- தில்லையும் பார்வதிபுரமும்
- நேரிசை வெண்பா
- திருச்சிற்றம்பலம்
- அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
- தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
- யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
- ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
- நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
- போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
- ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
- மன்றொன்று வானை மகிழ்ந்து.
- ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
- ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
- அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
- என்றே எனக்குநினக் கும்.
- கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையாள் கால்மலர்க்குக்
- கைத்தலைமே லிட்டலையிற் கண்ர்கொண் - டுய்த்தலைமேல்
- காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
- காணாயே நெஞ்சே களித்து.
- கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
- எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
- அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
- பொதுவாய் நடிக்கின்ற போது.
- அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
- அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
- நலமே வதிலேநின் னாவூர் திருவம்
- பலமேவக் காட்டும் பரிசு.
- நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
- அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
- பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
- பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
- நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
- அடிப்பாவை யும்286 வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
- நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
- இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
- பூமி பொருந்து புரத்தே287 நமதுசிவ
- காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
- அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
- களித்தான் அவன்றான் களித்து.
- 286. அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,ச. மு. க.
- 287. பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம்(பூமி - பார், பொருந்து - வதி).