- கலிநிலைத்துறை
- திருச்சிற்றம்பலம்
- சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
- வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
- மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
- அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
- நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
- எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
- வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
- அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.