- புள்ளிருக்குவேளூர்
- கலிவிருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு
- விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ
- பரதத் தாண்டவ னேபரி திப்புரி
- வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே.
- வேத னேனும்வி லக்குதற் பாலனோ
- தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
- நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
- நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
- அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த
- விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே
- வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள்
- மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
- மாலும் நான்குவ தனனும் மாமறை
- நாலும் நாடரு நம்பர னேஎவ
- ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின்
- ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
- தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
- மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
- மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
- ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
- வைய நாயக வானவர் நாயக
- தையல் நாயகி சார்ந்திடும் நாயக
- உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
- வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
- கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர்
- எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே
- இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல்
- தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
- நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
- சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
- ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
- வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
- பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி
- உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப்
- பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது
- நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
- சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
- தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
- உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
- நைவ தற்குந ணுகுவ நோய்களே.