- திருவொற்றியூர்
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- மைய லழகீ ரூரொற்றி வைத்தீ ருளவோ மனையென்றேன்
- கையி னிறைந்த தனத்தினுந்தங் கண்ணி னிறைந்த கணவனையே
- மெய்யின் விழைவா ரொருமனையோ விளம்பின் மனையும் மிகப்பலவாம்
- எய்யி லிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடி.