- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- கைவிட மாட்டான்என்று ஊதூது சங்கே
- கனக சபையான்என்று ஊதூது சங்கே
- பொய்விடச் செய்தான்என்று ஊதூது சங்கே
- பூசைப லித்ததென்று ஊதூது சங்கே.
- தூக்கம் தொலைத்தான்என்று ஊதூது சங்கே
- துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
- ஏக்கம் கெடுத்தான்என்று ஊதூது சங்கே
- ஏம சபையான்என்று ஊதூது சங்கே.
- பொன்னடி தந்தான்என்று ஊதூது சங்கே
- பொன்னம் பலத்தான்என்று ஊதூது சங்கே
- இன்னல் அறுத்தான்என்று ஊதூது சங்கே
- என்னுள் அமர்ந்தான்என்று ஊதூது சங்கே.
- அச்சம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே
- அம்பல வாணன்என்று ஊதூது சங்கே
- இச்சை அளித்தான்என்று ஊதூது சங்கே
- இன்பம் கொடுத்தான்என்று ஊதூது சங்கே.
- என்உயிர் காத்தான்என்று ஊதூது சங்கே
- இன்பம் பலித்ததென்று ஊதூது சங்கே
- பொன்உருத் தந்தான்என்று ஊதூது சங்கே
- பொற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
- சிவமாக்கிக்கொண்டான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே
- நவநோக் களித்தான் என்று ஊதூது சங்கே
- நான்அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே.
- நாத முடியான்என்று ஊதூது சங்கே
- ஞானசபையான்என்று ஊதூது சங்கே
- பாத மளித்தான்என்று ஊதூது சங்கே
- பலித்தது பூசைஎன்று ஊதூது சங்கே.
- தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
- சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே
- உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
- உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.
- என்னறி வானான்என்று ஊதூது சங்கே
- எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
- செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே
- சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே.
- இறவாமை ஈந்தான்என்று ஊதூது சங்கே
- எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே
- திறமே அளித்தான்என்று ஊதூது சங்கே
- சிற்றம் பலத்தான்என்று ஊதூது சங்கே.
- கரவு தவிர்ந்ததென்று ஊதூது சங்கே
- கருணை கிடைத்ததென்று ஊதூது சங்கே
- இரவு விடிந்ததென்று ஊதூது சங்கே
- எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே.
- எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லார்க்கும் நல்லான்என்று ஊதூது சங்கே
- எல்லாம் உடையான்என்று ஊதூது சங்கே
- எல்லாமும் ஆனான்என்று ஊதூது சங்கே.
- கருணா நிதியர்என்று ஊதூது சங்கே
- கடவுள் அவனேஎன்று ஊதூது சங்கே
- அருள்நா டகத்தான்என்று ஊதூது சங்கே
- அம்பலச் சோதிஎன்று ஊதூது சங்கே.
- தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
- தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
- பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
- பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே.
- ஆனந்த நாதன்என்று ஊதூது சங்கே
- அருளுடை அப்பன்என்று ஊதூது சங்கே
- தானந்தம் இல்லான்என்று ஊதூது சங்கே
- தத்துவச் சோதிஎன்று ஊதூது சங்கே.
- பொய்விட் டகன்றேன்என்று ஊதூது சங்கே
- புண்ணியன் ஆனேன்என்று ஊதூது சங்கே
- மெய்தொட்டு நின்றேன்என்று ஊதூது சங்கே
- மேல்வெளி கண்டேன்என்று ஊதூது சங்கே.