- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன்
- ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன்
- பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர்
- அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே
- தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே
- தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே.
- வஞ்ச நெஞ்சினேன் வல்விலங் கனையேன்
- மங்கை மார்முலை மலைதனில் உருள்வேன்
- பஞ்ச பாதகம் ஓர்உரு எடுத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- கஞ்சன் மால்புகழ் கருணையங் கடலே
- கண்கள் மூன்றுடைக் கரும்பொளிர் முத்தே
- அஞ்சல் அஞ்சல்என் றன்பரைக் காக்கும்
- அண்ண லேதணி காசலத் தரசே
- மையல் நெஞ்சினேன் மதிþயிலேன் கொடிய
- வாட்க ணார்முலை மலைக்குப சரித்தேன்
- பைய பாம்பினை நிகர்த்தவெங் கொடிய
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மெய்யர் உள்ளகம் விளங்கொளி விளக்கே
- மேலை யோர்களும் விளம்பரும் பொருளே
- செய்ய மேனிஎம் சிவபிரான் அளித்த
- செல்வ மேதிருத் தணிகையந் தேவே.
- மதியில் நெஞ்சினேன் ஓதியினை அனையேன்
- மாதர் கண்எனும் வலையிடைப் பட்டேன்
- பதியில் ஏழையேன் படிற்றுவஞ் சகனேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த
- புண்ணி யாஅருட் போதக நாதா
- துதிஇ ராமனுக் கருள்செயும் தணிகைத்
- து‘ய னேபசுந் தோகைவா கனனே.
- துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
- துயர்செய் மாதர்கள் சூழலுள் தினமும்
- பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- நட்டம் ஆடிய நாயகன் அளித்த
- நல்ல மாணிக்க நாயக மணியே
- மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
- வள்ள லேமயில் வாகனத் தேவே
- காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன்
- கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
- பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தாயும் தந்தையும் சாமியும் எனது
- சார்பும் ஆகிய தணிகையங் குகனே
- ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
- ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே.
- தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன்
- தீய மாதர்தம் திறத்துழல் கின்றேன்
- பாங்கி லாரொடும் பழகிய வெறியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும்
- சிவபி ரான்செல்வத் திருஅருட் பேறே
- ஓங்கு நல்தணி காசலத் தமர்ந்த
- உண்மை யேஎனக் குற்றிடும் துணையே.
- கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன்
- கடிய மாதர்தம் கருக்குழி எனும்ஓர்
- பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- வெள்ள வார்சடை வித்தகப் பெருமான்
- வேண்ட நற்பொருள் விரித்துரைத் தோனே
- புள்அ லம்புதண் வாவிசூழ் தணிகைப்
- பொருப்ப மர்ந்திடும் புனிதபூ ரணனே.
- மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன்
- மாதர் கண்களின் மயங்கிநின் றலைந்தேன்
- பத்தி என்பதோர் அணுவும்உற் றில்லேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- பித்த நாயகன் அருள்திருப் பேறே
- பிரமன் மாலுக்கும் பேசரும் பொருளே
- தத்தை பாடுறும் பொழிற்செறி தணிகா
- சலத்தின் மேவிய தற்பர ஒளியே.
- அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
- அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
- பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
- பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
- மழுக்கை ஏந்திய மாசிலா மணிக்குள்
- மன்னி ஓங்கிய வளர்ஒளிப் பிழம்பே
- வழுக்கி லார்புகழ் தணிகைஎன் அரசே
- வள்ள லேஎன்னை வாழ்விக்கும் பொருளே.