- திருவொற்றியூரும் திருத்தில்லையும்
- கலி விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஒற்றி மேவிய உத்தம னேமணித்
- தெற்றி மேவிய தில்லையப் பாவிழி
- நெற்றி மேவிய நின்மல னேஉனைப்
- பற்றி மேவிய நெஞ்சம்உன் பாலதே.
- பாலின் நீற்றுப் பரஞ்சுட ரேமலர்க்
- காலின் ஈற்றுக் கதிபெற ஏழையேன்
- மாலின் ஈற்று மயக்கறல் என்றுகல்
- ஆலின் ஈற்றுப் பொருள்அருள் ஆதியே.
- ஆதி யேதில்லை அம்பலத் தாடல்செய்
- சோதி யேதிருத் தோணிபு ரத்தனே
- ஓதி யேதரும் ஒற்றியப் பாஇது
- நீதி யேஎனை நீமரு வாததே.
- வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர்
- காதம் ஓடும் கடியனை ஆள்வது
- நீத மோஅன்றி நேரும்அ நீதமோ
- ஓதம் ஓதொலி ஒற்றித்த லத்தனே.
- தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக்
- கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே
- நலத்த னேஒற்றி நாயக னேஇந்த
- மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே.
- மாண்கொள் அம்பல மாணிக்க மேவிடம்
- ஊண்கொள் கண்டத்தெம் ஒற்றியப் பாஉன்தன்
- ஏண்கொள் சேவடி இன்புகழ் ஏத்திடாக்
- கோண்கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.
- உய்யும் வண்ணம்இங் குன்அருள் எய்தநான்
- செய்யும் வண்ணம்தெ ரிந்திலன் செல்வமே
- பெய்யும் வண்ணப்பெ ருமுகி லேபுரம்
- எய்யும் வண்ணம்எ ரித்தருள் எந்தையே.
- எந்தை யேதில்லை எம்இறை யேகுகன்
- தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன்
- முந்தை ஏழ்பவ மூடம யக்கறச்
- சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே.
- திருந்த நான்மறைத் தில்லைச்சிற் றம்பலத்
- திருந்த ஞானஇ யல்ஒளி யேஒற்றிப்
- பொருந்த நின்றருள் புண்ணிய மேஇங்கு
- வருந்த என்தனை வைத்தத ழகதோ.
- வைத்த நின்அருள் வாழிய வாழிய
- மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே
- உய்த்த நல்அருள் ஒற்றியப் பாஎனைப்
- பொய்த்த சிந்தைவிட் டுன்தனைப் போற்றவே.
- போற்ற வைத்தனை புண்ணிய னேஎனைச்
- சாற்ற வைத்தனை நின்புகழ்த் தன்மையைத்
- தேற்ற வைத்தனை நெஞ்சைத்தெ ளிந்தன்பை
- ஊற்ற வைத்தனை உன்ஒற்றி மேவியே.
- 30. வஞ்சி விருத்தம். தொ. வே. 1.ச.மு.க. கலி விருத்தம். தொ.வே. 2. ஆ.பா.