- திருவொற்றியூர்
- வஞ்சித்துறை
- திருச்சிற்றம்பலம்
- ஒற்றி ஊரனைப்
- பற்றி நெஞ்சமே
- நிற்றி நீஅருள்
- பெற்றி சேரவே.-
- சேர நெஞ்சமே
- தூரம் அன்றுகாண்
- வாரம் வைத்தியேல்
- சாரும் முத்தியே.
- முத்தி வேண்டுமேல்
- பத்தி வேண்டுமால்
- சத்தி யம்இது
- புத்தி நெஞ்சமே.
- நெஞ்ச மேஇது
- வஞ்ச மேஅல
- பிஞ்ச கன்பதம்
- தஞ்சம் என்பதே.
- என்ப தேற்றவன்
- அன்ப தேற்றுநீ
- வன்பு மாற்றுதி
- இன்பம் ஊற்றவே.-
- ஊற்றம் உற்றுவெண்
- நீற்றன் ஒற்றியூர்
- போற்ற நீங்குமால்
- ஆற்ற நோய்களே.-
- நோய்கள் கொண்டிடும்
- பேய்கள் பற்பலர்
- தூய்தன் ஒற்றியூர்க்
- கேய்தல் இல்லையே.
- இல்லை இல்லைகாண்
- ஒல்லை ஒற்றியூர்
- எல்லை சேரவே
- அல்லல் என்பதே.-
- அல்லல் என்பதேன்
- தொல்லை நெஞ்சமே
- மல்லல் ஒற்றியூர்
- எல்லை சென்றுமே.-
- சென்று வாழ்த்துதி
- நன்று நெஞ்சமே
- என்றும் நல்வளம்
- ஒன்றும் ஒற்றியே.-