங்குவான் சிறிதும்அந்தோ
- என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்
- கேழையேன் என்செய்குவேன்
- தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- வாய்கொண் டுரைத்தல்அரி தென்செய்கேன் என்செய்கேன்
- வள்ளல்உன் சேவடிக்கண்
- மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
- வாய்ந்துழலும் எனதுமனது
- பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
- பித்துண்ட வன்குரங்கோ
- பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
- பேதைவிளை யாடுபந்தோ
- காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்
- காற்றினாற் சுழல்கறங்கோ
- காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது
- கர்மவடி வோஅறிகிலேன்
- தாய்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு
- தேவரைச் சிந்தைசெய்வோர்
- செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு
- சிறுகருங் காக்கைநிகர்வார்
- நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்
- நற்புகழ் வழுத்தாதபேர்
- நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத
- நவையுடைப் பேயர் ஆவார்
- நீவலந் தரநினது குற்றேவல் புரியாது
- நின்றுமற் றேவல்புரிவோர்
- நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற
- நெடியவெறு வீணராவார்
- தாவலம் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
- தலம்ஓங்கு கந்தவேளே
- தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
- சண்முகத் தெய்வமணியே.
- பண்ணேர் மறையின் பயனே சரணம்
- பதியே பரமே சரணம் சரணம்
- விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
- வெளியின் விளைவே சரணம் சரணம்
- உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
- உருவே அருவே உறவே சரணம்
- கண்ணே மணியே சரணம் சரணம்
- கந்தா சரணம் சரணம் சரணம்
- வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
- தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
- உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
- தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
- வேங்கை மரமாகி நின்றாண்டி - வந்த
- வேடர் தமைஎலாம் வென்றாண்டி
- தீங்குசெய் சூரனைக் கொன்றாண்டி - அந்தத்
- தீரனைப் பாடி அடியுங்கடி.
- ஆறு முகங்களில் புன்சிரிப்பும் - இரண்
- டாறு புயந்திகழ் அற்புதமும்
- வீறு பரஞ்சுடர் வண்ணமும்ஓர் - திரு
- மேனியும் பாருங்கள் வெள்வளைகாள்.
- நேரிசை வெண்பா
- குறள் வெண் செந்துறை
- பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் பூவுந் தியதென் முலையென்றேன்
- இதுவென் றறிநா மேறுகின்ற தென்றா ரேறு கின்றதுதான்
- எதுவென் றுரைத்தே னெதுநடுவோ ரெழுத்திட் டறிநீ யென்றுரைத்தார்
- அதுவின் றணங்கே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் மதிக்குங் கலைமேல் விழுமென்றேன்
- எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா ரெட்டா மெழுத்திங் கெதுவென்றேன்
- உட்டா வகற்று மந்தணர்க ளுறையூர் மாதே யுணரென்றார்
- அட்டார் புரங்க ளென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் வருந்தா தணைவே னோவென்றேன்
- ஊன்றோ யுடற்கென் றார்தெரிய வுரைப்பீ ரென்றே னோவிதுதான்
- சான்றோ ருங்கண் மரபோர்ந்து தரித்த பெயர்க்குத் தகாதென்றார்
- ஆன்றோய் விடங்க ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தீது தவிர்க்கு மொற்றியுளீர் செல்ல லறுப்ப தென்றென்றேன்
- ஈது நமக்குந் தெரியுமென்றா ரிறையா மோவிங் கிதுவென்றேன்
- ஓது மடியர் மனக்கங்கு லோட்டு மியாமே யுணரென்றார்
- ஆது தெரியே னென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ ருற்றோர்க் களிப்பீ ரோவென்றேன்
- தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தருவே மென்றா ரம்மமிகத்
- தேமூன் றினநும் மொழியென்றேன் செவ்வா யுறுமுன் முறுவலென்றார்
- ஆமூன் றறுப்பா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மன்னி வளரு மொற்றியுளீர் மடவா ரிரக்கும் வகையதுதான்
- முன்னி லொருதா வாமென்றேன் முத்தா வெனலே முறையென்றார்
- என்னி லிதுதா னையமென்றே னெவர்க்குந் தெரியு மென்றுரைத்தார்
- அன்னி லோதி யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே .
- வளஞ்சே ரொற்றி யீருமது மாலை கொடுப்பீ ரோவென்றேன்
- குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் கொடுத்தே மென்றா ரிலையென்றேன்
- உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ ருருவு மன்றங் கருவென்றார்
- அளஞ்சேர் வடிவா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- புயப்பா லொற்றி யீரச்சம் போமோ வென்றே னாமென்றார்
- வயப்பா வலருக் கிறையானீர் வஞ்சிப் பாவிங் குரைப்பதென்றேன்
- வியப்பா நகையப் பாவெனும்பா வெண்பா கலிப்பா வுடனென்றார்
- அயப்பா லிடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- மைய லகற்றீ ரொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரோவென்றேன்
- துய்ய வதன்மேற் றலைவைத்துச் சொன்னாற் சொல்வே மிரண்டென்றார்
- உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே னுலகி லெவர்க்கு மாமென்றார்
- ஐய விடையா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- தாவென் றருளு மொற்றியுளீர் தமியேன் மோக தாகமற
- வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் வருமவ் வெழுத்திங் கிலையென்றார்
- ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ தோவென் றேன்பொய் யுரைக்கின்றாய்
- ஆவென் றுரைத்தா ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ ரென்னை யணைய நினைவீரேற்
- பொன்மேல் வெள்ளி யாமென்றேன் பொன்மேற் பச்சை யறியென்றார்
- மின்மேற் சடையீ ரீதெல்லாம் விளையாட் டென்றே னன்றென்றார்
- அன்மேற் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் நாகம் வாங்கி யென்னென்றேன்
- காலாங் கிரண்டிற் கட்டவென்றார் கலைத்தோல் வல்லீர் நீரென்றேன்
- வேலார் விழிமாத் தோலோடு வியாளத் தோலு முண்டென்றார்
- ஆலார் களத்த ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே.
- இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
- பெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார்
- தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார்
- கரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே.
- கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் காம மளித்தீர் களித்தணையீர்
- மலையா ளுமது மனைவியென்றேன் மலைவா ளுனைநான் மருவினென்றார்
- அலையாண் மற்றை யவளென்றே னலைவா ளவளு மறியென்றார்
- நிலையாண் மையினீ ராவென்றே னீயா வென்று நின்றாரே.
- சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாக ரேநீர் திண்மைமிகுஞ்
- சூலம் படைத்தீ ரென்னென்றேன் றொல்லை யுலக முணவென்றார்
- ஆலம் படுத்த களத்தீரென் றறைந்தே னவளிவ் வானென்றார்
- சாலம் பெடுத்தீ ருமையென்றேன் றார மிரண்டா மென்றாரே.
- காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்
- சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
- தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்
- நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே.
- திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
- செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
- தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
- தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
- இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
- தென்அரசே என்அமுதே என்தா யேநின்
- மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
- மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.
- தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச்
- சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ
- வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம
- வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில்
- இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்
- கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ
- செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய்
- திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே.
- அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
- ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
- நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
- நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
- மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
- வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
- திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
- திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.
- கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே
- கண்கலக்கங் கொள்கின்றேன் கவலை வாழ்வை
- எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும்
- இரங்கிலைஎம் பெருமானே என்னே என்னே
- பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப்
- புண்ணியனே புரப்பதருட் புகழ்ச்சி அன்றோ
- அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல்
- ஆற்றேன்நான் பழிநின்பால் ஆக்கு வேனே.
- மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே
- மனம்தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
- ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும்
- அறியாயோ அறியாயேல் அறிவா ர்யாரே
- பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப்
- புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
- மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள்
- வெறுத்தனையேல் எங்கேயான் மேவு வேனே.
- அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
- பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
- வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
- வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.
- ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள்
- உந்தியே வைகுந்தம்மேல்
- ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ்
- ஊறலே அமுதம்அவர்தம்
- பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள்
- பார்வையே கருணைநோக்கம்
- பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே
- பரமசுக மாகும்இந்த
- யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர்
- உறுசுவைப் பழம்எறிந்தே
- உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல்
- லோரைநிந் திப்பர்அவர்தம்
- வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை
- உற்றறிய மாட்டார்களாய்
- உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண்
- டுறுபிறவி உண்டுதுன்பத்
- தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு
- சொர்க்கமுண் டிவையும்அன்றித்
- தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும்
- துர்ப்புத்தி யால்உலகிலே
- கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம்
- கொங்கையும் வெறுத்துக்கையில்
- கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம்
- கொள்ளுவீர் என்பர்அந்த
- வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர்
- உரைத்தவாய் மைகளைநாடி
- ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில்
- ஒதிபோல நிற்பதுமலால்
- கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங்
- காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்
- கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு
- கலங்கொள்ள வேண்டும்என்பர்
- இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும்
- இவர்க்கேது தெரியும்என்பர்
- இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
- இட்டகட் டென்பர்அந்த
- வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம்
- கனிந்தகனி யாச்செய்யலாம்
- கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங்
- கரடிபுலி சிங்கமுதலா
- வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி
- வித்தையும் கற்பிக்கலாம்
- மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை
- மேவுதேர் வடமாக்கலாம்
- இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம்
- ஈகின்ற பெண்கள்குறியே
- எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில்
- எத்துணையும் அரிதரிதுகாண்
- வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது
- பிடிக்கஅறி யாதுசிலர்தாம்
- பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம்
- பெறவே விரும்பிவீணில்
- பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம்
- பசைஅற்று மேல்எழும்பப்
- பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன
- பாவம்இவர் உண்மைஅறியார்
- கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங்
- காட்டிச் சிரித்துநீண்ட
- கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக்
- கயவர்வாய் மதமுழுதுமே
- மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா
- மணிஉலக நாதவள்ளல்
- மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
- வளர்வைத் தியநாதனே.
- துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்
- கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
- பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
- கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்160 எங்கே அங்கே கண்டேனே.
- ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்
- ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
- ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்
- தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
- பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்
- பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
- பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்
- பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே.
- நேரிசை வெண்பா
- தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
- சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
- மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே
- வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
- பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே
- புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
- அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே
- அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே.
- ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
- அதீதஅறி வென்றஒன்றே
- அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்
- அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
- மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள
- வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
- பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே
- பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
- திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
- தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே.
- அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ
- ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
- இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்
- என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
- நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே
- நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
- திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே
- தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே.
- நேரிசை வெண்பா
- குறள் வெண்செந்துறை
- தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின்
- செய்யுமதி வேணியாட
- செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி
- சிறந்தாட வேகரத்தில்
- மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக
- வானாதி தேவராட
- மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட
- மால்பிரம னாடஉண்மை
- ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம்
- நங்கைசிவ காமியாட
- நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட
- நந்திமறை யோர்களாட
- ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர்
- ஆறுமுக னாடமகிழ்வாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- நீறணிந் தொளிர்அக்க மணிபூண்டு சன்மார்க்க
- நெறிநிற்கும் அன்பர்மனமாம்
- நிலமீது வளர்தேவ தாருவே நிலையான
- நிறைவே (மெய் யருட்சத்தியாம்)
- வீறணிந் தழியாத நிதியமே ஒழியாத
- விண்ணே அகண்டசுத்த
- வெளியே விளங்குபர ஒளியே வரைந்திடா
- வேதமே வேதமுடிவே
- தூறணிந் தலைகின்ற பாவியேன் நின்திருத்
- துணைமலர்த் தாட்குரியனாய்த்
- துயர்தீர்ந் திளைப்பாறும் இன்பஅம் போதியில்
- தோயஅருள் புரிதிகண்டாய்
- ஆறணிந் திடுவேணி அண்ணலே அணிகுலவும்
- அம்மைசிவ காமியுடனே
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- மணிகொண்ட நெடியஉல காய்அதில் தங்கும்ஆன்
- மாக்களாய் ஆன்மாக்களின்
- மலமொழித் தழியாத பெருவாழ் வினைத்தரும்
- வள்ளலாய் மாறாமிகத்
- திணிகொண்ட முப்புரா திகளெரிய நகைகொண்ட
- தேவாய் அகண்டஞானச்
- செல்வமாய் வேலேந்து சேயாய் கஜானனச்
- செம்மலாய் அணையாகவெம்
- பணிகொண்ட கடவுளாய்க் கடவுள ரெலாம்தொழும்
- பரமபதி யாய்எங்கள்தம்
- பரமேட்டி யாய்ப்பரம போதமாய் நாதமாய்
- பரமமோ க்ஷாதிக்கமாய்
- அணிகொண்ட சுத்தஅனு பூதியாய்ச் சோதியாய்
- ஆர்ந்துமங் களவடிவமாய்
- அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும்
- ஆனந்த நடனமணியே.
- வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி
- பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம்
- ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட
- செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்.
- கோகோ வெனுங்கொடியேன் கூறியகுற் றங்களெலாம்
- ஓகோ நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா.
- வெருவாம லையோ விளம்பியசொல் லெல்லாம்
- ஒருவா நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- புலைக்கொடியேன் புன்சொற் புகன்றதெண் ணுந்தோறும்
- உலைக்கண்மெழு காகவென்ற னுள்ள முருகுதடா.
- வெப்பில் கருணை விளக்கனையா யென்பிழையை
- ஒப்பி நினைக்கிலெனக் குள்ள முருகுதடா.
- வெம்மான் மனத்து வினையேன் புகன்றதெலாம்
- அம்மா நினைக்கிலெனக் கஞ்சுங் கலங்குதடா.
- தூய்மையிலா வன்மொழியாற் சொன்னவெலா மெண்ணுதொறும்
- வாய்மையிலே னுள்ளகத்தே வாளிட் டறுக்குதடா.
- வெருவிக்கும் வஞ்ச வெறுஞ்சொலெலாம் நெஞ்சில்
- வருவிக்குந் தோறுமுள்ளே வாளிட் டறுக்குதடா.
- ஊடும்போ துன்னை யுரைத்தவெலா நாயடியேன்
- நாடும்போ தெல்லாமென் னாடி நடுங்குதடா.
- வாய்க்கடையா வன்சொல் வழங்கியவென் வன்மனத்தை
- நாய்க்கடையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- ஊனெண்ணும் வஞ்ச வுளத்தா லுரைத்தவெலாம்
- நானெண்ணுந் தோறுமென்ற னாடி நடுங்குதடா.
- வஞ்சனையா லஞ்சாது வன்சொல் புகன்றவெலாம்
- நஞ்சனையே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- கோணநெடு நெஞ்சக் குரங்காற் குதித்தவெலாம்
- நாணமிலே னெண்ணுதொறும் நாடி நடுங்குதடா.
- நிற்குருகா வஞ்ச நினைவால் நினைத்தவெலாஞ்
- சற்குருவே யெண்ணுதொறுந் தாது கலங்குதடா.
- வெந்நரகில் வீழும் விளைவால் விளம்பியதை
- என்னரசே யெண்ணுதொறு மென்னை விழுங்குதடா.
- எள்ளுகின்ற தீமை யெடுத்துரைத்தே னாங்கதனை
- விள்ளுகின்ற தோறு முள்ளம்வெந்து வெதும்புதடா.
- எப்படிநின் னுள்ள மிருக்கின்ற தென்னளவில்
- அப்படிநீ செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
- எவ்வண்ணம் நின்கருத்திங் கென்னளவி லெண்ணியதோ
- அவ்வண்ணஞ் செய்கவெனக் கன்புடைய ஐயாவே.
- குறள்வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
- றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
- வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
- சும்மா இருக்கும் சுகம்.
- உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
- அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
- திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
- அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
- சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
- அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
- அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
- தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
- ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
- ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
- அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
- அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
- அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
- அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
- அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
- தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
- அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
- அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
- சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
- ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
- காரண காரியங் காட்டிடு வெளியெனும்
- ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
- ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
- அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
- சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
- வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
- அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
- மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
- அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
- எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
- அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
- உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
- அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
- பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
- அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
- ஓதியோ தாம லுறவெனக் களித்த
- ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
- எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
- அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
- சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
- அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
- இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
- றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
- ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
- எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
- யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
- மந்தண மிதுவென மறுவிலா மதியால்
- அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
- எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
- வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
- எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
- கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
- வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
- ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
- சாவா நிலையிது தந்தன முனக்கே
- ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
- எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று
- அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
- நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
- றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- கருமசித் திகளின் கலைபல கோடியும்
- அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
- ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
- அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
- அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
- ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- இன்பசித் தியினிய லேக மனேகம்
- அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
- பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
- மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
- எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
- அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி
- தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள
- அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
- வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
- அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
- விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
- அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
- உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
- அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
- மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
- றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
- தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
- வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
- ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
- அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
- அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
- வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
- அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
- அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
- அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
- அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
- அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
- பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
- வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
- அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
- அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
- அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
- அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
- அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பரம்பர வெளியைப் பராபர வெளியில்
- அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
- அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
- அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
- அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- காலமே முதலிய கருவிகள் கலைவெளி
- ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
- அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
- அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
- உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
- அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
- அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
- ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
- ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
- பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
- அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
- பச்சைத் திரையாற் பரவெளி யதனை
- அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
- அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
- அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
- அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
- அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
- இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
- அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
- களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
- விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே
- திரையோ தசநிலை சிவவெளி நடுவே
- வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
- மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
- தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
- இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
- உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
- அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
- அருளுற முயல்கவென் றருளிய சிவமே
- அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
- இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
- அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
- தெருளிது வெனவே செப்பிய சிவமே
- அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
- மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
- அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
- மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
- அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
- அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
- எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
- வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
- சீருற வருளாந் தேசுற வழியாப்
- பேருற வென்னைப் பெற்றநற் றாயே
- ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
- ஈன்றமு தளித்த வினியநற் றாயே
- அருளமு தேமுத லைவகை யமுதமும்
- தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
- இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
- உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
- நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
- பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
- சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
- சத்தியை யளித்த தயவுடைத் தாயே
- வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
- யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
- என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
- தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
- தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
- ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
- துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
- இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
- அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
- பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
- இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
- துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே
- தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
- என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
- தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
- என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
- தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
- என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
- சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
- றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
- மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
- இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
- உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
- யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
- தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
- கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
- துறையிது வழியிது துணிவிது நீசெயும்
- முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
- அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
- னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
- அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
- இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே
- நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
- வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
- செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
- குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
- களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
- கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
- தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
- வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
- துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
- தென்னுற வாகிய வென்னுயி ருறவே
- அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
- இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
- பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
- இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
- அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
- என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
- இதுவது வென்னா வியலுடை யதுவாய்
- எதிரற நிறைந்த வென்றனி யின்பே
- ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
- ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
- அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
- எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
- விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
- யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
- உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
- வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
- தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
- வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
- ஐந்தென வெட்டென வாறென நான்கென
- முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
- மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
- நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
- உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
- வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
- எண்ணிய தோறு மியற்றுக வென்றனை
- யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
- நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
- போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
- எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
- பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே
- விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
- புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
- நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
- பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
- எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
- முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
- எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்
- புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
- உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
- துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
- இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
- பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
- உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
- அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
- பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
- என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
- என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
- என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
- அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
- இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
- துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
- லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
- மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
- இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
- இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
- நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
- கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
- உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
- பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
- மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
- நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
- மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
- வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
- செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
- உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
- வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
- எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்
- நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
- என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
- அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
- வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
- அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
- சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
- உத்தம னாகுக வோங்குக வென்றனை
- அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
- தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
- அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
- அருட்பெருந் திருவிலே அமர்ந்த
- அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
- அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
- அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
- இயற்கையோ செயற்கையோ சித்தோ
- தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
- திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
- யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
- உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
- ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
- அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
- வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
- வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
- எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
- இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
- அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
- அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
- திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
- சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
- துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
- வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
- மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
- செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
- திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
- அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
- ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
- கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
- கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
- கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
- கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
- ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
- ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
- ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே
- வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே
- வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே
- அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே.
- அதுவளர் அணுவே அணுவளர் அதுவே அதுவணு வளர்தரும் உறவே
- விதுவளர் ஒளியே ஒளிவளர் விதுவே விதுஒளி வளர்தரு செயலே
- மதுவளர் சுவையே சுவைவளர் மதுவே மதுவுறு சுவைவளர் இயலே
- பொதுவளர் வெளியே வெளிவளர் பொதுவே பொதுவெளி வளர்சிவ பதியே.
- கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கண்மனக் குரங்கனேன் கடையேன்
- நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
- நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சுமா மரம்எனக்கிளைத்தேன்
- கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.
- விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
- விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
- அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
- அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
- கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
- கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
- களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
- கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.
- பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
- பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
- மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
- வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்
- வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
- வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
- தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
- திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடந் தவனே.
- விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
- விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
- குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
- கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
- வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
- மாய மேபுரி பேயரில் பெரியேன்
- பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
- பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.
- மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
- வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
- இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
- ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
- குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
- கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
- சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
- தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
- கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
- கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
- கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
- கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
- விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
- வேட னேன்முழு மூடரில் பெரியேன்
- அடிய னாவதற் கென்செயக் கடவேன்
- அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.
- துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
- சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
- தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
- சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
- திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன்
- தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
- உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
- உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
- 199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு.
- அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான
- வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும்
- தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான்
- எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே.
- பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
- கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
- திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
- எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.
- வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
- பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
- நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
- துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.
- கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
- வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும்
- பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில்
- ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே.
- போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்தவெம் பொறியேன்
- ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் இச்சையால் எருதுநோ வறியாக்
- காகமேஎனப்போய்ப்பிறர் தமைவருத்திக்களித்தபாதகத்தொழிற்கடையேன்
- மோகமேஉடையேன் என்னினும்எந்தாய் முனிந்திடேல்காத்தருள் எனையே.
- பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப்புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார்
- பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
- ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன்அன்பினால்அடுத்தவர்கரங்கள்
- கூப்பினுங்கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
- புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து பொறுக்கிய சுணங்கனேன் புரத்தில்
- தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன் சழக்கர்
- உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் உழன்றுழன் றழன்றதோர் உளத்தேன்
- இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் என்னினும் காத்தருள் எனையே.
- நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
- போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனைகலை இலர்க்கொரு கலையில்
- ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
- ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் என்னினும் காத்தருள்எனையே.
- அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்அசடனேன் அறிவிலேன்உலகில்
- குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் குழியிலே குளித்தவெங் கொடியேன்
- வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன் மாயைக்
- களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்தருள் எனையே.
- வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
- சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் சூதெலாம் அடைத்த
- பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய்
- எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே.
- உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ
- குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
- கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை
- வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.
- கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
- நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
- ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
- பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
- அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும்
- அப்பநீ அடியனேன் தன்னை
- விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன்
- விடுதியோ விட்டிடு வாயேல்
- உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ
- உன்னருள் அடையநான் இங்கே
- படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப்
- பாடெலாம் நீஅறி யாயோ.
- திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
- திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
- உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
- உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
- பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
- பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
- அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
- கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
- கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
- அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
- அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
- மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
- வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
- சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
- தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.
- நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
- ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
- போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
- புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
- வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
- வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
- பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
- பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.
- களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
- கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
- விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
- வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
- கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
- குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
- துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
- ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
- தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
- சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
- காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
- கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
- பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
- பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
- வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
- மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம்அறிந் திலனே.
- உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
- உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே
- இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி
- என்காதல் பெருவெள்ளம் என்னைமுற்றும் விழுங்கிக்
- கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது
- கண்டுகொள்வாய் நீயேஎன் கருத்தின்வண்ணம் அரசே
- திரைகடந்த குருமணியே சிவஞான மணியே
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ
- உண்ணவிழைந் தேனோவே றுடைமைவிழைந் தேனோ
- அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன்
- அந்தோஎன் ஆசைவெள்ளம் அணைகடந்த தரசே
- என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர்
- என்சொலினும் சொல்லுகஎன் இலச்சைஎலாம் ஒழித்தேன்
- தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய்
- சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
- வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
- சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தைதாய் மகன்விருப் பாலே
- இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
- செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப்
- பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி இன்றுநான் பேசுவ தென்னே
- செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் திருவருள் அமுதமே விழைந்தேன்
- எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் எட்டுணை யேனும்இன் றெந்தாய்.
- இன்சுவை உணவு பலபல எனக்கிங் கெந்தைநீ கொடுப்பிக்கச் சிறியேன்
- நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் நீ தரு வித்திடில் அதுநின்
- தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் சம்மதம் இல்லைநான் தானே
- என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடிய தும்இலை ஈண்டே.
- கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் கிளைத்திலேன் பசிஅற உணவு
- திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில்உண் கின்றேன்
- தளைத்திடு முடைஊன்உடம்பொருசிறிதும்தடித்திடநினைத்திலேன் இன்றும்
- இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் இயம்பல்என்நீ அறிந்ததுவே.
- இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும்
- எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன்
- அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற
- கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே.
- உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி உன்அறி வடையும்நாள் வரையில்
- இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
- விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடிநின் றுனையே
- அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் அடியனேற் கிச்சைகாண் எந்தாய்.
- சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
- ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
- வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
- பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
- பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
- தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
- நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
- உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
- நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
- கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
- உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
- துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
- பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
- சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
- மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
- வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
- வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
- சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
- கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும்211 ஆடவர் மடவார்
- ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
- இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
- துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
- அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ213 தெய்வமே இவற்றால்
- வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
- அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
- சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
- வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
- தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
- பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
- இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
- உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
- நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
- ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
- அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
- பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
- வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ214 அறிவாய்.
- முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
- தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
- குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
- பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
- பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
- மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
- வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
- ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
- நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
- பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
- வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
- அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
- கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
- மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ215 மறைத்தேன்
- வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
- பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
- எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
- தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
- களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
- அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
- இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
- கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
- விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
- உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
- மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
- கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
- நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
- தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
- காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
- ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
- கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
- வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
- வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
- வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
- நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
- ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
- நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
- பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
- பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
- கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
- நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
- கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
- படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
- விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
- சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
- பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
- நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
- பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
- கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
- நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
- மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
- தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ.
- ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
- சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
- நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
- ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
- வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
- வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
- உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
- ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.
- உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
- சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்
- மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்
- சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
- தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
- சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
- எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
- தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
- அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
- வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
- இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
- வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
- வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
- கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
- விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
- எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
- தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
- வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
- என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
- நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.
- ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் உற்றிடு மக்கள்தந் தையரை
- வைப்பில்வே றொருவர் வைதிடக்கேட்டு மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
- தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
- வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.
- ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
- தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
- வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
- தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
- இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
- பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
- மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
- எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
- ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
- வெய்யதீ மூட்டிவிடுதல்232 ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்
- வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
- உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
- பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
- தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
- புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
- வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 வள்ளலே சிற்சபை வாழ்வே.
- 206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 207. தொலைபுரிந்து, 208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. பதிப்புகள்.
- 209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. பதிப்புகள்.
- 210. விடத்தின் - ச. மு. க. பதிப்பு.
- 211. செறும் - பி. இரா. பதிப்பு.
- 212. துயர்களை - ச. மு. க.
- 213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா.
- 214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா.
- 215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா
- 216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு.
- 217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா.
- 219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு.
- 220. இன்புடை - ச.மு க. பதிப்பு.
- 221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு.
- 222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு.
- 223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு.
- 224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு.
- 225. கனியில் - பி. இரா. பதிப்பு.
- 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க.'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க.அடிக்குறிப்பிடுகிறார்.
- 228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு.
- 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு.
- 230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு.
- 231. இருக்கில் - பி. இரா. பதிப்பு,
- 232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு.
- 233. அருளாம் - ச. மு. க. பதிப்பு.
- 234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு.
- திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
- செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
- உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
- உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
- அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
- அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
- மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
- வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
- முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
- முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
- தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
- தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
- என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
- யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
- பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
- பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.
- பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
- பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
- ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
- ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
- கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
- குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
- தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
- தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.
- பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் பாவி மனத்தால் பட்டதுயர்
- தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் தெய்வந் துணைஎன் றிருக்கின்றேன்
- சேர்த்தார்238 உலகில் இந்நாளில் சிறியேன் தனைவெந் துயர்ப்பாவி
- ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ கருணைக் கழகிங் கெந்தாயே.
- கருணா நிதியே என்இரண்டு கண்ணே கண்ணிற் கலந்தொளிரும்
- தெருணா டொளியே வெளியேமெய்ச் சிவமே சித்த சிகாமணியே
- இருணா டுலகில் அறிவின்றி இருக்கத் தரியேன் இதுதருணம்
- தருணா அடியேற் கருட்சோதி தருவாய் என்முன் வருவாயே.
- இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
- எண்ணினும் ஐயவோ மயங்கிப்
- பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
- பரதவிப் பதைஅறிந் திலையோ
- தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
- தனிநடம் புரிதனித் தலைவா
- கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய்
- மெய்யனே ஐயனே எனக்கு
- மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்
- வல்லனே நல்லனே அருட்செங்
- கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண்
- குணத்தனே இனிச்சகிப் பறியேன்
- காலையே தருதற் கிதுதகு தருணம்
- கலந்தருள் கலந்தருள் எனையே.
- களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
- கற்பகத் தீஞ்சுவைக் கனியே
- வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே
- விளங்கும்ஓர் விளக்கமே எனக்கே
- ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில்
- ஒருவனே இனிப்பிரி வாற்றேன்
- புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம்
- புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே.
- கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
- காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
- ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
- உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
- பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
- பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
- மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
- நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
- ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
- ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
- வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
- வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
- வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
- நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
- கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
- கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
- பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
- பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
- மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
- வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
- நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
- நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
- அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
- அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
- வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
- தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
- புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
- பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
- துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
- உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
- வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
- வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
- கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
- கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
- நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
- நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
- வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
- அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
- அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
- கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
- குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
- படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
- படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
- மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
- மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
- அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய்
- ஆங்கவள் மகள்கையில் கொடுத்தாள்
- நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள்
- நீலியோ தன்புடை ஆடும்
- தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள்
- தனித்தனி அவர்அவர் எடுத்தே
- கத்தவெம் பயமே காட்டினர் நானும்
- கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
- தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே
- சோர்ந்தழு திளைத்துமென் குரலும்
- கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள்
- காதுறக் கேட்டிருக் கின்றாள்
- செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
- சிரித்திருக் கின்றனர் அந்தோ
- இம்மியே எனினும் ஈந்திடார் போல
- இருப்பதோ நீயும்எந் தாயே.
- வம்பனேன் பிறர்போல் வையமும் வானும்
- மற்றவும் மதித்திலேன் மதஞ்சார்
- உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா
- உலகமும் வாழ்கவென் றிருந்தேன்
- செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம்
- செயவல்ல சித்தனே சிவனே
- நம்பனே ஞான நாதனே உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில்
- கடியனேன் காமமே கலந்து
- வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய
- வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
- மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை
- மக்களை ஒக்கலை மதித்தே
- நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- துனித்தவெம் மடவார் பகல்வந்த போது
- துறவியின் கடுகடுத் திருந்தேன்
- தனித்திர வதிலே வந்தபோ தோடித்
- தழுவினேன் தடமுலை விழைந்தேன்
- இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே
- இடர்ப்பட்ட நாயென இளைத்தேன்
- நனித்தவ றுடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன்
- பேய்எனப் பிடித்தனன் மடவார்க்
- குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட்
- டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன்
- தண்மையே அறியேன் வெம்மையே உடையேன்
- சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன்
- நண்மையே அடையேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த
- ஊத்தையேன் நாத்தழும் புறவே
- வென்றியே உரைத்து வினைகளே விளைத்த
- வீணனேன் ஊர்தொறுஞ் சுழன்ற
- பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற
- பகடெனத் திரிகின்ற படிறேன்
- நன்றியே அறியேன் என்னினும் உனையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன்
- கள்ளனேன் கள்ளுண்ட கடியேன்
- சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன்
- துட்டனேன் தீதெலாந் துணிந்தேன்
- இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ
- இந்தநாள் இறைவநின் அருளால்
- நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே
- நம்பினேன் கைவிடேல் எனையே.
- வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
- பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
- சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை
- மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.
- செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
- திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
- பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே
- பொன்னடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
- எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
- எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
- ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
- அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.
- தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே
- சிவமாலை அணிந்தனைஅச் சிறுவயதில் இந்த
- உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்
- ஓடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ
- கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது
- கால்பிடித்தேன் விடுவேனோ கைப்பிடிஅன் றதுதான்
- வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி
- விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே.
- எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே
- எல்லாஞ்செய் வல்லவனே என்தனிநா யகனே
- இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
- வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும்
- மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம்
- வாய்த்ததுசிற் சபைவிளக்கம் வயங்குகின்ற துலகில்
- விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும்
- வேலைஇது காலைஎன விளம்பவும்வேண் டுவதோ.
- அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே
- அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான்
- கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே
- கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம்
- பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில்
- புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ
- இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்
- றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே.
- தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
- சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
- ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
- உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
- சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
- சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
- அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
- அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
- ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
- உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
- வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
- வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
- கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
- கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
- நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
- நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
- கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
- கண்ணனையிர் கனகசபை கருதியசிற் சபைமுன்
- துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
- துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
- விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
- விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
- பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
- பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
- உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
- உலவா ஒருபே ரருளா ரமுதம்
- தருவாய் இதுவே தருணம் தருணம்
- தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
- வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்
- மதிசேர் முடிஎம் பதியே அடியேன்
- குருவாய் முனமே மனமே இடமாக்
- குடிகொண் டவனே அபயம் அபயம்.
- மருளும் துயரும் தவிரும் படிஎன்
- மனமன் றிடைநீ வருவாய் அபயம்
- இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
- சினன்என் றிகழேல் அபயம் அபயம்
- வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
- விடுமா றருள்வாய் அபயம் அபயம்
- அருளும் பொருளும் தெருளும் தருவாய்
- அபயம் அபயம் அபயம் அபயம்.
- தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன்
- தனிப்பெருந் தலைவரே சபைநடத் தவரே
- தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும்
- தூயநும் திருவருள் நேயம்விட் டறியேன்
- விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை
- வெருவுளக் கருத்தெல்லாம் திருவுளத் தறிவீர்
- அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன்
- அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
- அண்டவள வெவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தசரா சரஅளவெவ் வளவோஅவ் வளவும்
- கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்
- காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
- விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே
- விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம்
- தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்
- தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே.
- கொடுத்திடநான் எடுத்திடவும் குறையாத நிதியே
- கொல்லாத நெறியேசித் தெல்லாஞ்செய் பதியே
- மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ளாசை
- வைப்பதன்றி வெறுப்பறியா வண்ணநிறை அமுதே
- எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே
- என்உயிரே என்உயிருக் கிசைந்தபெருந் துணையே
- தடுத்திடவல் லவர்இல்லாத் தனிமுதற்பே ரரசே
- தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே.
- உருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே
- உருநடுவும் வெளிநடுவும் ஒன்றான ஒன்றே
- பெருவெளியே பெருவெளியில் பெருஞ்சோதி மயமே
- பெருஞ்சோதி மயநடுவே பிறங்குதனிப் பொருளே
- மருஒழியா மலர்அகத்தே வயங்குஒளி மணியே
- மந்திரமே தந்திரமே மதிப்பரிய மருந்தே
- திருஒழியா தோங்குமணி மன்றில்நடத் தரசே
- சிறுமொழிஎன் றிகழாதே சேர்த்துமகிழ்ந் தருளே.
- பற்றுதலும் விடுதலும்உள் அடங்குதலும் மீட்டும்
- படுதலொடு சுடுதலும்புண் படுத்தலும்இல் லாதே
- உற்றொளிகொண் டோங்கிஎங்கும் தன்மயமாய் ஞான
- உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
- சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும்வெச் சென்றே
- சுடுதலும்இல் லாதென்றும் துலங்குகின்ற சுடரே
- முற்றும்உணர்ந் தவர்உளத்தே திருச்சிற்றம் பலத்தே
- முயங்கும்நடத் தரசேஎன் மொழியும்அணிந் தருளே.
- ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே
- அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ்
- கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க்
- காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே
- செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள்
- செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே
- வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில்
- விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- விளங்குபர சத்திகளின் பரமாதி அவற்றுள்
- விரிந்தநிலை யாதிஎலாம் விளங்கிஒளி வழங்கிக்
- களங்கமிலாப் பரவெளியில் அந்தம்முதல் நடுத்தான்
- காட்டாதே நிறைந்தெங்கும் கலந்திடும்பே ரொளியே
- உளங்குலவு பரசத்தி உலகமண்ட முழுதும்
- ஒளிவிளங்கச் சுடர்பரப்பி ஓங்குதனிச் சுடரே
- வளங்குலவு திருப்பொதுவில் மாநடஞ்செய் அரசே
- மகிழ்ந்தெனது சொல்எனும்ஓர் மாலைஅணிந் தருளே.
- தெரிந்தமகா சுத்தபர முதலும்அவற் றுள்ளே
- சிறந்தநிலை யாதிகளும் தெளிந்துவிளங் குறவே
- பரிந்தஒரு சிவவெளியில் நீக்கமற நிறைந்தே
- பரமசுக மயமாகிப் பரவியபே ரொளியே
- விரிந்தமகா சுத்தபர லோகாண்ட முழுதும்
- மெய்அறிவா னந்தநிலை விளக்குகின்ற சுடரே
- புரிந்ததவப் பயனாகும் பொதுவில்நடத் தரசே
- புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே.
- வாய்ந்தபர நாதம்ஐந்தில் பரமுதலும் அவற்றுள்
- மன்னுநிலை யாதிகளும் வயங்கியிட நிறைந்தே
- ஆய்ந்தபர சிவவெளியில் வெளிஉருவாய் எல்லாம்
- ஆகியதன் இயல்விளக்கி அலர்ந்திடும்பே ரொளியே
- தோய்ந்தபர நாதஉல கண்டமெலாம் விளங்கச்
- சுடர்பரப்பி விளங்குகின்ற தூயதனிச் சுடரே
- வேய்ந்தமணி மன்றிடத்தே நடம்புரியும் அரசே
- விளம்புறும்என் சொன்மாலை விளங்கஅணிந் தருளே.
- திரைஇலதாய் அழிவிலதாய்த் தோலிலதாய்ச் சிறிதும்
- சினைப்பிலதாய்ப் பனிப்பிலதாய்ச் செறிந்திடுகோ திலதாய்
- விரைஇலதாய்ப் புரைஇலதாய் நார்இலதாய் மெய்யே
- மெய்யாகி அருள்வண்ணம் விளங்கிஇன்ப மயமாய்ப்
- பரைவெளிக்கப் பால்விளங்கு தனிவெளியில் பழுத்தே
- படைத்தஎன துளத்தினிக்கக் கிடைத்ததனிப் பழமே
- உரைவளர்மா மறைகளெலாம் போற்றமணிப் பொதுவில்
- ஓங்கும்நடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கார்ப்பிலதாய்த் துவர்ப்பிலதாய் உவர்ப்பிலதாய்ச் சிறிதும்
- கசப்பிலதாய்ப் புளிப்பிலதாய்க் காய்ப்பிலதாய்ப் பிறவில்
- சேர்ப்பிலதாய் எஞ்ஞான்றும் திரிபிலதாய் உயிர்க்கே
- தினைத்தனையும் நோய்தரும்அத் தீமைஒன்றும் இலதாய்ப்
- பார்ப்பனையேன் உள்ளகத்தே விளங்கிஅறி வின்பம்
- படைத்திடமெய்த் தவப்பயனால் கிடைத்ததனிப் பழமே
- ஓர்ப்புடையார் போற்றமணி மன்றிடத்தே வெளியாய்
- ஓங்கியபே ரரசேஎன் உரையும்அணிந் தருளே.
- தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282 தில்லைத்
- தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
- வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
- வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே
- காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
- கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
- தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
- சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- நான்பசித்த போதெல்லாம் தான்பசித்த தாகி
- நல்உணவு கொடுத்தென்னைச் செல்வம்உற வளர்த்தே
- ஊன்பசித்த இளைப்பென்றும் தோற்றாத வகையே
- ஒள்ளியதெள் ளமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே
- வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்
- வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே
- தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்
- திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய
- முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே
- ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்
- அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே
- பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப்
- பரநாத நாட்டரசு பாலித்த பதியே
- ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே
- என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே.
- கையாத தீங்கனியே கயக்காத அமுதே
- கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
- பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே
- போகாத புனலேஉள் வேகாத காலே
- கொய்யாத நறுமலரே கோவாத மணியே
- குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே
- செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே
- தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- சாகாத கல்வியிலே தலையான நிலையே
- சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே
- ஏகாத புனலிடத்தே இடியாத புவியே
- ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
- கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்
- குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே
- மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்
- மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.
- சுத்தநிலை அனுபவங்கள் தோன்றுவெளி யாகித்
- தோற்றும்வெளி யாகிஅவை தோற்றுவிக்கும் வெளியாய்
- நித்தநிலை களின்நடுவே நிறைந்தவெளி யாகி
- நீயாகி நானாகி நின்றதனிப்பொருளே
- சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே
- சமரசசன் மார்க்கநிலைத் தலைநின்ற சிவமே
- புத்தமுதே சித்திஎலாம் வல்லதிருப் பொதுவில்
- புனிதநடத் தரசேஎன் புகலும்அணிந் தருளே.
- நான்அளக்குந் தோறும்அதற் குற்றதுபோல் காட்டி
- நாட்டியபின் ஒருசிறிதும் அளவில்உறா தாகித்
- தான்அளக்கும் அளவதிலே முடிவெனத் தோற்றித்
- தன்அளவுங் கடந்தப்பால் மன்னுகின்ற பொருளே
- வான்அளக்க முடியாதே வான்அனந்தங் கோடி
- வைத்தபெரு வான்அளக்க வசமோஎன் றுரைத்துத்
- தேன்அளக்கும் மறைகளெலாம் போற்றமணி மன்றில்
- திகழுநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.
- திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத்
- தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி
- நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து
- நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே
- வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே
- வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே
- பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப்
- பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே.
- கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன்
- கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி
- மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி
- மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே
- புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப்
- பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
- விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே
- விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே.
- மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்
- மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்
- பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்
- பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த
- விதம்ஒன்றும் தெரியாதே மயங்கியஎன் தனக்கே
- வெட்டவெளி யாஅறிவித் திட்டஅருள் இறையே
- சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்
- தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
- பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே
- பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும்
- விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும்
- மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற
- உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய்
- ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க்
- கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே
- கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே.
- வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே
- மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே
- மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே
- வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே
- கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து
- கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே
- ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும்
- மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது
- பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த
- பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே
- செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும்
- செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே
- அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே
- அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே
- பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே
- மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய
- வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே
- மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே
- விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே
- ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே
- ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- அமைந்தஉயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
- கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
- கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
- விண்தகும்ஓர் நாதவெளி சுத்தவெளி மோன
- வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்
- கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்தசிவ மயமே
- குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.
- சத்தியநான் முகர்அனந்தர் நாரணர்மற் றுளவாம்
- தலைவர்அவர் அவருலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
- இத்திசைஅத் திசையாக இசைக்கும்அண்டப் பகுதி
- எத்தனையோ கோடிகளில் இருக்கும்உயிர்த் திரள்கள்
- அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையா
- தருள்வெளியில் ஒளிவடிவாய் ஆனந்த மயமாய்ச்
- சுத்தசிவ அனுபவமாய் விளங்கியதெள் ளமுதே
- துயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
- உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும்
- ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
- பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
- பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே
- நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
- நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
- எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
- இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.
- ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே
- அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி
- வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி
- வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே
- துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே
- சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே
- உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும்
- ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.
- கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே
- கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே
- இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்
- இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே
- மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே
- வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே
- பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில்
- பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே.
- அளவெலாங் கடந்த பெருந்தலை அண்ட
- அடுக்கெலாம் அம்மஓர் அணுவின்
- பிளவில்ஓர் கோடிக் கூற்றில்ஒன் றாகப்
- பேசநின் றோங்கிய பெரியோன்
- களவெலாந் தவிர்த்தென் கருத்தெலாம் நிரப்பிக்
- கருணையா ரமுதளித் துளமாம்
- வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ
- வள்ளலைத் தடுப்பவர் யாரே.
- உள்ளபடி உள்ளதுவாய் உலகமெலாம் புகினும்
- ஒருசிறிதும் தடையிலதாய் ஒளியதுவே மயமாய்
- வெள்ளவெளி நடுவுளதாய் இயற்கையிலே விளங்கும்
- வேதமுடி இலக்கியமா மேடையிலே அமர்ந்த
- வள்ளன்மலர் அடிசிவப்ப வந்தெனது கருத்தின்
- வண்ணமெலாம் உவந்தளித்து வயங்கியபே ரின்பம்
- கொள்ளைகொளக் கொடுத்ததுதான் போதாதோ அரசே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- தடையறியாத் தகையினதாய்த் தன்னிகரில் லதுவாய்த்
- தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
- விடையறியாத் தனிமுதலாய் விளங்குவெளி நடுவே
- விளங்குகின்ற சத்தியமா மேடையிலே அமர்ந்த
- நடையறியாத் திருவடிகள் சிவந்திடவந் தெனது
- நலிவனைத்துந் தவிர்த்தருளி ஞானஅமு தளித்தாய்
- கொடையிதுதான் போதாதோ என்னரசே அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்
- உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய்
- மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த
- வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே
- திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே
- சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய்
- குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- மணமுளதாய் ஒளியினதாய் மந்திரஆ தரமாய்
- வல்லதுவாய் நல்லதுவாய் மதங்கடந்த வரைப்பாய்
- வணமுளதாய் வளமுளதாய் வயங்கும்ஓரு வெளியில்
- மணிமேடை அமர்ந்ததிரு அடிமலர்கள் பெயர்த்தே
- எணமுளஎன் பால்அடைந்தென் எண்ணமெலாம் அளித்தாய்
- இங்கிதுதான் போதாதோ என்னரசே ஞானக்
- குணமலையே அருளமுதே குருவேஎன் பதியே
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சிரம்பெறுவே தாகமத்தின் அடிநடுவும் முடியும்
- செல்லாத நிலைஅதுவாய் எல்லாம்வல் லதுவாய்
- பரம்பரமாய்ப் பரம்பரமேற் பரவுசிதம் பரமாய்ப்
- பதிவெளியில் விளங்குகின்ற மதிசிவமே டையிலே
- தரங்குலவ அமர்ந்ததிரு வடிகள்பெயர்த் தெனது
- சார்படைந்தென் எண்ணமெலாம் தந்தனைஎன் அரசே
- குரங்குமனச் சிறியேனுக் கிங்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டறிவாம்
- பான்மைஒன்றே வடிவாகிப் பழுத்தபெரி யவரும்
- உற்றறிதற்273 கரியஒரு பெருவெளிமேல் வெளியில்
- ஓங்குமணி மேடைஅமர்ந் தோங்கியசே வடிகள்
- பெற்றறியப் பெயர்த்துவந்தென் கருத்தனைத்துங் கொடுத்தே
- பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய்274 அரசே
- கொற்றமுளேன் தனக்கிதுதான் போதாதோ கொடியேன்
- குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே.
- கருவியொடு கரணமெலாம் கடந்துகடந் ததன்மேல்
- காட்சியெலாம் கடந்ததன்மேல் காணாது கடந்து
- ஒருநிலையின் அனுபவமே உருவாகிப் பழுத்த
- உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும்ஒரு வெளியில்
- மருவியதோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
- மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வழங்கினைஇன் புறவே
- குருமணியே என்னரசே எனக்கிதுபோ தாதோ
- கொடும்புலையேன் குடிசையிலும் குலவிநுழைந் தனையே.
- சோற்றானைச்270 சோற்றில்உறும் சுகத்தி னானைத்
- துளக்கம்இலாப் பாரானை நீரா னானைக்
- காற்றானை வெளியானைக் கனலா னானைக்
- கருணைநெடுங் கடலானைக் களங்கர் காணத்
- தோற்றானை நான்காணத் தோற்றி னானைச்
- சொல்லறியேன் சொல்லியபுன் சொல்லை யெல்லாம்
- ஏற்றானை என்னுளத்தில் எய்தி னானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- முளையானைச் சுத்தசிவ வெளியில் தானே
- முளைத்தானை மூவாத முதலா னானைக்
- களையானைக் களங்கமெலாம் களைவித் தென்னைக்
- காத்தானை என்பிழையைக் கருதிக் கோபம்
- விளையானைச் சிவபோகம் விளைவித் தானை
- வேண்டாமை வேண்டல்இவை மேவி என்றும்
- இளையானை மூத்தானை மூப்பி லானை
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண
- உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
- கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்
- கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்
- தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத்
- தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி
- எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட
- எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- செய்யானைக் கரியானைப் பசுமை யானைத்
- திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை
- மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா
- வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக்
- கையானை என்னையெடுத் தணைத்துக் கொண்ட
- கையானை என்னைஎன்றும் கையா தானை
- எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை
- ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
- ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
- அறிவித்த அறிவைஎன் அன்பைச்
- சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
- சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
- நீதியை எல்லா நிலைகளும் கடந்த
- நிலையிலே நிறைந்தமா நிதியை
- ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- துன்புறேல் மகனே தூங்கலை எனஎன்
- சோர்வெலாந் தவிர்த்தநற் றாயை
- அன்புளே கலந்த தந்தையை என்றன்
- ஆவியைப் பாவியேன் உளத்தை
- இன்பிலே நிறைவித் தருள்உரு வாக்கி
- இனிதமர்ந் தருளிய இறையை
- வன்பிலாக் கருணை மாநிதி எனும்என்
- வள்ளலைக் கண்டுகொண் டேனே.
- நனவிலும் எனது கனவிலும் எனக்கே
- நண்ணிய தண்ணிய அமுதை
- மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
- வழங்கிய பெருந்தயா நிதியைச்
- சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
- சிவகுரு பதியைஎன் சிறப்பை
- உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
- ஒளிதனைக் கண்டுகொண் டேனே.
- சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
- சிதம்பர நடம்புரி சிவத்தைப்
- பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
- பதிசிவ பதத்தைத்தற் பதத்தை
- இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
- யாவுமாய் அல்லவாம் பொருளைச்
- சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
- சாமியைக் கண்டுகொண் டேனே.
- சுத்தவேத தாந்த பிரமரா சியத்தைச்
- சுத்தசித் தாந்தரா சியத்தைத்
- தத்துவா தீதத் தனிப்பெரும் பொருளைச்
- சமரச சத்தியப் பொருளைச்
- சித்தெலாம் வல்ல சித்தைஎன் அறிவில்
- தெளிந்தபே ரானந்தத் தெளிவை
- வித்தமா வெளியைச் சுத்தசிற் சபையின்
- மெய்மையைக் கண்டுகொண் டேனே.
- சார்கலாந் தாதிச் சடாந்தமுங் கலந்த
- சமரச சத்திய வெளியைச்
- சோர்வெலாந் தவிர்த்தென் அறிவினுக் கறிவாய்த்
- துலங்கிய ஜோதியைச் சோதிப்
- பார்பெறாப் பதத்தைப் பதமெலாங் கடந்த
- பரமசன் மார்க்கமெய்ப் பதியைச்
- சேர்குணாந் தத்திற் சிறந்ததோர் தலைமைத்
- தெய்வத்தைக் கண்டுகொண் டேனே.
- பயமும்வன் கவலை இடர்முதல் அனைத்தும்
- பற்றறத் தவிர்த்தருட் பரிசும்
- நயமும்நற் றிருவும் உருவும்ஈங் கெனக்கு
- நல்கிய நண்பைநன் னாத
- இயமுற வெனது குளநடு நடஞ்செய்
- எந்தையை என்னுயிர்க் குயிரைப்
- புயனடு விளங்கும் புண்ணிய ஒளியைப்
- பொற்புறக் கண்டுகொண் டேனே.
- மும்மையை எல்லாம் உடையபே ரரசை
- முழுதொருங் குணர்த்திய உணர்வை
- வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம்
- வியப்புற அளித்தமெய் விளைவைச்
- செம்மையை எல்லாச் சித்தியும் என்பால்
- சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை
- அம்மையைக் கருணை அப்பனை என்பே
- ரன்பனைக் கண்டுகொண் டேனே.
- பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
- பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
- உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
- வெறுவெளி எனஉல குணர்ந்த
- புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
- திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
- திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
- என்பரால் திருவடி நிலையே.
- மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
- இதயத்தே விளங்கு கின்ற
- துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
- தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
- செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
- ஒன்றான தெய்வந் தன்னை
- அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
- பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
- செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
- பெருங்களிப்புச் செய்தான் தன்னை
- முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
- கொடுத்தெனக்கு முன்னின் றானை
- அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
- தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
- தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
- துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
- மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
- மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
- ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
- ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
- தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
- எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
- அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
- அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
- ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
- ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
- செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
- சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
- நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
- நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
- பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
- பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
- சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
- சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
- 267. செச்சைமலர் - வெட்சிமலர். முதற்பதிப்பு.
- திருவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- தெய்வமே மெய்ப்பொருட் சிவமே
- உருவளர் ஒளியே ஒளியினுள் ஒளியே
- ஓங்கும்என் உயிர்ப்பெருந் துணையே
- ஒருதனித் தலைமை அருள்வெளி நடுவே
- உவந்தர சளிக்கின்ற அரசே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- துதிவளர் திருச்சிற் றம்பலத் தாடும்
- சோதியுட் சோதியே எனது
- மதிவளர் மருந்தே மந்திர மணியே
- மன்னிய பெருங்குண மலையே
- கதிதரு துரியத் தனிவெளி நடுவே
- கலந்தர சாள்கின்ற களிப்பே
- பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- சீர்வளர் திருச்சிற் றம்பலத் தோங்குஞ்
- செல்வமே என்பெருஞ் சிறப்பே
- நீர்வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே
- நிறைஒளி வழங்கும்ஓர் வெளியே
- ஏர்தரு கலாந்த மாதிஆ றந்தத்
- திருந்தர சளிக்கின்ற பதியே
- பாருறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- மேல்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மெய்யறி வானந்த விளக்கே
- கால்வளர் கனலே கனல்வளர் கதிரே
- கதிர்நடு வளர்கின்ற கலையே
- ஆலுறும் உபசாந் தப்பர வெளிக்கப்
- பால்அர சாள்கின்ற அரசே
- பாலுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- இசைவளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- இன்பமே என்னுடை அன்பே
- திசைவளர் அண்ட கோடிகள் அனைத்தும்
- திகழுறத் திகழ்கின்ற சிவமே
- மிசையுறு மௌன வெளிகடந் ததன்மேல்
- வெளிஅர சாள்கின்ற பதியே
- பசையுறும் உளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அருள்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- அரும்பெருஞ் சோதியே எனது
- பொருள்வளர் அறிவுக் கறிவுதந் தென்னைப்
- புறம்விடா தாண்டமெய்ப் பொருளே
- மருவும்ஓர் நாத வெளிக்குமேல் வெளியில்
- மகிழ்ந்தர சாள்கின்ற வாழ்வே
- பருவரல் நீக்கி இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- வான்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும்
- மாபெருங் கருணைஎம் பதியே
- ஊன்வளர் உயிர்கட் குயிரதாய் எல்லா
- உலகமும் நிறைந்தபே ரொளியே
- மான்முதன் மூர்த்தி மானிலைக் கப்பால்
- வயங்கும்ஓர் வெளிநடு மணியே
- பான்மையுற் றுளத்தே இனித்திட எனக்கே
- பழுத்தபே ரானந்தப் பழமே.
- அச்சம்நீக் கியஎன் ஆரியன் என்கோ
- அம்பலத் தெம்பிரான் என்கோ
- நிச்சலும் எனக்கே கிடைத்தவாழ் வென்கோ
- நீடும்என் நேயனே என்கோ
- பிச்சனேற் களித்த பிச்சனே என்கோ
- பெரியரிற் பெரியனே என்கோ
- இச்சகத் தழியாப் பெருநலம் அழித்திங்
- கென்னைஆண் டருளிய நினையே.
- அத்தம்நேர் கிடைத்த சுவைக்கனி என்கோ
- அன்பிலே நிறைஅமு தென்கோ
- சித்தெலாம் வல்ல சித்தனே என்கோ
- திருச்சிற்றம் பலச்சிவம் என்கோ
- மத்தனேன் பெற்ற பெரியவாழ் வென்கோ
- மன்னும்என் வாழ்முதல் என்கோ
- இத்தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கோ
- அறிவிலே அறிவறி வென்கோ
- இன்பிலே நிறைந்த சிவபதம் என்கோ
- என்னுயிர்த் துணைப்பதி என்கோ
- வன்பிலா மனத்தே வயங்கொளி என்கோ
- மன்னும்அம் பலத்தர சென்கோ
- என்புரி அழியாப் பொன்புரி ஆக்கி
- என்னைஆண் டருளிய நினையே.
- ஒட்டியே என்னுள் உறும்ஒளி என்கோ
- ஒளிஎலாம் நிரம்பிய நிலைக்கோர்
- வெட்டியே என்கோ வெட்டியில்276 எனக்கு
- விளங்குறக் கிடைத்தஓர் வயிரப்
- பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே
- பெரியவர் வைத்ததோர் தங்கக்
- கட்டியே என்கோ அம்பலத் தாடும்
- கருணையங் கடவுள்நின் றனையே.
- தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
- தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு
- வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
- விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
- வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
- வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
- தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
- சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
- அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
- அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
- முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
- மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
- கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
- கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
- மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
- மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
- அற்புத நிறைவே சற்புதர்259 அறிவில்
- அறிவென அறிகின்ற அறிவே
- சொற்புனை மாயைக் கற்பனை கடந்த
- துரியநல் நிலத்திலே துலங்கும்
- சிற்பரஞ் சுடரே தற்பர ஞானச்
- செல்வமே சித்தெலாம் புரியும்
- பொற்புலம் அளித்த நற்புலக் கருத்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மேல்வெளி காட்டி வெளியிலே விளைந்த
- விளைவெலாம் காட்டிமெய் வேத
- நூல்வழி காட்டி என்னுளே விளங்கும்
- நோக்கமே ஆக்கமும் திறலும்
- நால்வகைப் பயனும் அளித்தெனை வளர்க்கும்
- நாயகக் கருணைநற் றாயே
- போலுயிர்க் குயிராய்ப் பொருந்திய மருந்தே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- பரம்பர நிறைவே பராபர வெளியே
- பரமசிற் சுகந்தரும் பதியே
- வரம்பெறு சிவசன் மார்க்கர்தம் மதியில்
- வயங்கிய பெருஞ்சுடர் மணியே
- கரம்பெறு கனியே கனிவுறு சுவையே
- கருதிய கருத்துறு களிப்பே
- புரம்புகழ் நிதியே சிரம்புகல் கதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி
- மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே
- கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே
- கருணைவான் அமுதத்தெண் கடலே
- அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி
- ஆனந்த மாம்அனு பவமே
- பொற்புறு பதியே அற்புத நிதியே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- மூவிரு முடிபின் முடிந்ததோர்262 முடிபே
- முடிபெலாம் கடந்ததோர் முதலே
- தாவிய முதலும் கடையும்மேற் காட்டாச்
- சத்தியத் தனிநடு நிலையே
- மேவிய நடுவில் விளங்கிய விளைவே
- விளைவெலாம் தருகின்ற வெளியே
- பூவியல் அளித்த புனிதசற் குருவே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- அடியனேன் பொருட்டிவ் வவனிமேல் கருணை
- அருள்வடி வெடுத்தெழுந் தருளி
- நெடியனே முதலோர் பெறற்கரும் சித்தி
- நிலைஎலாம் அளித்தமா நிதியே
- மடிவுறா தென்றும் சுத்தசன் மார்க்கம்
- வயங்கநல் வரந்தந்த வாழ்வே
- பொடிஅணி கனகப் பொருப்பொளிர் நெருப்பே
- பொதுநடம் புரிகின்ற பொருளே.
- கோஎன எனது குருஎன ஞான
- குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
- பூஎன அதிலே மணம்என வணத்தின்
- பொலிவென வயங்கிய பொற்பே
- தேவெனத் தேவ தேவென ஒருமைச்
- சிவம்என விளங்கிய பதியே
- வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
- வழங்கினை வாழிநின் மாண்பே.
- விண்ணார் செஞ்சுட ரே - சுடர் - மேவிய உள்ளொளி யே
- தண்ணார் வெண்மதி யே - அதில் - தங்கிய தண்ணமு தே
- கண்ணார் மெய்க்கன லே - சிவ - காமப்பெண் காதல னே
- அண்ணா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே
- கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே
- செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய்
- ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே
- வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே
- தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே
- அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே
- தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே
- பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே
- அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே
- சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய்
- தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல்
- லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே.
- வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
- வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
- அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
- ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
- அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
- இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
- உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
- கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
- மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
- உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
- புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
- புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
- வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
- வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
- பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
- பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
- அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
- அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
- முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா
- பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
- சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
- மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே.
- பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
- மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
- எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
- நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
- ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் கெனமா மறைகள் ஓலமிடும்
- துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
- வெப்பா னவைதீர்த் தெனக்கமுத விருந்து புரிதல் வேண்டும்என்றன்
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் இற்றைப் பொழுதே விலக்கிஒழித்
- திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்தருள்க
- ஒப்பால் உரைத்த தன்றுண்மை உரைத்தேன் கருணை உடையானே
- அப்பா அரசே இனிச்சிறிதும் ஆற்ற மாட்டேன் கண்டாயே.
- புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
- பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
- சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
- சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
- மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
- வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
- என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
- என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
- எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
- தண்ணா ரமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
- கண்ணா ரொளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
- அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
- பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
- கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
- அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
- வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
- மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
- செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
- குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
- நேரிசை வெண்பா
- கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளாம்
- வெள்ளத்தை எல்லாம் மிகஉண்டேன் - உள்ளத்தே
- காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குமன்ற
- வாணா நினக்கடிமை வாய்த்து.
- வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
- வெம்மையே நீங்கிட விமல
- வாதமே வழங்க வானமே முழங்க
- வையமே உய்யஓர் பரம
- நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
- நன்மணி மன்றிலே நடிக்கும்
- பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
- பண்ணிய தவம்பலித் ததுவே.
- நேரிசை வெண்பா
- தொம்பத உருவொடு தத்பத வெளியில்
- தோன்றசி பதநடம் நான்காணல் வேண்டும்
- எம்பதமாகி இசைவாயோ தோழி
- இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.
- சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
- திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
- என்மய மாகி இருப்பாயோ தோழி
- இச்சை மயமாய் இருப்பாயோ288 தோழி.
- வகார வெளியில் சிகார உருவாய்
- மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
- விகார உலகை வெறுப்பாயோ தோழி
- வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.
- அறிவில் அறிவை அறியும் பொதுவில்
- ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்
- செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
- செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.
- தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில்
- சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும்
- கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி
- குறியா துலகில் வெறிப்பாயோ தோழி.
- அடுத்துநான் உன்னைக் கலந்தனு பவிக்க
- ஆசைமேற் பொங்கிய தென்றாள்
- தடுத்திட முடியா தினிச்சிறு பொழுதும்
- தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
- தொடுத்துல குள்ளார் தூற்றுதல் வாயால்
- சொலமுடி யாதெனக் கென்றாள்
- மடுத்தவெந் துயர்தீர்த் தெடுத்தருள் என்றாள்
- வரத்தினால் நான்பெற்ற மகளே.
- அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான்
- அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள்
- இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த
- ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும்
- எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல்
- இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே
- சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும்
- சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே.
- கரவறியா அம்பலத்தென் கணவரைக்கண் டலது
- கண்துயிலேன் உண்டிகொளேன் களித்தமரேன் என்பாள்
- இரவறியாள் பகலறியாள் எதிர்வருகின் றவரை
- இன்னவர்என் றறியாள்இங் கின்னல்உழக் கின்றாள்
- வரவெதிர்பார்த் துழல்கின்றாள் இவள்அளவில் உமது
- மனக்கருத்தின் வண்ணம்எது வாய்மலர வேண்டும்
- விரவும்ஒரு கணமும்இனித் தாழ்க்கில்உயிர் தரியாள்
- மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே.
- வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார்
- வெம்பல மாற்றும்என் அம்பல வாணர்
- சம்மத மாமட வார்களும் நானும்
- தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது
- இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே
- ஏகசி வோகத்தை எய்தினை நீதான்
- எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா
- என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.
- வஞ்சமிலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா
- வாழ்வும்என்றன் வாழ்வென்றேன் அதனாலோ அன்றி
- எஞ்சலுறேன் மற்றவர்போல் இறந்துபிறந் துழலேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- அஞ்சுமுகங் காட்டிநின்றாள் பாங்கிஎனை வளர்த்த
- அன்னையும்அப் படியாகி என்னைமுகம் பாராள்
- நெஞ்சுரத்த பெண்களெலாம் நீட்டிநகைக் கின்றார்
- நிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- கற்பூரம் மணக்கின்ற தென்மேனி முழுதும்
- கணவர்மணம் அதுவென்றேன் அதனாலோ அன்றி
- இற்பூவை அறியுமடி நடந்தவண்ணம் எல்லாம்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- பொற்பூவின் முகம்வியர்த்தாள் பாங்கிஅவ ளுடனே
- புரிந்தெடுத்து வளர்த்தவளும் கரிந்தமுகம் படைத்தாள்
- சொற்பூவைத் தொடுக்கின்றார் கால்கள்களை யாதே
- துன்னுநட ராயர்கருத் தெல்லைஅறிந் திலனே.
- மன்னுதிருச் சபைநடுவே மணவாள ருடனே
- வழக்காடி வலதுபெற்றேன் என்றஅத னாலோ
- இன்னும்அவர் வதனஇள நகைகாணச் செல்வேன்
- என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- மின்னும்இடைப் பாங்கிஒரு விதமாக நடந்தாள்
- மிகப்பரிவால் வளர்த்தவளும் வெய்துயிர்த்துப் போனாள்
- அன்னநடைப் பெண்களெலாம் சின்னமொழி புகன்றார்
- அத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே.
- மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது
- வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ
- இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்
- என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
- முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்
- முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்
- ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்
- ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே.
- திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
- தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
- பேசுவதார் மறைகளெலாம் கூசுகின்ற என்றால்
- துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
- பணம்பரித்த360 வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
- விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
- விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
- மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
- மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
- நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
- நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- நாதவரை சென்றுமறை ஓர்அனந்தம் கோடி
- நாடிஇளைத் திருந்தனஆ கமங்கள் பரநாத
- போதவரை போந்துபல முகங்கொண்டு தேடிப்
- புணர்ப்பறியா திருந்தனஎன் றறிஞர்புகல் வாரேல்
- பாதவரை வெண்று படிந்திலங்கச் சோதிப்
- படிவம்எடுத் தம்பலத்தே பரதநடம் புரியும்
- போதவரைக் காண்பதலால் அவர்பெருமை என்னால்
- புகலவச மாமோநீ புகலாய்என் தோழி.
- பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
- பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
- திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
- திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
- புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
- புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
- வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
- வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
- சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
- துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
- இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
- இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
- நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
- நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
- சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
- செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
- நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம்
- நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம்
- ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம்
- இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே
- ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம்
- அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம்
- ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின்
- உண்மைசொல வல்லவரார் உரையார்என் தோழி.
- சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
- சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
- வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
- மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
- தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
- திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
- அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
- அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.
- மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய்
- மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
- எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ்
- வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி362 நடுவே
- பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும்
- பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல்
- நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான்
- நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி.
- பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே
- பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை
- தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும்
- தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய்
- மனவண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற
- வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும்
- மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின்
- மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி.
- விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில்
- விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம்
- வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம்
- மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம்
- ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித்
- தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும்
- சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி.
- ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை
- உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத்
- தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
- தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித்
- தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து
- திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி364 வெளியில்
- பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
- பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
- விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த
- விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப்
- பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப்
- பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த்
- தெரிந்திடுநா னிலக்குள்ளே இருந்துவெளிப் படவும்
- செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல்
- எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின்
- எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி.
- உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம்
- உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே
- நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள்
- நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே
- குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து
- குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே
- மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை
- வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி.
- 360. பணம்புரிந்த - பி. இரா. பதிப்பு.
- 361. மற்றவர்கள் - ச. மு. க. பதிப்பு.
- 362. இந்தவெளி - பி. இரா. பதிப்பு.
- 363. திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு.தண்மையுளே திண்மை - பி. இரா. பதிப்பு.திண்மையுளே தண்மை - ச. மு. க. பதிப்பு.
- 364. திருவில்ஒளி - பி. இரா. திருவிலொளி என்றும் பாடம் - ச. மு. க. அடிக்குறிப்பு.
- ஒளிஒன்றே அண்டபகி ரண்டமெலாம் விளங்கி
- ஓங்குகின்ற தனிஅண்ட பகிரண்டங் களிலும்
- வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும்
- விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே
- உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை
- உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி
- தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும்
- தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே.
- பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான்
- பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே
- தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ
- சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய்
- திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும்
- திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம்
- சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே
- திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே.
- வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி
- மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும்
- தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான்
- துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண்
- மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில்
- விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும்
- ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே
- அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே.
- கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை
- கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை
- விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்
- மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
- அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே
- அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே
- துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்
- சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.
- உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
- நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
- இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
- மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
- நேரிசை வெண்பா
- காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது காலமெல்லாம்
- வீணாள் கழிப்பவர்க் கெய்தரி தானது வெஞ்சினத்தால்
- கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று
- சேணாடர் வாழ்த்துவ துத்தர ஞான சிதம்பரமே.
- ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
- மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
- மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
- தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே.
- நேரிசை வெண்பா
- நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
- ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
- மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
- காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
- நேரிசை வெண்பா
- நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
- அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
- பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
- பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
- பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
- வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு329 பசுவின் தீம்பாலும்
- நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
- கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
- வெய்யிற் கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
- மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
- கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
- நேரிசை வெண்பா
- சொல்லுகின்ற என்சிறுவாய்ச் சொன்மாலை அத்தனையும்
- வெல்லுகின்ற தும்பைஎன்றே மேல்அணிந்தான் - வல்லிசிவ
- காம சவுந்தரிக்குக் கண்ணனையான் ஞானசபைச்
- சேமநட ராஜன் தெரிந்து.
- ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
- வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
- எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
- செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
- அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
- சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
- இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
- உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.
- அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
- இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
- தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில்
- வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.
- கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
- ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
- நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
- ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
- சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
- குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
- வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
- நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
- பணிந்தடங்கும் மனத்தவர்பால் பரிந்தமரும் பதியே
- பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே
- கணிந்தமறை பலகோடி ஆகமம்பல் கோடி
- கடவுள்நின தருட்புகழைக் கணிப்பதற்குப் பலகால்
- துணிந்துதுணிந் தெழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந் தடிகள்
- சுமந்துசுமந் திளைத்திளைத்துச் சொல்லியவல் லனவென்
- றணிந்தமொழி மாற்றிவலி தணிந்தஎன்றால் அந்தோ
- அடியேன்நின் புகழ்உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.
- ஒளியாகி உள்ஒளியாய் உள்ஒளிக்குள் ஒளியாய்
- ஒளிஒளியின் ஒளியாய்அவ் ஒளிக்குளும்ஓர் ஒளியாய்
- வெளியாகி வெளிவெளியாய் வெளியிடைமேல் வெளியாய்
- மேல்வெளிமேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கோர் வெளியாய்
- அளியாகி அதுஆகி அதுவும்அல்லா தாகி
- அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம்
- தளியாகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான
- சபைத்தலைவா நின்இயலைச் சாற்றுவதெவ் வணமே.
- நேரிசை வெண்பா
- ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
- ஞான அமுதமது நானருந்த - ஞான
- உருவே உணர்வே ஒளியே வெளியே
- திருவே கதவைத் திற.
- மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை
- தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம்
- எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா
- இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே.
- நேரிசை வெண்பா
- ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
- சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
- ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
- வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
- அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
- சுகாதீத வெளிநடுவிலே
- அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்
- அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
- பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
- பொற்பொடுவி ளங்கிஓங்கப்
- புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
- பூரணா காரமாகித்
- தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
- சிறப்பமுதல் அந்தம்இன்றித்
- திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
- தெளிந்திட வயங்குசுடரே
- சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
- சுந்தரிக் கினியதுணையே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
- இதயத்தி லேதயவிலே
- என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
- என்இயற் குணம்அதனிலே
- இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
- என்செவிப் புலன்இசையிலே
- என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
- என்அனு பவந்தன்னிலே
- தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
- தானே கலந்துமுழுதும்
- தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
- ததும்பிநிறை கின்றஅமுதே
- துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
- சுகமே சுகாதீதமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
- உள்ளனஎ லாங்கலந்தே
- ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
- உதயாத்த மானம்இன்றி
- இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
- ஏகமாய் ஏகபோக
- இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
- இலங்நிறை கின்றசுடரே
- கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
- ககன்எலாம் கண்டபரமே
- காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
- கண்காண வந்தபொருளே
- தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
- துணையாய் விளங்கும்அறிவே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல்
- ஆங்காரி யப்பகுதியே
- ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
- அடியினொடு முடியும்அவையில்
- கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
- கணித்தபுற நிலையும்மேன்மேல்
- கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
- கலந்துநிறை கின்றஒளியே
- கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
- குறியே குறிக்கஒண்ணாக்
- குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
- கொண்டதனி ஞானவெளியே
- தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
- சுகயோக அனுபோகமே
- சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
- சோதிநட ராஜபதியே.
- கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
- கடையிலே கடல்இடையிலே
- கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
- கடல்ஓசை அதன்நடுவிலே
- வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
- வடிவிலே வண்ணம்அதிலே
- மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
- வயங்கிஅவை காக்கும் ஒளியே
- புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
- புகுந்தறி வளித்தபொருளே
- பொய்யாத செல்வமே நையாத கல்வியே
- புடம்வைத் திடாதபொன்னே
- மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
- மறுப்பிலா தருள்வள்ளலே
- மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
- எல்லாஞ்செய் வல்லதாகி
- இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
- இயற்கையே இன்பமாகி
- அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
- அருளாகி அருள்வெளியிலே
- அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
- அருட்பெருஞ் சோதியாகிக்
- கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
- காட்சியே கருணைநிறைவே
- கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
- கதியே கனிந்தகனியே
- வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
- வீற்றிருந் தருளும்அரசே
- மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
- மேவுநட ராஜபதியே.
- ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
- உன்னமுடி யாஅவற்றின்
- ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
- உற்றகோ டாகோடியே
- திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
- சிவஅண்டம் எண்ணிறந்த
- திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
- சீரண்டம் என்புகலுவேன்
- உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
- உறுசிறு அணுக்களாக
- ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
- ஒருபெருங் கருணைஅரசே
- மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
- வரந்தந்த மெய்த்தந்தையே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
- பகுதியும் காலம்முதலாப்
- பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
- பரமாதி நாதம்வரையும்
- சீராய பரவிந்து பரநாத முந்தனது
- திகழங்கம் என்றுரைப்பத்
- திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனமிடு
- தெய்வமே என்றும்அழியா
- ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
- உயர்தந்தை யேஎன்உள்ளே
- உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
- உவப்பேஎன் னுடையஉயிரே
- ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
- அரசே அருட்சோதியே
- அகரநிலை முழுதுமாய் அப்பாலு மாகிநிறை
- அமுதநட ராஜபதியே.
- உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
- உறுமவுன வெளிவெளியின்மேல்
- ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
- ஒருங்கநிறை உண்மைவெளியே
- திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
- சித்தே எனக்குவாய்த்த
- செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
- தெரித்தெனை வளர்த்தசிவமே
- பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம்
- படைத்திடுக என்றெனக்கே
- பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
- பரமமே பரமஞான
- வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த
- வண்ணநட மிடுவள்ளலே
- மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
- ஏதாக முடியுமோஎன்
- றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
- றேங்கிய இராவில்ஒருநாள்
- மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
- வெளிநின் றணைத்தென்உள்ளே
- மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
- வீற்றிருக் கின்றகுருவே
- நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
- நல்குரவி னோன்அடைந்த
- நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
- நான்கண்டு கொண்டமகிழ்வே
- வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
- வலியவந் தாண்டபரமே
- மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
- வல்லநட ராஜபதியே.
- துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
- சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
- சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
- சுதந்தரம தானதுலகில்
- வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
- வாழ்வெலாம் பெற்றுமிகவும்
- மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
- மனநினைப் பின்படிக்கே
- அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
- யாடுக அருட்சோதியாம்
- ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
- ஆணைநம் ஆணைஎன்றே
- இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
- திசைவுடன் இருந்தகுருவே
- எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
- இலங்குநட ராஜபதியே.
- சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
- தான்என அறிந்தஅறிவே
- தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
- தனித்தபூ ரணவல்லபம்
- வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
- விளையவிளை வித்ததொழிலே
- மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
- வியந்தடைந் துலகம்எல்லாம்
- மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
- வானவர மேஇன்பமாம்
- மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
- மரபென் றுரைத்தகுருவே
- தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
- தேற்றிஅருள் செய்தசிவமே
- சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
- தெய்வநட ராஜபதியே.
- காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
- கருணைஅமு தேஎனக்குக்
- கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
- காட்சியே கனகமலையே
- தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
- தலைவனே நின்பெருமையைச்
- சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
- சார்கின்ற தோறும்அந்தோ
- வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
- மதிஎலாந் தித்திக்கும்என்
- மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
- வரும்இன்பம் என்புகலுவேன்
- தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
- தோன்றிட விளங்குசுடரே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
- எல்லாஞ்செய் வல்லசித்தாய்
- என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
- எழுமையும் விடாதநட்பே
- கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
- கட்டியே கருணைஅமுதே
- கற்பக வனத்தே கனிந்தகனி யேஎனது
- கண்காண வந்தகதியே
- மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
- வினைஎலாந் தீர்த்தபதியே
- மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
- விளைவேஎன் மெய்ம்மைஉறவே
- துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
- சுத்தசன் மார்க்கநிலையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
- சோர்ந்தொரு புறம்படுத்துத்
- தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
- தூயதிரு வாய்மலர்ந்தே
- இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
- இருகைமலர் கொண்டுதூக்கி
- என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
- தியலுற இருத்திமகிழ்வாய்
- வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
- வைத்தநின் தயவைஅந்தோ
- வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
- வாரிஅமு தூறிஊறித்
- துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
- சுகவண்ணம் என்புகலுவேன்
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
- ஒருமைநிலை உறுஞானமே
- உபயபத சததளமும் எனதிதய சததளத்
- தோங்கநடு வோங்குசிவமே
- பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
- பருவத்தில் ஆண்டபதியே
- பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
- படிவைக்க வல்லபரமே
- ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வா
- யாடுவோர்க் கரியசுகமே
- ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
- யாகிநிறை கின்றநிறைவே
- தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
- தூக்கந் தொலைத்ததுணையே
- துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
- சோதிநட ராஜகுருவே.
- நண்ணிய மதவெறி பலபல அவையே
- நன்றற நின்றன சென்றன சிலவே
- அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
- அலைதரு கின்றனர் அலைவற மகனே
- புண்ணியம் உறுதிரு வருள்நெறி இதுவே
- பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ
- தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும்
- தனிஅருட் பெருவெளித் தலத்தெழுஞ் சுடரே
- வந்திர விடைஎனக் கருளமு தளித்தே
- வாழ்கஎன் றருளிய வாழ்முதற் பொருளே
- மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே
- மாநிலத் திடைஎனை வருவித்த பதியே
- தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே
- நடுவெளி நடுநின்று நடஞ்செயும் பரமே
- துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே
- சுத்தசி வானந்தப் புத்தமு துவப்பே
- என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி
- இறவாத பெருநலம் ஈந்தமெய்ப் பொருளே
- சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே
- காணாமல் காணும்ஓர் காட்சியின் விளைவே
- எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே
- இறவாத வரமுந்தந் தருளிய ஒளியே
- வருதாகந் தவிர்த்திட வந்ததெள் ளமுதே
- மாணிக்க மலைநடு மருவிய பரமே
- தருதான முணவெனச் சாற்றிய பதியே
- தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
- எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
- இரண்டரைக் கடிகையில் உனக்கே
- அம்புவி வானம் அறியமெய் அருளாம்
- அனங்கனை333 தனைமணம் புரிவித்
- தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
- உண்மைஈ தாதலால் உலகில்
- வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
- மெய்ப்பொது நடத்திறை யவரே.
- களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
- கடிகைஓர் இரண்டரை அதனில்
- ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
- உனக்குநன் மணம்புரி விப்பாம்
- அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
- அணிபெறப் புனைகநீ விரைந்தே
- வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
- விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
- துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
- பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
- அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
- உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
- ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
- பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
- மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
- யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
- கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
- நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
- பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
- விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
- காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
- கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
- கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
- குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
- பாடுபட்டீர்356 பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
- பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
- ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
- எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.
- ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
- அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
- கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
- கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
- வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
- வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
- சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
- தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
- நேரிசை வெண்பா
- வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
- செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
- ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
- தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
- வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
- வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
- சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை
- என்ன பயனோ இவை.
- நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
- நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
- வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
- வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
- தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
- தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
- ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
- யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
- குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
- கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
- வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
- மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
- பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
- புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
- செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
- சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
- சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
- சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
- நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
- நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
- ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
- எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
- ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
- உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.
- வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர்
- சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை
- மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச்
- சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே.
- எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ
- செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ
- திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற
- சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே.
- ஒட்டிஎன் கோதறுத் தாட்கொண் டனைநினை ஓங்கறிவாம்
- திட்டிஎன் கோஉயர் சிற்றம் பலந்தனில் சேர்க்கும்நல்ல
- வெட்டிஎன் கோஅருட் பெட்டியில் ஓங்கி விளங்கும்தங்கக்
- கட்டிஎன் கோபொற் பொதுநடஞ் செய்யுமுக் கண்ணவனே.
- என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல்
- இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம்
- நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா
- வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.
- போற்றி நின்இடம் போற்றி நின்வலம்
- போற்றி நின்நடம் போற்றி நின்நலம்
- போற்றி நின்திறம் போற்றி நின்தரம்
- போற்றி நின்வரம் போற்றி நின்கதி
- போற்றி நின்கலை போற்றி நின்பொருள்
- போற்றி நின்ஒளி போற்றி நின்வெளி
- போற்றி நின்தயை போற்றி நின்கொடை
- போற்றி நின்பதம் போற்றி போற்றியே.
- கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன்
- கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன்
- தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன்
- செய்வகை கற்றேன் உய்வகை உற்றேன்
- அள்ளக் குறையா வள்ளற் பொருளை
- அம்பலச் சோதியை எம்பெரு வாழ்வை
- பள்ளிக்குட் பாடிப் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன்
- கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன்
- வீட்டைப் புகுந்தேன் தேட்டமு துண்டேன்
- வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்
- ஆட்டைப் புரிந்தே அம்பலத் தோங்கும்
- ஐயர் திருவடிக் கானந்த மாகப்
- பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும்
- படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே.
- பொருட்பெரு மறைகள் அனந்தம்ஆ கமங்கள்
- புகலும்ஓர் அனந்தம்மேற் போந்த
- தெருட்பெரு வெளிமட் டளவிலாக் காலம்
- தேடியும் காண்கிலாச் சிவமே
- மருட்பெரும் பகைதீர்த் தென்னைஆட் கொண்ட
- வள்ளலே தெள்ளிய அமுதே
- அருட்பெருஞ் சோதி அம்பலத் தரசே
- அம்மையே அப்பனே அபயம்.
- நேரிசை வெண்பா
- நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள்
- நான்செயத் தக்கதே தென்பாள்
- செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ
- தெய்வமே தெய்வமே என்பாள்
- வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார்
- விருப்பிலர் என்மிசை என்பாள்
- வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள்
- வருந்துவாள் நான்பெற்ற மகளே.
- அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன்
- பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த்
- தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய்
- இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
- இச்சைஎலாம் புகன்றேன்என் இலச்சைஎலாம் விடுத்தேன்
- இனிச்சிறிதும் தரியேன்இங் கிதுதருணத் தடைந்தே
- அச்சைஎலாம் வெளிப்படுத்தி அச்சம்எலாம் அகற்றி
- அருட்சோதித் தனிஅரசே ஆங்காங்கும் ஓங்க
- விச்சைஎலாம் எனக்களித்தே அவிச்சைஎலாம் தவிர்த்து
- மெய்யுறஎன் னொடுகலந்து விளங்கிடுதல் வேண்டும்
- பச்சைஎலாம் செம்மைஎலாம் பொன்மைஎலாம் படர்ந்த
- படிகமணி விளக்கேஅம் பலம்விளங்கும் பதியே.
- நேரிசை வெண்பா
- மதிக்களவா மணிமன்றில் திருநடஞ்செய் திருத்தாளை வழுத்தல் இன்று
- பதிக்களவா நலந்தருவல் என்றுநினை ஏத்துதற்குப் பணிக்கின் றேன்நீ
- விதிக்களவாச் சித்திகள்முன் காட்டுகஇங் கென்கின்றாய் விரைந்த நெஞ்சே
- பொதிக்களவா முன்னர்இங்கே சத்தத்துக் களவென்பார் போன்றாய் அன்றே.
- கலைவளர் முடிய தென்னைஆட் கொண்ட
- கருணையங் கண்ணது ஞான
- நிலைவளர் பொருள துலகெலாம் போற்ற
- நின்றது நிறைபெருஞ் சோதி
- மலைவளர் கின்றது அருள்வெளி நடுவே
- வயங்குவ தின்பமே மயமாய்த்
- தலைவளர் திருச்சிற் றம்பலந் தனிலே
- தனித்தெனக் கினித்ததோர் கனியே.
- உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார்
- உறுபசி உழந்துவெந் துயரால்
- வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ
- மற்றிதை நினைத்திடுந் தோறும்
- எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும்
- எரிகின்ற தென்செய்வேன் அந்தோ
- கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக்
- குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய்.
- வண்டணிபூங் குழல்அம்மை எங்கள்சிவ காம
- வல்லியொடு மணிமன்றில் வயங்கியநின் வடிவம்
- கண்டவரைக் கண்டவர்தம் கால்மலர்முத் தேவர்
- கனமுடிக்கே முடிக்கின்ற கடிமலராம் என்றால்
- பண்டகுநின் திருத்தொண்டர் அடிப்பெருமை எவரே
- பகர்ந்திடுவர் மறைகளெலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
- விண்டுலர்ந்து வெளுத்தஅவை வெளுத்தமட்டோ அவற்றை
- வியந்தோதும் வேதியரும் வெளுத்தனர்உள் உடம்பே.
- கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
- கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
- சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
- சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
- வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
- மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
- முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
- முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
- நேரிசை வெண்பா
- அப்பூறு செஞ்சடை அப்பாசிற் றம்பலத் தாடுகின்றோய்
- துப்பூறு வண்ணச் செழுஞ்சுட ரேதனிச் சோதியனே
- வெப்பூறு நீக்கிய வெண்று பூத்தபொன் மேனியனே
- உப்பூறு வாய்க்குத்தித் திப்பூறு காட்டிய உத்தமனே.
- வாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து
- மலத்திலே கிடந்துழைத் திட்ட
- நாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்
- நன்றுறச் சூட்டினை அந்தோ
- தூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்
- சோதியே நின்பெருந் தயவைத்
- தாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்
- தயவும்உன் தனிப்பெருந் தயவே.
- சிறுநெறிக் கெனைத்தான் இழுத்ததோர் கொடிய
- தீமன மாயையைக் கணத்தே
- வெறுவிய தாக்கித் தடுத்தெனை ஆண்ட
- மெய்யநின் கருணைஎன் புகல்வேன்
- உறுநறுந் தேனும் அமுதும்மென் கரும்பில்
- உற்றசா றட்டசர்க் கரையும்
- நறுநெயுங் கலந்த சுவைப்பெரும் பழமே
- ஞானமன் றோங்கும்என் நட்பே.
- அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை
- அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
- இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான்
- என்னையோ என்னையோ என்றாள்
- திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த
- திருவுரு அடைந்தனன் ஞான
- மருந்துமா மணியும் மந்திர நிறைவும்
- வாய்த்தன வாய்ப்பின்என் றாளே.
- உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
- ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
- செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
- சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
- மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்து
- மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
- பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
- பாடுகின் றேன்பொதுப் பாட்டே.
- விண்ணெலாம் கலந்த வெளியில்ஆ னந்தம்
- விளைந்தது விளைந்தது மனனே
- கண்ணெலாம் களிக்கக் காணலாம்
- பொதுவில் கடவுளே என்றுநம் கருத்தில்
- எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி
- ஏத்தலாம் எடுத்தெடுத் துவந்தே
- உண்ணலாம் விழைந்தார்க் குதவலாம் உலகில்
- ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
- ஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்
- உவந்தெனது மணவாளர் சிவந்தவடி வகன்றே
- ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
- இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்ப தென்நீ
- ஆங்காரம் ஒழிஎன்றார் ஒழிந்திருந்தேன் அப்போ
- தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன் குறிப்பை
- ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் அங்கே
- உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே.
- சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
- துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
- வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
- விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
- செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
- தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
- ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
- உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.
- காற்றாலே புவியாலே ககனமத னாலே
- கனலாலே புனலாலே கதிராதி யாலே
- கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
- கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
- வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
- மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
- ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
- எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.
- இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே
- யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே
- விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே
- விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே.
- எனக்கும் உனக்கும்
- என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே
- என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே
- உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே
- உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே.
- எனக்கும் உனக்கும்
- இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே
- எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே
- நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே
- நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- விதுவும் கதிரும் இதுவென் றறியும் விளக்கம் இன்றி யே
- விழித்து மயங்கி னேன்பால் பெரிய கருணை ஒன்றி யே
- அதுவும் அதுவும் இதுவென் றெனக்குள் அறியக் காட்டி யே
- அடிய னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே.
- எனக்கும் உனக்கும்
- எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே
- இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே
- தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே
- சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே.
- எனக்கும் உனக்கும்
- மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே
- மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே
- உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே
- உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்ட மும்
- போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்ட மும்
- நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமு மே
- நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமு மே.
- எனக்கும் உனக்கும்
- அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே
- அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே
- பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே
- போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே.
- எனக்கும் உனக்கும்
- அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ள மே
- அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ள மே
- பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வான மே
- புனித வானத் துள்ளே விளங்கும் பூரண ஞான மே.
- எனக்கும் உனக்கும்
- எண்ணுந் தோறும் எண்ணுந் தோறும் என்னுள் இனிக்கு தே
- இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்கு தே
- கண்ணும் கருத்தும் நின்பால் அன்றிப் பிறர்பால் செல்லு மோ
- கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லு மோ.
- எனக்கும் உனக்கும்
- விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
- மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
- அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
- அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
- எனக்கும் உனக்கும்
- காமக் கடலைக் கடந்து வெகுளிக் கடலை நீந்தி னேன்
- கடிய மயக்கக் கடலைத் தாண்டி அடியை ஏந்தி னேன்
- சேமப் பொதுவில் நடங்கண் டெனது சிறுமை நீங்கி னேன்
- சிற்றம் பலத்து நடங்கண் டுவந்து மிகவும் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- உறவு பகைஎன் றிரண்டும் எனக்கிங் கொன்ற தாயிற் றே
- ஒன்றென் றிரண்டென் றுளறும் பேதம் ஓடிப் போயிற் றே
- மறவு நினைவென் றென்னை வலித்த வலிப்பு நீங்கி னேன்
- மன்றில் பரமா னந்த நடங்கண் டின்பம் ஓங்கி னேன்.
- எனக்கும் உனக்கும்
- கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
- கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
- விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயி னேன்
- விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
- எனக்கும் உனக்கும்
- வல்லாய் உனது கருணை அமுதென் வாய்க்கு வந்த தே
- மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்த தே
- எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்த தே
- இறவா தென்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்த தே.
- எனக்கும் உனக்கும்
- வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே
- வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே
- நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே
- நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.
- எனக்கும் உனக்கும்
- பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடு தே
- பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடு தே
- என்னே பிறர்தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்பு தே
- எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்பு தே.
- எனக்கும் உனக்கும்
- சுத்த நிலையின் நடுநின் றெங்கும் தோன்றும் சோதி யே
- துரிய வெளியைக் கடந்தப் பாலும் துலங்கும் சோதி யே
- சித்தர் உளத்தில் சுடர்செய் தோங்கும் தெய்வச் சோதி யே
- சிற்றம் பலத்தில் நடஞ்செய் தெனக்குள் சிறந்த சோதி யே.
- எனக்கும் உனக்கும்
- சோதி எவையும் விளங்க விளங்கும் சோதியே வாழி யே
- துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
- சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
- துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே.
- எனக்கும் உனக்கும்
- உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக்
- குள்ள துரைசெய்தீர் வாரீர்
- வள்ளல் விரைந்திங்கு வாரீர். வாரீர்
- ஏக பராபர யோக வெளிக்கப்பால்
- ஏக வெளிநின்றீர் வாரீர்
- ஏகர் அனேகரே வாரீர். வாரீர்
- ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத்
- தைந்துஞ் செயும்என்றீர் வாரீர்
- இந்து சிகாமணி வாரீர். வாரீர்
- ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி
- ஓங்கு நடேசரே வாரீர்
- பாங்குசெய் வீர்இங்கு வாரீர். வாரீர்
- ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
- செவ்வியன் ஆக்கினீர் வாரீர்
- ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர். வாரீர்
- வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர்
- வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர்
- மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர்
- மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர்
- கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர்
- கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர்
- ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- ஆசைகொண்டேன் ஆடஎன்னோ டாடவா ரீர்
- ஆசைவெட்கம் அறியாதால் ஆடவா ரீர்
- ஓசைகொண்ட தெங்குமிங்கே ஆடவா ரீர்
- உம்ஆணை உம்மைவிடேன் ஆடவா ரீர்
- காசுபணத் தாசையிலேன் ஆடவா ரீர்
- கைபிடித்தாற் போதும்என்னோ டாடவா ரீர்
- ஏசறல்நீத் தெனைஆண்டீர் ஆடவா ரீர்
- என்னுடைய நாயகரே ஆடவா ரீர். ஆடவா ரீர்
- வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
- விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
- எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
- என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
- இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
- ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
- அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
- அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
- நாதாந்த நாட்டு மருந்து - பர
- ஞான வெளியில் நடிக்கு மருந்து
- போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள்
- பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து. ஞான
- என்னறி வுட்கொள் மருந்து - என்றும்
- என்னறி வாகி இலங்கு மருந்து
- என்னறி வின்ப மருந்து - என்னுள்
- என்னறி வுக்கறி வென்னு மருந்து. ஞான
- மேலை வெளியா மருந்து - நான்
- வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து
- சாலை விளக்கு மருந்து - சுத்த
- சமரச சன்மார்க்க சங்க மருந்து. ஞான
- வெளிக்குள் வெளியா மருந்து - எல்லா
- வெளியும் கடந்து விளங்கு மருந்து
- ஒளிக்குள் ஒளியா மருந்து - எல்லா
- ஒளியும்தா னாகிய உண்மை மருந்து. ஞான
- ஆறந்தத் தேநிறை ஜோதி - அவைக்
- கப்புறத் தப்பாலும் ஆகிய ஜோதி
- வீறும் பெருவெளி ஜோதி - மேலும்
- வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. சிவசிவ
- தம்பத்தில் ஏற்றிய ஜோதி - அப்பால்
- சார்மணி மேடைமேல் தான்வைத்த ஜோதி
- விம்பப் பெருவெளி ஜோதி - அங்கே
- வீதியும் வீடும் விளக்கிய ஜோதி. சிவசிவ
- சிவமே பொருளென்று தேற்றி - என்னைச்
- சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச்
- சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த
- சமரச சத்திய சன்மார்க்க நீதிச்
- செங்கோல் அளித்தது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- நவவெளி நால்வகை யாதி - ஒரு
- நடுவெளிக் குள்ளே நடத்திய நீதிச்
- சிவவெளி யாம்இது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- மேருவெற் புச்சியின் பாலே - நின்று
- விளங்குமோர் தம்பத்தின் மேலுக்கு மேலே
- சேருமோர் மேடைமேல் பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப்
- பிரம வெளியினில் பேரரு ளாலே
- சித்தாடு கின்றது பாரீர் - திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு
- தெல்லாம் இதிலோர் இறையள வென்னும்
- தெள்ளமு தாம்இது பாரீர் -திருச்
- சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
- குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
- குதித்த314 மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
- வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
- விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இதுநல்ல
- சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
- தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
- இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே
- இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
- துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
- சுகமய மாகிய சுந்தரப் பாதம்
- பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
- பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
- வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
- அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்
- வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
- வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
- தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
- சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்
- வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
- வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
- செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
- சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்
- ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
- சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
- சீர்நீலம் ஆச்சுத டி. ஆணி
- வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
- வெண்மணி ஆச்சுத டி - அம்மா
- வெண்மணி ஆச்சுத டி. ஆணி
- ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
- ஐவண்ணம் ஆகும டி - அம்மா
- ஐவண்ணம் ஆகும டி. ஆணி
- பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
- புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
- மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
- மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.
- மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
- வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
- வேதாக மம்கடந்து சின்னம் பிடி
- வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.
- நடராஜர் பாட்டே நறும்பாட்டு
- ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு.
- வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
- ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
- உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
- பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
- அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
- அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
- அஞ்சோடஞ்சவை ஏலாதே அங்கோடிங்கெனல் ஆகாதே
- அந்தோவெந்துயர் சேராதே அஞ்சோகஞ்சுகம் ஓவாதே
- தஞ்சோபம்கொலை சாராதே சந்தோடம்சிவ மாம்ஈதே
- சம்போசங்கர மாதேவா சம்போசங்கர மாதேவா.
- எந்தாய் என்றிடில் இந்தா நம்பதம் என்றீ யும்பர மன்றா டும்பத
- என்றோ டிந்தன நன்றா மங்கண வெங்கோ மங்கள வெஞ்சா நெஞ்சக
- சந்தே கங்கெட நந்தா மந்திர சந்தோ டம்பெற வந்தா ளந்தண
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- நஞ்சோ என்றிடு நங்கோ பங்கெட நன்றே தந்தனை நந்தா மந்தண
- நம்பா நெஞ்சில் நிரம்பா நம்பர நம்பா நம்பதி யம்பா தம்பதி
- தஞ்சோ வென்றவர் தஞ்சோ பந்தெறு தந்தா வந்தன நுந்தாள் தந்திடு
- சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.
- நவநிலை தருவது நவவடி வுறுவது
- நவவெளி நடுவது நவநவ நவமது
- சிவமெனும் அதுபதம் அதுகதி அதுபொருள்
- சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.
- விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
- விகிர்தா விபவா விமலா அமலா
- வெஞ்சேர்343 பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
- உருவே உயிரே உணர்வே உறவே
- உரையே பொருளே ஒளியே வெளியே
- ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர344 நம்பர னே.
- 343. வெஞ்சோ - ஆ. பா. பதிப்பு.
- 344. உம்பரி னம்பரனே - ஆ. பா. பதிப்பு.
- பதியுறு பொருளே பொருளுறு பயனே
- பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே
- மதியுறும் அமுதே அமுதுறு சுவையே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- அருளுறு வெளியே வெளியுறு பொருளே
- அதுவுறு மதுவே மதுவுறு சுவையே
- மருளறு தெருளே தெருளுறு மொளியே
- மறைமுடி மணியே மறைமுடி மணியே.
- உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே
- ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே
- செயிரறு பதியே சிவநிறை நிதியே
- திருநட மணியே திருநட மணியே.
- இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
- யான்செய்தவம் யார்செய்தார் இதுகேள்என் தோழி
- எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பென் றேனும்
- எண்ணுவனோ புண்ணியரை எண்ணுமனத் தாலே
- பிச்சிஎன நினைத்தாலும் நினையடிநீ அவரைப்
- பிரிவேனோ பிரிவென்று பேசுகினும் தரியேன்
- விச்சைநடம் கண்டேன்நான் நடங்கண்டால் பேயும்
- விடத்துணியா தென்பர்கள்என் விளைவுரைப்ப தென்னே.
- கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம்
- கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும்
- எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர்
- இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன்
- விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம்
- வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம்
- உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ
- துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி.
- கண்ணாறு367 படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
- கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
- எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
- தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
- பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
- பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
- உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
- உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.
- மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
- மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
- தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
- சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
- தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
- திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
- உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
- துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம்
- ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம்
- விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை
- விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக
- கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும்
- கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக
- இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும்
- இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே.
- ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார்
- அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர்
- மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய
- வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென்
- கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார்
- கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ
- வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு
- மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே.
- தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே
- தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர்
- பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம்
- புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி
- என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம்
- இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான்
- முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும்
- முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே.
- திருவாளர் பொற்சபையில் திருநடஞ்செய் தருள்வார்
- சிற்சபையார் என்தனக்குத் திருமாலை கொடுத்தார்
- உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
- ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
- பெருவாய்மைத் திருவருளே பெருவாழ்வென் றுணர்ந்தோர்
- பேசியமெய் வாசகத்தின் பெருமையைஇன் றுணர்ந்தேன்
- துருவாத எனக்கிங்கே அருள்நினைக்கும் தோறும்
- சொல்லளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
- வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
- விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்த
- தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
- தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
- இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
- இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
- பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம்
- புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ.
- நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல்
- நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ
- போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும்
- புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும்
- வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும்
- விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும்
- வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும்
- மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே.
- குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும்
- கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே
- புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி
- புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள்
- அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல்
- அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும்
- விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று
- மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.
- ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
- எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
- ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
- என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
- ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
- அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
- கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
- கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ.
- நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய்
- நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய்
- இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர்
- எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள்
- திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே
- திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே
- கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு
- கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.
- காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார்
- கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார்
- கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம்
- குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார்
- ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே
- அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார்
- தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான்
- தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே.
- ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம்
- ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய்
- வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு
- விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம்
- தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால்
- சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே
- உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது
- வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை
- ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபே
- ரொளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம்
- திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்
- தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே
- உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும்
- ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே.
- பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய்
- பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய்
- அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம்
- ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி
- இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய்
- இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான்
- துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும்
- தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே.
- அருளுடையார் எனையுடையார் அம்பலத்தே நடிக்கும்
- அழகர்எலாம் வல்லவர்தாம் அணைந்தருளும் காலம்
- இருளுடைய இரவகத்தே எய்தாது கண்டாய்
- எதனால்என் றெண்ணுதியேல் இயம்புவன்கேள் மடவாய்
- தெருளுடைஎன் தனித்தலைவர் திருமேனிச் சோதி
- செப்புறுபார் முதல்நாத பரியந்தம் கடந்தே
- அருளுறும்ஓர் பரநாத வெளிகடந்தப் பாலும்
- அப்பாலும் விளங்குமடி அகம்புறத்தும் நிறைந்தே.
- பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
- பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய்
- அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா
- யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன்
- பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன்
- பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன்
- துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன்
- சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே.
- எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்
- இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்
- மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்
- விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய்370 மீட்டும்
- இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்
- இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ
- பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்
- பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.
- என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
- இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
- பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
- பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
- தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
- சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
- மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே
- வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.