- சிந்து
- திருச்சிற்றம்பலம்
- பல்லவி
- இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
- என்ன வர்மஞ் சொலையா.
- கண்ணிகள்
- அன்னம் பாலிக்குந்தில்லைப் பொன்னம் பலத்திலாடும்
- அரசே - அரசே - அரசேயென் றலறவும் இன்னந்
- சின்னஞ் சிறுவயதி லென்னை யடிமைகொண்ட
- சிவமே - சிவமே - சிவமேயென் றலறவும் இன்னந்
- முன்னம் பிழைபொறுத்தா யின்னம் பொறாதுவிட்டால்
- முறையோ - முறையோ - முறையோவென் றலறவும் இன்னந்
- தன்னை யறியாவென்னை யின்ன லுறச்செய்தாயே
- தகுமோ - தகுமோ - தகுமோவென் றலறவும் இன்னந்
- பண்டு மகிழ்ந்தெனையாட் கொண்டு கருணைசெய்த
- பரமே - பரமே - பரமேயென் றலறவும் இன்னந்
- கொண்டு குலம்பேசுவா ருண்டோ வுலகிலெங்கள்
- குருவே - குருவே - குருவேயென் றலறவும்
- இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
- என்ன வர்மஞ் சொலையா.