- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
- ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
- மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
- நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
- தாழிசை
- அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
- திருநட இன்பம்என் றறியாயோ மகளே.
- அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
- கனுபவ மாகின்ற தென்னடி தாயே
- செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
- திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.