- தாழிசை
- திருச்சிற்றம்பலம்
- அம்பலவர் வந்தார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் கின்றார்என்று சின்னம் பிடி
- செம்பலன் அளித்தார்என்று சின்னம் பிடி
- சித்திநிலை பெற்றதென்று சின்னம் பிடி.
- சிற்சபையைக் கண்டோம்என்று சின்னம் பிடி
- சித்திகள்செய் கின்றோம்என்று சின்னம் பிடி
- பொற்சபை புகுந்தோம்என்று சின்னம் பிடி
- புந்திமகிழ் கின்றோம்என்று சின்னம் பிடி.
- ஞானசித்திபுரம்என்று சின்னம் பிடி
- நாடகம்செய் இடம்என்று சின்னம் பிடி
- ஆனசித்தி செய்வோம்என்று சின்னம் பிடி
- அருட்சோதி பெற்றோம்என்று சின்னம் பிடி.
- கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி
- கூத்தாடு கின்றோம்என்று சின்னம் பிடி
- அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
- அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி.
- அப்பர்வரு கின்றார்என்று சின்னம் பிடி
- அற்புதம்செய் வதற்கென்று சின்னம் பிடி
- செப்பநிலை பெற்றதென்று சின்னம் பிடி
- சித்திபுரம்இடமென்று சின்னம் பிடி.
- தானேநான் ஆனேன்என்று சின்னம் பிடி
- சத்தியம்சத் தியம்என்று சின்னம் பிடி
- ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி
- ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.
- வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
- வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி
- சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
- சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.
- மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
- வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி
- வேதாக மம்கடந்து சின்னம் பிடி
- வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.
- பன்மார்க்க மும்கடந்து சின்னம் பிடி
- பன்னிரண்டின் மீதுநின்று சின்னம் பிடி
- சன்மார்க்கம் மார்க்கம்என்று சின்னம் பிடி
- சத்தியம்செய் கின்றோம்என்று சின்னம் பிடி.
- சித்தாடு கின்றார்என்று சின்னம் பிடி
- செத்தார் எழுவார்என்று சின்னம் பிடி
- இத்தா ரணியில்என்று சின்னம் பிடி
- இதுவே தருணம்என்று சின்னம் பிடி.